<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - விஞ்ஞானம் - தொழில்நுட்பம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 10:35:22 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=171</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 20:28:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=171</guid>
			<description><![CDATA[                    100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies)<br />
<a href="http://img471.imageshack.us/my.php?image=s11zv.gif" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img471.imageshack.us/img471/9088/s11zv.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள்.<br />
<br />
அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது.<br />
<br />
<a href="http://www.baselinemag.com/article2/0,1540,1947524,00.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies)<br />
<a href="http://img471.imageshack.us/my.php?image=s11zv.gif" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img471.imageshack.us/img471/9088/s11zv.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள்.<br />
<br />
அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது.<br />
<br />
<a href="http://www.baselinemag.com/article2/0,1540,1947524,00.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இணையத்தில் ஒலிவடிவில் தகவல் விளம்பரம்/அறிவிப்பு -syndication]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=245</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 18:14:34 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=245</guid>
			<description><![CDATA[                    இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast.<br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Podcast" target="_blank" rel="noopener" class="mycode_url">http://en.wikipedia.org/wiki/Podcast</a><br />
<a href="http://www.Podcast.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.Podcast.net</a><br />
<a href="http://www.ipodder.org" target="_blank" rel="noopener" class="mycode_url">www.ipodder.org</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast.<br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Podcast" target="_blank" rel="noopener" class="mycode_url">http://en.wikipedia.org/wiki/Podcast</a><br />
<a href="http://www.Podcast.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.Podcast.net</a><br />
<a href="http://www.ipodder.org" target="_blank" rel="noopener" class="mycode_url">www.ipodder.org</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சொல்லிடத் தொலைபேசியின் பரிணாம வழர்ச்சி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=295</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 14:53:15 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=295</guid>
			<description><![CDATA[                    <a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img432.imageshack.us/img432/3475/mobileevolution10gh.png' border='0' alt='user posted image'&gt;</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img432.imageshack.us/img432/3475/mobileevolution10gh.png' border='0' alt='user posted image'&gt;</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Simple.Plastic.Airplane.Design-பறக்கும் மொடல் விமானங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=358</link>
			<pubDate>Sun, 02 Apr 2006 17:11:39 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=358</guid>
			<description><![CDATA[                    பொதுவாக கடைகளில் கிடைக்கக் கூடிய சாதாரண பொருட்களில் இருந்து ரேடியோவினால் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் மொடல் விமானங்களை வடிவமைப்பதற்குத் தேவயான வரை படங்களும்,ஆலோசனைகளும் இந்த இணயத்தளத்தில் உண்டு. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.<br />
<br />
S.P.A.D. is a concept of R/C plane construction that took off in the late 90's. It focuses on using inexpensive materials found at hardware stores and sign shops in conjuntion with simple construction methods to get you in the air quickly! Oh yeah, and the plans are FREE! <br />
<br />
<a href="http://www.spad.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.spad.org/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பொதுவாக கடைகளில் கிடைக்கக் கூடிய சாதாரண பொருட்களில் இருந்து ரேடியோவினால் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் மொடல் விமானங்களை வடிவமைப்பதற்குத் தேவயான வரை படங்களும்,ஆலோசனைகளும் இந்த இணயத்தளத்தில் உண்டு. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.<br />
<br />
S.P.A.D. is a concept of R/C plane construction that took off in the late 90's. It focuses on using inexpensive materials found at hardware stores and sign shops in conjuntion with simple construction methods to get you in the air quickly! Oh yeah, and the plans are FREE! <br />
<br />
<a href="http://www.spad.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.spad.org/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கைப்பர் ஜெட்-லண்டனில் இருந்து சிட்னி 2 மணி  நேரத்தில்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=451</link>
			<pubDate>Thu, 23 Mar 2006 16:26:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=451</guid>
			<description><![CDATA[                    கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின்.<br />
ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன்  நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்தியாசம் உருவாக்கப் பட்டு ,அதி வேகமுடய வெளியேற்றத்திற்கு உள்ளாகிறது.இந்த அதி கூடிய வேகமே ,விமானத்தை அதி கூடிய வேகத்தில் உந்தித் தள்ளுகிறது.சுழலும் பாகங்களை உடய இயந்திரத்தினால் இத்தினை கூடிய வேகத்தைப் பெற முடியாது.<br />
<br />
சரி இதனால் எமக்கு என்ன பயன் என்றால் வருங் காலத்தில் அதி வேகம் கூடிய இந்த விமானங்களினால் இரண்டு மணித்தியாலங்களில் சிட்னியில் இருந்து லண்டனுக்கு வரலாம்,செயற்கைக் கோள்களை மிகக் குறைந்த விலையில் விண்ணில் ஏவலாம்.அத்தோடு அதிக தூரம் செல்லும் அதி கூடிய வேக முடைய ஏவுகணைகளை வடிவமைக்கலாம்.இவ்வாறான காரணங்களாலயே பல  நாடுகளும் இதற்கான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. <br />
<br />
Hypersonic jet ready for launch  <br />
Jonathan Fildes <br />
BBC News science and technology reporter  <br />
<br />
<br />
 <br />
The launch will be the third for the Hyshot consortium <br />
A new jet engine design able to fly seven times the speed of sound is to be test fired over Australia on Friday. <br />
<br />
The scramjet engine, known as Hyshot III, has been designed by British defence firm Qinetiq. <br />
<br />
If successful, it could pave the way for ultrafast, intercontinental air travel, and substantially cut the cost of putting small payloads into space. <br />
<br />
The engine will launch on a rocket owned and operated by the University of Queensland. <br />
<br />
It is the first of three test flights planned for this year by the international Hyshot consortium. <br />
<br />
The first Hyshot engine was launched in 2001 but the test flight failed when the rocket carrying the engine flew off course. <br />
<br />
Simple engines <br />
<br />
A supersonic combustion ramjet, or scramjet, is mechanically very simple. It has no moving parts and takes all of the oxygen it needs to burn hydrogen fuel from the air. <br />
<br />
