<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - கதைகள்/நாடகங்கள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:08:05 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[மௌனத்தின் எல்லையிலே...!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=416</link>
			<pubDate>Tue, 28 Mar 2006 21:25:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=416</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;மௌனத்தின் எல்லையிலே &lt;/b&gt;<br />
  <br />
வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.<br />
பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் கணவனின் குறட்டை ஒலி வேறு அவளுக்கு இடையூறாக இருந்தது. தன் வீட்டை நினைந்து பார்த்தாள். ஒவ்வொரு நாளும் தவறாமல் மாலை கட்டிக்கொண்டுபோய்ப் போட்ட பிள்ளையாரை நினைத்தாள். கடவுளே ,து உனக்கே ஞாயமா? உன்னைக் கையெடுத்துக் கும்பிட விடாமல் இப்படித் தவிக்க விட்டு விட்டாயே என்று மனத்திற்குள் பலவற்றையும் நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருந்தவளை நீண்ட நேரத்தின் பின் நித்திராதேவி மெல்லென அணைத்துக் கொண்டாள்.<br />
<br />
குடியிருந்த வீட்டை விட்டு இரவோடிரவாக கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்களின் பட்டியலில் இவர்களும் அடங்குவர். உறவினரோ ஒவ்வொரு திக்காகப் போய்விட்டனர். க்ஷெல்லடியில் தந்தையையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிட்டாள். அவர்களுடைய இழப்பைத் தாங்காமல் பல நாட்களாக மனத்துள்ளே வெதும்பி நொந்து நொந்து நெக்குருகிக் கொண்டிருந்தாள். இது போன்ற பல சம்பவங்களை அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்ததால் அவள் நெஞ்சமும் கல்லாகிப் போனது போன்ற நிலையிலே தானிருந்தாள். அவள் மனதிலே ஏதோ ஓர் உண்மை புலனாகியது. அந்த உண்மை அடிக்கடி அவளை எப்போ எங்களுக்கும் அக்கதி என்று ஏங்க வைப்பது போலிருந்தது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போன்ற பிரமைதான் தோன்றியது. அவளின் தங்கை ரேணு கனடாவில் இருந்து அனுப்பும் காசு தான் அவர்களுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.<br />
<br />
கனடாவில் ரேணு படும் கஸ்டங்கள் அவர்களுக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. காரணம் அவள் தன் கஸ்டங்கள் எதையுமே அவர்களுக்கு எழுதுவதில்லை. ரேணு சாதாரணமான ஒரு தொழிற்சாலை வேலைதான் செய்கின்றாள். ஒரு வீட்டிலே வாடகைக்கு ஒரு அறை எடுத்து மிக எளிமையாகவே வாழ்கின்றாள். எவ்வளவு செலவுகளைத் தன்னால் கட்டுப் படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கின்றாள். தன்னைத் திருமணம் செய்யவென்று கனடாவிற்கு அழைத்த தன் கணவராகப் போறவரிடம் தன் குடும்பம் எப்போ சந்தோக்ஷமாக பழைய இடங்களிலே போய் இருப்பினமோ அதன் பின் நம் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்று சம்மதம் கேட்டாள். ஆனால் நாளாக நாளாக அவரின் போக்குகளை அவதானித்தவள் அவரிற்கு ஏற்கனவே இங்கு குடும்பம் இருப்பதை அறிந்தாள். தாங்கொணாத் துயருற்றாள். ஈற்றில் தெளிந்தவளாக தன் குடும்பத்திற்கு உதவுவதே தன் நோக்கமாக உழைத்து வந்தாள். இருந்தபோதும் அவளால் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமாகவேயிருந்தது. ஏதோ தன்னாலியன்றதை அந்த அகதிக் குடும்பத்திற்குச் செய்தே வருகின்றாள். இம்முறை தொழிற்சாலையில் அடிக்கடி லீவுகள் தந்தமையால் அவளால் நேரத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அவர்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்துக் கவலைப்பட்டாள்.<br />
<br />
முதற் கோழி கூவிய சத்தம் கேட்டு எழுந்த சுந்தரம் இங்கேருமப்பா சரசு எழும்பல்லியே கோழியெல்லே கூவிட்டுது. நேரத்துக்குப் போனால் தானே ஏதும்.. என்று இழுத்தவர் என்ன நினைத்தாரோ நான் போகட்டே என்று கேட்டார். கணவரின் குரல் கேட்ட சரசு சடக்கென எழுந்தாள். அடுப்பிற்குள்ளிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுச் சப்பினாள். பின் தன் கை விரலினால் பற்களை நன்கு அவசர அவசரமாகத் தேய்த்தாள். ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அதில் வாய் கொப்பளித்து முகத்தையும் கழுவினாள். தன் சேலைத் தலைப்பிலேயே முகத்தையும் துடைத்தவள் தன் தலையை விரித்து கைகளினால் கோதியபின் ஒருமுறை தன் கூந்தலை உதறிவிட்டு மீண்டும் தன் கூந்தலை அள்ளி முடிந்தாள். வீட்டிற்குள் உடைகள் போடவெனக் கட்டப்பட்டிருந்த கயிற்றிலிருந்த ஒரு சேலையை எடுத்து தன் தலை, கைகள் யாவற்றையும் ழூடியபடி தன் இடுப்பிலிருந்த காசு முடிச்சையும் ஒரு முறை தடவிப் பார்த்தபடி விரைந்து நடையைக் கட்டினாள். மார்கழிப் பனியால் இலைகள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த் துளிகள் விழுந்தன. அவை ஒருவிதமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. முன்னர் சிறுமியாக இருக்கும் போது அவளுக்கு இந்த பனித்துளிகள் இலையின் விளிம்புகளிலே வந்து விழ ஆயத்தமாக இருப்பதும் மரங்களின் கீழே யாராவது வந்தால் அந்த மரங்களை ஆட்டிவிட அதிலிருந்து விழுந்த அந்தப் பனித் துளிகளில் நனைந்து கூச்சலிட்ட பொழுதுகள் புல் நுனிகளிலே தேங்கி நிற்கும் முத்துப் போன்ற பனித்துளிகளை அவள் ரசித்த பொழுதுகள் ஏராளம். ஆனால் இன்று அவை பற்றிய நினைவுகளே இல்லாமல் ஓட்டமும் நடையுமாக விரைகின்றாள். தானும் ஒரு றாத்தல் பாண் வாங்கி விட வேண்டும் என்ற உந்துதலால்.<br />
<br />
ஏற்கனவே நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டாள். அருகில் நின்றவர்களோ அறிமுகமற்றவர்கள். எனவே மெளனமாக நின்றாள். இருந்தும் அவள் மனமோ தன் முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்குப் பார்த்தது. பின் தான் மிகத் தொலைவில் இல்லை என்ற மன ஆறுதலுடன் நின்றுகொண்டு அருகில் நிற்பவர்களின் கதைகளையும் காதில் விழுத்திக் கொண்டாள்.<br />
<br />
வீட்டிற்குத் திரும்பி வரும்போது பொழுது பொல பொலவெனப் புலர்ந்திருந்தது. கதிரவனோ தன் பொற் கிரகணங்களைத் தன்னிச்சையாக நாற்றிசையும் பரவியிருந்தான். மரங்களில் இருந்த பனித் துளிகள் அவன் வெம்மை தாங்காது நிலத்திலே சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தன. இலைகளினுர்டாக கதிரொளி கீறல்களாக விழுந்து கொண்டிருந்தது.<br />
<br />
அடுப்பிலே தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, காலைத் தேனீருக்காக. ஏனப்பா இப்ப அடுப்பை மூட்டினீர்கள். கொஞ்சம் பொறுத்தெண்டா அந்தச் சூட்டோ டையே பகல் சமையலையும் முடித்திருக்கலாமெல்லே. இன்னொருக்கால் தீக்குச்சு விறகு வீணாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது. வெறுந்தேனீரை ஊற்றி ஒவ்வொருவருவருடைய உள்ளங்கைகளிலும் கரண்டியின் நுனியால் சிறிது சீனியையும் வைத்தாள். பாணை ஐந்து சம அளவு துண்டுகளாக வெட்டினார் சுந்தரம். ஆவலுடன் அவற்றை பிள்ளைகள் இருவரும் பெற்றுக் கொண்டனர். வெறுந் தேநீரிலே தோய்த்து அவற்றைச் சாப்பிட்டனர். சரசுவின் அம்மா பாக்கியமோ ரேணுவை வைதபடியே இருந்தார். அவளின்ர கடிதம் வந்து இப்ப எவ்வளவு நாளாகுது. அவளுக்கு நாங்கள் படும் கஸ்டங்கள் தெரிந்திருந்தும் இப்படி நடக்கிறாளே என்றார். அவர் வார்த்தைகளிலே இன்றாவது ரேணுவின் பணம் வராதா என்ற ஆதங்கம் தொனித்தது.<br />
<br />
அடுப்பிலே சிறிதளவு அரிசியைப் போட்டு உப்புக் கஞ்சி காச்சி நாவிலே பூச என்று உறைப்பாக வெறும் மிளகாயை அரைத்து உப்பும் புளியும் சேர்த்தாள். தன் வேலைகள முடிந்துவிட்டதால் தன் தாயாருடன் திண்ணையில் வந்து அமர்ந்தாள் சரசு. அவளின் உள் மனமும் ரேணுவின் கடிதத்திற்காய் ஏங்கியது.<br />
<br />
நானொருக்கால் உதில போட்டு வாறன் என்றுவிட்டு ரேணுவின் கடிதம் வந்திராதா என்ற ஆவல் மேலிட கடிதம் பார்க்கப் புறப்பட்டுப் போனார் சுந்தரம்.<br />
<br />
நினைவலைகள் நீண்டங்கே<br />
நெடுமூச்சுக்கள் வந்தன<br />
கவலைகள் சூழ்ந்தங்கே<br />
கண்ணீர் மழை பொழிந்தன<br />
வெதும்பிய நெஞ்சமதில்<br />
விம்மல்கள் வெடித்தன<br />
வார்த்தைகள் வர மறுத்ததால்<br />
மெளனமே சூழ்ந்ததங்கு <br />
<br />
எழுதியவர் - நளினி மகேந்திரன்<br />
நன்றி எழில்நிலா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;மௌனத்தின் எல்லையிலே &lt;/b&gt;<br />
  <br />
வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.<br />
பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் கணவனின் குறட்டை ஒலி வேறு அவளுக்கு இடையூறாக இருந்தது. தன் வீட்டை நினைந்து பார்த்தாள். ஒவ்வொரு நாளும் தவறாமல் மாலை கட்டிக்கொண்டுபோய்ப் போட்ட பிள்ளையாரை நினைத்தாள். கடவுளே ,து உனக்கே ஞாயமா? உன்னைக் கையெடுத்துக் கும்பிட விடாமல் இப்படித் தவிக்க விட்டு விட்டாயே என்று மனத்திற்குள் பலவற்றையும் நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருந்தவளை நீண்ட நேரத்தின் பின் நித்திராதேவி மெல்லென அணைத்துக் கொண்டாள்.<br />
<br />
குடியிருந்த வீட்டை விட்டு இரவோடிரவாக கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்களின் பட்டியலில் இவர்களும் அடங்குவர். உறவினரோ ஒவ்வொரு திக்காகப் போய்விட்டனர். க்ஷெல்லடியில் தந்தையையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிட்டாள். அவர்களுடைய இழப்பைத் தாங்காமல் பல நாட்களாக மனத்துள்ளே வெதும்பி நொந்து நொந்து நெக்குருகிக் கொண்டிருந்தாள். இது போன்ற பல சம்பவங்களை அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்ததால் அவள் நெஞ்சமும் கல்லாகிப் போனது போன்ற நிலையிலே தானிருந்தாள். அவள் மனதிலே ஏதோ ஓர் உண்மை புலனாகியது. அந்த உண்மை அடிக்கடி அவளை எப்போ எங்களுக்கும் அக்கதி என்று ஏங்க வைப்பது போலிருந்தது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போன்ற பிரமைதான் தோன்றியது. அவளின் தங்கை ரேணு கனடாவில் இருந்து அனுப்பும் காசு தான் அவர்களுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.<br />
<br />
கனடாவில் ரேணு படும் கஸ்டங்கள் அவர்களுக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. காரணம் அவள் தன் கஸ்டங்கள் எதையுமே அவர்களுக்கு எழுதுவதில்லை. ரேணு சாதாரணமான ஒரு தொழிற்சாலை வேலைதான் செய்கின்றாள். ஒரு வீட்டிலே வாடகைக்கு ஒரு அறை எடுத்து மிக எளிமையாகவே வாழ்கின்றாள். எவ்வளவு செலவுகளைத் தன்னால் கட்டுப் படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கின்றாள். தன்னைத் திருமணம் செய்யவென்று கனடாவிற்கு அழைத்த தன் கணவராகப் போறவரிடம் தன் குடும்பம் எப்போ சந்தோக்ஷமாக பழைய இடங்களிலே போய் இருப்பினமோ அதன் பின் நம் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்று சம்மதம் கேட்டாள். ஆனால் நாளாக நாளாக அவரின் போக்குகளை அவதானித்தவள் அவரிற்கு ஏற்கனவே இங்கு குடும்பம் இருப்பதை அறிந்தாள். தாங்கொணாத் துயருற்றாள். ஈற்றில் தெளிந்தவளாக தன் குடும்பத்திற்கு உதவுவதே தன் நோக்கமாக உழைத்து வந்தாள். இருந்தபோதும் அவளால் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமாகவேயிருந்தது. ஏதோ தன்னாலியன்றதை அந்த அகதிக் குடும்பத்திற்குச் செய்தே வருகின்றாள். இம்முறை தொழிற்சாலையில் அடிக்கடி லீவுகள் தந்தமையால் அவளால் நேரத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அவர்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்துக் கவலைப்பட்டாள்.<br />
<br />
முதற் கோழி கூவிய சத்தம் கேட்டு எழுந்த சுந்தரம் இங்கேருமப்பா சரசு எழும்பல்லியே கோழியெல்லே கூவிட்டுது. நேரத்துக்குப் போனால் தானே ஏதும்.. என்று இழுத்தவர் என்ன நினைத்தாரோ நான் போகட்டே என்று கேட்டார். கணவரின் குரல் கேட்ட சரசு சடக்கென எழுந்தாள். அடுப்பிற்குள்ளிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுச் சப்பினாள். பின் தன் கை விரலினால் பற்களை நன்கு அவசர அவசரமாகத் தேய்த்தாள். ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அதில் வாய் கொப்பளித்து முகத்தையும் கழுவினாள். தன் சேலைத் தலைப்பிலேயே முகத்தையும் துடைத்தவள் தன் தலையை விரித்து கைகளினால் கோதியபின் ஒருமுறை தன் கூந்தலை உதறிவிட்டு மீண்டும் தன் கூந்தலை அள்ளி முடிந்தாள். வீட்டிற்குள் உடைகள் போடவெனக் கட்டப்பட்டிருந்த கயிற்றிலிருந்த ஒரு சேலையை எடுத்து தன் தலை, கைகள் யாவற்றையும் ழூடியபடி தன் இடுப்பிலிருந்த காசு முடிச்சையும் ஒரு முறை தடவிப் பார்த்தபடி விரைந்து நடையைக் கட்டினாள். மார்கழிப் பனியால் இலைகள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த் துளிகள் விழுந்தன. அவை ஒருவிதமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. முன்னர் சிறுமியாக இருக்கும் போது அவளுக்கு இந்த பனித்துளிகள் இலையின் விளிம்புகளிலே வந்து விழ ஆயத்தமாக இருப்பதும் மரங்களின் கீழே யாராவது வந்தால் அந்த மரங்களை ஆட்டிவிட அதிலிருந்து விழுந்த அந்தப் பனித் துளிகளில் நனைந்து கூச்சலிட்ட பொழுதுகள் புல் நுனிகளிலே தேங்கி நிற்கும் முத்துப் போன்ற பனித்துளிகளை அவள் ரசித்த பொழுதுகள் ஏராளம். ஆனால் இன்று அவை பற்றிய நினைவுகளே இல்லாமல் ஓட்டமும் நடையுமாக விரைகின்றாள். தானும் ஒரு றாத்தல் பாண் வாங்கி விட வேண்டும் என்ற உந்துதலால்.<br />
<br />
ஏற்கனவே நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டாள். அருகில் நின்றவர்களோ அறிமுகமற்றவர்கள். எனவே மெளனமாக நின்றாள். இருந்தும் அவள் மனமோ தன் முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்குப் பார்த்தது. பின் தான் மிகத் தொலைவில் இல்லை என்ற மன ஆறுதலுடன் நின்றுகொண்டு அருகில் நிற்பவர்களின் கதைகளையும் காதில் விழுத்திக் கொண்டாள்.<br />
<br />
வீட்டிற்குத் திரும்பி வரும்போது பொழுது பொல பொலவெனப் புலர்ந்திருந்தது. கதிரவனோ தன் பொற் கிரகணங்களைத் தன்னிச்சையாக நாற்றிசையும் பரவியிருந்தான். மரங்களில் இருந்த பனித் துளிகள் அவன் வெம்மை தாங்காது நிலத்திலே சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தன. இலைகளினுர்டாக கதிரொளி கீறல்களாக விழுந்து கொண்டிருந்தது.<br />
<br />
அடுப்பிலே தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, காலைத் தேனீருக்காக. ஏனப்பா இப்ப அடுப்பை மூட்டினீர்கள். கொஞ்சம் பொறுத்தெண்டா அந்தச் சூட்டோ டையே பகல் சமையலையும் முடித்திருக்கலாமெல்லே. இன்னொருக்கால் தீக்குச்சு விறகு வீணாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது. வெறுந்தேனீரை ஊற்றி ஒவ்வொருவருவருடைய உள்ளங்கைகளிலும் கரண்டியின் நுனியால் சிறிது சீனியையும் வைத்தாள். பாணை ஐந்து சம அளவு துண்டுகளாக வெட்டினார் சுந்தரம். ஆவலுடன் அவற்றை பிள்ளைகள் இருவரும் பெற்றுக் கொண்டனர். வெறுந் தேநீரிலே தோய்த்து அவற்றைச் சாப்பிட்டனர். சரசுவின் அம்மா பாக்கியமோ ரேணுவை வைதபடியே இருந்தார். அவளின்ர கடிதம் வந்து இப்ப எவ்வளவு நாளாகுது. அவளுக்கு நாங்கள் படும் கஸ்டங்கள் தெரிந்திருந்தும் இப்படி நடக்கிறாளே என்றார். அவர் வார்த்தைகளிலே இன்றாவது ரேணுவின் பணம் வராதா என்ற ஆதங்கம் தொனித்தது.<br />
<br />
அடுப்பிலே சிறிதளவு அரிசியைப் போட்டு உப்புக் கஞ்சி காச்சி நாவிலே பூச என்று உறைப்பாக வெறும் மிளகாயை அரைத்து உப்பும் புளியும் சேர்த்தாள். தன் வேலைகள முடிந்துவிட்டதால் தன் தாயாருடன் திண்ணையில் வந்து அமர்ந்தாள் சரசு. அவளின் உள் மனமும் ரேணுவின் கடிதத்திற்காய் ஏங்கியது.<br />
<br />
நானொருக்கால் உதில போட்டு வாறன் என்றுவிட்டு ரேணுவின் கடிதம் வந்திராதா என்ற ஆவல் மேலிட கடிதம் பார்க்கப் புறப்பட்டுப் போனார் சுந்தரம்.<br />
<br />
நினைவலைகள் நீண்டங்கே<br />
நெடுமூச்சுக்கள் வந்தன<br />
கவலைகள் சூழ்ந்தங்கே<br />
கண்ணீர் மழை பொழிந்தன<br />
வெதும்பிய நெஞ்சமதில்<br />
விம்மல்கள் வெடித்தன<br />
வார்த்தைகள் வர மறுத்ததால்<br />
மெளனமே சூழ்ந்ததங்கு <br />
<br />
எழுதியவர் - நளினி மகேந்திரன்<br />
நன்றி எழில்நிலா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காமம் அதில் காதல் இல்லை..காதல் அதில் காமம் இல்லை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=575</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 04:21:02 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1468">Snegethy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=575</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:blue'&gt;காமம் அதில் காதல் இல்லை<br />
காதல் அதில் காமம் இல்லை<br />
<br />
[size=15]வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,<br />
<br />
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்<br />
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்<br />
"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.<br />
நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க<br />
அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.<br />
"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?<br />
<br />
ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.<br />
எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்கும் போது<br />
"தம்பி இன்னிக்கு வெளிய போரிங்களா எதுனச்சும் வேளை இருக்கா?" என்று அண்ணா கேட்டார் நானும் இல்லை இன்னிக்கு சனிக்கிழமை கோயில் போகனும் அவளோவுதான் என்றேன்.<br />
<br />
"சரி ரெடியா இருங்க நானும் வருகிரறேன்" என்று சொன்னவர் படியிறங்கும் சத்தம் கேட்டது.<br />
சுமார் 30 நிமிட மவுனம் என்னை பித்துபிடிக்க வைத்து விட்டது,கோயிலுக்கு வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் மவுனத்தை கலைப்பதாக என்னி<br />
அந்த நாட்டியகாரி சிலை அழகா இருக்குல்ல நல்ல கலைஞ்சன் செய்து இருக்கனும் போல என்று சொல்ல<br />
அவர் "அதை பார்க்க உனக்கு என்ன தோனுது?" நானும் நல்ல அசைவுகள், அமைப்புகள் உயிரூட்டி பார்த்தால் நிச்சயம் நல்ல அழகான பெண்கிடைப்பாள் என்றேன்.<br />
மீண்டும் அவர் "ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அதான் இப்படி சொல்ர" என்றார்,<br />
நானும் நீங்கள் சொல்லுங்கள் என்றேன் அவரும் தொடர்ந்து எவ்வளவு "களைப்பாக வீட்டுக்கு வந்தாலும் ஒரு முறை சல்லாபம் கொண்டு பிறகு தூங்க போகலாம் நல்ல காமத்தை கிளரும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்"<br />
என சாதாரணமாக சொல்ல நான் இதை ஒத்துக்கெள்ள முடியது பெண் இன்பத்திற்க்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல என்று வாதாட குறுக்கிட்டு அவர்<br />
"இன்னிக்கு உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னுதான் இங்க வந்தேன்" என்று சொல்லி தொண்டை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது முதல் வருடம் நன்றாக இருந்தது பிள்ளை பிறந்தான்,இரண்டாம் வருடம் ஆரம்பித்தது முதல் தன் மாமா புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி,அவள் மாமா முன்பெல்லாம் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டாம் நாள் கிளம்பிவிடுவார் போக போக ஒரு வாரம் தங்கிபோக ஆரம்பித்துவிட்டார்,அவரும் என் மனைவியும் சிரித்து கும்மாளம் தாங்க முடியாமல்தான் மேலே வந்து படுக்குறது,சில நேரம் மகனுக்கு அப்பா நானில்லை என்றுகூட தோன்றும்.அவனும் என்னிடம் ஒட்டுவதே கிடையாது<br />
(இப்படி அவர் அடுக்கிகொண்டே போக எனக்கு தலைசுத்திக்கொண்டு வந்தது உடம்பிற்க்குள் ஒருவித நடுக்கம் வந்து ஆட்டிவிட்டுபோனது)<br />
எத்தனையோ நாட்கள் இந்த கோயில்ல சாமிக்கிட்ட இதபத்தி புலம்பிட்டு போவேன் இருந்தாலும் மனசு தனியாதுப்பா அதனால இன்னிக்கு உன்கிட்ட எல்லத்தையும் கொட்டிட்டேன் சீக்கிரமா இந்த அசிங்கத்துக்கு முடிவுகட்டனும் என்று முடித்தார்.<br />
<br />
நான் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணியை பார்க்க அப்படி தோன்றவில்லை என்றேன். "நான்கு வருடத்துக்கு மேல் யோசித்துவிட்டேன் இன்னும் எவ்வளவு நாலைக்கு தள்ளிபோடுறது" என்றார்.<br />
அண்ணிக்கிட்யே கேட்டா என்ன ஒருவேளை அவர்கள் வேறுவிதமாக பழகலாம் இல்லையா?<br />
<br />
"தப்பு செய்றவ ஒத்துக்குவாளா"என்று என்வாயை அடைத்துவிட்டார்."சரி வா வீட்டுக்குபோலாம்" என எழுந்து அவர் போக பின்னாலே பயத்துடன் போனேன் இன்னிக்கு ரெண்டுபேருக்கும் வர சண்டைல நான் மத்தளம் என உள்ளுக்குள் காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டடதை உணர்ந்தேன்.நேரே மாடிப்படி எறி அவர் செல்ல பின்னால் பூனைகுட்டிபோல மெல்ல சத்தம் வராமல் படிஏறி போனேன்.கடைசி படி கால் வைக்க கீழே இருந்து அண்ணி குரல்<br />
"உங்க அண்ணாவை பாத்திங்களா" நான் மேலே அவரை பார்க்க அவர் இல்லை என சைகையால் காட்ட நானும் மெதுவாக தலையை மேலும் கீழும் மாக ஆட்டிவிட்டு பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி நானும் குழம்பி அண்ணியையும் குழப்பி வைத்தேன்.<br />
அவரோ அழகாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு<br />
"ஒன்னும் இல்லப்பா எங்க மாமாவுக்கு ஒரு ஆப்ரேசன் இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சது அவர்க்கிட்ட உடனே சொல்லனும் அதுதான்" என்று சொல்லியவர் முகத்தில் ஒருபெருமிதம் தெரிந்தது.<br />
<br />
நான் மெதுவாக ஆப்ரேசன்னா என்று இழுக்க.<br />
"நான் கல்யாணம் பண்ணி வந்த புதுசுல இந்த டாக்டர் பத்தி கேள்விப்பட்டு மாமாவ கூட்டிட்டு போய் காட்டுனா அவர் நாலு வருசம் மருந்து சாப்பிடனும் அப்புறம் ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும்னு சொல்லிட்டார். பாவம் மாமாவும் வந்து எல்லா டிரீட்மெண்டும் எடுத்துக்கிட்டார்.இன்னிக்கு ஆப்ரேசன் நாள்குறிச்சு காலைலயே போய்ட்டோம் எனக்கு மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டே ஒரு மணிநேரம் ஆப்ரேசன் தியேட்டர் வாசல்ல ஒக்காந்து இருந்தேன்,அப்ப இவர கூப்புடலாமான்னு தோனுச்சு ரொம்ப பயந்துட்டேன் நாலு வருசம் ரகசியமா வச்சிருந்துட்டு இப்ப சொல்ல கூடாது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று பல்ல கடிச்சுக்கிடு இருந்துட்டேன் எங்க மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போதே அப்பா தவறிட்டார் எல்லாமே எங்க மாமாதான் அவர மாமான்னு கூப்பிடுறதவிட அப்பான்னு கூப்பிடலாம்,எங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தெரியுமா.<br />
