<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - தமிழ் /தமிழர்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:47 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=135</link>
			<pubDate>Thu, 20 Apr 2006 06:59:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=135</guid>
			<description><![CDATA[                    என்னுடைய Blogல் நான் எழுதியிருந்த கருத்துகள் இவை :<br />
<br />
&lt;b&gt;ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? &lt;/b&gt;<br />
<br />
நான் பல கருத்துக் களங்களில் கருத்தெழுதி வருபவன்... அதுபோல களங்களில் எல்லாம் சில ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான கருத்துகளை ஆபாச மொழியில் வைப்பதை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரிகளாக நினைக்கிறார்களோ என்று நினைப்பேன்.... எந்த இந்தியனும் ஈழத்தமிழன் மீது வெறுப்பு ஏதும் கொள்ளாத போது அவர்கள் ஏன் இது மாதிரி என்றும் நினைப்பேன்... புலிகள் வேறு, ஈழத்தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு இருக்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் வேறு, மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாதோ என்றும் நினைப்பேன்...<br />
<br />
ஆனால் என் நினைப்புக்கு வேட்டு வைக்கும் வகையிலும் சில மனிதநேயம் கொண்ட ஈழத்தமிழர்களை இணையத்தில் சந்தித்தேன்... அவர்கள் இந்தியா மீதும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அன்பு கொண்டிருக்கிறார்கள்... ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் கல்வி கற்று இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் வசதியாக வாழும் அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்தத் தவறுவதில்லை... தங்களுக்கு வாழ்வு கொடுத்த இந்தியாவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் புரிந்து கொண்டேன்....<br />
<br />
ஆனாலும், சில ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தபோது அவர்கள் தரப்பு நியாயமும் எனக்கு புரிந்தது... உதாரணத்திற்கு யாழ் எனும் கருத்துக் களத்தில் பல தோழர்கள் இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மிக மோசமாக அர்ச்சித்து வந்தனர்... அதை கண்ட என் ரத்தம் கொதித்தது... பதிலுக்கு நானும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை வைத்தேன்... அந்தக் களத்தின் பொறுப்பாளர் திரு. மோகன் அவர்கள் எனக்கு தனிமடல் மூலம் ஏன் இதுபோல செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்... நான் பதில் அனுப்பும் போது இந்திய தேசியம் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்கு சந்தோசமா? என்று கேட்டிருந்தேன்.... அதற்கு அவர் கொடுத்த பதிலில் 87 - 90ஆம் ஆண்டுகளில் நடந்த சில சம்பவங்களை (அவரே நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்) எடுத்துச் சொன்னார்... குறிப்பாக அவருக்கு மிகவும் தெரிந்த பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை எடுத்துச் சொன்னார்.... அதனாலேயே பல ஈழத்தமிழர்கள் இந்தியா என்றாலே வெறுக்கின்றனர்... அது போல சம்பவங்களை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டிருந்தார்....<br />
<br />
அவர் தரப்பில் பார்த்தால் அது நியாயம் தான்... 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையே நாம் இன்னும் மறக்கவில்லை... வெள்ளையன் என்றாலே நாம் வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்... 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்? மறக்கச் சொல்லுவதும் நியாயம் இல்லையே?<br />
<br />
இருந்தாலும் கூட அவர்கள் அந்த அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான் என்று இன்னமும் குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்.... இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் நியாயம் இது....<br />
<br />
ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறது.... சிங்கள ராணுவத்துக்கோ, அல்லது ஈழச் சுதந்திரத்துக்கு போராடும் எந்த ஒரு அமைப்புக்கோ ஆதரவு தருவதில்லை... நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...<br />
<br />
என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....<br />
<br />
சரி... ஈழத்தமிழர்களில் இன்னொரு வகையினரைப் பார்ப்போம்.... 83க்கு பிறகு ஈழத்தில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஒரு வகை.... 89ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அங்கு கல்வியை பாதியில் விட்டு வந்தவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தமிழகத்தில் அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.... வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்த ஈழ இளைஞர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்....<br />
<br />
இது போன்றவர்கள் இன்னமும் இந்தியாவை மறக்க முடியாமல் வருடம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இங்கு வந்துப் போகிறார்கள்... இவர்களுக்கு ஈழத்தை விட இந்தியாவின் மீதே ஈர்ப்பு அதிகம்... இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.... உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...<br />
<br />
கருத்து.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் ஒரு ஈழத்தமிழரே... ஆனால் அவர் நடத்தும் கருத்துக் களத்தில் இந்தியப் பிரச்சினைகளும், தமிழக அரசியல், சினிமா என்றே விவாதிக்க இடம் அளித்துள்ளார்... தமிழக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்.... விடுமுறையில் இந்தியா வந்திருக்கும் இவர் தன் விடுமுறையை ஜாலி டூராக எண்ணாமல் இந்திய மக்களைப் பற்றிய Case Study ஆக எடுத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறார்.... அதைப் போலவே கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்ற நண்பரும் கூட (83க்கு முன்னாலேயே ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்) இந்தியா மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார்...<br />
<br />
இவ்வாறாக இரு வேறு கருத்துக் கொண்ட மக்களாகவே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.... ஒட்டு மொத்தமாக இந்தியாவை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று கூறுவது தவறு... 87 - 90ஆம் ஆண்டைய சம்பவங்களே ஒரு சிலருக்கு இந்தியா மீது வெறுப்பு வர காரணம்... ஆனால் அவர்களும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...<br />
<br />
விரைவில் ஈழம் மலர்ந்தால் இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த கவுரவம் கொடுக்கும்.... இந்தியா மீது அவர்களுக்கு இருக்கும் கசப்புணர்வும் குறையக்கூடும்.... ஈழம் மலரட்டும்....                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    என்னுடைய Blogல் நான் எழுதியிருந்த கருத்துகள் இவை :<br />
<br />
&lt;b&gt;ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? &lt;/b&gt;<br />
<br />
நான் பல கருத்துக் களங்களில் கருத்தெழுதி வருபவன்... அதுபோல களங்களில் எல்லாம் சில ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான கருத்துகளை ஆபாச மொழியில் வைப்பதை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரிகளாக நினைக்கிறார்களோ என்று நினைப்பேன்.... எந்த இந்தியனும் ஈழத்தமிழன் மீது வெறுப்பு ஏதும் கொள்ளாத போது அவர்கள் ஏன் இது மாதிரி என்றும் நினைப்பேன்... புலிகள் வேறு, ஈழத்தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு இருக்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் வேறு, மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாதோ என்றும் நினைப்பேன்...<br />
<br />
ஆனால் என் நினைப்புக்கு வேட்டு வைக்கும் வகையிலும் சில மனிதநேயம் கொண்ட ஈழத்தமிழர்களை இணையத்தில் சந்தித்தேன்... அவர்கள் இந்தியா மீதும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அன்பு கொண்டிருக்கிறார்கள்... ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் கல்வி கற்று இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் வசதியாக வாழும் அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்தத் தவறுவதில்லை... தங்களுக்கு வாழ்வு கொடுத்த இந்தியாவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் புரிந்து கொண்டேன்....<br />
<br />
ஆனாலும், சில ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தபோது அவர்கள் தரப்பு நியாயமும் எனக்கு புரிந்தது... உதாரணத்திற்கு யாழ் எனும் கருத்துக் களத்தில் பல தோழர்கள் இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மிக மோசமாக அர்ச்சித்து வந்தனர்... அதை கண்ட என் ரத்தம் கொதித்தது... பதிலுக்கு நானும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை வைத்தேன்... அந்தக் களத்தின் பொறுப்பாளர் திரு. மோகன் அவர்கள் எனக்கு தனிமடல் மூலம் ஏன் இதுபோல செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்... நான் பதில் அனுப்பும் போது இந்திய தேசியம் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்கு சந்தோசமா? என்று கேட்டிருந்தேன்.... அதற்கு அவர் கொடுத்த பதிலில் 87 - 90ஆம் ஆண்டுகளில் நடந்த சில சம்பவங்களை (அவரே நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்) எடுத்துச் சொன்னார்... குறிப்பாக அவருக்கு மிகவும் தெரிந்த பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை எடுத்துச் சொன்னார்.... அதனாலேயே பல ஈழத்தமிழர்கள் இந்தியா என்றாலே வெறுக்கின்றனர்... அது போல சம்பவங்களை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டிருந்தார்....<br />
<br />
அவர் தரப்பில் பார்த்தால் அது நியாயம் தான்... 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையே நாம் இன்னும் மறக்கவில்லை... வெள்ளையன் என்றாலே நாம் வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்... 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்? மறக்கச் சொல்லுவதும் நியாயம் இல்லையே?<br />
<br />
இருந்தாலும் கூட அவர்கள் அந்த அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான் என்று இன்னமும் குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்.... இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் நியாயம் இது....<br />
<br />
ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறது.... சிங்கள ராணுவத்துக்கோ, அல்லது ஈழச் சுதந்திரத்துக்கு போராடும் எந்த ஒரு அமைப்புக்கோ ஆதரவு தருவதில்லை... நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...<br />
<br />
என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....<br />
<br />
சரி... ஈழத்தமிழர்களில் இன்னொரு வகையினரைப் பார்ப்போம்.... 83க்கு பிறகு ஈழத்தில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஒரு வகை.... 89ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அங்கு கல்வியை பாதியில் விட்டு வந்தவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தமிழகத்தில் அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.... வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்த ஈழ இளைஞர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்....<br />
<br />
இது போன்றவர்கள் இன்னமும் இந்தியாவை மறக்க முடியாமல் வருடம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இங்கு வந்துப் போகிறார்கள்... இவர்களுக்கு ஈழத்தை விட இந்தியாவின் மீதே ஈர்ப்பு அதிகம்... இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.... உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...<br />
<br />
கருத்து.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் ஒரு ஈழத்தமிழரே... ஆனால் அவர் நடத்தும் கருத்துக் களத்தில் இந்தியப் பிரச்சினைகளும், தமிழக அரசியல், சினிமா என்றே விவாதிக்க இடம் அளித்துள்ளார்... தமிழக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்.... விடுமுறையில் இந்தியா வந்திருக்கும் இவர் தன் விடுமுறையை ஜாலி டூராக எண்ணாமல் இந்திய மக்களைப் பற்றிய Case Study ஆக எடுத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறார்.... அதைப் போலவே கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்ற நண்பரும் கூட (83க்கு முன்னாலேயே ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்) இந்தியா மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார்...<br />
<br />
இவ்வாறாக இரு வேறு கருத்துக் கொண்ட மக்களாகவே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.... ஒட்டு மொத்தமாக இந்தியாவை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று கூறுவது தவறு... 87 - 90ஆம் ஆண்டைய சம்பவங்களே ஒரு சிலருக்கு இந்தியா மீது வெறுப்பு வர காரணம்... ஆனால் அவர்களும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...<br />
<br />
விரைவில் ஈழம் மலர்ந்தால் இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த கவுரவம் கொடுக்கும்.... இந்தியா மீது அவர்களுக்கு இருக்கும் கசப்புணர்வும் குறையக்கூடும்.... ஈழம் மலரட்டும்....                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=288</link>
			<pubDate>Mon, 10 Apr 2006 05:57:23 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=288</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் &lt;/b&gt;<br />
<br />
இன்குலாப் <br />
<br />
<br />
தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.<br />
<br />
 சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.<br />
<br />
"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.<br />
<br />
சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.<br />
<br />
இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.<br />
<br />
எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.<br />
<br />
விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.<br />
<br />
இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.<br />
<br />
இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.<br />
<br />
 மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).<br />
<br />
தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:<br />
<br />
“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).<br />
<br />
பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.<br />
<br />
மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''<br />
<br />
பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.<br />
<br />
இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:<br />
<br />
"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''<br />
<br />
இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் தலைவர் என்ற வாதத்தை சுபவீ, சரியான தர்க்கத்தினால் மறுக்கிறார்:<br />
<br />
“... ஒரு சாதிக்குள்ளேயே பல குழுக்களும் தலைவர்கள் பலரும் இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதிகளுக்கும் ஒரு தலைவர் என்பது கற்பனை. சாதிகள் அல்லது தொகுப்புகளின் அடிப்படையில் "ஒற்றைத் தலைவர்' ஒரு நாளும் வரமுடியாது. இன்றைக்கும் தங்களின் "சாதிவட்டம்' என்பதுதான் சாதித் தலைவர்களின் பலம் பலவீனம். அவர்கள் ஒரு சாதியை விட்டு ஒரு சாதிச் சங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை, எல்லாச் சாதியினருக்கும் தலைவராக முடியாது'' (பக்கம்: 168 69).<br />
<br />
 பெரியார், "பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்' என்று முத்திரை குத்தும் தலித்தியச் சிந்தனையாளர்கள், இது குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டும். பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. முதுகளத்தூர் கலவரத்தின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு, கம்யூனிஸ்டுகளால் கூடத் துணிய முடியாதது. வெண்மணி குறித்து "விடுதலை' தலையங்கம் எழுதியதை ஏற்றுக் கொண்டுதான் அவரை விமர்சிக்க வேண்டும்.<br />
<br />
பெண்ணியம் குறித்த நிலைப்பாட்டில், ஒட்டுமொத்த தமிழ் மரபுச் சிந்தனையாளர்களுக்கும் எதிராக ஒலித்த ஒரு குரல் பெரியாருடையது மட்டும்தான். பெரியாரை ஆழ்ந்து பயிலும்போது, பெண் விடுதலை குறித்து அவர் வெளியிட்டது வெறும் அதிர்ச்சி மதிப்புச் சார்ந்தது என்பது, நியாயமற்ற குற்றச் சாட்டாகவே நிற்பது புலனாகும். அவருடைய தேடலில் அவர் கண்டடைந்த முடிவுகள் ஆணாதிக்கத்துக்கும், சாதியத்துக்கும் அதிர்ச்சியளிப்பவைதான். கோப்பர் நிகசும், கலிலியோவும் கண்டடைந்த முடிவுகளை அறிவியலாளர்கள் வெறும் அதிர்ச்சி மதிப்புக்குரியவை என்று கூறுவார்களா? எனினும், பழமைவாதிகளுக்கு அவை அதிர்ச்சியளித்தது உண்மைதான். சிந்தனையாளர்களின் ஆய்வு முடிவுகள், எத்தகைய தரவுகளின் பரிசீலனையில் உருவானவை என்பதை நோக்குவதுதான் தன்மையானது. பெரியாரியத்தை வசைபாடும் தோழர்கள், மானுட விடுதலை குறித்த பெரியாரியப் பார்வைக்கு நியாயம் செய்யவில்லை.<br />
<br />
உண்மையான பெரியாரியவாதிகளுக்கும் பல செய்திகளைச் சொல்ல வேண்டும். 1967 இல் இருந்து பெரியாரை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் கழகங்கள்தாம் தமிழகத்தை ஆளுகின்றன. இதற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைவிடக் கூடுதலாக தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கழகங்களின் ஆட்சியில்தான். இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் கழக முன்னோடிகளின் பங்கு கணிசமானது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட காவல் துறையின் அத்துமீறல்கள், நாகரிக உலகைத் தலைகுனியச் செய்யும். இந்தக் கொடுமைகளை முதன் முதலாக தலித்துகள்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் அவ்வப்பொழுது கண்டனம் செய்கின்றன.<br />
<br />
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலிய ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட கட்சிகள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான சமரசமற்ற ஒருபோராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை? இந்தக் கட்சிகள் அனைத்தும் "பெரியார் சுழி'யோடுதான் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. எனில், சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும்போது, மவுனம் காக்க வேண்டும் என்று பெரியார் கற்பித்தாரா? இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களின் சாதிய ஈடுபாடு, தமிழக வரலாற்றை நாறச் செய்கிறதே! இதற்கு இக்கழகங்களின் தலைவர்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள்?<br />
<br />
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால் பல அத்துமீறல்கள் நடந்தன; ஊழல் புரையோடிப் போனது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான கட்சித் தலைவர்கள், லெனினை முன்னிறுத்தியே தங்கள் தவறுகளைத் தொடர்ந்தனர். சினம் கொண்ட இளைஞர்கள் கட்சியை வெறுத்தனர். கட்சி கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட லெனினை வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதில் உலக முதலாளியம் முன்னின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு கட்சியின் தவறுகள் இடங்கொடுத்தன. சோவியத் யூனியன் சிதறியபோது, லெனினுடைய சிலையும் சேர்ந்தே சிதறியது.<br />
<br />
கழகங்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளால், தன்னுணர்வு பெற்ற தலித்துகள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அந்த வெறுப்பு, பெரியார் எதிர்ப்பாக மாறக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்கு, பார்ப்பனியம் தூபம் போடலாம். அதற்கு முன்பு கழகங்கள் தன்நெஞ்சறிவது பொய்க்கக்கூடாது. பெரியாருக்கு நியாயம் செய்வது, இன்று தலித்துகளுக்கு நியாயம் செய்வதுதான்.<br />
<br />
<br />
<br />
ந்ன்றி - தலித் முரசு / ஆகஸ்டு05<span style="font-weight: bold;" class="mycode_b"></span>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் &lt;/b&gt;<br />
<br />
இன்குலாப் <br />
<br />
<br />
தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.<br />
<br />
 சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.<br />
<br />
"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.<br />
<br />
சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.<br />
<br />
இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.<br />
<br />
எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.<br />
<br />
விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.<br />
<br />
இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.<br />
<br />
இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.<br />
<br />
 மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).<br />
<br />
தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:<br />
<br />
“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).<br />
<br />
பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.<br />
<br />
மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''<br />
<br />
பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.<br />
<br />
இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:<br />
<br />
"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''<br />
<br />
இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் தலைவர் என்ற வாதத்தை சுபவீ, சரியான தர்க்கத்தினால் மறுக்கிறார்:<br />
<br />
“... ஒரு சாதிக்குள்ளேயே பல குழுக்களும் தலைவர்கள் பலரும் இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதிகளுக்கும் ஒரு தலைவர் என்பது கற்பனை. சாதிகள் அல்லது தொகுப்புகளின் அடிப்படையில் "ஒற்றைத் தலைவர்' ஒரு நாளும் வரமுடியாது. இன்றைக்கும் தங்களின் "சாதிவட்டம்' என்பதுதான் சாதித் தலைவர்களின் பலம் பலவீனம். அவர்கள் ஒரு சாதியை விட்டு ஒரு சாதிச் சங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை, எல்லாச் சாதியினருக்கும் தலைவராக முடியாது'' (பக்கம்: 168 69).<br />
<br />
 பெரியார், "பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்' என்று முத்திரை குத்தும் தலித்தியச் சிந்தனையாளர்கள், இது குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டும். பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. முதுகளத்தூர் கலவரத்தின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு, கம்யூனிஸ்டுகளால் கூடத் துணிய முடியாதது. வெண்மணி குறித்து "விடுதலை' தலையங்கம் எழுதியதை ஏற்றுக் கொண்டுதான் அவரை விமர்சிக்க வேண்டும்.<br />
<br />
பெண்ணியம் குறித்த நிலைப்பாட்டில், ஒட்டுமொத்த தமிழ் மரபுச் சிந்தனையாளர்களுக்கும் எதிராக ஒலித்த ஒரு குரல் பெரியாருடையது மட்டும்தான். பெரியாரை ஆழ்ந்து பயிலும்போது, பெண் விடுதலை குறித்து அவர் வெளியிட்டது வெறும் அதிர்ச்சி மதிப்புச் சார்ந்தது என்பது, நியாயமற்ற குற்றச் சாட்டாகவே நிற்பது புலனாகும். அவருடைய தேடலில் அவர் கண்டடைந்த முடிவுகள் ஆணாதிக்கத்துக்கும், சாதியத்துக்கும் அதிர்ச்சியளிப்பவைதான். கோப்பர் நிகசும், கலிலியோவும் கண்டடைந்த முடிவுகளை அறிவியலாளர்கள் வெறும் அதிர்ச்சி மதிப்புக்குரியவை என்று கூறுவார்களா? எனினும், பழமைவாதிகளுக்கு அவை அதிர்ச்சியளித்தது உண்மைதான். சிந்தனையாளர்களின் ஆய்வு முடிவுகள், எத்தகைய தரவுகளின் பரிசீலனையில் உருவானவை என்பதை நோக்குவதுதான் தன்மையானது. பெரியாரியத்தை வசைபாடும் தோழர்கள், மானுட விடுதலை குறித்த பெரியாரியப் பார்வைக்கு நியாயம் செய்யவில்லை.<br />
<br />
உண்மையான பெரியாரியவாதிகளுக்கும் பல செய்திகளைச் சொல்ல வேண்டும். 1967 இல் இருந்து பெரியாரை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் கழகங்கள்தாம் தமிழகத்தை ஆளுகின்றன. இதற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைவிடக் கூடுதலாக தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கழகங்களின் ஆட்சியில்தான். இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் கழக முன்னோடிகளின் பங்கு கணிசமானது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட காவல் துறையின் அத்துமீறல்கள், நாகரிக உலகைத் தலைகுனியச் செய்யும். இந்தக் கொடுமைகளை முதன் முதலாக தலித்துகள்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் அவ்வப்பொழுது கண்டனம் செய்கின்றன.<br />
<br />
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலிய ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட கட்சிகள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான சமரசமற்ற ஒருபோராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை? இந்தக் கட்சிகள் அனைத்தும் "பெரியார் சுழி'யோடுதான் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. எனில், சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும்போது, மவுனம் காக்க வேண்டும் என்று பெரியார் கற்பித்தாரா? இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களின் சாதிய ஈடுபாடு, தமிழக வரலாற்றை நாறச் செய்கிறதே! இதற்கு இக்கழகங்களின் தலைவர்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள்?<br />
<br />
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால் பல அத்துமீறல்கள் நடந்தன; ஊழல் புரையோடிப் போனது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான கட்சித் தலைவர்கள், லெனினை முன்னிறுத்தியே தங்கள் தவறுகளைத் தொடர்ந்தனர். சினம் கொண்ட இளைஞர்கள் கட்சியை வெறுத்தனர். கட்சி கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட லெனினை வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதில் உலக முதலாளியம் முன்னின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு கட்சியின் தவறுகள் இடங்கொடுத்தன. சோவியத் யூனியன் சிதறியபோது, லெனினுடைய சிலையும் சேர்ந்தே சிதறியது.<br />
<br />
கழகங்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளால், தன்னுணர்வு பெற்ற தலித்துகள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அந்த வெறுப்பு, பெரியார் எதிர்ப்பாக மாறக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்கு, பார்ப்பனியம் தூபம் போடலாம். அதற்கு முன்பு கழகங்கள் தன்நெஞ்சறிவது பொய்க்கக்கூடாது. பெரியாருக்கு நியாயம் செய்வது, இன்று தலித்துகளுக்கு நியாயம் செய்வதுதான்.<br />
<br />
<br />
<br />
ந்ன்றி - தலித் முரசு / ஆகஸ்டு05<span style="font-weight: bold;" class="mycode_b"></span>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாயகக் கொள்கையும் தமிழர்களும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=322</link>
			<pubDate>Fri, 07 Apr 2006 12:49:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2350">Naasamaruppan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=322</guid>
			<description><![CDATA[                    ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது. <br />
<br />
LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the  very survival of the ethiai cgroup.<br />
<br />
‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்தால் அந்த இனம் தலை தூக்க முடியாத ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, அந்த இனம் உயிரோடு ஒட்டிய வாழ்வு பெறுவதற்கும் தாய கம் மிக மிக முக்கியமானதாகும் என மேலைநாட்டறிஞனின் கூற்றின் ஆளத்தையும், நீளத்தையும் பார்ப்பதானால் ஒரு கால் தன் தாயகத்தை இழந்த யூத இனம், தன்னுள் எத்தனை வல்லமைகளை, அறிவை, ஆற்றலை, ஆளுமையை, நாகரிக செழுமையை உள்ளடக்கியிருந்தும் உலக நாடெல்லாம் அனாதையாக அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடெல்லாம் ஓட ஓட வெருட்டியதையும் கிட்லர் என்ற சர்வதிகாரி துரத்தி துரத்தி சுட்டழித்ததையும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பெற்று இன்று உலகை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள சிறப்பு தாயக மண்ணின் அவசியத்திற்கோர் எடுத்துக்காட்டு.<br />
<br />
அமெரிக்காவின் ஆதிக்குடிகளும் பேரு, மெச்சிக்கோ நாகரிகத்தின் தந்தைகளான செவ்விந்தியர்கள். இன்று மயோலிஸ் மக்கள் என அழைக்கப்படும் அன்று ஈழத்தின் மாந்தையை ஆண்ட மயனின் வாரிசுகள். பிரித்தானிக்க கலைக்களஞ்சியத்தால் சிறந்த அறிவாளர்கள் வானசாஸ்த்திரிகள், கட்டிடக்கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் கணித மேதைகள சிவசர்ப்ப வழிபாட்டுக்காறர்கள் என அவர்களை எதிர்த்து அழித்த ஸ்பானியர்களே வாய்விட்டுக் கூறும் செவ்விந்தியர்கள் தாயகத்தை இழந்ததால் உலக வரலாற்றில் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். இது வரலாறு தரும் பாடம். எனவே தாயகம் ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாகும்.<br />
<br />
நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம், இயக்கப் பின்னணி, மனிதனுடைய வாழ்வு அதை காலம் காட்டுகின்றது. வரலாற்றுக் கால வரை முறையும், நில இயல்பும் தேசிய இனத்திற்கு இரு கண்களுக்கு ஒப்பானவை என அறிஞர் ரிட்;சாட் ஹேக்கிலியூட் கூறுவதுவும், மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும், வளர்ச்சியும், வரட்சியும், தளர்ச்சியும், நகைப்பும், ஏக்கமும், ஒளியும், இருளும், நிலயியல் கூறுகளின் பின்னணியைப் பொறுத்து அமைகின்றன. எனவே மனித வரலாற்றின் இயக்கம் நில இயல் என (History is eyeogr aph in motin) என்ற நூல் அறிஞர் ஹெடர் (Hador)  கூறியது. மனிதனின் வாழ்வின் வளர்ச்சிக்கு நிலம் தாயகம் எத்தனை ஊந்து சக்தி என்பதை எடுத்துக்காட்டுகின்றது.<br />
