<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - குறும்படங்கள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:29:47 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[பேரன் பேர்த்தி ..!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=14</link>
			<pubDate>Sat, 29 Apr 2006 23:15:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1325">அனிதா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=14</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;<span style="text-decoration: underline;" class="mycode_u">பேரன் பேர்த்தி ..!</span>&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img67.imageshack.us/img67/2149/peranperthi18rp.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;கதை பற்றி ::&lt;/b&gt;</span><br />
<br />
பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது..<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;மேலதிக விபரம்::&lt;/b&gt;</span><br />
<br />
புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகாரம் பெறவைத்ததென்பது இதன் சிறப்பு. இங்கு வளரும் இளந்தலைமுறையினர் தம் தாய்மொழி உறவாடலைத் தொடரவேண்டிய அவசியத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லப்படுகிறது. இங்கு வளரும் சிறுவர்கள் பாத்திரமாக நடித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்தச் சிறார்களுடன் ஈழத்திரையுலகின் மூத்த கலைஞர் ரகுநாதனும் இணைந்திருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு. உண்மைச் சம்பவத்தை அடியொற்றி சிறந்த கலந்துரையாடல்களுக்கூடாக சீரான திரைக்கதையாக்கிப் படமாக்கியதாக் குறிப்பிட்டார் இயக்குநர் பரா. 2005 ம் ஆண்டிலும், 2006 ம் ஆண்டிலும் சலனம் பல்வேறு இடங்களில் (ஐரோப்பா, இந்தியா, இலங்கை) நடாத்திய குறும்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பைப் பெற்றது இக்குறும்படம்.<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;கலைஞர்கள்::&lt;/b&gt;</span><br />
<br />
ஆக்கியவர்: பரா<br />
தயாரிப்பு: Global Tamil Movies, நேயாலயம்<br />
நடிகர்கள்: இரகுநாதன்,  செல்வி சிந்தி பாபு, செல்வி வாகினி அமுதராஜா, செல்வன் யோகன் பாபு, <br />
கதை: பாபு<br />
ஒளிப்பதிவு: கலிஸ்ரஸ் ஜோன், விஜயபாலா<br />
இசை: மு. பஷீர்<br />
பாடகர்கள்: செல்வி மீரா பாலகணேசன், இரகுநாதன்<br />
ஒலிப்பதிவு, வரைகலை, படத்தொகுப்பு: ரவீந்திரா<br />
<br />
&lt;b&gt;இந்த குறும்படம் தறவிறக்கம் செய்து பார்க்க கூடியவாறு  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />    <a href="http://www.salanam.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=76&amp;Itemid=46" target="_blank" rel="noopener" class="mycode_url"><span style="text-decoration: underline;" class="mycode_u">சலனம்</span></a> தளத்தில் உள்ளது. <br />
<br />
 நன்றி :- சலனம்&lt;/b&gt;<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.salanam.com</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;<span style="text-decoration: underline;" class="mycode_u">பேரன் பேர்த்தி ..!</span>&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img67.imageshack.us/img67/2149/peranperthi18rp.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;கதை பற்றி ::&lt;/b&gt;</span><br />
<br />
பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது..<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;மேலதிக விபரம்::&lt;/b&gt;</span><br />
<br />
புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகாரம் பெறவைத்ததென்பது இதன் சிறப்பு. இங்கு வளரும் இளந்தலைமுறையினர் தம் தாய்மொழி உறவாடலைத் தொடரவேண்டிய அவசியத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லப்படுகிறது. இங்கு வளரும் சிறுவர்கள் பாத்திரமாக நடித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்தச் சிறார்களுடன் ஈழத்திரையுலகின் மூத்த கலைஞர் ரகுநாதனும் இணைந்திருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு. உண்மைச் சம்பவத்தை அடியொற்றி சிறந்த கலந்துரையாடல்களுக்கூடாக சீரான திரைக்கதையாக்கிப் படமாக்கியதாக் குறிப்பிட்டார் இயக்குநர் பரா. 2005 ம் ஆண்டிலும், 2006 ம் ஆண்டிலும் சலனம் பல்வேறு இடங்களில் (ஐரோப்பா, இந்தியா, இலங்கை) நடாத்திய குறும்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பைப் பெற்றது இக்குறும்படம்.<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;கலைஞர்கள்::&lt;/b&gt;</span><br />
<br />
ஆக்கியவர்: பரா<br />
தயாரிப்பு: Global Tamil Movies, நேயாலயம்<br />
நடிகர்கள்: இரகுநாதன்,  செல்வி சிந்தி பாபு, செல்வி வாகினி அமுதராஜா, செல்வன் யோகன் பாபு, <br />
கதை: பாபு<br />
ஒளிப்பதிவு: கலிஸ்ரஸ் ஜோன், விஜயபாலா<br />
இசை: மு. பஷீர்<br />
பாடகர்கள்: செல்வி மீரா பாலகணேசன், இரகுநாதன்<br />
ஒலிப்பதிவு, வரைகலை, படத்தொகுப்பு: ரவீந்திரா<br />
<br />
&lt;b&gt;இந்த குறும்படம் தறவிறக்கம் செய்து பார்க்க கூடியவாறு  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />    <a href="http://www.salanam.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=76&amp;Itemid=46" target="_blank" rel="noopener" class="mycode_url"><span style="text-decoration: underline;" class="mycode_u">சலனம்</span></a> தளத்தில் உள்ளது. <br />
<br />
 நன்றி :- சலனம்&lt;/b&gt;<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.salanam.com</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அயல் சினிமா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=36</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 21:18:53 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=36</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;span style='color:red'&gt;\"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை\" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். <br />
ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா, <br />
\"ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா\" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை. <br />
<br />
வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை.<br />
<br />
ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உரிமை பெறப்பட்ட பிறகு திரைக்கதை எழுதுபவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என யாவரும் ஸ்டுடியோவின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகின்றனர். ஸ்டுடியோ மாபெரும் வர்த்தக நிறுவனத்தைப் போல, தன் விருப்பத்தின்படி திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை, சார்லி சாப்ளினில் துவங்கி மார்லன் பிராண்டோ வரை பலரும் கண்டித்திருக்கிறார்கள். சாப்ளின் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பேசுகிறார். சினிமாவை அடிநிலை மக்களுக்கான வெளிப்பாட்டு சாதனமாக மாற்ற முயற்சிக்கிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஹாலிவுட் ஸ்டுடியோகள் அவர் மீது பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்தன. சாப்ளின், இதுதான் குற்றம் என்றால் அதைத்தான் தொடர்ந்து செய்வேன் என்று பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட் ஸ்டுடியோவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை.<br />
<br />
மார்லன் பிராண்டோவை காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரான்சிஸ் போர்டு கபோலா சிபாரிசு செய்தபோது, தயாரிப்பு நிறுவனம் அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்று வசனம் பேசச் செய்து, சோதனை செய்யவேண்டும் என வற்புறுத்தியது. இது புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சோதனை. ஆனால் பிராண்டோ, ஸ்டுடியோ அதிகாரத்தை விமரிசித்த காரணத்தால் அவரையும் இந்தச் சோதனையைச் செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பிராண்டோ, தான் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், கபோலா, தனக்காக பிராண்டோ இதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், பிராண்டோ, தானே ஒரு ஒப்பனைக் கலைஞரை அழைத்து வந்து காட்ஃபாதர் படத்தில் வருவது போன்ற ஒப்பனையைத் தானே புனைந்துகொண்டு, வாயில் செயற்கையான தாடையைப் பொருத்திக்கொண்டு, கபோலா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். கபோலாவால் நம்ப முடியவில்லை. சோதனை படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்டுடியோ வாயை மூடிக்கொண்டு மௌனமாகியது.<br />
<br />
ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி, கபோலா, லூகாஸ் இந்த நால்வரின் வருகை ஹாலிவுட் சினிமாவின் போக்கை முற்றிலும் திசைமாற்றம் கொள்ளச் செய்தது. நால்வரில் ஸ்பீல்பெர்க் வணிக ரீதியான சாதனைகளை நிகழ்த்தியபோது, ஸ்கார்சசி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அடித்தட்டு உலகமான குற்றவாளிகளின் நிழல் உலகை அறிமுகம் செய்து வைத்தார். திரையில் இருண்ட உலகின் தினசரி காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார். லூகாஸ், ஹாலிவுட் சினிமாவிற்கு கிராபிக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை முக்கியப்படுத்தி தனது விஞ்ஞானக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார். இந்த மூவருக்குப் பின்வந்த கபோலா, இத்தாலிய நிழல் உலகம் எப்படி அமெரிக்காவிற்குள் பெரிய சக்தியாக தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதை, தனது காட்ஃபாதர் வரிசை படங்களில் உருவாக்கி, புதிய கதவை திறந்துவிட்டார். ஹாலிவுட் திரைப்படம் அதுவரை நம்பியிருந்த எளிய காதல் நாடகங்களும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் துவங்கின. மாறாக, விஞ்ஞான புனைக்கதைப் படங்களின் உருவாக்கம் மேலோங்கத் துவங்கியது. விண்வெளியை மையமாகக் கொண்ட கதைகள் ஏராளமாக திரைக்கு வரத் துவங்கின. <br />
<br />
ஹாலிவுட் சினிமாவின் கையில் எப்போதுமே இருக்கும் கதைக்களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பைபிள் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தபடியே இருக்கும். பைபிளில் வலியுறுத்தப்படும் அறக்கோட்பாடுகளை மறைமுகமாக வெளிப்படுத்தும் கதைகளும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு பெற்று வந்திருக்கின்றன.<br />
<br />
அமெரிக்கா இதுவரை தனது தேசத்திற்குள் எந்த யுத்தத்தையும் சந்தித்ததில்லை. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு பியர்ல் ஹார்பர் மட்டும்தான். ஆனால், உலக யுத்தம் துவங்கி பல்வேறு யுத்தங்களில் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களை மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க மக்கள் யுத்தம் குறித்த திரைப்படங்களைக் காண்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆண்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட யுத்த சம்பவப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.<br />
<br />
துப்பறியும் வகைப் படங்களும், குற்றவாளிகளின் உலகைப் பற்றிய படங்களும் கலைப்படங்களா என்ற கேள்வி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. வெகுஜன சினிமா இந்த கதைக்கருக்களை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது. ஆனால் கலைப்படங்களோ, குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு பிந்திய மனநிலைகளை அதன் உளவியல் பார்வையில் ஆராயத் துவங்கியது. குற்றம் குறித்த நமது பார்வைகளுக்கு வெளியில் இந்தத் திரைப்படங்கள் குற்ற நிகழ்வை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தின. ஹிட்ச்காக்கின் படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஹிட்ச்காக் கொலையை சுவாரஸ்யப்படுத்துவதில்லை; மாறாக அவர் துப்பறிவாளரின் வேலையை விடவும் மனோதத்துவவாதியின் வேலையைத்தான் அதிகம் செய்கிறார். குற்றம் மறைக்கப்படும்போது குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கிறது என்பதையும், எதிர்பாராமை என்பது குற்றங்களுக்குப் பின்னணியில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் ஹிட்ச்காக்கின் படங்கள் விவரிக்கின்றன. இன்னொரு வகையில், கோடார்ட் போன்றவர்கள், குற்றவாளிகள் எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறார்கள் என்பதில் துவங்கி, சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை திரைப்படமாக உருவாக்குகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், கோடார்ட்டின் பிரெத்லெஸ். இப்படத்தின் கதாநாயகன் ஒரு குற்றவாளி. ஆனால் அவனது அன்றாட செயல்களில் குற்றம் பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக, கலாசார நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையே கோடார்ட் முக்கியத்துவப்படுத்துகிறார். இந்தப் போக்கைதான் த்ரூபாவின் துப்பறியும் படங்களிலும் காண முடிகிறது.<br />
<br />
ஹாலிவுட் திரைப்படங்களில் மார்டின் ஸ்கார்சசி எப்போதுமே தனியிடம் கொண்டவர். அவரது திரைப்படங்கள் வடிவ ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் மிகுந்த நுட்பமானவை. டாக்சி டிரைவர், ரேகிங் புல், காசினோ, மீன் ஸ்ட்ரீட் போன்ற அவரது திரைப்படங்கள் சம்பிரதாயமான ஹாலிவுட் சினிமாவின் வரம்புகளை மீறியவை. நிழல் உலகை முன்வைத்து கதை சொல்வதைப் போலவே மார்டின் ஸ்கார்சசிக்கு இன்னொரு பக்கமிருக்கிறது. இயேசு கிறிஸ்து குறித்த, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட், மற்றும் தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கும் குந்தன், இந்த இரண்டு படங்களிலும் மார்டின் ஸ்கார்சசி, மதம் நிறுவனமயமாகிப் போனதால் அதற்கு வெளியில் உள்ள தனிநபரின் இறை நம்பிக்கைகள் குறித்து ஆராய்கிறார். குந்தன், தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கின்ற போதும், அது ஒரு அரசியல் நிலைப்பாட்டினையும் முன்வைக்கிறது. அதே நேரம் பௌத்த வாழ்வியலை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. குந்தன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கதை சொல்லும் முறை மிக நவீனமயமானது.<br />
<br />
இந்த வரிசையில் சமகால ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கிய இயக்குனர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் இருவர்; ஒருவர், ஸ்பைக் லீ; மற்றவர் குவென்டின் டெரான்டினோ. ஸ்பைக் லீ, மால்கம் எக்ஸ் பற்றிய திரைப்படத்தை இயக்கியவர். இவர் கறுப்பின மக்களுக்கான விடுதலையை முன்வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது திரைப்படங்கள் ஹாலிவுட்டின் வெகுஜனத் திரைப்படங்களுக்குள் அடங்காதவை. கறுப்பின மக்களின் கல்வி மற்றும் குடும்ப உறவுகள் பற்றியதே இவரது திரைப்படங்கள். "எதிர்கால அமெரிக்க சினிமாவில் ஸ்பைக் லீ மாபெரும் சக்தியாக இருப்பார்" என்கிறார் ஸ்பீல்பெர்க்.<br />
<br />
பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துவிட்டு, ஐந்து ஆண்டு காலம் ஒரு வீடியோ கடையில் வாடிக்கையாளர்களுக்கு கேசட் எடுத்து தரும் பணியாளராக வேலை செய்த குவென்டின் டெரான்டினோ, இன்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனராக உருக்கொண்டிருக்கிறார். 1963 ஆம் ஆண்டு டென்னசி பகுதியில் பிறந்த டெரான்டினோ இத்தாலிய வம்சாவழியைச் சார்ந்தவர். இரண்டு வயதில் இருந்தே இவரைத் தான் செல்லும் திரைப்படங்கள் அத்தனைக்கும் அவரது அம்மா அழைத்து சென்றிருக்கிறார். அதனால் சினிமாவைப் பற்றிய கனவுகள் சிறுவயதிலே அவருக்குள் முளைவிடத் துவங்கின. தனது இருபது வயதில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடையில் நாள் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற குவென்டின் டெரான்டினோ, அங்கு தினமும் பத்து திரைப்படங்களையாவது பார்க்கக் கூடியவராக மாறியிருந்தார். அவரோடு அதே கடையில் வேலை செய்த ரோஜர் அவாரியோவும் சேர்ந்து கொள்வார். இருவரும் மணிக்கணக்கில் தாங்கள் பார்த்த படங்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்திருக்கிறார்கள். சிறுவயது முதலே காமிக்ஸ் வாசிப்பதில் மிக ஆர்வம் கொண்டிருந்த டெரான்டினோ சாகசப்படங்களை மிகவும் ரசித்து பார்த்து வந்தார். வீடியோ கடையில் பார்த்த படங்களில் உள்ள சிறந்த காட்சிகளை தனித்தனியாக எடுத்து, அதை ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக அமைத்துப் பார்க்கும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இதனால் ஹிட்ச்காக்கில் இருந்து ஒரு காட்சி, &lt;b&gt;கான் வித் த விண்ட்&lt;/b&gt;டில் இருந்து இரண்டு காட்சிகள், கோடார்ட் படத்திலிருந்து இரண்டு காட்சிகள், பிரைன் டி பால்மா படத்திலிருந்து நான்கு காட்சிகள் என்று ஒன்று கலந்த ஒரு கலவையாக இவர் உருவாக்கிய துண்டுப் படங்களை, வீடியோ கடையில் பலரும் ரசித்து பார்த்தனர்.<br />
<br />
ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற தடைகளிருந்தால், குவென்டின், தானே ஒரு திரைக்கதையை எழுதி வீடியோ கடை வாடிக்கையாளர்கள் சிலரையும் தன் நண்பர்களையும் ஒன்று சேர்த்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். ஆனால் அது பெரிய தோல்வியடைந்தது. அதன் பிறகு My Best Friend's Birthday என்ற திரைக்கதையை எழுதி அதை பல ஸ்டுடியோகளுக்கு அனுப்பி திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நண்பரின் உதவியால் True Romance என்ற திரைக்கதையை முக்கிய திரைப்பட நிறுவனம் ஒன்றிற்கு விற்க முடிந்தது. அதுதான் குவென்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. அந்தப் படம் சிறப்பாகப் பேசப்பட்டது. Natural Born Killers என்ற அவரது அடுத்த கதையை ஆலிவர் ஸ்டோன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் சரியான மண உறவு அமையாத ஒரு கணவனும் மனைவியும், தங்களது மனச்சோர்வை போக்கிக்கொள்ள தொடர்ந்து கொலை செய்யத் துவங்குகிறார்கள். ஒரு காரில் பயணம் செய்தபடியே அவர்கள் காரணமற்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாயமான ஹாலிவுட் படங்களில் இருந்து, வந்த மூன்றடுக்கு திரைக்கதை முறையை தூரத் தள்ளிவிட்டு, இப்படம் நீண்ட காட்சிகளும் எதிர்பாராத வன்முறை வெடித்தலுமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வகை படங்களுக்கு முன் உதாரணமாக இருந்தது போனி அண்ட் கிளைடு. இப்படம், குற்றத்திற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை என்று வெளிப்படையாக உணர்த்தியதால் அதன் பாதையில் இன்னொரு பயணத்தை மேற்கொண்டது குவென்டினின் திரைப்படம்.<br />
<br />
இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை உருவாக்காத போதும் குவென்டின் திரைக்கதையில் இருந்த புதிய உத்திகளும் உரையாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. Reservoir Dogs என்ற குவென்டினின் அடுத்த படம் குற்றவாளிகளின் உலகினை இன்னொரு கோணத்தில் ஆய்வு செய்வதாக அமைந்தது. நகைக்கடை ஒன்றினை கொள்ளையடிப்பதற்காகத் திட்டமிடும் குழு ஒன்றில், போலீஸ்காரன் ஒருவன் வேறு அடையாளங்களுடன் சேர்ந்து கொள்கிறான். அது அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. யார் அந்த போலீஸ் உளவாளி என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது சந்தேகம் உருவாகிறது. இந்த மனச்சிக்கலில் அவர்கள் தங்களையே குற்றவாளிகளாக நினைத்து குழம்பிக் கொள்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டு ஆளுக்கு ஒரு நிறத்தின் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். அதன்படி ஒருவன் நீலம், மற்றவன் மஞ்சள், அடுத்தவன் ஆரஞ்சு என்று பல்வேறு வர்ணங்களாக தங்களை அடையாளம் சொல்லிக் கொள்கிறார்கள். சுய அடையாளம் அழிந்து, தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றை வர்ணத்தோடு அவர்கள் உருமாற்றம் கொள்வது படத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது.<br />
<br />
தொடருகிறது..........................&lt;/span&gt;<br />
<br />
நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://74.52.34.130/kumudamcms/magazine/Theranadi/2006-03-01/imagefolder/pg3-t.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;span style='color:red'&gt;\"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை\" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். <br />
ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா, <br />
\"ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா\" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை. <br />
<br />
வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை.<br />
<br />
ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உரிமை பெறப்பட்ட பிறகு திரைக்கதை எழுதுபவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என யாவரும் ஸ்டுடியோவின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகின்றனர். ஸ்டுடியோ மாபெரும் வர்த்தக நிறுவனத்தைப் போல, தன் விருப்பத்தின்படி திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை, சார்லி சாப்ளினில் துவங்கி மார்லன் பிராண்டோ வரை பலரும் கண்டித்திருக்கிறார்கள். சாப்ளின் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பேசுகிறார். சினிமாவை அடிநிலை மக்களுக்கான வெளிப்பாட்டு சாதனமாக மாற்ற முயற்சிக்கிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஹாலிவுட் ஸ்டுடியோகள் அவர் மீது பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்தன. சாப்ளின், இதுதான் குற்றம் என்றால் அதைத்தான் தொடர்ந்து செய்வேன் என்று பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட் ஸ்டுடியோவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை.<br />
<br />
மார்லன் பிராண்டோவை காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரான்சிஸ் போர்டு கபோலா சிபாரிசு செய்தபோது, தயாரிப்பு நிறுவனம் அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்று வசனம் பேசச் செய்து, சோதனை செய்யவேண்டும் என வற்புறுத்தியது. இது புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சோதனை. ஆனால் பிராண்டோ, ஸ்டுடியோ அதிகாரத்தை விமரிசித்த காரணத்தால் அவரையும் இந்தச் சோதனையைச் செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பிராண்டோ, தான் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், கபோலா, தனக்காக பிராண்டோ இதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், பிராண்டோ, தானே ஒரு ஒப்பனைக் கலைஞரை அழைத்து வந்து காட்ஃபாதர் படத்தில் வருவது போன்ற ஒப்பனையைத் தானே புனைந்துகொண்டு, வாயில் செயற்கையான தாடையைப் பொருத்திக்கொண்டு, கபோலா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். கபோலாவால் நம்ப முடியவில்லை. சோதனை படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்டுடியோ வாயை மூடிக்கொண்டு மௌனமாகியது.<br />
<br />
ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி, கபோலா, லூகாஸ் இந்த நால்வரின் வருகை ஹாலிவுட் சினிமாவின் போக்கை முற்றிலும் திசைமாற்றம் கொள்ளச் செய்தது. நால்வரில் ஸ்பீல்பெர்க் வணிக ரீதியான சாதனைகளை நிகழ்த்தியபோது, ஸ்கார்சசி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அடித்தட்டு உலகமான குற்றவாளிகளின் நிழல் உலகை அறிமுகம் செய்து வைத்தார். திரையில் இருண்ட உலகின் தினசரி காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார். லூகாஸ், ஹாலிவுட் சினிமாவிற்கு கிராபிக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை முக்கியப்படுத்தி தனது விஞ்ஞானக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார். இந்த மூவருக்குப் பின்வந்த கபோலா, இத்தாலிய நிழல் உலகம் எப்படி அமெரிக்காவிற்குள் பெரிய சக்தியாக தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதை, தனது காட்ஃபாதர் வரிசை படங்களில் உருவாக்கி, புதிய கதவை திறந்துவிட்டார். ஹாலிவுட் திரைப்படம் அதுவரை நம்பியிருந்த எளிய காதல் நாடகங்களும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் துவங்கின. மாறாக, விஞ்ஞான புனைக்கதைப் படங்களின் உருவாக்கம் மேலோங்கத் துவங்கியது. விண்வெளியை மையமாகக் கொண்ட கதைகள் ஏராளமாக திரைக்கு வரத் துவங்கின. <br />
<br />
ஹாலிவுட் சினிமாவின் கையில் எப்போதுமே இருக்கும் கதைக்களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பைபிள் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தபடியே இருக்கும். பைபிளில் வலியுறுத்தப்படும் அறக்கோட்பாடுகளை மறைமுகமாக வெளிப்படுத்தும் கதைகளும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு பெற்று வந்திருக்கின்றன.<br />
<br />
அமெரிக்கா இதுவரை தனது தேசத்திற்குள் எந்த யுத்தத்தையும் சந்தித்ததில்லை. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு பியர்ல் ஹார்பர் மட்டும்தான். ஆனால், உலக யுத்தம் துவங்கி பல்வேறு யுத்தங்களில் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களை மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க மக்கள் யுத்தம் குறித்த திரைப்படங்களைக் காண்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆண்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட யுத்த சம்பவப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.<br />
<br />
துப்பறியும் வகைப் படங்களும், குற்றவாளிகளின் உலகைப் பற்றிய படங்களும் கலைப்படங்களா என்ற கேள்வி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. வெகுஜன சினிமா இந்த கதைக்கருக்களை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது. ஆனால் கலைப்படங்களோ, குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு பிந்திய மனநிலைகளை அதன் உளவியல் பார்வையில் ஆராயத் துவங்கியது. குற்றம் குறித்த நமது பார்வைகளுக்கு வெளியில் இந்தத் திரைப்படங்கள் குற்ற நிகழ்வை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தின. ஹிட்ச்காக்கின் படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஹிட்ச்காக் கொலையை சுவாரஸ்யப்படுத்துவதில்லை; மாறாக அவர் துப்பறிவாளரின் வேலையை விடவும் மனோதத்துவவாதியின் வேலையைத்தான் அதிகம் செய்கிறார். குற்றம் மறைக்கப்படும்போது குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கிறது என்பதையும், எதிர்பாராமை என்பது குற்றங்களுக்குப் பின்னணியில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் ஹிட்ச்காக்கின் படங்கள் விவரிக்கின்றன. இன்னொரு வகையில், கோடார்ட் போன்றவர்கள், குற்றவாளிகள் எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறார்கள் என்பதில் துவங்கி, சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை திரைப்படமாக உருவாக்குகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், கோடார்ட்டின் பிரெத்லெஸ். இப்படத்தின் கதாநாயகன் ஒரு குற்றவாளி. ஆனால் அவனது அன்றாட செயல்களில் குற்றம் பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக, கலாசார நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையே கோடார்ட் முக்கியத்துவப்படுத்துகிறார். இந்தப் போக்கைதான் த்ரூபாவின் துப்பறியும் படங்களிலும் காண முடிகிறது.<br />
<br />
ஹாலிவுட் திரைப்படங்களில் மார்டின் ஸ்கார்சசி எப்போதுமே தனியிடம் கொண்டவர். அவரது திரைப்படங்கள் வடிவ ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் மிகுந்த நுட்பமானவை. டாக்சி டிரைவர், ரேகிங் புல், காசினோ, மீன் ஸ்ட்ரீட் போன்ற அவரது திரைப்படங்கள் சம்பிரதாயமான ஹாலிவுட் சினிமாவின் வரம்புகளை மீறியவை. நிழல் உலகை முன்வைத்து கதை சொல்வதைப் போலவே மார்டின் ஸ்கார்சசிக்கு இன்னொரு பக்கமிருக்கிறது. இயேசு கிறிஸ்து குறித்த, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட், மற்றும் தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கும் குந்தன், இந்த இரண்டு படங்களிலும் மார்டின் ஸ்கார்சசி, மதம் நிறுவனமயமாகிப் போனதால் அதற்கு வெளியில் உள்ள தனிநபரின் இறை நம்பிக்கைகள் குறித்து ஆராய்கிறார். குந்தன், தலாய்லாமாவின் வாழ்வை விவரிக்கின்ற போதும், அது ஒரு அரசியல் நிலைப்பாட்டினையும் முன்வைக்கிறது. அதே நேரம் பௌத்த வாழ்வியலை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. குந்தன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கதை சொல்லும் முறை மிக நவீனமயமானது.<br />
<br />
