<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - அரசியல் /  பொருளாதாரம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:52 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[கொழும்பு குண்டு வெடிப்பு- ஒரு சதி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=40</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 13:27:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=40</guid>
			<description><![CDATA[                    கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.<br />
<br />
விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அவர் பகலுணவுக்காக வெளிவரும் வரை காத்திருந்து தாக்குவது என்பது பல காரணங்களுக்காக நம்பகத்தன்மை அற்றுப் போகின்றது.<br />
<br />
1. இவ்வாறான உச்சப் பாது காப்பு வலையத்தை அண்மிக்க முதலே பல வீதித் தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி வர வேண்டியதிருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அதி சக்தி வாய்ந்த குண்டினைப் பொருத்திய தற்கொலைக் குண்டுதாரி இத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி குண்டுகளுடன் வருவது என்பது ஒரு நகைச்சுவையே.<br />
<br />
2. தற்கொலை நோக்கிற்காக வந்தவர் இராணுவத் தளபதி வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கியது என்ற கூற்று. அதி உச்சப் பாது காப்பு பிரதேசத்தில் தேவையற்று நிற்பது சந்தேகத்தை உண்டாக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் நிற்பது உடனடிக் கவனத்தைப் பெறும். சாதாரண சிங்களப் பொது மக்களே சந்தேகப் பட்டு காட்டிக் கொடுத்து விடுவார்கள்.<br />
<br />
இந்த இரண்டு காரணங்களாலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் என்பது விடுதலைப் புலிகளே மறுப்பது போல அடிபட்டுப் போகின்றது.<br />
<br />
அப்படியென்றால் இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் பயனடையப் போவது யார்?<br />
<br />
இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் தமிழர் தரப்பை விட சிங்களத் தரப்பில் பயனடையப் பலர் காத்திருக்கின்றார்கள்.<br />
<br />
முதலாவது மகிந்த ராஜபக்ஸ. பேச்சு வார்த்தைகள் தொடரப் படவேண்டும் என்ற சர்வதேச நெருக்குவாரமும் அதற்கு எதிரான தோழமைக் கட்சியான ஜே.வி.பி கொடுத்துக்கொண்டிருக்கும் பயமுறுத்துதல்களும் அவரை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் தமிழர் தரப்புக்குக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் அவரால் சிங்களத்தின் காவலன் என்ற பெயரைத் தக்க வைக்க முடியாத நிலமை ஏற்படும். அதனால் சூனியமாகும் அரசியல் எதிர்காலம். இதனை தவிர்த்துக் கொள்ள திட்டமிட்ட வகையில் ஆரம்பிக்கப் பட்ட திருமலை இனக்கலவரம் பிசுபிசுத்துப் போக புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்திருக்கலாம்.<br />
<br />
இக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து திருமலையில் விமானக் குண்டு வீச்சு. அதிக சென்சிற்றிவ் ஆன பிரதேசமாக வேகமாக உணர்ச்சித் தீ பற்றிக் கொள்ளக் கூடிய மூவின மக்களும் செறிந்து வாழும் திருமலை தெரிவு செய்யப்பட்டமை இதை உறுதிப் படுத்துகின்றது. நான்காம் ஈழப் போரில் சிங்களம் திருமலையை தமிழர் தரப்பிடம் இழந்து விடலாம் என்ற பயம். அல்லது திருமலையில் அதிக கவனத்தை வைத்திருக்கும் அன்னிய சக்தியின் தூண்டுதல் காரணமாயிருக்கலாம்.<br />
<br />
இரண்டாவது ஜே.வி.பி. இழந்த அரசியல் செல்வாக்கை மக்களிடம் இனவாதத் தீயைக் கக்கி மீட்டுக் கொள்ளல் . மகிந்த அரசிற்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்து பேரம் பேசும் வலுவை அதிகப் படுத்தல்.நோர்வேக்கு எதிரான வெளியேற்றக் கோஷம் 7 அமைச்சுப் பதவிகள் வரை மகிந்த ராஜபக்கஸவால் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றும் ஆட்சிமாற்றத்தை வேகப்படுத்த இராணுவத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் வகையில் மகிந்தவுக்கு ஆதரவான இராணுவத் தலமையை அகற்றுதல்.<br />
<br />
சமீப காலமாக ஜே.வி.பி இன் அங்கத்தவர்கள் இராணுவத்தில் பெருமளவில் ஊடுருவியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது -மக்கள் அரசியலால் முடியாது எனினும்- புரட்சிகர அரசியல் மாற்றத்தை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை. இரண்டு முறை தோல்வியடைந்த புரட்சியை மூன்றாவது முறையும் முயற்சிக்கப் பின் நிற்க மமட்டார்கள்.<br />
<br />
மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத் தடையை ஊக்கப் படுத்தி இலங்கைத் தீவில் தமிழர் போராட்டத்தை நசுக்கி தமது ஆதிக்கத்தையும் நலனையும் எதிர் பார்த்திருக்கும் அன்னிய சக்தி அல்லது சக்திகள்.<br />
<br />
நான்காவது தொடரும் போரினால் ஆயுதவிற்பனையை ஊக்கப்படுத்தி கொழுத்த பணம் சம்பாதிக்க முயலும் ருசி கண்ட ஆயுத வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்கள்.<br />
<br />
<br />
இந்த நான்கு தரப்பின் தலையீடும் சதியும் இத்திட்டமிட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற உறுதியான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.<br />
<br />
இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே விடுதலைப் புலிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு தமிழ் மக்களின் மீது விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது. இத்தகைய விமானத் தாக்குதல் விடுதலைப் புலிகளை ஆத்திரமடைய வைத்து போரைத் துவங்குவதை சம்பந்தப்பட்ட தரப்பு எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு போட்டுத் தாக்குவதில் காட்டிய அவசரத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் யாரும் கண்டிக்கவில்லை.<br />
<br />
தமிழர் தரப்பைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு வலிந்த போரினையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற வலிந்த சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் பொறுமை இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.<br />
<br />
இதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைய கொழும்பைச் சுற்றியோ அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களிலோ வலிமையான இன்னுமொரு குண்டு வெடிப்பு இடம் பெறலாம். வழமை போல அதுவும் விடுதலைப் புலிகளின் தலையில் சுமத்தப் பட சர்வ தேசம் மெளனம் காத்து நிற்கும்.<br />
<br />
ஆனால் இம் முறை மேற்கு நாடுகளில் இக்குண்டு வெடிப்பு பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்பதை கவனமாகத் தவிர்த்து " பெண் தற்கொலை தாரி " என்றே செய்தி வெளியிட்டமை அவர்களுக்கும் இதே சந்தேகம் இருக்கின்றது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.<br />
<br />
இவ்வளவு இருந்தும் சர்வதேச சமூகம் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? இந்த சதியை அம்பலப் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர் மண்னில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கின்றது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.<br />
<br />
விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அவர் பகலுணவுக்காக வெளிவரும் வரை காத்திருந்து தாக்குவது என்பது பல காரணங்களுக்காக நம்பகத்தன்மை அற்றுப் போகின்றது.<br />
<br />
1. இவ்வாறான உச்சப் பாது காப்பு வலையத்தை அண்மிக்க முதலே பல வீதித் தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி வர வேண்டியதிருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அதி சக்தி வாய்ந்த குண்டினைப் பொருத்திய தற்கொலைக் குண்டுதாரி இத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி குண்டுகளுடன் வருவது என்பது ஒரு நகைச்சுவையே.<br />
<br />
2. தற்கொலை நோக்கிற்காக வந்தவர் இராணுவத் தளபதி வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கியது என்ற கூற்று. அதி உச்சப் பாது காப்பு பிரதேசத்தில் தேவையற்று நிற்பது சந்தேகத்தை உண்டாக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் நிற்பது உடனடிக் கவனத்தைப் பெறும். சாதாரண சிங்களப் பொது மக்களே சந்தேகப் பட்டு காட்டிக் கொடுத்து விடுவார்கள்.<br />
<br />
இந்த இரண்டு காரணங்களாலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் என்பது விடுதலைப் புலிகளே மறுப்பது போல அடிபட்டுப் போகின்றது.<br />
<br />
அப்படியென்றால் இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் பயனடையப் போவது யார்?<br />
<br />
இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் தமிழர் தரப்பை விட சிங்களத் தரப்பில் பயனடையப் பலர் காத்திருக்கின்றார்கள்.<br />
<br />
முதலாவது மகிந்த ராஜபக்ஸ. பேச்சு வார்த்தைகள் தொடரப் படவேண்டும் என்ற சர்வதேச நெருக்குவாரமும் அதற்கு எதிரான தோழமைக் கட்சியான ஜே.வி.பி கொடுத்துக்கொண்டிருக்கும் பயமுறுத்துதல்களும் அவரை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் தமிழர் தரப்புக்குக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் அவரால் சிங்களத்தின் காவலன் என்ற பெயரைத் தக்க வைக்க முடியாத நிலமை ஏற்படும். அதனால் சூனியமாகும் அரசியல் எதிர்காலம். இதனை தவிர்த்துக் கொள்ள திட்டமிட்ட வகையில் ஆரம்பிக்கப் பட்ட திருமலை இனக்கலவரம் பிசுபிசுத்துப் போக புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்திருக்கலாம்.<br />
<br />
இக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து திருமலையில் விமானக் குண்டு வீச்சு. அதிக சென்சிற்றிவ் ஆன பிரதேசமாக வேகமாக உணர்ச்சித் தீ பற்றிக் கொள்ளக் கூடிய மூவின மக்களும் செறிந்து வாழும் திருமலை தெரிவு செய்யப்பட்டமை இதை உறுதிப் படுத்துகின்றது. நான்காம் ஈழப் போரில் சிங்களம் திருமலையை தமிழர் தரப்பிடம் இழந்து விடலாம் என்ற பயம். அல்லது திருமலையில் அதிக கவனத்தை வைத்திருக்கும் அன்னிய சக்தியின் தூண்டுதல் காரணமாயிருக்கலாம்.<br />
<br />
இரண்டாவது ஜே.வி.பி. இழந்த அரசியல் செல்வாக்கை மக்களிடம் இனவாதத் தீயைக் கக்கி மீட்டுக் கொள்ளல் . மகிந்த அரசிற்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்து பேரம் பேசும் வலுவை அதிகப் படுத்தல்.நோர்வேக்கு எதிரான வெளியேற்றக் கோஷம் 7 அமைச்சுப் பதவிகள் வரை மகிந்த ராஜபக்கஸவால் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றும் ஆட்சிமாற்றத்தை வேகப்படுத்த இராணுவத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் வகையில் மகிந்தவுக்கு ஆதரவான இராணுவத் தலமையை அகற்றுதல்.<br />
<br />
சமீப காலமாக ஜே.வி.பி இன் அங்கத்தவர்கள் இராணுவத்தில் பெருமளவில் ஊடுருவியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது -மக்கள் அரசியலால் முடியாது எனினும்- புரட்சிகர அரசியல் மாற்றத்தை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை. இரண்டு முறை தோல்வியடைந்த புரட்சியை மூன்றாவது முறையும் முயற்சிக்கப் பின் நிற்க மமட்டார்கள்.<br />
<br />
மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத் தடையை ஊக்கப் படுத்தி இலங்கைத் தீவில் தமிழர் போராட்டத்தை நசுக்கி தமது ஆதிக்கத்தையும் நலனையும் எதிர் பார்த்திருக்கும் அன்னிய சக்தி அல்லது சக்திகள்.<br />
<br />
நான்காவது தொடரும் போரினால் ஆயுதவிற்பனையை ஊக்கப்படுத்தி கொழுத்த பணம் சம்பாதிக்க முயலும் ருசி கண்ட ஆயுத வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்கள்.<br />
<br />
<br />
இந்த நான்கு தரப்பின் தலையீடும் சதியும் இத்திட்டமிட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற உறுதியான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.<br />
<br />
இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே விடுதலைப் புலிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு தமிழ் மக்களின் மீது விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது. இத்தகைய விமானத் தாக்குதல் விடுதலைப் புலிகளை ஆத்திரமடைய வைத்து போரைத் துவங்குவதை சம்பந்தப்பட்ட தரப்பு எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு போட்டுத் தாக்குவதில் காட்டிய அவசரத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் யாரும் கண்டிக்கவில்லை.<br />
<br />
தமிழர் தரப்பைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு வலிந்த போரினையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற வலிந்த சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் பொறுமை இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.<br />
<br />
இதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைய கொழும்பைச் சுற்றியோ அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களிலோ வலிமையான இன்னுமொரு குண்டு வெடிப்பு இடம் பெறலாம். வழமை போல அதுவும் விடுதலைப் புலிகளின் தலையில் சுமத்தப் பட சர்வ தேசம் மெளனம் காத்து நிற்கும்.<br />
<br />
ஆனால் இம் முறை மேற்கு நாடுகளில் இக்குண்டு வெடிப்பு பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்பதை கவனமாகத் தவிர்த்து " பெண் தற்கொலை தாரி " என்றே செய்தி வெளியிட்டமை அவர்களுக்கும் இதே சந்தேகம் இருக்கின்றது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.<br />
<br />
இவ்வளவு இருந்தும் சர்வதேச சமூகம் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? இந்த சதியை அம்பலப் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர் மண்னில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கின்றது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உலகத்தமிழர் இயக்க காரியாலயம் கனடிய பாதுகாப்பு துறையினரால் சே]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=94</link>
			<pubDate>Mon, 24 Apr 2006 01:40:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1523">RaMa</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=94</guid>
			<description><![CDATA[                    கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது.<br />
<br />
அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய  காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர்.  அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். <br />
<br />
இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியாலயம் சோதனைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும்.<br />
<br />
இச் சோதனை நடவடிக்கை பற்றி பொது மக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, இப்படியான செயற்பாடுகள் மூலம், தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றுதியை யாரும் குலைக்க முடியாது என்றும், இச் செயற்பாடுகளின் மூலம் கனடிய அரசானது கனடியத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது எனவும் தெரிவித்தனர்.<br />
<br />
இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை காரணமாக உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ கிளையின் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ம் திகதி செவ்வாய் கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழமையான சேவைகளினை கனேடியத் தமிழ் மக்களிற்கு வழங்கப்படும் எனவும் உலகத்தமிழர் இயக்கம் (ஒன்ராரியே) அறிவித்துள்ளது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது.<br />
<br />
அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய  காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர்.  அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். <br />
<br />
இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியாலயம் சோதனைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும்.<br />
<br />