This makes it more efficient than conventional rocket engines as they do not need to carry their own oxygen supply, meaning that any vehicle could potentially carry a larger payload. <br />
<br />
However scramjets do not begin to work until they reach five times the speed of sound. <br />
<br />
  <br />
 You're dealing with extremes of conditions. You've got to expect things to go wrong <br />
<br />
Dr Allan Paull, University of Queensland <br />
At this speed the air passing through the engine is compressed and hot enough for ignition to occur. Rapid expansion of the exhaust gases creates the forward thrust. <br />
<br />
To reach the critical speed, Hyshot III will be strapped to the front of a conventional rocket and blasted to an altitude of 330km before being allowed to plummet back to Earth. <br />
<br />
On its descent the engine is expected to reach a top speed of Mach 7.6 or over 9,000km/ hour. <br />
<br />
Making sure the flight happens correctly is incredibly difficult, according to Dr Allan Paull, project leader of the Hyshot programme at the University of Queensland. <br />
<br />
<br />
See the scramjet experiment in detail <br />
"You are dealing with extremes of conditions. You're working out on the edge and with a lot of the stuff no one has ever tried [it] before," he told the BBC News website. "You've got to expect things to go wrong". <br />
<br />
If everything goes to plan, the experiment will begin at a height of 35km. As the engine continues its downward path the fuel in the scramjet is expected to automatically ignite. <br />
<br />
The scientists will then have just six seconds to monitor its performance before the £1m engine eventually crashes into the ground. <br />
<br />
New design <br />
<br />
The scramjet will not provide forward thrust during the flight, necessary if the engine is ever to power a vehicle. But the test will be enough to show that burning starts automatically and to verify trials already done in a wind tunnel. <br />
<br />
 <br />
Nasa's X-43A holds the current speed record <br />
<br />
"The wind tunnels operate for milliseconds," Dr Paull explained. "The difficulty is whether or not you can even see the supersonic combustion in this period of time." <br />
<br />
Although the Qinetiq engine has never left the ground it is more realistic than previous Hyshot experiments. <br />
<br />
It has a more efficient air intake on the front and can operate over a greater range of speeds. It also scoops air into the combustion chamber at a lower temperature, closer to that needed in a commercially useful engine. <br />
<br />
If the test flight is successful, it will be followed four days later by the test flight of another Hyshot engine designed by the Japanese Aerospace Exploration Agency (Jaxa). This will be followed in June by the launch of an engine that will fly at Mach 10, designed by the Australian Defence Science and Technology Organisation (DSTO). <br />
<br />
Commercial reality <br />
<br />
The Hyshot tests will bring the idea of a commercial scramjet one step closer to reality. <br />
<br />
In the first instance these would probably be used to launch satellites into low earth orbit but many have speculated that they could also allow passenger airlines to fly between London and Sydney in just 2 hours. <br />
<br />
Although this vision maybe many years off, it was given a huge boost when Nasa successfully flew its X-43A plane over the Pacific Ocean in 2004. The unmanned aircraft flew at 10 times the speed of sound, a new world speed record. <br />
<br />
The team at the University of Queensland is also currently designing a vehicle that can fly under its own power. <br />
<br />
If the plane works, it could be flying over the Australian desert within the next two years<br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img126.imageshack.us/img126/376/41476224hyperxnasa203b9wo.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img226.imageshack.us/img226/3812/41471208scramjetuq2033006bb.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img126.imageshack.us/img126/400/41476306hyshottestinf4160am.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
 <a href="http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4832254.stm#graphic" target="_blank" rel="noopener" class="mycode_url">http://news.bbc.co.uk/1/hi/sci/tech/483225...254.stm#graphic</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின்.<br />
ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன்  நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்தியாசம் உருவாக்கப் பட்டு ,அதி வேகமுடய வெளியேற்றத்திற்கு உள்ளாகிறது.இந்த அதி கூடிய வேகமே ,விமானத்தை அதி கூடிய வேகத்தில் உந்தித் தள்ளுகிறது.சுழலும் பாகங்களை உடய இயந்திரத்தினால் இத்தினை கூடிய வேகத்தைப் பெற முடியாது.<br />
<br />
சரி இதனால் எமக்கு என்ன பயன் என்றால் வருங் காலத்தில் அதி வேகம் கூடிய இந்த விமானங்களினால் இரண்டு மணித்தியாலங்களில் சிட்னியில் இருந்து லண்டனுக்கு வரலாம்,செயற்கைக் கோள்களை மிகக் குறைந்த விலையில் விண்ணில் ஏவலாம்.அத்தோடு அதிக தூரம் செல்லும் அதி கூடிய வேக முடைய ஏவுகணைகளை வடிவமைக்கலாம்.இவ்வாறான காரணங்களாலயே பல  நாடுகளும் இதற்கான ஆராச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. <br />
<br />
Hypersonic jet ready for launch  <br />
Jonathan Fildes <br />
BBC News science and technology reporter  <br />
<br />
<br />
 <br />
The launch will be the third for the Hyshot consortium <br />
A new jet engine design able to fly seven times the speed of sound is to be test fired over Australia on Friday. <br />
<br />
The scramjet engine, known as Hyshot III, has been designed by British defence firm Qinetiq. <br />
<br />
If successful, it could pave the way for ultrafast, intercontinental air travel, and substantially cut the cost of putting small payloads into space. <br />
<br />
The engine will launch on a rocket owned and operated by the University of Queensland. <br />
<br />
It is the first of three test flights planned for this year by the international Hyshot consortium. <br />
<br />
The first Hyshot engine was launched in 2001 but the test flight failed when the rocket carrying the engine flew off course. <br />
<br />
Simple engines <br />
<br />
A supersonic combustion ramjet, or scramjet, is mechanically very simple. It has no moving parts and takes all of the oxygen it needs to burn hydrogen fuel from the air. <br />
<br />
This makes it more efficient than conventional rocket engines as they do not need to carry their own oxygen supply, meaning that any vehicle could potentially carry a larger payload. <br />
<br />
However scramjets do not begin to work until they reach five times the speed of sound. <br />
<br />
  <br />
 You're dealing with extremes of conditions. You've got to expect things to go wrong <br />
<br />
Dr Allan Paull, University of Queensland <br />
At this speed the air passing through the engine is compressed and hot enough for ignition to occur. Rapid expansion of the exhaust gases creates the forward thrust. <br />
<br />
