<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - தமிழும் நயமும்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:08:05 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[எரிமலை சஞ்சிகையின் 25 வது ஆண்டு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=644</link>
			<pubDate>Fri, 03 Mar 2006 11:57:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=147">shanmuhi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=644</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://www.suratha.com/erimalai.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://www.suratha.com/erimalai.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பழமொழிக்கான விளக்கம்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=800</link>
			<pubDate>Sat, 18 Feb 2006 18:19:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1689">நர்மதா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=800</guid>
			<description><![CDATA[                    அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?<br />
கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது<br />
கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?<br />
<br />
<br />
பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?<br />
கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது<br />
கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?<br />
<br />
<br />
பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழ் மயங்கொலிச் சொற்பொருள் அகராதி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1058</link>
			<pubDate>Fri, 03 Feb 2006 20:44:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=314">இராவணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1058</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;தமிழ் மயங்கொலிச் சொற்பொருள் அகராதி&lt;/b&gt;<br />
&lt;img src='http://img147.imageshack.us/img147/6840/a4gl1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img416.imageshack.us/img416/1356/11sz2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;img src='http://img442.imageshack.us/img442/9163/25kd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;img src='http://img305.imageshack.us/img305/2821/37qc.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
தொடரும்...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;தமிழ் மயங்கொலிச் சொற்பொருள் அகராதி&lt;/b&gt;<br />
&lt;img src='http://img147.imageshack.us/img147/6840/a4gl1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img416.imageshack.us/img416/1356/11sz2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;img src='http://img442.imageshack.us/img442/9163/25kd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;img src='http://img305.imageshack.us/img305/2821/37qc.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
தொடரும்...                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1265</link>
			<pubDate>Fri, 20 Jan 2006 19:47:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1265</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:green'&gt;&lt;b&gt;ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! &lt;/b&gt;<br />
       <br />
  கலாநிதி செ.யோகராசா<br />
   <br />
  ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. <br />
<br />
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (ஐஐ) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூகஇ யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (ஐஐஐ) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.<br />
<br />
நிலைமை மேற்கூறியவாறாக அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு: ''ஆனந்தன்'' ''சுயா'') இனங்காட்டுகின்றன. இவர்களது படைப்புக்கள் சமகால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக இத்தகையவருள் ஒருவரான ''ஆனந்தன்'' 1939இலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப்பிரச்சினையின் கொடூரத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண் வாசனையோடு முதன் முதல் எழுதியவர் ~ஆனந்தன்| எனலாம். ஆக இங்கு நாம் நினைவுகூற வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன் சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவி வந்துள்ளது என்பதே! <br />
<br />
இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சி ஒன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ.நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. (எ-டு: திரு.இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும் (கே.கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்றுவரையான ஆய்வின்படி) கூறமுடியாதுள்ளது. <br />
<br />
இனி நாற்பதுகளுக்கு வருவோம். மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்கு உட்பட வேண்டியவராகின்றனர். <br />
<br />
இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் ~ஆனந்தன்| முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ.செ.முருகானந்தன்இ வரதர் அ.ந.கந்தசாமி சொக்கன் தாழையடி சபாரெத்தினம் கனகசெந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு:கு.பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைக@டாக தமிழ்ச் சமூகம் நவீனநாகரீகததிற்கு முகம் கொடுப்பதும் (நவீன நாகரீகத்தின் குறியீடாக மோட்டார் வண்டி வருகைஇ தேர்தல் முறை அரச உத்தியோகம்இ நகர உருவாக்கம்இ பணத்தின் ஆதிக்கம்) சமகால சமூகப் பிரச்சினைகளும் (சாதிஇ சீதனம்இ கோயில்வரிஇ சிறுகதைஇ பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது. <br />
<br />
இதுவரைக் கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பாண ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தம் எதுவுமில்லை. உண்மைநிலை வேறு. ஈழத்தில் நவீனத் தன்மை (ஆழனயசன்வைல) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை. வௌ;வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீன தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது. <br />
<br />
அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம்பெற்ற அத்தகைய ஆய்வுகளிலேயே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின் அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தினரல்லர். நிற்கஇ நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்;சி கால்கொள்கிறது. முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான் சா.இ.கமலநாதன்)இ சிவா (வா.சிவசுப்பிரமணியம் ஆசிரியர்) புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளையே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம்இ பித்தன் ஆகியோரும் சற்றுப்பின் அப்துஸ்ஸமதுஇ செ.இராசதுரைஇ எஸ்.பொ.நவம்இ அன்புமணிஇ தங்கன்இ ஆ.பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர்.<br />
<br />
மேற்குறித்த மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளருள் பித்தன்இ எஸ்.பொ.நீங்கலாக ஏனையோரது படைப்புக்களை நுனுகி நோக்கும் போது அவற்றிலே இரு வேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று ''கல்கிஇ பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி இவ்விருவகைப் பாணி. சார்ந்த படைப்புக்களிலும் தமிழக இந்தியச் சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னனியிலே எழுதினாலும்கூட அவை (ஈழத்துப் பத்திரிகை காரரினாலே'') மாற்றத்துக்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ்ஸமதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன. <br />
<br />
''அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள்இ கல்முனைஇ திருகோணமலை என்றும் நூர்ஜகானின் தந்தை போடியார் இப்றாஹ{ம் என்றும் மற்றும் காரியாலயம் லிகிதர் மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டுஇ விந்தியமலை என்றும் ஜமீன்தார்; இப்றாஹ{ம் என்றும் ஆபிஸ் குமாஸ்தாஇ ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன'' இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.<br />
<br />
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948 அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994ல் வெளிவந்தமை காரணமாக ஆய்வாளரது கவனத்திற்கு உட்படுத்தப்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வுஇ பண்பாடு 15இ1997 இதழில் இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது) பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டிவை. <br />
<br />
(அ.)மட்டக்களப்பு பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மைஇவர் கதைக@டாக சிறப்பாக வெளிப்படுகின்றது. (ஆ).முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் முதலாக இவர் கதைகழூடாக தத்துரூபமாகவும்இ துணிகரமான முறையிலும் (எ-டு: பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன) (இ) (முஸ்லிம்) பெண்களது மென்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக்களப்பிலே பித்தனது எழுத்துக்களின் ஊடாகவே புலப்படுகின்றது எனலாம். <br />
<br />
எஸ்.பொ.ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண் மணம் கமழ தமது சிறுகதைகள் ஊடாகப் பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர். <br />
<br />
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே சிறுகதை உலகினுள் பிரவேசிக்கின்றது. வ.அ.இராசரெத்தினத்தினூடாக முதன் முதலாக மூதூர்க் கிராம விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது. தவிர பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படும் போதுதான் இக்கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என்று கருதுகின்றேன். <br />
<br />
(அ) ~ஈழகேசரி|யில் லலிதாஇ சாவித்திரிஇ ராஜேஸ்வரிஇ வசந்தாஇ லேகினிஇ பிறேமாஇ கமலம்இ கோணேசப்பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவர்? அவர்கள் எழுதியவை யாவை?<br />
<br />
(ஆ).திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ.முருகானந்தம் நடத்திய ~எரிமலை| சிறுசஞ்சிகையில் சிறுகதை எழுதியோர் யாவர்?<br />
<br />
(இ).நாற்பதுகளின் இறுதியிலே மண்டூரிலிருந்து வெளியான ~பாரதி| சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்கு பற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ்.எம்.ராஜுஇ பாஞ்சாலிஇ கிரிஜா என்போர் யாவர்?<br />
<br />
ஈ. நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன. <br />
<br />
அயல்வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும்இ பொருந்தா மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதியதாகக் கூறப்படுகின்றது. <br />
<br />
இவை பற்றிய விபரம்?<br />
<br />
எவ்வாறாயினும்இ ஐம்பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை மேற் கூறியவற்றிலிருந்து புலப்படுத்துகின்றன. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது?<br />
<br />
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்இ<br />
<br />
(ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும்இ<br />
<br />
(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்புஇ திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும்இ<br />
<br />
(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.<br />
<br />
ஆயினும் ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு.தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நினைவு கூரத்தக்கது. &lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:green'&gt;&lt;b&gt;ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! &lt;/b&gt;<br />
       <br />
  கலாநிதி செ.யோகராசா<br />
   <br />
  ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. <br />
<br />
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (ஐஐ) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூகஇ யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (ஐஐஐ) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.<br />
<br />
நிலைமை மேற்கூறியவாறாக அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு: ''ஆனந்தன்'' ''சுயா'') இனங்காட்டுகின்றன. இவர்களது படைப்புக்கள் சமகால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக இத்தகையவருள் ஒருவரான ''ஆனந்தன்'' 1939இலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப்பிரச்சினையின் கொடூரத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண் வாசனையோடு முதன் முதல் எழுதியவர் ~ஆனந்தன்| எனலாம். ஆக இங்கு நாம் நினைவுகூற வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன் சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவி வந்துள்ளது என்பதே! <br />
<br />
இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சி ஒன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ.நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. (எ-டு: திரு.இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும் (கே.கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்றுவரையான ஆய்வின்படி) கூறமுடியாதுள்ளது. <br />
<br />
இனி நாற்பதுகளுக்கு வருவோம். மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்கு உட்பட வேண்டியவராகின்றனர். <br />
<br />
இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் ~ஆனந்தன்| முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ.செ.முருகானந்தன்இ வரதர் அ.ந.கந்தசாமி சொக்கன் தாழையடி சபாரெத்தினம் கனகசெந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு:கு.பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைக@டாக தமிழ்ச் சமூகம் நவீனநாகரீகததிற்கு முகம் கொடுப்பதும் (நவீன நாகரீகத்தின் குறியீடாக மோட்டார் வண்டி வருகைஇ தேர்தல் முறை அரச உத்தியோகம்இ நகர உருவாக்கம்இ பணத்தின் ஆதிக்கம்) சமகால சமூகப் பிரச்சினைகளும் (சாதிஇ சீதனம்இ கோயில்வரிஇ சிறுகதைஇ பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது. <br />
<br />
இதுவரைக் கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பாண ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தம் எதுவுமில்லை. உண்மைநிலை வேறு. ஈழத்தில் நவீனத் தன்மை (ஆழனயசன்வைல) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை. வௌ;வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீன தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது. <br />
<br />
அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம்பெற்ற அத்தகைய ஆய்வுகளிலேயே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின் அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தினரல்லர். நிற்கஇ நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்;சி கால்கொள்கிறது. முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான் சா.இ.கமலநாதன்)இ சிவா (வா.சிவசுப்பிரமணியம் ஆசிரியர்) புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளையே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம்இ பித்தன் ஆகியோரும் சற்றுப்பின் அப்துஸ்ஸமதுஇ செ.இராசதுரைஇ எஸ்.பொ.நவம்இ அன்புமணிஇ தங்கன்இ ஆ.பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர்.<br />
<br />
மேற்குறித்த மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளருள் பித்தன்இ எஸ்.பொ.நீங்கலாக ஏனையோரது படைப்புக்களை நுனுகி நோக்கும் போது அவற்றிலே இரு வேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று ''கல்கிஇ பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி இவ்விருவகைப் பாணி. சார்ந்த படைப்புக்களிலும் தமிழக இந்தியச் சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னனியிலே எழுதினாலும்கூட அவை (ஈழத்துப் பத்திரிகை காரரினாலே'') மாற்றத்துக்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ்ஸமதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன. <br />
<br />
''அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள்இ கல்முனைஇ திருகோணமலை என்றும் நூர்ஜகானின் தந்தை போடியார் இப்றாஹ{ம் என்றும் மற்றும் காரியாலயம் லிகிதர் மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டுஇ விந்தியமலை என்றும் ஜமீன்தார்; இப்றாஹ{ம் என்றும் ஆபிஸ் குமாஸ்தாஇ ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன'' இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.<br />
<br />
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948 அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994ல் வெளிவந்தமை காரணமாக ஆய்வாளரது கவனத்திற்கு உட்படுத்தப்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வுஇ பண்பாடு 15இ1997 இதழில் இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது) பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டிவை. <br />
<br />
(அ.)மட்டக்களப்பு பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மைஇவர் கதைக@டாக சிறப்பாக வெளிப்படுகின்றது. (ஆ).முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் முதலாக இவர் கதைகழூடாக தத்துரூபமாகவும்இ துணிகரமான முறையிலும் (எ-டு: பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன) (இ) (முஸ்லிம்) பெண்களது மென்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக்களப்பிலே பித்தனது எழுத்துக்களின் ஊடாகவே புலப்படுகின்றது எனலாம். <br />
<br />
எஸ்.பொ.ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண் மணம் கமழ தமது சிறுகதைகள் ஊடாகப் பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர். <br />
<br />
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே சிறுகதை உலகினுள் பிரவேசிக்கின்றது. வ.அ.இராசரெத்தினத்தினூடாக முதன் முதலாக மூதூர்க் கிராம விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது. தவிர பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படும் போதுதான் இக்கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என்று கருதுகின்றேன். <br />
<br />
(அ) ~ஈழகேசரி|யில் லலிதாஇ சாவித்திரிஇ ராஜேஸ்வரிஇ வசந்தாஇ லேகினிஇ பிறேமாஇ கமலம்இ கோணேசப்பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவர்? அவர்கள் எழுதியவை யாவை?<br />
<br />
(ஆ).திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ.முருகானந்தம் நடத்திய ~எரிமலை| சிறுசஞ்சிகையில் சிறுகதை எழுதியோர் யாவர்?<br />
<br />
(இ).நாற்பதுகளின் இறுதியிலே மண்டூரிலிருந்து வெளியான ~பாரதி| சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்கு பற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ்.எம்.ராஜுஇ பாஞ்சாலிஇ கிரிஜா என்போர் யாவர்?<br />
<br />
ஈ. நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன. <br />
<br />
அயல்வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும்இ பொருந்தா மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதியதாகக் கூறப்படுகின்றது. <br />
<br />
இவை பற்றிய விபரம்?<br />
<br />
எவ்வாறாயினும்இ ஐம்பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை மேற் கூறியவற்றிலிருந்து புலப்படுத்துகின்றன. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது?<br />
<br />
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்இ<br />
<br />
(ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும்இ<br />
<br />
(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்புஇ திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும்இ<br />
<br />
(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.<br />
<br />
ஆயினும் ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு.தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நினைவு கூரத்தக்கது. &lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழத்து திருக்கோயில்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1292</link>
			<pubDate>Thu, 19 Jan 2006 14:39:38 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1365">தூயவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1292</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;லேனா தமிழ்வாணன்&lt;/b&gt;<br />
<br />
தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.<br />
<br />
லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;லேனா தமிழ்வாணன்&lt;/b&gt;<br />
<br />
தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.<br />
<br />
லேனா தமிழ்வாணனின் தளம் ஒன்றி;ல் ஈழத்துக் கோவில்களைப் பற்றிய ஆக்கங்களைக் கண்டேன். அவை நாம் அறியாத பலவிடயங்கள்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ÒÈ¿¡ÛÚ]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1506</link>
			<pubDate>Mon, 09 Jan 2006 17:04:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1506</guid>
			<description><![CDATA[                    279. &lt;b&gt;¦ºø¦¸É Å¢Î§Á! <br />
À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ <br />
¾¢¨½: Å¡¨¸ Ð¨È: ã¾¢ý Óø¨Ä <br />
<br />
¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐ­Åû Ð½¢§Å;<br />
ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á;<br />
§Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¾ý¨É,<br />
Â¡¨É ±È¢óÐ, ¸ÇòÐ´Æ¢ó ¾ý§É;<br />
¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¦¸¡Ø¿ý,<br />
¦ÀÕ¿¢¨Ã Å¢Äì¸¢, ¬ñÎôÀð ¼É§É;<br />
­ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢,<br />
§Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐÅ¢Ã¢òÐ ¯Ë­ô,<br />
À¡ÚÁÂ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢,<br />
´ÕÁ¸ý «øÄÐ ­ø§Ä¡û,<br />
‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ Å¢Î§Á!&lt;/b&gt;<br />
<br />
<br />
Å¢Çì¸õ : þÅû Ð½¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀÆ¢Â¡É¡÷,§¿üÚ  ¿¼ó¾ §À¡Ã¢ø Â¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨ÈÂ §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀîº¢Çõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    279. &lt;b&gt;¦ºø¦¸É Å¢Î§Á! <br />
À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ <br />
¾¢¨½: Å¡¨¸ Ð¨È: ã¾¢ý Óø¨Ä <br />
<br />
¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐ­Åû Ð½¢§Å;<br />
ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á;<br />
§Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¾ý¨É,<br />
Â¡¨É ±È¢óÐ, ¸ÇòÐ´Æ¢ó ¾ý§É;<br />
¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ ­Åû¦¸¡Ø¿ý,<br />
¦ÀÕ¿¢¨Ã Å¢Äì¸¢, ¬ñÎôÀð ¼É§É;<br />
­ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢,<br />
§Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐÅ¢Ã¢òÐ ¯Ë­ô,<br />
À¡ÚÁÂ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢,<br />
´ÕÁ¸ý «øÄÐ ­ø§Ä¡û,<br />
‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ Å¢Î§Á!&lt;/b&gt;<br />
<br />
<br />
Å¢Çì¸õ : þÅû Ð½¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀÆ¢Â¡É¡÷,§¿üÚ  ¿¼ó¾ §À¡Ã¢ø Â¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨ÈÂ §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀîº¢Çõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழகராதி..!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2210</link>
			<pubDate>Sat, 03 Dec 2005 00:14:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=309">tamilini</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2210</guid>
			<description><![CDATA[                    இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன.  நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். <br />
<br />
<a href="http://www24.brinkster.com/umarthambi/Tamil/etamil_search.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன.  நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். <br />
<br />
<a href="http://www24.brinkster.com/umarthambi/Tamil/etamil_search.asp" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இலக்கியத்தியல் அறிவியல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2573</link>
			<pubDate>Mon, 07 Nov 2005 01:42:34 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2573</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இலக்கியத்தியல் அறிவியல்   <br />
  சிங்கை கிருஷ்ணன்&lt;/b&gt;<br />
    <br />
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக்<br />
காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.<br />
<br />
இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்ப காலக்கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.<br />
<br />
''இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது."! இன்றைய<br />
நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.<br />
<br />
'' எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்<br />
மெய்ப்பொருள் காண்ப அறிவு '' [குறள்.355]<br />
<br />
'' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />
மெய்ப்பொருள் காண்பது அறிவு '' [குறள்.423]<br />
<br />
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல்<br />
என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.<br />
<br />
இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான் வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.<br />
''அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்<br />
குறுகத் தறித்த குறள் ''<br />
என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.<br />
<br />
கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார். இரணியன்,<br />
'' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன்<br />
ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.<br />
<br />
'' சாணினு முளனோர் தன்மை<br />
அணுவினைச் சத கூறிட்ட<br />
கோணினு முளன்..... " [கம்பராமாயணம்.253]<br />
என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.<br />
<br />
தமிழ் இலக்கியத்தில் '' ஒப்புநோக்குக் கொள்கை'' உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்கு தொல்காப்பியரைச் சான்றாக காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள்<br />
என்பதனை,<br />
'' முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்<br />
இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே ''<br />
என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார்.<br />
<br />
நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை<br />
அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் ' பாஸ்கல் ' என்னும் அறிஞர். இப் பாஸ்கல்<br />
விதிக்குச் சான்றாக,<br />
''ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்<br />
நாழி முகவாது ''<br />
என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தை பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற<br />
மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.<br />
<br />
உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன.<br />
இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர<br />
கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர்பல் துறை அறிவுடையவராய் <br />
விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித்தம் பாடல்களில் தம்<br />
முத்திரைகளைப் பதித்துள்ளனர்.<br />
<br />
சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச்<br />
சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர்<br />
<br />
இளங்கோ அடிகள். ஆதலின்,<br />
''ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும் <br />
காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு<br />
மேரு வலந்தரி தலான்...''<br />
என்று ஞாயிற்றைப் போற்றினார்.<br />
<br />
உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதை தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப் பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் <br />
செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல் <br />
தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,<br />
<br />
''ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே<br />
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே<br />
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே <br />
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே<br />
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே<br />
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே<br />
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ...'<br />
..தொல் பொருள் மரபியில்:29.<br />
<br />
உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவரதாங்கள்.<br />
<br />
அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியை பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.<br />
<br />
டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை.<br />
ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். இந்த மூன்று அவதாரங்களை கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது. மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை, எந்த காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து<br />
வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.<br />
<br />
மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம் என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி.<br />
<br />
மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச் சரியாக விடுபட்ட [ மிஸ்ஸிங் லிங்க் ] இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.<br />
<br />
''மிஸ்ஸிங் லிங்க் ''என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும்<br />
ஒரு சொல். '' விட்டுப்போன கண்ணி '' குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று<br />
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று<br />
இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை<br />
பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப்<br />
பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.<br />
<br />
டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு<br />
முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டு. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான<br />
ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக 1.' மச்ச அவதாரம்' என்று மிகச் சரியாக காட்டியுள்ளது. <br />
2. 'கூர்ம அவதாரம்' [மை வடிவம்].<br />
3. 'வராக அவதாரம்' 4.காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு 'சிம்மாவதாரம்'.<br />
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான 'வாமன அவதாரம். <br />
6வது பரசுராம அவதாரம், 7வது அவதாரம்<br />
இராம அவதாரம் 8வது பலராம அவதாரம்.<br />
எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில்<br />
ஈட்டி, கோடாரியை பயன்படுத்திய காலகட்ட அவதாரங்கள்!<br />
<br />
வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள்<br />
மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் [ Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக்<br />
கவிஞர்,<br />
'' செஞ்ஞாயிற்றுச் செலவும்<br />
அஞ்ஞாயிற்று பரிப்பும்<br />
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்...''<br />
புறநானூறு : 30.<br />
என்று பாடியுள்ளார்.<br />
<br />
இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.<br />
'' வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்<br />
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்...<br />
என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.<br />
<br />
தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் பற்றிய செய்தினை தருகின்றது. அவ்வடிகள்:<br />
'' வலவன் ஏவா வான வூர்தி<br />