<br />
குழந்தைக்குத் தாய் எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்குத் தாயகம். ஒரு தாயிடம் இருந்து குழந்தை தன் வளர்ச்சிக்கு வேண்டியதைப் பெறுவது போல தாயகம் மனித பரிணாம வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும்- படைத்தளித்து வருகின்றது. இதை உணர்ந்த பட்டுக்கோட்டையார் ‘மனிதன் ஆரம்பமாவதுவும் பெண்ணுக் குள்ளே. அவன் ஆடி அடங்குவதுவும் மண்ணுக்குள்ளே" என்று பாடினார் எனவே மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்குமுள்ள உறவு போன்றதாகும்.<br />
<br />
ஒருகாலத்தில் சீனாவின் பெரிய அறிஞன் ஒருவன் உலகை சுற்றிப் பார்க்கத் தயாரானான். சீனாவின் சர்க்கரவர்த்தியை சந்தித்து விடைபெறச் சென்றான். அறிஞனை சந்தித்து விடயங்களைத் தெரிந்து கொண்ட சக்கரவர்த்தி அறிஞனின் உலக வலம் நலமே முடிய வாழ்த்தி அவருக்கு ஒரு முடிச்சை பரிசளித்து அனுப்பி வைத்தார். பரிசை பெற்றுக் கொண்ட அறிஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பல நாட்களின் பின் ஒரு நாள் அறிஞருக்குச் சக்கரவர்த்தி அளித்த பரிசு ஞாபகம் வந்தது. எனவே அதைத் தேடி எடுத்து பிரித்தார். அங்கே, பொன்னோ, பொருளோ, பணமோ இருக்கவில்லை. பயணிகளுக்குப் பரிசளிப்பது யோவற்றை? ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னனான சீனிச் சக்கரவர்த்தி அறிஞருக்கு அளித்த பரிசு அவையல்ல. அவற்றுக்கு மேலான கிருஷ்ன பரமாத்மா மகாவலி மன்னனிடம் கேட்ட மூன்றடி மண்ணல்ல. ஒரே ஒரு பிடி மண் ஏன்? எதற்கு?<br />
<br />
பொதுவாக அறிஞர்கள் சென்ற இடமெல்லாம் கிடைக்கும் சிறப்பால் ‘யாதுமூரே யாவரும் கேளீர்’ என அமர்ந்து விடுவார்கள். அந்த நிலையையும் நினைப்பையும் மாற்றி தாயகத்தை நினைத்துத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஒரு பிடி மண்ணை பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அறிஞர் நாடு திரும்பினார். எனவே தாயகத்தின் அவசியம் தாயகத்தை நேசிப்பவர்களுக்கே புரியுமே ஒழிய அதை யாசித்தவர்களுக்;குத் தெரிய அவசியமில்லை.<br />
<br />
இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாகர், இயக்கர்தான் என்பதை பௌத்த சிங்கள பாளி வரலாற்று நூல்களான மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் என்பன மறுப்பின்றி ஏற்றிருக்கின்றன. இவர்கள் அன்று திராவிடர்கள், சிவநெறினர், தமிழின் ஆரம்ப மொழியான எலுவைப் பேசியவர்கள் நாகர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டு அணுபவித்த வடபகுதியில் இன்றைய மொழி தமிழ். அது போல இயக்கர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டனுபவித்த தென்கிழக்கிலங்;கையின் இன்றைய மொழி தமிழ். எனவே எலு மொழியின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் தமிழ் மொழி. ஆகவே நாகர் இயக்கர் தமிழர்கள். இவர்கள் வடக்கையும் தென்கிழக்கையும் பரம்பரைத் தாயகமாகக் கொண்டவர்கள்.<br />
<br />
விஜயன் பௌத்த கதை கட்டுக்கதை என்று பௌத்த சிங்கள புத்திஜீவிகள் ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டதால். இனி அதில் இரண்டாம் பேச்சு மூச்சிக்கு இடமில்லை. பௌத்தம் இலங்கையில் காலூன்றிய காலம் நாகம ன்னன் தேவநம்பிய தீசன் கி.மு 244-207 காலமாகும்.<br />
<br />
தேவநம்பிய தீசனின் தாய்தந்தையர்கள், சிவநெறியுடையவர்கள், நாகபரம்பரை. எவ்வாறு கௌதம புத்தர் ஒரு சிவநெறியாளனாக இருந்து பௌத்த மதத்தை தோற்றுவித்தாரோ, அவ்வாறே தேவநம்;பிய தீசனும் சிவநெறியாளனாகப் பிறந்து வளர்ந்து அரசனானாதும் பௌத்தத்தை ஆதரித்தானே ஒழிய அவன் பௌத்த சிங்களவனல்ல. பௌத்த தமிழன் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட குடிகள் சிவநெறியை மூலமாகக் கொண்ட நாகர்கள். அவர்கள் பௌத்தத்தை தழுவினார்களே ஒழிய சிங்களவர்களல்ல. சிங்களம் என்ற வார்த்தை உலகில் எப்பாகத்திலும் அன்றில்லை. இல்லாத மொழி அடிப்படையில் ஒரு இனத்தை பின் எழுதிய வரலாற்றாசிரியர்கள் பௌத்தர்களை சிங்களவர் எனக் குறித்தது மிக மிகத் தவறாகும். <br />
<br />
பிழையான வரலாற்றுப் பதிவாகும். ‘தமிழர்களின் பழமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலே உண்டு "என 1919ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் வெளிவந்த டெயிலி நீயுஸ் பத்திரிகைக் கட்டுரையில் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார். இவர் எழுதுவதற்கு முன் 1917ம் ஆண்டு கதிரோடையில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மையமாக வைத்தே இக்கட்டுரையை எழுதினார். எனவே ஈழத்தின் ஆதிவாசிகள் தமிழர்கள். ஆகவே ஈழம் சிங்களவரிலும் பார்க்க தமிழரின் தாயகம் என்பதை சிங்களத் தலைமைகள் வெறுக்கவும், மறுக்கவும், மறைக்கவும் முடியாது. <br />
<br />
தேவநம்பிய தீசன் கி.மு244-207 காலத்தில் நாகரும் இயக்கருமே வாழ்ந்தார்கள். சிங்களம் என்ற வார்த்தை உலகில் திருவிலுமில்லை, கருவிலுமில்லை. தேவநம்பியதீசனின் பிரஜைகள் நாகர்கள். அவர்கள் சிங்களவரல்ல. சிங்கள மொழியே 10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார்.<br />
<br />
6ம் நூற்றாண்டில் சிங்களம் என்ற சொல்லில்லை. இதை மகாவம்சம் கூறவில்லை. 17ம் நூற்றாண்டில் கண்டியில் சிறை இருந்த றொபட் நொக்ஸ் எழுதிய (A Histor ical relation of the islandof ceylon) என்ற நூல் குறிப்பில் தான் தப்பியோடி வந்த போது அனுராதபுரத்தில் இருந்தவர்களால் சிங்களத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தான் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேச வேண்டி இருந்தது என்றும் அவர்கள் தமிழே பேசினார்கள் எனவும் குறித்துள்ளார்.<br />
<br />
இலங்கையை ஆண்ட மன்னர்கள் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாகவும், அன்னிய தொடர்பு மொழியாகவும் வைத்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளுண்டு. எனவே சிங்களம், சிங்கள இனம் என்பவை காலத்தால் பிந்திய அடையாளங்களாகும். இக்காலத்திற்க்கு முந்தியவர்கள் பௌத்த தமிழர்களே ஒழிய பௌத்த சிங்களவர்களல்லர். இன்றைய ஜனாதிபதி பிறந்து வளர்ந்து வாழும் தங்கால தங்காலை என்ற தமிழ் பெயரின் திரிவாகும். ஏன் 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னனாக கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனுக்கும், பிரான்சு மன்னன் 16ம் லூகிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இதை பாண்டிச்சேரி நூதனசாலையில் இன்றும் பார்க்கலாம். 1815ம் ஆண்டு கண்டி பிரதானிகளுக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குமிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தில் கண்டி சி;ங்களப் பிரதிநிதிகளே தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள்.<br />
<br />
தென்னிந்திய அரசுகளில் திராவிடர்கள் திராவிடர் செல்வாக்கு மிகுந்திருந்த காலம் முதல் இலங்கையின் வரலாற்றில் திராவிடர் செல்வாக்கு இருந்திருக்கிறது. இன்றுள்ள சிங்கள இனத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இனத்தவர்களுள் திராவிடரும் அடங்குவர். அவர்கள் இத்தீவுக்கு எப்போ வந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பழைய காலம் தொட்டே இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு Sri Lanka the holocakst and after   என்ற நூலில் அதன் ஆசிரியர் எல்.பியதாச குறித்துள்ளார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் தமிழர்கள் மிக செல்வாக்குப் பெற்று வாழ்ந்தார்கள் என அறிஞர் கிளாரன்ஸ் மலோனி சுட்டிக் காட்டுகிறார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கில் தமிழர் ஆட்சி நிலை பெற்றிருந்தது. சிவனின் மகன் முருகனின் ஆட்சி கதிர்காம த்தில் இடம்பெற்றது. வடக்கு, தெற்கு, மேற்குவரைத் தமிழர் ஆண்டார்கள் என ரோம இராச்சியத்திற்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்ற நூலில் 123ம் பக்கத்தில் அறிஞர் வார்மிண்டன் குறித்துள்ளார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழர் முக்கிய பங்கைப் பெற்றிருந்தனர் எனக் கலாநிதி எஸ்.ப ரணவிதான கூறியுள்ளார். அன்னியரான போர்த்துக்கீசர்கள் 1581 ஆண்டு கோட்டை அரசைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வடகிழக்கு ஆட்சியையும் தம் வசமாக்கினார்கள். இருந்தும் வன்னிப் பிரதேசம் தனியரசாகவும், கண்டி தனித் தமிழரசாகவும் இருந்தன. கி.பி 1560ல் யாழ்ப்பாண ஆட்சி போர்த்திக்கீசர் வசமானது. 1591ல் போர்த்திக்கீசர் யாழ்ப்பாணத்தில் தங்கள் பிரதிநிதியாக எதிர் மன்னசிங்கம் என்பவனை நியமித்தார்கள். அதன் பின் சங்கிலிகுமாரன் ஆட்சிக்கு வந்தான். இவன் சிலகாலம் அவர்களோடு ஒத்துழைத்தான். பின் அவர்களை எதிர்த்தான். இக்காலத்தில் வன்னியிலிருந்த கொட்டியாற்றுப் பற்று, பழுகாமம், பாணமை, யால, மண்முனை என்ற பகுதிகள் சுதந்திரமாக இயங்கின.<br />
<br />
போர்த்துக்கீசர் காலத்தில் இலங்கையில் இருந்த தமிழரசு குறித்து டி.குரோசலஸ் என்பவர் வாந வநஅடிழசயட உழபெரநளவ ழக உநலடழn என்னும் நூலை எழுதினார். அதில் இந்த அமைதியான யாழ்ப்பாண பட்டினம் என்ற சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல, அதன் அண்மையிலுள்ள பகுதிகள் எல்லாம் அதனைச் சேர்த்தது. ஒரு உப்புநீர் நிலையால் பிரிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியும் அதனோடு சேர்ந்தது. வலிகாமம், தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வடமராட்சி என்ற பகுதிகளையும் உள்ளடக்கி வன்னி வரை பரந்து குறுக்காக, மன்னார். திருகோணமலை என்பவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய நிலப்பரப்பாகும்.<br />
<br />
போர்த்திக்கீசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டச்சிக்காரர்கள் இலங்கையின் வளங்களை கைப்பற்றுதலில் கவனமாக இருந்ததால் சுதேசிகளின் விருப்பங்களை அனுசரித்தே நடந்தார்கள். அவர்கள் சுதேசிகளின் தேசியத்தை மதித்து, தமிழரைத் தமிழ் மக்களின் மரபுக்கிணங்கவும் சிங்களவர்களை சிங்கள மரபுக்கிணங்கவும் ஆட்சி செய்தார்கள். டச்சுக்கார தேசாதிபதிகளான பின்வருவோர் கூறிய வரலாற்றுத் தரவுகளைப் பார்ப்போம்.<br />
<br />
யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சுக் கொமாண்டரான பவிலோன் ஒருவர் அவர் 1665ல் எழுதிய குறிப்பில் 'வன்னி உட்பட கிழக்கில் திருகோணமலை முதல் மேற்கில் கற்பிட்டி வரையும், யாழ்பாணத்தை சுற்றியுள்ள தீவுகள் மன்னார்த் தீவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு யாழ்ப்பாண அரசு எனக் குறித்துள்ளார்.<br />
<br />
வான்கோயன்ஸ்: (1675 இருந்த டச்சு தேசாதிபதி)<br />
<br />
யாழ்பாணம் மட்டக்களப்பு, பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ். கிழக்கில் மட்டக்களப்பு மேற்கில் கற்பிட்டி, நீர் கொழும்பு, வடக்கில் கொட்டியாரம் உட்பட யாழ்ப்பாணப் பட்டினம் முழுவதும் தமிழ்ப் பகுதியாகும் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
வான் இம்ஹோவ்:<br />
<br />
இவர் 1740ல் இலங்கையிலிருந்து டச்சுத் தோசாதிபதி. இவர் எழுதிய குறிப்பில் யாழ்ப்பாண பட்டினம் என்ற தமிழ் இராட்சியம் தனி அரசனின் கீழ் முதலிருந்தது. இந்த இராட்சியம் மற்றைய பகுதிகளை விட வேறுபட்ட அரசியல் சிவில் முறையில் நிருவாகிக்கப்பட்டது.<br />
<br />
அந்தோனிமூயாட்:<br />
<br />
இவர் 1766ல் யாழ்ப்பாணத்தில் டச்சுத் தேசாதிபதியாக இருந்தவர். இவர் னரவஉh ழக உநலடழn என்றும் எழுதிய புத்தகத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் எனப்படும் பிரதேசம் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கு கொண்டது. அது கண்டி அரசிலிருந்து வேறுபட்டது மன்னார் முல்லைத்தீவு இதன் நீதி பரிபாலனத்துக்குள் அடங்கும.; டச்சுக்காரர்கள் கண்டியரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் பிரதேசம் உள்ளடக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குட்பட சிலாபம் ஆற்றுக்கும் குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தமிழ்ப் பகுதியாகும்.<br />
<br />
கிறிஸ்ரபர் சுவைட்சர் இவர் ஒரு டச்சு எழுத்தாளர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கை வந்த உல்லாசப் பயணி இவர் தன் குறிப்பில் இலங்கையைப் பற்றியும் இலங்கையின் மற்றுமோர் இனத்தவர்களான தமிழர்கள் வடக்கு கிழக்கு உட்பட அளிப்பு கற்பிட்டி, நீர் கொழும்பு, உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
இலங்கையின் டச்சு ஆளுனராக இருந்த ரிக்கு லூப்பான் கோயன்ஸ் கி.பி1665ல் இருந்தவர் அவர் தன் மேலதிகாரிக்கு எழுதிய குறிப்பில் ‘மட்டக்களப்பில் வாழ்வோரின் மரவு, சமயம், மொழி, பழக்கவழக்கங்களால் மலைபார் தேசத்தைச் சேர்ந்தவர்களாகும். அதே போன்று யாழ்பாணப் பட்டினம், திருகோணமலை, மேற்கிலுள்ள கற்பிட்டி, கங்குன் கோறளை வடபகுதிவரை வாழ்பவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். நீண்ட காலமாக இலங்கையை தமக்குள் பங்கிட்டு இரு பெரும் தேசிய இனங்கள் ஆண்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழரும், சிங்களவர்களுமாகும் சிங்களவர்கள் இலங்கையின் தெற்கு முதல் மேற்கேயுள்ள வளவை ஆறுவரை வாழ்கின்றார்கள் தமிழர் வடக்குக் கிழக்கு முதல் புத்தளம், சிலாபம் தொடக்கம் மன்னார் வரை கிழக்கில் குமுக்கன் ஆறுவ ரையும் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
கி.பி1813ல் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த சேர் பிறவுன்டிக் என்பவர் பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அது போல தமிழ் மொழியும் அவசியமாகவுள்ளது. வடக்கு, கிழக்கு, புத்தளம், கற்பிட்டி, மன்னார் வரை வாழ்வோர் மொழி தமிழாகவே இருக்கின்றது. ஆகவே நான் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்குகின்றேன் என எழுதியுள்ளார்.<br />
<br />
கி.பி1770ல் இலங்கையில் பிரித்தானிய ஆளுனரான ரெலென் என்பவர் தானே எழுதிய குறிப்பில் இலங்கையின் பெரும் பகுதி தமிழர் வாழ்விடமாகவே தெரிகின்றது. வன்னிப் பகுதி வன்னியர்களால் ஆளப்படுகின்றது. இது தங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் சிங்கள ஆட்சிக்கு உட்பட்டவர்களல்ல. இலங்கையின் கரையோரங்களில் வாழ்வோர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுகிறார்கள்.<br />
<br />
மிகவும் ஆரம்பகாலம் முதல் தமிழினத்துவ சிறப்புடைய மக்கள் இங்கே வாழ்ந்து வந்ததற்குக் கிராமிய கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அதற்குச் சமமான உறவுகள் யாதெனில் ஆதி வரலாற்றுக் காலத்திலும், பௌதீகப் பண்பாட்டும், பௌதீக பண்பாடு அல்லாத பண்பாட்டுத் தோற்றப்பாடுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகளாகும் என பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க இலங்கை இன உருவாக்கலில் சிக்கலான பிரச்சினை என்ற தொடர் கட்டுரையில் கூறியுள்ளார்.<br />
