<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - நூற்றோட்டம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:53 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[ஒப்பந்தங்களைச் சீர்குலைத்தது யார்?-விடுதலை இராசேந்திரன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=405</link>
			<pubDate>Thu, 30 Mar 2006 00:59:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1423">Aravinthan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=405</guid>
			<description><![CDATA[                    விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஒப்பந்தங்களைச் சீர்குலைத்தது யார்? " என்ற நூலின் ஒரு பகுதி.<br />
<a href="http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&amp;newsCount=5" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&amp;newsCount=5</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஒப்பந்தங்களைச் சீர்குலைத்தது யார்? " என்ற நூலின் ஒரு பகுதி.<br />
<a href="http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&amp;newsCount=5" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&amp;newsCount=5</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[லண்டனில் புதுவையின் 40 ஆண்டுகால கவிச்சோலைக் கலையரங்கம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=441</link>
			<pubDate>Sat, 25 Mar 2006 07:54:02 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2078">கறுப்பி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=441</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://www.tamilnaatham.com/advert/20060301/PUTHUVAI/puthuvai.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://www.tamilnaatham.com/advert/20060301/PUTHUVAI/puthuvai.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்']]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=905</link>
			<pubDate>Sat, 11 Feb 2006 07:43:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=905</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='color:red'&gt;ஒரு மரணமும் சில மனிதர்களும்:<br />
மரணத்துள் வாழ்ந்தோ(போ)ரின் மனிதக் கதைகள்<br />
-வாசகனின் மனப்பதிவு<br />
<br />
கே.ரி.பி.ஷாந்தன்<br />
<br />
"நாம் மூக்கும் முழியுமாக வாழவே பிறந்தோம்..."<br />
(நன்றி:-வ.ஐ.ச.ஜெயபாலன்) ஆனால்இபல தசாப்தங்களாக "மரணத்துள் வாழ்வோம்"<br />
(நன்றி:- சண்முகம் சிவலிங்கம்)என்பதாகவே ஈழத்தமிழரது நடைமுறை வாழ்வு நீண்டு செல்வதைப் பல்வேறு தளங்களினு}டாகவும் சமூகவியல் பார்வையோடு "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் எமக்கு தாட்சாயிணி சிறப்பு அறிமுகம் ஆகிறார்.<br />
<br />
 "எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்துஇஇன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது.இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பிரதிபலிப்புக்களாகவே எஞ்சி நிற்கின்றன" என்ற நு}லாசிரியரின் "என்னுரை" வாசகர்களை ஆசுவாசப்படுத்திவிடுகிறது. "இச் சிறுகதைகளைப் பற்றி அவை பேசுவதற்க்கு மேலாக என்னால் பேசிவிட முடியாது" என்ற தாட்சாயிணியின் "என்னுரை" வரிகள் முற்குறிப்பாக அமைந்து எம்மை மிகுந்த ஆவலுடன் கதைகளினுள்ளே சேர்த்துவிடுகின்றன.<br />
<br />
 "ஒரு மரணமும் சில மனிதர்களும்" தொகுப்பின் தலைப்பாய் அமைந்த சிறுகதை இத்தலைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது கனகச்சிதப் பொருத்தம்.உறவுகளின் மீள் தரிசனம் பரிணாமம் அங்கலாய்ப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்து சிறுகதை நகர்கிறது.ஆங்காங்கு சமூக அக்கறைகளும் கதையோட்டத்தோடு ஒத்திசைந்து கதையாடல்களாக வருகின்றன.{எ-கா:-"சிம்ரன் மாதிரியோ...?" எதிலோ தோற்றுவிட்டது மாதிரி அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றிற்று)பல்வேறு உறவுகள் வந்து போனாலும் நயனியும் அம்மம்மாவும் மனதுள் நிறைந்து நிற்கிறார்கள்.மிக யதார்த்தமான கதையோட்டத்தை பிரசார நெடிகள் கலவாது கொண்டுசென்றமை சிறப்பு.சிறுகதையின் முடிவுப் பகுதி சிலருக்கு செயற்கைத்தன்மை சாயல் கொண்டாலும் சாயல்கள் கொள்ளாத சத்தியச் சூழலே அது என்பதாகி எமது உள்ளங்களை ஊடுருவி விடுகிறது.வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாத நயனியின் சாவு எம்மையும் மீறி கண்களைக் கசிய வைத்துஇ எழுத்தாளர் வென்றுவிடுகிறார்.<br />
<br />
 "பெண் எழுத்து"(பெண்ணால் அவள் நிலை கொண்டு எழுதப்படுவது என்ற எடுகோள்)என்ற தன்மையில் தாட்சாயிணி பல கதைகளிலும் தனித்துவமாகத் தெரிந்தாலும் "சோதனைகள்"இல் மிகச்சிறப்பான கணிப்பைப் பெற்றுவிடுகிறார்.சமூகத்தினது அவலத்துடன் தனிமனித "இயற்கை" இடர்ப்பாடுகளை வாழ்வுச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட "செக்கிங்"என்ற செயற்கை இடர்ப்பாட்டோடு இணைத்துப் பல்நிலை கரிசனத்தைப் பெறுகிறார் நூலாசிரியர்.பெண்ணின் "துன்பத்தைச்" சொன்னதோடு நிற்காது இடைச்செருகலாக அமையாத உரையாடல்கள் மூலம் சமூகத்தின் ஒருபிரிவினரின் "போலிச் சமூக அக்கறையை" சந்திசிரிக்க வைத்தும் விடுகிறார்.(எ-கா:-பெண்கள் தனி சோதனை ஒழுங்கை அறியாத பெண்கள் சிலர் ஆண்கள் வரிசையில் வரும்போது "வேடிக்கை' பார்த்த ஆண்கள் பெண்கள்).மனிதம் செத்துவிடாத மனிதர்கள் இருப்பதை கதை இறுதியில்காட்டி ஆறுதல்படுத்துகிறார். <br />
<br />
ஒரு பேருந்துப் பயண வேளையினுள்ளே சமூக உறவுநிலைச் சிக்கல்களைப் பண்போடு பேசுகிறது "விடுபடல்".மாறுபட்ட இரசனைகளின் ஒத்திசைவின்மையால் வாழ்வில் ஒருவித வரட்சி வந்துபோவதைப் பிறந்த குடும்பம் திருமணமான பின் என்ற மிகவும் "பழக்கப்பட்ட" தளங்களூடு கூறிவிடுகிறார்.பள்ளி மாணவனை சக பயணியாக எடுத்து கதையை நகர்த்தியமை சிறுகதைப் பயணிப்புக்கு "கவனச் சிதறல்" இன்றி கருத்தை முன்னிலைப்படுத்த உதவி உள்ளது எனலாம்.<br />
<br />
 "வெடிக்காய்" சிறுகதை பழைய நினைவுகளை பசுமையாய் நிழலாட வைத்து "கால ஒட்டத்தின்" நிலைமாற்றங்களையும் படம்பிடித்துக் காட்டியது.கதை ஆரம்பமான "வெடிக்காய்" பின்னணிக்கே கதை இறுதியைக் கொண்டு வந்து போருக்குப் பின்பாகவும் வாழ்வை நிம்மதியற்றதாக்கும் போரின் விளைவுகளின் கர்ணகடூரத்தை சிலவரிகளூடாகவே சிறுகதையாசிரியர் எமக்கு உணர்த்திவிடுகிறார். <br />
<br />
முழுக்கமுழுக்க படிமங்களின் அசைவாகவே நகர்த்திச் செல்லப்பட்ட கதையாகவே "மழை" நமக்குப் படுகிறது.தூறல் மழை பலத்த காற்று கொட்டு மழை என மண்ணை ஆக்கிரமிப்புச் செய்ததை தேர்ந்தெடுத்த வார்த்தைகளினூடு பதிவு செய்கிறார். <br />
<br />
சமூகத்தின் வெள்வேறு பண்பியல்புகளையும் பல்நிலைப்பட்ட கதைமாந்தர்களூடு நகர்த்திச் செல்லும் பிரிதொரு கதை "வெளியில் வாழ்தல்"."சமூகப் பார்வைகளை" வெளிச்சம் போட்டுக்காட்டிய மற்றொரு கதையான இது சமூக உறவுப் பிரிந்துபடல்களையும் சமூக அக்கறைகளையும் காட்டுவதோடு "உறவுக் கதைகட்டல்களையும்" சொல்லிவிடுகிறது.<br />
<br />
 "பெண்" என்ற சிறுகதை ஆண்- பெண் புரிந்துணர்வை வலியுறுத்துவதாகவே பெரிதும் தென்பட்டது. என்றாலும் பின்னர் பாலியல் உறவு நடத்தைகளையும் மனிதம் இனத்துவத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் காட்டியது.சுயநலச் செறிவுமிக்க சமூகத்தை வார்த்தைகளற்று கதைநகர்த்தல் மூலம் "சூடு போட்ட" இன்னுமொரு கதையாகவே "பெண்" தெரிகிறது. <br />
<br />
மனித உணர்வுகளை இனப்பின்னணி கடந்த ஒற்றுமையுணர்வோடு பார்க்கும் வித்தியாசமான கதை "ரங்கநாதனும் ரஞ்சித்பெரேராவும்".கதைத் தலைப்பே சொல்ல வந்த செய்தியை உணர்த்திவிடுகிறது.போரின் கொடூரத்தை உறைக்க உணர்த்த கதாசிரியர் முற்பட்டுள்ளமை புலப்படுகிறது."துளசி' என்ற சிறுபெண் கதையை நகர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளமை புரிகிறது.<br />
<br />
 "துளிர்ப்பு" போரின் காரணமான தொடர்ச்சியான இடப்பெயர்வின் அவலத்தை 'மீள்வருகை"யுடன் விளக்கிற்று."துளிர்ப்பு" நல்லதொரு தலைப்பாகவே மனதில் துளிர்க்கிறது."கரையான்கள்" துணைகொண்டு "துளிர்ப்பு"க்கான கதைநகர்த்தல், செய்திசொல்லல் சிறப்பு. <br />
<br />
மனதைக்கனக்கச் செய்த மற்றுமொரு கதை "ஒரு பூவரசு, ஒரு கடிகாரம், ஒரு கிழவி".பூவரசின் மூலம் காலங்களின் சுழற்சியை, காலம் மீதான ஆக்கிரமிப்பை சிறப்பாகவே கதாசிரியர் கூறியுள்ளார்.பூவரசில் வந்து நின்ற காகங்கள் ஆக்கிரமிப்பின் இன்னுமொரு குறியீடு.கிழவியின் அகாலச்சாவின்போது மணிக்கூடு திரும்ப ஓடத் தொடங்கியமை மனதை மீளமீள கனக்கச்செய்தது. <br />
<br />
காணாமல் "போகச் செய்யப்பட்டோர்" பற்றிய பதைபதைப்பான சிறுகதையாக "தீ விளிம்பு" உணர்த்துகிறது.தீ விளிம்பிற்கு வெளியே நிற்கும் எம்மை அதனுள் எடுத்துச் சென்று கதையோட்டத்தில் இணத்துவிடுகிறார் ஆசிரியர்.போர்க்கால வாழ்வையும் சமூக நெருக்கடிகாளையும் மட்டுமல்லாதுஇசமூக தனிநபர், குடும்பக் கட்டமைப்பு என்ற பெயரிலான "ஒடுக்குமுறைகளை"க் கேள்வியும் கேட்கிறார்;கேலியும் செய்கிறார்.நிச்சயமற்ற வாழ்வியலை நிதர்சனமாகக் கதையினூடு சொன்னதில் வென்றேயிருக்கிறார்.<br />
<br />
 கல்விச் சமூகத்தின் சமூக அக்கறைச் செயற்பாட்டை<br />
 "ரிக்கட் ஷோ" மூலம் அப்பல்கலைக்கழகச் சமூக வாழ்வியல் ஓட்டத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.குழுச் செயற்பாடு மாணவர்களுக்கிடையிலான "சொல்லாடல்கள்" என கதைக்களத்தை நன்கு கவனித்துள்ளார்."சமூக சேவை" என்று "பெரிது படுத்தி" செய்வோரின் நோக்கத் தெளிவின்மையைஃபூரணமின்மையை "கிண்டல்" செய்துள்ளார்.வெறும் "கேலி"யாக இல்லாது கோபம், வேதனையாகவே நமக்கும் படுகிறது. <br />
<br />
தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுப்பு மூலம் தாட்சாயிணி அவர்கள் சமூகச் சூழலை வெள்வேறு களங்கள், போக்குகள், பின்னணிகள் ஊடாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.சில கதைகளில் செயற்கைத்தன்மை போன்று காணப்பட்டாலும்(எ-கா:-"ரங்கநாதனும் ரஞ்சித்பெரேரவும்")கதைகள் பலவும் குறித்த போட்டிகளில் பங்குபற்றியதாக இருப்பதால் அப்போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டனவாக அமைந்திருக்ககூடிய தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.<br />
<br />
 ஈழத்து சமகால இலக்கியங்கள் "போரைப் பற்றி மட்டுமே பேசுவதாக"பரவலான குற்றச்சாட்டை முன்வைக்கும் இலக்கியவாதிகளாக இலக்கிய ஆர்வலர்களாகத் தம்மைக் "காட்டிக்கொள்ளும்" மனிதர்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு மறுப்பாக அமையும்.மரணத்துள் வாழ்பவர்கள் போரை விட்டு வெளியே வந்தாலும் போர் அவர்களை விடாது துரத்தவே செய்கிறது என்பதை இத்தகைய "ஓரப் பார்வையாளர்கள்" புரிந்தேயாக வேண்டும்.<br />
<br />
 போரைப்பற்றி இன்றி இடப்பெயர்வுகள் அதன் அவலங்கள் உறவுச் சிதறல்கள் துண்டாடல்கள் சமூகத்தில் வாழும் "நடிப்புச் சுதேசிகள்"குடும்பக்கட்டமைப்பு விமர்சனம் பாலியல் நடத்தைக் கோலங்கள் அன்னியர் ஆக்கிரமிப்பின் அவலம் மீண்டும் தொடங்கும் வாழ்வு....என எண்ணற்ற விடயங்களை சமூகவியல் அரசியல் மனித நடத்தையியல் பார்வையோடு நேர்த்தியாக அமைக்கப்பட்ட கதைகளாகவே இவை "நடுநிலை" வாசகர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் புரியும். <br />
<br />
