<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - சுமுதாயம் (வாழ்வியல்)]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:57 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=212</link>
			<pubDate>Fri, 14 Apr 2006 19:58:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2187">alika</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=212</guid>
			<description><![CDATA[                    ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.<br />
<a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&amp;Chapter=49&amp;Kjv=1" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamil-bible.com/lookup.php?Book...hapter=49&amp;Kjv=1</a><br />
<br />
<br />
34. யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, &lt;b&gt;ஏலாமு&lt;/b&gt;க்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:<br />
<br />
35. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,<br />
<br />
36. வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.<br />
<br />
37. நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;யரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,<br />
<br />
38. என் சிங்காசனத்தை &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;லே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<br />
<br />
39. ஆனாலும் கடைசிநாட்களிலே நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<br />
<br />
இந்த ஈழம், தற்போதைய ஈரானின் தென்கிழக்கில், இருந்தது.<br />
<br />
David McAlpin's Elamo-Dravidian hypothesis postulates a &lt;b&gt;genetic relation between Elamite and Dravidian languages&lt;/b&gt;, which then would have been carried &lt;b&gt;from Elam to India by eastward migration&lt;/b&gt;<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Elamite_language#Elamite_scripts" target="_blank" rel="noopener" class="mycode_url">http://en.wikipedia.org/wiki/Elamite_langu...Elamite_scripts</a><br />
இந்து நதி பள்ளத்தாக்கு அகழ்வுகள் (ஹரப்பா, மொஹென்சதாரோ) நாம், ஈழத்தவர், கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்ததிற்கு உதாரணம்.  ஆரியப்படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, மலைஈழ (தற்போதைய கேரளம்) மூலமாக இன்றைய ஈழத்திற்கு இடம் பெயர்ந்தோம்.  திராவிட (இச்சொல் தமிழ் அல்ல என நான் எண்ணுகிறேன்) குடும்பத்தில் ஈழத்தவர் ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள் என்பது என் கருத்து.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.<br />
<a href="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&amp;Chapter=49&amp;Kjv=1" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamil-bible.com/lookup.php?Book...hapter=49&amp;Kjv=1</a><br />
<br />
<br />
34. யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, &lt;b&gt;ஏலாமு&lt;/b&gt;க்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:<br />
<br />
35. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,<br />
<br />
36. வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.<br />
<br />
37. நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;யரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,<br />
<br />
38. என் சிங்காசனத்தை &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;லே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<br />
<br />
39. ஆனாலும் கடைசிநாட்களிலே நான் &lt;b&gt;ஏலாமி&lt;/b&gt;ன் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<br />
<br />
இந்த ஈழம், தற்போதைய ஈரானின் தென்கிழக்கில், இருந்தது.<br />
<br />
David McAlpin's Elamo-Dravidian hypothesis postulates a &lt;b&gt;genetic relation between Elamite and Dravidian languages&lt;/b&gt;, which then would have been carried &lt;b&gt;from Elam to India by eastward migration&lt;/b&gt;<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Elamite_language#Elamite_scripts" target="_blank" rel="noopener" class="mycode_url">http://en.wikipedia.org/wiki/Elamite_langu...Elamite_scripts</a><br />
இந்து நதி பள்ளத்தாக்கு அகழ்வுகள் (ஹரப்பா, மொஹென்சதாரோ) நாம், ஈழத்தவர், கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்ததிற்கு உதாரணம்.  ஆரியப்படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, மலைஈழ (தற்போதைய கேரளம்) மூலமாக இன்றைய ஈழத்திற்கு இடம் பெயர்ந்தோம்.  திராவிட (இச்சொல் தமிழ் அல்ல என நான் எண்ணுகிறேன்) குடும்பத்தில் ஈழத்தவர் ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள் என்பது என் கருத்து.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சப்பாத்துடன் வீட்டுக்குள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=229</link>
			<pubDate>Thu, 13 Apr 2006 22:39:06 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1254">நேசன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=229</guid>
			<description><![CDATA[                    இலண்டன் வாழ் பெரும்பான்மை  தமிழ் மக்களிடம்  வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன்  அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள். <br />
<br />
சுகாதாரத்திற்கு கூடாத ஓர்  பண்பற்ற செயல்தானே...<br />
<br />
<br />
வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இலண்டன் வாழ் பெரும்பான்மை  தமிழ் மக்களிடம்  வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன்  அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள். <br />
<br />
சுகாதாரத்திற்கு கூடாத ஓர்  பண்பற்ற செயல்தானே...<br />
<br />
<br />
வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பண்பாட்டின் வாழ்வியல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=324</link>
			<pubDate>Fri, 07 Apr 2006 09:36:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=324</guid>
			<description><![CDATA[                    பண்பாட்டின் வாழ்வியல்<br />
<br />
தொ.பரமசிவன்<br />
<br />
<br />
நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது.<br />
<br />
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. இந்தத் தொழில்நுட்பம் வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த வீடுகளைப் பற்றி நாம் சொல்லக்கூடிய ஒரே குறைபாடு அவை கழிவறை வசதி இல்லாதவை என்பதுதான். ‘கழிவறை’ என்ற கோட்பாடும் இடவசதியும் வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் அக்காலத்தில் இல்லை. (எனவே மலம் அள்ளும் சாதியாரும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை).<br />
<br />
‘வீடு’ என்ற சொல் தொழிற்களத்தில் இருந்து ‘விடுபட்டு’ நிற்கும் இடத்தைத்தான் முதலில் குறித்தது. ‘விடுதி’ என்னும் சொல்லும் அந்தப் பொருளில் வந்ததுதான். பிற்காலத்தில் மேலோர் மரபு ‘வீடு’ என்பது மண் உலகத்திலிருந்து விடுபட்டுச் சேர்கிற ‘துறக்கத்தை’ (சொர்க்கத்தை) குறிக்க வந்ததாகும். சங்க இலக்கியத்தில் ‘வீடு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மனை’ என்ற சொல்லே காணப்படுகிறது. ஒரு மனிதன் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யும் இந்த இடத்துக்குரியவள் ‘மனைவி’ எனப்பட்டாள்.<br />
<br />
மலை, காடு, வயல், புல்தரை, மணல்வெளி என நிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெய்வங்கள் உறைகின்றன. இவற்றை மனிதன் தொல்லை செய்யக்கூடாது. எனவே வீடு கட்டவிருக்கும் நிலத்தில் முளை அறைந்து, கயிறு கட்டி கயிற்றின் நிழல் வழியாகத் திசைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்தந்தத் திசையிலுள்ள தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு வேண்டுவன செய்யவேண்டும். பின்னரே அந்த நிலத்தில் மனிதன் தனக்குரிய இருப்பாக வீடுகட்டத் தொடங்கவேண்டும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.<br />
<br />
‘‘நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு<br />
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி<br />
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து’’ என்கிறது நெடுநல்வாடை. மனைத் தெய்வங்களையும் திசைத் தெய்வங்களையும் வேண்டி அமைதிப்படுத்தும் (சாந்தி செய்யும்) இந்தச் சடங்குக்கு ‘தச்சு செய்தல்’ என்பது இன்றைய பெயராகும்.<br />
<br />
‘‘தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடைவை என்றிவையெல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்’’ என்பது பக்தி இயக்கம் கிளர்ந்த காலத்தில் (கி.பி.9 நூ) பெரியாழ்வார் பாசுரமாகும். பார்ப்பனர்களின் ‘சுகஜீவனம்’ என்பது அக்காலத்தில் எவ்வாறிருந்தது என்பதனை இப்பாசுரத்தால் உணர முடிகிறது. இதே காலத்தைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் தண்டந்தோட்டம் செப்பேட்டால் மற்றுமொரு செய்தியினை அறிகிறோம். பார்ப்பனர் 308 பேருக்கு அரசன் ஒரே செப்பேட்டின் வழி ‘பிரமதேயம்’ வழங்குகிறான். இதன்படி அரசன் அளித்த உரிமைகளில் சில, ‘சுட்டிட்டிகையால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும் துரவு கிணறு இழிச்சப் பெறுவதாகவும்’ என்பவையாகும்.<br />
<br />
அதாவது சுட்ட செங்கலால் வீடுகட்டிக் கொள்ளவும், வீட்டிற்கு மாடி எடுத்துக் கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும், பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிராமங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்றச் சாதியாருக்கு வழங்கவில்லை.<br />
<br />
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகளை அரசர்களால் வகுக்கபபட்டிருந்ததை அறியப் பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. அவ்வுரிமைகளில் ஒன்று, வீட்டிற்கு இருபுறமும் வாசல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம் என்பதாகும். அப்பகுதியில் அதுவரை அவர்களுக்கு அந்த உரிமை இல்லை.<br />
<br />
காலனிய ஆட்சியின் தொடக்கம் வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை அல்லது புற் கூரைகளாக இருந்ததென்பதனை முன்பே குறிப்பிட்டோம். இவ்வீடுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் இன்றளவும் குனிந்த வாசல் உடையனவாகவும், பின்புற வாசலும் சன்னலும் இல்லாதனவாகவும் இருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நிலைவாசல் (ஆள் நிமிர்ந்தபடி உள்ளே செல்லும் உயரத்தில் இருப்பது) சன்னல்கள், பின்புறவாசல், மாடி, இரட்டைக் கதவு வைத்தல், சுட்ட செங்கல்லால் சுவர் ஆகியவை தனித்தனி உரிமைகளாக சாதிவாரியாக அடுக்கப்பட்டிருந்ததே தமிழக வரலாற்றில் சாதியம் தொழிற்பட்ட முறைக்குக் கண்கண்ட சான்றாகும்.<br />
<br />
சமூக, பொருளாதார ரீதியில் எளிய மக்கள் ‘குடியிருப்பு’ பற்றி விரிந்த சிந்தனைகள் இல்லாமல்தான் வாழ்ந்தனர். ‘எனக்கும் சொத்து இருக்கிறது’ என்ற உணர்வை வெளிப்படுத்த ‘எனக்கும் காணி நிலமும் கலப்பை சார்த்த இடமும் இருக்கிறது’ என்றனர். இந்தச் சொல்லடையிலிருந்து அவர்களுக்கு வீடு என்பதே தொழிற்கருவிகளைப் பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நிலமும் உழவுத் தொழிற் கருவிகளுமே வாழ்க்கை என்பதே அன்றைய நிகழ்வாகும்.<br />
<br />
எனவே, தாழ்வாரம், நடுக்கூடம், சமையலறை, படுக்கையறை என்பதான நினைவுகளும் உணர்வுகளும் அவர்களிடத்தில் உருவாக வழியில்லை. அரசதிகாரமும், சாதிய மேலாண்மையும் அவ்வகையான நினைவுகள் அவர்களிடத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புக்களில் புதிதாகக்கட்டும் வீடுகளில்கூடப் பக்கச் சுவர்களில் பெரிய சன்னல்களை வைப்பதில்லை என்பதைக் கள ஆய்வில் காண முடிகிறது. காலங்காலமாக அவர்களின் சமூக உளவியல் சிதைக்கப்பட்டிருந்ததன் பின் தொடர்ச்சியாகவே இதனைக் கருத வேண்டும்.<br />
<br />
நன்றி - உன்னதம் /மார்ச்-06                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பண்பாட்டின் வாழ்வியல்<br />
<br />
தொ.பரமசிவன்<br />
<br />
<br />
நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது.<br />
<br />
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. இந்தத் தொழில்நுட்பம் வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த வீடுகளைப் பற்றி நாம் சொல்லக்கூடிய ஒரே குறைபாடு அவை கழிவறை வசதி இல்லாதவை என்பதுதான். ‘கழிவறை’ என்ற கோட்பாடும் இடவசதியும் வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் அக்காலத்தில் இல்லை. (எனவே மலம் அள்ளும் சாதியாரும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை).<br />
<br />
‘வீடு’ என்ற சொல் தொழிற்களத்தில் இருந்து ‘விடுபட்டு’ நிற்கும் இடத்தைத்தான் முதலில் குறித்தது. ‘விடுதி’ என்னும் சொல்லும் அந்தப் பொருளில் வந்ததுதான். பிற்காலத்தில் மேலோர் மரபு ‘வீடு’ என்பது மண் உலகத்திலிருந்து விடுபட்டுச் சேர்கிற ‘துறக்கத்தை’ (சொர்க்கத்தை) குறிக்க வந்ததாகும். சங்க இலக்கியத்தில் ‘வீடு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மனை’ என்ற சொல்லே காணப்படுகிறது. ஒரு மனிதன் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யும் இந்த இடத்துக்குரியவள் ‘மனைவி’ எனப்பட்டாள்.<br />
<br />
மலை, காடு, வயல், புல்தரை, மணல்வெளி என நிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெய்வங்கள் உறைகின்றன. இவற்றை மனிதன் தொல்லை செய்யக்கூடாது. எனவே வீடு கட்டவிருக்கும் நிலத்தில் முளை அறைந்து, கயிறு கட்டி கயிற்றின் நிழல் வழியாகத் திசைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்தந்தத் திசையிலுள்ள தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு வேண்டுவன செய்யவேண்டும். பின்னரே அந்த நிலத்தில் மனிதன் தனக்குரிய இருப்பாக வீடுகட்டத் தொடங்கவேண்டும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.<br />
<br />
‘‘நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு<br />
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி<br />
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து’’ என்கிறது நெடுநல்வாடை. மனைத் தெய்வங்களையும் திசைத் தெய்வங்களையும் வேண்டி அமைதிப்படுத்தும் (சாந்தி செய்யும்) இந்தச் சடங்குக்கு ‘தச்சு செய்தல்’ என்பது இன்றைய பெயராகும்.<br />
<br />
‘‘தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடைவை என்றிவையெல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்’’ என்பது பக்தி இயக்கம் கிளர்ந்த காலத்தில் (கி.பி.9 நூ) பெரியாழ்வார் பாசுரமாகும். பார்ப்பனர்களின் ‘சுகஜீவனம்’ என்பது அக்காலத்தில் எவ்வாறிருந்தது என்பதனை இப்பாசுரத்தால் உணர முடிகிறது. இதே காலத்தைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் தண்டந்தோட்டம் செப்பேட்டால் மற்றுமொரு செய்தியினை அறிகிறோம். பார்ப்பனர் 308 பேருக்கு அரசன் ஒரே செப்பேட்டின் வழி ‘பிரமதேயம்’ வழங்குகிறான். இதன்படி அரசன் அளித்த உரிமைகளில் சில, ‘சுட்டிட்டிகையால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும் துரவு கிணறு இழிச்சப் பெறுவதாகவும்’ என்பவையாகும்.<br />
<br />
அதாவது சுட்ட செங்கலால் வீடுகட்டிக் கொள்ளவும், வீட்டிற்கு மாடி எடுத்துக் கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும், பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிராமங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்றச் சாதியாருக்கு வழங்கவில்லை.<br />
<br />
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகளை அரசர்களால் வகுக்கபபட்டிருந்ததை அறியப் பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. அவ்வுரிமைகளில் ஒன்று, வீட்டிற்கு இருபுறமும் வாசல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம் என்பதாகும். அப்பகுதியில் அதுவரை அவர்களுக்கு அந்த உரிமை இல்லை.<br />
<br />
காலனிய ஆட்சியின் தொடக்கம் வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை அல்லது புற் கூரைகளாக இருந்ததென்பதனை முன்பே குறிப்பிட்டோம். இவ்வீடுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் இன்றளவும் குனிந்த வாசல் உடையனவாகவும், பின்புற வாசலும் சன்னலும் இல்லாதனவாகவும் இருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நிலைவாசல் (ஆள் நிமிர்ந்தபடி உள்ளே செல்லும் உயரத்தில் இருப்பது) சன்னல்கள், பின்புறவாசல், மாடி, இரட்டைக் கதவு வைத்தல், சுட்ட செங்கல்லால் சுவர் ஆகியவை தனித்தனி உரிமைகளாக சாதிவாரியாக அடுக்கப்பட்டிருந்ததே தமிழக வரலாற்றில் சாதியம் தொழிற்பட்ட முறைக்குக் கண்கண்ட சான்றாகும்.<br />
<br />
சமூக, பொருளாதார ரீதியில் எளிய மக்கள் ‘குடியிருப்பு’ பற்றி விரிந்த சிந்தனைகள் இல்லாமல்தான் வாழ்ந்தனர். ‘எனக்கும் சொத்து இருக்கிறது’ என்ற உணர்வை வெளிப்படுத்த ‘எனக்கும் காணி நிலமும் கலப்பை சார்த்த இடமும் இருக்கிறது’ என்றனர். இந்தச் சொல்லடையிலிருந்து அவர்களுக்கு வீடு என்பதே தொழிற்கருவிகளைப் பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நிலமும் உழவுத் தொழிற் கருவிகளுமே வாழ்க்கை என்பதே அன்றைய நிகழ்வாகும்.<br />