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் ...''<br />
புறம்.27<br />
''கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு<br />
வானவூர்தி ஏறினள் மாதோ<br />
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்..'<br />
சிலம்பு.<br />
என்ற அடிகளில் சிலப்பதிகாரம் ' வானவூர்தி' என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமை காணலாம். சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய பறவை உருசத்தில் அமைந்த ஊர்தியில் சென்றதாகக் காட்டுகிறார். அவ்வடிகள்:<br />
''என்பு நெக்குருகி உள்ளமொழுகுபு சோர யாத்த<br />
அன்பு மிக்க வலிதாற்றா வாருயிர் கிழத்தி தன்னை<br />
இன்ப மிக்குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்<br />
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள்''<br />
- சீவக சிந்தாமணி-<br />
<br />
இவ்வாறு தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை வித்திட்டு சென்றனர்.<br />
<br />
<br />
கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம்- புலமைக்குத் தலைமை தந்த பெருமை - அறிவியலையை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைப்பெற்ற பட்டிமன்றம்.<br />
<br />
சிறப்புடன்... அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம். ஒரு புலவனுக்கு உதவ இறையானர் இறங்கி வந்தது. உண்மையான திறமையுள்ள புலவனுக்கு இறைவனை எதிர்புறவாதம் செய்யவும் துணிவு இருந்தது.<br />
இலக்கிய, ஞன, ஆன்மீக, கலாச்சார சிறப்புகள்.<br />
எல்லோரும் அறிந்த கதைதான். மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம். பெணகளின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா ? ஆலவாய் சொக்கர் தருமிக்கு தந்துதவிய பாட்டு.<br />
<br />
<br />
"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி<br />
காமம் செப்பாது கண்டது மொழிமோ<br />
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்<br />
செறி எயிற்று அரிவை கூந்தலின்<br />
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !<br />
<br />
மலர்கள் தோறும் சென்று பூந் தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை  நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல். <br />
<br />
'' நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம், தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டோ''<br />
என்று வினவும் பாடல்.<br />
<br />
இப்பாடலின் உள்ளூறை - கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு!<br />
<br />
சரி. நவீன விஞ்ஞானத்தைச் சற்று பார்ப்போம்.<br />
<br />
''·பீரோமோன்ஸ்'' [ Pheromones ] என்று சில வேதிப்பொருட்கள் <br />
( ரசாயனப் பொருட்கள்) உள்ளன. இவை குறிப்பிட்ட சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. <br />
இத்தைய ·பீரோமோன்ஸ், அந்த வகையில் உயிரினங்களுக்குள், ஆண்-பெண் அடையாளம் காட்டவும், <br />
அவற்றின் பாலின மற்றும் நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன.<br />
<br />
சரி, ·பீரோமோன்ஸ் எங்கெங்கு உள்ளன? ·பீரோமோன் சுரப்பிகள் மயிர்கால்களோடு <br />
அதிகம் தொடர்புடையவை.<br />
<br />
இன்னமும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் முழுமையாக முற்றுப் பெறாத நிலையில் நமக்கு  கிடைத்திருக்ககூடிய செய்தி இது. மேலும் ஆராய்ச்சிகள் தொடரத் தொடர இன்னமும் தெளிவான செய்திகள் கிடைக்கலாம்.<br />
<br />
எப்படியாயினும், இயற்கையில் சுரக்கப்படும் ·பீரோமோன்ஸ் தரும் மணத்தை<br />
இயற்கை மணம் உண்டு இறையனார் பாடல் சுட்டுகிறது.<br />
<br />
அப்படியானால், செண்பகப் பாண்டியனுக்கு வந்தது ஒரு விஞ்ஞான சந்தேகம். இறையனார்  தருமி மூலம் கொடுத்த, ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கும் ஆலவாய் சொக்கருக்கும் ஏற்பட்டது ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கு முதலில் உடன்பாடு இல்லை. <br />
<br />
ஆனால், யார் இதற்கான நிச்சியமான தகவலைத் தரமுடியும்?<br />
<br />
நிச்சியமாக இயற்கையின் உண்மையை - இயற்கைத் தலைவனான இறைவனே விளக்குவதாக நிகழ்ச்சி அமைந்தால், சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது.<br />
அறிவியல் தனத்தோடு , அறிவியல் பார்வையோடு நம் பார்வை அமையலாம். அமையவேண்டும்.<br />
<br />
இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயுஒரு பங்கும் உண்டு [H 2 0 ] என்கிறோம். இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.<br />
<br />
'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும் <br />
இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.<br />
<br />
பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்கு சென்று மண்ணெடுத்து வந்தார்கள். அந்த மண் கறுப்பாக இருந்தது.<br />
நம் பழைய வேதத்தில் அதைப்பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அங்கீரஸ் மஹரிஷி ஒரு ஹோமம் நடத்தினார். அதற்கு சந்திரலோகத்திலிருந்து மண்ணெடுத்து <br />
வந்து பூமியிலுள்ள மண்ணோடு பிசைந்து குண்டம் தயாரிக்க வேண்டியிருந்தது.<br />
<br />
அது சரித்திரம். அதைக் குறிப்பிடும்போது '' சந்த்ரமஸி கிருஷ்ணம '' என்கிறது வேதம்.அதாவது, '' சந்திர மண்டலத்து மண் கறுப்பானது '' என்று விளக்கம்.<br />
<br />
இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சரித்திர முக்கியதுவம்வாய்ந்த நிகழ்ச்சி குருசேத்திரத்தில் 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போர்.<br />
அஸ்தினாபுரத்தில் கண் பார்வையில்லா திருதராஷ்டிரன் தன் சயன மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்க, பார்வையில்லாத அவனுக்கு தேரோட்டி சஞ்சயன் சினிமாஸ்கோப் அகலத்தில் சுவரில் தெரிந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து வருணனை [கமெண்டரி] செய்து கொடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. முதல் ஒளிபரப்பு அதுவும் நேரடி ஒளிபரப்பு மகாபாரதப் போர். முதல் வருணனையாளர் சஞ்சயன்.<br />
<br />
இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எல்லா விஞ்ஞான அறிவியல் சங்கதிகளும் மகா பாரத காலத்திலேயே இருந்திருக்கின்றன. அதே போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் தன் தொலை நுண்ணுணர்வு மூலம் [ இப்போது டெலிபதி என்று சொல்கிறோம்] வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு<br />
ஞான மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.<br />
<br />
சமீப ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைகழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும், அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் குருச்சேத்திர<br />
அகழ்ந்து தோண்டி ய்வு செய்துள்ளார்கள். மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி எடுத்த மண், இரும்பு துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை எடுத்து பரிசோதனை<br />
செய்து பார்த்ததில் இப்போது இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில் என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம்.<br />
நவீன அறிவியல் கருவிகளை கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கதிர் வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்பித்துள்ளார்கள். [ தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிலும் இதனை நான் பார்த்திருக்கிறேன்.]<br />
<br />
நமது முன்னோர்கள் நமக்கு முன்னால் பிறந்தவர்கள் மட்டும அல்ல. நம் காலத்தில் இருக்கும் எல்லா விஞ்ஞான விஷயங்களுக்கும் அவர்கள் முன்னோடிகளும் கூட  <br />
<br />
நன்றி எழில்நிலா                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இலக்கியத்தியல் அறிவியல்   <br />
  சிங்கை கிருஷ்ணன்&lt;/b&gt;<br />
    <br />
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக்<br />
காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.<br />
<br />
இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்ப காலக்கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.<br />
<br />
''இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது."! இன்றைய<br />
நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.<br />
<br />
'' எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்<br />
மெய்ப்பொருள் காண்ப அறிவு '' [குறள்.355]<br />
<br />
'' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />
மெய்ப்பொருள் காண்பது அறிவு '' [குறள்.423]<br />
<br />
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல்<br />
என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.<br />
<br />
இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான் வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.<br />
''அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்<br />
குறுகத் தறித்த குறள் ''<br />
என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.<br />
<br />
கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார். இரணியன்,<br />
'' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன்<br />
ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.<br />
<br />
'' சாணினு முளனோர் தன்மை<br />
அணுவினைச் சத கூறிட்ட<br />
கோணினு முளன்..... " [கம்பராமாயணம்.253]<br />
என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.<br />
<br />
தமிழ் இலக்கியத்தில் '' ஒப்புநோக்குக் கொள்கை'' உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்கு தொல்காப்பியரைச் சான்றாக காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள்<br />
என்பதனை,<br />
'' முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்<br />
இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே ''<br />
என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார்.<br />
<br />
நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை<br />
அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் ' பாஸ்கல் ' என்னும் அறிஞர். இப் பாஸ்கல்<br />
விதிக்குச் சான்றாக,<br />
''ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்<br />
நாழி முகவாது ''<br />
என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தை பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற<br />
மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.<br />
<br />
உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன.<br />
இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர<br />
கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர்பல் துறை அறிவுடையவராய் <br />
விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித்தம் பாடல்களில் தம்<br />
முத்திரைகளைப் பதித்துள்ளனர்.<br />
<br />
சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச்<br />
சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர்<br />
<br />
இளங்கோ அடிகள். ஆதலின்,<br />
''ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும் <br />
காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு<br />
மேரு வலந்தரி தலான்...''<br />
என்று ஞாயிற்றைப் போற்றினார்.<br />
<br />
உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதை தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப் பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் <br />
செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல் <br />
தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,<br />
<br />
''ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே<br />
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே<br />
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே <br />
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே<br />
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே<br />
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே<br />
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ...'<br />
..தொல் பொருள் மரபியில்:29.<br />
<br />
உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவரதாங்கள்.<br />
<br />
அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியை பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.<br />
<br />
டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை.<br />
ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். இந்த மூன்று அவதாரங்களை கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது. மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை, எந்த காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து<br />
வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.<br />
<br />
மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம் என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி.<br />
<br />
மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச் சரியாக விடுபட்ட [ மிஸ்ஸிங் லிங்க் ] இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.<br />
<br />
''மிஸ்ஸிங் லிங்க் ''என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும்<br />
ஒரு சொல். '' விட்டுப்போன கண்ணி '' குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று<br />
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று<br />
இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை<br />
பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப்<br />
பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.<br />
<br />
டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு<br />
முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டு. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான<br />
ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக 1.' மச்ச அவதாரம்' என்று மிகச் சரியாக காட்டியுள்ளது. <br />
2. 'கூர்ம அவதாரம்' [மை வடிவம்].<br />
3. 'வராக அவதாரம்' 4.காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு 'சிம்மாவதாரம்'.<br />
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான 'வாமன அவதாரம். <br />
6வது பரசுராம அவதாரம், 7வது அவதாரம்<br />
இராம அவதாரம் 8வது பலராம அவதாரம்.<br />
எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில்<br />
ஈட்டி, கோடாரியை பயன்படுத்திய காலகட்ட அவதாரங்கள்!<br />
<br />
வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள்<br />
மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் [ Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக்<br />
கவிஞர்,<br />
'' செஞ்ஞாயிற்றுச் செலவும்<br />
அஞ்ஞாயிற்று பரிப்பும்<br />
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்...''<br />
புறநானூறு : 30.<br />
என்று பாடியுள்ளார்.<br />
<br />
இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.<br />
'' வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்<br />
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்...<br />
என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.<br />
<br />
தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் பற்றிய செய்தினை தருகின்றது. அவ்வடிகள்:<br />
'' வலவன் ஏவா வான வூர்தி<br />
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் ...''<br />
புறம்.27<br />
''கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு<br />
வானவூர்தி ஏறினள் மாதோ<br />
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்..'<br />
சிலம்பு.<br />
என்ற அடிகளில் சிலப்பதிகாரம் ' வானவூர்தி' என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமை காணலாம். சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய பறவை உருசத்தில் அமைந்த ஊர்தியில் சென்றதாகக் காட்டுகிறார். அவ்வடிகள்:<br />
''என்பு நெக்குருகி உள்ளமொழுகுபு சோர யாத்த<br />
அன்பு மிக்க வலிதாற்றா வாருயிர் கிழத்தி தன்னை<br />
இன்ப மிக்குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்<br />
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள்''<br />
- சீவக சிந்தாமணி-<br />
<br />
