<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - கலைகள்/கலைஞர்கள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 12:22:13 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[யாருங்க லண்டன் பாபா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=156</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 16:10:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1677">காவடி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=156</guid>
			<description><![CDATA[                    சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார். <br />
<a href="http://www.londonbaba.com/theervu/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/theervu/player.swf</a><br />
<a href="http://www.londonbaba.com/neeraki/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/neeraki/player.swf</a><br />
<br />
பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார். <br />
<a href="http://www.londonbaba.com/theervu/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/theervu/player.swf</a><br />
<a href="http://www.londonbaba.com/neeraki/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/neeraki/player.swf</a><br />
<br />
பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943)]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=596</link>
			<pubDate>Wed, 08 Mar 2006 12:40:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=596</guid>
			<description><![CDATA[                    திசை புதிது இதழ்-1 (2003)<br />
<br />
<br />
மூத்த எழுத்தாளர் வரதர்<br />
<br />
ஈழத்தின்  இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.<br />
<br />
'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.<br />
<br />
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.<br />
<br />
தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது.<br />
<br />
1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.<br />
<br />
இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.<br />
<br />
தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.<br />
<br />
மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.<br />
<br />
1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.<br />
<br />
1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.<br />
<br />
1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.<br />
<br />
இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.<br />
<br />
வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.<br />
<br />
'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.<br />
<br />
வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.<br />
<br />
வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.<br />
<br />
வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.<br />
<br />
<a href="http://noolaham.net/library/collection/01/c01.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://noolaham.net/library/collection/01/c01.htm</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    திசை புதிது இதழ்-1 (2003)<br />
<br />
<br />
மூத்த எழுத்தாளர் வரதர்<br />
<br />
ஈழத்தின்  இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.<br />
<br />
'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.<br />
<br />
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.<br />
<br />
தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது.<br />
<br />
1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.<br />
<br />
இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.<br />
<br />
தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.<br />
<br />
மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.<br />
<br />
1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.<br />
<br />
1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.<br />
<br />
1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.<br />
<br />
இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.<br />
<br />
வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.<br />
<br />
'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.<br />
<br />
வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.<br />
<br />
வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.<br />
<br />
வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.<br />
<br />
<a href="http://noolaham.net/library/collection/01/c01.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://noolaham.net/library/collection/01/c01.htm</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[À×¼÷ Å¡º¨É Á¢¾ìÌõ ¿Ê¸÷ ºí¸õ]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=618</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 11:43:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=618</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம்<br />
[b]கி.பார்த்திபராஜா&lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம்.<br />
<br />
சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வொரு நாடகத்திற்கான நடிகர்களும் குழுவாகக் கூடிய பிறகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் புறப்படுவார்கள்.<br />
<br />
ஸ்பெஷல் நாடக அமைப்பு என்றால் என்ன என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பாத்திரமேற்கும் நடிகர், அதுவரை தான் சந்தித்தேயிராத நடிகருடன் இணைந்து நடிக்க முடிவது இந்த ஸ்பெஷல் நாடக அமைப்பில்தான். நடிகர் சங்கத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நோட்டுப்புத்தகம் இருக்கும். நாடகத்திற்கு புக் பண்ண வருபவர்கள் நடிகர் சங்கப் பணியாளருடைய உதவியோடு, தான் விரும்பும் நடிகர் நடிகைகளுடைய குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்வார்கள். இன்ன நடிகருக்கு இன்ன நடிகையை ஜோடியாகப் போட்டால்தான் நாடகம் நன்றாக இருக்குமென்பது நாடகம் புக் பண்ண வருபவரின் மனக்கணக்காக இருக்கும். பபூனுக்கு பொன்னமராவதி ஆறுமுகம்; டான்ஸ்க்கு திண்டுக்கல் பத்மா; முருகனுக்கு புதுக்கோட்டை ஸ்ரீராம்; வள்ளிக்கு புதுக்கோட்டை சித்ரா; நாரதருக்கு வரிச்சியூர் பழனியப்பன்; அரிச்சந்திரனுக்கு இடைச்சியூரணி முருகேசன்; சந்திரமதிக்கு திண்டுக்கல் சோலைவள்ளி... இப்படி கேட்டுக் கேட்டு பதிவு செய்தல் உண்டு. ஊராரே இவ்வாறு குறிப்பாகக் கேட்டு ஒப்பந்தம் செய்யும் நடிகர் தன்னை “குறிப்பு” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. இது தவிர நாடக ஏஜெண்டுகள் தாமே தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் செய்வதும் நடைமுறை வழக்கில் இருக்கிறது. இவர்களுடைய நாடகத் தேதி, இடம் முதலானவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் நடிகர் சங்கத்திற்கு இருக்கிறது. ஒப்பந்தம் செய்த பிறகு அதை மறுக்க நடிகர்களுக்கு அதிகாரம் கிடையாது.<br />
<br />
ஒப்பந்தம் செய்த நாளில் ஒப்பந்தம் செய்த நடிகர்களோடு சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடவேண்டும். தவறுகிற நடிகர்களின் மீது சங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. தேதி ஊர் முதலான தகவல்களை நடிகர் நடிகைகளும் தங்களிடமுள்ள குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கின்றனர்.<br />
<br />
நாடக மேடையில் நடிகர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள், ஏஜெண்டுகளுக்கும் நடிகர்களுக்குமிடையே ஏற்படும் பணத்தகராறுகள் முதலானவற்றில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் பொறுப்பினைச் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரச்சினைகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம்.<br />
<br />
வள்ளிதிருமணம் நாடகம். ராஜபார்ட் மிகவும் இளவயது நடிகர்; கத்துக்குட்டி. ஸ்திரீபார்ட் மூத்த நடிகை. இளவயது நடிகர் மூத்த நடிகையை அக்கா என்றுதான் அழைப்பார். மேடையில் இருவரும் முருகனும் வள்ளியுமாக வந்து காதல் புரிய வேண்டும். மானைத் தேடிவரும் முருகனோடு வள்ளி முரண்படுவாள்; கோபிப்பாள்; சண்டையிடுவாள். இறுதியில் மோதல் காதலாகித் திருமணத்தில் முடியவேண்டும்.<br />
<br />
இப்போது மோதல் கட்டம். வேடனாக வந்திருக்கும் முருகன் தன்னுடைய குலப்பெருமை பேசுவான். வள்ளியோ சளைக்காது தன் குறக்குலப் பெருமை பேசுவாள். வசனங்கள் அவரவர் பேசிக் கொள்வதுதானே... பேசுகிறார்கள். பேச்சிடையே முருகன் சொல்கிறான்: என் தந்தை யார் தெரியுமா? என் தந்தை அக்காளை ஏறியவன். இதைச் சொல்லும் முறைமையில் மறைபொருளாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறான். என் தந்தை - சிவன் -காளை வாகனத்திலே அமர்ந்து காட்சி தருபவன் என்பது அது. ஆனாலும் நகைச்சுவைக்காக இருபொருள் தொனிக்கும்படி இதை அழுத்திச் சொல்கிறான். முகத்திலே கட்டுக்கொள்ளாத சிரிப்பு. பார்வையாளர்களும் சிரிக்கின்றனர். முதுபெரும் நடிகையான ஸ்தரீபார்ட்டுக்கு முகம் சிவக்கிறது. ‘யாரிடம் என்ன வார்த்தை பேசுகிறான் இந்த கத்துக்குட்டி நடிகன்? கொஞ்சங்கூட மரியாதையில்லாமல். ஆபாசமான வார்த்தையை என்னிடம் எப்படிப் பேசலாம்?’ முகத்துத் தசைகள் துடிக்க ஆவேசத்துடன் பார்க்கிறார் முருகனாக நடிக்கும் கத்துக்குட்டி நடிகரை. வசைமாரி பொழியத் தொடங்குகிறது. ‘யாரு கிட்ட அக்காளை ஏறுனவன்னு சொல்ற... நீ உன் ஆத்தாளை ஏறு... அம்மாவை ஏறு... அதையெல்லாம் ஏங்கிட்ட வந்து ஏண்டா பேசுற... த்தூ... எச்சிப் பொறுக்கி நாயே... மரியாதை தந்து மரியாதை வாங்கு... சபை நாகரீகம் தெரிஞ்சு பேசு... இல்லன்னா அறுத்துத் தொங்கப் போட்டுருவேன் நாக்கை... செருப்பால அடிப்பேன்...’<br />
<br />
திகைத்துப்போகிறார் கத்துக்குட்டி நடிகர். பாராட்டுக் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் பேசியவார்த்தை வசவுக்கு வழிவகுத்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. எந்த முருகப் பெருமானும் வள்ளியிடம் இவ்வளவு மோசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கமாட்டார். மூத்த நடிகையின் வசவுகள் நின்றபாடில்லை. ஊர்ப் பெரியவர்கள் பிரச்னையில் தலையிட்டுச் சமாதானம் செய்கின்றனர்.<br />
‘சரி விடும்மா... ஏதோ சின்னப்பையன் தெரியாமப் பேசிட்டான்... அனுபவமுள்ள நடிகை நீதான் அவனை மன்னிக்கணும்... சரி விடு...விடு...” ஊரார் சொல்வதால் சம்மதிக்கிறார் நடிகை. நாடகம் மீண்டும் தொடருகிறது. மீண்டும் மோதல்; காதல். காதல் காட்சிகளில் கத்துக்குட்டி ராஜபார்ட் நடிகரிடம் உற்சாகம் இல்லை; சோபை இழந்து காட்சி தருகிறார்.<br />
<br />
நாடகம் முடிவுற்றது. சங்கத்திற்கு திரும்பிய ஸ்திரீபார்ட் நடிகை. சங்கத்திலிருக்கும் தன் குறிப்பேட்டை எடுத்து முகப்பில் எழுதுகிறார் ‘குறிப்பிட்ட அந்த நடிகருடன் யாரும் எனக்கு நாடக ஒப்பந்தம் செய்யவேண்டாம்’. பல நடிகர்களுடைய குறிப்பேட்டில் இதுபோன்ற வாசகங்களைப் பார்க்கலாம். இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டுச் சங்கம் சமாதானம் செய்துவைக்கும்.<br />
<br />
இசைநாடக உலகம் புனைவுகளால் ஜீவித்துக் கிடக்கும் உலகம். இசை நாடக நடிகர்கள் புனைவில் வாழும் மனிதர்கள். இவர்களது புனைவின் வசீகரம் நாடகம் பார்க்கும் சாதாரண எளிய மக்களையும் தொற்றிக் கொள்கிறது. புனைவுவெளி மனிதர்களான இசை நாடகக் கலைஞர்களின் இயல்பு வாழ்க்கையும்கூட புனைவு மயக்கத்திற்குள் புதைந்து கிடக்கிறது.<br />
<br />
காரைக்குடி நாடக நடிகர்-அமைப்பாளர் சங்கம் ஒரு குறுகிய இடுகலான தெருவில் அமைந்திருந்தது. அதை நாடகத்தில் பபூன் காமிக்குகள் ‘மூத்திர சந்து’ என்று கிண்டலாக குறிப்பது உண்டு. நடிகர் சங்கத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் நாலைந்துபேர் சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தரிசிக்க நேரிட்டுவிடும். மூத்திர வாசனையைக் கடந்து நடிகர் சங்கத்திற்குள் நுழைந்துவிட்டால்போதும், பவுடர் வாசனைகள் மூக்கைத் துளைக்கும். சங்கத்திற்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் உண்டு. சங்க வேலைகளைக் கவனித்துக் கொள்ள முழுநேர பணியாளர் ஒருவரும் உண்டு. சங்கத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு ஸ்திரீபார்ட் நடிகை, தன் உறவுக்காரப் பெண்ணுடனும் வயதான தாயுடனும் வசித்து வந்தார். உறவுக்காரப் பெண் டான்ஸ்காமிக் பாத்திரமேற்று நடிக்கும் பெண் நடிகை.<br />
<br />
காரைக்குடி நாடக நடிகர் அமைப்பாளர் சங்கம் நாடக ஆய்வை மேற்கொள்ளச் சென்ற ஆய்வாளனாகிய எனக்குப் பல உதவிகளைச் செய்தது. ஒவ்வொரு நாளும் நடிகர் கூடுகிற மாலைப்பொழுதில் சங்கத்திற்குப் போய்விடுவேன். சங்கப் பணியாளரின் உதவியோடு ஒவ்வொரு இரவும் ஒரு குழுவோடு பயணப்படுவேன். அன்றைய இரவு எந்த நாடகத்திற்குப் போவது என்பதைப் பல விதங்களில் முடிவு செய்வேன். நாடகத்தின் அடிப்படையில், ராஜபார்ட்டின் அடிப்படையில், ஸ்திரீபார்ட் அல்லது பபூன்காமிக் அடிப்படையில் என பல அடிப்படைகளில், ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் ஏதாவது ஒரு நாடகத்திலாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம். சங்கப்பணியாளர் பலமுறை இதில் எனக்கு உதவியிருக்கிறார். ‘நீங்க இளையராஜா நாடகம் பாத்துட்டீங்களா?’ என்பார். ‘ரொம்ப நாளைக்கு அப்புறம் இளையராஜா இந்தப் பகுதிக்கு நடிக்க வர்றார். நீங்க அவசியம் பார்க்கணும்’ என்று அனுப்பிவைப்பார்.<br />
<br />
நடிகர் சங்கத்தில் பல நடிகர்-நடிகைகளைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன். அவர்களுடைய தொழில், நடிப்பு, அனுபவம், சொந்த வாழ்க்கை எனப் பேச்சு நீளும். சங்கத்திலேயே தங்கியிருந்த டான்ஸ் காமிக் நடிகை அவ்வப்போது வந்து பேசுவார். திருமணமான ஒருசில ஆண்டுகளிலேயே கணவரைப் பிரிந்து வாழ்பவர். கைக்குழந்தையுடன் தன் பெரியம்மாவாகிய ஸ்திரீபார்ட் நடிகையுடன் நடிகர் சங்கக் கட்டிடத்திலேயே வசிக்கிறார். அவருக்கு வரும் வாய்ப்புகள் மற்ற டான்ஸ் காமிக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. எனவே மிகுதியான நேரம் நடிகர் சங்கத்திலேயே இருப்பார். அவரும் சங்க உதவியாளரும்தான் நாடக குழூஉக் குறிகளைத் தொகுக்க எனக்கு உதவியவர்கள். நான் தொடர்ந்து ஒருமாத காலம் நடிகர் சங்கத்திற்குச் சென்று வந்த பிறகு - ஒரு நாளில் அவருக்கு நாடக வாய்ப்பு வந்தது.<br />
<br />
‘நாளைக்கு இவங்க நடிக்கிற நாடகம் ஒன்னு இருக்கு சார்... நீங்க போய்ப் பார்த்துட்டு வந்திடுங்க...’ என்றார் உதவியாளர். சரி என்றேன். நடிகையோ அவருடைய நாடகம் பார்க்க என்னை வரவேண்டாம் என்றார். ‘எதற்கு வேண்டாம் என்கிறீர்கள்?’ என்றேன். ‘சார்...நீங்க என்கிட்ட ரொம்ப மரியாதையா பேசுறீங்க... எங்க கலைவாழ்க்கையை மதிக்கிறீங்க... நீங்க நான் நடிக்கிறத பாத்தா எங்க மேல நீங்க வச்சிருக்கிற மரியாதை போயிடும்... பபூன் காமிக்கோட நடிக்கிறப்போ ரெட்டை அர்த்தத்தில் பேச வேண்டியிருக்கும்; பாட வேண்டியிருக்கும்... அதனால அதை நீங்க பார்க்க வேண்டாம்...’ என்றார். நான் பல நாடகங்களை ஏற்கனவே பார்த்திருந்தேன். எனவே அது இக்கலை வடிவத்தின் ஒரு பகுதி என்ற அளவில் நான் புரிந்து கொண்டிருந்தேன். எனவே நாடகத்தில் அவர்களின் பங்கேற்பை அவர்களின் தனிப்பட்ட குணநலன்களோடு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்ற தெளிவுடன் இருந்தேன். இதை அந்நடிகையிடம் தெரிவித்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுபோன்ற பல நாடக நிகழ்வுகளைப் பார்த்து வருகிறேன்; அது எனது ஆய்வுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.<br />
<br />
மறுநாள் மாலை நாடகங்களுக்குரிய ஊர்களுக்குச் செல்ல எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட டான்ஸ்காமிக் நடிகை மறைந்து மறைந்து சென்று அவருக்குரிய வாகனத்தில் அமர்ந்துவிட்டார். ‘சார்... வண்டி புறப்படட்டும். டூவீலர்ல போய்... கூட்டத்துல உட்கார்ந்து நாடகம் பாத்துட்டு வந்துடுவோம் நாம... ரொம்பத்தான் திமிர் புடிக்கிறா அந்தப் பொண்ணு...’ என்றார் சங்க உதவியாளர். மறுத்துவிட்டேன் நான். இயல்பு வாழ்க்கையும் நாடக வாழ்க்கையும் ஒன்றே என்று நினைக்கிற மரியாதைக்குரிய அந்நடிகையின் காலடி மண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறேன். வேறொரு குழுவோடு வேறொரு நாடகம் பார்க்க வேறொரு ஊருக்குப் பயணப்படுகிறேன்.<br />
<br />
விநாயகர் திருமணம்:<br />
<br />
இசைநாடக உலகம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைவுற்று வருகிறது என்பது ஒரு ஆண்டில் நிகழ்த்தப்படும் நாடக நிகழ்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் வீரியமிழந்து வருகிறது என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. இசை நாடகம் தன் கலைத்தன்மையில் காலூன்றி நவீனத்தை எதிர்கொள்ளவில்லை. அது நவீன மாறுதலுக்கேற்பத் தன்னை புனருத்தாரணம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சினிமாவின் தொங்குசதையாக மாறி வருகிறது. எனவே இசைநாடகம் ‘பாட்டுக் கச்சேரியாக - அதுவும் சினிமாப் பாட்டுக் கச்சேரியாக’ மாறி வருவதனைப் பற்றிய கவலையுணர்வு அக்கலைஞர்களுக்கே இருக்கிறது. அது மட்டுமல்ல... ஒரு சில நாடகங்களைத் தவிர பிற நாடகங்களை நிகழ்த்தக்கூடிய கலைஞர்கள் குறைந்து வருகின்றனர். தவத்திரு சங்கரதாச சுவாமிகள் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வள்ளிதிருமணம், அரிச்சந்திர மயான காண்டம் இரண்டையும் விட்டால் வேறு நாடகங்கள் நிகழ்த்தப்படுவது அரிதாகிவிட்டது. பாமாவிஜயம், தூக்குத்தூக்கி, கோவிலன் கதை, வீரபாண்டியக் கட்டபொம்மன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்ற நாடகங்களை நடிப்பதற்கான நடிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.<br />
<br />
சென்னையில் தமிழகக் கலைகளின் சங்கம விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கத்தி தெருக்கூத்து, தெற்கத்தி தெருக்கூத்து, இசை நாடகம் முதலானவற்றை நிகழ்த்துவதாக ஏற்பாடு. இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்ய மதுரை புறப்பட்டார் நண்பர் ஒருவர். நந்தன் கதை நாடகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் நாடக நடிகர் சங்கத்தின் முகவரியைப் பெற்றுக் கொண்டார். “நந்தனார் கதை தெரிந்த ஒருசில பழைய நடிகர்கள் இருக்கலாம். ஆனால் நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தேவையான அனைத்துக் கலைஞர்களும் கிடைப்பது அரிதே” என்றேன். நண்பர் நம்பிக்கையோடு புறப்பட்டுப்போனார்.<br />
<br />
நந்தனார் கதை நாடகத்திற்கு புக் செய்துவிட்டேன் என்று நண்பர் சொன்னபோது ஆச்சரியமாகிவிட்டது நமக்கு. நடிகர்கள் இருக்கிறார்கள்; நாம்தான் ஒழுங்காகத் தேடிப்பார்க்கவில்லை என்று வெட்கமாகிப் போய்விட்டது. நந்தனார் கதையைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்.<br />
<br />
நாடகத்தன்று நடிகர்கள் வந்திறங்கிய பிறகு நாடக ஏஜெண்ட்டோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். ‘நந்தனாருக்கு ஆள் கிடைக்கல சார்... இப்போ சீஸன் வேற... யாருமே கெடைக்கல வள்ளிதிருமணம் ஏற்பாடு பண்றதே பெரிய பாடாப் போயிருச்சி...’ என்றார் ஏஜெண்ட். வேற வழி? நடக்கட்டும் நாடகம் என்றார் நண்பர்.<br />
<br />
ஒப்பனை அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கலைஞர்கள் ஒப்பனையில் மும்முரமாய் இருந்தார்கள். உடல் பருமனான ஒருவர் ஒப்பனையிட்டுக் கொண்டிருந்தார்; பபூன் காமிக்காக இருக்கலாம். மதுரையில் குண்டுசேகர் என்று ஒரு பபூன் காமிக் உண்டு. வயிறைக் குலுக்கியபடி அவர் ஆடும் ஆட்டத்தைக் கண்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி இவரும் ஒரு பபூனாக இருக்கலாம் என்று தோன்றியது. பருத்த நடிகர் இடும் ஒப்பனையோ என் கருத்தை மறுத்தது. ராஜபார்ட்டுக்கான ஒப்பனை அவரில் படருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுகாசல முருக ஒப்பனையோடு எழுந்து நின்றார் நடிகர். அவருடைய உடல்வாகுக்கு வெகுநேரம் மேடையில் நிற்பதே சிரமம் என்பதனை, எழுந்து நிற்பதற்கான அவரது முஸ்தீபுகளே உணர்த்திவிட்டது. நாடக சீஸனில் ஆள் கிடைக்காததால் ஒரு பழம் ‘பெரும்’ நடிகரை அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கிறது ராஜபார்ட் நடிகரை அணுகிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த விழா தமிழகக் கலை வடிவங்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா என்பதனை எடுத்துச் சொன்னேன். எனவே சினிமாப் பாடல்களைத் தவிர்த்து விடுங்கள். முழுக்க முழுக்க தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் நாடகப் பாடல்களை மட்டுமே பாடுங்கள்; அப்பொழுதுதான் இசை நாடக வடிவத்தின் உயரிய தன்மை-செவ்வியல் தன்மை-வெளிப்படும் என்றேன். ராஜபார்ட் தலையாட்டினார்.<br />
<br />