ஆக மொத்தத்தில் "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற தாட்சாயிணியின் சிறுகதைத்தொகுப்பு பல மனிதர்களின் அறிந்தும் அறியப்படாததுமான வாழ்வியல் வெளிப்பாடாக எம் உள்ளத்தில் பதிந்து நிற்கிறது. <br />
<br />
{அளவுகோல்களைக் கொண்டு இலக்கியத்தை அளவிடும் "தேர்வு நடத்தையில் நம்பிக்கை கொள்ளாமையால் இத் தொகுப்பை ஒப்பீடோ, திறனாய்வோ செய்யாது "வாசகப் பார்வை" ஆகவே இக்கருத்துப் பகிர்வை முன்வைக்கிறேன்.}&lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;[b] நன்றி&lt;/b&gt;&lt;/i&gt;  <a href="http://vasagarvattam.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://vasagarvattam.blogspot.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='color:red'&gt;ஒரு மரணமும் சில மனிதர்களும்:<br />
மரணத்துள் வாழ்ந்தோ(போ)ரின் மனிதக் கதைகள்<br />
-வாசகனின் மனப்பதிவு<br />
<br />
கே.ரி.பி.ஷாந்தன்<br />
<br />
"நாம் மூக்கும் முழியுமாக வாழவே பிறந்தோம்..."<br />
(நன்றி:-வ.ஐ.ச.ஜெயபாலன்) ஆனால்இபல தசாப்தங்களாக "மரணத்துள் வாழ்வோம்"<br />
(நன்றி:- சண்முகம் சிவலிங்கம்)என்பதாகவே ஈழத்தமிழரது நடைமுறை வாழ்வு நீண்டு செல்வதைப் பல்வேறு தளங்களினு}டாகவும் சமூகவியல் பார்வையோடு "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் எமக்கு தாட்சாயிணி சிறப்பு அறிமுகம் ஆகிறார்.<br />
<br />
 "எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்துஇஇன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது.இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பிரதிபலிப்புக்களாகவே எஞ்சி நிற்கின்றன" என்ற நு}லாசிரியரின் "என்னுரை" வாசகர்களை ஆசுவாசப்படுத்திவிடுகிறது. "இச் சிறுகதைகளைப் பற்றி அவை பேசுவதற்க்கு மேலாக என்னால் பேசிவிட முடியாது" என்ற தாட்சாயிணியின் "என்னுரை" வரிகள் முற்குறிப்பாக அமைந்து எம்மை மிகுந்த ஆவலுடன் கதைகளினுள்ளே சேர்த்துவிடுகின்றன.<br />
<br />
 "ஒரு மரணமும் சில மனிதர்களும்" தொகுப்பின் தலைப்பாய் அமைந்த சிறுகதை இத்தலைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது கனகச்சிதப் பொருத்தம்.உறவுகளின் மீள் தரிசனம் பரிணாமம் அங்கலாய்ப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்து சிறுகதை நகர்கிறது.ஆங்காங்கு சமூக அக்கறைகளும் கதையோட்டத்தோடு ஒத்திசைந்து கதையாடல்களாக வருகின்றன.{எ-கா:-"சிம்ரன் மாதிரியோ...?" எதிலோ தோற்றுவிட்டது மாதிரி அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றிற்று)பல்வேறு உறவுகள் வந்து போனாலும் நயனியும் அம்மம்மாவும் மனதுள் நிறைந்து நிற்கிறார்கள்.மிக யதார்த்தமான கதையோட்டத்தை பிரசார நெடிகள் கலவாது கொண்டுசென்றமை சிறப்பு.சிறுகதையின் முடிவுப் பகுதி சிலருக்கு செயற்கைத்தன்மை சாயல் கொண்டாலும் சாயல்கள் கொள்ளாத சத்தியச் சூழலே அது என்பதாகி எமது உள்ளங்களை ஊடுருவி விடுகிறது.வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாத நயனியின் சாவு எம்மையும் மீறி கண்களைக் கசிய வைத்துஇ எழுத்தாளர் வென்றுவிடுகிறார்.<br />
<br />
 "பெண் எழுத்து"(பெண்ணால் அவள் நிலை கொண்டு எழுதப்படுவது என்ற எடுகோள்)என்ற தன்மையில் தாட்சாயிணி பல கதைகளிலும் தனித்துவமாகத் தெரிந்தாலும் "சோதனைகள்"இல் மிகச்சிறப்பான கணிப்பைப் பெற்றுவிடுகிறார்.சமூகத்தினது அவலத்துடன் தனிமனித "இயற்கை" இடர்ப்பாடுகளை வாழ்வுச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட "செக்கிங்"என்ற செயற்கை இடர்ப்பாட்டோடு இணைத்துப் பல்நிலை கரிசனத்தைப் பெறுகிறார் நூலாசிரியர்.பெண்ணின் "துன்பத்தைச்" சொன்னதோடு நிற்காது இடைச்செருகலாக அமையாத உரையாடல்கள் மூலம் சமூகத்தின் ஒருபிரிவினரின் "போலிச் சமூக அக்கறையை" சந்திசிரிக்க வைத்தும் விடுகிறார்.(எ-கா:-பெண்கள் தனி சோதனை ஒழுங்கை அறியாத பெண்கள் சிலர் ஆண்கள் வரிசையில் வரும்போது "வேடிக்கை' பார்த்த ஆண்கள் பெண்கள்).மனிதம் செத்துவிடாத மனிதர்கள் இருப்பதை கதை இறுதியில்காட்டி ஆறுதல்படுத்துகிறார். <br />
<br />
ஒரு பேருந்துப் பயண வேளையினுள்ளே சமூக உறவுநிலைச் சிக்கல்களைப் பண்போடு பேசுகிறது "விடுபடல்".மாறுபட்ட இரசனைகளின் ஒத்திசைவின்மையால் வாழ்வில் ஒருவித வரட்சி வந்துபோவதைப் பிறந்த குடும்பம் திருமணமான பின் என்ற மிகவும் "பழக்கப்பட்ட" தளங்களூடு கூறிவிடுகிறார்.பள்ளி மாணவனை சக பயணியாக எடுத்து கதையை நகர்த்தியமை சிறுகதைப் பயணிப்புக்கு "கவனச் சிதறல்" இன்றி கருத்தை முன்னிலைப்படுத்த உதவி உள்ளது எனலாம்.<br />
<br />
 "வெடிக்காய்" சிறுகதை பழைய நினைவுகளை பசுமையாய் நிழலாட வைத்து "கால ஒட்டத்தின்" நிலைமாற்றங்களையும் படம்பிடித்துக் காட்டியது.கதை ஆரம்பமான "வெடிக்காய்" பின்னணிக்கே கதை இறுதியைக் கொண்டு வந்து போருக்குப் பின்பாகவும் வாழ்வை நிம்மதியற்றதாக்கும் போரின் விளைவுகளின் கர்ணகடூரத்தை சிலவரிகளூடாகவே சிறுகதையாசிரியர் எமக்கு உணர்த்திவிடுகிறார். <br />
<br />
முழுக்கமுழுக்க படிமங்களின் அசைவாகவே நகர்த்திச் செல்லப்பட்ட கதையாகவே "மழை" நமக்குப் படுகிறது.தூறல் மழை பலத்த காற்று கொட்டு மழை என மண்ணை ஆக்கிரமிப்புச் செய்ததை தேர்ந்தெடுத்த வார்த்தைகளினூடு பதிவு செய்கிறார். <br />
<br />
சமூகத்தின் வெள்வேறு பண்பியல்புகளையும் பல்நிலைப்பட்ட கதைமாந்தர்களூடு நகர்த்திச் செல்லும் பிரிதொரு கதை "வெளியில் வாழ்தல்"."சமூகப் பார்வைகளை" வெளிச்சம் போட்டுக்காட்டிய மற்றொரு கதையான இது சமூக உறவுப் பிரிந்துபடல்களையும் சமூக அக்கறைகளையும் காட்டுவதோடு "உறவுக் கதைகட்டல்களையும்" சொல்லிவிடுகிறது.<br />
<br />
 "பெண்" என்ற சிறுகதை ஆண்- பெண் புரிந்துணர்வை வலியுறுத்துவதாகவே பெரிதும் தென்பட்டது. என்றாலும் பின்னர் பாலியல் உறவு நடத்தைகளையும் மனிதம் இனத்துவத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் காட்டியது.சுயநலச் செறிவுமிக்க சமூகத்தை வார்த்தைகளற்று கதைநகர்த்தல் மூலம் "சூடு போட்ட" இன்னுமொரு கதையாகவே "பெண்" தெரிகிறது. <br />
<br />
மனித உணர்வுகளை இனப்பின்னணி கடந்த ஒற்றுமையுணர்வோடு பார்க்கும் வித்தியாசமான கதை "ரங்கநாதனும் ரஞ்சித்பெரேராவும்".கதைத் தலைப்பே சொல்ல வந்த செய்தியை உணர்த்திவிடுகிறது.போரின் கொடூரத்தை உறைக்க உணர்த்த கதாசிரியர் முற்பட்டுள்ளமை புலப்படுகிறது."துளசி' என்ற சிறுபெண் கதையை நகர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளமை புரிகிறது.<br />
<br />
 "துளிர்ப்பு" போரின் காரணமான தொடர்ச்சியான இடப்பெயர்வின் அவலத்தை 'மீள்வருகை"யுடன் விளக்கிற்று."துளிர்ப்பு" நல்லதொரு தலைப்பாகவே மனதில் துளிர்க்கிறது."கரையான்கள்" துணைகொண்டு "துளிர்ப்பு"க்கான கதைநகர்த்தல், செய்திசொல்லல் சிறப்பு. <br />
<br />
மனதைக்கனக்கச் செய்த மற்றுமொரு கதை "ஒரு பூவரசு, ஒரு கடிகாரம், ஒரு கிழவி".பூவரசின் மூலம் காலங்களின் சுழற்சியை, காலம் மீதான ஆக்கிரமிப்பை சிறப்பாகவே கதாசிரியர் கூறியுள்ளார்.பூவரசில் வந்து நின்ற காகங்கள் ஆக்கிரமிப்பின் இன்னுமொரு குறியீடு.கிழவியின் அகாலச்சாவின்போது மணிக்கூடு திரும்ப ஓடத் தொடங்கியமை மனதை மீளமீள கனக்கச்செய்தது. <br />
<br />
காணாமல் "போகச் செய்யப்பட்டோர்" பற்றிய பதைபதைப்பான சிறுகதையாக "தீ விளிம்பு" உணர்த்துகிறது.தீ விளிம்பிற்கு வெளியே நிற்கும் எம்மை அதனுள் எடுத்துச் சென்று கதையோட்டத்தில் இணத்துவிடுகிறார் ஆசிரியர்.போர்க்கால வாழ்வையும் சமூக நெருக்கடிகாளையும் மட்டுமல்லாதுஇசமூக தனிநபர், குடும்பக் கட்டமைப்பு என்ற பெயரிலான "ஒடுக்குமுறைகளை"க் கேள்வியும் கேட்கிறார்;கேலியும் செய்கிறார்.நிச்சயமற்ற வாழ்வியலை நிதர்சனமாகக் கதையினூடு சொன்னதில் வென்றேயிருக்கிறார்.<br />
<br />
 கல்விச் சமூகத்தின் சமூக அக்கறைச் செயற்பாட்டை<br />
 "ரிக்கட் ஷோ" மூலம் அப்பல்கலைக்கழகச் சமூக வாழ்வியல் ஓட்டத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.குழுச் செயற்பாடு மாணவர்களுக்கிடையிலான "சொல்லாடல்கள்" என கதைக்களத்தை நன்கு கவனித்துள்ளார்."சமூக சேவை" என்று "பெரிது படுத்தி" செய்வோரின் நோக்கத் தெளிவின்மையைஃபூரணமின்மையை "கிண்டல்" செய்துள்ளார்.வெறும் "கேலி"யாக இல்லாது கோபம், வேதனையாகவே நமக்கும் படுகிறது. <br />
<br />
தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுப்பு மூலம் தாட்சாயிணி அவர்கள் சமூகச் சூழலை வெள்வேறு களங்கள், போக்குகள், பின்னணிகள் ஊடாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.சில கதைகளில் செயற்கைத்தன்மை போன்று காணப்பட்டாலும்(எ-கா:-"ரங்கநாதனும் ரஞ்சித்பெரேரவும்")கதைகள் பலவும் குறித்த போட்டிகளில் பங்குபற்றியதாக இருப்பதால் அப்போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டனவாக அமைந்திருக்ககூடிய தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.<br />
<br />
 ஈழத்து சமகால இலக்கியங்கள் "போரைப் பற்றி மட்டுமே பேசுவதாக"பரவலான குற்றச்சாட்டை முன்வைக்கும் இலக்கியவாதிகளாக இலக்கிய ஆர்வலர்களாகத் தம்மைக் "காட்டிக்கொள்ளும்" மனிதர்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு மறுப்பாக அமையும்.மரணத்துள் வாழ்பவர்கள் போரை விட்டு வெளியே வந்தாலும் போர் அவர்களை விடாது துரத்தவே செய்கிறது என்பதை இத்தகைய "ஓரப் பார்வையாளர்கள்" புரிந்தேயாக வேண்டும்.<br />
<br />
 போரைப்பற்றி இன்றி இடப்பெயர்வுகள் அதன் அவலங்கள் உறவுச் சிதறல்கள் துண்டாடல்கள் சமூகத்தில் வாழும் "நடிப்புச் சுதேசிகள்"குடும்பக்கட்டமைப்பு விமர்சனம் பாலியல் நடத்தைக் கோலங்கள் அன்னியர் ஆக்கிரமிப்பின் அவலம் மீண்டும் தொடங்கும் வாழ்வு....என எண்ணற்ற விடயங்களை சமூகவியல் அரசியல் மனித நடத்தையியல் பார்வையோடு நேர்த்தியாக அமைக்கப்பட்ட கதைகளாகவே இவை "நடுநிலை" வாசகர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் புரியும். <br />
<br />
ஆக மொத்தத்தில் "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற தாட்சாயிணியின் சிறுகதைத்தொகுப்பு பல மனிதர்களின் அறிந்தும் அறியப்படாததுமான வாழ்வியல் வெளிப்பாடாக எம் உள்ளத்தில் பதிந்து நிற்கிறது. <br />
<br />
{அளவுகோல்களைக் கொண்டு இலக்கியத்தை அளவிடும் "தேர்வு நடத்தையில் நம்பிக்கை கொள்ளாமையால் இத் தொகுப்பை ஒப்பீடோ, திறனாய்வோ செய்யாது "வாசகப் பார்வை" ஆகவே இக்கருத்துப் பகிர்வை முன்வைக்கிறேன்.}&lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;[b] நன்றி&lt;/b&gt;&lt;/i&gt;  <a href="http://vasagarvattam.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://vasagarvattam.blogspot.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1188</link>
			<pubDate>Thu, 26 Jan 2006 04:25:23 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=881">தூயா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1188</guid>
			<description><![CDATA[                    [size=20]&lt;b&gt;வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன்&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://www.sankathi.net/ads/Capt_Vaamakanth.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
Source :Sankathi                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=20]&lt;b&gt;வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன்&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://www.sankathi.net/ads/Capt_Vaamakanth.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
