<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - (தீவிர) இலக்கியம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:08:03 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=656</link>
			<pubDate>Thu, 02 Mar 2006 13:29:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=656</guid>
			<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஆதவன் தீட்சண்யா கவிதை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2101</link>
			<pubDate>Sun, 11 Dec 2005 04:52:01 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=289">Eelavan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2101</guid>
			<description><![CDATA[                    கவனமாய் கடக்கவும்<br />
<br />
ஆதவன் தீட்சண்யா<br />
<br />
துர்சொப்பனங்களின் நெரிப்பில்<br />
படுக்கையில் 'மூச்சா' போய்விடும் குழந்தைகளும்<br />
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்<br />
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென<br />
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்<br />
<br />
 உலகை களியாட்ட மேடையாய் வரித்து<br />
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்<br />
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்<br />
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்<br />
பொருந்தும் இவ்வெச்சரிக்கை<br />
<br />
காவல் நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு<br />
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி<br />
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்<br />
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள<br />
மறுமார்க்கமில்லை<br />
<br />
மேற்சென்று படிக்க நேரிட்டால்<br />
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்<br />
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்<br />
எழுத்திலிருந்து துண்டித்து மேலேத் தெரியும்<br />
மெய்யெழுத்துப் புள்ளி<br />
தலைவேறு முண்டம் வேறாய் தறிக்கப்பட்ட<br />
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி<br />
ஒரு எழுச்சியை வீழ்த்தியதானக் கொண்டாட்டங்களை<br />
முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம்<br />
<br />
வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே<br />
வழியும் உதிரம்<br />
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான<br />
இடைப்பள்ளத்தில் தேங்கி<br />
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும்<br />
அபாயமுண்டு<br />
<br />
ஒவ்வொரு வரியும்<br />
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கடத்தப்பட்டிருக்கும்<br />
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்<br />
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்<br />
<br />
முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும்<br />
இடையேயுள்ள வெளி<br />
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட<br />
பெருங்குழிகளாக சாயலிடுமானால்<br />
இக்கவிதையை சுனாமிக்கானதாய் தப்பர்த்தம்<br />
கொள்ள வாய்ப்புண்டு<br />
<br />
என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்<br />
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்<br />
தூக்கத்தில் வளர்ந்து<br />
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்<br />
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு<br />
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்<br />
<br />
ஒரே ஊரின்<br />
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்<br />
அடுத்தடுத்தப் பக்கங்களில்<br />
வெட்டுப்பட்டு மொக்கையான<br />
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி<br />
யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது. <br />
<br />
நன்றி:கீற்று                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கவனமாய் கடக்கவும்<br />
<br />
ஆதவன் தீட்சண்யா<br />
<br />
துர்சொப்பனங்களின் நெரிப்பில்<br />
படுக்கையில் 'மூச்சா' போய்விடும் குழந்தைகளும்<br />
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்<br />
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென<br />
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்<br />
<br />
 உலகை களியாட்ட மேடையாய் வரித்து<br />
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்<br />
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்<br />
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்<br />
பொருந்தும் இவ்வெச்சரிக்கை<br />
<br />
காவல் நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு<br />
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி<br />
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்<br />
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள<br />
மறுமார்க்கமில்லை<br />
<br />
மேற்சென்று படிக்க நேரிட்டால்<br />
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்<br />