இந்த வரிசையில் சமகால ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கிய இயக்குனர்களாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் இருவர்; ஒருவர், ஸ்பைக் லீ; மற்றவர் குவென்டின் டெரான்டினோ. ஸ்பைக் லீ, மால்கம் எக்ஸ் பற்றிய திரைப்படத்தை இயக்கியவர். இவர் கறுப்பின மக்களுக்கான விடுதலையை முன்வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவரது திரைப்படங்கள் ஹாலிவுட்டின் வெகுஜனத் திரைப்படங்களுக்குள் அடங்காதவை. கறுப்பின மக்களின் கல்வி மற்றும் குடும்ப உறவுகள் பற்றியதே இவரது திரைப்படங்கள். "எதிர்கால அமெரிக்க சினிமாவில் ஸ்பைக் லீ மாபெரும் சக்தியாக இருப்பார்" என்கிறார் ஸ்பீல்பெர்க்.<br />
<br />
பள்ளிப்படிப்பை பாதியில் முடித்துவிட்டு, ஐந்து ஆண்டு காலம் ஒரு வீடியோ கடையில் வாடிக்கையாளர்களுக்கு கேசட் எடுத்து தரும் பணியாளராக வேலை செய்த குவென்டின் டெரான்டினோ, இன்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனராக உருக்கொண்டிருக்கிறார். 1963 ஆம் ஆண்டு டென்னசி பகுதியில் பிறந்த டெரான்டினோ இத்தாலிய வம்சாவழியைச் சார்ந்தவர். இரண்டு வயதில் இருந்தே இவரைத் தான் செல்லும் திரைப்படங்கள் அத்தனைக்கும் அவரது அம்மா அழைத்து சென்றிருக்கிறார். அதனால் சினிமாவைப் பற்றிய கனவுகள் சிறுவயதிலே அவருக்குள் முளைவிடத் துவங்கின. தனது இருபது வயதில் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடையில் நாள் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற குவென்டின் டெரான்டினோ, அங்கு தினமும் பத்து திரைப்படங்களையாவது பார்க்கக் கூடியவராக மாறியிருந்தார். அவரோடு அதே கடையில் வேலை செய்த ரோஜர் அவாரியோவும் சேர்ந்து கொள்வார். இருவரும் மணிக்கணக்கில் தாங்கள் பார்த்த படங்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்திருக்கிறார்கள். சிறுவயது முதலே காமிக்ஸ் வாசிப்பதில் மிக ஆர்வம் கொண்டிருந்த டெரான்டினோ சாகசப்படங்களை மிகவும் ரசித்து பார்த்து வந்தார். வீடியோ கடையில் பார்த்த படங்களில் உள்ள சிறந்த காட்சிகளை தனித்தனியாக எடுத்து, அதை ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக அமைத்துப் பார்க்கும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இதனால் ஹிட்ச்காக்கில் இருந்து ஒரு காட்சி, &lt;b&gt;கான் வித் த விண்ட்&lt;/b&gt;டில் இருந்து இரண்டு காட்சிகள், கோடார்ட் படத்திலிருந்து இரண்டு காட்சிகள், பிரைன் டி பால்மா படத்திலிருந்து நான்கு காட்சிகள் என்று ஒன்று கலந்த ஒரு கலவையாக இவர் உருவாக்கிய துண்டுப் படங்களை, வீடியோ கடையில் பலரும் ரசித்து பார்த்தனர்.<br />
<br />
ஹாலிவுட் சினிமாவிற்குள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற தடைகளிருந்தால், குவென்டின், தானே ஒரு திரைக்கதையை எழுதி வீடியோ கடை வாடிக்கையாளர்கள் சிலரையும் தன் நண்பர்களையும் ஒன்று சேர்த்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். ஆனால் அது பெரிய தோல்வியடைந்தது. அதன் பிறகு My Best Friend's Birthday என்ற திரைக்கதையை எழுதி அதை பல ஸ்டுடியோகளுக்கு அனுப்பி திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நண்பரின் உதவியால் True Romance என்ற திரைக்கதையை முக்கிய திரைப்பட நிறுவனம் ஒன்றிற்கு விற்க முடிந்தது. அதுதான் குவென்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. அந்தப் படம் சிறப்பாகப் பேசப்பட்டது. Natural Born Killers என்ற அவரது அடுத்த கதையை ஆலிவர் ஸ்டோன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் சரியான மண உறவு அமையாத ஒரு கணவனும் மனைவியும், தங்களது மனச்சோர்வை போக்கிக்கொள்ள தொடர்ந்து கொலை செய்யத் துவங்குகிறார்கள். ஒரு காரில் பயணம் செய்தபடியே அவர்கள் காரணமற்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சம்பிரதாயமான ஹாலிவுட் படங்களில் இருந்து, வந்த மூன்றடுக்கு திரைக்கதை முறையை தூரத் தள்ளிவிட்டு, இப்படம் நீண்ட காட்சிகளும் எதிர்பாராத வன்முறை வெடித்தலுமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வகை படங்களுக்கு முன் உதாரணமாக இருந்தது போனி அண்ட் கிளைடு. இப்படம், குற்றத்திற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை என்று வெளிப்படையாக உணர்த்தியதால் அதன் பாதையில் இன்னொரு பயணத்தை மேற்கொண்டது குவென்டினின் திரைப்படம்.<br />
<br />
இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை உருவாக்காத போதும் குவென்டின் திரைக்கதையில் இருந்த புதிய உத்திகளும் உரையாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. Reservoir Dogs என்ற குவென்டினின் அடுத்த படம் குற்றவாளிகளின் உலகினை இன்னொரு கோணத்தில் ஆய்வு செய்வதாக அமைந்தது. நகைக்கடை ஒன்றினை கொள்ளையடிப்பதற்காகத் திட்டமிடும் குழு ஒன்றில், போலீஸ்காரன் ஒருவன் வேறு அடையாளங்களுடன் சேர்ந்து கொள்கிறான். அது அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது. யார் அந்த போலீஸ் உளவாளி என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது சந்தேகம் உருவாகிறது. இந்த மனச்சிக்கலில் அவர்கள் தங்களையே குற்றவாளிகளாக நினைத்து குழம்பிக் கொள்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டு ஆளுக்கு ஒரு நிறத்தின் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். அதன்படி ஒருவன் நீலம், மற்றவன் மஞ்சள், அடுத்தவன் ஆரஞ்சு என்று பல்வேறு வர்ணங்களாக தங்களை அடையாளம் சொல்லிக் கொள்கிறார்கள். சுய அடையாளம் அழிந்து, தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒற்றை வர்ணத்தோடு அவர்கள் உருமாற்றம் கொள்வது படத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது.<br />
<br />
தொடருகிறது..........................&lt;/span&gt;<br />
<br />
நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=72</link>
			<pubDate>Tue, 25 Apr 2006 21:58:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=72</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;b&gt;எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: &lt;/b&gt;<br />
<br />
[size=14]&lt;b&gt;பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார்&lt;/b&gt; <br />
<br />
திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர்.<br />
<br />
இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர்.<br />
<br />
இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29503.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளிதோறும் அது வெளிவந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.<br />
<br />
&lt;b&gt;எம்.ஜி.ஆர். முன்னால் பேசினார்&lt;/b&gt;<br />
<br />
1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.<br />
<br />
"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் இவர் (எம்.ஜி.ஆரை காட்டி) சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்றார், மகேந்திரன்.<br />
<br />
இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29501.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கல்லூரிப் படிப்பை முடித்த மகேந்திரன் தஞ்சையில் இருந்த அத்தை நேசமணி வீட்டுக்கு சென்றார். அப்போது, சட்டக் கல்லூரியில் படிக்க செல்லும்படியும், தான் பண உதவி செய்வதாகவும் மகேந்திரனிடம் அத்தை கூறினார். அதன் பேரில், மகேந்திரன் சென்னைக்குப் புறப்பட்டார். திருவல்லிக்கேணியில் உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.<br />
<br />
ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், "மேற்கொண்டு பண உதவி செய்ய முடியாது'' என்று அத்தை கூறியதால், படிப்பை அப்படியே விட்டுவிட்டு இளையான்குடிக்கு புறப்பட தயாரானார், மகேந்திரன்.<br />
<br />
அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனை மகேந்திரன் சந்திக்க நேர்ந்தது. தனது "இனமுழக்கம்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை தருவதாகவும், சினிமா விமர்சனம் எழுதுமாறும் மகேந்திரனிடம் கண்ணப்ப வள்ளியப்பன் கூறினார். அதற்கு மகேந்திரன் சம்மதித்தார்.<br />
<br />
இந்த நிலையில் "இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.<br />
<br />
அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்று இருந்தார். அவரைப்பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானேப'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார். <br />
<br />
"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.<br />
<br />
&lt;b&gt;பொன்னியின் செல்வன்&lt;/b&gt;<br />
<br />
மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். <br />
<br />
மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை எடுத்து வந்து, மகேந்திரனிடம் கொடுத்தார்.<br />
<br />
"நான் இதைப் படமாக எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதவேண்டும்'' என்று கூறினார்.<br />
<br />
அந்த நாவலுக்கான திரைக்கதையை, 3 மாதத்தில் மகேந்திரன் எழுதி முடித்தார். "திருடாதே'' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் திரைக்கதையை கொண்டு போய்க் கொடுத்தார்.<br />
<br />
"இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களாப'' என்று வியப்புடன் கேட்டார், எம்.ஜி.ஆர். பிறகு, "ஊரில் இருந்து ஒழுங்காக பணம் வருகிறதாப'' என்று கேட்டார்.<br />
<br />
மகேந்திரன் தன் நிலைமையைக் கூறினார். உடனே எம்.ஜி.ஆர். நூறு ரூபாய் கொடுத்தார்.<br />
<br />
&lt;b&gt;நாடகம்&lt;/b&gt;<br />
<br />
பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். தள்ளிப்போட்டார். தன் நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார்.<br />
<br />
"அனாதைகள்'' என்ற நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29502.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
நாடக ஒத்திகை எல்லாம் முடிந்து திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்தார், எம்.ஜி.ஆர். ஆனால், புயல்-மழை காரணமாக அப்போது நாடகம் அரங்கேறவில்லை.<br />
<br />
பின்னர் சென்னை வந்ததும், அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், படத்தின் பைனான்சியர் இறந்ததால், படம் பாதியில் நின்றுவிட்டது.<br />
<br />
&lt;b&gt;உதவி இயக்குனர்&lt;/b&gt;<br />
<br />
இந்த நிலையில் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.<br />
<br />
இதுபற்றி மகேந்திரன் கூறுகையில், "என்னுடைய சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம.ë என் கலைப்பணிக்கு அவர் வித்திட்டார்; உரமிட்டார்; நீர் வார்த்து வளரவிட்டார் என்பதை நான் என்றுமே மறக்கமாட்டேன்'' என்றார்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மகேந்திரன் <br />
சிவாஜிகணேசன் நடித்த "தங்கப்பதக்கம்'' படத்திற்கு கதை-வசனம் எழுதி புகழ் பெற்ற மகேந்திரன், "முள்ளும் மலரும்'' என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.<br />
1966-ம் ஆண்டு பாலன் பிக்சர்சார் "நாம் மூவர்'' என்ற படத்தை எடுத்தனர். இந்தப்படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29601.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜிகணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.<br />
<br />
&lt;b&gt;"துக்ளக்'' துணை ஆசிரியர்&lt;/b&gt;<br />
<br />
"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், மறுநாள் சொந்த ஊருக்குப் போகத் தயாரானார், மகேந்திரன். அப்போது அவரைப்பார்க்க நடிகர் "சோ'' விரும்பினார். அவர் அழைப்பை ஏற்று, மகேந்திரன் சென்று பார்த்தார்.<br />
<br />
"துக்ளக்'' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் "போஸ்ட் மார்டம்'' என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதவேண்டும் என்றும் மகேந்திரனிடம் "சோ'' கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மகேந்திரன், கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் துக்ளக்கில் பணிபுரிந்தார்.<br />
<br />
"துக்ளக்''கில் பணியாற்றிய அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"துக்ளக்கில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், என் மகள் டிம்பிளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றோம். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பிறகு குழந்தை குணம் அடைந்தது.<br />
<br />
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் "சோ'', நான் மற்றும் சிலர் சேர்ந்து திருப்பதிக்கு சென்றோம்.<br />
<br />
அப்போது "சோ''வுக்கு தலை நிறைய முடி இருந்தது. திடீரென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தார். "என்ன சார் இதெல்லாம்ப'' என்றேன்.<br />
<br />
அதற்கு "சோ'' என்னிடம், "மகேந்திரன்! அன்றைக்கு உங்கள் குழந்தைக்கு ரொம்ப முடியலைன்னு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தபோது, என் மேஜையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைப் பார்த்து குழந்தைக்கு குணமானதும் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டேன். அதை நிறைவேற்றினேன்'' என்றார்.<br />
<br />
அவர் சொன்னதைக் கேட்டு என் விழிகள் நனைந்தன. எப்பேர்ப்பட்ட உள்ளம் அவருக்கு என்று வியந்தேன்.''<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.<br />
<br />
&lt;b&gt;தங்கப்பதக்கம்&lt;/b&gt;<br />
<br />
ஒருநாள் "சோ''வை பார்க்க நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் வந்தனர். <br />
<br />
நடிகர் செந்தாமரை மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டார். மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29602.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் 5 நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.<br />
<br />
நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார்.<br />
<br />
"இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மிïசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.<br />
<br />
தொடர்ந்து வெற்றி நடைபோட்டு, 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.<br />
<br />
"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.<br />
<br />
எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.<br />
<br />
அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.<br />
<br />
ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.<br />
<br />
&lt;b&gt;முள்ளும் மலரும்&lt;/b&gt;<br />
<br />
இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார். அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை மகேந்திரனுக்கு கொடுத்தார்.<br />
<br />
அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை மகேந்திரன் ஏற்றார்.<br />
<br />
படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இசை: இளையராஜா. ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.<br />
<br />
"முள்ளும் மலரும்'' அனைவரையும் கவர்ந்த மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தை நினைவு கூர்ந்த மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"நான் கதை-வசன கர்த்தாவாக இருந்தபோது மலையாளத்தில் கமலஹாசன் நடித்த "மதனோத்சவம்'' என்ற படம் வெளிவந்தது. அதை "பருவமழை'' என்ற பெயரில் தமிழில் "டப்'' செய்தார்கள். தமிழ்ப்பதிப்புக்கு என்னை வசனம் எழுத வைத்தவர், கமல்.<br />
<br />
அதன் பிறகு கமல் நடித்த "மோகம் முப்பது வருஷம்'' என்ற படத்திற்கு நான் திரைக்கதை - வசனம் எழுதினேன்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படம் எடுக்கப்பட்டபோது, தயாரிப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்து வைத்து படம் வெளிவர காரணமாக இருந்தவர், கமல்தான். இன்றுமë எனது நலனில் அக்கறை கொண்டவர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29603.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் கதாநாயகன் காளி வேடத்தில் ரஜினியைத்தான் போடவேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் முதலில் வேணு செட்டியார் அதை ஏற்கவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக இருந்து ரஜினியை நடிக்க வைத்தேன்.<br />
<br />
அக்காலக்கட்டத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தனித்தன்மையுடன் நடித்துக் கொண்டிருந்தாலும், அவருக்குள்ளிருந்த அற்புதமான குணச்சித்திர நடிப்பாற்றலை நான் தெரிந்து வைத்திருந்தேன். காளி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து, எல்லோரையும் வியக்க வைத்தார் ரஜினி.''<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.<br />
 <br />
&lt;b&gt;மகேந்திரன் டைரக்ஷனில் உருவான மிகச்சிறந்த கலைப்படைப்பு "உதிரிப்பூக்கள்'' &lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய "உதிரிப் பூக்கள்'', மிகச்சிறந்த கலைப்படைப்பாக இன்றும் கருதப்படுகிறது.<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தங்களுக்கு ஒரு படத்தை டைரக்ட் செய்து கொடுக்கும்படி கேட்டு மகேந்திரனை பட அதிபர்கள் மொய்த்தார்கள்.<br />
<br />
ஆனால் மகேந்திரனோ, சினிமாத்தனம் இல்லாமல், யதார்த்தமான கதை ஒன்றை படமாக்க விரும்பினார். இதற்காக, தன் மகள் பெயரால் "டிம்பிள் கிரியேஷன்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.<br />
<br />
&lt;b&gt;புதுமைப்பித்தன்&lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் தனது மாணவ பருவத்திலேயே கல்கி, புதுமைப்பித்தன், த.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விரும்பிப்படித்தவர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29701.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"சிறுகதை மன்னர்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருந்தபோதிலும், நாவல் எதையும் எழுதவில்லை. "சிற்றன்னை'' என்ற குறுநாவல் ஒன்றை மட்டுமே எழுதினார். ஆனால் அவருடைய சிறுகதைகள் அடைந்த வெற்றியை அந்த குறுநாவல் எட்டவில்லை.<br />
<br />
ஆயினும், அந்த குறுநாவலில் வரும் ராஜா, குஞ்சு என்ற இரு குழந்தைகளும் மகேந்திரனின் மனதைக் கவர்ந்தனர். அவர்களை வைத்தே, புதிதாக ஒரு கதையை அவர் உருவாக்கினார். அதுதான் "உதிரிப்பூக்கள்.''<br />
<br />
டிமëபிள் கிரியேஷனுக்காக, இந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை தன் நண்பர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.<br />
<br />
&lt;b&gt;அஸ்வினி&lt;/b&gt;<br />
<br />
உதிரிப்பூக்களின் கதாநாயகியாக நடிக்க மெலிந்த உடலும், அகன்ற விழிகளும், கூர்மையான நாசியும் உள்ள பெண்ணைத் தேடி பெங்களூர் சென்றார். அங்கு அஸ்வினி கிடைத்தார்.<br />
<br />
அவருக்கு ஜோடியாக நடிக்க, முரட்டு மíசை கொண்ட விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
<br />
மற்றும் சரத்பாபு, மதுமாலினி (முமëபை), சாருலதா, சிறுவன் ராஜா, சிறுமி அஞ்சு (அறிமுகம்), நடிகை மனோரமாவின் மகன் பூபதி ஆகியோர் இதில் நடித்தனர். கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா மிகவும் `பிசி'யாகி விட்டதால், ஒளிப்பதிவாளராக அசோக்குமார் அமர்த்தப்பட்டார். இசை அமைப்பு: இளையராஜா. எடிட்டிங்: பி.லெனின் (டைரக்டர் பீம்சிங்கின் மகன்)<br />
<br />
"படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, மூலக்கதைக்காக ஒரு தொகையைக் கொடுங்கள்'' என்று பட அதிபரிடம் மகேந்திரன் கூறினார்.<br />
<br />
பட அதிபர் தயங்கினார். "சிற்றன்னை கதைக்கும், உதிரிப்பூக்கள் கதைக்குமë எந்த சம்பந்தமும் இல்லையே! எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும்'' என்று கேட்டார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29702.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
அதற்கு மகேந்திரன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் இருந்திருந்தால், இந்த உதிரிப்பூக்கள் கதையே உருவாகியிருக்காது. எனவே, புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும்'' என்றார்.<br />
<br />
அதன்பின் பட அதிபரும், மகேந்திரனும் புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, கதைக்கு உரிய தொகையை கொடுத்தனர்.<br />
<br />
&lt;b&gt;பாடல் பதிவு&lt;/b&gt;<br />
<br />
கண்ணதாசன் எழுதிய "அழகிய கண்ணே, உறவுகள் நீயே'' பாடலை ஜானகி பாட, பாடல் பதிவுடன் பட பூஜை நடந்தது.<br />
<br />
பூஜைக்கு வந்த திரை உலகத்தினர், அங்கு நின்று கொண்டிருந்த அஸ்வினியைப் பார்த்ததும், "போயும் போயும் இந்தப் பெண்ணா கதாநாயகி'' என்று நினைத்தார்கள். ஏனென்றால், சினிமா கதாநாயகிகளுக்கு உரிய எந்தக் கவர்ச்சியும் இல்லாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் இருந்தார்.<br />
<br />
கோவை மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி, வெள்ளிப்பாளையம் கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது.<br />
<br />
பொதுவாக, இயற்கையாக - யதார்த்தமாக எடுக்கப்படும் கலைப்படங்கள் ("ஆர்ட் பிலிம்'') ஆமை வேகத்தில் நகர்வதும், வசூலில் தோல்வி அடைவதும் வழக்கம். படம் யதார்த்தமாக இருக்கவேண்டும்; அதே சமயம் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார், மகேந்திரன்.<br />
<br />
இந்த விஷப்பரீட்சையில் அவர் வெற்றி பெற்றார்.<br />
<br />
"அற்புதமான கலைப்படைப்பு'' என்று பத்திரிகைகள் விமர்சனம் எழுதின.<br />
<br />
"நான் பார்த்த உன்னதமான உலகத் திரைப்படங்களில் ஒன்று - உதிரிப்பூக்கள்'' என்றார், "வீணை'' எஸ்.பாலசந்தர்.<br />
<br />
இவ்வாறு பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.<br />
<br />
19-10-1979-ல் வெளியான "உதிரிப்பூக்கள்'', இன்றளவும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான தங்கர்பச்சான், "தமிழில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் தலைசிறந்த படம் உதிரிப்பூக்கள்தான்'' என்று கூறியுள்ளார்.<br />
<br />
&lt;b&gt;30 நாட்களில் உருவான படம்&lt;/b&gt;<br />
<br />
"உதிரிப்பூக்கள்'' படம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"என் ரசனைக்கேற்ற விதத்தில் ஒவ்வொரு காட்சியையும் வித, விதமாக எடுத்தேன். 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்தேன்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29703.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
உதிரிப்பூக்கள் படத்தை எம்.ஜி.ஆர். பார்த்தார். என்னை அருகில் வைத்துக்கொண்டு படம் முடிந்ததும் என் தோளில் கை போட்டபடி காருக்குள் சென்று அமைதியாக உட்கார்ந்தார். நான் மனம் பொறுக்காமல், "படத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்களே'' என்றேன்.<br />
<br />
அவரோ என் கரம் பற்றி தழுதழுத்த குரலில் "மகேந்திரன்! ரொம்ப வருஷங்களுக்குப்பிறகு இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்'' என்றார்.<br />
<br />
அவர் அப்படிச் சொன்னதன் பொருள் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.<br />
<br />
உதிரிப்பூக்கள் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தப்படத்தைப் பற்றி மறக்காமல் பாராட்டுகிறார்கள். இதைத்தான் உண்மையான வெற்றி என்று கருதுகிறேன். இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டியது, "சிற்றன்னை'' படைத்த அமரர் புதுமைப்பித்தன் அவர்களுக்கே.<br />
<br />
எனினும், படம் வெளியானபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்.<br />
<br />
ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது. "படத்தின் தொடக்கத்தில் - டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்று போட்டிருக்கிறாய்... அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்திவிட்டாய்'' என்பதே அக்கடிதம்.<br />
<br />
ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில் - வெற்றி காண்பதில் வாழ்த்தும், வசவும் சேர்ந்துதான் வரும். நான் இரண்டையுமே ஒன்றாக ஏற்கிறேன்.<br />
<br />
&lt;b&gt;வெற்றி - தோல்வி ஏன்?&lt;/b&gt;<br />
<br />
அகிலன் அவர்களின் நாவல் "பாவை விளக்கு'' படமாக்கப்பட்டு தோல்வி கண்டது. கல்கியின் "பார்த்திபன் கனவு'' தோற்றது. கல்கியின் "கள்வனின் காதலி'' படமாகி பெரிய வெற்றி காணவில்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்'' மாபெரும் வெற்றி கண்டது. "மலைக்கள்ளன்'' நாவல் படமாகி, இமாலய வெற்றி பெற்றது.<br />
<br />
ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்'' பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் மிகச்சிறந்த படமாக வெற்றி கண்டது.<br />
<br />
தோல்விக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்கியது. வெற்றிக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்து, பொருத்தமான நடிகர் தேர்வுடன் படமாக்கியதே!<br />
<br />
`படிக்கிற' ஊடகம் வேறு; `பார்க்கிற' ஊடகம் வேறு.<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் குறிப்பிட்டார்.<br />
<br />
(புதுமைப்பித்தன் எழுதாத கதையை அவர் பெயரில் படமாக்கினார் என்பது, மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில், மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு படம், தமிழில் "டப்'' செய்யப்பட்டு "சாவித்திரி'' என்ற பெயரில் வெளிவந்தது. கதாநாயகியாக மேனகா நடித்திருந்தார். புதுமைப்பித்தன் எழுதிய "கலியாணி'' என்ற நீண்ட சிறுகதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் கதை புதுமைப்பித்தனுடையது என்று அறிவிக்கப்படவில்லை!)<br />
<br />
<br />
&lt;b&gt;மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'': மோகன் -சுகாசினி அறிமுகம் &lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் இயக்கிய "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் நடிகர் மோகன், சுகாசினி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.<br />
<br />
&lt;b&gt;பூட்டாத பூட்டுகள்&lt;/b&gt;<br />
<br />
"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''<br />
<br />
கணவனை பிரிந்து காதலனோடு ஓடிய பெண், கர்ப்பமான நிலையில் காதலனை விட்டுவிட்டு மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ திரும்பி வருகிறாள். கணவன் அவளை ஏற்றுக்கொள்கிறான் என்பதுதான் கதை.<br />
<br />
கதையை ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வியைத் தழுவியது.<br />
<br />
&lt;b&gt;நெஞ்சத்தைக் கிள்ளாதே&lt;/b&gt;<br />
<br />
தேவி பிலிம்சுக்காக "நெஞ்சத்தை கிள்ளாதே'' என்ற படத்தை எழுதி, இயக்கினார், மகேந்திரன்.<br />
<br />
இந்தப் படத்தின் மூலம் நடிகர் மோகன், நடிகை சுகாசினி ஆகியோர் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்கள்.<br />
<br />
பாலுமகேந்திரா டைரக்ட் செய்த "கோகிலா'' என்ற கன்னடப்படத்தில், கமலஹாசனின் நண்பராக நடித்தவர், மோகன். பெங்களூருக்குச் சென்று அவரை அழைத்து வந்து நடிக்க வைத்தார், மகேந்திரன்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29801.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த விரும்பினார், மகேந்திரன். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சி பெற்று வந்த சுகாசினியை, கதாநாயகியாக்க முடிவு செய்தார்.<br />
<br />
ஏற்கனவே, சுகாசினியின் தந்தை சாருஹாசன், "உதிரிப்பூக்கள்'' படத்தில் நடித்தபோது, அவரைப் பார்க்க சைக்கிளில் சுகாசினி வருவார். அப்போது அவரை மகேந்திரன் பார்த்திருக்கிறார். சுகாசினியின் பட பட பேச்சு, குறும்புத்தனம், சிரிப்பு, கிண்டல் எல்லாவற்றையும் மகேந்திரன் கவனித்திருக்கிறார். "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் கதாநாயகியாக நடிக்க அவரே பொருத்தமானவர் என்று தீர்மானித்தார்.<br />
<br />
&lt;b&gt;நடிக்க மறுப்பு&lt;/b&gt;<br />
<br />
ஆனால், படத்தில் நடிக்க முடியாது என்று சுகாசினி மறுத்துவிட்டார். "எதிர்காலத்தில் பெரிய ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்பதுதான் என் லட்சியம். என்னை விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.<br />
<br />
ஆனால், மகேந்திரன் விடவில்லை. சாருஹாசனிடம் பேசினார். தொடர்ந்து வற்புறுத்தவே, "இந்த ஒரே படம்தான். அதுவும் படப்பிடிப்பு நடக்கும்போது, எனக்கு நடிக்க முடியாது என்று தோன்றினால் இடையிலேயே விலகிக்கொண்டு விடுவேன். அதற்கு ஒப்புக்கொண்டால், இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன்'' என்று சுகாசினி சம்மதித்தார்.<br />
<br />
இளையராஜா இசை அமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ய, படப்பிடிப்பு தொடங்கியது.<br />
<br />
அதிகாலை பனி மூட்டத்தில், "பருவமே புதிய ராகம் பாடு'' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, மோகனும், சுகாசினியும் "ஜாக்கிங்'' ஓடும் காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது.<br />
<br />
சுகாசினி விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தபோதிலும் சிறப்பாக நடித்தார். எல்லோரும் பாராட்டவே, உற்சாகத்துடன் நடித்தார்.<br />