<br />
ஒரு இனம் பண்டு தொட்டு தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசம் அந்த இனத்தின் தாயகமாகும் அந்த இனத்திற்கும் அம்மக்களுக்குமுள்ள தாயக உறவை மறுக்கும் உரிமை, நிராகரிக்கும் பொறுப்பு யாருக்கும் கிடையாது. மகிந்த ராஜபக்ச அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவரின் அங்கீகாரம் பெற்ற ஜனாதிபதி. தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. அவர் எவ்வாறு தமிழ் மக்களின் நியாயமான தாயகத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் முடியும். தமிழ் மக்கள் தங்கள் இறமையை பிரித்தானியரிடம் இழந்தார்களே ஒழிய சிங்களவரிடம் இழக்கவில்லை. சிங்கவரால் 1972லும் 1978லும் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டங்கள் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. எனவே தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரின் பிறப்புரிமை. அதை நிராகரிக் கும் உரிமை வேறொறு இனத்தவர்களுக்குமில்லை.<br />
 <br />
பூ.ம.செல்வராசா<br />
மட்டக்களப்ப ஈழநாதம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது. <br />
<br />
LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the  very survival of the ethiai cgroup.<br />
<br />
‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்தால் அந்த இனம் தலை தூக்க முடியாத ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, அந்த இனம் உயிரோடு ஒட்டிய வாழ்வு பெறுவதற்கும் தாய கம் மிக மிக முக்கியமானதாகும் என மேலைநாட்டறிஞனின் கூற்றின் ஆளத்தையும், நீளத்தையும் பார்ப்பதானால் ஒரு கால் தன் தாயகத்தை இழந்த யூத இனம், தன்னுள் எத்தனை வல்லமைகளை, அறிவை, ஆற்றலை, ஆளுமையை, நாகரிக செழுமையை உள்ளடக்கியிருந்தும் உலக நாடெல்லாம் அனாதையாக அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடெல்லாம் ஓட ஓட வெருட்டியதையும் கிட்லர் என்ற சர்வதிகாரி துரத்தி துரத்தி சுட்டழித்ததையும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பெற்று இன்று உலகை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள சிறப்பு தாயக மண்ணின் அவசியத்திற்கோர் எடுத்துக்காட்டு.<br />
<br />
அமெரிக்காவின் ஆதிக்குடிகளும் பேரு, மெச்சிக்கோ நாகரிகத்தின் தந்தைகளான செவ்விந்தியர்கள். இன்று மயோலிஸ் மக்கள் என அழைக்கப்படும் அன்று ஈழத்தின் மாந்தையை ஆண்ட மயனின் வாரிசுகள். பிரித்தானிக்க கலைக்களஞ்சியத்தால் சிறந்த அறிவாளர்கள் வானசாஸ்த்திரிகள், கட்டிடக்கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் கணித மேதைகள சிவசர்ப்ப வழிபாட்டுக்காறர்கள் என அவர்களை எதிர்த்து அழித்த ஸ்பானியர்களே வாய்விட்டுக் கூறும் செவ்விந்தியர்கள் தாயகத்தை இழந்ததால் உலக வரலாற்றில் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். இது வரலாறு தரும் பாடம். எனவே தாயகம் ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாகும்.<br />
<br />
நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம், இயக்கப் பின்னணி, மனிதனுடைய வாழ்வு அதை காலம் காட்டுகின்றது. வரலாற்றுக் கால வரை முறையும், நில இயல்பும் தேசிய இனத்திற்கு இரு கண்களுக்கு ஒப்பானவை என அறிஞர் ரிட்;சாட் ஹேக்கிலியூட் கூறுவதுவும், மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும், வளர்ச்சியும், வரட்சியும், தளர்ச்சியும், நகைப்பும், ஏக்கமும், ஒளியும், இருளும், நிலயியல் கூறுகளின் பின்னணியைப் பொறுத்து அமைகின்றன. எனவே மனித வரலாற்றின் இயக்கம் நில இயல் என (History is eyeogr aph in motin) என்ற நூல் அறிஞர் ஹெடர் (Hador)  கூறியது. மனிதனின் வாழ்வின் வளர்ச்சிக்கு நிலம் தாயகம் எத்தனை ஊந்து சக்தி என்பதை எடுத்துக்காட்டுகின்றது.<br />
<br />
குழந்தைக்குத் தாய் எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்குத் தாயகம். ஒரு தாயிடம் இருந்து குழந்தை தன் வளர்ச்சிக்கு வேண்டியதைப் பெறுவது போல தாயகம் மனித பரிணாம வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும்- படைத்தளித்து வருகின்றது. இதை உணர்ந்த பட்டுக்கோட்டையார் ‘மனிதன் ஆரம்பமாவதுவும் பெண்ணுக் குள்ளே. அவன் ஆடி அடங்குவதுவும் மண்ணுக்குள்ளே" என்று பாடினார் எனவே மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்குமுள்ள உறவு போன்றதாகும்.<br />
<br />
ஒருகாலத்தில் சீனாவின் பெரிய அறிஞன் ஒருவன் உலகை சுற்றிப் பார்க்கத் தயாரானான். சீனாவின் சர்க்கரவர்த்தியை சந்தித்து விடைபெறச் சென்றான். அறிஞனை சந்தித்து விடயங்களைத் தெரிந்து கொண்ட சக்கரவர்த்தி அறிஞனின் உலக வலம் நலமே முடிய வாழ்த்தி அவருக்கு ஒரு முடிச்சை பரிசளித்து அனுப்பி வைத்தார். பரிசை பெற்றுக் கொண்ட அறிஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பல நாட்களின் பின் ஒரு நாள் அறிஞருக்குச் சக்கரவர்த்தி அளித்த பரிசு ஞாபகம் வந்தது. எனவே அதைத் தேடி எடுத்து பிரித்தார். அங்கே, பொன்னோ, பொருளோ, பணமோ இருக்கவில்லை. பயணிகளுக்குப் பரிசளிப்பது யோவற்றை? ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னனான சீனிச் சக்கரவர்த்தி அறிஞருக்கு அளித்த பரிசு அவையல்ல. அவற்றுக்கு மேலான கிருஷ்ன பரமாத்மா மகாவலி மன்னனிடம் கேட்ட மூன்றடி மண்ணல்ல. ஒரே ஒரு பிடி மண் ஏன்? எதற்கு?<br />
<br />
பொதுவாக அறிஞர்கள் சென்ற இடமெல்லாம் கிடைக்கும் சிறப்பால் ‘யாதுமூரே யாவரும் கேளீர்’ என அமர்ந்து விடுவார்கள். அந்த நிலையையும் நினைப்பையும் மாற்றி தாயகத்தை நினைத்துத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஒரு பிடி மண்ணை பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அறிஞர் நாடு திரும்பினார். எனவே தாயகத்தின் அவசியம் தாயகத்தை நேசிப்பவர்களுக்கே புரியுமே ஒழிய அதை யாசித்தவர்களுக்;குத் தெரிய அவசியமில்லை.<br />
<br />
இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாகர், இயக்கர்தான் என்பதை பௌத்த சிங்கள பாளி வரலாற்று நூல்களான மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் என்பன மறுப்பின்றி ஏற்றிருக்கின்றன. இவர்கள் அன்று திராவிடர்கள், சிவநெறினர், தமிழின் ஆரம்ப மொழியான எலுவைப் பேசியவர்கள் நாகர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டு அணுபவித்த வடபகுதியில் இன்றைய மொழி தமிழ். அது போல இயக்கர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டனுபவித்த தென்கிழக்கிலங்;கையின் இன்றைய மொழி தமிழ். எனவே எலு மொழியின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் தமிழ் மொழி. ஆகவே நாகர் இயக்கர் தமிழர்கள். இவர்கள் வடக்கையும் தென்கிழக்கையும் பரம்பரைத் தாயகமாகக் கொண்டவர்கள்.<br />
<br />
விஜயன் பௌத்த கதை கட்டுக்கதை என்று பௌத்த சிங்கள புத்திஜீவிகள் ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டதால். இனி அதில் இரண்டாம் பேச்சு மூச்சிக்கு இடமில்லை. பௌத்தம் இலங்கையில் காலூன்றிய காலம் நாகம ன்னன் தேவநம்பிய தீசன் கி.மு 244-207 காலமாகும்.<br />
<br />
தேவநம்பிய தீசனின் தாய்தந்தையர்கள், சிவநெறியுடையவர்கள், நாகபரம்பரை. எவ்வாறு கௌதம புத்தர் ஒரு சிவநெறியாளனாக இருந்து பௌத்த மதத்தை தோற்றுவித்தாரோ, அவ்வாறே தேவநம்;பிய தீசனும் சிவநெறியாளனாகப் பிறந்து வளர்ந்து அரசனானாதும் பௌத்தத்தை ஆதரித்தானே ஒழிய அவன் பௌத்த சிங்களவனல்ல. பௌத்த தமிழன் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட குடிகள் சிவநெறியை மூலமாகக் கொண்ட நாகர்கள். அவர்கள் பௌத்தத்தை தழுவினார்களே ஒழிய சிங்களவர்களல்ல. சிங்களம் என்ற வார்த்தை உலகில் எப்பாகத்திலும் அன்றில்லை. இல்லாத மொழி அடிப்படையில் ஒரு இனத்தை பின் எழுதிய வரலாற்றாசிரியர்கள் பௌத்தர்களை சிங்களவர் எனக் குறித்தது மிக மிகத் தவறாகும். <br />
<br />
பிழையான வரலாற்றுப் பதிவாகும். ‘தமிழர்களின் பழமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலே உண்டு "என 1919ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் வெளிவந்த டெயிலி நீயுஸ் பத்திரிகைக் கட்டுரையில் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார். இவர் எழுதுவதற்கு முன் 1917ம் ஆண்டு கதிரோடையில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மையமாக வைத்தே இக்கட்டுரையை எழுதினார். எனவே ஈழத்தின் ஆதிவாசிகள் தமிழர்கள். ஆகவே ஈழம் சிங்களவரிலும் பார்க்க தமிழரின் தாயகம் என்பதை சிங்களத் தலைமைகள் வெறுக்கவும், மறுக்கவும், மறைக்கவும் முடியாது. <br />
<br />
தேவநம்பிய தீசன் கி.மு244-207 காலத்தில் நாகரும் இயக்கருமே வாழ்ந்தார்கள். சிங்களம் என்ற வார்த்தை உலகில் திருவிலுமில்லை, கருவிலுமில்லை. தேவநம்பியதீசனின் பிரஜைகள் நாகர்கள். அவர்கள் சிங்களவரல்ல. சிங்கள மொழியே 10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார்.<br />
<br />
6ம் நூற்றாண்டில் சிங்களம் என்ற சொல்லில்லை. இதை மகாவம்சம் கூறவில்லை. 17ம் நூற்றாண்டில் கண்டியில் சிறை இருந்த றொபட் நொக்ஸ் எழுதிய (A Histor ical relation of the islandof ceylon) என்ற நூல் குறிப்பில் தான் தப்பியோடி வந்த போது அனுராதபுரத்தில் இருந்தவர்களால் சிங்களத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தான் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேச வேண்டி இருந்தது என்றும் அவர்கள் தமிழே பேசினார்கள் எனவும் குறித்துள்ளார்.<br />
<br />
இலங்கையை ஆண்ட மன்னர்கள் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாகவும், அன்னிய தொடர்பு மொழியாகவும் வைத்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளுண்டு. எனவே சிங்களம், சிங்கள இனம் என்பவை காலத்தால் பிந்திய அடையாளங்களாகும். இக்காலத்திற்க்கு முந்தியவர்கள் பௌத்த தமிழர்களே ஒழிய பௌத்த சிங்களவர்களல்லர். இன்றைய ஜனாதிபதி பிறந்து வளர்ந்து வாழும் தங்கால தங்காலை என்ற தமிழ் பெயரின் திரிவாகும். ஏன் 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னனாக கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனுக்கும், பிரான்சு மன்னன் 16ம் லூகிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இதை பாண்டிச்சேரி நூதனசாலையில் இன்றும் பார்க்கலாம். 1815ம் ஆண்டு கண்டி பிரதானிகளுக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குமிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தில் கண்டி சி;ங்களப் பிரதிநிதிகளே தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள்.<br />
<br />
தென்னிந்திய அரசுகளில் திராவிடர்கள் திராவிடர் செல்வாக்கு மிகுந்திருந்த காலம் முதல் இலங்கையின் வரலாற்றில் திராவிடர் செல்வாக்கு இருந்திருக்கிறது. இன்றுள்ள சிங்கள இனத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இனத்தவர்களுள் திராவிடரும் அடங்குவர். அவர்கள் இத்தீவுக்கு எப்போ வந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பழைய காலம் தொட்டே இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு Sri Lanka the holocakst and after   என்ற நூலில் அதன் ஆசிரியர் எல்.பியதாச குறித்துள்ளார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் தமிழர்கள் மிக செல்வாக்குப் பெற்று வாழ்ந்தார்கள் என அறிஞர் கிளாரன்ஸ் மலோனி சுட்டிக் காட்டுகிறார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கில் தமிழர் ஆட்சி நிலை பெற்றிருந்தது. சிவனின் மகன் முருகனின் ஆட்சி கதிர்காம த்தில் இடம்பெற்றது. வடக்கு, தெற்கு, மேற்குவரைத் தமிழர் ஆண்டார்கள் என ரோம இராச்சியத்திற்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்ற நூலில் 123ம் பக்கத்தில் அறிஞர் வார்மிண்டன் குறித்துள்ளார்.<br />
<br />
கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழர் முக்கிய பங்கைப் பெற்றிருந்தனர் எனக் கலாநிதி எஸ்.ப ரணவிதான கூறியுள்ளார். அன்னியரான போர்த்துக்கீசர்கள் 1581 ஆண்டு கோட்டை அரசைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வடகிழக்கு ஆட்சியையும் தம் வசமாக்கினார்கள். இருந்தும் வன்னிப் பிரதேசம் தனியரசாகவும், கண்டி தனித் தமிழரசாகவும் இருந்தன. கி.பி 1560ல் யாழ்ப்பாண ஆட்சி போர்த்திக்கீசர் வசமானது. 1591ல் போர்த்திக்கீசர் யாழ்ப்பாணத்தில் தங்கள் பிரதிநிதியாக எதிர் மன்னசிங்கம் என்பவனை நியமித்தார்கள். அதன் பின் சங்கிலிகுமாரன் ஆட்சிக்கு வந்தான். இவன் சிலகாலம் அவர்களோடு ஒத்துழைத்தான். பின் அவர்களை எதிர்த்தான். இக்காலத்தில் வன்னியிலிருந்த கொட்டியாற்றுப் பற்று, பழுகாமம், பாணமை, யால, மண்முனை என்ற பகுதிகள் சுதந்திரமாக இயங்கின.<br />
<br />
போர்த்துக்கீசர் காலத்தில் இலங்கையில் இருந்த தமிழரசு குறித்து டி.குரோசலஸ் என்பவர் வாந வநஅடிழசயட உழபெரநளவ ழக உநலடழn என்னும் நூலை எழுதினார். அதில் இந்த அமைதியான யாழ்ப்பாண பட்டினம் என்ற சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல, அதன் அண்மையிலுள்ள பகுதிகள் எல்லாம் அதனைச் சேர்த்தது. ஒரு உப்புநீர் நிலையால் பிரிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியும் அதனோடு சேர்ந்தது. வலிகாமம், தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வடமராட்சி என்ற பகுதிகளையும் உள்ளடக்கி வன்னி வரை பரந்து குறுக்காக, மன்னார். திருகோணமலை என்பவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய நிலப்பரப்பாகும்.<br />
<br />
போர்த்திக்கீசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டச்சிக்காரர்கள் இலங்கையின் வளங்களை கைப்பற்றுதலில் கவனமாக இருந்ததால் சுதேசிகளின் விருப்பங்களை அனுசரித்தே நடந்தார்கள். அவர்கள் சுதேசிகளின் தேசியத்தை மதித்து, தமிழரைத் தமிழ் மக்களின் மரபுக்கிணங்கவும் சிங்களவர்களை சிங்கள மரபுக்கிணங்கவும் ஆட்சி செய்தார்கள். டச்சுக்கார தேசாதிபதிகளான பின்வருவோர் கூறிய வரலாற்றுத் தரவுகளைப் பார்ப்போம்.<br />
<br />
யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சுக் கொமாண்டரான பவிலோன் ஒருவர் அவர் 1665ல் எழுதிய குறிப்பில் 'வன்னி உட்பட கிழக்கில் திருகோணமலை முதல் மேற்கில் கற்பிட்டி வரையும், யாழ்பாணத்தை சுற்றியுள்ள தீவுகள் மன்னார்த் தீவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு யாழ்ப்பாண அரசு எனக் குறித்துள்ளார்.<br />
<br />
வான்கோயன்ஸ்: (1675 இருந்த டச்சு தேசாதிபதி)<br />
<br />
யாழ்பாணம் மட்டக்களப்பு, பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ். கிழக்கில் மட்டக்களப்பு மேற்கில் கற்பிட்டி, நீர் கொழும்பு, வடக்கில் கொட்டியாரம் உட்பட யாழ்ப்பாணப் பட்டினம் முழுவதும் தமிழ்ப் பகுதியாகும் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
வான் இம்ஹோவ்:<br />
<br />
இவர் 1740ல் இலங்கையிலிருந்து டச்சுத் தோசாதிபதி. இவர் எழுதிய குறிப்பில் யாழ்ப்பாண பட்டினம் என்ற தமிழ் இராட்சியம் தனி அரசனின் கீழ் முதலிருந்தது. இந்த இராட்சியம் மற்றைய பகுதிகளை விட வேறுபட்ட அரசியல் சிவில் முறையில் நிருவாகிக்கப்பட்டது.<br />