இச் சோதனை நடவடிக்கை பற்றி பொது மக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, இப்படியான செயற்பாடுகள் மூலம், தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றுதியை யாரும் குலைக்க முடியாது என்றும், இச் செயற்பாடுகளின் மூலம் கனடிய அரசானது கனடியத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது எனவும் தெரிவித்தனர்.<br />
<br />
இதே வேளை இந்த சோதனை நடவடிக்கை காரணமாக உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ கிளையின் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ம் திகதி செவ்வாய் கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழமையான சேவைகளினை கனேடியத் தமிழ் மக்களிற்கு வழங்கப்படும் எனவும் உலகத்தமிழர் இயக்கம் (ஒன்ராரியே) அறிவித்துள்ளது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கனடாவில் எதிர்ப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=147</link>
			<pubDate>Wed, 19 Apr 2006 07:35:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1254">நேசன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=147</guid>
			<description><![CDATA[                    கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். <br />
அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.? <br />
சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள். <br />
<br />
ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted:  :evil:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். <br />
அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.? <br />
சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள். <br />
<br />
ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted:  :evil:                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கேரள அரசியலில் அதிமுக]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=226</link>
			<pubDate>Fri, 14 Apr 2006 00:33:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1205">adithadi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=226</guid>
			<description><![CDATA[                    AIADMK to dip toe in Kerala's assembly poll waters<br />
(IANS)<br />
<br />
10 April 2006 <br />
<br />
<br />
<br />
CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts.<br />
<br />
<br />
The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly.<br />
<br />
K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time that the AIADMK will be contesting an assembly election in Kerala. Amma (Jayalalitha) has huge support in our state." He predicts at least nine seats for the AIADMK in the new Kerala assembly, which goes to the polls in three phases.<br />
<br />
A baby elephant that Jayalalitha gifted to the famous Guruvayoor temple after her party won the 2001 assembly elections has also helped sway the state's sentiment in AIADMK's favour, Rajapandian said. The 10 districts where AIADMK candidates will contest are Idukki, Palakkad, Kozhikode, Trivandrum, Pathanamthitta, Kollam, Kottayam, Trichur, Malappuram and Alappuzha. Many of these are Muslim-strong constituencies and Jayalalitha, always a supporter of Hindutva groups, may find the going tough. However, Jayalalitha asserts: "We have learnt that the AIADMK has a good following in Kerala. So we would like to test our strength."<br />
<br />
The AIADMK manifesto has promised to make Munnar a world-class holiday resort and to upgrade the Vizhinjam port. It has also vowed to promote Kathakali dance and martial art 'kalari payattu' as national art forms. As in Tamil Nadu, the party has promised to set up women's self-help groups and says it will bring development that will help arrest exodus of Keralites for jobs outside the state. The AIADMK has also promised free education and bicycles up to Class 12.<br />
<br />
Munnar, with its Tamil labour and strong trade union movement in its tea estates, is equally a Congress and Left stronghold with the voters keeping the two parties on a tightrope. For the first time, a third force will be active in this district.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    AIADMK to dip toe in Kerala's assembly poll waters<br />
(IANS)<br />
<br />
10 April 2006 <br />
<br />
<br />
<br />
CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts.<br />
<br />
<br />
The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly.<br />
<br />
K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time that the AIADMK will be contesting an assembly election in Kerala. Amma (Jayalalitha) has huge support in our state." He predicts at least nine seats for the AIADMK in the new Kerala assembly, which goes to the polls in three phases.<br />
<br />
A baby elephant that Jayalalitha gifted to the famous Guruvayoor temple after her party won the 2001 assembly elections has also helped sway the state's sentiment in AIADMK's favour, Rajapandian said. The 10 districts where AIADMK candidates will contest are Idukki, Palakkad, Kozhikode, Trivandrum, Pathanamthitta, Kollam, Kottayam, Trichur, Malappuram and Alappuzha. Many of these are Muslim-strong constituencies and Jayalalitha, always a supporter of Hindutva groups, may find the going tough. However, Jayalalitha asserts: "We have learnt that the AIADMK has a good following in Kerala. So we would like to test our strength."<br />
<br />
The AIADMK manifesto has promised to make Munnar a world-class holiday resort and to upgrade the Vizhinjam port. It has also vowed to promote Kathakali dance and martial art 'kalari payattu' as national art forms. As in Tamil Nadu, the party has promised to set up women's self-help groups and says it will bring development that will help arrest exodus of Keralites for jobs outside the state. The AIADMK has also promised free education and bicycles up to Class 12.<br />
<br />
Munnar, with its Tamil labour and strong trade union movement in its tea estates, is equally a Congress and Left stronghold with the voters keeping the two parties on a tightrope. For the first time, a third force will be active in this district.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும் !]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=279</link>
			<pubDate>Mon, 10 Apr 2006 14:46:49 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=279</guid>
			<description><![CDATA[                    குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்!<br />
நயனன்<br />
<br />
<br />
<br />
<br />
குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம். தமிழக அரசியல் களத்தில், இலவசங்கள், துரோகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள், போட்டிகள், அதிருப்திகள், கூட்டுகள், கீழறுப்புகள், நடிகர்கள், நடிகைகள், தொகுதிகள், சாதிகள், கணக்குகள் என்ற சொற்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் தருணத்தில், குடும்ப அரசியல் என்ற ஒன்றை சற்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது.<br />
<br />
வைகோ அணி மாறியது பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், கீழ்த்தரமான அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்று சொல்லி விட்டு விட்டு விடலாம். இதை வைகோவின் அநாகரிகம் என்று கருதும் போது, இதுவா அநாகரீகம், இதை விட அநாகரீகத்தை இதோ காணீர் என்று செவ்விகள் பல கொடுத்தார். அதில், கருணாநிதி பொடாவில் இருந்து விடுதலை ஆக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று சொன்னதும், நான் உள்ளே இருந்தால் எங்கே எனது புகழ் வளர்ந்து விடுமோ என்று அஞ்சி சிறையில் வந்து பார்த்தார் என்று சொன்னதும் வைகோவின் அநாகரீகத்தின் உச்சம். எது எப்படியிருந்தாலும், தற்போது அவரும் அவரின் தலைவியும் குடும்ப அரசியல் என்ற வாதத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.<br />
<br />
இந்தக் குடும்ப அரசியல் என்ற சங்கதி எதனாலெல்லாம் பெரிதாகப் பேசப்படுகிறது?<br />
<br />
1) இசுடாலின், மிசாவுக்குப் பிறகு ஏறத்தாழ 30 வருடங்களாக தி.மு.கவில் முக்கியம் பெற்று வருவது.<br />
<br />
2) மாறன் குடும்பம் தொலைக்காட்சி, வானொலி, ஏடுகள் ஆகிய மிடையங்களில் வலுவடைந்து வருவது.<br />
<br />
இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை. அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது.<br />
<br />
அவரும் இரு முறை மேயராகப் பணி புரிந்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஓரளவு திறமையான நிர்வாகி, செயல்திறன் என்றும் சொல்லப்படுகிறார்.<br />
<br />
முக்கியமாக இந்தியா குடியரசான 1950ல் இருந்து இன்றைக்கு சுமார் 56 ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த, தலைவர்களின் குடும்பங்களை நினைத்துப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.<br />
<br />
எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராசருக்குக் குடும்பம் கிடையாது. 2 ஆண்டுகள் ஆண்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் கிடையாது; தத்துப் பிள்ளைகள்தான். 13 ஆண்டுகள் ஆண்ட எம்சியாருக்கு குடும்பம் இருந்தாலும் பிள்ளை குட்டிகள் கிடையாது. சில மாதங்கள் ஆண்ட சானகி அம்மாள் எம்சியாரின் மனைவி. இது வரை 10 ஆண்டுகள் ஆண்டுவிட்ட செயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது.<br />
<br />
ஆக, 56 ஆண்டுகளில் 33 ஆண்டுகளை பிள்ளை குட்டியில்லாதவர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள் (60%). பேராயக் கட்சி (காங்கிரசு) ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர்(1967) இதோடு 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 39 ஆண்டுகளில் சுமார் 26 ஆண்டுகள் (அதாவது 79%) தமிழகத்தை பிள்ளை குட்டி இல்லாதவர்களே ஆண்டிருக்கிறார்கள். அதனாலேயே, பிள்ளைகுட்டி இருக்கிற கருணாநிதியும் அவர் பிள்ளை இசுடாலினும் குடும்ப அரசியல் என்ற தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று, சொன்னால் அதை அவ்வளவு எளிதாக மறுத்து விடமுடியாது.<br />
<br />
இந்த 39 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட 6 முதலமைச்சர்களில் நால்வருக்கு பிள்ளைகுட்டிக் கிடையாது. பன்னீர் செல்வத்துக்கு பிள்ளைகுட்டிகள் உண்டா என்பது எனக்குத் தெரியாது.<br />
<br />
தோன்றும் வினாக்களில், பிள்ளை குட்டி இல்லாத எம்சியார், சானகி அம்மாள், செயலலிதா ஆட்சி செய்த 23/24 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சீரழிவுகளை விட, பிள்ளை குட்டி இருக்கின்ற கருணாநிதி இசுடாலினால் எந்த அளவிற்கு சீரழிவுகள் அதிகமாகின?/அதிகமாகிவிடும்?, என்ற வினா ஒன்று!<br />
<br />
அல்லது, கருணாநிதி இசுடாலின் குடும்பம் வராமல், விவேகத்திலும், வீராவேசத்திலும், போர்த்தந்திரத்திலும்), கண்ணியம், மற்றும் நேர்மைக்குப் பேர்போன வைகோ வந்தால் இந்தத் தமிழ் நாடு என்ன நிலையை எய்தி விடும்?<br />
<br />
கருணாநிதியின் பிள்ளை இசுடாலின் வரக்கூடும் என்பதால் குடும்ப அரசியல் என்று சொல்லப்படுகையில், பிள்ளை குட்டி இல்லாவிடிலும், "எம்சியார் எம்சியாருக்குப் பின்னால் சானகி அம்மாள் - அவருக்குப் பின்னால் செயலலிதா" என்று எண்ணிப் பார்க்கையில், எத்தனை பேருக்கு இது ஒரு குடும்பம் என்று தோன்றாமலிருக்கும்? சானகி அம்மாள், எம்சியாரின் மனைவி! செயலலிதா, எம்சியார் மறைந்ததும் உடன் கட்டை ஏறப் போகிறேன் என்று அந்தப் பிண வாகனத்தில் ஏறினார் என்பது இந்தியா முழுக்க அறிந்த உண்மை.<br />
<br />
39 ஆண்டுகளில் 24 ஆண்டுகளை இம்மூவரும் ஆண்டிருப்பது குடும்ப அரசியல் இல்லை என்று எத்தனை பேர் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் இசுடாலின் மற்றும் கருணாநிதி மேல் சாட்டப்படும் கோயபல்சு குற்றச்சாட்டின் நோக்கம் என்னவென்று புரியும்!<br />
<br />
10 ஆண்டுகள் ஆட்சிசெய்த செயலலிதாஉடன் எந்தக் குடும்பம் இருக்கிறது? சசிகலாவும் சசிகலாவின் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து போயசு தோட்டத்திலேயும் அய்தராபாத் தோட்டத்திலேயும் வாழ்ந்து, அவர்களின் வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லையா? அது குடும்ப அரசியலா இல்லையா? சசிகலா, நடராசன், இளவரசி, தினகரன், சுதாகரன் இன்னும் எத்தனையோ பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் செயலலிதா அரசியலில் பங்கேற்கவில்லை என்று எத்தனை பேரால் சொல்லமுடியும்?<br />
<br />
கருணாநிதியின் பிள்ளைகள் இசுடாலின் அழகிரி இருவரும் மோதிக் கொண்டு அசிங்கப் படுத்தியது உண்மைதான். கருணாநிதியாலேயே தீர்க்க முடியாத அப்பிரச்சினையை செயலலிதாதான் தீர்த்து வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். குடும்ப அரசியலால் தமிழ்நாட்டில் பிரச்சினை என்றால் எனக்குத் தெரிந்த வரை இசுடாலின் அழகிரி பிரச்சினைதான். அதைத்தான் அம்மையார் தீர்த்து வைத்து விட்டாரே, அப்புறம் என்ன பெரிய பாதிப்பு வந்து விடப் போகிறது தமிழகத்திற்கு இனிமேல்?<br />
<br />
வைகோ போன்ற அறிவாளிகளுக்கும், அதை விடச் சிறந்த அறிவாளியான செயலலிதா அம்மையாருக்கும், இவர்களை வளர்த்து விடுவதே தம் பிறவிப் பயன் என்று 30/40 ஆண்டுகளாக சேவை செய்து வரும் பத்திரிக்கைகளும், குடும்ப அரசியல் என்றால் என்ன என்பதற்கான அகராதி போடும் முன்னர் இவையெல்லாம் சிந்திப்பார்களா என்றால், மாட்டார்கள்!<br />
<br />
பிள்ளை குட்டி இருக்கிறது, அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.கவையும் கருணாநிதியையும் சாடுவதானால், அது வெறும் பேதைத்தனம் மற்றும் கல்லாமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதற்கு மாறாக, இசுடாலினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தீமைகள் என்ன என்று எவரேனும் சிந்திக்க முற்பட்டு, அத்தீமைகளின் அளவை மற்றோர் ஆட்சியோடு/அரசியலோடு ஒப்பிட்டு விளக்கினார்கள் என்றால் அது அறிவார்ந்த செயல். இல்லையென்றால் ஊத்தை வாய்களின் உளறல் என்ற வகையிலேயே அது தெரிகிறது.<br />
<br />
அடுத்ததாக, மிடையங்களில் ஆதிக்கம்!; தேர்தல் காலத்தில் வானொலியில், பின்னர் தொலைக்காட்சியில் (தூரதரிசனத்தில்) அரசியல் கட்சிகளுக்கு ஒரு அரைமணி நேரம் அல்லது கால் மணிநேரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப் படும். 1984 தேர்தலின் போது, தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் கருணாநிதி பேசமாட்டேன் என்று புறக்கணித்தார். காரணம், அப்போதிருந்த பேராயம் + அ.தி.மு.க செல்வாக்கினால், தொலைக்காட்சி, கருணாநிதியின் பேச்சை, தணிக்கை செய்துதான் போடுவோம் என்று சொல்லியதால்.<br />
<br />
சனநாயக நாட்டில், பெரிய கட்சியொன்றின் தலைவரின் பேச்சுக்குக் கூட தணிக்கை விதிக்கும் அளவிற்கு சார்புத்தன்மைகொண்டு தூரதரிசனம் இயங்கியது சனநாயகத்தைக் காட்டுவதாக இல்லாமல் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதாகவே தெரிந்தது. சன் தொலைக்காட்சி, தூரதரிசனத்தை அடுத்த தொலைக்காட்சி ஓடையாகத் தோன்ற, முழுமையான தனியார் தமிழ் ஓடையாக வெளிவர, இன்று ஒரு அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கத் தூண்டுகோலாக இருந்தது, அன்றைய தணிக்கையும், தூரதரிசனத்தில் மிகுந்து கிடந்த, அன்றைய நடுவணரசை ஆளும் கட்சியாக இருந்த பேராயம் மற்றும் இங்கே செல்வாக்கு பெற்றிருந்த எம்சியார் கட்சியும் இவர்கள் தி.மு.கவிற்கு எதிராக செய்த பிரச்சாரங்களும்தான் பெருமளவு காரணம் என்பது மிகையல்ல. அரசு மிடையங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பல சான்றுகள் உண்டு!<br />