To reach the critical speed, Hyshot III will be strapped to the front of a conventional rocket and blasted to an altitude of 330km before being allowed to plummet back to Earth. <br />
<br />
On its descent the engine is expected to reach a top speed of Mach 7.6 or over 9,000km/ hour. <br />
<br />
Making sure the flight happens correctly is incredibly difficult, according to Dr Allan Paull, project leader of the Hyshot programme at the University of Queensland. <br />
<br />
<br />
See the scramjet experiment in detail <br />
"You are dealing with extremes of conditions. You're working out on the edge and with a lot of the stuff no one has ever tried [it] before," he told the BBC News website. "You've got to expect things to go wrong". <br />
<br />
If everything goes to plan, the experiment will begin at a height of 35km. As the engine continues its downward path the fuel in the scramjet is expected to automatically ignite. <br />
<br />
The scientists will then have just six seconds to monitor its performance before the £1m engine eventually crashes into the ground. <br />
<br />
New design <br />
<br />
The scramjet will not provide forward thrust during the flight, necessary if the engine is ever to power a vehicle. But the test will be enough to show that burning starts automatically and to verify trials already done in a wind tunnel. <br />
<br />
 <br />
Nasa's X-43A holds the current speed record <br />
<br />
"The wind tunnels operate for milliseconds," Dr Paull explained. "The difficulty is whether or not you can even see the supersonic combustion in this period of time." <br />
<br />
Although the Qinetiq engine has never left the ground it is more realistic than previous Hyshot experiments. <br />
<br />
It has a more efficient air intake on the front and can operate over a greater range of speeds. It also scoops air into the combustion chamber at a lower temperature, closer to that needed in a commercially useful engine. <br />
<br />
If the test flight is successful, it will be followed four days later by the test flight of another Hyshot engine designed by the Japanese Aerospace Exploration Agency (Jaxa). This will be followed in June by the launch of an engine that will fly at Mach 10, designed by the Australian Defence Science and Technology Organisation (DSTO). <br />
<br />
Commercial reality <br />
<br />
The Hyshot tests will bring the idea of a commercial scramjet one step closer to reality. <br />
<br />
In the first instance these would probably be used to launch satellites into low earth orbit but many have speculated that they could also allow passenger airlines to fly between London and Sydney in just 2 hours. <br />
<br />
Although this vision maybe many years off, it was given a huge boost when Nasa successfully flew its X-43A plane over the Pacific Ocean in 2004. The unmanned aircraft flew at 10 times the speed of sound, a new world speed record. <br />
<br />
The team at the University of Queensland is also currently designing a vehicle that can fly under its own power. <br />
<br />
If the plane works, it could be flying over the Australian desert within the next two years<br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img126.imageshack.us/img126/376/41476224hyperxnasa203b9wo.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img226.imageshack.us/img226/3812/41471208scramjetuq2033006bb.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img126.imageshack.us/img126/400/41476306hyshottestinf4160am.gif' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
 <a href="http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4832254.stm#graphic" target="_blank" rel="noopener" class="mycode_url">http://news.bbc.co.uk/1/hi/sci/tech/483225...254.stm#graphic</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=562</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 22:31:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=562</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட்  &lt;/b&gt;<br />
<br />
ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். <br />
<br />
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோஹன் ரிட்டரைச் சந்தித்தார். அப்போது ஜோஹன் ரிட்டர், காந்தம் மற்றும் மின்சாரத்துக்கு இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இயற்கையின் ஒருங்கிணைந்த தன்மையில் நம்பிக்கை கொண்ட ஆர்ஸ்டட், இந்தக் கருத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1806-ல் டென்மார்க் திரும்பி, கோபன்ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியராக மின்னோட்டம் மற்றும் ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்கு இயற்பியலுக்கென தனித் துறையை உருவாக்கினார் ஆர்ஸ்டட். <br />
<br />
ஒரு மாலை நேர விரிவுரைக்காக, சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்ஸ்டட் மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் இடையிலான உறவைத் தற்செயலாகக் கண்டறிந்தார். 3 மாதங்களுக்குப் பின்னர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, மின்னோட்டமானது வயர் வழியாகச் செல்லும்போது காந்தப் புலத்தை உருவாக்குகிறது என்பதை நிரூபித்தார். காந்தத் தூண்டலுக்கான சிஜிஎஸ் முறை அலகுக்கு இவரது நினைவாக "ஆர்ஸ்டட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. <br />
<br />
கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆர்ஸ்டட் முன்முயற்சியில் உருவானதாகும். இது தவிர புதிதாக அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கியதன் மூலம் டேனிஷ் மொழிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். <br />
 <br />
<a href="http://www.viduppu.com/tech/index.php?subaction=showfull&amp;id=1141769704&amp;archive=&amp;start_from=&amp;ucat=2&amp;" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&amp;ucat=2&amp;</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட்  &lt;/b&gt;<br />
<br />
ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். <br />
<br />
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோஹன் ரிட்டரைச் சந்தித்தார். அப்போது ஜோஹன் ரிட்டர், காந்தம் மற்றும் மின்சாரத்துக்கு இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இயற்கையின் ஒருங்கிணைந்த தன்மையில் நம்பிக்கை கொண்ட ஆர்ஸ்டட், இந்தக் கருத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1806-ல் டென்மார்க் திரும்பி, கோபன்ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியராக மின்னோட்டம் மற்றும் ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்கு இயற்பியலுக்கென தனித் துறையை உருவாக்கினார் ஆர்ஸ்டட். <br />
<br />
ஒரு மாலை நேர விரிவுரைக்காக, சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்ஸ்டட் மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் இடையிலான உறவைத் தற்செயலாகக் கண்டறிந்தார். 3 மாதங்களுக்குப் பின்னர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, மின்னோட்டமானது வயர் வழியாகச் செல்லும்போது காந்தப் புலத்தை உருவாக்குகிறது என்பதை நிரூபித்தார். காந்தத் தூண்டலுக்கான சிஜிஎஸ் முறை அலகுக்கு இவரது நினைவாக "ஆர்ஸ்டட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. <br />
<br />
கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆர்ஸ்டட் முன்முயற்சியில் உருவானதாகும். இது தவிர புதிதாக அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கியதன் மூலம் டேனிஷ் மொழிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். <br />
 <br />