Source :Sankathi                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழ நூலகம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1325</link>
			<pubDate>Tue, 17 Jan 2006 15:56:21 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=289">Eelavan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1325</guid>
			<description><![CDATA[                    யாழ் கள உறவுகளுக்கு<br />
வணக்கம்<br />
<br />
சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது<br />
<a href="http://www.noolaham.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.noolaham.net</a><br />
<br />
என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்<br />
<br />
எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே  பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது<br />
<br />
<br />
நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது<br />
1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)<br />
2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்<br />
3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்<br />
<br />
இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன<br />
<br />
<a href="http://noolaham.net/wiki/doku.php?id=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" target="_blank" rel="noopener" class="mycode_url">http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE</a><br />
இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவரை ஈழத்து நூல்கள் பற்றிய தகவல்களை திரட்டி அத்தளத்தில் சேகரிப்பதில் முயன்றுகொண்டிருக்கிறோம்<br />
<br />
<a href="http://www.viruba.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viruba.com/</a><br />
<br />
இம்முயற்சிகளை நீங்களும் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவற்றைப் பயன்படுத்தியும் இணைந்து செயற்பட்டும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்<br />
<br />
இவை திறந்த நிலையில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளக் கூடிய குழு முயற்சிகள் ஆகவே எவ்வகையான விமர்சனமாக இருந்தாலும் மகிழ்வுடன் எதிர்நோக்குகிறோம்<br />
<br />
தள வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் தளத்தின் வடிவமைப்பு ஒழுங்கமைக்கப்படவில்லை விரைவில் சீர் செய்யப்படும்<br />
<br />
நூலகம் தன்னார்வ நண்பர்கள் சார்பில்<br />
ஈழநாதன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    யாழ் கள உறவுகளுக்கு<br />
வணக்கம்<br />
<br />
சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது<br />
<a href="http://www.noolaham.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.noolaham.net</a><br />
<br />
என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்<br />
<br />
எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே  பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது<br />
<br />
<br />
நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது<br />
1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)<br />
2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்<br />
3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்<br />
<br />
இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன<br />
<br />
<a href="http://noolaham.net/wiki/doku.php?id=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" target="_blank" rel="noopener" class="mycode_url">http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE</a><br />
இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவரை ஈழத்து நூல்கள் பற்றிய தகவல்களை திரட்டி அத்தளத்தில் சேகரிப்பதில் முயன்றுகொண்டிருக்கிறோம்<br />
<br />
<a href="http://www.viruba.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.viruba.com/</a><br />
<br />
இம்முயற்சிகளை நீங்களும் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவற்றைப் பயன்படுத்தியும் இணைந்து செயற்பட்டும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்<br />
<br />
இவை திறந்த நிலையில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளக் கூடிய குழு முயற்சிகள் ஆகவே எவ்வகையான விமர்சனமாக இருந்தாலும் மகிழ்வுடன் எதிர்நோக்குகிறோம்<br />
<br />
தள வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் தளத்தின் வடிவமைப்பு ஒழுங்கமைக்கப்படவில்லை விரைவில் சீர் செய்யப்படும்<br />
<br />
நூலகம் தன்னார்வ நண்பர்கள் சார்பில்<br />
ஈழநாதன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[13905 :இன்னுமொரு &quot;தூக்கு மேடைக்குறிப்பு&quot;]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1827</link>
			<pubDate>Sat, 24 Dec 2005 08:49:40 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1827</guid>
			<description><![CDATA[                    <span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;13905&lt;/b&gt;</span> :&lt;b&gt;&lt;i&gt;இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு"&lt;/i&gt;&lt;/b&gt;<br />
<br />
"நான் அனுபவசாலியான படைப்பாளியோ,தொழில்முறைப் படைப்பாளியோ கிடையாது..<br />
எனது சிறுகதைகளனைத்துமே எனது தாயகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே.." <br />
என்று "சிலவார்த்தைகள்" இடம்பெற்றிருப்பது "&lt;b&gt;13905"&lt;/b&gt; <br />
என்ற நூலில்...<br />
நூலாசிரியர் &lt;b&gt;ம.தி.சாந்தன்&lt;/b&gt;...<br />
<br />
ராஜிவ் என்ற தனிமனித சாவுக்காக தூக்குத்தண்டணை பெற்ற மூவரிலொருவர்...20 சிறுகதைகளைக் கொண்ட இந் நூலை "&lt;b&gt;அர்ச்சுனா பதிப்பகம்" சூன் 2005&lt;/b&gt; இல் வெளியிட்டிருக்கிறது...அண்மையில் இங்கு நூலகத்தில் பார்த்தேன்;படித்தறிந்தேன்...<br />
<br />
தலைப்பிட்ட மாதிரி, இது இன்னுமொரு "தூக்குமேடைக் குறிப்பு" ( ஜூலியஸ் பூஸிக்" இனது முனையது)த்தான்....<br />
மிக்க அறிவு முதிர்ச்சியோடு பல கருத்துக்கள்,நிகழ்வுகள் "கதைகள்" ஆக பேசப் படுகின்றன...<br />
நாம் வெளியில் இருந்தும் எவ்வளவு "பின்" நிற்கிறோம் என்பதை நமக்குணர்த்தும் கதைகள்...<br />
கரவெட்டி முதல் நோர்வே என கதைப் பரப்புகள் விரிகின்றன,,,<br />
அலட்டல் இல்லாத அமைதியான, ஆனால் அழமான கருத்துகள் பார்வைகள் சிந்தனைகள் என "13905" மூலம்"ம.தி.சாந்தன்" நமக்கு "இன்னும்" உயர்கிறார்....<br />
அவருக்கு வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லவேஇல்லை...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;13905&lt;/b&gt;</span> :&lt;b&gt;&lt;i&gt;இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு"&lt;/i&gt;&lt;/b&gt;<br />
<br />
"நான் அனுபவசாலியான படைப்பாளியோ,தொழில்முறைப் படைப்பாளியோ கிடையாது..<br />
எனது சிறுகதைகளனைத்துமே எனது தாயகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே.." <br />
என்று "சிலவார்த்தைகள்" இடம்பெற்றிருப்பது "&lt;b&gt;13905"&lt;/b&gt; <br />
என்ற நூலில்...<br />
நூலாசிரியர் &lt;b&gt;ம.தி.சாந்தன்&lt;/b&gt;...<br />
<br />
ராஜிவ் என்ற தனிமனித சாவுக்காக தூக்குத்தண்டணை பெற்ற மூவரிலொருவர்...20 சிறுகதைகளைக் கொண்ட இந் நூலை "&lt;b&gt;அர்ச்சுனா பதிப்பகம்" சூன் 2005&lt;/b&gt; இல் வெளியிட்டிருக்கிறது...அண்மையில் இங்கு நூலகத்தில் பார்த்தேன்;படித்தறிந்தேன்...<br />
<br />
தலைப்பிட்ட மாதிரி, இது இன்னுமொரு "தூக்குமேடைக் குறிப்பு" ( ஜூலியஸ் பூஸிக்" இனது முனையது)த்தான்....<br />
மிக்க அறிவு முதிர்ச்சியோடு பல கருத்துக்கள்,நிகழ்வுகள் "கதைகள்" ஆக பேசப் படுகின்றன...<br />
நாம் வெளியில் இருந்தும் எவ்வளவு "பின்" நிற்கிறோம் என்பதை நமக்குணர்த்தும் கதைகள்...<br />
கரவெட்டி முதல் நோர்வே என கதைப் பரப்புகள் விரிகின்றன,,,<br />
அலட்டல் இல்லாத அமைதியான, ஆனால் அழமான கருத்துகள் பார்வைகள் சிந்தனைகள் என "13905" மூலம்"ம.தி.சாந்தன்" நமக்கு "இன்னும்" உயர்கிறார்....<br />
அவருக்கு வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லவேஇல்லை...                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நளாயினி தாமரைச்செல்வனின் &quot;நங்கூரம்&quot;, &quot;உயிர்த்தீ&quot;]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2332</link>
			<pubDate>Tue, 22 Nov 2005 18:04:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=34">இளைஞன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2332</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:blue'&gt;நங்கூரம்<br />
உயிர்த்தீ<br />
<br />
&lt;i&gt;நளாயினி தாமரைச்செல்வன்&lt;/i&gt;<br />
<br />
[size=18]எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. தமிழகத்தில் நடைபெற இருக்கிற புத்தகக் கண்காட்சியில் இவ்விரு கவிதைத் தொகுப்புகளும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. காதல் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூல்களின் அட்டைப்படங்களை ஓவியர் ஜீவன் அவர்கள் வரைந்துள்ளார்.&lt;/span&gt;<br />
<br />
&lt;b&gt;நளாயினி தாமரைச்செல்வனின் வலைப்பதிவு:&lt;/b&gt; <a href="http://nalayinykavithikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">உயிர்கொண்டு திளைத்தல்</a><br />
<br />
&lt;b&gt;வெளியீடு பற்றிய நளாயினி தாமரைச் செல்வனின் அறிவிப்பு:&lt;/b&gt; <a href="http://nalayinykavithikal.blogspot.com/2005/11/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">கவிதைத்தொகுதிகள் வெளியீடு</a><br />
<br />
&lt;b&gt;ஓவியர் ஜீவனின் ஓவியங்கள்:&lt;/b&gt; <a href="http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&amp;Itemid=70&amp;catid=11" target="_blank" rel="noopener" class="mycode_url">இங்கே</a><br />
<br />
&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;நங்கூரம்&lt;/b&gt;&lt;/span&gt;<br />
&lt;i&gt;நங்கூரம் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை&lt;/i&gt;<br />
<br />
அந்த புகை வண்டியில் <br />
நட்பாய் ஓர் கரம். <br />
<br />
என் பிரயாண சுமைகளை இறக்கி <br />
என் குழந்தையையும் <br />
தன் மடியில் வைத்துக்கொண்டான். <br />
<br />
அருகில் சிரித்த முகத்துடன் <br />
அவன் மனைவி. <br />
<br />
எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு <br />
தன்னை அறிமுகப்படுத்தாமல். <br />
<br />
நான் எனக்குள் <br />
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!<br />
நன்கு பரீட்சயமானதாய் !<br />
யார் இவன்? <br />
நிறைய உரு மாறி இருப்பானோ? <br />
<br />
என்னை நன்கு தெரிந்தவனாய் <br />
எல்லாம் விசாரித்தான். <br />
<br />