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்<br />
எழுத்திலிருந்து துண்டித்து மேலேத் தெரியும்<br />
மெய்யெழுத்துப் புள்ளி<br />
தலைவேறு முண்டம் வேறாய் தறிக்கப்பட்ட<br />
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி<br />
ஒரு எழுச்சியை வீழ்த்தியதானக் கொண்டாட்டங்களை<br />
முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம்<br />
<br />
வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே<br />
வழியும் உதிரம்<br />
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான<br />
இடைப்பள்ளத்தில் தேங்கி<br />
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும்<br />
அபாயமுண்டு<br />
<br />
ஒவ்வொரு வரியும்<br />
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கடத்தப்பட்டிருக்கும்<br />
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்<br />
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்<br />
<br />
முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும்<br />
இடையேயுள்ள வெளி<br />
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட<br />
பெருங்குழிகளாக சாயலிடுமானால்<br />
இக்கவிதையை சுனாமிக்கானதாய் தப்பர்த்தம்<br />
கொள்ள வாய்ப்புண்டு<br />
<br />
என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்<br />
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்<br />
தூக்கத்தில் வளர்ந்து<br />
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்<br />
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு<br />
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்<br />
<br />
ஒரே ஊரின்<br />
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்<br />
அடுத்தடுத்தப் பக்கங்களில்<br />
வெட்டுப்பட்டு மொக்கையான<br />
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி<br />
யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது. <br />
<br />
நன்றி:கீற்று                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[டி.சே கவிதை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2466</link>
			<pubDate>Mon, 14 Nov 2005 16:02:40 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=668">இவோன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2466</guid>
			<description><![CDATA[                    கறுத்த பிரேம் <br />
கண்ணாடிக்குள்ளிலிருந்து<br />
நதியாய் அசைகிறது<br />
விழிகள்<br />
<br />
ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்<br />
நெஞ்சுதடவிய<br />
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்<br />
முதுகில் படரும்<br />
விரல்கள்<br />
<br />
கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த<br />
கடந்த காலம் தூர்ந்துபோக<br />
சிறகுகள் முளைக்கின்றன<br />
மனவெளி முழுதும்<br />
<br />
ஒரு பொழுது<br />
சப்வேயில்<br />
அழகிய காதற்காலம்<br />
துளித்துளியாய் கரைந்து<br />
கருஞ்சாம்பர் வானமானதையும்<br />
அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள்<br />
வருடங்கள் மீதேறி<br />
நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும்<br />
நீயறிவாயா பெண்ணே?<br />
<br />
பளிச்சிடும்<br />
உன் மூக்குத்தியைப்போல<br />
நினைவுகளை விரும்பியபோது<br />
அணியவும் எறியவும்<br />
முடியுமெனில்<br />
எவ்வளவு நன்றாகவிருக்கும்<br />
எனும்<br />
என் வரிகளை இடைமறிக்கும் நீ<br />
கடந்தகாலத்தை நினைவு கொள்ள<br />
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்<br />
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்<br />
கழுத்தை இறுக்கிய கரங்களும்<br />
என்கிறாய்<br />
<br />
நேசிப்பை முதன்முதலாய்<br />
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல<br />
கடந்தகாலத்தின் வலிகளுடன்<br />
நம்மால் இன்னொருமுறை<br />
இதமாய் நேசிக்கமுடிவது<br />
வியப்புத்தான்<br />
<br />
குளிருக்கு மூட்டிய<br />
அடுப்பில்<br />
எறிந்த சிறுகுச்சிகளாய்<br />
இவ்விரவில்<br />
சரசரவென்று பற்றிக்கொள்கிறது<br />
காமம்<br />
<br />
உன் ஆடைகள்<br />
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்<br />
வினாவுகிறாய்<br />
முலை தடவும் மென்விரல்கள்<br />
நாளை என் மூக்குத்தியை<br />
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை<br />
எப்படி நம்புவது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கறுத்த பிரேம் <br />
கண்ணாடிக்குள்ளிலிருந்து<br />
நதியாய் அசைகிறது<br />
விழிகள்<br />
<br />
ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்<br />
நெஞ்சுதடவிய<br />
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்<br />
முதுகில் படரும்<br />
விரல்கள்<br />
<br />
கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த<br />
கடந்த காலம் தூர்ந்துபோக<br />
சிறகுகள் முளைக்கின்றன<br />
மனவெளி முழுதும்<br />
<br />
ஒரு பொழுது<br />
சப்வேயில்<br />
அழகிய காதற்காலம்<br />
துளித்துளியாய் கரைந்து<br />
கருஞ்சாம்பர் வானமானதையும்<br />
அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள்<br />