<br />
1976ல் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட, தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில், வானொலியைத் திறந்தாலே, எம்சியாரும், இந்திராகாந்தியும், வானொலியும், மேலும் இவர்களின் கைத்தடிகளும் கோவணத்தில் ஊழல், வெற்றிலை சீவலில் ஊழல், சுண்ணாம்பில் ஊழல், கொட்டைப் பாக்கில் ஊழல், கொத்தரங்காயில் ஊழல் என்று செய்திகளாக இல்லை, கொக்கரிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் கூவியது, அந்தக் கால கட்டத்தில் வயதுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இன்னும் நினைவில் இருக்கும்.<br />
<br />
ஆனால், அதில் பல பேர் கூட, சன் தொலைக்காட்சியில் செயலலிதா கைது செய்யப்பட்டு, அவரின் செருப்பைக் காட்டினார்கள், சேலை துணிமணி அலமாரியைக் காட்டினார்கள், நகைக் கடையைக் காட்டினார்கள்!, இதெல்லாம் காட்டலாமா? இது மாபெரும் தவறு என்றெல்லாம் அங்கலாய்ப்பதும், இதுவும் குடும்ப அரசியல் என்று சொல்வதும் இவர்களின் சிந்தனைக் குறைவைக் காட்டுவதாக இருக்கிறது.<br />
<br />
பட்டவனுக்குத்தான் அதன் வலிதெரியும். ஆகவே, வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பதிலடியாகத் தோன்றியவைதான் சன் குழுமத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதை மறந்து விடக் கூடாது.<br />
<br />
அன்றைக்கு வானொலி, தூரதரிசனம் கொடுத்த தி.மு.க எதிர்ப்பு போல் இன்று எந்த மிடையமும் செய்யுமானால் அவர்களுக்கு அதை விட வலுவான, சொல்லப்போனால் அசுர பலத்துடன் சன் தொலைக்காட்சி கொடுக்கக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது என்பது அங்கைநெல்லி.<br />
<br />
ஒருவேளை சன் தொலைக்காட்சி தவறுகள் செய்யுமானால், அது வலுவாகக் கண்டிக்கப் படக்கூடியதே. ஆனால், அந்தக் கண்டிப்பை செய்யும் திமுகவின் எதிரணிக்கு முழு யோக்கியதை இருப்பதாக எண்ணி ஏமாந்து விடக் கூடாது.<br />
<br />
அடுத்ததாக ஏடுகள்!; இன்று சன் தொலைக்காட்சியும், அது சார்ந்த ஏடுகளும் தமிழகத்தின் மிடையக் குழுமங்களைப் பற்றி போர்முனையில் நிற்பது போன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகின்றன.<br />
<br />
தமிழகத்தில் இருக்கும் ஏடுகள் எத்தகையன?<br />
<br />
ஒரு ஆங்கில நாளேடு! தமிழ் நாட்டில் ஆங்கிலச் சேவையும் சிங்களச் சேவையும் செய்து வருகிறது. அந்த ஏட்டுக்காரர்களைப் பிடித்து உள்ளே போட அதிமுக அரசு உத்தரவிட்டது சட்டமன்றத்தில். ஆனால், எங்களையா பிடிக்கப் பார்க்கிறாய்? என்று ஓடி ஒளிந்து கொண்டு, எங்களைப் பிடித்தால் இந்தியாவே அலறும் என்று சவால் விட்டு சட்டத்தின் பிடியில் மாட்டாமலேயே தப்பித்து சாதித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். இது அவர்களின் ஆங்கிலச் சேவைக்குக் கிடைத்த பலன். இவர்களால் இந்தியாவையே குலுக்க முடியும்!<br />
<br />
ஆயினும் தமிழ்நாட்டில் ஏடு நடத்தும் இவர்களுக்கு, சந்திரிகா அம்மையார், சிங்களத்தீவினில், அவர் பதவி காலாவதியாகிப் போகும் முன்னர், அவசர அவசரமாக இந்த ஏட்டுக்காரர்களைக் கொழும்பு அழைத்து விருது கொடுத்தது எதற்காக? சற்று யோசித்துப் பார்க்க வெண்டும்!!<br />
<br />
தினமும் மலரும் இதழ்! தென் தமிழ்நாட்டில் பெரிய மூளைச் சலவையையே செய்து முடித்திருக்கிறது. கருணாநிதியையும் அவர் குடும்பத்தை மட்டுமல்ல, திராவிடம், தமிழ் என்ற சொற்கள் உணர்வற்றுப் போக என்ன வெல்லாம் எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதுவது இந்த இதழ்!<br />
<br />
தந்தி, மணி எல்லாம் ஏறத்தாழ ஒரே வகைதான். குமுத விழியாளும், விகடகவியாரும் தமிழகத்திற்கு இழைத்திருப்பவை அளவிடற்கரியன என்று யாரும் சொன்னால் நான் மறுக்க மாட்டேன்! இன்னொரு வார இதழ்க்காரர், என்று கொழும்பு போய் விருது வாங்கி வரப் போகிறாரோ தெரியவில்லை.<br />
<br />
செயலலிதா ஆட்சியிலே பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறை எத்தனை? எத்தனை முறை இவர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். பத்திரிக்கை முதலாளிகளும் சரி, பத்திரிக்கைச் செய்தியாளர்களும் சரி. கைதுகள், அடி உதைகள், சிறையீடுகள், உச்சமாக பொடாவில் கூட கோபால் போடப்பட்டார். அத்தனையும் மறந்து பெரும்பான்மையான ஏடுகள் அ.தி.மு.க சார்புத் தன்மையை எடுக்கின்றன என்றால் அதற்கென்ன காரணம் இருக்க முடியும்?<br />
<br />
சன் தொலைக்காட்சி, சூரியன் வானொலி, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் முரசொலி என்ற இவற்றை தமிழகத்தில் இல்லாமல் செய்து விட்டால், மீதி இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள், ஏடுகள் போன்றவற்றில் எத்தனை நடுநிலையானவை? அல்லது எத்தனை பேர் திமுகவிற்கு ஆதரவாக இருப்பார்கள்?<br />
<br />
சன் குழுமத்தின் மேல் எனக்கும் பலருக்கும் தீரா எரிச்சல் உண்டு. ஏனெனில் நல்ல தமிழ், தூய தமிழ்ப் புழக்கம் என்பது அதில் இல்லை. இன்றைய தமிழ்முரசு இதழ் கூட கொட்டை எழுத்தில் "யாருக்கு சான்சு" என்று வாய் கிழிய ஆங்கிலத்தைத் தமிழில் சொல்கிறது. சன் குழுமத்திற்கு மூத்த ஏடுகள் இட்ட வழியேதான் சன் குழுமம் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.<br />
<br />
ஆனால், அதனால் மட்டுமே குடும்ப அரசியலைக் கண்டிக்க ஏனைய மிடைய அரசியலுக்கும் செயலலிதா வைகோ போன்றவர்களுக்கும் எந்த ஒரு அருகதையும் இருப்பதாக நினைக்க முடியவில்லை.<br />
<br />
ஆக, கருணாநிதி குடும்ப அரசியலை விளம்பரப் படுத்துவதால் உண்மையில் என்ன ஆதாயம் என்று பார்த்தால், எம்சியார் குடும்பம் மற்றும் சசிகலா நடராசன் குடும்ப அரசியல் அந்த விளம்பரத்தில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பதுதான் உண்மை!<br />
<br />
1977 முதல் இன்றுவரை எம்சியார்-குடும்பமும், சசிகலா நடராசன் குடும்பமும்தான் அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. எம்சியார் குடும்பமும், சசிகலா குடும்பமும் அரசியல் நடத்தவில்லை என்று எத்தனை பேரால் சொல்ல ஏலும்?<br />
<br />
நெடுஞ்செழியனிடம் இருந்து தந்திரமாகக் கட்சியைக் கைப்பற்றினார் கருனாநிதி என்று ஒரு வாதம் உண்டு. நெடுஞ்செழியனின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு அவரால் திமுகவை நடத்தியிருக்க முடியுமா என்ற அய்யமும் உண்டு.<br />
<br />
அந்த நெடுஞ்செழியன், தன்னை உதிர்ந்த உரோமம் என்று சொன்ன செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் அன்று.<br />
<br />
பொய்க்குற்றச்சாட்டின்பேரில் பொடா என்ற கடுஞ்சிறை தள்ளிய செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் வைகோ இன்று.<br />
<br />
தன்னை கொ.ப.செ ஆக ஆக்கி, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய போதும் அடங்கா அகத்தால் இராசேந்தரும் குடும்ப அரசியல் என்று பேசி செயலலிதாவோடு போனார். நடுத்தெருவில் நிற்கிறார்.<br />
<br />
நடுத்தெரு கூச்சல் பேர்வழிகளான வைகோ, இராசேந்தர் போன்றவர்களை நம்பி திமுகவை விடாத கருணாநிதி அறிவாளியாகத்தான் தெரிகிறார்!<br />
<br />
நன்றி - கீற்று                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்!<br />
நயனன்<br />
<br />
<br />
<br />
<br />
குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம். தமிழக அரசியல் களத்தில், இலவசங்கள், துரோகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள், போட்டிகள், அதிருப்திகள், கூட்டுகள், கீழறுப்புகள், நடிகர்கள், நடிகைகள், தொகுதிகள், சாதிகள், கணக்குகள் என்ற சொற்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் தருணத்தில், குடும்ப அரசியல் என்ற ஒன்றை சற்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது.<br />
<br />
வைகோ அணி மாறியது பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், கீழ்த்தரமான அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்று சொல்லி விட்டு விட்டு விடலாம். இதை வைகோவின் அநாகரிகம் என்று கருதும் போது, இதுவா அநாகரீகம், இதை விட அநாகரீகத்தை இதோ காணீர் என்று செவ்விகள் பல கொடுத்தார். அதில், கருணாநிதி பொடாவில் இருந்து விடுதலை ஆக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று சொன்னதும், நான் உள்ளே இருந்தால் எங்கே எனது புகழ் வளர்ந்து விடுமோ என்று அஞ்சி சிறையில் வந்து பார்த்தார் என்று சொன்னதும் வைகோவின் அநாகரீகத்தின் உச்சம். எது எப்படியிருந்தாலும், தற்போது அவரும் அவரின் தலைவியும் குடும்ப அரசியல் என்ற வாதத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.<br />
<br />
இந்தக் குடும்ப அரசியல் என்ற சங்கதி எதனாலெல்லாம் பெரிதாகப் பேசப்படுகிறது?<br />
<br />
1) இசுடாலின், மிசாவுக்குப் பிறகு ஏறத்தாழ 30 வருடங்களாக தி.மு.கவில் முக்கியம் பெற்று வருவது.<br />
<br />
2) மாறன் குடும்பம் தொலைக்காட்சி, வானொலி, ஏடுகள் ஆகிய மிடையங்களில் வலுவடைந்து வருவது.<br />
<br />
இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை. அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது.<br />
<br />
அவரும் இரு முறை மேயராகப் பணி புரிந்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஓரளவு திறமையான நிர்வாகி, செயல்திறன் என்றும் சொல்லப்படுகிறார்.<br />
<br />
முக்கியமாக இந்தியா குடியரசான 1950ல் இருந்து இன்றைக்கு சுமார் 56 ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த, தலைவர்களின் குடும்பங்களை நினைத்துப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.<br />
<br />
எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராசருக்குக் குடும்பம் கிடையாது. 2 ஆண்டுகள் ஆண்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் கிடையாது; தத்துப் பிள்ளைகள்தான். 13 ஆண்டுகள் ஆண்ட எம்சியாருக்கு குடும்பம் இருந்தாலும் பிள்ளை குட்டிகள் கிடையாது. சில மாதங்கள் ஆண்ட சானகி அம்மாள் எம்சியாரின் மனைவி. இது வரை 10 ஆண்டுகள் ஆண்டுவிட்ட செயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது.<br />
<br />
ஆக, 56 ஆண்டுகளில் 33 ஆண்டுகளை பிள்ளை குட்டியில்லாதவர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள் (60%). பேராயக் கட்சி (காங்கிரசு) ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர்(1967) இதோடு 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 39 ஆண்டுகளில் சுமார் 26 ஆண்டுகள் (அதாவது 79%) தமிழகத்தை பிள்ளை குட்டி இல்லாதவர்களே ஆண்டிருக்கிறார்கள். அதனாலேயே, பிள்ளைகுட்டி இருக்கிற கருணாநிதியும் அவர் பிள்ளை இசுடாலினும் குடும்ப அரசியல் என்ற தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று, சொன்னால் அதை அவ்வளவு எளிதாக மறுத்து விடமுடியாது.<br />
<br />
இந்த 39 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட 6 முதலமைச்சர்களில் நால்வருக்கு பிள்ளைகுட்டிக் கிடையாது. பன்னீர் செல்வத்துக்கு பிள்ளைகுட்டிகள் உண்டா என்பது எனக்குத் தெரியாது.<br />
<br />
தோன்றும் வினாக்களில், பிள்ளை குட்டி இல்லாத எம்சியார், சானகி அம்மாள், செயலலிதா ஆட்சி செய்த 23/24 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சீரழிவுகளை விட, பிள்ளை குட்டி இருக்கின்ற கருணாநிதி இசுடாலினால் எந்த அளவிற்கு சீரழிவுகள் அதிகமாகின?/அதிகமாகிவிடும்?, என்ற வினா ஒன்று!<br />
<br />
அல்லது, கருணாநிதி இசுடாலின் குடும்பம் வராமல், விவேகத்திலும், வீராவேசத்திலும், போர்த்தந்திரத்திலும்), கண்ணியம், மற்றும் நேர்மைக்குப் பேர்போன வைகோ வந்தால் இந்தத் தமிழ் நாடு என்ன நிலையை எய்தி விடும்?<br />
<br />
கருணாநிதியின் பிள்ளை இசுடாலின் வரக்கூடும் என்பதால் குடும்ப அரசியல் என்று சொல்லப்படுகையில், பிள்ளை குட்டி இல்லாவிடிலும், "எம்சியார் எம்சியாருக்குப் பின்னால் சானகி அம்மாள் - அவருக்குப் பின்னால் செயலலிதா" என்று எண்ணிப் பார்க்கையில், எத்தனை பேருக்கு இது ஒரு குடும்பம் என்று தோன்றாமலிருக்கும்? சானகி அம்மாள், எம்சியாரின் மனைவி! செயலலிதா, எம்சியார் மறைந்ததும் உடன் கட்டை ஏறப் போகிறேன் என்று அந்தப் பிண வாகனத்தில் ஏறினார் என்பது இந்தியா முழுக்க அறிந்த உண்மை.<br />
<br />
39 ஆண்டுகளில் 24 ஆண்டுகளை இம்மூவரும் ஆண்டிருப்பது குடும்ப அரசியல் இல்லை என்று எத்தனை பேர் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் இசுடாலின் மற்றும் கருணாநிதி மேல் சாட்டப்படும் கோயபல்சு குற்றச்சாட்டின் நோக்கம் என்னவென்று புரியும்!<br />
<br />
10 ஆண்டுகள் ஆட்சிசெய்த செயலலிதாஉடன் எந்தக் குடும்பம் இருக்கிறது? சசிகலாவும் சசிகலாவின் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து போயசு தோட்டத்திலேயும் அய்தராபாத் தோட்டத்திலேயும் வாழ்ந்து, அவர்களின் வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லையா? அது குடும்ப அரசியலா இல்லையா? சசிகலா, நடராசன், இளவரசி, தினகரன், சுதாகரன் இன்னும் எத்தனையோ பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் செயலலிதா அரசியலில் பங்கேற்கவில்லை என்று எத்தனை பேரால் சொல்லமுடியும்?<br />
<br />
கருணாநிதியின் பிள்ளைகள் இசுடாலின் அழகிரி இருவரும் மோதிக் கொண்டு அசிங்கப் படுத்தியது உண்மைதான். கருணாநிதியாலேயே தீர்க்க முடியாத அப்பிரச்சினையை செயலலிதாதான் தீர்த்து வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். குடும்ப அரசியலால் தமிழ்நாட்டில் பிரச்சினை என்றால் எனக்குத் தெரிந்த வரை இசுடாலின் அழகிரி பிரச்சினைதான். அதைத்தான் அம்மையார் தீர்த்து வைத்து விட்டாரே, அப்புறம் என்ன பெரிய பாதிப்பு வந்து விடப் போகிறது தமிழகத்திற்கு இனிமேல்?<br />
<br />
வைகோ போன்ற அறிவாளிகளுக்கும், அதை விடச் சிறந்த அறிவாளியான செயலலிதா அம்மையாருக்கும், இவர்களை வளர்த்து விடுவதே தம் பிறவிப் பயன் என்று 30/40 ஆண்டுகளாக சேவை செய்து வரும் பத்திரிக்கைகளும், குடும்ப அரசியல் என்றால் என்ன என்பதற்கான அகராதி போடும் முன்னர் இவையெல்லாம் சிந்திப்பார்களா என்றால், மாட்டார்கள்!<br />
<br />
பிள்ளை குட்டி இருக்கிறது, அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.கவையும் கருணாநிதியையும் சாடுவதானால், அது வெறும் பேதைத்தனம் மற்றும் கல்லாமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதற்கு மாறாக, இசுடாலினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தீமைகள் என்ன என்று எவரேனும் சிந்திக்க முற்பட்டு, அத்தீமைகளின் அளவை மற்றோர் ஆட்சியோடு/அரசியலோடு ஒப்பிட்டு விளக்கினார்கள் என்றால் அது அறிவார்ந்த செயல். இல்லையென்றால் ஊத்தை வாய்களின் உளறல் என்ற வகையிலேயே அது தெரிகிறது.<br />
<br />
அடுத்ததாக, மிடையங்களில் ஆதிக்கம்!; தேர்தல் காலத்தில் வானொலியில், பின்னர் தொலைக்காட்சியில் (தூரதரிசனத்தில்) அரசியல் கட்சிகளுக்கு ஒரு அரைமணி நேரம் அல்லது கால் மணிநேரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப் படும். 1984 தேர்தலின் போது, தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் கருணாநிதி பேசமாட்டேன் என்று புறக்கணித்தார். காரணம், அப்போதிருந்த பேராயம் + அ.தி.மு.க செல்வாக்கினால், தொலைக்காட்சி, கருணாநிதியின் பேச்சை, தணிக்கை செய்துதான் போடுவோம் என்று சொல்லியதால்.<br />
<br />
சனநாயக நாட்டில், பெரிய கட்சியொன்றின் தலைவரின் பேச்சுக்குக் கூட தணிக்கை விதிக்கும் அளவிற்கு சார்புத்தன்மைகொண்டு தூரதரிசனம் இயங்கியது சனநாயகத்தைக் காட்டுவதாக இல்லாமல் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதாகவே தெரிந்தது. சன் தொலைக்காட்சி, தூரதரிசனத்தை அடுத்த தொலைக்காட்சி ஓடையாகத் தோன்ற, முழுமையான தனியார் தமிழ் ஓடையாக வெளிவர, இன்று ஒரு அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கத் தூண்டுகோலாக இருந்தது, அன்றைய தணிக்கையும், தூரதரிசனத்தில் மிகுந்து கிடந்த, அன்றைய நடுவணரசை ஆளும் கட்சியாக இருந்த பேராயம் மற்றும் இங்கே செல்வாக்கு பெற்றிருந்த எம்சியார் கட்சியும் இவர்கள் தி.மு.கவிற்கு எதிராக செய்த பிரச்சாரங்களும்தான் பெருமளவு காரணம் என்பது மிகையல்ல. அரசு மிடையங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பல சான்றுகள் உண்டு!<br />
