<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - மருத்துவம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:08:04 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[கணவன் மனைவி ஆசை குறைகிறது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=113</link>
			<pubDate>Sat, 22 Apr 2006 13:27:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=113</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03d.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
                               - அதிர்ச்சி சர்வே<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03g.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
\"கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.<br />
<br />
இவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.<br />
<br />
<br />
\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள்.<br />
<br />
இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.<br />
<br />
ஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.<br />
<br />
நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.<br />
<br />
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.<br />
<br />
பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.<br />
<br />
திருமணத்திற்கு முந்தைய உறவுகள்:<br />
<br />
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.<br />
<br />
உடற்கூறு அறிவின்மை:<br />
<br />
ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.<br />
<br />
கடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக் கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச்சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.<br />
<br />
பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.<br />
<br />
ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.<br />
<br />
இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03f.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/nyayiru_malar/sunhead.gif' border='0' alt='user posted image'&gt;&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03d.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
                               - அதிர்ச்சி சர்வே<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03g.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
\"கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' -என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.<br />
<br />
இவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.<br />
<br />
<br />
\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள்.<br />
<br />
இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.<br />
<br />
ஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.<br />
<br />
நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.<br />
<br />
இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.<br />
<br />
பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.<br />
<br />
திருமணத்திற்கு முந்தைய உறவுகள்:<br />
<br />
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.<br />
<br />
உடற்கூறு அறிவின்மை:<br />
<br />
ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.<br />
<br />
கடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக் கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச்சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.<br />
<br />
பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.<br />
<br />
ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.<br />
<br />
இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/sm/Page03f.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.dailythanthi.com/magazines/IMAGES/nyayiru_malar/sunhead.gif' border='0' alt='user posted image'&gt;&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[10ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன சிறுமியின் இருதயம் மீண்டும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=213</link>
			<pubDate>Fri, 14 Apr 2006 18:31:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=213</guid>
			<description><![CDATA[                    இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள்.<br />
<br />
10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. <br />
<br />
இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் காரணம் என்பதை கண்டு பிடித்தனர்.<br />
<br />
இதை அடுத்து டாக்டர்கள் ஹென்னாவுக்கு மீண்டும் ஒரு ஆபரேஷன் நடத்தினார்கள். தானம் கிடைத்த அந்த இருதயத்தை ஆபரேஷன் மூலம் அகற்றி விட்டனர். ஏற்கனவே இருந்த பழைய இருதயம் இப்போது நன்றாக செயல்படுகிறது.<br />
<br />
நின்று போன இருதயம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்து இருப்பினும் செயற்கையாக பொருத்தப்பட்ட இருதயத்தை டாக்டர்கள் அகற்றி இருப்பதும் மருத்துவ உலகில் இதுவே முதல் தடவை. <br />
இணைப்பு : : newstamilnet.com                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள்.<br />
<br />
10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. <br />
<br />
இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் காரணம் என்பதை கண்டு பிடித்தனர்.<br />
<br />
இதை அடுத்து டாக்டர்கள் ஹென்னாவுக்கு மீண்டும் ஒரு ஆபரேஷன் நடத்தினார்கள். தானம் கிடைத்த அந்த இருதயத்தை ஆபரேஷன் மூலம் அகற்றி விட்டனர். ஏற்கனவே இருந்த பழைய இருதயம் இப்போது நன்றாக செயல்படுகிறது.<br />
<br />
நின்று போன இருதயம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்து இருப்பினும் செயற்கையாக பொருத்தப்பட்ட இருதயத்தை டாக்டர்கள் அகற்றி இருப்பதும் மருத்துவ உலகில் இதுவே முதல் தடவை. <br />