<br />
இந்த ஆப்ரேசன் வந்து குழந்த பிறக்க செஞ்சது ஆமா அவருக்கு ஆணனுக்களோட கவுண்ட் குறைவா இருந்துச்சி இனிமெ எல்லாம் சரியாயிடும்.சரி அச்சோ மாமாவுக்கு இந்நேரம் மயக்கம் தெளிஞ்சிருக்கும்கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிவரிங்களா?"<br />
என்று கேட்டவர் முகம் கெஞ்சுவது தாங்காமல் திரும்பி அவரை பார்த்தேன் அவரோ கண்ணீர் தளும்பும் கண்களுடன் வெட்க்கிப்போய் தலைகவிழ்ந்து நிற்க்கிறார்.<br />
<br />
இந்த அண்ணாவுக்கு அண்ணி மீது இருந்தது காமம் அதில் காதல் இல்லைஅண்ணிக்கு மாமா மீது இருந்தது காதல் அதில் காமம் இல்லை என்று எண்ணிக்கொண்டுநான் வேகமாக படியிறங்கி போனேன் அவரைதேடுவதற்க்கு?<br />
<br />
-சிவனடியார்-&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:blue'&gt;காமம் அதில் காதல் இல்லை<br />
காதல் அதில் காமம் இல்லை<br />
<br />
[size=15]வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,<br />
<br />
"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்<br />
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்<br />
"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.<br />
நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க<br />
அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.<br />
"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?<br />
<br />
ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.<br />
எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்கும் போது<br />
"தம்பி இன்னிக்கு வெளிய போரிங்களா எதுனச்சும் வேளை இருக்கா?" என்று அண்ணா கேட்டார் நானும் இல்லை இன்னிக்கு சனிக்கிழமை கோயில் போகனும் அவளோவுதான் என்றேன்.<br />
<br />
"சரி ரெடியா இருங்க நானும் வருகிரறேன்" என்று சொன்னவர் படியிறங்கும் சத்தம் கேட்டது.<br />
சுமார் 30 நிமிட மவுனம் என்னை பித்துபிடிக்க வைத்து விட்டது,கோயிலுக்கு வந்ததில் இருந்து ஒன்றும் பேசாமல் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் மவுனத்தை கலைப்பதாக என்னி<br />
அந்த நாட்டியகாரி சிலை அழகா இருக்குல்ல நல்ல கலைஞ்சன் செய்து இருக்கனும் போல என்று சொல்ல<br />
அவர் "அதை பார்க்க உனக்கு என்ன தோனுது?" நானும் நல்ல அசைவுகள், அமைப்புகள் உயிரூட்டி பார்த்தால் நிச்சயம் நல்ல அழகான பெண்கிடைப்பாள் என்றேன்.<br />
மீண்டும் அவர் "ம்ம் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அதான் இப்படி சொல்ர" என்றார்,<br />
நானும் நீங்கள் சொல்லுங்கள் என்றேன் அவரும் தொடர்ந்து எவ்வளவு "களைப்பாக வீட்டுக்கு வந்தாலும் ஒரு முறை சல்லாபம் கொண்டு பிறகு தூங்க போகலாம் நல்ல காமத்தை கிளரும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்"<br />
என சாதாரணமாக சொல்ல நான் இதை ஒத்துக்கெள்ள முடியது பெண் இன்பத்திற்க்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்ல என்று வாதாட குறுக்கிட்டு அவர்<br />
"இன்னிக்கு உன்கிட்ட மனசு விட்டு பேசனும்னுதான் இங்க வந்தேன்" என்று சொல்லி தொண்டை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது முதல் வருடம் நன்றாக இருந்தது பிள்ளை பிறந்தான்,இரண்டாம் வருடம் ஆரம்பித்தது முதல் தன் மாமா புராணம் பாட ஆரம்பித்து விட்டாள் என் மனைவி,அவள் மாமா முன்பெல்லாம் வந்தால் ஒரு நாள் அல்லது இரண்டாம் நாள் கிளம்பிவிடுவார் போக போக ஒரு வாரம் தங்கிபோக ஆரம்பித்துவிட்டார்,அவரும் என் மனைவியும் சிரித்து கும்மாளம் தாங்க முடியாமல்தான் மேலே வந்து படுக்குறது,சில நேரம் மகனுக்கு அப்பா நானில்லை என்றுகூட தோன்றும்.அவனும் என்னிடம் ஒட்டுவதே கிடையாது<br />
(இப்படி அவர் அடுக்கிகொண்டே போக எனக்கு தலைசுத்திக்கொண்டு வந்தது உடம்பிற்க்குள் ஒருவித நடுக்கம் வந்து ஆட்டிவிட்டுபோனது)<br />
எத்தனையோ நாட்கள் இந்த கோயில்ல சாமிக்கிட்ட இதபத்தி புலம்பிட்டு போவேன் இருந்தாலும் மனசு தனியாதுப்பா அதனால இன்னிக்கு உன்கிட்ட எல்லத்தையும் கொட்டிட்டேன் சீக்கிரமா இந்த அசிங்கத்துக்கு முடிவுகட்டனும் என்று முடித்தார்.<br />
<br />
நான் நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள் அண்ணியை பார்க்க அப்படி தோன்றவில்லை என்றேன். "நான்கு வருடத்துக்கு மேல் யோசித்துவிட்டேன் இன்னும் எவ்வளவு நாலைக்கு தள்ளிபோடுறது" என்றார்.<br />
அண்ணிக்கிட்யே கேட்டா என்ன ஒருவேளை அவர்கள் வேறுவிதமாக பழகலாம் இல்லையா?<br />
<br />
"தப்பு செய்றவ ஒத்துக்குவாளா"என்று என்வாயை அடைத்துவிட்டார்."சரி வா வீட்டுக்குபோலாம்" என எழுந்து அவர் போக பின்னாலே பயத்துடன் போனேன் இன்னிக்கு ரெண்டுபேருக்கும் வர சண்டைல நான் மத்தளம் என உள்ளுக்குள் காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டடதை உணர்ந்தேன்.நேரே மாடிப்படி எறி அவர் செல்ல பின்னால் பூனைகுட்டிபோல மெல்ல சத்தம் வராமல் படிஏறி போனேன்.கடைசி படி கால் வைக்க கீழே இருந்து அண்ணி குரல்<br />
"உங்க அண்ணாவை பாத்திங்களா" நான் மேலே அவரை பார்க்க அவர் இல்லை என சைகையால் காட்ட நானும் மெதுவாக தலையை மேலும் கீழும் மாக ஆட்டிவிட்டு பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி நானும் குழம்பி அண்ணியையும் குழப்பி வைத்தேன்.<br />
அவரோ அழகாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு<br />
"ஒன்னும் இல்லப்பா எங்க மாமாவுக்கு ஒரு ஆப்ரேசன் இன்னிக்கு நல்லபடியா முடிஞ்சது அவர்க்கிட்ட உடனே சொல்லனும் அதுதான்" என்று சொல்லியவர் முகத்தில் ஒருபெருமிதம் தெரிந்தது.<br />
<br />
நான் மெதுவாக ஆப்ரேசன்னா என்று இழுக்க.<br />
"நான் கல்யாணம் பண்ணி வந்த புதுசுல இந்த டாக்டர் பத்தி கேள்விப்பட்டு மாமாவ கூட்டிட்டு போய் காட்டுனா அவர் நாலு வருசம் மருந்து சாப்பிடனும் அப்புறம் ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ண வேண்டி வரும்னு சொல்லிட்டார். பாவம் மாமாவும் வந்து எல்லா டிரீட்மெண்டும் எடுத்துக்கிட்டார்.இன்னிக்கு ஆப்ரேசன் நாள்குறிச்சு காலைலயே போய்ட்டோம் எனக்கு மனசு திக்திக்னு அடிச்சுக்கிட்டே ஒரு மணிநேரம் ஆப்ரேசன் தியேட்டர் வாசல்ல ஒக்காந்து இருந்தேன்,அப்ப இவர கூப்புடலாமான்னு தோனுச்சு ரொம்ப பயந்துட்டேன் நாலு வருசம் ரகசியமா வச்சிருந்துட்டு இப்ப சொல்ல கூடாது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று பல்ல கடிச்சுக்கிடு இருந்துட்டேன் எங்க மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு சின்ன பிள்ளையா இருக்கும்போதே அப்பா தவறிட்டார் எல்லாமே எங்க மாமாதான் அவர மாமான்னு கூப்பிடுறதவிட அப்பான்னு கூப்பிடலாம்,எங்கள படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தெரியுமா.<br />
<br />
இந்த ஆப்ரேசன் வந்து குழந்த பிறக்க செஞ்சது ஆமா அவருக்கு ஆணனுக்களோட கவுண்ட் குறைவா இருந்துச்சி இனிமெ எல்லாம் சரியாயிடும்.சரி அச்சோ மாமாவுக்கு இந்நேரம் மயக்கம் தெளிஞ்சிருக்கும்கொஞ்சம் சீக்கிரம் போய் கூட்டிவரிங்களா?"<br />
என்று கேட்டவர் முகம் கெஞ்சுவது தாங்காமல் திரும்பி அவரை பார்த்தேன் அவரோ கண்ணீர் தளும்பும் கண்களுடன் வெட்க்கிப்போய் தலைகவிழ்ந்து நிற்க்கிறார்.<br />
<br />
இந்த அண்ணாவுக்கு அண்ணி மீது இருந்தது காமம் அதில் காதல் இல்லைஅண்ணிக்கு மாமா மீது இருந்தது காதல் அதில் காமம் இல்லை என்று எண்ணிக்கொண்டுநான் வேகமாக படியிறங்கி போனேன் அவரைதேடுவதற்க்கு?<br />
<br />
-சிவனடியார்-&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கல்லும் கனியலாம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=585</link>
			<pubDate>Thu, 09 Mar 2006 23:47:39 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1359">Vishnu</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=585</guid>
			<description><![CDATA[                    மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க.  ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை.  அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6..7 மாதங்கள் உண்மையா ஒரு வித்தியாசமான நாட்களாக தான் இருந்தது. இப்ப அவங்க போட்டாங்க.<br />
<br />
ஜயோ ! ! ! போட்டாங்க இனி நான் தனிய தானே என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கிற ஜீவன் நான் இல்லை. எனக்கு எதையும் தாங்கும் இதயம் ஒன்றை நானே உருவாக்கி வைச்சிருக்கன். எல்லாம் வாழ்க்கையின் பாடங்களில இருந்து வந்தது தான்.  சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை என்று வாழுற ஆள் நான். எல்லோர் கூடவும் கதைப்பன். ஆனால் அளவாக தான் கதைப்பன். கண்டால் மட்டும் கதைப்பன். அவளவும் தான். யாரையும் தேடி நான் போனதில்லை. 'என்ன இவனை கன நாளா காணலையே என்ன ஆச்சு?? தனியா இருக்கிற மனுசன்' என்று யாரும் என்னை தேடி வந்ததும் இல்லை. அந்த அளவுக்கு யார் கூடவும் நான் நடந்துகிட்டதும் இல்லை.<br />
<br />
'ஆமா உங்களுக்கு ரத்த சொந்தங்கள் யாரும் இல்லையா?? குடும்பம் என்று ஒண்டும் இல்லையா??' என்று யாரும் நினைக்கலாம். 'இருந்திச்சு இப்ப இல்லை' என்று நான் சொல்லுவன். இப்படி நான் தனியா இருக்கிதால எனக்கு கஸ்டம் என்றோ.. கவலை என்றோ... ஏக்கம் என்றோ.. ஏதும் இல்லை. உண்மையில் உறவுகளோட சேர்ந்து இருந்தால் தான் இந்த கஸ்டம் கவலை ஏக்கம் எல்லாம் வரும் என்கிறது என்ர கருத்து. <br />
<br />
நான் வாழ்கைல நிறைய விசயங்களை இழந்திட்டு.. சும்மா வீணாண நியாங்கள் கூறிக்கொண்டு வறட்டு கௌரவத்தோட இருக்கிறதா யாரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. வாழ்க்கையின் முழுமையை என்ட நாளாந்த வாழ்க்கையில நான் காணுறன். யார் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் மற்றவங்களுக்காக நான் வாழல, எனக்காகத் தான் நான் வாழுறேன்.<br />
<br />
மரத்தடியில இருந்து எனக்குள்ளேயே நானே பேசிட்டு இருந்தன். இப்ப உங்களுக்கு நல்லவே புரிஞ்சிருக்கும் நான் 23..24 வருசமா தனியாவே வாழ்ந்திட்டு, வாழ்க்கையின் முழுமையை காண்கிறேன் என்று சொன்னதின் அர்த்தம். இப்படி வரட்டுகௌரவம், அதுவும் எனக்குள்ளேயே, என்னோடு நான் பேசிட்டு இருக்கிறது என்ர முக்கியமான பொழுதுபோக்கில ஒண்டு.<br />
<br />
லொறி ஓடுறது எனது வேலை. நினைச்சதை செய்ய எங்கட வேலையிடத்தில என்னால மட்டும் தான் முடியும்.  ஏன் என்றால் நான் மட்டும் தான் தனி ஆள் எங்க வேலை இடத்தில. தூர இடங்களுக்கு லோட் எடுத்திட்டு போக கூட நான் தான் ஒத்துக்கிறது.  நினைச்ச இடத்தில சாப்பிடுவன். எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுவன். எப்ப தூக்கம் வருதோ அப்ப படுப்பன். எங்கே என்றாலும் படுப்பன். தொடர்ந்து 2..3 கிழமையாக லொறி ஓடுவன். அதில எனக்கு சலிப்பு என்று ஒன்றும் இல்லை.  இது எங்க வேலை இடத்தில எல்லாராலும் முடியாது. ஏன் என்றால் அவங்களுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கும்.  இரவு எப்படியும் போகணும் வீட்டில மனுசி தனிய.. பிள்ளை தனிய..  பிள்ளைக்கு அது இது... என்று அவங்களுக்கு நிறைய சோலி இருக்கும்.<br />
<br />
எனக்கு இது ஏதும் இல்லை... சில நேரங்கள்ல அவங்க வேலைகளை நான் தான் பாக்கிறது. அவங்களுக்குபதிலா நான் லோட் கொண்டு போறது. இதால எங்க முதலாளிக்கும் என்னில நல்ல இஸ்டம். பல நேரங்கள்ல நானா ஏதும் முடிவு எடுத்து செய்திட்டு முதலாளிக்கு போய் சொன்னால் கூட முதலாளி ஏதும் சொல்லுறதில்லை. காரணம் அவருக்கு என்னில ரொம்ப பற்று. முதலாளிக்கு மட்டும் இல்லை. கூட வேலை பார்க்கிறவங்களுக்கும் என்னில பற்று. காரணம் அவங்களுக்கு லீவு வேணும் என்றால் நான் தானே அவங்க வேலையை செய்கிறது. <br />
<br />
எல்லோரும் என்னில பாசம். ஆனால் நான் அவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டது கிடையாது. சாப்பிட கூப்பிடுவாங்க, என்னை தனி ஆள் என்ற படியால். ஆனால் நான் போனதில்லை. எனக்கு பிடிக்கிறதும் இல்லை. அதுக்காக என்னை ஒரு மாதிரியான ஆள் என்று நினைச்சால் அது தப்பு. வேலைஇடத்தில எனக்காக சாப்பாடு குடுத்துவிட்டால் வாங்கி நல்லாவே வெட்டுவன். ஆனால் எதிர் பார்க்கமாட்டன்.<br />
<br />
எனக்கு லீவு தேவையில்லைத்தான் இருந்தாலும்... சில வேளைகள்ல ஒரு கிழமைக்கு லீவு போடுவன். வீட்ல தான் இருப்பன். விரும்பின சாப்பாடுகளை நானே சமைச்சு சாப்பிடுவன். அரசியல்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்கு. பேப்பர் சஞ்சிகைகள் வாங்கீட்டு வந்து படிப்பன்.  வேலைல சரி வீட்ல சரி நல்லா ரெடியோ கேட்பன். சினிமா பாட்டு என்றால் எனக்கு ரொம்ப இஸ்டம். பழைய பாட்டில இருந்து இனிக்கு வந்த பாட்டுவரைக்கும் ஒண்டும் விடாமல் கேட்பன். படம் பார்க்கிறதில்லை நான்.. ஆனால் லீவு நாட்கள்ல எப்பவாவது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பன். இவைகள் தான் எண்ட தனிமையை இனிமையாக்கிற சில விடயங்கள் என்று சொல்லலாம்.<br />
<br />
ஒருவேலையும் இல்லை என்றால் இந்த மரத்தடி சாய்மனைல படுத்துக்கொண்டு எனக்குள்ளேயே நான் வறட்டு கதைகளை பேசிட்டு இருப்பன். மற்றவங்களுக்கும் சொல்லுவன், 'இப்படி நான் தனிமைல இருக்கிறது தான் எண்ட பலம் என்று'<br />
<br />
ஆனால் இப்ப கொஞ்ச நாள் எனக்கு வித்தியாசமா... என் கொஞ்சம் சந்தோசமா போய் இருக்கு என்று சொல்லலாம்.  எல்லாம் என்ட மகள், மருமகன், மகள்டமகன், வந்து நிண்டதுதான். மகளை நான் பிரிஞ்சது அவள் 3 மாத குழந்தையா இருக்கும் போது. ஆரம்பத்தில மகளை பார்க்கணும் என்ற தவிப்பு இருந்ததுதான். ஆனால் பிறகு இருக்கல. இப்ப என்னமா வளர்ந்து நிற்கிறாள்.. இப்ப அவளுக்கு 23.. 24 வயது இருக்கும் என்று நினைக்கிறன். <br />
<br />
" உங்களை யாரோ சந்தில விசாரிக்கினம்.. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த ஆட்களாம்" என்று பக்கத்து வீட்டு பெடியன் வந்து சொன்ன போது... எனக்கும் யாரோ ஆட்கள் இருக்காங்களா?? என்று போய் பார்த்தன். <br />
<br />
அப்ப ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு அழுதவள்.  3 மாதத்தில பிரிஞ்சும் அவள் என்னை போட்டோல பார்த்தே அடையாளம் கண்டு பிடிச்சிருக்காள். ஆனால் அவள் வாயால சொல்லும் வரை எனக்கு தெரியாது அவள் யார் என்று. அப்படி ஒரு கல் நெஞ்சுக்காரனா இருந்து இருக்கன் நான். அன்னில இருந்து இன்க்கு அவள் போகுமட்டும் என் மேல அவள் காட்டின அன்புக்கு அளவே இல்லை. எனக்கு அன்பு செய்ய இப்படி ஒரு ஆள் இருக்கா என்று நான் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு அவள் பாசம் என்மேல இருந்தது. இதுவரைக்கும் அவள் பிறக்கிறதுக்கு காரணமா இருந்ததை தவிர நான் அவளுக்காக எதுவுமே செய்யல.<br />
 <br />
அப்படி ரொம்ப பாசம் அவள் என்மேல. ஆனால் ஒரே ஒரு விசயத்திலதான் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வாறது. அவங்க அம்மா பற்றி பேச்சு வந்தால் தான். ஆனால் அப்படி பேச்சு வந்தால் நான் ஒன்றும் பேசுறதில்லை. அவள் பேசுறதை மட்டும் கேட்டுகொண்டிருப்பன். அவள் சொல்லுற விடயங்கள் எல்லாமே எனக்கு சரியப்பட்டதால தான் நான் பேசாமல் இருந்தனோ என்னவோ. எப்பவும் அவள் அவங்க அம்மாவை விட்டு குடுத்து கதைக்கிறது இல்லை.<br />
<br />
சில வேளைகளில 'அப்படி உங்க அம்மா நல்லவாவா இருந்தால், அவா நியாயமான ஆளா இருந்தால் உன்கூட சேர்ந்து இங்க வந்திருக்கலாம் தானே.. ஏன் அவ வராமல் உங்களை மட்டும் அனுப்பினா??' அப்படி என்று  நினைப்பன். ஆனால் ஏனோ நினைக்கிறதை மகள்கிட்ட சொன்னதில்லை.<br />
<br />
என்ட மருகனும் ஒன்னும் குறைஞ்ச ஆள் இல்லை.. மகளோட சரி.. என்னோட சரி நல்ல மாதிரி, தங்கமான ஒரு பெடியன்.  என்ட வறட்டு கவுரங்களை எல்லாம் எனக்கு முன்னாலேயே ஒரு பயமும் இல்லாமல் சொல்லி பேசுவார். ஆனால் எனக்கு என்னவோ கோபம் வந்ததில்லை. அவர் சொன்னதில நியாயம் இருந்ததால கோபம் வரலையோ என்னவோ நான் கோபப்பட்டதில்லை. ஆனால் அவர் சொன்னதுக்காக என்னில ஒரு மாற்றத்தை காட்டியதும் இல்லை. என்ட பேரன்.. அவனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. உவடம் எல்லாம் குப்பையாக்கிறதில ரொம்ப கெட்டிக்காரன்...   சின்ன பிள்ளைகள் செய்கிற குறும்புகளை பொறுமையோ ஏற்று ரசிக்கிற பாக்கியம் எனக்கு ஒரு பிள்ளை இருந்தும் எனக்கு கிடைக்கல. இருந்தாலும் அந்த இப்ப எனக்கு அந்த குறையில்லை என்றால் அதுக்கு காரணம் அவன் தான் காரணம்.<br />
<br />
மகள் போன பிறகு கொஞ்சம் இருந்து பழைய நினைவுகளை அசைப்போட்டது காணும் நாளைக்கு வேலைக்கு போகணும் என்கிறது நினைவுக்கு வர... 'சரி இனி எழும்பி போய் சாப்பிட்டு படுப்பம்'  என்று எழும்பி வீட்டுள்ள போனன். வீட்டுக்குள்ள போக வீடு ரொம்ப துப்பரவா இருந்தது. அப்பா தனிய இதேல்லாம் செய்ய மாட்டார் என்று மகளும் மருமகனும் செர்ந்து இனிக்கு காலைல இருந்து துப்பரவு செய்தது தான். ஆனால் மற்றும் படி இப்படி இருக்காது... எண்ட பேரன் எல்லா சாமானும் எடுத்து அங்கே இங்கே என்ரு எறிஞ்சு இருப்பான்.. அதை பொறுக்கிகொண்டு வாறதில தான் எனக்கு ஒரு சந்தோசம்.  எதோ மனசு கொஞ்சம் ஒரு ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.<br />
<br />
குசினிக்குள்ள போனன்...குசினிக்குள்ள நான் உள்ளட்டு ரொம்ப நாள்.  மகள் நிண்ட நாள்ல ஒரு நாள் தன்னிலும் என்னை ஒரு வேலை செய்ய அனுமதிச்சதில்லை அவள். குசினிக்குள்ள போக மகள் உள்ள நிண்டு "போய் இருங்கப்பா நான் சாப்பாடு கொண்டு வாறன்" என்று சொல்லுற மாதிரி  ஒரு பிரமை. போய் சாப்பாட்டை பார்த்தன். எனக்காக சமைச்சு மூடி வைக்கப்பட்டு இருந்திச்சு. இனிக்கு தானே கடைசி.. இனி வேலையால வந்து நான் தானே சமைக்கணும் என்று மனசு ஏதோ சோகமா ஃபில் பண்ணி சொல்லுற மாதிரி பட்டுது.<br />
<br />
'அட நீயா இப்படி சோகமா கதைக்கிறது... நீ எம்மாம்ப்ட்ட ஆளடா?? உன்ட கொள்கை எல்லாம் எங்கே?? ஏதோ பந்தாவா நிறைய எல்லாம் சொன்னியே... அது எல்லாம் எங்கே போட்டுது?? '  என்று என் மனசைப்பார்த்து நானே கேட்டன். சோகம் வந்தா கதைக்காமல் இருக்கிறது நல்லது, என்ட மனசும் அப்படித்தான்.. நான் சொன்னதுக்கு பதில் ஒன்னுமே சொல்லல. சாப்பாட்டை போட்டு சாப்பிட போனன். ஆனால் என்னால முடியல, இனந்தெரியாத சோகம் ஒன்று என்னை கஸ்டப்படுத்திச்சுது. சாப்பிட மனசு வரல.<br />
<br />
" அப்பா நீங்க இனியாவது வந்து எங்க கூட இருங்களேன்.. உங்க கடைசி காலத்தில தனிய இங்க இருந்து என்னத்தை பண்ண போறிங்கள்?? "  என்று இப்ப கடைசி கிழமையா அடிக்கடி என்ட மகள் கேட்டது நினைவில வந்து வந்து போச்சுது. ஆனால் அதுக்கு நான் ஒரு பதிலும் சொல்லல, மருமகனும் வந்து கேட்டுப்பார்த்தவர், ஆனால் அதுக்கு உருப்படிய நான் ஒரு பதிலும் சொல்லல, என்ட குணமும் அவைக்கு நல்லவே தெரியும், நான் இப்படி இருக்கிறதுக்கு நான் பட்ட கஸ்டங்களும் காயங்களும் தான் காரணம் என்று அவைக்கு தெரிஞ்சிருக்கணும் என்று நினைக்கிறன்.<br />
<br />
கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை எங்க கூட இருக்க சொல்லி கேள்" என்று. ஆனால் அப்ப கூட எனக்கு மனம் விட்டு கொடுக்கல, அந்த அளவுக்கு கல் நெஞ்சகாரன் நான். உண்மையில நானும் எல்லோரையும் போலத்தான் மற்றவங்களை புரிஞ்சுக்கிற ஒரு ஆளா இருந்தனான். ஆனால் இப்ப ஏனோ நான் அப்படி இல்லை.<br />
<br />
மனசில ஏதோ ஏதோ நினைவுகள் எல்லாம் வந்து போச்சுது, இந்த 20 வருசத்தில நினைவுக்கு வராத பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து போச்சுது, ஏனோ மனசு வலிக்கிற மாதிரி இருந்தது, உறுதியா இருந்த என்ட மனசு இப்ப ஏதோ என்ன செய்கிறதென்டு அறியாமல் தவிக்கிற மாதிரி இருந்திச்சு.  இப்ப எனக்கு என்ட மகள் மேல கோபம் வாற மாதிரி இருந்தது. இருட்டில கண்ணை இருட்டுக்கு பழக்கிட்டு போய் கொண்டிருந்த என்னை கொஞ்ச நேரம் முன்னால வந்து லைட்டைக் காட்டி சந்தோசப்படுத்திட்டு.. திருப்ப தவிக்க விட்ட மாதிரி இருந்தது.<br />
<br />
மனசை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு படுத்திடுவோம்.. நாளைக்கு வேலைக்கு போய் வர எல்லாமே சரிவரும் என்று நினைச்சிட்டுபடுக்க போனேன். என்ட ரூம்ல போய் உடுப்பு மாத்த உடுப்பை பார்த்த போது. கீழ ஒரு பாக்ல என்ட உடுப்பு எல்லாம் அடுக்கி வைச்சிருந்திச்சு. அது ஒண்டுமில்ல. நான் பதில் சொல்லாவிட்டாலும் போகும் போது நானும் சேர்ந்து அவங்ககூட வருவன் என்று நினைப்பில என்ட மகள் என்ட உடுப்பு எல்லாம் எடுத்து பாக்ல றெடியா அடுக்கி வைச்சு இருந்தாள்.<br />
<br />
எனக்கு எல்லா நினைப்புகளும் மாறி மாறி வர.. அப்படியே உடுப்பு பாக்ல சாய்ஞ்சு கொண்டே யோசிச்சன். இப்ப நான் திரும்ப போனால் என்ன நடக்கும் என்று ஒரு முறை நினைச்சுப்பார்த்தன்.  அதை என்னால ஜீரணிக்கமுடியாமல் இருந்தது. ஆனால் போகாமல் இனியும் இங்கே தனிய இருக்கிறதை நினைச்சுப்பார்க்கவே முடியல. மகள் சொன்ன வார்த்தைகளை நினைச்சுப்பார்த்தன். <br />
<br />
இப்ப கூட போனால் மகள் கூட சேர்ந்து போகலாம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி கொண்டு இருப்பாங்க போய் சேர்ந்துக்கலாம் என்று மனசு சொல்லிச்சு. இவளவு காலமும் என்ட சொல்லு கேட்ட என்ட மனசு எப்ப எனக்கே கட்டளை போட பாக்கை எடுத்து க்கொண்டு மகள் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுற இடம் நோக்கிப் புறப்பட்டேன்.<br />
<br />
(முற்றும்)<br />
<br />
எழுத்துப்பிழைகள், மற்றும் ஏனைய பிழைகளை சுட்டிக்காட்டவும்  :roll:  :roll:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க.  ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை.  அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6..7 மாதங்கள் உண்மையா ஒரு வித்தியாசமான நாட்களாக தான் இருந்தது. இப்ப அவங்க போட்டாங்க.<br />
<br />
ஜயோ ! ! ! போட்டாங்க இனி நான் தனிய தானே என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கிற ஜீவன் நான் இல்லை. எனக்கு எதையும் தாங்கும் இதயம் ஒன்றை நானே உருவாக்கி வைச்சிருக்கன். எல்லாம் வாழ்க்கையின் பாடங்களில இருந்து வந்தது தான்.  சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை என்று வாழுற ஆள் நான். எல்லோர் கூடவும் கதைப்பன். ஆனால் அளவாக தான் கதைப்பன். கண்டால் மட்டும் கதைப்பன். அவளவும் தான். யாரையும் தேடி நான் போனதில்லை. 'என்ன இவனை கன நாளா காணலையே என்ன ஆச்சு?? தனியா இருக்கிற மனுசன்' என்று யாரும் என்னை தேடி வந்ததும் இல்லை. அந்த அளவுக்கு யார் கூடவும் நான் நடந்துகிட்டதும் இல்லை.<br />
<br />