<br />
எனவே, தாழ்வாரம், நடுக்கூடம், சமையலறை, படுக்கையறை என்பதான நினைவுகளும் உணர்வுகளும் அவர்களிடத்தில் உருவாக வழியில்லை. அரசதிகாரமும், சாதிய மேலாண்மையும் அவ்வகையான நினைவுகள் அவர்களிடத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புக்களில் புதிதாகக்கட்டும் வீடுகளில்கூடப் பக்கச் சுவர்களில் பெரிய சன்னல்களை வைப்பதில்லை என்பதைக் கள ஆய்வில் காண முடிகிறது. காலங்காலமாக அவர்களின் சமூக உளவியல் சிதைக்கப்பட்டிருந்ததன் பின் தொடர்ச்சியாகவே இதனைக் கருத வேண்டும்.<br />
<br />
நன்றி - உன்னதம் /மார்ச்-06                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வார விடுமுறை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=376</link>
			<pubDate>Sat, 01 Apr 2006 19:22:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=376</guid>
			<description><![CDATA[                    வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். <br />
<br />
இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல.<br />
<br />
குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.<br />
<br />
வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. குறிப்பாக அலமாரி செல்பில் வைத்த பேப்பர்கள், புத்தகங்கள், வார்ட்ரோப்பில் அடுக்கிய துணிகள், குழந்தைகளின் அறை பொம்மைகள், படுக்கையறை தலையணை, போர்வைகள் போன்றவை எப்படியும் இடம் மாறியிருக்கும். அல்லது ஒரு ஒழுங்கு முறையில் இருக்காது. இந்த வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.<br />
<br />
நண்பர்களுடன் சந்திப்பு: வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் சில நேரம் போரடிக்கும். அதனால் நண்பர்களின் குடும்பத்தினரோடு பொதுவாக எங்கா வது ஓரிடத்தில் சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளுங்கள். அப்போது அவர்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் உணவுகளையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டு பரிமாறுங்கள். அவர்களுடன் சேர்ந்து மனம் விட்டு பேசுங்கள். <br />
<br />
ஷாப்பிங்: சிலர் நினைத்தவுடன் ஷாப்பிங் கிளம்பி விடுவார்கள். இப்படி எந்தத் திட்டமும் இன்றி ஷாப்பிங் செல்லக் கூடாது. குடும்பத்தினருக்கு என்ன தேவை, உங்களுக்கு தேவையான பொருட் கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும், அவை தரமான கடைகளா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். கடைகள் அதிகம் உள்ள பகுதிக்குப் போனால் நான் கைந்து கடைகளாவது ஏறி இறங்கி உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.<br />
<br />
பிக்னிக்: நகரின் அன்றாட பரபரப்பு, நெருக்கடியில் இருந்து வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஒதுங்கியிருப்பது நல்ல விஷயம். இதற்காக பிக்னிக் செல்லலாம். அப்படிச் செல்லும்போது குடும்பத்தினர் அனைவரும் அதில் இருக்க வேண்டும். இன்று புறநகர் பகுதிகளில் பொழுது போக்கிற்கு உதவும் தீம் பார்க்குகள் ஏராளமான அளவில் இருக்கின்றன. அங்கு விளையாட்டுகள், சவாரிகளில் ஈடுபடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளும் ஆர்வமாக விளையாடுவார்கள்.<br />
<br />
வெளிநாட்டு உணவுகள்: தினமும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் வார விடுமுறை நாட்களில் வித்தியாசமான வெளிமாநில மற்றும் அயல் நாட்டு உணவுகளை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம். புதுமையான உணவுகளை வீட்டிலேயே தயாரித்தால் அதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே விரும்பிச் சாப் பிடுவார்கள். இந்த புதுமை உணவுத் தயாரிப்பில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஈடுபாட்டுடன் செய்தால் நல்லது.<br />
<br />
சினிமா: வாரத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது நல்லது. குழந்தைகளுடன் செல்லும்போது அவர்களின் ரசனைக்கேற்ப படங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். <br />
<br />
இப்படி ஒவ்வொரு வாரத்தையும் திட்டமிட்டு செலவிட்டால் உங்களுக்கு வேலை நாட்களில் ஏற்படும் பரபரப்பு வெகுவாகக் குறைந்து விடும்.<br />
Thanks:thanthi.................<br />
***                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். <br />
<br />
இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல.<br />
<br />
குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.<br />
<br />
வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. குறிப்பாக அலமாரி செல்பில் வைத்த பேப்பர்கள், புத்தகங்கள், வார்ட்ரோப்பில் அடுக்கிய துணிகள், குழந்தைகளின் அறை பொம்மைகள், படுக்கையறை தலையணை, போர்வைகள் போன்றவை எப்படியும் இடம் மாறியிருக்கும். அல்லது ஒரு ஒழுங்கு முறையில் இருக்காது. இந்த வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.<br />
<br />
நண்பர்களுடன் சந்திப்பு: வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் சில நேரம் போரடிக்கும். அதனால் நண்பர்களின் குடும்பத்தினரோடு பொதுவாக எங்கா வது ஓரிடத்தில் சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளுங்கள். அப்போது அவர்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் உணவுகளையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டு பரிமாறுங்கள். அவர்களுடன் சேர்ந்து மனம் விட்டு பேசுங்கள். <br />
<br />
ஷாப்பிங்: சிலர் நினைத்தவுடன் ஷாப்பிங் கிளம்பி விடுவார்கள். இப்படி எந்தத் திட்டமும் இன்றி ஷாப்பிங் செல்லக் கூடாது. குடும்பத்தினருக்கு என்ன தேவை, உங்களுக்கு தேவையான பொருட் கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும், அவை தரமான கடைகளா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். கடைகள் அதிகம் உள்ள பகுதிக்குப் போனால் நான் கைந்து கடைகளாவது ஏறி இறங்கி உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.<br />
<br />
பிக்னிக்: நகரின் அன்றாட பரபரப்பு, நெருக்கடியில் இருந்து வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஒதுங்கியிருப்பது நல்ல விஷயம். இதற்காக பிக்னிக் செல்லலாம். அப்படிச் செல்லும்போது குடும்பத்தினர் அனைவரும் அதில் இருக்க வேண்டும். இன்று புறநகர் பகுதிகளில் பொழுது போக்கிற்கு உதவும் தீம் பார்க்குகள் ஏராளமான அளவில் இருக்கின்றன. அங்கு விளையாட்டுகள், சவாரிகளில் ஈடுபடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளும் ஆர்வமாக விளையாடுவார்கள்.<br />
<br />
வெளிநாட்டு உணவுகள்: தினமும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் வார விடுமுறை நாட்களில் வித்தியாசமான வெளிமாநில மற்றும் அயல் நாட்டு உணவுகளை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம். புதுமையான உணவுகளை வீட்டிலேயே தயாரித்தால் அதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே விரும்பிச் சாப் பிடுவார்கள். இந்த புதுமை உணவுத் தயாரிப்பில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஈடுபாட்டுடன் செய்தால் நல்லது.<br />
<br />
சினிமா: வாரத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது நல்லது. குழந்தைகளுடன் செல்லும்போது அவர்களின் ரசனைக்கேற்ப படங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். <br />
<br />
இப்படி ஒவ்வொரு வாரத்தையும் திட்டமிட்டு செலவிட்டால் உங்களுக்கு வேலை நாட்களில் ஏற்படும் பரபரப்பு வெகுவாகக் குறைந்து விடும்.<br />
Thanks:thanthi.................<br />
***                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இரண்டுங்கெட்டான்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=417</link>
			<pubDate>Tue, 28 Mar 2006 20:59:11 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1145">stalin</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=417</guid>
			<description><![CDATA[                    நடுத்தர இனம் - என்ன செய்யும்?<br />
<br />
மா.பா. குருசாமி<br />
<br />
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.<br />
<br />
மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும்.<br />
<br />
மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுவதை நாம் மறந்துவிட முடியாது. இப்படி மக்களைப் பிரிக்கச் சரியான வரையறையும், தெளிவான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லை. இருந்தாலும் சில அடிப்படை உண்மைகளை உணர, அறிய இந்தப் பகுப்புத் தேவை.<br />
<br />
இன்றைய சூழலில் நமது நாட்டில் மேல்தட்டு மக்களாக யாரைக் கருதலாம்? இலட்சக்கணக்கில் மாத வருவாயும், கோடிக்கணக்கில் சொத்துகளும் வைத்திருப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்றால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இப்பிரிவில் அடங்குவர். இவர்களை உயர் - மேல் மட்டத்தினர் என்று கருதலாம். பொதுவாக, சொந்தமாகத் தொழில் செய்து அல்லது உயர் பதவியிலிருந்து, மாதம் ஐம்பதினாயிரத்திற்கு மேல் வருவாய் பெற்று இலட்சக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்கும் குடும்பத்தினரை மேல் மட்டத்தினராகக் கருதினால், மொத்தத்தில் சுமார் 20 சதவிகிதம் பேர் இப்பிரிவில் வரலாம். இது ஓர் ஊகம் தான்.<br />
<br />
இதற்கு அடுத்த நிலையிலுள்ள நடுத்தர இன மக்களின் மேல் வரம்பையும் அடித்தள நிலையையும் வரையறுப்பது, இன்னும் சிக்கலான பணியாகும். பொதுவாக ஒரு குடும்பத்தில் சராசரி ஓராளுக்கு மாத வருவாய் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெறுபவர்களை நடுத்தர இனத்தவரென்றால், இவர்களையும் சுமார் ஐயாயிரம் வருவாய்க்கு மேல் பெறுபவர்களை மேல்மட்ட நடுத்தர மக்களென்றும், அதற்குக் கீழ் வருவாய் பெறுபவர்களை கீழ்நிலை நடுத்தர மக்களென்றும் பகுக்கலாம். இவர்கள் ஒருவேளை மொத்தத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் இருக்கலாம்.<br />
<br />
மீதி 40 சதவிகிதத்தினரை அடிநிலை மக்கள் என்றால், இவர்களில் 25 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். 15 சதவிகிதத்தினர் அடிப்படைத் தேவைகள் ஓரளவு கிடைக்க வாழ்பவர்கள். இந்த அடிநிலை மக்களிடம் அரசியலில் கட்சி ஈடுபாடு இருக்கின்றது. இன்றைய நிலையில் இவர்கள் தான் `வாக்கு வங்கிகளாக'ச் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமங்களிலும், நகரக் குடிசைப் பகுதிகளிலும் வாழ்பவர்கள்.<br />
<br />
மொத்தத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில் வாழ்பவர்கள். இவர்கள் படித்தவர்கள். அரசுப் பணிகளில், தனியார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். வணிகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளர்களாக இருப்பார்கள்.<br />
<br />
நடுத்தர மக்களிடம் வாழ்க்கை விழிப்புணர்வு இருக்கும். இவர்களில் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர்கள், மேலும் முனைப்போடு மேலே வர முயல்வார்கள். நடுத்தர மக்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் மேல் மட்டத்திற்கு வர பல்வேறு வழிகளை மேற்கொள்வார்கள்.<br />
<br />
பல இடங்களில், அலுவலகங்களில், சங்கங்களில், அமைப்புகளில் நடுத்தர மக்கள் தான் இலைமறைகாயாக பெருஞ்சக்தியாக விளங்குவார்கள். இவர்கள் `மூளையர்கள்' என்பதால் மறைமுகமாக காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.<br />
<br />
பேராசிரியர் க.ப. அறவாணன் தமிழர்களை அப்பாவித் தமிழர்கள், பாவித் தமிழர்கள் என்று பிரிப்பார். இந்தப் பாவித் தமிழர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.<br />
<br />
சமுதாயத்தில் இலஞ்சம், வரதட்சணை, மதுப்பழக்கம், ஆடம்பரம், நுகர்வுக் கலாசாரம், கடன் கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர்கள் இவர்களே. சாதிச் சங்கங்கள், மதக் கட்சிகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் உந்து சக்திகளாக இருப்பவர்கள் இவர்களே.<br />
<br />
இந்த நடுத்தர மக்கள் தங்களிடமிருக்கும் தன்னலத்தை ஓரளவு விட்டுக் கொடுத்து, சமுதாய உணர்வோடு செயல்பட்டால் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களிடமிருக்கும் பெருங்குறைதான் தனது குடும்பம், சுற்றம், சாதி, மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான். இவர்களிடம் இறை நம்பிக்கை இருக்கும். கொள்கை பேசுவார்கள். ஆனால், தேவை என்றால் மேலே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள். எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். நன்றாக, வசதியாக வாழ மகிழ்ச்சியோடு அடிமைகளாக இருப்பார்கள்.<br />
<br />
இன்றையச் சூழலில் நமது சமுதாயம் மாற வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் இந்த நடுத்தர மக்கள் எழுச்சி பெற்றவர்களாக, சீர்திருத்தச் சிந்தனையாளர்களாகச் செயல்பட வேண்டும்.<br />
<br />
நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்; துலங்கும்.<br />
<br />
நாம் விடுதலைப் போரில் ஈடுபட்டபொழுது காந்தியடிகளின் பின்னால் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் சத்தியாக்கிரகிகளாக, நிர்மாணத் திட்ட ஊழியர்களாக, தொண்டர்களாகச் செயல்பட்டபொழுது மக்கள் சக்தி உருவானது. அன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர மக்கள் அல்லவா?<br />
<br />
விடுதலைக்குப் பின் நடந்திருக்கின்ற அரசியல் ஆட்சி மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். நடுத்தர மக்களால் மேல்மட்ட மக்களையும் கீழ்மட்ட மக்களையும் இணைக்க முடியும். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.<br />
<br />
இன்றுள்ள நமது நாட்டு குழப்பமான அரசியல், பொருளாதார சூழலில் எந்தப் புரட்சிகரமான மாற்றமும் ஏற்படாது. நமது நடுத்தர இனம், மக்களின் உணர்வுகளை மனமாற்றம் செய்துவிடும். சிக்கல்களைப் பட்டியலிடுவார்கள். தீர்வு காண மாட்டார்கள். இந்நிலை தொடர்ந்தால் வன்முறைகள் பெருகிக் கொண்டு போகும். நடுத்தர இனமும் அமைதியாக வாழ முடியாது.<br />
<br />
நடுத்தர மக்களிடம் உண்மையான சமுதாய விழிப்புணர்வு தேவை. சாதி, சமயம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும். லஞ்சம், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்கவும் சுதேசி மனப்பான்மையோடு நமது நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் தங்கள் அளவில் தீமைக்குத் துணை போகாமல் இருக்கவும், தேர்தல் காலங்களில் நல்லவர்களுக்கு வாக்களிக்கவும் உள்ள உறுதியோடு செயல்பட்டால் ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.<br />
<br />
நம்மைச் சுற்றி சமுதாயச் சீர்கேடுகள் மலிந்திருக்க நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியாது. சாக்கடை, தெருவின் நடுவில் ஓடுமானால் கொசுக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது.<br />
<br />
மதில்மேல் பூனையாய், இரண்டுங்கெட்டானாக நடுத்தர இனம் இருக்கக் கூடாது. இருக்கின்ற நிலையில் தெளிந்த அறிவோடு, உறுதியாக நாட்டு நலநோக்கில் நடுத்தர இனம் செயல்பட்டால், விரைவிலேயே நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம்.<br />
<br />
-தினமணி-<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
<a href="http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/28/Article-2.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நடுத்தர இனம் - என்ன செய்யும்?<br />
<br />
மா.பா. குருசாமி<br />
<br />
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.<br />
<br />
மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும்.<br />
<br />
மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுவதை நாம் மறந்துவிட முடியாது. இப்படி மக்களைப் பிரிக்கச் சரியான வரையறையும், தெளிவான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லை. இருந்தாலும் சில அடிப்படை உண்மைகளை உணர, அறிய இந்தப் பகுப்புத் தேவை.<br />
<br />
இன்றைய சூழலில் நமது நாட்டில் மேல்தட்டு மக்களாக யாரைக் கருதலாம்? இலட்சக்கணக்கில் மாத வருவாயும், கோடிக்கணக்கில் சொத்துகளும் வைத்திருப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்றால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இப்பிரிவில் அடங்குவர். இவர்களை உயர் - மேல் மட்டத்தினர் என்று கருதலாம். பொதுவாக, சொந்தமாகத் தொழில் செய்து அல்லது உயர் பதவியிலிருந்து, மாதம் ஐம்பதினாயிரத்திற்கு மேல் வருவாய் பெற்று இலட்சக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்கும் குடும்பத்தினரை மேல் மட்டத்தினராகக் கருதினால், மொத்தத்தில் சுமார் 20 சதவிகிதம் பேர் இப்பிரிவில் வரலாம். இது ஓர் ஊகம் தான்.<br />
<br />
இதற்கு அடுத்த நிலையிலுள்ள நடுத்தர இன மக்களின் மேல் வரம்பையும் அடித்தள நிலையையும் வரையறுப்பது, இன்னும் சிக்கலான பணியாகும். பொதுவாக ஒரு குடும்பத்தில் சராசரி ஓராளுக்கு மாத வருவாய் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெறுபவர்களை நடுத்தர இனத்தவரென்றால், இவர்களையும் சுமார் ஐயாயிரம் வருவாய்க்கு மேல் பெறுபவர்களை மேல்மட்ட நடுத்தர மக்களென்றும், அதற்குக் கீழ் வருவாய் பெறுபவர்களை கீழ்நிலை நடுத்தர மக்களென்றும் பகுக்கலாம். இவர்கள் ஒருவேளை மொத்தத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் இருக்கலாம்.<br />
<br />