இவ்வாறு தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை வித்திட்டு சென்றனர்.<br />
<br />
<br />
கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம்- புலமைக்குத் தலைமை தந்த பெருமை - அறிவியலையை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைப்பெற்ற பட்டிமன்றம்.<br />
<br />
சிறப்புடன்... அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம். ஒரு புலவனுக்கு உதவ இறையானர் இறங்கி வந்தது. உண்மையான திறமையுள்ள புலவனுக்கு இறைவனை எதிர்புறவாதம் செய்யவும் துணிவு இருந்தது.<br />
இலக்கிய, ஞன, ஆன்மீக, கலாச்சார சிறப்புகள்.<br />
எல்லோரும் அறிந்த கதைதான். மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம். பெணகளின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா ? ஆலவாய் சொக்கர் தருமிக்கு தந்துதவிய பாட்டு.<br />
<br />
<br />
"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி<br />
காமம் செப்பாது கண்டது மொழிமோ<br />
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்<br />
செறி எயிற்று அரிவை கூந்தலின்<br />
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !<br />
<br />
மலர்கள் தோறும் சென்று பூந் தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை  நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல். <br />
<br />
'' நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம், தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டோ''<br />
என்று வினவும் பாடல்.<br />
<br />
இப்பாடலின் உள்ளூறை - கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு!<br />
<br />
சரி. நவீன விஞ்ஞானத்தைச் சற்று பார்ப்போம்.<br />
<br />
''·பீரோமோன்ஸ்'' [ Pheromones ] என்று சில வேதிப்பொருட்கள் <br />
( ரசாயனப் பொருட்கள்) உள்ளன. இவை குறிப்பிட்ட சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. <br />
இத்தைய ·பீரோமோன்ஸ், அந்த வகையில் உயிரினங்களுக்குள், ஆண்-பெண் அடையாளம் காட்டவும், <br />
அவற்றின் பாலின மற்றும் நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன.<br />
<br />
சரி, ·பீரோமோன்ஸ் எங்கெங்கு உள்ளன? ·பீரோமோன் சுரப்பிகள் மயிர்கால்களோடு <br />
அதிகம் தொடர்புடையவை.<br />
<br />
இன்னமும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் முழுமையாக முற்றுப் பெறாத நிலையில் நமக்கு  கிடைத்திருக்ககூடிய செய்தி இது. மேலும் ஆராய்ச்சிகள் தொடரத் தொடர இன்னமும் தெளிவான செய்திகள் கிடைக்கலாம்.<br />
<br />
எப்படியாயினும், இயற்கையில் சுரக்கப்படும் ·பீரோமோன்ஸ் தரும் மணத்தை<br />
இயற்கை மணம் உண்டு இறையனார் பாடல் சுட்டுகிறது.<br />
<br />
அப்படியானால், செண்பகப் பாண்டியனுக்கு வந்தது ஒரு விஞ்ஞான சந்தேகம். இறையனார்  தருமி மூலம் கொடுத்த, ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கும் ஆலவாய் சொக்கருக்கும் ஏற்பட்டது ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கு முதலில் உடன்பாடு இல்லை. <br />
<br />
ஆனால், யார் இதற்கான நிச்சியமான தகவலைத் தரமுடியும்?<br />
<br />
நிச்சியமாக இயற்கையின் உண்மையை - இயற்கைத் தலைவனான இறைவனே விளக்குவதாக நிகழ்ச்சி அமைந்தால், சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது.<br />
அறிவியல் தனத்தோடு , அறிவியல் பார்வையோடு நம் பார்வை அமையலாம். அமையவேண்டும்.<br />
<br />
இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயுஒரு பங்கும் உண்டு [H 2 0 ] என்கிறோம். இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.<br />
<br />
'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும் <br />
இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.<br />
<br />
பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்கு சென்று மண்ணெடுத்து வந்தார்கள். அந்த மண் கறுப்பாக இருந்தது.<br />
நம் பழைய வேதத்தில் அதைப்பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அங்கீரஸ் மஹரிஷி ஒரு ஹோமம் நடத்தினார். அதற்கு சந்திரலோகத்திலிருந்து மண்ணெடுத்து <br />
வந்து பூமியிலுள்ள மண்ணோடு பிசைந்து குண்டம் தயாரிக்க வேண்டியிருந்தது.<br />
<br />
அது சரித்திரம். அதைக் குறிப்பிடும்போது '' சந்த்ரமஸி கிருஷ்ணம '' என்கிறது வேதம்.அதாவது, '' சந்திர மண்டலத்து மண் கறுப்பானது '' என்று விளக்கம்.<br />
<br />
இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சரித்திர முக்கியதுவம்வாய்ந்த நிகழ்ச்சி குருசேத்திரத்தில் 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போர்.<br />
அஸ்தினாபுரத்தில் கண் பார்வையில்லா திருதராஷ்டிரன் தன் சயன மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்க, பார்வையில்லாத அவனுக்கு தேரோட்டி சஞ்சயன் சினிமாஸ்கோப் அகலத்தில் சுவரில் தெரிந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து வருணனை [கமெண்டரி] செய்து கொடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. முதல் ஒளிபரப்பு அதுவும் நேரடி ஒளிபரப்பு மகாபாரதப் போர். முதல் வருணனையாளர் சஞ்சயன்.<br />
<br />
இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எல்லா விஞ்ஞான அறிவியல் சங்கதிகளும் மகா பாரத காலத்திலேயே இருந்திருக்கின்றன. அதே போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் தன் தொலை நுண்ணுணர்வு மூலம் [ இப்போது டெலிபதி என்று சொல்கிறோம்] வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு<br />
ஞான மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.<br />
<br />
சமீப ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைகழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும், அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் குருச்சேத்திர<br />
அகழ்ந்து தோண்டி ய்வு செய்துள்ளார்கள். மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி எடுத்த மண், இரும்பு துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை எடுத்து பரிசோதனை<br />
செய்து பார்த்ததில் இப்போது இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில் என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம்.<br />
நவீன அறிவியல் கருவிகளை கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கதிர் வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்பித்துள்ளார்கள். [ தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிலும் இதனை நான் பார்த்திருக்கிறேன்.]<br />
<br />
நமது முன்னோர்கள் நமக்கு முன்னால் பிறந்தவர்கள் மட்டும அல்ல. நம் காலத்தில் இருக்கும் எல்லா விஞ்ஞான விஷயங்களுக்கும் அவர்கள் முன்னோடிகளும் கூட  <br />
<br />
நன்றி எழில்நிலா                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உ&quot; போடு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2582</link>
			<pubDate>Sun, 06 Nov 2005 11:43:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1606">கோமதி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2582</guid>
			<description><![CDATA[                    <a href="http://www.keetru.com/literature/essays/pamaran_2.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.keetru.com/literature/essays/pamaran_2.html</a><br />
<br />
"உ" போடு<br />
பாமரன்<br />
<br />
<br />
<br />
"suspect everybody": சேகுவேரா<br />
<br />
"அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா?" என்றேன் நண்பரிடம்.<br />
<br />
"அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை" என்றார் வெகு அமைதியாக.<br />
<br />
அடப்பாவிகளா.. எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை? எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.<br />
<br />
முதலில் "தன்னம்பிக்கை"ப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.<br />
<br />
"மேலதிகாரியைத் திருப்திப்படுத்துவது எப்படி?", "நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?", கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு? என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். "பல் விளக்குவது எப்படி?" என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் "ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.<br />
<br />
மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் "வாழும் கலை"யைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.<br />
<br />
இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா "கண்டுபிடிப்பு"தான் "செய்யும் தொழிலே தெய்வம்".<br />
<br />
புதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே "முத்துக்குளித்து" அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும், மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு "சுகந்தம்" வீசும் தெய்வம். ஏனிப்படி..? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்புறம் நீங்களெல்லாம் "தன்னம்பிக்கை"க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.<br />
<br />
இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: "உ" போடு. அதென்ன "ஓ"வுக்குப் பதிலாக "உ". அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று "உ"வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.<br />
<br />
மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள், தமது "வெற்றிக்கான படிக்கட்டுகளை". "நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்" என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.<br />
<br />
இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று "உ"க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்.<br />
<br />
சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்,<br />
<br />
இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.<br />
<br />
"ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை" என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...<br />
<br />
மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... "நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்" என இவர் சொல்ல...<br />
<br />
"நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?" என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?<br />
<br />
தான் "சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... "கோட்டா"வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக்கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.<br />
<br />
இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:<br />
<br />
"இவர்களது நாத்திகமும் பொய், அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய்" என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.<br />
<br />
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி.. உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.<br />
<br />
பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.<br />
<br />
"நட்ட கல்லும் பேசுமோ" என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.<br />
<br />
எந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...<br />
<br />
"கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே" என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...<br />
<br />
கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://www.keetru.com/literature/essays/pamaran_2.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.keetru.com/literature/essays/pamaran_2.html</a><br />
<br />
"உ" போடு<br />
பாமரன்<br />
<br />
<br />
<br />
"suspect everybody": சேகுவேரா<br />
<br />
"அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா?" என்றேன் நண்பரிடம்.<br />
<br />
"அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை" என்றார் வெகு அமைதியாக.<br />
<br />
அடப்பாவிகளா.. எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை? எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.<br />
<br />
முதலில் "தன்னம்பிக்கை"ப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.<br />
<br />
"மேலதிகாரியைத் திருப்திப்படுத்துவது எப்படி?", "நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?", கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு? என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். "பல் விளக்குவது எப்படி?" என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் "ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.<br />
<br />
மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் "வாழும் கலை"யைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.<br />
<br />
இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா "கண்டுபிடிப்பு"தான் "செய்யும் தொழிலே தெய்வம்".<br />
<br />
புதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே "முத்துக்குளித்து" அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும், மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு "சுகந்தம்" வீசும் தெய்வம். ஏனிப்படி..? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்புறம் நீங்களெல்லாம் "தன்னம்பிக்கை"க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.<br />
<br />
இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: "உ" போடு. அதென்ன "ஓ"வுக்குப் பதிலாக "உ". அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று "உ"வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.<br />
<br />
மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள், தமது "வெற்றிக்கான படிக்கட்டுகளை". "நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்" என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.<br />
<br />
இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று "உ"க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்.<br />
<br />
சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்,<br />
<br />
இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.<br />
<br />
"ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை" என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...<br />
<br />
மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... "நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்" என இவர் சொல்ல...<br />
<br />
"நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?" என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?<br />
<br />
தான் "சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... "கோட்டா"வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக்கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.<br />
<br />
இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:<br />
<br />
"இவர்களது நாத்திகமும் பொய், அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய்" என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.<br />
<br />
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி.. உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.<br />
<br />
பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.<br />
<br />
"நட்ட கல்லும் பேசுமோ" என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.<br />
<br />
எந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...<br />
<br />
"கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே" என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...<br />
<br />
கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழ் தொழில்நுட்பச் சொற்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2635</link>
			<pubDate>Wed, 02 Nov 2005 22:44:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2635</guid>
			<description><![CDATA[                    உங்களுக்கு தெரிந்த ஆங்கில தொழில்நுட்பச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் பற்றி பகிருங்கள், கேள்வி எழுப்புங்கள்.<br />
<br />
அறிந்து கொள்ள விரும்புவது:<br />
analog, digital, ADC, DAC<br />