இணைப்பு : : newstamilnet.com                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=280</link>
			<pubDate>Mon, 10 Apr 2006 14:10:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1409">கீதா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=280</guid>
			<description><![CDATA[                    உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்<br />
<br />
<br />
1--- ?ஒவ்வொருநாளும் 1 கரட் சாப்பிட்டு வாருங்கள்<br />
2----?இல்லாட்டி ஒவ்வொருஅப்பிள் சாப்பிட்டு வாங்கள்<br />
உங்கள் முகம் பளபளப்பாகவும் கிளுகிளுப்பாகவும் <br />
தோன்றும் <br />
<br />
<br />
ஆக்கம் --கீதா &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உங்கள் முகம் அழகாக இருக்க சில வழிகள்<br />
<br />
<br />
1--- ?ஒவ்வொருநாளும் 1 கரட் சாப்பிட்டு வாருங்கள்<br />
2----?இல்லாட்டி ஒவ்வொருஅப்பிள் சாப்பிட்டு வாங்கள்<br />
உங்கள் முகம் பளபளப்பாகவும் கிளுகிளுப்பாகவும் <br />
தோன்றும் <br />
<br />
<br />
ஆக்கம் --கீதா &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[&quot;உடல் தோற்றத்தை வைத்தே, நோயின் அறிகுறிகள்&quot;]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=367</link>
			<pubDate>Sun, 02 Apr 2006 13:01:15 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=555">Nellaiyan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=367</guid>
			<description><![CDATA[                    கண்கள்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்கள் உப்பியிருந்தால்...<br />
<br />
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.<br />
<br />
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண் இமைகளில் வலி<br />
<br />
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.<br />
<br />
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்<br />
<br />
என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.<br />
<br />
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்கள் உலர்ந்து போவது.<br />
<br />
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.<br />
<br />
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.<br />
<br />
சருமம்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்<br />
<br />
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.<br />
<br />
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
முகம் வீக்கமாக இருப்பது<br />
<br />
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி Êஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.<br />
<br />
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
தோல் இளம் மஞ்சளாக மாறுவது<br />
<br />
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.<br />
<br />
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.<br />
<br />
பாதம்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்<br />
<br />
என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.<br />
<br />
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
பாதம் மட்டும் மரத்துப் போதல்<br />
<br />
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.<br />
<br />
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்<br />
<br />
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.<br />
<br />
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.<br />
<br />
கைகள்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
சிவந்த உள்ளங்கை<br />
<br />
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.<br />
<br />
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
வெளுத்த நகங்கள்<br />
<br />
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!<br />
<br />
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.<br />
<br />
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
விரல் முட்டிகளில் வலி<br />
<br />
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.<br />
<br />
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
நகங்களில் குழி விழுதல்<br />
<br />
என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.<br />
<br />
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.<br />
<br />
வாய்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
ஈறுகளில் இரத்தம் வடிதல்.<br />
<br />
என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.<br />
<br />
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்<br />
<br />
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.<br />
<br />
டிப்ஸ்: 'மல்டி_விட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.<br />
<br />
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.<br />
<br />
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.<br />
<br />
பா. இந்திரா பிரியதர்ஷிணி<br />
<br />
<a href="http://www.kumudam.com/sinegithi/mainpage.php" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.kumudam.com/sinegithi/mainpage.php</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கண்கள்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்கள் உப்பியிருந்தால்...<br />
<br />
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.<br />
<br />
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண் இமைகளில் வலி<br />
<br />
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.<br />
<br />
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்<br />
<br />
என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.<br />
<br />