<br />
1976ல் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட, தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில், வானொலியைத் திறந்தாலே, எம்சியாரும், இந்திராகாந்தியும், வானொலியும், மேலும் இவர்களின் கைத்தடிகளும் கோவணத்தில் ஊழல், வெற்றிலை சீவலில் ஊழல், சுண்ணாம்பில் ஊழல், கொட்டைப் பாக்கில் ஊழல், கொத்தரங்காயில் ஊழல் என்று செய்திகளாக இல்லை, கொக்கரிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் கூவியது, அந்தக் கால கட்டத்தில் வயதுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இன்னும் நினைவில் இருக்கும்.<br />
<br />
ஆனால், அதில் பல பேர் கூட, சன் தொலைக்காட்சியில் செயலலிதா கைது செய்யப்பட்டு, அவரின் செருப்பைக் காட்டினார்கள், சேலை துணிமணி அலமாரியைக் காட்டினார்கள், நகைக் கடையைக் காட்டினார்கள்!, இதெல்லாம் காட்டலாமா? இது மாபெரும் தவறு என்றெல்லாம் அங்கலாய்ப்பதும், இதுவும் குடும்ப அரசியல் என்று சொல்வதும் இவர்களின் சிந்தனைக் குறைவைக் காட்டுவதாக இருக்கிறது.<br />
<br />
பட்டவனுக்குத்தான் அதன் வலிதெரியும். ஆகவே, வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பதிலடியாகத் தோன்றியவைதான் சன் குழுமத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதை மறந்து விடக் கூடாது.<br />
<br />
அன்றைக்கு வானொலி, தூரதரிசனம் கொடுத்த தி.மு.க எதிர்ப்பு போல் இன்று எந்த மிடையமும் செய்யுமானால் அவர்களுக்கு அதை விட வலுவான, சொல்லப்போனால் அசுர பலத்துடன் சன் தொலைக்காட்சி கொடுக்கக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது என்பது அங்கைநெல்லி.<br />
<br />
ஒருவேளை சன் தொலைக்காட்சி தவறுகள் செய்யுமானால், அது வலுவாகக் கண்டிக்கப் படக்கூடியதே. ஆனால், அந்தக் கண்டிப்பை செய்யும் திமுகவின் எதிரணிக்கு முழு யோக்கியதை இருப்பதாக எண்ணி ஏமாந்து விடக் கூடாது.<br />
<br />
அடுத்ததாக ஏடுகள்!; இன்று சன் தொலைக்காட்சியும், அது சார்ந்த ஏடுகளும் தமிழகத்தின் மிடையக் குழுமங்களைப் பற்றி போர்முனையில் நிற்பது போன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகின்றன.<br />
<br />
தமிழகத்தில் இருக்கும் ஏடுகள் எத்தகையன?<br />
<br />
ஒரு ஆங்கில நாளேடு! தமிழ் நாட்டில் ஆங்கிலச் சேவையும் சிங்களச் சேவையும் செய்து வருகிறது. அந்த ஏட்டுக்காரர்களைப் பிடித்து உள்ளே போட அதிமுக அரசு உத்தரவிட்டது சட்டமன்றத்தில். ஆனால், எங்களையா பிடிக்கப் பார்க்கிறாய்? என்று ஓடி ஒளிந்து கொண்டு, எங்களைப் பிடித்தால் இந்தியாவே அலறும் என்று சவால் விட்டு சட்டத்தின் பிடியில் மாட்டாமலேயே தப்பித்து சாதித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். இது அவர்களின் ஆங்கிலச் சேவைக்குக் கிடைத்த பலன். இவர்களால் இந்தியாவையே குலுக்க முடியும்!<br />
<br />
ஆயினும் தமிழ்நாட்டில் ஏடு நடத்தும் இவர்களுக்கு, சந்திரிகா அம்மையார், சிங்களத்தீவினில், அவர் பதவி காலாவதியாகிப் போகும் முன்னர், அவசர அவசரமாக இந்த ஏட்டுக்காரர்களைக் கொழும்பு அழைத்து விருது கொடுத்தது எதற்காக? சற்று யோசித்துப் பார்க்க வெண்டும்!!<br />
<br />
தினமும் மலரும் இதழ்! தென் தமிழ்நாட்டில் பெரிய மூளைச் சலவையையே செய்து முடித்திருக்கிறது. கருணாநிதியையும் அவர் குடும்பத்தை மட்டுமல்ல, திராவிடம், தமிழ் என்ற சொற்கள் உணர்வற்றுப் போக என்ன வெல்லாம் எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதுவது இந்த இதழ்!<br />
<br />
தந்தி, மணி எல்லாம் ஏறத்தாழ ஒரே வகைதான். குமுத விழியாளும், விகடகவியாரும் தமிழகத்திற்கு இழைத்திருப்பவை அளவிடற்கரியன என்று யாரும் சொன்னால் நான் மறுக்க மாட்டேன்! இன்னொரு வார இதழ்க்காரர், என்று கொழும்பு போய் விருது வாங்கி வரப் போகிறாரோ தெரியவில்லை.<br />
<br />
செயலலிதா ஆட்சியிலே பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறை எத்தனை? எத்தனை முறை இவர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். பத்திரிக்கை முதலாளிகளும் சரி, பத்திரிக்கைச் செய்தியாளர்களும் சரி. கைதுகள், அடி உதைகள், சிறையீடுகள், உச்சமாக பொடாவில் கூட கோபால் போடப்பட்டார். அத்தனையும் மறந்து பெரும்பான்மையான ஏடுகள் அ.தி.மு.க சார்புத் தன்மையை எடுக்கின்றன என்றால் அதற்கென்ன காரணம் இருக்க முடியும்?<br />
<br />
சன் தொலைக்காட்சி, சூரியன் வானொலி, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் முரசொலி என்ற இவற்றை தமிழகத்தில் இல்லாமல் செய்து விட்டால், மீதி இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள், ஏடுகள் போன்றவற்றில் எத்தனை நடுநிலையானவை? அல்லது எத்தனை பேர் திமுகவிற்கு ஆதரவாக இருப்பார்கள்?<br />
<br />
சன் குழுமத்தின் மேல் எனக்கும் பலருக்கும் தீரா எரிச்சல் உண்டு. ஏனெனில் நல்ல தமிழ், தூய தமிழ்ப் புழக்கம் என்பது அதில் இல்லை. இன்றைய தமிழ்முரசு இதழ் கூட கொட்டை எழுத்தில் "யாருக்கு சான்சு" என்று வாய் கிழிய ஆங்கிலத்தைத் தமிழில் சொல்கிறது. சன் குழுமத்திற்கு மூத்த ஏடுகள் இட்ட வழியேதான் சன் குழுமம் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.<br />
<br />
ஆனால், அதனால் மட்டுமே குடும்ப அரசியலைக் கண்டிக்க ஏனைய மிடைய அரசியலுக்கும் செயலலிதா வைகோ போன்றவர்களுக்கும் எந்த ஒரு அருகதையும் இருப்பதாக நினைக்க முடியவில்லை.<br />
<br />
ஆக, கருணாநிதி குடும்ப அரசியலை விளம்பரப் படுத்துவதால் உண்மையில் என்ன ஆதாயம் என்று பார்த்தால், எம்சியார் குடும்பம் மற்றும் சசிகலா நடராசன் குடும்ப அரசியல் அந்த விளம்பரத்தில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பதுதான் உண்மை!<br />
<br />
1977 முதல் இன்றுவரை எம்சியார்-குடும்பமும், சசிகலா நடராசன் குடும்பமும்தான் அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. எம்சியார் குடும்பமும், சசிகலா குடும்பமும் அரசியல் நடத்தவில்லை என்று எத்தனை பேரால் சொல்ல ஏலும்?<br />
<br />
நெடுஞ்செழியனிடம் இருந்து தந்திரமாகக் கட்சியைக் கைப்பற்றினார் கருனாநிதி என்று ஒரு வாதம் உண்டு. நெடுஞ்செழியனின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு அவரால் திமுகவை நடத்தியிருக்க முடியுமா என்ற அய்யமும் உண்டு.<br />
<br />
அந்த நெடுஞ்செழியன், தன்னை உதிர்ந்த உரோமம் என்று சொன்ன செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் அன்று.<br />
<br />
பொய்க்குற்றச்சாட்டின்பேரில் பொடா என்ற கடுஞ்சிறை தள்ளிய செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் வைகோ இன்று.<br />
<br />
தன்னை கொ.ப.செ ஆக ஆக்கி, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய போதும் அடங்கா அகத்தால் இராசேந்தரும் குடும்ப அரசியல் என்று பேசி செயலலிதாவோடு போனார். நடுத்தெருவில் நிற்கிறார்.<br />
<br />
நடுத்தெரு கூச்சல் பேர்வழிகளான வைகோ, இராசேந்தர் போன்றவர்களை நம்பி திமுகவை விடாத கருணாநிதி அறிவாளியாகத்தான் தெரிகிறார்!<br />
<br />
நன்றி - கீற்று                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கனடாவில் புலிகளிற்குத் தடையாம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=305</link>
			<pubDate>Sat, 08 Apr 2006 17:46:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1481">மின்னல்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=305</guid>
			<description><![CDATA[                    கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.<br />
<br />
<a href="http://www.canada.com/nationalpost/news/story.html?id=b8d18ffa-93d8-43b3-9aff-55c8786ddb61&amp;k=83615" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&amp;k=83615</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.<br />
<br />
<a href="http://www.canada.com/nationalpost/news/story.html?id=b8d18ffa-93d8-43b3-9aff-55c8786ddb61&amp;k=83615" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&amp;k=83615</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=334</link>
			<pubDate>Wed, 05 Apr 2006 09:34:40 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=334</guid>
			<description><![CDATA[                    இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு  என்னும்  அடிப்படை நிலை மாற்றம் எற்பட்டுள்ளதா? <br />
கீழே உள்ள கட்டுரையில் குறிபிட்டுள்ளது போல் கைய்யறு  நிலயால் உருவான கொள்கை மாற்றம்  நிகழ்கிறதா?எமக்குச் சாதகமான  நிலமை உருவாகிறதா?இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு அமயப் போகிறது? நாம் அதனை எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம்?<br />
<br />
பாகிஸ்த்தானை ,அமெரிக்காவா சீனாவா வழி  நடத்துகிறது?அல்லது பாகிஸ்த்தான் இந்த முரணை தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறதா?<br />
அல்லது சிறி லங்கா அரசு இந்தியாவிற்கும், சீனா,பாகிஸ்த்தானுக்கும் இடயே ஆன முரணைப் பாவிக்க முற்படுகிறதா? <br />
<br />
சிறிலங்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும்: மு.திருநாவுக்கரசு <br />
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 06:50 ஈழம்] [ம.சேரமான்] <br />
சீனா, பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும் என்று தமிழீழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு விளக்கம் அளித்துள்ளார்.<br />
<br />
<br />
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் மு.திருநாவுக்கரசு கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.04.06) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: <br />
<br />
தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினுடைய பாகிஸ்தானிய பயணத்தையொட்டி சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைப் போக்கை நாம் சற்று ஆராய வேண்டியது அவசியமாகும்.<br />
<br />
சிறிலங்கா இப்போது மிகவும் ஊசலாடுகின்ற ஒரு நிலையற்ற வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் அடிப்படையில் சிறிலங்காவுக்கு என்று தவிர்க்க முடியாத ஒரு வெளியுறவுக் கொள்கை நிர்ணயம் நிகழ முடியும். இந்த அடிப்படையில்தான் இப்போது இந்த விவகாரத்தை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.  <br />
<br />
சிறிலங்கா அரச தலைவர் தான் பதவியேற்றதும் தனது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார். அப்பொழுது அவர் இந்தியாவை தன்பக்கம் வளைத்தெடுக்கின்ற முயற்சியை பெரிதும் கைக்கொள்ள முற்பட்டார். ஆனாலும்கூட அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த முயற்சி அவருக்கு கைகூடத் தவறியது. இதன் பின்பு அவருக்கு இருக்கக்கூடிய வேறு தெரிவுகளின்பால் அவர் தன் நாட்டங்களை செலுத்தத் தொடங்கினார். <br />
<br />
இந்த வகையில் அவரது முதலாவது கொள்கை வகுப்பானது ஒரு தெளிவான, தீர்க்கதரிசனம் மிகுந்த பார்வையின் அடிப்படையில் நிகழத் தவறியது என்பதையே நாம் காண முடிகிறது. இப்போது அவருடைய இன்னொரு வாய்ப்பான ஒரு தெரிவுபற்றி அவர் சிந்திக்கின்றார் போல் தெரிகிறது.  <br />
 <br />
அதாவது அவர் பாகிஸ்தானுக்கு சென்றதும் பாகிஸ்தானால் உலகப் பெருவல்லரசான அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ்சுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விடவும் ஒரு மிகவும் குட்டித்தீவான சிறிலங்கா அரச தலைவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரிதாக இருப்பதை அரசியல் விமர்சகர்களும் இராஜதந்திரிகளும் இப்பொழுது சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு இன்று ஒரு தெளிவான, திட்டவட்டமான பின்னணி இருக்கவே செய்கின்றது.  <br />
<br />
இப்படி சிறிலங்காவை பாகிஸ்தான் வளைக்க விரும்புவது இப் பிராந்தியத்தில் இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்க அது உதவுமே தவிர சிறிலங்கா அரசிற்கு அது பெருவெற்றியைக் கொடுக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் இதில் ஒரு விடயத்தை அடிப்படையாக நோக்க வேண்டியிருக்கின்றது.  <br />
<br />
சிங்கள அரசானது இலங்கைக்குள் தமிழ் மக்களுடன் தன்னுடைய பிரச்சனையை தீர்க்கத் தயாரில்லை என்பதனைத்தான் அதனுடைய இன்றைய பாகிஸ்தானிய பயணத்தின் போதான நகர்வுகள் எமக்கு தெளிவாக காட்டுகின்றன. <br />
<br />
முதலாவதாக பாகிஸ்தானிய அரசுடன் சிறிலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோதாவில் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. அப்படியென்றால் நிச்சயமாக இலங்கை எல்லைக்குள் அல்லது இலங்கையின் எல்லைக்கு வெளியே இனப்பிரச்சனைக்கான தீர்வை சிறிலங்கா அரசு நாடுகின்றது என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. <br />
<br />
எனவே இலங்கைத்தீவிற்கு வெளியேதான் சிறிலங்கா அரசு தீர்வைத் தேடுகின்றது என்பதிலிருந்து அது இனப்பிரச்சனைக்கு உள்நாட்டில் அதாவது தமிழ் மக்களுடன் சேர்ந்து, தமிழ் மக்களுடன் பேசி அப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது. <br />
<br />
தமிழ் மக்களின் தனிப்பெரும் சக்தியாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக அது உலக சக்திகளுடன் அது இணைந்து இப்பிரச்சனையை ஒடுக்க வேண்டும் என்பதிலேயே சிறிலங்கா அரசு அக்கறை செலுத்துகின்றது என்பது இப்போது தெளிவாக இருக்கிறது.<br />
<br />
இவற்றை நாம் அரசியல் ரீதியாக கூர்ந்து அவதானிக்க வேண்டும். <br />
<br />
அதாவது அரசியல் ரீதியான தீர்விற்குப்பதிலாக இராணுவ ரீதியான கண்ணோட்டத்தில் தான் பாகிஸ்தானுடனான அதனுடைய உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்கின்ற அதனுடைய கண்ணோட்டமானது இராணுவ ரீதியான உதவியைப் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதையே மையமாகக் கொண்டது. <br />
<br />
இது விடயத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக அடையாளம் காணவேண்டும். <br />
<br />
பாகிஸ்தானானது இலங்கை விவகாரத்தை மையமாகக்கொண்டு இந்தியாவுடன் மோதத் தயாரில்லை. இது ஒருபோதும் நிகழப் போவதில்லை. ஆனால் இதில் ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கின்றது.  <br />
 <br />
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்குவதனையோ அல்லது நிபுணத்துவ உதவிகளை வழங்குவதனையோ இந்தியா பொறுத்துக் கொள்ளும். சிலவேளைகளில் ஆயுத உதவிகளைக்கூட இந்தியா விரும்பவும்கூடும். ஆனால் அதற்கு மேல் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் நீளுமாயின் இந்தியாவினால் அதனை சகிக்கவோ பொறுக்கவோ நிச்சயம் முடியாது. இது பாகிஸ்தானுக்கும் நிச்சயம் தெரியும். <br />
<br />
எனவே இந்த வட்டத்தில் நின்று பார்க்கும் போது பாகிஸ்தானுடனான உறவு ஒரு மட்டத்திற்கு உட்பட்டது என்பதை பாகிஸ்தான் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. 2,500 ஆண்டுகால அரசியல் இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட சிறிலங்கா அரசானது இதனை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்று நாம் கூறமுடியாது. <br />
<br />
ஆனால் ராஜபக்சவிற்கு இருக்கக்கூடிய இன்றைய தெரிவுகளில் இதுதான் அவருக்கு கைக்கெட்டியதாகக் காணப்படுகின்றது. அப்படியெனில் ஒருவகையில் அது ஒரு கையறு நிலை என்றே நாம் கூறவேண்டும். ஏனெனில் இது ஒரு ஆபத்தான தெரிவு என்று தெரிந்தும் கூட அதனைத்தான் அவர் தெரிவு செய்ய வேண்டும் எனில் அது நிச்சயமாக ஒரு கையறு நிலைதான்.  <br />
<br />
இதில் உள்ள இரண்டாவது பரிமாணத்தைப்பார்ப்போம். <br />
<br />