transister<br />
sequential logic, combinatorial logic<br />
gates<br />
register, cache, memory<br />
modulation, demodulation<br />
sampling<br />
down/up conversion<br />
amplification, amplifier, power amplifier<br />
gain,<br />
antenna<br />
RF (Radio Frequency)<br />
Frequency, wavelength<br />
filtering, filter<br />
spreading &amp; despreading<br />
encoding &amp; decoding<br />
crypting/cryptography, encrypting &amp; decrypting<br />
Interleaver, deinterleaver                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உங்களுக்கு தெரிந்த ஆங்கில தொழில்நுட்பச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் பற்றி பகிருங்கள், கேள்வி எழுப்புங்கள்.<br />
<br />
அறிந்து கொள்ள விரும்புவது:<br />
analog, digital, ADC, DAC<br />
transister<br />
sequential logic, combinatorial logic<br />
gates<br />
register, cache, memory<br />
modulation, demodulation<br />
sampling<br />
down/up conversion<br />
amplification, amplifier, power amplifier<br />
gain,<br />
antenna<br />
RF (Radio Frequency)<br />
Frequency, wavelength<br />
filtering, filter<br />
spreading &amp; despreading<br />
encoding &amp; decoding<br />
crypting/cryptography, encrypting &amp; decrypting<br />
Interleaver, deinterleaver                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2936</link>
			<pubDate>Tue, 11 Oct 2005 13:37:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2936</guid>
			<description><![CDATA[                    தமிழ் நாட்டில் பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டிய நிலைக்கு பெண் கவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பிரபல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றில் இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால் கேட்கப்படும், காணப்படும் ஒரு செய்தி "பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே" இவர்களை என்ன செய்யலாம். <br />
<br />
உடலை முன் வைக்கிற கவிதைகளை பெண்கள் எழுதி வருவது குறித்து தனது கவலைகளை பிரம்மராஜன் பகிர்ந்து கொண்ட  தகவல்( கவிஞர்கள் சந்திப்பு, காலச்சுவடு 51 பக்கம் 51-52) அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதே கருத்தைதான் வெகுசன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் சில வெகுசன கவியரங்கப் பிரபலங்களும் முன் வைக்கிறார்கள். இவர்களுக்கும் கவிதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என்பது சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் உலகக் கவிதை தெரிந்த  பிரம்மராஜன்  ஒரு சாதாரண பேராசிரியரைப் போல இப்படிச் சொல்வது உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.<br />
<br />
 ஐயா கவிதையில் இடம்பெறும் கடல் கடலாக இல்லாதது போலவே, தேவாரத்தில் நடனமிடும் சிவன் சிவனில்லாதது போலவே, கவிதையில் இடம் பெறும் பாலியலும் பாலியல் அல்ல.  அது உருவகமே.  புலன்களும் உடலும் புனைவினுடாக இயங்கும் பொழுது கவிதைநிலை தோன்ற முடியாது. என்ற கட்டாயம் இல்லை. முரண்பாடுகளின் விளையாட்டு கவிதைகளில் அதிகம் தான். உள்ளுறையும் இறைச்சியும் பழகிய தமிழ்க் கவிதைக்கு உருவகம் பழகாமல் போகும் என்ற கட்டாயம் ஏதும் உண்டா?   "யோனி" என்ற சொல் கவிதைக்குள் வரும்போது அது பெண்ணுடைய  ஒரு உறுப்பா அல்லது கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? கவிதைக்குள் ஒரு சொல் அது உணர்த்தும் வெற்றுப் பொருளாகவோ, ஒரு வாக்கியம் வெற்று வாக்கியமாகவோ அமையுமா? Meta languugage, meta poetry  பற்றி மீடியா பிரபலங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரம்மராஜனுக்கு? குற்றாலப் பதிவுகள் அமர்வுகளில் நாள் முழவதும் பேசி மாளவில்லையா? <br />
<br />
அப்படி என்னதான் பெண்கள் எழுதி விட்டார்கள்.? சுகிர்தாரணியின் இரண்டொரு கவிதைகள் உடல் வேட்கையைப் பேசுகின்றன. குட்டிரேவதி தனது இரண்டாவது தொகுப்புக்கு "முலைகள்" எனத் தலைப்பிட்டார். இது தவிர வேறு எந்த உயிர்கொல்லி ரசாயன ஆயதங்களும் இவர்களிடம் இல்லை. எனது கவிதைகளில் காணக்கிடப்பவை எல்லாம் இயற்கையும் தாய்மையும் இணைந்த அழகியல் தத்துவம், அறம், அதிகாரம், இவைகளின் விதவிதமான உருவக நாடகங்கள் மற்றும் சில வெளிப்படையான அரசியல் கவிதைகள். உமாமகேஸ்வரி "வெறும்பொழுது" என்ற தலைப்பில் மிகப்பெரிய தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒரு கவிஞர் 50 ஆண்டுகள் எழுதித் தொகுக்கும் போது கூட இவ்வளவு பெரிய தொகுப்பு வருவதில்லை. <br />
<br />
பத்தாண்டு காலவெளியில் இவ்வளவு கவிதைகளை எழுதியுள்ளார். சல்மாவின் இரண்டு தொகுதி கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் தான் "யோனி" என்ற வார்த்தை வருகிறது. அக்கவிதையில் இரண்டு உடல்களுக்கிடையிலான அரசியல் பேசப்படுகிறது. இவரும் ஆபாசக் கவியாக சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் எழுதியிருக்கும் மீதி 99 சதவீத கவிதைகள் எதை முன்னிறுத்திப் பேசுகின்றன. என்பது குறித்து இப்பிரபலங்களுக்கு அக்கறையில்லை இப்பெண்களிடம் பதிவாகியுள்ள பெண் இருப்புச் சார்ந்த கேள்விகளும் சமூகம் சார்ந்த கேள்விகளும் உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் வலிகளும் இழப்புகளும் அவர்களுக்கு சமூக அக்கறையற்ற செயல்கள். <br />
<br />
குட்டிரேவதி தன் தொகுப்புக்கு "முலைகள்" என தலைப்பிட்டுவிட்டார் அல்லவா அதனால் தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மழை பொய்த்து விட்டது போலும். உலக சமூகங்களிலேயே இந்திய சினிமாவில் பெண்களை படு கேவலமாக சித்தரிக்கும் சமூகம் வேறில்லை. நம் கோடம்பாக்கத்தில் ஒரு நான்கு நிமிட பாடல் காட்சியில் சுமார் 50 ஜோடி முலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருக்க முடியாது. இக்காட்சிகளுக்கான பாடல்களை எழுதித்தரும் பல பாடலாசிரியர்களில் ஒருவரால் தமிழ்பெண் கவிகைளப் பார்த்து ஒழுக்கம் கெட்டவர்கள் என கூசாமல் சொல்ல முடிகிறது. இவருடைய சினிமாப் பாடல்களைப் பாடி ஈவ்டீசிங் கேஸில் கைதான இளைஞர்கள் பலர். அந்த கைதுப் பட்டியலை நான் காவல்துறையினரிடம் கோரி பெறயிருக்கிறேன். இந்த ஈவ்டீசிங் கவிஞர் பரப்பிவரும் அவதூற்றை சில மதவாத கவிஞர்களும் வழிமொழிகிறார்கள்.<br />
<br />
பெண் எழுதினாலே அது ஒரு சமூக மீறலாக அதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. ஆக அவர்களுடைய சொல் ஒவ்வொன்றுமே ஒரு அரசியல் செயற்பாட்டுக்கான அசைவுகளாக அர்த்தம் பெறுகிறது. ஆக அடிப்படையிலேயே ஒரு சமூக ஜீவியாகவும் சமூகநலம் விழையும் போராளியாகவும் வெளிப்படுவது பெண்களுக்கு இயற்கையான ஒரு நிகழ்வாகிறது. இங்கு இவர்களுடைய எழுத்துக்களை ஆபாசம் என்று சொல்வதும் சமூகக்கேடானது என்று சொல்வதும் எந்த ஒரு அறிதல் முறைக்குள்ளும் அடங்காத ஆணாதிக்க பாசிசக் குரலாகும். <br />
<br />
உண்மையில் பெண்கள் யாரும் ஆபாசமாக எழுதுவதில்லை. பெண் எழுத்தென்பது அதன் இயல்பிலேயே அரசியல் வயப்பட்டது. அவ்வரசியல் அறம், ஆண்களை நிலைகுலையச் செய்கிறது. எனவே தான் இவர்கள் இல்லாத ஒன்றை பெண் கவிதைகளின் மேல் ஏற்றி ஆபாச வக்கிரமென அவதூறைப் பரப்புகிறார்கள். உதாரணத்துக்கு என்னுடைய எழுத்துகளுக்கு இங்கே விளக்கம் தருகிறேன்.  <br />
<br />
எனது "சங்கரபாணி" ,"நீரின்றி அமையாது உலகு", இரண்டு தொகுப்புகளையும் எடுத்துக்கொண்டால் கூப்பிடும் தூரத்தில் உனது தீவு மறைமுக அரங்கம் அகதி வெள்ளைப் பாய்மரங்களும் சங்கிலிகளும் புலி இரும்புத் தொப்பி ஞாயிற்றுக்கிழமைச் சந்தை வீடுகளால் ஆன இனம், படுகளம், மரணங்கள் உருவாக்கப்படுகின்றன." குருவி" "கடவுளைச் செய்பவள்" போன்ற கவிதைகளுக்கு இணையான அரசியல் பார்வை கொண்ட  கவிதைகள் தமிழில் இதுவரை இல்லை என்று சொல்லலாம். பிறவற்றில் வெறும் அரசியல் இருக்கும். ஆனால் கவிதையிருக்காது எனது கவிதைகள் ஆத்மநாமிற்குப் பிறகு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் ஆத்மநாமின் மிடிஸ்கிளாஸ் பார்வை படியாமலும் எழுதப்பட்டுள்ள அரசியல் கவிதைகள். எனது கவிதைகளில் இடம் பெறும் ~யோனி| என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று . நெருப்பாலான பிரபஞ்சத் சக்தியின் ஆதிமூலம் சங்க இலக்கியம் காட்டும் பெண் உடல்களில் இன்றும் தேங்கி இயங்கும் அணங்கு எனும் நெருப்பு உருமாறி அருட்பெரும் சோதியாகி நின்ற உருவகமே எனது கவிதைகளில் இடம்பெறும் யோனி. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெறும் சோதியை எனத்தொடங்கும் திருவெம்பாவையின் முதலடியில் சிவனைக்குறிக்கும் சோதியானது சிவனொடு சேர்ந்த சக்தியே தவிர வேறல்ல. இது மாணிக்க வாசகர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியது. <br />
<br />
நான் சாக்தேய மரபில் வரும் ஒரு கவி.  இந்த அடிப்படையில் நான் கூறுவது இது தான். பெண்களின் அறிவார்ந்த வளர்ச்சி சமூகக் குற்றம் செய்துவரும் கவி கொக்ரக்கோ கோக்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எதையுமே வாசிக்காமல் தமிழ் இலக்கிய மரபோ பிற இந்திய இலக்கிய மற்றும் உலக இலக்கிய மரபோ அறியாத தமிழை விற்றுப்பிழைக்கும் வியாபரிகள் "பெண்கவிகள் தரம்கெட்டுவிட்டதாகச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்" ஜனநாயக மறுப்போடும் பாசிச ஆணாதிக்க திமிரோடும் மத அடிப்படைவாத கவிஞர்கள் பொத்தாம் பொதுவாக பெண் கவிகைள சினிமா நடிகைகளைப் போல சித்தரிக்கிறர்கள். இவற்றை வெகுசன ஊடகங்களும் வரவேற்கின்றன. இவை கடுமையான கண்டனத்திற்கு உரியன. <br />
<br />
(மூட்டுவென் கால் ,தாக்குவென் கால் ஓரென் யானுமோர் பெற்றி மேலிட ஆஆ ஒல்லென கூவு வென் கொல் அலமறல் அசைவளி அலைப்பவென் உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே எனக்கூறும் ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்களின் கௌன்ட்டவுனில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.) <br />
<br />
குமுதம் தீராநதி  இதழுக்கு  "பெண்பால் அகதிகள்" என்ற தொடரை எழுதி வரும் மாலதி மைத்ரியின் தொடர் கட்டுரைகள் தொடர்ச்சியாக ஊடறுவில் வெளிவரும்.  <br />
<br />
<a href="http://udaru.blogdrive.com/archive/75.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://udaru.blogdrive.com/archive/75.html</a><br />
<br />
<br />
oct 2005 <br />
<br />
<br />
<br />
 <br />
<br />
<br />
  <br />
<br />
<br />
<br />
Leave a Comment:<br />
<br />
 Name                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழ் நாட்டில் பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டிய நிலைக்கு பெண் கவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பிரபல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றில் இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால் கேட்கப்படும், காணப்படும் ஒரு செய்தி "பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே" இவர்களை என்ன செய்யலாம். <br />
<br />
உடலை முன் வைக்கிற கவிதைகளை பெண்கள் எழுதி வருவது குறித்து தனது கவலைகளை பிரம்மராஜன் பகிர்ந்து கொண்ட  தகவல்( கவிஞர்கள் சந்திப்பு, காலச்சுவடு 51 பக்கம் 51-52) அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதே கருத்தைதான் வெகுசன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் சில வெகுசன கவியரங்கப் பிரபலங்களும் முன் வைக்கிறார்கள். இவர்களுக்கும் கவிதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என்பது சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் உலகக் கவிதை தெரிந்த  பிரம்மராஜன்  ஒரு சாதாரண பேராசிரியரைப் போல இப்படிச் சொல்வது உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.<br />
<br />
 ஐயா கவிதையில் இடம்பெறும் கடல் கடலாக இல்லாதது போலவே, தேவாரத்தில் நடனமிடும் சிவன் சிவனில்லாதது போலவே, கவிதையில் இடம் பெறும் பாலியலும் பாலியல் அல்ல.  அது உருவகமே.  புலன்களும் உடலும் புனைவினுடாக இயங்கும் பொழுது கவிதைநிலை தோன்ற முடியாது. என்ற கட்டாயம் இல்லை. முரண்பாடுகளின் விளையாட்டு கவிதைகளில் அதிகம் தான். உள்ளுறையும் இறைச்சியும் பழகிய தமிழ்க் கவிதைக்கு உருவகம் பழகாமல் போகும் என்ற கட்டாயம் ஏதும் உண்டா?   "யோனி" என்ற சொல் கவிதைக்குள் வரும்போது அது பெண்ணுடைய  ஒரு உறுப்பா அல்லது கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? கவிதைக்குள் ஒரு சொல் அது உணர்த்தும் வெற்றுப் பொருளாகவோ, ஒரு வாக்கியம் வெற்று வாக்கியமாகவோ அமையுமா? Meta languugage, meta poetry  பற்றி மீடியா பிரபலங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரம்மராஜனுக்கு? குற்றாலப் பதிவுகள் அமர்வுகளில் நாள் முழவதும் பேசி மாளவில்லையா? <br />
<br />
அப்படி என்னதான் பெண்கள் எழுதி விட்டார்கள்.? சுகிர்தாரணியின் இரண்டொரு கவிதைகள் உடல் வேட்கையைப் பேசுகின்றன. குட்டிரேவதி தனது இரண்டாவது தொகுப்புக்கு "முலைகள்" எனத் தலைப்பிட்டார். இது தவிர வேறு எந்த உயிர்கொல்லி ரசாயன ஆயதங்களும் இவர்களிடம் இல்லை. எனது கவிதைகளில் காணக்கிடப்பவை எல்லாம் இயற்கையும் தாய்மையும் இணைந்த அழகியல் தத்துவம், அறம், அதிகாரம், இவைகளின் விதவிதமான உருவக நாடகங்கள் மற்றும் சில வெளிப்படையான அரசியல் கவிதைகள். உமாமகேஸ்வரி "வெறும்பொழுது" என்ற தலைப்பில் மிகப்பெரிய தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒரு கவிஞர் 50 ஆண்டுகள் எழுதித் தொகுக்கும் போது கூட இவ்வளவு பெரிய தொகுப்பு வருவதில்லை. <br />
<br />
பத்தாண்டு காலவெளியில் இவ்வளவு கவிதைகளை எழுதியுள்ளார். சல்மாவின் இரண்டு தொகுதி கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் தான் "யோனி" என்ற வார்த்தை வருகிறது. அக்கவிதையில் இரண்டு உடல்களுக்கிடையிலான அரசியல் பேசப்படுகிறது. இவரும் ஆபாசக் கவியாக சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் எழுதியிருக்கும் மீதி 99 சதவீத கவிதைகள் எதை முன்னிறுத்திப் பேசுகின்றன. என்பது குறித்து இப்பிரபலங்களுக்கு அக்கறையில்லை இப்பெண்களிடம் பதிவாகியுள்ள பெண் இருப்புச் சார்ந்த கேள்விகளும் சமூகம் சார்ந்த கேள்விகளும் உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் வலிகளும் இழப்புகளும் அவர்களுக்கு சமூக அக்கறையற்ற செயல்கள். <br />
<br />
குட்டிரேவதி தன் தொகுப்புக்கு "முலைகள்" என தலைப்பிட்டுவிட்டார் அல்லவா அதனால் தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மழை பொய்த்து விட்டது போலும். உலக சமூகங்களிலேயே இந்திய சினிமாவில் பெண்களை படு கேவலமாக சித்தரிக்கும் சமூகம் வேறில்லை. நம் கோடம்பாக்கத்தில் ஒரு நான்கு நிமிட பாடல் காட்சியில் சுமார் 50 ஜோடி முலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருக்க முடியாது. இக்காட்சிகளுக்கான பாடல்களை எழுதித்தரும் பல பாடலாசிரியர்களில் ஒருவரால் தமிழ்பெண் கவிகைளப் பார்த்து ஒழுக்கம் கெட்டவர்கள் என கூசாமல் சொல்ல முடிகிறது. இவருடைய சினிமாப் பாடல்களைப் பாடி ஈவ்டீசிங் கேஸில் கைதான இளைஞர்கள் பலர். அந்த கைதுப் பட்டியலை நான் காவல்துறையினரிடம் கோரி பெறயிருக்கிறேன். இந்த ஈவ்டீசிங் கவிஞர் பரப்பிவரும் அவதூற்றை சில மதவாத கவிஞர்களும் வழிமொழிகிறார்கள்.<br />
<br />
பெண் எழுதினாலே அது ஒரு சமூக மீறலாக அதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. ஆக அவர்களுடைய சொல் ஒவ்வொன்றுமே ஒரு அரசியல் செயற்பாட்டுக்கான அசைவுகளாக அர்த்தம் பெறுகிறது. ஆக அடிப்படையிலேயே ஒரு சமூக ஜீவியாகவும் சமூகநலம் விழையும் போராளியாகவும் வெளிப்படுவது பெண்களுக்கு இயற்கையான ஒரு நிகழ்வாகிறது. இங்கு இவர்களுடைய எழுத்துக்களை ஆபாசம் என்று சொல்வதும் சமூகக்கேடானது என்று சொல்வதும் எந்த ஒரு அறிதல் முறைக்குள்ளும் அடங்காத ஆணாதிக்க பாசிசக் குரலாகும். <br />
<br />
உண்மையில் பெண்கள் யாரும் ஆபாசமாக எழுதுவதில்லை. பெண் எழுத்தென்பது அதன் இயல்பிலேயே அரசியல் வயப்பட்டது. அவ்வரசியல் அறம், ஆண்களை நிலைகுலையச் செய்கிறது. எனவே தான் இவர்கள் இல்லாத ஒன்றை பெண் கவிதைகளின் மேல் ஏற்றி ஆபாச வக்கிரமென அவதூறைப் பரப்புகிறார்கள். உதாரணத்துக்கு என்னுடைய எழுத்துகளுக்கு இங்கே விளக்கம் தருகிறேன்.  <br />
<br />