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கண்கள் உலர்ந்து போவது.<br />
<br />
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.<br />
<br />
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.<br />
<br />
சருமம்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்<br />
<br />
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.<br />
<br />
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
முகம் வீக்கமாக இருப்பது<br />
<br />
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி Êஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.<br />
<br />
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
தோல் இளம் மஞ்சளாக மாறுவது<br />
<br />
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.<br />
<br />
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.<br />
<br />
பாதம்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்<br />
<br />
என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.<br />
<br />
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
பாதம் மட்டும் மரத்துப் போதல்<br />
<br />
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.<br />
<br />
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்<br />
<br />
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.<br />
<br />
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.<br />
<br />
கைகள்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
சிவந்த உள்ளங்கை<br />
<br />
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.<br />
<br />
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
வெளுத்த நகங்கள்<br />
<br />
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!<br />
<br />
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.<br />
<br />
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
விரல் முட்டிகளில் வலி<br />
<br />
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.<br />
<br />
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
நகங்களில் குழி விழுதல்<br />
<br />
என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.<br />
<br />
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.<br />
<br />
வாய்<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
ஈறுகளில் இரத்தம் வடிதல்.<br />
<br />
என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.<br />
<br />
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்<br />
<br />
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.<br />
<br />
டிப்ஸ்: 'மல்டி_விட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.<br />
<br />
என்ன அறிகுறி? :<br />
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.<br />
<br />
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.<br />
<br />
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.<br />
<br />
பா. இந்திரா பிரியதர்ஷிணி<br />
<br />
<a href="http://www.kumudam.com/sinegithi/mainpage.php" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.kumudam.com/sinegithi/mainpage.php</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Energy Meridian Stretches for Cure All Diseases]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=493</link>
			<pubDate>Mon, 20 Mar 2006 03:35:41 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2320">Thinava</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=493</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;சகல நோய்களும் தீர வர்மப்புள்ளி குறிநிலை ஜீவசக்தி வாய்க்கால் நீட்டல் பயிற்சி&lt;/b&gt;<br />
Energy Meridian Stretches for Cure All Diseases<br />
<br />
மனித உடம்பில் சக்தி(‘Qi’-Energy)  14 வாய்க்கால்களில் சதா ஓடியவண்ணம் இருக்கும். அப்படி ஓடியவண்ணம் இருந்தால் உடம்பில் எது நோயும் இருக்காது. இந்த வாய்க்கால்களில் எங்காவது தடை ஏற்பட்டால் தடை ஏற்பட்ட இடத்திற்கு மேற்பக்கத்தில் சக்தி கூடியும்(Engery Excess) தடை இருக்கும் இடத்திற்து கீழ்ப்பக்கத்தில் சக்தி குறைந்தும்(Energy Deficiency)   இருக்கும். இதனால் பலவித நோய்களும் தோன்றி தடை நீடிக்குமானால் நோயும் படிப்படியாக கூடும்.  இந்தத்தடையை நீக்கினால் சக்தி சமனப்பட்டு நோய்கள் நீங்கிவிடும் என்பது எமது மூதாதையர்களாகிய சித்தர்களும் அகத்திமாமுனிவர் போன்ற வைத்திய வல்லுனர்களும் கண்டறிந்து கையாண்ட அபுூர்வ வைத்திய முறை.  இதை அவர்கள் பாமர மக்கள் மத்தியில் அவர்களுக்கு போதிய அறிவாற்றல் இல்லாத காரணத்தால் கற்றுக்கொடுக்காது ஏட்டுச்சுவடிகளில் எழுதி வைத்தனர். எம் நாட்டில் அவர்களுக்கு பின் வாழ்ந்த சில சுயநல வைத்தியர்கள் தமது பரம்பரையினர்களுக்கு மட்டும் கற்பித்து வந்த காரணத்தால் அது மக்களிடையில் பிரபல்யமாகாது அழிந்து விட்டது.  ஆனால் சீன தேசத்தவர் இதை மிகப்பிரபல்யமாக்கி ஜப்பான், கொறியா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் மிக மதிக்கும் வைத்தியத்துறையாக்கி பல்வேறு நோய்களையும் எவரும் பிரமிக்கும்படி குணமாக்கச்செய்கின்றனர்.  இப்பெருமை சீனத்தேசத்தவரைச்சாரும்.  இந்த வைத்தியங்களாகிய குறிநிலை துழை(Acupuncture) , ஏனைய குறி நிலை அழுத்துமுறை(Acupressure) பிரதிபிம்ம நிலைஅழுத்து(Reflexology)  வைத்திய முறைகளில் கையாளப்படும் சிகிச்சை முறைகளில் இந்த வர்மப்புள்ளிகளில் மென்மையான ஊசிகளை குத்தி ஊக்குவித்தல்; (Stimulating)  அல்லது இப்புள்ளிகளை அழுத்துவதாகும்.  இந்த வர்மப்புள்ளி வாய்க்கால் நீட்டல் முறைப்படி, இந்த வாய்கால்களை நன்கு நீட்டிக்குறுக்கவதால் அவ்விடங்களில் தடைகள் ஏற்படாது. அப்படி தடைகள் ஏற்பட்டிருப்பின் அத்தடைகள் படிப்படியாக நீங்கி நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என்பது இந்த வர்ம ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை அப்பியாசமாகும்.  இதை தினந்தினம் பயிற்சித்தால் நோயின்றி வாழலாம்.<br />