மீதி 40 சதவிகிதத்தினரை அடிநிலை மக்கள் என்றால், இவர்களில் 25 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். 15 சதவிகிதத்தினர் அடிப்படைத் தேவைகள் ஓரளவு கிடைக்க வாழ்பவர்கள். இந்த அடிநிலை மக்களிடம் அரசியலில் கட்சி ஈடுபாடு இருக்கின்றது. இன்றைய நிலையில் இவர்கள் தான் `வாக்கு வங்கிகளாக'ச் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமங்களிலும், நகரக் குடிசைப் பகுதிகளிலும் வாழ்பவர்கள்.<br />
<br />
மொத்தத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில் வாழ்பவர்கள். இவர்கள் படித்தவர்கள். அரசுப் பணிகளில், தனியார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். வணிகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளர்களாக இருப்பார்கள்.<br />
<br />
நடுத்தர மக்களிடம் வாழ்க்கை விழிப்புணர்வு இருக்கும். இவர்களில் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர்கள், மேலும் முனைப்போடு மேலே வர முயல்வார்கள். நடுத்தர மக்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் மேல் மட்டத்திற்கு வர பல்வேறு வழிகளை மேற்கொள்வார்கள்.<br />
<br />
பல இடங்களில், அலுவலகங்களில், சங்கங்களில், அமைப்புகளில் நடுத்தர மக்கள் தான் இலைமறைகாயாக பெருஞ்சக்தியாக விளங்குவார்கள். இவர்கள் `மூளையர்கள்' என்பதால் மறைமுகமாக காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.<br />
<br />
பேராசிரியர் க.ப. அறவாணன் தமிழர்களை அப்பாவித் தமிழர்கள், பாவித் தமிழர்கள் என்று பிரிப்பார். இந்தப் பாவித் தமிழர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.<br />
<br />
சமுதாயத்தில் இலஞ்சம், வரதட்சணை, மதுப்பழக்கம், ஆடம்பரம், நுகர்வுக் கலாசாரம், கடன் கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர்கள் இவர்களே. சாதிச் சங்கங்கள், மதக் கட்சிகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் உந்து சக்திகளாக இருப்பவர்கள் இவர்களே.<br />
<br />
இந்த நடுத்தர மக்கள் தங்களிடமிருக்கும் தன்னலத்தை ஓரளவு விட்டுக் கொடுத்து, சமுதாய உணர்வோடு செயல்பட்டால் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களிடமிருக்கும் பெருங்குறைதான் தனது குடும்பம், சுற்றம், சாதி, மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான். இவர்களிடம் இறை நம்பிக்கை இருக்கும். கொள்கை பேசுவார்கள். ஆனால், தேவை என்றால் மேலே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள். எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். நன்றாக, வசதியாக வாழ மகிழ்ச்சியோடு அடிமைகளாக இருப்பார்கள்.<br />
<br />
இன்றையச் சூழலில் நமது சமுதாயம் மாற வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் இந்த நடுத்தர மக்கள் எழுச்சி பெற்றவர்களாக, சீர்திருத்தச் சிந்தனையாளர்களாகச் செயல்பட வேண்டும்.<br />
<br />
நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்; துலங்கும்.<br />
<br />
நாம் விடுதலைப் போரில் ஈடுபட்டபொழுது காந்தியடிகளின் பின்னால் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் சத்தியாக்கிரகிகளாக, நிர்மாணத் திட்ட ஊழியர்களாக, தொண்டர்களாகச் செயல்பட்டபொழுது மக்கள் சக்தி உருவானது. அன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர மக்கள் அல்லவா?<br />
<br />
விடுதலைக்குப் பின் நடந்திருக்கின்ற அரசியல் ஆட்சி மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். நடுத்தர மக்களால் மேல்மட்ட மக்களையும் கீழ்மட்ட மக்களையும் இணைக்க முடியும். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.<br />
<br />
இன்றுள்ள நமது நாட்டு குழப்பமான அரசியல், பொருளாதார சூழலில் எந்தப் புரட்சிகரமான மாற்றமும் ஏற்படாது. நமது நடுத்தர இனம், மக்களின் உணர்வுகளை மனமாற்றம் செய்துவிடும். சிக்கல்களைப் பட்டியலிடுவார்கள். தீர்வு காண மாட்டார்கள். இந்நிலை தொடர்ந்தால் வன்முறைகள் பெருகிக் கொண்டு போகும். நடுத்தர இனமும் அமைதியாக வாழ முடியாது.<br />
<br />
நடுத்தர மக்களிடம் உண்மையான சமுதாய விழிப்புணர்வு தேவை. சாதி, சமயம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும். லஞ்சம், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்கவும் சுதேசி மனப்பான்மையோடு நமது நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் தங்கள் அளவில் தீமைக்குத் துணை போகாமல் இருக்கவும், தேர்தல் காலங்களில் நல்லவர்களுக்கு வாக்களிக்கவும் உள்ள உறுதியோடு செயல்பட்டால் ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.<br />
<br />
நம்மைச் சுற்றி சமுதாயச் சீர்கேடுகள் மலிந்திருக்க நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியாது. சாக்கடை, தெருவின் நடுவில் ஓடுமானால் கொசுக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது.<br />
<br />
மதில்மேல் பூனையாய், இரண்டுங்கெட்டானாக நடுத்தர இனம் இருக்கக் கூடாது. இருக்கின்ற நிலையில் தெளிந்த அறிவோடு, உறுதியாக நாட்டு நலநோக்கில் நடுத்தர இனம் செயல்பட்டால், விரைவிலேயே நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம்.<br />
<br />
-தினமணி-<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
<a href="http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/28/Article-2.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[என் சோக கதைய கேளுங்க...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=501</link>
			<pubDate>Sun, 19 Mar 2006 15:18:15 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=501</guid>
			<description><![CDATA[                    எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...!<br />
<br />
என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்..<br />
<br />
என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்தது. தினமும் எங்களை அப்பாதான் பைக்கில் வைத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார். நான் என் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நான் அப்பா செல்லம். என் அம்மா தையல் வேலைக்கு செல்வார். அம்மா எனக்கு அழகழகான துணிகள் தைத்து தருவார். தினமும் அப்பா ஆட்டோ ஓட்டி முடிந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு மிக்சர் எல்லாம் வாங்கிவருவார். <br />
<br />
எங்கள் சந்தோஷ வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு நாள் அடியோடு மண்ணில் போட்டு புதைத்துவிட்டது.<br />
<br />
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. அந்த பிரச்சினையில் என் அம்மாவுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது மோதல் வந்துகொண்டே இருக்கும். அந்த பிரச்சினையில் என் அம்மா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டார்கள். மோதல் தொடர்ந்ததால் நாங்களும் அவர்களும் மாறிமாறி போலீசில் புகார் செய்தோம். போலீசார் வந்து என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அம்மாவை குற்றஞ்சாட்டினார்கள். அம்மா அழுதார்.<br />
<br />
போலீஸ் வந்தது, விசாரித்தது எல்லாவற்றையும் அப்பா தெரிந்திருக்கவேண்டும். அவர் பைக்கில் திரும்பிவரவில்லை. பைக்கை விற்றுவிட்டதாகச் சொன்னார். அவருடைய கையில் பிரியாணி பொட்டலமும், குளிர் பானமும் இருந்தது.<br />
<br />
அம்மா எங்களை குளிப்பாட்டினார். தலை துவட்டிவிட்டு நல்ல உடைகளை உடுத்தினார். அப்போது அழுதுகொண்டே இருந்தார். நான் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?''-என்று கேட்டேன். அதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லாமல் என்னையும், அண்ணனையும் சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடியே அழுதார். எப்போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் உணவு சாப்பிடுவோம். அப்பா ஏதாவது தமாஷ் செய்துகொண்டே எங்களோடு சாப்பிடுவார். அன்று எந்த தமாசும் இல்லை. இறுகிய முகத்தோடு அவர் எங்களுக்கு பிரியாணி பரிமாறினார். என்னிடமும், அண்ணனிடமும் போதுமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுகேட்டு கொடுத்தார். நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, குளிர்பானத்தை உடைத்து நான்கு கப்களில் ஊற்றினார்கள். `எதற்காக குளிர்பானம் தருகிறீர்கள்?'-என்று நான் கேட்டேன். அதற்கு அப்பா, அம்மா இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை. முதல் இரண்டு கப்களில் இருந்ததை அப்பாவும், அம்மாவும் குடித்தார்கள். அடுத்து அண்ணன் குடித்தான். அவன் குடித்ததும் நான் பருகியதை தட்டிவிட்டு விட்டு, "தங்கச்சி குடித்திடாதே அது விஷம்..''-என்றான். அதற்குள் நான் சிறிதளவு குடித்துவிட்டேன். அடுத்த நிமிடத்திலே எனக்கு தலைசுற்றியது. அப்போது அம்மா மெதுவாக தவழ்ந்து சென்று எல்லோரும் விஷம் குடித்துவிட்டோம் என்ற தகவலை அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சொல்லி விட்டு அப்படியே நிலை குலைந்து விழுந்தார்.<br />
<br />
அம்மாவின் தோழி சிறிது நேரத்திலே காருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்கள். 2002-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கும் எனக்கும் எவ்வளவோ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் இறந்துவிட்டார்கள். நான் மட்டும் இப்போது தனிமரமாக நிற்கிறேன். ஒரு சில உறவினர்கள் வீடுகளில் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டு இப்போது என் பாட்டி ஒமனாவுடன் இருக்கிறேன்.''-என்று அழுகையோடு சொல்லும் அகிலா, பெற்றோரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விடுகிறாள். அந்த சமாதியில் அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அகிலா அம்மாவின் புடவை ஒன்றையும், அப்பாவின் காக்கி சட்டை ஒன்றையும், அண்ணனின் கால்சட்டையையும் தன்னோடு நினைவாக வைத்திருக்கிறாள்.<br />
<br />
"எங்கள் வீடு இப்போது கடனில் இருக்கிறது. அங்குதான் என் குடும்பத்தினரின் சமாதி உள்ளது. அந்த வீட்டை நான் சொந்தமாக்க வேண்டும். நிறைய படித்து வேலை பார்த்து சம்பாதித்து தான் அந்த கடனை என்னால் தீர்க்கமுடியும். இப்போதும் என் பெற்றோரை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் இந்த தற்கொலை நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் அதை பேசி தீர்த்து, சமாளித்திருக்க முடியுமே. பிரச்சினைகளுக்கு தற்கொலையாத் தீர்வு. நான் அனாதையாகி என் குடும்பத்தினரை நினைத்து அழுதுகொண்டிருப்பது போலத்தானே, என்னை நினைத்து என் குடும்பத்தினரின் ஆத்மாவும் அழுது கொண்டிருக்கும்...''- இந்த சிறுமி சொல்வது சரிதான். இனியார் அழுது என்ன பயன்? போன உயிரும் பாசமும் திரும்பிவரவாப் போகிறது. தேவைதானா இப்படிப்பட்ட தற்கொலைகள்...?<br />
Thanks:http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_E.htm                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...!<br />
<br />
என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்..<br />
<br />
என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்தது. தினமும் எங்களை அப்பாதான் பைக்கில் வைத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார். நான் என் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நான் அப்பா செல்லம். என் அம்மா தையல் வேலைக்கு செல்வார். அம்மா எனக்கு அழகழகான துணிகள் தைத்து தருவார். தினமும் அப்பா ஆட்டோ ஓட்டி முடிந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு மிக்சர் எல்லாம் வாங்கிவருவார். <br />
<br />
எங்கள் சந்தோஷ வாழ்க்கை முழுவதையும் அந்த ஒரு நாள் அடியோடு மண்ணில் போட்டு புதைத்துவிட்டது.<br />
<br />
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. அந்த பிரச்சினையில் என் அம்மாவுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது மோதல் வந்துகொண்டே இருக்கும். அந்த பிரச்சினையில் என் அம்மா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டார்கள். மோதல் தொடர்ந்ததால் நாங்களும் அவர்களும் மாறிமாறி போலீசில் புகார் செய்தோம். போலீசார் வந்து என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அம்மாவை குற்றஞ்சாட்டினார்கள். அம்மா அழுதார்.<br />
<br />
போலீஸ் வந்தது, விசாரித்தது எல்லாவற்றையும் அப்பா தெரிந்திருக்கவேண்டும். அவர் பைக்கில் திரும்பிவரவில்லை. பைக்கை விற்றுவிட்டதாகச் சொன்னார். அவருடைய கையில் பிரியாணி பொட்டலமும், குளிர் பானமும் இருந்தது.<br />
<br />
அம்மா எங்களை குளிப்பாட்டினார். தலை துவட்டிவிட்டு நல்ல உடைகளை உடுத்தினார். அப்போது அழுதுகொண்டே இருந்தார். நான் "அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?''-என்று கேட்டேன். அதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லாமல் என்னையும், அண்ணனையும் சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடியே அழுதார். எப்போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் உணவு சாப்பிடுவோம். அப்பா ஏதாவது தமாஷ் செய்துகொண்டே எங்களோடு சாப்பிடுவார். அன்று எந்த தமாசும் இல்லை. இறுகிய முகத்தோடு அவர் எங்களுக்கு பிரியாணி பரிமாறினார். என்னிடமும், அண்ணனிடமும் போதுமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுகேட்டு கொடுத்தார். நாங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு, குளிர்பானத்தை உடைத்து நான்கு கப்களில் ஊற்றினார்கள். `எதற்காக குளிர்பானம் தருகிறீர்கள்?'-என்று நான் கேட்டேன். அதற்கு அப்பா, அம்மா இருவருமே எந்த பதிலும் சொல்லவில்லை. முதல் இரண்டு கப்களில் இருந்ததை அப்பாவும், அம்மாவும் குடித்தார்கள். அடுத்து அண்ணன் குடித்தான். அவன் குடித்ததும் நான் பருகியதை தட்டிவிட்டு விட்டு, "தங்கச்சி குடித்திடாதே அது விஷம்..''-என்றான். அதற்குள் நான் சிறிதளவு குடித்துவிட்டேன். அடுத்த நிமிடத்திலே எனக்கு தலைசுற்றியது. அப்போது அம்மா மெதுவாக தவழ்ந்து சென்று எல்லோரும் விஷம் குடித்துவிட்டோம் என்ற தகவலை அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சொல்லி விட்டு அப்படியே நிலை குலைந்து விழுந்தார்.<br />
<br />
அம்மாவின் தோழி சிறிது நேரத்திலே காருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார்கள். 2002-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கும் எனக்கும் எவ்வளவோ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் இறந்துவிட்டார்கள். நான் மட்டும் இப்போது தனிமரமாக நிற்கிறேன். ஒரு சில உறவினர்கள் வீடுகளில் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டு இப்போது என் பாட்டி ஒமனாவுடன் இருக்கிறேன்.''-என்று அழுகையோடு சொல்லும் அகிலா, பெற்றோரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விடுகிறாள். அந்த சமாதியில் அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அகிலா அம்மாவின் புடவை ஒன்றையும், அப்பாவின் காக்கி சட்டை ஒன்றையும், அண்ணனின் கால்சட்டையையும் தன்னோடு நினைவாக வைத்திருக்கிறாள்.<br />
<br />
"எங்கள் வீடு இப்போது கடனில் இருக்கிறது. அங்குதான் என் குடும்பத்தினரின் சமாதி உள்ளது. அந்த வீட்டை நான் சொந்தமாக்க வேண்டும். நிறைய படித்து வேலை பார்த்து சம்பாதித்து தான் அந்த கடனை என்னால் தீர்க்கமுடியும். இப்போதும் என் பெற்றோரை நினைத்தால் எனக்கு அழுகையாக வருகிறது. ஏன் இந்த தற்கொலை நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் அதை பேசி தீர்த்து, சமாளித்திருக்க முடியுமே. பிரச்சினைகளுக்கு தற்கொலையாத் தீர்வு. நான் அனாதையாகி என் குடும்பத்தினரை நினைத்து அழுதுகொண்டிருப்பது போலத்தானே, என்னை நினைத்து என் குடும்பத்தினரின் ஆத்மாவும் அழுது கொண்டிருக்கும்...''- இந்த சிறுமி சொல்வது சரிதான். இனியார் அழுது என்ன பயன்? போன உயிரும் பாசமும் திரும்பிவரவாப் போகிறது. தேவைதானா இப்படிப்பட்ட தற்கொலைகள்...?<br />
Thanks:http://www.dailythanthi.com/magazines/nyayiru_article_E.htm                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சட் சட்`டென கோபம் வருமா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=539</link>
			<pubDate>Tue, 14 Mar 2006 18:32:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=539</guid>
			<description><![CDATA[                    கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள். <br />
<br />
கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள்.<br />
<br />
சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி கோபம் என்பது அவர்கள் சொத்தாகிப் போவதால் `எதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளணும்` என்று அவரிடம் வீட்டு விஷயம் பற்றி சொல்வதையே தவிர்த்து விடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் நிலைமை சீரியஸாகி விடும்போது, அப்போதும் அந்த குடும்பத் தலைவர் விஷயம் தெரிந்ததும் தாம் தூம் என்று குதிக்கத்தான் போகிறார். அப்போது கூட நாம் சின்ன விஷயத்திற்கும் `சள்`ளென விழுவதால் தான் குடும்பம் நம்மிடம் இது விஷயமாக பேசப்பயந்திருக்கிறது என்பதை அந்த குடும்பத்தலைவர் உணர்ந்து கொள்ளமாட்டார். <br />
<br />
பெரும்பாலும் பொறுப்பை தட்டிக் கழிப்பவர் கள் தான் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கள் சும்மா இருக்கும்போது கூட யாரும் வேலை சொல்லி விடக்கூடாது. உடனே முகம் மாறும். கோபத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கத் தொடங்கி விடும். வார்த்தை களை வாரியிறைக்கத் தொடங்கி விடுவார் கள்.<br />
<br />