பாகிஸ்தான் தனித்து இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராக இருக்க முடியாது. அப்படியெனில் இரண்டாவது தெரிவில் ஒரு விநோதமான பின்னணி இருக்க முடியும். எப்படியெனில் கொழும்பு, இஸ்லாமபாத், பீஜிங்க் என்கின்ற ஒரு அச்சின்கீழ் ஒரு நல்லுறவு உருவாகி இனப்பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு சிந்தனைப்போக்கு தோன்றுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது. <br />
<br />
இதில் நாம் ஒரு பின்னணியை நோக்க வேண்டும். <br />
<br />
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, சுதந்திரக் கட்சியாயினும் சரி, ஜே.வி.பி. ஆயினும் சரி எது பதவிக்கு வரினும் அதற்கு ஒரே மாதிரியாகவே அது அமையும். <br />
<br />
எனவே இலங்கை விவகாரத்தில் எந்த சிங்கள ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் பாகிஸ்தானின் தெரிவு ஒன்றுதான். அது அரசின் பக்கம் என்பதுதான். எனவே அது அரசாங்கத்தைப் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. எந்த அரசாங்கங்கள் மாறினாலும் பாகிஸ்தான், சிங்கள அரசின் பக்கம் என்பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஆனால் சீனாவைப் பொறுத்த வரையில் இதில் வித்தியாசங்கள் உண்டு.  <br />
<br />
சீனாவின் முதலாவது தெரிவு ஜே.வி.பியினர்தான். அதாவது அவர்கள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாளர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது ஆதரவாக இருந்தாலும் கூட அவர்களுடைய முதலாவது தெரிவு ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்காது. <br />
<br />
சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது அவர்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுடைய ஆதரவு இரண்டாவது தெரிவாகவே சுதந்திரக் கட்சிக்கு இருக்கும். சுதந்திரக் கட்சிக்கு அப்பால் ஜே.வி.பி. பதவியேற்பதனை அவர்கள் விரும்புவார்கள். எனவே அவர்களுடைய முதலாவது தெரிவு ஜே.வி.பி.யினர்தான். ஆனால் இங்கேதான் பிரச்சனை உள்ளது. அவர்கள் சிங்கள அரசிற்கு ஆதரவானவர்கள். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இந்த மூன்று கட்சிகளில் மூன்றாவதான ஜே.வி.பிக்குத்தான் ஆதரவாளர்கள். <br />
<br />
ஆனால் ஜே.வி.பி. பதவிக்கு வரமுடியாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது அல்லது ஆட்சி அதிகாரத்தில் சவாலிட முடியாத அளவிற்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்கின்ற பின்னணியில் இப்போது பீஜிங்கிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தெரிவு மகிந்த ராஜபக்சதான். ஆகையால் மகிந்த ராஜபக்சவை நூறு வீதம் பலப்படுத்துவதைத் தவிர பீஜிங்கிற்கு மாற்றுத்தீர்வு எதுவுமே இல்லை. <br />
<br />
எனவே இலங்கை விவகாரத்தில் பீஜிங்கும், இஸ்லாமபாத்தும் ராஜபக்சவிற்கு ஆதரிப்பதில் எவ்விதமான கிலேசமும் அற்ற ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு சூழல் காணப்படுகின்றது. <br />
<br />
இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவகையில் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமானது. எவ்வாறு எனில் ஜே.வி.பி.க்கு பீஜிங் ஆதரவளித்து விடுமோ அல்லது மகிந்த ராஜபக்சவை வெட்டி அது முன்னணிக்கு கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கவே செய்தது. இப்போது மகிந்த ராஜபக்சவிடம் நிச்சயமாக இருக்க மாட்டாது. <br />
<br />
ஆனபடியினால் இனி பீஜிங்கினுடைய ஆதரவு, இஸ்லாமபாத்தினுடைய ஆதரவு நிச்சயமாக கொழும்பில் இருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு நூறு வீதமானதாகவே இருக்கும். அப்படியாயின் பீஜிங்க், இஸ்லாமபாத், கொழும்பு என்கின்ற ஒரு முக்கூட்டு அச்சு என்பது இப்போது நூறு வீதம் ஸ்தாபிதமடைந்து விட்டது. <br />
<br />
இந்த நிலையில் இந்த முக்கூட்டு அச்சுக்கு எதிராக இந்தியாவின் அணுகுமுறை என்பது எதிர்வினையாக அமையப் போகின்றது. இதில் இந்தியாவும் தனக்கு என ஒரு அச்சை அமைக்கும். ஆனால் இதில் ஒரு விடயம் மிகவும் தெளிவானது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விருப்பம் இந்தியாவிற்கு எப்போதும் உண்டு. ஆனபடியினால் இலங்கை விவகாரத்தில் இந்தியாக கடந்தகாலம் முழுவதும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றி வந்திருக்கின்றது. அது எப்படியெனில் சிறிலங்கா அரசாங்கத்தை அணைத்து நடத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் எவர் பதவிக்கு வரினும் அதனை அணைத்து நடத்துவதன் மூலம் இலங்கைத் தீவை செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. இப்போதும் அதனையே விரும்புகின்றது. <br />
<br />
ஆனால் இந்தியாவிற்கு எதிரான அணியோடு சிறிலங்காவின் அச்சு அமையுமேயானால் அந்த செல்வாக்கு மண்டல கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவகையில் 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கைக்கு முரணான ஒரு நிலையெடுத்த போதுதான் இந்தியா தனது புஜபல பராக்கிரமத்தை காட்டி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு அச்சமூட்டி ஒரு ஒப்பந்தத்திற்கு பணியவைத்த போதிலும் இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினுடைய வழிக்கு இந்தியா துணைபோவதாகவே அது மாறிச் சென்றது. <br />
<br />
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்தியாவினுடைய கடந்தகால அணுகுமுறை என்பது எப்போதுமே இலங்கையை அணைத்துப் போவது என்கின்ற ஒரு கொள்கை கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவினுடைய கொள்கை, இலங்கையை அணைத்துச் செல்ல முடியுமா என்கின்ற கேள்வியை இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனங்களில் ஏற்படுத்த வல்லதாய் மாறியுள்ளது. <br />
<br />
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக இலங்கையின் கள அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் இந்த வாரத்திலிருந்து அடையாளம் காண வேண்டியிருக்கின்றது. எனவே இது இப்போது எமக்கு ஒரு புதிய தளமும் ஆகும். ஆனபடியினால் எமக்கு இப்போது சற்று வித்தியாசமான ஆனால் விறுவிறுப்பான அணுகுமுறைகள் மிகவும் அவசியப்படுகின்ற ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம் என்றே கூற வேண்டியிருக்கின்றது. <br />
<br />
இறுதி அர்த்தத்தில் அரசியல் ஒரு பொதுப் போக்கின் முடிவுக்குத்தான் உட்படுமேயாயினும் அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பான நுட்பம் சார் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது நாம் சிந்திக்க வேண்டியது அவ்வப்போதைய நுட்பம் சார் அரசியல் மாற்றங்களைப் பற்றியே தான். எனவே பொதுப்போக்கு தொடர்பான விடயம் எமக்கு பிரச்சனையானதாக இல்லை. அது எப்போதும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. <br />
<br />
ஆனால் இந்த நுட்பம் சார்ந்த அரசியல் என்ன? இது எப்படி அமையப் போகின்றது என்பதே எம்முடைய அடுத்தகட்டப் பிரச்சனையாகும். <br />
<br />
மொத்தமாக பார்க்கின்ற போது இப்போது இருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது ஒரு விடயத்திற்கு சவால் விடுவதாக இருக்கின்றது.  <br />
<br />
இலங்கையினுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கையைப் பொறுத்த வரையில் அது இந்திய, அமெரிக்க கோட்டுக்கு வெளியே தாண்டமுடியாத ஒரு நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளதாகும். இன்னொரு வகையில் கூறுவதனால் இலங்கைக்கு சர்வதேசம் என்பது இந்தியாவும், அமெரிக்காவும் தான். ஆனால் இலங்கை இப்போது அதற்கு வெளியே ஒரு பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த பரீட்சார்த்தத்தினைத்தான் நாம் நுட்ப அரசியல் என்று கூறப் போகின்றோம். <br />
<br />
ஏனெனில் ஒரு பொதுப்போக்கான அரசியலிலிருந்து நகர்ந்து அது ஒரு புதிய மிகவும் நுட்பமான ஒரு இராஜதந்திர அரசியல் கோட்டிற்கு அது நகர்ந்து செல்கின்றது. இந்த நகர்வை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது? இதில் அமெரிக்காவின் பொறுப்பு எப்படி இருக்கப் போகின்றது? இதில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? இனி கொழும்புப் பத்திரிகைளும், கொழும்பு சார் அரசியல் நிபுணர்களும் எவ்வாறான தீர்மானங்களை கருத்துக்களை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதிலிருந்து இதனுடைய கட்டுமானத்தை நாம் நோக்கலாம். <br />
<br />
ஆனால் ஒருவிடயத்தை கொழும்பு சார்ந்து நாம் தெளிவாகக்கூற முடியும். கொழும்புசார் அரசியல் நிபுணர்களுடைய இராஜதந்திரியினுடைய கண்ணோட்டம் எப்போதும் இந்தியாவிற்கு எதிரானதாகவும், தமிழீழ மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. எனவே இயல்பாக அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் சார்ந்து சிந்திப்பது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு நிகழ்ந்து விடும்.  <br />
<br />
ஆனபடியினால் அவர்களுடைய நிபுணத்துவம் என்பது அறிவுசார்ந்ததாக இல்லாமல் உணர்ச்சி சார்ந்ததாக மாறுகின்ற ஒரு துர்ப்பாக்கியம் அவர்களுக்கு உண்டு. இந்த நிலையில் அவர்களுடைய உணர்ச்சி சார்ந்த தீர்மானங்களுக்கு வெளியே நாம் ஒரு அறிவுசார்ந்த களத்தில் நுழையக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அறிவுசார்ந்த ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார் அவர்.<br />
<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25284" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25284</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு  என்னும்  அடிப்படை நிலை மாற்றம் எற்பட்டுள்ளதா? <br />
கீழே உள்ள கட்டுரையில் குறிபிட்டுள்ளது போல் கைய்யறு  நிலயால் உருவான கொள்கை மாற்றம்  நிகழ்கிறதா?எமக்குச் சாதகமான  நிலமை உருவாகிறதா?இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு அமயப் போகிறது? நாம் அதனை எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம்?<br />
<br />
பாகிஸ்த்தானை ,அமெரிக்காவா சீனாவா வழி  நடத்துகிறது?அல்லது பாகிஸ்த்தான் இந்த முரணை தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறதா?<br />
அல்லது சிறி லங்கா அரசு இந்தியாவிற்கும், சீனா,பாகிஸ்த்தானுக்கும் இடயே ஆன முரணைப் பாவிக்க முற்படுகிறதா? <br />
<br />
சிறிலங்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும்: மு.திருநாவுக்கரசு <br />
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 06:50 ஈழம்] [ம.சேரமான்] <br />
சீனா, பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும் என்று தமிழீழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு விளக்கம் அளித்துள்ளார்.<br />
<br />
<br />
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் மு.திருநாவுக்கரசு கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.04.06) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: <br />
<br />
தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினுடைய பாகிஸ்தானிய பயணத்தையொட்டி சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைப் போக்கை நாம் சற்று ஆராய வேண்டியது அவசியமாகும்.<br />
<br />
சிறிலங்கா இப்போது மிகவும் ஊசலாடுகின்ற ஒரு நிலையற்ற வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் அடிப்படையில் சிறிலங்காவுக்கு என்று தவிர்க்க முடியாத ஒரு வெளியுறவுக் கொள்கை நிர்ணயம் நிகழ முடியும். இந்த அடிப்படையில்தான் இப்போது இந்த விவகாரத்தை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.  <br />
<br />
சிறிலங்கா அரச தலைவர் தான் பதவியேற்றதும் தனது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார். அப்பொழுது அவர் இந்தியாவை தன்பக்கம் வளைத்தெடுக்கின்ற முயற்சியை பெரிதும் கைக்கொள்ள முற்பட்டார். ஆனாலும்கூட அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த முயற்சி அவருக்கு கைகூடத் தவறியது. இதன் பின்பு அவருக்கு இருக்கக்கூடிய வேறு தெரிவுகளின்பால் அவர் தன் நாட்டங்களை செலுத்தத் தொடங்கினார். <br />
<br />
இந்த வகையில் அவரது முதலாவது கொள்கை வகுப்பானது ஒரு தெளிவான, தீர்க்கதரிசனம் மிகுந்த பார்வையின் அடிப்படையில் நிகழத் தவறியது என்பதையே நாம் காண முடிகிறது. இப்போது அவருடைய இன்னொரு வாய்ப்பான ஒரு தெரிவுபற்றி அவர் சிந்திக்கின்றார் போல் தெரிகிறது.  <br />
 <br />
அதாவது அவர் பாகிஸ்தானுக்கு சென்றதும் பாகிஸ்தானால் உலகப் பெருவல்லரசான அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ்சுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விடவும் ஒரு மிகவும் குட்டித்தீவான சிறிலங்கா அரச தலைவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரிதாக இருப்பதை அரசியல் விமர்சகர்களும் இராஜதந்திரிகளும் இப்பொழுது சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு இன்று ஒரு தெளிவான, திட்டவட்டமான பின்னணி இருக்கவே செய்கின்றது.  <br />
<br />
இப்படி சிறிலங்காவை பாகிஸ்தான் வளைக்க விரும்புவது இப் பிராந்தியத்தில் இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்க அது உதவுமே தவிர சிறிலங்கா அரசிற்கு அது பெருவெற்றியைக் கொடுக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் இதில் ஒரு விடயத்தை அடிப்படையாக நோக்க வேண்டியிருக்கின்றது.  <br />
<br />
சிங்கள அரசானது இலங்கைக்குள் தமிழ் மக்களுடன் தன்னுடைய பிரச்சனையை தீர்க்கத் தயாரில்லை என்பதனைத்தான் அதனுடைய இன்றைய பாகிஸ்தானிய பயணத்தின் போதான நகர்வுகள் எமக்கு தெளிவாக காட்டுகின்றன. <br />
<br />
முதலாவதாக பாகிஸ்தானிய அரசுடன் சிறிலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோதாவில் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. அப்படியென்றால் நிச்சயமாக இலங்கை எல்லைக்குள் அல்லது இலங்கையின் எல்லைக்கு வெளியே இனப்பிரச்சனைக்கான தீர்வை சிறிலங்கா அரசு நாடுகின்றது என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. <br />
<br />
எனவே இலங்கைத்தீவிற்கு வெளியேதான் சிறிலங்கா அரசு தீர்வைத் தேடுகின்றது என்பதிலிருந்து அது இனப்பிரச்சனைக்கு உள்நாட்டில் அதாவது தமிழ் மக்களுடன் சேர்ந்து, தமிழ் மக்களுடன் பேசி அப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது. <br />
<br />
தமிழ் மக்களின் தனிப்பெரும் சக்தியாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக அது உலக சக்திகளுடன் அது இணைந்து இப்பிரச்சனையை ஒடுக்க வேண்டும் என்பதிலேயே சிறிலங்கா அரசு அக்கறை செலுத்துகின்றது என்பது இப்போது தெளிவாக இருக்கிறது.<br />
<br />
இவற்றை நாம் அரசியல் ரீதியாக கூர்ந்து அவதானிக்க வேண்டும். <br />
<br />
அதாவது அரசியல் ரீதியான தீர்விற்குப்பதிலாக இராணுவ ரீதியான கண்ணோட்டத்தில் தான் பாகிஸ்தானுடனான அதனுடைய உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்கின்ற அதனுடைய கண்ணோட்டமானது இராணுவ ரீதியான உதவியைப் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதையே மையமாகக் கொண்டது. <br />
<br />
இது விடயத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக அடையாளம் காணவேண்டும். <br />
<br />
பாகிஸ்தானானது இலங்கை விவகாரத்தை மையமாகக்கொண்டு இந்தியாவுடன் மோதத் தயாரில்லை. இது ஒருபோதும் நிகழப் போவதில்லை. ஆனால் இதில் ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கின்றது.  <br />
 <br />
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்குவதனையோ அல்லது நிபுணத்துவ உதவிகளை வழங்குவதனையோ இந்தியா பொறுத்துக் கொள்ளும். சிலவேளைகளில் ஆயுத உதவிகளைக்கூட இந்தியா விரும்பவும்கூடும். ஆனால் அதற்கு மேல் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் நீளுமாயின் இந்தியாவினால் அதனை சகிக்கவோ பொறுக்கவோ நிச்சயம் முடியாது. இது பாகிஸ்தானுக்கும் நிச்சயம் தெரியும். <br />
<br />
எனவே இந்த வட்டத்தில் நின்று பார்க்கும் போது பாகிஸ்தானுடனான உறவு ஒரு மட்டத்திற்கு உட்பட்டது என்பதை பாகிஸ்தான் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. 2,500 ஆண்டுகால அரசியல் இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட சிறிலங்கா அரசானது இதனை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்று நாம் கூறமுடியாது. <br />