<br />
&lt;b&gt;ஒரு வருடம் ஓடியது&lt;/b&gt;<br />
<br />
12-12-1980-ல் வெளியான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.<br />
<br />
அந்த ஆண்டின் சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்யும் குழுவின் நடுவராக இருந்த பிரபல இயக்குனர் வி.சாந்தாராம், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகி தனது தாலியை பிடித்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி ஓடும் ஓட்டத்தையும் படத்தின் முன் பகுதியில் வரும் சுகாசினியின் "ஜாக்கிங்'' ஓட்டத்தையும், "இண்டர்கட்'' முறையில் மாறி, மாறி காட்டி இருப்பதை பார்த்து பாராட்டினார்.<br />
<br />
"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29802.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.<br />
<br />
&lt;b&gt;நண்டு&lt;/b&gt;<br />
<br />
தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி அப்படங்களை டைரக்ட் செய்தார், மகேந்திரன்<br />
<br />
இதில் "நண்டு'', சிவசங்கரி எழுதிய பிரபல நாவல். பொதுவாக, நாவலை திரைக்கதையாக மாற்றி அமைப்பதில் பெரிய வெற்றி கண்ட மகேந்திரன், "நண்டு'' விஷயத்தில் தோல்வி கண்டார். இதற்குக் காரணம், கதையின் பல காட்சிகள் உத்தரபிரதேசத்தில் நடப்பதாக இருந்ததால், இந்தி வசனங்கள் நிறைய இடம் பெற்று இருந்ததுதான். அஸ்வினி, சுரேஷ் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29803.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்தப்படம் ரிலீஸ் ஆனபோது மகேந்திரன் டெல்லியில் இருந்தார். இந்தி வசனம் வந்த காட்சிகளின்போது, ரசிகர்கள் கூச்சல் போட்டனர். எனவே மகேந்திரனிடம் ஆலோசனை கேட்காமல் பட அதிபர் அவசரம் அவசரமாக இந்தி வசனங்களை தமிழில் `டப்' செய்தார். அப்படியும் படம் ஓடவில்லை.<br />
<br />
ஆயினும், கடைசி நாளில் தியேட்டர்களில், படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.<br />
<br />
"சரியானபடி விளம்பரம் செய்திருந்தால், இந்தப்படம் வெற்றி அடைந்திருக்கும்'' என்பது மகேந்திரனின் கருத்து.<br />
 <br />
**********************<br />
<br />
&lt;b&gt;மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி- ஸ்ரீதேவி போட்டி போட்டு நடித்த "ஜானி''&lt;/b&gt; <br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த படம் "ஜானி.''இதில் அவருக்கு இரட்டை வேடம். அவரும், ஸ்ரீதேவியும் சிறப்பாக நடித்தனர்.<br />
ரஜினிகாந்த் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், "ஜானி''யில் மாறுபட்ட இரட்டை வேடம். ஒருவர் கதாநாயகன். மற்றொருவர் மகா கஞ்சனான முடிவெட்டும் தொழிலாளி.<br />
<br />
&lt;b&gt;ஸ்ரீதேவி&lt;/b&gt;<br />
<br />
இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார்.<br />
<br />
அதில் அவர் பாடகியாக வருவார். அதனால் பல இனிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. (இசை: இளையராஜா.)<br />
<br />
ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு சிறப்பாக நடித்தனர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29901.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
1980 ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவந்த "ஜானி'' வெற்றிப்படமாக அமைந்தது.<br />
<br />
&lt;b&gt;கை கொடுக்கும் கை&lt;/b&gt;<br />
<br />
இதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் "கை கொடுக்கும் கை.''<br />
<br />
பிரபல டைரக்டர் புட்டண்ணா, கன்னடத்தில் "கதா சங்கமம்'' என்ற படத்தைத் தயாரித்தார். ஒரே படத்தில் மூன்று கதைகள் இடம் பெற்றன. <br />
<br />
மூன்றாவது கதை "முனித்தாய்'' என்பதாகும். கதாநாயகி பார்வை இல்லாதவள். கதாநாயகன் அவளை விரும்பி மணக்கிறான். பார்வை இல்லாத பெண்ணை, வில்லன் கற்பழித்து விடுகிறான்... இப்படிப்போகிறது கதை.<br />
<br />
இந்தக் கதையை படமாக்க "ஸ்ரீராகவேந்திராஸ்'' பட நிறுவனம் முன்வந்தது.<br />
<br />
கன்னடப் படத்தைப் பார்த்த மகேந்திரன், "இந்தக் கதையில் இரண்டு முக்கியமான மாறுதல்களை செய்ய வேண்டும். பார்வை இல்லாத கதாநாயகி குளிப்பதை ஒருவன் ஒளிந்திருந்து பார்க்கிறான். அதை நீக்கிவிடவேண்டும். கதாநாயகி கற்பழிக்கப்படுகிறாள் என்பதையும் மாற்ற வேண்டும். ரஜினிகாந்த் இப்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். படத்தில் அவர் மனைவியாக நடிப்பவர் கற்பழிக்கப்படுவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த மாறுதல்களை செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டால், நான் டைரக்ட் செய்கிறேன்'' என்றார்.<br />
<br />
இதற்கு ரஜினிகாந்தும், பட அதிபரும் ஒப்புக்கொண்டனர்.<br />
<br />
&lt;b&gt;கடைசி நேர மாற்றம்&lt;/b&gt;<br />
<br />
ஆனால் கடைசி நேரத்தில், "ஒரிஜினல் கதைப்படியே, கதாநாயகி கற்பழிக்கப்படுவதுபோல் காட்சியை எடுக்கவேண்டும்'' என்று பட அதிபர் வற்புறுத்தினார். ரஜினிகாந்தின் விருப்பமும் இதுதான் என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.<br />
<br />
மகேந்திரன் வேறு வழியின்றி, பட அதிபர் சொன்னபடி படத்தை முடித்துக்கொடுக்க சம்மதித்தார். "இந்தப்படம் பெரிய தோல்வி அடையும். அந்த தோல்வியில் இருந்து நான் மீள்வதற்கு ரொம்ப காலம் ஆகும்'' என்று பட அதிபரிடம் மனம் நொந்து கூறினார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29902.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
பின்னர் ரஜினிகாந்திடம் மகேந்திரன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, "கன்னடப்படத்தில் உள்ளபடியே முடிவை வைக்கும்படி பட அதிபரிடம் கூறினீர்களா?'' என்று கேட்டார்.<br />
<br />
"நான் அப்படிச் சொல்லவில்லையே!'' என்றார், ரஜினிகாந்த்.<br />
<br />
பட அதிபர், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை மகேந்திரன் தெரிந்து கொண்டார்.<br />
<br />
"கை கொடுக்கும் கை'' 1984 ஜுன் 14-ந்தேதி வெளிவந்தது. மகேந்திரன் சொன்னதுபோலவே அப்படம் தோல்வி அடைந்தது.<br />
<br />
&lt;b&gt;சாசனம்&lt;/b&gt;<br />
<br />
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின் கதை, வசனம், டைரக்ஷனில் உருவாகியிருக்கிறது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது.<br />
<br />
அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா, `தலைவாசல்' விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். 1997-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. <br />
<br />
ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும்]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;b&gt;எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: &lt;/b&gt;<br />
<br />
[size=14]&lt;b&gt;பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார்&lt;/b&gt; <br />
<br />
திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர்.<br />
<br />
இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர்.<br />
<br />
இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29503.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளிதோறும் அது வெளிவந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.<br />
<br />
&lt;b&gt;எம்.ஜி.ஆர். முன்னால் பேசினார்&lt;/b&gt;<br />
<br />
1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.<br />
<br />
"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் இவர் (எம்.ஜி.ஆரை காட்டி) சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்றார், மகேந்திரன்.<br />
<br />
இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29501.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கல்லூரிப் படிப்பை முடித்த மகேந்திரன் தஞ்சையில் இருந்த அத்தை நேசமணி வீட்டுக்கு சென்றார். அப்போது, சட்டக் கல்லூரியில் படிக்க செல்லும்படியும், தான் பண உதவி செய்வதாகவும் மகேந்திரனிடம் அத்தை கூறினார். அதன் பேரில், மகேந்திரன் சென்னைக்குப் புறப்பட்டார். திருவல்லிக்கேணியில் உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.<br />
<br />
ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், "மேற்கொண்டு பண உதவி செய்ய முடியாது'' என்று அத்தை கூறியதால், படிப்பை அப்படியே விட்டுவிட்டு இளையான்குடிக்கு புறப்பட தயாரானார், மகேந்திரன்.<br />
<br />
அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனை மகேந்திரன் சந்திக்க நேர்ந்தது. தனது "இனமுழக்கம்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை தருவதாகவும், சினிமா விமர்சனம் எழுதுமாறும் மகேந்திரனிடம் கண்ணப்ப வள்ளியப்பன் கூறினார். அதற்கு மகேந்திரன் சம்மதித்தார்.<br />
<br />
இந்த நிலையில் "இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.<br />
<br />
அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்று இருந்தார். அவரைப்பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானேப'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார். <br />
<br />
"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.<br />
<br />
&lt;b&gt;பொன்னியின் செல்வன்&lt;/b&gt;<br />
<br />
மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். <br />
<br />
மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை எடுத்து வந்து, மகேந்திரனிடம் கொடுத்தார்.<br />
<br />
"நான் இதைப் படமாக எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதவேண்டும்'' என்று கூறினார்.<br />
<br />
அந்த நாவலுக்கான திரைக்கதையை, 3 மாதத்தில் மகேந்திரன் எழுதி முடித்தார். "திருடாதே'' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் திரைக்கதையை கொண்டு போய்க் கொடுத்தார்.<br />
<br />
"இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களாப'' என்று வியப்புடன் கேட்டார், எம்.ஜி.ஆர். பிறகு, "ஊரில் இருந்து ஒழுங்காக பணம் வருகிறதாப'' என்று கேட்டார்.<br />
<br />
மகேந்திரன் தன் நிலைமையைக் கூறினார். உடனே எம்.ஜி.ஆர். நூறு ரூபாய் கொடுத்தார்.<br />
<br />
&lt;b&gt;நாடகம்&lt;/b&gt;<br />
<br />
பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். தள்ளிப்போட்டார். தன் நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார்.<br />
<br />
"அனாதைகள்'' என்ற நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29502.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
நாடக ஒத்திகை எல்லாம் முடிந்து திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்தார், எம்.ஜி.ஆர். ஆனால், புயல்-மழை காரணமாக அப்போது நாடகம் அரங்கேறவில்லை.<br />
<br />
பின்னர் சென்னை வந்ததும், அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், படத்தின் பைனான்சியர் இறந்ததால், படம் பாதியில் நின்றுவிட்டது.<br />
<br />
&lt;b&gt;உதவி இயக்குனர்&lt;/b&gt;<br />
<br />
இந்த நிலையில் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.<br />
<br />
இதுபற்றி மகேந்திரன் கூறுகையில், "என்னுடைய சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம.ë என் கலைப்பணிக்கு அவர் வித்திட்டார்; உரமிட்டார்; நீர் வார்த்து வளரவிட்டார் என்பதை நான் என்றுமே மறக்கமாட்டேன்'' என்றார்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மகேந்திரன் <br />
சிவாஜிகணேசன் நடித்த "தங்கப்பதக்கம்'' படத்திற்கு கதை-வசனம் எழுதி புகழ் பெற்ற மகேந்திரன், "முள்ளும் மலரும்'' என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.<br />
1966-ம் ஆண்டு பாலன் பிக்சர்சார் "நாம் மூவர்'' என்ற படத்தை எடுத்தனர். இந்தப்படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29601.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜிகணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.<br />
<br />
&lt;b&gt;"துக்ளக்'' துணை ஆசிரியர்&lt;/b&gt;<br />
<br />
"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், மறுநாள் சொந்த ஊருக்குப் போகத் தயாரானார், மகேந்திரன். அப்போது அவரைப்பார்க்க நடிகர் "சோ'' விரும்பினார். அவர் அழைப்பை ஏற்று, மகேந்திரன் சென்று பார்த்தார்.<br />
<br />
"துக்ளக்'' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் "போஸ்ட் மார்டம்'' என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதவேண்டும் என்றும் மகேந்திரனிடம் "சோ'' கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மகேந்திரன், கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் துக்ளக்கில் பணிபுரிந்தார்.<br />
<br />
"துக்ளக்''கில் பணியாற்றிய அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"துக்ளக்கில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், என் மகள் டிம்பிளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றோம். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பிறகு குழந்தை குணம் அடைந்தது.<br />
<br />
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் "சோ'', நான் மற்றும் சிலர் சேர்ந்து திருப்பதிக்கு சென்றோம்.<br />
<br />
அப்போது "சோ''வுக்கு தலை நிறைய முடி இருந்தது. திடீரென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தார். "என்ன சார் இதெல்லாம்ப'' என்றேன்.<br />
<br />
அதற்கு "சோ'' என்னிடம், "மகேந்திரன்! அன்றைக்கு உங்கள் குழந்தைக்கு ரொம்ப முடியலைன்னு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தபோது, என் மேஜையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைப் பார்த்து குழந்தைக்கு குணமானதும் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டேன். அதை நிறைவேற்றினேன்'' என்றார்.<br />
<br />
அவர் சொன்னதைக் கேட்டு என் விழிகள் நனைந்தன. எப்பேர்ப்பட்ட உள்ளம் அவருக்கு என்று வியந்தேன்.''<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.<br />
<br />
&lt;b&gt;தங்கப்பதக்கம்&lt;/b&gt;<br />
<br />
ஒருநாள் "சோ''வை பார்க்க நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் வந்தனர். <br />
<br />
நடிகர் செந்தாமரை மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டார். மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29602.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் 5 நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.<br />
<br />
நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார்.<br />
<br />
"இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மிïசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.<br />
<br />
தொடர்ந்து வெற்றி நடைபோட்டு, 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.<br />
<br />
"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.<br />
<br />
எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.<br />
<br />
அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.<br />
<br />
ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.<br />
<br />
&lt;b&gt;முள்ளும் மலரும்&lt;/b&gt;<br />
<br />
இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார். அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை மகேந்திரனுக்கு கொடுத்தார்.<br />
<br />
அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை மகேந்திரன் ஏற்றார்.<br />
<br />
படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இசை: இளையராஜா. ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.<br />
<br />
"முள்ளும் மலரும்'' அனைவரையும் கவர்ந்த மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தை நினைவு கூர்ந்த மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"நான் கதை-வசன கர்த்தாவாக இருந்தபோது மலையாளத்தில் கமலஹாசன் நடித்த "மதனோத்சவம்'' என்ற படம் வெளிவந்தது. அதை "பருவமழை'' என்ற பெயரில் தமிழில் "டப்'' செய்தார்கள். தமிழ்ப்பதிப்புக்கு என்னை வசனம் எழுத வைத்தவர், கமல்.<br />
<br />
அதன் பிறகு கமல் நடித்த "மோகம் முப்பது வருஷம்'' என்ற படத்திற்கு நான் திரைக்கதை - வசனம் எழுதினேன்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படம் எடுக்கப்பட்டபோது, தயாரிப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்து வைத்து படம் வெளிவர காரணமாக இருந்தவர், கமல்தான். இன்றுமë எனது நலனில் அக்கறை கொண்டவர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29603.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் கதாநாயகன் காளி வேடத்தில் ரஜினியைத்தான் போடவேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் முதலில் வேணு செட்டியார் அதை ஏற்கவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக இருந்து ரஜினியை நடிக்க வைத்தேன்.<br />
<br />
அக்காலக்கட்டத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தனித்தன்மையுடன் நடித்துக் கொண்டிருந்தாலும், அவருக்குள்ளிருந்த அற்புதமான குணச்சித்திர நடிப்பாற்றலை நான் தெரிந்து வைத்திருந்தேன். காளி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து, எல்லோரையும் வியக்க வைத்தார் ரஜினி.''<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.<br />
 <br />
&lt;b&gt;மகேந்திரன் டைரக்ஷனில் உருவான மிகச்சிறந்த கலைப்படைப்பு "உதிரிப்பூக்கள்'' &lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய "உதிரிப் பூக்கள்'', மிகச்சிறந்த கலைப்படைப்பாக இன்றும் கருதப்படுகிறது.<br />
"முள்ளும் மலரும்'' படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தங்களுக்கு ஒரு படத்தை டைரக்ட் செய்து கொடுக்கும்படி கேட்டு மகேந்திரனை பட அதிபர்கள் மொய்த்தார்கள்.<br />
<br />
ஆனால் மகேந்திரனோ, சினிமாத்தனம் இல்லாமல், யதார்த்தமான கதை ஒன்றை படமாக்க விரும்பினார். இதற்காக, தன் மகள் பெயரால் "டிம்பிள் கிரியேஷன்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.<br />
<br />
&lt;b&gt;புதுமைப்பித்தன்&lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் தனது மாணவ பருவத்திலேயே கல்கி, புதுமைப்பித்தன், த.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விரும்பிப்படித்தவர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29701.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"சிறுகதை மன்னர்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருந்தபோதிலும், நாவல் எதையும் எழுதவில்லை. "சிற்றன்னை'' என்ற குறுநாவல் ஒன்றை மட்டுமே எழுதினார். ஆனால் அவருடைய சிறுகதைகள் அடைந்த வெற்றியை அந்த குறுநாவல் எட்டவில்லை.<br />
<br />
ஆயினும், அந்த குறுநாவலில் வரும் ராஜா, குஞ்சு என்ற இரு குழந்தைகளும் மகேந்திரனின் மனதைக் கவர்ந்தனர். அவர்களை வைத்தே, புதிதாக ஒரு கதையை அவர் உருவாக்கினார். அதுதான் "உதிரிப்பூக்கள்.''<br />
<br />
டிமëபிள் கிரியேஷனுக்காக, இந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை தன் நண்பர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.<br />
<br />
&lt;b&gt;அஸ்வினி&lt;/b&gt;<br />
<br />
உதிரிப்பூக்களின் கதாநாயகியாக நடிக்க மெலிந்த உடலும், அகன்ற விழிகளும், கூர்மையான நாசியும் உள்ள பெண்ணைத் தேடி பெங்களூர் சென்றார். அங்கு அஸ்வினி கிடைத்தார்.<br />
<br />
அவருக்கு ஜோடியாக நடிக்க, முரட்டு மíசை கொண்ட விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
<br />
மற்றும் சரத்பாபு, மதுமாலினி (முமëபை), சாருலதா, சிறுவன் ராஜா, சிறுமி அஞ்சு (அறிமுகம்), நடிகை மனோரமாவின் மகன் பூபதி ஆகியோர் இதில் நடித்தனர். கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.<br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா மிகவும் `பிசி'யாகி விட்டதால், ஒளிப்பதிவாளராக அசோக்குமார் அமர்த்தப்பட்டார். இசை அமைப்பு: இளையராஜா. எடிட்டிங்: பி.லெனின் (டைரக்டர் பீம்சிங்கின் மகன்)<br />
<br />
"படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, மூலக்கதைக்காக ஒரு தொகையைக் கொடுங்கள்'' என்று பட அதிபரிடம் மகேந்திரன் கூறினார்.<br />
<br />
பட அதிபர் தயங்கினார். "சிற்றன்னை கதைக்கும், உதிரிப்பூக்கள் கதைக்குமë எந்த சம்பந்தமும் இல்லையே! எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும்'' என்று கேட்டார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29702.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
அதற்கு மகேந்திரன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் இருந்திருந்தால், இந்த உதிரிப்பூக்கள் கதையே உருவாகியிருக்காது. எனவே, புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும்'' என்றார்.<br />
<br />
அதன்பின் பட அதிபரும், மகேந்திரனும் புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, கதைக்கு உரிய தொகையை கொடுத்தனர்.<br />
<br />
&lt;b&gt;பாடல் பதிவு&lt;/b&gt;<br />
<br />
கண்ணதாசன் எழுதிய "அழகிய கண்ணே, உறவுகள் நீயே'' பாடலை ஜானகி பாட, பாடல் பதிவுடன் பட பூஜை நடந்தது.<br />
<br />
பூஜைக்கு வந்த திரை உலகத்தினர், அங்கு நின்று கொண்டிருந்த அஸ்வினியைப் பார்த்ததும், "போயும் போயும் இந்தப் பெண்ணா கதாநாயகி'' என்று நினைத்தார்கள். ஏனென்றால், சினிமா கதாநாயகிகளுக்கு உரிய எந்தக் கவர்ச்சியும் இல்லாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் இருந்தார்.<br />
<br />
கோவை மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி, வெள்ளிப்பாளையம் கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது.<br />
<br />
பொதுவாக, இயற்கையாக - யதார்த்தமாக எடுக்கப்படும் கலைப்படங்கள் ("ஆர்ட் பிலிம்'') ஆமை வேகத்தில் நகர்வதும், வசூலில் தோல்வி அடைவதும் வழக்கம். படம் யதார்த்தமாக இருக்கவேண்டும்; அதே சமயம் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார், மகேந்திரன்.<br />
<br />
இந்த விஷப்பரீட்சையில் அவர் வெற்றி பெற்றார்.<br />
<br />
"அற்புதமான கலைப்படைப்பு'' என்று பத்திரிகைகள் விமர்சனம் எழுதின.<br />
<br />
"நான் பார்த்த உன்னதமான உலகத் திரைப்படங்களில் ஒன்று - உதிரிப்பூக்கள்'' என்றார், "வீணை'' எஸ்.பாலசந்தர்.<br />
<br />
இவ்வாறு பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.<br />
<br />
19-10-1979-ல் வெளியான "உதிரிப்பூக்கள்'', இன்றளவும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான தங்கர்பச்சான், "தமிழில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் தலைசிறந்த படம் உதிரிப்பூக்கள்தான்'' என்று கூறியுள்ளார்.<br />
<br />
&lt;b&gt;30 நாட்களில் உருவான படம்&lt;/b&gt;<br />
<br />
"உதிரிப்பூக்கள்'' படம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"என் ரசனைக்கேற்ற விதத்தில் ஒவ்வொரு காட்சியையும் வித, விதமாக எடுத்தேன். 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்தேன்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29703.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
உதிரிப்பூக்கள் படத்தை எம்.ஜி.ஆர். பார்த்தார். என்னை அருகில் வைத்துக்கொண்டு படம் முடிந்ததும் என் தோளில் கை போட்டபடி காருக்குள் சென்று அமைதியாக உட்கார்ந்தார். நான் மனம் பொறுக்காமல், "படத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்களே'' என்றேன்.<br />
<br />
அவரோ என் கரம் பற்றி தழுதழுத்த குரலில் "மகேந்திரன்! ரொம்ப வருஷங்களுக்குப்பிறகு இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்'' என்றார்.<br />
<br />
அவர் அப்படிச் சொன்னதன் பொருள் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.<br />
<br />
உதிரிப்பூக்கள் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தப்படத்தைப் பற்றி மறக்காமல் பாராட்டுகிறார்கள். இதைத்தான் உண்மையான வெற்றி என்று கருதுகிறேன். இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டியது, "சிற்றன்னை'' படைத்த அமரர் புதுமைப்பித்தன் அவர்களுக்கே.<br />
<br />
எனினும், படம் வெளியானபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்.<br />
<br />
ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது. "படத்தின் தொடக்கத்தில் - டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்று போட்டிருக்கிறாய்... அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்திவிட்டாய்'' என்பதே அக்கடிதம்.<br />
<br />
ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில் - வெற்றி காண்பதில் வாழ்த்தும், வசவும் சேர்ந்துதான் வரும். நான் இரண்டையுமே ஒன்றாக ஏற்கிறேன்.<br />
<br />
&lt;b&gt;வெற்றி - தோல்வி ஏன்?&lt;/b&gt;<br />
<br />
அகிலன் அவர்களின் நாவல் "பாவை விளக்கு'' படமாக்கப்பட்டு தோல்வி கண்டது. கல்கியின் "பார்த்திபன் கனவு'' தோற்றது. கல்கியின் "கள்வனின் காதலி'' படமாகி பெரிய வெற்றி காணவில்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்'' மாபெரும் வெற்றி கண்டது. "மலைக்கள்ளன்'' நாவல் படமாகி, இமாலய வெற்றி பெற்றது.<br />
<br />
ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்'' பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் மிகச்சிறந்த படமாக வெற்றி கண்டது.<br />
<br />
தோல்விக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்கியது. வெற்றிக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்து, பொருத்தமான நடிகர் தேர்வுடன் படமாக்கியதே!<br />
<br />
`படிக்கிற' ஊடகம் வேறு; `பார்க்கிற' ஊடகம் வேறு.<br />
<br />
இவ்வாறு மகேந்திரன் குறிப்பிட்டார்.<br />
<br />
(புதுமைப்பித்தன் எழுதாத கதையை அவர் பெயரில் படமாக்கினார் என்பது, மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில், மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு படம், தமிழில் "டப்'' செய்யப்பட்டு "சாவித்திரி'' என்ற பெயரில் வெளிவந்தது. கதாநாயகியாக மேனகா நடித்திருந்தார். புதுமைப்பித்தன் எழுதிய "கலியாணி'' என்ற நீண்ட சிறுகதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் கதை புதுமைப்பித்தனுடையது என்று அறிவிக்கப்படவில்லை!)<br />
<br />
<br />
&lt;b&gt;மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'': மோகன் -சுகாசினி அறிமுகம் &lt;/b&gt;<br />
<br />
மகேந்திரன் இயக்கிய "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் நடிகர் மோகன், சுகாசினி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.<br />
<br />
&lt;b&gt;பூட்டாத பூட்டுகள்&lt;/b&gt;<br />
<br />
"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''<br />
<br />
கணவனை பிரிந்து காதலனோடு ஓடிய பெண், கர்ப்பமான நிலையில் காதலனை விட்டுவிட்டு மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ திரும்பி வருகிறாள். கணவன் அவளை ஏற்றுக்கொள்கிறான் என்பதுதான் கதை.<br />
<br />
கதையை ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வியைத் தழுவியது.<br />
<br />
&lt;b&gt;நெஞ்சத்தைக் கிள்ளாதே&lt;/b&gt;<br />
<br />
தேவி பிலிம்சுக்காக "நெஞ்சத்தை கிள்ளாதே'' என்ற படத்தை எழுதி, இயக்கினார், மகேந்திரன்.<br />
<br />
இந்தப் படத்தின் மூலம் நடிகர் மோகன், நடிகை சுகாசினி ஆகியோர் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்கள்.<br />
<br />
பாலுமகேந்திரா டைரக்ட் செய்த "கோகிலா'' என்ற கன்னடப்படத்தில், கமலஹாசனின் நண்பராக நடித்தவர், மோகன். பெங்களூருக்குச் சென்று அவரை அழைத்து வந்து நடிக்க வைத்தார், மகேந்திரன்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29801.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த விரும்பினார், மகேந்திரன். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சி பெற்று வந்த சுகாசினியை, கதாநாயகியாக்க முடிவு செய்தார்.<br />
<br />
ஏற்கனவே, சுகாசினியின் தந்தை சாருஹாசன், "உதிரிப்பூக்கள்'' படத்தில் நடித்தபோது, அவரைப் பார்க்க சைக்கிளில் சுகாசினி வருவார். அப்போது அவரை மகேந்திரன் பார்த்திருக்கிறார். சுகாசினியின் பட பட பேச்சு, குறும்புத்தனம், சிரிப்பு, கிண்டல் எல்லாவற்றையும் மகேந்திரன் கவனித்திருக்கிறார். "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் கதாநாயகியாக நடிக்க அவரே பொருத்தமானவர் என்று தீர்மானித்தார்.<br />
<br />
&lt;b&gt;நடிக்க மறுப்பு&lt;/b&gt;<br />
<br />
ஆனால், படத்தில் நடிக்க முடியாது என்று சுகாசினி மறுத்துவிட்டார். "எதிர்காலத்தில் பெரிய ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்பதுதான் என் லட்சியம். என்னை விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.<br />