வருடங்கள் மீதேறி<br />
நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும்<br />
நீயறிவாயா பெண்ணே?<br />
<br />
பளிச்சிடும்<br />
உன் மூக்குத்தியைப்போல<br />
நினைவுகளை விரும்பியபோது<br />
அணியவும் எறியவும்<br />
முடியுமெனில்<br />
எவ்வளவு நன்றாகவிருக்கும்<br />
எனும்<br />
என் வரிகளை இடைமறிக்கும் நீ<br />
கடந்தகாலத்தை நினைவு கொள்ள<br />
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்<br />
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்<br />
கழுத்தை இறுக்கிய கரங்களும்<br />
என்கிறாய்<br />
<br />
நேசிப்பை முதன்முதலாய்<br />
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல<br />
கடந்தகாலத்தின் வலிகளுடன்<br />
நம்மால் இன்னொருமுறை<br />
இதமாய் நேசிக்கமுடிவது<br />
வியப்புத்தான்<br />
<br />
குளிருக்கு மூட்டிய<br />
அடுப்பில்<br />
எறிந்த சிறுகுச்சிகளாய்<br />
இவ்விரவில்<br />
சரசரவென்று பற்றிக்கொள்கிறது<br />
காமம்<br />
<br />
உன் ஆடைகள்<br />
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்<br />
வினாவுகிறாய்<br />
முலை தடவும் மென்விரல்கள்<br />
நாளை என் மூக்குத்தியை<br />
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை<br />
எப்படி நம்புவது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சமுதாயம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2661</link>
			<pubDate>Tue, 01 Nov 2005 14:08:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1461">Nithya</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2661</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;சமுதாயம்&lt;/b&gt;<br />
<br />
சிறுமி என நினைத்து<br />
வேடிக்கையாய் பல விடயம் பேசி<br />
என் முதுகின்பின்னால்<br />
முரண்பட்டு<br />
<br />
கண்டால் கட்டாடி <br />
காணாட்டால்<br />
வண்ணான் என <br />
கரைந்து..<br />
<br />
இறந்த காலத்தால் - என்<br />
நிகழ்காலம் இறப்பித்து<br />
<br />
போடு போடு இன்னும் பல சூடு<br />
நான் திரும்பி பார்க்காத வரையில்<br />
சிறுமிதான்..!!<br />
<br />
பி. எஸ் : கடுகின் காரம் மறந்த சமுதாயம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;சமுதாயம்&lt;/b&gt;<br />
<br />
சிறுமி என நினைத்து<br />
வேடிக்கையாய் பல விடயம் பேசி<br />
என் முதுகின்பின்னால்<br />
முரண்பட்டு<br />
<br />
கண்டால் கட்டாடி <br />
காணாட்டால்<br />
வண்ணான் என <br />
கரைந்து..<br />
<br />
இறந்த காலத்தால் - என்<br />
நிகழ்காலம் இறப்பித்து<br />
<br />
போடு போடு இன்னும் பல சூடு<br />
நான் திரும்பி பார்க்காத வரையில்<br />
சிறுமிதான்..!!<br />
<br />
பி. எஸ் : கடுகின் காரம் மறந்த சமுதாயம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஒரு கவிதை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2741</link>
			<pubDate>Fri, 28 Oct 2005 02:18:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=289">Eelavan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2741</guid>
			<description><![CDATA[                    வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி<br />
-சன்னாசி<br />
<br />
இந்தக் கவிதையின்<br />
குரல்வளை அறுத்துக்<br />
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்<br />
புற்களின் உதட்டு நுனிகளில்<br />
தாவரங்கள் மேய்வதுமெனத்<br />
தரையோடு அறையப்படும்<br />
விழிகளை அறுப்பது<br />
நீ குறுக்காய் ஓடிய வானவில்.<br />
<br />
* * *<br />
<br />
நாம் குழந்தைகள்<br />
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்<br />
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்<br />
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்<br />
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை<br />
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்<br />
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்<br />
குறிப்பாய்<br />
நமது நோய்க்கென்றொரு<br />
நிறத்தை விளிக்கிறோம்<br />
அந் நிறமொரு ஆடு<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே<br />
என்கிறது<br />
மறுபடி<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே<br />
என்கிறது<br />
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன<br />
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை<br />
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று<br />
தோல்வியடைகிறேன்.<br />
<br />
* * *<br />
<br />
இக்கவிதை முடிவுற,<br />
நம்மைப் பிரிக்கும் வானவில்<br />
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை<br />
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்<br />
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு<br />
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு<br />
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்<br />
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்<br />
சிதைந்து வீழ்கிறது<br />
பொடிகிறது<br />
உன் காலடியில்.<br />
<br />