'ஆமா உங்களுக்கு ரத்த சொந்தங்கள் யாரும் இல்லையா?? குடும்பம் என்று ஒண்டும் இல்லையா??' என்று யாரும் நினைக்கலாம். 'இருந்திச்சு இப்ப இல்லை' என்று நான் சொல்லுவன். இப்படி நான் தனியா இருக்கிதால எனக்கு கஸ்டம் என்றோ.. கவலை என்றோ... ஏக்கம் என்றோ.. ஏதும் இல்லை. உண்மையில் உறவுகளோட சேர்ந்து இருந்தால் தான் இந்த கஸ்டம் கவலை ஏக்கம் எல்லாம் வரும் என்கிறது என்ர கருத்து. <br />
<br />
நான் வாழ்கைல நிறைய விசயங்களை இழந்திட்டு.. சும்மா வீணாண நியாங்கள் கூறிக்கொண்டு வறட்டு கௌரவத்தோட இருக்கிறதா யாரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. வாழ்க்கையின் முழுமையை என்ட நாளாந்த வாழ்க்கையில நான் காணுறன். யார் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் மற்றவங்களுக்காக நான் வாழல, எனக்காகத் தான் நான் வாழுறேன்.<br />
<br />
மரத்தடியில இருந்து எனக்குள்ளேயே நானே பேசிட்டு இருந்தன். இப்ப உங்களுக்கு நல்லவே புரிஞ்சிருக்கும் நான் 23..24 வருசமா தனியாவே வாழ்ந்திட்டு, வாழ்க்கையின் முழுமையை காண்கிறேன் என்று சொன்னதின் அர்த்தம். இப்படி வரட்டுகௌரவம், அதுவும் எனக்குள்ளேயே, என்னோடு நான் பேசிட்டு இருக்கிறது என்ர முக்கியமான பொழுதுபோக்கில ஒண்டு.<br />
<br />
லொறி ஓடுறது எனது வேலை. நினைச்சதை செய்ய எங்கட வேலையிடத்தில என்னால மட்டும் தான் முடியும்.  ஏன் என்றால் நான் மட்டும் தான் தனி ஆள் எங்க வேலை இடத்தில. தூர இடங்களுக்கு லோட் எடுத்திட்டு போக கூட நான் தான் ஒத்துக்கிறது.  நினைச்ச இடத்தில சாப்பிடுவன். எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுவன். எப்ப தூக்கம் வருதோ அப்ப படுப்பன். எங்கே என்றாலும் படுப்பன். தொடர்ந்து 2..3 கிழமையாக லொறி ஓடுவன். அதில எனக்கு சலிப்பு என்று ஒன்றும் இல்லை.  இது எங்க வேலை இடத்தில எல்லாராலும் முடியாது. ஏன் என்றால் அவங்களுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கும்.  இரவு எப்படியும் போகணும் வீட்டில மனுசி தனிய.. பிள்ளை தனிய..  பிள்ளைக்கு அது இது... என்று அவங்களுக்கு நிறைய சோலி இருக்கும்.<br />
<br />
எனக்கு இது ஏதும் இல்லை... சில நேரங்கள்ல அவங்க வேலைகளை நான் தான் பாக்கிறது. அவங்களுக்குபதிலா நான் லோட் கொண்டு போறது. இதால எங்க முதலாளிக்கும் என்னில நல்ல இஸ்டம். பல நேரங்கள்ல நானா ஏதும் முடிவு எடுத்து செய்திட்டு முதலாளிக்கு போய் சொன்னால் கூட முதலாளி ஏதும் சொல்லுறதில்லை. காரணம் அவருக்கு என்னில ரொம்ப பற்று. முதலாளிக்கு மட்டும் இல்லை. கூட வேலை பார்க்கிறவங்களுக்கும் என்னில பற்று. காரணம் அவங்களுக்கு லீவு வேணும் என்றால் நான் தானே அவங்க வேலையை செய்கிறது. <br />
<br />
எல்லோரும் என்னில பாசம். ஆனால் நான் அவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டது கிடையாது. சாப்பிட கூப்பிடுவாங்க, என்னை தனி ஆள் என்ற படியால். ஆனால் நான் போனதில்லை. எனக்கு பிடிக்கிறதும் இல்லை. அதுக்காக என்னை ஒரு மாதிரியான ஆள் என்று நினைச்சால் அது தப்பு. வேலைஇடத்தில எனக்காக சாப்பாடு குடுத்துவிட்டால் வாங்கி நல்லாவே வெட்டுவன். ஆனால் எதிர் பார்க்கமாட்டன்.<br />
<br />
எனக்கு லீவு தேவையில்லைத்தான் இருந்தாலும்... சில வேளைகள்ல ஒரு கிழமைக்கு லீவு போடுவன். வீட்ல தான் இருப்பன். விரும்பின சாப்பாடுகளை நானே சமைச்சு சாப்பிடுவன். அரசியல்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்கு. பேப்பர் சஞ்சிகைகள் வாங்கீட்டு வந்து படிப்பன்.  வேலைல சரி வீட்ல சரி நல்லா ரெடியோ கேட்பன். சினிமா பாட்டு என்றால் எனக்கு ரொம்ப இஸ்டம். பழைய பாட்டில இருந்து இனிக்கு வந்த பாட்டுவரைக்கும் ஒண்டும் விடாமல் கேட்பன். படம் பார்க்கிறதில்லை நான்.. ஆனால் லீவு நாட்கள்ல எப்பவாவது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பன். இவைகள் தான் எண்ட தனிமையை இனிமையாக்கிற சில விடயங்கள் என்று சொல்லலாம்.<br />
<br />
ஒருவேலையும் இல்லை என்றால் இந்த மரத்தடி சாய்மனைல படுத்துக்கொண்டு எனக்குள்ளேயே நான் வறட்டு கதைகளை பேசிட்டு இருப்பன். மற்றவங்களுக்கும் சொல்லுவன், 'இப்படி நான் தனிமைல இருக்கிறது தான் எண்ட பலம் என்று'<br />
<br />
ஆனால் இப்ப கொஞ்ச நாள் எனக்கு வித்தியாசமா... என் கொஞ்சம் சந்தோசமா போய் இருக்கு என்று சொல்லலாம்.  எல்லாம் என்ட மகள், மருமகன், மகள்டமகன், வந்து நிண்டதுதான். மகளை நான் பிரிஞ்சது அவள் 3 மாத குழந்தையா இருக்கும் போது. ஆரம்பத்தில மகளை பார்க்கணும் என்ற தவிப்பு இருந்ததுதான். ஆனால் பிறகு இருக்கல. இப்ப என்னமா வளர்ந்து நிற்கிறாள்.. இப்ப அவளுக்கு 23.. 24 வயது இருக்கும் என்று நினைக்கிறன். <br />
<br />
" உங்களை யாரோ சந்தில விசாரிக்கினம்.. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த ஆட்களாம்" என்று பக்கத்து வீட்டு பெடியன் வந்து சொன்ன போது... எனக்கும் யாரோ ஆட்கள் இருக்காங்களா?? என்று போய் பார்த்தன். <br />
<br />
அப்ப ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு அழுதவள்.  3 மாதத்தில பிரிஞ்சும் அவள் என்னை போட்டோல பார்த்தே அடையாளம் கண்டு பிடிச்சிருக்காள். ஆனால் அவள் வாயால சொல்லும் வரை எனக்கு தெரியாது அவள் யார் என்று. அப்படி ஒரு கல் நெஞ்சுக்காரனா இருந்து இருக்கன் நான். அன்னில இருந்து இன்க்கு அவள் போகுமட்டும் என் மேல அவள் காட்டின அன்புக்கு அளவே இல்லை. எனக்கு அன்பு செய்ய இப்படி ஒரு ஆள் இருக்கா என்று நான் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு அவள் பாசம் என்மேல இருந்தது. இதுவரைக்கும் அவள் பிறக்கிறதுக்கு காரணமா இருந்ததை தவிர நான் அவளுக்காக எதுவுமே செய்யல.<br />
 <br />
அப்படி ரொம்ப பாசம் அவள் என்மேல. ஆனால் ஒரே ஒரு விசயத்திலதான் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வாறது. அவங்க அம்மா பற்றி பேச்சு வந்தால் தான். ஆனால் அப்படி பேச்சு வந்தால் நான் ஒன்றும் பேசுறதில்லை. அவள் பேசுறதை மட்டும் கேட்டுகொண்டிருப்பன். அவள் சொல்லுற விடயங்கள் எல்லாமே எனக்கு சரியப்பட்டதால தான் நான் பேசாமல் இருந்தனோ என்னவோ. எப்பவும் அவள் அவங்க அம்மாவை விட்டு குடுத்து கதைக்கிறது இல்லை.<br />
<br />
சில வேளைகளில 'அப்படி உங்க அம்மா நல்லவாவா இருந்தால், அவா நியாயமான ஆளா இருந்தால் உன்கூட சேர்ந்து இங்க வந்திருக்கலாம் தானே.. ஏன் அவ வராமல் உங்களை மட்டும் அனுப்பினா??' அப்படி என்று  நினைப்பன். ஆனால் ஏனோ நினைக்கிறதை மகள்கிட்ட சொன்னதில்லை.<br />
<br />
என்ட மருகனும் ஒன்னும் குறைஞ்ச ஆள் இல்லை.. மகளோட சரி.. என்னோட சரி நல்ல மாதிரி, தங்கமான ஒரு பெடியன்.  என்ட வறட்டு கவுரங்களை எல்லாம் எனக்கு முன்னாலேயே ஒரு பயமும் இல்லாமல் சொல்லி பேசுவார். ஆனால் எனக்கு என்னவோ கோபம் வந்ததில்லை. அவர் சொன்னதில நியாயம் இருந்ததால கோபம் வரலையோ என்னவோ நான் கோபப்பட்டதில்லை. ஆனால் அவர் சொன்னதுக்காக என்னில ஒரு மாற்றத்தை காட்டியதும் இல்லை. என்ட பேரன்.. அவனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. உவடம் எல்லாம் குப்பையாக்கிறதில ரொம்ப கெட்டிக்காரன்...   சின்ன பிள்ளைகள் செய்கிற குறும்புகளை பொறுமையோ ஏற்று ரசிக்கிற பாக்கியம் எனக்கு ஒரு பிள்ளை இருந்தும் எனக்கு கிடைக்கல. இருந்தாலும் அந்த இப்ப எனக்கு அந்த குறையில்லை என்றால் அதுக்கு காரணம் அவன் தான் காரணம்.<br />
<br />
மகள் போன பிறகு கொஞ்சம் இருந்து பழைய நினைவுகளை அசைப்போட்டது காணும் நாளைக்கு வேலைக்கு போகணும் என்கிறது நினைவுக்கு வர... 'சரி இனி எழும்பி போய் சாப்பிட்டு படுப்பம்'  என்று எழும்பி வீட்டுள்ள போனன். வீட்டுக்குள்ள போக வீடு ரொம்ப துப்பரவா இருந்தது. அப்பா தனிய இதேல்லாம் செய்ய மாட்டார் என்று மகளும் மருமகனும் செர்ந்து இனிக்கு காலைல இருந்து துப்பரவு செய்தது தான். ஆனால் மற்றும் படி இப்படி இருக்காது... எண்ட பேரன் எல்லா சாமானும் எடுத்து அங்கே இங்கே என்ரு எறிஞ்சு இருப்பான்.. அதை பொறுக்கிகொண்டு வாறதில தான் எனக்கு ஒரு சந்தோசம்.  எதோ மனசு கொஞ்சம் ஒரு ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.<br />
<br />
குசினிக்குள்ள போனன்...குசினிக்குள்ள நான் உள்ளட்டு ரொம்ப நாள்.  மகள் நிண்ட நாள்ல ஒரு நாள் தன்னிலும் என்னை ஒரு வேலை செய்ய அனுமதிச்சதில்லை அவள். குசினிக்குள்ள போக மகள் உள்ள நிண்டு "போய் இருங்கப்பா நான் சாப்பாடு கொண்டு வாறன்" என்று சொல்லுற மாதிரி  ஒரு பிரமை. போய் சாப்பாட்டை பார்த்தன். எனக்காக சமைச்சு மூடி வைக்கப்பட்டு இருந்திச்சு. இனிக்கு தானே கடைசி.. இனி வேலையால வந்து நான் தானே சமைக்கணும் என்று மனசு ஏதோ சோகமா ஃபில் பண்ணி சொல்லுற மாதிரி பட்டுது.<br />
<br />
'அட நீயா இப்படி சோகமா கதைக்கிறது... நீ எம்மாம்ப்ட்ட ஆளடா?? உன்ட கொள்கை எல்லாம் எங்கே?? ஏதோ பந்தாவா நிறைய எல்லாம் சொன்னியே... அது எல்லாம் எங்கே போட்டுது?? '  என்று என் மனசைப்பார்த்து நானே கேட்டன். சோகம் வந்தா கதைக்காமல் இருக்கிறது நல்லது, என்ட மனசும் அப்படித்தான்.. நான் சொன்னதுக்கு பதில் ஒன்னுமே சொல்லல. சாப்பாட்டை போட்டு சாப்பிட போனன். ஆனால் என்னால முடியல, இனந்தெரியாத சோகம் ஒன்று என்னை கஸ்டப்படுத்திச்சுது. சாப்பிட மனசு வரல.<br />
<br />
" அப்பா நீங்க இனியாவது வந்து எங்க கூட இருங்களேன்.. உங்க கடைசி காலத்தில தனிய இங்க இருந்து என்னத்தை பண்ண போறிங்கள்?? "  என்று இப்ப கடைசி கிழமையா அடிக்கடி என்ட மகள் கேட்டது நினைவில வந்து வந்து போச்சுது. ஆனால் அதுக்கு நான் ஒரு பதிலும் சொல்லல, மருமகனும் வந்து கேட்டுப்பார்த்தவர், ஆனால் அதுக்கு உருப்படிய நான் ஒரு பதிலும் சொல்லல, என்ட குணமும் அவைக்கு நல்லவே தெரியும், நான் இப்படி இருக்கிறதுக்கு நான் பட்ட கஸ்டங்களும் காயங்களும் தான் காரணம் என்று அவைக்கு தெரிஞ்சிருக்கணும் என்று நினைக்கிறன்.<br />
<br />
கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை எங்க கூட இருக்க சொல்லி கேள்" என்று. ஆனால் அப்ப கூட எனக்கு மனம் விட்டு கொடுக்கல, அந்த அளவுக்கு கல் நெஞ்சகாரன் நான். உண்மையில நானும் எல்லோரையும் போலத்தான் மற்றவங்களை புரிஞ்சுக்கிற ஒரு ஆளா இருந்தனான். ஆனால் இப்ப ஏனோ நான் அப்படி இல்லை.<br />
<br />
மனசில ஏதோ ஏதோ நினைவுகள் எல்லாம் வந்து போச்சுது, இந்த 20 வருசத்தில நினைவுக்கு வராத பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து போச்சுது, ஏனோ மனசு வலிக்கிற மாதிரி இருந்தது, உறுதியா இருந்த என்ட மனசு இப்ப ஏதோ என்ன செய்கிறதென்டு அறியாமல் தவிக்கிற மாதிரி இருந்திச்சு.  இப்ப எனக்கு என்ட மகள் மேல கோபம் வாற மாதிரி இருந்தது. இருட்டில கண்ணை இருட்டுக்கு பழக்கிட்டு போய் கொண்டிருந்த என்னை கொஞ்ச நேரம் முன்னால வந்து லைட்டைக் காட்டி சந்தோசப்படுத்திட்டு.. திருப்ப தவிக்க விட்ட மாதிரி இருந்தது.<br />
<br />
மனசை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு படுத்திடுவோம்.. நாளைக்கு வேலைக்கு போய் வர எல்லாமே சரிவரும் என்று நினைச்சிட்டுபடுக்க போனேன். என்ட ரூம்ல போய் உடுப்பு மாத்த உடுப்பை பார்த்த போது. கீழ ஒரு பாக்ல என்ட உடுப்பு எல்லாம் அடுக்கி வைச்சிருந்திச்சு. அது ஒண்டுமில்ல. நான் பதில் சொல்லாவிட்டாலும் போகும் போது நானும் சேர்ந்து அவங்ககூட வருவன் என்று நினைப்பில என்ட மகள் என்ட உடுப்பு எல்லாம் எடுத்து பாக்ல றெடியா அடுக்கி வைச்சு இருந்தாள்.<br />
<br />
எனக்கு எல்லா நினைப்புகளும் மாறி மாறி வர.. அப்படியே உடுப்பு பாக்ல சாய்ஞ்சு கொண்டே யோசிச்சன். இப்ப நான் திரும்ப போனால் என்ன நடக்கும் என்று ஒரு முறை நினைச்சுப்பார்த்தன்.  அதை என்னால ஜீரணிக்கமுடியாமல் இருந்தது. ஆனால் போகாமல் இனியும் இங்கே தனிய இருக்கிறதை நினைச்சுப்பார்க்கவே முடியல. மகள் சொன்ன வார்த்தைகளை நினைச்சுப்பார்த்தன். <br />
<br />
இப்ப கூட போனால் மகள் கூட சேர்ந்து போகலாம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி கொண்டு இருப்பாங்க போய் சேர்ந்துக்கலாம் என்று மனசு சொல்லிச்சு. இவளவு காலமும் என்ட சொல்லு கேட்ட என்ட மனசு எப்ப எனக்கே கட்டளை போட பாக்கை எடுத்து க்கொண்டு மகள் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுற இடம் நோக்கிப் புறப்பட்டேன்.<br />
<br />
(முற்றும்)<br />
<br />
எழுத்துப்பிழைகள், மற்றும் ஏனைய பிழைகளை சுட்டிக்காட்டவும்  :roll:  :roll:                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தடுமாற வைக்கும் உறவுகள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=647</link>
			<pubDate>Fri, 03 Mar 2006 07:39:14 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1523">RaMa</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=647</guid>
			<description><![CDATA[                    "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். <br />
<br />
வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட்டாலும் வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு மேலும் மேலும் வருத்திக்கொண்டே இருக்கும். அதற்குள் அண்ணி வேறு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் போனில் அலட்டிக்கொண்டேயிருப்பாள் என்று எண்ணியே அன்று முதல் தான் வேலைக்குச் செல்வதென்று முடிவு செய்திருந்தாள் வித்தியா. <br />
<br />
அதிகாலையில் வேலைக்குச் செல்லும் அண்ணாவிற்கு தேநீர் வைத்துக் கொடுப்பதில் இருந்து இரண்டு வேலைகளை முடித்துவிட்டு நடுச்சாமம் வரும் அண்ணா ரவிக்கு இரவுச்சாப்பாடு செய்து கொடுப்பதுவரை இவளின் தலையில்தான். அம்மா இருக்கும் மட்டும் இவைகள் எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள். அம்மாவும் அலுக்காமல் சலிக்கமால் தன் பிள்ளைகளுக்குத்தானே என்ற ஓர் உணர்வுடனே அண்ணியின் குத்தல் கதைகளையும் கேட்டும் புன்னகையுடனே சகித்து வந்தாள். சில சமயங்களில் அண்ணியின் லொள்ளுக்கள் தாங்கமால் வித்தியா எதிர்த்துக் கதைக்க முற்பட்ட பொழுதெல்லாம் அம்மர் <br />
"இஞ்சை பார் பிள்ளை! எப்படியிருந்தாலும் அவா உனது அண்ணி. ஒரு காலத்தில் எனக்கு எதாவது நடந்தால் அவர்கள்தான் உனக்கு தாயும் தகப்பனுமாக இருந்து நல்ல காரியங்கள் எல்லாம் செய்து வைக்க வேண்டும். ஆகவே பொறுமையாக இருக்கப்பழகு" என்று அறிவுரை கூறுவாள். <br />
<br />
ஐக்கெட்டை போடச் சென்றபோது அண்ணியின் அழைப்புக் கேட்டது. "ஆமா, நித்திரை தூக்கத்தில் மாகராணிக்கு கீழே வந்து கதை சொல்ல இயலாமல் இருக்கு ஆக்கும்" என்று நினைத்தபடியே திரும்பவும் மாடி ஏறி வந்து "என்ன அண்ணி?" என்று கேட்டாள். <br />
"இல்லை வித்தியா எனக்கு சரியான தலையிடியாக இருக்கின்றது, நீர் வேலையால் வரும்போது ஒரு 2 பால் பக்கற்றுக்கள் வாங்கிக்கொண்டு வாரும்" என்று கூறினாள். <br />
<br />
"என்ன அண்ணி, கடையில் பால் என்ன கடனாகவா வேண்டுவது?" என்று கேட்க நினைத்துவிட்டு "ஒக்கேய் அண்ணி நான் வரும்போது வாங்கி வருகின்றேன்" என்று கூறிவிட்டு கதவைத் திறந்து பாதையில் நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
பனிமழை பொழிந்துகொண்டு இருந்தது. பனி பொழியும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது கரைய வெளிக்கிட்டால்தான் குளிர் தாங்க முடியாது என்று நினைத்தபடியே பஸ் நிலையத்தை அடைந்தாள். <br />
<br />
முதல் பஸ் நிலையம் என்றபடியால் ஆட்கள் குறைவாக இருந்தது. பஸ் வண்டியினுள் நுழைந்தபோது அங்கே இருந்தவர் ஒரு தெரிந்த தமிழ் பஸ் சாரதி என்றபடியால் ஒரு புன்னகையுடன் "வணக்கம்" என்று மட்டும் கூறிவிட்டு ஓர் ஆசனத்தில் போய் அமர்ந்தாள். <br />
<br />
புலம் பெயர்ந்து வந்தாலும் நம்முடைய ஆட்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்கின்றார்கள். இதற்கு காரணம் எம்மினத்தவரின் முயற்சியும் நம்பிக்கையும்தான். எமக்கு என்று நிம்மதியாக இருக்க ஒரு நாடு இருந்தால் நாம் எல்லாம் ஏன் அகதியாக எல்லா இடங்களிற்கும் அலைய வேண்டும்? என்ன வளம் இல்லை எம் ஊரில்? குளிர் இல்லை, தண்ணீருக்கு காசு கட்டத் தேவை இல்லை, அநேகமாக எல்லோருக்கும் சொந்த வீடுகள் உண்டு, ஆகவே வீட்டு வாடகையும் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்குள்ளேயே வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை பயிரிடலாம். அன்பான உறவினர்கள், ஐய்யோ என்ற குரல் கேட்டு ஒடி வரும் அயலவர்கள் என எம்மை சுற்றியே ஓர் ஆனந்தம் பரவிக்கொண்டிருக்கும். <br />
<br />
அந்த அழகான ஊரை விட்டுவந்து இங்கு கொட்டும் பனியின் குளிரால் கண்ணால் வழியும் நீரைத் துடைக்ககூட கையை தூக்க முடியாது. அவ்வளவிற்கு கைகள் எல்லாம் விறைத்துப் போயிருக்கும். அதோடு காற்றும் சேர்த்து வந்தால் சொல்லவே தேவையில்லை. உயிர் போய் வரும். <br />
<br />
கடந்தகால கற்பனையில் மிதந்திருந்த வித்தியா யாரே "பெல்" அடிக்கும் சத்தம் கேட்டு தன் சுயநினைவுக்கு வந்தாள். "என்ன இது விடியற்காலையிலேயே ஒரே குழப்பமாக இருக்கின்றதே! இன்று என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை" என்று நினைத்துவிட்டு தான் இறங்க வேண்டி இடமும் வந்துவிட்டதை உணர்ந்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
அப்போது அவசரம் அவசரமாக வந்த அவள் நண்பி ஒரு கடித உறையை அவள் கையில் திணித்து "இந்தா, இக்கடிதம் நேற்று உனக்கு வந்தது. உன்னுடைய வீட்டிற்கு போன் எடுத்தால் உனது அண்ணிக்குப் பிடிக்காது. அதுதான் இப்போ நான் வேலைக்கு போகும் வழியில் உன்னிடம் தந்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்று கூறிவிட்டு மறுபக்கமாக நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
கடிதத்தில் இருந்த கையெழுத்தைப் பார்த்ததும் அது யாரிடம் இருந்து வந்தது என்று புரிந்துவிட்டது. ஓரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அவளின் பெயருக்கு வரும் பல கடிதங்கள் காணாமல் போயிருந்தன. அதற்குக் காரணம் பல நாட்களுக்குப் பின்னர்தான் அவளுக்கு விளங்கியது. அம்மாவிடம் சொல்லி அழுதாள். மகளின் அழுகையைக் கண்ட அம்மா, "அண்ணா வரட்டும் இதைப்பற்றிக் கேட்கிறேன்" என்று கூறி மகனின் வருகைக்காக காத்திருந்தாள். "மகன் வீட்டிற்கு வந்ததும், "தம்பி இவள் வித்தியாவிற்கு இரண்டு மூன்று கடிதங்கள் அவள் ப்ரண்ட்ஸ் போட்டவையாம். இன்னும் வரவில்லையாம். நீ கடிதப்பெட்டியை செக் பண்ணினாயா?" என்று கேட்டாள். <br />
<br />
எங்கிருந்தோ அண்ணியின் காதுக்குள் அது கேட்டுவிட்டது. "ஆமாம் இவாவுக்கு வரும் கடிதங்களை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம் என்ற மாதிரியெல்லோ உங்கள் கதை போகுது. கடிதம் வந்தால் உங்குதானே இருக்கும்" என்று கத்தி ஒரு பெரிய கலாட்டாவையே உருவாக்கிவிட்டிருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் தனது நண்பியின் விலாசத்தை பாவிக்கத் தொடங்கினாள். அதன்படியே அவளின் மனதைப் பறித்த அந்த மன்மதனும் நண்பியின் விலாசத்திற்கே கடிதத்தை அனுப்பியிருக்கிறான். <br />
<br />
அம்மா இறந்தபிறகு வரும் முதல் கடிதம் அது. கட்டாயம் அவளுக்கு ஆறுதலாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள் அருகில் இருந்த கோப்பிக் கடைக்குள் புகுந்து அமைதியான ஓர் இடத்தை தெரிவு செய்து அமர்ந்து ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தாள். அதே கையெழுத்து. அதே பரிவுடன் ஆறுதல் கூறி நீண்டதொரு கடிதத்தை எழுதியிருந்தான் அவளின் மன்மதன். கடிதத்தை படித்து முடித்தவள் மீண்டும் கனவுலகில் சஞ்சரித்தாள். <br />
<br />
எப்படி அண்ணாவிடம் இந்த விடயத்தை சொல்லப்போகின்றேன். அண்ணா ஏற்றுக்கொண்டாலும் அண்ணி விடுவாளா? இக்கதையை அறிந்தாலே உடனே தன் தங்கையுடன் என்னையும் ஒப்பிட்டு கதைக்கத் தொடங்கிவிடுவாளே. அவளின் தங்கை நல்லவளாம்! குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பாளாம். ஆனால் அவள் பாடசாலையில் விடும் கூத்துக்களை பாவம் வீட்டிற்குள்ளேயே நாளெல்லாம் வளையவரும் அண்ணிக்கு எப்படித் தெரியப்போகுது? யாரிடம் சொல்லி இந்தக்கதையை அண்ணாவிற்கு தெரியப்படுத்துவது? பல உறவுகள் இருந்தாலும் யாரின் மேலேயும் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எல்லோருமே ஓருவரை ஒருவர் குறை சொல்வதிலும், மற்றவர்களைப்பற்றி வீண் கதைகள் கதைப்பதிலும் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். என்னுடைய கதையை கேள்விப்பட்டால் அவ்வளவுதான். பேப்பரில் போட்ட விசேட செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. <br />
<br />
மாலையில் வேலை முடிந்து அலுப்புடன் வீடு நோக்கிச் சென்றாள். நல்லாய் ஒரு குளியல் குளித்தால்தான் அலுப்பு எடுபடும் என்று நினைத்தவாறே குளியலறையுள் சென்றாள். நன்றாக சுடு தண்ணிரை தலையில் ஊற்றி குளித்துவிட்டு தலையைத் துடைத்தவறே அறைக்குள் சென்றவள் தனது கைப்பையை பார்த்ததும் அதிர்ந்தாள். கைப்பையை யாரோ கிளறியத்தற்கான அடையாளங்கள் அங்கே தெரிந்தன. நடுக்கத்துடன் மன்மதனின் கடிதத்தை தேடினாள். ஆனால் அது கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை உடனே ஊகித்துக் கொண்டாள். <br />
<br />
எதுவுமே அறியாதமாதிரி குசினினுக்குள் சென்று தேநீர் போடும்போதுதான் அண்ணி வாங்கி வரச்சொன்ன பால் பைக்கற்றுக்களின் நினைவு வந்தது. ஓ காட்! என்று நினைத்தவள் இன்று ஒரு பெரிய பிரச்சனை இருக்கு என்று நினைத்தாள். எது நடந்தாலும் எல்லாவற்றையும் தாங்குகின்ற சக்தியை என்க்குத்தா கடவுளே! என்று பிரார்த்தித்த வண்ணம் முன் சோபாவில் போய் அமர்ந்தாள். <br />
<br />
அண்ணி யாருக்கோ மாறி மாறி போன் எடுத்து கிசுகிசுத்து கதைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். மனம் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. என்ன கேட்கப் போகிறார்கள்? என்ன பதில் சொல்லப்போகின்றேன்? என்று அவளின் இதயம் படக் படக்கென்று அடித்து கொண்டிருந்தது. அண்ணா அடித்தாலும் பரவாய் இல்லை. ஆனால் அண்ணியின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாதே என்று நினைத்தவாறே கடவுளே கடவுளே என்று கடவுளை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள். <br />
<br />
என்ன அதிசயம்! என்றும் இல்லாதவாறு அண்ணன் அன்று வேலையால் சீக்கிரம் வந்து கொண்டிருந்தான். அண்ணைக் கண்ட அண்ணி நமட்டுச் சிரிப்புடன் எழுந்து கதவை திறக்கச் சென்றாள். இன்று நான் தொலைந்தேன் என்று நினைத்தாள் வித்தியா. அம்மா அம்மா என்று அவள் மனம் பதறியது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஆதரவாக கதைத்திருப்பாளே. இப்போ இருவரின் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்லப்போகின்றேன்? என்று கைகளைப் பிசைந்தாள். <br />