<br />
ஆனால், மகேந்திரன் விடவில்லை. சாருஹாசனிடம் பேசினார். தொடர்ந்து வற்புறுத்தவே, "இந்த ஒரே படம்தான். அதுவும் படப்பிடிப்பு நடக்கும்போது, எனக்கு நடிக்க முடியாது என்று தோன்றினால் இடையிலேயே விலகிக்கொண்டு விடுவேன். அதற்கு ஒப்புக்கொண்டால், இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன்'' என்று சுகாசினி சம்மதித்தார்.<br />
<br />
இளையராஜா இசை அமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ய, படப்பிடிப்பு தொடங்கியது.<br />
<br />
அதிகாலை பனி மூட்டத்தில், "பருவமே புதிய ராகம் பாடு'' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, மோகனும், சுகாசினியும் "ஜாக்கிங்'' ஓடும் காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது.<br />
<br />
சுகாசினி விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தபோதிலும் சிறப்பாக நடித்தார். எல்லோரும் பாராட்டவே, உற்சாகத்துடன் நடித்தார்.<br />
<br />
&lt;b&gt;ஒரு வருடம் ஓடியது&lt;/b&gt;<br />
<br />
12-12-1980-ல் வெளியான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.<br />
<br />
அந்த ஆண்டின் சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்யும் குழுவின் நடுவராக இருந்த பிரபல இயக்குனர் வி.சாந்தாராம், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகி தனது தாலியை பிடித்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி ஓடும் ஓட்டத்தையும் படத்தின் முன் பகுதியில் வரும் சுகாசினியின் "ஜாக்கிங்'' ஓட்டத்தையும், "இண்டர்கட்'' முறையில் மாறி, மாறி காட்டி இருப்பதை பார்த்து பாராட்டினார்.<br />
<br />
"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29802.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.<br />
<br />
&lt;b&gt;நண்டு&lt;/b&gt;<br />
<br />
தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி அப்படங்களை டைரக்ட் செய்தார், மகேந்திரன்<br />
<br />
இதில் "நண்டு'', சிவசங்கரி எழுதிய பிரபல நாவல். பொதுவாக, நாவலை திரைக்கதையாக மாற்றி அமைப்பதில் பெரிய வெற்றி கண்ட மகேந்திரன், "நண்டு'' விஷயத்தில் தோல்வி கண்டார். இதற்குக் காரணம், கதையின் பல காட்சிகள் உத்தரபிரதேசத்தில் நடப்பதாக இருந்ததால், இந்தி வசனங்கள் நிறைய இடம் பெற்று இருந்ததுதான். அஸ்வினி, சுரேஷ் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29803.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்தப்படம் ரிலீஸ் ஆனபோது மகேந்திரன் டெல்லியில் இருந்தார். இந்தி வசனம் வந்த காட்சிகளின்போது, ரசிகர்கள் கூச்சல் போட்டனர். எனவே மகேந்திரனிடம் ஆலோசனை கேட்காமல் பட அதிபர் அவசரம் அவசரமாக இந்தி வசனங்களை தமிழில் `டப்' செய்தார். அப்படியும் படம் ஓடவில்லை.<br />
<br />
ஆயினும், கடைசி நாளில் தியேட்டர்களில், படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.<br />
<br />
"சரியானபடி விளம்பரம் செய்திருந்தால், இந்தப்படம் வெற்றி அடைந்திருக்கும்'' என்பது மகேந்திரனின் கருத்து.<br />
 <br />
**********************<br />
<br />
&lt;b&gt;மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி- ஸ்ரீதேவி போட்டி போட்டு நடித்த "ஜானி''&lt;/b&gt; <br />
<br />
"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த படம் "ஜானி.''இதில் அவருக்கு இரட்டை வேடம். அவரும், ஸ்ரீதேவியும் சிறப்பாக நடித்தனர்.<br />
ரஜினிகாந்த் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், "ஜானி''யில் மாறுபட்ட இரட்டை வேடம். ஒருவர் கதாநாயகன். மற்றொருவர் மகா கஞ்சனான முடிவெட்டும் தொழிலாளி.<br />
<br />
&lt;b&gt;ஸ்ரீதேவி&lt;/b&gt;<br />
<br />
இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார்.<br />
<br />
அதில் அவர் பாடகியாக வருவார். அதனால் பல இனிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. (இசை: இளையராஜா.)<br />
<br />
ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு சிறப்பாக நடித்தனர்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29901.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
1980 ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவந்த "ஜானி'' வெற்றிப்படமாக அமைந்தது.<br />
<br />
&lt;b&gt;கை கொடுக்கும் கை&lt;/b&gt;<br />
<br />
இதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் "கை கொடுக்கும் கை.''<br />
<br />
பிரபல டைரக்டர் புட்டண்ணா, கன்னடத்தில் "கதா சங்கமம்'' என்ற படத்தைத் தயாரித்தார். ஒரே படத்தில் மூன்று கதைகள் இடம் பெற்றன. <br />
<br />
மூன்றாவது கதை "முனித்தாய்'' என்பதாகும். கதாநாயகி பார்வை இல்லாதவள். கதாநாயகன் அவளை விரும்பி மணக்கிறான். பார்வை இல்லாத பெண்ணை, வில்லன் கற்பழித்து விடுகிறான்... இப்படிப்போகிறது கதை.<br />
<br />
இந்தக் கதையை படமாக்க "ஸ்ரீராகவேந்திராஸ்'' பட நிறுவனம் முன்வந்தது.<br />
<br />
கன்னடப் படத்தைப் பார்த்த மகேந்திரன், "இந்தக் கதையில் இரண்டு முக்கியமான மாறுதல்களை செய்ய வேண்டும். பார்வை இல்லாத கதாநாயகி குளிப்பதை ஒருவன் ஒளிந்திருந்து பார்க்கிறான். அதை நீக்கிவிடவேண்டும். கதாநாயகி கற்பழிக்கப்படுகிறாள் என்பதையும் மாற்ற வேண்டும். ரஜினிகாந்த் இப்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். படத்தில் அவர் மனைவியாக நடிப்பவர் கற்பழிக்கப்படுவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த மாறுதல்களை செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டால், நான் டைரக்ட் செய்கிறேன்'' என்றார்.<br />
<br />
இதற்கு ரஜினிகாந்தும், பட அதிபரும் ஒப்புக்கொண்டனர்.<br />
<br />
&lt;b&gt;கடைசி நேர மாற்றம்&lt;/b&gt;<br />
<br />
ஆனால் கடைசி நேரத்தில், "ஒரிஜினல் கதைப்படியே, கதாநாயகி கற்பழிக்கப்படுவதுபோல் காட்சியை எடுக்கவேண்டும்'' என்று பட அதிபர் வற்புறுத்தினார். ரஜினிகாந்தின் விருப்பமும் இதுதான் என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.<br />
<br />
மகேந்திரன் வேறு வழியின்றி, பட அதிபர் சொன்னபடி படத்தை முடித்துக்கொடுக்க சம்மதித்தார். "இந்தப்படம் பெரிய தோல்வி அடையும். அந்த தோல்வியில் இருந்து நான் மீள்வதற்கு ரொம்ப காலம் ஆகும்'' என்று பட அதிபரிடம் மனம் நொந்து கூறினார்.<br />
<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/others/photo_250to317/29902.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
பின்னர் ரஜினிகாந்திடம் மகேந்திரன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, "கன்னடப்படத்தில் உள்ளபடியே முடிவை வைக்கும்படி பட அதிபரிடம் கூறினீர்களா?'' என்று கேட்டார்.<br />
<br />
"நான் அப்படிச் சொல்லவில்லையே!'' என்றார், ரஜினிகாந்த்.<br />
<br />
பட அதிபர், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை மகேந்திரன் தெரிந்து கொண்டார்.<br />
<br />
"கை கொடுக்கும் கை'' 1984 ஜுன் 14-ந்தேதி வெளிவந்தது. மகேந்திரன் சொன்னதுபோலவே அப்படம் தோல்வி அடைந்தது.<br />
<br />
&lt;b&gt;சாசனம்&lt;/b&gt;<br />
<br />
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின் கதை, வசனம், டைரக்ஷனில் உருவாகியிருக்கிறது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது.<br />
<br />
அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா, `தலைவாசல்' விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். 1997-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. <br />
<br />
ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-<br />
<br />
"நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும்]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நீரைக்காணாத வேர்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=105</link>
			<pubDate>Sun, 23 Apr 2006 06:25:11 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=105</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;நீரைக்காணாத வேர்கள்&lt;/b&gt;<br />
<a href="http://www.londonbaba.com/neeraki/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/neeraki/player.swf</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;நீரைக்காணாத வேர்கள்&lt;/b&gt;<br />
<a href="http://www.londonbaba.com/neeraki/player.swf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.londonbaba.com/neeraki/player.swf</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குறும்படப்போட்டி - நல்லூர்ஸ்தான்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=123</link>
			<pubDate>Fri, 21 Apr 2006 19:03:55 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=34">இளைஞன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=123</guid>
			<description><![CDATA[                    நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.<br />
<br />
&lt;img src='http://www.appaal-tamil.com/images/shotfim_nallurs.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.<br />
<br />
&lt;img src='http://www.appaal-tamil.com/images/shotfim_nallurs.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஒட்டாவாவிலிருந்து ஒரு காதல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=346</link>
			<pubDate>Mon, 03 Apr 2006 13:58:54 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=346</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://i2.photobucket.com/albums/y3/ilavanji/Letter.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
[size=15]ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு<br />
செய்து உருவாக்கி அனுப்பியுள்ள <br />
"காதல் வளர்த்தேன்........."<br />
<br />
என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள்<br />
 <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />  <a href="http://www.firefoxhosting.com/song_vijay.mpg" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.firefoxhosting.com/song_vijay.mpg</a><br />
<br />
[b]camera and editing : Vijay Ratnavel<br />
<br />
[size=14]காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்<br />
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்<br />
<br />
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்<br />
நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன்<br />
<br />
ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்<br />
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............<br />
<br />
<br />
[size=14]இனிய வாழ்த்துகள் ...........<br />
தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://i2.photobucket.com/albums/y3/ilavanji/Letter.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
[size=15]ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு<br />
செய்து உருவாக்கி அனுப்பியுள்ள <br />
"காதல் வளர்த்தேன்........."<br />
<br />
என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள்<br />
 <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />  <a href="http://www.firefoxhosting.com/song_vijay.mpg" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.firefoxhosting.com/song_vijay.mpg</a><br />
<br />
[b]camera and editing : Vijay Ratnavel<br />
<br />
[size=14]காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்<br />
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்<br />
<br />
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்<br />
நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன்<br />
<br />
ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்<br />
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............<br />
<br />
<br />
[size=14]இனிய வாழ்த்துகள் ...........<br />
தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சலனம்: ஈழத்தமிழ் திரைக்கலை சஞ்சிகை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=503</link>
			<pubDate>Sun, 19 Mar 2006 12:39:43 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1325">அனிதா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=503</guid>
			<description><![CDATA[                    <a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;சலனம் பற்றி    &lt;/b&gt;  </span>  <br />
<br />
வணக்கம்<br />
<br />
தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது.<br />
 <br />
'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.<br />
<br />
கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை,  இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.<br />
<br />
புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது. <br />
<br />
பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம். <br />
<br />
நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது. <br />
<br />
இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ,நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி, தனக்கான தடமமைத்துச் செல்லும். <br />
<br />
கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட, கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.<br />
<br />
கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள். <br />
<br />
பாரிஸ்<br />
19.03.2006 ஞாயிறு <br />
வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06<br />
<br />
வணக்கம்<br />
<br />
இணையவழி கைகுலுக்குகிறோம்<br />
<br />
வாழ்க வளமுடன்!<br />
<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.salanam.com</a><br />
<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'&gt;</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;சலனம் பற்றி    &lt;/b&gt;  </span>  <br />
<br />
வணக்கம்<br />
<br />
தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது.<br />
 <br />
'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.<br />
<br />
கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை,  இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.<br />
<br />
புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது. <br />
<br />
பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம். <br />
<br />
நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது. <br />
<br />
இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ,நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி, தனக்கான தடமமைத்துச் செல்லும். <br />
<br />
கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட, கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.<br />
<br />
கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள். <br />
<br />
பாரிஸ்<br />
19.03.2006 ஞாயிறு <br />
வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06<br />
<br />
வணக்கம்<br />
<br />
இணையவழி கைகுலுக்குகிறோம்<br />
<br />
வாழ்க வளமுடன்!<br />
<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.salanam.com</a><br />
<br />
<a href="http://www.salanam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img228.imageshack.us/img228/3529/salanamm1kt.png' border='0' alt='user posted image'&gt;</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[North Country (திரைப்படம்)]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=538</link>
			<pubDate>Tue, 14 Mar 2006 21:37:49 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=538</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/char.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;North Country&lt;/b&gt; (திரைப்படம்) <br />
- டிசே தமிழன்<br />
<br />
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.<br />
<br />
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான கர்ப்பம் தரித்திருக்கின்றாரா போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து நீ வாறியா என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.<br />
<br />
&lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/harass.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I am not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். <br />
<br />
மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் தொழிற்சங்க நண்பர்களும் கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.<br />
<br />
ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது கெளரவம் பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.<br />
&lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/work.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ஜோஸி விரும்பித்தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது. <br />
<br />
Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே பெண்களின் அழகு என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ஒருமாதிரியான ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்). <br />
<br />
இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.<br />
<br />
நன்றி:<br />
<a href="http://elanko.net/pathivu/?p=132" target="_blank" rel="noopener" class="mycode_url">http://elanko.net/pathivu/?p=132</a><br />
<br />
more details:<br />
<a href="http://northcountrymovie.warnerbros.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://northcountrymovie.warnerbros.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/char.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;North Country&lt;/b&gt; (திரைப்படம்) <br />
- டிசே தமிழன்<br />
<br />
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.<br />
<br />
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான கர்ப்பம் தரித்திருக்கின்றாரா போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து நீ வாறியா என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.<br />
<br />
&lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/harass.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I am not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். <br />
<br />
மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் தொழிற்சங்க நண்பர்களும் கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.<br />
<br />
ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது கெளரவம் பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.<br />
&lt;img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/work.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ஜோஸி விரும்பித்தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது. <br />
<br />
Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே பெண்களின் அழகு என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ஒருமாதிரியான ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்). <br />
<br />
இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.<br />
<br />
நன்றி:<br />
<a href="http://elanko.net/pathivu/?p=132" target="_blank" rel="noopener" class="mycode_url">http://elanko.net/pathivu/?p=132</a><br />
<br />
more details:<br />
<a href="http://northcountrymovie.warnerbros.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://northcountrymovie.warnerbros.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[78வது ஓஸ்கார் திரைப்பட விழா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=602</link>
			<pubDate>Tue, 07 Mar 2006 21:13:53 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=602</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;78வது ஓஸ்கார் திரைப்பட விழா பற்றிய தகவல்களுக்கு&lt;/b&gt; :-<br />
&lt;img src='http://www.oscarwatch.com/moveabletype/archives/paul0306.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<a href="http://www.oscars.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscars.com/</a><br />
<br />
<a href="http://www.oscars.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscars.org/</a><br />
<br />
<a href="http://www.oscar.com/nominees/list.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscar.com/nominees/list.html</a><br />
<br />
<blockquote class="mycode_quote"><cite>Quote:</cite>March 05, 2006<br />
Winners for the 78th Academy Awards<br />
Ebert, Roeper and David Carr and Adam at Oscar Beachouse, and Robert Butler of the Kansas City Star - the only ones who predicted Crash to take Best Pic. Just goes to show you, sometimes the general consensus will let you down. Tom O'Neil almost gets a prize for almost predicting it, as does David Poland who also almost predicted it then retracted it. Brokeback Mountain deserved to win. I'll just leave it at that. <br />
<br />
Best Picture: Crash <br />
Best Director: Ang Lee, Brokeback Mountain <br />
Best Original Screenplay: Crash<br />
Best Adapted Screenplay: Brokeback Mountain<br />
Best Actress: Reese Witherspoon, Walk the Line<br />
Best Cinematography: Memoirs of a Geisha<br />
Best Actor: Philip Seymour Hoffman, Capote <br />
Editing: Crash<br />
Foreign Language: Tsotsi<br />
Sound Editing: King Kong<br />
Best Song: It's Hard Out Here for a Pimp<br />
Best Sound Mixing: King Kong<br />
Original Score: Brokeback Mountain <br />
Art Direction: Memoirs of a Geisha<br />
Documentary Feature: March of the Penguins<br />
Documentary Short: A Note of Triumph: The Golden Age<br />
Best Supporting Actress: Rachel Weisz, The Constant Gardener<br />
Makeup: Chronicles of Narnia<br />
Costumes: Memoirs of a Geisha<br />
Animated Short: The Moon and the Son<br />
Live Action Short: Six Shooter<br />
Best Animated Feature: Wallace and Gromit: Curse of the Were-Rabbit<br />
Best Visual Effects: King Kong<br />
Best Supporting Actor: George Clooney, Syriana</blockquote>
<br />
<blockquote class="mycode_quote"><cite>Quote:</cite>&lt;b&gt;IFP Spirit Awards&lt;/b&gt;<br />
<br />
The Spirit Awards have traditionally meant that whatever wins there loses at the Oscars - won't be the case this year as Brokeback continues its full steam ahead:<br />
<br />
Best Feature: "Brokeback Mountain"<br />
Producers: Diana Ossana and James Schamus<br />
<br />
Best Director: Ang Lee, "Brokeback Mountain"<br />
<br />
Best Screenplay: Dan Futterman, "Capote"<br />
<br />
Best First Feature: "Crash"<br />
Director: Paul Haggis<br />
Producers: Cathy Schulman, Don Cheadle, Bob Yari, Mark R. Harris, Bobby Moresco, Paul Haggis<br />
<br />
Best First Screenplay: Duncan Tucker, "Transamerica"<br />
<br />
John Cassavetes Award: "Conventioneers"<br />
(For the Best Feature made for under &#36;500,000)<br />
Director: Mora Stephens<br />
Writers: Mora Stephens and Joel Viertel<br />
Producer: Joel Viertel<br />
<br />
Best Supporting Female: Amy Adams, "Junebug"<br />
<br />
Best Supporting Male: Matt Dillon, "Crash"<br />
<br />
Best Female Lead: Felicity Huffman, "Transamerica"<br />
<br />
Best Male Lead: Philip Seymour Hoffman, "Capote"<br />
<br />
Best Cinematography: Robert Elswit, "Good Night, and Good Luck"<br />
<br />
Best Foreign Film: "Paradise Now"<br />
Director: Hany Abu-Assad<br />
<br />
Best Documentary: "Enron: The Smartest Guys in the Room"<br />
Director: Alex Gibney</blockquote>
                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;78வது ஓஸ்கார் திரைப்பட விழா பற்றிய தகவல்களுக்கு&lt;/b&gt; :-<br />
&lt;img src='http://www.oscarwatch.com/moveabletype/archives/paul0306.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<a href="http://www.oscars.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscars.com/</a><br />
<br />
<a href="http://www.oscars.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscars.org/</a><br />
<br />
<a href="http://www.oscar.com/nominees/list.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.oscar.com/nominees/list.html</a><br />
<br />
<blockquote class="mycode_quote"><cite>Quote:</cite>March 05, 2006<br />
Winners for the 78th Academy Awards<br />
Ebert, Roeper and David Carr and Adam at Oscar Beachouse, and Robert Butler of the Kansas City Star - the only ones who predicted Crash to take Best Pic. Just goes to show you, sometimes the general consensus will let you down. Tom O'Neil almost gets a prize for almost predicting it, as does David Poland who also almost predicted it then retracted it. Brokeback Mountain deserved to win. I'll just leave it at that. <br />
<br />
Best Picture: Crash <br />
Best Director: Ang Lee, Brokeback Mountain <br />
Best Original Screenplay: Crash<br />
Best Adapted Screenplay: Brokeback Mountain<br />
Best Actress: Reese Witherspoon, Walk the Line<br />
Best Cinematography: Memoirs of a Geisha<br />
Best Actor: Philip Seymour Hoffman, Capote <br />
Editing: Crash<br />
Foreign Language: Tsotsi<br />
Sound Editing: King Kong<br />
Best Song: It's Hard Out Here for a Pimp<br />
Best Sound Mixing: King Kong<br />
Original Score: Brokeback Mountain <br />
Art Direction: Memoirs of a Geisha<br />
Documentary Feature: March of the Penguins<br />
Documentary Short: A Note of Triumph: The Golden Age<br />
Best Supporting Actress: Rachel Weisz, The Constant Gardener<br />
Makeup: Chronicles of Narnia<br />
Costumes: Memoirs of a Geisha<br />
Animated Short: The Moon and the Son<br />
Live Action Short: Six Shooter<br />
Best Animated Feature: Wallace and Gromit: Curse of the Were-Rabbit<br />
Best Visual Effects: King Kong<br />
Best Supporting Actor: George Clooney, Syriana</blockquote>
<br />
<blockquote class="mycode_quote"><cite>Quote:</cite>&lt;b&gt;IFP Spirit Awards&lt;/b&gt;<br />
<br />
The Spirit Awards have traditionally meant that whatever wins there loses at the Oscars - won't be the case this year as Brokeback continues its full steam ahead:<br />
<br />
Best Feature: "Brokeback Mountain"<br />
Producers: Diana Ossana and James Schamus<br />
<br />
Best Director: Ang Lee, "Brokeback Mountain"<br />
<br />
Best Screenplay: Dan Futterman, "Capote"<br />
<br />
Best First Feature: "Crash"<br />
Director: Paul Haggis<br />
Producers: Cathy Schulman, Don Cheadle, Bob Yari, Mark R. Harris, Bobby Moresco, Paul Haggis<br />
<br />
Best First Screenplay: Duncan Tucker, "Transamerica"<br />
<br />
John Cassavetes Award: "Conventioneers"<br />
(For the Best Feature made for under &#36;500,000)<br />
Director: Mora Stephens<br />
Writers: Mora Stephens and Joel Viertel<br />