* * *<br />
<br />
உனது கண் நீலத்தில்<br />
எறிகின்றேன் என் பாவனைகளை<br />
பிரயத்தனங்களை<br />
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்<br />
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்<br />
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்<br />
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்<br />
அறையப்பட்ட கண் போல்<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,<br />
<br />
* * *<br />
<br />
நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்<br />
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்<br />
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்<br />
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;<br />
பிரயத்தனமில்லா<br />
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்<br />
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்<br />
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து<br />
குமைந்து<br />
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்<br />
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்<br />
வானவில்<br />
<br />
* * *<br />
<br />
இப் பிரயாசைகள் களைக:<br />
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த<br />
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்<br />
பின்னர் பின்பும்<br />
உள் வெளியாகவும்<br />
வெளி யுள்ளாகவும்<br />
கண்களும் அவையான பிறவும்<br />
பரஸ்பரம்<br />
தோண்டிக்கொண்டன.<br />
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்<br />
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை<br />
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்<br />
தாண்டுகிறேன்<br />
என்னைக் கடக்கும் வர்ணங்களை<br />
எண்ணத் தொடங்குகிறேன்<br />
<br />
* * *<br />
<br />
உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்<br />
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட<br />
இருப்பைத் தகர்த்து வழியும்<br />
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன<br />
கருணையின்றி<br />
வில்லின் மறுபுறம். <br />
<br />
நன்றி சன்னாசி <a href="http://dystocia.weblogs.us/archives/175" target="_blank" rel="noopener" class="mycode_url">http://dystocia.weblogs.us/archives/175</a><br />
<br />
இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்<br />
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி<br />
-சன்னாசி<br />
<br />
இந்தக் கவிதையின்<br />
குரல்வளை அறுத்துக்<br />
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்<br />
புற்களின் உதட்டு நுனிகளில்<br />
தாவரங்கள் மேய்வதுமெனத்<br />
தரையோடு அறையப்படும்<br />
விழிகளை அறுப்பது<br />
நீ குறுக்காய் ஓடிய வானவில்.<br />
<br />
* * *<br />
<br />
நாம் குழந்தைகள்<br />
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்<br />
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்<br />
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்<br />
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை<br />
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்<br />
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்<br />
குறிப்பாய்<br />
நமது நோய்க்கென்றொரு<br />
நிறத்தை விளிக்கிறோம்<br />
அந் நிறமொரு ஆடு<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே<br />
என்கிறது<br />
மறுபடி<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே<br />
என்கிறது<br />
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன<br />
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை<br />
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று<br />
தோல்வியடைகிறேன்.<br />
<br />
* * *<br />
<br />
இக்கவிதை முடிவுற,<br />
நம்மைப் பிரிக்கும் வானவில்<br />
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை<br />
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்<br />
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு<br />
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு<br />
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்<br />
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்<br />
சிதைந்து வீழ்கிறது<br />
பொடிகிறது<br />
உன் காலடியில்.<br />
<br />
* * *<br />
<br />
உனது கண் நீலத்தில்<br />
எறிகின்றேன் என் பாவனைகளை<br />
பிரயத்தனங்களை<br />
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்<br />
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்<br />
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்<br />
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்<br />
அறையப்பட்ட கண் போல்<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,<br />
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,<br />
<br />
* * *<br />
<br />
நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்<br />