எனது "சங்கரபாணி" ,"நீரின்றி அமையாது உலகு", இரண்டு தொகுப்புகளையும் எடுத்துக்கொண்டால் கூப்பிடும் தூரத்தில் உனது தீவு மறைமுக அரங்கம் அகதி வெள்ளைப் பாய்மரங்களும் சங்கிலிகளும் புலி இரும்புத் தொப்பி ஞாயிற்றுக்கிழமைச் சந்தை வீடுகளால் ஆன இனம், படுகளம், மரணங்கள் உருவாக்கப்படுகின்றன." குருவி" "கடவுளைச் செய்பவள்" போன்ற கவிதைகளுக்கு இணையான அரசியல் பார்வை கொண்ட  கவிதைகள் தமிழில் இதுவரை இல்லை என்று சொல்லலாம். பிறவற்றில் வெறும் அரசியல் இருக்கும். ஆனால் கவிதையிருக்காது எனது கவிதைகள் ஆத்மநாமிற்குப் பிறகு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் ஆத்மநாமின் மிடிஸ்கிளாஸ் பார்வை படியாமலும் எழுதப்பட்டுள்ள அரசியல் கவிதைகள். எனது கவிதைகளில் இடம் பெறும் ~யோனி| என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று . நெருப்பாலான பிரபஞ்சத் சக்தியின் ஆதிமூலம் சங்க இலக்கியம் காட்டும் பெண் உடல்களில் இன்றும் தேங்கி இயங்கும் அணங்கு எனும் நெருப்பு உருமாறி அருட்பெரும் சோதியாகி நின்ற உருவகமே எனது கவிதைகளில் இடம்பெறும் யோனி. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெறும் சோதியை எனத்தொடங்கும் திருவெம்பாவையின் முதலடியில் சிவனைக்குறிக்கும் சோதியானது சிவனொடு சேர்ந்த சக்தியே தவிர வேறல்ல. இது மாணிக்க வாசகர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியது. <br />
<br />
நான் சாக்தேய மரபில் வரும் ஒரு கவி.  இந்த அடிப்படையில் நான் கூறுவது இது தான். பெண்களின் அறிவார்ந்த வளர்ச்சி சமூகக் குற்றம் செய்துவரும் கவி கொக்ரக்கோ கோக்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எதையுமே வாசிக்காமல் தமிழ் இலக்கிய மரபோ பிற இந்திய இலக்கிய மற்றும் உலக இலக்கிய மரபோ அறியாத தமிழை விற்றுப்பிழைக்கும் வியாபரிகள் "பெண்கவிகள் தரம்கெட்டுவிட்டதாகச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்" ஜனநாயக மறுப்போடும் பாசிச ஆணாதிக்க திமிரோடும் மத அடிப்படைவாத கவிஞர்கள் பொத்தாம் பொதுவாக பெண் கவிகைள சினிமா நடிகைகளைப் போல சித்தரிக்கிறர்கள். இவற்றை வெகுசன ஊடகங்களும் வரவேற்கின்றன. இவை கடுமையான கண்டனத்திற்கு உரியன. <br />
<br />
(மூட்டுவென் கால் ,தாக்குவென் கால் ஓரென் யானுமோர் பெற்றி மேலிட ஆஆ ஒல்லென கூவு வென் கொல் அலமறல் அசைவளி அலைப்பவென் உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே எனக்கூறும் ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்களின் கௌன்ட்டவுனில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.) <br />
<br />
குமுதம் தீராநதி  இதழுக்கு  "பெண்பால் அகதிகள்" என்ற தொடரை எழுதி வரும் மாலதி மைத்ரியின் தொடர் கட்டுரைகள் தொடர்ச்சியாக ஊடறுவில் வெளிவரும்.  <br />
<br />
<a href="http://udaru.blogdrive.com/archive/75.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://udaru.blogdrive.com/archive/75.html</a><br />
<br />
<br />
oct 2005 <br />
<br />
<br />
<br />
 <br />
<br />
<br />
  <br />
<br />
<br />
<br />
Leave a Comment:<br />
<br />
 Name                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இராமாயணத்தில் சந்தேகம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3074</link>
			<pubDate>Sun, 02 Oct 2005 03:48:26 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1365">தூயவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3074</guid>
			<description><![CDATA[                    உண்மையில் இது பலருக்கு எழுந்த பழைய சந்தேகம் தான். இங்கே புதுப்பிக்கின்றேன். <br />
1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?<br />
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?<br />
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?<br />
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?<br />
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?<br />
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன. <br />
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது? <br />
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.<br />
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.<br />
<br />
10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?<br />
    <br />
உண்மையில் கதையில் ஏதோ மர்மம் இருக்கின்றது. எனக்கு தோன்றவதை விரைவில் தருகின்றேன். உங்களுக்கு ஏதும் தோன்றின் எழுதுங்கள்.<br />
(2000ம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள கதையை மாற்ற நான் முயலவில்லை. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உண்மையில் இது பலருக்கு எழுந்த பழைய சந்தேகம் தான். இங்கே புதுப்பிக்கின்றேன். <br />
1. சீதை என்பவள் யார்? ஐனகன் பேழையில் கண்டெடுத்தாக கூறப்படுகின்றது. அப்படி கிடைத்த பெண்ணை உயர்ஐhதி எனக் கொள்ளப்படும் அரசவம்சத்தை சேர்ந்த இராமன் எப்படி மணம் முடித்தான்?<br />
2. மண் உறுண்டையால் கூனிக்கு இராமன், அடித்ததை பழி தீர்ப்பதற்காகவே, இராமனை காட்டுக்கனுப்ப கூனி சதி செய்ததாக கொள்ளப்படுகின்றது. அந்த மண் உறுண்டை மட்டும் இவ்வளவு து}ரம் நடக்க காரணமா?<br />
3. இராமன் காட்டுக்கு போவதை தசரத மன்னன் தடுக்கவில்லை. என வான்மீகியில் கூறப்படுகின்றது. அவ்வாறு தடுக்காததற்கு காரணம் என்ன?<br />
4. விசுவாமித்திர் இராமனையும், இலட்சுமனையும் அழைத்து சென்றதற்கான காரணம் என்ன?<br />
5. இராவணன் சீதையை கொணடு செல்லும்போது,மண்ணோடு அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அது சாத்தியமானதா? பத்தினி பெண் அவ்வாறு செல்வாளா?<br />
6. மரவுரி தரித்துச் சென்ற சீதை வழியில் செல்லும்போது நகைகளை அடையாளமாகப் போட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. அந்த நகைகள் எங்கிருந்து கிடைத்தன. <br />
7. வானரக் கூட்டம் என கேலி செய்யப்படும் இனம் எது? <br />
8. தன் மனைவியை சந்தேகப்பட்டுத்தானே தீக்குளிக்கச் செய்தான். உலகத்துக்கு காட்டத்தான் என சமாதானம் சொன்னானாம். அப்படி செய்யவேண்டிய தேவை ஏன் அவனுக்கு ஏற்பட்டது.<br />
9. அப்படியாயின் மீண்டும் மனைவியை காட்டுக்கு அனுப்பியதேன்? அங்கே தான் இலவன்,குஷன் பிறந்தார்கள்.<br />
<br />
10. இறுதியாக இராமனும், இலட்சுமணும் ஆற்றில் இறங்கித் தற்கொலை செய்யக்காரணம் என்ன?<br />
    <br />
உண்மையில் கதையில் ஏதோ மர்மம் இருக்கின்றது. எனக்கு தோன்றவதை விரைவில் தருகின்றேன். உங்களுக்கு ஏதும் தோன்றின் எழுதுங்கள்.<br />
(2000ம் ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள கதையை மாற்ற நான் முயலவில்லை. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3231</link>
			<pubDate>Wed, 21 Sep 2005 18:32:58 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3231</guid>
			<description><![CDATA[                    ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன  நினைக்கிறீங்க.இது தகவல் இணய யுகம் தந்த புதிய இலக்கிய வடிவமா அல்லது கணணி முன்  நேரத்தைச் செலவிடும்  , தமக்கென ஒரு அடயாளத்தைத் தேடும் சுய  புராணிகளின் புலம்பலா, ம்  ம்ம்  என்கின்ற வலைப் பதிவை இலங்கையில் இருந்து எழுதும் மு.மயூரன்......<br />
<br />
<br />
தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.<br />
அதாவது,<br />
<br />
ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.<br />
<br />
எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.<br />
<br />
<br />
என்று கூறுகிறார்.இதைப் பற்றி  நீங்க என்ன  நினைக்கிறீங்க என்பதையும்,மேலும் வலைப் பதிவை இடும் ஈழவர்களையும் இத் தலைப்பில் மற்றவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் விமர்சனமாகவும் முன் வையுங்களே......<br />
<br />
மயூரனின் முழு பதிவும் இங்கே பதியப்படுகிறது,ஆள் மற்றவை எழுதப் பின்  நிக்கிற விசயங்களையும் எழுதுறார் போய் இங்க படித்துப் பாருங்க......<br />
<br />
<br />
<a href="http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html</a><br />
<br />
<br />
&lt;span style='color:red'&gt;அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை <br />
<br />
<br />
<br />
[தமிழ் மணம் தனது முதல் அகவையை கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வலைப்பதிவுகளின் வருகை , அதன் வகிபாகம், காலமாற்றத்தில், தமிழ் எழுத்துப்படைப்புக்களின் வரலாற்றுப்போக்கில் எப்படி இருக்கிறது என்பது பற்றிய சில குறிப்புக்களை இப்பதிவு முன்வைக்கிறது. விரிவான ஆய்வுகளுக்கு இவை பயன்படலாம்]<br />
<br />
<br />
அதிகாரங்களுக்கெதிரான இடையறாத போராட்டமாக வரலாறு நகர்கிறது.<br />
<br />
தமிழ் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் வரலாறும் இவ்வாறுதான்.<br />
<br />
போதாமைகளும், அதிகாரங்களும் அதற்கான மாற்றுக்களும் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் படிநிலை வளர்ச்சிப்போக்கை தீர்மானித்தன.<br />
எழுதத்தொடங்கியதும், காகிதத்தில் அச்சிடத்தொடங்கியமையும் எல்லாமே இவ்வாறான போகக்கில் தான் அறிமுகமாகின.<br />
<br />
கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் தொழிநுட்ப சாத்தியங்கள், அவ்வூடகத்தின் உள்ளடக்க வடிவத்தில் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.<br />
<br />
நல்ல உதாரணம் எழுத்தறியாக்காலத்து செய்யுள்கள். அச்சறியாக்காலத்து காவியங்கள்.<br />
அச்சோடு வந்த உரைநடை இலக்கியம்.<br />
பேசாப்படங்கள்<br />
வானொலி நாடகம்<br />
<br />
கருத்து தெரிவிப்பு பல வடிவங்களையும் எட்டி விட்டதால், எழுத்து ஊடகங்கள் என்ற தனிக்கிளை பற்றியே பேசவேண்டியிருக்கிறது.<br />
<br />
குறித்த கால இடைவெளியில் வெளிவரும் அச்சு வெளியீடுகள் அறிமுகமானதோடு இதழியல் ஆரம்பிக்கிறது.<br />
<br />
தமிழில் இதழியலை ஆரம்பகாலத்தில் உள்வாங்கிக்கொண்டவர்கள் பெருந் தனவந்தர்களே. ஏனெனில் அவர்கள்தான் அச்சுச்சாதனங்களை, அந்த உற்பத்திக்கருவிகளை கொள்வனவு செய்யக்கூடியவர்களாய் இருந்தார்கள்.<br />
<br />
ஆனால், அக்காலத்தில் அச்சுக்கு நூல்களை தயார்படுத்தக்கூடியவர்களாக இருந்தவர்கள், "பெரும் படிப்பாளிகளே"<br />
இந்த படிப்பாளிகள், தத்தமது கருத்துக்களை பரப்பவும், பிடித்தவற்றை அச்சேற்றவும் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கியமையால், அச்சுத்துறை வர்க்கச்சாயலை விடவும், படிப்பாளிகளின் கருத்தியல் சாயலை கொண்டிருந்தது.<br />
<br />
நாவலர்<br />
திருக்கோணமலை த கனகசுந்தரம்பிள்ளை<br />
வ.வே.சு ஐயர்<br />
அகிலேசபிள்ளை <br />
கிறிஸ்தவ வெளியீடுகள்<br />
பாரதியார்<br />
<br />
எழுத்தறிவும், எழுதும் பழக்கமும் மேன்மேலும் பரவலானதோடு,<br />
சாதாரண மக்களால், இந்த அச்சிதழை ஆளும் படிப்பாளிகளது அதிகாரத்தை உணர முடிந்தது.<br />
<br />
அச்சியந்திர சாலைகளின் உரிமையாளர்கள், இத்தகைய பரவலான மக்கள் கூட்டத்துக்கான வெளியீடுகளை செய்ய ஆரம்பித்தனர்.<br />
படிப்பாளிகளின் அதிகாரம் இங்கே மாற்றீட்டுக்குள்ளானது.<br />
அச்சு வெளியீடுகளின் நோக்கம் இயந்திர சாலைகளின் முதலாளிகளது வர்க்கச்சாயலை பெற ஆரம்பித்தது,<br />
<br />
வெகுமக்கள் பரப்பில் எது அதிகம் விலைபோகுமோ, அதுவே அச்சியந்திரங்கள் உமிழ அனுமதிக்கப்பட்ட வெளியீடுகளாக பெரும்பாலும் இருந்தது.<br />
<br />
<br />
இந்த மாற்றம், பிரபல இதழ்களின் வருகைக்கு, பின்னர் வணிக மயபடுத்தப்பட்ட இதழ்களின் வருகைக்கு காரணமானது.<br />
<br />
இது புதிய அதிகாரத்தை வெளியீட்டுத்துறையில் ஏற்படுத்தியது.<br />
<br />
வணிக இதழ்களின் முதலாளிகள், விலைபோகாச்சரக்குகளை, விளிம்புநிலை கருத்துக்களை, தீவிரமான ஆக்கங்களை நிராகரிக்கத்தொடங்கினர்.<br />
<br />
இவ்வணிக இதழ்களின் அதிகாரத்தை உடைத்துக்கொண்டு சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. அச்சியந்திரங்கள் பரவலானமை, அச்சுச்செலவில் ஏற்பட குறைவுகள் இதற்கு உதவியாயிற்று.<br />
<br />
மேசை வெளியீடுகளை சாத்தியப்படுத்திய கணிப்பொறியின் வருகையோடு இதழியல் அதிகமாக பரவலானது.<br />
<br />
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சிறுதொகை வாசகர்களை மட்டுமே இலக்காக கொண்டு, குறித்த கருத்துப்போக்கு தொடர்பான உரையாடல்களை மட்டுமே செய்துகொண்டு ஏராளம் சிற்றிதழ்கள் வரவாரம்பித்தன.<br />
<br />
வணிக இதழ்கள், மேம்போக்கு ரக பிரபலத்தன்மையையும், நாயக வழிபாட்டையும், மேலோட்டமான எழுத்துக்களையும் வைத்துக்கொண்டு பகட்டாய், ஒளி வெள்ளமாய் வெளிவந்து அத்தகைய மனநிலையை பலதளங்களிலும் கட்டமைக்க,<br />
இதற்கு மாற்றாய் வந்த சிற்றிதழ்கள், ஒரு வித மேட்டிமைத்தனத்தையும், இன்னொரு விதமான பிரபல வழிபாட்டையும், உருவாக்கியது.<br />
<br />
இந்த மேட்டிமைத்தனத்தின், அறிவு அதிகாரத்தின், அறிவுச்சாதி (உயர்சாதி?) ஆதிக்கத்தின் பிரபலத்தன்மை, தன்னை ஒரு trend ஆக நிலைப்படுத்தி, புதுவித குழுமவாதத்தையும், "பிரபலசிற்றிதழ்" போக்கையும்  கொண்டுவந்து சேர்த்தது.<br />
சிற்றிதழ்களும், நவகாலனிய, பின் முதலாளிய அமைப்புக்களுக்கு வளைந்து கொடுத்து காலச்சுவடு போன்ற, பிரபலத்தை, வணிகத்தை மையமாகக்கொண்ட பிரபலசிற்றிதழ்களாக வடிவெடுத்தது.<br />
<br />
குழுமவாதத்தின் பயனாக (கருத்து வேறுபாடு என்ற மாயத்தோற்றத்தோடு) இவ்வாறான "பிரபல" சிற்றிதழ்கள் உடைந்து பெருகின.<br />
இவை பிரபல அறிவாளிகளது பெயர்களை, அவர்களது அந்தரங்கங்கள் பற்றிய அலசல்களை, அவர்களது குடுமிப்பிடி சண்டைகளை பெரிது படுத்தி அதுவே சீரிய இலக்கிய சூழல் என்ற மாயத்தோற்றத்தினை உண்டு பண்ணி, பணத்தையும், பிரபலத்தைய்ம் உழைத்துக்கொண்டன.<br />
<br />
மூன்றாவது மனிதன் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு,<br />
இத்தகைய இதழ்களை படிப்பவர்கள் சந்தித்துக்கொண்டால், மு.பொ வுக்கும் சிவசேகரத்துக்குமான சண்டைற்றி அலசுவர்.<br />
இவ்விரு எழுத்தாளருக்கு இடையான கருத்து மோதலை மூன்றாவது மனிதன் தனது பரபரப்புக்கு பயன்படுத்தியது.<br />
<br />
சீரிய எழுத்துச்சூழலில் சிற்றிதழ்கள் இத்தகைய பரபரப்பை பரப்பி, தமது "நாயகத்" தன்மையை நிலை நிறுத்திக்கொண்டன. பெயர்களை வைத்து வியபாரம் பண்ணின.<br />
<br />
இலக்கிய சந்திப்புக்களில் இத்தகைய சீரிய இலக்கிய "நாயகர்" களின் பெயரை எடுத்து விளாசுபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.<br />
<br />
இந்நாயகர்களின் பெயர்களை மனப்பாடம்பண்ணி அதிகமதிகம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகளை அனைவருமே அடிக்கடி சந்திப்பீர்கள்.<br />
இது, காலச்சுவடு போன்ற போக்குகளின் விளைவு.<br />
<br />
இது நடப்பிலுள்ள எழுத்துலகத்தை ஆட்டிப்படைக்கும் புதிய அதிகாரம்.<br />
அதிகார வர்க்கம்.<br />
<br />
ஒரு பொடிச்சி என்ற வலைப்பதிவர் தனது வலைப்பதிவை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்-<br />
<br />
"<br />
<br />
&lt;b&gt;ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல."&lt;/b&gt;புதிதாய் ஏற்பட்ட இவ்வதிகாரத்தையும், அதற்கெதிரான ஆயுதத்தையும், அதிகாரத்துடனான மோதலையும், உடைப்பையும் இதவிட இயல்பாய் விளக்க முடியாது.<br />
<br />
<br />
ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் தோன்றியமைக்கு பல காரணங்கள் கற்பிகப்படுகின்றன.<br />
<br />
ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் (blogs) அதிவேக பரவலுக்கு இந்த அதிகார உடைப்புத்தான் காரணம்.<br />
இவ்வுடைப்பினை செய்வதில் வலைத்தளங்கள்(web sites) தோற்றுப்போனது.<br />
<br />
எல்லா அதிகார உடைப்புக்களும் புதிய தொழிநுட்ப போக்கினை கையிலெடுத்துக்கொள்ளும்.<br />
நீராவி எந்திரங்களை முதலாளியப்புரட்சி பயன்படுத்தியதைப்போல.<br />
இணையத்தின் பாய்ச்சலை, தளையறு மென்பொருள் புரட்சி பயன்படுத்திக்கொண்டதைப்போல.<br />
<br />
இணையத்தையும், அதன் தெரிவுச்சுதந்திரத்தையும், முடிவுறா கொள்ளளவையும், வேகத்தையும், rss feed எனப்படும் செய்தியோடை தொழிநுட்பத்தையும் தமிழ் பெற்றுக்கொண்ட யுனிகோட் குறிமுறை எனும் வரப்பிரசாதத்தையும் இந்த வலைபதிவுப்புரட்சி கையிலெடுத்துக்கொண்டது.<br />
<br />
தமிழ் மணம் போன்ற திரட்டி ஒன்றின் வருகையோடு இவ்வதிகார உடைப்பு மேலும் கூர்மையடைகின்றது.<br />
<br />
தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.<br />
அதாவது,<br />
<br />
ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.<br />
<br />
எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.<br />
<br />
இதழ்களது, இதழாசிரியர்களது தேர்வுகள் இல்லை.<br />
பிரபல பெயர்களின் ஆதிக்கம் குறைவு.<br />
<br />
தலைப்புக்களும், உள்ளடக்கமுமே நாம் ஒரு ஆக்கத்தை படிக்கச்சொடுக்குவதற்கு காரணமாயிற்று.<br />
<br />
ஒவ்வொரு ஆளுமையும், ஒவ்வொரு தனிமனித தேடலும் ரசனையும், எல்லாத்தரப்பு கருத்துக்களும், <br />
இன்னொரு மனித இடையீடு இன்றி வாசகருக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.<br />
இது எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் குழுவாதங்களையும் உடைக்கிறது.<br />
<br />
எழுத்தின் தரம், என்ற மாயத்தோற்றம் உடைந்து தகவலும், செய்திகளின் உடனடித்தன்மையும்,  முக்கியத்துவம் பெறுகிறது.<br />
எழுத்தின் தரம், தேடலின் செறிவு தெரிவுக்கான ஒரு கூறாக மாத்திரமே மாறிப்போகிறது.<br />
<br />
முகுந்த் fire fox இன் அண்மைய தமிழ் படுத்தலைப்பற்றி எழுதினால், அங்கே எனக்கு தகவல்களே தேவை.<br />