<br />
அந்தோனிமூயாட்:<br />
<br />
இவர் 1766ல் யாழ்ப்பாணத்தில் டச்சுத் தேசாதிபதியாக இருந்தவர். இவர் னரவஉh ழக உநலடழn என்றும் எழுதிய புத்தகத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் எனப்படும் பிரதேசம் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கு கொண்டது. அது கண்டி அரசிலிருந்து வேறுபட்டது மன்னார் முல்லைத்தீவு இதன் நீதி பரிபாலனத்துக்குள் அடங்கும.; டச்சுக்காரர்கள் கண்டியரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் பிரதேசம் உள்ளடக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குட்பட சிலாபம் ஆற்றுக்கும் குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தமிழ்ப் பகுதியாகும்.<br />
<br />
கிறிஸ்ரபர் சுவைட்சர் இவர் ஒரு டச்சு எழுத்தாளர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கை வந்த உல்லாசப் பயணி இவர் தன் குறிப்பில் இலங்கையைப் பற்றியும் இலங்கையின் மற்றுமோர் இனத்தவர்களான தமிழர்கள் வடக்கு கிழக்கு உட்பட அளிப்பு கற்பிட்டி, நீர் கொழும்பு, உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
இலங்கையின் டச்சு ஆளுனராக இருந்த ரிக்கு லூப்பான் கோயன்ஸ் கி.பி1665ல் இருந்தவர் அவர் தன் மேலதிகாரிக்கு எழுதிய குறிப்பில் ‘மட்டக்களப்பில் வாழ்வோரின் மரவு, சமயம், மொழி, பழக்கவழக்கங்களால் மலைபார் தேசத்தைச் சேர்ந்தவர்களாகும். அதே போன்று யாழ்பாணப் பட்டினம், திருகோணமலை, மேற்கிலுள்ள கற்பிட்டி, கங்குன் கோறளை வடபகுதிவரை வாழ்பவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். நீண்ட காலமாக இலங்கையை தமக்குள் பங்கிட்டு இரு பெரும் தேசிய இனங்கள் ஆண்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழரும், சிங்களவர்களுமாகும் சிங்களவர்கள் இலங்கையின் தெற்கு முதல் மேற்கேயுள்ள வளவை ஆறுவரை வாழ்கின்றார்கள் தமிழர் வடக்குக் கிழக்கு முதல் புத்தளம், சிலாபம் தொடக்கம் மன்னார் வரை கிழக்கில் குமுக்கன் ஆறுவ ரையும் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.<br />
<br />
கி.பி1813ல் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த சேர் பிறவுன்டிக் என்பவர் பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அது போல தமிழ் மொழியும் அவசியமாகவுள்ளது. வடக்கு, கிழக்கு, புத்தளம், கற்பிட்டி, மன்னார் வரை வாழ்வோர் மொழி தமிழாகவே இருக்கின்றது. ஆகவே நான் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்குகின்றேன் என எழுதியுள்ளார்.<br />
<br />
கி.பி1770ல் இலங்கையில் பிரித்தானிய ஆளுனரான ரெலென் என்பவர் தானே எழுதிய குறிப்பில் இலங்கையின் பெரும் பகுதி தமிழர் வாழ்விடமாகவே தெரிகின்றது. வன்னிப் பகுதி வன்னியர்களால் ஆளப்படுகின்றது. இது தங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் சிங்கள ஆட்சிக்கு உட்பட்டவர்களல்ல. இலங்கையின் கரையோரங்களில் வாழ்வோர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுகிறார்கள்.<br />
<br />
மிகவும் ஆரம்பகாலம் முதல் தமிழினத்துவ சிறப்புடைய மக்கள் இங்கே வாழ்ந்து வந்ததற்குக் கிராமிய கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அதற்குச் சமமான உறவுகள் யாதெனில் ஆதி வரலாற்றுக் காலத்திலும், பௌதீகப் பண்பாட்டும், பௌதீக பண்பாடு அல்லாத பண்பாட்டுத் தோற்றப்பாடுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகளாகும் என பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க இலங்கை இன உருவாக்கலில் சிக்கலான பிரச்சினை என்ற தொடர் கட்டுரையில் கூறியுள்ளார்.<br />
<br />
ஒரு இனம் பண்டு தொட்டு தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசம் அந்த இனத்தின் தாயகமாகும் அந்த இனத்திற்கும் அம்மக்களுக்குமுள்ள தாயக உறவை மறுக்கும் உரிமை, நிராகரிக்கும் பொறுப்பு யாருக்கும் கிடையாது. மகிந்த ராஜபக்ச அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவரின் அங்கீகாரம் பெற்ற ஜனாதிபதி. தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. அவர் எவ்வாறு தமிழ் மக்களின் நியாயமான தாயகத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் முடியும். தமிழ் மக்கள் தங்கள் இறமையை பிரித்தானியரிடம் இழந்தார்களே ஒழிய சிங்களவரிடம் இழக்கவில்லை. சிங்கவரால் 1972லும் 1978லும் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டங்கள் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. எனவே தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரின் பிறப்புரிமை. அதை நிராகரிக் கும் உரிமை வேறொறு இனத்தவர்களுக்குமில்லை.<br />
 <br />
பூ.ம.செல்வராசா<br />
மட்டக்களப்ப ஈழநாதம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=323</link>
			<pubDate>Fri, 07 Apr 2006 12:45:43 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2350">Naasamaruppan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=323</guid>
			<description><![CDATA[                    "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது.<br />
<br />
குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.<br />
<br />
நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.<br />
<br />
ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.<br />
<br />
கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது.<br />
<br />
ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் "கருக்கல்வி" பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும்.<br />
<br />
எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது.<br />
<br />
கருவுற்ற நாளிலிருந்து கற்பவதியான தாய் மெல்லிய, துல்லிய - இனிமையான இன்னிசைப் பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும். கருத்தாளம் மிக்க சின்னச் சின்னப் பாடல்களைப் பாடி மகிழ வேண்டும். சிறந்த நல்ல குட்டிக் கதைகளை வாசிக்க வேண்டும். நல்ல நல்ல சிந்தனைகளை சீரிய நல்லெண்ணங்களை தம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அக்குழந்தையின் தந்தையானவர் காலை, மாலை முதலான இதமான வேளைகளில் மனைவி அருகாக நெருங்கி இருந்து இன்னிசைப் பாடல்களைப் பாட வேண்டும். <br />
<br />
நல்ல பல கதைகளை மனைவிக்குக் கூறுவதாகக் கூற வேண்டும். அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.<br />
<br />
பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும்.<br />
<br />
இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிட்சயமாக இல்லை.<br />
<br />
குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம்.<br />
<br />
பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.<br />
<br />
குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு 'தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை' என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.<br />
<br />
எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும்.<br />
<br />
மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும்.<br />
<br />
மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் 'வளரும் பயிரை முளையிலே தெரியும்'. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்' என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை.<br />
<br />
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.<br />
<br />
அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும்.<br />
<br />
பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பராயம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அவதானம் அதிகமாக இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.<br />
<br />
பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும்.<br />
<br />
பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.  <br />
 <br />
கன்னிமுத்து வெல்லபதியான்<br />
மட்டக்களப்பு ஈழநாதம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது.<br />
<br />
குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.<br />
<br />
நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.<br />
<br />
ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.<br />
<br />
கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது.<br />
<br />
ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் "கருக்கல்வி" பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும்.<br />
<br />
எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது.<br />
<br />
கருவுற்ற நாளிலிருந்து கற்பவதியான தாய் மெல்லிய, துல்லிய - இனிமையான இன்னிசைப் பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும். கருத்தாளம் மிக்க சின்னச் சின்னப் பாடல்களைப் பாடி மகிழ வேண்டும். சிறந்த நல்ல குட்டிக் கதைகளை வாசிக்க வேண்டும். நல்ல நல்ல சிந்தனைகளை சீரிய நல்லெண்ணங்களை தம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அக்குழந்தையின் தந்தையானவர் காலை, மாலை முதலான இதமான வேளைகளில் மனைவி அருகாக நெருங்கி இருந்து இன்னிசைப் பாடல்களைப் பாட வேண்டும். <br />
<br />
நல்ல பல கதைகளை மனைவிக்குக் கூறுவதாகக் கூற வேண்டும். அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.<br />
<br />
பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும்.<br />
<br />
இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிட்சயமாக இல்லை.<br />
<br />
குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம்.<br />
<br />
பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.<br />
<br />
குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு 'தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை' என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.<br />
<br />
எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும்.<br />
<br />
மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும்.<br />
<br />
மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் 'வளரும் பயிரை முளையிலே தெரியும்'. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்' என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை.<br />
<br />
பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.<br />
<br />
அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும்.<br />
<br />
பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பராயம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அவதானம் அதிகமாக இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.<br />
<br />
பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும்.<br />
<br />
பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.  <br />
 <br />
கன்னிமுத்து வெல்லபதியான்<br />
மட்டக்களப்பு ஈழநாதம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=335</link>
			<pubDate>Wed, 05 Apr 2006 06:56:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=924">அருவி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=335</guid>
			<description><![CDATA[                    2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. <br />
<br />
இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.<br />
<br />
இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.<br />
<br />
இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.<br />
<br />
தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.<br />
<br />
இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. <br />
<br />
இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. <br />
<br />
இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.<br />
<br />
இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.<br />
<br />
இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.<br />
<br />
தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.<br />
<br />
இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. <br />
<br />
இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நம்மீது நம்பிக்கை வைக்கலாமே!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=381</link>
			<pubDate>Sat, 01 Apr 2006 18:28:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2350">Naasamaruppan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=381</guid>
			<description><![CDATA[                    மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான்.<br />
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம்.<br />
<br />
'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு'<br />
<br />
என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம்.<br />
<br />
ஆக நம்பிக்கை என்பது தன்மீது கொண்ட நம்பிக்கையாக இருப்பதே மேற்கூறிய வகைகள.; எது எப்படிப் போனாலும் 'சுடலை ஞானம்' இல்லாதவர்கள் வராத வர்கள் எவரும் இல்லை.<br />
<br />
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் மக்களிடையே விரவி நிற்பது பெரும் மூடநம் பிக்கை. செய்வினை, சூனியம், மருந்தீடு, பிரிவினை, வசியம், முகமாத்து என்று பல பெயர்களில் இந்த விடயங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாமியார்களும் அதிகம். படித்த நாகரிகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட இம்மாதிரி நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு சாமியார் களையும், மந்திரவாதிகளையும் வளர்க்கும் மந்திர வியாதி பிடித்தலைகின்றனர். <br />
ஆயிரம் கோவூர்கள் பிறந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு கெட்டுப்போயிருக்கிறது சமுதாயம்.<br />
<br />
மனநோயுற்ற ஒரு பெண்ணை அதற்கான சிகிச்சைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே தெரியாமல் பூசாரிகளிடம் கொண்டலைந்து பணமும் செலவு செய்து இரண்டிலும் முடியாமல் போகவே கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள். அதற்குள் அந்தப் பெண்ணை உறவினர்கள் தம்முடன் பங்குபோட்டு அழைத்துச் செல்ல அவள் தற்கொலை செய்து கொண்டாள். மனப்பிறழ்வு வைத் திய பரிசோதனைக்குத் தப்பி விட்டது. ஆனால் இவர்களுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் யாரோ செய்வினை செய்து போட் டார்கள் அதாலதான் அவள் செத்தது என்று சட்டத்துக்கே பிடிபடாத கொலை என்றவகையில் கதை முடிந்தது.<br />
<br />