Producer: Joel Viertel<br />
<br />
Best Supporting Female: Amy Adams, "Junebug"<br />
<br />
Best Supporting Male: Matt Dillon, "Crash"<br />
<br />
Best Female Lead: Felicity Huffman, "Transamerica"<br />
<br />
Best Male Lead: Philip Seymour Hoffman, "Capote"<br />
<br />
Best Cinematography: Robert Elswit, "Good Night, and Good Luck"<br />
<br />
Best Foreign Film: "Paradise Now"<br />
Director: Hany Abu-Assad<br />
<br />
Best Documentary: "Enron: The Smartest Guys in the Room"<br />
Director: Alex Gibney</blockquote>
                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குறும்படங்கள் &amp; music videos.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=996</link>
			<pubDate>Mon, 06 Feb 2006 15:19:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1521">Netfriend</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=996</guid>
			<description><![CDATA[                    <a href="http://www.tecmaztars.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tecmaztars.com</a><br />
Thanks.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://www.tecmaztars.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tecmaztars.com</a><br />
Thanks.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நீங்கள்தான் உங்கள் மிகச்சிறந்த ஆசிரியர்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1356</link>
			<pubDate>Mon, 16 Jan 2006 01:21:05 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1356</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;<br />
&lt;img src='http://www.kumudam.com/theeranadhi/010106/pg1-t.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்டவை இப்படங்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை இப்படங்கள் பெற்றுள்ளன. மல்லி, சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிப்பரிசையும், பொலிஷ் திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளையும் பெற்றது. டெரரிஸ்ட் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் கோல்டன் பிரமிட் சிறப்பு பரிசையும் பெற்றது. நவரஸா பூஸன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மற்றும் பெரும்தச்சன் காலபனி, மோகினியாட்டம், இருவர், உயிரே ஆகிய படங்களுக்குச் செய்த ஒளிப்பதிவுக்காக ஐந்து முறை இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.<br />
<br />
சென்னை ராமாவரத்திலுள்ள சந்தோஷ்சிவன் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.<br />
<br />
தீராநதி : முதலில், படைப்பு மனநிலை உங்களுக்குள் உருவாகக் காரணமாக இருந்த உங்கள் சிறுவயது அனுபவங்கள், குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்..<br />
<br />
சந்தோஷ்சிவன்:<br />
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரைக்கும், எது அவனைப் படைப்பாளியாக ஆக்கியது என்பது, சிறுவயதில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே, அவன் என்ன கற்றுக்கொள்கிறான் என்பதில்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் ஒருவனுக்கு அடிப்படை அறிவைத் தரும். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதுக்கான படிப்பு, அவனது படைப்பு பலம், பாடத்திட்டங்களுக்கு வெளியே கிடைக்கும் அனுபவத்தில்தான் இருக்கிறது. அந்தவகையில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே கிடைத்த என் சிறுவயது அனுபவங்கள்தான் என்னுள் ஒரு படைப்பாளியை உருவாக்கியவை. திருவனந்தபுரத்தின் தென்பகுதியில்தான் என் இளமைக் காலத்தின் பெரும்பகுதி கழிந்தது. அப்போது நான் ஹாக்கி விளையாடுவேன்.<br />
<br />
மைதானத்தில், மதிய நேரங்களில் வானத்தையும் மேகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன். அக்காலங்களில் சேகரித்தவைகள்தான், பால்யகால நினைவுகள்தான் இன்றைக்கு வரைக்கும் என் காமிரா வழியாக காட்சிகளாக மாறுகிறது. என் படைப்பாளுமை பலமும் அங்கேயிருந்துதான் உதயமாகிறது. குறிப்பாக அந்த வயதில் நான் செய்த பயணங்கள்.<br />
பள்ளிக்கூடத்தில் நான் சிறந்த மாணவன் இல்லை. கல்லூரியிலும் பி.காம் படிக்கும்போது மனம் அக்கவுண்டன்ஸியில் செல்லவில்லை. அக்காலங்களில் அப்பா, வேலை காரணமாக நிறைய பயணம் செய்வார்.<br />
<br />
அவருடன் நானும் செல்வேன். புகைப்படக் கலை மீதான ஆர்வம் அப்போது அப்பாவிடம் இருந்து எனக்குத் தொற்றிக் கொண்டது. லென்ஸ் மூலமாக உலகத்தைப் பார்ப்பதை, அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். கேரளாவின் காடுகளிலும் வெட்டவெளிகளிலும் உள்ள ஒளியமைப்பை, மாறுதலை அப்போது நான் கவனித்துக் கொண்டே வந்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு நான் தனியாகவே நிறைய பயணம் செய்தேன். அப்பயணங்களில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவை புகைப்படக் கலையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவும், படைப்பு மனநிலையைச் செழுமைப்படுத்தவும் பெரிதும் உதவின. புனா திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு, இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டே சுற்றினேன். புனா திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்னுடன் படித்தார்கள். பூனா கல்லூரியில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும். எனவே, நிறைய விடுமுறைகள். விடுமுறை சமயங்களில் கேரளாவுக்குத் திரும்பாமல் ஏதாவது ஒரு நண்பனுடன் அவனது ஊருக்குச் செல்வேன். இப்படி இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். அவ்வளவு குறைந்த வயதுக்குள் என் அளவுக்கு யாராவது பயணம் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். புனா திரைப்படக் கல்லூரி, சினிமா குறித்த தொழில்நுட்ப அறிவைத் தந்தது. ஒரு நாளைக்கு மூன்று படங்கள் வீதம் பார்த்தேன். மிக முக்கியமான உலகத் திரைப்படங்களை அங்கே பார்க்க முடிந்தது.<br />
<br />
தீராநதி: ஆரம்பத்தில் அதிகமும் எதனை நீங்கள் புகைப்படம் எடுத்தீர்கள்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: சிறுவயதில் பயணம் செய்யும்போது, நான் கவனித்த மிக முக்கியமான ஒரு விஷயம், நமது வீடுகளின் அமைப்பு. நமது வீடுகள் எல்லாப் பக்கமும் நன்றாக அடைக்கப்பட்ட வீடுகள். எனவே இருட்டு வீட்டுக்குள் பலமாக இருக்கும். திறந்திருக்கும் ஜன்னல், வாசல் வழியே வீட்டுக்குள் வரும் வெளிச்சமும் அதே அளவு பலத்துடன், துல்லியத்துடன் இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கும், இன்றைய அனுபவத்தில் இருந்து பேசுவதானாலும் சரி, உலகின் வேறு எப்பகுதியிலும் இது போல் வெளிச்சம் இருட்டுக்குள் பலத்துடன் வருவதைப் பார்க்கமுடியாது என்றுதான் சொல்வேன். எனக்கு இந்த இருட்டு பிடிக்கும். வெளிச்சம் இருட்டில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. அந்தக்காலத்தில் அதனையெல்லாம் புகைப்படம் எடுத்தேன்.<br />
<br />
தீராநதி: புனா திரைப்படக் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் வாய்ப்புகள் கிடைத்ததா அல்லது தேடி அலைய வேண்டியிருந்ததா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: படிப்பு முடிந்து வெளியே வந்த போது யாரும் என்னைக் கூப்பிட்டு வேலைகள் தரவில்லை. தேடிச் சென்று மற்றவர்களைக் கேட்கவும் எனக்குத் தயக்கமாக இருந்தது. அப்போது விமரிசகர் விஜய் கிருஷ்ணா, மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்து, ஐந்து தினங்களுக்குள் ஒரு திரைப்படத்தை முடிக்கச் சொன்னார். மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம். பதினாறு எம்.எம்.ல் அந்தப் படத்தை உருவாக்கினோம்.<br />
<br />
அப்படம் நிதியோட கதா. அதனை ப்ளோ அப் செய்ய பம்பாய்க்குச் சென்ற போது, என்னுடைய வேலைகளைக் கவனித்த ஆதித்தா பட்டாச்சார்யா, என்னை ராக் இந்தித் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.<br />
<br />
தொடர்ந்து மலையாளத்தில் விஜித்தம்பி, அண்ணன் சங்கீத்சிவன், அஜயன், விஜய்கிருஷ்ணா போன்ற முக்கியமான ஏழு புதிய இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். பெரும்தச்சன் படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் தளபதியில் ஒளிப்பதிவு செய்யக் கூப்பிட்டார்.<br />
தொடர்ந்து அவருடன் ரோஜா, இருவர், உயிரே போன்ற படங்களுக்கு வேலை செய்தேன். இந்த நான்கு படங்களுமே முக்கியமானவை.<br />
<br />
தீராநதி: தொடக்கத்தில் உங்களுக்கு ஆதர்ஷமாக இருந்த ஒளிப்பதிவாளர் யார்?<br />
சந்தோஷ்சிவன் : சுப்ரதோ மித்ரா, சத்யஜித் ரேவின் ஒளிப்பதிவாளர்.<br />
<br />
தீராநதி: சினிமா ஒளிப்பதிவைப் பொறுத்து, உங்கள் பங்களிப்பு என்று தளபதியில் நீங்கள் அறிமுகம் செய்த worm tone ஐ சொல்கிறார்கள். அசோக்மேத்தாவும் சுப்ரதோ மித்ராவும் கூட worm toneல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தளபதியில் ஏன் இந்த worm toneஐ பயன்படுத்தியிருந்தீர்கள், அதற்குப் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை, குறிப்பாக லென்ஸ்ஐ சொல்ல முடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தொழில்நுட்பக் கருவிகள் என்று பெரியதாக ஒன்றும் இல்லை. வழக்கமான தொழில்நுட்பக் கருவிகளும் லென்ஸும்தான். தளபதியில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பற்றி மணிரத்னம் சொன்னபோது, worm toneல் அதனை ஒளிப்பதிவு செய்யலாம், அது அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாகவும், கதாபாத்திரத்தை மேலும் மெருகூட்டுவதாகவும் இருக்கும் என்று தோன்றியது. எனவே, அதைச் செய்தோம். நான் நினைத்தது போல் அது மிகச் சிறப்பாகவும் வந்தது.<br />
தளபதியில்தான் நான் முதன்முதலாக பாடல்காட்சிகளை ஒளிப்பதிவு செய்தேன். அதற்கு முன்பு நான் ஒளிப்பதிவு செய்தவற்றில் பெரும்பாலானவை கலைப்படங்கள், அல்லது மலையாளப் படங்கள்தான். அவற்றில் பாடல்காட்சிகள் இருக்காது; இருந்தாலும் ஒரு பறவை பறந்து சென்றுகொண்டே இருப்பது, அல்லது அதைப்போல் மெதுவாக கதாநாயகனும் கதாநாயகியும் பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்ற காட்சிகள்தான். தளபதியில் கும்பலாக ஆடும் போது கிளம்பும் தூசி, துல்லியத்துடன் இறங்கும் வெளிச்சம் இவைகளை worm toneல் பதிவு செய்தோம். படத்துக்கு அது வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுத்தது.<br />
<br />
தீராநதி: லைட்டை உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்யும் பாணி இப்போது அதிகரித்து வருகிறது. நீங்களும் இதனைச் செய்திருக்கிறீர்கள்.<br />
<br />
சந்தோஷ்சிவன்: லைட்டை உபயோகிக்காமல் என்று சொல்லமுடியாது. அது சாத்தியமும் இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு லைட் உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று தோன்றும்படி, லைட்டை குறைவாக உபயோகித்து ஒளிப்பதிவு செய்வது என்று சொல்லலாம். யதார்த்தமாக இருக்க இப்படிச் செய்கிறோம். ஆனால், அதுதான் சிறந்தது, அதிகமாக லைட்டை உபயோகித்து எடுக்கப்படுவது சிறந்ததல்ல என்று சொல்லமுடியாது. இரண்டும் இரண்டு பாணிகள், அவ்வளவுதான். காட்சிக்கு, கதைக்கு, கதாபாத்திரத்துக்குத் தக்கபடி, பொருந்தி வரும்படி ஒளிப்பதிவு செய்வதுதான் முக்கியம். ஆங்கிலப் படங்களிலும் உலகத் தரமான கலைப்படங்களிலும் அதிகம் லைட்டை உபயோகித்து எடுக்கப்பட்ட படங்களும் உள்ளன. நமது படங்கள் கதாநாயகனையும் கதாநாயகியையும் மையமாகக் கொண்ட படங்கள். இவர்களது ரசிகர்கள், இவர்கள் இரண்டு பேருக்காகவும்தான் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கதாநாயகனும் கதாநாயகியும் பளிச்சென்று வெளிச்சத்தில் இருந்தால்தான் பிடிக்கும். மங்கலான வெளிச்சத்தில் கதாநாயகனைக் காண்பித்தால், அப்புறம் அதில் எங்கே ஹீரோயிஸம் இருக்கிறது. நமது பார்வையாளர்கள், விடியற்காலையில் தூங்கி எழுந்து வரும்போதுகூட கதாநாயகி பளீரென்று அழகாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சினிமா என்பதே மாயைதானே.<br />
<br />
தீராநதி: இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை மேம்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு என்ன?<br />
சந்தோஷ்சிவன்: அதை எப்படி நான் சொல்லமுடியும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்கள், தங்கள் பங்களிப்புகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை, தான் தொடர்ந்து செய்யும் வேலைகளில் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அதனை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது. அந்தத் தலைமுறை அதை மேலும் கொஞ்சம் செழுமைப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து புதிய தலைமுறை கையில் ஒப்படைக்கிறது. இப்படித்தான் காலம்காலமாக வளர்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சுப்ரதோ மித்ரா ஒளிப்பதிவு செய்யும் போது ஏகப்பட்ட சிக்கல்கள். அவர் தன் பயணத்தில் அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்டார். அவர் கண்டடைந்தது அவரது படங்களாக இன்று நம் முன் இருக்கிறது. அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த தலைமுறை தொடர்கிறது, நான் தொடர்கிறேன். என்னுடைய பங்களிப்புகளும் என் தலைமுறையின் பங்களிப்புகளும் படங்களாக இருக்கின்றன. அதிலிருந்து அடுத்த தலைமுறை தொடரும். இதுதான் இயற்கையின் நியதி.<br />
<br />
ஒளிப்பதிவுத் துறையில் தடம் பதித்த என் முன்னோர்களை நான் என்றும் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் மீது பெரிய மரியாதையும் பாராட்டுணர்வும் கொண்டிருக்கிறேன். அவர்கள் இந்த உலகில் பருவங்களின் ஒளியையும் நிழலையும் அவற்றின் கவித்துவத்துடன் நோக்க நமக்குக் கற்றுத்தந்து வழி அமைத்தவர்கள்.<br />
<br />
தீராநதி: இந்திய லேபுகளின் தரம் நீங்கள் உருவாக்க நினைக்கும் ஒளிப்பதிவுத் தரத்துக்குப் போதுமானதாக இருக்கிறதா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: நிச்சயமாக. இந்திய லேபுகளின் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை. டெரரிஸ்ட் படத்தை நியூயார்க்கில் திரையிட்ட போது, படத்தைப் பார்த்த சில பெரிய ஒளிப்பதிவாளர்கள், எந்த லேபில் வேலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். நான் ஜெமினி லேப் என்று சொன்னேன். அந்தப் பெயர் அதுவரை அவர்கள் கேள்விப்படாதது.<br />
<br />
நியூயார்க்கில் ஜெமினி என்ற பெயரில் எந்த லேபும் இல்லை. அவர்களில் ஒருவர், நியூயார்க்கில் எங்கே இருக்கிறது அந்த லேப் என்று கேட்டேவிட்டார். நான், சென்னையில் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னேன். என்னுடைய படங்களை எல்லாம் நான் இந்திய லேபுகளில்தான் உருவாக்கியுள்ளேன். நவரஸா படம் பிரசாத் லேபில்தான் தயாரானது.<br />
<br />
தீராநதி: நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்த காட்சி எது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ரோஜாவில் வரும், ருக்குமணி ருக்குமணி பாடல் காட்சி. அருவிக் கரையில் தூறல்களுக்கு நடுவே அந்தக் காட்சியைப் படமாக்கினோம்.<br />
<br />
தீராநதி: நீங்கள் ஒளிப்பதிவு செய்தவற்றில் உங்களுக்குப் பிடித்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: எல்லாமே பிடித்தவைதான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், டெரரிஸ்ட் படத்தைச் சொல்லலாம். டெரரிஸ்ட் படத்தில் மையக் கதாபாத்திரத்தின் குளோசப் காட்சிகளை, arri 35 3யோடு இணைந்த  zeiss 60 mm t3¨மேக்ரோ லென்ஸைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்தோம்.<br />
<br />
இயல்பான ஒளியமைப்பும் காட்சியும் அப்படத்தில் இழையோடியிருக்கும். படத்தில் தண்ணீர், பிரதான கதாபாத்திரத்தின் மனத்தின் ஒரு குறியீடாக இருக்கும். சிறிய துகளில் தொடங்கி துளித்துளியாகி, நீர்த்திவலையாக விரிந்து பரவும். அதனை ஒளிப்பதிவு செய்யும் போதே மிகவும் பரவசமடைந்து செய்தேன். இருவர் படமும் எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது.<br />
<br />
தீராநதி: அசோகா திரைப்படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதனை ஒளிப்பதிவு செய்த அனுபவத்தைச் சொல்லமுடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன் : அசோகா, anamorphic format ல் எடுக்கப்பட்டது. கலைப்படத்தின் கூறுகளையும் வணிகப்படத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்ட படமென்று அதனைச் சொல்லலாம். அந்தந்த நேரத்து காற்று, பனி, மேகங்கள், சூரிய உதயம் இவைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமும் மோகமும் அப்படத்தின் ஒளிப்பதிவில் இருக்கும்.<br />
<br />
தீராநதி: மல்லி, டெரரிஸ்ட், நவரஸா போன்ற நீங்கள் இயக்கிய படங்களின் ஒளிப்பதிவுடன், மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு நீங்கள் செய்த ஒளிப்பதிவை ஒப்பிட்டால், உங்கள் இயக்கத்தில் வந்தவற்றில்தான் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. டெரரிஸ்ட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் பாராட்டைப் பெற்றது இருவர் படத்தின் ஒளிப்பதிவுதான். அதன்பிறகு உயிரே. ஆனால் நானே இயக்கும் படங்களில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. நான் விரும்பியவற்றை அதில் செய்யலாம், அவ்வளவுதான்.<br />
தீராநதி: இப்போதுள்ளவர்களில், உங்களுக்குப் பிடித்த இந்திய இயக்குநர் யார்?<br />
சந்தோஷ்சிவன்: நிறைய பேரைச் சொல்லமுடியும். ஆனால், மணிரத்னத்துடன் வேலை பார்ப்பதைத்தான் எப்போதும் நான் விரும்புகிறேன். அவருடன் வேலை செய்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.<br />
<br />
தீராநதி: ஒளிப்பதிவில் இருந்து திடீரென்று இயக்கத்துக்குள் வந்தீர்கள். ஏன்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில் இருக்கும்போதே நான் இயக்கியிருக்கிறேன். டிம்புலுவின் கதை (the story of timblu) என்ற என் முதல் படம் அப்போது என் இயக்கத்தில் உருவானதுதான். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் இயக்குநர் சந்தோஷ்சிவனுக்கு வேலைகள் இல்லாமல் இருந்தது. இப்போது வாய்ப்புகள் உள்ளன, எனவே, நானே இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டேன்.<br />
<br />
தீராநதி: டிம்புலுவின் கதை எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில், என்னுடன் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் படித்தான். அவனுடன் அருணாசலப்பிரதேசம் முழுக்க சுற்றினேன். அங்கேயிருந்த மக்கள் இயற்கையை மட்டுமே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வானொலி தெரியாது, தொலைக்காட்சி தெரியாது. அவர்கள் உயரமான கட்டடங்களை அறிந்திருக்கவில்லை. பொதுவாக நான் எங்கு சென்றாலும் கையில் ஒரு காமிராவுடன் செல்வேன். ஒரு திட்டமில்லாமல் அவர்களைப் பதிவு செய்தேன். அதன்பிறகு அதிலிருந்து டிம்புலுவின் கதை உருவானது. அது ஒரு மணி நேரப் படம். அருணாசலப் பிரதேசம் முழுக்க சுற்றி அதனைப் படமாக்கினேன். இயற்கைக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அப்படம் சித்தரிக்கிறது. டிம்புலுவின் கதைக்கு 1988_ல் குறும்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் எப்பவாவது டிம்புலுவின் கதை எடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றீர்களா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ஆமாம். இப்போது அங்கே எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்துவிட்டது. அவர்கள் ராக் இசை கேட்கிறார்கள். அவர்களிடம் முன்பு இருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை.<br />
தீராநதி: பல படங்களை இயக்கியிருந்தாலும் சர்வதேச அளவில் உங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கித் தந்த படம் டெரரிஸ்ட்தான். புலிட்ஸ்டர் பரிசு பெற்ற திரைப்பட விமர்சகர் ரோஜர் எபர்ட், டெரரிஸ்ட்டை உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாகக் கூறியுள்ளார். இதனைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் நிகழ்ந்த பந்த்தில், நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த நான், ஒருநாள் முழுக்க அந்த காருக்குள்ளேயே நகரமுடியாமல் இருக்கவேண்டியிருந்தது. அப்போதிருந்தச் சூழலும் அசை போடலும்தான், டெரரிஸ்ட்டின் ஆரம்ப விதை. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான் தற்கொலைப் படை பற்றிய அறிதல் எனக்குக் கிடைத்தது. ஒரு லட்சியத்துக்காக தங்களையே அழித்துக் கொள்வது சாதாரணமான ஒன்றல்ல. அதனை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எனக்குள் சிந்தனையைத் தூண்டிவிட்டது. அதனை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்படித்தான் டெரரிஸ்ட் உருவானது. வன்முறையைப் பிரதானப்படுத்தாமல், உயர்ந்த லட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு பெண், எப்படி தன் வாழ்வை அழித்துக் கொள்கிறாள் என்பதை அப்படத்தில் காண்பித்தோம். ஒரு தலைவருக்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் பதின்வயது இளைஞர்கள் அதில் வருகிறார்கள். மிகக் குறைவான நாட்களில் அப்படத்தை முடித்தோம். அது ஒரு வினோதமான அனுபவம்.<br />
<br />
தீராநிதி: வன்முறை, தொடர் குண்டுவெடிப்புகள் என்று பதட்டமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இப்போதுள்ள சூழலுக்கு மாற்றாக எதனை முன்வைப்பீர்கள்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தனிமனிதர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தை மாற்றுவது எப்படி என்பதைவிட, தனிமனிதர்களுக்குள் சிந்தனையைத் தூண்டி விடுவதைத்தான் முக்கியம் என்று கருதுகிறேன்.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் வெளிவந்துள்ள நவரஸா மூன்றாவது பாலினமான அரவாணிகளைப் பற்றியது. இதனை இயக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன் : மகாபாரதத்தில், அர்ஜூனனுக்கும் நாககன்னிகாவுக்கும் பிறந்தவன் அரவாண். குருஷேத்திர யுத்தத்தில் காளிக்காக பலியிட அவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவனின் கடைசி ஆசை ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது. அதற்கு எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. எனவே கிருஷ்ணன், மோகினி அவதாரம் எடுத்து அரவாணைத் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு யுத்தத்தில் அரவாண் களப்பலி இடப்படுகிறான். விதவையான மோகினிக்கு வெள்ளைப் புடவையுடுத்தி வளையல்களை உடைத்து சடங்குகளைச் செய்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. இந்தச் சடங்குதான் வருடாவருடம் கூவாகத்தில் நடைபெறுகிறது. சுமார் மூன்று லட்சம் பேர் அப்போது கூவாகத்தில் கூடுகிறார்கள். அங்கே வரும் அரவாணிகள் தங்களை கிருஷ்ணனின் அவதாரமாக நினைக்கிறார்கள்.<br />
<br />
கூவாகம் திருவிழா பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்று, திருவிழாவைப் பதிவு செய்து திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆஷாபாரதி பல்வேறு உதவிகளைச் செய்தார். படத்துக்கான ஆராய்ச்சி வேலைகளை ராஜாசந்திரசேகர் செய்தார். படத்தின் வேலைகளைத் தொடங்கியபோது மிகக் குறைவான திட்டம்தான் எங்கள் கையில் இருந்தது. திரைக்கதை முழுமையடையாமல் இருந்தது. வசனம் எழுதப்படவில்லை. படத்தின் பிரதான அரவாண் பாத்திரமான கௌதமி பாத்திரத்துக்கு, அங்கே சென்றுதான் வந்திருந்த ஒருவரைத் தேர்வு செய்தோம். திருவிழாவில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே, அங்கு ஒரு படம் தயாராகிறது என்பது அவர்களுக்குத் தெரியாமலேயே நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். பதினைந்து பேர் வீடியோ கவரேஜ் செய்வதுபோல் எடுத்தோம். எனது பெரும்பாலான படங்கள் இதுபோல் பெரிய முன் தயாரிப்புகள், திட்டங்கள் எதுவும் இல்லாமல்தான் உருவாகின. மிகச் சிறந்த உதாரணம், டிம்புலுவின் கதை. அருணாசலப்பிரதேசத்தைச் சுற்றிப் பார்க்கும்போது அது உருவானது.<br />
<br />
தீராநதி: வெகுஜன மக்கள் மத்தியில் அரவாணிகளை கேலிக்குரியவர்களாகப் பார்க்கும் பார்வைதான் இன்றைக்கும் இருக்கிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் அந்தப் பார்வையை அதிகப்படுத்துவது போல்தான் அரவாணிகள் சித்தரிக்கப் படுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மணிரத்னத்தின் பம்பாய். நவரஸா வெகுஜன பார்வையிலிருந்து விலகி இருப்பதுடன், அதனை விமரிசிக்கவும் செய்கிறது. திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன் : ஓஸியானிக் ஏஸியன் திரைப்பட விழாவில் திரையிட்டபோது, பார்த்தவர்கள், அதுவரை அரவாணிகள் பற்றித் தாங்கள் கொண்டிருந்த கருத்தை நவரஸா மாற்றியுள்ளது என்று கூறினர். அதுதான் அப்படத்தின் வெற்றி. தமிழ் மக்கள் மத்தியில் இப்படம் பரவலாகப் பார்க்கப்பட வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தது. இப்போது அது பெருமளவு நிறைவேறி உள்ளது. சென்னையில் தொடர்ந்து பத்துத் தினங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான படங்களை இயக்குவதற்கு தொலைக்காட்சி மிகச்சிறந்த ஒரு ஊடகம்.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் உங்கள் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்துள்ள அனந்தபத்தரம் பற்றிச் சொல்லமுடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: மலையாளப் படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குள் இருந்து வந்துள்ளது. Mistress of spices படத்தின் தயாரிப்புக்காக லண்டன் சென்ற போது அங்குள்ளவர்கள் என் திரைப்பட உத்திகளை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். கதகளி, மோகினியாட்டம் போன்ற கேரளாவுக்கேயுரிய கலைகளின் கூறுகள் உங்கள் படங்களில் உள்ளது. நீங்கள் ஏன் மலையாளத்தில் படங்களை இயக்கக்கூடாது என்று அவர்கள் கேட்டார்கள். அப்போது மலையாளத்தில் படம் பண்ணவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.<br />
<br />
சுனில் பரமேஸ்வரன் என்ற மலையாள எழுத்தாளரின் அனந்தபத்தரம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அந்த நாவல், பால்ய காலத்தில் எங்கள் பாட்டி எனக்குக் கூறிய கதைகளை நினைவுபடுத்தியது. இருட்டு, பிசாசுகள் போன்ற நாட்டுப்புறக் கதைகளின் புதிர்த் தன்மை அதில் இருந்தது. அதனைத் திரைப்படமாக எடுப்பது என்று முடிவு செய்தேன். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போராட்டம்தான் அப்படத்தின் மையம். தெய்யம், கதகளி போன்ற தொன்ம வடிவங்களை அதில் நான் பயன்படுத்தினேன். இப்படத்தின் காட்சிகளில் பல என் சிறு வயது அனுபவங்களில் தங்கியிருக்கிறது. நாற்பத்து நான்கு நாட்களில் இப்படம் எடுக்கப்பட்டது.<br />
<br />
தீராநதி: நீங்கள் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்களுக்கும் உங்களுக்குமான புரிதல் எப்படியிருந்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: மல்லி, ஹாலோ, டெரரிஸ்ட், நவரஸா இவைகளில், நடிப்பைத் தொழிலாக கொள்ளாதவர்களைத்தான் அதிகமும் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு நடிப்பு பற்றிய எந்தப் பின்புலமும் இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் இருந்துதான் நிறைய விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும். அவர்களிடத்தில் காமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் செய்துவிட்டால் போதும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான நடிப்பை இயல்பாகவே அவர்களிடம் இருந்து பெறமுடியும்.<br />
<br />
தீராநதி: திரைப்படங்களைவிட அதிகமாக விவரணப்படங்கள் (documentry) எடுத்திருக்கிறீர்கள். திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது விவரணப்படங்களில் கிடைக்கும் வருமானம் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனாலும் நீங்கள் விவரணப்படங்களை அதிகம் செய்திருக்கிறீர்கள். ஏன்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: விவரணப்படங்கள் எடுப்பதைத்தான் அதிகமும் நான் விரும்புகிறேன். விவரணப் படங்கள் எடுக்கும் போதுதான் என்னை நான் அதில் கரைத்துக் கொள்கிறேன். அவற்றில்தான் என்னால் முழுமையாக ஈடுபடவும் வெளிப்படவும் முடிகிறது. நான் உண்மையாக உணர்வதும் இவற்றில்தான். அதுபோல் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களும் எனக்கு அலாதியான ஒரு திருப்தியையும் மனநிறைவையும் தருகின்றன. அவற்றில்தான் நாம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கமுடியும். வணிகப்படங்களை வருமானத்துக்கான ஒன்றாகச் செய்துகொண்டே, அதிலிருந்து வரும் பணத்தில் குறைந்த முதலீட்டில் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தியைத் தரும் படங்களைச் செய்கிறேன். டிம்புலுவின் கதை, மல்லி, டெரரிஸ்ட், நவரஸா இவைகள் அனைத்தும் மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள்.<br />
<br />