நாடகம் தொடங்கிவிட்டது. ராஜபார்ட் அரங்கில் பிரவேசிக்க வேண்டிய தருணம். நடிகரும் தயார். எல்லோரையும் வணங்கியபடி அசைந்தாடி குறுநடை நடந்து மெல்ல அரங்கில் பிரவேசித்தார் நடிகர். அவரைக் கண்டதுமே அரங்கில் குபீர் சிரிப்பு. ராஜபார்ட்டுக்கோ வெட்கமாகிப் போய்விட்டது. தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஒலி வாங்கி முன்னால் வந்து நின்றார். ‘மறைந்த திரையுலக இசை மாமேதை... என் குருநாதர்... டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி... ஆரம்பிக்கின்றேன் என் பணியை. என் குருநாதரின் பாடலைப் பாடுகிறேன்...’ என்றார். என் முகத்தில் ஈயாடவில்லை. ராஜபார்ட் தொடங்கினார் தன்பணியை. ஆறு பாட்டு... டி.ஆர். மகாலிங்கம் பாட்டு.<br />
<br />
ஒரு வழியாய் நாடகம் முடிந்தது. நண்பர் ஒருவரிடம் நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டேன். ‘விநாயகர் திருமணம்’ நன்றாகவே இருந்தது என்றார். ‘அட என்னப்பா... விடிய விடியக் கதை கேட்டு... சீதைக்கு ராமன் சித்தப்பன்றியே... நடந்தது வள்ளி திருமணம் நாடகமப்பா...’ என்றேன். நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நடந்தது வள்ளி திருமணம்தான். ஆனால் வள்ளியை நடக்க முடியாத விநாயகரல்லவா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார்?’ என்றார்.<br />
<br />
<br />
¿ýÈ¢- ÒÐÅ¢¨º                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம்<br />
[b]கி.பார்த்திபராஜா&lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம்.<br />
<br />
சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வொரு நாடகத்திற்கான நடிகர்களும் குழுவாகக் கூடிய பிறகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் புறப்படுவார்கள்.<br />
<br />
ஸ்பெஷல் நாடக அமைப்பு என்றால் என்ன என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பாத்திரமேற்கும் நடிகர், அதுவரை தான் சந்தித்தேயிராத நடிகருடன் இணைந்து நடிக்க முடிவது இந்த ஸ்பெஷல் நாடக அமைப்பில்தான். நடிகர் சங்கத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நோட்டுப்புத்தகம் இருக்கும். நாடகத்திற்கு புக் பண்ண வருபவர்கள் நடிகர் சங்கப் பணியாளருடைய உதவியோடு, தான் விரும்பும் நடிகர் நடிகைகளுடைய குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்வார்கள். இன்ன நடிகருக்கு இன்ன நடிகையை ஜோடியாகப் போட்டால்தான் நாடகம் நன்றாக இருக்குமென்பது நாடகம் புக் பண்ண வருபவரின் மனக்கணக்காக இருக்கும். பபூனுக்கு பொன்னமராவதி ஆறுமுகம்; டான்ஸ்க்கு திண்டுக்கல் பத்மா; முருகனுக்கு புதுக்கோட்டை ஸ்ரீராம்; வள்ளிக்கு புதுக்கோட்டை சித்ரா; நாரதருக்கு வரிச்சியூர் பழனியப்பன்; அரிச்சந்திரனுக்கு இடைச்சியூரணி முருகேசன்; சந்திரமதிக்கு திண்டுக்கல் சோலைவள்ளி... இப்படி கேட்டுக் கேட்டு பதிவு செய்தல் உண்டு. ஊராரே இவ்வாறு குறிப்பாகக் கேட்டு ஒப்பந்தம் செய்யும் நடிகர் தன்னை “குறிப்பு” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. இது தவிர நாடக ஏஜெண்டுகள் தாமே தேர்ந்தெடுத்து ஒப்பந்தம் செய்வதும் நடைமுறை வழக்கில் இருக்கிறது. இவர்களுடைய நாடகத் தேதி, இடம் முதலானவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் நடிகர் சங்கத்திற்கு இருக்கிறது. ஒப்பந்தம் செய்த பிறகு அதை மறுக்க நடிகர்களுக்கு அதிகாரம் கிடையாது.<br />
<br />
ஒப்பந்தம் செய்த நாளில் ஒப்பந்தம் செய்த நடிகர்களோடு சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடவேண்டும். தவறுகிற நடிகர்களின் மீது சங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. தேதி ஊர் முதலான தகவல்களை நடிகர் நடிகைகளும் தங்களிடமுள்ள குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்கின்றனர்.<br />
<br />
நாடக மேடையில் நடிகர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள், ஏஜெண்டுகளுக்கும் நடிகர்களுக்குமிடையே ஏற்படும் பணத்தகராறுகள் முதலானவற்றில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் பொறுப்பினைச் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரச்சினைகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம்.<br />
<br />
வள்ளிதிருமணம் நாடகம். ராஜபார்ட் மிகவும் இளவயது நடிகர்; கத்துக்குட்டி. ஸ்திரீபார்ட் மூத்த நடிகை. இளவயது நடிகர் மூத்த நடிகையை அக்கா என்றுதான் அழைப்பார். மேடையில் இருவரும் முருகனும் வள்ளியுமாக வந்து காதல் புரிய வேண்டும். மானைத் தேடிவரும் முருகனோடு வள்ளி முரண்படுவாள்; கோபிப்பாள்; சண்டையிடுவாள். இறுதியில் மோதல் காதலாகித் திருமணத்தில் முடியவேண்டும்.<br />
<br />
இப்போது மோதல் கட்டம். வேடனாக வந்திருக்கும் முருகன் தன்னுடைய குலப்பெருமை பேசுவான். வள்ளியோ சளைக்காது தன் குறக்குலப் பெருமை பேசுவாள். வசனங்கள் அவரவர் பேசிக் கொள்வதுதானே... பேசுகிறார்கள். பேச்சிடையே முருகன் சொல்கிறான்: என் தந்தை யார் தெரியுமா? என் தந்தை அக்காளை ஏறியவன். இதைச் சொல்லும் முறைமையில் மறைபொருளாக ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறான். என் தந்தை - சிவன் -காளை வாகனத்திலே அமர்ந்து காட்சி தருபவன் என்பது அது. ஆனாலும் நகைச்சுவைக்காக இருபொருள் தொனிக்கும்படி இதை அழுத்திச் சொல்கிறான். முகத்திலே கட்டுக்கொள்ளாத சிரிப்பு. பார்வையாளர்களும் சிரிக்கின்றனர். முதுபெரும் நடிகையான ஸ்தரீபார்ட்டுக்கு முகம் சிவக்கிறது. ‘யாரிடம் என்ன வார்த்தை பேசுகிறான் இந்த கத்துக்குட்டி நடிகன்? கொஞ்சங்கூட மரியாதையில்லாமல். ஆபாசமான வார்த்தையை என்னிடம் எப்படிப் பேசலாம்?’ முகத்துத் தசைகள் துடிக்க ஆவேசத்துடன் பார்க்கிறார் முருகனாக நடிக்கும் கத்துக்குட்டி நடிகரை. வசைமாரி பொழியத் தொடங்குகிறது. ‘யாரு கிட்ட அக்காளை ஏறுனவன்னு சொல்ற... நீ உன் ஆத்தாளை ஏறு... அம்மாவை ஏறு... அதையெல்லாம் ஏங்கிட்ட வந்து ஏண்டா பேசுற... த்தூ... எச்சிப் பொறுக்கி நாயே... மரியாதை தந்து மரியாதை வாங்கு... சபை நாகரீகம் தெரிஞ்சு பேசு... இல்லன்னா அறுத்துத் தொங்கப் போட்டுருவேன் நாக்கை... செருப்பால அடிப்பேன்...’<br />
<br />
திகைத்துப்போகிறார் கத்துக்குட்டி நடிகர். பாராட்டுக் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் பேசியவார்த்தை வசவுக்கு வழிவகுத்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. எந்த முருகப் பெருமானும் வள்ளியிடம் இவ்வளவு மோசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்திருக்கமாட்டார். மூத்த நடிகையின் வசவுகள் நின்றபாடில்லை. ஊர்ப் பெரியவர்கள் பிரச்னையில் தலையிட்டுச் சமாதானம் செய்கின்றனர்.<br />
‘சரி விடும்மா... ஏதோ சின்னப்பையன் தெரியாமப் பேசிட்டான்... அனுபவமுள்ள நடிகை நீதான் அவனை மன்னிக்கணும்... சரி விடு...விடு...” ஊரார் சொல்வதால் சம்மதிக்கிறார் நடிகை. நாடகம் மீண்டும் தொடருகிறது. மீண்டும் மோதல்; காதல். காதல் காட்சிகளில் கத்துக்குட்டி ராஜபார்ட் நடிகரிடம் உற்சாகம் இல்லை; சோபை இழந்து காட்சி தருகிறார்.<br />
<br />
நாடகம் முடிவுற்றது. சங்கத்திற்கு திரும்பிய ஸ்திரீபார்ட் நடிகை. சங்கத்திலிருக்கும் தன் குறிப்பேட்டை எடுத்து முகப்பில் எழுதுகிறார் ‘குறிப்பிட்ட அந்த நடிகருடன் யாரும் எனக்கு நாடக ஒப்பந்தம் செய்யவேண்டாம்’. பல நடிகர்களுடைய குறிப்பேட்டில் இதுபோன்ற வாசகங்களைப் பார்க்கலாம். இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டுச் சங்கம் சமாதானம் செய்துவைக்கும்.<br />
<br />
இசைநாடக உலகம் புனைவுகளால் ஜீவித்துக் கிடக்கும் உலகம். இசை நாடக நடிகர்கள் புனைவில் வாழும் மனிதர்கள். இவர்களது புனைவின் வசீகரம் நாடகம் பார்க்கும் சாதாரண எளிய மக்களையும் தொற்றிக் கொள்கிறது. புனைவுவெளி மனிதர்களான இசை நாடகக் கலைஞர்களின் இயல்பு வாழ்க்கையும்கூட புனைவு மயக்கத்திற்குள் புதைந்து கிடக்கிறது.<br />
<br />
காரைக்குடி நாடக நடிகர்-அமைப்பாளர் சங்கம் ஒரு குறுகிய இடுகலான தெருவில் அமைந்திருந்தது. அதை நாடகத்தில் பபூன் காமிக்குகள் ‘மூத்திர சந்து’ என்று கிண்டலாக குறிப்பது உண்டு. நடிகர் சங்கத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் நாலைந்துபேர் சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தரிசிக்க நேரிட்டுவிடும். மூத்திர வாசனையைக் கடந்து நடிகர் சங்கத்திற்குள் நுழைந்துவிட்டால்போதும், பவுடர் வாசனைகள் மூக்கைத் துளைக்கும். சங்கத்திற்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் யாவரும் உண்டு. சங்க வேலைகளைக் கவனித்துக் கொள்ள முழுநேர பணியாளர் ஒருவரும் உண்டு. சங்கத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு ஸ்திரீபார்ட் நடிகை, தன் உறவுக்காரப் பெண்ணுடனும் வயதான தாயுடனும் வசித்து வந்தார். உறவுக்காரப் பெண் டான்ஸ்காமிக் பாத்திரமேற்று நடிக்கும் பெண் நடிகை.<br />
<br />
காரைக்குடி நாடக நடிகர் அமைப்பாளர் சங்கம் நாடக ஆய்வை மேற்கொள்ளச் சென்ற ஆய்வாளனாகிய எனக்குப் பல உதவிகளைச் செய்தது. ஒவ்வொரு நாளும் நடிகர் கூடுகிற மாலைப்பொழுதில் சங்கத்திற்குப் போய்விடுவேன். சங்கப் பணியாளரின் உதவியோடு ஒவ்வொரு இரவும் ஒரு குழுவோடு பயணப்படுவேன். அன்றைய இரவு எந்த நாடகத்திற்குப் போவது என்பதைப் பல விதங்களில் முடிவு செய்வேன். நாடகத்தின் அடிப்படையில், ராஜபார்ட்டின் அடிப்படையில், ஸ்திரீபார்ட் அல்லது பபூன்காமிக் அடிப்படையில் என பல அடிப்படைகளில், ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் ஏதாவது ஒரு நாடகத்திலாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம். சங்கப்பணியாளர் பலமுறை இதில் எனக்கு உதவியிருக்கிறார். ‘நீங்க இளையராஜா நாடகம் பாத்துட்டீங்களா?’ என்பார். ‘ரொம்ப நாளைக்கு அப்புறம் இளையராஜா இந்தப் பகுதிக்கு நடிக்க வர்றார். நீங்க அவசியம் பார்க்கணும்’ என்று அனுப்பிவைப்பார்.<br />
<br />
நடிகர் சங்கத்தில் பல நடிகர்-நடிகைகளைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன். அவர்களுடைய தொழில், நடிப்பு, அனுபவம், சொந்த வாழ்க்கை எனப் பேச்சு நீளும். சங்கத்திலேயே தங்கியிருந்த டான்ஸ் காமிக் நடிகை அவ்வப்போது வந்து பேசுவார். திருமணமான ஒருசில ஆண்டுகளிலேயே கணவரைப் பிரிந்து வாழ்பவர். கைக்குழந்தையுடன் தன் பெரியம்மாவாகிய ஸ்திரீபார்ட் நடிகையுடன் நடிகர் சங்கக் கட்டிடத்திலேயே வசிக்கிறார். அவருக்கு வரும் வாய்ப்புகள் மற்ற டான்ஸ் காமிக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. எனவே மிகுதியான நேரம் நடிகர் சங்கத்திலேயே இருப்பார். அவரும் சங்க உதவியாளரும்தான் நாடக குழூஉக் குறிகளைத் தொகுக்க எனக்கு உதவியவர்கள். நான் தொடர்ந்து ஒருமாத காலம் நடிகர் சங்கத்திற்குச் சென்று வந்த பிறகு - ஒரு நாளில் அவருக்கு நாடக வாய்ப்பு வந்தது.<br />
<br />
‘நாளைக்கு இவங்க நடிக்கிற நாடகம் ஒன்னு இருக்கு சார்... நீங்க போய்ப் பார்த்துட்டு வந்திடுங்க...’ என்றார் உதவியாளர். சரி என்றேன். நடிகையோ அவருடைய நாடகம் பார்க்க என்னை வரவேண்டாம் என்றார். ‘எதற்கு வேண்டாம் என்கிறீர்கள்?’ என்றேன். ‘சார்...நீங்க என்கிட்ட ரொம்ப மரியாதையா பேசுறீங்க... எங்க கலைவாழ்க்கையை மதிக்கிறீங்க... நீங்க நான் நடிக்கிறத பாத்தா எங்க மேல நீங்க வச்சிருக்கிற மரியாதை போயிடும்... பபூன் காமிக்கோட நடிக்கிறப்போ ரெட்டை அர்த்தத்தில் பேச வேண்டியிருக்கும்; பாட வேண்டியிருக்கும்... அதனால அதை நீங்க பார்க்க வேண்டாம்...’ என்றார். நான் பல நாடகங்களை ஏற்கனவே பார்த்திருந்தேன். எனவே அது இக்கலை வடிவத்தின் ஒரு பகுதி என்ற அளவில் நான் புரிந்து கொண்டிருந்தேன். எனவே நாடகத்தில் அவர்களின் பங்கேற்பை அவர்களின் தனிப்பட்ட குணநலன்களோடு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்ற தெளிவுடன் இருந்தேன். இதை அந்நடிகையிடம் தெரிவித்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுபோன்ற பல நாடக நிகழ்வுகளைப் பார்த்து வருகிறேன்; அது எனது ஆய்வுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.<br />
<br />
மறுநாள் மாலை நாடகங்களுக்குரிய ஊர்களுக்குச் செல்ல எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட டான்ஸ்காமிக் நடிகை மறைந்து மறைந்து சென்று அவருக்குரிய வாகனத்தில் அமர்ந்துவிட்டார். ‘சார்... வண்டி புறப்படட்டும். டூவீலர்ல போய்... கூட்டத்துல உட்கார்ந்து நாடகம் பாத்துட்டு வந்துடுவோம் நாம... ரொம்பத்தான் திமிர் புடிக்கிறா அந்தப் பொண்ணு...’ என்றார் சங்க உதவியாளர். மறுத்துவிட்டேன் நான். இயல்பு வாழ்க்கையும் நாடக வாழ்க்கையும் ஒன்றே என்று நினைக்கிற மரியாதைக்குரிய அந்நடிகையின் காலடி மண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறேன். வேறொரு குழுவோடு வேறொரு நாடகம் பார்க்க வேறொரு ஊருக்குப் பயணப்படுகிறேன்.<br />
<br />
விநாயகர் திருமணம்:<br />
<br />
இசைநாடக உலகம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைவுற்று வருகிறது என்பது ஒரு ஆண்டில் நிகழ்த்தப்படும் நாடக நிகழ்வுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் வீரியமிழந்து வருகிறது என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. இசை நாடகம் தன் கலைத்தன்மையில் காலூன்றி நவீனத்தை எதிர்கொள்ளவில்லை. அது நவீன மாறுதலுக்கேற்பத் தன்னை புனருத்தாரணம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சினிமாவின் தொங்குசதையாக மாறி வருகிறது. எனவே இசைநாடகம் ‘பாட்டுக் கச்சேரியாக - அதுவும் சினிமாப் பாட்டுக் கச்சேரியாக’ மாறி வருவதனைப் பற்றிய கவலையுணர்வு அக்கலைஞர்களுக்கே இருக்கிறது. அது மட்டுமல்ல... ஒரு சில நாடகங்களைத் தவிர பிற நாடகங்களை நிகழ்த்தக்கூடிய கலைஞர்கள் குறைந்து வருகின்றனர். தவத்திரு சங்கரதாச சுவாமிகள் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வள்ளிதிருமணம், அரிச்சந்திர மயான காண்டம் இரண்டையும் விட்டால் வேறு நாடகங்கள் நிகழ்த்தப்படுவது அரிதாகிவிட்டது. பாமாவிஜயம், தூக்குத்தூக்கி, கோவிலன் கதை, வீரபாண்டியக் கட்டபொம்மன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்ற நாடகங்களை நடிப்பதற்கான நடிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.<br />
<br />
சென்னையில் தமிழகக் கலைகளின் சங்கம விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கத்தி தெருக்கூத்து, தெற்கத்தி தெருக்கூத்து, இசை நாடகம் முதலானவற்றை நிகழ்த்துவதாக ஏற்பாடு. இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்ய மதுரை புறப்பட்டார் நண்பர் ஒருவர். நந்தன் கதை நாடகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் நாடக நடிகர் சங்கத்தின் முகவரியைப் பெற்றுக் கொண்டார். “நந்தனார் கதை தெரிந்த ஒருசில பழைய நடிகர்கள் இருக்கலாம். ஆனால் நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தேவையான அனைத்துக் கலைஞர்களும் கிடைப்பது அரிதே” என்றேன். நண்பர் நம்பிக்கையோடு புறப்பட்டுப்போனார்.<br />
<br />
நந்தனார் கதை நாடகத்திற்கு புக் செய்துவிட்டேன் என்று நண்பர் சொன்னபோது ஆச்சரியமாகிவிட்டது நமக்கு. நடிகர்கள் இருக்கிறார்கள்; நாம்தான் ஒழுங்காகத் தேடிப்பார்க்கவில்லை என்று வெட்கமாகிப் போய்விட்டது. நந்தனார் கதையைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்.<br />
<br />
நாடகத்தன்று நடிகர்கள் வந்திறங்கிய பிறகு நாடக ஏஜெண்ட்டோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். ‘நந்தனாருக்கு ஆள் கிடைக்கல சார்... இப்போ சீஸன் வேற... யாருமே கெடைக்கல வள்ளிதிருமணம் ஏற்பாடு பண்றதே பெரிய பாடாப் போயிருச்சி...’ என்றார் ஏஜெண்ட். வேற வழி? நடக்கட்டும் நாடகம் என்றார் நண்பர்.<br />
<br />
ஒப்பனை அறைக்குள் எட்டிப் பார்த்தேன். கலைஞர்கள் ஒப்பனையில் மும்முரமாய் இருந்தார்கள். உடல் பருமனான ஒருவர் ஒப்பனையிட்டுக் கொண்டிருந்தார்; பபூன் காமிக்காக இருக்கலாம். மதுரையில் குண்டுசேகர் என்று ஒரு பபூன் காமிக் உண்டு. வயிறைக் குலுக்கியபடி அவர் ஆடும் ஆட்டத்தைக் கண்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அப்படி இவரும் ஒரு பபூனாக இருக்கலாம் என்று தோன்றியது. பருத்த நடிகர் இடும் ஒப்பனையோ என் கருத்தை மறுத்தது. ராஜபார்ட்டுக்கான ஒப்பனை அவரில் படருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுகாசல முருக ஒப்பனையோடு எழுந்து நின்றார் நடிகர். அவருடைய உடல்வாகுக்கு வெகுநேரம் மேடையில் நிற்பதே சிரமம் என்பதனை, எழுந்து நிற்பதற்கான அவரது முஸ்தீபுகளே உணர்த்திவிட்டது. நாடக சீஸனில் ஆள் கிடைக்காததால் ஒரு பழம் ‘பெரும்’ நடிகரை அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கிறது ராஜபார்ட் நடிகரை அணுகிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த விழா தமிழகக் கலை வடிவங்களைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா என்பதனை எடுத்துச் சொன்னேன். எனவே சினிமாப் பாடல்களைத் தவிர்த்து விடுங்கள். முழுக்க முழுக்க தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் நாடகப் பாடல்களை மட்டுமே பாடுங்கள்; அப்பொழுதுதான் இசை நாடக வடிவத்தின் உயரிய தன்மை-செவ்வியல் தன்மை-வெளிப்படும் என்றேன். ராஜபார்ட் தலையாட்டினார்.<br />
<br />
நாடகம் தொடங்கிவிட்டது. ராஜபார்ட் அரங்கில் பிரவேசிக்க வேண்டிய தருணம். நடிகரும் தயார். எல்லோரையும் வணங்கியபடி அசைந்தாடி குறுநடை நடந்து மெல்ல அரங்கில் பிரவேசித்தார் நடிகர். அவரைக் கண்டதுமே அரங்கில் குபீர் சிரிப்பு. ராஜபார்ட்டுக்கோ வெட்கமாகிப் போய்விட்டது. தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஒலி வாங்கி முன்னால் வந்து நின்றார். ‘மறைந்த திரையுலக இசை மாமேதை... என் குருநாதர்... டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி... ஆரம்பிக்கின்றேன் என் பணியை. என் குருநாதரின் பாடலைப் பாடுகிறேன்...’ என்றார். என் முகத்தில் ஈயாடவில்லை. ராஜபார்ட் தொடங்கினார் தன்பணியை. ஆறு பாட்டு... டி.ஆர். மகாலிங்கம் பாட்டு.<br />
<br />
ஒரு வழியாய் நாடகம் முடிந்தது. நண்பர் ஒருவரிடம் நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டேன். ‘விநாயகர் திருமணம்’ நன்றாகவே இருந்தது என்றார். ‘அட என்னப்பா... விடிய விடியக் கதை கேட்டு... சீதைக்கு ராமன் சித்தப்பன்றியே... நடந்தது வள்ளி திருமணம் நாடகமப்பா...’ என்றேன். நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நடந்தது வள்ளி திருமணம்தான். ஆனால் வள்ளியை நடக்க முடியாத விநாயகரல்லவா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார்?’ என்றார்.<br />
<br />
<br />
¿ýÈ¢- ÒÐÅ¢¨º                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சனாதனன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=660</link>
			<pubDate>Wed, 01 Mar 2006 21:13:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=832">KULAKADDAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=660</guid>
			<description><![CDATA[                    ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. <br />
<br />
இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், <br />
<br />
<a href="http://shanaathanan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://shanaathanan.blogspot.com/</a><br />
கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம்.<br />
<br />
<a href="http://shanaathanan-thegallery.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://shanaathanan-thegallery.blogspot.com/</a><br />
<br />
நன்றி <br />
<a href="http://djthamilan.blogspot.com/2006/02/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. <br />
<br />
இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், <br />
<br />
<a href="http://shanaathanan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://shanaathanan.blogspot.com/</a><br />
கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம்.<br />
<br />
<a href="http://shanaathanan-thegallery.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://shanaathanan-thegallery.blogspot.com/</a><br />
<br />
நன்றி <br />
<a href="http://djthamilan.blogspot.com/2006/02/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சனாதனன்,சுஜித்(ஜி),திருமாவளவன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=743</link>
			<pubDate>Thu, 23 Feb 2006 04:53:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1468">Snegethy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=743</guid>
			<description><![CDATA[                    முன்று கலைஞர்களின் அறிமுகம்.கேள்விப்பட்ட ஒரு கலைஞரின் அறமுகமும் கேள்விப்படாத இரு கலைஞர்களின் அறிமுகமும் டிசேயின் வலைப்பதிவில் வாசித்தேன்.நீங்களும் பாருங்கள்.<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2006/02/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    முன்று கலைஞர்களின் அறிமுகம்.கேள்விப்பட்ட ஒரு கலைஞரின் அறமுகமும் கேள்விப்படாத இரு கலைஞர்களின் அறிமுகமும் டிசேயின் வலைப்பதிவில் வாசித்தேன்.நீங்களும் பாருங்கள்.<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2006/02/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=748</link>
			<pubDate>Wed, 22 Feb 2006 19:11:41 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=748</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை<br />
ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்&lt;/b&gt;<br />
<br />
"குழந்தை தோளில் சரிகின்றது<br />
நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது<br />
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி<br />
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..'<br />
மடிபற்றி எழுகின்றது கேள்வி"<br />
'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன்<br />
<br />
'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குடும்பத்துடன் வசிக்கிறார். <br />
<br />
பல பத்திரிகைகளுடன் இணைந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர ஃப்ரீலான்ஸ் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற 53 வயதான அரவிந்தன், பல வருட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார். ஹோட்டல் அறை ஒன்றில் இந்த நேர்காணலுக்காகச் சந்தித்தபோது தயக்கங்கள் இல்லாமல் ரொம்ப காலமாகப் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். புலம்பெயர்வின் இடையறாத வலி தொற்றிய அவருடைய பேச்சு அவர் தங்கியிருந்த அறையைக் கதகதப்பு மிக்கதாக உணரச் செய்திருந்தது. <br />
<br />
<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
<br />
<br />
இனி அவருடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:<br />
&lt;img src='http://img153.imageshack.us/img153/5424/tron0150bc.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
1953ஆம் வருடம் நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். என் தாய் தந்தையரின் சொந்த ஊர் நெடுந்தீவு. என் பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் அதன்பின் தொடாந்தும் நான் படித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். எழுபதுகளுக்குப் பின்னால் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் அப்பா அரசு ஊழியர். உணவுக் கட்டுப்பாட்டு திணைக்களத்தில் வேலை செய்தார். அம்மா மருத்துவ தாதியாக யாழ் மருத்துவமனையில் பணியாற்றினார். நாங்கள் ஏழு பேர். நான் மூத்த ஆள். எனக்குக் கீழ் ஆறு பேர். <br />
<br />
மணா:<br />
1960களிலேயே இனப் பாகுபாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டதா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 60களில் நடந்த முக்கியமான நிகழ்வு சாதி எதிர்ப்புப் போராட்டம். அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் நடந்தது. நான் சிறு பையன்களாக இருந்தோன். அதில் ஈடுபடவில்லை.<br />
<br />
இலங்கையில் தமிழர்கள்  மத்தியில் இறுக்கமான சாதி அமைப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1965க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினால் சாதி எதிர்ப்பு ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச் சூடுவரை சென்றது. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தல், சமபந்தி போஜனம் போன்றவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. <br />
<br />
<br />
மணா:<br />
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அங்கே பொதுவுடைமை இயக்கம் செய்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
ஆமாம். சாதிய அடக்குமுறையை முக்கியமான பிரச்சினையாக பொதுவுடைமை இயக்கம்தான் எடுத்துப் போராடியது. சாதி எதிர்ப்பால் சமூகத்தில் சின்னதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனால் சரிவு என்று சொல்ல முடியாது. சமூகக் குலுக்கம் என்று சொல்லலாம். சாதியப் படிநிலைகள் குலுங்கின. அப்போது ஏற்பட்ட சின்ன அதிர்வு, மனோ நிலைகளில் சின்னதொரு மாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பயிற்சி முறைகள் பின்னாளில் ஈழப் போராட்டத்தில் உதவியாக இருந்தன. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டம் முன்னோடியாக இருந்தது. <br />
<br />
மணா:<br />
இந்தப் போராட்டம் இலங்கையின் எந்தப் பகுதியை முன்னிறுத்தி நடந்தது.<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
சாதிய அடக்குமுறையின் தீவிரம் வெளிப்படையாக தெரிய வந்தது குடா நாட்டில்தான். இங்குதான் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அதனால் சாதிய ரீதியான பிரச்சினை துலாம்பாரமாக தெரிய வந்தது. அதற்கான போராட்டம் கட்டாயத் தேவையாகவும் இருந்தது. அந்தப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய அறிவுதான் பிறகு ஏற்பட்ட போராட்டத்திற்கு கைமாற்றப்பட்டது. <br />
<br />
மணா:<br />
தமிழகத்தில் 1960களில் மாணவர்கள் மத்தியில் இயல்பான மொழி உணர்வு, இன உணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அதுதான் பின்னணியாக அமைந்தது. அதுமாதிரியான ஓர் உணர்வு இலங்கையில் இருந்ததா? <br />
<br />
கி.பி. அ-ன்:<br />
1950, 60களில் தீவிரமான செயல்பாடு கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை அளவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தார்கள்.  தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த தேசிய உணர்வு, தேசியம் பற்றியதான சிந்தனை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அதனால்தான் அது மக்களிடம் சரிவை சந்தித்தது. மக்களின் உணர்வை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். இலங்கை என்கிற தேசிய அளவிலான பார்வையுடன் எதையும் பார்க்க வேண்டும் என்பதான உணர்வில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தார்கள். ஆனால் இவர்கள் தொடக்க நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்கள்தான். பிறகு மாறிவிட்டார்கள். <br />
<br />
மணா:<br />
அந்தக் காலகட்டத்தில் அரசியல் உணர்வென்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாணவர்களிடம் இருந்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
பொதுவாக இலங்கைத் தமிழர்களிடம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குதான் அதிகம் இருந்தது. அக்கட்சியின் கருத்தோட்டம், எண்ணப்போக்கு என்பது இங்கிருந்த (தமிழகம்) திராவிட இயக்கத்தின் மொழி பற்றியதான கருத்துக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இணைவாக்கம் கொண்டதாக இருந்தன. <br />
<br />
தமிழ் உணர்ச்சியை ஊட்டி ஊட்டி, மேன்மைப்படுத்தி அதைத்தான் தமிழரசுக் அக்ட்சியினர் அரசியலாக்கினார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்களோ, அதை வழிநடத்தும் முறைகளோ அவர்களிடம் சரியாக அமையவில்லை. இலங்கை அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் அவர்களுக்குக் கவனம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு தமிழ்பேசும் மக்களுக்குட் தீர்வைப்பெற்றுத் தர முயற்சித்தாலும் தோல்விதான் ஏற்பட்டது. <br />
<br />
1965இல் தமிழரசுக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கிறார்கள். அதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அடையாள அட்டை மசோதா போன்று மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வருகிறபோது தமிழரசுக் கட்சிக்குள் இருந்த தீவிரமான கருத்துக் கொண்டவர்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியது. தேசிய ரீதியிலான தீவிர நிலை எட்டும் அதே வேளையில்தான், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்பாக முன்னெடுக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. <br />
<br />
1968 ஆம் ஆண்டு முக்கியமான காலகட்டம். மாணவர்கள் உலகில் எழுச்சிகளும், போராட்டங்களும் நிகழ்ந்தன. 65-70 காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வியட்நாம் போர், சேகுவாராவின் கொலை என உலகம் முழுவதும் வெவ்வேறான நிலைமை. 1970ல் இலங்கையில் புதிய ஆட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் எல்எஸ்பியும் கம்யூனிஸ்ட் கட்சி எனச் சிறு சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள். <br />
<br />
உடனடியாக அவர்கள் வந்து கல்வி பற்றியதான ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். அது தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். தரப்படுத்துதல் என்ற முறையில் சொல்லப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டு வீதிக்கு வருகிறார்கள். அது கல்வி அடிப்பையில் கொண்டு வரப்படவில்லை. இன ரீதியான ஒடுக்குமுறை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு முக்கியமாக இருக்கிறவர்களின் அரசியல் பயிற்சிக்கான தொடக்கநிலையாக அதைச் சொல்லலாம். 'நானும் மாணவர்களின் அந்தப் பேரணியில் கலந்து கொண்டேன்' என்று பலரும் சொல்லுமளவிற்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது. <br />
<br />
மணா:<br />
உங்கள் குடும்ப அளவில் ஏதும் பாதிப்பு நிகழ்ந்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
என் தந்தைக்கு பெரியார் கருத்துகளின் மீது ஈடுபாடு உண்டு. வீட்டில் நிறையப் புத்தகங்கள் வைத்திருந்தார். என்னுடைய சிறுவயதில் அவர் திராவிட கருத்துக் கொண்டவராக இருந்தார். ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, மதியழகன், சி.பி.சிற்றரசு, இப்படி பலரின் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது வயதில் புத்தக வாசிப்புத் தொடங்கும்போது பெரியார் மீது எனக்கு விருப்பம் வந்தது. அன்றைக்கு பெரியாரின் சிந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் ஒரு கலகக்காரன் மாதிரி மாறினேன். கிறிஸ்துமஸ¤க்கு எல்லோரும் புது உடுப்புப் போடுவார்கள். நான் போடமாட்டேன். இப்படி அந்த வயதுக்கேற்ற சின்னச்சின்ன கலகங்கள். <br />
<br />
அப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பார். கல்கி, அகிலன் என அந்தக் காலத்து எழுத்தாளர்கள்ன் நாவல்களை வாசிப்பது பழக்கம். வீட்டில் எப்போதும் பேப்பர் வாங்குவார்கள். நெடுந்தீவில் என்னுடைய அம்மாவின் பெரிய அண்ணர் வீட்டில் தங்கிக்கொண்டு படித்தேன். அந்த ஊருக்கு வள்ளம்(படகு) வந்தால்தான் பேப்பர் வரும். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த பேப்பரை வாசித்தபிறகுதான் மற்ற வேலைகளைப் கவனிப்பார்கள். <br />
<br />
நான் மதத்தால் ஒரு கத்தோலிக்கன். கத்தோலிக்க மத வெளியீடுகள் நிறைய வந்தன. எப்படியோ பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதேவேளையில் யாழ் மத்தியக் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். எனக்கு வரலாறு படிப்பித்தவர் தமிழ்நாட்டில் உள்ள பச்சையப்பன், கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர். திராவிட இயக்கக் கொள்கைக்காரராக இருந்தார். அண்ணாவின் திராவிட நாடெல்லாம் படித்தவர். அவர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியெல்லாம் சொல்லித் தரும்போது வெகு ஆர்வத்துடன் சொல்வார். எங்களுக்கு நெப்போலியன் பற்றி நிறைய கற்பனைகள் வரும். <br />
<br />
யூசுப் மாஸ்டர் என்று ஒருவர். அவர் ஜனநாயகம், வாக்களிப்பது எல்லாம் பொய் என்பார். என்ன ஜனநாயகம் என்பார். நாங்கள் படிக்கும்போது இலங்கை கல்வி அமைச்சகம் 'சியவச' என்ற பரிசுத் திட்டத்தை அறிவிக்கிறது. இதை எல்லா மாணவர்களும் வாங்க வேண்டும் என்கிறார்கள். அது சிங்களத்தில் இருந்தது. தமிழர்கள் வாங்கக்கூடாது என்று புறக்கணித்தோம். கல்லூரித் தேர்வுகளை ஒரு மண்டபத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆள் வந்து ஒவ்வொரு டேபிளிலும் டிக்கெட் வைத்துவிட்டுப்போனார். "பரீட்சை எழுத மாட்டோம்; டிக்கெட் வாங்க மாட்டோம்" என்று மறுத்தோம். இப்படி எங்களை முடுக்கி விட்டது அந்த வாத்தியார்தான். <br />
<br />
நான் மாணவர் நிலையில் தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவர்கள் புரட்சிகரமாக எதாவது செய்வார்கள் என்று நம்பினேன். பகத்சிங்க் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', போராட்டம் நாவல்களைப் படித்த அனுபவம். இதெல்லாம் சேர்ந்து எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்து வந்தன. <br />
<br />
எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் அயர்லாந்துப் போராளி தான்பிரீன் பற்றிய புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்து வாசிப்போம். ஒவ்வொருவராக ரகசியமாகப் பரிமாறிக்கொள்வோம். 'எரிமலைத் தியாகிகள்' என்ற புத்தகத்தை அப்படித்தான் படித்தோம். எல்லாம் தனிச்சுற்றுகளாகச் சுற்றி வரும். கீழ் இயக்கம் ஒன்றைத் துவக்குவதற்கான மனோநிலை அப்போதே தொடங்கியது. இப்படி ஒரு சூழல் உருவாகத் தொடங்கியது. <br />
<br />
1972-இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவரை பிரிட்டிஷாரால் வரையப்பட்ட அரசியலமைப்பை இவர்கள் தங்களுக்கானதாகச் செய்யவேண்டும் என்று புதிய அரசு அறிவிக்கிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கப்போகிறது, அதில் இங்கே வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நிலைமை என்ன, இவர்களுக்கான அதிகாரங்களை எப்படிப் பங்கிடப் போகிறார்கள்? என்பது போன்ற விவாதங்களை எல்லாக் கட்சியினரும் பேசத் தொடங்குகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக ஒரே தலைமையாக ஐக்கிய முன்னணியாக இணைய வேண்டும் என்று கருத்தெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இருந்தது. <br />
<br />
1972-ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கு முன்பு தமிழர் கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. 1972, மே 22ஆம் தேதி இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்படுகிறது. இலங்கை சிலோன் என்ற பெயரில்லாமல் ஸ்ரீலங்கா என்ற புதிய பெயர் அறிவிக்கப்படுகிறது. <br />
<br />
அந்த நாளை தமிழர்களின் கரி நாள் (கறுப்பு நாள்) என்று தமிழர்களின் ஐக்கிய முன்னணி அறிவிக்கிறது. மக்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கறுப்புக் கொடி ஏற்ரி துக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று 15ஆம் தேதியிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'மாணவர்களே பள்ளிக்குச் செல்லாதீர்கள்! ஊழியர்களே அலுவலகங்களுக்குச் செல்லாதீர்கள்!' என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை ஐக்கிய முன்னணி வெளியிட்டது. நாங்கள்  மாணவர்களாக இருந்தபோது அந்தப் பிரசுரத்தை விநியோகித்தோம். அப்போது போலீஸ் என்னையும் சேர்த்து மூன்று பேரைக் கைது செய்கிறது. அதற்குப் பிறகு தலைவர்கள் 'எங்களையும் கைது செய்யுங்கள்' என்றார்கள். அதெல்லாம் ஒரு துவக்கம். <br />
<br />
மணா:<br />
'தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பைப் பிறகு ஆரம்பித்தீர்களா?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
சிறையால் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 'தமிழ் இளைஞர் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன் தனி நடவடிக்கைகளாக உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தினோம். 1974ம் ஆண்டு நான்காவது தமிழாராச்சி மாநாடு நடக்கின்றது. அதையொட்டி படுகொலை நடக்கின்றது. இது ஐனவரியில். ஜுனில் சிவகுமாரன் இறக்கிறார். ஐனவரிக்கும் ஜுனிற்கும் இடையில் சிவகுமாரன் குழுவினராகிய நாங்கள் பல்வேறு வன்முறையை பாவித்தோம். அதில் தோல்விகள் கிடைத்தன.<br />
ஆறேழு குற்றங்களுக்காக 1976ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 77 வரைக்கும் ஒரு வருடம் சிறையில் இருந்தேன். பிறகு பெயிலில் வெளி வருகிறேன். அதேவருட பிற்பகுதியில் வழக்குகள் வரத்தொடங்குகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் பெயில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளுக்குள் போக வேண்டும். வீட்டில் வசதியில்லை. பிரச்சனை. 1978-இல் பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. பொலீசுக்கு அதிகாரம் கூடி முதற்தடவையாக தெருவில் இரண்டு இளைஞர்களை சுட்டுப் போடுகிறார்கள். அதுதான் முதல் சம்பவம். தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்குகின்றன. <br />
<br />
மணா:<br />
அந்தக்காலகட்டத்தில உங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
ஈராஸ் அமைப்பில் இருந்தேன். 1978ஆம் ஆண்டு லெபனான் சென்றுவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு பத்திரிகை நடத்துவது, நண்பர்களை ஒருங்கிணைப்பது எனப் பல வேலைகள் செய்தேன். பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். அப்போது தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தை நாங்கள் கட்டி வளர்த்திருக்கிறோம். தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுத்தோம். சின்னச் சின்ன புத்தகங்கள் கொண்டு வந்தோம். லங்காராணி நாவலை வெளியிட்டோம். இப்படி பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.<br />
<br />
மணா:<br />
நீங்கள் படைப்பு ரீதியாக எந்தக் காலகட்டத்தில இருந்து இயங்க ஆரம்பித்தீர்கள்?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
1972ல் சிறைக்கு சென்று வந்தபிறகு, வாசிப்பு அனுபவம் இலக்கிய ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக ஒரு முக்கியமான நாடகத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு நாடகப்போடடியில் முதற்பரிசு கிடைத்தது. அந்த நாடகாசியரிடமிருந்துதான் எழுத்து கணையாழி தாமரை  இதுபோன்ற சிறு சஞ்சிகைகளைப் பார்கிறேன். அதில் ஒருவகையான ஈடுபாடு வருகின்றது. ஜெயகாந்தனை தீவிரமாக வாசித்திருக்கிறேன். எஸ்.பொ.வை படிக்கத் தொடங்குகிறேன். <br />
இரண்டு ஆண்டுகள் (1974ஜுன் தொடங்கம் 1976ஜுன் வரை) தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் நான் முதன் முறையாக எழுதத் தொடங்கினேன். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களில் கதை, கவிதைகள் என எழுதியிருந்தேன். நான் கைதானபோது தங்கியிருந்த வீட்டுக்காரர் அவற்றையெல்லாம் கொழுத்தி விட்டார். அதற்குப் பின் தலைமறைவு வாழக்கையில் எரிமலை என்று ஒரு அரசியல் பத்திரிகை நடத்தினோம். நான்கு இதழ்கள் மட்டும் கொண்டு வந்தோம். 'ஈராஸ்' அமைப்பிற்காக ஈழம், தர்க்கீகம், பொதுமை என்ற சில பத்திரிகைகள் வந்தன. நான் சென்னையில் இருந்தபோதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். <br />
<br />
மணா:<br />
கவிதை எழுதத தொடங்கிய போது யாருடைய தாக்கம் உங்களிடம் இருந்தது?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
அன்றைக்கு ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த இளம் முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளில் ஈர்க்கப்ட்டேன். எங்களை உந்தித் தள்ளியதில் இந்தக் கவிதைகளுக்கு பெரும் பங்குண்டு. சமகாலத்தில் சேரன், ஜெயபாலன் போன்றவர்கள் கவிதை எழுதுகிறவர்களாக இருந்தார்கள். நாங்கள் வாசிப்பவர்களாக இருந்தோம். அலை, மல்லிகை, சமர் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதைகளில் என்னைப் பாதித்தவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் எனக்கு தமிழ் இலக்கியப் பாடம் விருப்பமானதாக இருந்திருக்கின்றது. கவிதைகளில் அரசியல் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. புதுக்கவிதை எழுத இலகுவாக இருந்தது. <br />
வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும் என்னைப் பாதித்திருக்கலாம். அப்போது புரட்சி வெல்லட்டும், கிழக்கு வெளுக்கின்றது என்பது போன்ற கவிக்குரல்கள் எழுந்தன. மு.மேத்தா, அக்னி புத்திரன், சிற்பி, புவியரசு போன்றவர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். அதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.<br />
<br />
மணா:<br />
ஈழத்துப் படைப்பாளிகளின் நேரடியான போராட்டக் களத்தைப் பார்த்தவர்கள். அப்படியான ஒரு நிர்ப்பந்தமான சூழல் அனுபவம் இங்குள்ளவர்களுக்குக் கிடையாது இல்லையா?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
1978ஆம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகளில் ஐந்து கூட தேறாது. நாங்கள் வெளியிட்ட பத்திரிகைகளின் அட்டையில் கவிதை எழுதுவேன். அந்த அளவில்தான் இருந்தேன். அதற்குமேல் கவிதை எழுதியதில்லை. உண்மையில் என்னுடைய நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கியது 90களில்தான். <br />
<br />
சென்னையில் இருந்தவரைக்கும் கூட பெரிதாக கவிதை எழுத முயற்சித்ததில்லை. 1988-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருகிறது. எல்லா இயக்கக்காரர்களும் விமானத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் ஒரு அகதியாக மண்டபம் முகாமுக்குச் சென்றுவிட்டேன். இராமேஸ்வரத்திலிருந்து அகதிக் கப்பலில் காங்கேசந்துறையில் போய் இறங்கிக் கொண்டேன். அகதியோடு அகதியாகப் போனேன். பிறகு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் நண்பர்கள் இயக்கத்திற்கு வாருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 1989-இல் இலங்கையில் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குப்பிறகு சென்னைக்கு துணைவியுடன் ஒருதடவை வந்தேன். 1990ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றேன். <br />
மணா:<br />
ஏன் பிரான்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