இவர்களாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் எல்லாம் சரியாக நடந்திருக்க வேண்டும். கோபப்பட்டே பழகிப்போன இவர்கள் முகத் துக்கு புன்னகையே மறந்து போகும். இவர் களாக எதற்காவது சிரிக்க முயன்றால் கூட அது செயற்கையாக இவர்களுக்கே தோன் றும்.<br />
<br />
இந்த கடுகடு பார்ட்டி இருக்கிற வீடுகளில் எப்போதும் ஒரு அசாதாரண நிலை காணப்படும். வீட்டில் உள்ளவர்களும் இவர்களால் சிரிப்பைத் தொலைத்து விட்டு பரிதாபமாக காட்சி தருவார்கள். எடுத்ததற்கெல்லாம் கோபம் என்பது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு.<br />
<br />
கோபத்தையே தனது முதலீடாக வைத்திருந்த அப்பா அவர். தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகனிடம் கூட ரிங் மாஸ்டர் போலவே நடந்து கொண்டார். சின்னத்தவறு என்றாலும் கூட பெல்ட்டால் விளாசி விடுவார். இதனால் பையன் அவரிடம் பேசவே பயந்தான்.<br />
<br />
ஒரு நாள் பக்கத்து தெரு நண்பனை பார்த்து விட்டு வரும்போது தெருநாய் ஒன்று மகனை கடித்து .லேசாக பல் பதிந்து விட்டது. மகனுக்கு அப்பாவிடம் சொல்ல பயம். அம்மாவிடம் சொல்லவும் பயம். இவனுக்கு அடி விழுந்த கையோடு அம்மாவையும் நாலு சாத்து சாத்தி விடுவார் அப்பா. அதனால் சொல்லாமல் மறைத்து விட்டான். <br />
<br />
நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான். `அய்யோ கோபத்தால் என் ஒரே குலக்கொழுந்தையும் இழந்தேனே ` என்று அழுது புரண்டார் அப்பா. அதற்குப்பிறகு எஞ்சியிருந்த காலங்களில் பாதிபைத்தியமாகத்தான் அவரை பார்க்க முடிந்தது.<br />
<br />
கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா? <br />
<br />
 Thanks:Thanthi...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள். <br />
<br />
கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள்.<br />
<br />
சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி கோபம் என்பது அவர்கள் சொத்தாகிப் போவதால் `எதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளணும்` என்று அவரிடம் வீட்டு விஷயம் பற்றி சொல்வதையே தவிர்த்து விடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் நிலைமை சீரியஸாகி விடும்போது, அப்போதும் அந்த குடும்பத் தலைவர் விஷயம் தெரிந்ததும் தாம் தூம் என்று குதிக்கத்தான் போகிறார். அப்போது கூட நாம் சின்ன விஷயத்திற்கும் `சள்`ளென விழுவதால் தான் குடும்பம் நம்மிடம் இது விஷயமாக பேசப்பயந்திருக்கிறது என்பதை அந்த குடும்பத்தலைவர் உணர்ந்து கொள்ளமாட்டார். <br />
<br />
பெரும்பாலும் பொறுப்பை தட்டிக் கழிப்பவர் கள் தான் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கள் சும்மா இருக்கும்போது கூட யாரும் வேலை சொல்லி விடக்கூடாது. உடனே முகம் மாறும். கோபத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கத் தொடங்கி விடும். வார்த்தை களை வாரியிறைக்கத் தொடங்கி விடுவார் கள்.<br />
<br />
இவர்களாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் எல்லாம் சரியாக நடந்திருக்க வேண்டும். கோபப்பட்டே பழகிப்போன இவர்கள் முகத் துக்கு புன்னகையே மறந்து போகும். இவர் களாக எதற்காவது சிரிக்க முயன்றால் கூட அது செயற்கையாக இவர்களுக்கே தோன் றும்.<br />
<br />
இந்த கடுகடு பார்ட்டி இருக்கிற வீடுகளில் எப்போதும் ஒரு அசாதாரண நிலை காணப்படும். வீட்டில் உள்ளவர்களும் இவர்களால் சிரிப்பைத் தொலைத்து விட்டு பரிதாபமாக காட்சி தருவார்கள். எடுத்ததற்கெல்லாம் கோபம் என்பது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு.<br />
<br />
கோபத்தையே தனது முதலீடாக வைத்திருந்த அப்பா அவர். தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகனிடம் கூட ரிங் மாஸ்டர் போலவே நடந்து கொண்டார். சின்னத்தவறு என்றாலும் கூட பெல்ட்டால் விளாசி விடுவார். இதனால் பையன் அவரிடம் பேசவே பயந்தான்.<br />
<br />
ஒரு நாள் பக்கத்து தெரு நண்பனை பார்த்து விட்டு வரும்போது தெருநாய் ஒன்று மகனை கடித்து .லேசாக பல் பதிந்து விட்டது. மகனுக்கு அப்பாவிடம் சொல்ல பயம். அம்மாவிடம் சொல்லவும் பயம். இவனுக்கு அடி விழுந்த கையோடு அம்மாவையும் நாலு சாத்து சாத்தி விடுவார் அப்பா. அதனால் சொல்லாமல் மறைத்து விட்டான். <br />
<br />
நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான். `அய்யோ கோபத்தால் என் ஒரே குலக்கொழுந்தையும் இழந்தேனே ` என்று அழுது புரண்டார் அப்பா. அதற்குப்பிறகு எஞ்சியிருந்த காலங்களில் பாதிபைத்தியமாகத்தான் அவரை பார்க்க முடிந்தது.<br />
<br />
கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா? <br />
<br />
 Thanks:Thanthi...                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இன்பம் எங்கே?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=560</link>
			<pubDate>Sun, 12 Mar 2006 03:20:21 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=560</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இன்பம் எங்கே? &lt;/b&gt;<br />
இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.<br />
<br />
ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''.<br />
<br />
ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.<br />
<br />
சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.<br />
<br />
நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.<br />
<br />
''தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் ''துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா'' என்று எச்சரிக்கை செய்கிறார்.<br />
<br />
பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.<br />
<br />
எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.<br />
<br />
ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.<br />
<br />
இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.<br />
<br />
நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.<br />
<br />
உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.<br />
<br />
இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்<br />
நன்றி கூடல்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இன்பம் எங்கே? &lt;/b&gt;<br />
இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.<br />
<br />
ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''.<br />
<br />
ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.<br />
<br />
சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.<br />
<br />
நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.<br />
<br />
''தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் ''துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா'' என்று எச்சரிக்கை செய்கிறார்.<br />
<br />
பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.<br />
<br />
எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.<br />
<br />
ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.<br />
<br />
இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.<br />
<br />
நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.<br />
<br />
உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.<br />
<br />
இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்<br />
நன்றி கூடல்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouch]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=570</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 09:45:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=570</guid>
			<description><![CDATA[                    பெரியாரை உலக மயமாக்குவோம்<br />
<br />
கி. வீரமணி<br />
<br />
<br />
பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).<br />
<br />
 திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.<br />
<br />
இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.<br />
<br />
"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (<a href="http://land.archiv.org" target="_blank" rel="noopener" class="mycode_url">http://land.archiv.org</a>) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.<br />
<br />
அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.<br />
<br />
எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?<br />
<br />
பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.<br />
<br />
<br />
﻿<br />
<br />
<br />
á¨Äô ÀÊì¸<br />
<br />
<br />
<a href="http://www.gallup.unm.edu/~smarandache/Periyar.pdf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.gallup.unm.edu/~smarandache/Periyar.pdf</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பெரியாரை உலக மயமாக்குவோம்<br />
<br />
கி. வீரமணி<br />
<br />
<br />
பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).<br />
<br />
 திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.<br />
<br />
இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.<br />
<br />
"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (<a href="http://land.archiv.org" target="_blank" rel="noopener" class="mycode_url">http://land.archiv.org</a>) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.<br />
<br />
அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.<br />
<br />
எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?<br />
<br />
பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.<br />
<br />
<br />
﻿<br />
<br />
<br />
á¨Äô ÀÊì¸<br />
<br />
<br />
<a href="http://www.gallup.unm.edu/~smarandache/Periyar.pdf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.gallup.unm.edu/~smarandache/Periyar.pdf</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞ]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=592</link>
			<pubDate>Wed, 08 Mar 2006 20:31:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=592</guid>
			<description><![CDATA[                    ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞர்கள் - ஜேர்மனியிருந்து சக்தி <br />
ஜேர்மன் சுட்காட் நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்களை ஒரு சில தமிழ் இளைஞர்கள் வலுகட்டாயமாக தங்களுடன் காதல்,மற்றும் கள்ள தொடர்புகளை ஏற்படுத்துமாறு வற்புறுத்தி வருவதாக அறியமுடிகிறது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஜேர்மனியில் சுட்காட் என்னும் நகரபகுதில் தழிழர் அதிகம் வாழுகின்றனர் அங்கு ஓரு சில இளைஞசர்களும் சமுகத்தில் நல்ல பெயர்களுடன் நடமாடும் சில இளைஞசர்களும் குடும்பத்துடன் வாழும் பெண்களினதும் திருமணமாகாமல் படித்துத்கொண்டியிருக்கும் இளம் யுவதிகளினதும் தொலைபேசி இலக்கங்களை இரகசியமான முறைகளில் பெற்று அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டி வருவதாகவும் காதலி,அல்லது திருமணம் செய் அல்லது கள்ளத்தொடர்பு வைத்து கொள் என துன்றுதியும் வருகிறார்களாம். இது விடயத்தில் இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்<br />
 <br />
<a href="http://www.nitharsanam.com/?art=15737" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=15737</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞர்கள் - ஜேர்மனியிருந்து சக்தி <br />
ஜேர்மன் சுட்காட் நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்களை ஒரு சில தமிழ் இளைஞர்கள் வலுகட்டாயமாக தங்களுடன் காதல்,மற்றும் கள்ள தொடர்புகளை ஏற்படுத்துமாறு வற்புறுத்தி வருவதாக அறியமுடிகிறது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஜேர்மனியில் சுட்காட் என்னும் நகரபகுதில் தழிழர் அதிகம் வாழுகின்றனர் அங்கு ஓரு சில இளைஞசர்களும் சமுகத்தில் நல்ல பெயர்களுடன் நடமாடும் சில இளைஞசர்களும் குடும்பத்துடன் வாழும் பெண்களினதும் திருமணமாகாமல் படித்துத்கொண்டியிருக்கும் இளம் யுவதிகளினதும் தொலைபேசி இலக்கங்களை இரகசியமான முறைகளில் பெற்று அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டி வருவதாகவும் காதலி,அல்லது திருமணம் செய் அல்லது கள்ளத்தொடர்பு வைத்து கொள் என துன்றுதியும் வருகிறார்களாம். இது விடயத்தில் இப்படியான தொடர்புகள் வைத்துள்ளவர்கள் பற்றியும் இவ்வாறான இழி செயல்களில் ஈடுபடும் நபர்களின் விபரங்கள் பற்றியும் எமது இனையத்தளத்திற்கு பல மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகள் எம்மிடத்தில் இருந்தாலும் தற்போது தகவல்களை வெளியிட எமது இனையத்தளம் விரும்பவில்லை ஏனவே இவ்வாறான சமுத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவர்கள் தயவு செய்து எமது காலாச்சார பண்புகளை மதித்து நடப்பது எமக்கும் நல்லது எமது இனத்திற்கும் நல்லது நிறுத்தி கொள்ளாத பட்சத்தில் எமது இiயைத்தளத்திற்கு கிடைக்க பெற்ற புகைப்படங்களுடனான பல தரவுகளை தகவல்களை தேவைப்படும் பட்சத்தில் நிதர்சனம் வெளியிடும்<br />
 <br />
<a href="http://www.nitharsanam.com/?art=15737" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=15737</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சர்வதேச மகளிர் தினம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=598</link>
			<pubDate>Wed, 08 Mar 2006 09:34:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2078">கறுப்பி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=598</guid>
			<description><![CDATA[                    சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - <br />
சில கருத்துக்கள்!<br />
<br />
<br />
சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். <br />
<br />
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.<br />
<br />
~சாதாரணப் பெண்கள்| என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.<br />
<br />
அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்;ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம். <br />
<br />
இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.<br />
<br />
அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Women?s Movement  என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.<br />
<br />
சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக்  கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினு}டாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.<br />
<br />
முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம். <br />
<br />
ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபுூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது Biological Foundation ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.<br />
<br />
இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!<br />
<br />
பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?<br />
<br />
எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்;கின்ற கோட்பாடாகும்.  FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நு}ற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நு}ற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நு}ற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.<br />
<br />
முதலாளித்துவதற்;கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.<br />
<br />
ஆனால் Pure Feminists  என்று சொல்லக் கூடிய து}ய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியுூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.<br />
<br />
பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.<br />
<br />
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.<br />
<br />
பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.<br />
<br />
பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL)வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY)என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.<br />
<br />
இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச்  சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.<br />
<br />
தமிழ் நு}ல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நு}ற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.<br />
<br />
உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,<br />
<br />
~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன| <br />
<br />
(தொல்காப்பியம்-பொருள்-களவு-7) <br />
<br />
-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,<br />
<br />
~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல் <br />
நிச்சமும் பெண்பாற் குரிய|<br />
<br />
- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex)  இரக்கம் உடையவளாக (The Gentle sex)  மெல்லியவளாக (the softer sex) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக  (The weaker sex) உருவகிக்கப்படுகின்றாள்.<br />
<br />
சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?<br />
<br />
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் <br />
<br />
மெல்லியற் பொறையும் நிறையும் <br />
<br />
வல்லிதின் விருந்து புறந்தருதலும் <br />
<br />
சுற்றம் ஓம்பலும் <br />
<br />
(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)<br />
<br />
-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.<br />
<br />
அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். <br />
<br />
இவை மட்டுமல்ல நேயர்களே, <br />
<br />
கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நு}ற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.<br />
<br />
சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நு}ல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானு}றில் ஒரு பாடலைப் பார்ப்போம். புூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையுூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.<br />
<br />
~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,<br />
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது, <br />
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம், <br />
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து, <br />
அட்டவேளை வெந்தை வல்சியாக, <br />
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்|- (புறநானு}று 246)<br />
<br />
இந்தப்பாடலின் கருத்தென்ன?<br />
<br />
வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!<br />
<br />
என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.<br />
<br />
பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் து}ண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம்| என்கின்ற நு}ல் கீழ்வருமாறு கூறுகின்றது.<br />
<br />
கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்| - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.<br />
<br />
இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் து}ண்டுகின்றது.<br />
<br />
இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.<br />
<br />
இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நு}ல்களும் புராண நு}ல்களும் பரப்பின.<br />
<br />
கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.<br />
<br />
~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்| என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.<br />
<br />
இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது. <br />
<br />
தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.<br />
<br />
பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.<br />
<br />
பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!<br />
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,<br />
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,<br />
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, <br />
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. <br />
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.<br />
<br />
இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானு}று, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நு}ல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.<br />
 <br />
  <br />
இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.  <br />
  <br />
<a href="http://www.tamilnaatham.com/articles/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilnaatham.com/articles/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - <br />
சில கருத்துக்கள்!<br />
<br />
<br />
சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். <br />
<br />
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.<br />
<br />
~சாதாரணப் பெண்கள்| என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.<br />
<br />
அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்;ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம். <br />
<br />
இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.<br />
<br />
அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Women?s Movement  என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.<br />
<br />
சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக்  கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினு}டாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.<br />
<br />
முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம். <br />
<br />
ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபுூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது Biological Foundation ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.<br />
<br />
இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!<br />
<br />
பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?<br />
<br />
எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்;கின்ற கோட்பாடாகும்.  FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நு}ற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நு}ற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நு}ற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.<br />
<br />
முதலாளித்துவதற்;கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.<br />
<br />
ஆனால் Pure Feminists  என்று சொல்லக் கூடிய து}ய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியுூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.<br />
<br />
பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.<br />
<br />
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.<br />
<br />
பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.<br />
<br />
பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL)வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY)என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.<br />
<br />
இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச்  சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.<br />
<br />
தமிழ் நு}ல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நு}ற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.<br />
<br />
உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,<br />
<br />
~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன| <br />
<br />
(தொல்காப்பியம்-பொருள்-களவு-7) <br />
<br />
-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,<br />
<br />
~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல் <br />
நிச்சமும் பெண்பாற் குரிய|<br />
<br />
- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex)  இரக்கம் உடையவளாக (The Gentle sex)  மெல்லியவளாக (the softer sex) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக  (The weaker sex) உருவகிக்கப்படுகின்றாள்.<br />
<br />
சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?<br />
<br />
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் <br />
<br />
மெல்லியற் பொறையும் நிறையும் <br />
<br />
வல்லிதின் விருந்து புறந்தருதலும் <br />
<br />
சுற்றம் ஓம்பலும் <br />
<br />
(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)<br />
<br />
-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.<br />
<br />
அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். <br />
<br />
இவை மட்டுமல்ல நேயர்களே, <br />
<br />
கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நு}ற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.<br />
<br />
சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நு}ல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானு}றில் ஒரு பாடலைப் பார்ப்போம். புூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையுூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.<br />
<br />
~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,<br />
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது, <br />
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம், <br />
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து, <br />
அட்டவேளை வெந்தை வல்சியாக, <br />
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்|- (புறநானு}று 246)<br />
<br />
இந்தப்பாடலின் கருத்தென்ன?<br />
<br />
வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!<br />
<br />
என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.<br />
<br />
பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் து}ண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம்| என்கின்ற நு}ல் கீழ்வருமாறு கூறுகின்றது.<br />
<br />
கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்| - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.<br />
<br />
இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் து}ண்டுகின்றது.<br />
<br />
இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.<br />
<br />
இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நு}ல்களும் புராண நு}ல்களும் பரப்பின.<br />
<br />
கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.<br />
<br />
~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்| என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.<br />
<br />
இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது. <br />
<br />
தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.<br />
<br />
பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.<br />
<br />
பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!<br />
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,<br />
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,<br />
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, <br />
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. <br />
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.<br />
<br />
இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானு}று, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நு}ல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.<br />
 <br />
  <br />
இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.  <br />
  <br />
<a href="http://www.tamilnaatham.com/articles/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilnaatham.com/articles/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[²Á¡üÈ¢Â ¸¡¾Äý]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=613</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 15:56:36 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=613</guid>
			<description><![CDATA[                    காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும்<br />
<br />
கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர். பொய்கள் கரைந்தன. உண்மை ஞாயிறு உதயமானது. தலைவனின் காதல் ஏமாற்று அம்பலமானது. அவையச் சான்றோர் தண்டனை பணித்தனர். தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையொன்றில் மோசடிக் காதலனை இறுகப் பிணைத்தனர். சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் ஊற்றினர். பொய்க்கும் ஏமாற்றுக்கும் கிடைத்த தண்டனை பொருத்தமானதே என்று ஊரவை நின்ற மக்கள் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.<br />
<br />
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதப் பாடலொன்றின் வழி சங்க காலத்துக் காதல் மோசடியை நம் கவனத்திற்குக் கொணர்கிறார்.<br />
<br />
"தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்<br />
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்<br />
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய<br />
அறனி லாளன் அறியேன் என்ற<br />
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்<br />
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி<br />
நீறுதலைப் பெய்த ஞான்றை<br />
வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே" (அகம் 256)<br />
<br />
<br />
தகவல் : வரலாறு தொகுதி-1, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    காதல் ஏமாற்றும் கள்ளூர்த் தண்டனையும்<br />
<br />
கள்ளூர், பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு செழித்த தோட்டங்களையும் கொண்ட தொல் புகழ் மிக்க எழிலார்ந்த சங்கச் சிற்றூர். இங்கே தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைச் சந்தித்தான். கண்கள் பேசின; காதல் பிறந்தது; களவு வளர்ந்தது. அழகிய நெற்றியினையுடைய அந்த இளையாளின் அணி நலம் கவர்ந்துண்டான் தலைவன். ஆசை தீர்ந்தது. மோகம் முடிந்தது. திருமணம் கேட்ட பெண்ணிடமும் சுற்றத்திடமும் தனக்கு அவளைத் தெரியவே தெரியாது என்று சாதித்து சத்தியம் செய்தான், அறநெறியில்லா அந்தக் கொடுமையாளன். வழக்கு, மன்றத்திற்கு வர, அவையத்துச் சான்றோர் விசாரிக்கத் தொடங்கினர். தலைவனும் தலைவியும் சந்தித்துப் பழகியதையும், நெருங்கிய நிலையில் உறவு கொண்டதையும் கண்டவர் அனைவரும் சான்றாளராயினர். பொய்கள் கரைந்தன. உண்மை ஞாயிறு உதயமானது. தலைவனின் காதல் ஏமாற்று அம்பலமானது. அவையச் சான்றோர் தண்டனை பணித்தனர். தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையொன்றில் மோசடிக் காதலனை இறுகப் பிணைத்தனர். சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் ஊற்றினர். பொய்க்கும் ஏமாற்றுக்கும் கிடைத்த தண்டனை பொருத்தமானதே என்று ஊரவை நின்ற மக்கள் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.<br />
<br />
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், மருதப் பாடலொன்றின் வழி சங்க காலத்துக் காதல் மோசடியை நம் கவனத்திற்குக் கொணர்கிறார்.<br />
<br />
"தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்<br />
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்<br />
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய<br />
அறனி லாளன் அறியேன் என்ற<br />
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்<br />
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி<br />
நீறுதலைப் பெய்த ஞான்றை<br />
வீறுசால் அவையத்(து) ஆர்ப்பினும் பெரிதே" (அகம் 256)<br />
<br />
<br />
தகவல் : வரலாறு தொகுதி-1, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சி.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=620</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 08:43:39 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1468">Snegethy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=620</guid>
			<description><![CDATA[                    ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் <br />
<br />
By டிசே தமிழன்<br />
<br />
எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் வருகின்ற மனவழுத்தமும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று இந்தச் செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறிய நேர்ந்தது.<br />
<br />
இதற்கு முன்பாகவும் இப்படிக் குழந்தைகள் பெறுகின்ற தாயாருக்கு ஏற்படும் அழுத்தத்தினால் தற்கொலைகள், குழந்தைகளைக் கொல்லுதல் நடந்திருப்பதை அறிந்திருக்கின்றேன். மேலும், எமது சமூகம் போன்ற ஒரு மூடிய சமுகத்திற்கு இவ்வாறான விசயங்களுக்காய் ஆலோசனைகள் பெறுவதோ, கலந்துரையாடல்கள் செய்வதோ என்பதோ அவ்வளவு இலகுவில் வாய்த்து விடுவதுமில்லை. அப்படி ஆலோசனைகள் கேட்டால், தங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிகம் மேலோங்கி இருக்கலாம்.<br />
<br />
பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்து விலகியே இருக்கின்றேன். அவ்வாறு இருந்தால் தங்களை 'னடீயர்களாக'மற்ற சமூகத்தினர் அடையாளங்கண்டு கொள்வார்கள் என்று சிலர் நினைக்கும் ‘பெருமிதத்தால்’ அல்ல. எங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிர அட்டூழியங்களைக் கேள்விப்படும்போது அதற்கு எதிராய் ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தமுடியாத என் கையாலகாத நிலையில் வரும் சலிப்பே முக்கிய காரணம் (அதன் காரணமாகவே இதுவரை எந்த தமிழ் வானொலியோ அல்லது தொலைக்காட்சியோ வைத்திருக்கவில்லை).<br />