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்<br />
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்<br />
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;<br />
பிரயத்தனமில்லா<br />
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்<br />
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்<br />
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து<br />
குமைந்து<br />
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்<br />
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்<br />
வானவில்<br />
<br />
* * *<br />
<br />
இப் பிரயாசைகள் களைக:<br />
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த<br />
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்<br />
பின்னர் பின்பும்<br />
உள் வெளியாகவும்<br />
வெளி யுள்ளாகவும்<br />
கண்களும் அவையான பிறவும்<br />
பரஸ்பரம்<br />
தோண்டிக்கொண்டன.<br />
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்<br />
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை<br />
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்<br />
தாண்டுகிறேன்<br />
என்னைக் கடக்கும் வர்ணங்களை<br />
எண்ணத் தொடங்குகிறேன்<br />
<br />
* * *<br />
<br />
உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்<br />
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட<br />
இருப்பைத் தகர்த்து வழியும்<br />
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன<br />
கருணையின்றி<br />
வில்லின் மறுபுறம். <br />
<br />
நன்றி சன்னாசி <a href="http://dystocia.weblogs.us/archives/175" target="_blank" rel="noopener" class="mycode_url">http://dystocia.weblogs.us/archives/175</a><br />
<br />
இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்<br />
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தீவிர இலக்கியம் என்றால் என்ன?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2750</link>
			<pubDate>Thu, 27 Oct 2005 10:10:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=289">Eelavan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2750</guid>
			<description><![CDATA[                    தீவிர இலக்கியம் என்றால் எப்படிப் பொருள்படுகின்றது.சாதாரண இலக்கியத்திற்கும்(பொதுசன அல்லது வெகுசன இலக்கியத்திற்கும்) இதற்கும் என்ன வித்தியாசம்.<br />
<br />
யாராவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தீவிர இலக்கியம் என்றால் எப்படிப் பொருள்படுகின்றது.சாதாரண இலக்கியத்திற்கும்(பொதுசன அல்லது வெகுசன இலக்கியத்திற்கும்) இதற்கும் என்ன வித்தியாசம்.<br />
<br />
யாராவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி']]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2761</link>
			<pubDate>Wed, 26 Oct 2005 13:05:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=668">இவோன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2761</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;சோளகர் தொட்டி என்னும் நாவல் தொடர்பாக டிசே எழுதிய பதிவு இது. வீரப்பனை பிடிக்கப் போன அதிரடிப்படையினரின் அட்டகாசங்களை புட்டு வைக்கிறது இந்த நாவல் என்கிறார். நெஞ்சை உருக்கும் இந்த நாவலை நீங்கள் யாரேனும் வாசித்திருக்கிறீர்களா.. வாசித்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்களேன்..&lt;/b&gt;<br />
(1)<br />
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.<br />
<br />
"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.<br />
<br />
"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.<br />
<br />
அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,<br />
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.<br />
<br />
உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.<br />
<br />
ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்<br />
<br />
"எங்கேடா வீரப்பன்? சொல்லு"<br />
<br />
அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.<br />
<br />
அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.<br />
<br />
"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.<br />
<br />
அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.<br />
<br />
கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.<br />
<br />
"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.<br />
"தெரியாதுங்க"<br />
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.<br />
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.<br />
<br />
"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.<br />
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.<br />
<br />
"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.<br />
(ப204-206)<br />
<br />
அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.<br />
<br />
"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.<br />