<a href="http://www.viduppu.com/tech/index.php?subaction=showfull&amp;id=1141769704&amp;archive=&amp;start_from=&amp;ucat=2&amp;" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&amp;ucat=2&amp;</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சூப்பர் கம்ப்யூட்டர்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=563</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 22:28:34 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=563</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: &lt;/b&gt;<br />
<br />
ஜெர்மனி சாதனை  <br />
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. <br />
<br />
நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. <br />
<br />
பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். <br />
<br />
அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும். <br />
<br />
இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன. <br />
<br />
ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப். <br />
<br />
<a href="http://www.viduppu.com/tech/index.php?subaction=showfull&amp;id=1141769739&amp;archive=&amp;start_from=&amp;ucat=2&amp;" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&amp;ucat=2&amp;</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: &lt;/b&gt;<br />
<br />
ஜெர்மனி சாதனை  <br />
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. <br />
<br />
நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. <br />
<br />
பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். <br />
<br />
அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும். <br />
<br />
இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன. <br />
<br />
ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப். <br />
<br />
<a href="http://www.viduppu.com/tech/index.php?subaction=showfull&amp;id=1141769739&amp;archive=&amp;start_from=&amp;ucat=2&amp;" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&amp;ucat=2&amp;</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=608</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 23:38:43 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=608</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img462.imageshack.us/img462/303/nuclearexplosion3hr.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள்.<br />
<br />
சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது.<br />
<br />
கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப்படுகிறது. சரி, மைக்ரோ - வினாடி என்றால் என்ன? கண்ணிமைக்கும் நேரம்? இல்லை, ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.<br />
<br />
அந்த நான்காவது மைக்ரோ வினாடியில் சென்ட்ரலைச் சுற்றி கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் ஆரத்தில் எல்லாமே ஆவியாகிவிடுகின்றன. சூரியனைப் போன்ற மிக வெப்பமான ஒளி எழும்புகிறது. ரயில் வண்டிகள், இருப்புப் பாதைகள், மின் கம்பிகள், சிக்னல் கம்புகள் - எதுவுமே உருகிக் குழம்பாகக் கூட நேரமில்லாமல் அப்படியே ஆவியாகி விடுகின்றன.<br />
<br />
சென்ட்ரல் நிலையத்தில் வழக்கமாக காலை 8மணிக்கு கிட்டத்தட்ட 5000 பேர் இருப்பார்கள். அவர்கள்தான் நகரிலேயே மிக அதிர்ஷ்டசாலிகள். வெடியின் சத்தம் கூட கேட்காமல், அதன் ஒளியைப் பார்க்கும் முன்னேயே அவர்கள் பரலோகம் போய்ச் சேர்ந்து இருப்பார்கள்.<br />
<br />
அந்த ஒளிப் பிழம்பின் பின்னர் வருவது ஒரு மிகப் பெரிய வெடிச்சத்தம். இம்மாதிரி ஒன்றை நீங்கள் நிச்சயம் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. இந்த ராட்சத இடிதான் மிகப்பெரிய சர்வ நாசத்தை உண்டாக்குகிறது. இதை அதிர்வலை என்பார்கள். உருகிய உலோகத்தை இதுவே இட்டுச் செல்கிறது வழியெல்லாம் அழிவைப் பரப்பியவாறு!<br />
<br />
ஒரு அரை கிலோமீட்டர் ஆரம் கொண்ட வட்டத்தில், ரிப்பன் கட்டடத்திலும், தங்க சாலையிலும் கூட இந்த அதிர்வலை கொலையலை ஆகிறது. இதை கொலை அதியழுத்த பிரதேசம் என்பார்கள். இந்த ஒலியின் அடர்த்தியே மனித உடலை நாராகக் கிழிக்கும் வலிமை பெற்றுள்ளதால், இங்குள்ள கிட்டத்தட்ட 10,000 பேர் வெடிச்சத்தம் கேட்கும் முன்னரே சதையும் பிண்டமுமாக சிதறுகிறார்கள். எங்கும் ஓடவோ ஒளியவோ நேரமில்லை, இடமில்லை.<br />
<br />
குண்டு வெடித்து இன்னும் ஒரு வினாடி கூட ஆகவில்லை கிட்டத்தட்ட 20.000 பேர் இறந்து விட்டனர். சென்னை சென்ட்ரல் மேலே ஒரு காளான் மேகம் உருவாகி மேலெழும்பத் தொடங்கியுள்ளது. கதிரியக்க வீச்சு தொடங்கிவிட்டது. முதல் சில மில்லி - வினாடிகளில் (மில்லி - வினாடி = வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) உருவாகிய மின் காந்த அதிர்ச்சி பரவலாக (கிண்டிவரை) எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களையும் அப்பளமாகச் சுட்டுவிட்டது. நகரம் சாகத் தொடங்கிவிட்டது.<br />
<br />
இன்னும் ஒரு ஒன்றரை - இரண்டு கிலோ மீட்டர் ஆரத்தில் அதிர்வலை ராட்சசத்தனமாய் இயங்குகிறது. பஸ்கள், லாரிகள், கட்டடங்கள், ரயில் வண்டிகள் எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. மனிதர்கள் மீது விழுகின்றன. எங்கும் பறக்கும் பாறைகள். தீ பற்றி எரிகிறது. இந்தப் பகுதியிலுள்ள இரண்டு லட்சம் போர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20,000 பேர் உடனே உயிரிழக்கின்றனர். மீதிப்பேர் படுபாயமுறுகின்றனர்.<br />
<br />
இன்னும் ஐந்து வினாடிகள் கூட ஆகவில்லை 40,000 பேர் மரணம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் படுகாயம்.<br />
<br />
செக்ரடேரியட் கட்டடமும், திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் தரைமட்டமாகி விட்டன. அங்கு தீ எரிகிறது. ரத்தக் களறியாய் உள்ளது. அணுகுண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை.<br />
<br />
பெரம்பூரிலும் ராயப்பேட்டையிலும் நாச அலை கிட்டத்தட்ட சூறாவளி வேகத்திற்கு (வீரியும் குறைந்து) காணப்படுகிறது. செங்கல் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. குடிசைகளெல்லாம் அழிவு. இன்னும் பத்து லட்சம் பேருக்கு பாதிப்பு, பத்தாயிரம் பேர் மடிகின்றனர்.<br />
<br />
பத்து வினாடி - 40,000 பேர் மரணம். ஆறு லட்சம் பேர் படுகாயம். பெசன்ட் நகரில், ஆவடியில் அதிர்வலை புயல் வேகமாய் குறைந்து தெரிகிறது. இங்கு எல்லோரும் பிழைத்து விடுவார்கள். தாம்பரத்தில் கதிரியக்கக் காற்று மட்டும் வீசுகிறது.<br />
<br />
தமிழ் நாட்டின் வர்த்தக உயிர் நாடியான பகுதி முற்றிலும் அழிந்து கிடக்கிறது. எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை எங்கும் அழிவு. சென்னையோடு வெளிவட்டாரங்களும், உலகும் தொலைத் தொடர்பு இழந்துவிட்டன. மின்காந்த அதிர்ச்சி எல்லா தொடர்பு சாதனங்களையும் பொரித்து விட்டது.<br />
<br />
அடுத்த சில நாட்களில் கதிரியக்கக் காற்று மெதுவாக வீசி செங்கை, வேலூர் விழுப்புரம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் காற்றை விஷமாக்கும். தமிழ்நாட்டு கடலோரத்தில் வங்காள விரிகுடாவில் கடல் தண்ணீரும், கடல் மணலும் விஷமாகும்.<br />
<br />
குடும்பங்கள் பிளவுபட்டுவிட்டன. அண்ணா நகரிலிருந்து வேலைக்கு சென்றவர் என்ன ஆனார் என்று குடும்பத்துக்கு தெரியாது. குண்டு பாதிப்புப் பகுதியில் (உயிர் தப்பியும்) சிக்கியுள்ள இருபது லட்சம் பேருக்கு உணவு போய்ச் சேர எந்த வழியும் கிடையாது. வாகனங்கள், தெருக்கள் கூட இல்லை. எங்கும் பீதி, கொலை, கொள்ளை, நாசம், பற்றி எரியும் தீ.<br />
<br />
நண்பர்களே! நரகத்தை கற்பனையில் கண்டு விட்டீர்களா? ஆனால் அது மட்டுமா? எதிரி வேண்டுமானால் நம்மவர்களில் பத்து லட்சம் பேரைக் காயப்படுத்தி, அரை லட்சம் பேரைக் கொன்றிருக்கலாம். நம் ஆட்சியர் சும்மா இருப்பார்களா? இதே போல் எதிரியின் நகரம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்குள், ஆம் 9மணிக்குள், இதைவிட சக்தி வாய்ந்த ஒரு குண்டை வெடிப்பார்கள். பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.<br />
<br />