மூளையின் ஒரு பக்கம் <br />
இவன் பார்வையின் அலகுகள் <br />
நிறைய இருப்பதை உணர்கிறது. <br />
யார் இவன்? <br />
<br />
ஞாபக புத்தகத்தில் <br />
இவன் அலகு தட்டுப்பட்டதில் <br />
ஓ! இவன் என் முதல் கணவன். <br />
<br />
அந்த புழுதி மண்ணில் <br />
மூக்கு வடிய <br />
கொன்றைப் பூப்பறித்து <br />
இரு மாலை கட்டி <br />
தென்னோலை பிடுங்கி <br />
தாலி செய்து <br />
நானும் இவனும் <br />
மாலை மாற்ற <br />
<br />
அயல்வீட்டு சிறுவர் சிறுமியர் <br />
பீப்பீப்பீ டும்டும் <br />
என மங்கல வாழ்த்தொலிக்க <br />
என் கழுத்தில் தாலி கட்டியவன்.<br />
<br />
இவனுக்கு மண்ணில் <br />
சோறு கறி சமைத்து <br />
சிரட்டையில் <br />
உணவு கொடுத்தேன்<br />
எனது ஐந்து வயதில். <br />
<br />
<br />
[b]&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;உயிர்த்தீ&lt;/span&gt;<br />
&lt;i&gt;உயிர்த்தீ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை&lt;/i&gt;<br />
<br />
நீர்த்தடாகத்துள் <br />
விழும் மழைத்துளியாய் <br />
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன். <br />
<br />
சின்ன சின்ன <br />
குமிழ்களாய் <br />
தோன்றுவதும் <br />
மறைவதுமாய்-- <br />
<br />
இப்படித்தான் <br />
உன் நினைவுகள் <br />
எனக்குள் இப்போ. <br />
<br />
கண் மூடி கிறங்கி <br />
சலசலப்பை உணர <br />
சுகமாகத்தான் உள்ளது. <br />
<br />
குமிழ்கள் உடையும்போது <br />
ஏற்படும் நீர்ச்சலனம் <br />
மெது மெதுவாக <br />
எங்கும் வியாபித்து <br />
தடாகத்துள் அலை போன்ற <br />
அசைவைத்தருவது போல் <br />
உயிரின் அந்தம் வரை நீயும் <br />
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:blue'&gt;நங்கூரம்<br />
உயிர்த்தீ<br />
<br />
&lt;i&gt;நளாயினி தாமரைச்செல்வன்&lt;/i&gt;<br />
<br />
[size=18]எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. தமிழகத்தில் நடைபெற இருக்கிற புத்தகக் கண்காட்சியில் இவ்விரு கவிதைத் தொகுப்புகளும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. காதல் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூல்களின் அட்டைப்படங்களை ஓவியர் ஜீவன் அவர்கள் வரைந்துள்ளார்.&lt;/span&gt;<br />
<br />
&lt;b&gt;நளாயினி தாமரைச்செல்வனின் வலைப்பதிவு:&lt;/b&gt; <a href="http://nalayinykavithikal.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">உயிர்கொண்டு திளைத்தல்</a><br />
<br />
&lt;b&gt;வெளியீடு பற்றிய நளாயினி தாமரைச் செல்வனின் அறிவிப்பு:&lt;/b&gt; <a href="http://nalayinykavithikal.blogspot.com/2005/11/blog-post_22.html" target="_blank" rel="noopener" class="mycode_url">கவிதைத்தொகுதிகள் வெளியீடு</a><br />
<br />
&lt;b&gt;ஓவியர் ஜீவனின் ஓவியங்கள்:&lt;/b&gt; <a href="http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&amp;Itemid=70&amp;catid=11" target="_blank" rel="noopener" class="mycode_url">இங்கே</a><br />
<br />
&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;நங்கூரம்&lt;/b&gt;&lt;/span&gt;<br />
&lt;i&gt;நங்கூரம் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை&lt;/i&gt;<br />
<br />
அந்த புகை வண்டியில் <br />
நட்பாய் ஓர் கரம். <br />
<br />
என் பிரயாண சுமைகளை இறக்கி <br />
என் குழந்தையையும் <br />
தன் மடியில் வைத்துக்கொண்டான். <br />
<br />
அருகில் சிரித்த முகத்துடன் <br />
அவன் மனைவி. <br />
<br />
எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு <br />
தன்னை அறிமுகப்படுத்தாமல். <br />
<br />
நான் எனக்குள் <br />
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!<br />
நன்கு பரீட்சயமானதாய் !<br />
யார் இவன்? <br />
நிறைய உரு மாறி இருப்பானோ? <br />
<br />
என்னை நன்கு தெரிந்தவனாய் <br />
எல்லாம் விசாரித்தான். <br />
<br />
மூளையின் ஒரு பக்கம் <br />
இவன் பார்வையின் அலகுகள் <br />
நிறைய இருப்பதை உணர்கிறது. <br />
யார் இவன்? <br />
<br />
ஞாபக புத்தகத்தில் <br />
இவன் அலகு தட்டுப்பட்டதில் <br />
ஓ! இவன் என் முதல் கணவன். <br />
<br />
அந்த புழுதி மண்ணில் <br />
மூக்கு வடிய <br />
கொன்றைப் பூப்பறித்து <br />
இரு மாலை கட்டி <br />
தென்னோலை பிடுங்கி <br />
தாலி செய்து <br />
நானும் இவனும் <br />
மாலை மாற்ற <br />
<br />
அயல்வீட்டு சிறுவர் சிறுமியர் <br />
பீப்பீப்பீ டும்டும் <br />
என மங்கல வாழ்த்தொலிக்க <br />
என் கழுத்தில் தாலி கட்டியவன்.<br />
<br />
இவனுக்கு மண்ணில் <br />
சோறு கறி சமைத்து <br />
சிரட்டையில் <br />
உணவு கொடுத்தேன்<br />
எனது ஐந்து வயதில். <br />
<br />
<br />
[b]&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;உயிர்த்தீ&lt;/span&gt;<br />
&lt;i&gt;உயிர்த்தீ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை&lt;/i&gt;<br />
<br />
நீர்த்தடாகத்துள் <br />
விழும் மழைத்துளியாய் <br />
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன். <br />
<br />
சின்ன சின்ன <br />
குமிழ்களாய் <br />
தோன்றுவதும் <br />
மறைவதுமாய்-- <br />
<br />
இப்படித்தான் <br />
உன் நினைவுகள் <br />
எனக்குள் இப்போ. <br />
<br />
கண் மூடி கிறங்கி <br />
சலசலப்பை உணர <br />
சுகமாகத்தான் உள்ளது. <br />
<br />
குமிழ்கள் உடையும்போது <br />
ஏற்படும் நீர்ச்சலனம் <br />
மெது மெதுவாக <br />
எங்கும் வியாபித்து <br />
தடாகத்துள் அலை போன்ற <br />
அசைவைத்தருவது போல் <br />
உயிரின் அந்தம் வரை நீயும் <br />
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பழ. நெடுமாறனின் புதிய நூல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2336</link>
			<pubDate>Tue, 22 Nov 2005 15:31:26 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=842">thiru</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2336</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இந்துத்துவா பற்றிய<br />
பழ. நெடுமாறனின் புதிய நு}ல்<br />
முன் பதிவுத் திட்டம்<br />
2006 தை மாதம் வெளி வருகின்றது&lt;/b&gt;<br />
<br />
இருள் மண்டிக் கிடக்கும்<br />
இந்திய அரசியல் வரலாற்றில்<br />
மறைக்கப்பட்ட உண்மைகளையும்<br />
உரைக்கப்படாத சதிகளையும் <br />
உலகறிய ஏந்திவரும் புதிய நூல்!<br />
<br />
&lt;b&gt;பழ. நெடுமாறன்&lt;/b&gt; &lt;b&gt;எழுதிய&lt;/b&gt;<br />
உருவாகாத<br />
&lt;b&gt;இந்திய தேசியமும்&lt;/b&gt;<br />
உருவான<br />
&lt;b&gt;இந்து பாசிசமும்&lt;/b&gt;<br />
<br />
இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது<br />
<br />
<br />
<br />
ஏறத்தாழ 700 பக்கங்கள்<br />
விலை ரூபாய் 350<br />
முன் வெளியீட்டுத் திட்டத்தின்படி<br />
2006 சனவரி 10ஆம் தேதி வரை<br />
ரூபாய் 250 செலுத்தி<br />
பதிவு செய்து கொள்ளலாம்<br />
<br />
________________________________________<br />
<br />
வெளியீடு<br />
தமிழ்க்குலம்<br />
33, நரசிம்மபுரம்<br />
மயிலை, சென்னை  600 004.<br />
தொ. பே  914424640575<br />
<br />
<br />
&lt;b&gt;நன்றி: &lt;/b&gt;தென்செய்தி: <a href="http://thenseide.com/cgi-bin/Hindutva-05.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://thenseide.com/cgi-bin/Hindutva-05.asp</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இந்துத்துவா பற்றிய<br />
பழ. நெடுமாறனின் புதிய நு}ல்<br />
முன் பதிவுத் திட்டம்<br />
2006 தை மாதம் வெளி வருகின்றது&lt;/b&gt;<br />
<br />
இருள் மண்டிக் கிடக்கும்<br />
இந்திய அரசியல் வரலாற்றில்<br />
மறைக்கப்பட்ட உண்மைகளையும்<br />
உரைக்கப்படாத சதிகளையும் <br />
உலகறிய ஏந்திவரும் புதிய நூல்!<br />
<br />
&lt;b&gt;பழ. நெடுமாறன்&lt;/b&gt; &lt;b&gt;எழுதிய&lt;/b&gt;<br />
உருவாகாத<br />
&lt;b&gt;இந்திய தேசியமும்&lt;/b&gt;<br />
உருவான<br />
&lt;b&gt;இந்து பாசிசமும்&lt;/b&gt;<br />
<br />
இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது<br />
<br />
<br />
<br />
ஏறத்தாழ 700 பக்கங்கள்<br />
விலை ரூபாய் 350<br />
முன் வெளியீட்டுத் திட்டத்தின்படி<br />
2006 சனவரி 10ஆம் தேதி வரை<br />
ரூபாய் 250 செலுத்தி<br />
பதிவு செய்து கொள்ளலாம்<br />
<br />
________________________________________<br />
<br />
வெளியீடு<br />
தமிழ்க்குலம்<br />
33, நரசிம்மபுரம்<br />
மயிலை, சென்னை  600 004.<br />
தொ. பே  914424640575<br />
<br />
<br />
&lt;b&gt;நன்றி: &lt;/b&gt;தென்செய்தி: <a href="http://thenseide.com/cgi-bin/Hindutva-05.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://thenseide.com/cgi-bin/Hindutva-05.asp</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புதுமைப்பித்தனின் வாழ்வியல் ஆலோசனை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2564</link>
			<pubDate>Mon, 07 Nov 2005 23:20:44 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1413">Mind-Reader</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2564</guid>
			<description><![CDATA[                    ""எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்குத் தனிப்பட்ட ரூபம் உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கதாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன... சிறுகதை என்ற பிரிவு, இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது'' என்பார் புதுமைப்பித்தன். <br />
<br />
"என் அபிப்பிராயம், (27௰௧935) என்ற தலைப்பில் மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதி வந்த கட்டுரை வரிசையில் முதலாவது வெளியானது புதுமைப்பித்தனின் "சிறுகதை' எனும் இந்தக் கருத்துரை. <br />
<br />
அவரது முதல் கதையான "ஆற்றங்கரைப் பிள்ளையார்' (மணிக்கொடி 22-04௧934) தொடங்கி இறுதிக் கதையாகக் கருதப்படும் "கயிற்றரவு' (காதம்பரி, ஏப்ரல் 1948) வரை பல்வேறு சோதனை முயற்சிகள்! கதைக் கருக்களுடன் அவர் எடுத்தாண்ட உத்திகள் குறிப்பிடத்தக்கவை. <br />
<br />
அவர் காலத்திய அறிவியல் கலைச்சொற்களும் இங்கு முக்கியம். "தொலைநோக்கி' இவரது கதை ஒன்றில் "தூர திருஷ்டிக் கண்ணாடி' ஆக இடம்பெறும். விலங்கியல் குறித்த இவர் பார்வை வேறு மாதிரி. பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள் (பால்வண்ணம் பிள்ளை) என்று ஒரு கதையில் அங்கதச் சுவை! இவர் கருத்துப்படி, ""தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும் "சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்'' என்று பால்வண்ணம் பிள்ளையின் மனைவி பற்றி சித்திரிக்கிறார். ஒருவிதத்தில் மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் கருத்துப் பரவல்தளத்தில் ஒரே அலைநீளத்தில் இயங்குபவர்தாம். <br />
<br />
""கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக் கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே'' (கயிற்றரவு) என்பார் புதுமைப்பித்தன். உண்மைதான். வானவியல் அடிப்படையில் சூரியனுக்கு அருகில் இருந்து கோள்களை வரிசைப்படுத்தினால் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்றுதானே கிழமை அமைய வேண்டும். நாம் கற்பனையாக (ஹழ்க்ஷண்ற்ஹழ்ஹ்) வரையறுத்துக் கொண்டது தானே இந்த வார நாள் பரிணாமங்கள்! <br />