<br />
      Thanks to Dr, S.V Pararajasingam, Ph.D<br />
                 Scarborough, Canada                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;சகல நோய்களும் தீர வர்மப்புள்ளி குறிநிலை ஜீவசக்தி வாய்க்கால் நீட்டல் பயிற்சி&lt;/b&gt;<br />
Energy Meridian Stretches for Cure All Diseases<br />
<br />
மனித உடம்பில் சக்தி(‘Qi’-Energy)  14 வாய்க்கால்களில் சதா ஓடியவண்ணம் இருக்கும். அப்படி ஓடியவண்ணம் இருந்தால் உடம்பில் எது நோயும் இருக்காது. இந்த வாய்க்கால்களில் எங்காவது தடை ஏற்பட்டால் தடை ஏற்பட்ட இடத்திற்கு மேற்பக்கத்தில் சக்தி கூடியும்(Engery Excess) தடை இருக்கும் இடத்திற்து கீழ்ப்பக்கத்தில் சக்தி குறைந்தும்(Energy Deficiency)   இருக்கும். இதனால் பலவித நோய்களும் தோன்றி தடை நீடிக்குமானால் நோயும் படிப்படியாக கூடும்.  இந்தத்தடையை நீக்கினால் சக்தி சமனப்பட்டு நோய்கள் நீங்கிவிடும் என்பது எமது மூதாதையர்களாகிய சித்தர்களும் அகத்திமாமுனிவர் போன்ற வைத்திய வல்லுனர்களும் கண்டறிந்து கையாண்ட அபுூர்வ வைத்திய முறை.  இதை அவர்கள் பாமர மக்கள் மத்தியில் அவர்களுக்கு போதிய அறிவாற்றல் இல்லாத காரணத்தால் கற்றுக்கொடுக்காது ஏட்டுச்சுவடிகளில் எழுதி வைத்தனர். எம் நாட்டில் அவர்களுக்கு பின் வாழ்ந்த சில சுயநல வைத்தியர்கள் தமது பரம்பரையினர்களுக்கு மட்டும் கற்பித்து வந்த காரணத்தால் அது மக்களிடையில் பிரபல்யமாகாது அழிந்து விட்டது.  ஆனால் சீன தேசத்தவர் இதை மிகப்பிரபல்யமாக்கி ஜப்பான், கொறியா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் மிக மதிக்கும் வைத்தியத்துறையாக்கி பல்வேறு நோய்களையும் எவரும் பிரமிக்கும்படி குணமாக்கச்செய்கின்றனர்.  இப்பெருமை சீனத்தேசத்தவரைச்சாரும்.  இந்த வைத்தியங்களாகிய குறிநிலை துழை(Acupuncture) , ஏனைய குறி நிலை அழுத்துமுறை(Acupressure) பிரதிபிம்ம நிலைஅழுத்து(Reflexology)  வைத்திய முறைகளில் கையாளப்படும் சிகிச்சை முறைகளில் இந்த வர்மப்புள்ளிகளில் மென்மையான ஊசிகளை குத்தி ஊக்குவித்தல்; (Stimulating)  அல்லது இப்புள்ளிகளை அழுத்துவதாகும்.  இந்த வர்மப்புள்ளி வாய்க்கால் நீட்டல் முறைப்படி, இந்த வாய்கால்களை நன்கு நீட்டிக்குறுக்கவதால் அவ்விடங்களில் தடைகள் ஏற்படாது. அப்படி தடைகள் ஏற்பட்டிருப்பின் அத்தடைகள் படிப்படியாக நீங்கி நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என்பது இந்த வர்ம ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை அப்பியாசமாகும்.  இதை தினந்தினம் பயிற்சித்தால் நோயின்றி வாழலாம்.<br />
<br />
      Thanks to Dr, S.V Pararajasingam, Ph.D<br />
                 Scarborough, Canada                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Energy Meridian Stretch]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=494</link>
			<pubDate>Mon, 20 Mar 2006 03:23:35 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2320">Thinava</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=494</guid>
			<description><![CDATA[                                        ]]></description>
			<content:encoded><![CDATA[                                        ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=533</link>
			<pubDate>Wed, 15 Mar 2006 09:14:47 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=533</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்&lt;/b&gt;<br />
<br />
கடல் கடந்த தமிழ் மருத்துவம்<br />
<br />
<br />
மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
 "கோதையர் கலவி போதை<br />
கொழுத்தமீ னிறைச்சி போதைப்<br />
பாதுவாய் நெய்யும் பாலும்<br />
பரிவுட ணுன்பீ ராகில்<br />
சோதபாண் டுருவ மிக்க<br />
சுக்கில பிரமே கந்தான்<br />
ஒதுநீ ரிழிவு சேர<br />
உண்டென வறிந்து கொள்ளே''<br />
<br />
அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.<br />
<br />
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.<br />
இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.<br />
<br />
இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.<br />
<br />
சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.<br />
<br />
சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.<br />
<br />
<br />
<br />
நன்றி - தாகம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்&lt;/b&gt;<br />
<br />
கடல் கடந்த தமிழ் மருத்துவம்<br />
<br />
<br />
மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
 "கோதையர் கலவி போதை<br />
கொழுத்தமீ னிறைச்சி போதைப்<br />
பாதுவாய் நெய்யும் பாலும்<br />
பரிவுட ணுன்பீ ராகில்<br />
சோதபாண் டுருவ மிக்க<br />
சுக்கில பிரமே கந்தான்<br />
ஒதுநீ ரிழிவு சேர<br />
உண்டென வறிந்து கொள்ளே''<br />
<br />
அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.<br />
<br />
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.<br />
இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.<br />
<br />
இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.<br />
<br />
சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.<br />
<br />
சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.<br />
<br />
<br />
<br />
நன்றி - தாகம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புத்திசாலியான குழந்தைகள் வளர....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=567</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 18:12:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2242">தாரணி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=567</guid>
			<description><![CDATA[                    புத்திசாலியான குழந்தைகள் வளர....  <br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img391.imageshack.us/img391/1206/baby20wj.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