சாதாரணமாக வரும் காய்ச்சல், தலை யிடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கே மந்திரத்தில் மருந்து செய்து தீர்க்கவல்ல மந்திரவாதிகள் உண்டு. நோய் தீர்ந்த பிறகும் மூன்று மாதம் பூசை செய்யவேண்டும். விளக் குப்போடவேண்டும். கிரக சாந்தி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வசூ லிக்கும் பூசாரிகளுக்குச்; சொந்தமாகக் கோயில்களும் உண்டு.<br />
<br />
இவர்களையெல்லாம் மிஞ்சக்கூடியதாக கன்னிப்பெண்களை வாட்டும் பசலை நோயைப் புதுவிதமுனிதாக்கிவிட்டதாகக் கூறி அவர்களை தங்கி நின்று சிகிச்சைபெறவேண்டு மென்று ஒரு மந்திரவாதி கூறப் பெற்றோராகிய மூடர் அவ்வாறே பெண் ணைத் தங்கி வைத்தியம் செய்ய அனுப்பினார் களாம். வைத்தியரோ ஒரு மர்மப்புகையைப் போட்டுப் பெண்ணை மயக்கி அப்பெண்ணை பாலியல் உறவுக்குப் பயன்படுத்தியுள்ளார். இது நடந்தது வவுனி யாவின் தொலைவுக் கிராமம் ஒன்றில்.<br />
அநேகமான பூசாரிகள் மந்திரவாதிகள் காவற்றுறை யினரோ சட்டமோ தேடாத தொலைவுகளில்தான் இருக்கின்ற னர். நடுக்காட்டின் மத்தியில் போக்குவரத்து வசதிகளற்ற குக்கிராமங்கள் அதிகம் உண்டு. அங்கெல்லாம் பூசாரிகள் உண்டு. கொம்பறுத்த குளம், மூன்று முறிப்பு, மா உருவி, பாலைப் பாணி, பறங்கியாறு, சோலை அரசன்குளம் எனக் கூறிக் கொண்டே போகலாம். இவற்றை இன்னமும் ஒரு சட்ட நடவடிக் கைக்கு உட்படுத்த முடியவில்லை. இந்த தான்தோன்றி வைத்தியர்க ளெல்லாம் மதச்சாயம் பூசிக்கொண்டுள்ளனர். ஆக மக்கள் ஒரு விழிப்புணர்வுள்ளவர்களாக மாறும் வரை இவர்களும் இருப்பார்கள்.<br />
<br />
கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிணக்குகளைப் புரிந் துணர்வுடன் பேசித் தீர்க்கவேண் டும். ஆனால் விபூதிபோட்டுத் தீர்ப்பது தெரியுமா? நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வழக்கும் போட்டா யிற்று. அதற்குள் கணவன் "ஆரெட்டயோ" மந்திரிச்சுத் திரு நூறு போட்டிட்டார். (எங்க?) என்னையறியாம எனக்கு என்ன நடந்ததெண்டே தெரியேல்ல... இப்ப சுகமில்லாம இருக்கிறன.; (கெட்டிக்காரக்கணவன்) இனி உறவாப்போகச் சொல்லி சொல்லு கினம். எப்பிடியுங்கோ? என்று மூக்கைச் சிந்தும் பெண்.<br />
<br />
என்ர அவருக்கு என்னில பாசங்குறைஞ்சுபோச்சு. அவர் வேற ஒரு பொம்பிளையிட்டப்போறார். அவர் நல்லவர்தான். அவற்ற சாரத்தை எடுத்துத்தான் செய்வினை செய்தவளாம். என்னைக் கண்ணில கட்டேலாதமாதிரி செய்திருக்காம். நான் பிள்ளய வச்சுக்கொண்டு கண்ணீரோட திரியிறன் என்று ஒரு பெண்.<br />
"இருந்தாப்போல நெஞ்சுக்க படப்படப்படண்டு அடிக்குது. தலைக்கு மேல ஏதோ றீங் றீங் றீங்கெண்டு பறக்கிறமாதிரி- வேர்க் குது. ஒண்டுமா விளங்கேல்ல"பரியாரியட்டதான் காட்ட வேணும். நூல் முடிஞ்சா சரியாப் போகும். இதெல்லாம் பாமரப் பெண்களின் பரிதாப உளறல்.<br />
<br />
ஆனால் படித்த நாகரிக மானவர்களும் இதேயளவில் கூழைக்கும்பிடு போட்டு நிற்பது தான் ஆச்சரியம்.<br />
<br />
இதுபற்றி மாந்திரீக வேலை செய்யும் ஒருவரிடம், "எந்தளவுக்கு உங்கட வைத்தியம் சாத்தியப்படுது?" என்று கேட்டதற்கு அவர் "மந்திரமும் குருவும் மருந் தும் திருவருளும் உண்டென்ப வருக்கு உண்டு. இல்லை என்ப வர்க்கு இல்லை" என்றார்.<br />
<br />
"நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களது நோய் தீரவேண்டுமெனப் பிரார்த்தனை செய்கிறோம் அவ்வளவு தான்" இது குஞ்சுக்குளம் சோதிடரும் பரியாரியும், இவர் ஒரு பழைய அரச ஊழியரும் கூட.<br />
வவுனியாவில் ஆசிரியத் தொழில் செய்பவர்கள் கூடவே, கலியாணத்தரகர்களாகவும் உள்ளனர். இதேநிலை யாழ்ப்பாணத்தி லும் உண்டு. கலியாணத் தரகர் களுக்குக் கூடவே சாதகம் பார்க்கவும் கணிக்கவும் தெரிந்திருப்பது ஒரு மேலதிகத் தகைமை. இதில் வேடிக்கை என்னவென்றால் சாத கங்களில் நல்ல ஜாதகம் தோச முள்ள ஜாதகம் என்று இரண்டு வகையாம்- இதில் எந்த வகை ஜாதகத்தையும் பொருத்திவிடும், மாற்றிவிடும் திறமை இவர் களுடையது.<br />
எம்மத்தியில் புழக்கத்தில் உள்ள இம்மாதிரி மூடநம்பிக்கை களை வைத்துக்கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும். பேய், பில்லி, சூனியம் என்பவை சீனா, பர்மா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து என இருந்தது போய் அமெரிக்காவரை வந்துவிட்டது என்கிறார்கள். வந்துவிட்டதற்குக் காரணமே மனிதன் தன்னம்பிக்கை இழந்தது மட்டும்தானா? காலத் துக்குக்காலம் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் செயற்கையாக வரும் ஆக்கிரமிப்புப் போர் அனர்த் தங்கள் என்பனவெல்லாம் மனி தனை உலுக்கிவிட்டது. இவற்றை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இல்லாததாக எண்ணி சோர்ந்து போவதே காரணம்.<br />
<br />
இயற்கையை வென்று விட்ட மனித சாதனைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் நிகண்டு நூல் குறிப்பிட்ட விடயம் இது. "மனிதர் கள் இரும்புக்குதிரைகளில் ஏறிப் பறப்பார்கள், வானத்தில் பறக்கவும் நீருள் வாழவும் அவர்களால் முடியும். தீபங்கள் கீழ்நோக்கி எரியும்" அக்காலத்தில் இதெல்லாம் நகைப் புக்கிடமான ஒன்றுதான். புராணங்களில் நாம் கண்ட மாயக்கண்ணாடி இன்று வீட்டுக்கு வீடு வு.ஏயாக வந்துள்ளது. இன்று வகைவகையான உந்துருளிகளில் பறக்கும் மனிதர்கள், விமானம். நீர் மூழ்கி, மின்சார விளக்குகள் என இவை சாத்தியப்பட்டிருக்கும்போது இவற்றில் மந்திரமாயங்கள் எதுவும் இருக்கிறதா? நம்பிக்கைகள் என்பன செயல்களின் அடிப்படையில் பெறப்படவேண்டியது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.<br />
<br />
மூடநம்பிக்கைகளையும் தெய்வ நம்பிக்கையையும் போட்டுக்கலந்து குழப்பமடையாமல் நாம் நம்மீது நம்பிக்கை, விழிப்புணர்வு கொண்ட வர்களால் சமுதாயம் திருத்தப்பட வேண்டும். மக்கள் சுய நம்பிக்கையை விருத்திபெற முனைய வேண்டும். நோய்க்கு மருந்துதான் நிவாரணி.<br />
<br />
மந்திரமல்ல... புரிந்து கொள்வோம்.<br />
<br />
மாயா<br />
ஈழநாதம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான்.<br />
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம்.<br />
<br />
'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு'<br />
<br />
என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம்.<br />
<br />
ஆக நம்பிக்கை என்பது தன்மீது கொண்ட நம்பிக்கையாக இருப்பதே மேற்கூறிய வகைகள.; எது எப்படிப் போனாலும் 'சுடலை ஞானம்' இல்லாதவர்கள் வராத வர்கள் எவரும் இல்லை.<br />
<br />
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் மக்களிடையே விரவி நிற்பது பெரும் மூடநம் பிக்கை. செய்வினை, சூனியம், மருந்தீடு, பிரிவினை, வசியம், முகமாத்து என்று பல பெயர்களில் இந்த விடயங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாமியார்களும் அதிகம். படித்த நாகரிகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட இம்மாதிரி நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு சாமியார் களையும், மந்திரவாதிகளையும் வளர்க்கும் மந்திர வியாதி பிடித்தலைகின்றனர். <br />
ஆயிரம் கோவூர்கள் பிறந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு கெட்டுப்போயிருக்கிறது சமுதாயம்.<br />
<br />
மனநோயுற்ற ஒரு பெண்ணை அதற்கான சிகிச்சைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே தெரியாமல் பூசாரிகளிடம் கொண்டலைந்து பணமும் செலவு செய்து இரண்டிலும் முடியாமல் போகவே கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள். அதற்குள் அந்தப் பெண்ணை உறவினர்கள் தம்முடன் பங்குபோட்டு அழைத்துச் செல்ல அவள் தற்கொலை செய்து கொண்டாள். மனப்பிறழ்வு வைத் திய பரிசோதனைக்குத் தப்பி விட்டது. ஆனால் இவர்களுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் யாரோ செய்வினை செய்து போட் டார்கள் அதாலதான் அவள் செத்தது என்று சட்டத்துக்கே பிடிபடாத கொலை என்றவகையில் கதை முடிந்தது.<br />
<br />
சாதாரணமாக வரும் காய்ச்சல், தலை யிடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கே மந்திரத்தில் மருந்து செய்து தீர்க்கவல்ல மந்திரவாதிகள் உண்டு. நோய் தீர்ந்த பிறகும் மூன்று மாதம் பூசை செய்யவேண்டும். விளக் குப்போடவேண்டும். கிரக சாந்தி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வசூ லிக்கும் பூசாரிகளுக்குச்; சொந்தமாகக் கோயில்களும் உண்டு.<br />
<br />
இவர்களையெல்லாம் மிஞ்சக்கூடியதாக கன்னிப்பெண்களை வாட்டும் பசலை நோயைப் புதுவிதமுனிதாக்கிவிட்டதாகக் கூறி அவர்களை தங்கி நின்று சிகிச்சைபெறவேண்டு மென்று ஒரு மந்திரவாதி கூறப் பெற்றோராகிய மூடர் அவ்வாறே பெண் ணைத் தங்கி வைத்தியம் செய்ய அனுப்பினார் களாம். வைத்தியரோ ஒரு மர்மப்புகையைப் போட்டுப் பெண்ணை மயக்கி அப்பெண்ணை பாலியல் உறவுக்குப் பயன்படுத்தியுள்ளார். இது நடந்தது வவுனி யாவின் தொலைவுக் கிராமம் ஒன்றில்.<br />
அநேகமான பூசாரிகள் மந்திரவாதிகள் காவற்றுறை யினரோ சட்டமோ தேடாத தொலைவுகளில்தான் இருக்கின்ற னர். நடுக்காட்டின் மத்தியில் போக்குவரத்து வசதிகளற்ற குக்கிராமங்கள் அதிகம் உண்டு. அங்கெல்லாம் பூசாரிகள் உண்டு. கொம்பறுத்த குளம், மூன்று முறிப்பு, மா உருவி, பாலைப் பாணி, பறங்கியாறு, சோலை அரசன்குளம் எனக் கூறிக் கொண்டே போகலாம். இவற்றை இன்னமும் ஒரு சட்ட நடவடிக் கைக்கு உட்படுத்த முடியவில்லை. இந்த தான்தோன்றி வைத்தியர்க ளெல்லாம் மதச்சாயம் பூசிக்கொண்டுள்ளனர். ஆக மக்கள் ஒரு விழிப்புணர்வுள்ளவர்களாக மாறும் வரை இவர்களும் இருப்பார்கள்.<br />
<br />
கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிணக்குகளைப் புரிந் துணர்வுடன் பேசித் தீர்க்கவேண் டும். ஆனால் விபூதிபோட்டுத் தீர்ப்பது தெரியுமா? நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வழக்கும் போட்டா யிற்று. அதற்குள் கணவன் "ஆரெட்டயோ" மந்திரிச்சுத் திரு நூறு போட்டிட்டார். (எங்க?) என்னையறியாம எனக்கு என்ன நடந்ததெண்டே தெரியேல்ல... இப்ப சுகமில்லாம இருக்கிறன.; (கெட்டிக்காரக்கணவன்) இனி உறவாப்போகச் சொல்லி சொல்லு கினம். எப்பிடியுங்கோ? என்று மூக்கைச் சிந்தும் பெண்.<br />
<br />
என்ர அவருக்கு என்னில பாசங்குறைஞ்சுபோச்சு. அவர் வேற ஒரு பொம்பிளையிட்டப்போறார். அவர் நல்லவர்தான். அவற்ற சாரத்தை எடுத்துத்தான் செய்வினை செய்தவளாம். என்னைக் கண்ணில கட்டேலாதமாதிரி செய்திருக்காம். நான் பிள்ளய வச்சுக்கொண்டு கண்ணீரோட திரியிறன் என்று ஒரு பெண்.<br />
"இருந்தாப்போல நெஞ்சுக்க படப்படப்படண்டு அடிக்குது. தலைக்கு மேல ஏதோ றீங் றீங் றீங்கெண்டு பறக்கிறமாதிரி- வேர்க் குது. ஒண்டுமா விளங்கேல்ல"பரியாரியட்டதான் காட்ட வேணும். நூல் முடிஞ்சா சரியாப் போகும். இதெல்லாம் பாமரப் பெண்களின் பரிதாப உளறல்.<br />
<br />
ஆனால் படித்த நாகரிக மானவர்களும் இதேயளவில் கூழைக்கும்பிடு போட்டு நிற்பது தான் ஆச்சரியம்.<br />
<br />
இதுபற்றி மாந்திரீக வேலை செய்யும் ஒருவரிடம், "எந்தளவுக்கு உங்கட வைத்தியம் சாத்தியப்படுது?" என்று கேட்டதற்கு அவர் "மந்திரமும் குருவும் மருந் தும் திருவருளும் உண்டென்ப வருக்கு உண்டு. இல்லை என்ப வர்க்கு இல்லை" என்றார்.<br />
<br />
"நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களது நோய் தீரவேண்டுமெனப் பிரார்த்தனை செய்கிறோம் அவ்வளவு தான்" இது குஞ்சுக்குளம் சோதிடரும் பரியாரியும், இவர் ஒரு பழைய அரச ஊழியரும் கூட.<br />
வவுனியாவில் ஆசிரியத் தொழில் செய்பவர்கள் கூடவே, கலியாணத்தரகர்களாகவும் உள்ளனர். இதேநிலை யாழ்ப்பாணத்தி லும் உண்டு. கலியாணத் தரகர் களுக்குக் கூடவே சாதகம் பார்க்கவும் கணிக்கவும் தெரிந்திருப்பது ஒரு மேலதிகத் தகைமை. இதில் வேடிக்கை என்னவென்றால் சாத கங்களில் நல்ல ஜாதகம் தோச முள்ள ஜாதகம் என்று இரண்டு வகையாம்- இதில் எந்த வகை ஜாதகத்தையும் பொருத்திவிடும், மாற்றிவிடும் திறமை இவர் களுடையது.<br />
எம்மத்தியில் புழக்கத்தில் உள்ள இம்மாதிரி மூடநம்பிக்கை களை வைத்துக்கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும். பேய், பில்லி, சூனியம் என்பவை சீனா, பர்மா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து என இருந்தது போய் அமெரிக்காவரை வந்துவிட்டது என்கிறார்கள். வந்துவிட்டதற்குக் காரணமே மனிதன் தன்னம்பிக்கை இழந்தது மட்டும்தானா? காலத் துக்குக்காலம் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் செயற்கையாக வரும் ஆக்கிரமிப்புப் போர் அனர்த் தங்கள் என்பனவெல்லாம் மனி தனை உலுக்கிவிட்டது. இவற்றை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இல்லாததாக எண்ணி சோர்ந்து போவதே காரணம்.<br />
<br />
இயற்கையை வென்று விட்ட மனித சாதனைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் நிகண்டு நூல் குறிப்பிட்ட விடயம் இது. "மனிதர் கள் இரும்புக்குதிரைகளில் ஏறிப் பறப்பார்கள், வானத்தில் பறக்கவும் நீருள் வாழவும் அவர்களால் முடியும். தீபங்கள் கீழ்நோக்கி எரியும்" அக்காலத்தில் இதெல்லாம் நகைப் புக்கிடமான ஒன்றுதான். புராணங்களில் நாம் கண்ட மாயக்கண்ணாடி இன்று வீட்டுக்கு வீடு வு.ஏயாக வந்துள்ளது. இன்று வகைவகையான உந்துருளிகளில் பறக்கும் மனிதர்கள், விமானம். நீர் மூழ்கி, மின்சார விளக்குகள் என இவை சாத்தியப்பட்டிருக்கும்போது இவற்றில் மந்திரமாயங்கள் எதுவும் இருக்கிறதா? நம்பிக்கைகள் என்பன செயல்களின் அடிப்படையில் பெறப்படவேண்டியது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.<br />
<br />
மூடநம்பிக்கைகளையும் தெய்வ நம்பிக்கையையும் போட்டுக்கலந்து குழப்பமடையாமல் நாம் நம்மீது நம்பிக்கை, விழிப்புணர்வு கொண்ட வர்களால் சமுதாயம் திருத்தப்பட வேண்டும். மக்கள் சுய நம்பிக்கையை விருத்திபெற முனைய வேண்டும். நோய்க்கு மருந்துதான் நிவாரணி.<br />
<br />
மந்திரமல்ல... புரிந்து கொள்வோம்.<br />
<br />
மாயா<br />
ஈழநாதம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=440</link>
			<pubDate>Sat, 25 Mar 2006 08:05:44 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1468">Snegethy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=440</guid>
			<description><![CDATA[                    <br />
&lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக.....&lt;/span&gt;<br />
<br />
<br />
தமிழியல்: திணையும் தளமும் நிலையும்<br />
<br />
வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறும். ஆண்டுதோறும் நிகழவுள்ள தமிழியல் மாநாட்டுத் தொடரின் முதல் நிகழ்வாக இம்மாநாடு அரங்கேறுகிறது.<br />
<br />
மேற்குலகின் ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் டொராண்டோவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வி மையமாக டொராண்டோவை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாடும் கோடைக்கால தமிழ் மொழி வகுப்பும் இடம்பெறுகின்றன.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வியாளர்களுடனும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தைப் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம். மேலும் டொராண்டோ மாணவர்களுக்கும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கும் தமிழ்க் கல்வியின் விரிந்த தளத்தையும் இம்மாநாடு அறிமுகப்படுத்தும்.<br />