<br />
அதே கதையில் ""அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூர்ண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று, நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று. தவளையாயிற்று. வாலிழந்தது குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுகட்டாகக் காத்திருந்தது'' என்கிறார். <br />
<br />
ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சூரிய மண்டலம் உருவான வரலாறும், சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் சித்தாந்தமும் பின்னிப் பிணைந்த பிரபஞ்சவியல் இது. அதிலும், ""நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு''. உரத்த அறிவியல் சிந்தனை இது. ""நான் நினைக்கிறேன். அதனால் இருக்கிறேன்'' (ஐ ற்ட்ண்ய்ந் ற்ட்ங்ழ்ச்ர்ழ்ங் ஐ ங்ஷ்ண்ள்ற்) என்பதை "காகிடோ எர்கோ சம்' (இர்ஞ்ண்ற்ர் ங்ழ்ஞ்ர் ள்ன்ம்) என்பார் கிரேக்க மேதை டெக்காத்தே. <br />
<br />
ஒரு வகையில் ஐன்ஸ்டீனின் நவீன சார்பியல் சித்தாந்தமும் இதுவே. அதுவும் பாருங்கள். இந்த அக்டோபரில் சூரிய கிரகணம், சந்திர கிரகணங்கள் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் வாழ்விலும் ஓர் அனுபவம். <br />
<br />
""1913 அக்டோபர் 14 அன்று தோன்றிய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளி அதன் விளிம்பில் 0.83 பாகை வளைந்தது தெரியவந்தது. அதாவது, ஒளி கூட ஈர்ப்பு விசைக்கு உள்ளாகும் உண்மை நிரூபணம் ஆயிற்று. ஐன்ஸ்டீனின் 1915-ஆம் ஆண்டின் பொதுச்சார்பியல் சித்தாந்தப் பரிசோதனை முடிவு இது. <br />
<br />
பல்வேறு மருத்துவ அறிவியல் துறைகள் பற்றிய புதுமைப்பித்தனின் கருத்தோட்டத்தைப் பாருங்கள். ""அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வரப்பட்டவன் ஹடயோகி. விஷங்களையும், கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரில் தின்று சாகாதவன். சித்தாந்த சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்... எக்ஸ்ரே பரீûக்ஷயில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே'' (உபதேசம்) என்று விவரிக்கிறார். இறுதியில் அவர்களில் விஸ்வநாத் எனும் இந்திய மருத்துவர் தலைமொட்டை அடித்து, இடையில் காவி வேஷ்டி தரித்து, காலில் குப்பிப் பூண் பாதக் குறடு அணிந்து, பனிமலையில் பத்மாசனம் இட்டு நிஷ்டையில் உட்கார்ந்தபடி, தனது சக ஆங்கில மருத்துவருக்கு உபதேசம் செய்கிறார்: ""நான் சாகவில்லை. நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல்கள் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு''. <br />
<br />
தினமணி நாளிதழின் உதவியாசிரியராக (1936 - 43) பணியாற்றி வந்த காலத்தில் புதுமைப்பித்தன் எழுதிய மருத்துவ நூல் மதிப்புரைகளில் ஊசியும் இருக்கும் மருந்தும் இருக்கும். "ஹோமியோபதி' (எம்.பால் எச்.எம்.பி), பயோ-கெமிஸ்ட்ரி (டாக்டர் என் கொண்டா, எம்.டி.எச்.எஸ்) ஆகிய இரு நூல்கள் பற்றிய இவரது மதிப்பீடுகள் இவை. <br />
<br />
""...தற்போதைய நிலையில் இவை இரண்டும் தமிழன் கையில் கொடுப்பதற்கு மிகவும் அபாயகரமானவை என்பது என் கருத்து. இதில் சொல்லப்படும் மருந்துகள் யாவும், ரசாயன சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்து அதில் பண்பட்ட ஆசாமிகளுக்கே விளங்கும். ஒரு அணாவை உள்ளே தள்ளி பிளாட்பாரம் டிக்கட் வாங்கும் "ஸ்லாட் யந்திரம்' அல்ல அந்த அனுபவம். ரசாயன சாஸ்திரம் தெளிவாக அறிந்திருந்தால்தான் என்ன சேர்த்தால் என்னவாகும் என்றாவது ஒருவாறு பிடிபடும். லத்தீன் கடபுடாக்களான பெயர்கள் முழங்கும் தெளிவற்ற இப்பத்தகத்தை வைத்து தமிழன் ஹோமியோபதி கற்க முயல்வது அபாயகரமான வேலை. போலீஸ், கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு விட்டாலும் விட்டுவிடும்'' (தினமணி 31-01௧938) என்று நையாண்டி பண்ணுகிறார். <br />
<br />
அதே இதழில், "நியு ஹெல்த்' எனும் தலைப்பில், ""...நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் முப்பாஷை சுகாதாரப் பத்திரிகையின் வருஷ மலர் ஒன்று வரப் பெற்றோம். அதில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலிய மூன்று பாஷைகளிலும் வைத்யம், தேகாரோக்யம் முதலியன பற்றி பல கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆயுர்வேத வைத்யத்திற்கு விசேஷ ஆதரவு கொடுக்கப்படுவது போற்றத்தக்கது'' என்று நற்சான்று வழங்கி இருக்கிறார். <br />
<br />
அறிவியலுக்குத் தகவல்களே ஆதாரம். பாருங்கள், திருநெல்வேலி சுலோசன முதலியார் பாலம் ""முட்டையும் பதநீரும் அரைத்த காரையில் கட்டியதாம்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்ற விவரணம் தொல் கட்டட நுட்பம் அல்லவா? <br />
<br />
"செல்வம்' என்ற கதையில், ""ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல் படி. மற்ற எல்லா லட்சியங்களுக்கும்... அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்'' என்று வாழ்வியல் வளர்ச்சிக்கும் ஆலோசனை தருகிறார் புதுமைப்பித்தன். ""மனிதன் நல்லவன்தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்று சாமியார் வாய்மொழியாகக் கூறுகிறார் புதுமைப்பித்தன். அதுவும் உண்மைதானே!<br />
<br />
நெல்லை சு. முத்து<br />
நன்றி: தினமணி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ""எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்குத் தனிப்பட்ட ரூபம் உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கதாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன... சிறுகதை என்ற பிரிவு, இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது'' என்பார் புதுமைப்பித்தன். <br />
<br />
"என் அபிப்பிராயம், (27௰௧935) என்ற தலைப்பில் மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதி வந்த கட்டுரை வரிசையில் முதலாவது வெளியானது புதுமைப்பித்தனின் "சிறுகதை' எனும் இந்தக் கருத்துரை. <br />
<br />
அவரது முதல் கதையான "ஆற்றங்கரைப் பிள்ளையார்' (மணிக்கொடி 22-04௧934) தொடங்கி இறுதிக் கதையாகக் கருதப்படும் "கயிற்றரவு' (காதம்பரி, ஏப்ரல் 1948) வரை பல்வேறு சோதனை முயற்சிகள்! கதைக் கருக்களுடன் அவர் எடுத்தாண்ட உத்திகள் குறிப்பிடத்தக்கவை. <br />
<br />
அவர் காலத்திய அறிவியல் கலைச்சொற்களும் இங்கு முக்கியம். "தொலைநோக்கி' இவரது கதை ஒன்றில் "தூர திருஷ்டிக் கண்ணாடி' ஆக இடம்பெறும். விலங்கியல் குறித்த இவர் பார்வை வேறு மாதிரி. பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள் (பால்வண்ணம் பிள்ளை) என்று ஒரு கதையில் அங்கதச் சுவை! இவர் கருத்துப்படி, ""தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும் "சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்'' என்று பால்வண்ணம் பிள்ளையின் மனைவி பற்றி சித்திரிக்கிறார். ஒருவிதத்தில் மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் கருத்துப் பரவல்தளத்தில் ஒரே அலைநீளத்தில் இயங்குபவர்தாம். <br />
<br />
""கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக் கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே'' (கயிற்றரவு) என்பார் புதுமைப்பித்தன். உண்மைதான். வானவியல் அடிப்படையில் சூரியனுக்கு அருகில் இருந்து கோள்களை வரிசைப்படுத்தினால் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்றுதானே கிழமை அமைய வேண்டும். நாம் கற்பனையாக (ஹழ்க்ஷண்ற்ஹழ்ஹ்) வரையறுத்துக் கொண்டது தானே இந்த வார நாள் பரிணாமங்கள்! <br />
<br />
அதே கதையில் ""அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூர்ண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று, நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று. தவளையாயிற்று. வாலிழந்தது குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுகட்டாகக் காத்திருந்தது'' என்கிறார். <br />
<br />
ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சூரிய மண்டலம் உருவான வரலாறும், சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் சித்தாந்தமும் பின்னிப் பிணைந்த பிரபஞ்சவியல் இது. அதிலும், ""நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு''. உரத்த அறிவியல் சிந்தனை இது. ""நான் நினைக்கிறேன். அதனால் இருக்கிறேன்'' (ஐ ற்ட்ண்ய்ந் ற்ட்ங்ழ்ச்ர்ழ்ங் ஐ ங்ஷ்ண்ள்ற்) என்பதை "காகிடோ எர்கோ சம்' (இர்ஞ்ண்ற்ர் ங்ழ்ஞ்ர் ள்ன்ம்) என்பார் கிரேக்க மேதை டெக்காத்தே. <br />
<br />
ஒரு வகையில் ஐன்ஸ்டீனின் நவீன சார்பியல் சித்தாந்தமும் இதுவே. அதுவும் பாருங்கள். இந்த அக்டோபரில் சூரிய கிரகணம், சந்திர கிரகணங்கள் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் வாழ்விலும் ஓர் அனுபவம். <br />
<br />
""1913 அக்டோபர் 14 அன்று தோன்றிய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளி அதன் விளிம்பில் 0.83 பாகை வளைந்தது தெரியவந்தது. அதாவது, ஒளி கூட ஈர்ப்பு விசைக்கு உள்ளாகும் உண்மை நிரூபணம் ஆயிற்று. ஐன்ஸ்டீனின் 1915-ஆம் ஆண்டின் பொதுச்சார்பியல் சித்தாந்தப் பரிசோதனை முடிவு இது. <br />
<br />
பல்வேறு மருத்துவ அறிவியல் துறைகள் பற்றிய புதுமைப்பித்தனின் கருத்தோட்டத்தைப் பாருங்கள். ""அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வரப்பட்டவன் ஹடயோகி. விஷங்களையும், கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரில் தின்று சாகாதவன். சித்தாந்த சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்... எக்ஸ்ரே பரீûக்ஷயில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே'' (உபதேசம்) என்று விவரிக்கிறார். இறுதியில் அவர்களில் விஸ்வநாத் எனும் இந்திய மருத்துவர் தலைமொட்டை அடித்து, இடையில் காவி வேஷ்டி தரித்து, காலில் குப்பிப் பூண் பாதக் குறடு அணிந்து, பனிமலையில் பத்மாசனம் இட்டு நிஷ்டையில் உட்கார்ந்தபடி, தனது சக ஆங்கில மருத்துவருக்கு உபதேசம் செய்கிறார்: ""நான் சாகவில்லை. நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல்கள் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு''. <br />
<br />
தினமணி நாளிதழின் உதவியாசிரியராக (1936 - 43) பணியாற்றி வந்த காலத்தில் புதுமைப்பித்தன் எழுதிய மருத்துவ நூல் மதிப்புரைகளில் ஊசியும் இருக்கும் மருந்தும் இருக்கும். "ஹோமியோபதி' (எம்.பால் எச்.எம்.பி), பயோ-கெமிஸ்ட்ரி (டாக்டர் என் கொண்டா, எம்.டி.எச்.எஸ்) ஆகிய இரு நூல்கள் பற்றிய இவரது மதிப்பீடுகள் இவை. <br />
<br />
""...தற்போதைய நிலையில் இவை இரண்டும் தமிழன் கையில் கொடுப்பதற்கு மிகவும் அபாயகரமானவை என்பது என் கருத்து. இதில் சொல்லப்படும் மருந்துகள் யாவும், ரசாயன சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்து அதில் பண்பட்ட ஆசாமிகளுக்கே விளங்கும். ஒரு அணாவை உள்ளே தள்ளி பிளாட்பாரம் டிக்கட் வாங்கும் "ஸ்லாட் யந்திரம்' அல்ல அந்த அனுபவம். ரசாயன சாஸ்திரம் தெளிவாக அறிந்திருந்தால்தான் என்ன சேர்த்தால் என்னவாகும் என்றாவது ஒருவாறு பிடிபடும். லத்தீன் கடபுடாக்களான பெயர்கள் முழங்கும் தெளிவற்ற இப்பத்தகத்தை வைத்து தமிழன் ஹோமியோபதி கற்க முயல்வது அபாயகரமான வேலை. போலீஸ், கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு விட்டாலும் விட்டுவிடும்'' (தினமணி 31-01௧938) என்று நையாண்டி பண்ணுகிறார். <br />