 <br />
ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் <br />
உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும்.<br />
<br />
குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். <br />
அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல் தன்னம்பிக்கை வளரும்.<br />
<br />
பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும். அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து <br />
கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.<br />
<br />
குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும். பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும். காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.<br />
<br />
குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும். நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால் <br />
அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.<br />
<br />
பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள். பல போட்டிகளில் <br />
பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல <br />
வேண்டிய பாதையை வகுக்க முடியும்.<br />
<br />
இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார். ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் <br />
வளர்ப்பில்தான் உள்ளது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புத்திசாலியான குழந்தைகள் வளர....  <br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img391.imageshack.us/img391/1206/baby20wj.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
 <br />
ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் <br />
உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும்.<br />
<br />
குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். <br />
அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல் தன்னம்பிக்கை வளரும்.<br />
<br />
பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும். அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து <br />
கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.<br />
<br />
குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும். பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும். காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.<br />
<br />
குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும். நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால் <br />
அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.<br />
<br />
பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள். பல போட்டிகளில் <br />
பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல <br />
வேண்டிய பாதையை வகுக்க முடியும்.<br />
<br />
இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார். ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் <br />
வளர்ப்பில்தான் உள்ளது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=695</link>
			<pubDate>Sun, 26 Feb 2006 18:07:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1390">SUNDHAL</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=695</guid>
			<description><![CDATA[                    அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.<br />
<br />
அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.<br />
<br />
அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.<br />
<br />
நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.<br />
<br />
நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.<br />
<br />
இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.<br />
<br />
முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.<br />
<br />
எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.<br />
<br />
இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.<br />
Thanks<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />inamalar...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.<br />
<br />
அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.<br />
<br />
அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.<br />
<br />
நம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, "என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, "உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.<br />
<br />
நிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.<br />
<br />
இந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.<br />
<br />
முப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.<br />
<br />
எதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் "ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.<br />
<br />
இவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.<br />
Thanks<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />inamalar...                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாய்-தந்தை உறவைப் பொறுத்தே....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=791</link>
			<pubDate>Sun, 19 Feb 2006 18:35:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1466">ப்ரியசகி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=791</guid>
			<description><![CDATA[                    தாய்-தந்தை உறவைப் பொறுத்தே <br />
குழந்தைகளின் மன நலம் அமையும்..* <br />
--------------------------------------------------------------------------------<br />
<br />
பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது. <br />
அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு. <br />
<br />
குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும். <br />
<br />
சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம். <br />
<br />
இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.<br />
<br />
<br />
நன்றி<br />
தினகரன் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தாய்-தந்தை உறவைப் பொறுத்தே <br />
குழந்தைகளின் மன நலம் அமையும்..* <br />
--------------------------------------------------------------------------------<br />
<br />
பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது. <br />
அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு. <br />
<br />
குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும். <br />
<br />
சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம். <br />
<br />
இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.<br />
<br />
<br />
நன்றி<br />
தினகரன் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மருத்துவ மஞ்சரி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=838</link>
			<pubDate>Wed, 15 Feb 2006 22:02:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2242">தாரணி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=838</guid>
			<description><![CDATA[                    தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.<br />
<br />
முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது.<br />
<br />
விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.<br />
<br />
முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது.<br />
<br />
விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=851</link>
			<pubDate>Wed, 15 Feb 2006 12:19:55 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2146">சந்தியா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=851</guid>
			<description><![CDATA[                    அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.<br />
<br />
நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். <br />
<br />
இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.<br />
<br />
இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.<br />
<br />
நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில்இ தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம்இ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.<br />
<br />
மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.<br />
<br />
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.<br />
ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போதுஇ நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.<br />
<br />
திலீபன் செல்வகுமாரன் <br />
<br />
<br />
சுட்டது <br />
தீலீபனின் வுலக்கில்<br />
<br />
<br />
ஆமா இங்கு யார் நகம் கடிக்கிறது?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.<br />
<br />
நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். <br />
<br />
இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.<br />
<br />
இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.<br />
<br />
நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில்இ தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம்இ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.<br />
<br />
மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.<br />
<br />
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.<br />
ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போதுஇ நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.<br />
<br />
திலீபன் செல்வகுமாரன் <br />
<br />
<br />
சுட்டது <br />
தீலீபனின் வுலக்கில்<br />
<br />
<br />
ஆமா இங்கு யார் நகம் கடிக்கிறது?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=912</link>
			<pubDate>Fri, 10 Feb 2006 23:14:00 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=786">ஊமை</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=912</guid>
			<description><![CDATA[                    டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!<br />
<br />
<br />
<br />
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.<br />
<br />
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.<br />
<br />
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.<br />
<br />
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.<br />
<br />
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.<br />
<br />
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.<br />
<br />
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.<br />
<br />
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.<br />
<br />
டாக்டர் வேதமாலிகா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!<br />
<br />
<br />
<br />
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.<br />
<br />
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.<br />
<br />
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.<br />
<br />
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.<br />
<br />
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.<br />
<br />
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.<br />
<br />
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.<br />
<br />
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.<br />
<br />
டாக்டர் வேதமாலிகா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=913</link>