<br />
எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான் வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களும் அளவில்லாது நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாய் இந்தப்பிரச்சினைகளின்போது குற்றஞ்செய்கின்றவர்கள் தப்பிப்பதற்கு உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘என்ன சாட்சி இருக்கிறது?. அதைக் கொண்டுவா முதலில்’ என்பார்கள். நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருமுறை அதை நினைவுக்கு திருப்பிவர விருப்பமாட்டார்கள் என்பதோடு, அப்படி வெளிப்படையாகப் பேசும்போது இந்தச் ‘சமூகம்’ தங்களைப் பற்றிய பார்வைகளை எப்படி மாற்றிக்கொள்ளும் என்ற பயமும் அதிக சந்தர்ப்பங்களில் முதன்மைபெறுகிறது. இன்னுமே கைம்பெண்களை, விவாகரத்துச் செய்தபெண்களை இயல்பாய் ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் சிறு வயதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்டதை, பதின்மங்களில் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை எப்படி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்கள்?<br />
<br />
அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தனது தோழியொருவர் நித்திரைக்குளிசைகளை எடுத்து தற்கொலைக்கு முயன்றார் என்றார். என்ன நடந்தது என்று தான் தோண்டிக் கேட்டபோது, அந்தப் பெண், தனது ஒன்றுவிட்ட தங்கையின் நிமிர்த்தம் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார் என்று அறிய நேர்ந்ததாம். இந்தப் பெண்ணை ஒரு வருடத்தின் முன் (சித்தப்பாவோ அல்லது பெரியப்பா முறையான) ஒருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியிருக்கின்றார். அந்தப் பெண்ணைச் சிதைத்தது காணாது என்று அந்த ‘ஆண்’ தனது சொந்த மகள் மீதும் அதே சுரண்டலைச் செய்துகொண்டிருக்கும்போது, தனது தங்கைக்கும் தனக்கு நடந்ததுபோன்று நிகழ்கின்றதே தன்னால் எதுவும் செய்யமுடியாது இருக்கிறதே என்ற மனவழுத்தத்தில் இந்தப்பெண் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார். தனக்கு என்னவெல்லாம் அந்த ‘ஆண்’ செய்தார் என்று அந்தப்பெண் விபரித்தபோது, இப்படி எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று மட்டுந்தான் தன்னால் யோசிக்கமுடிந்தது என்று எனது நண்பர் எனக்குக் கூறியிருந்தார். <br />
<br />
பெண்களின் மீதான இப்படியான சுரண்டல்கள் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களோ, கதையாடல்களோ எங்கள் சமூகத்தில் ஆரம்பிக்கப்படாது இருக்கிறது என்பது எவ்வளவு அவலமானது. அண்மையில் யாழில் தர்சினி என்ற பெண்ணை இராணுவம் பாலியல் வல்லுறவாக்கியபோது, ‘கவிதை’ என்று ஒன்றை நான் எழுதியபோது, ஒரு தோழி கூறினார், ‘நீ இன்னொரு இராணுவத்தின் வல்லுறவைப் பெரியவிடயமாய் எழுதுகின்றாய், எங்களைப் போன்ற பெணகள் எங்கள் சமூகத்தின் அண்ணா, மச்சான், அப்பா என்ற ‘உறவுகளாலேயே’ தினமும் சுரணடலுக்குள்ளாகி வருகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?’ என்றார். <br />
<br />
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளைப் பெண்களைத் தவிர வேறு எவராலும் சரியான விதத்தில் அடையாளப்படுத்த முடியாது. பாதிக்கப்படும் பெண்கள் அது குறித்துப் பேசுவதின் மனவழுத்தத்தைப் புரிந்துகொண்டாலும் பிற பெண்களாவது பேச முன்வரவேண்டும். ஆனால் அப்படிப் பேசவரும் பெண்களை நோக்கி நாம பிரச்ச்சினைகளில் விரிவையும் ஆழத்தைப் பற்றி அக்கறையில்லாது, நாம் முதலில் கேட்கின்ற/யோசிக்கின்ற கேள்விகளும், ‘இது உனக்கு நடந்ததா?’ என்பதுமாதிரி இருப்பதுதான் இன்னும் மிகவும் அபத்தமானது. சாதாரண விடயங்களை எழுதவருகின்ற பெண்களையே எத்தனையோ விதத்தில் நமது ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைத் துரத்துவதில், அவர்களில் குரல்களை மெளனமாக்குவதில்தானே நாம் அக்கறை கொள்கின்றோம். வலைப்பதிவுகளில் கூட இவை நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவில்லையா என்ன?<br />
<br />
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்துகின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அதிகம் அடக்கியிருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன்.<br />
<br />
சென்ற வருடம், பெணகள் சந்திப்பு மலர் பற்றிய ஒரு கலந்துரையாடலில், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நிறைய எழுதப்பட்டு நமது தமிழ் வெகுசன் மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அப்படி வெளிவருகின்றபோது, பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் குழ்ந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் இன்னும் கவனத்துடன், பாதுகாப்புடன் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டது. எனக்கு ஜீனியர் விகடன் இன்ன்பிற ‘வெகுசன’ ஊடகங்களில் இந்தமாதிரிச் சம்பவங்கள் வரும்போது ஏற்படும் கோபத்தையும் குறிப்பிடவேண்டும். இவ்வாறான ஊடகங்களுக்கு அந்தச் சம்பவங்களின் கோரத்தை விட அதை எப்படி ஒருவித ‘கிளுகிளுப்புடன்’ வாசகர்களுக்கு வழங்குவது என்பதில்தான் கவனம் இருக்கும் (தமிழ்ப்படங்களில் rape காட்சிகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, அந்தப்பெண்ணை ‘அந்தக்காட்சியில்’ கிளுகிளுப்பாய்’ காட்டுவதற்கு கொஞ்சமும் சளைத்தவையல்ல, பத்திரிக்கைகளும்). பாலியல் என்பது மறுக்கப்படவேண்டிய விடயமல்ல. ஆனால் பாலியல் இச்சைக்கும் இவ்வாறான பலவந்தங்களுக்கும் இடையில் வேறுபாடு காணமுடியாத அளவில் நமது ஊடகங்களும் இருப்பதுதான் இன்னும் கோரமானது. <br />
<br />
நான் மேலே கூறிய தற்கொலை செய்ய முயன்ற பெண்ணின் தாயாருக்கு இன்னும் ஏன் தனது மகள் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியாது. இப்படித்தான் பல விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. அந்தப்பெண் எனது நண்பருடன் பலவருடங்களாய் தோழமையாய் இருந்தாலும், தன்னைத் தனது தோழியும் ‘தவறாகப் பார்த்துவிடுவார்’ என்று எண்ணத்தில் இந்த விடயத்தை இவ்வளவு காலமும் பகிராமல் இருந்திருக்கின்றார். எனது நண்பரும், ‘நீ எதுவும் பிழை செய்யவில்லை இதற்காய் வருந்திக்கொண்டிருப்பதில் எந்தப் பலனுமில்லை. வாழ்க்கையின் நல்ல விடயங்களை நோக்கி நகர்வதுதான் உத்தம்ம’ என்று கூறியிருக்கின்றார். எப்படி இராணுவத்தால், சாதாரண ஆணால் பாலியல் வல்லுறவாக்கப்பட்டாலும், அது பெண்களின் ‘மிகப்பெரும் தவறாக’ நமது சமூகம் பெண்களின் சிந்தனைகளை ‘அழகாக’ வடிவமைத்து வைத்திருக்கின்றது. வியப்பு என்னவென்றால், திருமணம் போன்றவற்றிற்கு முன், ‘விலைமாதரோடு’, ‘இன்னொரு பெண்ணோடு’ உறவு வைத்திருந்த ஆண்கள் பற்றி நாம் எதையும் கதைப்பதுமில்லை, கவலைபபடுவதுமில்லை. இப்படியான சம்பவங்களோடு போய் திருமணஞ் செய்கின்ற எந்த ஆணும் ‘தனது பழைய நிலையை’ நினைத்து வருந்தியதாய், மன்னிப்புக்கேட்டதாய் எங்கேயும் வாசித்தாயும் (எனக்கு) நினைவில்லை. <br />
<br />
ரொரண்டோவில் பத்து வருடங்களுக்கு முன்பு பத்துப் பேரைக்கொலையும், பதின்நான்கு பேரை பாலியல் வல்லுறவாக்கியது என்று ஒரு வெள்ளையரைப் பற்றி வழக்குப் பற்றி அணமையில் பேசப்பட்டபோது, அவர் தான் இன்னும் பத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாய் நீதிமன்றத்தில் அறிவித்தபோதும், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்களும் சாட்சி கூறுவதற்கு வரவில்லை. அதுகுறித்து ஒரு உளவியல் நிபுணர், ‘இந்த நபரால பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த சம்பவத்தை மறந்து வாழ்வில் நகர்ந்துகொண்டிருக்கலாம். எனவே அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர விரும்பாததால் சாட்சி கூற வரவிருமபியிருக்கமாட்டார்கள்’ என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.<br />
<br />
தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு. சில வருடங்களுக்கு முன், இங்குள்ள மூத்தகுடிமகன் (First Nation) ஒருவரை ஒரு ஊர்வலத்தில் அநியாயமாய் கொன்ற ஒரு பொலிஸ் உயரதிகாரி ஒரு வீதி விபத்தில் சென்றவாரம் கொல்லப்பட்டபோதும் இதையே நினைத்திருந்தேன் (அவருடைய வழக்கு இன்னும் சில வாரங்க்களில் நீதிமன்றத்துக்கு வர இருந்தது). அப்படித்தான் நமது சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு அநியாயங்களை அறியும்போது இதை -வினை விதைத்தவன் வினை அறுப்பான்- என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்.<br />
<br />
இந்தத்தருணம், எழுத்து என்னை -எல்லாவற்றிலுமிருந்தும்- ஆற்றும் என்று நினைத்துக்கொண்டிருந்ததை இரண்டாவது முறையாகத் தவறு என்பதைப் பொய்ப்பிக்கின்றது. எல்லாவற்றையும் மீறி இந்தக்கணத்தில் (ஒரு மகளையே தகப்பன் பாலியல் சுரண்டல் செய்வதை அறிந்துகொண்டும் எதுவுமே செய்யவியலாத நிலையில்) ஒரு ஆணாய் இருப்பதில் மிகவும் வெட்கப்படுகின்றேன். <br />
<br />
[url]<br />
<a href="http://elanko.net/pathivu/?p=123%5B/url" target="_blank" rel="noopener" class="mycode_url">]http://elanko.net/pathivu/?p=123</a>[/url]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் <br />
<br />
By டிசே தமிழன்<br />
<br />
எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் வருகின்ற மனவழுத்தமும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று இந்தச் செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறிய நேர்ந்தது.<br />
<br />
இதற்கு முன்பாகவும் இப்படிக் குழந்தைகள் பெறுகின்ற தாயாருக்கு ஏற்படும் அழுத்தத்தினால் தற்கொலைகள், குழந்தைகளைக் கொல்லுதல் நடந்திருப்பதை அறிந்திருக்கின்றேன். மேலும், எமது சமூகம் போன்ற ஒரு மூடிய சமுகத்திற்கு இவ்வாறான விசயங்களுக்காய் ஆலோசனைகள் பெறுவதோ, கலந்துரையாடல்கள் செய்வதோ என்பதோ அவ்வளவு இலகுவில் வாய்த்து விடுவதுமில்லை. அப்படி ஆலோசனைகள் கேட்டால், தங்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் அதிகம் மேலோங்கி இருக்கலாம்.<br />
<br />
பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்திலிருந்து விலகியே இருக்கின்றேன். அவ்வாறு இருந்தால் தங்களை 'னடீயர்களாக'மற்ற சமூகத்தினர் அடையாளங்கண்டு கொள்வார்கள் என்று சிலர் நினைக்கும் ‘பெருமிதத்தால்’ அல்ல. எங்கள் சமூகத்தில் நடக்கும் பல அக்கிர அட்டூழியங்களைக் கேள்விப்படும்போது அதற்கு எதிராய் ஒரு சிறு சலனத்தையும் ஏற்படுத்தமுடியாத என் கையாலகாத நிலையில் வரும் சலிப்பே முக்கிய காரணம் (அதன் காரணமாகவே இதுவரை எந்த தமிழ் வானொலியோ அல்லது தொலைக்காட்சியோ வைத்திருக்கவில்லை).<br />
<br />
எங்கள் சமூகத்தில் பெண்கள் மீதான் வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்களும் அளவில்லாது நடந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாய் இந்தப்பிரச்சினைகளின்போது குற்றஞ்செய்கின்றவர்கள் தப்பிப்பதற்கு உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை, ‘என்ன சாட்சி இருக்கிறது?. அதைக் கொண்டுவா முதலில்’ என்பார்கள். நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், இன்னொருமுறை அதை நினைவுக்கு திருப்பிவர விருப்பமாட்டார்கள் என்பதோடு, அப்படி வெளிப்படையாகப் பேசும்போது இந்தச் ‘சமூகம்’ தங்களைப் பற்றிய பார்வைகளை எப்படி மாற்றிக்கொள்ளும் என்ற பயமும் அதிக சந்தர்ப்பங்களில் முதன்மைபெறுகிறது. இன்னுமே கைம்பெண்களை, விவாகரத்துச் செய்தபெண்களை இயல்பாய் ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் சிறு வயதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்டதை, பதின்மங்களில் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை எப்படி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்கள்?<br />
<br />
அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தனது தோழியொருவர் நித்திரைக்குளிசைகளை எடுத்து தற்கொலைக்கு முயன்றார் என்றார். என்ன நடந்தது என்று தான் தோண்டிக் கேட்டபோது, அந்தப் பெண், தனது ஒன்றுவிட்ட தங்கையின் நிமிர்த்தம் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார் என்று அறிய நேர்ந்ததாம். இந்தப் பெண்ணை ஒரு வருடத்தின் முன் (சித்தப்பாவோ அல்லது பெரியப்பா முறையான) ஒருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியிருக்கின்றார். அந்தப் பெண்ணைச் சிதைத்தது காணாது என்று அந்த ‘ஆண்’ தனது சொந்த மகள் மீதும் அதே சுரண்டலைச் செய்துகொண்டிருக்கும்போது, தனது தங்கைக்கும் தனக்கு நடந்ததுபோன்று நிகழ்கின்றதே தன்னால் எதுவும் செய்யமுடியாது இருக்கிறதே என்ற மனவழுத்தத்தில் இந்தப்பெண் தற்கொலை செய்ய முயன்றிருக்கின்றார். தனக்கு என்னவெல்லாம் அந்த ‘ஆண்’ செய்தார் என்று அந்தப்பெண் விபரித்தபோது, இப்படி எந்தப்பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று மட்டுந்தான் தன்னால் யோசிக்கமுடிந்தது என்று எனது நண்பர் எனக்குக் கூறியிருந்தார். <br />
<br />
பெண்களின் மீதான இப்படியான சுரண்டல்கள் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களோ, கதையாடல்களோ எங்கள் சமூகத்தில் ஆரம்பிக்கப்படாது இருக்கிறது என்பது எவ்வளவு அவலமானது. அண்மையில் யாழில் தர்சினி என்ற பெண்ணை இராணுவம் பாலியல் வல்லுறவாக்கியபோது, ‘கவிதை’ என்று ஒன்றை நான் எழுதியபோது, ஒரு தோழி கூறினார், ‘நீ இன்னொரு இராணுவத்தின் வல்லுறவைப் பெரியவிடயமாய் எழுதுகின்றாய், எங்களைப் போன்ற பெணகள் எங்கள் சமூகத்தின் அண்ணா, மச்சான், அப்பா என்ற ‘உறவுகளாலேயே’ தினமும் சுரணடலுக்குள்ளாகி வருகின்றார்கள் என்பதை நீ அறிவாயா?’ என்றார். <br />
<br />
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளைப் பெண்களைத் தவிர வேறு எவராலும் சரியான விதத்தில் அடையாளப்படுத்த முடியாது. பாதிக்கப்படும் பெண்கள் அது குறித்துப் பேசுவதின் மனவழுத்தத்தைப் புரிந்துகொண்டாலும் பிற பெண்களாவது பேச முன்வரவேண்டும். ஆனால் அப்படிப் பேசவரும் பெண்களை நோக்கி நாம பிரச்ச்சினைகளில் விரிவையும் ஆழத்தைப் பற்றி அக்கறையில்லாது, நாம் முதலில் கேட்கின்ற/யோசிக்கின்ற கேள்விகளும், ‘இது உனக்கு நடந்ததா?’ என்பதுமாதிரி இருப்பதுதான் இன்னும் மிகவும் அபத்தமானது. சாதாரண விடயங்களை எழுதவருகின்ற பெண்களையே எத்தனையோ விதத்தில் நமது ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைத் துரத்துவதில், அவர்களில் குரல்களை மெளனமாக்குவதில்தானே நாம் அக்கறை கொள்கின்றோம். வலைப்பதிவுகளில் கூட இவை நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவில்லையா என்ன?<br />
<br />
பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளை பதிவு செய்ய முயல்கின்றவர்கள் என்றளவில் கறுப்பி, பத்மா (தேன்துளி), பொடிச்சி, நிரூபா போன்றவர்களைக் குறிப்பிடவேண்டும். கறுப்பியின் சில கருத்துக்களோடு முரண்பாடு இருந்தாலும், எதற்கும் பயப்பிடாமல் பல விடயங்களை -முக்கியமாய்- புலம்பெயர் வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார். பத்மாவின் துறைசார்ந்த அக்கறையும் தேர்வும் இவை குறித்த விடயங்களில் இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு எழுதியது மட்டுமில்லாது, தனது நோக்கில் தீர்வுகளையும் முன்வைக்கின்றார். அதேபோன்று பொடிச்சி, இதுவரை நாம் பீடங்களில் அமர்த்தி ‘அழகு’ பார்த்துக்கொண்டிருந்த இலக்கியமேதாவிகளை பெண்களின் பார்வையில் கேள்விப்படுத்துகின்றார். அவர் கடைசியாக எழுதிய ஒரு பதிவு -சற்று நீண்டதாக இருந்தாலும்- மிக முக்கியமானது. நிரூபாவின் கதைகளில் பல குழந்தைகள் மீது நமது சமூகம் நடத்துகின்ற வன்முறையைப் பற்றிக்கூறுகின்றன. ‘சுணைக்கிது’ என்கின்ற அவரது அணமைய வெளியீடான தொகுப்புக்கூட குழந்தைகள் மீதான வன்முறையை உள்ளடக்கிய கதைகளைத்தான் அதிகம் அடக்கியிருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன்.<br />
<br />
சென்ற வருடம், பெணகள் சந்திப்பு மலர் பற்றிய ஒரு கலந்துரையாடலில், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நிறைய எழுதப்பட்டு நமது தமிழ் வெகுசன் மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அப்படி வெளிவருகின்றபோது, பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் குழ்ந்தைகள் மீது அக்கறையுள்ளவர்கள் இன்னும் கவனத்துடன், பாதுகாப்புடன் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்றும் கூறப்பட்டது. எனக்கு ஜீனியர் விகடன் இன்ன்பிற ‘வெகுசன’ ஊடகங்களில் இந்தமாதிரிச் சம்பவங்கள் வரும்போது ஏற்படும் கோபத்தையும் குறிப்பிடவேண்டும். இவ்வாறான ஊடகங்களுக்கு அந்தச் சம்பவங்களின் கோரத்தை விட அதை எப்படி ஒருவித ‘கிளுகிளுப்புடன்’ வாசகர்களுக்கு வழங்குவது என்பதில்தான் கவனம் இருக்கும் (தமிழ்ப்படங்களில் rape காட்சிகளில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, அந்தப்பெண்ணை ‘அந்தக்காட்சியில்’ கிளுகிளுப்பாய்’ காட்டுவதற்கு கொஞ்சமும் சளைத்தவையல்ல, பத்திரிக்கைகளும்). பாலியல் என்பது மறுக்கப்படவேண்டிய விடயமல்ல. ஆனால் பாலியல் இச்சைக்கும் இவ்வாறான பலவந்தங்களுக்கும் இடையில் வேறுபாடு காணமுடியாத அளவில் நமது ஊடகங்களும் இருப்பதுதான் இன்னும் கோரமானது. <br />
<br />