<br />
அண்ணண் சப்பாத்தைக் கழற்றாமலே கோலுக்குள் வந்தான். மறுகணம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வித்தியாவின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அதிர்ச்சியினால் தலைசுற்றியது அவளுக்கு. "அம்மா இறந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் உனக்கு காதலா?; எங்களை மதியாமல் இப்படியெல்லாம் செய்ய உனக்கு இப்படி திமிர் வந்திட்டுதா?" என்று அண்ணன் பொரியத்தொடங்கினான். <br />
<br />
"கடித்தத்தைக் கண்டவுடன் அவாவிற்கு பால் பக்கற்றும் மறந்து போச்சு" இது அண்ணி. <br />
<br />
யார்? எவன்? எப்படியனாவன்? என்று ஓரு வார்த்தை கூட கேட்கமால் அண்ணா ஏதோ ஏதோ எல்லாம் சொன்னார், கத்தினார், பயமுறுத்தினார். "வேலைக்கு போய் கிழிச்சது காணும் வீட்டில் அண்ணிக்கு துணைக்கு இரு" என்று அதிகார கட்டளையுடன் கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டார். <br />
<br />
ஆமாம் அண்ணி இங்கு வேலை செய்கின்ற கடுமையில் அவாவிற்கு துணை நான் இருக்கணுமா? எனக்குத் துணையாகத்தான் அவா இருக்கணும் என்று சொல்ல ஆசைப்பட்டாள். ஆனால் முடியவில்லை. என்னென்றால் அம்மாவின் வார்த்தைகள் அவளைக் கட்டிப்போட்டன. எண்ணங்கள் இப்படி இருந்தபோதும் அண்ணனின் கைபட்ட கன்னம் வலித்துக்கொண்டே இருந்தது. அழுது கொண்டே தனது அறையை நோக்கி நடந்தவள் தனது வாழ்வைப்பற்றி தான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயா சூழ்நிலைக்கு ஆளாக்கப் பட்டதை உணர்ந்தாள். <br />
<br />
காதல் கலியாணம் செய்து கொண்ட அண்ணனே காதலுக்கு எதிரியா? என்று நினைத்தாள். இனி வேலைக்குப் போவதும் முடியாத காரியம். வேலைக்கு போகமால் 3 நேரமும் சமைத்து சாப்பிட்டுவிட்டு இந்த அறைக்குள்ளேயே வலம் வரவேண்டுமா? அப்போ எனது கனவுகள் எல்லாம் மண்ணாகப் போகப்போகின்றனவா? இன்று சகோதரனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எனது வாழ்வை நானே சீரழிக்கப் போகின்றேனா? கொஞ்சக் காலம் பொறுத்திரு பின்பு இவைகளை யோசிப்போம் என்று அண்ணன் ஓரு வார்த்தை கூறியிருந்தால்கூட அண்ணனின் வார்த்தைகளுக்கு காலம் எல்லாம் காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் கேவலம் ஒரு வார்த்தைகூடக் கேளாது தனது தனது கன்னத்தில் அறைந்துவிட்டு தன் முடிவைச் சொன்ன அண்ணன் எந்த வகையில் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவப் போகின்றார்? <br />
<br />
காதலை ஒரு புறம் வைப்போம். அண்ணா வேலைக்குப் போகதே என்று சொன்னதன் அர்த்தம் படிக்கவும் போகக்கூடாது என்பதுதானே. ஆகவே வேலைக்குப் போகாமல், படிக்காமல் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு நாலு சினிமா நாடகங்களைப் பார்த்து பொழுது போக்கப் போவதால் என் எதிர்காலத்திற்கு எதாவது நன்மை உண்டா? அண்ணாவுடன் நான் வாழப்போகும் காலங்கள் ஆகக்குறைந்தது இன்னும் 3 வருடங்கள்தான். அதற்குப்பிறகு நான் கலியாணமாகி வேறு வீடு செல்லும்போது ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரியா போகவேண்டும்? என் வாழ்க்கையில் எவ்வளவையோ சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் எனது உள்ளம் இந்த 3 வருட சிறை வாழ்க்கையை ஏற்குமா? அண்ணியின் குத்தல் கதைகள், கேலிக்கதைகள் எல்லாமாகச் சேர்ந்து என்னை பையித்தியம் பிடிக்கும் அளவிற்கு அல்லவா கொண்டு செல்லப்போகின்றன? இரவு முழுவதும் யோசித்து யோசித்து ஓரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது தவித்தாள். அதிகாலையில் அந்தத் தவிப்பால் ஏற்பட்ட களைப்பால் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள். <br />
<br />
கள உறவுகளே வித்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். <br />
<br />
வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட்டாலும் வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு மேலும் மேலும் வருத்திக்கொண்டே இருக்கும். அதற்குள் அண்ணி வேறு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எந்நேரமும் போனில் அலட்டிக்கொண்டேயிருப்பாள் என்று எண்ணியே அன்று முதல் தான் வேலைக்குச் செல்வதென்று முடிவு செய்திருந்தாள் வித்தியா. <br />
<br />
அதிகாலையில் வேலைக்குச் செல்லும் அண்ணாவிற்கு தேநீர் வைத்துக் கொடுப்பதில் இருந்து இரண்டு வேலைகளை முடித்துவிட்டு நடுச்சாமம் வரும் அண்ணா ரவிக்கு இரவுச்சாப்பாடு செய்து கொடுப்பதுவரை இவளின் தலையில்தான். அம்மா இருக்கும் மட்டும் இவைகள் எல்லாம் அவளே பார்த்துக்கொண்டாள். அம்மாவும் அலுக்காமல் சலிக்கமால் தன் பிள்ளைகளுக்குத்தானே என்ற ஓர் உணர்வுடனே அண்ணியின் குத்தல் கதைகளையும் கேட்டும் புன்னகையுடனே சகித்து வந்தாள். சில சமயங்களில் அண்ணியின் லொள்ளுக்கள் தாங்கமால் வித்தியா எதிர்த்துக் கதைக்க முற்பட்ட பொழுதெல்லாம் அம்மர் <br />
"இஞ்சை பார் பிள்ளை! எப்படியிருந்தாலும் அவா உனது அண்ணி. ஒரு காலத்தில் எனக்கு எதாவது நடந்தால் அவர்கள்தான் உனக்கு தாயும் தகப்பனுமாக இருந்து நல்ல காரியங்கள் எல்லாம் செய்து வைக்க வேண்டும். ஆகவே பொறுமையாக இருக்கப்பழகு" என்று அறிவுரை கூறுவாள். <br />
<br />
ஐக்கெட்டை போடச் சென்றபோது அண்ணியின் அழைப்புக் கேட்டது. "ஆமா, நித்திரை தூக்கத்தில் மாகராணிக்கு கீழே வந்து கதை சொல்ல இயலாமல் இருக்கு ஆக்கும்" என்று நினைத்தபடியே திரும்பவும் மாடி ஏறி வந்து "என்ன அண்ணி?" என்று கேட்டாள். <br />
"இல்லை வித்தியா எனக்கு சரியான தலையிடியாக இருக்கின்றது, நீர் வேலையால் வரும்போது ஒரு 2 பால் பக்கற்றுக்கள் வாங்கிக்கொண்டு வாரும்" என்று கூறினாள். <br />
<br />
"என்ன அண்ணி, கடையில் பால் என்ன கடனாகவா வேண்டுவது?" என்று கேட்க நினைத்துவிட்டு "ஒக்கேய் அண்ணி நான் வரும்போது வாங்கி வருகின்றேன்" என்று கூறிவிட்டு கதவைத் திறந்து பாதையில் நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
பனிமழை பொழிந்துகொண்டு இருந்தது. பனி பொழியும்போது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது கரைய வெளிக்கிட்டால்தான் குளிர் தாங்க முடியாது என்று நினைத்தபடியே பஸ் நிலையத்தை அடைந்தாள். <br />
<br />
முதல் பஸ் நிலையம் என்றபடியால் ஆட்கள் குறைவாக இருந்தது. பஸ் வண்டியினுள் நுழைந்தபோது அங்கே இருந்தவர் ஒரு தெரிந்த தமிழ் பஸ் சாரதி என்றபடியால் ஒரு புன்னகையுடன் "வணக்கம்" என்று மட்டும் கூறிவிட்டு ஓர் ஆசனத்தில் போய் அமர்ந்தாள். <br />
<br />
புலம் பெயர்ந்து வந்தாலும் நம்முடைய ஆட்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்கின்றார்கள். இதற்கு காரணம் எம்மினத்தவரின் முயற்சியும் நம்பிக்கையும்தான். எமக்கு என்று நிம்மதியாக இருக்க ஒரு நாடு இருந்தால் நாம் எல்லாம் ஏன் அகதியாக எல்லா இடங்களிற்கும் அலைய வேண்டும்? என்ன வளம் இல்லை எம் ஊரில்? குளிர் இல்லை, தண்ணீருக்கு காசு கட்டத் தேவை இல்லை, அநேகமாக எல்லோருக்கும் சொந்த வீடுகள் உண்டு, ஆகவே வீட்டு வாடகையும் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்குள்ளேயே வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை பயிரிடலாம். அன்பான உறவினர்கள், ஐய்யோ என்ற குரல் கேட்டு ஒடி வரும் அயலவர்கள் என எம்மை சுற்றியே ஓர் ஆனந்தம் பரவிக்கொண்டிருக்கும். <br />
<br />
அந்த அழகான ஊரை விட்டுவந்து இங்கு கொட்டும் பனியின் குளிரால் கண்ணால் வழியும் நீரைத் துடைக்ககூட கையை தூக்க முடியாது. அவ்வளவிற்கு கைகள் எல்லாம் விறைத்துப் போயிருக்கும். அதோடு காற்றும் சேர்த்து வந்தால் சொல்லவே தேவையில்லை. உயிர் போய் வரும். <br />
<br />
கடந்தகால கற்பனையில் மிதந்திருந்த வித்தியா யாரே "பெல்" அடிக்கும் சத்தம் கேட்டு தன் சுயநினைவுக்கு வந்தாள். "என்ன இது விடியற்காலையிலேயே ஒரே குழப்பமாக இருக்கின்றதே! இன்று என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை" என்று நினைத்துவிட்டு தான் இறங்க வேண்டி இடமும் வந்துவிட்டதை உணர்ந்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
அப்போது அவசரம் அவசரமாக வந்த அவள் நண்பி ஒரு கடித உறையை அவள் கையில் திணித்து "இந்தா, இக்கடிதம் நேற்று உனக்கு வந்தது. உன்னுடைய வீட்டிற்கு போன் எடுத்தால் உனது அண்ணிக்குப் பிடிக்காது. அதுதான் இப்போ நான் வேலைக்கு போகும் வழியில் உன்னிடம் தந்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்று கூறிவிட்டு மறுபக்கமாக நடக்கத் தொடங்கினாள். <br />
<br />
கடிதத்தில் இருந்த கையெழுத்தைப் பார்த்ததும் அது யாரிடம் இருந்து வந்தது என்று புரிந்துவிட்டது. ஓரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அவளின் பெயருக்கு வரும் பல கடிதங்கள் காணாமல் போயிருந்தன. அதற்குக் காரணம் பல நாட்களுக்குப் பின்னர்தான் அவளுக்கு விளங்கியது. அம்மாவிடம் சொல்லி அழுதாள். மகளின் அழுகையைக் கண்ட அம்மா, "அண்ணா வரட்டும் இதைப்பற்றிக் கேட்கிறேன்" என்று கூறி மகனின் வருகைக்காக காத்திருந்தாள். "மகன் வீட்டிற்கு வந்ததும், "தம்பி இவள் வித்தியாவிற்கு இரண்டு மூன்று கடிதங்கள் அவள் ப்ரண்ட்ஸ் போட்டவையாம். இன்னும் வரவில்லையாம். நீ கடிதப்பெட்டியை செக் பண்ணினாயா?" என்று கேட்டாள். <br />
<br />
எங்கிருந்தோ அண்ணியின் காதுக்குள் அது கேட்டுவிட்டது. "ஆமாம் இவாவுக்கு வரும் கடிதங்களை நாங்கள்தான் எடுத்து வைத்திருக்கிறோம் என்ற மாதிரியெல்லோ உங்கள் கதை போகுது. கடிதம் வந்தால் உங்குதானே இருக்கும்" என்று கத்தி ஒரு பெரிய கலாட்டாவையே உருவாக்கிவிட்டிருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் தனது நண்பியின் விலாசத்தை பாவிக்கத் தொடங்கினாள். அதன்படியே அவளின் மனதைப் பறித்த அந்த மன்மதனும் நண்பியின் விலாசத்திற்கே கடிதத்தை அனுப்பியிருக்கிறான். <br />
<br />
அம்மா இறந்தபிறகு வரும் முதல் கடிதம் அது. கட்டாயம் அவளுக்கு ஆறுதலாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள் அருகில் இருந்த கோப்பிக் கடைக்குள் புகுந்து அமைதியான ஓர் இடத்தை தெரிவு செய்து அமர்ந்து ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தாள். அதே கையெழுத்து. அதே பரிவுடன் ஆறுதல் கூறி நீண்டதொரு கடிதத்தை எழுதியிருந்தான் அவளின் மன்மதன். கடிதத்தை படித்து முடித்தவள் மீண்டும் கனவுலகில் சஞ்சரித்தாள். <br />
<br />
எப்படி அண்ணாவிடம் இந்த விடயத்தை சொல்லப்போகின்றேன். அண்ணா ஏற்றுக்கொண்டாலும் அண்ணி விடுவாளா? இக்கதையை அறிந்தாலே உடனே தன் தங்கையுடன் என்னையும் ஒப்பிட்டு கதைக்கத் தொடங்கிவிடுவாளே. அவளின் தங்கை நல்லவளாம்! குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பாளாம். ஆனால் அவள் பாடசாலையில் விடும் கூத்துக்களை பாவம் வீட்டிற்குள்ளேயே நாளெல்லாம் வளையவரும் அண்ணிக்கு எப்படித் தெரியப்போகுது? யாரிடம் சொல்லி இந்தக்கதையை அண்ணாவிற்கு தெரியப்படுத்துவது? பல உறவுகள் இருந்தாலும் யாரின் மேலேயும் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எல்லோருமே ஓருவரை ஒருவர் குறை சொல்வதிலும், மற்றவர்களைப்பற்றி வீண் கதைகள் கதைப்பதிலும் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். என்னுடைய கதையை கேள்விப்பட்டால் அவ்வளவுதான். பேப்பரில் போட்ட விசேட செய்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. <br />
<br />
மாலையில் வேலை முடிந்து அலுப்புடன் வீடு நோக்கிச் சென்றாள். நல்லாய் ஒரு குளியல் குளித்தால்தான் அலுப்பு எடுபடும் என்று நினைத்தவாறே குளியலறையுள் சென்றாள். நன்றாக சுடு தண்ணிரை தலையில் ஊற்றி குளித்துவிட்டு தலையைத் துடைத்தவறே அறைக்குள் சென்றவள் தனது கைப்பையை பார்த்ததும் அதிர்ந்தாள். கைப்பையை யாரோ கிளறியத்தற்கான அடையாளங்கள் அங்கே தெரிந்தன. நடுக்கத்துடன் மன்மதனின் கடிதத்தை தேடினாள். ஆனால் அது கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை உடனே ஊகித்துக் கொண்டாள். <br />
<br />
எதுவுமே அறியாதமாதிரி குசினினுக்குள் சென்று தேநீர் போடும்போதுதான் அண்ணி வாங்கி வரச்சொன்ன பால் பைக்கற்றுக்களின் நினைவு வந்தது. ஓ காட்! என்று நினைத்தவள் இன்று ஒரு பெரிய பிரச்சனை இருக்கு என்று நினைத்தாள். எது நடந்தாலும் எல்லாவற்றையும் தாங்குகின்ற சக்தியை என்க்குத்தா கடவுளே! என்று பிரார்த்தித்த வண்ணம் முன் சோபாவில் போய் அமர்ந்தாள். <br />
<br />
அண்ணி யாருக்கோ மாறி மாறி போன் எடுத்து கிசுகிசுத்து கதைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். மனம் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. என்ன கேட்கப் போகிறார்கள்? என்ன பதில் சொல்லப்போகின்றேன்? என்று அவளின் இதயம் படக் படக்கென்று அடித்து கொண்டிருந்தது. அண்ணா அடித்தாலும் பரவாய் இல்லை. ஆனால் அண்ணியின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாதே என்று நினைத்தவாறே கடவுளே கடவுளே என்று கடவுளை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள். <br />
<br />
என்ன அதிசயம்! என்றும் இல்லாதவாறு அண்ணன் அன்று வேலையால் சீக்கிரம் வந்து கொண்டிருந்தான். அண்ணைக் கண்ட அண்ணி நமட்டுச் சிரிப்புடன் எழுந்து கதவை திறக்கச் சென்றாள். இன்று நான் தொலைந்தேன் என்று நினைத்தாள் வித்தியா. அம்மா அம்மா என்று அவள் மனம் பதறியது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஆதரவாக கதைத்திருப்பாளே. இப்போ இருவரின் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்லப்போகின்றேன்? என்று கைகளைப் பிசைந்தாள். <br />
<br />
அண்ணண் சப்பாத்தைக் கழற்றாமலே கோலுக்குள் வந்தான். மறுகணம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வித்தியாவின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அதிர்ச்சியினால் தலைசுற்றியது அவளுக்கு. "அம்மா இறந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் உனக்கு காதலா?; எங்களை மதியாமல் இப்படியெல்லாம் செய்ய உனக்கு இப்படி திமிர் வந்திட்டுதா?" என்று அண்ணன் பொரியத்தொடங்கினான். <br />
<br />
"கடித்தத்தைக் கண்டவுடன் அவாவிற்கு பால் பக்கற்றும் மறந்து போச்சு" இது அண்ணி. <br />
<br />
யார்? எவன்? எப்படியனாவன்? என்று ஓரு வார்த்தை கூட கேட்கமால் அண்ணா ஏதோ ஏதோ எல்லாம் சொன்னார், கத்தினார், பயமுறுத்தினார். "வேலைக்கு போய் கிழிச்சது காணும் வீட்டில் அண்ணிக்கு துணைக்கு இரு" என்று அதிகார கட்டளையுடன் கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டார். <br />
<br />
ஆமாம் அண்ணி இங்கு வேலை செய்கின்ற கடுமையில் அவாவிற்கு துணை நான் இருக்கணுமா? எனக்குத் துணையாகத்தான் அவா இருக்கணும் என்று சொல்ல ஆசைப்பட்டாள். ஆனால் முடியவில்லை. என்னென்றால் அம்மாவின் வார்த்தைகள் அவளைக் கட்டிப்போட்டன. எண்ணங்கள் இப்படி இருந்தபோதும் அண்ணனின் கைபட்ட கன்னம் வலித்துக்கொண்டே இருந்தது. அழுது கொண்டே தனது அறையை நோக்கி நடந்தவள் தனது வாழ்வைப்பற்றி தான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயா சூழ்நிலைக்கு ஆளாக்கப் பட்டதை உணர்ந்தாள். <br />
<br />
காதல் கலியாணம் செய்து கொண்ட அண்ணனே காதலுக்கு எதிரியா? என்று நினைத்தாள். இனி வேலைக்குப் போவதும் முடியாத காரியம். வேலைக்கு போகமால் 3 நேரமும் சமைத்து சாப்பிட்டுவிட்டு இந்த அறைக்குள்ளேயே வலம் வரவேண்டுமா? அப்போ எனது கனவுகள் எல்லாம் மண்ணாகப் போகப்போகின்றனவா? இன்று சகோதரனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எனது வாழ்வை நானே சீரழிக்கப் போகின்றேனா? கொஞ்சக் காலம் பொறுத்திரு பின்பு இவைகளை யோசிப்போம் என்று அண்ணன் ஓரு வார்த்தை கூறியிருந்தால்கூட அண்ணனின் வார்த்தைகளுக்கு காலம் எல்லாம் காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் கேவலம் ஒரு வார்த்தைகூடக் கேளாது தனது தனது கன்னத்தில் அறைந்துவிட்டு தன் முடிவைச் சொன்ன அண்ணன் எந்த வகையில் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவப் போகின்றார்? <br />
<br />
காதலை ஒரு புறம் வைப்போம். அண்ணா வேலைக்குப் போகதே என்று சொன்னதன் அர்த்தம் படிக்கவும் போகக்கூடாது என்பதுதானே. ஆகவே வேலைக்குப் போகாமல், படிக்காமல் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு சாப்பிட்டு நாலு சினிமா நாடகங்களைப் பார்த்து பொழுது போக்கப் போவதால் என் எதிர்காலத்திற்கு எதாவது நன்மை உண்டா? அண்ணாவுடன் நான் வாழப்போகும் காலங்கள் ஆகக்குறைந்தது இன்னும் 3 வருடங்கள்தான். அதற்குப்பிறகு நான் கலியாணமாகி வேறு வீடு செல்லும்போது ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரியா போகவேண்டும்? என் வாழ்க்கையில் எவ்வளவையோ சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் எனது உள்ளம் இந்த 3 வருட சிறை வாழ்க்கையை ஏற்குமா? அண்ணியின் குத்தல் கதைகள், கேலிக்கதைகள் எல்லாமாகச் சேர்ந்து என்னை பையித்தியம் பிடிக்கும் அளவிற்கு அல்லவா கொண்டு செல்லப்போகின்றன? இரவு முழுவதும் யோசித்து யோசித்து ஓரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது தவித்தாள். அதிகாலையில் அந்தத் தவிப்பால் ஏற்பட்ட களைப்பால் தன்னையறியாமலேயே உறங்கிவிட்டாள். <br />
<br />
கள உறவுகளே வித்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நட்சத்திரங்கள் என் சொந்தம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=687</link>
			<pubDate>Mon, 27 Feb 2006 03:06:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1468">Snegethy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=687</guid>
			<description><![CDATA[                    எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறகு யாழ்ப்பக்கம்வாறன்.எல்லாரும் நலமா?என்னை மறக்கேல்ல தானே:-)<br />
<br />
[b]&lt;span style='color:darkblue'&gt;நட்சத்திரங்கள் என் சொந்தம்<br />
<br />
&lt;img src='http://img508.imageshack.us/img508/7311/star6ut.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
[size=15]நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.<br />
<br />
\"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே..\"<br />
<br />
\"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்.\"<br />
<br />
அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.<br />
<br />
நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.<br />
விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது.கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமா நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன்.பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.<br />
<br />
இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  உலா வரத் தொடங்கின.<br />
<br />
நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.<br />
<br />
அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரயி கதையெல்லாம் கதைப்பினம்.அம்மா பழங்களரிந்து தருவா கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து "அப்பிடியென்டாலென்ன ..ஏன் அப்பிடிச் சொன்னவை" இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன்.என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.<br />
<br />
பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா.அங்க பாரு அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்..விடிஞ்சாப்பிறகும் இந்த நட்சத்திரம் இருக்கும்...அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு.இங்க பார் விருச்சிகம்..இப்பிடியெல்லாம் சொல்லுவா.<br />
<br />
சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும்.தாங்கள் நினச்சததான் செய்வினம் சொல்லுவினம்.ஒரு இரண்டு வயசுப்பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக்கொடுத்திட்டு அடுத்த நாள் அச்சாக்குட்டியெல்லா ஒன்று இரண்டு சொல்லிக்காட்டுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ."ஆ.. ஆ.. ஆ.. "என்று காது கேக்காத மாதரி இருப்பினம்...வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்..ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.."ஒன்ரு ரன்று மூன்ரு..".<br />
<br />
அதப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம்.பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா.நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.<br />
<br />
எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில் கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும்.அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில்.முன்னால ஒரு பலாமரம்.அங்கதான் ஊராக்ள் இரவு இருந்து விடுப்புக் கதைக்கிறது.நான் அக்கா சுபாசினி சுஜி சிந்து கவி யனா நிமல் டொம்மா இப்பிடி நிறைய பேர்.<br />
<br />
எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும்.அப்ப பரா அன்ரி எனக்கு காட்டி விட்ட நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன்.பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம் சின்ன குறூப் ஒருபக்ம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.<br />
<br />
சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள்.சண்டை நேரத்தில அந்த பங்கர் தான் எங்களுக்குப் பள்ளிங்கூடம்.விளையாட்டுத்திடல எல்லாம்.திருவலகை திரிபோசா மா சீனி..ஹி ஹி அதான் சாப்பாடு.அங்க யாரும் செல் விழுந்து சாகேல...தப்பித்தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.<br />
<br />
வேப்ப மரத்துக்கு கீழ தான் பங்கர்.பங்கருக்குப்போற வழி வீட்டிலதான் தொடங்கும்.வெளில நின்று பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது.அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை.புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போகுது.செல் கூவிக்கொண்டு போகுது.<br />
<br />
அடுத்த நாள் ஒரே அமைதி.பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு.வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம்.ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது.நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை..இந்தியன் ஆமி வந்தநேரம் கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை.நாங்கள் எங்கட பாடு.<br />