<br />
வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு வாய்ப்பையும் இந்த டொராண்டோ மாநாடு தருகிறது. அதனுடன் தமிழ்நாடு, இலங்கை தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வட்டாரங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் மாநாடு வகைசெய்கிறது. அனைத்துலக கல்வி மையத்துக்கான மங் சென்டர் அல்லது பல்கலைக்கழக அச்சகம் மூலம் மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுìலாக வெளியிடுவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.<br />
<br />
அறிமுகம்<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. தென்அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை இம்மாநாடு ஒன்றிணைக்கிறது. வரலாறு, இலக்கியம், மானுடவியல், சமயம், கலாசாரா மனோவியல், மொழியியல், புலம்பெயர் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன. லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்தேச நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கல்விக் கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், மாசேய் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ்சு கல்வி நிலையம், மாக்கில் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்று விரிந்த கல்வித் தளங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.<br />
<br />
சக கல்வியாளர்கள் முன்பு தங்களது படைப்புகளை பன்முகத் தளத்தில் படைக்கும் ஓர் தனித்தன்மையான வாய்ப்பை வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கு இம்மாநாடு வழங்குகிறது. வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வி பெருமளவில் தமிழ் நாடு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழியல் மற்றும் தமிழியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்யும் கல்வியாளர்களை ஒன்றுகூட்டி, பன்முக ஆய்வை மேற்கொள்ள ஒரு தளத்தை அமைக்கிறது.<br />
<br />
கருப்பொருள்<br />
<br />
பண்டைக்கால தமிழ்க் கவிதை முதல் தற்கால இலக்கியம் வரை காணப்படும் படைப்பிலக்கியம், நிகழ்கலை மரபுகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும். <br />
<br />
இடைக்காலம், தற்காலத்தின் தேசியக் கற்பனைகளின் மறுஉருவாக்கம். <br />
<br />
மேற்கத்திய நகரங்களில் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் உருவாக்கம். <br />
<br />
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான கலாசார, பண்பாட்டு ஆய்வுகள். <br />
<br />
தற்காலத் தமிழ்நாட்டில் பால், சாதி, சமயம் தொடர்பான சமூக, கலாசார, இலக்கிய மறுஉருவாக்கங்கள். <br />
<br />
மாணவர்களுக்கு குறிப்பாக டோராண்டோவின் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழியலின் விரிந்த துறைகளை இந்த மாநாடு அறிமுகப்படுத்தும். இதற்காக மாணவர்களுக்கான ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பேசுவார்கள். மேலும் இத்திட்டங்களில் சேர்வதற்குத் தேவையான கல்வி, பயிற்சித் தகுதிகள் பற்றியும் விளக்குவார்கள்.<br />
<br />
தகவல்:<a href="http://tamilstudiesconference2006.blogspot.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://tamilstudiesconference2006.blogspot.com</a><br />
For more information, please visit <a href="http://www.chass.utoronto.ca/~tamils/main.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.chass.utoronto.ca/~tamils/main.html</a>.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <br />
&lt;span style='font-size:22pt;line-height:100%'&gt;டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக.....&lt;/span&gt;<br />
<br />
<br />
தமிழியல்: திணையும் தளமும் நிலையும்<br />
<br />
வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறும். ஆண்டுதோறும் நிகழவுள்ள தமிழியல் மாநாட்டுத் தொடரின் முதல் நிகழ்வாக இம்மாநாடு அரங்கேறுகிறது.<br />
<br />
மேற்குலகின் ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் டொராண்டோவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வி மையமாக டொராண்டோவை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாடும் கோடைக்கால தமிழ் மொழி வகுப்பும் இடம்பெறுகின்றன.<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வியாளர்களுடனும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தைப் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம். மேலும் டொராண்டோ மாணவர்களுக்கும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கும் தமிழ்க் கல்வியின் விரிந்த தளத்தையும் இம்மாநாடு அறிமுகப்படுத்தும்.<br />
<br />
வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு வாய்ப்பையும் இந்த டொராண்டோ மாநாடு தருகிறது. அதனுடன் தமிழ்நாடு, இலங்கை தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வட்டாரங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் மாநாடு வகைசெய்கிறது. அனைத்துலக கல்வி மையத்துக்கான மங் சென்டர் அல்லது பல்கலைக்கழக அச்சகம் மூலம் மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுìலாக வெளியிடுவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.<br />
<br />
அறிமுகம்<br />
<br />
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. தென்அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை இம்மாநாடு ஒன்றிணைக்கிறது. வரலாறு, இலக்கியம், மானுடவியல், சமயம், கலாசாரா மனோவியல், மொழியியல், புலம்பெயர் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன. லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்தேச நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கல்விக் கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், மாசேய் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ்சு கல்வி நிலையம், மாக்கில் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்று விரிந்த கல்வித் தளங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.<br />
<br />
சக கல்வியாளர்கள் முன்பு தங்களது படைப்புகளை பன்முகத் தளத்தில் படைக்கும் ஓர் தனித்தன்மையான வாய்ப்பை வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கு இம்மாநாடு வழங்குகிறது. வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வி பெருமளவில் தமிழ் நாடு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழியல் மற்றும் தமிழியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்யும் கல்வியாளர்களை ஒன்றுகூட்டி, பன்முக ஆய்வை மேற்கொள்ள ஒரு தளத்தை அமைக்கிறது.<br />
<br />
கருப்பொருள்<br />
<br />
பண்டைக்கால தமிழ்க் கவிதை முதல் தற்கால இலக்கியம் வரை காணப்படும் படைப்பிலக்கியம், நிகழ்கலை மரபுகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும். <br />
<br />
இடைக்காலம், தற்காலத்தின் தேசியக் கற்பனைகளின் மறுஉருவாக்கம். <br />
<br />
மேற்கத்திய நகரங்களில் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் உருவாக்கம். <br />
<br />
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான கலாசார, பண்பாட்டு ஆய்வுகள். <br />
<br />
தற்காலத் தமிழ்நாட்டில் பால், சாதி, சமயம் தொடர்பான சமூக, கலாசார, இலக்கிய மறுஉருவாக்கங்கள். <br />
<br />
மாணவர்களுக்கு குறிப்பாக டோராண்டோவின் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழியலின் விரிந்த துறைகளை இந்த மாநாடு அறிமுகப்படுத்தும். இதற்காக மாணவர்களுக்கான ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பேசுவார்கள். மேலும் இத்திட்டங்களில் சேர்வதற்குத் தேவையான கல்வி, பயிற்சித் தகுதிகள் பற்றியும் விளக்குவார்கள்.<br />
<br />
தகவல்:<a href="http://tamilstudiesconference2006.blogspot.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://tamilstudiesconference2006.blogspot.com</a><br />
For more information, please visit <a href="http://www.chass.utoronto.ca/~tamils/main.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.chass.utoronto.ca/~tamils/main.html</a>.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தண்ணீர் தண்ணீர்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=447</link>
			<pubDate>Fri, 24 Mar 2006 11:37:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=447</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;தண்ணீர் தண்ணீர்&lt;/b&gt;<br />
<br />
ஆனாரூனா <br />
<br />
<br />
இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது.<br />
<br />
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி களுக்கும் ஆட்சிக் கனவு நீடிக்கும்.<br />
<br />
தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுதான், மொழி வழித் தேசிய உணர்வு தான் இந்தக் கட்சிகளின் தோல்விகளுக்கும் காரண மாகின்றன. ஆகவே `இந்திய தேசிய’ ஆதிக்க சக்திகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் அதே நேரம் தேசிய இனச் சிக்கல்களையும் வளர்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.<br />
<br />
இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் போன்ற சிக்கல்கள்... மொழிவழித் தேசிய அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது இந்த தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக அல்ல. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும், ஆந்திரமும் ஒன்றாக இருந்தால் இந்தி - இந்திய - இந்துத்துவ ஆதிக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி தலையசைத்தது.<br />
<br />
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நியாயங்கள் புறக்கணிக்கப் பட்டன. தேவிகுளம் பீர்மேடு எனும் மலைசார்ந்த தமிழ்ப் பகுதிகள் கேரளத்துக்குத் தரப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு கேள்வி எழுப்பிய போது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் பதிலளித்தார். ``குள மாவது குட்டையாவது, மேடாவது பள்ளமாவது. எது எங்கே இருந்தால் என்ன? எல்லாம் இந்தியா வுக்குள்தான் இருக்கிறது’’ என்றார் காமராசர். தேவிகுளம் பீர்மேடும், முல்லைப் பெரியாறும், காவிரியும், பொதுவாக கேரளமும், தமிழ்நாடும், கன்னடமும் இந்தியாவுக்குள் இருப்பதால்தான் இத்தனை சிக்கல்கள்; இத்தனை மோதல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்கிறவர்களின் உணர்வுகளை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது.<br />
<br />
மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் மலையாளி. தேவிகுளம் பீர்மேடு கேரளத்துக்குப் போவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளத்துக்குத் தரப்படவில்லை என்றால் கேரளத்தைத் தனிமாநிலமாகப் பிரிப்பதில் அர்த்தமே இல்லை என்றார் வர்கீஸ்.<br />
<br />
பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். குறித்துப் பிரச்சனை வந்தது. அப்போது கேரள முதலமைச்சரும் மலையாளி. தமிழக முதலமைச்சரும் மலையாளி. தமிழக அரசின் சார்பாகப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் அந் தோணியும் மலையாளி. முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், பொறியாளர்கள் எல்லோருமே மலையாளிகளாக இருந்த சூழலில் எந்த உணர்வில் பேச்சு வார்த்தை நடந்திருக்கும்?<br />
இந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தீவிர சிந்தனைக்குரியது.<br />
<br />
கேரளத்தில் ஒரு மலையாளிதான் அந்த நாட்டின் முதலமைச்சராக முடிகிறது. கன்னடத்தில் ஒரு கன்னடியர்தான் முதலமைச்சராக முடிகிறது. ஆந்திரத்தில் ஒரு தெலுங்கர்தான் முதலமைச்சராக முடிகிறது. மராட்டியத்தில், வங்கத்தில்... என்று இந்தியாவின் எந்த நாட்டிலும் அந்தந்தத் தேசிய இனத்தலைவர்களே முதலமைச்சராக முடிகிறது. இதுதான் இயல்பானது; இதுதான் முறையானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடிகிறது.<br />
இது தமிழர்களை மானக்கேடானவர்களாகவும் மடையர்களாகவும் அடை யாளப் படுத்துகிறதா?<br />
<br />
தமிழர்கள் விரிந்த சிந்தனையாளர்கள்; விசால மனம் படைத்தவர்கள் என்று உலகுக்கு உணர்த்துகிறதா? ஆனால் பண்பாடுள்ள மக்கள் வரலாறு முழுவதிலும் படையெடுப்பாளர்களாலும், போக்கிரிகளாலும் வெல்லப்படுகிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.<br />
<br />
இந்த வரலாற்று ஆதாரங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு `தேசிய உணர்ச்சி’ என்கிற பெயரில் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் எதிராகப் புரட்டுரை செய்கிறவர்களும், பாசிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலித்தமிழர்களும் கூலித்தமிழர்களும் உண்மையில் தேசியப் பெருமிதத்தால் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிப்பதும், அழிப்பதும்தான்.<br />
<br />
கம்பன் கவிநயத்தால் உயர்ந்த பீடத்தில் அமரத்தகுந்தவன்தான். ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றியதில் கால்டுவெல்லும், வீரமாமுனிவனும் மிக உயரத்தில் இருக்கிறார்கள். கம்பனோ பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான்.<br />
<br />
தமிழினத்தை மானமும் அறிவும் உள்ள சுதந்திர இனமாக மாற்றுவதற்குப் போராடுவதில் தந்தை பெரியாருக்கு இணையாக யாருண்டு இங்கே?<br />
<br />
ஆனால் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளும், தமிழினத் துரோகிகளும் பெரியாரின் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போதெல்லாம் அவர் கன்னடத்துக்காரர் என்று கூறித் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தவறியதில்லை.<br />
<br />
இவர்களுடைய பெரியார் எதிர்ப்புக்கும் திராவிட இயக்க எதிர்ப்புக்கும் ஆணி வேராக, அச்சாணியாக இருப்பது தமிழ்த்தேசிய உணர்வல்ல, பாசிசப் பற்று; புரட்சிகரமான சிந்தனைகளின்மீதும் இயக்கங்களின் மீதும் உள்ள வெறுப்பு.<br />
<br />
இவர்கள் இருத்தல்வாதிகள், அல்லது பிழைப்புவாதிகள். பெரியாரை விமர்சிப்பதன் மூலம் நாங்கள் அடிமைத் தொழிலுக்கும் அதைவிடக் கேவலமான காரியங்களுக்கும் பயன் படக்கூடியவர்கள் என்று யார் யாருக்கோ தெரியப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!<br />
<br />
தண்ணீர் எங்களுக்குத் (கேரளத்துக்கு) தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்துக்குப் பயன்படக் கூடாது என்கிற தோரணையிலேயே கேரளம் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது.<br />
<br />