நான் மேலே கூறிய தற்கொலை செய்ய முயன்ற பெண்ணின் தாயாருக்கு இன்னும் ஏன் தனது மகள் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியாது. இப்படித்தான் பல விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. அந்தப்பெண் எனது நண்பருடன் பலவருடங்களாய் தோழமையாய் இருந்தாலும், தன்னைத் தனது தோழியும் ‘தவறாகப் பார்த்துவிடுவார்’ என்று எண்ணத்தில் இந்த விடயத்தை இவ்வளவு காலமும் பகிராமல் இருந்திருக்கின்றார். எனது நண்பரும், ‘நீ எதுவும் பிழை செய்யவில்லை இதற்காய் வருந்திக்கொண்டிருப்பதில் எந்தப் பலனுமில்லை. வாழ்க்கையின் நல்ல விடயங்களை நோக்கி நகர்வதுதான் உத்தம்ம’ என்று கூறியிருக்கின்றார். எப்படி இராணுவத்தால், சாதாரண ஆணால் பாலியல் வல்லுறவாக்கப்பட்டாலும், அது பெண்களின் ‘மிகப்பெரும் தவறாக’ நமது சமூகம் பெண்களின் சிந்தனைகளை ‘அழகாக’ வடிவமைத்து வைத்திருக்கின்றது. வியப்பு என்னவென்றால், திருமணம் போன்றவற்றிற்கு முன், ‘விலைமாதரோடு’, ‘இன்னொரு பெண்ணோடு’ உறவு வைத்திருந்த ஆண்கள் பற்றி நாம் எதையும் கதைப்பதுமில்லை, கவலைபபடுவதுமில்லை. இப்படியான சம்பவங்களோடு போய் திருமணஞ் செய்கின்ற எந்த ஆணும் ‘தனது பழைய நிலையை’ நினைத்து வருந்தியதாய், மன்னிப்புக்கேட்டதாய் எங்கேயும் வாசித்தாயும் (எனக்கு) நினைவில்லை. <br />
<br />
ரொரண்டோவில் பத்து வருடங்களுக்கு முன்பு பத்துப் பேரைக்கொலையும், பதின்நான்கு பேரை பாலியல் வல்லுறவாக்கியது என்று ஒரு வெள்ளையரைப் பற்றி வழக்குப் பற்றி அணமையில் பேசப்பட்டபோது, அவர் தான் இன்னும் பத்துக்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாய் நீதிமன்றத்தில் அறிவித்தபோதும், பாதிக்கப்பட்ட எந்தப் பெண்களும் சாட்சி கூறுவதற்கு வரவில்லை. அதுகுறித்து ஒரு உளவியல் நிபுணர், ‘இந்த நபரால பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த சம்பவத்தை மறந்து வாழ்வில் நகர்ந்துகொண்டிருக்கலாம். எனவே அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர விரும்பாததால் சாட்சி கூற வரவிருமபியிருக்கமாட்டார்கள்’ என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.<br />
<br />
தனிப்பட்டவளவில் எதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு. சில வருடங்களுக்கு முன், இங்குள்ள மூத்தகுடிமகன் (First Nation) ஒருவரை ஒரு ஊர்வலத்தில் அநியாயமாய் கொன்ற ஒரு பொலிஸ் உயரதிகாரி ஒரு வீதி விபத்தில் சென்றவாரம் கொல்லப்பட்டபோதும் இதையே நினைத்திருந்தேன் (அவருடைய வழக்கு இன்னும் சில வாரங்க்களில் நீதிமன்றத்துக்கு வர இருந்தது). அப்படித்தான் நமது சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு அநியாயங்களை அறியும்போது இதை -வினை விதைத்தவன் வினை அறுப்பான்- என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்.<br />
<br />
இந்தத்தருணம், எழுத்து என்னை -எல்லாவற்றிலுமிருந்தும்- ஆற்றும் என்று நினைத்துக்கொண்டிருந்ததை இரண்டாவது முறையாகத் தவறு என்பதைப் பொய்ப்பிக்கின்றது. எல்லாவற்றையும் மீறி இந்தக்கணத்தில் (ஒரு மகளையே தகப்பன் பாலியல் சுரண்டல் செய்வதை அறிந்துகொண்டும் எதுவுமே செய்யவியலாத நிலையில்) ஒரு ஆணாய் இருப்பதில் மிகவும் வெட்கப்படுகின்றேன். <br />
<br />
[url]<br />
<a href="http://elanko.net/pathivu/?p=123%5B/url" target="_blank" rel="noopener" class="mycode_url">]http://elanko.net/pathivu/?p=123</a>[/url]                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு!!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=669</link>
			<pubDate>Tue, 28 Feb 2006 22:23:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=669</guid>
			<description><![CDATA[                    [b]இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு Phishing<br />
(Online Credit Card Fraud) <br />
  <br />
Credit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்<br />
<br />
இலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.<br />
<br />
Spoofing, Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு அறியப்படுகிறது. fishing என்றால் தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிப்பதைக் குறிக்கிறது, Phishing என்றால், அதே பாணியில், தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் மனிதர்களைப் பிடிப்பது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் உருவானதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.<br />
<br />
இப்போது கொஞ்சம் உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கலாம். வங்கிக் கடன்அட்டைகள் தற்போது பரவலாக மென்வலைச் சஞ்சாரத்தில் பாவிக்கப்படுவதால், அதையே தமக்கான ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, இந்த இரகசியத் திருட்டில் தினமும் பல ஆயிரம் திருடர்கள் முழுநேரத் தொழிலாய் இறங்கி நிறையவே சம்பாதிக்கிறார்கள்.<br />
<br />
அப்படி என்னதான் நடக்கிறது?<br />
<br />
நாங்கள் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் நிறுவனங்களான வங்கிகள், பணமாற்று நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஏனைய கடனட்டைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், மென்வலை வர்த்தக நிறுவனங்கள் போன்றன உட்பட அரசகரும விவகாரங்களுக்கான பலவித அமைச்சுக்கள், நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் இவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு 'encrypted' வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை யாரும் திருடுவது அத்தனை எளிதல்ல. அதனால், நாம் 'ஒன்லைன்' அதாவது மென்வலையூடாக பரிமாறும் தகவல்கள் உருவப்படுவது மிகவும் அபூர்வம்.<br />
<br />
ஆனால், இப்படி இரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக, மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த 'phishing' என்ற சதிவலைத் திட்டம்.<br />
<br />
இதை இலகுவாக விளக்குவதற்காக நமக்குப் பரிட்சயமான உதாரணமொன்றை எடுத்துக் கொள்வோம்.<br />
<br />
துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.<br />
<br />
இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.<br />
<br />
எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.<br />
<br />
மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். தற்காலிக இந்த இடைநிறுத்த அறிவிப்பை தனது திறமையால் உடனடியாக பதிலனுப்பி தவிர்த்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி, கொலரைத் தூக்கிவிடுகிறார்.<br />
<br />
ஆனால் பாவம் துரை. இங்கேதான் இந்த 'phishing' என்ற திருட்டு, எந்தப் பாவமும் செய்யாத துரையைப் பதம் பார்த்துவிட்டதை உணர மறந்துவிட்டார்.<br />
<br />
நடந்தது என்ன?<br />
<br />
வங்கி உண்மையில் அனுப்பும் அதே ஈமெயிலைப் பிரதிசெய்து, அவர்களது 'லோகோ', அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால், பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.<br />
<br />
இப்போது துரை அனுப்பிய பதில், வேறு யாரிடமோ சென்றுவிடுகிறது. துரையின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், துரையின் கடன்அட்டை பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் பாவிக்கப்பட்டு விடுகிறது.<br />
<br />
யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?<br />
<br />
யாரும் கோபிக்க வேண்டாம். இந்தத் திருட்டில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், ஒன்றுமறியா அப்பாவிகளாக 'நாமுண்டு நம்ம வேலையுண்டு' என்று, காலாகாலத்தில் சரியானவற்றை மட்டும் செய்துவிட்டு, சிவனே என்று இருக்கும் நல்லவர்கள் தான் என்கிறது ஆய்வுகள்.<br />
<br />
குறிப்பாக, ஈ-பே (e-bay), பே-பால் (Pay-pal), கனடியன் ரயர் (Canadian Tire), பே (Bay), சனக்கோ (Sunocco) போன்ற பல எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுடன், 'ஒன்லைன்' தொடர்பு வைத்திருக்கும் அனைவரும், மிக அதிகமாக இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்தும் தகவல் கேட்டு ஈமெயில் வந்தால், உடனே விபரங்களை பதிலாக அனுப்புவதை உடனே நிறுத்திக் கொள்வதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. வந்திருக்கும் ஈமெயில் உண்மையானதா இல்லையா என்று தெரியாமல், எப்படி அதை உதாசீனம் செய்வது என்று நீங்கள் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான். அப்படி நீங்கள் நினைக்குமளவிற்கு அந்த ஈமெயில் உண்மையானதாகப் பட்டால், மாற்றுவழியைப் பயன்படுத்துங்கள். இரண்டு மாற்றுவழிகள் உண்டு. ஒன்று, அந்த நிறுவனத்தின் உண்மையான ஈமெயில் முகவரியை அவர்களது இணையத்தளத்திலிருந்து பெற்று, அதற்கு நேரடியாக விபரங்களை அனுப்புங்கள். அவர்களுக்கு உங்கள் விபரம் தேவைப்படாவிட்டாலும், ஆபத்து எதுவும் இல்லை. இரண்டாவது, அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கொடுங்கள். <br />
<br />
எந்தக் காரணத்தைக் கொண்டும், கடன்அட்டை பாவிக்கும் நிறுவனங்கள் எதிலிருந்தும் வருகின்ற ஈமெயில் தொடர்புகளுக்கு, விபரங்களுடன்கூடிய பதில் அனுப்பி விடாதீர்கள். கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது அகப்படும் ஒன்றை சுண்டி இழுக்கலாம் என்றுதானே! இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்பட்டுக்கொள்பவரை சுண்டி இழுப்பதற்காக 'கண்ணில் எண்ணெய் விட்டபடி' காத்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இந்த திருட்டு குறித்த வரலாறு<br />
<br />
1996ல், AOL எனப்படும் அமெரிக்கன் ஒன்லைன் ஈமெயில் மற்றும் இன்ரர்நெற் சேவையில், கட்டணமின்றி களவாக இணைந்துகொள்ள விரும்பிய சில திருட்டு இணையப் பாவனையாளர்கள், AOL பாவனையாளர்களுக்கு பொய்யான ஈமெயில்களை அனுப்பி, அவர்களது தகைமைச்சொல்லை (password) பெற்றுக்கொண்டு, இணையத்தில் இலவச திருட்டு உல்லாசமும் சல்லாபமும் நடாத்தினார்கள் திருடர்கள்.<br />
<br />
இது நாளடைவில், தூதுபோகு செயலிகளிலும் (Messenger) உடன்தூதுபோகு செயலிகளிலும் (Instant Messenger) தொற்றிக்கொண்டு, தகைமைச்சொல்லை இலகுவாகப் பெற்று, தங்கள் கிரிமினல் செயல்களுக்கு பாவித்து வந்தனர். Verify your Password’ அதாவது 'தகைமைச்சொல்லை மீண்டும் உறுதிசெய்யவும்' என்று ஈமெயில் வந்ததும், நாம் எம்மையறியாமல் எமது தகைமைச்சொல்லை அதிலே இட்டு சொடுக்கிவிட, திருடர்கள் லாவகமாக அவற்றைப்பெற்று பாவித்துவந்தார்கள்.<br />
<br />
தற்போது வங்கிக் கடன் அட்டைகளின் இலக்கங்களை மீள உறுதிசெய்யும்படி ஈமெயில் அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. ஒரு இணையத்தளத்தை அல்லது ஈமெயிலை, அதன் எச்.ரி.எம்.எல். (HTML) திகுப்பாளர் தரவைப் பயன்படுத்தி, இலகுவாக மீள்பிரதி செய்யலாம் என்பதால், அதை தங்களுக்கான சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தும் திருடர்கள், இலகுவாக பாவனையாளர்களை ஏமாற்றிவிட முடிகிறது.<br />
<br />
பிந்திய கணிப்புகளின்படி, 2003 யூன் மாதத்திலிருந்து 2004 யூன் மாதம்வரை, 6,957 பேர், இத்தகைய கடனட்டை திருட்டில் சிக்கிக் கொண்டார்கள் என்றும், 2005 யூன் மாதம் வரை, 15,050 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வருடாவருடம் கிட்டத்தட்ட மூன்றுமடங்காக இந்த திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.<br />
<br />
இந்தத் திருடர்களைப் பிடிக்க என்ன வழி?<br />
<br />
இந்தத் திருட்டைச் செய்யும் ஒரு தனிநபர், கிட்டத்தட்ட பல இலட்சம் பாவனையாளர்களுக்கு இந்த ஈமெயிலை அனுப்புகிறார். இவர் அனுப்பும் பல இலட்சம் ஈமெயில்களில், சில பாவனையாளர்களாவது இதனை நம்பி, கடனட்டை விபரங்கள் அல்லது பாஸ்வேர்ட் (தகைமைச்சொல் அல்லது கடவுச்சொல்) போன்ற முக்கிய தகவல்களை அனுப்பி வைக்கிறார்கள். இவற்றை சேகரிக்கும் இந்நபர், ஒரு கடனட்டை இலக்கத்திற்கு கிட்டத்தட்ட 2 டொலர் என்ற அடிப்படையில், 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் கடனட்டை தகவல்களை ஒரு நேரத்தில் இன்னுமொருவருக்கு விற்று விடுகிறார். 2 டொலர் கொடுத்து, இந்த கடனட்டை விபரங்களை வாங்குபவர், அதே நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டுமென்ற நியதியெதுவும் இல்லை.<br />
<br />
அண்மையில் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவல்களின்படி, இப்படி கடனட்டை விபரங்களை தொகையாகப் பெறுபவர்கள், அதிகம் உக்ரெய்ன், பிரேசில், கியூபா, போலந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் தங்கள் தற்காலிக தளங்களை வைத்துள்ள சர்வதேச திருடர்கள் என்று தெரியவந்துள்ளது.<br />
<br />
சென்ற வருடம் உண்மையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவலொன்றை உதாரணத்திற்கு இங்கே தருகிறேன்:<br />
<br />
அமெரிக்காவில் தனது கடனட்டையில் ஆயிரம் டொலர்கள் எடுக்கப்பட்டதை அவதானித்த ஒரு பெண்மணி, அந்தப் பணம் எடுக்கப்பட்ட நிறுவனத்தின் விபரங்களை தானே தேடி ஆராய்ந்து கண்டறிந்து, அந்நிறுவனத்தை அழைத்துள்ளார். அப்படி அழைத்தபோது, மறுபக்கத்தில் பதிலளித்தவர் வேறு ஒரு மாநிலத்தில் வாழ்பவர். அவரிடம் இந்த ஆயிரம் டொலர் பணப்பரிமாற்றம் (transaction) பற்றி இந்தப் பெண்மணி விசாரித்தார். கிடைத்த தகவலில் அதிர்ந்துபோனாள் அந்தப் பெண்மணி. இந்தத் தகவலைக் கேட்ட பொலிசார், உறைந்து போனார்கள். <br />
<br />
காரணம், உக்ரெய்ன் நிறுவனமொன்று, இந்த நபரை ஒரு நிரந்தர ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தது. தினமும் அவருக்கு சில கிரடிட் கார்ட் (கடனட்டை) இலக்கங்களும், சில நிறுவனத்தின் புதிய பொருட்கள் பட்டியலும் ஈமெயிலில் வரும். பட்டியலிலுள்ள பொருட்களை, தரப்பட்ட கிரடிட் கார்ட் மற்றும் காலவதியாகும் திகதி போன்றவற்றைப் பாவித்து, 'ஒன்லைனில்' வாங்க வேண்டும். இவர் தினமும் இந்த 'ஒன்லைன்' வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு இவருக்கு முழுநேர ஊதியம். ஆனால், இவர் வாங்கும் பொருட்கள் சென்றடையும் இடம் எங்கே என்பது இவருக்குத் தெரியவில்லை. பல நாட்டு முகவரிகளும் வரும்போது, அங்கங்கே அந்தப் பொருட்களை அனுப்பிவிட வேண்டும். <br />
<br />
இதிலே அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கடனட்டை விபரங்களை அனுப்புவதற்காக, இன்னும் சிலர் ஆங்காங்கே முழுநேர வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள் என்பது தான். நான் மேலே சொன்ன விபரத்தின்படி, துரை என்பவர் ஈமெயிலில் அனுப்பிய தகவல்கள், முதலில் ஒருவரிடம் சென்று, அங்கே எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டு, பின்னர் இந்த நபருக்கு அனுப்பப்படுகிறது.<br />
<br />
இவ்வாறு அனுப்பப்படும் கடனட்டை விபரத்தைப் பயன்படுத்தி, என்ன பொருளை வாங்குவது என்பது மட்டும் உக்ரெய்னிலிருந்து இந்நபருக்கு தினமும் வந்தது. ஆராய்ந்து பார்த்ததில், உக்ரெய்னில் பாரிய ஒரு வர்த்தக மையமே இந்த சர்வதேச சதிவேலையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.<br />
<br />
துரதிஷ்டவசமாக, இதில் ஈடுபட்ட இடைத்தரகர்களாக 'ஒன்லைன்' வியாபாரத்தில் சொடுக்கி (click) உதவிய பலருக்கும் இது ஒரு திருட்டு வியாபாரம் என்பதே தெரிந்திருக்கவில்லை.<br />
<br />
ஒரு நிறுவனத்தின் வியாபார நாளாந்த செயற்பாடுகளுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக இவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களை அறியாமல் ஒரு சர்வதேச சதிவலையில் இவர்கள் மாட்டிக்கொண்டு, பாரிய கிரிமினல் குற்றத்தைப் புரிந்திருக்கிறார்கள். <br />
<br />
இதன் தார்ப்பரியம் என்னவென்றால், ஒரு கிரடிட் கார்ட் இலக்கத்தை தலா 2 டொலர் கொடுத்து வாங்கிய இந்நிறுவனம், ஒவ்வொரு கார்ட்டிலும் குறைந்தது 1000 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. அதாவது 10,000 டொலர் கொடுத்து, 5,000 கார்ட் தகவலைப் பெற்ற இந்த நிறுவனம், அதற்குச் சன்மானமாக, 5 கோடி டொலர்களை சம்பாதித்துள்ளது. 5,000 x 1,000 = 5,000,000.00<br />
<br />
இப்படி தொடர்ச்சியாக நடந்த திருட்டில், பல பில்லியன் டொலர்கள் தூண்டில் போட்டு இழுக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தத் தூண்டிலில் அகப்பட்ட மீன்கள், பாவம், தங்கள் பணத்தை மீளப்பெறமுடியாமல் போனது. காரணம், திருடர்கள் சர்வதேசத் திருடர்களாக, வேற்றுநாட்டுத் திருடர்களாக இருந்தார்கள். <br />
<br />
ஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது கடனட்டை விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் ஏனைய பிரத்தியேக தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் வழங்காதீர்கள். அப்படி வழங்கும்படி கோரப்பட்டால், கோரிய நிறுவனத்தை அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கோரிய விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.<br />
<br />
உலகில் இன்னும் பல ஆயிரம் திருட்டுத் தொழில்கள், பல சுவையான கவர்ச்சியான வகைகளில் நடக்கிறது. நம் பாதுகாப்பை உறுதிசெய்வது நாமாகவே இருக்கட்டும். <br />
<br />
Precaution is always better than cure!<br />
பிந்திய ஞானத்தைவிட, முன்னெச்சரிக்கை எப்போதும் சிறந்தது!!<br />
<br />
<br />
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்<br />
ஊதியமுஞ் சூழ்ந்து செயல் (திருவள்ளுவர்)<br />
<br />
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் (கலைஞர் உரை)<br />
<br />
<br />
குயின்ரஸ் துரைசிங்கம்<br />
(காவலூர்)<br />
ரொறன்ரோ-கனடா<br />
நன்றி எழில்நிலா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [b]இணையத்தில் கடன்அட்டைத் திருட்டு Phishing<br />
(Online Credit Card Fraud) <br />
  <br />
Credit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்<br />
<br />
இலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.<br />
<br />
Spoofing, Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு அறியப்படுகிறது. fishing என்றால் தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிப்பதைக் குறிக்கிறது, Phishing என்றால், அதே பாணியில், தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் மனிதர்களைப் பிடிப்பது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் உருவானதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.<br />