<br />
எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி.ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி.போறேல்ல என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.<br />
<br />
இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம்.சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு.இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல்.இப்பிடி எல்;லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம்.எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்ப கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போறம்.ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.<br />
<br />
சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை. <br />
<br />
"அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல."<br />
<br />
"ய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா"<br />
<br />
நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.<br />
<br />
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்.து எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.<br />
<br />
ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள்; பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.<br />
<br />
இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன. <br />
<br />
ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ? &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    எல்லாருக்கும் வணக்கம்.கனநாட்களுக்குப்பிறகு யாழ்ப்பக்கம்வாறன்.எல்லாரும் நலமா?என்னை மறக்கேல்ல தானே:-)<br />
<br />
[b]&lt;span style='color:darkblue'&gt;நட்சத்திரங்கள் என் சொந்தம்<br />
<br />
&lt;img src='http://img508.imageshack.us/img508/7311/star6ut.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
[size=15]நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.<br />
<br />
\"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே..\"<br />
<br />
\"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்.\"<br />
<br />
அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.<br />
<br />
நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.<br />
விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது.கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமா நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன்.பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.<br />
<br />
இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  உலா வரத் தொடங்கின.<br />
<br />
நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.<br />
<br />
அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரயி கதையெல்லாம் கதைப்பினம்.அம்மா பழங்களரிந்து தருவா கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து "அப்பிடியென்டாலென்ன ..ஏன் அப்பிடிச் சொன்னவை" இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன்.என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.<br />
<br />
பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா.அங்க பாரு அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்..விடிஞ்சாப்பிறகும் இந்த நட்சத்திரம் இருக்கும்...அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு.இங்க பார் விருச்சிகம்..இப்பிடியெல்லாம் சொல்லுவா.<br />
<br />
சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும்.தாங்கள் நினச்சததான் செய்வினம் சொல்லுவினம்.ஒரு இரண்டு வயசுப்பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக்கொடுத்திட்டு அடுத்த நாள் அச்சாக்குட்டியெல்லா ஒன்று இரண்டு சொல்லிக்காட்டுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ."ஆ.. ஆ.. ஆ.. "என்று காது கேக்காத மாதரி இருப்பினம்...வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்..ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.."ஒன்ரு ரன்று மூன்ரு..".<br />
<br />
அதப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம்.பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா.நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.<br />
<br />
எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில் கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும்.அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில்.முன்னால ஒரு பலாமரம்.அங்கதான் ஊராக்ள் இரவு இருந்து விடுப்புக் கதைக்கிறது.நான் அக்கா சுபாசினி சுஜி சிந்து கவி யனா நிமல் டொம்மா இப்பிடி நிறைய பேர்.<br />
<br />
எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும்.அப்ப பரா அன்ரி எனக்கு காட்டி விட்ட நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன்.பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம் சின்ன குறூப் ஒருபக்ம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.<br />
<br />
சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள்.சண்டை நேரத்தில அந்த பங்கர் தான் எங்களுக்குப் பள்ளிங்கூடம்.விளையாட்டுத்திடல எல்லாம்.திருவலகை திரிபோசா மா சீனி..ஹி ஹி அதான் சாப்பாடு.அங்க யாரும் செல் விழுந்து சாகேல...தப்பித்தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.<br />
<br />
வேப்ப மரத்துக்கு கீழ தான் பங்கர்.பங்கருக்குப்போற வழி வீட்டிலதான் தொடங்கும்.வெளில நின்று பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது.அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை.புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போகுது.செல் கூவிக்கொண்டு போகுது.<br />
<br />
அடுத்த நாள் ஒரே அமைதி.பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு.வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம்.ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது.நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை..இந்தியன் ஆமி வந்தநேரம் கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை.நாங்கள் எங்கட பாடு.<br />
<br />
எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி.ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி.போறேல்ல என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.<br />
<br />
இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம்.சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு.இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல்.இப்பிடி எல்;லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம்.எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்ப கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போறம்.ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.<br />
<br />
சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை. <br />
<br />
"அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல."<br />
<br />
"ய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா"<br />
<br />
நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.<br />
<br />
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்.து எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.<br />
<br />
ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள்; பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.<br />
<br />
இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன. <br />
<br />
ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ? &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பூ ஒன்று புலியாகின்றது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=708</link>
			<pubDate>Sat, 25 Feb 2006 18:07:16 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1523">RaMa</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=708</guid>
			<description><![CDATA[                    சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்லங்கள் பொழிந்தவள் இந்த விது. அப்பா சாப்பிடும்போது ஓரு வாய் அம்மா சாப்பிடும்போது இன்னொரு வாய் சோறு அம்மம்மா சாப்பிடும்போது இன்னொரு முறை. ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்லை. <br />
<br />
<br />
பாடசாலை பருவமும் வந்தது.  படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. ஆனால் ஆசிரியர்களிடம் அடி வேண்டும் சந்தர்ப்பங்கள் குறைவு தான். பருவ வயதையும் அடைந்தும் விட்டாள். நாட்டின் நிலமை காரணமாக ஒவ்வொரு அண்ணண்மாரும் கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு என்ன நாட்டையே விட்டு போனார்கள். ஒரு அதிகாலை பொழுதில் அம்மம்மாவும் இயற்கையை ஏய்தி விட்டார். கடைசியில் எஞ்சியது அப்பாவும் அம்மாவும் அவளும் தான்.  <br />
<br />
அண்ணன்மார்களின் நக்கல் பேச்சுக்களை கோபத்துடனே ரசித்து வந்தவளுக்கு எல்லாமே வெறுமையாகின. அண்ணன்மார்களும் போன நாட்டில் இருந்து வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போட்டார்கள். கடிதத்துடனே அழகான படங்கள். காருடன் நின்று ஓரு படம்.  மாடிப்படிகளில் நின்று இன்னொரு படம். அழகான புற்றரையில் நின்று ஓரு படம் என்று வீட்டிலிருக்கும் அல்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் வெகு சீக்கிரம் உங்களையும் இவ்விடம் அழைத்து விடுவோம் என்கின்ற வேதவாக்கியங்கள் வேறை.  <br />
<br />
அன்புக்கு பதிலாக பணம் வீட்டில் கொட்டத் தொடங்கியது. ஆகா இனி இங்கு படித்து என்ன செய்ய போகின்றேன். விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆங்கிலம் தானாகவே வந்து நாக்கில் ஒட்டுக்கொள்ளும் என்ற நினைப்பில் படிப்பில் கொஞ்சம் இருந்த ஆர்வத்தையும் இழந்தாள். கனவு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். ஒவ்வொரு உடுப்புக்களும் வாங்கும் போதும் கனடாவிற்கு கொண்டு போக கூடிய உடுப்பாக தான் வாங்குவாள். கனடா போனால் இவர்கள் எல்லாம் எதற்கு என்ற எண்ணத்துடன் நெருங்கி வந்த தோழிகள் எல்லோரையும் விட்டு விலத்தினாள். <br />
<br />
ஓரு அழகான காலை நேரத்தில் பூந்தோட்டத்தில் அழகாக பூத்து குலுங்கியிருந்த ரோஐh பூவைப்பார்த்து தன்னையே மறந்து நின்றாள். காகங்கள் கரைந்து கொண்டு இருக்கையில் வானத்தில் ஒரு இரைச்சல். அந்த இரைச்சல் பேரிரைச்சலாக மாறி ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்டது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது. சிறு துளி ஒன்று முகத்தில் பட துடித்து எழுந்தாள். எங்குமே புழுதி மண்டலமாக இருந்தது. அழுகைக்குரல் அந்த பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருந்தது. தனது முகத்தில் பட்ட துளியை தடவி பார்த்தாள். ஐய்யோ என்ன இது இரத்த துளி எல்லோ என்று அதிர்ந்தாள். நினைவு வந்தவளாக அம்மா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுப்பக்கம் ஒடினாள். ம்ம் அம்மா அப்பா சிரித்தபடியே ஒருவர் மேல் ஓருவர் தலைசாய்ந்து படுத்து இருந்தனார் எப்பவும் முகத்தை கடுமையாக வைத்திருக்கும் அப்பா கூட அன்று சிரித்தபடி படுத்திருந்தார்.  அந்த முற்றத்து மல்லிகை முற்றாக கருகிக் கிடந்தது. ஒடி வந்து பெற்றோரை கட்டி அணைத்து அழுதாள். அழுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் அம்மா அப்பா இனி உயிருடன் இல்லை என்ற உண்மை மட்டும் அவளுக்கு மனதில் உறைத்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? இவளின் வீட்டில் இருவர் சாவு என்றால் பக்கத்து வீட்டு சாமினி அக்கா வீட்டில் மூவர். <br />
<br />
கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கங்கள் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்?  இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில். சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா? அம்மாக்கும் அப்பாவிற்கும் வித விதமான படங்கள் அனுப்பும் அண்ணண்மார்கள் பெற்றோரின் உடலை சாம்பலாக கூட பார்க்க இயலாமல் இருக்கும் என்பதை அறிந்து இருப்பார்களா? இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? சிங்களவன் நம்மை அடிமைபடுத்தியதாலா? எனது வீடு எனது சொந்தம் என்று நமக்கு நாமே ஓரு வட்டம் போட்டு இருந்தது தான் காரணமா?  இன்று உறவுகளை இழந்து தனிமரம் நான் நாளை யாரோ? இதற்கு முடிவே இல்லையா? என்று யோசித்தவள் கண்ணீரை துடைத்தாள். புது உணர்வு முகத்தில் தெரிந்தது. "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு" என்ற பாடல் வரிகள் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருந்தது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்லங்கள் பொழிந்தவள் இந்த விது. அப்பா சாப்பிடும்போது ஓரு வாய் அம்மா சாப்பிடும்போது இன்னொரு வாய் சோறு அம்மம்மா சாப்பிடும்போது இன்னொரு முறை. ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்லை. <br />
<br />
<br />
பாடசாலை பருவமும் வந்தது.  படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. ஆனால் ஆசிரியர்களிடம் அடி வேண்டும் சந்தர்ப்பங்கள் குறைவு தான். பருவ வயதையும் அடைந்தும் விட்டாள். நாட்டின் நிலமை காரணமாக ஒவ்வொரு அண்ணண்மாரும் கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு என்ன நாட்டையே விட்டு போனார்கள். ஒரு அதிகாலை பொழுதில் அம்மம்மாவும் இயற்கையை ஏய்தி விட்டார். கடைசியில் எஞ்சியது அப்பாவும் அம்மாவும் அவளும் தான்.  <br />
<br />
அண்ணன்மார்களின் நக்கல் பேச்சுக்களை கோபத்துடனே ரசித்து வந்தவளுக்கு எல்லாமே வெறுமையாகின. அண்ணன்மார்களும் போன நாட்டில் இருந்து வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போட்டார்கள். கடிதத்துடனே அழகான படங்கள். காருடன் நின்று ஓரு படம்.  மாடிப்படிகளில் நின்று இன்னொரு படம். அழகான புற்றரையில் நின்று ஓரு படம் என்று வீட்டிலிருக்கும் அல்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் வெகு சீக்கிரம் உங்களையும் இவ்விடம் அழைத்து விடுவோம் என்கின்ற வேதவாக்கியங்கள் வேறை.  <br />
<br />
அன்புக்கு பதிலாக பணம் வீட்டில் கொட்டத் தொடங்கியது. ஆகா இனி இங்கு படித்து என்ன செய்ய போகின்றேன். விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆங்கிலம் தானாகவே வந்து நாக்கில் ஒட்டுக்கொள்ளும் என்ற நினைப்பில் படிப்பில் கொஞ்சம் இருந்த ஆர்வத்தையும் இழந்தாள். கனவு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். ஒவ்வொரு உடுப்புக்களும் வாங்கும் போதும் கனடாவிற்கு கொண்டு போக கூடிய உடுப்பாக தான் வாங்குவாள். கனடா போனால் இவர்கள் எல்லாம் எதற்கு என்ற எண்ணத்துடன் நெருங்கி வந்த தோழிகள் எல்லோரையும் விட்டு விலத்தினாள். <br />
<br />
ஓரு அழகான காலை நேரத்தில் பூந்தோட்டத்தில் அழகாக பூத்து குலுங்கியிருந்த ரோஐh பூவைப்பார்த்து தன்னையே மறந்து நின்றாள். காகங்கள் கரைந்து கொண்டு இருக்கையில் வானத்தில் ஒரு இரைச்சல். அந்த இரைச்சல் பேரிரைச்சலாக மாறி ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்டது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது. சிறு துளி ஒன்று முகத்தில் பட துடித்து எழுந்தாள். எங்குமே புழுதி மண்டலமாக இருந்தது. அழுகைக்குரல் அந்த பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருந்தது. தனது முகத்தில் பட்ட துளியை தடவி பார்த்தாள். ஐய்யோ என்ன இது இரத்த துளி எல்லோ என்று அதிர்ந்தாள். நினைவு வந்தவளாக அம்மா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுப்பக்கம் ஒடினாள். ம்ம் அம்மா அப்பா சிரித்தபடியே ஒருவர் மேல் ஓருவர் தலைசாய்ந்து படுத்து இருந்தனார் எப்பவும் முகத்தை கடுமையாக வைத்திருக்கும் அப்பா கூட அன்று சிரித்தபடி படுத்திருந்தார்.  அந்த முற்றத்து மல்லிகை முற்றாக கருகிக் கிடந்தது. ஒடி வந்து பெற்றோரை கட்டி அணைத்து அழுதாள். அழுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் அம்மா அப்பா இனி உயிருடன் இல்லை என்ற உண்மை மட்டும் அவளுக்கு மனதில் உறைத்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? இவளின் வீட்டில் இருவர் சாவு என்றால் பக்கத்து வீட்டு சாமினி அக்கா வீட்டில் மூவர். <br />
<br />
கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கங்கள் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்?  இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில். சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா? அம்மாக்கும் அப்பாவிற்கும் வித விதமான படங்கள் அனுப்பும் அண்ணண்மார்கள் பெற்றோரின் உடலை சாம்பலாக கூட பார்க்க இயலாமல் இருக்கும் என்பதை அறிந்து இருப்பார்களா? இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? சிங்களவன் நம்மை அடிமைபடுத்தியதாலா? எனது வீடு எனது சொந்தம் என்று நமக்கு நாமே ஓரு வட்டம் போட்டு இருந்தது தான் காரணமா?  இன்று உறவுகளை இழந்து தனிமரம் நான் நாளை யாரோ? இதற்கு முடிவே இல்லையா? என்று யோசித்தவள் கண்ணீரை துடைத்தாள். புது உணர்வு முகத்தில் தெரிந்தது. "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு" என்ற பாடல் வரிகள் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருந்தது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மறதி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=722</link>
			<pubDate>Fri, 24 Feb 2006 16:58:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1463">Jenany</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=722</guid>
			<description><![CDATA[                    மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். <br />
ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள்.<br />
<br />
அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த தாளை எடுத்துச் சரிபார்த்தேன். பையுடன் கூடிய கடைச்சாமான்...டிக் அடித்தேன். சைக்கிள்...டிக் அடித்தேன்...பர்ஸ்.... டிக் அடித்தேன். திருப்தியுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். மனைவியிடம், 'எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார். இப்போது மறதியை வென்று விட்டேன்' என்று கூறி புன்னகை பூத்தேன். சரிபார்த்தவள், வாசல்பக்கம் போனாள். சைக்கிளை திரும்பக் கொண்டு வந்துவிட்டேனா என்பதைப் பார்க்கப் போகிறாள் என்ரு நினைத்துக்கொண்டேன்.... என்னை ஏற இறங்கப் பார்த்தவள் கேட்டாள்.<br />
<br />
" கடைக்குப் போகும்போது, சைக்கிளில் நம்ம பையன் ரமேஷை  முன்னால் வைத்துக்கொண்டு போனீர்களே? அவனைக் காணோமே...அவன் எங்கே?...."<br />
திருதிருவென விழித்தேன்.<br />
<br />
நன்றி: குமுதம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். <br />
ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள்.<br />
<br />
அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த தாளை எடுத்துச் சரிபார்த்தேன். பையுடன் கூடிய கடைச்சாமான்...டிக் அடித்தேன். சைக்கிள்...டிக் அடித்தேன்...பர்ஸ்.... டிக் அடித்தேன். திருப்தியுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். மனைவியிடம், 'எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார். இப்போது மறதியை வென்று விட்டேன்' என்று கூறி புன்னகை பூத்தேன். சரிபார்த்தவள், வாசல்பக்கம் போனாள். சைக்கிளை திரும்பக் கொண்டு வந்துவிட்டேனா என்பதைப் பார்க்கப் போகிறாள் என்ரு நினைத்துக்கொண்டேன்.... என்னை ஏற இறங்கப் பார்த்தவள் கேட்டாள்.<br />
<br />
" கடைக்குப் போகும்போது, சைக்கிளில் நம்ம பையன் ரமேஷை  முன்னால் வைத்துக்கொண்டு போனீர்களே? அவனைக் காணோமே...அவன் எங்கே?...."<br />
திருதிருவென விழித்தேன்.<br />
<br />
நன்றி: குமுதம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பூமிக்கொரு எதிர்காலம் தேடி - கருத்துக்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=776</link>
			<pubDate>Mon, 20 Feb 2006 23:12:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2078">கறுப்பி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=776</guid>
			<description><![CDATA[                    அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள்<br />
<br />
குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள்<br />
<br />
குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி                     ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பூமிக்கொரு எதிர்காலம் தேடி - விஞ்ஞானச் சிறுகதை.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=777</link>
			<pubDate>Mon, 20 Feb 2006 22:53:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=12">kuruvikal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=777</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது...&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img112.imageshack.us/img112/8382/marsrover7oh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;புரொவ் சங்கர்&lt;/b&gt; ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?!<br />
<br />
&lt;b&gt;புரொவ் சுதர்சன்&lt;/b&gt; ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும்.<br />
<br />
இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது..<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt; : என்னது சைரன் சத்தம் வருகிறது...<br />
<br />
சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்...<br />
<br />
கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt;: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??!<br />
<br />
&lt;b&gt;சுதர்சன்&lt;/b&gt; : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது..<br />
<br />
அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அதைக் கண்டுவிட்டு<br />
<br />
&lt;b&gt;சுதர்சன்&lt;/b&gt;: என்ன சங்கர்..தன்னியக்க அவசர மீட்பு தொடங்கிட்டுது.. ரோபோ திலீபன் எங்களை நோக்கி வருகிறது..<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt;: பொறுங்கள்..அது என்ன சொல்லப் போகிறது என்று கவனித்து செயற்படுவோம்..<br />
<br />
&lt;img src='http://img112.imageshack.us/img112/3261/statacuterobot7kb.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
சங்கர், சுதர்சனை நெருங்கிய ரோபோ.. தமிழில்... "புரொவ் சங்கர் உங்களுக்கு ஆபத்து.. உடனடியாக இக்கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்.<br />
உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் இருவரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள்...<br />
<br />
ரோபோ திலீபனின் கட்டளைப்படி தலைவர்கள் இருவரும் அதனைப் பின் தொடர்கின்றனர்...<br />
<br />
மிகுதி தொடரும்...<br />
<br />
(கள உறவுகளே இத்தொடரை குருவிகள் தான் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை... நீங்களும் உங்களுக்குள் தோன்றும் கற்பனையை விஞ்ஞான வடிவத்தோடு கலந்து இங்கு தந்து இத்தொடரை நகர்த்திச் செல்லலாம்..கட்டம் கட்டமா...! இறுதி இலக்கு நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்ல நாமும் உங்களுக்கு உதவுவோம்..! முயற்சிப்போமா...!)<br />
<br />
இதற்குள் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது...&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img112.imageshack.us/img112/8382/marsrover7oh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;புரொவ் சங்கர்&lt;/b&gt; ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?!<br />
<br />
&lt;b&gt;புரொவ் சுதர்சன்&lt;/b&gt; ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும்.<br />
<br />
இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது..<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt; : என்னது சைரன் சத்தம் வருகிறது...<br />
<br />
சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்...<br />
<br />
கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt;: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??!<br />
<br />
&lt;b&gt;சுதர்சன்&lt;/b&gt; : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது..<br />
<br />
அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அதைக் கண்டுவிட்டு<br />
<br />
&lt;b&gt;சுதர்சன்&lt;/b&gt;: என்ன சங்கர்..தன்னியக்க அவசர மீட்பு தொடங்கிட்டுது.. ரோபோ திலீபன் எங்களை நோக்கி வருகிறது..<br />
<br />
&lt;b&gt;சங்கர்&lt;/b&gt;: பொறுங்கள்..அது என்ன சொல்லப் போகிறது என்று கவனித்து செயற்படுவோம்..<br />
<br />
&lt;img src='http://img112.imageshack.us/img112/3261/statacuterobot7kb.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
சங்கர், சுதர்சனை நெருங்கிய ரோபோ.. தமிழில்... "புரொவ் சங்கர் உங்களுக்கு ஆபத்து.. உடனடியாக இக்கட்டடத்தை விட்டு வெளியேறுங்கள்.<br />
உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் இருவரும் என்னைத் தொடர்ந்து வாருங்கள்...<br />
<br />
ரோபோ திலீபனின் கட்டளைப்படி தலைவர்கள் இருவரும் அதனைப் பின் தொடர்கின்றனர்...<br />
<br />
மிகுதி தொடரும்...<br />
<br />
(கள உறவுகளே இத்தொடரை குருவிகள் தான் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை... நீங்களும் உங்களுக்குள் தோன்றும் கற்பனையை விஞ்ஞான வடிவத்தோடு கலந்து இங்கு தந்து இத்தொடரை நகர்த்திச் செல்லலாம்..கட்டம் கட்டமா...! இறுதி இலக்கு நோக்கி சாமர்த்தியமாக நகர்த்திச் செல்ல நாமும் உங்களுக்கு உதவுவோம்..! முயற்சிப்போமா...!)<br />
<br />
இதற்குள் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புத்துணர்ச்சி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=869</link>
			<pubDate>Mon, 13 Feb 2006 18:36:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=869</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;புத்துணர்ச்சி &lt;/b&gt;<br />
  <br />
பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி <br />
அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. <br />
<br />
ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு சகோதரங்களுடன் பிறந்த அவள் வீட்டில் மூன்றாவது பிள்ளை. வறுமை தாண்டவமாடினாலும் படிப்பிலே அவளுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது. அவ்வளவு கெட்டிக்காரி. ஸ்கொலசிப்பில் இலங்கை முழுவதிலும் முதல் மாணவியாகத் தேறிய அவளுக்கு அரசாங்கப் பணம் கிடைத்து வந்தது. எப்பொழுதும் தூய்மையான சீருடை. ஒரே சீருடைதான் இருந்தாலும் சீராக இருக்கும். எண்ணெய் பூசி வாரிவிட்ட நீண்ட கூந்தலை மடித்துக்கட்டியிருப்பாள். யாருடனும் அதிகம் பேசமாட்டாள். மென்மையென்றால் என்னவென்று அவளிடம்தான் அறியவேண்டுமெனப் பலதடவைகள் நினைத்ததுண்டு. <br />
ரீட்டாவின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த துன்பங்களால் அவள் வாழ்க்கை எங்கோ திசைமாறி கடைசியில் இப்படியாகிவிட்டது முதலில் தந்தை அண்ணா,அக்கா தம்பி தங்கை அனைவரும் ஒரே நேரத்தில் குண்டுக்கிரையாகிவிட்டார்கள். தாயாரும் ஒரு தம்பியும் மட்டுமே எஞ்சியிருந்தனர். கவலைகள் கஷ்டங்களால் படுத்த படுக்கையாகி தாயாரும் இறந்துவிட்டார். தம்பியோ இராணுவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் துடிதுடித்து இறந்தான். அதன் பின்னும் அவளால் என்ன செய்ய இயலும். இராணுவத்தின் கையிலகப்பட்டு உயிரை மாய்ப்பதிலும் பார்க்க மண் மீட்பிற்காக உயிரை மாய்ப்பதே மேலென எண்ணியதன் விளைவுதான் இது. இவ்வளவு நடந்திருப்பதை இங்கிருந்து அவளுக்காக அவளை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீரை உகுக்கும் அவள் ஆசிரியைக்குத் தொரிந்திருக்க ஞாயமில்லைத் தானே. ஏனெனில் அவள் நீண்ட நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் விட்டு ஊர் மாறி வந்துவிட்டாள் அல்லவா. <br />
<br />
தொலைபேசி மணி ஒலித்தது. நிஜ உலகிற்கு வந்தாலும் அவள் மனம் அந்தப் பத்திரிகையில் வந்த அந்தப் படத்திலேயே நிலைகொண்டிருந்தது தொலைபேசியில் அவள் தோழி நித்யா தான் அழைத்தாள். அவளுடன் வேலை செய்த சக ஆசிரியைதான் நித்தியா. நித்தியாவே பேச்சை ஆரம்பித்தாள். ரம்யா பத்திரிகை பார்த்தீரா? ஓமப்பா ஒரே குழப்பமாயிருக்கு.. .. எப்படி? எப்படி? அவள் இந்தப் போராட்டத்தில்... என்று இழுத்தாள் ரம்யா. நித்தியா தான் அறிந்தவற்றை விபரமாகக் கூறினாள். பின் தங்கள் வீட்டிலே நேற்று இரவு நடந்த கிறிஸ்மஸ்பாட்டி பற்றிய கதையை சுவாரசியமாக அலசத் தொடங்கினாள். <br />
<br />
மெல்லத் திரைச்சீலையை விலத்திவிட்டு வெளியே பார்த்தாள் ரம்யா. வெளியில் எங்கும் வெண்மையாக இருந்தது. பல வர்ண ஒளி விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன. <br />
நேற்று அவள் தோழியின் வீட்டிலே கிறிஸ்மஸ் பாட்டி நடந்தது. ரம்யாவும் போயிருந்தாள். நித்யா சுத்த இந்து. அவர்கள் யேசு நாதரின் பிறப்பைப்பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருப்பார்களா? என்றால்.. இல்லை. எத்தனைவிதமான மதுவகைகள், உணவுப்பண்டங்கள். ஐயோ அந்தப் பெண்களின் உடைகள் பாட்டிக்கென்று புதிதாக விலை உயர்ந்ததாக வாங்கியிருந்தனர் போலும். பாட்டி என்றால் 'வைன்' எடுக்கலாம் எடுங்கோ. <br />
அது ஒன்றும் செய்யாது கொஞ்சமாக எடுமப்பா இன்றைக்குக் கொஞ்சம் டேஸட் பண்ணிப் பாருமன் அதுக்கென்ன என்று அவர்கள் வற்புறுத்திய விதம் நினைக்கவே அருவருப்பாக இருந்தது. வைன் கிளாசை ஒரு கையில் வைத்தபடி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு தொடையில் அடித்துப் பலமாக சிரித்துக் கதைக்கும் அந்தப் பெண்களை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள் ரம்யா. <br />
<br />
இப்போ ரம்யாவிற்கு அந்தப் பெண்களையும் ரீட்டாவையும் மனம் ஏனோ ஒப்பிடத்தூண்டியது. யேசுநாதரைப்போல அமைதியான ரீட்டா எங்கே இவர்கள் எங்கே. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அவர்கள் தேவாலயம் செல்வதையும் வழிபாடு செய்வதையும் தானே பிரதானமாகக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பவைகளைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் குமுறியது. <br />
<br />
பாட்டி நடந்து கொண்டிருந்த போது ஒரு பெண் பொங்கல் பண்டிகை பற்றிய கதையை எடுத்தாள். அது என்னப்பா வீக்டேயிஸ்ல எல்லே வருகுது. எப்பிடிக் கொண்டாடுறது. வேலையால் வந்து ஏதும் பொங்கிச் சாப்பிடவேண்டியதுதான். அதற்கு மற்றவள் நானென்டா காலையிலேயே எல்லாம் செய்துபோட்டு பின்னேரம் வந்து சாப்பிடுவன். எனக்கு அம்மா செய்வா என்றது ஒரு குரல். இன்னொரு குரல் மாமி என்றது. அதற்குள் ஒரு குரல் சொன்னது சூரியன் வெளியில வரேக்க எங்கட பிரேக் டைமும் வந்திடும் இதில சூரியப் பொங்கலாம் எப்பிடிச் செய்யிறது. கொல்லென அனைவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி. ஒருவராவது கோவில் பற்றிய கதையைமட்டும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. <br />
<br />
நினைவுகளில் மூழ்கியவள் காலரவம் கேட்டுத் திரும்பினாள். தன் கணவர் வேலையால் வந்துவிட்டதைக் கண்டதும் தான் நீண்ட நேரமாக நின்றுவிட்டதையுணர்ந்தாள். சோர்வுடன் காணப்பட்ட ரம்யாவை மெல்ல அணைத்தபடியே என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீர்? கண் வேற சிவந்திருக்கு. என மிக அன்பாகவும் ஆதரவாகவும் கேட்டான். ரம்யாவின் கண்கள் மீண்டும் குளமாயின. அன்றைய பத்திரிகையில் இருந்த ரீட்டாவின் படத்தைக் காட்டி இவள் தன் மாணவி என்றும் அவள் பற்றி தானறிந்த விபரங்களையும் கூறினாள். <br />
<br />
இங்கே ரம்யா நீர் உம்மட மாணவி என்ற ஒரே காரணத்திற்காக இப்பிடி அழுகிறீர். உப்பிடி உந்தப் பேப்பர்ல எத்தன போராளியளின்ற படங்கள் வருகுது. அதுகளப் பார்த்து அழுகிறவர்கள் எத்தனை பேர். தங்களின்ற ஆட்கள் என்றவுடன மட்டும் அழுகை வருகுது. போராளிகள் மட்டுமில்ல அங்க கஷ்டப்படுறது. எங்கட அப்பாவிச் சனங்களும் தான். இதெல்லாம் யாருக்கும் தெரியாதென்றில்ல. ஆனா அதைப்பற்றிச் சிந்திக்கிறவை குறைவென்று தான் நான் சொல்லுவன். அதுகள் படுற கஷ்டங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறம் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குமாம் தன்னை மற்றவர்களுக்குத் தெரியாதென்று. அது போலத்தான் எங்கட வாழ்க்கையும். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் எத்தின சனம் சாகுதுகள். சில போராளிகளின்ற படங்களாவது பேப்பரில வருகுது ஆனால் எத்தின சனம் நாளுக்கு நாள் அநாதைகளாக தேடுவாரற்று ஊனின்றி, உடுக்க உடையின்றி, கிழடுகள் வீட்டிலேயே எலும்புக்கூடாகியிருக்குதுகள். ஏதோ தாங்களும் தங்கட முழுக் குடும்பமும் தப்பி வந்திட்டம் என்றதும் எல்லாத்தையும் மறந்து தலைகீழாக நடக்குதுகள். ஏன் நேற்றைக்குப் பாட்டியில பார்த்தீரே. நீரோ நானோ இதுக்குக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம் இதையெல்லாம் வெளிநாடுகளில வாழுற எங்கட சனங்கள் உணரவேணும் . <br />
மறுநாள் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரம்யா தான் எடுத்தாள். அது ஒரு ஆங்கிலேயனின் குரல். இங்கிருக்கும் அங்கவீனமான பிள்ளைகளில் ஒருவரையோ இருவரையோ தெரிந்தெடுத்து அவர்களுக்கு ஸ்பொன்சர் செய்யட்டாம் ஆளுக்கு 20டொலர்கள் தானாம். அவர் விபரங்களை நீட்டிக்கொண்டே போனார். ரம்யாவின் மனதிலே ஏதோ சுருக்கென்று தைப்பது போலிருந்தது. என்ன மடம் சொல்கிறீர்கள் என்றார் இறுதியாக. எனது தாய்நாட்டிலே நிறையப் பேருக்கு என் உதவி தேவைப்படுகிறது. என் உறவினர்கள் கூட என்னை எதிர்பார்த்திருக்கையில் நான் என்ன செய்வது? தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினாள் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன். <br />
<br />
மாலை வீடு வந்த கணவரிடம் தொலைபேசி அழைப்புப் பற்றியும் ஏன் நாங்கள் எங்கள் நாட்டிலுள்ள அகதிகளுக்கு மாதம் 20 டொலர்களை ஒதுக்கக் கூடாது என்று படபடவென்று மூச்சு விடாமல் கதைத்து முடித்தாள். பிறக்கின்ற புத்தாண்டில் அப்படியொரு நல்ல காரியமாவது செய்ய அந்தப் புண்ணியவான்தான் எங்கள் கண்களைத் திறந்துவிட்டார் என்று குறும்புப் பார்வையுடன் தன் மனைவியின் கன்னங்களிலே மெல்லக் கிள்ளினான் பிரசாத். அவர்கள் உள்ளமெல்லாம் ஒருவித புத்துணர்ச்சி பரவத் தொடங்கியது. <br />
<br />
எழுதியவர்-நளினி மகேந்திரன் <br />
நன்றி எழில்நிலா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;புத்துணர்ச்சி &lt;/b&gt;<br />
  <br />
பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி <br />
அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. <br />
<br />
ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு சகோதரங்களுடன் பிறந்த அவள் வீட்டில் மூன்றாவது பிள்ளை. வறுமை தாண்டவமாடினாலும் படிப்பிலே அவளுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது. அவ்வளவு கெட்டிக்காரி. ஸ்கொலசிப்பில் இலங்கை முழுவதிலும் முதல் மாணவியாகத் தேறிய அவளுக்கு அரசாங்கப் பணம் கிடைத்து வந்தது. எப்பொழுதும் தூய்மையான சீருடை. ஒரே சீருடைதான் இருந்தாலும் சீராக இருக்கும். எண்ணெய் பூசி வாரிவிட்ட நீண்ட கூந்தலை மடித்துக்கட்டியிருப்பாள். யாருடனும் அதிகம் பேசமாட்டாள். மென்மையென்றால் என்னவென்று அவளிடம்தான் அறியவேண்டுமெனப் பலதடவைகள் நினைத்ததுண்டு. <br />
ரீட்டாவின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த துன்பங்களால் அவள் வாழ்க்கை எங்கோ திசைமாறி கடைசியில் இப்படியாகிவிட்டது முதலில் தந்தை அண்ணா,அக்கா தம்பி தங்கை அனைவரும் ஒரே நேரத்தில் குண்டுக்கிரையாகிவிட்டார்கள். தாயாரும் ஒரு தம்பியும் மட்டுமே எஞ்சியிருந்தனர். கவலைகள் கஷ்டங்களால் படுத்த படுக்கையாகி தாயாரும் இறந்துவிட்டார். தம்பியோ இராணுவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் துடிதுடித்து இறந்தான். அதன் பின்னும் அவளால் என்ன செய்ய இயலும். இராணுவத்தின் கையிலகப்பட்டு உயிரை மாய்ப்பதிலும் பார்க்க மண் மீட்பிற்காக உயிரை மாய்ப்பதே மேலென எண்ணியதன் விளைவுதான் இது. இவ்வளவு நடந்திருப்பதை இங்கிருந்து அவளுக்காக அவளை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீரை உகுக்கும் அவள் ஆசிரியைக்குத் தொரிந்திருக்க ஞாயமில்லைத் தானே. ஏனெனில் அவள் நீண்ட நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் விட்டு ஊர் மாறி வந்துவிட்டாள் அல்லவா. <br />
<br />
தொலைபேசி மணி ஒலித்தது. நிஜ உலகிற்கு வந்தாலும் அவள் மனம் அந்தப் பத்திரிகையில் வந்த அந்தப் படத்திலேயே நிலைகொண்டிருந்தது தொலைபேசியில் அவள் தோழி நித்யா தான் அழைத்தாள். அவளுடன் வேலை செய்த சக ஆசிரியைதான் நித்தியா. நித்தியாவே பேச்சை ஆரம்பித்தாள். ரம்யா பத்திரிகை பார்த்தீரா? ஓமப்பா ஒரே குழப்பமாயிருக்கு.. .. எப்படி? எப்படி? அவள் இந்தப் போராட்டத்தில்... என்று இழுத்தாள் ரம்யா. நித்தியா தான் அறிந்தவற்றை விபரமாகக் கூறினாள். பின் தங்கள் வீட்டிலே நேற்று இரவு நடந்த கிறிஸ்மஸ்பாட்டி பற்றிய கதையை சுவாரசியமாக அலசத் தொடங்கினாள். <br />
<br />
மெல்லத் திரைச்சீலையை விலத்திவிட்டு வெளியே பார்த்தாள் ரம்யா. வெளியில் எங்கும் வெண்மையாக இருந்தது. பல வர்ண ஒளி விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன. <br />
நேற்று அவள் தோழியின் வீட்டிலே கிறிஸ்மஸ் பாட்டி நடந்தது. ரம்யாவும் போயிருந்தாள். நித்யா சுத்த இந்து. அவர்கள் யேசு நாதரின் பிறப்பைப்பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருப்பார்களா? என்றால்.. இல்லை. எத்தனைவிதமான மதுவகைகள், உணவுப்பண்டங்கள். ஐயோ அந்தப் பெண்களின் உடைகள் பாட்டிக்கென்று புதிதாக விலை உயர்ந்ததாக வாங்கியிருந்தனர் போலும். பாட்டி என்றால் 'வைன்' எடுக்கலாம் எடுங்கோ. <br />
அது ஒன்றும் செய்யாது கொஞ்சமாக எடுமப்பா இன்றைக்குக் கொஞ்சம் டேஸட் பண்ணிப் பாருமன் அதுக்கென்ன என்று அவர்கள் வற்புறுத்திய விதம் நினைக்கவே அருவருப்பாக இருந்தது. வைன் கிளாசை ஒரு கையில் வைத்தபடி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு தொடையில் அடித்துப் பலமாக சிரித்துக் கதைக்கும் அந்தப் பெண்களை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள் ரம்யா. <br />
<br />
இப்போ ரம்யாவிற்கு அந்தப் பெண்களையும் ரீட்டாவையும் மனம் ஏனோ ஒப்பிடத்தூண்டியது. யேசுநாதரைப்போல அமைதியான ரீட்டா எங்கே இவர்கள் எங்கே. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அவர்கள் தேவாலயம் செல்வதையும் வழிபாடு செய்வதையும் தானே பிரதானமாகக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பவைகளைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் குமுறியது. <br />
<br />
பாட்டி நடந்து கொண்டிருந்த போது ஒரு பெண் பொங்கல் பண்டிகை பற்றிய கதையை எடுத்தாள். அது என்னப்பா வீக்டேயிஸ்ல எல்லே வருகுது. எப்பிடிக் கொண்டாடுறது. வேலையால் வந்து ஏதும் பொங்கிச் சாப்பிடவேண்டியதுதான். அதற்கு மற்றவள் நானென்டா காலையிலேயே எல்லாம் செய்துபோட்டு பின்னேரம் வந்து சாப்பிடுவன். எனக்கு அம்மா செய்வா என்றது ஒரு குரல். இன்னொரு குரல் மாமி என்றது. அதற்குள் ஒரு குரல் சொன்னது சூரியன் வெளியில வரேக்க எங்கட பிரேக் டைமும் வந்திடும் இதில சூரியப் பொங்கலாம் எப்பிடிச் செய்யிறது. கொல்லென அனைவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி. ஒருவராவது கோவில் பற்றிய கதையைமட்டும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. <br />
<br />
நினைவுகளில் மூழ்கியவள் காலரவம் கேட்டுத் திரும்பினாள். தன் கணவர் வேலையால் வந்துவிட்டதைக் கண்டதும் தான் நீண்ட நேரமாக நின்றுவிட்டதையுணர்ந்தாள். சோர்வுடன் காணப்பட்ட ரம்யாவை மெல்ல அணைத்தபடியே என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீர்? கண் வேற சிவந்திருக்கு. என மிக அன்பாகவும் ஆதரவாகவும் கேட்டான். ரம்யாவின் கண்கள் மீண்டும் குளமாயின. அன்றைய பத்திரிகையில் இருந்த ரீட்டாவின் படத்தைக் காட்டி இவள் தன் மாணவி என்றும் அவள் பற்றி தானறிந்த விபரங்களையும் கூறினாள். <br />
<br />
இங்கே ரம்யா நீர் உம்மட மாணவி என்ற ஒரே காரணத்திற்காக இப்பிடி அழுகிறீர். உப்பிடி உந்தப் பேப்பர்ல எத்தன போராளியளின்ற படங்கள் வருகுது. அதுகளப் பார்த்து அழுகிறவர்கள் எத்தனை பேர். தங்களின்ற ஆட்கள் என்றவுடன மட்டும் அழுகை வருகுது. போராளிகள் மட்டுமில்ல அங்க கஷ்டப்படுறது. எங்கட அப்பாவிச் சனங்களும் தான். இதெல்லாம் யாருக்கும் தெரியாதென்றில்ல. ஆனா அதைப்பற்றிச் சிந்திக்கிறவை குறைவென்று தான் நான் சொல்லுவன். அதுகள் படுற கஷ்டங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறம் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குமாம் தன்னை மற்றவர்களுக்குத் தெரியாதென்று. அது போலத்தான் எங்கட வாழ்க்கையும். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் எத்தின சனம் சாகுதுகள். சில போராளிகளின்ற படங்களாவது பேப்பரில வருகுது ஆனால் எத்தின சனம் நாளுக்கு நாள் அநாதைகளாக தேடுவாரற்று ஊனின்றி, உடுக்க உடையின்றி, கிழடுகள் வீட்டிலேயே எலும்புக்கூடாகியிருக்குதுகள். ஏதோ தாங்களும் தங்கட முழுக் குடும்பமும் தப்பி வந்திட்டம் என்றதும் எல்லாத்தையும் மறந்து தலைகீழாக நடக்குதுகள். ஏன் நேற்றைக்குப் பாட்டியில பார்த்தீரே. நீரோ நானோ இதுக்குக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம் இதையெல்லாம் வெளிநாடுகளில வாழுற எங்கட சனங்கள் உணரவேணும் . <br />
மறுநாள் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரம்யா தான் எடுத்தாள். அது ஒரு ஆங்கிலேயனின் குரல். இங்கிருக்கும் அங்கவீனமான பிள்ளைகளில் ஒருவரையோ இருவரையோ தெரிந்தெடுத்து அவர்களுக்கு ஸ்பொன்சர் செய்யட்டாம் ஆளுக்கு 20டொலர்கள் தானாம். அவர் விபரங்களை நீட்டிக்கொண்டே போனார். ரம்யாவின் மனதிலே ஏதோ சுருக்கென்று தைப்பது போலிருந்தது. என்ன மடம் சொல்கிறீர்கள் என்றார் இறுதியாக. எனது தாய்நாட்டிலே நிறையப் பேருக்கு என் உதவி தேவைப்படுகிறது. என் உறவினர்கள் கூட என்னை எதிர்பார்த்திருக்கையில் நான் என்ன செய்வது? தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினாள் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன். <br />
<br />
மாலை வீடு வந்த கணவரிடம் தொலைபேசி அழைப்புப் பற்றியும் ஏன் நாங்கள் எங்கள் நாட்டிலுள்ள அகதிகளுக்கு மாதம் 20 டொலர்களை ஒதுக்கக் கூடாது என்று படபடவென்று மூச்சு விடாமல் கதைத்து முடித்தாள். பிறக்கின்ற புத்தாண்டில் அப்படியொரு நல்ல காரியமாவது செய்ய அந்தப் புண்ணியவான்தான் எங்கள் கண்களைத் திறந்துவிட்டார் என்று குறும்புப் பார்வையுடன் தன் மனைவியின் கன்னங்களிலே மெல்லக் கிள்ளினான் பிரசாத். அவர்கள் உள்ளமெல்லாம் ஒருவித புத்துணர்ச்சி பரவத் தொடங்கியது. <br />
<br />
எழுதியவர்-நளினி மகேந்திரன் <br />
நன்றி எழில்நிலா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உயிர்த்தெழுகை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=947</link>
			<pubDate>Thu, 09 Feb 2006 21:09:35 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=922">Mathuran</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=947</guid>
			<description><![CDATA[                    புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வெண்புறா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1072</link>
			<pubDate>Thu, 02 Feb 2006 22:48:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1072</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;வெண்புறா &lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img80.imageshack.us/img80/7596/lady27zz.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.<br />