<br />
ஆனால் ராஜபக்சவிற்கு இருக்கக்கூடிய இன்றைய தெரிவுகளில் இதுதான் அவருக்கு கைக்கெட்டியதாகக் காணப்படுகின்றது. அப்படியெனில் ஒருவகையில் அது ஒரு கையறு நிலை என்றே நாம் கூறவேண்டும். ஏனெனில் இது ஒரு ஆபத்தான தெரிவு என்று தெரிந்தும் கூட அதனைத்தான் அவர் தெரிவு செய்ய வேண்டும் எனில் அது நிச்சயமாக ஒரு கையறு நிலைதான்.  <br />
<br />
இதில் உள்ள இரண்டாவது பரிமாணத்தைப்பார்ப்போம். <br />
<br />
பாகிஸ்தான் தனித்து இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராக இருக்க முடியாது. அப்படியெனில் இரண்டாவது தெரிவில் ஒரு விநோதமான பின்னணி இருக்க முடியும். எப்படியெனில் கொழும்பு, இஸ்லாமபாத், பீஜிங்க் என்கின்ற ஒரு அச்சின்கீழ் ஒரு நல்லுறவு உருவாகி இனப்பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு சிந்தனைப்போக்கு தோன்றுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது. <br />
<br />
இதில் நாம் ஒரு பின்னணியை நோக்க வேண்டும். <br />
<br />
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, சுதந்திரக் கட்சியாயினும் சரி, ஜே.வி.பி. ஆயினும் சரி எது பதவிக்கு வரினும் அதற்கு ஒரே மாதிரியாகவே அது அமையும். <br />
<br />
எனவே இலங்கை விவகாரத்தில் எந்த சிங்கள ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் பாகிஸ்தானின் தெரிவு ஒன்றுதான். அது அரசின் பக்கம் என்பதுதான். எனவே அது அரசாங்கத்தைப் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. எந்த அரசாங்கங்கள் மாறினாலும் பாகிஸ்தான், சிங்கள அரசின் பக்கம் என்பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஆனால் சீனாவைப் பொறுத்த வரையில் இதில் வித்தியாசங்கள் உண்டு.  <br />
<br />
சீனாவின் முதலாவது தெரிவு ஜே.வி.பியினர்தான். அதாவது அவர்கள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாளர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது ஆதரவாக இருந்தாலும் கூட அவர்களுடைய முதலாவது தெரிவு ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்காது. <br />
<br />
சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது அவர்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுடைய ஆதரவு இரண்டாவது தெரிவாகவே சுதந்திரக் கட்சிக்கு இருக்கும். சுதந்திரக் கட்சிக்கு அப்பால் ஜே.வி.பி. பதவியேற்பதனை அவர்கள் விரும்புவார்கள். எனவே அவர்களுடைய முதலாவது தெரிவு ஜே.வி.பி.யினர்தான். ஆனால் இங்கேதான் பிரச்சனை உள்ளது. அவர்கள் சிங்கள அரசிற்கு ஆதரவானவர்கள். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இந்த மூன்று கட்சிகளில் மூன்றாவதான ஜே.வி.பிக்குத்தான் ஆதரவாளர்கள். <br />
<br />
ஆனால் ஜே.வி.பி. பதவிக்கு வரமுடியாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது அல்லது ஆட்சி அதிகாரத்தில் சவாலிட முடியாத அளவிற்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்கின்ற பின்னணியில் இப்போது பீஜிங்கிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தெரிவு மகிந்த ராஜபக்சதான். ஆகையால் மகிந்த ராஜபக்சவை நூறு வீதம் பலப்படுத்துவதைத் தவிர பீஜிங்கிற்கு மாற்றுத்தீர்வு எதுவுமே இல்லை. <br />
<br />
எனவே இலங்கை விவகாரத்தில் பீஜிங்கும், இஸ்லாமபாத்தும் ராஜபக்சவிற்கு ஆதரிப்பதில் எவ்விதமான கிலேசமும் அற்ற ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு சூழல் காணப்படுகின்றது. <br />
<br />
இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவகையில் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமானது. எவ்வாறு எனில் ஜே.வி.பி.க்கு பீஜிங் ஆதரவளித்து விடுமோ அல்லது மகிந்த ராஜபக்சவை வெட்டி அது முன்னணிக்கு கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கவே செய்தது. இப்போது மகிந்த ராஜபக்சவிடம் நிச்சயமாக இருக்க மாட்டாது. <br />
<br />
ஆனபடியினால் இனி பீஜிங்கினுடைய ஆதரவு, இஸ்லாமபாத்தினுடைய ஆதரவு நிச்சயமாக கொழும்பில் இருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு நூறு வீதமானதாகவே இருக்கும். அப்படியாயின் பீஜிங்க், இஸ்லாமபாத், கொழும்பு என்கின்ற ஒரு முக்கூட்டு அச்சு என்பது இப்போது நூறு வீதம் ஸ்தாபிதமடைந்து விட்டது. <br />
<br />
இந்த நிலையில் இந்த முக்கூட்டு அச்சுக்கு எதிராக இந்தியாவின் அணுகுமுறை என்பது எதிர்வினையாக அமையப் போகின்றது. இதில் இந்தியாவும் தனக்கு என ஒரு அச்சை அமைக்கும். ஆனால் இதில் ஒரு விடயம் மிகவும் தெளிவானது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விருப்பம் இந்தியாவிற்கு எப்போதும் உண்டு. ஆனபடியினால் இலங்கை விவகாரத்தில் இந்தியாக கடந்தகாலம் முழுவதும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றி வந்திருக்கின்றது. அது எப்படியெனில் சிறிலங்கா அரசாங்கத்தை அணைத்து நடத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் எவர் பதவிக்கு வரினும் அதனை அணைத்து நடத்துவதன் மூலம் இலங்கைத் தீவை செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. இப்போதும் அதனையே விரும்புகின்றது. <br />
<br />
ஆனால் இந்தியாவிற்கு எதிரான அணியோடு சிறிலங்காவின் அச்சு அமையுமேயானால் அந்த செல்வாக்கு மண்டல கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவகையில் 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கைக்கு முரணான ஒரு நிலையெடுத்த போதுதான் இந்தியா தனது புஜபல பராக்கிரமத்தை காட்டி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு அச்சமூட்டி ஒரு ஒப்பந்தத்திற்கு பணியவைத்த போதிலும் இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினுடைய வழிக்கு இந்தியா துணைபோவதாகவே அது மாறிச் சென்றது. <br />
<br />
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்தியாவினுடைய கடந்தகால அணுகுமுறை என்பது எப்போதுமே இலங்கையை அணைத்துப் போவது என்கின்ற ஒரு கொள்கை கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவினுடைய கொள்கை, இலங்கையை அணைத்துச் செல்ல முடியுமா என்கின்ற கேள்வியை இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனங்களில் ஏற்படுத்த வல்லதாய் மாறியுள்ளது. <br />
<br />
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக இலங்கையின் கள அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் இந்த வாரத்திலிருந்து அடையாளம் காண வேண்டியிருக்கின்றது. எனவே இது இப்போது எமக்கு ஒரு புதிய தளமும் ஆகும். ஆனபடியினால் எமக்கு இப்போது சற்று வித்தியாசமான ஆனால் விறுவிறுப்பான அணுகுமுறைகள் மிகவும் அவசியப்படுகின்ற ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம் என்றே கூற வேண்டியிருக்கின்றது. <br />
<br />
இறுதி அர்த்தத்தில் அரசியல் ஒரு பொதுப் போக்கின் முடிவுக்குத்தான் உட்படுமேயாயினும் அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பான நுட்பம் சார் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது நாம் சிந்திக்க வேண்டியது அவ்வப்போதைய நுட்பம் சார் அரசியல் மாற்றங்களைப் பற்றியே தான். எனவே பொதுப்போக்கு தொடர்பான விடயம் எமக்கு பிரச்சனையானதாக இல்லை. அது எப்போதும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. <br />
<br />
ஆனால் இந்த நுட்பம் சார்ந்த அரசியல் என்ன? இது எப்படி அமையப் போகின்றது என்பதே எம்முடைய அடுத்தகட்டப் பிரச்சனையாகும். <br />
<br />
மொத்தமாக பார்க்கின்ற போது இப்போது இருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது ஒரு விடயத்திற்கு சவால் விடுவதாக இருக்கின்றது.  <br />
<br />
இலங்கையினுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கையைப் பொறுத்த வரையில் அது இந்திய, அமெரிக்க கோட்டுக்கு வெளியே தாண்டமுடியாத ஒரு நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளதாகும். இன்னொரு வகையில் கூறுவதனால் இலங்கைக்கு சர்வதேசம் என்பது இந்தியாவும், அமெரிக்காவும் தான். ஆனால் இலங்கை இப்போது அதற்கு வெளியே ஒரு பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த பரீட்சார்த்தத்தினைத்தான் நாம் நுட்ப அரசியல் என்று கூறப் போகின்றோம். <br />
<br />
ஏனெனில் ஒரு பொதுப்போக்கான அரசியலிலிருந்து நகர்ந்து அது ஒரு புதிய மிகவும் நுட்பமான ஒரு இராஜதந்திர அரசியல் கோட்டிற்கு அது நகர்ந்து செல்கின்றது. இந்த நகர்வை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது? இதில் அமெரிக்காவின் பொறுப்பு எப்படி இருக்கப் போகின்றது? இதில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? இனி கொழும்புப் பத்திரிகைளும், கொழும்பு சார் அரசியல் நிபுணர்களும் எவ்வாறான தீர்மானங்களை கருத்துக்களை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதிலிருந்து இதனுடைய கட்டுமானத்தை நாம் நோக்கலாம். <br />
<br />
ஆனால் ஒருவிடயத்தை கொழும்பு சார்ந்து நாம் தெளிவாகக்கூற முடியும். கொழும்புசார் அரசியல் நிபுணர்களுடைய இராஜதந்திரியினுடைய கண்ணோட்டம் எப்போதும் இந்தியாவிற்கு எதிரானதாகவும், தமிழீழ மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. எனவே இயல்பாக அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் சார்ந்து சிந்திப்பது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு நிகழ்ந்து விடும்.  <br />
<br />
ஆனபடியினால் அவர்களுடைய நிபுணத்துவம் என்பது அறிவுசார்ந்ததாக இல்லாமல் உணர்ச்சி சார்ந்ததாக மாறுகின்ற ஒரு துர்ப்பாக்கியம் அவர்களுக்கு உண்டு. இந்த நிலையில் அவர்களுடைய உணர்ச்சி சார்ந்த தீர்மானங்களுக்கு வெளியே நாம் ஒரு அறிவுசார்ந்த களத்தில் நுழையக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அறிவுசார்ந்த ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார் அவர்.<br />
<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25284" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25284</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[றொட்டி கதை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=483</link>
			<pubDate>Tue, 21 Mar 2006 11:33:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=483</guid>
			<description><![CDATA[                    வேதாரண்யத்தில் நடந்த ஜெ., பிறந்த நாள் கூட்டத்தில் நடிகர் செந்தில் கூறிய கதை<br />
<br />
ஒரு ஊரில் கணவன், மனைவி இருந்தனர். அவர்கள் வீம்பு பிடித்தவர்கள். கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பணம் சம்பாதித்து வரும்படி மனைவி திட்டினார். இதனால் வெளியே சென்ற கணவன், தன் நண்பர் ஒருவரை பார்த்து தனது குடும்பம் சாப்பாட்டுக்கு கஷ்படுவதாக கூறினார்.<br />
<br />
கஞ்சனான அந்த நண்பர் ரூ.10 கொடுத்து நீ சாப்பிட்டுக்கொள் என்றார். கணவனோ அந்த ரூபாய்க்கு மாவு வாங்கி கொண்டு வந்து தனது மனைவி கண்ணம்மாவிடம் கொடுத்து ரொட்டி சுடச்சொன்னார். 3 ரொட்டி சுட்ட மனைவி தனக்கு ரெண்டும், கணவனுக்கு ஒன்று என்றும் பங்கு பிரித்தார். அதை கணவன் ஏற்கவில்லை.<br />
<br />
ஆளுக்கு ஒன்றரை ரொட்டி என பிரிக்க கணவர் கூறினார். மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் யார் பேசாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு 2 ரொட்டியும், பேசியவர்களுக்கு ஒரு ரொட்டியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
இரவு துவங்கிய சம்பவம் விடிந்தும் முடியவில்லை. இருவரும் அசந்து தூங்கி விட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இருவரும் இறந்து விட்டனர் என நினைத்து மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். சூடு தாங்காமல் இருவரும் வீட்டுக்கு ஓடிவந்தனர்.<br />
<br />
அதற்குள் அந்த ரொட்டி மூன்றையும் கருப்பு நாய் ஒன்று திண்று விட்டது. கணவன், மனைவி ஏமாந்து போயினர். இந்த கதையில் கணவன், மனைவியும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர். கருப்பு நாய் கருணாநிதி.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வேதாரண்யத்தில் நடந்த ஜெ., பிறந்த நாள் கூட்டத்தில் நடிகர் செந்தில் கூறிய கதை<br />
<br />
ஒரு ஊரில் கணவன், மனைவி இருந்தனர். அவர்கள் வீம்பு பிடித்தவர்கள். கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பணம் சம்பாதித்து வரும்படி மனைவி திட்டினார். இதனால் வெளியே சென்ற கணவன், தன் நண்பர் ஒருவரை பார்த்து தனது குடும்பம் சாப்பாட்டுக்கு கஷ்படுவதாக கூறினார்.<br />
<br />
கஞ்சனான அந்த நண்பர் ரூ.10 கொடுத்து நீ சாப்பிட்டுக்கொள் என்றார். கணவனோ அந்த ரூபாய்க்கு மாவு வாங்கி கொண்டு வந்து தனது மனைவி கண்ணம்மாவிடம் கொடுத்து ரொட்டி சுடச்சொன்னார். 3 ரொட்டி சுட்ட மனைவி தனக்கு ரெண்டும், கணவனுக்கு ஒன்று என்றும் பங்கு பிரித்தார். அதை கணவன் ஏற்கவில்லை.<br />
<br />
ஆளுக்கு ஒன்றரை ரொட்டி என பிரிக்க கணவர் கூறினார். மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் யார் பேசாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு 2 ரொட்டியும், பேசியவர்களுக்கு ஒரு ரொட்டியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.<br />
<br />
இரவு துவங்கிய சம்பவம் விடிந்தும் முடியவில்லை. இருவரும் அசந்து தூங்கி விட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இருவரும் இறந்து விட்டனர் என நினைத்து மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். சூடு தாங்காமல் இருவரும் வீட்டுக்கு ஓடிவந்தனர்.<br />
<br />
அதற்குள் அந்த ரொட்டி மூன்றையும் கருப்பு நாய் ஒன்று திண்று விட்டது. கணவன், மனைவி ஏமாந்து போயினர். இந்த கதையில் கணவன், மனைவியும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர். கருப்பு நாய் கருணாநிதி.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழக சட்ட சபை தேர்தல்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=609</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 22:57:21 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1205">adithadi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=609</guid>
			<description><![CDATA[                    தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=651</link>
			<pubDate>Thu, 02 Mar 2006 22:28:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=651</guid>
			<description><![CDATA[                    அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.<br />
<br />
அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.<br />
<br />
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.<br />
<br />
இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.<br />
<br />
இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.<br />
<br />
IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.<br />
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.<br />
<br />
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.<br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.<br />
<br />
அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.<br />
<br />
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.<br />
<br />
இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.<br />
<br />
இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.<br />
<br />
IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.<br />
சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.<br />
<br />
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.<br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இந்திய வல்லாதிக்கக் கனவுகளும் புஸ்ஸின் வருகையும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=655</link>
			<pubDate>Thu, 02 Mar 2006 17:19:18 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=655</guid>