தீராநிதி: பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களில் வேலை பார்த்துவிட்டு, உடனே குறைந்த முதலீடு படங்களில் வேலை பார்ப்பது ஒரு முரணாக இல்லையா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: உண்மைதான். பெரிய முரண்தான். ஆனால், அந்த முரண் எனக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் விரும்பி அனுபவிக்கிறேன்.<br />
தீராநதி: இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தண்ணீருக்குள் குதித்தால்தான் நீந்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளமுடியும். வெளியே நின்றுகொண்டு நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. எனவே முதலில் குதித்து விடுங்கள். புகைப்படக் கலையின் நீட்சிதான் திரைப்பட ஒளிப்பதிவு. இரண்டுக்கும் இடையே அடிப்படைக் கூறுகளும் ஒன்றுதான். ஒரு புகைப்படக் கலைஞன் எந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்காமலேயே சிறந்த ஒளிப்பதிவாளராக ஆகமுடியும். எனவே புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெறுங்கள். அதன் பிறகு அனுபவ ஞானம். புத்தகங்களிலும் கல்லூரியிலும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் ஒருவருக்குத் தீராத கலை பற்றிய தேடல் அவரது அனுபவத்தில் இருந்துதான் வர இயலும். குறிப்பாக நம்மைச் சுற்றியுள்ளவை பற்றிய காட்சி ரீதியான நுட்பமான அவதானிப்பு மிக முக்கியம். சிறந்த எழுத்தாளர்களைப் படிப்பது, ஓவியங்களைப் பார்ப்பது இந்த வகையில் பெரிய உதவியைச் செய்யும். நீங்களும் உங்கள் அனுபவங்களும் அவதானிப்புகளும்தான் உங்களை வழி நடத்திச் செல்லமுடியும். மற்ற ஒளிப்பதிவாளர்களைப் பின்பற்றாமல், உங்களுக்கு சுயமான ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது கஷ்டமான காரியம் இல்லை. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே சுலபமாக அது நிகழும். காட்சியே தனக்கான விஷயங்களைத் தகவமைத்துக் கொள்ளும். மற்ற அனைவரையும்விட, நீங்கள்தான் உங்களின் மிகச்சிறந்த ஆசிரியர்.<br />
<br />
சந்திப்பு : தளவாய் சுந்தரம்<br />
<br />
நன்றி: தீராநதி&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;<br />
&lt;img src='http://www.kumudam.com/theeranadhi/010106/pg1-t.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்டவை இப்படங்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை இப்படங்கள் பெற்றுள்ளன. மல்லி, சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிப்பரிசையும், பொலிஷ் திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளையும் பெற்றது. டெரரிஸ்ட் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் கோல்டன் பிரமிட் சிறப்பு பரிசையும் பெற்றது. நவரஸா பூஸன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மற்றும் பெரும்தச்சன் காலபனி, மோகினியாட்டம், இருவர், உயிரே ஆகிய படங்களுக்குச் செய்த ஒளிப்பதிவுக்காக ஐந்து முறை இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.<br />
<br />
சென்னை ராமாவரத்திலுள்ள சந்தோஷ்சிவன் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.<br />
<br />
தீராநதி : முதலில், படைப்பு மனநிலை உங்களுக்குள் உருவாகக் காரணமாக இருந்த உங்கள் சிறுவயது அனுபவங்கள், குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்..<br />
<br />
சந்தோஷ்சிவன்:<br />
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரைக்கும், எது அவனைப் படைப்பாளியாக ஆக்கியது என்பது, சிறுவயதில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே, அவன் என்ன கற்றுக்கொள்கிறான் என்பதில்தான் இருக்கிறது. பாடத்திட்டங்கள் ஒருவனுக்கு அடிப்படை அறிவைத் தரும். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதுக்கான படிப்பு, அவனது படைப்பு பலம், பாடத்திட்டங்களுக்கு வெளியே கிடைக்கும் அனுபவத்தில்தான் இருக்கிறது. அந்தவகையில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே கிடைத்த என் சிறுவயது அனுபவங்கள்தான் என்னுள் ஒரு படைப்பாளியை உருவாக்கியவை. திருவனந்தபுரத்தின் தென்பகுதியில்தான் என் இளமைக் காலத்தின் பெரும்பகுதி கழிந்தது. அப்போது நான் ஹாக்கி விளையாடுவேன்.<br />
<br />
மைதானத்தில், மதிய நேரங்களில் வானத்தையும் மேகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன். அக்காலங்களில் சேகரித்தவைகள்தான், பால்யகால நினைவுகள்தான் இன்றைக்கு வரைக்கும் என் காமிரா வழியாக காட்சிகளாக மாறுகிறது. என் படைப்பாளுமை பலமும் அங்கேயிருந்துதான் உதயமாகிறது. குறிப்பாக அந்த வயதில் நான் செய்த பயணங்கள்.<br />
பள்ளிக்கூடத்தில் நான் சிறந்த மாணவன் இல்லை. கல்லூரியிலும் பி.காம் படிக்கும்போது மனம் அக்கவுண்டன்ஸியில் செல்லவில்லை. அக்காலங்களில் அப்பா, வேலை காரணமாக நிறைய பயணம் செய்வார்.<br />
<br />
அவருடன் நானும் செல்வேன். புகைப்படக் கலை மீதான ஆர்வம் அப்போது அப்பாவிடம் இருந்து எனக்குத் தொற்றிக் கொண்டது. லென்ஸ் மூலமாக உலகத்தைப் பார்ப்பதை, அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். கேரளாவின் காடுகளிலும் வெட்டவெளிகளிலும் உள்ள ஒளியமைப்பை, மாறுதலை அப்போது நான் கவனித்துக் கொண்டே வந்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு நான் தனியாகவே நிறைய பயணம் செய்தேன். அப்பயணங்களில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவை புகைப்படக் கலையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவும், படைப்பு மனநிலையைச் செழுமைப்படுத்தவும் பெரிதும் உதவின. புனா திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு, இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டே சுற்றினேன். புனா திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்னுடன் படித்தார்கள். பூனா கல்லூரியில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும். எனவே, நிறைய விடுமுறைகள். விடுமுறை சமயங்களில் கேரளாவுக்குத் திரும்பாமல் ஏதாவது ஒரு நண்பனுடன் அவனது ஊருக்குச் செல்வேன். இப்படி இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். அவ்வளவு குறைந்த வயதுக்குள் என் அளவுக்கு யாராவது பயணம் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். புனா திரைப்படக் கல்லூரி, சினிமா குறித்த தொழில்நுட்ப அறிவைத் தந்தது. ஒரு நாளைக்கு மூன்று படங்கள் வீதம் பார்த்தேன். மிக முக்கியமான உலகத் திரைப்படங்களை அங்கே பார்க்க முடிந்தது.<br />
<br />
தீராநதி: ஆரம்பத்தில் அதிகமும் எதனை நீங்கள் புகைப்படம் எடுத்தீர்கள்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: சிறுவயதில் பயணம் செய்யும்போது, நான் கவனித்த மிக முக்கியமான ஒரு விஷயம், நமது வீடுகளின் அமைப்பு. நமது வீடுகள் எல்லாப் பக்கமும் நன்றாக அடைக்கப்பட்ட வீடுகள். எனவே இருட்டு வீட்டுக்குள் பலமாக இருக்கும். திறந்திருக்கும் ஜன்னல், வாசல் வழியே வீட்டுக்குள் வரும் வெளிச்சமும் அதே அளவு பலத்துடன், துல்லியத்துடன் இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கும், இன்றைய அனுபவத்தில் இருந்து பேசுவதானாலும் சரி, உலகின் வேறு எப்பகுதியிலும் இது போல் வெளிச்சம் இருட்டுக்குள் பலத்துடன் வருவதைப் பார்க்கமுடியாது என்றுதான் சொல்வேன். எனக்கு இந்த இருட்டு பிடிக்கும். வெளிச்சம் இருட்டில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. அந்தக்காலத்தில் அதனையெல்லாம் புகைப்படம் எடுத்தேன்.<br />
<br />
தீராநதி: புனா திரைப்படக் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் வாய்ப்புகள் கிடைத்ததா அல்லது தேடி அலைய வேண்டியிருந்ததா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: படிப்பு முடிந்து வெளியே வந்த போது யாரும் என்னைக் கூப்பிட்டு வேலைகள் தரவில்லை. தேடிச் சென்று மற்றவர்களைக் கேட்கவும் எனக்குத் தயக்கமாக இருந்தது. அப்போது விமரிசகர் விஜய் கிருஷ்ணா, மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்து, ஐந்து தினங்களுக்குள் ஒரு திரைப்படத்தை முடிக்கச் சொன்னார். மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம். பதினாறு எம்.எம்.ல் அந்தப் படத்தை உருவாக்கினோம்.<br />
<br />
அப்படம் நிதியோட கதா. அதனை ப்ளோ அப் செய்ய பம்பாய்க்குச் சென்ற போது, என்னுடைய வேலைகளைக் கவனித்த ஆதித்தா பட்டாச்சார்யா, என்னை ராக் இந்தித் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.<br />
<br />
தொடர்ந்து மலையாளத்தில் விஜித்தம்பி, அண்ணன் சங்கீத்சிவன், அஜயன், விஜய்கிருஷ்ணா போன்ற முக்கியமான ஏழு புதிய இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். பெரும்தச்சன் படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் தளபதியில் ஒளிப்பதிவு செய்யக் கூப்பிட்டார்.<br />
தொடர்ந்து அவருடன் ரோஜா, இருவர், உயிரே போன்ற படங்களுக்கு வேலை செய்தேன். இந்த நான்கு படங்களுமே முக்கியமானவை.<br />
<br />
தீராநதி: தொடக்கத்தில் உங்களுக்கு ஆதர்ஷமாக இருந்த ஒளிப்பதிவாளர் யார்?<br />
சந்தோஷ்சிவன் : சுப்ரதோ மித்ரா, சத்யஜித் ரேவின் ஒளிப்பதிவாளர்.<br />
<br />
தீராநதி: சினிமா ஒளிப்பதிவைப் பொறுத்து, உங்கள் பங்களிப்பு என்று தளபதியில் நீங்கள் அறிமுகம் செய்த worm tone ஐ சொல்கிறார்கள். அசோக்மேத்தாவும் சுப்ரதோ மித்ராவும் கூட worm toneல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தளபதியில் ஏன் இந்த worm toneஐ பயன்படுத்தியிருந்தீர்கள், அதற்குப் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை, குறிப்பாக லென்ஸ்ஐ சொல்ல முடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தொழில்நுட்பக் கருவிகள் என்று பெரியதாக ஒன்றும் இல்லை. வழக்கமான தொழில்நுட்பக் கருவிகளும் லென்ஸும்தான். தளபதியில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பற்றி மணிரத்னம் சொன்னபோது, worm toneல் அதனை ஒளிப்பதிவு செய்யலாம், அது அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாகவும், கதாபாத்திரத்தை மேலும் மெருகூட்டுவதாகவும் இருக்கும் என்று தோன்றியது. எனவே, அதைச் செய்தோம். நான் நினைத்தது போல் அது மிகச் சிறப்பாகவும் வந்தது.<br />
தளபதியில்தான் நான் முதன்முதலாக பாடல்காட்சிகளை ஒளிப்பதிவு செய்தேன். அதற்கு முன்பு நான் ஒளிப்பதிவு செய்தவற்றில் பெரும்பாலானவை கலைப்படங்கள், அல்லது மலையாளப் படங்கள்தான். அவற்றில் பாடல்காட்சிகள் இருக்காது; இருந்தாலும் ஒரு பறவை பறந்து சென்றுகொண்டே இருப்பது, அல்லது அதைப்போல் மெதுவாக கதாநாயகனும் கதாநாயகியும் பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்ற காட்சிகள்தான். தளபதியில் கும்பலாக ஆடும் போது கிளம்பும் தூசி, துல்லியத்துடன் இறங்கும் வெளிச்சம் இவைகளை worm toneல் பதிவு செய்தோம். படத்துக்கு அது வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுத்தது.<br />
<br />
தீராநதி: லைட்டை உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்யும் பாணி இப்போது அதிகரித்து வருகிறது. நீங்களும் இதனைச் செய்திருக்கிறீர்கள்.<br />
<br />
சந்தோஷ்சிவன்: லைட்டை உபயோகிக்காமல் என்று சொல்லமுடியாது. அது சாத்தியமும் இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு லைட் உபயோகிக்காமல், இயற்கையாக இருக்கும் வெளிச்சத்தில் இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று தோன்றும்படி, லைட்டை குறைவாக உபயோகித்து ஒளிப்பதிவு செய்வது என்று சொல்லலாம். யதார்த்தமாக இருக்க இப்படிச் செய்கிறோம். ஆனால், அதுதான் சிறந்தது, அதிகமாக லைட்டை உபயோகித்து எடுக்கப்படுவது சிறந்ததல்ல என்று சொல்லமுடியாது. இரண்டும் இரண்டு பாணிகள், அவ்வளவுதான். காட்சிக்கு, கதைக்கு, கதாபாத்திரத்துக்குத் தக்கபடி, பொருந்தி வரும்படி ஒளிப்பதிவு செய்வதுதான் முக்கியம். ஆங்கிலப் படங்களிலும் உலகத் தரமான கலைப்படங்களிலும் அதிகம் லைட்டை உபயோகித்து எடுக்கப்பட்ட படங்களும் உள்ளன. நமது படங்கள் கதாநாயகனையும் கதாநாயகியையும் மையமாகக் கொண்ட படங்கள். இவர்களது ரசிகர்கள், இவர்கள் இரண்டு பேருக்காகவும்தான் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு கதாநாயகனும் கதாநாயகியும் பளிச்சென்று வெளிச்சத்தில் இருந்தால்தான் பிடிக்கும். மங்கலான வெளிச்சத்தில் கதாநாயகனைக் காண்பித்தால், அப்புறம் அதில் எங்கே ஹீரோயிஸம் இருக்கிறது. நமது பார்வையாளர்கள், விடியற்காலையில் தூங்கி எழுந்து வரும்போதுகூட கதாநாயகி பளீரென்று அழகாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சினிமா என்பதே மாயைதானே.<br />
<br />
தீராநதி: இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை மேம்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு என்ன?<br />
சந்தோஷ்சிவன்: அதை எப்படி நான் சொல்லமுடியும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்கள், தங்கள் பங்களிப்புகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு தலைமுறை, தான் தொடர்ந்து செய்யும் வேலைகளில் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அதனை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது. அந்தத் தலைமுறை அதை மேலும் கொஞ்சம் செழுமைப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து புதிய தலைமுறை கையில் ஒப்படைக்கிறது. இப்படித்தான் காலம்காலமாக வளர்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சுப்ரதோ மித்ரா ஒளிப்பதிவு செய்யும் போது ஏகப்பட்ட சிக்கல்கள். அவர் தன் பயணத்தில் அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்டார். அவர் கண்டடைந்தது அவரது படங்களாக இன்று நம் முன் இருக்கிறது. அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த தலைமுறை தொடர்கிறது, நான் தொடர்கிறேன். என்னுடைய பங்களிப்புகளும் என் தலைமுறையின் பங்களிப்புகளும் படங்களாக இருக்கின்றன. அதிலிருந்து அடுத்த தலைமுறை தொடரும். இதுதான் இயற்கையின் நியதி.<br />
<br />
ஒளிப்பதிவுத் துறையில் தடம் பதித்த என் முன்னோர்களை நான் என்றும் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் மீது பெரிய மரியாதையும் பாராட்டுணர்வும் கொண்டிருக்கிறேன். அவர்கள் இந்த உலகில் பருவங்களின் ஒளியையும் நிழலையும் அவற்றின் கவித்துவத்துடன் நோக்க நமக்குக் கற்றுத்தந்து வழி அமைத்தவர்கள்.<br />
<br />
தீராநதி: இந்திய லேபுகளின் தரம் நீங்கள் உருவாக்க நினைக்கும் ஒளிப்பதிவுத் தரத்துக்குப் போதுமானதாக இருக்கிறதா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: நிச்சயமாக. இந்திய லேபுகளின் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் உண்மை. டெரரிஸ்ட் படத்தை நியூயார்க்கில் திரையிட்ட போது, படத்தைப் பார்த்த சில பெரிய ஒளிப்பதிவாளர்கள், எந்த லேபில் வேலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். நான் ஜெமினி லேப் என்று சொன்னேன். அந்தப் பெயர் அதுவரை அவர்கள் கேள்விப்படாதது.<br />
<br />
நியூயார்க்கில் ஜெமினி என்ற பெயரில் எந்த லேபும் இல்லை. அவர்களில் ஒருவர், நியூயார்க்கில் எங்கே இருக்கிறது அந்த லேப் என்று கேட்டேவிட்டார். நான், சென்னையில் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னேன். என்னுடைய படங்களை எல்லாம் நான் இந்திய லேபுகளில்தான் உருவாக்கியுள்ளேன். நவரஸா படம் பிரசாத் லேபில்தான் தயாரானது.<br />
<br />
தீராநதி: நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்த காட்சி எது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ரோஜாவில் வரும், ருக்குமணி ருக்குமணி பாடல் காட்சி. அருவிக் கரையில் தூறல்களுக்கு நடுவே அந்தக் காட்சியைப் படமாக்கினோம்.<br />
<br />
தீராநதி: நீங்கள் ஒளிப்பதிவு செய்தவற்றில் உங்களுக்குப் பிடித்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: எல்லாமே பிடித்தவைதான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், டெரரிஸ்ட் படத்தைச் சொல்லலாம். டெரரிஸ்ட் படத்தில் மையக் கதாபாத்திரத்தின் குளோசப் காட்சிகளை, arri 35 3யோடு இணைந்த  zeiss 60 mm t3¨மேக்ரோ லென்ஸைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்தோம்.<br />
<br />
இயல்பான ஒளியமைப்பும் காட்சியும் அப்படத்தில் இழையோடியிருக்கும். படத்தில் தண்ணீர், பிரதான கதாபாத்திரத்தின் மனத்தின் ஒரு குறியீடாக இருக்கும். சிறிய துகளில் தொடங்கி துளித்துளியாகி, நீர்த்திவலையாக விரிந்து பரவும். அதனை ஒளிப்பதிவு செய்யும் போதே மிகவும் பரவசமடைந்து செய்தேன். இருவர் படமும் எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது.<br />
<br />
தீராநதி: அசோகா திரைப்படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதனை ஒளிப்பதிவு செய்த அனுபவத்தைச் சொல்லமுடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன் : அசோகா, anamorphic format ல் எடுக்கப்பட்டது. கலைப்படத்தின் கூறுகளையும் வணிகப்படத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்ட படமென்று அதனைச் சொல்லலாம். அந்தந்த நேரத்து காற்று, பனி, மேகங்கள், சூரிய உதயம் இவைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமும் மோகமும் அப்படத்தின் ஒளிப்பதிவில் இருக்கும்.<br />
<br />
தீராநதி: மல்லி, டெரரிஸ்ட், நவரஸா போன்ற நீங்கள் இயக்கிய படங்களின் ஒளிப்பதிவுடன், மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு நீங்கள் செய்த ஒளிப்பதிவை ஒப்பிட்டால், உங்கள் இயக்கத்தில் வந்தவற்றில்தான் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. டெரரிஸ்ட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் பாராட்டைப் பெற்றது இருவர் படத்தின் ஒளிப்பதிவுதான். அதன்பிறகு உயிரே. ஆனால் நானே இயக்கும் படங்களில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. நான் விரும்பியவற்றை அதில் செய்யலாம், அவ்வளவுதான்.<br />
தீராநதி: இப்போதுள்ளவர்களில், உங்களுக்குப் பிடித்த இந்திய இயக்குநர் யார்?<br />
சந்தோஷ்சிவன்: நிறைய பேரைச் சொல்லமுடியும். ஆனால், மணிரத்னத்துடன் வேலை பார்ப்பதைத்தான் எப்போதும் நான் விரும்புகிறேன். அவருடன் வேலை செய்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.<br />
<br />
தீராநதி: ஒளிப்பதிவில் இருந்து திடீரென்று இயக்கத்துக்குள் வந்தீர்கள். ஏன்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில் இருக்கும்போதே நான் இயக்கியிருக்கிறேன். டிம்புலுவின் கதை (the story of timblu) என்ற என் முதல் படம் அப்போது என் இயக்கத்தில் உருவானதுதான். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் இயக்குநர் சந்தோஷ்சிவனுக்கு வேலைகள் இல்லாமல் இருந்தது. இப்போது வாய்ப்புகள் உள்ளன, எனவே, நானே இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டேன்.<br />
<br />
தீராநதி: டிம்புலுவின் கதை எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: புனா திரைப்படக் கல்லூரியில், என்னுடன் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் படித்தான். அவனுடன் அருணாசலப்பிரதேசம் முழுக்க சுற்றினேன். அங்கேயிருந்த மக்கள் இயற்கையை மட்டுமே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வானொலி தெரியாது, தொலைக்காட்சி தெரியாது. அவர்கள் உயரமான கட்டடங்களை அறிந்திருக்கவில்லை. பொதுவாக நான் எங்கு சென்றாலும் கையில் ஒரு காமிராவுடன் செல்வேன். ஒரு திட்டமில்லாமல் அவர்களைப் பதிவு செய்தேன். அதன்பிறகு அதிலிருந்து டிம்புலுவின் கதை உருவானது. அது ஒரு மணி நேரப் படம். அருணாசலப் பிரதேசம் முழுக்க சுற்றி அதனைப் படமாக்கினேன். இயற்கைக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அப்படம் சித்தரிக்கிறது. டிம்புலுவின் கதைக்கு 1988_ல் குறும்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் எப்பவாவது டிம்புலுவின் கதை எடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றீர்களா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ஆமாம். இப்போது அங்கே எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்துவிட்டது. அவர்கள் ராக் இசை கேட்கிறார்கள். அவர்களிடம் முன்பு இருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை.<br />
தீராநதி: பல படங்களை இயக்கியிருந்தாலும் சர்வதேச அளவில் உங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கித் தந்த படம் டெரரிஸ்ட்தான். புலிட்ஸ்டர் பரிசு பெற்ற திரைப்பட விமர்சகர் ரோஜர் எபர்ட், டெரரிஸ்ட்டை உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாகக் கூறியுள்ளார். இதனைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் நிகழ்ந்த பந்த்தில், நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த நான், ஒருநாள் முழுக்க அந்த காருக்குள்ளேயே நகரமுடியாமல் இருக்கவேண்டியிருந்தது. அப்போதிருந்தச் சூழலும் அசை போடலும்தான், டெரரிஸ்ட்டின் ஆரம்ப விதை. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான் தற்கொலைப் படை பற்றிய அறிதல் எனக்குக் கிடைத்தது. ஒரு லட்சியத்துக்காக தங்களையே அழித்துக் கொள்வது சாதாரணமான ஒன்றல்ல. அதனை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அது எனக்குள் சிந்தனையைத் தூண்டிவிட்டது. அதனை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்படித்தான் டெரரிஸ்ட் உருவானது. வன்முறையைப் பிரதானப்படுத்தாமல், உயர்ந்த லட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு பெண், எப்படி தன் வாழ்வை அழித்துக் கொள்கிறாள் என்பதை அப்படத்தில் காண்பித்தோம். ஒரு தலைவருக்காக தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் பதின்வயது இளைஞர்கள் அதில் வருகிறார்கள். மிகக் குறைவான நாட்களில் அப்படத்தை முடித்தோம். அது ஒரு வினோதமான அனுபவம்.<br />
<br />
தீராநிதி: வன்முறை, தொடர் குண்டுவெடிப்புகள் என்று பதட்டமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இப்போதுள்ள சூழலுக்கு மாற்றாக எதனை முன்வைப்பீர்கள்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தனிமனிதர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தை மாற்றுவது எப்படி என்பதைவிட, தனிமனிதர்களுக்குள் சிந்தனையைத் தூண்டி விடுவதைத்தான் முக்கியம் என்று கருதுகிறேன்.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் வெளிவந்துள்ள நவரஸா மூன்றாவது பாலினமான அரவாணிகளைப் பற்றியது. இதனை இயக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி உருவானது?<br />
<br />
சந்தோஷ்சிவன் : மகாபாரதத்தில், அர்ஜூனனுக்கும் நாககன்னிகாவுக்கும் பிறந்தவன் அரவாண். குருஷேத்திர யுத்தத்தில் காளிக்காக பலியிட அவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவனின் கடைசி ஆசை ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது. அதற்கு எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. எனவே கிருஷ்ணன், மோகினி அவதாரம் எடுத்து அரவாணைத் திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு யுத்தத்தில் அரவாண் களப்பலி இடப்படுகிறான். விதவையான மோகினிக்கு வெள்ளைப் புடவையுடுத்தி வளையல்களை உடைத்து சடங்குகளைச் செய்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. இந்தச் சடங்குதான் வருடாவருடம் கூவாகத்தில் நடைபெறுகிறது. சுமார் மூன்று லட்சம் பேர் அப்போது கூவாகத்தில் கூடுகிறார்கள். அங்கே வரும் அரவாணிகள் தங்களை கிருஷ்ணனின் அவதாரமாக நினைக்கிறார்கள்.<br />
<br />
கூவாகம் திருவிழா பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்று, திருவிழாவைப் பதிவு செய்து திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆஷாபாரதி பல்வேறு உதவிகளைச் செய்தார். படத்துக்கான ஆராய்ச்சி வேலைகளை ராஜாசந்திரசேகர் செய்தார். படத்தின் வேலைகளைத் தொடங்கியபோது மிகக் குறைவான திட்டம்தான் எங்கள் கையில் இருந்தது. திரைக்கதை முழுமையடையாமல் இருந்தது. வசனம் எழுதப்படவில்லை. படத்தின் பிரதான அரவாண் பாத்திரமான கௌதமி பாத்திரத்துக்கு, அங்கே சென்றுதான் வந்திருந்த ஒருவரைத் தேர்வு செய்தோம். திருவிழாவில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே, அங்கு ஒரு படம் தயாராகிறது என்பது அவர்களுக்குத் தெரியாமலேயே நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். பதினைந்து பேர் வீடியோ கவரேஜ் செய்வதுபோல் எடுத்தோம். எனது பெரும்பாலான படங்கள் இதுபோல் பெரிய முன் தயாரிப்புகள், திட்டங்கள் எதுவும் இல்லாமல்தான் உருவாகின. மிகச் சிறந்த உதாரணம், டிம்புலுவின் கதை. அருணாசலப்பிரதேசத்தைச் சுற்றிப் பார்க்கும்போது அது உருவானது.<br />
<br />
தீராநதி: வெகுஜன மக்கள் மத்தியில் அரவாணிகளை கேலிக்குரியவர்களாகப் பார்க்கும் பார்வைதான் இன்றைக்கும் இருக்கிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் அந்தப் பார்வையை அதிகப்படுத்துவது போல்தான் அரவாணிகள் சித்தரிக்கப் படுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மணிரத்னத்தின் பம்பாய். நவரஸா வெகுஜன பார்வையிலிருந்து விலகி இருப்பதுடன், அதனை விமரிசிக்கவும் செய்கிறது. திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன் : ஓஸியானிக் ஏஸியன் திரைப்பட விழாவில் திரையிட்டபோது, பார்த்தவர்கள், அதுவரை அரவாணிகள் பற்றித் தாங்கள் கொண்டிருந்த கருத்தை நவரஸா மாற்றியுள்ளது என்று கூறினர். அதுதான் அப்படத்தின் வெற்றி. தமிழ் மக்கள் மத்தியில் இப்படம் பரவலாகப் பார்க்கப்பட வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தது. இப்போது அது பெருமளவு நிறைவேறி உள்ளது. சென்னையில் தொடர்ந்து பத்துத் தினங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான படங்களை இயக்குவதற்கு தொலைக்காட்சி மிகச்சிறந்த ஒரு ஊடகம்.<br />
<br />
தீராநதி: சமீபத்தில் உங்கள் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்துள்ள அனந்தபத்தரம் பற்றிச் சொல்லமுடியுமா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: மலையாளப் படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குள் இருந்து வந்துள்ளது. Mistress of spices படத்தின் தயாரிப்புக்காக லண்டன் சென்ற போது அங்குள்ளவர்கள் என் திரைப்பட உத்திகளை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். கதகளி, மோகினியாட்டம் போன்ற கேரளாவுக்கேயுரிய கலைகளின் கூறுகள் உங்கள் படங்களில் உள்ளது. நீங்கள் ஏன் மலையாளத்தில் படங்களை இயக்கக்கூடாது என்று அவர்கள் கேட்டார்கள். அப்போது மலையாளத்தில் படம் பண்ணவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.<br />
<br />
சுனில் பரமேஸ்வரன் என்ற மலையாள எழுத்தாளரின் அனந்தபத்தரம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அந்த நாவல், பால்ய காலத்தில் எங்கள் பாட்டி எனக்குக் கூறிய கதைகளை நினைவுபடுத்தியது. இருட்டு, பிசாசுகள் போன்ற நாட்டுப்புறக் கதைகளின் புதிர்த் தன்மை அதில் இருந்தது. அதனைத் திரைப்படமாக எடுப்பது என்று முடிவு செய்தேன். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போராட்டம்தான் அப்படத்தின் மையம். தெய்யம், கதகளி போன்ற தொன்ம வடிவங்களை அதில் நான் பயன்படுத்தினேன். இப்படத்தின் காட்சிகளில் பல என் சிறு வயது அனுபவங்களில் தங்கியிருக்கிறது. நாற்பத்து நான்கு நாட்களில் இப்படம் எடுக்கப்பட்டது.<br />
<br />
தீராநதி: நீங்கள் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்களுக்கும் உங்களுக்குமான புரிதல் எப்படியிருந்தது?<br />
<br />
சந்தோஷ்சிவன்: மல்லி, ஹாலோ, டெரரிஸ்ட், நவரஸா இவைகளில், நடிப்பைத் தொழிலாக கொள்ளாதவர்களைத்தான் அதிகமும் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு நடிப்பு பற்றிய எந்தப் பின்புலமும் இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் இருந்துதான் நிறைய விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும். அவர்களிடத்தில் காமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் செய்துவிட்டால் போதும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான நடிப்பை இயல்பாகவே அவர்களிடம் இருந்து பெறமுடியும்.<br />
<br />
தீராநதி: திரைப்படங்களைவிட அதிகமாக விவரணப்படங்கள் (documentry) எடுத்திருக்கிறீர்கள். திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது விவரணப்படங்களில் கிடைக்கும் வருமானம் குறைவாகத்தான் இருக்க முடியும். ஆனாலும் நீங்கள் விவரணப்படங்களை அதிகம் செய்திருக்கிறீர்கள். ஏன்?<br />
<br />
சந்தோஷ்சிவன்: விவரணப்படங்கள் எடுப்பதைத்தான் அதிகமும் நான் விரும்புகிறேன். விவரணப் படங்கள் எடுக்கும் போதுதான் என்னை நான் அதில் கரைத்துக் கொள்கிறேன். அவற்றில்தான் என்னால் முழுமையாக ஈடுபடவும் வெளிப்படவும் முடிகிறது. நான் உண்மையாக உணர்வதும் இவற்றில்தான். அதுபோல் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களும் எனக்கு அலாதியான ஒரு திருப்தியையும் மனநிறைவையும் தருகின்றன. அவற்றில்தான் நாம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கமுடியும். வணிகப்படங்களை வருமானத்துக்கான ஒன்றாகச் செய்துகொண்டே, அதிலிருந்து வரும் பணத்தில் குறைந்த முதலீட்டில் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தியைத் தரும் படங்களைச் செய்கிறேன். டிம்புலுவின் கதை, மல்லி, டெரரிஸ்ட், நவரஸா இவைகள் அனைத்தும் மிகக்குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள்.<br />