பிரான்சுக்குப் போக வேண்டுமென்று நான் வரவில்லை. 90ஆம் ஆண்டு கடுமையான காலகட்டம். எங்கள் வீட்டை விட்டு வெளியேறு வேறெங்கேயோ சென்றுதான் தஞ்சம் புகுந்தோம். அந்த நேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அதனால் தங்கையை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பில் விடவேண்டும். பயணம் செய்வது பெரும் கஷ்டம். தனியாக அனுப்ப இயலாது. நாந்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். கொழும்புக்கு வந்த பிறகு என் தம்பி, "நீ தங்கையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்துவிடு. நான் டிக்கெட் தருகிறேன். சிங்கப்பூரையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்று சொன்னான். சிங்கப்பூருக்குச் சென்றேன். "ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அங்கு போய் என்ன செய்யப்போகிறார்" என்று தம்பி கேட்டான். அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் புத்தகம், பேப்பர், பத்திரிகை இதுதான் எனக்குத் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது. <br />
<br />
தொழிலும் தெரியாது. அங்கு போய் பத்திரிகையும் நடத்த முடியாது. என்ன செய்யப்போகிறேன் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் மனைவி டீச்சராக இருக்கிறாள். ஒருவரின் வருமானத்தை வைத்து பிழைக்கவும் முடியாது. "நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று மனைவி சொல்லிவிட்டாள். <br />
<br />
"நீ தனியாக இருக்கிறாய். பாதுகாப்பில்லாத நிலைமை. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இலங்கை செல்ல வேண்டாம்" என்று சொன்னான் தம்பி. இரண்டாம் நாள் விமானத்தில் ஏற்றி விட்டான்.  சீனா போய் சுற்றிவந்து இறுதியில் ஜேர்மனியில் இறங்கினேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அங்குள்ள அகதி முகாமில் கொண்டு போய்விட்டார்கள். <br />
<br />
மணா:<br />
அங்கு மொழிச் சிக்கல் இருக்குமே?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வருவார். இல்லையென்றால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைக்கலாம். பெரும்பாலும் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார்கள். யு.என்.ஓ. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். எனக்கு முகாமில் இருக்கப் பிடிக்கவில்லை. உடனே ஜேர்மனியில் இருந்த தம்பியிடம் "என்னை அழைத்துக் கொண்டு போய்விடு" என்று போன் பண்ணி சொன்னேன். நான்கு நாட்கள் முகாமில் இருந்தேன். அகதிகள் முகாமிலிருந்து வெள்யேறுவது மிகப்பெரிய கஷ்டம். கட்டுப்பாடுகள் அதிகம். ஏதோ முயற்சிகள் செய்து என்னை சில நண்பர்கள் காரில் அழைத்துக் கொண்டு சென்று இன்னொரு ஊரில் தங்க வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ¤க்குச் செல்வது களவுதான். கார் மூலம் பிரான்ஸ் சென்றேன். பிரான்சில் இறங்கியதும் ரொம்பக் கஷ்டம். என்ன வேலை செய்வது? ஒன்றும் விளங்கவில்லை. அங்குள்ள வாழ்க்கையும் போன இரண்டு நாட்களிலேயே புரிந்துகொண்டேன். <br />
<br />
மணா:<br />
அந்த மக்களின் கலாசாரத்தோடு பொருந்திப் போக முடிந்ததா? அது உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
அந்த மண்ணில் இறங்கிய ஒரு நாளிலேயே உங்கள் பிரமிப்பெல்லாம் கொட்டிப் போகும். அப்போதே உணரத் தொடங்கி விடுவீர்கள். நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? எனது இடம் எது? நான் யார்? நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் காட்டில் நிற்பதுபோல் தான் தோன்றும். வெளியே போக இயலாது. மற்றவர்களிடம் போய் கதைக்க இயலாது. சாமான்கள் வாங்க முடியாது. எனக்கு மொழி தெரியாது. மொழி தெரிந்த ஆளாகத் தேடித் திரிய வேண்டும். இதெல்லாம் புதிது புதிதான சிக்கல்களாகத்தான் தோற்றம் தரும். <br />
<br />
என் தங்கை வீட்டில் தங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது.  87-லேயே அவர்கள் வந்துவிட்டார்கள். வர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் தெரியும். என் தங்கை குடும்பத்தினரும் நான்கு இளைஞர்களும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அப்படித்தான் அங்கு இருக்க முடியும். அதில் நானும் ஓர் ஆளாகப் போய் சேர்கிறேன். இதை விட மோசமான வாழ்க்கையும் அங்கு உண்டு. ஒரே அறையில் பதினைந்து பேர் தங்கியிருப்பார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். 'டேர்ன்' வைத்துப் படுப்பார்கள். அப்படியான வாழ்க்கையெல்லாம் உண்டு. அதுவொரு பெரிய நெருக்கடி. அதை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. பாரீஸ் ஒரு நெருக்கடியான நகரம். இங்குள்ள சிற்றூழியர்களின் பணியைத்தான் நாங்கள் பிரான்ஸில் செய்கிறோம். கூட்டுவது, துடைப்பத் இப்படிப்பட்ட வேலைகள்தான் கிடைக்கும். <br />
<br />
'க்ளீனிங்' என்பது அங்கே பெரிய இண்டஸ்ட்ரி. அடுத்ததாக உணவகங்களில் வேலை. குசினிக்குள் கழுவுகிற வேலை. மற்றது ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பர தாள்களை கொண்டு சேர்ப்பது. இந்தப் பணியை ஒரு கம்பனி ஏற்றிருக்கும். ஒரு ஏரியாவில் ஆயிரம் வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏழு மாடி, எட்டு மாடி ஏறி இறங்க வேண்டும். அடுத்ததாக கண்காட்சி மண்டபங்களில் வேலை. அங்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை, இயந்திரங்களை, துணிகளை மாற்றி அமைத்துத் தரவேண்டும். தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும். <br />
<br />
நாங்கள் எவ்வகையான வேலைகள் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ அவ்வகையான வேலைகளைத்தான் செய்தோம். இது பிரான்ஸின் நிலைமை. தொடக்கக் காலத்தைவிட நிலைமை இப்போது கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரான்சிற்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது. <br />
<br />
மணா:<br />
நீங்கள் ஆரம்ப காலத்தில் என்ன வேலை செய்தீர்கள்?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
கிளினீங் வேலைதான் செய்தேன். கார்பெட் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் கழுவ வேண்டும். மேசை துடைப்பது, சிகரெட் ஆஸ்ட்ரே துடைக்க வேண்டும்.<br />
<br />
காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அங்கு போய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்கு பின்பு இரவு ஏழு மணியிலிருந்து 10 மணி வரை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும். வீட்டுக்கு கிட்ட வேலை இருக்குமென்று சொல்ல இயலாது. குளிர்காலமென்றால் பனி கொட்டிக் கிடக்கும். ஒவ்வொர் நிறுவனத்திற்கும் நேரம் மாறுபடும். இந்த வகையான வேலையைத்தான் செய்தேன். <br />
<br />
இது ஒரு வகையான மனிதப் போர். எதார்த்த நிலைமையை நான் சொல்கிறேன். இதுதான் உண்மை. இதை மறைக்கத் தேவையில்லை. இன்றைக்கு அதை யாரும் சொல்லவும் மாட்டார்கள். நிறைய நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கு எங்களுடைய பெரும்பாலான பெண்கள் க்ளினீங் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்த வேலைகளை எப்போதும் மறைத்து வாழ்வதுதான் புலம்பெயர் வாழ்வின் அவலம் என்று சொல்லலாம். <br />
<br />
மணா:<br />
இந்த வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைக்குமா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
அடிப்படைச் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோ. எட்டு மணி நேரம் வேலை செய்தால் 56யூரோ. அதை இந்தியப் பணத்தில் பெருக்கினீர்கள் என்ரால் இங்கே ஐம்பது ரூபாய் வாங்குவது மாதிரிதான். அதற்குள்தான் வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், உடை மற்ரும் பயணச் செலவுகள் எல்லாமும். இரண்டு வேலை செய்தால்தான் வசதியாக வாழலாம். இது ஒரு வகை வாழ்க்கை நிலை. <br />
<br />
எங்களுடைய சமூகம் போரால் பாதிக்கப்பட்ட சமூகம். ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சுமந்து ஆகவேண்டும். எங்களுடைய உழைப்பில் மிச்சம் பிடித்து பொருளாதாரம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு நாங்கள் பணம் அனுப்பியாக வேண்டும். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் போராட்டத்திற்கும் பங்களிப்புச் செய்பவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படியான வாழ்க்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையர்களை இங்கே பார்க்கும்போது உங்களுக்கு பகட்டுத்தான் தெரியும். மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் மூன்று வருடங்கள் உழைப்பேன். பகல் இரவென்று உழைத்துவிட்டு இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் வாங்கி இந்தியாவிற்கு வருவேன். அந்த இரண்டு மாதங்களில் இங்கே வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்க்கை. <br />
<br />
ஆயிரம் இரண்டாயிரம் யூரோக்களை கொண்டு வந்து பெருக்கினால் ரூபாய் பல கட்டுகளாக இருக்கும். மீனைக் கொண்டு வா, தங்கத்தைக் கொண்டு வா, ஸாரியைக் கொண்டு வா, நண்பா வா, குடி எல்லாம் நடக்கும். இரண்டு மாதம் முடிந்ததும் கடன் கட்டவேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பகட்டுதான். இங்கு வந்து நிற்கிற இரண்டு மாதம்தான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் கொள்கிறான். <br />
<br />
மணா:<br />
இதுபோன்ற நெருக்கடியான வாழ்நிலையில் கவிதை எழுதுவதற்கான மனநிலை எப்படிக் கூடி வந்தது?<br />
<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலம்பெயர்வு நிகழ்ந்ததற்குப் பின்னால், ஒரு சமூகத்திற்கு தனது தாயகம், இழப்புகள் பற்றிய ஏக்கம் தானாகவே வந்து சேரும். அதிலும் பல அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போது நான் யார்? என்ற முதலாவது கேள்வி எழும். <br />
<br />
ஒரு துருக்கி நிற்கிறான். ஒரு கறுப்பர், அராபியன், தென் அமெரிக்கன், வெள்ளையில் குறைந்த வெள்ளை, கூடிய வெள்ளை, மஞ்சள் வெள்ளை, சிவப்பு வெள்ளை எல்லாம் நிற்கிறார்கள். இப்போது நான் யார்? என்ற கேள்வி இயல்பிலேயே எழும். நீங்கள் நடமாடத் தொடங்கினால் உங்கள் நாடு என்ன? மொழி என்ன? உங்களுடைய பெரிய ஆட்களைச் சொல்லு? கேட்பார்கள். எனக்குத் தெரிந்திருக்காது. <br />
<br />
இந்தச் சூழல் என்னைப்பற்றி அறிய நிர்பந்திக்கும் வாசிக்காதவன்கூட ஏதாவது வாசித்தாக வேண்டும். ஊரில் இருக்கும்போது வாசித்ததைவிட வெளியெ வந்த பிறகு வாசித்தது அதிகம். வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகம்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்புவில்லை<br />
ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்&lt;/b&gt;<br />
<br />
"குழந்தை தோளில் சரிகின்றது<br />
நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது<br />
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி<br />
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..'<br />
மடிபற்றி எழுகின்றது கேள்வி"<br />
'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன்<br />
<br />
'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குடும்பத்துடன் வசிக்கிறார். <br />
<br />
பல பத்திரிகைகளுடன் இணைந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர ஃப்ரீலான்ஸ் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற 53 வயதான அரவிந்தன், பல வருட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார். ஹோட்டல் அறை ஒன்றில் இந்த நேர்காணலுக்காகச் சந்தித்தபோது தயக்கங்கள் இல்லாமல் ரொம்ப காலமாகப் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். புலம்பெயர்வின் இடையறாத வலி தொற்றிய அவருடைய பேச்சு அவர் தங்கியிருந்த அறையைக் கதகதப்பு மிக்கதாக உணரச் செய்திருந்தது. <br />
<br />
<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
<br />
<br />
இனி அவருடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:<br />
&lt;img src='http://img153.imageshack.us/img153/5424/tron0150bc.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
1953ஆம் வருடம் நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். என் தாய் தந்தையரின் சொந்த ஊர் நெடுந்தீவு. என் பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் அதன்பின் தொடாந்தும் நான் படித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். எழுபதுகளுக்குப் பின்னால் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் அப்பா அரசு ஊழியர். உணவுக் கட்டுப்பாட்டு திணைக்களத்தில் வேலை செய்தார். அம்மா மருத்துவ தாதியாக யாழ் மருத்துவமனையில் பணியாற்றினார். நாங்கள் ஏழு பேர். நான் மூத்த ஆள். எனக்குக் கீழ் ஆறு பேர். <br />
<br />
மணா:<br />
1960களிலேயே இனப் பாகுபாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டதா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 60களில் நடந்த முக்கியமான நிகழ்வு சாதி எதிர்ப்புப் போராட்டம். அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் நடந்தது. நான் சிறு பையன்களாக இருந்தோன். அதில் ஈடுபடவில்லை.<br />
<br />
இலங்கையில் தமிழர்கள்  மத்தியில் இறுக்கமான சாதி அமைப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1965க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினால் சாதி எதிர்ப்பு ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச் சூடுவரை சென்றது. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தல், சமபந்தி போஜனம் போன்றவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. <br />
<br />
<br />
மணா:<br />
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அங்கே பொதுவுடைமை இயக்கம் செய்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
ஆமாம். சாதிய அடக்குமுறையை முக்கியமான பிரச்சினையாக பொதுவுடைமை இயக்கம்தான் எடுத்துப் போராடியது. சாதி எதிர்ப்பால் சமூகத்தில் சின்னதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனால் சரிவு என்று சொல்ல முடியாது. சமூகக் குலுக்கம் என்று சொல்லலாம். சாதியப் படிநிலைகள் குலுங்கின. அப்போது ஏற்பட்ட சின்ன அதிர்வு, மனோ நிலைகளில் சின்னதொரு மாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பயிற்சி முறைகள் பின்னாளில் ஈழப் போராட்டத்தில் உதவியாக இருந்தன. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டம் முன்னோடியாக இருந்தது. <br />
<br />
மணா:<br />
இந்தப் போராட்டம் இலங்கையின் எந்தப் பகுதியை முன்னிறுத்தி நடந்தது.<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
சாதிய அடக்குமுறையின் தீவிரம் வெளிப்படையாக தெரிய வந்தது குடா நாட்டில்தான். இங்குதான் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அதனால் சாதிய ரீதியான பிரச்சினை துலாம்பாரமாக தெரிய வந்தது. அதற்கான போராட்டம் கட்டாயத் தேவையாகவும் இருந்தது. அந்தப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய அறிவுதான் பிறகு ஏற்பட்ட போராட்டத்திற்கு கைமாற்றப்பட்டது. <br />
<br />
மணா:<br />
தமிழகத்தில் 1960களில் மாணவர்கள் மத்தியில் இயல்பான மொழி உணர்வு, இன உணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அதுதான் பின்னணியாக அமைந்தது. அதுமாதிரியான ஓர் உணர்வு இலங்கையில் இருந்ததா? <br />
<br />
கி.பி. அ-ன்:<br />
1950, 60களில் தீவிரமான செயல்பாடு கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை அளவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தார்கள்.  தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த தேசிய உணர்வு, தேசியம் பற்றியதான சிந்தனை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அதனால்தான் அது மக்களிடம் சரிவை சந்தித்தது. மக்களின் உணர்வை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். இலங்கை என்கிற தேசிய அளவிலான பார்வையுடன் எதையும் பார்க்க வேண்டும் என்பதான உணர்வில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தார்கள். ஆனால் இவர்கள் தொடக்க நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்கள்தான். பிறகு மாறிவிட்டார்கள். <br />
<br />
மணா:<br />
அந்தக் காலகட்டத்தில் அரசியல் உணர்வென்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாணவர்களிடம் இருந்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
பொதுவாக இலங்கைத் தமிழர்களிடம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குதான் அதிகம் இருந்தது. அக்கட்சியின் கருத்தோட்டம், எண்ணப்போக்கு என்பது இங்கிருந்த (தமிழகம்) திராவிட இயக்கத்தின் மொழி பற்றியதான கருத்துக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இணைவாக்கம் கொண்டதாக இருந்தன. <br />
<br />
தமிழ் உணர்ச்சியை ஊட்டி ஊட்டி, மேன்மைப்படுத்தி அதைத்தான் தமிழரசுக் அக்ட்சியினர் அரசியலாக்கினார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்களோ, அதை வழிநடத்தும் முறைகளோ அவர்களிடம் சரியாக அமையவில்லை. இலங்கை அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் அவர்களுக்குக் கவனம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு தமிழ்பேசும் மக்களுக்குட் தீர்வைப்பெற்றுத் தர முயற்சித்தாலும் தோல்விதான் ஏற்பட்டது. <br />
<br />
1965இல் தமிழரசுக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கிறார்கள். அதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அடையாள அட்டை மசோதா போன்று மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வருகிறபோது தமிழரசுக் கட்சிக்குள் இருந்த தீவிரமான கருத்துக் கொண்டவர்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியது. தேசிய ரீதியிலான தீவிர நிலை எட்டும் அதே வேளையில்தான், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்பாக முன்னெடுக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. <br />
<br />
1968 ஆம் ஆண்டு முக்கியமான காலகட்டம். மாணவர்கள் உலகில் எழுச்சிகளும், போராட்டங்களும் நிகழ்ந்தன. 65-70 காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வியட்நாம் போர், சேகுவாராவின் கொலை என உலகம் முழுவதும் வெவ்வேறான நிலைமை. 1970ல் இலங்கையில் புதிய ஆட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் எல்எஸ்பியும் கம்யூனிஸ்ட் கட்சி எனச் சிறு சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள். <br />
<br />
உடனடியாக அவர்கள் வந்து கல்வி பற்றியதான ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். அது தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். தரப்படுத்துதல் என்ற முறையில் சொல்லப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டு வீதிக்கு வருகிறார்கள். அது கல்வி அடிப்பையில் கொண்டு வரப்படவில்லை. இன ரீதியான ஒடுக்குமுறை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு முக்கியமாக இருக்கிறவர்களின் அரசியல் பயிற்சிக்கான தொடக்கநிலையாக அதைச் சொல்லலாம். 'நானும் மாணவர்களின் அந்தப் பேரணியில் கலந்து கொண்டேன்' என்று பலரும் சொல்லுமளவிற்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது. <br />
<br />
மணா:<br />
உங்கள் குடும்ப அளவில் ஏதும் பாதிப்பு நிகழ்ந்ததா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
என் தந்தைக்கு பெரியார் கருத்துகளின் மீது ஈடுபாடு உண்டு. வீட்டில் நிறையப் புத்தகங்கள் வைத்திருந்தார். என்னுடைய சிறுவயதில் அவர் திராவிட கருத்துக் கொண்டவராக இருந்தார். ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, மதியழகன், சி.பி.சிற்றரசு, இப்படி பலரின் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது வயதில் புத்தக வாசிப்புத் தொடங்கும்போது பெரியார் மீது எனக்கு விருப்பம் வந்தது. அன்றைக்கு பெரியாரின் சிந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் ஒரு கலகக்காரன் மாதிரி மாறினேன். கிறிஸ்துமஸ¤க்கு எல்லோரும் புது உடுப்புப் போடுவார்கள். நான் போடமாட்டேன். இப்படி அந்த வயதுக்கேற்ற சின்னச்சின்ன கலகங்கள். <br />
<br />
அப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பார். கல்கி, அகிலன் என அந்தக் காலத்து எழுத்தாளர்கள்ன் நாவல்களை வாசிப்பது பழக்கம். வீட்டில் எப்போதும் பேப்பர் வாங்குவார்கள். நெடுந்தீவில் என்னுடைய அம்மாவின் பெரிய அண்ணர் வீட்டில் தங்கிக்கொண்டு படித்தேன். அந்த ஊருக்கு வள்ளம்(படகு) வந்தால்தான் பேப்பர் வரும். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த பேப்பரை வாசித்தபிறகுதான் மற்ற வேலைகளைப் கவனிப்பார்கள். <br />
<br />
நான் மதத்தால் ஒரு கத்தோலிக்கன். கத்தோலிக்க மத வெளியீடுகள் நிறைய வந்தன. எப்படியோ பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதேவேளையில் யாழ் மத்தியக் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். எனக்கு வரலாறு படிப்பித்தவர் தமிழ்நாட்டில் உள்ள பச்சையப்பன், கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர். திராவிட இயக்கக் கொள்கைக்காரராக இருந்தார். அண்ணாவின் திராவிட நாடெல்லாம் படித்தவர். அவர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியெல்லாம் சொல்லித் தரும்போது வெகு ஆர்வத்துடன் சொல்வார். எங்களுக்கு நெப்போலியன் பற்றி நிறைய கற்பனைகள் வரும். <br />
<br />
யூசுப் மாஸ்டர் என்று ஒருவர். அவர் ஜனநாயகம், வாக்களிப்பது எல்லாம் பொய் என்பார். என்ன ஜனநாயகம் என்பார். நாங்கள் படிக்கும்போது இலங்கை கல்வி அமைச்சகம் 'சியவச' என்ற பரிசுத் திட்டத்தை அறிவிக்கிறது. இதை எல்லா மாணவர்களும் வாங்க வேண்டும் என்கிறார்கள். அது சிங்களத்தில் இருந்தது. தமிழர்கள் வாங்கக்கூடாது என்று புறக்கணித்தோம். கல்லூரித் தேர்வுகளை ஒரு மண்டபத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆள் வந்து ஒவ்வொரு டேபிளிலும் டிக்கெட் வைத்துவிட்டுப்போனார். "பரீட்சை எழுத மாட்டோம்; டிக்கெட் வாங்க மாட்டோம்" என்று மறுத்தோம். இப்படி எங்களை முடுக்கி விட்டது அந்த வாத்தியார்தான். <br />