			<pubDate>Fri, 10 Feb 2006 23:12:41 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=786">ஊமை</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=913</guid>
			<description><![CDATA[                    கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!<br />
<br />
"செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.<br />
<br />
செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர்.<br />
<br />
இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம்.<br />
<br />
அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.<br />
<br />
செல்போனில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்து அழுத்தி கொண்டே இருந்தால், தசை நார்களில் வலி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். இத்தாலியில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் அதிக அளவில் இருக்கிறது.<br />
<br />
37 சதவீத சிறுவர்கள் செல்போன் பித்துப்பிடித்து, எப்போதும் செல்போனும் காதுமாக அலைகின்றனர்.<br />
<br />
வடக்கு இத்தாலியில் உள்ள சவோனா நகரை சேர்ந்த 13 வயது சிறுமி நாள்தோறும் குறைந்தது 100 முறை எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.<br />
<br />
இதனால் அவள் கைவிரல்களில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவள் ஒரு முடநீக்கு இயல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். மருந்து கொடுத்ததோடு கை விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்துதான் இத்தாலி நாட்டு டாக்டர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!<br />
<br />
"செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.<br />
<br />
செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர்.<br />
<br />
இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம்.<br />
<br />
அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.<br />
<br />
செல்போனில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்து அழுத்தி கொண்டே இருந்தால், தசை நார்களில் வலி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். இத்தாலியில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் அதிக அளவில் இருக்கிறது.<br />
<br />
37 சதவீத சிறுவர்கள் செல்போன் பித்துப்பிடித்து, எப்போதும் செல்போனும் காதுமாக அலைகின்றனர்.<br />
<br />
வடக்கு இத்தாலியில் உள்ள சவோனா நகரை சேர்ந்த 13 வயது சிறுமி நாள்தோறும் குறைந்தது 100 முறை எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.<br />
<br />
இதனால் அவள் கைவிரல்களில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவள் ஒரு முடநீக்கு இயல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். மருந்து கொடுத்ததோடு கை விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்துதான் இத்தாலி நாட்டு டாக்டர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நீல நிறக் குழந்தை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=914</link>
			<pubDate>Fri, 10 Feb 2006 23:11:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=786">ஊமை</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=914</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்?&lt;/span&gt;<br />
<br />
<br />
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.<br />
<br />
நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.<br />
<br />
கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு &lt;உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.<br />
<br />
குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.<br />
<br />
நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.<br />
<br />
மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.<br />
<br />
இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.<br />
<br />
இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.<br />
<br />
சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.<br />
<br />
இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.<br />
<br />
குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர&lt;லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.<br />
<br />
வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.<br />
<br />
எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.<br />
<br />
-பேராசிரியர் அர்த்தநாரி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்?&lt;/span&gt;<br />
<br />
<br />
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.<br />
<br />
நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.<br />
<br />
கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு &lt;உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.<br />
<br />
குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.<br />
<br />
நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.<br />
<br />
மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.<br />
<br />
இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.<br />
<br />
இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.<br />
<br />
சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.<br />
<br />
இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.<br />
<br />
குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர&lt;லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.<br />
<br />
வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.<br />
<br />
எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.<br />
<br />
-பேராசிரியர் அர்த்தநாரி                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>