ஆனால் இறுதியில் என்ன? இரு நகரங்களிலும், கிட்டத்தட்ட 30லட்சம் மனிதர்கள், குடும்பங்கள் தாம் இதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அழிவு, சாவு, மீதியிருப்பவர்களின் காயம், துயரம், பிளவுபட்ட குடும்பங்கள், பட்டினி, அடுத்து இரண்டு தலைமறைகளுக்கு கான்சர் மற்றும் குறைகளோடு பிறக்கும் குழந்தைகள் - மாநிலம் முழுவதும் விஷமான நீரும், காற்றும், அதன் விளைவுகளும்.<br />
<br />
அதோடு அரசின் பல மையமான கேந்திரங்களும் அழிந்து விட்டதால் தேவைப்படும் நிவாரண வேலைகள் மேற்கொள்வதில் ஏராளாமான பிரச்சனைகள் வேறு.<br />
<br />
ஆம், எமனின் ஆயுதத்தைக் கையில் பிடித்து விட்டோம் - இதையெல்லாம் நினைத்தே ஆகவேண்டும், மேற்கொண்டே தீர வேண்டும்.<br />
<br />
டாக்டர் ஆர்.ராமனுஜம்<br />
த.வி.வெங்கடேஷ்வரன்<br />
<br />
நன்றி: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான புத்தரின் சோகம்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img462.imageshack.us/img462/303/nuclearexplosion3hr.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள்.<br />
<br />
சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது.<br />
<br />
கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப்படுகிறது. சரி, மைக்ரோ - வினாடி என்றால் என்ன? கண்ணிமைக்கும் நேரம்? இல்லை, ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.<br />
<br />
அந்த நான்காவது மைக்ரோ வினாடியில் சென்ட்ரலைச் சுற்றி கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் ஆரத்தில் எல்லாமே ஆவியாகிவிடுகின்றன. சூரியனைப் போன்ற மிக வெப்பமான ஒளி எழும்புகிறது. ரயில் வண்டிகள், இருப்புப் பாதைகள், மின் கம்பிகள், சிக்னல் கம்புகள் - எதுவுமே உருகிக் குழம்பாகக் கூட நேரமில்லாமல் அப்படியே ஆவியாகி விடுகின்றன.<br />
<br />
சென்ட்ரல் நிலையத்தில் வழக்கமாக காலை 8மணிக்கு கிட்டத்தட்ட 5000 பேர் இருப்பார்கள். அவர்கள்தான் நகரிலேயே மிக அதிர்ஷ்டசாலிகள். வெடியின் சத்தம் கூட கேட்காமல், அதன் ஒளியைப் பார்க்கும் முன்னேயே அவர்கள் பரலோகம் போய்ச் சேர்ந்து இருப்பார்கள்.<br />
<br />
அந்த ஒளிப் பிழம்பின் பின்னர் வருவது ஒரு மிகப் பெரிய வெடிச்சத்தம். இம்மாதிரி ஒன்றை நீங்கள் நிச்சயம் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. இந்த ராட்சத இடிதான் மிகப்பெரிய சர்வ நாசத்தை உண்டாக்குகிறது. இதை அதிர்வலை என்பார்கள். உருகிய உலோகத்தை இதுவே இட்டுச் செல்கிறது வழியெல்லாம் அழிவைப் பரப்பியவாறு!<br />
<br />
ஒரு அரை கிலோமீட்டர் ஆரம் கொண்ட வட்டத்தில், ரிப்பன் கட்டடத்திலும், தங்க சாலையிலும் கூட இந்த அதிர்வலை கொலையலை ஆகிறது. இதை கொலை அதியழுத்த பிரதேசம் என்பார்கள். இந்த ஒலியின் அடர்த்தியே மனித உடலை நாராகக் கிழிக்கும் வலிமை பெற்றுள்ளதால், இங்குள்ள கிட்டத்தட்ட 10,000 பேர் வெடிச்சத்தம் கேட்கும் முன்னரே சதையும் பிண்டமுமாக சிதறுகிறார்கள். எங்கும் ஓடவோ ஒளியவோ நேரமில்லை, இடமில்லை.<br />
<br />
குண்டு வெடித்து இன்னும் ஒரு வினாடி கூட ஆகவில்லை கிட்டத்தட்ட 20.000 பேர் இறந்து விட்டனர். சென்னை சென்ட்ரல் மேலே ஒரு காளான் மேகம் உருவாகி மேலெழும்பத் தொடங்கியுள்ளது. கதிரியக்க வீச்சு தொடங்கிவிட்டது. முதல் சில மில்லி - வினாடிகளில் (மில்லி - வினாடி = வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) உருவாகிய மின் காந்த அதிர்ச்சி பரவலாக (கிண்டிவரை) எல்லா எலெக்ட்ரானிக் சாமான்களையும் அப்பளமாகச் சுட்டுவிட்டது. நகரம் சாகத் தொடங்கிவிட்டது.<br />
<br />
இன்னும் ஒரு ஒன்றரை - இரண்டு கிலோ மீட்டர் ஆரத்தில் அதிர்வலை ராட்சசத்தனமாய் இயங்குகிறது. பஸ்கள், லாரிகள், கட்டடங்கள், ரயில் வண்டிகள் எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. மனிதர்கள் மீது விழுகின்றன. எங்கும் பறக்கும் பாறைகள். தீ பற்றி எரிகிறது. இந்தப் பகுதியிலுள்ள இரண்டு லட்சம் போர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20,000 பேர் உடனே உயிரிழக்கின்றனர். மீதிப்பேர் படுபாயமுறுகின்றனர்.<br />
<br />
இன்னும் ஐந்து வினாடிகள் கூட ஆகவில்லை 40,000 பேர் மரணம் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் படுகாயம்.<br />
<br />
செக்ரடேரியட் கட்டடமும், திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் தரைமட்டமாகி விட்டன. அங்கு தீ எரிகிறது. ரத்தக் களறியாய் உள்ளது. அணுகுண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை.<br />
<br />
பெரம்பூரிலும் ராயப்பேட்டையிலும் நாச அலை கிட்டத்தட்ட சூறாவளி வேகத்திற்கு (வீரியும் குறைந்து) காணப்படுகிறது. செங்கல் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. குடிசைகளெல்லாம் அழிவு. இன்னும் பத்து லட்சம் பேருக்கு பாதிப்பு, பத்தாயிரம் பேர் மடிகின்றனர்.<br />
<br />
பத்து வினாடி - 40,000 பேர் மரணம். ஆறு லட்சம் பேர் படுகாயம். பெசன்ட் நகரில், ஆவடியில் அதிர்வலை புயல் வேகமாய் குறைந்து தெரிகிறது. இங்கு எல்லோரும் பிழைத்து விடுவார்கள். தாம்பரத்தில் கதிரியக்கக் காற்று மட்டும் வீசுகிறது.<br />
<br />
தமிழ் நாட்டின் வர்த்தக உயிர் நாடியான பகுதி முற்றிலும் அழிந்து கிடக்கிறது. எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை எங்கும் அழிவு. சென்னையோடு வெளிவட்டாரங்களும், உலகும் தொலைத் தொடர்பு இழந்துவிட்டன. மின்காந்த அதிர்ச்சி எல்லா தொடர்பு சாதனங்களையும் பொரித்து விட்டது.<br />
<br />
அடுத்த சில நாட்களில் கதிரியக்கக் காற்று மெதுவாக வீசி செங்கை, வேலூர் விழுப்புரம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் காற்றை விஷமாக்கும். தமிழ்நாட்டு கடலோரத்தில் வங்காள விரிகுடாவில் கடல் தண்ணீரும், கடல் மணலும் விஷமாகும்.<br />
<br />
குடும்பங்கள் பிளவுபட்டுவிட்டன. அண்ணா நகரிலிருந்து வேலைக்கு சென்றவர் என்ன ஆனார் என்று குடும்பத்துக்கு தெரியாது. குண்டு பாதிப்புப் பகுதியில் (உயிர் தப்பியும்) சிக்கியுள்ள இருபது லட்சம் பேருக்கு உணவு போய்ச் சேர எந்த வழியும் கிடையாது. வாகனங்கள், தெருக்கள் கூட இல்லை. எங்கும் பீதி, கொலை, கொள்ளை, நாசம், பற்றி எரியும் தீ.<br />
<br />
நண்பர்களே! நரகத்தை கற்பனையில் கண்டு விட்டீர்களா? ஆனால் அது மட்டுமா? எதிரி வேண்டுமானால் நம்மவர்களில் பத்து லட்சம் பேரைக் காயப்படுத்தி, அரை லட்சம் பேரைக் கொன்றிருக்கலாம். நம் ஆட்சியர் சும்மா இருப்பார்களா? இதே போல் எதிரியின் நகரம் ஒன்றில் ஒரு மணி நேரத்துக்குள், ஆம் 9மணிக்குள், இதைவிட சக்தி வாய்ந்த ஒரு குண்டை வெடிப்பார்கள். பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம்.<br />
<br />
ஆனால் இறுதியில் என்ன? இரு நகரங்களிலும், கிட்டத்தட்ட 30லட்சம் மனிதர்கள், குடும்பங்கள் தாம் இதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அழிவு, சாவு, மீதியிருப்பவர்களின் காயம், துயரம், பிளவுபட்ட குடும்பங்கள், பட்டினி, அடுத்து இரண்டு தலைமறைகளுக்கு கான்சர் மற்றும் குறைகளோடு பிறக்கும் குழந்தைகள் - மாநிலம் முழுவதும் விஷமான நீரும், காற்றும், அதன் விளைவுகளும்.<br />
<br />
அதோடு அரசின் பல மையமான கேந்திரங்களும் அழிந்து விட்டதால் தேவைப்படும் நிவாரண வேலைகள் மேற்கொள்வதில் ஏராளாமான பிரச்சனைகள் வேறு.<br />
<br />
ஆம், எமனின் ஆயுதத்தைக் கையில் பிடித்து விட்டோம் - இதையெல்லாம் நினைத்தே ஆகவேண்டும், மேற்கொண்டே தீர வேண்டும்.<br />
<br />
டாக்டர் ஆர்.ராமனுஜம்<br />
த.வி.வெங்கடேஷ்வரன்<br />
<br />
நன்றி: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான புத்தரின் சோகம்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=758</link>
			<pubDate>Wed, 22 Feb 2006 09:44:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=758</guid>
			<description><![CDATA[                    அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.<br />
<br />
ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.<br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.<br />
<br />
ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.<br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=759</link>
			<pubDate>Wed, 22 Feb 2006 09:43:48 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=759</guid>
			<description><![CDATA[                    பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?<br />
<br />
சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு:<br />
<br />
* பறவைக் காய்ச்சல் என்பது என்ன?<br />
<br />
"ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் மனிதர்களை எவ்விதம் பாதிக்கிறது?<br />
<br />
பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால், 1997ம் ஆண்டிற்குப் பின்னர் 180 பேர் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1997ம் ஆண்டில்தான், முதல்முறையாக ஹாங்காங்கில் ஒரு நோயாளிக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. "எச்5என்1' டைப் 1 என்ற முதல்ரக தொற்றுநோய் வைரஸ் கிருமியே அதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?<br />
<br />
இதுவரை இல்லை.<br />
<br />
* தற்போதைய பிரச்னை என்ன?<br />
<br />
பறவைகளும், மனிதர்களும் தற்போது அதிகமாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயத்தில் பன்றி, குதிரை போன்ற விலங்குகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் அபாயக் கிருமி, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிற வகையில் வளர்ச்சி மாற்றம் பெற்றுவிடக் கூடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்து விட்டால்... அதற்கு சாத்தியக் கூறுகள் கொஞ்சம் தான். மனிதர்களிடையே தொற்றக் கூடிய சக்தி பெற்று புதிதாக பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளோ, உரிய மருந்துகளோ நம்மிடம் இல்லை.<br />
<br />
* இதுவரை பறவைக் காய்ச்சல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?<br />
<br />
கடந்த 1997ம் ஆண்டில்தான் ஹாங்காங்கில் பல லட்சக்கணக்கான பறவைகள் இறந்துபோன பிறகு தான் "எச்5என்1' கிருமியையே அறிய முடிந்தது. இதன் பிறகு அங்கு ஏராளமான கோழிகள் கொல்லப்பட்டதன் மூலம் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இதே வகை கிருமிகள் தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் துளிர்விட்டு, 10 கோடி பறவைகள் கொல்லப்பட்டன. 2004ம் ஆண்டிலேயே ஜுன் மாதம் ஆசிய நாடுகளில் பல இடங்களில் மீண்டும் பயமுறுத்தியது.<br />
<br />
மனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்று பார்த்தால், இதுவரை 180 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில், 90 பேர் இறந்துள்ளனர். இந்த கிருமி தற்போது, மத்திய ஆசிய நாடுகள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு பரவியுள்ளது. துருக்கி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வந்த பறவைகளிடமும் இந்த நோய்க் கிருமி காணப்படுகிறது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் நோயில் இருந்து மனிதர்களை காப்பாற்ற ஏதும் மருத்து உள்ளதா?<br />
<br />
ஆசிய நாடுகளில் காணப்படும் "எச்5என்1' கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க தற்போது எந்த மருந்து வகையும் இல்லை. எனினும், இதற்காக நடைபெற்று வரும் சில மருத்துவ பரிசோதனை முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, சுவிஸ் நாட்டு தயாரிப்பான "தமிப்ளூ' எனும் மருந்து, நோய் வராமல் தடுக்கவும் மற்றும் நோயின் ஆரம்பகட்டத்திலும் மட்டுமே பயனளிக்கும். பிரிட்டனில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து தயாரிக்கும் ரோக் என்ற நிறுவனம், 30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கத்தக்க மருந்துகளை உலக சுகாதார அமைப்புக்கு தருவதாக கூறியுள்ளது. <br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பறவை காய்ச்சலுக்கு ஏன் பயப்பட வேண்டும்?<br />
<br />
சென்னை: பறவைக் காய்ச்சல் நோய் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் வீண் வதந்திகளை கேட்டு பீதி அடையாமல், நோய் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது. பறவைக் காய்ச்சல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் பின்வருமாறு:<br />
<br />
* பறவைக் காய்ச்சல் என்பது என்ன?<br />
<br />
"ஏவியன் இன்புளூயன்சா' என்பது இதன் மருத்துவப் பெயர். எளிதில் பரவக் கூடிய இந்த தொற்றுநோய் பறவைகளின் சுவாச உறுப்புகள், வயிறு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதித்து ஒட்டுமொத்த செயலிழப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை அதிகம் பாதிக்கக் கூடியது. இத்தாலியில் 1878ம் ஆண்டில் முதன்முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் மனிதர்களை எவ்விதம் பாதிக்கிறது?<br />
<br />
பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. ஆனால், 1997ம் ஆண்டிற்குப் பின்னர் 180 பேர் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1997ம் ஆண்டில்தான், முதல்முறையாக ஹாங்காங்கில் ஒரு நோயாளிக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. "எச்5என்1' டைப் 1 என்ற முதல்ரக தொற்றுநோய் வைரஸ் கிருமியே அதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?<br />
<br />
இதுவரை இல்லை.<br />
<br />
* தற்போதைய பிரச்னை என்ன?<br />
<br />
பறவைகளும், மனிதர்களும் தற்போது அதிகமாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். சில சமயத்தில் பன்றி, குதிரை போன்ற விலங்குகளும் பாதிப்படைகின்றன. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் அபாயக் கிருமி, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிற வகையில் வளர்ச்சி மாற்றம் பெற்றுவிடக் கூடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்து விட்டால்... அதற்கு சாத்தியக் கூறுகள் கொஞ்சம் தான். மனிதர்களிடையே தொற்றக் கூடிய சக்தி பெற்று புதிதாக பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளோ, உரிய மருந்துகளோ நம்மிடம் இல்லை.<br />
<br />
* இதுவரை பறவைக் காய்ச்சல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது?<br />
<br />
கடந்த 1997ம் ஆண்டில்தான் ஹாங்காங்கில் பல லட்சக்கணக்கான பறவைகள் இறந்துபோன பிறகு தான் "எச்5என்1' கிருமியையே அறிய முடிந்தது. இதன் பிறகு அங்கு ஏராளமான கோழிகள் கொல்லப்பட்டதன் மூலம் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இதே வகை கிருமிகள் தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் துளிர்விட்டு, 10 கோடி பறவைகள் கொல்லப்பட்டன. 2004ம் ஆண்டிலேயே ஜுன் மாதம் ஆசிய நாடுகளில் பல இடங்களில் மீண்டும் பயமுறுத்தியது.<br />
<br />
மனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்று பார்த்தால், இதுவரை 180 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில், 90 பேர் இறந்துள்ளனர். இந்த கிருமி தற்போது, மத்திய ஆசிய நாடுகள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு பரவியுள்ளது. துருக்கி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வந்த பறவைகளிடமும் இந்த நோய்க் கிருமி காணப்படுகிறது.<br />
<br />
* பறவைக் காய்ச்சல் நோயில் இருந்து மனிதர்களை காப்பாற்ற ஏதும் மருத்து உள்ளதா?<br />
<br />
ஆசிய நாடுகளில் காணப்படும் "எச்5என்1' கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்க தற்போது எந்த மருந்து வகையும் இல்லை. எனினும், இதற்காக நடைபெற்று வரும் சில மருத்துவ பரிசோதனை முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, சுவிஸ் நாட்டு தயாரிப்பான "தமிப்ளூ' எனும் மருந்து, நோய் வராமல் தடுக்கவும் மற்றும் நோயின் ஆரம்பகட்டத்திலும் மட்டுமே பயனளிக்கும். பிரிட்டனில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்து தயாரிக்கும் ரோக் என்ற நிறுவனம், 30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கத்தக்க மருந்துகளை உலக சுகாதார அமைப்புக்கு தருவதாக கூறியுள்ளது. <br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உணவு தொற்றுக்கள்/ உணவு மூலம் பரவும் நோய்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=764</link>
			<pubDate>Tue, 21 Feb 2006 21:13:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=832">KULAKADDAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=764</guid>
			<description><![CDATA[                    உணவு மூலம் ஏற்படும்  தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன  பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை   நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்கப்படாது மீந்து இருக்கும் நோயாக்கும் நுண்ணங்கிகள்/ பரிகரிப்பு முடிந்த பின் ஏற்படும் தொற்றுகள் என்பன மனிதரில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.<br />
<br />