<br />
மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.<br />
'வா வெளியே" என்றான்.<br />
<br />
மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.<br />
<br />
வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.<br />
<br />
மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.<br />
<br />
சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.<br />
<br />
நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.<br />
(ப208)<br />
<br />
(2)<br />
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.<br />
<br />
இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.<br />
<br />
இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.<br />
<br />
(3)<br />
<br />
ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...<br />
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.<br />
<br />
இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.<br />
<br />
வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;சோளகர் தொட்டி என்னும் நாவல் தொடர்பாக டிசே எழுதிய பதிவு இது. வீரப்பனை பிடிக்கப் போன அதிரடிப்படையினரின் அட்டகாசங்களை புட்டு வைக்கிறது இந்த நாவல் என்கிறார். நெஞ்சை உருக்கும் இந்த நாவலை நீங்கள் யாரேனும் வாசித்திருக்கிறீர்களா.. வாசித்திருப்பின் பகிர்ந்து கொள்ளுங்களேன்..&lt;/b&gt;<br />
(1)<br />
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.<br />
<br />
"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.<br />
<br />
"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.<br />
<br />
அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,<br />
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.<br />
<br />
உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.<br />
<br />
ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்<br />
<br />
"எங்கேடா வீரப்பன்? சொல்லு"<br />
<br />
அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.<br />
<br />
அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.<br />
<br />
"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.<br />
<br />
அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.<br />
<br />
கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.<br />
<br />
"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.<br />
"தெரியாதுங்க"<br />
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.<br />
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.<br />
<br />
"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.<br />
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.<br />
<br />
"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.<br />
(ப204-206)<br />
<br />
அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.<br />
<br />
"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.<br />
<br />
மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.<br />
'வா வெளியே" என்றான்.<br />
<br />
மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.<br />
<br />
வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.<br />
<br />
மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.<br />
<br />
சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.<br />
<br />
நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.<br />
(ப208)<br />
<br />
(2)<br />
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.<br />
<br />
இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.<br />
<br />
இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.<br />
<br />
(3)<br />
<br />
ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...<br />
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.<br />
<br />
இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.<br />
<br />
வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கண்கள் கலயை  நோக்கட்டும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3069</link>
			<pubDate>Sun, 02 Oct 2005 11:23:58 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3069</guid>
			<description><![CDATA[                    <a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
&lt;b&gt;பஸ்சில் பயணிக்கும்<br />
இருள்பிரியா விடிகாலையில்<br />
பொழியத்தொடங்கும் மழையில்<br />
காளான்களைப்போல<br />
வாழ்வின் அழகிய கணங்கள்<br />
முளைக்கத் தொடங்கலாம்<br />
<br />
மழையில் நனைந்தபடி<br />
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்<br />
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்<br />
அவசர அவசரமாக<br />
உங்கள் கலாச்சார முகமூடிகளை<br />
<br />
தெப்பலாகி<br />
உள்ளாடைகள் தெரிய<br />
பஸ்சினுள் ஏறுவது<br />
தமிழ்க்கலாச்சாரமல்லவென<br />
வெளியே முழங்கும் இடியைவிட<br />