இன்னொருவருக்கு தேவைப்படாமல் போகலாம்.<br />
ஆனால் முகுந்த்து நான் ஒரு வாசகன் அதிகமாக கிடைத்துள்ளேன்.<br />
<br />
மைக்ரோசொப்டின் மிகப்பிந்திய நேர்மையீன நகர்வைப்பற்றிய வெங்கட்டின் பதிவை நான் ஆவலோடு காத்திருப்பேன். சுந்தர ராமசாமிக்கு அது தேவையற்றதாக இருக்கலாம்.<br />
<br />
குர் ஆனின் ஒரு சுலோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தப்படுத்தலும் இருக்கிறதா என்று ஆர்வத்தோடு நான் நல்லடியாரைப்படிப்பேன்.<br />
ஆனால் மானுஷ்யபுத்திரன் எனும் அப்துல் ஹமீது தனது உயிர்மை எனு பிரபல இதழில் அதை போடமாட்டார். அவர் அதை கடந்துவிட்டிருப்பார். நான் எதை வாசிக்கவேண்டும் எனும் அதிகாரத்தை கையிலெடுத்துவிட்டிருப்பார்.<br />
<br />
ஷ்ரேயா அக்கா எழுதும் வாழ்வின் அன்றாட சம்பவங்களை ஆசையாய் படிக்கும் வாய்ப்பு காலச்சுவட்டில் எனக்கு கிட்டப்போவதில்லை.<br />
<br />
சிற்றிதழ்கள், பல்வேறு போதாமைகளை கொண்டிருக்கிறது.<br />
அச்சுச்செலவு. மட்டுப்பாடான பக்க எண்ணிக்கை போன்றன தாண்ட முடியாத சிக்கல்க்ளாகிப்போகின்றன.<br />
குறித்த வடிவ எழுத்துக்களே, குறித்த கருத்து நிலைகள் சார் எழுத்துக்களே மறுபடி மறுபடி வருகின்றன.<br />
வடிவ உடைப்பு என்பது அங்கே குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவதுபோலத்தான்.<br />
("கவிதையில்" உடைப்பு, "சிறுகதையில்" புதுமை தான் நடக்கிறது)<br />
<br />
<br />
<br />
(G)கூகிள் ட்டோக் பற்றி நான் எழுதி அனுப்பினால், இலங்கையில் தயாராகும் லினக்ஸ் வழங்கல் பற்றி அறிமுகக்கட்டுரை அனுப்பினால் எந்த சிற்றிதழும் அதை மினக்கட்டு அச்சடிக்க வேண்டும் என்ற அவசியமிலை.<br />
<br />
ஆனால் அந்த தகவல்கள் தேவைப்படும் வாசகர்கள் இருக்கின்றனர்.<br />
<br />
எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் எல்லோருக்கும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.<br />
இடையில் நின்று தடுக்கவும் தேர்வுசெய்யவும் ஆளில்லை.<br />
ஒருசெக்கன் நேரம் கூட பிந்துவதற்கு வாய்ப்பில்லை.( சரீங்க ஒரு மணித்தியாலம்...! இப்பசரியா?)<br />
ஆக்கத்தின் அளவுபற்றி கணக்கில்லை.<br />
வழங்கப்பட்ட தொடுப்புக்களூடாக மேலும் விரிகிறது தேடல்<br />
பல்லூடக வழங்குகை, தெரிவிப்பு சாத்தியங்களை அதிகரிக்கிறது.<br />
<br />
<br />
எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் உடனடியான துலங்கல் பின்னூட்டமாய், நேரப்பிந்துகை ஏதுமற்று எழுத்தாளரை வந்தடைகிறது.<br />
கெட்ட வார்த்தையாகக்கூட.<br />
<br />
வாசகர் எழுத்தாளரை தனிப்பட உடனடியாக தொடர்புகொள்கிறார்.<br />
எழுத்தாளர் வாசகரோடு இணையத்தில் மடலாடுகிறார்.<br />
அணுக முடியா எழுத்தாள "நாயகர்" கள் மறைந்துபோய், வாசக- படைப்பாளி உறவு மேலும் நெருக்கமாகிறது.<br />
<br />
<br />
எழுத்தாளரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு வாசக ஊடாட்டம் அதிகரிக்கிறது.<br />
இது இன்னுமொரு உடைப்பு.<br />
<br />
வரலாற்றுப்போக்கில் இடைமாறுகட்டம் தெளிவாய் தெரிகிறது.<br />
வேகம் குறைந்ததாய், பழைய அதிகாரமாய் இதழ்கள் பின்னுக்குப்போகின்றன.<br />
அதிவேக தொழிநுட்பத்தோடு எழுத்துக்கள் கைகோர்த்து தளைகளை அறுக்கின்றன.<br />
<br />
கூடவே, புதுத்தளையறுப்பு, வலைப்பதிவுத்தலைமுறை, தனது அதிகாரங்களை தன்னோடு உருவாக்கி, வளர்க்கிறது.<br />
தனது உடைவுக்காக.<br />
<br />
அடுத பதிவில்...&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஒரு வருடத்திற் முன் உருப்பெற்ற தமிழ் மணத்தில் மலர்ந்த வலைப் பூக்கள் பற்றி கள உறுப்பினர்கள் என்ன  நினைக்கிறீங்க.இது தகவல் இணய யுகம் தந்த புதிய இலக்கிய வடிவமா அல்லது கணணி முன்  நேரத்தைச் செலவிடும்  , தமக்கென ஒரு அடயாளத்தைத் தேடும் சுய  புராணிகளின் புலம்பலா, ம்  ம்ம்  என்கின்ற வலைப் பதிவை இலங்கையில் இருந்து எழுதும் மு.மயூரன்......<br />
<br />
<br />
தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.<br />
அதாவது,<br />
<br />
ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.<br />
<br />
எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.<br />
<br />
<br />
என்று கூறுகிறார்.இதைப் பற்றி  நீங்க என்ன  நினைக்கிறீங்க என்பதையும்,மேலும் வலைப் பதிவை இடும் ஈழவர்களையும் இத் தலைப்பில் மற்றவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் விமர்சனமாகவும் முன் வையுங்களே......<br />
<br />
மயூரனின் முழு பதிவும் இங்கே பதியப்படுகிறது,ஆள் மற்றவை எழுதப் பின்  நிக்கிற விசயங்களையும் எழுதுறார் போய் இங்க படித்துப் பாருங்க......<br />
<br />
<br />
<a href="http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html</a><br />
<br />
<br />
&lt;span style='color:red'&gt;அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை <br />
<br />
<br />
<br />
[தமிழ் மணம் தனது முதல் அகவையை கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் வலைப்பதிவுகளின் வருகை , அதன் வகிபாகம், காலமாற்றத்தில், தமிழ் எழுத்துப்படைப்புக்களின் வரலாற்றுப்போக்கில் எப்படி இருக்கிறது என்பது பற்றிய சில குறிப்புக்களை இப்பதிவு முன்வைக்கிறது. விரிவான ஆய்வுகளுக்கு இவை பயன்படலாம்]<br />
<br />
<br />
அதிகாரங்களுக்கெதிரான இடையறாத போராட்டமாக வரலாறு நகர்கிறது.<br />
<br />
தமிழ் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் வரலாறும் இவ்வாறுதான்.<br />
<br />
போதாமைகளும், அதிகாரங்களும் அதற்கான மாற்றுக்களும் கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் படிநிலை வளர்ச்சிப்போக்கை தீர்மானித்தன.<br />
எழுதத்தொடங்கியதும், காகிதத்தில் அச்சிடத்தொடங்கியமையும் எல்லாமே இவ்வாறான போகக்கில் தான் அறிமுகமாகின.<br />
<br />
கருத்துத்தெரிவிப்பு ஊடகங்களின் தொழிநுட்ப சாத்தியங்கள், அவ்வூடகத்தின் உள்ளடக்க வடிவத்தில் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.<br />
<br />
நல்ல உதாரணம் எழுத்தறியாக்காலத்து செய்யுள்கள். அச்சறியாக்காலத்து காவியங்கள்.<br />
அச்சோடு வந்த உரைநடை இலக்கியம்.<br />
பேசாப்படங்கள்<br />
வானொலி நாடகம்<br />
<br />
கருத்து தெரிவிப்பு பல வடிவங்களையும் எட்டி விட்டதால், எழுத்து ஊடகங்கள் என்ற தனிக்கிளை பற்றியே பேசவேண்டியிருக்கிறது.<br />
<br />
குறித்த கால இடைவெளியில் வெளிவரும் அச்சு வெளியீடுகள் அறிமுகமானதோடு இதழியல் ஆரம்பிக்கிறது.<br />
<br />
தமிழில் இதழியலை ஆரம்பகாலத்தில் உள்வாங்கிக்கொண்டவர்கள் பெருந் தனவந்தர்களே. ஏனெனில் அவர்கள்தான் அச்சுச்சாதனங்களை, அந்த உற்பத்திக்கருவிகளை கொள்வனவு செய்யக்கூடியவர்களாய் இருந்தார்கள்.<br />
<br />
ஆனால், அக்காலத்தில் அச்சுக்கு நூல்களை தயார்படுத்தக்கூடியவர்களாக இருந்தவர்கள், "பெரும் படிப்பாளிகளே"<br />
இந்த படிப்பாளிகள், தத்தமது கருத்துக்களை பரப்பவும், பிடித்தவற்றை அச்சேற்றவும் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கியமையால், அச்சுத்துறை வர்க்கச்சாயலை விடவும், படிப்பாளிகளின் கருத்தியல் சாயலை கொண்டிருந்தது.<br />
<br />
நாவலர்<br />
திருக்கோணமலை த கனகசுந்தரம்பிள்ளை<br />
வ.வே.சு ஐயர்<br />
அகிலேசபிள்ளை <br />
கிறிஸ்தவ வெளியீடுகள்<br />
பாரதியார்<br />
<br />
எழுத்தறிவும், எழுதும் பழக்கமும் மேன்மேலும் பரவலானதோடு,<br />
சாதாரண மக்களால், இந்த அச்சிதழை ஆளும் படிப்பாளிகளது அதிகாரத்தை உணர முடிந்தது.<br />
<br />
அச்சியந்திர சாலைகளின் உரிமையாளர்கள், இத்தகைய பரவலான மக்கள் கூட்டத்துக்கான வெளியீடுகளை செய்ய ஆரம்பித்தனர்.<br />
படிப்பாளிகளின் அதிகாரம் இங்கே மாற்றீட்டுக்குள்ளானது.<br />
அச்சு வெளியீடுகளின் நோக்கம் இயந்திர சாலைகளின் முதலாளிகளது வர்க்கச்சாயலை பெற ஆரம்பித்தது,<br />
<br />
வெகுமக்கள் பரப்பில் எது அதிகம் விலைபோகுமோ, அதுவே அச்சியந்திரங்கள் உமிழ அனுமதிக்கப்பட்ட வெளியீடுகளாக பெரும்பாலும் இருந்தது.<br />
<br />
<br />
இந்த மாற்றம், பிரபல இதழ்களின் வருகைக்கு, பின்னர் வணிக மயபடுத்தப்பட்ட இதழ்களின் வருகைக்கு காரணமானது.<br />
<br />
இது புதிய அதிகாரத்தை வெளியீட்டுத்துறையில் ஏற்படுத்தியது.<br />
<br />
வணிக இதழ்களின் முதலாளிகள், விலைபோகாச்சரக்குகளை, விளிம்புநிலை கருத்துக்களை, தீவிரமான ஆக்கங்களை நிராகரிக்கத்தொடங்கினர்.<br />
<br />
இவ்வணிக இதழ்களின் அதிகாரத்தை உடைத்துக்கொண்டு சிற்றிதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. அச்சியந்திரங்கள் பரவலானமை, அச்சுச்செலவில் ஏற்பட குறைவுகள் இதற்கு உதவியாயிற்று.<br />
<br />
மேசை வெளியீடுகளை சாத்தியப்படுத்திய கணிப்பொறியின் வருகையோடு இதழியல் அதிகமாக பரவலானது.<br />
<br />
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சிறுதொகை வாசகர்களை மட்டுமே இலக்காக கொண்டு, குறித்த கருத்துப்போக்கு தொடர்பான உரையாடல்களை மட்டுமே செய்துகொண்டு ஏராளம் சிற்றிதழ்கள் வரவாரம்பித்தன.<br />
<br />
வணிக இதழ்கள், மேம்போக்கு ரக பிரபலத்தன்மையையும், நாயக வழிபாட்டையும், மேலோட்டமான எழுத்துக்களையும் வைத்துக்கொண்டு பகட்டாய், ஒளி வெள்ளமாய் வெளிவந்து அத்தகைய மனநிலையை பலதளங்களிலும் கட்டமைக்க,<br />
இதற்கு மாற்றாய் வந்த சிற்றிதழ்கள், ஒரு வித மேட்டிமைத்தனத்தையும், இன்னொரு விதமான பிரபல வழிபாட்டையும், உருவாக்கியது.<br />
<br />
இந்த மேட்டிமைத்தனத்தின், அறிவு அதிகாரத்தின், அறிவுச்சாதி (உயர்சாதி?) ஆதிக்கத்தின் பிரபலத்தன்மை, தன்னை ஒரு trend ஆக நிலைப்படுத்தி, புதுவித குழுமவாதத்தையும், "பிரபலசிற்றிதழ்" போக்கையும்  கொண்டுவந்து சேர்த்தது.<br />
சிற்றிதழ்களும், நவகாலனிய, பின் முதலாளிய அமைப்புக்களுக்கு வளைந்து கொடுத்து காலச்சுவடு போன்ற, பிரபலத்தை, வணிகத்தை மையமாகக்கொண்ட பிரபலசிற்றிதழ்களாக வடிவெடுத்தது.<br />
<br />
குழுமவாதத்தின் பயனாக (கருத்து வேறுபாடு என்ற மாயத்தோற்றத்தோடு) இவ்வாறான "பிரபல" சிற்றிதழ்கள் உடைந்து பெருகின.<br />
இவை பிரபல அறிவாளிகளது பெயர்களை, அவர்களது அந்தரங்கங்கள் பற்றிய அலசல்களை, அவர்களது குடுமிப்பிடி சண்டைகளை பெரிது படுத்தி அதுவே சீரிய இலக்கிய சூழல் என்ற மாயத்தோற்றத்தினை உண்டு பண்ணி, பணத்தையும், பிரபலத்தைய்ம் உழைத்துக்கொண்டன.<br />
<br />
மூன்றாவது மனிதன் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு,<br />
இத்தகைய இதழ்களை படிப்பவர்கள் சந்தித்துக்கொண்டால், மு.பொ வுக்கும் சிவசேகரத்துக்குமான சண்டைற்றி அலசுவர்.<br />
இவ்விரு எழுத்தாளருக்கு இடையான கருத்து மோதலை மூன்றாவது மனிதன் தனது பரபரப்புக்கு பயன்படுத்தியது.<br />
<br />
சீரிய எழுத்துச்சூழலில் சிற்றிதழ்கள் இத்தகைய பரபரப்பை பரப்பி, தமது "நாயகத்" தன்மையை நிலை நிறுத்திக்கொண்டன. பெயர்களை வைத்து வியபாரம் பண்ணின.<br />
<br />
இலக்கிய சந்திப்புக்களில் இத்தகைய சீரிய இலக்கிய "நாயகர்" களின் பெயரை எடுத்து விளாசுபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.<br />
<br />
இந்நாயகர்களின் பெயர்களை மனப்பாடம்பண்ணி அதிகமதிகம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகளை அனைவருமே அடிக்கடி சந்திப்பீர்கள்.<br />
இது, காலச்சுவடு போன்ற போக்குகளின் விளைவு.<br />
<br />
இது நடப்பிலுள்ள எழுத்துலகத்தை ஆட்டிப்படைக்கும் புதிய அதிகாரம்.<br />
அதிகார வர்க்கம்.<br />
<br />
ஒரு பொடிச்சி என்ற வலைப்பதிவர் தனது வலைப்பதிவை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்-<br />
<br />
"<br />
<br />
&lt;b&gt;ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல."&lt;/b&gt;புதிதாய் ஏற்பட்ட இவ்வதிகாரத்தையும், அதற்கெதிரான ஆயுதத்தையும், அதிகாரத்துடனான மோதலையும், உடைப்பையும் இதவிட இயல்பாய் விளக்க முடியாது.<br />
<br />
<br />
ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் தோன்றியமைக்கு பல காரணங்கள் கற்பிகப்படுகின்றன.<br />
<br />
ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் (blogs) அதிவேக பரவலுக்கு இந்த அதிகார உடைப்புத்தான் காரணம்.<br />
இவ்வுடைப்பினை செய்வதில் வலைத்தளங்கள்(web sites) தோற்றுப்போனது.<br />
<br />
எல்லா அதிகார உடைப்புக்களும் புதிய தொழிநுட்ப போக்கினை கையிலெடுத்துக்கொள்ளும்.<br />
நீராவி எந்திரங்களை முதலாளியப்புரட்சி பயன்படுத்தியதைப்போல.<br />
இணையத்தின் பாய்ச்சலை, தளையறு மென்பொருள் புரட்சி பயன்படுத்திக்கொண்டதைப்போல.<br />
<br />
இணையத்தையும், அதன் தெரிவுச்சுதந்திரத்தையும், முடிவுறா கொள்ளளவையும், வேகத்தையும், rss feed எனப்படும் செய்தியோடை தொழிநுட்பத்தையும் தமிழ் பெற்றுக்கொண்ட யுனிகோட் குறிமுறை எனும் வரப்பிரசாதத்தையும் இந்த வலைபதிவுப்புரட்சி கையிலெடுத்துக்கொண்டது.<br />
<br />
தமிழ் மணம் போன்ற திரட்டி ஒன்றின் வருகையோடு இவ்வதிகார உடைப்பு மேலும் கூர்மையடைகின்றது.<br />
<br />
தமிழ் வலைப்பதிவுகள், சிற்றிதழ் மேட்டிமையையும், வணிக இதழ் அதிகாரத்தையும் உடைத்துச் சாதித்தது இதனைத்தான்.<br />
அதாவது,<br />
<br />
ஒருவரின் கருத்து, எந்த விதமான வடிகட்டலுக்கும், தேர்வுக்கும், தரப்படுத்தலுக்கும் நேரத்தாமதத்துக்கு ஆளாகாமல் பொது வாசிப்புக்கு காட்சிப்படுத்தப்படுவது.<br />
<br />
எல்லாத்தரப்பு வாசர்களுக்கு முன்னாலும், எல்லாத்தரதிலுள்ள எழுத்துக்களும் ஒரேவரிசையில் காட்சிப்படுத்தப்படும் பெரும் சனநாயக மாற்றத்தினை தமிழ்மணம் சாதித்தது.<br />
<br />
இதழ்களது, இதழாசிரியர்களது தேர்வுகள் இல்லை.<br />
பிரபல பெயர்களின் ஆதிக்கம் குறைவு.<br />
<br />
தலைப்புக்களும், உள்ளடக்கமுமே நாம் ஒரு ஆக்கத்தை படிக்கச்சொடுக்குவதற்கு காரணமாயிற்று.<br />
<br />
ஒவ்வொரு ஆளுமையும், ஒவ்வொரு தனிமனித தேடலும் ரசனையும், எல்லாத்தரப்பு கருத்துக்களும், <br />
இன்னொரு மனித இடையீடு இன்றி வாசகருக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.<br />
இது எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் குழுவாதங்களையும் உடைக்கிறது.<br />
<br />
எழுத்தின் தரம், என்ற மாயத்தோற்றம் உடைந்து தகவலும், செய்திகளின் உடனடித்தன்மையும்,  முக்கியத்துவம் பெறுகிறது.<br />
எழுத்தின் தரம், தேடலின் செறிவு தெரிவுக்கான ஒரு கூறாக மாத்திரமே மாறிப்போகிறது.<br />
<br />
முகுந்த் fire fox இன் அண்மைய தமிழ் படுத்தலைப்பற்றி எழுதினால், அங்கே எனக்கு தகவல்களே தேவை.<br />
இன்னொருவருக்கு தேவைப்படாமல் போகலாம்.<br />
ஆனால் முகுந்த்து நான் ஒரு வாசகன் அதிகமாக கிடைத்துள்ளேன்.<br />
<br />
மைக்ரோசொப்டின் மிகப்பிந்திய நேர்மையீன நகர்வைப்பற்றிய வெங்கட்டின் பதிவை நான் ஆவலோடு காத்திருப்பேன். சுந்தர ராமசாமிக்கு அது தேவையற்றதாக இருக்கலாம்.<br />
<br />
குர் ஆனின் ஒரு சுலோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தப்படுத்தலும் இருக்கிறதா என்று ஆர்வத்தோடு நான் நல்லடியாரைப்படிப்பேன்.<br />
ஆனால் மானுஷ்யபுத்திரன் எனும் அப்துல் ஹமீது தனது உயிர்மை எனு பிரபல இதழில் அதை போடமாட்டார். அவர் அதை கடந்துவிட்டிருப்பார். நான் எதை வாசிக்கவேண்டும் எனும் அதிகாரத்தை கையிலெடுத்துவிட்டிருப்பார்.<br />
<br />
ஷ்ரேயா அக்கா எழுதும் வாழ்வின் அன்றாட சம்பவங்களை ஆசையாய் படிக்கும் வாய்ப்பு காலச்சுவட்டில் எனக்கு கிட்டப்போவதில்லை.<br />
<br />
சிற்றிதழ்கள், பல்வேறு போதாமைகளை கொண்டிருக்கிறது.<br />
அச்சுச்செலவு. மட்டுப்பாடான பக்க எண்ணிக்கை போன்றன தாண்ட முடியாத சிக்கல்க்ளாகிப்போகின்றன.<br />
குறித்த வடிவ எழுத்துக்களே, குறித்த கருத்து நிலைகள் சார் எழுத்துக்களே மறுபடி மறுபடி வருகின்றன.<br />
வடிவ உடைப்பு என்பது அங்கே குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவதுபோலத்தான்.<br />
("கவிதையில்" உடைப்பு, "சிறுகதையில்" புதுமை தான் நடக்கிறது)<br />
<br />
<br />
<br />
(G)கூகிள் ட்டோக் பற்றி நான் எழுதி அனுப்பினால், இலங்கையில் தயாராகும் லினக்ஸ் வழங்கல் பற்றி அறிமுகக்கட்டுரை அனுப்பினால் எந்த சிற்றிதழும் அதை மினக்கட்டு அச்சடிக்க வேண்டும் என்ற அவசியமிலை.<br />
<br />
ஆனால் அந்த தகவல்கள் தேவைப்படும் வாசகர்கள் இருக்கின்றனர்.<br />
<br />
எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் எல்லோருக்கும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.<br />
இடையில் நின்று தடுக்கவும் தேர்வுசெய்யவும் ஆளில்லை.<br />
ஒருசெக்கன் நேரம் கூட பிந்துவதற்கு வாய்ப்பில்லை.( சரீங்க ஒரு மணித்தியாலம்...! இப்பசரியா?)<br />
ஆக்கத்தின் அளவுபற்றி கணக்கில்லை.<br />
வழங்கப்பட்ட தொடுப்புக்களூடாக மேலும் விரிகிறது தேடல்<br />
பல்லூடக வழங்குகை, தெரிவிப்பு சாத்தியங்களை அதிகரிக்கிறது.<br />
<br />
<br />
எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் உடனடியான துலங்கல் பின்னூட்டமாய், நேரப்பிந்துகை ஏதுமற்று எழுத்தாளரை வந்தடைகிறது.<br />
கெட்ட வார்த்தையாகக்கூட.<br />