<br />
தீராநிதி: பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களில் வேலை பார்த்துவிட்டு, உடனே குறைந்த முதலீடு படங்களில் வேலை பார்ப்பது ஒரு முரணாக இல்லையா?<br />
<br />
சந்தோஷ்சிவன்: உண்மைதான். பெரிய முரண்தான். ஆனால், அந்த முரண் எனக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் விரும்பி அனுபவிக்கிறேன்.<br />
தீராநதி: இளம் ஒளிப்பதிவாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?<br />
<br />
சந்தோஷ்சிவன்: தண்ணீருக்குள் குதித்தால்தான் நீந்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளமுடியும். வெளியே நின்றுகொண்டு நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. எனவே முதலில் குதித்து விடுங்கள். புகைப்படக் கலையின் நீட்சிதான் திரைப்பட ஒளிப்பதிவு. இரண்டுக்கும் இடையே அடிப்படைக் கூறுகளும் ஒன்றுதான். ஒரு புகைப்படக் கலைஞன் எந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்காமலேயே சிறந்த ஒளிப்பதிவாளராக ஆகமுடியும். எனவே புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெறுங்கள். அதன் பிறகு அனுபவ ஞானம். புத்தகங்களிலும் கல்லூரியிலும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் ஒருவருக்குத் தீராத கலை பற்றிய தேடல் அவரது அனுபவத்தில் இருந்துதான் வர இயலும். குறிப்பாக நம்மைச் சுற்றியுள்ளவை பற்றிய காட்சி ரீதியான நுட்பமான அவதானிப்பு மிக முக்கியம். சிறந்த எழுத்தாளர்களைப் படிப்பது, ஓவியங்களைப் பார்ப்பது இந்த வகையில் பெரிய உதவியைச் செய்யும். நீங்களும் உங்கள் அனுபவங்களும் அவதானிப்புகளும்தான் உங்களை வழி நடத்திச் செல்லமுடியும். மற்ற ஒளிப்பதிவாளர்களைப் பின்பற்றாமல், உங்களுக்கு சுயமான ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது கஷ்டமான காரியம் இல்லை. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே சுலபமாக அது நிகழும். காட்சியே தனக்கான விஷயங்களைத் தகவமைத்துக் கொள்ளும். மற்ற அனைவரையும்விட, நீங்கள்தான் உங்களின் மிகச்சிறந்த ஆசிரியர்.<br />
<br />
சந்திப்பு : தளவாய் சுந்தரம்<br />
<br />
நன்றி: தீராநதி&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழ் சினிமா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2163</link>
			<pubDate>Tue, 06 Dec 2005 23:41:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2163</guid>
			<description><![CDATA[                    [size=15]&lt;b&gt;உலகின் முதல் பேசும் படம் "ஜாஸ் சிங்கர்"&lt;/b&gt;<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/001.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா.<br />
<br />
இன்று, உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை; சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்தியாவில், சினிமாதான் இரண்டாவது பெரிய தொழில்.<br />
<br />
 <br />
"ஜாஸ் சிங்கர்" படம், நிïயார்க் நகரில் திரையிடப்பட்டபோது, தியேட்டரில் அலைமோதிய கூட்டம். (6_10_1927) <br />
தமிழ்த் திரைப்பட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன், சினிமா எப்போது கண்டு பிடிக்கப்பட்டது, முதல் சினிமா படம் எது என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.<br />
<br />
பொருள்கள் அசைவதைப் படமாக்கும் முயற்சியில் 1826_ம் ஆண்டு முதலே பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.<br />
<br />
1872_ல் குதிரைகளின் கால்கள் அசைவதைச் சிலர் வெற்றிகரமாகப் படம் பிடித்தனர். அதற்காக 24 காமிராக்கள் பயன்படுத்தப்பட்டன.<br />
<br />
இதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 1889_ல் தாமஸ் ஆல்வா எடிசன் "35 எம் எம்" பிலிமில் சினிமாப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.<br />
<br />
எடிசன் 1894 வரை பல ஆராய்ச்சிகள் செய்து, அசையும் சினிமாப்படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார்.<br />
<br />
1895_ல் லூமிரே சகோதரர்கள், ஒரு ரெயில் ஓடுவதையும், அது ரெயில் நிலையத்தில் போய் நிற்பதையும் படமாக்கி, ரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள்.<br />
<br />
அக்காட்சியைப் பார்த்த சில ரசிகர்கள், பயந்து ஓட்டம் பிடித்தார்கள். இதன்பின், சினிமாப்படத்துடன் ஒலியையும் பதிவு செய்யும் முறையை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/004.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;முதல் சினிமா கேமரா!&lt;/i&gt; <br />
<br />
ஜெர்மனி விஞ்ஞானிகள் சிலரும் சினிமாப்படம் தயாரிப்பதில் சில முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தனர்.<br />
<br />
ஊமைப் படங்கள்<br />
<br />
இதைத்தொடர்ந்து மவுனப் படங்கள் தயாரிக்கப்பட்டன. பேச்சு இல்லாவிட்டாலும், பின்னணி இசை உண்டு. இந்தக் காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் சார்லி சாப்ளின்.<br />
<br />
பேசாமல் சைகைகள் மூலமாகவே நகைச்சுவையை வெளிப்படுத்தி, அகில உலகப் புகழ் பெற்றார்.<br />
<br />
1926_ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் பேசும் படத்தைத் தயாரித்தது. இது சிறிய படம். பெயர் "டான்டுவான்". பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை வார்னர் பிரதர்சார் தயாரித்தனர்.<br />
<br />
முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்", <br />
<br />
1927 அக்டோபர் 6_ந்தேதி திரையிடப்பட்டது. திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்.<br />
<br />
முதல் பேசும் படத்தை உலகுக்கு அளித்த ஹாலிவுட், தொடர்ந்து உலகின் புகழ் பெற்ற திரைப்படக் கேந்திரமாக விஸ்வரூபம் எடுத்தது.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/002.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;"ஜாஸ் சிங்கர்" படத்தில் ஒரு காட்சி. &lt;/i&gt;<br />
<br />
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது ஹாலிவுட்.<br />
<br />
1883_ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 7 மைல் தூரத்தில், சுமார் 120 ஏக்கர் நிலத்தை ஒருவர் வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கத் திட்டமிட்டார். பத்திரப் பதிவின்போது, அந்தப் பகுதியின் பெயர் "ஹாலிவுட்" என்று குறிப்பிடப்பட்டது.<br />
<br />
1907_ம் ஆண்டில், இந்தப் பகுதியில் ஸ்டூடியோக்களை அமைக்க, நியுயார்க் பிலிம் டிரஸ்ட் ஊக்கமளித்தது.<br />
<br />
அதன்பின், கொலம்பியா, பாரமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கே பிரமாண்டமான ஸ்டூடியோக்களை அமைத்தன. பிறகு, மேலும் பல ஸ்டூடியோக்கள் உருவாயின.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/003.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;சினிமா படம் எடுப்பதை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.&lt;/i&gt; <br />
1930_ம் ஆண்டிலிருந்து, ஹாலிவுட்டில் சினிமாப்படத் தயாரிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக 750 படங்கள் தயாரிக்கப்பட்டன.<br />
<br />
எம்.ஜி.எம்., ட்வண்டியத் சென்சுரி பாக்ஸ், வார்னர் பிர தர்ஸ் போன்ற ஸ்டூடியோக்கள், மிகவும் பிரமாண்டமான முறை யில் அமைக்கப்பட்டன. ஹாலிவுட் விரிவடைந்து கொண்டே போயிற்று. எம்.ஜி.எம். ஸ்டூடியோ மட்டும் 117 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 23 அரங்கங்களைக் கொண்ட இந்த ஸ்டூடியோவில் 4 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர்.<br />
<br />
கிரீடா கார்போ, கிளார்க் கேபிள், ஸ்பென்சர் டிரேசி, எலிசபெத் டெய்லர் முதலிய புகழ் பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியது, "எம்.ஜி.எம்."  தொடரும்............ <br />
<br />
நன்றி: மாலை மலர்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=15]&lt;b&gt;உலகின் முதல் பேசும் படம் "ஜாஸ் சிங்கர்"&lt;/b&gt;<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/001.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா.<br />
<br />
இன்று, உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை; சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்தியாவில், சினிமாதான் இரண்டாவது பெரிய தொழில்.<br />
<br />
 <br />
"ஜாஸ் சிங்கர்" படம், நிïயார்க் நகரில் திரையிடப்பட்டபோது, தியேட்டரில் அலைமோதிய கூட்டம். (6_10_1927) <br />
தமிழ்த் திரைப்பட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன், சினிமா எப்போது கண்டு பிடிக்கப்பட்டது, முதல் சினிமா படம் எது என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.<br />
<br />
பொருள்கள் அசைவதைப் படமாக்கும் முயற்சியில் 1826_ம் ஆண்டு முதலே பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.<br />
<br />
1872_ல் குதிரைகளின் கால்கள் அசைவதைச் சிலர் வெற்றிகரமாகப் படம் பிடித்தனர். அதற்காக 24 காமிராக்கள் பயன்படுத்தப்பட்டன.<br />
<br />
இதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 1889_ல் தாமஸ் ஆல்வா எடிசன் "35 எம் எம்" பிலிமில் சினிமாப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.<br />
<br />
எடிசன் 1894 வரை பல ஆராய்ச்சிகள் செய்து, அசையும் சினிமாப்படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார்.<br />
<br />
1895_ல் லூமிரே சகோதரர்கள், ஒரு ரெயில் ஓடுவதையும், அது ரெயில் நிலையத்தில் போய் நிற்பதையும் படமாக்கி, ரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள்.<br />
<br />
அக்காட்சியைப் பார்த்த சில ரசிகர்கள், பயந்து ஓட்டம் பிடித்தார்கள். இதன்பின், சினிமாப்படத்துடன் ஒலியையும் பதிவு செய்யும் முறையை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார்.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/004.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;முதல் சினிமா கேமரா!&lt;/i&gt; <br />
<br />
ஜெர்மனி விஞ்ஞானிகள் சிலரும் சினிமாப்படம் தயாரிப்பதில் சில முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தனர்.<br />
<br />
ஊமைப் படங்கள்<br />
<br />
இதைத்தொடர்ந்து மவுனப் படங்கள் தயாரிக்கப்பட்டன. பேச்சு இல்லாவிட்டாலும், பின்னணி இசை உண்டு. இந்தக் காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் சார்லி சாப்ளின்.<br />
<br />
பேசாமல் சைகைகள் மூலமாகவே நகைச்சுவையை வெளிப்படுத்தி, அகில உலகப் புகழ் பெற்றார்.<br />
<br />
1926_ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் பேசும் படத்தைத் தயாரித்தது. இது சிறிய படம். பெயர் "டான்டுவான்". பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை வார்னர் பிரதர்சார் தயாரித்தனர்.<br />
<br />
முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்", <br />
<br />
1927 அக்டோபர் 6_ந்தேதி திரையிடப்பட்டது. திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்.<br />
<br />
முதல் பேசும் படத்தை உலகுக்கு அளித்த ஹாலிவுட், தொடர்ந்து உலகின் புகழ் பெற்ற திரைப்படக் கேந்திரமாக விஸ்வரூபம் எடுத்தது.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/002.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;"ஜாஸ் சிங்கர்" படத்தில் ஒரு காட்சி. &lt;/i&gt;<br />
<br />
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது ஹாலிவுட்.<br />
<br />
1883_ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 7 மைல் தூரத்தில், சுமார் 120 ஏக்கர் நிலத்தை ஒருவர் வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கத் திட்டமிட்டார். பத்திரப் பதிவின்போது, அந்தப் பகுதியின் பெயர் "ஹாலிவுட்" என்று குறிப்பிடப்பட்டது.<br />
<br />
1907_ம் ஆண்டில், இந்தப் பகுதியில் ஸ்டூடியோக்களை அமைக்க, நியுயார்க் பிலிம் டிரஸ்ட் ஊக்கமளித்தது.<br />
<br />
அதன்பின், கொலம்பியா, பாரமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கே பிரமாண்டமான ஸ்டூடியோக்களை அமைத்தன. பிறகு, மேலும் பல ஸ்டூடியோக்கள் உருவாயின.<br />
&lt;img src='http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinemamain_files/ph/003.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;i&gt;சினிமா படம் எடுப்பதை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.&lt;/i&gt; <br />
1930_ம் ஆண்டிலிருந்து, ஹாலிவுட்டில் சினிமாப்படத் தயாரிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக 750 படங்கள் தயாரிக்கப்பட்டன.<br />
<br />
எம்.ஜி.எம்., ட்வண்டியத் சென்சுரி பாக்ஸ், வார்னர் பிர தர்ஸ் போன்ற ஸ்டூடியோக்கள், மிகவும் பிரமாண்டமான முறை யில் அமைக்கப்பட்டன. ஹாலிவுட் விரிவடைந்து கொண்டே போயிற்று. எம்.ஜி.எம். ஸ்டூடியோ மட்டும் 117 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 23 அரங்கங்களைக் கொண்ட இந்த ஸ்டூடியோவில் 4 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர்.<br />
<br />
கிரீடா கார்போ, கிளார்க் கேபிள், ஸ்பென்சர் டிரேசி, எலிசபெத் டெய்லர் முதலிய புகழ் பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியது, "எம்.ஜி.எம்."  தொடரும்............ <br />
<br />
நன்றி: மாலை மலர்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இயக்குனர் பாரதிராஜா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2209</link>
			<pubDate>Sat, 03 Dec 2005 00:26:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2209</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:21pt;line-height:100%'&gt;&lt;b&gt;இயக்குனர் பாரதிராஜா!&lt;/b&gt;  <br />
- சின்னராசு  <br />
<br />
செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. <br />
<br />
அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள்.<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
அதுவரை சென்னையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் வேலை இல்லாமல் தூங்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஸ்டூடியோக்களிலும் இருந்த படப்பிடிப்பு தளங்களை சரக்குகளை பாதுகாக்கும் கிட்டங்கிகளாக மாற்றி வாடகைக்குவிட ஆரம்பித்தார்கள். <br />
<br />
இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் என்று பெருமையோடு சொல்லும் விதம் சென்னை கோடம்பாக்கத்தில் பிரமாண்டமான ஸ்டூடியோக்கள் தோன்றிக் கொண்டே இருந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஸ்டூடியோக்கள் அவசியமில்லை என்ற மாற்ற நிகழ்ந்து தமிழகத்திலே உள்ள பல கிராமங்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்றவையாக புகழ்பெற ஆரம்பித்தன. <br />
<br />
அதேபோல தனது படங்களில் முழுக்க புது முகங்களை அறிமுகப்படுத்தும் புதுமையையும் பாரதிராஜா துணிந்து செய்தார். <br />
<br />
அதற்கு முன்பெல்லாம் இயக்குனர் ஸ்ரீதர் முக்கிய வேடங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பாணியை கையாண்டு வந்தார். <br />
<br />
இருப்பினும் இயக்குனர் ஸ்ரீதர், தான் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள் திரைப்படங்களுக்குத் தான் புதுமுகங்களாக இருந்தார்களே தவிர நாடகம் போன்றவற்றில் நடித்து ஓரளவு பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தார்கள். <br />
<br />
ஆனால் பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்களோ நடிப்புத் துறைக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களாய் இருந்தார்கள். <br />
<br />
அதிலும் கிராம புறங்களை அவர் காட்டும்போது அதில் துணை நடிகர்களாக அந்தந்த கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்தார். குறிப்பாக கிராமபுற முதியவர்கள் அவர் படங்களில் நடிகர்களாக தோன்றினார்கள். அதனால் அந்த காட்சிகள் எல்லாம் இயற்கையாக அமைந்தன. <br />
<br />
திரைப்படங்களின் துவக்கத்தில் படத்தின் டைட்டிலை பல இயக்குனர்கள் பல புதுமைகளை புகுத்தி காட்டியதுண்டு. பாரதிராஜா அதிலும் தன் பாணியில் ஒரு புதுமையை செய்தார். டைட்டில் போடும்போது, இயக்குனர் பெயரை விட்டுவிட்டு படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் இயக்குனர் பெயரை போடுகிற புதுமையை அவர் கையாண்டார். <br />
<br />
அவருடைய முதல் படமான &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; படத்தில் டைட்டில் ஓடி முடிந்த பின்னர் படத்தின் நாயகியான ஸ்ரீதேவி ஓடி வந்தபடி தன் கையில் உள்ள காகிதங்களை உயர விசிறியடித்தப்படி, &lt;b&gt;நான் பாசாயிட்டேன்&lt;/b&gt; என்று கத்துவது போல ஒலியை வெளிப்படுத்தி ஸ்ரீதேவி தோற்றத்தை அசையாமல் சில வினாடிகள் நிறுத்தி, இயக்குனர் பாரதிராஜா என தனது பெயரை காட்டுவார். <br />
<br />
இதைப் பின்பற்றியே அதற்குப் பின்னால் நிறைய இயக்குனர்கள் இந்த பாணியை கையாண்டார்கள். <br />
<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi2.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;b&gt;ஈரநிலம்&lt;/b&gt; படப்பிடிப்பில்... <br />
<br />
தமிழ் திரையுலகில் முதலில் புதுமையாக சிந்தித்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி முதல் வெற்றியும் கண்டவர் இயக்குனர் ஸ்ரீதர். <br />
<br />
பாரதிராஜா எடுக்கும் படங்களில் சின்னசின்ன யுக்திகளிலும் நம்மை வியக்க வைப்பார். அவருடைய காலத்திற்கு முன்பு படங்களில் ஒரு கதாபாத்திரம் தன் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் மெல்ல ஓசை இல்லாமல் முணங்குவதுபோல பேச வைப்பார்கள். <br />
<br />
பாரதிராஜாதான் ஒரு கதாபாத்திரம் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்க அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை குளோசப்பில் காட்டி அசைவு இல்லாமல் சற்று நிறுத்தி அந்த கதாபாத்திரத்தின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து காட்டி அதன்மூலம் அந்த கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற பாணியை கொண்டு வந்தார். <br />
<br />
பாரதிராஜாவின் &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; படத்தை தொடர்ந்து &lt;b&gt;கிழக்கே போகும் ரயில்&lt;/b&gt;, மூன்றாவதாக &lt;b&gt;சிவப்பு ரோஜாக்கள்&lt;/b&gt;, அதன்பின் புதிய வார்ப்புகள் என தொடர்ந்து புதிய புதிய கலை நுணுக்கத்துடன் படங்களை வெளிக்கொணர்ந்தார். <br />
<br />
அவற்றுள் &lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; படத்தில் கிராமத்திற்கு ஆசிரியர் பணிக்காக வந்திருக்கும் பாக்யராஜ் தன் வீட்டருகே உள்ள நாயன வித்துவானின் பெண்ணான ரதியை காதலிப்பார். ரதி படிப்பதற்காக ஆசிரியர் பாக்யராஜிடம் புத்தகம் வாங்கி வா என தம்பியை அனுப்பி வைக்கும் போது, அந்த தம்பி ஆசிரியரை போய் பார்த்துவிட்டு திரும்பி வந்து அக்காவிடம் அவர் சொன்ன தகவலை சொல்லுவான். <br />
<br />
அக்கா நீ உன் இதயத்தை தந்தால் வாத்தியார் அவர் குங்குமத்தை தருகிறேன் என்று சொல்றார் என்பான். அதாவது இதயம், குங்குமம் என்ற பெயரில் உள்ள பத்திரிகைகளை வைத்து எழுதப்பட்ட வசனம் அது. <br />
<br />
இந்தக் காட்சியில் இந்த பொடியன் தன் அக்காவிடம் அந்த தகவலை கூற ஆரம்பிக்கும் பொழுது அவன் முகத்தை குளோசப்பில் காட்டி அவன் பேசுவதுபோல ஆசிரியர் பாக்யராஜின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து படமாக்கியிருந்தார் பாரதிராஜா. <br />
<br />
&lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரபலமான ஓர் இயக்குனர் இந்த காட்சியை பெரிதும் பாராட்டி தன் உரையில் குறிப்பிட்டார். <br />
<br />
உன் இதயத்தை தந்தால் வாத்தியார் தன் குங்குமத்தை தருவாராம் என்று பேசுகிற காட்சியில் வசனத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடி இருப்பது நானும் சில படங்களில் சில காட்சிகளை அமைத்ததுண்டு. ஆனால் அந்தக் காட்சியில் அந்த சிறுவன் பேசப்போவது போல அவன் முகத்தை காட்டி பின்னணியில் வாத்தியாரின் குரலை ஒலிக்க செய்த அந்த யுக்திதான் என்னை அயர வைத்தது என்று அந்த இயக்குனர் மனம் விட்டு பாரதிராஜாவை பாராட்டினார். <br />
<br />
அந்த படவிழாவில் கலந்து கொண்ட நடிகை லட்சுமி பேசும்பொழுது, நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். <br />
<br />
அன்று ஒரு காட்சி எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் உதவி இயக்குனரான பாரதிராஜா மற்றும் அவரை போன்ற உதவியாளர்களும் ஒரு சிறு தவறை செய்துவிட்டார்கள். <br />
<br />
அதன் காரணமாக நான் பாரதிராஜாவைப் பார்த்து, இந்த சின்ன விசயத்தில் கவனம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறீர்களே. நீங்கள் எல்லாம் பின்னால் பெரிதாக என்ன காரியம் சாதிக்கப் போகிறீர்கள் என கேட்டுவிட்டேன். <br />
<br />
ஆனால் இன்று பாரதிராஜா சாதித்து இருக்கும் பிரமாண்டமான காரியங்களைப் பார்த்து நான் அன்று பேசியதற்காக இன்று அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். <br />
<br />
பாரதிராஜா தன் மனத்திற்குள் 16 வயதினிலே கதையை உருவாக்கி அதை தயாரிக்க ஒரு சரியான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிர்ந்த காலக்கட்டத்தில்தான் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு அறிமுகமானார். <br />
<br />
பாரதிராஜா கூறிய கதை ராஜ்கண்ணுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் சப்பாணியாக வரும் கதாநாயகன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ராஜ்கண்ணு கேட்டார். <br />
<br />
பாரதிராஜாவுக்கு அந்த சமயம் அந்த பாத்திரத்திற்கு இரு நடிகர்கள் பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. எனவே கமல்ஹாசன் பெயரையும், நாகேஷ் பெயரையும் பாரதிராஜா குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுக்கோ கமலஹாசனுக்கே இந்த வேடம் மிக பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் கமலஹாசன் கால்ஷீட் கிடைப்பதற்காக படம் தயாரிப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போட்டார்கள். <br />
<br />
பின்னர் நடிகர்கள் டெக்னிஷீன்கள் எல்லாம் முடிவாகி அந்த குழுவினர் படத்தை தயாரிப்பதற்காக வெளியூர் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஏதாவது படக்கம்பெனிகளில் நமக்கு சின்ன வேலைகள் ஏதும் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கே.பாக்யராஜ்க்கு இந்தத் தகவல் கிடைத்தது. அந்த 16 வயதினிலே படப்பிடிப்பு குழுவினருடன் தானும் ஒரு உறுப்பினராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அவர் விரும்பியபோது, அதுவரை அவருக்கு உதவிகள் செய்பவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த கதை வசனகர்த்தா தூயவனை போய் பாக்யராஜ் சந்தித்தார். <br />
<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi3.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; படப்பிடிப்பில் பாக்யராஜுடன்... <br />
<br />
பாக்யராஜ் சொன்னதை கேட்ட தூயவன், நீ சொல்கிற இந்த படக் கம்பெனி புதிய மனிதரால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் முக்கிய ஆட்கள் எல்லாம் புதியவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இந்த படத்தை முடித்து வெளிவருமா என்பதெல்லாம் சந்தேகம்தான். இருந்தாலும் உனக்கு சில மாதங்கள் ஏதோ வேலையும், சம்பளமும் கிடைத்து பொழுதும் கழியும் என்பதால் அந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் நீ போய் வா என விடை கொடுத்தார். <br />
<br />
16 வயதினிலே படத்திற்கு வசன கர்த்தாவாக கலைமணி பணியாற்றினார். வசன உதவி இயக்குனர் உதவி போன்ற பணிகளை பாக்யராஜ் மேற்கொண்டார். <br />
<br />
அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பாக்யராஜ் ஏற்கனவே குறிப்பிடிருக்கிறார். <br />
<br />
ஒருநாள் படப்பிடிப்பில் எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு வேலை தாமதமாகி படப்பிடிப்பு அதனால் பாதித்ததால் பாரதிராஜா பாக்யராஜிடம் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். <br />
<br />
இந்த தவறுக்கு நாம் காரணமில்லையே! ஆனால் இயக்குனர் நம்மை திட்டுகிறாரே என மனம் உடைந்து போனார் பாக்யராஜ். எனவே அன்றைய படப்பிடிப்புடன் அந்த குழுவில் இருந்து விலகி சென்னை திரும்பிவிட திட்டமிட்டிருந்தாராம். <br />
<br />
ஆனால் அன்றைய படப்பிடிப்பு முடிந்த பிறகு பாக்யராஜை அழைத்து பேசிய பாரதிராஜா, இன்று காலையில் உன்னை நான் திட்டிப் பேசியதை நீ சங்கடமாக எடுத்துக் கொள்ளாதே! நான் திட்டியது உன்னையல்ல. படப்பிடிப்புக்கு தாமதம் நேரச் செய்தவரையே நான் திட்டினேன். ஆனால் நான் இப்போதுதான் புதிதாக இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இந்த நிலையில் படத்தயாரிப்பு வேலைகளில் ஏற்கனவே அனுபவப் பட்டவர்களை நான் கடிந்து கொண்டால் பிறகு அவர்கள் நமக்கு ஒத்துழைப்புடன் வேலையில் ஈடுபடமாட்டார்கள். அதனால் தான் எனக்கு உதவியாளனாகிய உன்னை திட்டுவதுபோல என் கோபத்தை வெளிப்படுத்தினேன் என பாரதிராஜா கூறினாராம். <br />
<br />
16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அப்படத்திலே பரட்டையனாக நடித்த ரஜினிகாந்த் பிரபலமாகவில்லை. எனவே அந்தப் படப்பிடிப்பு சமயங்களில் ரஜினிகாந்த் சாதாரணமாக லுங்கி உடுத்திக்கொண்டு அந்த கிராம மக்களோடு சாதாரணமாக காணப்படுவார் என்று அந்த பழைய அனுபவங்களை எல்லாம் சிலர் கூறியிருக்கிறார்கள். <br />
<br />
16 வயதினிலே படம் தமிழ் திரைப் பட உலகின் மாமூலான பல உத்திகளை தவிடு பொடியாக்கி புதியதோரு கண்ணோட்டத்திற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல! <br />
<br />
நன்றி: விகடன்&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:21pt;line-height:100%'&gt;&lt;b&gt;இயக்குனர் பாரதிராஜா!&lt;/b&gt;  <br />
- சின்னராசு  <br />
<br />
செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. <br />
<br />
அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள்.<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
அதுவரை சென்னையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் வேலை இல்லாமல் தூங்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஸ்டூடியோக்களிலும் இருந்த படப்பிடிப்பு தளங்களை சரக்குகளை பாதுகாக்கும் கிட்டங்கிகளாக மாற்றி வாடகைக்குவிட ஆரம்பித்தார்கள். <br />
<br />
இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் என்று பெருமையோடு சொல்லும் விதம் சென்னை கோடம்பாக்கத்தில் பிரமாண்டமான ஸ்டூடியோக்கள் தோன்றிக் கொண்டே இருந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஸ்டூடியோக்கள் அவசியமில்லை என்ற மாற்ற நிகழ்ந்து தமிழகத்திலே உள்ள பல கிராமங்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்றவையாக புகழ்பெற ஆரம்பித்தன. <br />
<br />
அதேபோல தனது படங்களில் முழுக்க புது முகங்களை அறிமுகப்படுத்தும் புதுமையையும் பாரதிராஜா துணிந்து செய்தார். <br />
<br />
அதற்கு முன்பெல்லாம் இயக்குனர் ஸ்ரீதர் முக்கிய வேடங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பாணியை கையாண்டு வந்தார். <br />
<br />
இருப்பினும் இயக்குனர் ஸ்ரீதர், தான் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள் திரைப்படங்களுக்குத் தான் புதுமுகங்களாக இருந்தார்களே தவிர நாடகம் போன்றவற்றில் நடித்து ஓரளவு பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தார்கள். <br />
<br />
ஆனால் பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்களோ நடிப்புத் துறைக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களாய் இருந்தார்கள். <br />
<br />
அதிலும் கிராம புறங்களை அவர் காட்டும்போது அதில் துணை நடிகர்களாக அந்தந்த கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்தார். குறிப்பாக கிராமபுற முதியவர்கள் அவர் படங்களில் நடிகர்களாக தோன்றினார்கள். அதனால் அந்த காட்சிகள் எல்லாம் இயற்கையாக அமைந்தன. <br />
<br />
திரைப்படங்களின் துவக்கத்தில் படத்தின் டைட்டிலை பல இயக்குனர்கள் பல புதுமைகளை புகுத்தி காட்டியதுண்டு. பாரதிராஜா அதிலும் தன் பாணியில் ஒரு புதுமையை செய்தார். டைட்டில் போடும்போது, இயக்குனர் பெயரை விட்டுவிட்டு படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் இயக்குனர் பெயரை போடுகிற புதுமையை அவர் கையாண்டார். <br />
<br />
அவருடைய முதல் படமான &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; படத்தில் டைட்டில் ஓடி முடிந்த பின்னர் படத்தின் நாயகியான ஸ்ரீதேவி ஓடி வந்தபடி தன் கையில் உள்ள காகிதங்களை உயர விசிறியடித்தப்படி, &lt;b&gt;நான் பாசாயிட்டேன்&lt;/b&gt; என்று கத்துவது போல ஒலியை வெளிப்படுத்தி ஸ்ரீதேவி தோற்றத்தை அசையாமல் சில வினாடிகள் நிறுத்தி, இயக்குனர் பாரதிராஜா என தனது பெயரை காட்டுவார். <br />
<br />
இதைப் பின்பற்றியே அதற்குப் பின்னால் நிறைய இயக்குனர்கள் இந்த பாணியை கையாண்டார்கள். <br />