<br />
நான் மாணவர் நிலையில் தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவர்கள் புரட்சிகரமாக எதாவது செய்வார்கள் என்று நம்பினேன். பகத்சிங்க் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', போராட்டம் நாவல்களைப் படித்த அனுபவம். இதெல்லாம் சேர்ந்து எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்து வந்தன. <br />
<br />
எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் அயர்லாந்துப் போராளி தான்பிரீன் பற்றிய புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்து வாசிப்போம். ஒவ்வொருவராக ரகசியமாகப் பரிமாறிக்கொள்வோம். 'எரிமலைத் தியாகிகள்' என்ற புத்தகத்தை அப்படித்தான் படித்தோம். எல்லாம் தனிச்சுற்றுகளாகச் சுற்றி வரும். கீழ் இயக்கம் ஒன்றைத் துவக்குவதற்கான மனோநிலை அப்போதே தொடங்கியது. இப்படி ஒரு சூழல் உருவாகத் தொடங்கியது. <br />
<br />
1972-இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவரை பிரிட்டிஷாரால் வரையப்பட்ட அரசியலமைப்பை இவர்கள் தங்களுக்கானதாகச் செய்யவேண்டும் என்று புதிய அரசு அறிவிக்கிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கப்போகிறது, அதில் இங்கே வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நிலைமை என்ன, இவர்களுக்கான அதிகாரங்களை எப்படிப் பங்கிடப் போகிறார்கள்? என்பது போன்ற விவாதங்களை எல்லாக் கட்சியினரும் பேசத் தொடங்குகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக ஒரே தலைமையாக ஐக்கிய முன்னணியாக இணைய வேண்டும் என்று கருத்தெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இருந்தது. <br />
<br />
1972-ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கு முன்பு தமிழர் கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. 1972, மே 22ஆம் தேதி இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்படுகிறது. இலங்கை சிலோன் என்ற பெயரில்லாமல் ஸ்ரீலங்கா என்ற புதிய பெயர் அறிவிக்கப்படுகிறது. <br />
<br />
அந்த நாளை தமிழர்களின் கரி நாள் (கறுப்பு நாள்) என்று தமிழர்களின் ஐக்கிய முன்னணி அறிவிக்கிறது. மக்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கறுப்புக் கொடி ஏற்ரி துக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று 15ஆம் தேதியிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'மாணவர்களே பள்ளிக்குச் செல்லாதீர்கள்! ஊழியர்களே அலுவலகங்களுக்குச் செல்லாதீர்கள்!' என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை ஐக்கிய முன்னணி வெளியிட்டது. நாங்கள்  மாணவர்களாக இருந்தபோது அந்தப் பிரசுரத்தை விநியோகித்தோம். அப்போது போலீஸ் என்னையும் சேர்த்து மூன்று பேரைக் கைது செய்கிறது. அதற்குப் பிறகு தலைவர்கள் 'எங்களையும் கைது செய்யுங்கள்' என்றார்கள். அதெல்லாம் ஒரு துவக்கம். <br />
<br />
மணா:<br />
'தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பைப் பிறகு ஆரம்பித்தீர்களா?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
சிறையால் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 'தமிழ் இளைஞர் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதன் தனி நடவடிக்கைகளாக உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தினோம். 1974ம் ஆண்டு நான்காவது தமிழாராச்சி மாநாடு நடக்கின்றது. அதையொட்டி படுகொலை நடக்கின்றது. இது ஐனவரியில். ஜுனில் சிவகுமாரன் இறக்கிறார். ஐனவரிக்கும் ஜுனிற்கும் இடையில் சிவகுமாரன் குழுவினராகிய நாங்கள் பல்வேறு வன்முறையை பாவித்தோம். அதில் தோல்விகள் கிடைத்தன.<br />
ஆறேழு குற்றங்களுக்காக 1976ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன். 77 வரைக்கும் ஒரு வருடம் சிறையில் இருந்தேன். பிறகு பெயிலில் வெளி வருகிறேன். அதேவருட பிற்பகுதியில் வழக்குகள் வரத்தொடங்குகின்றன. ஒவ்வொரு வழக்கிற்கும் பெயில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளுக்குள் போக வேண்டும். வீட்டில் வசதியில்லை. பிரச்சனை. 1978-இல் பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. பொலீசுக்கு அதிகாரம் கூடி முதற்தடவையாக தெருவில் இரண்டு இளைஞர்களை சுட்டுப் போடுகிறார்கள். அதுதான் முதல் சம்பவம். தொடர்ந்து வெகு வேகமாக நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்குகின்றன. <br />
<br />
மணா:<br />
அந்தக்காலகட்டத்தில உங்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
ஈராஸ் அமைப்பில் இருந்தேன். 1978ஆம் ஆண்டு லெபனான் சென்றுவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு பத்திரிகை நடத்துவது, நண்பர்களை ஒருங்கிணைப்பது எனப் பல வேலைகள் செய்தேன். பத்தாண்டுகள் சென்னையில் இருந்தேன். அப்போது தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தை நாங்கள் கட்டி வளர்த்திருக்கிறோம். தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் கொண்ட அமைப்பாக அதை வளர்த்தெடுத்தோம். சின்னச் சின்ன புத்தகங்கள் கொண்டு வந்தோம். லங்காராணி நாவலை வெளியிட்டோம். இப்படி பல்வேறு பட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.<br />
<br />
மணா:<br />
நீங்கள் படைப்பு ரீதியாக எந்தக் காலகட்டத்தில இருந்து இயங்க ஆரம்பித்தீர்கள்?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
1972ல் சிறைக்கு சென்று வந்தபிறகு, வாசிப்பு அனுபவம் இலக்கிய ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன்முறையாக ஒரு முக்கியமான நாடகத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு நாடகப்போடடியில் முதற்பரிசு கிடைத்தது. அந்த நாடகாசியரிடமிருந்துதான் எழுத்து கணையாழி தாமரை  இதுபோன்ற சிறு சஞ்சிகைகளைப் பார்கிறேன். அதில் ஒருவகையான ஈடுபாடு வருகின்றது. ஜெயகாந்தனை தீவிரமாக வாசித்திருக்கிறேன். எஸ்.பொ.வை படிக்கத் தொடங்குகிறேன். <br />
இரண்டு ஆண்டுகள் (1974ஜுன் தொடங்கம் 1976ஜுன் வரை) தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் நான் முதன் முறையாக எழுதத் தொடங்கினேன். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகங்களில் கதை, கவிதைகள் என எழுதியிருந்தேன். நான் கைதானபோது தங்கியிருந்த வீட்டுக்காரர் அவற்றையெல்லாம் கொழுத்தி விட்டார். அதற்குப் பின் தலைமறைவு வாழக்கையில் எரிமலை என்று ஒரு அரசியல் பத்திரிகை நடத்தினோம். நான்கு இதழ்கள் மட்டும் கொண்டு வந்தோம். 'ஈராஸ்' அமைப்பிற்காக ஈழம், தர்க்கீகம், பொதுமை என்ற சில பத்திரிகைகள் வந்தன. நான் சென்னையில் இருந்தபோதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். <br />
<br />
மணா:<br />
கவிதை எழுதத தொடங்கிய போது யாருடைய தாக்கம் உங்களிடம் இருந்தது?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
அன்றைக்கு ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த இளம் முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளில் ஈர்க்கப்ட்டேன். எங்களை உந்தித் தள்ளியதில் இந்தக் கவிதைகளுக்கு பெரும் பங்குண்டு. சமகாலத்தில் சேரன், ஜெயபாலன் போன்றவர்கள் கவிதை எழுதுகிறவர்களாக இருந்தார்கள். நாங்கள் வாசிப்பவர்களாக இருந்தோம். அலை, மல்லிகை, சமர் போன்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. கவிதைகளில் என்னைப் பாதித்தவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் எனக்கு தமிழ் இலக்கியப் பாடம் விருப்பமானதாக இருந்திருக்கின்றது. கவிதைகளில் அரசியல் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. புதுக்கவிதை எழுத இலகுவாக இருந்தது. <br />
வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளும் என்னைப் பாதித்திருக்கலாம். அப்போது புரட்சி வெல்லட்டும், கிழக்கு வெளுக்கின்றது என்பது போன்ற கவிக்குரல்கள் எழுந்தன. மு.மேத்தா, அக்னி புத்திரன், சிற்பி, புவியரசு போன்றவர்களின் கவிதைகளை படித்திருக்கிறேன். அதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.<br />
<br />
மணா:<br />
ஈழத்துப் படைப்பாளிகளின் நேரடியான போராட்டக் களத்தைப் பார்த்தவர்கள். அப்படியான ஒரு நிர்ப்பந்தமான சூழல் அனுபவம் இங்குள்ளவர்களுக்குக் கிடையாது இல்லையா?<br />
<br />
கி.பி.அ-ன்:<br />
1978ஆம் ஆண்டில் நான் எழுதிய கவிதைகளில் ஐந்து கூட தேறாது. நாங்கள் வெளியிட்ட பத்திரிகைகளின் அட்டையில் கவிதை எழுதுவேன். அந்த அளவில்தான் இருந்தேன். அதற்குமேல் கவிதை எழுதியதில்லை. உண்மையில் என்னுடைய நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கியது 90களில்தான். <br />
<br />
சென்னையில் இருந்தவரைக்கும் கூட பெரிதாக கவிதை எழுத முயற்சித்ததில்லை. 1988-இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருகிறது. எல்லா இயக்கக்காரர்களும் விமானத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் ஒரு அகதியாக மண்டபம் முகாமுக்குச் சென்றுவிட்டேன். இராமேஸ்வரத்திலிருந்து அகதிக் கப்பலில் காங்கேசந்துறையில் போய் இறங்கிக் கொண்டேன். அகதியோடு அகதியாகப் போனேன். பிறகு எந்த இயக்கத்தோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் நண்பர்கள் இயக்கத்திற்கு வாருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 1989-இல் இலங்கையில் எனக்குத் திருமணம் நடந்தது. அதற்குப்பிறகு சென்னைக்கு துணைவியுடன் ஒருதடவை வந்தேன். 1990ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றேன். <br />
மணா:<br />
ஏன் பிரான்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
பிரான்சுக்குப் போக வேண்டுமென்று நான் வரவில்லை. 90ஆம் ஆண்டு கடுமையான காலகட்டம். எங்கள் வீட்டை விட்டு வெளியேறு வேறெங்கேயோ சென்றுதான் தஞ்சம் புகுந்தோம். அந்த நேரத்தில் என் தங்கைக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம். அதனால் தங்கையை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பில் விடவேண்டும். பயணம் செய்வது பெரும் கஷ்டம். தனியாக அனுப்ப இயலாது. நாந்தான் கூட்டிக்கொண்டு வந்தேன். கொழும்புக்கு வந்த பிறகு என் தம்பி, "நீ தங்கையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்துவிடு. நான் டிக்கெட் தருகிறேன். சிங்கப்பூரையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்று சொன்னான். சிங்கப்பூருக்குச் சென்றேன். "ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அங்கு போய் என்ன செய்யப்போகிறார்" என்று தம்பி கேட்டான். அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட்டதால் புத்தகம், பேப்பர், பத்திரிகை இதுதான் எனக்குத் தெரியும். வேறு எந்த வேலையும் தெரியாது. <br />
<br />
தொழிலும் தெரியாது. அங்கு போய் பத்திரிகையும் நடத்த முடியாது. என்ன செய்யப்போகிறேன் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில் மனைவி டீச்சராக இருக்கிறாள். ஒருவரின் வருமானத்தை வைத்து பிழைக்கவும் முடியாது. "நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று மனைவி சொல்லிவிட்டாள். <br />
<br />
"நீ தனியாக இருக்கிறாய். பாதுகாப்பில்லாத நிலைமை. அதெல்லாம் சரிப்பட்டு வராது. இலங்கை செல்ல வேண்டாம்" என்று சொன்னான் தம்பி. இரண்டாம் நாள் விமானத்தில் ஏற்றி விட்டான்.  சீனா போய் சுற்றிவந்து இறுதியில் ஜேர்மனியில் இறங்கினேன். சில விசாரணைகளுக்குப் பிறகு அங்குள்ள அகதி முகாமில் கொண்டு போய்விட்டார்கள். <br />
<br />
மணா:<br />
அங்கு மொழிச் சிக்கல் இருக்குமே?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வருவார். இல்லையென்றால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைக்கலாம். பெரும்பாலும் ஜெர்மன் மொழியில்தான் பேசுவார்கள். யு.என்.ஓ. அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். எனக்கு முகாமில் இருக்கப் பிடிக்கவில்லை. உடனே ஜேர்மனியில் இருந்த தம்பியிடம் "என்னை அழைத்துக் கொண்டு போய்விடு" என்று போன் பண்ணி சொன்னேன். நான்கு நாட்கள் முகாமில் இருந்தேன். அகதிகள் முகாமிலிருந்து வெள்யேறுவது மிகப்பெரிய கஷ்டம். கட்டுப்பாடுகள் அதிகம். ஏதோ முயற்சிகள் செய்து என்னை சில நண்பர்கள் காரில் அழைத்துக் கொண்டு சென்று இன்னொரு ஊரில் தங்க வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ¤க்குச் செல்வது களவுதான். கார் மூலம் பிரான்ஸ் சென்றேன். பிரான்சில் இறங்கியதும் ரொம்பக் கஷ்டம். என்ன வேலை செய்வது? ஒன்றும் விளங்கவில்லை. அங்குள்ள வாழ்க்கையும் போன இரண்டு நாட்களிலேயே புரிந்துகொண்டேன். <br />
<br />
மணா:<br />
அந்த மக்களின் கலாசாரத்தோடு பொருந்திப் போக முடிந்ததா? அது உளவியல்ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியதா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
அந்த மண்ணில் இறங்கிய ஒரு நாளிலேயே உங்கள் பிரமிப்பெல்லாம் கொட்டிப் போகும். அப்போதே உணரத் தொடங்கி விடுவீர்கள். நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? எனது இடம் எது? நான் யார்? நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் காட்டில் நிற்பதுபோல் தான் தோன்றும். வெளியே போக இயலாது. மற்றவர்களிடம் போய் கதைக்க இயலாது. சாமான்கள் வாங்க முடியாது. எனக்கு மொழி தெரியாது. மொழி தெரிந்த ஆளாகத் தேடித் திரிய வேண்டும். இதெல்லாம் புதிது புதிதான சிக்கல்களாகத்தான் தோற்றம் தரும். <br />
<br />
என் தங்கை வீட்டில் தங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது.  87-லேயே அவர்கள் வந்துவிட்டார்கள். வர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் தெரியும். என் தங்கை குடும்பத்தினரும் நான்கு இளைஞர்களும் ஒரே வீட்டில் இருந்தார்கள். அப்படித்தான் அங்கு இருக்க முடியும். அதில் நானும் ஓர் ஆளாகப் போய் சேர்கிறேன். இதை விட மோசமான வாழ்க்கையும் அங்கு உண்டு. ஒரே அறையில் பதினைந்து பேர் தங்கியிருப்பார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள். 'டேர்ன்' வைத்துப் படுப்பார்கள். அப்படியான வாழ்க்கையெல்லாம் உண்டு. அதுவொரு பெரிய நெருக்கடி. அதை எப்படிச் சொல்வதென்றே புரியவில்லை. பாரீஸ் ஒரு நெருக்கடியான நகரம். இங்குள்ள சிற்றூழியர்களின் பணியைத்தான் நாங்கள் பிரான்ஸில் செய்கிறோம். கூட்டுவது, துடைப்பத் இப்படிப்பட்ட வேலைகள்தான் கிடைக்கும். <br />
<br />
'க்ளீனிங்' என்பது அங்கே பெரிய இண்டஸ்ட்ரி. அடுத்ததாக உணவகங்களில் வேலை. குசினிக்குள் கழுவுகிற வேலை. மற்றது ஒவ்வொரு வீட்டிற்கும் விளம்பர தாள்களை கொண்டு சேர்ப்பது. இந்தப் பணியை ஒரு கம்பனி ஏற்றிருக்கும். ஒரு ஏரியாவில் ஆயிரம் வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏழு மாடி, எட்டு மாடி ஏறி இறங்க வேண்டும். அடுத்ததாக கண்காட்சி மண்டபங்களில் வேலை. அங்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை, இயந்திரங்களை, துணிகளை மாற்றி அமைத்துத் தரவேண்டும். தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும். <br />
<br />
நாங்கள் எவ்வகையான வேலைகள் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ அவ்வகையான வேலைகளைத்தான் செய்தோம். இது பிரான்ஸின் நிலைமை. தொடக்கக் காலத்தைவிட நிலைமை இப்போது கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரான்சிற்கு வந்து கால் நூற்றாண்டாகி விட்டது. <br />
<br />
மணா:<br />
நீங்கள் ஆரம்ப காலத்தில் என்ன வேலை செய்தீர்கள்?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
கிளினீங் வேலைதான் செய்தேன். கார்பெட் சுத்தம் செய்ய வேண்டும். டாய்லெட் கழுவ வேண்டும். மேசை துடைப்பது, சிகரெட் ஆஸ்ட்ரே துடைக்க வேண்டும்.<br />
<br />
காலையில் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அங்கு போய் வேலை செய்ய வேண்டும். அலுவலகம் முடிந்ததற்கு பின்பு இரவு ஏழு மணியிலிருந்து 10 மணி வரை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெகு தூரம் பயணம் செய்ய வேண்டும். வீட்டுக்கு கிட்ட வேலை இருக்குமென்று சொல்ல இயலாது. குளிர்காலமென்றால் பனி கொட்டிக் கிடக்கும். ஒவ்வொர் நிறுவனத்திற்கும் நேரம் மாறுபடும். இந்த வகையான வேலையைத்தான் செய்தேன். <br />
<br />
இது ஒரு வகையான மனிதப் போர். எதார்த்த நிலைமையை நான் சொல்கிறேன். இதுதான் உண்மை. இதை மறைக்கத் தேவையில்லை. இன்றைக்கு அதை யாரும் சொல்லவும் மாட்டார்கள். நிறைய நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கு எங்களுடைய பெரும்பாலான பெண்கள் க்ளினீங் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்த வேலைகளை எப்போதும் மறைத்து வாழ்வதுதான் புலம்பெயர் வாழ்வின் அவலம் என்று சொல்லலாம். <br />
<br />
மணா:<br />
இந்த வேலைக்குத் தகுந்த வருமானம் கிடைக்குமா?<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
<br />
அடிப்படைச் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோ. எட்டு மணி நேரம் வேலை செய்தால் 56யூரோ. அதை இந்தியப் பணத்தில் பெருக்கினீர்கள் என்ரால் இங்கே ஐம்பது ரூபாய் வாங்குவது மாதிரிதான். அதற்குள்தான் வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம், உடை மற்ரும் பயணச் செலவுகள் எல்லாமும். இரண்டு வேலை செய்தால்தான் வசதியாக வாழலாம். இது ஒரு வகை வாழ்க்கை நிலை. <br />
<br />
எங்களுடைய சமூகம் போரால் பாதிக்கப்பட்ட சமூகம். ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சுமந்து ஆகவேண்டும். எங்களுடைய உழைப்பில் மிச்சம் பிடித்து பொருளாதாரம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு நாங்கள் பணம் அனுப்பியாக வேண்டும். இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் போராட்டத்திற்கும் பங்களிப்புச் செய்பவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படியான வாழ்க்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையர்களை இங்கே பார்க்கும்போது உங்களுக்கு பகட்டுத்தான் தெரியும். மறுக்கவில்லை. அதற்குக் காரணம் நான் மூன்று வருடங்கள் உழைப்பேன். பகல் இரவென்று உழைத்துவிட்டு இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் வாங்கி இந்தியாவிற்கு வருவேன். அந்த இரண்டு மாதங்களில் இங்கே வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்க்கை. <br />
<br />
ஆயிரம் இரண்டாயிரம் யூரோக்களை கொண்டு வந்து பெருக்கினால் ரூபாய் பல கட்டுகளாக இருக்கும். மீனைக் கொண்டு வா, தங்கத்தைக் கொண்டு வா, ஸாரியைக் கொண்டு வா, நண்பா வா, குடி எல்லாம் நடக்கும். இரண்டு மாதம் முடிந்ததும் கடன் கட்டவேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் பகட்டுதான். இங்கு வந்து நிற்கிற இரண்டு மாதம்தான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் கொள்கிறான். <br />
<br />
மணா:<br />
இதுபோன்ற நெருக்கடியான வாழ்நிலையில் கவிதை எழுதுவதற்கான மனநிலை எப்படிக் கூடி வந்தது?<br />
<br />
<br />
கி.பி. அ-ன்:<br />
இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலம்பெயர்வு நிகழ்ந்ததற்குப் பின்னால், ஒரு சமூகத்திற்கு தனது தாயகம், இழப்புகள் பற்றிய ஏக்கம் தானாகவே வந்து சேரும். அதிலும் பல அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போது நான் யார்? என்ற முதலாவது கேள்வி எழும். <br />
<br />
ஒரு துருக்கி நிற்கிறான். ஒரு கறுப்பர், அராபியன், தென் அமெரிக்கன், வெள்ளையில் குறைந்த வெள்ளை, கூடிய வெள்ளை, மஞ்சள் வெள்ளை, சிவப்பு வெள்ளை எல்லாம் நிற்கிறார்கள். இப்போது நான் யார்? என்ற கேள்வி இயல்பிலேயே எழும். நீங்கள் நடமாடத் தொடங்கினால் உங்கள் நாடு என்ன? மொழி என்ன? உங்களுடைய பெரிய ஆட்களைச் சொல்லு? கேட்பார்கள். எனக்குத் தெரிந்திருக்காது. <br />
<br />
இந்தச் சூழல் என்னைப்பற்றி அறிய நிர்பந்திக்கும் வாசிக்காதவன்கூட ஏதாவது வாசித்தாக வேண்டும். ஊரில் இருக்கும்போது வாசித்ததைவிட வெளியெ வந்த பிறகு வாசித்தது அதிகம். வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகம்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இளங் கலைஞன் &quot;நிரு&quot;]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=768</link>
			<pubDate>Tue, 21 Feb 2006 14:27:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=34">இளைஞன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=768</guid>
			<description><![CDATA[                    வணக்கம் அனைவருக்கும்...<br />
<br />
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.<br />
<br />
அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.<br />
<br />
அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள். <br />
<br />
&lt;b&gt;கலாபக் காதலன்&lt;/b&gt;<br />
<a href="http://www.oosai.com/tamilsongs/kalaba_kadhalan_songs.cfm" target="_blank" rel="noopener" class="mycode_url">இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள்.</a><br />
<br />
mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள்.<br />
<br />
உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே?<br />
<br />
&lt;b&gt;நன்றி&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் அனைவருக்கும்...<br />
<br />