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.<br />
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.<br />
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.<br />
அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம்.<br />
கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே. போகும் வழிதோறும் குழந்தைகளின் அழுகுரல்கள் ஓயவேயில்லை. குழந்தைகள் வயோதிபர்கள் இவர்களால் இந்தப் பயணத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிலேயே தங்கள் உறவினர்களை இழந்தாலும். எஞ்சியோர் பயணத்தைத் தொடர்ந்தனர். அதில் பயணஞ் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கத்தான் செய்தது. இப்படிப் பல விபரிக்க முடியாத அல்லோல கல்லோலங்களினூடே அவர்கள் பயணம் தொடர்ந்தது.<br />
ரம்யாவும் ஒரு நடைப்பிணமாக அவர்கள் பின்னே போய்க்கொண்டிருந்தாள். <br />
ரம்யா இப்போ ஓர் இளம் விதவை. ராட்சதரின் குண்டு அவள் கணவனின் உயிரைக் குடித்து உடலைச் சிதறடித்திருந்தது. அவன் இறந்தபின் அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதிருந்தாலாவது அவளுக்குச் சிறிது ஆறதலாயிருந்திருக்கும். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை. இவ்வளவு சனத்திரளுக்குள்ளும் அவளுக்கென்று அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் பயணத்தைத் தொடர்ந்தாள். ஏன்? எதற்காக? அது அவளிற்கே விளங்கவில்லை. <br />
<br />
பாடசாலையிற் படிக்கும் போது அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு அவளிற்கிருந்தது. மிகவும் துடிப்பானவள். அவள் பின்னே எத்தனை ஆடவர்கள் படையெடுத்தனர்? அவள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர் எத்தனை பேர்?<br />
ஆனால் அவள் மனம் சேகரிடம் மட்டுமே பறிபோனது. சேகரும் ரம்யாவும் மதத்தால் வேறுபட்டிருந்தனர். ரம்யாவின் வீட்டிலே மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியில் இருவருமே தங்கள் வாழ்க்கையை நிச்சயிக்க வேண்டி ஏற்பட்டது. திருமணம் முடித்து இரண்டே வாரங்களில் தனக்கு இக்கதி நேருமென அவள் கனவிலும் எண்ணவில்லை. சேகரின் இழப்பு அவளை மிகவும் பாதித்திருந்தது. வாடிய பயிராய்த் துவண்டுவிட்டாள். வெள்ளைச் சேலைக்குள் புகுந்துகொண்டாள். இடிமேல் இடிபோல அவள் இப்போ இப்படிப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம். என்ன செய்வது? புறப்பட்டுவிட்டாள். <br />
<br />
ரம்யாவின் மனமும் உடலும் நன்கு சோர்ந்துவிட்டிருந்தன. நீண்ட தூரம் நடந்தார்கள். ஏதேதோ ஊர்களின் பெயர் சொன்னார்கள். அவை அவளிற்குப் புதிய பெயர்கள். ஏதோ எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது அவளிற்கு. பொழுது மெல்ல மெல்லப் புலர ஆரம்பித்தது. இப்படிக் கதிரவனின் வரவை விழித்திருந்து அவள் பார்த்தது கிடையாது. சேகர் இருந்திருந்திருந்தால் இதற்கிடையில் எத்தனை கவிதைகள் பிறந்திருக்கும். அவன் ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ரசித்து கவிதை சொல்லும் அழகே தனி அழகு. <br />
குழந்தைகளின் அழுகுரல்கள் மட்டும் ஓயவேயில்லை. வெய்யோனின் வெங்கதிர்கள் அக்காலை வேளையில் சிறிது இதமாக இருந்தது. ஆயினும் நேரஞ் செல்லச் செல்ல அவ்வெம்மை யாவரையும் சுட்டெரித்தது. யாவரும் நிழல்களைத் தேடி சிறிது இளைப்பாறினர். ரம்யாவும் ஓரிடத்தில் தனியாகக் குந்தியிருந்தாள். முழங்கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதற்கிடையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். <br />
<br />
மீண்டும் பயணம் தொடர்ந்தது. திடீரென மழை பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை விட்டு வெயில் எறித்தது. பெருந்திரளாக புறப்பட்ட மக்களில் பலரை இறைவன் தன்னிடம் அழைத்துவிட்டிருந்தான். பலர் வெவ்வேறு பாதைகளில் தங்கள் தங்கள் உறவினர் வீடுகளிற்குச் சென்றிருந்தனர். ரம்யா இறுதியாக ஒரு பாடசாலை அகதி முகாமில் தங்கினாள். அவளிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. தன் தாய் தந்தையரை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தவள். இன்று இந்நிலை அவளுக்கு. மயக்கம் வருவது போல உணர்ந்தாள். அப்படியே சரிந்து படுத்துவிட்டாள்.<br />
<br />
கண் விழித்தபோது அவள் முன்னே ஒரு சிறுமி நின்றிருந்தாள். ஓரு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தானிருக்கும். "அக்கா சாப்பிட்டிங்களா? ஏன் பேசாம இருக்கிறீங்க. கொஞ்ச நேரத்திற்கு முதல் சாப்பாடு கொஞ்சம் கொடுத்தார்கள். என்னட்ட கொஞ்சம் இருக்கு. உங்கள எழுப்பி எழுப்பி பாத்தன் நீங்க எழும்பேல்ல அது தான் எழும்பும் வரைக்கும் பாத்துக் கொண்டிருந்தன்" என்றவள் ரம்யாவின் பதிலையும் எதிர்பாராமல் சிறிது கஞ்சியைக் கொடுத்தாள்.<br />
சுய நினைவிற்கு வந்தவளாக தன்னருகேயிருக்கும் அச்சிறுமியைப் பார்த்தாள். அவள் தன் ஊரில் வசிப்பவள்தான். அதன் பின் ரம்யாவும் அபர்ணா என்னும் அச்சிறுமியும் நண்பிகளானர்கள். அபர்ணா அடிக்கடி சொல்வாள். "எனக்கு இயக்கத்திற்குப் போகோனும் என்று சரியான ஆசை ஆனால் அம்மாக்குத் துணையா ஒருத்தருமில்ல. அத நினைச்சுப்போட்டுத்தான் பேசாம இருக்கிறன் . இந்த ஆமியை எல்லாம் கலைச்சுப் போட்டு நிம்மதியா இருக்கோனும். நான் செத்தாலும் மற்றச் சனமாவது நிம்மதியா இருக்குங்கள் தானே. அம்மாவ நினைச்சாத்தான் கவலை. பாவம் அம்மா. அவவிற்கு நான் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறன். என்ட அப்பா அக்கா தங்கச்சியாட்களும் உங்கட சேகர் அங்கிளோட போட்டினம்." என்றாள் கலங்கிய கண்களுடன்.<br />
அவளை அப்படியே இறுக அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரம்யா. <br />
<br />
ரம்யாவின் மனதில் இப்போதெல்லாம் இந்தப் போராளிகளின் ஞாபகம் தான் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அவளுக்குள் ஒருவிதமான உணர்வு ஒரு தாகம் மேலிடுவது போல உணர்ந்தாள். நான் யாருக்காக வாழ்கின்றேன். என் சேகரைக் கொன்ற அவர்களை நான் பழி வாங்க வேண்டும். என் தமிழ் மக்களை காப்பாற்ற என்னால் இயன்றதை நான் செய்ய வேண்டும். அதற்கு இது நல்ல தருணம். சேகர் அடிக்கடி சொல்வான் "ரம்யா நான் உன்னைக் கண்டிருக்காட்டி நிச்சயமா ஒரு போராளியாகியிருப்பன்". சேகர் உங்கட ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும். அப்பத்தான் உங்கட ஆத்மா சாந்தியடையும். எனக்கு இப்போ பத்தொன்பது வயது. வெள்ளைப் புடைவைக்குள் இருக்கும் என்மீது இவர்கள் வீசும் சொல்லடிகள் மிகவும் கொடியவை. இவற்றை நான் எவ்வளவு காலத்திற்குத் தாங்க முடியும்.<br />
ரம்யா தனக்குள் ஒரு உற்சாகம் எழுவதை உணர்ந்தாள் அவளுள் ஏற்பட்ட அந்த எண்ணங்கள் மெல்ல மெல்ல விசுவரூபமெடுத்தன. இனிமேலும் காலந் தாழ்த்துவதில் பயனில்லை என உணர்ந்தாள். அங்கிருக்கும் அகதிகளைப் பார்த்தாள் வாய் திறந்து தூங்கும் ஒரு வயோதிபரின் வாயைச்சுற்றிலும் இலையான்கள் அமர்ந்திருந்தன. அவை வாயாலும் மூக்குத் துளையாலும் உட் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஓ! எம் தமிழினம் எவ்வளவு கொடுமை. என்ன அநியாயம். என்ன பாவம் பண்ணினோம். நான் என்னால் இயன்றதைச் செய்யத்தான் வேண்டும். ஆப்போதான் என் சேகரின் ஆத்மா சாந்தியடையும். உணர்ச்சி மேலிட ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்தாள் தன் சேலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டி விட்டாள். கூந்தலை அவிழ்த்து தன் கைகளினால் கோதி உயர்த்தி ஒரு கொண்டை போட்டாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. <br />
அபர்ணாவின் தாயாரிடம் தன் மனக் கிடக்கைகளைக் கொட்டினாள். "துப்பாக்கிச் சத்தங்கள் தூரத்தில் கேட்கின்ற போது உயிர் துடித்து உடல் நடுங்கி நாவறண்டு செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா? தப்பேதும் செய்யாத போதினுலும் அவன் தமிழன் என்றால் விடுவானா? பிஞ்சுப் பாலகன் முதல் பல் விழுந்த தாத்தா வரை அவர்கள் பார்வையில் பயங்கரவாதியாமே. அதுதான் அரக்கரவர் அகராதி. எம்மினப் பெண்கள் கற்பெல்லாம் சூறையாடி அவர் வாழ்க்கை கதையான பின்னே அழுதென்ன லாபம். கொலைகாரர் கோரப்பிடியிலகப்பட்டு அவர் காலில் நாம் நசிவதா? இல்லவேயில்லை. என்னுயிர் பிரியுமுன் அவ்வரக்கர்களை அழிக்க நான் என் பங்களிப்பைச் செய்தே தீருவேன். என் கண்களைத் திறந்தவள் அபர்ணாதான். நான் இழந்துவிட்ட என் சேகரையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டேன். ஆனால் இப்போ தான் எனக்குப் புரிகின்றது நான் நிலையானது என நினைத்த பாசம் பந்தம் எல்லாம் நீராவியாகிவிட்டதென்று". ரம்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் உயிர்த் துடிப்பிருப்பதை அபர்ணாவின் தாய் உணர்ந்தாள். கண்ணீர் மல்கிய கண்களுடன் அவள் தலையைத் தடவி நெற்றியிலே முத்தமிட்டாள். <br />
<br />
ரம்யா அபர்ணாவைப் பார்த்தாள். பூமியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலென அவளுள் ஒரு பாச உணர்வு பளிச்சிட்டு மறைந்தது. பின் மெல்ல அவ்விடம் விட்டகன்றாள். அவளுக்குள் ஒருவித புத்துணர்ச்சி பரவியிருந்தது. தன்னிடமிருந்த நகைகளை விற்றுக் காசாக்கினாள். மிகவும் ஏழை எனத் தென்பட்டவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தாள். இப்போ அவளுக்கென்று எதுவுமே கிடையாது. அந்தத் தூய வெள்ளைப் புடவை மட்டுமே அவள் சொத்து. அங்கிருந்தவர்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். சிலர் வினோதமாகப் பார்த்தனர். சிலரோ பாவம் மூளையில தட்டிப்போட்டுதாக்கும் என்றனர். ஓரு பெரியவர் அவளருகில் வந்தார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்க இப்படி இருக்கவேண்டி வருமோ யாருக்குத் தெரியும் ஏன் அவசரப்பட்டு என்று இழுத்தார். அவள் யாரையும் பொருட்படுத்துவதாக இல்லை. அவள் தன்னை இம்மண்ணுக்கு அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டாள் <br />
<br />
சின்னச் சின்ன ஆசைகளிலே சிம்மாசனமிட்டு காதலிற்காய்ப் போராடி வெற்றி கண்டவள் தான் ஆயினும் ஆண்டவனிடம் தோற்றவள். தாலி தொங்கிய வெண் சங்குக் கழுத்தினிலே நஞ்சுமாலையை ஏற்று பாசறைப் பயிற்சி பெற்று எதிரிகளுடன் போராடி எம்மினத்தின் விடியலுக்காய் பூக்கவுள்ள பூ அவள். காதலால் வாடிய வெண் புறா இப்போ சுதந்திர தாகங் கொண்ட சுதந்திரப் பறவையாக மாறவென விரைகின்றாள்.<br />
<br />
எழுதியவர்-நளினி மகேந்திரன்<br />
நன்றி எழில்நிலா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;வெண்புறா &lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img80.imageshack.us/img80/7596/lady27zz.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.<br />
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.<br />
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.<br />
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.<br />
அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம்.<br />
கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே. போகும் வழிதோறும் குழந்தைகளின் அழுகுரல்கள் ஓயவேயில்லை. குழந்தைகள் வயோதிபர்கள் இவர்களால் இந்தப் பயணத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிலேயே தங்கள் உறவினர்களை இழந்தாலும். எஞ்சியோர் பயணத்தைத் தொடர்ந்தனர். அதில் பயணஞ் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கத்தான் செய்தது. இப்படிப் பல விபரிக்க முடியாத அல்லோல கல்லோலங்களினூடே அவர்கள் பயணம் தொடர்ந்தது.<br />
ரம்யாவும் ஒரு நடைப்பிணமாக அவர்கள் பின்னே போய்க்கொண்டிருந்தாள். <br />
ரம்யா இப்போ ஓர் இளம் விதவை. ராட்சதரின் குண்டு அவள் கணவனின் உயிரைக் குடித்து உடலைச் சிதறடித்திருந்தது. அவன் இறந்தபின் அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதிருந்தாலாவது அவளுக்குச் சிறிது ஆறதலாயிருந்திருக்கும். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை. இவ்வளவு சனத்திரளுக்குள்ளும் அவளுக்கென்று அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் பயணத்தைத் தொடர்ந்தாள். ஏன்? எதற்காக? அது அவளிற்கே விளங்கவில்லை. <br />
<br />
பாடசாலையிற் படிக்கும் போது அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு அவளிற்கிருந்தது. மிகவும் துடிப்பானவள். அவள் பின்னே எத்தனை ஆடவர்கள் படையெடுத்தனர்? அவள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர் எத்தனை பேர்?<br />
ஆனால் அவள் மனம் சேகரிடம் மட்டுமே பறிபோனது. சேகரும் ரம்யாவும் மதத்தால் வேறுபட்டிருந்தனர். ரம்யாவின் வீட்டிலே மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியில் இருவருமே தங்கள் வாழ்க்கையை நிச்சயிக்க வேண்டி ஏற்பட்டது. திருமணம் முடித்து இரண்டே வாரங்களில் தனக்கு இக்கதி நேருமென அவள் கனவிலும் எண்ணவில்லை. சேகரின் இழப்பு அவளை மிகவும் பாதித்திருந்தது. வாடிய பயிராய்த் துவண்டுவிட்டாள். வெள்ளைச் சேலைக்குள் புகுந்துகொண்டாள். இடிமேல் இடிபோல அவள் இப்போ இப்படிப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம். என்ன செய்வது? புறப்பட்டுவிட்டாள். <br />
<br />
ரம்யாவின் மனமும் உடலும் நன்கு சோர்ந்துவிட்டிருந்தன. நீண்ட தூரம் நடந்தார்கள். ஏதேதோ ஊர்களின் பெயர் சொன்னார்கள். அவை அவளிற்குப் புதிய பெயர்கள். ஏதோ எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது அவளிற்கு. பொழுது மெல்ல மெல்லப் புலர ஆரம்பித்தது. இப்படிக் கதிரவனின் வரவை விழித்திருந்து அவள் பார்த்தது கிடையாது. சேகர் இருந்திருந்திருந்தால் இதற்கிடையில் எத்தனை கவிதைகள் பிறந்திருக்கும். அவன் ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ரசித்து கவிதை சொல்லும் அழகே தனி அழகு. <br />
குழந்தைகளின் அழுகுரல்கள் மட்டும் ஓயவேயில்லை. வெய்யோனின் வெங்கதிர்கள் அக்காலை வேளையில் சிறிது இதமாக இருந்தது. ஆயினும் நேரஞ் செல்லச் செல்ல அவ்வெம்மை யாவரையும் சுட்டெரித்தது. யாவரும் நிழல்களைத் தேடி சிறிது இளைப்பாறினர். ரம்யாவும் ஓரிடத்தில் தனியாகக் குந்தியிருந்தாள். முழங்கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதற்கிடையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். <br />
<br />
மீண்டும் பயணம் தொடர்ந்தது. திடீரென மழை பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை விட்டு வெயில் எறித்தது. பெருந்திரளாக புறப்பட்ட மக்களில் பலரை இறைவன் தன்னிடம் அழைத்துவிட்டிருந்தான். பலர் வெவ்வேறு பாதைகளில் தங்கள் தங்கள் உறவினர் வீடுகளிற்குச் சென்றிருந்தனர். ரம்யா இறுதியாக ஒரு பாடசாலை அகதி முகாமில் தங்கினாள். அவளிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. தன் தாய் தந்தையரை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தவள். இன்று இந்நிலை அவளுக்கு. மயக்கம் வருவது போல உணர்ந்தாள். அப்படியே சரிந்து படுத்துவிட்டாள்.<br />
<br />
கண் விழித்தபோது அவள் முன்னே ஒரு சிறுமி நின்றிருந்தாள். ஓரு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தானிருக்கும். "அக்கா சாப்பிட்டிங்களா? ஏன் பேசாம இருக்கிறீங்க. கொஞ்ச நேரத்திற்கு முதல் சாப்பாடு கொஞ்சம் கொடுத்தார்கள். என்னட்ட கொஞ்சம் இருக்கு. உங்கள எழுப்பி எழுப்பி பாத்தன் நீங்க எழும்பேல்ல அது தான் எழும்பும் வரைக்கும் பாத்துக் கொண்டிருந்தன்" என்றவள் ரம்யாவின் பதிலையும் எதிர்பாராமல் சிறிது கஞ்சியைக் கொடுத்தாள்.<br />
சுய நினைவிற்கு வந்தவளாக தன்னருகேயிருக்கும் அச்சிறுமியைப் பார்த்தாள். அவள் தன் ஊரில் வசிப்பவள்தான். அதன் பின் ரம்யாவும் அபர்ணா என்னும் அச்சிறுமியும் நண்பிகளானர்கள். அபர்ணா அடிக்கடி சொல்வாள். "எனக்கு இயக்கத்திற்குப் போகோனும் என்று சரியான ஆசை ஆனால் அம்மாக்குத் துணையா ஒருத்தருமில்ல. அத நினைச்சுப்போட்டுத்தான் பேசாம இருக்கிறன் . இந்த ஆமியை எல்லாம் கலைச்சுப் போட்டு நிம்மதியா இருக்கோனும். நான் செத்தாலும் மற்றச் சனமாவது நிம்மதியா இருக்குங்கள் தானே. அம்மாவ நினைச்சாத்தான் கவலை. பாவம் அம்மா. அவவிற்கு நான் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறன். என்ட அப்பா அக்கா தங்கச்சியாட்களும் உங்கட சேகர் அங்கிளோட போட்டினம்." என்றாள் கலங்கிய கண்களுடன்.<br />
அவளை அப்படியே இறுக அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரம்யா. <br />
<br />
ரம்யாவின் மனதில் இப்போதெல்லாம் இந்தப் போராளிகளின் ஞாபகம் தான் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அவளுக்குள் ஒருவிதமான உணர்வு ஒரு தாகம் மேலிடுவது போல உணர்ந்தாள். நான் யாருக்காக வாழ்கின்றேன். என் சேகரைக் கொன்ற அவர்களை நான் பழி வாங்க வேண்டும். என் தமிழ் மக்களை காப்பாற்ற என்னால் இயன்றதை நான் செய்ய வேண்டும். அதற்கு இது நல்ல தருணம். சேகர் அடிக்கடி சொல்வான் "ரம்யா நான் உன்னைக் கண்டிருக்காட்டி நிச்சயமா ஒரு போராளியாகியிருப்பன்". சேகர் உங்கட ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும். அப்பத்தான் உங்கட ஆத்மா சாந்தியடையும். எனக்கு இப்போ பத்தொன்பது வயது. வெள்ளைப் புடைவைக்குள் இருக்கும் என்மீது இவர்கள் வீசும் சொல்லடிகள் மிகவும் கொடியவை. இவற்றை நான் எவ்வளவு காலத்திற்குத் தாங்க முடியும்.<br />
ரம்யா தனக்குள் ஒரு உற்சாகம் எழுவதை உணர்ந்தாள் அவளுள் ஏற்பட்ட அந்த எண்ணங்கள் மெல்ல மெல்ல விசுவரூபமெடுத்தன. இனிமேலும் காலந் தாழ்த்துவதில் பயனில்லை என உணர்ந்தாள். அங்கிருக்கும் அகதிகளைப் பார்த்தாள் வாய் திறந்து தூங்கும் ஒரு வயோதிபரின் வாயைச்சுற்றிலும் இலையான்கள் அமர்ந்திருந்தன. அவை வாயாலும் மூக்குத் துளையாலும் உட் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஓ! எம் தமிழினம் எவ்வளவு கொடுமை. என்ன அநியாயம். என்ன பாவம் பண்ணினோம். நான் என்னால் இயன்றதைச் செய்யத்தான் வேண்டும். ஆப்போதான் என் சேகரின் ஆத்மா சாந்தியடையும். உணர்ச்சி மேலிட ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்தாள் தன் சேலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டி விட்டாள். கூந்தலை அவிழ்த்து தன் கைகளினால் கோதி உயர்த்தி ஒரு கொண்டை போட்டாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. <br />
அபர்ணாவின் தாயாரிடம் தன் மனக் கிடக்கைகளைக் கொட்டினாள். "துப்பாக்கிச் சத்தங்கள் தூரத்தில் கேட்கின்ற போது உயிர் துடித்து உடல் நடுங்கி நாவறண்டு செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா? தப்பேதும் செய்யாத போதினுலும் அவன் தமிழன் என்றால் விடுவானா? பிஞ்சுப் பாலகன் முதல் பல் விழுந்த தாத்தா வரை அவர்கள் பார்வையில் பயங்கரவாதியாமே. அதுதான் அரக்கரவர் அகராதி. எம்மினப் பெண்கள் கற்பெல்லாம் சூறையாடி அவர் வாழ்க்கை கதையான பின்னே அழுதென்ன லாபம். கொலைகாரர் கோரப்பிடியிலகப்பட்டு அவர் காலில் நாம் நசிவதா? இல்லவேயில்லை. என்னுயிர் பிரியுமுன் அவ்வரக்கர்களை அழிக்க நான் என் பங்களிப்பைச் செய்தே தீருவேன். என் கண்களைத் திறந்தவள் அபர்ணாதான். நான் இழந்துவிட்ட என் சேகரையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டேன். ஆனால் இப்போ தான் எனக்குப் புரிகின்றது நான் நிலையானது என நினைத்த பாசம் பந்தம் எல்லாம் நீராவியாகிவிட்டதென்று". ரம்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் உயிர்த் துடிப்பிருப்பதை அபர்ணாவின் தாய் உணர்ந்தாள். கண்ணீர் மல்கிய கண்களுடன் அவள் தலையைத் தடவி நெற்றியிலே முத்தமிட்டாள். <br />
<br />
ரம்யா அபர்ணாவைப் பார்த்தாள். பூமியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலென அவளுள் ஒரு பாச உணர்வு பளிச்சிட்டு மறைந்தது. பின் மெல்ல அவ்விடம் விட்டகன்றாள். அவளுக்குள் ஒருவித புத்துணர்ச்சி பரவியிருந்தது. தன்னிடமிருந்த நகைகளை விற்றுக் காசாக்கினாள். மிகவும் ஏழை எனத் தென்பட்டவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தாள். இப்போ அவளுக்கென்று எதுவுமே கிடையாது. அந்தத் தூய வெள்ளைப் புடவை மட்டுமே அவள் சொத்து. அங்கிருந்தவர்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். சிலர் வினோதமாகப் பார்த்தனர். சிலரோ பாவம் மூளையில தட்டிப்போட்டுதாக்கும் என்றனர். ஓரு பெரியவர் அவளருகில் வந்தார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்க இப்படி இருக்கவேண்டி வருமோ யாருக்குத் தெரியும் ஏன் அவசரப்பட்டு என்று இழுத்தார். அவள் யாரையும் பொருட்படுத்துவதாக இல்லை. அவள் தன்னை இம்மண்ணுக்கு அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டாள் <br />
<br />
சின்னச் சின்ன ஆசைகளிலே சிம்மாசனமிட்டு காதலிற்காய்ப் போராடி வெற்றி கண்டவள் தான் ஆயினும் ஆண்டவனிடம் தோற்றவள். தாலி தொங்கிய வெண் சங்குக் கழுத்தினிலே நஞ்சுமாலையை ஏற்று பாசறைப் பயிற்சி பெற்று எதிரிகளுடன் போராடி எம்மினத்தின் விடியலுக்காய் பூக்கவுள்ள பூ அவள். காதலால் வாடிய வெண் புறா இப்போ சுதந்திர தாகங் கொண்ட சுதந்திரப் பறவையாக மாறவென விரைகின்றாள்.<br />
<br />
எழுதியவர்-நளினி மகேந்திரன்<br />
நன்றி எழில்நிலா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பரீட்சை நேரம்...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1195</link>
			<pubDate>Wed, 25 Jan 2006 18:09:06 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1359">Vishnu</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1195</guid>
			<description><![CDATA[                    நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு,  லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. <br />
<br />
என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.<br />
<br />
ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்ல  தடுமாறிய... தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது.  வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால... நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா.... இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல... எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல... அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில... என்னை பார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ... எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்... அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது. <br />