வருடம் தோறும் மில்லியன் கணக்கான உணவு மூலமான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் கணக்கிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவு மூலம் ஏற்படும் நோய்களால் வருடாந்தம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பில்லியன் ஈரோக்கள் இழப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. <br />
<br />
தற்போதைய் சூழ்நிலையில் புதிய அதிக வீரியம் உள்ள நோயாக்கிகள் உருவாகி வருவது மிக சிக்கலான விடயமாக உள்ளது.<br />
<br />
முழுமையான கிருமி நீக்கமும், தொற்றில்ல பொதியாக்கமும் உணவின் மூலம் ஏற்படும் நோயாக்கத்தை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறன. ஆயினும் நுண்ணங்கிகளால் உருவாக்கப்படும் நச்சு பொருட்கள் நோய்களை ஏற்படுத்தமுடியும்.  கிருமிநீக்கம் மிகவும் தீவிரமான பரிகரிப்புமுறையாக இருப்பதால் உணவின் போசனை கூறுகளும் அதிகளவில் இழக்கப்பட காரணமாகிறது. அத்துடன் உணவின் உண்ணும் தரத்தை பாதிக்கிறது.<br />
<br />
கடந்த நூறு வருடங்களில் நுண்ணுயிரியலில் ஏற்பட்ட அபிவிருத்தியானது உணவு தயாரிப்பில் முக்கிய பங்கற்றுகிறது. வெப்பமாக்கல், குழிரூட்டல், வடிகட்டல், கதிர்வீச்சு பயன்பாடு , இரசாயன நற்காப்பு பொருட்கள் சேர்த்தல் என்பன பாரம்பரியமாக உணவு மூலம் பரவும் நோய்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. <br />
<br />
நுண்ணங்கிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகள்,இடைத்தக்கங்கள், உணவு நொத்திதல் மூலம் பாதுக்காத்தலில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
உணவின் உள்ளடக்கத்திற்கும் (போசணை பொருட்களின் அளவு) <br />
ஒட்சிசன்<br />
உப்பு<br />
அமில தன்மை<br />
இயற்கை நற்காப்பு பொருட்கள்  என்பவற்றுக்கிடையிலான தொடர்பும் உணவு மூலம் ஏற்படும் நோய் தொற்றுக்களை குறைப்பதில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
தொடரும்....................<br />
<br />
 (எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மிகுதி பகுதியை தொடராக எழுதுகிறேன்.)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உணவு மூலம் ஏற்படும்  தொற்றுக்கள், நஞ்சாக்கம் என்பன  பல்வேறு நோய்களும், இறப்புக்களும் ஏற்பட காரணமாக இருக்கிறன. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பக்ரீரியா, பங்கசு, (பூஞ்சணம்), அமீபா, அல்லது வைரசுக்களாக இருக்கலம். இவை மனிதரில் நேரடியாகவோ அல்லது நச்சு பொருட்களை சுரப்பதன் மூலமோ பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துகிறன. பெரும்பாலான உணவு பொருட்கள் இலகுவில் பழுதடையும் இயல்புடையதாகவும், நோயாக்கும் நுண்ணங்களின் மாசாக்கமும், அவற்றின் பெருக்கமும் உற்பத்தியாகும் இடம் முதல் உணவு உள்ளெடுக்கும் வரை   நிகழவும், தொடர்ந்து பேணும் இயல்புடையதாகவும் இருக்கிறன. நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட நச்சு பொருட்கள் உணவு பரிகரிப்பின் போதோ/சமைக்கும் போதோ அழிக்கப்படாது மீந்து இருக்கலாம். உணவு பரிகரிப்பின் போது அழிக்கப்படாது மீந்து இருக்கும் நோயாக்கும் நுண்ணங்கிகள்/ பரிகரிப்பு முடிந்த பின் ஏற்படும் தொற்றுகள் என்பன மனிதரில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.<br />
<br />
வருடம் தோறும் மில்லியன் கணக்கான உணவு மூலமான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார தாபனம் கணக்கிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவு மூலம் ஏற்படும் நோய்களால் வருடாந்தம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பில்லியன் ஈரோக்கள் இழப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. <br />
<br />
தற்போதைய் சூழ்நிலையில் புதிய அதிக வீரியம் உள்ள நோயாக்கிகள் உருவாகி வருவது மிக சிக்கலான விடயமாக உள்ளது.<br />
<br />
முழுமையான கிருமி நீக்கமும், தொற்றில்ல பொதியாக்கமும் உணவின் மூலம் ஏற்படும் நோயாக்கத்தை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறன. ஆயினும் நுண்ணங்கிகளால் உருவாக்கப்படும் நச்சு பொருட்கள் நோய்களை ஏற்படுத்தமுடியும்.  கிருமிநீக்கம் மிகவும் தீவிரமான பரிகரிப்புமுறையாக இருப்பதால் உணவின் போசனை கூறுகளும் அதிகளவில் இழக்கப்பட காரணமாகிறது. அத்துடன் உணவின் உண்ணும் தரத்தை பாதிக்கிறது.<br />
<br />
கடந்த நூறு வருடங்களில் நுண்ணுயிரியலில் ஏற்பட்ட அபிவிருத்தியானது உணவு தயாரிப்பில் முக்கிய பங்கற்றுகிறது. வெப்பமாக்கல், குழிரூட்டல், வடிகட்டல், கதிர்வீச்சு பயன்பாடு , இரசாயன நற்காப்பு பொருட்கள் சேர்த்தல் என்பன பாரம்பரியமாக உணவு மூலம் பரவும் நோய்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. <br />
<br />
நுண்ணங்கிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகள்,இடைத்தக்கங்கள், உணவு நொத்திதல் மூலம் பாதுக்காத்தலில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
உணவின் உள்ளடக்கத்திற்கும் (போசணை பொருட்களின் அளவு) <br />
ஒட்சிசன்<br />
உப்பு<br />
அமில தன்மை<br />
இயற்கை நற்காப்பு பொருட்கள்  என்பவற்றுக்கிடையிலான தொடர்பும் உணவு மூலம் ஏற்படும் நோய் தொற்றுக்களை குறைப்பதில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
தொடரும்....................<br />
<br />
 (எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மிகுதி பகுதியை தொடராக எழுதுகிறேன்.)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=770</link>
			<pubDate>Tue, 21 Feb 2006 10:05:24 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=770</guid>
			<description><![CDATA[                    குக்கரில் பொங்காத பால்<br />
<br />
<br />
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை.<br />
<br />
பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.<br />
<br />
சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.<br />
<br />
பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.<br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    குக்கரில் பொங்காத பால்<br />
<br />
<br />
குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை.<br />
<br />
பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.<br />
<br />
சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.<br />
<br />
பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.<br />
<br />
<a href="http://www.dinamalar.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.dinamalar.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[எங்களைக் காப்பாற்றுங்கள்..!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=833</link>
			<pubDate>Thu, 16 Feb 2006 16:27:11 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=12">kuruvikal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=833</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://newsimg.bbc.co.uk/media/images/41336000/jpg/_41336494_courser_203b.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் Kadapa மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் 1985 இல் கண்டறியப்பட்டதும் தற்போது Sri Lankamalleswara விலங்குகள் சரணாலயத்தில் மிக சிறிய எண்ணிக்கையில் (25) வாழுகின்றவையுமான இந்த அழகான பறவைகளை  (Jerdon's courser (&lt;i&gt;Rhinoptilus bitorquatus&lt;/i&gt;)) அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்..! <br />
<br />
குறித்த விலங்குகள் சரணாலயத்தினூடு நீர்ப்பாசனத்துக்கான கால்வாய் வெட்டப்பட இருப்பதால் இப்பறவைகளின் வாழிடம் அழிக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனா இப்பறவைகளும் உலகில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன..! எனவே இந்தப் பறவைகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்..!<br />
<br />
தகவல் ஆதாரத்துக்கு - <a href="http://kuruvikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kuruvikal.blogspot.com/</a> படம் - பிபிசி.கொம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://newsimg.bbc.co.uk/media/images/41336000/jpg/_41336494_courser_203b.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் Kadapa மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் 1985 இல் கண்டறியப்பட்டதும் தற்போது Sri Lankamalleswara விலங்குகள் சரணாலயத்தில் மிக சிறிய எண்ணிக்கையில் (25) வாழுகின்றவையுமான இந்த அழகான பறவைகளை  (Jerdon's courser (&lt;i&gt;Rhinoptilus bitorquatus&lt;/i&gt;)) அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்..! <br />