<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi2.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;b&gt;ஈரநிலம்&lt;/b&gt; படப்பிடிப்பில்... <br />
<br />
தமிழ் திரையுலகில் முதலில் புதுமையாக சிந்தித்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி முதல் வெற்றியும் கண்டவர் இயக்குனர் ஸ்ரீதர். <br />
<br />
பாரதிராஜா எடுக்கும் படங்களில் சின்னசின்ன யுக்திகளிலும் நம்மை வியக்க வைப்பார். அவருடைய காலத்திற்கு முன்பு படங்களில் ஒரு கதாபாத்திரம் தன் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் மெல்ல ஓசை இல்லாமல் முணங்குவதுபோல பேச வைப்பார்கள். <br />
<br />
பாரதிராஜாதான் ஒரு கதாபாத்திரம் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்க அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை குளோசப்பில் காட்டி அசைவு இல்லாமல் சற்று நிறுத்தி அந்த கதாபாத்திரத்தின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து காட்டி அதன்மூலம் அந்த கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற பாணியை கொண்டு வந்தார். <br />
<br />
பாரதிராஜாவின் &lt;b&gt;16 வயதினிலே&lt;/b&gt; படத்தை தொடர்ந்து &lt;b&gt;கிழக்கே போகும் ரயில்&lt;/b&gt;, மூன்றாவதாக &lt;b&gt;சிவப்பு ரோஜாக்கள்&lt;/b&gt;, அதன்பின் புதிய வார்ப்புகள் என தொடர்ந்து புதிய புதிய கலை நுணுக்கத்துடன் படங்களை வெளிக்கொணர்ந்தார். <br />
<br />
அவற்றுள் &lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; படத்தில் கிராமத்திற்கு ஆசிரியர் பணிக்காக வந்திருக்கும் பாக்யராஜ் தன் வீட்டருகே உள்ள நாயன வித்துவானின் பெண்ணான ரதியை காதலிப்பார். ரதி படிப்பதற்காக ஆசிரியர் பாக்யராஜிடம் புத்தகம் வாங்கி வா என தம்பியை அனுப்பி வைக்கும் போது, அந்த தம்பி ஆசிரியரை போய் பார்த்துவிட்டு திரும்பி வந்து அக்காவிடம் அவர் சொன்ன தகவலை சொல்லுவான். <br />
<br />
அக்கா நீ உன் இதயத்தை தந்தால் வாத்தியார் அவர் குங்குமத்தை தருகிறேன் என்று சொல்றார் என்பான். அதாவது இதயம், குங்குமம் என்ற பெயரில் உள்ள பத்திரிகைகளை வைத்து எழுதப்பட்ட வசனம் அது. <br />
<br />
இந்தக் காட்சியில் இந்த பொடியன் தன் அக்காவிடம் அந்த தகவலை கூற ஆரம்பிக்கும் பொழுது அவன் முகத்தை குளோசப்பில் காட்டி அவன் பேசுவதுபோல ஆசிரியர் பாக்யராஜின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து படமாக்கியிருந்தார் பாரதிராஜா. <br />
<br />
&lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரபலமான ஓர் இயக்குனர் இந்த காட்சியை பெரிதும் பாராட்டி தன் உரையில் குறிப்பிட்டார். <br />
<br />
உன் இதயத்தை தந்தால் வாத்தியார் தன் குங்குமத்தை தருவாராம் என்று பேசுகிற காட்சியில் வசனத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடி இருப்பது நானும் சில படங்களில் சில காட்சிகளை அமைத்ததுண்டு. ஆனால் அந்தக் காட்சியில் அந்த சிறுவன் பேசப்போவது போல அவன் முகத்தை காட்டி பின்னணியில் வாத்தியாரின் குரலை ஒலிக்க செய்த அந்த யுக்திதான் என்னை அயர வைத்தது என்று அந்த இயக்குனர் மனம் விட்டு பாரதிராஜாவை பாராட்டினார். <br />
<br />
அந்த படவிழாவில் கலந்து கொண்ட நடிகை லட்சுமி பேசும்பொழுது, நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். <br />
<br />
அன்று ஒரு காட்சி எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் உதவி இயக்குனரான பாரதிராஜா மற்றும் அவரை போன்ற உதவியாளர்களும் ஒரு சிறு தவறை செய்துவிட்டார்கள். <br />
<br />
அதன் காரணமாக நான் பாரதிராஜாவைப் பார்த்து, இந்த சின்ன விசயத்தில் கவனம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறீர்களே. நீங்கள் எல்லாம் பின்னால் பெரிதாக என்ன காரியம் சாதிக்கப் போகிறீர்கள் என கேட்டுவிட்டேன். <br />
<br />
ஆனால் இன்று பாரதிராஜா சாதித்து இருக்கும் பிரமாண்டமான காரியங்களைப் பார்த்து நான் அன்று பேசியதற்காக இன்று அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். <br />
<br />
பாரதிராஜா தன் மனத்திற்குள் 16 வயதினிலே கதையை உருவாக்கி அதை தயாரிக்க ஒரு சரியான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிர்ந்த காலக்கட்டத்தில்தான் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு அறிமுகமானார். <br />
<br />
பாரதிராஜா கூறிய கதை ராஜ்கண்ணுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் சப்பாணியாக வரும் கதாநாயகன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ராஜ்கண்ணு கேட்டார். <br />
<br />
பாரதிராஜாவுக்கு அந்த சமயம் அந்த பாத்திரத்திற்கு இரு நடிகர்கள் பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. எனவே கமல்ஹாசன் பெயரையும், நாகேஷ் பெயரையும் பாரதிராஜா குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுக்கோ கமலஹாசனுக்கே இந்த வேடம் மிக பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் கமலஹாசன் கால்ஷீட் கிடைப்பதற்காக படம் தயாரிப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போட்டார்கள். <br />
<br />
பின்னர் நடிகர்கள் டெக்னிஷீன்கள் எல்லாம் முடிவாகி அந்த குழுவினர் படத்தை தயாரிப்பதற்காக வெளியூர் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஏதாவது படக்கம்பெனிகளில் நமக்கு சின்ன வேலைகள் ஏதும் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கே.பாக்யராஜ்க்கு இந்தத் தகவல் கிடைத்தது. அந்த 16 வயதினிலே படப்பிடிப்பு குழுவினருடன் தானும் ஒரு உறுப்பினராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அவர் விரும்பியபோது, அதுவரை அவருக்கு உதவிகள் செய்பவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த கதை வசனகர்த்தா தூயவனை போய் பாக்யராஜ் சந்தித்தார். <br />
<br />
&lt;img src='http://www.vikatan.com/cinema/2005/dec/01bharathi3.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
&lt;b&gt;புதிய வார்ப்புகள்&lt;/b&gt; படப்பிடிப்பில் பாக்யராஜுடன்... <br />
<br />
பாக்யராஜ் சொன்னதை கேட்ட தூயவன், நீ சொல்கிற இந்த படக் கம்பெனி புதிய மனிதரால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் முக்கிய ஆட்கள் எல்லாம் புதியவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இந்த படத்தை முடித்து வெளிவருமா என்பதெல்லாம் சந்தேகம்தான். இருந்தாலும் உனக்கு சில மாதங்கள் ஏதோ வேலையும், சம்பளமும் கிடைத்து பொழுதும் கழியும் என்பதால் அந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் நீ போய் வா என விடை கொடுத்தார். <br />
<br />
16 வயதினிலே படத்திற்கு வசன கர்த்தாவாக கலைமணி பணியாற்றினார். வசன உதவி இயக்குனர் உதவி போன்ற பணிகளை பாக்யராஜ் மேற்கொண்டார். <br />
<br />
அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பாக்யராஜ் ஏற்கனவே குறிப்பிடிருக்கிறார். <br />
<br />
ஒருநாள் படப்பிடிப்பில் எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு வேலை தாமதமாகி படப்பிடிப்பு அதனால் பாதித்ததால் பாரதிராஜா பாக்யராஜிடம் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். <br />
<br />
இந்த தவறுக்கு நாம் காரணமில்லையே! ஆனால் இயக்குனர் நம்மை திட்டுகிறாரே என மனம் உடைந்து போனார் பாக்யராஜ். எனவே அன்றைய படப்பிடிப்புடன் அந்த குழுவில் இருந்து விலகி சென்னை திரும்பிவிட திட்டமிட்டிருந்தாராம். <br />
<br />
ஆனால் அன்றைய படப்பிடிப்பு முடிந்த பிறகு பாக்யராஜை அழைத்து பேசிய பாரதிராஜா, இன்று காலையில் உன்னை நான் திட்டிப் பேசியதை நீ சங்கடமாக எடுத்துக் கொள்ளாதே! நான் திட்டியது உன்னையல்ல. படப்பிடிப்புக்கு தாமதம் நேரச் செய்தவரையே நான் திட்டினேன். ஆனால் நான் இப்போதுதான் புதிதாக இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இந்த நிலையில் படத்தயாரிப்பு வேலைகளில் ஏற்கனவே அனுபவப் பட்டவர்களை நான் கடிந்து கொண்டால் பிறகு அவர்கள் நமக்கு ஒத்துழைப்புடன் வேலையில் ஈடுபடமாட்டார்கள். அதனால் தான் எனக்கு உதவியாளனாகிய உன்னை திட்டுவதுபோல என் கோபத்தை வெளிப்படுத்தினேன் என பாரதிராஜா கூறினாராம். <br />
<br />
16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அப்படத்திலே பரட்டையனாக நடித்த ரஜினிகாந்த் பிரபலமாகவில்லை. எனவே அந்தப் படப்பிடிப்பு சமயங்களில் ரஜினிகாந்த் சாதாரணமாக லுங்கி உடுத்திக்கொண்டு அந்த கிராம மக்களோடு சாதாரணமாக காணப்படுவார் என்று அந்த பழைய அனுபவங்களை எல்லாம் சிலர் கூறியிருக்கிறார்கள். <br />
<br />
16 வயதினிலே படம் தமிழ் திரைப் பட உலகின் மாமூலான பல உத்திகளை தவிடு பொடியாக்கி புதியதோரு கண்ணோட்டத்திற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல! <br />
<br />
நன்றி: விகடன்&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரே]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2224</link>
			<pubDate>Wed, 30 Nov 2005 23:42:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2224</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;b&gt;விருதுகளை தேடிப் போகவில்லை....<br />
ஆனால் விருதுகள் தேடி வந்தன! <br />
-ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரேயின் வரலாறு&lt;/b&gt;<br />
&lt;img src='http://www.tamilcinema.com/cinenews/images/satyajitray01.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் 1921-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தார். தந்தை ரே. தாயார் சுப்ரபா. இவரது குடும்பம் நடுத்தர வகுப்பைச் சார்ந்தது. இவருடைய தாத்தாவும், தந்தையும் வங்க மொழியில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர்.<br />
<br />
சத்யஜித்ரேவிற்கு இரண்டு வயதாகும்போது இவருடைய தந்தை மரணம் அடைந்தார்.<br />
<br />
ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில் கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர் நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.<br />
<br />
1942-ம் ஆண்டு விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். இசையிலும், சினிமாவிலும் ஆர்வத்துடன் விளங்கினார். மேற்கத்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிக திரைப்படங்களை பார்த்து தன்னுடைய சினிமா அறிவினை வளர்த்து கொண்டார்.<br />
<br />
1947-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலாவது பிலிம் சிட்டியை சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து தோற்றுவித்தார்.<br />
<br />
1950-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களை பார்த்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பியதும் பிபூதி பூஜன் பானர்ஜியின் ''பதர் பாஞ்சாலி'' நாவலை குழந்தைகள் இலக்கியமாக எழுதி தருமாறு கொல்கத்தா நகரின் பிரபலமான ஒரு பதிப்பகத்தார் கேட்டு கொண்டனர். பின்னர் இதையே தன்னுடைய முதலாவது திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை ரே ஸ்டுடியோக்களுக்கு வெளியே தத்ரூபமான இடங்களில் எடுத்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பொருளாதார உதவியுடன் படத்தை முடித்து வெளியிட்டார். இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.<br />
<br />
1959-ம் ஆண்டு ''த அபுடிராய்லசி'' என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்களை பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து சமுதாய கண்ணோட்டத்துடன் அமைந்திருக்கும்.<br />
<br />
1987-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் கவுரவ பரிசுகளில் ஒன்றான ''லிஜியன் டி'' என்ற பரிசினை பெற்றார். இந்த பரிசு பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்காய்ஸ் மித்தரண்டு கொல்கத்தா நகரத்திற்கு வந்து வழங்கி கவுரவித்தார்.<br />
<br />
இவர் உயிருடன் இருக்கும்போதே இவரைப்பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.<br />
&lt;img src='http://www.tamilcinema.com/cinenews/images/sathyaraj03.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
சத்ஜித்ரே திரைப்பட தயாரிப்பாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வங்க மொழியில் எழுதப்பட்ட இவருடைய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தனது நாவல்களில் பதினைந்திற்கும் மேலானவற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.<br />
<br />
ரேயின் வங்க மொழி காலம், இந்திய திரைப்பட துறையின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.<br />
<br />
1967-ம் ஆண்டு ''மகஸாஸே'' விருது வழங்கப்பட்டது. யூகோஸ்லோவியா ''கொடி விருது'' உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றார்.<br />
<br />
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.<br />
<br />
திரை உலக வரலாற்றில் அளப்பறிய சாதனை புரிந்த சத்யஜித்ரே 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் தன்னுடைய இன்னுயிரை துறந்தார்.<br />
<br />
&lt;img src='http://www.raitre.rai.it/Static/immagine/27/fuoriorario_SatyajitRay.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;-கேன்ஸ் திரைப்பட விழாவில் சத்யஜித்ரே!&lt;/b&gt;<br />
<br />
<br />
சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழா நடந்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் இரு ராய்'கள். ஒருவர் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித்ராய். (விருப்பமுள்ளவர்கள் சத்யஜித்ரே என்றும் அழைத்துக் கொள்க) இன்னொருவர் ஐஸ்வர்யராய். திரைப்படவிழாவில், ரேயின் படைப்புகள் அமோக வரவேற்பு பெற்று நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மறைந்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமேதை! (கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இந்திய அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் கலந்து கொண்டு, அதன் வசமுள்ள திரைப்படங்களின் டி.வி. மற்றும் வீடியோ உரிமைகளை 1,35,000 டாலருக்கு (நம்ம ஊர் மதிப்பில் கணக்கு போட்டால்... அப்பாடியோவ்!) விற்பனை செய்துள்ளது. இதில் 60 சதவீத வருவாய் சத்யஜித்ரே படங்களின் விற்பனை மூலம் கிடைத்துள்ளது. <br />
சத்யஜித்ரே முதன் முதலாக இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தின் சர்வதேச உரிமை என்.எப்.டீ.சி.யிடம் உள்ளது. இந்த படம் உள்பட கணஷத்ரூ, காரி, பெய்ரீ மற்றும் அகன்டக் போன்ற என்.எப்.டீ.சி தயாரிப்பில் சத்யஜித்ரே இயக்கிய, காலத்தால் அழியாத காவியங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ உரிமை நல்ல அளவில் விலை போயுள்ளது.<br />
<br />
இங்கு சத்யஜித்ரே படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் டி.வி மற்றும் வீடியோ உரிமைகளை ஃபிரான்ஸ் நாட்டின் ஃபிலிம்ஸ் வித்தவுட் ஃப்ரான்டியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவை ஃபிரான்ஸ் நாட்டிலும் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுமாம்.&lt;/span&gt;<br />
<br />
நன்றி: செந்தில்.ஆர்.பி (தமிழ்சினிமாவிலிருந்து..........)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;b&gt;விருதுகளை தேடிப் போகவில்லை....<br />
ஆனால் விருதுகள் தேடி வந்தன! <br />
-ஆஸ்கர் நாயகன் சத்யஜித்ரேயின் வரலாறு&lt;/b&gt;<br />
&lt;img src='http://www.tamilcinema.com/cinenews/images/satyajitray01.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா நகரில் 1921-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாள் பிறந்தார். தந்தை ரே. தாயார் சுப்ரபா. இவரது குடும்பம் நடுத்தர வகுப்பைச் சார்ந்தது. இவருடைய தாத்தாவும், தந்தையும் வங்க மொழியில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழ்ந்தனர்.<br />
<br />
சத்யஜித்ரேவிற்கு இரண்டு வயதாகும்போது இவருடைய தந்தை மரணம் அடைந்தார்.<br />
<br />
ரவீந்தநாத் தாகூர் சத்யஜித்ரேயை தனது சாந்திநிகேதனில் கலாபவனில் கலைத்துறையில் சேர்த்து கல்வி கற்பித்தார். இந்திய கலைத்துறையின் ஒப்பற்ற பேராசிரியர் நந்தலால் போஸிடம் மாணவனாக இருந்துகல்வி கற்றார். சாந்தி நிகேதனில் தன்னுடைய கல்வி முடிவடைவதற்கு முன்னரே கொல்கத்தா வந்துவிட்டார்.<br />
<br />
1942-ம் ஆண்டு விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். இசையிலும், சினிமாவிலும் ஆர்வத்துடன் விளங்கினார். மேற்கத்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிக திரைப்படங்களை பார்த்து தன்னுடைய சினிமா அறிவினை வளர்த்து கொண்டார்.<br />
<br />
1947-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதலாவது பிலிம் சிட்டியை சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து தோற்றுவித்தார்.<br />
<br />
1950-ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் அங்கு ஏராளமான திரைப்படங்களை பார்த்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பியதும் பிபூதி பூஜன் பானர்ஜியின் ''பதர் பாஞ்சாலி'' நாவலை குழந்தைகள் இலக்கியமாக எழுதி தருமாறு கொல்கத்தா நகரின் பிரபலமான ஒரு பதிப்பகத்தார் கேட்டு கொண்டனர். பின்னர் இதையே தன்னுடைய முதலாவது திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்தை ரே ஸ்டுடியோக்களுக்கு வெளியே தத்ரூபமான இடங்களில் எடுத்தார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பொருளாதார உதவியுடன் படத்தை முடித்து வெளியிட்டார். இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.<br />
<br />
1959-ம் ஆண்டு ''த அபுடிராய்லசி'' என்ற திரைப்படத்தினை வெளியிட்டார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்களை பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து சமுதாய கண்ணோட்டத்துடன் அமைந்திருக்கும்.<br />
<br />
1987-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் கவுரவ பரிசுகளில் ஒன்றான ''லிஜியன் டி'' என்ற பரிசினை பெற்றார். இந்த பரிசு பிரெஞ்சு நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்காய்ஸ் மித்தரண்டு கொல்கத்தா நகரத்திற்கு வந்து வழங்கி கவுரவித்தார்.<br />
<br />
இவர் உயிருடன் இருக்கும்போதே இவரைப்பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.<br />
&lt;img src='http://www.tamilcinema.com/cinenews/images/sathyaraj03.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
சத்ஜித்ரே திரைப்பட தயாரிப்பாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வங்க மொழியில் எழுதப்பட்ட இவருடைய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தனது நாவல்களில் பதினைந்திற்கும் மேலானவற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.<br />
<br />
ரேயின் வங்க மொழி காலம், இந்திய திரைப்பட துறையின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.<br />
<br />
1967-ம் ஆண்டு ''மகஸாஸே'' விருது வழங்கப்பட்டது. யூகோஸ்லோவியா ''கொடி விருது'' உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றார்.<br />
<br />
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1992-ம் ஆண்டு திரை உலகின் மிகச்சிறந்த விருதான ''ஆஸ்கர்'' விருதினை பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசு ''பாரத ரத்னா'' விருது வழங்கி கவுரவித்தது.<br />
<br />
திரை உலக வரலாற்றில் அளப்பறிய சாதனை புரிந்த சத்யஜித்ரே 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் தன்னுடைய இன்னுயிரை துறந்தார்.<br />
<br />
&lt;img src='http://www.raitre.rai.it/Static/immagine/27/fuoriorario_SatyajitRay.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;-கேன்ஸ் திரைப்பட விழாவில் சத்யஜித்ரே!&lt;/b&gt;<br />
<br />
<br />
சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழா நடந்தது. அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் இரு ராய்'கள். ஒருவர் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித்ராய். (விருப்பமுள்ளவர்கள் சத்யஜித்ரே என்றும் அழைத்துக் கொள்க) இன்னொருவர் ஐஸ்வர்யராய். திரைப்படவிழாவில், ரேயின் படைப்புகள் அமோக வரவேற்பு பெற்று நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மறைந்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த மாமேதை! (கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் இந்திய அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் கலந்து கொண்டு, அதன் வசமுள்ள திரைப்படங்களின் டி.வி. மற்றும் வீடியோ உரிமைகளை 1,35,000 டாலருக்கு (நம்ம ஊர் மதிப்பில் கணக்கு போட்டால்... அப்பாடியோவ்!) விற்பனை செய்துள்ளது. இதில் 60 சதவீத வருவாய் சத்யஜித்ரே படங்களின் விற்பனை மூலம் கிடைத்துள்ளது. <br />
சத்யஜித்ரே முதன் முதலாக இயக்கிய பதர் பாஞ்சாலி படத்தின் சர்வதேச உரிமை என்.எப்.டீ.சி.யிடம் உள்ளது. இந்த படம் உள்பட கணஷத்ரூ, காரி, பெய்ரீ மற்றும் அகன்டக் போன்ற என்.எப்.டீ.சி தயாரிப்பில் சத்யஜித்ரே இயக்கிய, காலத்தால் அழியாத காவியங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வீடியோ உரிமை நல்ல அளவில் விலை போயுள்ளது.<br />
<br />
இங்கு சத்யஜித்ரே படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றின் டி.வி மற்றும் வீடியோ உரிமைகளை ஃபிரான்ஸ் நாட்டின் ஃபிலிம்ஸ் வித்தவுட் ஃப்ரான்டியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவை ஃபிரான்ஸ் நாட்டிலும் பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படுமாம்.&lt;/span&gt;<br />
<br />
நன்றி: செந்தில்.ஆர்.பி (தமிழ்சினிமாவிலிருந்து..........)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழ் திரைப்பட வரலாறு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2237</link>
			<pubDate>Tue, 29 Nov 2005 12:30:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2237</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;&lt;b&gt;தமிழ் திரைப்பட வரலாறு&lt;/b&gt;<br />
-எஸ். தியடோர் பாஸ்கரன் <br />
&lt;img src='http://www.indiafilm.com/veedu.gif' border='0' alt='user posted image'&gt; <br />
இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் ரிப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர். <br />
1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் டூரிங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன. <br />
<br />
கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். <br />
<br />
1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை. <br />
<br />
திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி. <br />
<br />
1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது. <br />
<br />
முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார். <br />
<br />
முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது. <br />
<br />
முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். <br />
<br />
பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர். <br />
<br />
சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் நேரிடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது. <br />
<br />
திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின. <br />
<br />
அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம். <br />
<br />
இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த பாரம்பரியம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம். <br />
<br />
உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், டூரிங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. <br />
<br />
மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது. <br />
<br />
1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. <br />
<br />
1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது. <br />
<br />
1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது). <br />
<br />
ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார். <br />
1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக பாரம்பரியத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக பரிணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம். <br />
அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் நேரிடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் நேரிடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் நேரிடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது. <br />
<br />
1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. <br />
<br />
தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். <br />
<br />
ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது). <br />
<br />
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோரின் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே. <br />
<br />
எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.<br />
<br />
அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். <br />
&lt;]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;&lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;&lt;b&gt;தமிழ் திரைப்பட வரலாறு&lt;/b&gt;<br />
-எஸ். தியடோர் பாஸ்கரன் <br />
&lt;img src='http://www.indiafilm.com/veedu.gif' border='0' alt='user posted image'&gt; <br />
இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் ரிப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர். <br />
1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் டூரிங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன. <br />
<br />
கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். <br />
<br />
1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை. <br />
<br />
திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி. <br />
<br />
1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது. <br />
<br />
முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார். <br />
<br />
முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது. <br />
<br />
முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். <br />
<br />
பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர். <br />
<br />
சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் நேரிடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது. <br />
<br />
திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின. <br />
<br />
அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம். <br />
<br />
இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த பாரம்பரியம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம். <br />
<br />
உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், டூரிங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. <br />
<br />
மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது. <br />
<br />
1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. <br />
<br />
1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது. <br />
<br />
1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது). <br />
<br />
ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார். <br />
1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக பாரம்பரியத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக பரிணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம். <br />
அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் நேரிடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் நேரிடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் நேரிடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது. <br />
<br />
1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. <br />
<br />
தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். <br />
<br />
ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது). <br />
<br />
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோரின் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே. <br />
<br />
எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.<br />
<br />
அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். <br />
&lt;]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>