<br />
இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்... வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்.. இதையும் மறந்திட்டன்.<br />
<br />
ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்... முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல...  <br />
<br />
ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி...<br />
<br />
எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்பு இருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது... கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே.... சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது... அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..<br />
<br />
" எப்படி இருக்கிறிங்க?" என்று கேட்டன்.<br />
"ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?"என்று பதில் வந்திச்சு.<br />
<br />
ஆகா..... முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது.... இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..<br />
<br />
"மறக்க முடியுமா...."  எண்டு சும்மா மேலால விட்டன்..<br />
<br />
அப்படியே  கதை தொடர இடையில மறிச்சு....<br />
<br />
"ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது" என்றாள். எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு<br />
<br />
"ம்ம்ம்... தெரியும்... அப்ப கோப்பி ஸொப் போகலாமா?  " என்று கதை விட்டேன்.<br />
<br />
பதில் ஒன்னுமே தரல .... பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..<br />
<br />
"நாளைக்காவது போகலாமா?" என்று கேட்டேன்.<br />
<br />
ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை... அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்று இருந்தது.... சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.<br />
<br />
ம்ம்... சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே....<br />
<br />
"நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? "  சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.<br />
<br />
இப்போதும் பதில் இல்லை... புத்தகத்தை நோக்கி குனிந்தாள்... போகலாமா என்று நினைத்தவேளை..<br />
<br />
" NOW " என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.<br />
<br />
ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்.... இருப்பினும் " நாளைக்கு எக்ஸாம் ஆச்சே" என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை...<br />
<br />
"இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.... நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்" என்றாள்.<br />
<br />
ம்ம்ம்..... "சரி போகலாமே....." என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.<br />
<br />
வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும்.  கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்...<br />
<br />
*************************************<br />
<br />
மறுநாள் காலை... நான் எழும்ப லேட்டாகிட்டுது... எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல... அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே... அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல...<br />
<br />
கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்..  மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்... பறந்திட்டே இருந்திச்சு... எல்லாம் நேற்றையான் நினைவால தான். <br />
<br />
<br />
அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி..  மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு...   ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.<br />
<br />
எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்.... எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்... வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா.. நான் வர ஒரு சிரிப்போட<br />
<br />
"எப்படி எக்ஸாம்... நல்லா செய்திங்களா??" என்று கேட்டாள்...<br />
"ஆமாங்க...  நைட் படிச்சது எல்லாமே எழுதினன்" எண்டு கிண்டலா சொன்னன்.<br />
<br />
அப்படியே கதை தொடர்ந்தது..... இடைல மறிச்சு..<br />
<br />
"வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்"  என்று கேட்டன்.<br />
" இனிக்குமா??" என்று சிரிச்சிட்டே கேட்டாள்.<br />
"இல்லீங்க இது  கோப்பி ஸொப் " அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.<br />
<br />
தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து... குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல..  ரொம்ப ரொம்ப அலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல... அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க...<br />
<br />
 பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது.  எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு... எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா?? <br />
<br />
" சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு"  டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..<br />
<br />
" உங்க வீடு எங்கே??  ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??" என்று கேட்டாள்.<br />
<br />
'இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்... அங்கே போய் என்ன செய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..' அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.<br />
<br />
தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்....<br />
<br />
' இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்' எண்டு சொன்னாள்... அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு...எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது.... <br />
<br />
' நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்'  என்று கேட்கலாம் போல இருந்தது. <br />
<br />
ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல....  முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்ன என்று கேட்கல.... அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல.... எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால<br />
<br />
" ஹாவ் நைஸ் ஹொலிடே"  எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..<br />
<br />
ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்..... ஹூம்ம்ம்... அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.<br />
<br />
எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை..   ' இந்த இயர் தான் எனக்கு கடைசி'  என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்.... இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும் பறக்கல...   வீட்டை பெல் பண்ணினன்...  'எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல...  இனிக்கு நைட் வீட்டை வாறேன்' என்று சொன்னன்.. பஸ் ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்... அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன்<br />
<br />
அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்... லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது....அவள்ட லெட்டர் தான்..<br />
<br />
' 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க" எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது. <br />
<br />
ஆகா... இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது... பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்...  ஒன்னு சொல்லி அடிக்கடி அறுக்கிறேன் என்று நினைக்காதேங்க...<br />
<br />
இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க......<br />
<br />
(யாவும் கற்பனை)<br />
<br />
முடிந்தது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு,  லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. <br />
<br />
என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.<br />
<br />
ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்ல  தடுமாறிய... தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது.  வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால... நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா.... இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல... எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல... அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில... என்னை பார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ... எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்... அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது. <br />
<br />
இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்... வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்.. இதையும் மறந்திட்டன்.<br />
<br />
ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்... முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல...  <br />
<br />
ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி...<br />
<br />
எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்பு இருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது... கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே.... சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது... அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..<br />
<br />
" எப்படி இருக்கிறிங்க?" என்று கேட்டன்.<br />
"ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?"என்று பதில் வந்திச்சு.<br />
<br />
ஆகா..... முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது.... இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..<br />
<br />
"மறக்க முடியுமா...."  எண்டு சும்மா மேலால விட்டன்..<br />
<br />
அப்படியே  கதை தொடர இடையில மறிச்சு....<br />
<br />
"ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது" என்றாள். எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு<br />
<br />
"ம்ம்ம்... தெரியும்... அப்ப கோப்பி ஸொப் போகலாமா?  " என்று கதை விட்டேன்.<br />
<br />
பதில் ஒன்னுமே தரல .... பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..<br />
<br />
"நாளைக்காவது போகலாமா?" என்று கேட்டேன்.<br />
<br />
ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை... அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்று இருந்தது.... சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.<br />
<br />
ம்ம்... சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே....<br />
<br />
"நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? "  சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.<br />
<br />
இப்போதும் பதில் இல்லை... புத்தகத்தை நோக்கி குனிந்தாள்... போகலாமா என்று நினைத்தவேளை..<br />
<br />
" NOW " என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.<br />
<br />
ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்.... இருப்பினும் " நாளைக்கு எக்ஸாம் ஆச்சே" என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை...<br />
<br />
"இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.... நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்" என்றாள்.<br />
<br />
ம்ம்ம்..... "சரி போகலாமே....." என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.<br />
<br />
வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும்.  கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்...<br />
<br />
*************************************<br />
<br />
மறுநாள் காலை... நான் எழும்ப லேட்டாகிட்டுது... எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல... அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே... அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல...<br />
<br />
கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்..  மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்... பறந்திட்டே இருந்திச்சு... எல்லாம் நேற்றையான் நினைவால தான். <br />
<br />
<br />
அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி..  மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு...   ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.<br />
<br />
எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்.... எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்... வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா.. நான் வர ஒரு சிரிப்போட<br />
<br />
"எப்படி எக்ஸாம்... நல்லா செய்திங்களா??" என்று கேட்டாள்...<br />
"ஆமாங்க...  நைட் படிச்சது எல்லாமே எழுதினன்" எண்டு கிண்டலா சொன்னன்.<br />
<br />
அப்படியே கதை தொடர்ந்தது..... இடைல மறிச்சு..<br />
<br />
"வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்"  என்று கேட்டன்.<br />
" இனிக்குமா??" என்று சிரிச்சிட்டே கேட்டாள்.<br />
"இல்லீங்க இது  கோப்பி ஸொப் " அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.<br />
<br />
தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து... குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல..  ரொம்ப ரொம்ப அலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல... அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க...<br />
<br />
 பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது.  எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு... எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா?? <br />
<br />
" சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு"  டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..<br />
<br />
" உங்க வீடு எங்கே??  ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??" என்று கேட்டாள்.<br />
<br />
'இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்... அங்கே போய் என்ன செய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..' அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.<br />
<br />
தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்....<br />
<br />
' இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்' எண்டு சொன்னாள்... அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு...எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது.... <br />
<br />
' நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்'  என்று கேட்கலாம் போல இருந்தது. <br />
<br />
ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல....  முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்ன என்று கேட்கல.... அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல.... எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால<br />
<br />
" ஹாவ் நைஸ் ஹொலிடே"  எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..<br />
<br />
ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்..... ஹூம்ம்ம்... அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.<br />
<br />
எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை..   ' இந்த இயர் தான் எனக்கு கடைசி'  என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்.... இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும் பறக்கல...   வீட்டை பெல் பண்ணினன்...  'எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல...  இனிக்கு நைட் வீட்டை வாறேன்' என்று சொன்னன்.. பஸ் ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்... அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன்<br />
<br />
அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்... லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது....அவள்ட லெட்டர் தான்..<br />
<br />
' 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க" எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது. <br />
<br />
ஆகா... இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது... பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்...  ஒன்னு சொல்லி அடிக்கடி அறுக்கிறேன் என்று நினைக்காதேங்க...<br />
<br />
இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க......<br />
<br />
(யாவும் கற்பனை)<br />
<br />
முடிந்தது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இனிய நினைவுகளின் வாசம்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1271</link>
			<pubDate>Fri, 20 Jan 2006 16:21:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=81">shanthy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1271</guid>
			<description><![CDATA[                    இனிய நினைவுகளின் வாசம்.<br />
நன்றி - தமிழமுதம் - <a href="http://tamilamutham.net/amutham/index.php?option=com_content&amp;task=view&amp;id=245&amp;Itemid=1" target="_blank" rel="noopener" class="mycode_url">http://tamilamutham.net/amutham/index.php?...id=245&amp;Itemid=1</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இனிய நினைவுகளின் வாசம்.<br />
நன்றி - தமிழமுதம் - <a href="http://tamilamutham.net/amutham/index.php?option=com_content&amp;task=view&amp;id=245&amp;Itemid=1" target="_blank" rel="noopener" class="mycode_url">http://tamilamutham.net/amutham/index.php?...id=245&amp;Itemid=1</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தனக்குவமை இல்லாதவன்: சோமுவின் தங்கச்சியும் குஷ்புவும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1358</link>
			<pubDate>Sun, 15 Jan 2006 22:28:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1358</guid>
			<description><![CDATA[                    எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான்."என்னடா ஆச்சு" என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான். "அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?" என்று கேட்டேன்."கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது" என்றான்.<br />
<br />
"ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா " என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.<br />
"அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க" என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான்."திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லைஇபெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்இபாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா" என்று பொங்கினான்.<br />
<br />
"சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றேஇபெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு" என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது."ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்இதமிழ் பண்பாடு" என்றான்.....<br />
.................<br />
...........................<br />
<br />
<a href="http://holyox.blogspot.com/2006/01/blog-post_15.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://holyox.blogspot.com/2006/01/blog-post_15.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான்."என்னடா ஆச்சு" என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான். "அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?" என்று கேட்டேன்."கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது" என்றான்.<br />
<br />
"ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா " என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.<br />
"அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க" என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான்."திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லைஇபெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்இபாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா" என்று பொங்கினான்.<br />
<br />
"சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றேஇபெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு" என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது."ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்இதமிழ் பண்பாடு" என்றான்.....<br />
.................<br />
...........................<br />
<br />
<a href="http://holyox.blogspot.com/2006/01/blog-post_15.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://holyox.blogspot.com/2006/01/blog-post_15.html</a>                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>