<br />
அதே இதழில், "நியு ஹெல்த்' எனும் தலைப்பில், ""...நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் முப்பாஷை சுகாதாரப் பத்திரிகையின் வருஷ மலர் ஒன்று வரப் பெற்றோம். அதில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலிய மூன்று பாஷைகளிலும் வைத்யம், தேகாரோக்யம் முதலியன பற்றி பல கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆயுர்வேத வைத்யத்திற்கு விசேஷ ஆதரவு கொடுக்கப்படுவது போற்றத்தக்கது'' என்று நற்சான்று வழங்கி இருக்கிறார். <br />
<br />
அறிவியலுக்குத் தகவல்களே ஆதாரம். பாருங்கள், திருநெல்வேலி சுலோசன முதலியார் பாலம் ""முட்டையும் பதநீரும் அரைத்த காரையில் கட்டியதாம்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்ற விவரணம் தொல் கட்டட நுட்பம் அல்லவா? <br />
<br />
"செல்வம்' என்ற கதையில், ""ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல் படி. மற்ற எல்லா லட்சியங்களுக்கும்... அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்'' என்று வாழ்வியல் வளர்ச்சிக்கும் ஆலோசனை தருகிறார் புதுமைப்பித்தன். ""மனிதன் நல்லவன்தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்று சாமியார் வாய்மொழியாகக் கூறுகிறார் புதுமைப்பித்தன். அதுவும் உண்மைதானே!<br />
<br />
நெல்லை சு. முத்து<br />
நன்றி: தினமணி                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3071</link>
			<pubDate>Sun, 02 Oct 2005 09:43:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3071</guid>
			<description><![CDATA[                    என்னைக் கவர்ந்த  நல்ல எழுத்தாற்றல் உள்ள இன்னொரு ஈழத்து  வலைப் பதிவாளர் டிசே தமிழன், மேரி ஆனின் கதைகளை விமர்சித்துள்ளார் ,எல்லாத்தையும் இங்க போட ஏலாது மிச்சத்தை அவரது பதிவிற்குச் சென்று வாசிக்கவும், நல்ல பதிவு..... <br />
<br />
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி <br />
<br />
Bodies in Motion by Mary Anne Mohanraj<br />
<br />
<br />
<br />
"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."<br />
-Mary Anne Mohanraj (Wood and Flesh)<br />
<br />
(1)<br />
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.<br />
<br />
தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.<br />
<br />
(2)<br />
<br />
<br />
Mary Anne Mohanraj (2001)<br />
<br />
பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112801111566016861.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2005/09/blo...1566016861.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    என்னைக் கவர்ந்த  நல்ல எழுத்தாற்றல் உள்ள இன்னொரு ஈழத்து  வலைப் பதிவாளர் டிசே தமிழன், மேரி ஆனின் கதைகளை விமர்சித்துள்ளார் ,எல்லாத்தையும் இங்க போட ஏலாது மிச்சத்தை அவரது பதிவிற்குச் சென்று வாசிக்கவும், நல்ல பதிவு..... <br />
<br />
தமிழ் அடையாளத்துடன் புதிய கதைசொல்லி <br />
<br />
Bodies in Motion by Mary Anne Mohanraj<br />
<br />
<br />
<br />
"...Even in the middle of war, children were being born here, life was going on. Without sugar, sometimes without even rice, going on anyway, despite the grief and the pain. Sometimes, the blood on the sheets was only from a bridal night, sometimes, there was celebration, there was pleasure, there was joy."<br />
-Mary Anne Mohanraj (Wood and Flesh)<br />
<br />
(1)<br />
இந்தத் தொகுப்பில் மேரி ஆன் மோகன்ராஜின் இருபது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதைகளாக இருப்பினும் ஒரு நாவலுக்குரிய தன்மையுடன் சில பாத்திரங்கள் பல்வேறு கதைகளில் பல்வேறு சூழலில் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'கந்தையா', 'வல்லிபுரம்' என்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட இரு குடுமபங்களின் பிள்ளைகளின் கதைகளும், பிறகு அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் கதைகளும் கூறப்படுகின்றன. கதைகள் 1939ல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், கொழும்பில், அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் நடப்பதாய் விரிந்தபடி இருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் இலகுவில் வாசிப்பவருக்கு புரியவேண்டும் என்பதற்காய் கதைகள் ஆரம்பிக்க முன்னர் குடும்ப மரம் (family tree) தரப்பட்டிருக்கின்றது.<br />
<br />
தொகுப்பிலுள்ள இருபது கதைகளில் ஆகக்ககுறைந்தது பத்துக் கதைகளாவது நல்ல கதைகள் என்று துணிந்து கூறலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் (முக்கியமாய் பால்யநதி), தங்கமணியின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஒருவிதமான அமைதியும் நிதானமும் படர்கின்றமாதியான வாசிப்பை மேரி ஆனின் படைப்புக்களிலும் பெற்றிருந்தேன். எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கூற முடியாத இரகசியங்கள் கசிந்தபபடியேதானே இருக்கின்றன. அவை குறித்து அறிய ஆவல் இருப்பினும் அவ்வாறு அறியமுற்படுகையில் தமது குடும்ப அங்கத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் தகர்ந்துவிடுமோ என்ற பயம் இரகசியங்களை இரகசியங்களாவே வைத்துப் பார்க்கவே மனித மனங்களை விரும்பச் செய்கின்றன. இந்தக் கதைகளிலுள்ள கதாபாத்திரங்களும் தமக்குரிய தனிமைகளுடன், நம்பிக்கைகளுடன், துரோகங்களுடன், இரகசியங்களுடன் நடமாடுகின்றன. கதைகளை வாசித்துக்கொண்டுபோகும்போது எந்த பாத்திரத்தின் மீதும் மூர்க்கமாய் கோபப்படமுடிவதில்லை. ஏன் இப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற இயலாமையுடந்தான் பார்த்துக்கொண்டிருக்க முடிகின்றது. 'உபபாண்டவத்தில்' வருவதுபோன்று, அந்த அந்தப் பாத்திரங்கள் உரையாடத் தொடங்கும்போது அவை தமக்கான நியாயங்களையும், அந்தப் பாத்திரம் குறித்து பிற பாத்திரங்கள் பேசும்போது வேறுவிதமான பார்வைகளையும் வாசிப்பவருக்குத் தருகின்றது. முக்கியமாய் மேரி ஆன் எந்தப் பாத்திரத்தின் மீதும் தனது பார்வையை (ஜெயமோகன் எழுத்துக்களில் இருக்கும் முக்கிய பலவீனமே இதுதான்) திணிக்காமல் அவற்றை அவர்கள்பாட்டில் பேசவிடுவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம். இந்தக் கதைகளில் என்னை(உடைந்தபோன பல 'நான்'களை), உங்களை, உஙளுக்குத் தெரிந்த பலரைப் பார்த்துக்கொண்டே போகலாம். குடும்பஙகளில் சாத்தியமாயுள்ள Heterosexual, Homosexual, Adultery, Teen Age Sex என்று எல்லாவிதமான உறவுகளும் பேசப்படுகின்றன. எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் காமம் ஒரு சிற்றாறைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றது. அது பலவேளைகளில் உறவுகளை பிணைப்பதாயும் (Bond?) சிலவேளைகளில் உறவுகளை முறிப்பதாயும் அமைகின்றது.<br />
<br />
(2)<br />
<br />
<br />
Mary Anne Mohanraj (2001)<br />
<br />
பிள்ளைகளின் பிள்ளைகளைப் பற்றிக் கூறும் கதைகளில், Minnal in Winter கதை மிகவும் பிடித்த ஒன்று. பத்தொன்பது வயது மின்னல், புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றார். அவரது தாயார் கொழும்பில் இருந்தாலும் அவரது சித்தியொருவர் மாசூஸட்டில் இருக்கின்றார். வளாகத்துக்குள் தங்கியிருக்கும் மின்னலுக்கு சேர்ந்து படிக்க ஆரம்பிக்கும் ஸ்பானிய பெடியனுடன் காதல் முகிழ்ந்து, உறவின் நீட்சியில் கர்ப்பமும் தரிக்கின்றார். இதே சமயம், கொழும்பிலிருக்கும் தாய் மின்னலுக்கு நல்லதொரு திருமணப் பொருத்தம் வந்திருக்கின்றது, படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வருக என்று கடிதம் எழுதுகின்றார். இங்குள்ள உறவு குறித்து அம்மாவுக்கு கூறுவதா அல்லது அம்மா பார்த்த பையனைத் திருமணஞ்செய்வதா என்று மின்னல் குழம்பத்தொடங்குகின்றார். அந்த நேரத்தில் மாசூஸட்டில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போகின்றார். அவரது சித்தி ராஜியும் அந்தச்சமயத்தில் கர்ப்பிணியாய் இருக்கின்றார். இறுதியில் அம்மாவின் முடிவுக்கு உடன்படுவதில்லை எனவும், அதேசமயம் அந்த கருவைத் தாங்குவதில்லை எனவும் முடிவு செய்து தொடர்ந்து படிக்கப் போவதாய் கதை முடியும். இந்தக் கதை நகர்ந்துகொண்டு போகும் விதம் மிக அற்புதமானது. ஒரு பெடியனோடு படித்து கொண்டிருக்கும்போது ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தன்னை முழுதாய் எடுத்துக்கொள் என்று தன்வசம் இழப்பது....காதலில்/காமத்தில் கிறங்கிக்கிடப்பது...பிறகு கர்ப்பந் தரிக்கும்போது தன் எதிர்காலத்தை நினைத்து வருந்துவது.... என அனைத்தும் மிக இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கதையின் ஓரிடத்தில் மின்னல் யோசிப்பதாய் வரும், 'அம்மா இப்படி ஒரு பெடியனுக்கருகில் இருந்தால் எப்படியான உணர்ச்சிகள் பீறிட்டெழும் என்று சரியாக நீ எனக்குக் கற்றுத்தந்து மனந்திறந்து விவாதித்திருந்தால், இன்று இப்படியான சிக்கலில் மாட்டாமல் கவனமாயிருந்திருப்பேனென' என்று எல்லாம் அந்தப் பாத்திரம் யோசிப்பது பற்றி, ஒரு பதின்மவயதுப்பெண்ணின் மனநிலையில் இருந்து அழகாய் மேரி ஆன் எழுதியிருபபார். மின்னல் குழம்புபோது நாங்களும் குழம்பி, படிப்புத்தான் அனைத்தையும் விட தன் சுயத்தைப் பிரதிபலிக்கப்போகும் விடயம் என்று தீர்க்கமாய் முடிவெடுக்கும்போது வாசிக்கும் நமக்குள்ளும் ஒருவித அமைதி படர்ந்துவிடுகின்றது.<br />
<br />
<a href="http://djthamilan.blogspot.com/2005/09/blog-post_112801111566016861.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://djthamilan.blogspot.com/2005/09/blo...1566016861.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3251</link>
			<pubDate>Mon, 19 Sep 2005 20:56:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3251</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்? <br />
 புத்தகம் எழுதிய கார்த்திகேயனுக்கு புலிகள் கேள்வி&lt;/b&gt;  <br />
 <br />
 <br />
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையை-&amp; உலகெங்கும், ஒரு மாதிரி விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்! <br />
<br />
இப்படி பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது, Ôஇன்டர்போல்Õ எனப்படும் சர்வதேச போலீஸ். இதன் மூலம் உலக புலனாய்வு அமைப்புகளுக்கு இணையாகப் பேசப்படும் ஓர் அமைப்பாக மாறியிருக்கிறது இந்தியாவின் சி.பி.ஐ.  <br />
&lt;img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்த அரிய பாராட்டால் உற்சாகப் பூரிப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயனைச் சந்தித்தோம். சி.பி.ஐ&amp;யிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவர், ராஜீவ் கொலை தொடர்பாக நடத்திய விசாரணையை, புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், வாய்மையின் வெற்றி என்ற தலைப்பில் விரைவில் தமிழிலும் வெளியாகவுள்ளது. Ôஇன்டர்போல் பாராட்டு... அவர் எழுதியிருக்கும் புத்தகம்... இவைப் பற்றியெல்லாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம். <br />
<br />