			<description><![CDATA[                    சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது.<br />
<br />
சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் பெற்றிருந்தன. ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்தனவாயும் ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் ஆயுத உற்பத்தியை முன்னிறுத்தி மேலாண்மையைப் பெற்றுக் கொள்ளும் செயற் பாடுகளில் அதி தீவிரம் காட்டின. அதன் பலன் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்களை கண்டுபிடித்துக் கொண்டனர். பனிப்போர்க்காலம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டம் உலக அழிவுக்கான பல ஆபத்தான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றது.<br />
<br />
இன்று சோவியத்தின் வீழ்ச்சி அல்லது சிதைவு இந்நெருக்கடியில் இருந்து உலகை நிம்மதிப் பெரு மூச்சை விடச்செய்திருக்கும் போதிலும் வேறு வகையான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.<br />
அமெரிக்காவை தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன் வேடத்தை எடுத்துக் கொள்ள வைத்திருக்கின்றது.<br />
<br />
இதுவரை காலமும் சோவியத் சார்பு நிலையிலிருந்த நாடுகள் சோவியத்தின் வீழ்ச்சியின் பின் இரண்டும் கெட்டான் சங்கடத்திற்குள் உள்ளாகின. இந்தியா அணிசேரா நாடுகள் என்றும் சோவியத் அணிநாடு என்றும் இரண்டு வேடங்களைப் போட்டிருந்தது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் எதிரணி அல்லது நம்பகத்தன்மையற்ற நாடு என்னும் எண்ணத்தையே பெற்றிருந்தது.<br />
<br />
சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஆயுததளபாட உதவிகளும் நேரடி பாதுகாப்பும் இல்லாதொழிந்த வேளையில் இந்தியா உட்பட பலநாடுகள் சுய அளவில் படைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டன.<br />
<br />
தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாக அமெரிக்கா உலகைத் தன் ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் உட்படுத்தி வைக்கும் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடத்தொடங்கியது.<br />
அணு ஆயுதத்தின் பரம்பலைத் தடை செய்யவும் அணு ஆயுத வலிமையை வேறு நாடுகள் பெற்றுக் கொள்வதைத் தடை செய்யவும் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் "வீற்றோ" எனப்படும் அதிகாரம் பெற்ற அதி முக்கிய நாடுகளான இங்கிலாந்து, ரஷ்யா,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் (International Atomic Energy Agency - IAEA ) என்ற ஒரு பக்கச் சார்பான நீதியான நோக்கமற்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது. உலக நாடுகளில் அணு ஆயுத உற்பத்தியை கண்காளிப்பதும் தடை செய்வதுமே இதன் முதன்மையான நோக்கமாகும். அணு ஆயுத உற்பத்தியை உலகில் தடை செய்வது உலக நன்மைக்கான விடயமெனினும் <br />
அமெரிக்கா உட்பட இந்த ஐந்து நாடுகளையும் அவற்றின் அணு ஆயுத உற்பத்தியையும் வைத்திருப்பையும் இவ்வமைப்பு கட்டுப்படுத்தாது என்பதே இதிலுள்ள குறைபாடாகும். இதே நேரம் அணு ஆயுதக் குவிப்பு தடுப்பு (Nuclear Non-Proliferation Treaty -NPT) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது.<br />
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதத்தின் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டலைத் தடைசெய்தலும் உலக நாடுகளின் அணு ஆயுத உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவரின் கண்காணிப்பிற்குத் திறந்து விடுதலும் ஆகும்.<br />
<br />
இவ்வாறு உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியையும் அதனால் பெறக் கூடிய மேலாதிக்கத்தைத் தடை செய்வதும் அமெரிக்காவின் குள்ள நரித் தந்திரமாகும். இதே காரணங்களிற்கு உட்பட மறுத்தமையைக் காரணங்காட்டியே வடகொரியாவையும் ஈரானையும் சாத்தானின் அச்சில் சேர்த்து அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தது. இன்று ஈரானுக்கான பொருளாதாரத் தடையையும் ஆயுத விற்பனையைத் தடை செய்வதையும் ஐ.நாவிற்கூடாக நிறைவேற்றியிருக்கின்றது. இதற்கான கால அவகாசம் கொடுக்கப் பட்டபோதிலும் ஈரான் இத்திட்டத்திற்கு உடன் படப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. அதே நேரம் அணு ஆயுத உற்பத்திக்கான யுரேனியச் செறிவாக்கலை துரிதப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.<br />
<br />
இதே தேவைகள் இந்தியாவிற்கும் இருக்கின்ற போதிலும் ஈரானிற்கு எதிரான அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணிந்து போய் விட்டதாக இடது சாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.<br />
<br />
இன்றைய புஸ்ஸின் இந்திய விஜயம் இதே நெருக்கடியை இந்தியாவிற்கும் வலிந்து திணித்துள்ளது. சோவியத்தின் ஆதரவை இழந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டினை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் பாகிஸ்தானினூடாக கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தாக்குதல்களைத் தணித்துக் கொள்வதற்கும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கப் பாகிஸ்தானைத் தூண்டி இந்தியாவை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்டிருக்கின்றது என்பதாலேயே புரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கான "உதவிகளைச்" செய்வதற்கான விலையாக அமெரிக்கா போடும் நிபந்தனைகள் நீதியற்ற ஒருபக்கச் சார்பான இந்தியாவின் இறைமையில் தலையிடும் அதிகப்பிரசங்கித் தனமான அசுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாகும்.<br />
<br />
அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.<br />
<br />
இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாகும்" என்ற கூற்றிலிருந்தே அமெரிக்காவின் கபடத் தனத்தையும் இந்தியாவின் கையறு நிலையையும் விளங்கிக் கொள்ளலாம்.<br />
<br />
இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு வைக்கப்படும் "செக்" ஆகவே உலகச் சண்டப்பிரசண்டன் புஸ்ஸின் வருகை பார்க்கப்படுகின்றது.<br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது.<br />
<br />
சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் பெற்றிருந்தன. ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்தனவாயும் ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் ஆயுத உற்பத்தியை முன்னிறுத்தி மேலாண்மையைப் பெற்றுக் கொள்ளும் செயற் பாடுகளில் அதி தீவிரம் காட்டின. அதன் பலன் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்களை கண்டுபிடித்துக் கொண்டனர். பனிப்போர்க்காலம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டம் உலக அழிவுக்கான பல ஆபத்தான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றது.<br />
<br />
இன்று சோவியத்தின் வீழ்ச்சி அல்லது சிதைவு இந்நெருக்கடியில் இருந்து உலகை நிம்மதிப் பெரு மூச்சை விடச்செய்திருக்கும் போதிலும் வேறு வகையான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.<br />
அமெரிக்காவை தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன் வேடத்தை எடுத்துக் கொள்ள வைத்திருக்கின்றது.<br />
<br />
இதுவரை காலமும் சோவியத் சார்பு நிலையிலிருந்த நாடுகள் சோவியத்தின் வீழ்ச்சியின் பின் இரண்டும் கெட்டான் சங்கடத்திற்குள் உள்ளாகின. இந்தியா அணிசேரா நாடுகள் என்றும் சோவியத் அணிநாடு என்றும் இரண்டு வேடங்களைப் போட்டிருந்தது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் எதிரணி அல்லது நம்பகத்தன்மையற்ற நாடு என்னும் எண்ணத்தையே பெற்றிருந்தது.<br />
<br />
சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஆயுததளபாட உதவிகளும் நேரடி பாதுகாப்பும் இல்லாதொழிந்த வேளையில் இந்தியா உட்பட பலநாடுகள் சுய அளவில் படைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டன.<br />
<br />
தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாக அமெரிக்கா உலகைத் தன் ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் உட்படுத்தி வைக்கும் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடத்தொடங்கியது.<br />
அணு ஆயுதத்தின் பரம்பலைத் தடை செய்யவும் அணு ஆயுத வலிமையை வேறு நாடுகள் பெற்றுக் கொள்வதைத் தடை செய்யவும் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் "வீற்றோ" எனப்படும் அதிகாரம் பெற்ற அதி முக்கிய நாடுகளான இங்கிலாந்து, ரஷ்யா,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் (International Atomic Energy Agency - IAEA ) என்ற ஒரு பக்கச் சார்பான நீதியான நோக்கமற்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது. உலக நாடுகளில் அணு ஆயுத உற்பத்தியை கண்காளிப்பதும் தடை செய்வதுமே இதன் முதன்மையான நோக்கமாகும். அணு ஆயுத உற்பத்தியை உலகில் தடை செய்வது உலக நன்மைக்கான விடயமெனினும் <br />
அமெரிக்கா உட்பட இந்த ஐந்து நாடுகளையும் அவற்றின் அணு ஆயுத உற்பத்தியையும் வைத்திருப்பையும் இவ்வமைப்பு கட்டுப்படுத்தாது என்பதே இதிலுள்ள குறைபாடாகும். இதே நேரம் அணு ஆயுதக் குவிப்பு தடுப்பு (Nuclear Non-Proliferation Treaty -NPT) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது.<br />
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதத்தின் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டலைத் தடைசெய்தலும் உலக நாடுகளின் அணு ஆயுத உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவரின் கண்காணிப்பிற்குத் திறந்து விடுதலும் ஆகும்.<br />
<br />
இவ்வாறு உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியையும் அதனால் பெறக் கூடிய மேலாதிக்கத்தைத் தடை செய்வதும் அமெரிக்காவின் குள்ள நரித் தந்திரமாகும். இதே காரணங்களிற்கு உட்பட மறுத்தமையைக் காரணங்காட்டியே வடகொரியாவையும் ஈரானையும் சாத்தானின் அச்சில் சேர்த்து அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தது. இன்று ஈரானுக்கான பொருளாதாரத் தடையையும் ஆயுத விற்பனையைத் தடை செய்வதையும் ஐ.நாவிற்கூடாக நிறைவேற்றியிருக்கின்றது. இதற்கான கால அவகாசம் கொடுக்கப் பட்டபோதிலும் ஈரான் இத்திட்டத்திற்கு உடன் படப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. அதே நேரம் அணு ஆயுத உற்பத்திக்கான யுரேனியச் செறிவாக்கலை துரிதப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.<br />
<br />
இதே தேவைகள் இந்தியாவிற்கும் இருக்கின்ற போதிலும் ஈரானிற்கு எதிரான அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணிந்து போய் விட்டதாக இடது சாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.<br />
<br />
இன்றைய புஸ்ஸின் இந்திய விஜயம் இதே நெருக்கடியை இந்தியாவிற்கும் வலிந்து திணித்துள்ளது. சோவியத்தின் ஆதரவை இழந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டினை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் பாகிஸ்தானினூடாக கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தாக்குதல்களைத் தணித்துக் கொள்வதற்கும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கப் பாகிஸ்தானைத் தூண்டி இந்தியாவை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்டிருக்கின்றது என்பதாலேயே புரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கான "உதவிகளைச்" செய்வதற்கான விலையாக அமெரிக்கா போடும் நிபந்தனைகள் நீதியற்ற ஒருபக்கச் சார்பான இந்தியாவின் இறைமையில் தலையிடும் அதிகப்பிரசங்கித் தனமான அசுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாகும்.<br />
<br />
அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.<br />
<br />
இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாகும்" என்ற கூற்றிலிருந்தே அமெரிக்காவின் கபடத் தனத்தையும் இந்தியாவின் கையறு நிலையையும் விளங்கிக் கொள்ளலாம்.<br />
<br />
இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு வைக்கப்படும் "செக்" ஆகவே உலகச் சண்டப்பிரசண்டன் புஸ்ஸின் வருகை பார்க்கப்படுகின்றது.<br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழத் தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் - இந்திய மக்களுக்கு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=717</link>
			<pubDate>Sat, 25 Feb 2006 04:13:55 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=717</guid>
			<description><![CDATA[                    ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்<br />
அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?<br />
<br />
ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.<br />
<br />
ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.<br />
<br />
இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.<br />
<br />
நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.<br />
<br />
இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.<br />
<br />
ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.<br />
<br />
ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.<br />
<br />
நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.<br />
<br />
எங்கள் போராட்டம் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.<br />
<br />
அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க <a href="http://www.tamiloviam.com/unicode/06300505.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">www.tamiloviam.com/unicode/06300505.asp</a><br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/2006/02/blog-post_114083220581539428.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/2006/02/b...0581539428.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்<br />
அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?<br />
<br />
ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.<br />
<br />
ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.<br />
<br />
இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.<br />
<br />
நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.<br />
<br />
இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.<br />
<br />
ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.<br />
<br />
ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.<br />
<br />
நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.<br />
<br />
எங்கள் போராட்டம் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.<br />
<br />
அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க <a href="http://www.tamiloviam.com/unicode/06300505.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">www.tamiloviam.com/unicode/06300505.asp</a><br />
<br />
நன்றி&gt;சிந்து<br />
<a href="http://ilanthirayan.blogspot.com/2006/02/blog-post_114083220581539428.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://ilanthirayan.blogspot.com/2006/02/b...0581539428.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பங்குச் சந்தை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1084</link>
			<pubDate>Wed, 01 Feb 2006 22:36:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1084</guid>
			<description><![CDATA[                    வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப  7  அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப  7  அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1273</link>
			<pubDate>Fri, 20 Jan 2006 16:06:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=292">Mathan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1273</guid>