<br />
வாசகர் எழுத்தாளரை தனிப்பட உடனடியாக தொடர்புகொள்கிறார்.<br />
எழுத்தாளர் வாசகரோடு இணையத்தில் மடலாடுகிறார்.<br />
அணுக முடியா எழுத்தாள "நாயகர்" கள் மறைந்துபோய், வாசக- படைப்பாளி உறவு மேலும் நெருக்கமாகிறது.<br />
<br />
<br />
எழுத்தாளரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு வாசக ஊடாட்டம் அதிகரிக்கிறது.<br />
இது இன்னுமொரு உடைப்பு.<br />
<br />
வரலாற்றுப்போக்கில் இடைமாறுகட்டம் தெளிவாய் தெரிகிறது.<br />
வேகம் குறைந்ததாய், பழைய அதிகாரமாய் இதழ்கள் பின்னுக்குப்போகின்றன.<br />
அதிவேக தொழிநுட்பத்தோடு எழுத்துக்கள் கைகோர்த்து தளைகளை அறுக்கின்றன.<br />
<br />
கூடவே, புதுத்தளையறுப்பு, வலைப்பதிவுத்தலைமுறை, தனது அதிகாரங்களை தன்னோடு உருவாக்கி, வளர்க்கிறது.<br />
தனது உடைவுக்காக.<br />
<br />
அடுத பதிவில்...&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழுக்கு வந்த சோதனை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3624</link>
			<pubDate>Fri, 19 Aug 2005 02:44:30 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=786">ஊமை</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3624</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img385.imageshack.us/img385/6249/priyasaki1bp.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
எப்பொழுது இருந்தப்பா தமிழில் ப், ம், க், ன், த் என்றெல்லாம் சொற்களின் முனேயே வரத்தொடங்கியது. பார் பஞ்சாச்சரத்தாரிடம் தமிழ்க் கற்றேன் அந்த மனுசன் இப்படி எல்லாம் தமிழில் எழுதலாம் என்று சொலித்தரவே இல்லை. &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;<br />
<br />
தமிழை தமிழாக இருக்கவிடுங்கள். ஆங்கில மோகங்கொண்டு தமிழைக் கொலை செய்யாதீர் :oops:  :evil:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img385.imageshack.us/img385/6249/priyasaki1bp.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
எப்பொழுது இருந்தப்பா தமிழில் ப், ம், க், ன், த் என்றெல்லாம் சொற்களின் முனேயே வரத்தொடங்கியது. பார் பஞ்சாச்சரத்தாரிடம் தமிழ்க் கற்றேன் அந்த மனுசன் இப்படி எல்லாம் தமிழில் எழுதலாம் என்று சொலித்தரவே இல்லை. &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;<br />
<br />
தமிழை தமிழாக இருக்கவிடுங்கள். ஆங்கில மோகங்கொண்டு தமிழைக் கொலை செய்யாதீர் :oops:  :evil:                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உலக நீதி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=3733</link>
			<pubDate>Sun, 07 Aug 2005 09:24:16 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=629">hari</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=3733</guid>
			<description><![CDATA[                    உலக நீதி<br />
ஆசிரியர்: உலகநாதர்<br />
<br />
#1<br />
<br />
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்<br />
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்<br />
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்<br />
போகாத இடந்தனிலே போக வேண்டாம்<br />
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்<br />
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#2<br />
<br />
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்<br />
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்<br />
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்<br />
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்<br />
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்<br />
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்<br />
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#3<br />
<br />
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்<br />
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்<br />
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்<br />
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்<br />
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்<br />
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்<br />
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#4<br />
<br />
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்<br />
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்<br />
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்<br />
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்<br />
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்<br />
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்<br />
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
஠<br />
<br />
#5<br />
<br />
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்<br />
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்<br />
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்<br />
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்<br />
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்<br />
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்<br />
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#6<br />
<br />
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்<br />
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்<br />
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்<br />
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்<br />
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்<br />
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்<br />
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே<br />
<br />
#7<br />
<br />
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்<br />
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்<br />
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்<br />
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்<br />
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்<br />
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்<br />
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்<br />
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே<br />
<br />
#8<br />
<br />
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்<br />
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்<br />
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்<br />
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்<br />
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்<br />
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#9<br />
<br />
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்<br />
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்<br />
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்<br />
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்<br />
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்<br />
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#10<br />
<br />
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்<br />
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்<br />
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்<br />
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்<br />
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்<br />
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே<br />
<br />
#11<br />
<br />
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்<br />
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்<br />
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி<br />
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி<br />
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி<br />
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி<br />
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை<br />
ஏதெது செய்வானோ ஏமன்றானே<br />
<br />
#12<br />
<br />
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்<br />
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்<br />
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்<br />
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்<br />
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்<br />
மாறான குறவருடை வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#13<br />
<br />
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி<br />
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி<br />
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்<br />
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி<br />
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்<br />
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு<br />
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்<br />
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே<br />
<br />
முற்றும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உலக நீதி<br />
ஆசிரியர்: உலகநாதர்<br />
<br />
#1<br />
<br />
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்<br />
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்<br />
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்<br />
போகாத இடந்தனிலே போக வேண்டாம்<br />
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்<br />
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#2<br />
<br />
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்<br />
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்<br />
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்<br />
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்<br />
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்<br />
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்<br />
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#3<br />
<br />
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்<br />
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்<br />
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்<br />
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்<br />
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்<br />
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்<br />
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#4<br />
<br />
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்<br />
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்<br />
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்<br />
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்<br />
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்<br />
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்<br />
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
஠<br />
<br />
#5<br />
<br />
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்<br />
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்<br />
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்<br />
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்<br />
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்<br />
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்<br />
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#6<br />
<br />
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்<br />
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்<br />
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்<br />
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்<br />
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்<br />
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்<br />
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே<br />
<br />
#7<br />
<br />
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்<br />
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்<br />
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்<br />
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்<br />
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்<br />
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்<br />
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்<br />
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே<br />
<br />
#8<br />
<br />
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்<br />
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்<br />
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்<br />
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்<br />
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்<br />
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#9<br />
<br />
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்<br />
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்<br />
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்<br />
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்<br />
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்<br />
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#10<br />
<br />
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்<br />
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்<br />
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்<br />
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்<br />
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்<br />
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்<br />
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே<br />
<br />
#11<br />
<br />
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்<br />
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்<br />
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி<br />
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி<br />
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி<br />
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி<br />
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை<br />
ஏதெது செய்வானோ ஏமன்றானே<br />
<br />
#12<br />
<br />
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்<br />
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்<br />
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்<br />
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்<br />
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்<br />
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்<br />
மாறான குறவருடை வள்ளி பங்கன்<br />
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே<br />
<br />
#13<br />
<br />
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி<br />
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி<br />
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்<br />
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி<br />
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்<br />
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு<br />
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்<br />
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே<br />
<br />
முற்றும்.                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>