உரத்துக் குரல்கள்<br />
எழும்பத் தொடங்குகின்றன<br />
<br />
அவள்;<br />
கோடையில் 'மட்டும்'<br />
இப்படி மழையில் சிக்கியதால்<br />
உள்ளாடைகள் தெரிகின்றன<br />
எல்லாப் பருவங்களிலும் அல்ல<br />
என்கின்றாள்<br />
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்<br />
<br />
முன்பு<br />
பஸ் நெரிசலுள்<br />
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து<br />
அவளிடம் அடிவாங்கியவன்<br />
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென<br />
உற்றுப்பார்த்தபடி<br />
இவள் வின்ரர் காலத்திலும்<br />
இப்படித்தான் உடையணிபவளென்றபடி<br />
அவளின் கடந்தகாலத்தை<br />
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்<br />
அனைவருக்கும் முன்னும்<br />
<br />
அவளது ஆடைத்தெரிவுகள்<br />
தங்களது விரல்நுனியில்<br />
இருக்க விரும்பும் அவதானத்தில் <br />
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல<br />
இவர்கள்<br />
<br />
இப்படி<br />
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்<br />
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்<br />
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;<br />
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்<br />
<br />
மெல்லிய குரலில்<br />
அவள் கூறுகின்றாள்;<br />
'கோடைகாலத்தில்<br />
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது<br />
எனது தெரிவு<br />
அப்படியே<br />
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்<br />
ஓர் தெரிவு இருக்கலாம்.'<br />
<br />
கோடையில்<br />
மழைபெய்யும் பொழுதில்<br />
குடையுடனோ<br />
குடையின்றி நனைந்தபடியோ<br />
பஸ்சினுள் ஏறுவது<br />
அவளவள்களின் விருப்பு<br />
<br />
உங்களது வாய்கள்<br />
எதையாவது மெல்ல ஆசைப்படின்<br />
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்<br />
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை<br />
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்<br />
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை<br />
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்<br />
இப்போதே.&lt;/b&gt;<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112775437846371933.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img156.imageshack.us/img156/9746/normal05septparismatch0024uv.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
&lt;b&gt;பஸ்சில் பயணிக்கும்<br />
இருள்பிரியா விடிகாலையில்<br />
பொழியத்தொடங்கும் மழையில்<br />
காளான்களைப்போல<br />
வாழ்வின் அழகிய கணங்கள்<br />
முளைக்கத் தொடங்கலாம்<br />
<br />
மழையில் நனைந்தபடி<br />
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்<br />
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்<br />
அவசர அவசரமாக<br />
உங்கள் கலாச்சார முகமூடிகளை<br />
<br />
தெப்பலாகி<br />
உள்ளாடைகள் தெரிய<br />
பஸ்சினுள் ஏறுவது<br />
தமிழ்க்கலாச்சாரமல்லவென<br />
வெளியே முழங்கும் இடியைவிட<br />
உரத்துக் குரல்கள்<br />
எழும்பத் தொடங்குகின்றன<br />
<br />
அவள்;<br />
கோடையில் 'மட்டும்'<br />
இப்படி மழையில் சிக்கியதால்<br />
உள்ளாடைகள் தெரிகின்றன<br />
எல்லாப் பருவங்களிலும் அல்ல<br />
என்கின்றாள்<br />
பாவமன்னிப்பு கேட்கும் நடுங்கும் குரலில்<br />
<br />
முன்பு<br />
பஸ் நெரிசலுள்<br />
பிருஷ்டம் உரசி சேட்டை செய்து<br />
அவளிடம் அடிவாங்கியவன்<br />
உள்ளாடைகளுக்குள் முலைகள் தெரிகின்றதாவென<br />
உற்றுப்பார்த்தபடி<br />
இவள் வின்ரர் காலத்திலும்<br />
இப்படித்தான் உடையணிபவளென்றபடி<br />
அவளின் கடந்தகாலத்தை<br />
ஒரு பத்திரிகையைப்போல வாசித்துக்காட்டுகின்றான்<br />
அனைவருக்கும் முன்னும்<br />
<br />
அவளது ஆடைத்தெரிவுகள்<br />
தங்களது விரல்நுனியில்<br />
இருக்க விரும்பும் அவதானத்தில் <br />
மதவாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல<br />
இவர்கள்<br />
<br />
இப்படி<br />
உள்ளாடை தெரிய பஸ்சினில் ஏறினால்<br />
எங்கள் 'குடும்ப'ப்பெண்கள்<br />
எப்படி பஸ்சில் பயணிப்பதாம்;<br />
கவலைப்படுகிறது இன்னொரு கூட்டம்<br />
<br />
மெல்லிய குரலில்<br />
அவள் கூறுகின்றாள்;<br />
'கோடைகாலத்தில்<br />
வெயிலுக்கேற்ற ஆடைகள் அணிவது<br />
எனது தெரிவு<br />
அப்படியே<br />
உங்கள் குடும்பப்பெண்களுக்கும்<br />
ஓர் தெரிவு இருக்கலாம்.'<br />
<br />
கோடையில்<br />
மழைபெய்யும் பொழுதில்<br />
குடையுடனோ<br />
குடையின்றி நனைந்தபடியோ<br />
பஸ்சினுள் ஏறுவது<br />
அவளவள்களின் விருப்பு<br />
<br />
உங்களது வாய்கள்<br />
எதையாவது மெல்ல ஆசைப்படின்<br />
மழையில் நனைந்தபடி எவளாவது ஏறுகையில்<br />
உங்கள் காற்சட்டைகளுக்குள் விறைத்ததை<br />
அவள்களுக்குப் பிடிக்காதபோதும்<br />
சனநெரிசலில் உரசிய வக்கிரங்களை<br />
மறைக்காமல் பேசத்தொடங்குங்கள்<br />
இப்போதே.&lt;/b&gt;<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112775437846371933.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html</a>                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>