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.<br />
<br />
அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.<br />
<br />
அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள். <br />
<br />
&lt;b&gt;கலாபக் காதலன்&lt;/b&gt;<br />
<a href="http://www.oosai.com/tamilsongs/kalaba_kadhalan_songs.cfm" target="_blank" rel="noopener" class="mycode_url">இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள்.</a><br />
<br />
mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள்.<br />
<br />
உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே?<br />
<br />
&lt;b&gt;நன்றி&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1039</link>
			<pubDate>Sat, 04 Feb 2006 13:30:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1039</guid>
			<description><![CDATA[                    <br />
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி <br />
<br />
சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து<br />
 <br />
விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு...<br />
 <br />
அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே, கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும், கௌதமியும், ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
&lt;b&gt;இவ்வளவு விற்பன்னர்கள், அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?&lt;/b&gt;<br />
 <br />
நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால், நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை, வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும், மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.<br />
 <br />
&lt;b&gt;தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?&lt;/b&gt;<br />
 <br />
அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்க, அவங்களுக்கு வவீனீமீ ணீஸீபீ னீஷீஸீமீஹ் ஸ்மீக்ஷீஹ் ஜீக்ஷீமீநீவீஷீரள இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.<br />
 <br />
&lt;b&gt;தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?&lt;/b&gt;<br />
 <br />
அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும், துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும், அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து, அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு, ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.<br />
 <br />
நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...<br />
 <br />
சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள், யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா, அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா, அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு, கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.<br />
 <br />
&lt;b&gt;உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?&lt;/b&gt;<br />
 <br />
அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டு, தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும், எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம், பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.<br />
 <br />
&lt;b&gt;இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?&lt;/b&gt;<br />
 <br />
பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ, அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங், எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.<br />
 <br />
&lt;b&gt;இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?&lt;/b&gt;<br />
 <br />
பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு, மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார், ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.<br />
 <br />
&lt;b&gt;இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு&lt;/b&gt;?<br />
 <br />
கார்த்திக் மாதிரி சிறந்த ரஸீபீமீக்ஷீஜீறீணீஹ் பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி, அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.<br />
 <br />
&lt;b&gt;குஷ்புவும், சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...&lt;/b&gt;<br />
 <br />
எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க, அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, யாராவது குதர்க்கமாகப் பேசினால், நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.<br />
 <br />
&lt;i&gt;&lt;b&gt;குமுதம்<br />
நா.கதிர்வேலன், &lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <br />
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி <br />
<br />
சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து<br />
 <br />
விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு...<br />
 <br />
அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே, கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும், கௌதமியும், ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
&lt;b&gt;இவ்வளவு விற்பன்னர்கள், அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?&lt;/b&gt;<br />
 <br />
நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால், நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை, வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும், மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.<br />
 <br />
&lt;b&gt;தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?&lt;/b&gt;<br />
 <br />
அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்க, அவங்களுக்கு வவீனீமீ ணீஸீபீ னீஷீஸீமீஹ் ஸ்மீக்ஷீஹ் ஜீக்ஷீமீநீவீஷீரள இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.<br />
 <br />
&lt;b&gt;தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?&lt;/b&gt;<br />
 <br />
அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும், துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும், அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து, அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு, ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.<br />
 <br />
நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...<br />
 <br />
சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள், யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா, அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா, அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு, கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.<br />
 <br />
&lt;b&gt;உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?&lt;/b&gt;<br />
 <br />
அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டு, தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும், எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம், பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.<br />
 <br />
&lt;b&gt;இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?&lt;/b&gt;<br />
 <br />
பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ, அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங், எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.<br />
 <br />
&lt;b&gt;இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?&lt;/b&gt;<br />
 <br />
பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு, மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார், ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.<br />
 <br />
&lt;b&gt;இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு&lt;/b&gt;?<br />
 <br />
கார்த்திக் மாதிரி சிறந்த ரஸீபீமீக்ஷீஜீறீணீஹ் பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி, அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.<br />
 <br />
&lt;b&gt;குஷ்புவும், சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...&lt;/b&gt;<br />
 <br />
எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க, அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, யாராவது குதர்க்கமாகப் பேசினால், நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.<br />
 <br />
&lt;i&gt;&lt;b&gt;குமுதம்<br />
நா.கதிர்வேலன், &lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Feel the Pain - அஜீவன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2372</link>
			<pubDate>Sun, 20 Nov 2005 04:24:21 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=24">sOliyAn</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2372</guid>
			<description><![CDATA[                    புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்....<br />
மேலும் அறிய&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;<br />
<a href="http://www.tamilamutham.net/index.php?option=content&amp;task=view&amp;id=240&amp;Itemid=39" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilamutham.net/index.php?opti...d=240&amp;Itemid=39</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்....<br />
மேலும் அறிய&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;&gt;<br />
<a href="http://www.tamilamutham.net/index.php?option=content&amp;task=view&amp;id=240&amp;Itemid=39" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilamutham.net/index.php?opti...d=240&amp;Itemid=39</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அரிஸ்டாட்டில்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2528</link>
			<pubDate>Thu, 10 Nov 2005 14:52:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2528</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img487.imageshack.us/img487/8180/aristotle8id.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கிரேக்க தேசத்தின் கடற்கரைப் பிரதேசம்.<br />
கி.மு. 384-ம் ஆண்டு.<br />
ஓர் அறிஞர் பிறந்தார்.<br />
தம் 62 வருட வாழ்வின் பெரும்பகுதியை அந்தக் கிரேக்கக் கடற்கறையிலே<br />
செலவிட்டார்.<br />
அந்த செலவு - உலக அறிவியலின் முதல் பெரும் வரவு.<br />
அவர் - அரிஸ்டாட்டில்!<br />
<br />
பேரலைகளுக்கும் சீறலைகளுக்கும் இடையே பாறைகள் நடுவே தேங்கிவிடும்<br />
கடற்கரைக் குளங்கள்.<br />
அவற்றைச் சுற்றி சுற்றி வந்து ஞானம் தேடின அறிஞரின் கண்கள்.<br />
சிறு வயது. ஆனால் சீரிய அறிவு.<br />
<br />
அந்தக் கரைக்குளங்களில் நண்டுகளும், சிப்பிகளும்,<br />
ஜெல்லி வகை, நட்சத்திரவகை உள்ளிட்ட பலப்பல மீன்களும்<br />
புழுக்களும் பூச்சிகளுமாய் ---<br />
உயிரினம் களிநடம் புரியக் கண்டார்.<br />
மிகக் கவனமாய் அவற்றை ஆராய்ந்தார்.<br />
ஆராய்ந்தவற்றை அழகாய் எழுதித் தொகுத்தார்.<br />
தொகுத்த தகவல்களும் சரி, மேற்தகவல் தெரியாமல் தொடுத்த கேள்விகளும் சரி -<br />
உயிரியலின் உயிர்நாடியாய் இன்றும் மெச்சப்படுகின்றன.<br />
<br />
உயிர்வேற்றுமையின் (Biodiversity) மகிமையை உணர்ந்து உணர்த்திய முதல் மேதை.<br />
அன்றே 560 வகை உயிர்வகைகளை அறிந்து பதிந்த உயிரியல் தந்தை!<br />
உயிரியல் மட்டுமல்ல, உடற்கூறியல் (Anatomy), கருவியல் ( Embryology),<br />
உடலியங்கியல் ( Physilogy) - இவற்றை அறிவியல் உலகத்துக்கு<br />
அழைத்து வந்த அண்ணனும் இவர்தான்.<br />
ஒரு கடற்சங்கின் உள்வாய் உறுப்புகளைப் பற்றி மிக விளக்கமாக அரிஸ்டாட்டில்<br />
அன்று எழுதிய குறிப்புகள் - அதன் நுணுக்கங்கள்-<br />
இன்றைய மேதைகளை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு விரிவானவை.<br />
<br />
அவரின் ஆராய்ச்சிகளின் எல்லைகள் பரந்தவை. ஈடுபாடுகள் ஆழமானவை.<br />
முட்டைக் கருவின் படிப்படி வளர்ச்சி -மாற்றம்<br />
இரத்தநாளங்களின் அமைப்பு, செயல்பாடுகள்<br />
இப்படி அந்த அரிய மூளை சுரந்த அறிவுப்பால் ஏராளம்.<br />
<br />
கணிதம், இயற்பியல், வானியலையும் விட்டுவைக்காத காயசண்டிகன் அவர்.<br />
தர்க்கவியலைக் கண்டுபிடித்தவர் அவர் என்றால் அவரின் அறிவாற்றலைப்<br />
பற்றி தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்வோம்தானே!<br />
இயக்க விதிகள் என்று இவர் - (தவறாய்ச்) சொன்னதுதான்<br />
பின்னாளில் கலீலியோ, நியூட்டன் வரும்வரை வேதம்.<br />
பின்னாளில் ஏதென்ஸ் சென்ற அரிஸ்டாட்டில் நாடறிந்த பிளாட்டோவிடம்<br />
சீடராகச் சேர்ந்தார். குருவும் சீடருமாய்ச் சேர்ந்து எதிர்கால அறிவுப்பயணிகளுக்கு<br />
இரட்டை விளக்கங்களாய் பல நூறு ஆண்டுகள் விளங்கினார்கள்.<br />
ஆனாலும் நம் அரிஸ்டாட்டில் குருவை மிஞ்சிய சீடர்!<br />
குருவின் அறிவு பக்தி, மந்திர தந்திர சக்தி என்ற திரைகளால் சுற்றப்பட்டு மங்கி ஒளிர்ந்தது.<br />
சீடரும் பக்தி உள்ளவரே. ஆனால் அந்த பக்தி நம்பிக்கைகள்<br />
அறிவியல் தேடல்களை முடக்கிவைக்காமல் விலக்கி வைத்த விவேகி.<br />
குரு கவிதை.<br />
சீடர் தேற்றம்.<br />
இன்றைய அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சி.<br />
என்றுமே அறிவியலின் ஆரம்பம் - கவனித்தல்.<br />
கவனித்து புரிந்து, புரியாததை ஆராய்ச்சியால் அகழ்ந்து<br />
கண்டதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து - என<br />
அறிவியலின் பாடங்களை புரட்டும்போது,<br />
அத்தனைக்கும் பால பாடம் --<br />
கடற்குள உயிர்களைக் கண்ட அரிஸ்டாட்டிலின் கவனப்பாடம்!<br />
<br />
ஏனோ உயிரியலின் பெரும்பாதியான தாவரங்களை அரிஸ்டாட்டில் 'கண்டுகொள்ளவில்லை'!<br />
காலம் திட்டமிட்ட கணக்கு அது!<br />
அரிஸ்டாட்டிலின் ஒரு சீடர் மாவீரர் அலெக்ஸாண்டரின் கூடவே போர்முனைகளுக்குச் சென்ற<br />
அரிஸ்டாட்டிலின் இன்னொரு சீடர் தியோப்ராஸ்டஸ் மூலம்தான்<br />
தாவரவியல் தவழ்ந்துவர வேண்டும் எனத் திட்டமிட்டதால்தான்<br />
காலம் அரிஸ்டாட்டில் கண்களிடமிருந்து<br />
தாவரங்களைத் தப்பவிட்டது போலும்!<br />
நன்றி&gt;தமிழ்மண்றம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img487.imageshack.us/img487/8180/aristotle8id.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கிரேக்க தேசத்தின் கடற்கரைப் பிரதேசம்.<br />
கி.மு. 384-ம் ஆண்டு.<br />
ஓர் அறிஞர் பிறந்தார்.<br />
தம் 62 வருட வாழ்வின் பெரும்பகுதியை அந்தக் கிரேக்கக் கடற்கறையிலே<br />
செலவிட்டார்.<br />
அந்த செலவு - உலக அறிவியலின் முதல் பெரும் வரவு.<br />
அவர் - அரிஸ்டாட்டில்!<br />
<br />
பேரலைகளுக்கும் சீறலைகளுக்கும் இடையே பாறைகள் நடுவே தேங்கிவிடும்<br />
கடற்கரைக் குளங்கள்.<br />
அவற்றைச் சுற்றி சுற்றி வந்து ஞானம் தேடின அறிஞரின் கண்கள்.<br />
சிறு வயது. ஆனால் சீரிய அறிவு.<br />
<br />
அந்தக் கரைக்குளங்களில் நண்டுகளும், சிப்பிகளும்,<br />
ஜெல்லி வகை, நட்சத்திரவகை உள்ளிட்ட பலப்பல மீன்களும்<br />
புழுக்களும் பூச்சிகளுமாய் ---<br />
உயிரினம் களிநடம் புரியக் கண்டார்.<br />
மிகக் கவனமாய் அவற்றை ஆராய்ந்தார்.<br />
ஆராய்ந்தவற்றை அழகாய் எழுதித் தொகுத்தார்.<br />
தொகுத்த தகவல்களும் சரி, மேற்தகவல் தெரியாமல் தொடுத்த கேள்விகளும் சரி -<br />
உயிரியலின் உயிர்நாடியாய் இன்றும் மெச்சப்படுகின்றன.<br />
<br />
உயிர்வேற்றுமையின் (Biodiversity) மகிமையை உணர்ந்து உணர்த்திய முதல் மேதை.<br />
அன்றே 560 வகை உயிர்வகைகளை அறிந்து பதிந்த உயிரியல் தந்தை!<br />
உயிரியல் மட்டுமல்ல, உடற்கூறியல் (Anatomy), கருவியல் ( Embryology),<br />
உடலியங்கியல் ( Physilogy) - இவற்றை அறிவியல் உலகத்துக்கு<br />
அழைத்து வந்த அண்ணனும் இவர்தான்.<br />
ஒரு கடற்சங்கின் உள்வாய் உறுப்புகளைப் பற்றி மிக விளக்கமாக அரிஸ்டாட்டில்<br />
அன்று எழுதிய குறிப்புகள் - அதன் நுணுக்கங்கள்-<br />
இன்றைய மேதைகளை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு விரிவானவை.<br />
<br />
அவரின் ஆராய்ச்சிகளின் எல்லைகள் பரந்தவை. ஈடுபாடுகள் ஆழமானவை.<br />
முட்டைக் கருவின் படிப்படி வளர்ச்சி -மாற்றம்<br />
இரத்தநாளங்களின் அமைப்பு, செயல்பாடுகள்<br />
இப்படி அந்த அரிய மூளை சுரந்த அறிவுப்பால் ஏராளம்.<br />
<br />
கணிதம், இயற்பியல், வானியலையும் விட்டுவைக்காத காயசண்டிகன் அவர்.<br />
தர்க்கவியலைக் கண்டுபிடித்தவர் அவர் என்றால் அவரின் அறிவாற்றலைப்<br />
பற்றி தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்வோம்தானே!<br />
இயக்க விதிகள் என்று இவர் - (தவறாய்ச்) சொன்னதுதான்<br />
பின்னாளில் கலீலியோ, நியூட்டன் வரும்வரை வேதம்.<br />
பின்னாளில் ஏதென்ஸ் சென்ற அரிஸ்டாட்டில் நாடறிந்த பிளாட்டோவிடம்<br />
சீடராகச் சேர்ந்தார். குருவும் சீடருமாய்ச் சேர்ந்து எதிர்கால அறிவுப்பயணிகளுக்கு<br />
இரட்டை விளக்கங்களாய் பல நூறு ஆண்டுகள் விளங்கினார்கள்.<br />
ஆனாலும் நம் அரிஸ்டாட்டில் குருவை மிஞ்சிய சீடர்!<br />
குருவின் அறிவு பக்தி, மந்திர தந்திர சக்தி என்ற திரைகளால் சுற்றப்பட்டு மங்கி ஒளிர்ந்தது.<br />
சீடரும் பக்தி உள்ளவரே. ஆனால் அந்த பக்தி நம்பிக்கைகள்<br />
அறிவியல் தேடல்களை முடக்கிவைக்காமல் விலக்கி வைத்த விவேகி.<br />
குரு கவிதை.<br />
சீடர் தேற்றம்.<br />
இன்றைய அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சி.<br />
என்றுமே அறிவியலின் ஆரம்பம் - கவனித்தல்.<br />
கவனித்து புரிந்து, புரியாததை ஆராய்ச்சியால் அகழ்ந்து<br />
கண்டதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து - என<br />
அறிவியலின் பாடங்களை புரட்டும்போது,<br />
அத்தனைக்கும் பால பாடம் --<br />
கடற்குள உயிர்களைக் கண்ட அரிஸ்டாட்டிலின் கவனப்பாடம்!<br />
<br />
ஏனோ உயிரியலின் பெரும்பாதியான தாவரங்களை அரிஸ்டாட்டில் 'கண்டுகொள்ளவில்லை'!<br />
காலம் திட்டமிட்ட கணக்கு அது!<br />
அரிஸ்டாட்டிலின் ஒரு சீடர் மாவீரர் அலெக்ஸாண்டரின் கூடவே போர்முனைகளுக்குச் சென்ற<br />
அரிஸ்டாட்டிலின் இன்னொரு சீடர் தியோப்ராஸ்டஸ் மூலம்தான்<br />
தாவரவியல் தவழ்ந்துவர வேண்டும் எனத் திட்டமிட்டதால்தான்<br />
காலம் அரிஸ்டாட்டில் கண்களிடமிருந்து<br />
தாவரங்களைத் தப்பவிட்டது போலும்!<br />
நன்றி&gt;தமிழ்மண்றம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2754</link>
			<pubDate>Wed, 26 Oct 2005 21:01:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2754</guid>
			<description><![CDATA[                    [size=15]&lt;b&gt;காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு&lt;/b&gt; <br />
 <br />
&lt;b&gt;ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது! &lt;/b&gt; என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன். <br />
<br />
தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது கட்அவுட்களை நிற்க வைத்து, சிங்கள ராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள். <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aaa.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன். உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன... <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aa.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான் அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, Ôஎன் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்Õ என்று ஆசைப்பட்டான். <br />
<br />
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்... <br />
<br />
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!Õ என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது. மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லைÕÕ என்கிறார் காசி ஆனந்தன். <br />
<br />
அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்... <br />
<br />
ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர் களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது. <br />
<br />
நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை 'தமிழ் பள்ளோ' என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். 'பள்ளோ' என்றால் 'நாயே' என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை 'கொட்டியா' என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், 'புலி' என்று பொருள்! <br />
<br />
எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். <br />
<br />
பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் Ôஎன்னைÕயே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது! <br />
<br />
என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள். அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக் கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது. நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக் கிறேன்" என்கிற காசி ஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது. <br />
&lt;b&gt;<br />
"இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?" &lt;/b&gt;<br />
<br />
"அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை. <br />
<br />
இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா &amp; ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசார ணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது. <br />
<br />
'ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு' என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?ÕÕ <br />
<br />
&lt;b&gt;"இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?"&lt;/b&gt; <br />
<br />
"சிங்களர்களுக்கும் தமிழர் களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட் டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடை செய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா. <br />
<br />
ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய விடுதலைக்குப் போராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நாமுக்கு உதவின. பாலஸ் தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள் எந்த நாட்டின் தயவும் இல்லாமல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். <br />
<br />
அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிக¬ளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!" <br />
<br />
&lt;b&gt;விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து வைத்திருக்கிறார்களே? &lt;/b&gt;<br />
<br />
புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற் றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள். <br />
<br />
புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல! <br />
<br />
ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும். புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள். <br />
<br />
&lt;b&gt;எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை! &lt;/b&gt;<br />
 <br />
நன்றி: விகடன் \ டி.அருள்எழிலன்<br />
படங்கள்: என்.விவேக் <br />
                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=15]&lt;b&gt;காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு&lt;/b&gt; <br />
 <br />
&lt;b&gt;ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது! &lt;/b&gt; என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன். <br />
<br />
தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது கட்அவுட்களை நிற்க வைத்து, சிங்கள ராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள். <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aaa.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன். உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன... <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aa.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான் அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, Ôஎன் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்Õ என்று ஆசைப்பட்டான். <br />
<br />
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்... <br />
<br />
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!Õ என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது. மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லைÕÕ என்கிறார் காசி ஆனந்தன். <br />
<br />
அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்... <br />
<br />
ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர் களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது. <br />
<br />
நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை 'தமிழ் பள்ளோ' என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். 'பள்ளோ' என்றால் 'நாயே' என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை 'கொட்டியா' என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், 'புலி' என்று பொருள்! <br />
<br />
எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். <br />
<br />
பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் Ôஎன்னைÕயே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது! <br />
<br />
என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள். அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக் கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது. நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக் கிறேன்" என்கிற காசி ஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது. <br />
&lt;b&gt;<br />
"இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?" &lt;/b&gt;<br />
<br />
"அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை. <br />
<br />
இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா &amp; ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசார ணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது. <br />
<br />
'ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு' என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?ÕÕ <br />
<br />
&lt;b&gt;"இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?"&lt;/b&gt; <br />
<br />
"சிங்களர்களுக்கும் தமிழர் களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட் டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடை செய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா. <br />
<br />
ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய விடுதலைக்குப் போராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நாமுக்கு உதவின. பாலஸ் தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள் எந்த நாட்டின் தயவும் இல்லாமல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். <br />
<br />
அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிக¬ளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!" <br />
<br />
&lt;b&gt;விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து வைத்திருக்கிறார்களே? &lt;/b&gt;<br />
<br />
புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற் றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள். <br />
<br />
புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல! <br />
<br />
ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும். புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள். <br />
<br />
&lt;b&gt;எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை! &lt;/b&gt;<br />
 <br />
நன்றி: விகடன் \ டி.அருள்எழிலன்<br />
படங்கள்: என்.விவேக் <br />
                     ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2755</link>
			<pubDate>Wed, 26 Oct 2005 20:25:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2755</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:red'&gt;சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு!  <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p37.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
அக்பர், அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட சாமியார்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும்! <br />
 <br />
என் சக படைப்பாளிதான்... காரசாரமா பேசிட்டு இருந்தோம். திடீர்னு ஆவேசமாகி, என் முகத்தில் குத்திட்டான். என் கண்ணு கலங்கிப்போச்சு. அப்படியே கன்னம் கிழிஞ்சு, ஒரு பல் உடைஞ்சு ரத்தம் வழிய நிக்கிறேன். என்ன பண்றது? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p38a.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்னு சொன்னாரே வள்ளலார்... அதுதானே படைப்பு மனம்... அதுதானே மனுஷத்தனம். நமக்குள் எதுக்கு இந்த வன்மம்?&lt;/b&gt; <br />
<br />
இங்கே அரசியல் சினிமா இலக்கியம்னு அத்தனையிலும் நடக்கிற குரூர, அபத்த நாடகங்களுக்கு நான் ஒரு சாட்சிக்காரன். அதுக்கு அடையாளமா இந்த தழும்பும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்!ரூ சச்சின் டென்ஷனாகிற நேரம் பார்த்து ஷேன் வார்னே பந்து வீச வந்தால், பறக்குமே சிக்ஸர்கள்... அப்படி சாரு நிவேதிதா பேச ஆரம்பித்தாலே பரபரப்புதான்! <br />
<br />
கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால்இ தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். ஒரு மழை இரவில் நடந்தது இந்தச் சந்திப்பு... <br />
<br />
தமிழ் இலக்கியச் சூழல் இப்போ மோசமா இருக்கு. பாரதி மாதிரி, ப.சிங்காரம் மாதிரி தீவிரமாகவும் உலகத் தரத்திலும் இயங்கக்கூடிய படைப்பாளிகள் ரொம் பவே குறைந்து விட்ட னர். கவிதைகளில் தருமு.சிவராமுக்குப் பிறகு அவ்வளவு உக்கிரமாக, பித்த நிலையில் எழுத ஆட்கள் இல்லை. உரை நடையில் அசோகமித் திரன் அளவுக்கு எழுதும் படைப்பாளி யைத் தேட வேண்டி இருக்கிறது. ஒரு சில பேர் இருந்தாலும், அவர்களும் பரவலாக அறியப் படாமல் வட்டத் துக்குள்தான் வாழ்கிறார்கள். <br />
<br />
பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா... தன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவிக்க உத்தரவிட்டவர். ஆனால்இ அவர் பிரமாதமான எழுத்தாளர். 'தி ரியல் ஸ்டோரி ஆஃப் அலெக்சான்ட்ரா மாய்தா' என்கிற அவருடைய நாவல், ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய ஆக அற்புதமான படைப்பு. ஓர் எழுத்தாளராக அவரை நான் கொண்டாடுவேன். அப்படிக்கூட இங்கே பலரைக் கொண்டாட முடியாதே! <br />
<br />
லக்ஷ்மி மணிவண்ணன், அழகிய பெரியவன், என்.டி.ராஜ்குமார் எனச் சிலர் சொல்கிற மாதிரி எழுதுகிறார்கள். மாலதி மைத்ரி எழுத்துக்களில் ஒரு தெறிப்பு இருக்கு. ஆனாலும், உலகத் தரத்தில் எழுத யாரும் இல்லை. என் எழுத்துக்கள் உலகத் தரத்துக்கானவை. அதற்கான வாசிப்பும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. மலையாளத்திலும் வெளிநாடுகளிலும் என்னைக் கொண்டாடுகிறார்கள். அங்கே எல்லாம், நம்ம ஊரில் ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற மரியாதையும் வரவேற்பும் எனக்குக் கிடைக்கின்றன. ஆனால் இங்கே என்னை எவ்வளவு பேருக்குத் தெரியும்? எழுத்தாளனை மதிக்காத கொண்டாடாத ஒரு சமூகம் எப்படி உருப்படும்..? <br />
<br />
&lt;b&gt;சிறு பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது? &lt;/b&gt;<br />
<br />
உண்மையில் இங்கே உள்ள பல எழுத்தாளர்கள், சாமான்யர்களைவிட கட்டுப் பெட்டிகளாக பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள். ஜாதிய மனோபாவம் சிறு பத்திரிகை உலகிலும் பரவிக் கிடக்கிறது. <br />
<br />
விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் வக்கீல் நோட்டீஸி லிருந்து அடியாள் அனுப்புவது வரையான ஆபத்துக்கள் நடக்கின்றன. உச்சகட்டமாக கும்பலாக வந்து நேரடியாகவே தாக்குகிறார்கள். உனக்கும் எனக்கும் நடுவிலேயே கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால், சமூகத்தில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? <br />
<br />
அப்புறம், கோஷ்டிப் பூசல்... ஆளாளுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக்கொண்டு பண்ணுகிற கோமாளித் தனங்கள். என்னை ஒரு மலையாள பத்திரிகையில் பேட்டி எடுக்க இருந்தால், சாருவா... அவனெல்லாம் ஒரு எழுத்தாளனே இல்லை. குப்பை! என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் போகிறது. இந்த மாதிரியான கோஷ்டிப் பூசல்களால்தான், தகுதியானவர்களுக்கு வர வேண்டிய விருதுகளும் கிடைக்காமல் போகின்றன. 'இவருக்கு விருது கொடுத்தால் சண்டை வரும். அவருக்குக் கொடுத்தால் வம்பு' என்று கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் நம் படைப்புகள் வேறு மொழிகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. அரசியலைக் குறைத்து அவரவர் படைப்பில் கவனம் செலுத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு நல்லது நடக்கும். <br />
<br />
இன்னொரு பக்கம் ஆரோக்கியமாவும் இருக்கு. பல்கலைக்கழகங்களோ, அரசியல் இயக்கங்களோ, அரசாங்கமோ, சினிமாவோ, வெகு ஜனப் பத்திரிகைகளோ தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சிற்றிதழ்களாலும் சிற்றிதழ் எழுத்தாளர்களாலும்தான் அது நடக்கிறது... தொடர்ந்து நடக்கும்! <br />
<br />
&lt;b&gt;பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பாலுணர்வு தூக்க லாக இருக்கின்றன என்பது மாதிரி யான சர்ச்சைகள்இ அவர்களின் படைப் புச் சுதந்திரத்தை பாதிக்கும்தானே? &lt;/b&gt;<br />
<br />
முதலில் பெண் படைப்பாளிகளின் எழுத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகச் சொல்வது யார் தெரியுமா? நம் திரைப்படப் பாடலாசிரியர்கள். இந்த மாதிரி உலக காமெடி எல்லாம் இங்கேதான் நடக்கும். அதை விட்டுத் தள்ளுங்க. உடலைப் பற்றி, காமத்தைப் பற்றி இன்னும் ஆழமாக வலிமையாக எழுதப் பெண் படைப்பாளிகள் முன்வர வில்லை என்பதுதான் என் ஆதங்கம். <br />
<br />
நோபல் பரிசு வாங்கின ஆஸ்திரியா நாட்டு பெண் எழுத்தாளர் எல்ஃப்ரிட் ஜெலினெக் எழுதிய பியானோ டீச்சர் என்கிற நாவலைப் படியுங்கள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல் வேட்கையைஇ காமத்தை அடிச்சு நகர்த்தி இருப்பார். நாவல் வந்ததும் அது என் சொந்த அனுபவங்கள்தான் என்று துணிச்சலாகச் சொன்னார். அந்த உண்மையில், உக்கிரத்தில் ஒரு சதவிகிதம்கூட இங்கே இல்லை. உடல் எவ்வளவு மகத்தான விஷயம்... அதைக் கொண்டாட வேண்டாமா? <br />
<br />
தமிழில் இப்போது பாலுணர்வு பற்றி எழுதுபவர்களில் முக்கியமான ஆள் நான்தான். என் எழுத்துக்களைப் பற்றி இதுவரை எந்த பெண் படைப்பாளியும் கருத்து சொன்னதாகவோ, விவாதித்ததாகவோ விமரிசனம் பண்ணியதாகவோ எனக்குத் தெரியவில்லை. என் எழுத்தை அவர்கள் வாசித்திருப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பு கிடையாது. இன்னும் கட்டுமானங்களை, கட்டுப்பாடுகளை முழுதாக உடைக்க முன்வராவிட்டால், அப்புறம் எப்படி ஜெலினெக் மாதிரியெல்லாம் எழுத முடியும்? <br />
<br />
&lt;b&gt;சரி, குஷ்பு பேசிய கற்பு பிரச்னை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?&lt;/b&gt; <br />
<br />
கற்பாவது மண்ணாங்கட்டியாவது! இதை பெரியார் எப்பவோ சொல்லிட்டார். அந்தப் பெரியார் வழியில் வந்த தம்பிகள்தான் இன்னிக்கு தாம்தூம்னு குதிக்கிறாங்க. இவங்க சொல்ற கற்பு என்ன? ராமன்-சீதா மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி. ஆனால், நம் தலைவர்கள் எத்தனை பேர் அப்படி இருக்காங்க? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p44.jpg' border='0' alt='user posted image'&gt;நீங்க ஒரே ஒரு நாள் ஃபேமிலி கோர்ட்டுக்கு போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தீங்கன்னா தெரியும்... நம்ம தேசம் எப்படி இருக்குன்னு? விவாகரத்து கேட்டு வருகிற பல தம்பதி களுக்கு இருக்கிற பிரச்னையே என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்கு, கணவனுக்கு இன்னொருத்தியுடன் காதல் இருக்கு என்பது மாதிரிதான். நீங்க காட்டுக் கத்தா கத்துகிற கற்பு எங்கே போச்சு? அப்புறம் ப்ரீரூமேரிடல் செக்ஸ். கல்யாணத்துக்கு முன்னாடி யார் யாருடன் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்த விஷயம். யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. உறவுகளில் பாதுகாப்பாக இருக் கணும். அவ்வளவுதான் விஷயம்! அது பற்றிய பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பற்றி யாரும் பதறக் காணோம். போராடக் காணோம். சும்மா கற்பு ஒழுக்கம்னு கத்திட்டே இருக்கிற நம் நாட்டில்தான் கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. செக்ஸின் தலைமையிடம்னு சொல்லப்படுகிற தாய் லாந்தில் கற்பழிப்பு என்பதே இல்லை. அப்ப என்ன கற்பு... கருமம்னுக்கிட்டு? <br />
<br />
திருமாவளவன் டெக்கான் கிரானிகல் இங்கிலீஷ் பேப்பரில் கற்பைப் பற்றி முற்போக்காகப் பேட்டி தருகிறார். இன்னொரு பக்கம் அவர் கட்சிக்காரர்கள் கையில் விளக்கு மாறுடன் கழுதைகளுடன் குஷ்பு வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதான் இங்கே இவங்க அரசியல். <br />
<br />
கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டாங்களாம்... ஆளாளுக்கு செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது கொடும்பாவி கொளுத்துவது என காமெடி நாடகம் நடத்துகிறார்கள். குஷ்பு அப்படி அந்தப் பத்திரிகையில் என்ன பேசினார் என்பதே பலருக்கு சரியா தெரியாது. <br />
<br />
உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து. ஆனால் இங்கே நம் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சமூகத்தையே ரௌடிக் கூட்டமாக மாத்தி வெச்சிருக்காங்க. கொடும் பாவியைக் கொளுத்துகிறவன் நாளைக்கு உயிரோடவும் கொளுத்து வான்... பஸ்ல பிள்ளைங்களை உயிரோட எரிச்சாங்களே அப்படி நடக்கும்! <br />
<br />
அதுக்காக நான் குஷ்புவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அது தனிக் கச்சேரி. அந்தப் பேட்டியில் குஷ்பு பேசின அத்தனையும் உளறல். குஷ்பு மாதிரி நடிகைகள் எல்லாம் தொழிலதிபர்கள். லட்ச லட்சமா பணம் பார்க்கிறவர்கள். அவங்களுக்கு மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. இப்பவும் சாந்தி தியேட்டர் எதிரே தன் பிள்ளைக்குச் சாப்பாடு வாங்குகிற காசுக்காக உடம்பை வித்து வாழ்கிறார்களே.. அவங்களுக்காகப் போராட நான் ரெடி. குஷ்புவுக்காக நான் எதுக்குப் போராடணும்? <br />
<br />
அது இருக்கட்டும், இது மாதிரியான பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருந்த தங்கர்பச்சானின் பேச்சு இருக்கே... அதையும் கண்டிக்கணும். அதுவும் கேவலம் அறுநூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு சிகை அலங்கார நிபுணரெல்லாம் ஷ¨ட்டிங்கை நிறுத்துறாங்கனு ஒரு தொழிலாளியையும் அவங்க வாங்குகிற கூலியையும் கேவலப்படுத்திப் பேசினார் பாருங்க... அதுக்குத்தான் போராடணும். தங்கர்பச்சான் _ குஷ்பு பிரச்னைகள் தமிழ்நாட்டின் பிரச்னையா என்ன... இது சும்மா, பேயும் பிசாசும் அடிச்சுக்குது! <br />
<br />
கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆரம்பிச்சு ஓட்டல் களில் நள்ளிரவு நடனம் ஆடக் கூடாது என்பது வரை கலா சாரக் காவல் எண்ணத்தோடு அரசியல் கட்சிகளும்இ கல்வித் துறையும் காவல் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா? <br />
<br />
காட்டுமிராண்டித்தனம்! நம்ம தேசத்தில்தாங்க நடக்குது இவ்வளவு கூத்தும்! இங்கே பொது இடங்களில் சிகரெட் விற்கலாம். ஆனால்இ புகைக்கக் கூடாது. 11 மணிக்கு ஓட்டல் பார்களை மூடிவிட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் டாஸ்மாக் மட்டும் 12 மணி வரை விற்கலாம். சிகரெட், சாராயத்தை விற்க, அரசாங்கமே அனுமதிக்கும். ஆனால், சினிமாவில் மட்டும் இவை இரண்டுமே காட்டக் கூடாது. <br />
<br />
அதே போல, கல்லூரிகளிலும், பகலைக்கழகங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் கோமாளிக் கூத்து. ஆட்சி அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கிற வாக்கு அளிக்கும் வயதும் உரிமையும் உள்ள மாணவர் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p42a.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
கல்விக்கூடங்கள் என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கே இருந்துதான் சிறந்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் தலைவர் களும் உருவாகி வருகிறார்கள். அவர்களை அடிமைக் கூட்டமாக ஆக்க ஆசைப்பட்டால், இனி வரும் காலங்களில் ஒரு நல்ல மாணவனையோ, மனிதனையோ சமூகத்துக்கு உருவாக்கித் தர முடியாது. <br />
<br />
அப்புறம், இந்த ஹோட்டல் விவகாரம். ரோட்ல டான்ஸ் ஆடினா பிடிங்க... அது த்ரிஷாவா இருந்தா மன்னிச்சு விட்ருவீங்க. ஆனா, நட்சத்திர ஹோட்டலுக்குள் நாலு சுவத்துக்குள் நடனம் ஆடினால் தவறாம். சொல்லப் போனால்இ அது ஒருவரது பிரைவஸிக்குள் அத்துமீறல் என்று காவல்துறை மீதும் மீடியா மீதும் மான நஷ்ட வழக்கே போடலாம். <br />
<br />
ஆனால், அதே நட்சத்திர ஓட்டல் களுக்குள் வேறு ஒரு அநியாயம் நடக்கிறது. சமீபத்தில், நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு... அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்! <br />
<br />
&lt;b&gt;விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்காரே...&lt;/b&gt; <br />
<br />