&lt;span style='color:red'&gt;சர்வதேச போலீஸ் உங்களுக்கும், உங்கள் விசாரணைக் குழுவுக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறதே? <br />
<br />
உலகத்தில் இதுவரை எத்தனையோ பெரிய தலைவர்கள், வி.வி.ஐ.பி&amp;க்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் எல்லாம் கொலையாளிகள் இவர்கள்தான் என யாரையும் அடையாளம் காட்டவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் மகாத்மா காந்தியையும், இந்திரா காந்தியையும் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மட்டுமே சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நான்தான் கொன்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான். இந்திரா அம்மையார் விஷயத்தில் அவரை கொலை செய்தவர்கள் அந்த இடத்திலேயே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில்கூட ஆரம்பத்தில் தயக்கங்கள்தான். கொலைக்கு மறுநாள் காலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உச்சபட்ச உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லா அமைப்புகளுமே இதை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றுதான் சொன்னார்கள். <br />
&lt;img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23a.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
கார்த்திகேயன் <br />
<br />
<br />
என்னை ராஜீவ் கொலையை விசாரிக்கப் பணித்த போது, அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. என்னிடம் கொடுத்த அந்தப் பொறுப்பை அப்போதே பல உயர் அதிகாரிகளிடம் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆனால், யாருமே அதை ஏற்காமல் தட்டிக் கழித்திருக்கிறார்கள். காரணம், ராஜீவ் கொலை என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிற ஒரு விஷயம். இந்த விசாரணையில் உருப்படியாக கண்டு பிடிக்காமல் வெறும் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தால் அது இந்தியாவுக்கே அசிங்கம். தவிர, விசாரணைக்கு தலைமையேற்கும் உயர் அதிகாரிக்கும் பெரிய அசிங்கம். <br />
<br />
நான் மிகவும் நேசித்த ஒரு தலைவரின் கொலைப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வெளிப்படை யான விசாரணையை மேற்கொண்டேன். அப்போதே எனக்கு அரசியல் குறுக்கீடுகள் வரத் துவங்கின. எங்கிருந்து, யார் மூலம் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனக்கு வந்த குறுக்கீடுகள் விசாரணையின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்ததாக இருந்தது. ஆனால், அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்க, எனக்குப் போதிய சுதந்திரம் கொடுத்தது மத்திய அரசு. அந்த சுதந்திரம்தான் ராஜீவ் கொலையாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட எனக்கு உதவியது.ÕÕ <br />
<br />
இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும், இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே? <br />
<br />
இதற்குப் பதிலாக அண்மையில் நான் நார்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு ஏன் தீவிரவாதம்? என்பதுதான். தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம். <br />
<br />
மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ. ஜனநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம். <br />
<br />
முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் குரல் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்ÕÕ <br />
<br />
ராஜீவ் கொலை விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத் துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே? <br />
<br />
அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளின் இணைய தளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துக்களை வெளியிட்டனர். அதில், ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.ÕÕ <br />
<br />
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரனை இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? <br />
<br />
ராஜீவ் விவகாரத் தைப் பொறுத்த வரையில், யாரெல்லாம் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டுவதும், அதற்கான ஆதாரங்களை கொடுப்பதும்தான் விசாரணை அமைப்பின் வேலை. மற்றபடி நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வியை ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும்.<br />
<br />
- எஸ்.சரவணகுமார் <br />
படம்: கே.கார்த்திகேயன்<br />
 <br />
<br />
 &lt;/span&gt;<br />
<br />
Thanks: Vikadan                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்? <br />
 புத்தகம் எழுதிய கார்த்திகேயனுக்கு புலிகள் கேள்வி&lt;/b&gt;  <br />
 <br />
 <br />
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையை-&amp; உலகெங்கும், ஒரு மாதிரி விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்! <br />
<br />
இப்படி பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது, Ôஇன்டர்போல்Õ எனப்படும் சர்வதேச போலீஸ். இதன் மூலம் உலக புலனாய்வு அமைப்புகளுக்கு இணையாகப் பேசப்படும் ஓர் அமைப்பாக மாறியிருக்கிறது இந்தியாவின் சி.பி.ஐ.  <br />
&lt;img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இந்த அரிய பாராட்டால் உற்சாகப் பூரிப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயனைச் சந்தித்தோம். சி.பி.ஐ&amp;யிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவர், ராஜீவ் கொலை தொடர்பாக நடத்திய விசாரணையை, புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், வாய்மையின் வெற்றி என்ற தலைப்பில் விரைவில் தமிழிலும் வெளியாகவுள்ளது. Ôஇன்டர்போல் பாராட்டு... அவர் எழுதியிருக்கும் புத்தகம்... இவைப் பற்றியெல்லாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம். <br />
<br />
&lt;span style='color:red'&gt;சர்வதேச போலீஸ் உங்களுக்கும், உங்கள் விசாரணைக் குழுவுக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறதே? <br />
<br />
உலகத்தில் இதுவரை எத்தனையோ பெரிய தலைவர்கள், வி.வி.ஐ.பி&amp;க்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் எல்லாம் கொலையாளிகள் இவர்கள்தான் என யாரையும் அடையாளம் காட்டவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் மகாத்மா காந்தியையும், இந்திரா காந்தியையும் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மட்டுமே சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நான்தான் கொன்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான். இந்திரா அம்மையார் விஷயத்தில் அவரை கொலை செய்தவர்கள் அந்த இடத்திலேயே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில்கூட ஆரம்பத்தில் தயக்கங்கள்தான். கொலைக்கு மறுநாள் காலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உச்சபட்ச உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லா அமைப்புகளுமே இதை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றுதான் சொன்னார்கள். <br />
&lt;img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23a.jpg' border='0' alt='user posted image'&gt; <br />
கார்த்திகேயன் <br />
<br />
<br />
என்னை ராஜீவ் கொலையை விசாரிக்கப் பணித்த போது, அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. என்னிடம் கொடுத்த அந்தப் பொறுப்பை அப்போதே பல உயர் அதிகாரிகளிடம் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆனால், யாருமே அதை ஏற்காமல் தட்டிக் கழித்திருக்கிறார்கள். காரணம், ராஜீவ் கொலை என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிற ஒரு விஷயம். இந்த விசாரணையில் உருப்படியாக கண்டு பிடிக்காமல் வெறும் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தால் அது இந்தியாவுக்கே அசிங்கம். தவிர, விசாரணைக்கு தலைமையேற்கும் உயர் அதிகாரிக்கும் பெரிய அசிங்கம். <br />
<br />
நான் மிகவும் நேசித்த ஒரு தலைவரின் கொலைப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வெளிப்படை யான விசாரணையை மேற்கொண்டேன். அப்போதே எனக்கு அரசியல் குறுக்கீடுகள் வரத் துவங்கின. எங்கிருந்து, யார் மூலம் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனக்கு வந்த குறுக்கீடுகள் விசாரணையின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்ததாக இருந்தது. ஆனால், அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்க, எனக்குப் போதிய சுதந்திரம் கொடுத்தது மத்திய அரசு. அந்த சுதந்திரம்தான் ராஜீவ் கொலையாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட எனக்கு உதவியது.ÕÕ <br />
<br />
இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும், இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே? <br />
<br />
இதற்குப் பதிலாக அண்மையில் நான் நார்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு ஏன் தீவிரவாதம்? என்பதுதான். தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம். <br />
<br />
மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ. ஜனநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம். <br />
<br />
முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் குரல் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்ÕÕ <br />
<br />
ராஜீவ் கொலை விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத் துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே? <br />
<br />
அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளின் இணைய தளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துக்களை வெளியிட்டனர். அதில், ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.ÕÕ <br />
<br />
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரனை இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? <br />
<br />
ராஜீவ் விவகாரத் தைப் பொறுத்த வரையில், யாரெல்லாம் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டுவதும், அதற்கான ஆதாரங்களை கொடுப்பதும்தான் விசாரணை அமைப்பின் வேலை. மற்றபடி நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வியை ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும்.<br />
<br />
- எஸ்.சரவணகுமார் <br />
படம்: கே.கார்த்திகேயன்<br />
 <br />
<br />
 &lt;/span&gt;<br />
<br />
Thanks: Vikadan                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3264</link>
			<pubDate>Sun, 18 Sep 2005 21:06:40 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=12">kuruvikal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3264</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;ஊடகவியலாளரான சாந்தி ரமேஷ் வவுனியன் - யாழ் கள சாந்தியக்கா - அவர்களின்&lt;/b&gt; [url=http://img97.imageshack.us/img97/6933/uyirvaasam16ra.jpg]&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;உயிர் வாசம்&lt;/b&gt;&lt;/span&gt;<br />