			<description><![CDATA[                    சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்? <br />
<br />
தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்...இந்தியத் துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும், இந்த சனநாயத்தைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ நான்காவதோ தூணான பத்திரிகைத்துறையின் பிதாமகன்களில் ஒருவருமான, அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்யம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ஆபத்து வந்தபோது தமிழகத்து பத்திரிகையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போதுகூட இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.<br />
<br />
சுற்றி வளைப்பானேன்.. அவர்தான் இந்து ராம்.<br />
<br />
காரல் மார்ச்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையை குறித்து அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள் என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன என எழுதினால் அது பொய். மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ள கிடைத்த அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.<br />
<br />
அதில் ஒன்றுதான்:<br />
<br />
சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுத்து வருபவரும். சி.பி.எம். உடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்.. அதனது SFIயினது தந்திராலோசனைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்... கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம் கத்தியைச் சுழற்றுபவருமான இந்து ராம்.. எதற்காக பலமான குற்றாச்சாட்டுகளிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? எனபதுதான்.<br />
<br />
இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகு வெகு எளிதானவை.<br />
<br />
தீவிர இடதுசாரி...சாதி மறுப்பாளர்... மதச்சார்பின்மையின் மொத்த உருவம்.. என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம் எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்? அவருக்கும் இவருக்குமான உறவு வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா..? அல்லது அவரும் இவரைப்போல SFIயின் அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சீய ஆசானா..?<br />
<br />
ராம் சார்ந்திருப்பதாக சொல்லப்படும் அக்கட்சி இச்செயலை எவ்விதம் பார்க்கிறது? (இந்து ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்.. இந்து ராமைச் சார்ந்திருக்கும் என்று எழுதத்தான் ஆசை.. ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர், அமைப்பு ரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பது புரியாத எண்ணற்ற விக்ராமதித்தியன்கள் வேதாளங்களின் இத்தகைய கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்)<br />
<br />
திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்...ஈழத்தில் அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய் மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே.. அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேட்டுகள் இதில் மட்டும் மெளனம் சாதிப்பதன் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்..?<br />
<br />
சரி, இவைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்.. எத்தனை உயிர்கள் பறிபோயிற்று..? பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன..? அரசினது நிவாரணப் பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா..? தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு..? அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன..? என்கிற கவலைகளைக் காட்டிலும்..<br />
<br />
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே<br />
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே<br />
<br />
என்கிற கதையாய் சிறி லங்காவின் The island பத்திரிகை கிளப்பிய புரளியை ஆதாரமாக்கி is prabakaran dead or alive? என சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?<br />
<br />
ஏன் இந்த அக்கறை..? அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு..? என பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்.. 1878லிருந்து India National News paper ஆக இருந்துகொண்டிருக்கும் இந்து நாளிதழினையும் நோக்கி நாம் வினவவேண்டி வருகிறது. போதாக்குறைக்கு அடுத்த நாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.<br />
<br />
இப்படி சங்கரராமனை மோட்சத்திற்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர் எண்பதுகளின் இறுதியில் பத்துப் பதினைந்து நாட்களுக்கும் மேலாய் காணாமல் போயிருந்தபோது கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே. அதற்கு என்ன காரணம்?<br />
<br />
அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கும் இருக்கலாம். ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression என தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்.. புரளிகளை ஆதாரங்களாகவும் ஆதாரங்களைப் புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?<br />
<br />
பத்திரிகா தர்மம்..?<br />
<br />
ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கச் சொல்கிறீர்களே அய்யா.. செய்திகளுக்கு எங்கே போவது? என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், செய்திக்கா பஞ்சம்.. இன்னக்கு இந்து பேப்பர் வாங்கீட்டு வா.. அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது.. எதத் தப்புன்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் சரின்னு எழுது.. என்றாராம். இந்த மெளண்ட் ரோடு மகாவிஷ்ணு விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.<br />
<br />
எது எப்படி இருப்பினும் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:<br />
<br />
அது சரி.. ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்..?<br />
<br />
<br />
(பாமரன் கீற்று மின் சஞ்சிகையில் எழுதியது)<br />
<br />
நன்றி - முத்து, பாமரன் மற்றும் கீற்று முன் சஞ்சிகை                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சென்னையில் எதற்கு இரண்டு இலங்கை தூதரகம்? <br />
<br />
தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்...இந்தியத் துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும், இந்த சனநாயத்தைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ நான்காவதோ தூணான பத்திரிகைத்துறையின் பிதாமகன்களில் ஒருவருமான, அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்யம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ஆபத்து வந்தபோது தமிழகத்து பத்திரிகையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போதுகூட இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.<br />
<br />
சுற்றி வளைப்பானேன்.. அவர்தான் இந்து ராம்.<br />
<br />
காரல் மார்ச்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையை குறித்து அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள் என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன என எழுதினால் அது பொய். மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ள கிடைத்த அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.<br />
<br />
அதில் ஒன்றுதான்:<br />
<br />
சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுத்து வருபவரும். சி.பி.எம். உடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்.. அதனது SFIயினது தந்திராலோசனைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்... கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம் கத்தியைச் சுழற்றுபவருமான இந்து ராம்.. எதற்காக பலமான குற்றாச்சாட்டுகளிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? எனபதுதான்.<br />
<br />
இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகு வெகு எளிதானவை.<br />
<br />
தீவிர இடதுசாரி...சாதி மறுப்பாளர்... மதச்சார்பின்மையின் மொத்த உருவம்.. என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம் எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்? அவருக்கும் இவருக்குமான உறவு வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா..? அல்லது அவரும் இவரைப்போல SFIயின் அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சீய ஆசானா..?<br />
<br />
ராம் சார்ந்திருப்பதாக சொல்லப்படும் அக்கட்சி இச்செயலை எவ்விதம் பார்க்கிறது? (இந்து ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்.. இந்து ராமைச் சார்ந்திருக்கும் என்று எழுதத்தான் ஆசை.. ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர், அமைப்பு ரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பது புரியாத எண்ணற்ற விக்ராமதித்தியன்கள் வேதாளங்களின் இத்தகைய கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்)<br />
<br />
திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்...ஈழத்தில் அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய் மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே.. அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேட்டுகள் இதில் மட்டும் மெளனம் சாதிப்பதன் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்..?<br />
<br />
சரி, இவைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்.. எத்தனை உயிர்கள் பறிபோயிற்று..? பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன..? அரசினது நிவாரணப் பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா..? தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு..? அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன..? என்கிற கவலைகளைக் காட்டிலும்..<br />
<br />
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே<br />
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே<br />
<br />
என்கிற கதையாய் சிறி லங்காவின் The island பத்திரிகை கிளப்பிய புரளியை ஆதாரமாக்கி is prabakaran dead or alive? என சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?<br />
<br />
ஏன் இந்த அக்கறை..? அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு..? என பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்.. 1878லிருந்து India National News paper ஆக இருந்துகொண்டிருக்கும் இந்து நாளிதழினையும் நோக்கி நாம் வினவவேண்டி வருகிறது. போதாக்குறைக்கு அடுத்த நாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.<br />
<br />
இப்படி சங்கரராமனை மோட்சத்திற்கு அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர் எண்பதுகளின் இறுதியில் பத்துப் பதினைந்து நாட்களுக்கும் மேலாய் காணாமல் போயிருந்தபோது கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே. அதற்கு என்ன காரணம்?<br />
<br />
அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கும் இருக்கலாம். ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression என தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்.. புரளிகளை ஆதாரங்களாகவும் ஆதாரங்களைப் புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?<br />
<br />
பத்திரிகா தர்மம்..?<br />
<br />
ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கச் சொல்கிறீர்களே அய்யா.. செய்திகளுக்கு எங்கே போவது? என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், செய்திக்கா பஞ்சம்.. இன்னக்கு இந்து பேப்பர் வாங்கீட்டு வா.. அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது.. எதத் தப்புன்னு போட்டிருக்கானோ அதையெல்லாம் சரின்னு எழுது.. என்றாராம். இந்த மெளண்ட் ரோடு மகாவிஷ்ணு விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.<br />
<br />
எது எப்படி இருப்பினும் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:<br />
<br />
அது சரி.. ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்..?<br />
<br />
<br />
(பாமரன் கீற்று மின் சஞ்சிகையில் எழுதியது)<br />
<br />
நன்றி - முத்து, பாமரன் மற்றும் கீற்று முன் சஞ்சிகை                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கொழும்பில் இருந்து வெளி வரும் புதிய மாத சஞ்சிகை...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1355</link>
			<pubDate>Mon, 16 Jan 2006 05:55:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1355</guid>
			<description><![CDATA[                    வியூகம் என்ற பெயரில் சர்வதேச தரத்திலான மாதச்சஞ்சிகை ஒன்று கொழும் பிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல்கள்;, சர்வதேச விவகாரங்கள்;, ஊடகங்கள் பற்றிய தகவல்கள், சூழலியல், சமுக ஆக்கங்கள், நவீன தொழினுட்பங்கள் என பல்வேறு பட்ட தகவல்களை கொண்டதாக இந்த மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. <br />
நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் சர்வதேச தரத்திலான மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
நேற்று நடைபெற்ற இந்த மாத சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.<br />
<br />
இந்த நூல் அறிமுக விழாவில் பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர் சந்திரசேகரன். மற்றும் முனைவர் குமரகுரபரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிதோடு, ஊடகவியலாளர் நடராஜசிவமும் அங்கு உரை நிகழ்த்தினார்.<br />
<br />
வாசிப்பு வீதம் குறைவடைந்து செல்லும் இந்த நேரத்திலும், இங்கு முற்றிலும் தமிழ் நாட்டு சஞ்சிகைகளின்; ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையிலும், சர்வதேச தரத்திலான அதே நேரம் அறிவு சார்ந்த தரமானதொரு  மாதசஞ்சிகையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.<br />
Thanks:Sankathi...<br />
<br />
<br />
<a href="http://www.viyukam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.viyukam.com</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வியூகம் என்ற பெயரில் சர்வதேச தரத்திலான மாதச்சஞ்சிகை ஒன்று கொழும் பிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல்கள்;, சர்வதேச விவகாரங்கள்;, ஊடகங்கள் பற்றிய தகவல்கள், சூழலியல், சமுக ஆக்கங்கள், நவீன தொழினுட்பங்கள் என பல்வேறு பட்ட தகவல்களை கொண்டதாக இந்த மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. <br />
நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் சர்வதேச தரத்திலான மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
நேற்று நடைபெற்ற இந்த மாத சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.<br />
<br />
இந்த நூல் அறிமுக விழாவில் பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர் சந்திரசேகரன். மற்றும் முனைவர் குமரகுரபரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிதோடு, ஊடகவியலாளர் நடராஜசிவமும் அங்கு உரை நிகழ்த்தினார்.<br />
<br />
வாசிப்பு வீதம் குறைவடைந்து செல்லும் இந்த நேரத்திலும், இங்கு முற்றிலும் தமிழ் நாட்டு சஞ்சிகைகளின்; ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையிலும், சர்வதேச தரத்திலான அதே நேரம் அறிவு சார்ந்த தரமானதொரு  மாதசஞ்சிகையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.<br />
Thanks:Sankathi...<br />
<br />
<br />
<a href="http://www.viyukam.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.viyukam.com</a>                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>