செம காமெடி! ஏன் அரசியலுக்கு வந்தீங்க?னு ஒரு கேள்விக்கு, அவர் சொல்ற பதில், நான் சின்ன வயசிலேருந்தே சமூக சேவை செஞ்சிருக்கேன். இப்பவும் தையல் மெஷினெல்லாம் குடுக்கிறேன், என்கிறார். நான்கூடத்தான் பீச்சுக்குப் போறேன்... பிச்சை போடறேன். அதுக்காக அரசியலுக்கு வந்திடலாமா? <br />
<br />
சினிமாவால் சமூகத்தைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ அரசியலுக்கும் வர்றாங்க. ரஜினிக்கு ஆன்மிகம் மாதிரி, விஜயகாந்துக்கு அரசியல். பல கோடிகளைப் பத்திரமா பேங்க்ல டெபாஸிட் பண்ணிட்டு, இமயமலைக்கு ட்ரிப் அடிக்கிறது எவ்வளவு சூப்பர் ஆன்மிகம்! <br />
<br />
துறவின்னா யாரு... காமம், போகம், யோகம் எல்லாத்தையும் தாண்டி அதிகாரத்தையும் துறக்கணும். ஆனால் துறவி என்கிற பெயரில், ஜனாதிபதியையும் நீதிபதிகளையும் வந்து வாசலில் நின்னு பார்க்க வெச்சு, அதிகாரத்தை நிறுவுகிறவர்கள்தானே இங்கே துறவி! அரசியல், ஆன்மிகம் இலக்கியம்னு அத்தனையும் கெட்டுக் கிடக்கிற சமூகத்தில், விஜயகாந்த் அரசியலுக்கு வருவதா ஆச்சரியம்? <br />
<br />
&lt;b&gt;பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே... &lt;/b&gt;<br />
<br />
அக்பர் வரலாறு... அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட தமிழகத்தின் சாமியார்கள், பெரிய மனிதர்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும். புண்ணியம்  மீடியாவுக்கு! <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p46.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
மனைவியுடன்... <br />
<br />
<br />
நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கே யாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள். <br />
<br />
அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி வரை நடக்கும் அத்தனை விவகாரமுமே நம் சமூகத்தின் சாம்பிள்கள் தான். என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தறே... உன்னை கால்ல போட்டு மிதிச்சுக் காட்டறேன் பார்னு ஒரு பெண் கிளம்பினால் என்னவாகும் என்பதற்கு ஜீவஜோதி முதல் ஜெயலட்சுமிவரை உதாரணங்கள் இங்கே அதிகம்! <br />
<br />
&lt;b&gt;உங்களுக்கு ஈழத் தமிழர்களின் நட்பு அதிகம்... அவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? &lt;/b&gt;<br />
<br />
இணைய தளத்தில் என் கட்டுரைகளைப் படித்து, நண்பர்கள் ஆனவர்கள் நிறையப் பேர். அவர்களின் வாழ்வு துயரமானது. நிறையச் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால், தங்கள் தாய் மண்ணில் போய் ஒரு பிடி சோறு சாப்பிட முடியலையே என்கிற துயரம் எப்பவும் அடிமனதில் அழுத்திட்டே இருக்கு. எனக்குச் சொந்த மண், மொழின்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிலப்பரப்பு எல்லாம் என்னோடதுதான்னு நினைப்பேன். ஆனால், சொந்த மண்ணே மறுக்கப்படுகிறபோது வருகிற சோகம் வேறு. அதை அனுதினமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். <br />
<br />
இன்னொரு பக்கம், ஷோபா சக்தி மாதிரி உக்கிரமான படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். இங்கே தமிழ் தமிழ் என்று கத்திட்டு, படப் பெயரை மாற்றச் சொல்லி, டாடா சுமோக்களில் போய்ப் போராட்டம் நடத்துபவர்களை விடஇ அவர்கள் பல மடங்கு நம்பகமானவர்கள். அன்னிக்குப் பார்க்கிறேன்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் &lt;b&gt;அண்ணைத் தமிழ் வாழ்க!னு&lt;/b&gt; மூணு சுழி &lt;b&gt;'ண'&lt;/b&gt; போட்டு எழுதி இருக்காங்க. இதுதான் இங்கே அரசியல்! இதுதான் நம்ம சமூகம்! <br />
<br />
ஃப்ரான்ஸ்தான் என் கனவு தேசம். அங்கே ஒரே தெருவில் தேவாலயம், ஸ்கூல், செக்ஸ் ஷாப் எல்லாம் இருக்கு. ஆனால், எதுவும் எதுவாலும் டிஸ்டர்ப் ஆவதில்லை. அது மாதிரி ஒரு சூழல் வரும்போதுதான் இந்தியா உருப்படும்! <br />
  <br />
நன்றி:விகடன் / ராஜுமுருகன்<br />
படங்கள்: புதுவை இளவேனில்.&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:red'&gt;சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு!  <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p37.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
அக்பர், அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட சாமியார்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும்! <br />
 <br />
என் சக படைப்பாளிதான்... காரசாரமா பேசிட்டு இருந்தோம். திடீர்னு ஆவேசமாகி, என் முகத்தில் குத்திட்டான். என் கண்ணு கலங்கிப்போச்சு. அப்படியே கன்னம் கிழிஞ்சு, ஒரு பல் உடைஞ்சு ரத்தம் வழிய நிக்கிறேன். என்ன பண்றது? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p38a.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்னு சொன்னாரே வள்ளலார்... அதுதானே படைப்பு மனம்... அதுதானே மனுஷத்தனம். நமக்குள் எதுக்கு இந்த வன்மம்?&lt;/b&gt; <br />
<br />
இங்கே அரசியல் சினிமா இலக்கியம்னு அத்தனையிலும் நடக்கிற குரூர, அபத்த நாடகங்களுக்கு நான் ஒரு சாட்சிக்காரன். அதுக்கு அடையாளமா இந்த தழும்பும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்!ரூ சச்சின் டென்ஷனாகிற நேரம் பார்த்து ஷேன் வார்னே பந்து வீச வந்தால், பறக்குமே சிக்ஸர்கள்... அப்படி சாரு நிவேதிதா பேச ஆரம்பித்தாலே பரபரப்புதான்! <br />
<br />
கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால்இ தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்... சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். ஒரு மழை இரவில் நடந்தது இந்தச் சந்திப்பு... <br />
<br />
தமிழ் இலக்கியச் சூழல் இப்போ மோசமா இருக்கு. பாரதி மாதிரி, ப.சிங்காரம் மாதிரி தீவிரமாகவும் உலகத் தரத்திலும் இயங்கக்கூடிய படைப்பாளிகள் ரொம் பவே குறைந்து விட்ட னர். கவிதைகளில் தருமு.சிவராமுக்குப் பிறகு அவ்வளவு உக்கிரமாக, பித்த நிலையில் எழுத ஆட்கள் இல்லை. உரை நடையில் அசோகமித் திரன் அளவுக்கு எழுதும் படைப்பாளி யைத் தேட வேண்டி இருக்கிறது. ஒரு சில பேர் இருந்தாலும், அவர்களும் பரவலாக அறியப் படாமல் வட்டத் துக்குள்தான் வாழ்கிறார்கள். <br />
<br />
பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா... தன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவிக்க உத்தரவிட்டவர். ஆனால்இ அவர் பிரமாதமான எழுத்தாளர். 'தி ரியல் ஸ்டோரி ஆஃப் அலெக்சான்ட்ரா மாய்தா' என்கிற அவருடைய நாவல், ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய ஆக அற்புதமான படைப்பு. ஓர் எழுத்தாளராக அவரை நான் கொண்டாடுவேன். அப்படிக்கூட இங்கே பலரைக் கொண்டாட முடியாதே! <br />
<br />
லக்ஷ்மி மணிவண்ணன், அழகிய பெரியவன், என்.டி.ராஜ்குமார் எனச் சிலர் சொல்கிற மாதிரி எழுதுகிறார்கள். மாலதி மைத்ரி எழுத்துக்களில் ஒரு தெறிப்பு இருக்கு. ஆனாலும், உலகத் தரத்தில் எழுத யாரும் இல்லை. என் எழுத்துக்கள் உலகத் தரத்துக்கானவை. அதற்கான வாசிப்பும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. மலையாளத்திலும் வெளிநாடுகளிலும் என்னைக் கொண்டாடுகிறார்கள். அங்கே எல்லாம், நம்ம ஊரில் ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற மரியாதையும் வரவேற்பும் எனக்குக் கிடைக்கின்றன. ஆனால் இங்கே என்னை எவ்வளவு பேருக்குத் தெரியும்? எழுத்தாளனை மதிக்காத கொண்டாடாத ஒரு சமூகம் எப்படி உருப்படும்..? <br />
<br />
&lt;b&gt;சிறு பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது? &lt;/b&gt;<br />
<br />
உண்மையில் இங்கே உள்ள பல எழுத்தாளர்கள், சாமான்யர்களைவிட கட்டுப் பெட்டிகளாக பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள். ஜாதிய மனோபாவம் சிறு பத்திரிகை உலகிலும் பரவிக் கிடக்கிறது. <br />
<br />
விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் வக்கீல் நோட்டீஸி லிருந்து அடியாள் அனுப்புவது வரையான ஆபத்துக்கள் நடக்கின்றன. உச்சகட்டமாக கும்பலாக வந்து நேரடியாகவே தாக்குகிறார்கள். உனக்கும் எனக்கும் நடுவிலேயே கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால், சமூகத்தில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? <br />
<br />
அப்புறம், கோஷ்டிப் பூசல்... ஆளாளுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக்கொண்டு பண்ணுகிற கோமாளித் தனங்கள். என்னை ஒரு மலையாள பத்திரிகையில் பேட்டி எடுக்க இருந்தால், சாருவா... அவனெல்லாம் ஒரு எழுத்தாளனே இல்லை. குப்பை! என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் போகிறது. இந்த மாதிரியான கோஷ்டிப் பூசல்களால்தான், தகுதியானவர்களுக்கு வர வேண்டிய விருதுகளும் கிடைக்காமல் போகின்றன. 'இவருக்கு விருது கொடுத்தால் சண்டை வரும். அவருக்குக் கொடுத்தால் வம்பு' என்று கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் நம் படைப்புகள் வேறு மொழிகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. அரசியலைக் குறைத்து அவரவர் படைப்பில் கவனம் செலுத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு நல்லது நடக்கும். <br />
<br />
இன்னொரு பக்கம் ஆரோக்கியமாவும் இருக்கு. பல்கலைக்கழகங்களோ, அரசியல் இயக்கங்களோ, அரசாங்கமோ, சினிமாவோ, வெகு ஜனப் பத்திரிகைகளோ தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சிற்றிதழ்களாலும் சிற்றிதழ் எழுத்தாளர்களாலும்தான் அது நடக்கிறது... தொடர்ந்து நடக்கும்! <br />
<br />
&lt;b&gt;பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பாலுணர்வு தூக்க லாக இருக்கின்றன என்பது மாதிரி யான சர்ச்சைகள்இ அவர்களின் படைப் புச் சுதந்திரத்தை பாதிக்கும்தானே? &lt;/b&gt;<br />
<br />
முதலில் பெண் படைப்பாளிகளின் எழுத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகச் சொல்வது யார் தெரியுமா? நம் திரைப்படப் பாடலாசிரியர்கள். இந்த மாதிரி உலக காமெடி எல்லாம் இங்கேதான் நடக்கும். அதை விட்டுத் தள்ளுங்க. உடலைப் பற்றி, காமத்தைப் பற்றி இன்னும் ஆழமாக வலிமையாக எழுதப் பெண் படைப்பாளிகள் முன்வர வில்லை என்பதுதான் என் ஆதங்கம். <br />
<br />
நோபல் பரிசு வாங்கின ஆஸ்திரியா நாட்டு பெண் எழுத்தாளர் எல்ஃப்ரிட் ஜெலினெக் எழுதிய பியானோ டீச்சர் என்கிற நாவலைப் படியுங்கள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல் வேட்கையைஇ காமத்தை அடிச்சு நகர்த்தி இருப்பார். நாவல் வந்ததும் அது என் சொந்த அனுபவங்கள்தான் என்று துணிச்சலாகச் சொன்னார். அந்த உண்மையில், உக்கிரத்தில் ஒரு சதவிகிதம்கூட இங்கே இல்லை. உடல் எவ்வளவு மகத்தான விஷயம்... அதைக் கொண்டாட வேண்டாமா? <br />
<br />
தமிழில் இப்போது பாலுணர்வு பற்றி எழுதுபவர்களில் முக்கியமான ஆள் நான்தான். என் எழுத்துக்களைப் பற்றி இதுவரை எந்த பெண் படைப்பாளியும் கருத்து சொன்னதாகவோ, விவாதித்ததாகவோ விமரிசனம் பண்ணியதாகவோ எனக்குத் தெரியவில்லை. என் எழுத்தை அவர்கள் வாசித்திருப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பு கிடையாது. இன்னும் கட்டுமானங்களை, கட்டுப்பாடுகளை முழுதாக உடைக்க முன்வராவிட்டால், அப்புறம் எப்படி ஜெலினெக் மாதிரியெல்லாம் எழுத முடியும்? <br />
<br />
&lt;b&gt;சரி, குஷ்பு பேசிய கற்பு பிரச்னை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?&lt;/b&gt; <br />
<br />
கற்பாவது மண்ணாங்கட்டியாவது! இதை பெரியார் எப்பவோ சொல்லிட்டார். அந்தப் பெரியார் வழியில் வந்த தம்பிகள்தான் இன்னிக்கு தாம்தூம்னு குதிக்கிறாங்க. இவங்க சொல்ற கற்பு என்ன? ராமன்-சீதா மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி. ஆனால், நம் தலைவர்கள் எத்தனை பேர் அப்படி இருக்காங்க? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p44.jpg' border='0' alt='user posted image'&gt;நீங்க ஒரே ஒரு நாள் ஃபேமிலி கோர்ட்டுக்கு போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தீங்கன்னா தெரியும்... நம்ம தேசம் எப்படி இருக்குன்னு? விவாகரத்து கேட்டு வருகிற பல தம்பதி களுக்கு இருக்கிற பிரச்னையே என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்கு, கணவனுக்கு இன்னொருத்தியுடன் காதல் இருக்கு என்பது மாதிரிதான். நீங்க காட்டுக் கத்தா கத்துகிற கற்பு எங்கே போச்சு? அப்புறம் ப்ரீரூமேரிடல் செக்ஸ். கல்யாணத்துக்கு முன்னாடி யார் யாருடன் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்த விஷயம். யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. உறவுகளில் பாதுகாப்பாக இருக் கணும். அவ்வளவுதான் விஷயம்! அது பற்றிய பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பற்றி யாரும் பதறக் காணோம். போராடக் காணோம். சும்மா கற்பு ஒழுக்கம்னு கத்திட்டே இருக்கிற நம் நாட்டில்தான் கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. செக்ஸின் தலைமையிடம்னு சொல்லப்படுகிற தாய் லாந்தில் கற்பழிப்பு என்பதே இல்லை. அப்ப என்ன கற்பு... கருமம்னுக்கிட்டு? <br />
<br />
திருமாவளவன் டெக்கான் கிரானிகல் இங்கிலீஷ் பேப்பரில் கற்பைப் பற்றி முற்போக்காகப் பேட்டி தருகிறார். இன்னொரு பக்கம் அவர் கட்சிக்காரர்கள் கையில் விளக்கு மாறுடன் கழுதைகளுடன் குஷ்பு வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதான் இங்கே இவங்க அரசியல். <br />
<br />
கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டாங்களாம்... ஆளாளுக்கு செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது கொடும்பாவி கொளுத்துவது என காமெடி நாடகம் நடத்துகிறார்கள். குஷ்பு அப்படி அந்தப் பத்திரிகையில் என்ன பேசினார் என்பதே பலருக்கு சரியா தெரியாது. <br />
<br />
உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து. ஆனால் இங்கே நம் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சமூகத்தையே ரௌடிக் கூட்டமாக மாத்தி வெச்சிருக்காங்க. கொடும் பாவியைக் கொளுத்துகிறவன் நாளைக்கு உயிரோடவும் கொளுத்து வான்... பஸ்ல பிள்ளைங்களை உயிரோட எரிச்சாங்களே அப்படி நடக்கும்! <br />
<br />
அதுக்காக நான் குஷ்புவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அது தனிக் கச்சேரி. அந்தப் பேட்டியில் குஷ்பு பேசின அத்தனையும் உளறல். குஷ்பு மாதிரி நடிகைகள் எல்லாம் தொழிலதிபர்கள். லட்ச லட்சமா பணம் பார்க்கிறவர்கள். அவங்களுக்கு மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. இப்பவும் சாந்தி தியேட்டர் எதிரே தன் பிள்ளைக்குச் சாப்பாடு வாங்குகிற காசுக்காக உடம்பை வித்து வாழ்கிறார்களே.. அவங்களுக்காகப் போராட நான் ரெடி. குஷ்புவுக்காக நான் எதுக்குப் போராடணும்? <br />
<br />
அது இருக்கட்டும், இது மாதிரியான பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருந்த தங்கர்பச்சானின் பேச்சு இருக்கே... அதையும் கண்டிக்கணும். அதுவும் கேவலம் அறுநூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு சிகை அலங்கார நிபுணரெல்லாம் ஷ¨ட்டிங்கை நிறுத்துறாங்கனு ஒரு தொழிலாளியையும் அவங்க வாங்குகிற கூலியையும் கேவலப்படுத்திப் பேசினார் பாருங்க... அதுக்குத்தான் போராடணும். தங்கர்பச்சான் _ குஷ்பு பிரச்னைகள் தமிழ்நாட்டின் பிரச்னையா என்ன... இது சும்மா, பேயும் பிசாசும் அடிச்சுக்குது! <br />
<br />
கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆரம்பிச்சு ஓட்டல் களில் நள்ளிரவு நடனம் ஆடக் கூடாது என்பது வரை கலா சாரக் காவல் எண்ணத்தோடு அரசியல் கட்சிகளும்இ கல்வித் துறையும் காவல் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா? <br />
<br />
காட்டுமிராண்டித்தனம்! நம்ம தேசத்தில்தாங்க நடக்குது இவ்வளவு கூத்தும்! இங்கே பொது இடங்களில் சிகரெட் விற்கலாம். ஆனால்இ புகைக்கக் கூடாது. 11 மணிக்கு ஓட்டல் பார்களை மூடிவிட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் டாஸ்மாக் மட்டும் 12 மணி வரை விற்கலாம். சிகரெட், சாராயத்தை விற்க, அரசாங்கமே அனுமதிக்கும். ஆனால், சினிமாவில் மட்டும் இவை இரண்டுமே காட்டக் கூடாது. <br />
<br />
அதே போல, கல்லூரிகளிலும், பகலைக்கழகங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் கோமாளிக் கூத்து. ஆட்சி அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கிற வாக்கு அளிக்கும் வயதும் உரிமையும் உள்ள மாணவர் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p42a.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
கல்விக்கூடங்கள் என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கே இருந்துதான் சிறந்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் தலைவர் களும் உருவாகி வருகிறார்கள். அவர்களை அடிமைக் கூட்டமாக ஆக்க ஆசைப்பட்டால், இனி வரும் காலங்களில் ஒரு நல்ல மாணவனையோ, மனிதனையோ சமூகத்துக்கு உருவாக்கித் தர முடியாது. <br />
<br />
அப்புறம், இந்த ஹோட்டல் விவகாரம். ரோட்ல டான்ஸ் ஆடினா பிடிங்க... அது த்ரிஷாவா இருந்தா மன்னிச்சு விட்ருவீங்க. ஆனா, நட்சத்திர ஹோட்டலுக்குள் நாலு சுவத்துக்குள் நடனம் ஆடினால் தவறாம். சொல்லப் போனால்இ அது ஒருவரது பிரைவஸிக்குள் அத்துமீறல் என்று காவல்துறை மீதும் மீடியா மீதும் மான நஷ்ட வழக்கே போடலாம். <br />
<br />
ஆனால், அதே நட்சத்திர ஓட்டல் களுக்குள் வேறு ஒரு அநியாயம் நடக்கிறது. சமீபத்தில், நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு... அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்! <br />
<br />
&lt;b&gt;விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்காரே...&lt;/b&gt; <br />
<br />
செம காமெடி! ஏன் அரசியலுக்கு வந்தீங்க?னு ஒரு கேள்விக்கு, அவர் சொல்ற பதில், நான் சின்ன வயசிலேருந்தே சமூக சேவை செஞ்சிருக்கேன். இப்பவும் தையல் மெஷினெல்லாம் குடுக்கிறேன், என்கிறார். நான்கூடத்தான் பீச்சுக்குப் போறேன்... பிச்சை போடறேன். அதுக்காக அரசியலுக்கு வந்திடலாமா? <br />
<br />
சினிமாவால் சமூகத்தைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ அரசியலுக்கும் வர்றாங்க. ரஜினிக்கு ஆன்மிகம் மாதிரி, விஜயகாந்துக்கு அரசியல். பல கோடிகளைப் பத்திரமா பேங்க்ல டெபாஸிட் பண்ணிட்டு, இமயமலைக்கு ட்ரிப் அடிக்கிறது எவ்வளவு சூப்பர் ஆன்மிகம்! <br />
<br />
துறவின்னா யாரு... காமம், போகம், யோகம் எல்லாத்தையும் தாண்டி அதிகாரத்தையும் துறக்கணும். ஆனால் துறவி என்கிற பெயரில், ஜனாதிபதியையும் நீதிபதிகளையும் வந்து வாசலில் நின்னு பார்க்க வெச்சு, அதிகாரத்தை நிறுவுகிறவர்கள்தானே இங்கே துறவி! அரசியல், ஆன்மிகம் இலக்கியம்னு அத்தனையும் கெட்டுக் கிடக்கிற சமூகத்தில், விஜயகாந்த் அரசியலுக்கு வருவதா ஆச்சரியம்? <br />
<br />
&lt;b&gt;பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே... &lt;/b&gt;<br />
<br />
அக்பர் வரலாறு... அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட தமிழகத்தின் சாமியார்கள், பெரிய மனிதர்கள் அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும். புண்ணியம்  மீடியாவுக்கு! <br />
&lt;img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p46.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
மனைவியுடன்... <br />
<br />
<br />
நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கே யாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள். <br />
<br />
அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி வரை நடக்கும் அத்தனை விவகாரமுமே நம் சமூகத்தின் சாம்பிள்கள் தான். என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தறே... உன்னை கால்ல போட்டு மிதிச்சுக் காட்டறேன் பார்னு ஒரு பெண் கிளம்பினால் என்னவாகும் என்பதற்கு ஜீவஜோதி முதல் ஜெயலட்சுமிவரை உதாரணங்கள் இங்கே அதிகம்! <br />
<br />
&lt;b&gt;உங்களுக்கு ஈழத் தமிழர்களின் நட்பு அதிகம்... அவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது? &lt;/b&gt;<br />
<br />
இணைய தளத்தில் என் கட்டுரைகளைப் படித்து, நண்பர்கள் ஆனவர்கள் நிறையப் பேர். அவர்களின் வாழ்வு துயரமானது. நிறையச் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால், தங்கள் தாய் மண்ணில் போய் ஒரு பிடி சோறு சாப்பிட முடியலையே என்கிற துயரம் எப்பவும் அடிமனதில் அழுத்திட்டே இருக்கு. எனக்குச் சொந்த மண், மொழின்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிலப்பரப்பு எல்லாம் என்னோடதுதான்னு நினைப்பேன். ஆனால், சொந்த மண்ணே மறுக்கப்படுகிறபோது வருகிற சோகம் வேறு. அதை அனுதினமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். <br />
<br />
இன்னொரு பக்கம், ஷோபா சக்தி மாதிரி உக்கிரமான படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். இங்கே தமிழ் தமிழ் என்று கத்திட்டு, படப் பெயரை மாற்றச் சொல்லி, டாடா சுமோக்களில் போய்ப் போராட்டம் நடத்துபவர்களை விடஇ அவர்கள் பல மடங்கு நம்பகமானவர்கள். அன்னிக்குப் பார்க்கிறேன்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் &lt;b&gt;அண்ணைத் தமிழ் வாழ்க!னு&lt;/b&gt; மூணு சுழி &lt;b&gt;'ண'&lt;/b&gt; போட்டு எழுதி இருக்காங்க. இதுதான் இங்கே அரசியல்! இதுதான் நம்ம சமூகம்! <br />
<br />
ஃப்ரான்ஸ்தான் என் கனவு தேசம். அங்கே ஒரே தெருவில் தேவாலயம், ஸ்கூல், செக்ஸ் ஷாப் எல்லாம் இருக்கு. ஆனால், எதுவும் எதுவாலும் டிஸ்டர்ப் ஆவதில்லை. அது மாதிரி ஒரு சூழல் வரும்போதுதான் இந்தியா உருப்படும்! <br />
  <br />
நன்றி:விகடன் / ராஜுமுருகன்<br />
படங்கள்: புதுவை இளவேனில்.&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>