<br />
இப்போது கொஞ்சம் உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கலாம். வங்கிக் கடன்அட்டைகள் தற்போது பரவலாக மென்வலைச் சஞ்சாரத்தில் பாவிக்கப்படுவதால், அதையே தமக்கான ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, இந்த இரகசியத் திருட்டில் தினமும் பல ஆயிரம் திருடர்கள் முழுநேரத் தொழிலாய் இறங்கி நிறையவே சம்பாதிக்கிறார்கள்.<br />
<br />
அப்படி என்னதான் நடக்கிறது?<br />
<br />
நாங்கள் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் நிறுவனங்களான வங்கிகள், பணமாற்று நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஏனைய கடனட்டைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், மென்வலை வர்த்தக நிறுவனங்கள் போன்றன உட்பட அரசகரும விவகாரங்களுக்கான பலவித அமைச்சுக்கள், நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் இவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு 'encrypted' வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை யாரும் திருடுவது அத்தனை எளிதல்ல. அதனால், நாம் 'ஒன்லைன்' அதாவது மென்வலையூடாக பரிமாறும் தகவல்கள் உருவப்படுவது மிகவும் அபூர்வம்.<br />
<br />
ஆனால், இப்படி இரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக, மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த 'phishing' என்ற சதிவலைத் திட்டம்.<br />
<br />
இதை இலகுவாக விளக்குவதற்காக நமக்குப் பரிட்சயமான உதாரணமொன்றை எடுத்துக் கொள்வோம்.<br />
<br />
துரை என்பவர் 'ஒன்லைன்' வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை 'ஒன்லைன்'ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் 'ஒன்லைன்' பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது 'ஒன்லைன்' தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.<br />
<br />
இந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த 'ஒன்லைன்' தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.<br />
<br />
எல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது? நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ஈமெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் 'ஒன்லைன்' வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.<br />
<br />
மிக இலகுவாக 'ஒன்லைன்' சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். தற்காலிக இந்த இடைநிறுத்த அறிவிப்பை தனது திறமையால் உடனடியாக பதிலனுப்பி தவிர்த்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி, கொலரைத் தூக்கிவிடுகிறார்.<br />
<br />
ஆனால் பாவம் துரை. இங்கேதான் இந்த 'phishing' என்ற திருட்டு, எந்தப் பாவமும் செய்யாத துரையைப் பதம் பார்த்துவிட்டதை உணர மறந்துவிட்டார்.<br />
<br />
நடந்தது என்ன?<br />
<br />
வங்கி உண்மையில் அனுப்பும் அதே ஈமெயிலைப் பிரதிசெய்து, அவர்களது 'லோகோ', அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால், பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.<br />
<br />
இப்போது துரை அனுப்பிய பதில், வேறு யாரிடமோ சென்றுவிடுகிறது. துரையின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், துரையின் கடன்அட்டை பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் பாவிக்கப்பட்டு விடுகிறது.<br />
<br />
யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?<br />
<br />
யாரும் கோபிக்க வேண்டாம். இந்தத் திருட்டில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், ஒன்றுமறியா அப்பாவிகளாக 'நாமுண்டு நம்ம வேலையுண்டு' என்று, காலாகாலத்தில் சரியானவற்றை மட்டும் செய்துவிட்டு, சிவனே என்று இருக்கும் நல்லவர்கள் தான் என்கிறது ஆய்வுகள்.<br />
<br />
குறிப்பாக, ஈ-பே (e-bay), பே-பால் (Pay-pal), கனடியன் ரயர் (Canadian Tire), பே (Bay), சனக்கோ (Sunocco) போன்ற பல எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுடன், 'ஒன்லைன்' தொடர்பு வைத்திருக்கும் அனைவரும், மிக அதிகமாக இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்தும் தகவல் கேட்டு ஈமெயில் வந்தால், உடனே விபரங்களை பதிலாக அனுப்புவதை உடனே நிறுத்திக் கொள்வதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. வந்திருக்கும் ஈமெயில் உண்மையானதா இல்லையா என்று தெரியாமல், எப்படி அதை உதாசீனம் செய்வது என்று நீங்கள் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான். அப்படி நீங்கள் நினைக்குமளவிற்கு அந்த ஈமெயில் உண்மையானதாகப் பட்டால், மாற்றுவழியைப் பயன்படுத்துங்கள். இரண்டு மாற்றுவழிகள் உண்டு. ஒன்று, அந்த நிறுவனத்தின் உண்மையான ஈமெயில் முகவரியை அவர்களது இணையத்தளத்திலிருந்து பெற்று, அதற்கு நேரடியாக விபரங்களை அனுப்புங்கள். அவர்களுக்கு உங்கள் விபரம் தேவைப்படாவிட்டாலும், ஆபத்து எதுவும் இல்லை. இரண்டாவது, அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கொடுங்கள். <br />
<br />
எந்தக் காரணத்தைக் கொண்டும், கடன்அட்டை பாவிக்கும் நிறுவனங்கள் எதிலிருந்தும் வருகின்ற ஈமெயில் தொடர்புகளுக்கு, விபரங்களுடன்கூடிய பதில் அனுப்பி விடாதீர்கள். கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது அகப்படும் ஒன்றை சுண்டி இழுக்கலாம் என்றுதானே! இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்பட்டுக்கொள்பவரை சுண்டி இழுப்பதற்காக 'கண்ணில் எண்ணெய் விட்டபடி' காத்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இந்த திருட்டு குறித்த வரலாறு<br />
<br />
1996ல், AOL எனப்படும் அமெரிக்கன் ஒன்லைன் ஈமெயில் மற்றும் இன்ரர்நெற் சேவையில், கட்டணமின்றி களவாக இணைந்துகொள்ள விரும்பிய சில திருட்டு இணையப் பாவனையாளர்கள், AOL பாவனையாளர்களுக்கு பொய்யான ஈமெயில்களை அனுப்பி, அவர்களது தகைமைச்சொல்லை (password) பெற்றுக்கொண்டு, இணையத்தில் இலவச திருட்டு உல்லாசமும் சல்லாபமும் நடாத்தினார்கள் திருடர்கள்.<br />
<br />
இது நாளடைவில், தூதுபோகு செயலிகளிலும் (Messenger) உடன்தூதுபோகு செயலிகளிலும் (Instant Messenger) தொற்றிக்கொண்டு, தகைமைச்சொல்லை இலகுவாகப் பெற்று, தங்கள் கிரிமினல் செயல்களுக்கு பாவித்து வந்தனர். Verify your Password’ அதாவது 'தகைமைச்சொல்லை மீண்டும் உறுதிசெய்யவும்' என்று ஈமெயில் வந்ததும், நாம் எம்மையறியாமல் எமது தகைமைச்சொல்லை அதிலே இட்டு சொடுக்கிவிட, திருடர்கள் லாவகமாக அவற்றைப்பெற்று பாவித்துவந்தார்கள்.<br />
<br />
தற்போது வங்கிக் கடன் அட்டைகளின் இலக்கங்களை மீள உறுதிசெய்யும்படி ஈமெயில் அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. ஒரு இணையத்தளத்தை அல்லது ஈமெயிலை, அதன் எச்.ரி.எம்.எல். (HTML) திகுப்பாளர் தரவைப் பயன்படுத்தி, இலகுவாக மீள்பிரதி செய்யலாம் என்பதால், அதை தங்களுக்கான சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தும் திருடர்கள், இலகுவாக பாவனையாளர்களை ஏமாற்றிவிட முடிகிறது.<br />
<br />
பிந்திய கணிப்புகளின்படி, 2003 யூன் மாதத்திலிருந்து 2004 யூன் மாதம்வரை, 6,957 பேர், இத்தகைய கடனட்டை திருட்டில் சிக்கிக் கொண்டார்கள் என்றும், 2005 யூன் மாதம் வரை, 15,050 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வருடாவருடம் கிட்டத்தட்ட மூன்றுமடங்காக இந்த திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.<br />
<br />
இந்தத் திருடர்களைப் பிடிக்க என்ன வழி?<br />
<br />
இந்தத் திருட்டைச் செய்யும் ஒரு தனிநபர், கிட்டத்தட்ட பல இலட்சம் பாவனையாளர்களுக்கு இந்த ஈமெயிலை அனுப்புகிறார். இவர் அனுப்பும் பல இலட்சம் ஈமெயில்களில், சில பாவனையாளர்களாவது இதனை நம்பி, கடனட்டை விபரங்கள் அல்லது பாஸ்வேர்ட் (தகைமைச்சொல் அல்லது கடவுச்சொல்) போன்ற முக்கிய தகவல்களை அனுப்பி வைக்கிறார்கள். இவற்றை சேகரிக்கும் இந்நபர், ஒரு கடனட்டை இலக்கத்திற்கு கிட்டத்தட்ட 2 டொலர் என்ற அடிப்படையில், 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் கடனட்டை தகவல்களை ஒரு நேரத்தில் இன்னுமொருவருக்கு விற்று விடுகிறார். 2 டொலர் கொடுத்து, இந்த கடனட்டை விபரங்களை வாங்குபவர், அதே நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டுமென்ற நியதியெதுவும் இல்லை.<br />
<br />
அண்மையில் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவல்களின்படி, இப்படி கடனட்டை விபரங்களை தொகையாகப் பெறுபவர்கள், அதிகம் உக்ரெய்ன், பிரேசில், கியூபா, போலந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் தங்கள் தற்காலிக தளங்களை வைத்துள்ள சர்வதேச திருடர்கள் என்று தெரியவந்துள்ளது.<br />
<br />
சென்ற வருடம் உண்மையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவலொன்றை உதாரணத்திற்கு இங்கே தருகிறேன்:<br />
<br />
அமெரிக்காவில் தனது கடனட்டையில் ஆயிரம் டொலர்கள் எடுக்கப்பட்டதை அவதானித்த ஒரு பெண்மணி, அந்தப் பணம் எடுக்கப்பட்ட நிறுவனத்தின் விபரங்களை தானே தேடி ஆராய்ந்து கண்டறிந்து, அந்நிறுவனத்தை அழைத்துள்ளார். அப்படி அழைத்தபோது, மறுபக்கத்தில் பதிலளித்தவர் வேறு ஒரு மாநிலத்தில் வாழ்பவர். அவரிடம் இந்த ஆயிரம் டொலர் பணப்பரிமாற்றம் (transaction) பற்றி இந்தப் பெண்மணி விசாரித்தார். கிடைத்த தகவலில் அதிர்ந்துபோனாள் அந்தப் பெண்மணி. இந்தத் தகவலைக் கேட்ட பொலிசார், உறைந்து போனார்கள். <br />
<br />
காரணம், உக்ரெய்ன் நிறுவனமொன்று, இந்த நபரை ஒரு நிரந்தர ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தது. தினமும் அவருக்கு சில கிரடிட் கார்ட் (கடனட்டை) இலக்கங்களும், சில நிறுவனத்தின் புதிய பொருட்கள் பட்டியலும் ஈமெயிலில் வரும். பட்டியலிலுள்ள பொருட்களை, தரப்பட்ட கிரடிட் கார்ட் மற்றும் காலவதியாகும் திகதி போன்றவற்றைப் பாவித்து, 'ஒன்லைனில்' வாங்க வேண்டும். இவர் தினமும் இந்த 'ஒன்லைன்' வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு இவருக்கு முழுநேர ஊதியம். ஆனால், இவர் வாங்கும் பொருட்கள் சென்றடையும் இடம் எங்கே என்பது இவருக்குத் தெரியவில்லை. பல நாட்டு முகவரிகளும் வரும்போது, அங்கங்கே அந்தப் பொருட்களை அனுப்பிவிட வேண்டும். <br />
<br />
இதிலே அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கடனட்டை விபரங்களை அனுப்புவதற்காக, இன்னும் சிலர் ஆங்காங்கே முழுநேர வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள் என்பது தான். நான் மேலே சொன்ன விபரத்தின்படி, துரை என்பவர் ஈமெயிலில் அனுப்பிய தகவல்கள், முதலில் ஒருவரிடம் சென்று, அங்கே எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டு, பின்னர் இந்த நபருக்கு அனுப்பப்படுகிறது.<br />
<br />
இவ்வாறு அனுப்பப்படும் கடனட்டை விபரத்தைப் பயன்படுத்தி, என்ன பொருளை வாங்குவது என்பது மட்டும் உக்ரெய்னிலிருந்து இந்நபருக்கு தினமும் வந்தது. ஆராய்ந்து பார்த்ததில், உக்ரெய்னில் பாரிய ஒரு வர்த்தக மையமே இந்த சர்வதேச சதிவேலையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.<br />
<br />
துரதிஷ்டவசமாக, இதில் ஈடுபட்ட இடைத்தரகர்களாக 'ஒன்லைன்' வியாபாரத்தில் சொடுக்கி (click) உதவிய பலருக்கும் இது ஒரு திருட்டு வியாபாரம் என்பதே தெரிந்திருக்கவில்லை.<br />
<br />
ஒரு நிறுவனத்தின் வியாபார நாளாந்த செயற்பாடுகளுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக இவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களை அறியாமல் ஒரு சர்வதேச சதிவலையில் இவர்கள் மாட்டிக்கொண்டு, பாரிய கிரிமினல் குற்றத்தைப் புரிந்திருக்கிறார்கள். <br />
<br />
இதன் தார்ப்பரியம் என்னவென்றால், ஒரு கிரடிட் கார்ட் இலக்கத்தை தலா 2 டொலர் கொடுத்து வாங்கிய இந்நிறுவனம், ஒவ்வொரு கார்ட்டிலும் குறைந்தது 1000 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. அதாவது 10,000 டொலர் கொடுத்து, 5,000 கார்ட் தகவலைப் பெற்ற இந்த நிறுவனம், அதற்குச் சன்மானமாக, 5 கோடி டொலர்களை சம்பாதித்துள்ளது. 5,000 x 1,000 = 5,000,000.00<br />
<br />
இப்படி தொடர்ச்சியாக நடந்த திருட்டில், பல பில்லியன் டொலர்கள் தூண்டில் போட்டு இழுக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தத் தூண்டிலில் அகப்பட்ட மீன்கள், பாவம், தங்கள் பணத்தை மீளப்பெறமுடியாமல் போனது. காரணம், திருடர்கள் சர்வதேசத் திருடர்களாக, வேற்றுநாட்டுத் திருடர்களாக இருந்தார்கள். <br />
<br />
ஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது கடனட்டை விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் ஏனைய பிரத்தியேக தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் வழங்காதீர்கள். அப்படி வழங்கும்படி கோரப்பட்டால், கோரிய நிறுவனத்தை அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கோரிய விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.<br />
<br />
உலகில் இன்னும் பல ஆயிரம் திருட்டுத் தொழில்கள், பல சுவையான கவர்ச்சியான வகைகளில் நடக்கிறது. நம் பாதுகாப்பை உறுதிசெய்வது நாமாகவே இருக்கட்டும். <br />
<br />
Precaution is always better than cure!<br />
பிந்திய ஞானத்தைவிட, முன்னெச்சரிக்கை எப்போதும் சிறந்தது!!<br />
<br />
<br />
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்<br />
ஊதியமுஞ் சூழ்ந்து செயல் (திருவள்ளுவர்)<br />
<br />
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் (கலைஞர் உரை)<br />
<br />
<br />
குயின்ரஸ் துரைசிங்கம்<br />
(காவலூர்)<br />
ரொறன்ரோ-கனடா<br />
நன்றி எழில்நிலா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உறவுகள் உறவுகள் தான்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=772</link>
			<pubDate>Tue, 21 Feb 2006 09:13:24 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=772</guid>
			<description><![CDATA[                    இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள்.<br />
<br />
இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை.<br />
<br />
இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை.<br />
<br />
சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டும் அழைப்பு வரும்.சிலர் நேரில் வந்து அழைப்பார்கள்.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வந்து, விட்டுப்போக இருந்த குடும்ப உறவுகளை தளிர்க்க வைக்கப்பார்க்கும். இந்த மாதிரியான அழைப்புகளுக்குக்கூட போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்.இதுவே இதுமாதிரியான உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் இற்றுப்போகப்பண்ணி விடும்.<br />
<br />
இதனால் தலைமுறை இடைவெளி நிரந்தரமாகி விடும்.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடக்கூடும். சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான். <br />
<br />
இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.<br />
<br />
சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ பேலன்ஸ் செய்து கொண்டு தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது. <br />
<br />
இந்தப் பட்டியலில் உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.<br />
<br />
இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன என்பதே நிஜம். நட்பை நேசியுங்கள்.<br />
<br />
சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு என்று பைபிளே நட்புக்கு மகுடம் சூட்டுகிறது. அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.<br />
<br />
Thanks:Thanthi...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள்.<br />
<br />
இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை.<br />
<br />
இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை.<br />
<br />
சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டும் அழைப்பு வரும்.சிலர் நேரில் வந்து அழைப்பார்கள்.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வந்து, விட்டுப்போக இருந்த குடும்ப உறவுகளை தளிர்க்க வைக்கப்பார்க்கும். இந்த மாதிரியான அழைப்புகளுக்குக்கூட போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்.இதுவே இதுமாதிரியான உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் இற்றுப்போகப்பண்ணி விடும்.<br />
<br />
இதனால் தலைமுறை இடைவெளி நிரந்தரமாகி விடும்.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடக்கூடும். சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான். <br />
<br />
இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.<br />
<br />
சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ பேலன்ஸ் செய்து கொண்டு தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது. <br />
<br />
இந்தப் பட்டியலில் உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.<br />
<br />
இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன என்பதே நிஜம். நட்பை நேசியுங்கள்.<br />
<br />
சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு என்று பைபிளே நட்புக்கு மகுடம் சூட்டுகிறது. அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.<br />
<br />
Thanks:Thanthi...                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>