<br />
குறித்த விலங்குகள் சரணாலயத்தினூடு நீர்ப்பாசனத்துக்கான கால்வாய் வெட்டப்பட இருப்பதால் இப்பறவைகளின் வாழிடம் அழிக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனா இப்பறவைகளும் உலகில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றன..! எனவே இந்தப் பறவைகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்..!<br />
<br />
தகவல் ஆதாரத்துக்கு - <a href="http://kuruvikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kuruvikal.blogspot.com/</a> படம் - பிபிசி.கொம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நான்கே மணி நேரத்தில் புது மார்பகம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=856</link>
			<pubDate>Tue, 14 Feb 2006 12:05:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=856</guid>
			<description><![CDATA[                    நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை<br />
லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர்.<br />
<br />
ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது.<br />
<br />
செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது.<br />
<br />
30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாதிகள் வருகின்றன என்று சர்ச்சைகள் எழாமல் இல்லை.<br />
<br />
அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளும் செயற்கை மார்பகம் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இப்போது இந்தியாவில் கூட, ஏன் சென்னையில் கூட மார்பகத்தை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சை வந்து விட்டது. ஆனால், பொதுவாக இது முறையல்ல, தேவையில்லாத பிரச்னைகளை தரும் என்று தொடர்ந்து நிபுணர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.<br />
<br />
இப்போது பிரிட்டன் நிபுணர்கள் இந்த "செயற்கை மார்பக' அறுவை சிகிச்சையில் இன்னொரு படி முன்னேறி உள்ளனர். மார்பகத்தை அதிகரித்து காட்டவும், குறைக்கவும், செயற்கை மார்பகம் பொருத்தவும் சில மணி நேரங்களே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.<br />
<br />
பிரிட்டனில் சிஷயர் மாகாணத்தில் "மெடிஸ்பா கிளினிக்' என்ற பிரபல மருத்துவ மனை உள்ளது. அதன் உரிமையாளர் கார்ல் லெவிஸ் இந்த புது மார்பக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தியுள்ளார். சில மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த புது அறுவை சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு வெறும் நான்கு மணி நேரம் போதும். முதல் நாள் இரவு, மருத்துவமனை வந்து தங்கினால் போதும், காலையில் வீடு திரும்பி விடலாம். எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.<br />
<br />
மார்பகத்தில் இயல்பாக உள்ள இடத்தில் சிறிய வெற்றிடம் உருவாக்கி, அதில் சிலிக்கான் நுரைபஞ்சுகளை (ஜெல்) வைக்கின்றனர் டாக்டர்கள். இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பெண்கள், முழு மயக்க நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை. "லோக்கல் அனஸ்தீஷியா' முறையில் தான் மயக்க நிலையில் ஆபரேஷன் செய்யப்படுகின்றனர். எந்த கவலையும் பட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.<br />
<br />
இப்போது பிரிட்டனில் பல மருத்துவமனைகளில் இது போன்ற முறை பிரபலமாகி வருகிறது. சில மணி நேரங்களிலேயே பெண்கள், செயற்கை மார்பகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பி விடலாம் என்பதால் பல இளம் பெண்களும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.<br />
<br />
இப்படி செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.<br />
<br />
தினமலரிலிருந்து                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை<br />
லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர்.<br />
<br />
ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது.<br />
<br />
செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது.<br />
<br />
30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாதிகள் வருகின்றன என்று சர்ச்சைகள் எழாமல் இல்லை.<br />
<br />
அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளும் செயற்கை மார்பகம் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இப்போது இந்தியாவில் கூட, ஏன் சென்னையில் கூட மார்பகத்தை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சை வந்து விட்டது. ஆனால், பொதுவாக இது முறையல்ல, தேவையில்லாத பிரச்னைகளை தரும் என்று தொடர்ந்து நிபுணர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.<br />
<br />
இப்போது பிரிட்டன் நிபுணர்கள் இந்த "செயற்கை மார்பக' அறுவை சிகிச்சையில் இன்னொரு படி முன்னேறி உள்ளனர். மார்பகத்தை அதிகரித்து காட்டவும், குறைக்கவும், செயற்கை மார்பகம் பொருத்தவும் சில மணி நேரங்களே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.<br />
<br />
பிரிட்டனில் சிஷயர் மாகாணத்தில் "மெடிஸ்பா கிளினிக்' என்ற பிரபல மருத்துவ மனை உள்ளது. அதன் உரிமையாளர் கார்ல் லெவிஸ் இந்த புது மார்பக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தியுள்ளார். சில மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த புது அறுவை சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.<br />
<br />
இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு வெறும் நான்கு மணி நேரம் போதும். முதல் நாள் இரவு, மருத்துவமனை வந்து தங்கினால் போதும், காலையில் வீடு திரும்பி விடலாம். எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.<br />
<br />
மார்பகத்தில் இயல்பாக உள்ள இடத்தில் சிறிய வெற்றிடம் உருவாக்கி, அதில் சிலிக்கான் நுரைபஞ்சுகளை (ஜெல்) வைக்கின்றனர் டாக்டர்கள். இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பெண்கள், முழு மயக்க நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை. "லோக்கல் அனஸ்தீஷியா' முறையில் தான் மயக்க நிலையில் ஆபரேஷன் செய்யப்படுகின்றனர். எந்த கவலையும் பட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.<br />
<br />
இப்போது பிரிட்டனில் பல மருத்துவமனைகளில் இது போன்ற முறை பிரபலமாகி வருகிறது. சில மணி நேரங்களிலேயே பெண்கள், செயற்கை மார்பகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பி விடலாம் என்பதால் பல இளம் பெண்களும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.<br />
<br />
இப்படி செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.<br />
<br />
தினமலரிலிருந்து                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Steve Fossett  புதிய சாதனை..!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=892</link>
			<pubDate>Sat, 11 Feb 2006 23:29:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=12">kuruvikal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=892</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://newsimg.bbc.co.uk/media/images/41322000/jpg/_41322534_andrew_stevens.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
Virgin Atlantic GlobalFlyer விமானம்.<br />
<br />
Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..!<br />
<br />
தகவல் ஆதாரத்துக்கு  <a href="http://kuruvikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kuruvikal.blogspot.com/</a>  படம் - பிபிசி.கொம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://newsimg.bbc.co.uk/media/images/41322000/jpg/_41322534_andrew_stevens.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
Virgin Atlantic GlobalFlyer விமானம்.<br />
<br />
Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..!<br />
<br />
தகவல் ஆதாரத்துக்கு  <a href="http://kuruvikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kuruvikal.blogspot.com/</a>  படம் - பிபிசி.கொம்                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>