<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/2482/uyirvaasampic0ja.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
[size=14]&lt;b&gt;உங்கள் உறவு சாந்தி ரமேஷ் வவுனியனின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்புற உங்கள் பங்களிப்பையும் வாழ்த்துக்களையும் நல்குங்கள்...!&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;ஊடகவியலாளரான சாந்தி ரமேஷ் வவுனியன் - யாழ் கள சாந்தியக்கா - அவர்களின்&lt;/b&gt; [url=http://img97.imageshack.us/img97/6933/uyirvaasam16ra.jpg]&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;உயிர் வாசம்&lt;/b&gt;&lt;/span&gt;<br />
<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/2482/uyirvaasampic0ja.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
[size=14]&lt;b&gt;உங்கள் உறவு சாந்தி ரமேஷ் வவுனியனின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்புற உங்கள் பங்களிப்பையும் வாழ்த்துக்களையும் நல்குங்கள்...!&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உதவி தேவை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3391</link>
			<pubDate>Thu, 08 Sep 2005 13:16:45 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=289">Eelavan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3391</guid>
			<description><![CDATA[                    அன்பின் கள உறவுகளுக்கு வணக்கம்<br />
<br />
முன்னொருமுறை வெங்கட் எழுதிய ஹார்வர்ட்-கூகுள் மின்னூலாக்கத் திட்டத்தைப் பற்றிய கட்டுரைய மதன் இங்கிட்டதை மறந்திருக்கமாட்டீர்கள்.<br />
<br />
அந்தக் கட்டுரையில் வெங்கட் சுட்டிக்காட்டிய விடயம்.யாழ் நூலகத்தின் எரிப்பும்பலகோடி பெறுமதியான நூல்களின் இழப்பும்.அதன் பின்னர் தமிழ்நூல் மற்றும் ஆவணக் காப்பகம் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று சில தனிநபர்களால் முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.<br />
<br />
அவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது தனிநபர் சார்ந்த விடயமல்ல.பல்கலைக்கழகங்களோ நிறுவனங்களோ செய்யவேண்டிய விடயங்கள்.<br />
<br />
ஆனாலும் அவற்றுக்காகக் காத்திருக்கும் காலத்தில் எஞ்சிய பல நூல்களும் மெல்ல மெல்ல அழிந்து விடுமோ டென்ற அச்சம் எழுகிறது.<br />
<br />
இவ்வாறான ஒரு சிந்தனையின் அடிப்படையில் திரு.பத்மநாப ஐயர் மதுரைத் திட்டம் என்னும் மின்னூலாக்கத் திட்டத்தில் ஈழத்து நூல்களின் பங்களிப்பையும் சாத்தியமாக்கினார்.பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டமும் கிடப்பில் இருக்கிறது.ஆகவே புதியதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது<br />
<br />
நூல்களை இணையத்தில் ஆவணம்மாக்கவேண்டிய தேவை தமிழகத் தமிழர்களை விட ஈழத்தமிழர்களுக்கு உண்டு.யாழ் பொது நூலகம்,ஹாட்லிக் கல்லூரி நூலகம்,யாழ் பல்கலைக்கழக நூலகம் என்று பலவிதமான இழப்புகளைச் சந்தித்தவர் நாங்கள்<br />
<br />
அவ்வாறான இழப்புகள் தீண்டாதவண்ணம் எமது தமிழுக்கு வளம் சேர்த்த நூல்களை இணையத்தின் சாத்தியப் பாடுகளைப் பயன்படுத்திப் பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.<br />
<br />
அதனைச் செயற்படுத்துவதற்காக நண்பர்கள் சிலர் சேர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.<br />
<br />
உங்களின் உதவி கீழ்வரும் செயற்பாடுகளில் தேவைப்படுகிறது.<br />
<br />
முக்கியமான நூல்களை(அவை கட்டுரை,நாவல் எவ்வாறாகவும் இருக்கலாம்) தட்டச்சுச் செய்தல்.அவற்றின் ஆசிரியர்களை அறிந்திருப்பின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளல்<br />
<br />
அவற்றைச் செவ்வை பார்த்தல்<br />
<br />
அவ்வாறான நூல்கள் கைவசம் இருந்து உங்களால் தட்டச்சுச் செய்ய முடியாதிருப்பின் அவற்றின் ஒளிப்பிரதியையோ(photocopy) அல்லது.மின்படமாகவோ(Scan copy) எமக்கு அனுப்புதல்.<br />
<br />
ஈழத்து எழுத்தாளர்கள்,ஆவணங்களை வைத்திருப்பவர்கள் பலரும் புலத்தில் வதிவதால் நீங்கள் அறிந்தவர்கள்/உறவினர்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறி அவர்களின் நூல்களைப் பெற்றுத்தருதல்.<br />
<br />
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் eelanathan@gmail.com<br />
<br />
அன்புடன்<br />
ஈழவன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அன்பின் கள உறவுகளுக்கு வணக்கம்<br />
<br />
முன்னொருமுறை வெங்கட் எழுதிய ஹார்வர்ட்-கூகுள் மின்னூலாக்கத் திட்டத்தைப் பற்றிய கட்டுரைய மதன் இங்கிட்டதை மறந்திருக்கமாட்டீர்கள்.<br />
<br />
அந்தக் கட்டுரையில் வெங்கட் சுட்டிக்காட்டிய விடயம்.யாழ் நூலகத்தின் எரிப்பும்பலகோடி பெறுமதியான நூல்களின் இழப்பும்.அதன் பின்னர் தமிழ்நூல் மற்றும் ஆவணக் காப்பகம் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று சில தனிநபர்களால் முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.<br />
<br />
அவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது தனிநபர் சார்ந்த விடயமல்ல.பல்கலைக்கழகங்களோ நிறுவனங்களோ செய்யவேண்டிய விடயங்கள்.<br />
<br />
ஆனாலும் அவற்றுக்காகக் காத்திருக்கும் காலத்தில் எஞ்சிய பல நூல்களும் மெல்ல மெல்ல அழிந்து விடுமோ டென்ற அச்சம் எழுகிறது.<br />
<br />
இவ்வாறான ஒரு சிந்தனையின் அடிப்படையில் திரு.பத்மநாப ஐயர் மதுரைத் திட்டம் என்னும் மின்னூலாக்கத் திட்டத்தில் ஈழத்து நூல்களின் பங்களிப்பையும் சாத்தியமாக்கினார்.பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டமும் கிடப்பில் இருக்கிறது.ஆகவே புதியதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது<br />
<br />
நூல்களை இணையத்தில் ஆவணம்மாக்கவேண்டிய தேவை தமிழகத் தமிழர்களை விட ஈழத்தமிழர்களுக்கு உண்டு.யாழ் பொது நூலகம்,ஹாட்லிக் கல்லூரி நூலகம்,யாழ் பல்கலைக்கழக நூலகம் என்று பலவிதமான இழப்புகளைச் சந்தித்தவர் நாங்கள்<br />
<br />
அவ்வாறான இழப்புகள் தீண்டாதவண்ணம் எமது தமிழுக்கு வளம் சேர்த்த நூல்களை இணையத்தின் சாத்தியப் பாடுகளைப் பயன்படுத்திப் பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.<br />
<br />
அதனைச் செயற்படுத்துவதற்காக நண்பர்கள் சிலர் சேர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.<br />
<br />
உங்களின் உதவி கீழ்வரும் செயற்பாடுகளில் தேவைப்படுகிறது.<br />
<br />
முக்கியமான நூல்களை(அவை கட்டுரை,நாவல் எவ்வாறாகவும் இருக்கலாம்) தட்டச்சுச் செய்தல்.அவற்றின் ஆசிரியர்களை அறிந்திருப்பின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளல்<br />
<br />
அவற்றைச் செவ்வை பார்த்தல்<br />
<br />
அவ்வாறான நூல்கள் கைவசம் இருந்து உங்களால் தட்டச்சுச் செய்ய முடியாதிருப்பின் அவற்றின் ஒளிப்பிரதியையோ(photocopy) அல்லது.மின்படமாகவோ(Scan copy) எமக்கு அனுப்புதல்.<br />
<br />
ஈழத்து எழுத்தாளர்கள்,ஆவணங்களை வைத்திருப்பவர்கள் பலரும் புலத்தில் வதிவதால் நீங்கள் அறிந்தவர்கள்/உறவினர்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறி அவர்களின் நூல்களைப் பெற்றுத்தருதல்.<br />
<br />
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் eelanathan@gmail.com<br />
<br />
அன்புடன்<br />
ஈழவன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[முறிந்த பணை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3516</link>
			<pubDate>Sun, 28 Aug 2005 19:40:06 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1523">RaMa</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3516</guid>
			<description><![CDATA[                    முறிந்த பணை என்னும் புத்தகத்தைப் பற்றி யாருக்காவது தகவல் தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    முறிந்த பணை என்னும் புத்தகத்தைப் பற்றி யாருக்காவது தகவல் தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மனோரமா இயர்புக் 2005 தவறுகள்?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3654</link>
			<pubDate>Mon, 15 Aug 2005 18:58:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3654</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img224.imageshack.us/img224/6870/manorama2img8an.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;மனோரமா இயர்புக்&lt;/b&gt;  இந்தியாவில் இருந்து 15 ஆண்டுகளாக வெளி வருகிறது.<br />
<br />
இதில் உள்ள விடயங்கள் அனைத்தும் சரியானதென்ற கருத்து அனைத்து மக்களிடம் இருந்து வருகிறது.<br />
<br />
இருப்பினும் இதில் உள்ள அனைத்து தகவல்களும் சரியானதாக இல்லாததை இதை வாசிக்கக் கிடைத்த போது  தெரிந்தது.<br />
<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">மனோரமா இயர்புக் 2005, பக்கம் 75 ல்  &lt;b&gt;<br />
இலங்கை&lt;/b&gt; பற்றி எழுதப்பட்டிருக்கிறது.</span><br />
<br />
இதில் <br />
&lt;b&gt;&lt;span style='color:red'&gt;ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகிந்த ராசபக்ச பிரதமாராக இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. <br />
&lt;/span&gt;&lt;/b&gt;<br />
<br />
[size=15]இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
&lt;img src='http://img224.imageshack.us/img224/9189/manorama1img2dh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இது போலவே இன்னும் பல தவறுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.<br />
<br />
எனவே இதை ஒரு பொக்கிசமாக கருதுவது ஒரு கேள்விக்குறியே!<br />
<br />
&lt;b&gt;உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்?????&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img224.imageshack.us/img224/6870/manorama2img8an.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;b&gt;மனோரமா இயர்புக்&lt;/b&gt;  இந்தியாவில் இருந்து 15 ஆண்டுகளாக வெளி வருகிறது.<br />
<br />
இதில் உள்ள விடயங்கள் அனைத்தும் சரியானதென்ற கருத்து அனைத்து மக்களிடம் இருந்து வருகிறது.<br />
<br />
இருப்பினும் இதில் உள்ள அனைத்து தகவல்களும் சரியானதாக இல்லாததை இதை வாசிக்கக் கிடைத்த போது  தெரிந்தது.<br />
<br />
<br />
<span style="text-decoration: underline;" class="mycode_u">மனோரமா இயர்புக் 2005, பக்கம் 75 ல்  &lt;b&gt;<br />
இலங்கை&lt;/b&gt; பற்றி எழுதப்பட்டிருக்கிறது.</span><br />
<br />
இதில் <br />
&lt;b&gt;&lt;span style='color:red'&gt;ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகிந்த ராசபக்ச பிரதமாராக இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. <br />
&lt;/span&gt;&lt;/b&gt;<br />
<br />
[size=15]இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
&lt;img src='http://img224.imageshack.us/img224/9189/manorama1img2dh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இது போலவே இன்னும் பல தவறுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.<br />
<br />
எனவே இதை ஒரு பொக்கிசமாக கருதுவது ஒரு கேள்விக்குறியே!<br />
<br />
&lt;b&gt;உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்?????&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>