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று 30 ஆண்டுகளாகக் கேரளம் பிடிவாதம் செய்து கொண்டிருக்கிறது. அணை பலவீனமாக இருக்கிறது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து கேரளமே மூழ்கி விடும் என்பதுபோன்ற அதீதக் கற்பனைகளை முன் வைத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. அணை உறுதியாக இருப்பதாக வல்லுநர்கள் சோதித்து உறுதியளித்த பிறகும் கேரளம் ஒப்புக் கொள்ள வில்லை.<br />
<br />
இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ள லாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கர், பி.கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.<br />
<br />
அந்தத் தீர்ப்பில் -<br />
``நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்வதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.’’<br />
- என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.<br />
<br />
(அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண் டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை முதல் கட்டமாக 142 அடியை எட்டியிருக் கிறது.)<br />
<br />
ஆனால், உச்சநீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பை முறியடிக்கக் கேரளம் துணிந்து நிற்கிறது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதன் அடிப்படையில் கேரள சட்டமன்றத்தில் கேரள மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி எந்தச் சூழலிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது என்று போர் முரசு கொட்டத் தயாராகிவிட்டது.<br />
<br />
இந்தியக் கட்டமைப்பில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஏழை எளிய கேட்பாரற்ற மக்களைத்தான் கட்டுப்படுத்தும், தண்டிக்க முடியும் என்பதைப் பல வழக்குகளில் கண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புகள் ஒரு திரைப்பட விமர்சனம் என்பதற்கு மேலாக அது ஒன்றும் விளைவையோ தீர்ப்பின் நோக்கத்தையோ எட்டியதில்லை.<br />
<br />
காவிரி பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வாங்கிய செருப்படிகள் கொஞ்சமல்ல. நரேந்திரமோடி போன்ற பல குற்றப் பின்னணியுடைய முதல்வர்களை எந்தத் தீர்ப்பும் அசைத்துவிட முடிய வில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அல்லது நீதித் துறையுடன் மோதிப் பார்ப்போரை எச்சரிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் தெம்பில்லை.காவல் துறையும், நீதித் துறையும் லஞ்சப் பேர்வழிகளாலும், ஊழல் மன்னர்களாலும் மரியாதை கெட்டுக் கிடக்கிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே மனங் கசந்து சொல்லி அழுதிருக்கிறார்கள்.<br />
<br />
பல தீர்ப்புகளுக்குப் பின்னால் நீதிபதிகளே லஞ்சம் பெற்றிருந்தார்கள் என்பது இங்கே மறைக்க முடியாத விகாரமாகும்.<br />
<br />
நீதித்துறையிலுள்ள இந்தப் பலவீனத்தால் அது பல வழக்குகளில் நீதி போதனைக் கதைகளைச் சொல்ல முடிகிறதே தவிர தீர்க்கமான தீர்ப்பெழுத முடிவதில்லை. எழுதிய தீர்ப்பும் தனக்குப் பிடித்த கவிதை என்பதற்கு மேலாக அதைப் பெரிதாக எண்ணுவ தில்லை.<br />
<br />
மத்திய அரசோ நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம்போல் ராஜநடை போடும் `உதார்’ நிலையிலேயே இருக்கிறது.சான்றாக, மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலுவையும், முரசொலி மாறனையும் மாநிலப் போலீசார் பந்தாடினார்கள். குற்றவாளிகளாகக் கைது செய்து வழக்குப் போட்டார்கள். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் உண்டா? என்று கேட்கக் கூட மத்திய அரசுக்கு வக்கில்லை. அந்த அமைச்சர்களும் தமக்கு நேர்ந்த அவமானத்துக்காக ஆத்திரப் படவும் இல்லை.<br />
<br />
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவில் ஒரு கஞ்சா கடத்தல் ஆசாமிபோல் சோதனையிடப்பட்டார். வாய்திறக்க வில்லை மத்திய அரசு. இப் போது மன்மோகன் தலைமையில் மத்திய அரசை எந்த வெளிநாட்டுக்காரனும் மிரட்டலாம். அம்பாசி டர்கூட இந்திய அமைச்சர்களை எச்சரிக்கலாம். மத்திய அரசு அதுகுறித்து விளக்கம்கூடக் கேட்க முடியாது.<br />
<br />
இந்தச் சூழலில், தைரியமுள்ள எந்த முதல்வரும் மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலை.<br />
<br />
கேரளமும், கர்னாடகமும், ஆந்திரமும் தமிழகத்துடன் `போர் தொடுப்பதற்கு’க்காரணம் இந்திய அரசால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கைதான்.<br />
<br />
தமிழகம் பாலைவன மாகிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வஞ்சித்து பகைமை பாராட்டும் மாநிலங்களுடன் பரிவுடன் நடந்து கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.<br />
<br />
&lt;b&gt;இந்திய நாடுகளிலேயே தமிழ் நாடுதான் இந்தி ஆதிக்கத்தையும் சமஸ்கிருத அவலத்தையும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சாம்ராஜ்யக் கனவுகளுக்கு இங்கேதான் எதிர்ப்பும் அடிகளும் வலுக்கின்றன. இதனால் இந்திய ஆதிக்க சக்திகளுக்குத் தமிழ் நாட்டின்மீது தனிப்பட்ட முறையில் பழி தீர்க்கும் ஆசையும் உண்டு.&lt;/b&gt;<br />
<br />
பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஓர் அராஜக அரசின் மிரட்டலுக்குப் பயந்து முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்தார் ஜாகிரா என்ற பெண்மணி. இதனால் பொய் சாட்சி அளித்த குற்றத்துக்காக ஜாகிராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.<br />
<br />
இந்தத் தீர்ப்புடன் நீதி மன்றம் என்றால், என்ன தெரியுமா? அதற்கு எத்தனை ஆற்றல் உண்டு தெரியுமா? என்றும் உரத்த குரல் எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.<br />
<br />
``நீதிமன்றம் என்பது இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் ஒரு எந்திரமல்ல. வழக்கின் நடவடிக்கைகளில் செயலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. நீதிமன்றங்களின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக் கைக்குக் கேடு ஏற்படாமல் காக்கவும், நீதியை நிமிர்த்தும் வகையிலும் நீதிமன்றம் செயல்படும்’’ என்று ஜாகிராவுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகள் சினமேறி நின்றிருக்கிறார்கள்.<br />
<br />
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தன்னிலை விளக்கம் நியாயமானதும், அவசிய மானதும் ஆகும். அந்த உரிமை அதற்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதெல்லாம் அளவுக்கு அதிகமான ஆசை என்று சொல்லும் அளவுக்கே நீதிமன்றங்களின் கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.<br />
<br />
இப்போதாவது, தனது அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.<br />
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்குரியதாக்கும் விதத்தில் கேரள சட்ட மன்றம் அணைகள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரும் என்று அறிவித்திருப்பதை உச்சநீதி மன்றம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது?<br />
<br />
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் புதிய சட்டம் கொண்டு வருவோம்; மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கேரள அரசு பேச முடியும் என்றால், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் உரிமையில் எந்த நீதி மன்றமும் தலையிட முடி யாது. தமிழக கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும் எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவோம் என்று தமிழக அரசு சொன்னால் அது தவறாகுமா?<br />
<br />
தமிழ்வழிக் கல்விக்குத் தடை விதிக்கும் எந்தத் தீர்ப்பையும் எதிர்ப்போம் என்று தமிழகம் பொங்கி எழுந்தால் அந்த அறச்சீற்றம் குற்றமாகி விடுமா? மாநில அரசுகள் துணிந்து நின்றால் நீதி தேவதையும் முடங்கிப் போவாள். பாரத தேவியும் பதுங்கிக் கொள்வாள் என்பதுதான் நடை முறை. தமிழகம் என்ன செய்யப் போகிறது?<br />
<br />
உலகில் பல நாடுகளின் வழியே ஓடுகிற நதிகள் பல உண்டு. இந்த நாடுகளுக்கிடையே போர் நடந்தால்கூட அந்த நதிகளை எந்த நாடும் தடை செய்ய முடியாது. இதுதான் நதிநீர் தொடர்பான சர்வதேச விதி.<br />
<br />
சவுதி அரேபியா, ஈராக், குவைத் நாடுகளுக்கிடையே போர் நடந்தபோது, அமெரிக்கக் கூட்டணி ராணுவமே போரில் ஈடுபட்டபோதும் கூட மூன்று நாடுகளுக்கிடையே ஓடும் நதிநீரை யாரும் தடுத்ததில்லை. எந்த விதிமுறைகளையும் மீறும் அதிகாரம் தனக் குண்டு என்று `உலக போலீஸ்காரன்’ அல்ல `சர்வதேச ரௌடி’யின் தோரணையில் மிரட்டும் அமெரிக்காவுக்குக்கூட அந்த அத்துமீறும் உரிமையை உலக நாடுகள் அனுமதிக்காது.<br />
<br />
சிந்துநதியை பாகிஸ் தானுக்குள் விட முடியாது என்று இந்தியா மறுத்துவிட முடியாது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை கர்நாடகத்தால் மறுக்க முடிகிறது. முல்லைப் பெரியாற்றில் தமிழகத்துக்குள்ள உரிமையைக் கேரளம் மறுக்கிறது.<br />
<br />
இந்த விதிமீறல்களும், நேர்மை மறுப்பும், எப்படி நடக்க முடிகிறது?கன்னடமும் கேரளமும், தமிழகமும் வேறுவேறு நாடுகள் அல்ல என்கிற காரணத்தால், தமிழகத்துள் பாயும் நதிகளை மறிக்கவும் திருப்பவும் முடிகிறது.<br />
<br />
இந்திய ஒருமைப்பாட்டுக்காகத் தமிழகம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தான் சுமந்து தீர்க்க வேண்டும்? உரிமைகளை இழந்தேனும் ஒற்றுமை காப்போம் என்பது பெருமைக் குரியதல்ல.<br />
<br />
தனது விலங்கை மெச்சிக் கொள்ளும் அடிமையை வரலாறு வாழ்த்தியதில்லை.<br />
<br />
<br />
¿ýÈ¢ - ¾Á¢úîº¡ý§È¡÷§ÀÃ¨Å¦ºö¾¢ÁÄ÷- Á¡÷î06                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;தண்ணீர் தண்ணீர்&lt;/b&gt;<br />
<br />
ஆனாரூனா <br />
<br />
<br />
இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது.<br />
<br />
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி களுக்கும் ஆட்சிக் கனவு நீடிக்கும்.<br />
<br />
தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுதான், மொழி வழித் தேசிய உணர்வு தான் இந்தக் கட்சிகளின் தோல்விகளுக்கும் காரண மாகின்றன. ஆகவே `இந்திய தேசிய’ ஆதிக்க சக்திகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் அதே நேரம் தேசிய இனச் சிக்கல்களையும் வளர்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.<br />
<br />
இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் போன்ற சிக்கல்கள்... மொழிவழித் தேசிய அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது இந்த தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக அல்ல. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும், ஆந்திரமும் ஒன்றாக இருந்தால் இந்தி - இந்திய - இந்துத்துவ ஆதிக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி தலையசைத்தது.<br />
<br />
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நியாயங்கள் புறக்கணிக்கப் பட்டன. தேவிகுளம் பீர்மேடு எனும் மலைசார்ந்த தமிழ்ப் பகுதிகள் கேரளத்துக்குத் தரப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு கேள்வி எழுப்பிய போது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் பதிலளித்தார். ``குள மாவது குட்டையாவது, மேடாவது பள்ளமாவது. எது எங்கே இருந்தால் என்ன? எல்லாம் இந்தியா வுக்குள்தான் இருக்கிறது’’ என்றார் காமராசர். தேவிகுளம் பீர்மேடும், முல்லைப் பெரியாறும், காவிரியும், பொதுவாக கேரளமும், தமிழ்நாடும், கன்னடமும் இந்தியாவுக்குள் இருப்பதால்தான் இத்தனை சிக்கல்கள்; இத்தனை மோதல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்கிறவர்களின் உணர்வுகளை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது.<br />
<br />
மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் மலையாளி. தேவிகுளம் பீர்மேடு கேரளத்துக்குப் போவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளத்துக்குத் தரப்படவில்லை என்றால் கேரளத்தைத் தனிமாநிலமாகப் பிரிப்பதில் அர்த்தமே இல்லை என்றார் வர்கீஸ்.<br />
<br />
பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். குறித்துப் பிரச்சனை வந்தது. அப்போது கேரள முதலமைச்சரும் மலையாளி. தமிழக முதலமைச்சரும் மலையாளி. தமிழக அரசின் சார்பாகப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் அந் தோணியும் மலையாளி. முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், பொறியாளர்கள் எல்லோருமே மலையாளிகளாக இருந்த சூழலில் எந்த உணர்வில் பேச்சு வார்த்தை நடந்திருக்கும்?<br />
இந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தீவிர சிந்தனைக்குரியது.<br />
<br />
கேரளத்தில் ஒரு மலையாளிதான் அந்த நாட்டின் முதலமைச்சராக முடிகிறது. கன்னடத்தில் ஒரு கன்னடியர்தான் முதலமைச்சராக முடிகிறது. ஆந்திரத்தில் ஒரு தெலுங்கர்தான் முதலமைச்சராக முடிகிறது. மராட்டியத்தில், வங்கத்தில்... என்று இந்தியாவின் எந்த நாட்டிலும் அந்தந்தத் தேசிய இனத்தலைவர்களே முதலமைச்சராக முடிகிறது. இதுதான் இயல்பானது; இதுதான் முறையானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடிகிறது.<br />
இது தமிழர்களை மானக்கேடானவர்களாகவும் மடையர்களாகவும் அடை யாளப் படுத்துகிறதா?<br />
<br />
தமிழர்கள் விரிந்த சிந்தனையாளர்கள்; விசால மனம் படைத்தவர்கள் என்று உலகுக்கு உணர்த்துகிறதா? ஆனால் பண்பாடுள்ள மக்கள் வரலாறு முழுவதிலும் படையெடுப்பாளர்களாலும், போக்கிரிகளாலும் வெல்லப்படுகிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.<br />
<br />
இந்த வரலாற்று ஆதாரங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு `தேசிய உணர்ச்சி’ என்கிற பெயரில் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் எதிராகப் புரட்டுரை செய்கிறவர்களும், பாசிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலித்தமிழர்களும் கூலித்தமிழர்களும் உண்மையில் தேசியப் பெருமிதத்தால் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிப்பதும், அழிப்பதும்தான்.<br />
<br />
கம்பன் கவிநயத்தால் உயர்ந்த பீடத்தில் அமரத்தகுந்தவன்தான். ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றியதில் கால்டுவெல்லும், வீரமாமுனிவனும் மிக உயரத்தில் இருக்கிறார்கள். கம்பனோ பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான்.<br />
<br />
தமிழினத்தை மானமும் அறிவும் உள்ள சுதந்திர இனமாக மாற்றுவதற்குப் போராடுவதில் தந்தை பெரியாருக்கு இணையாக யாருண்டு இங்கே?<br />
<br />
ஆனால் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளும், தமிழினத் துரோகிகளும் பெரியாரின் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போதெல்லாம் அவர் கன்னடத்துக்காரர் என்று கூறித் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தவறியதில்லை.<br />
<br />
இவர்களுடைய பெரியார் எதிர்ப்புக்கும் திராவிட இயக்க எதிர்ப்புக்கும் ஆணி வேராக, அச்சாணியாக இருப்பது தமிழ்த்தேசிய உணர்வல்ல, பாசிசப் பற்று; புரட்சிகரமான சிந்தனைகளின்மீதும் இயக்கங்களின் மீதும் உள்ள வெறுப்பு.<br />
<br />
இவர்கள் இருத்தல்வாதிகள், அல்லது பிழைப்புவாதிகள். பெரியாரை விமர்சிப்பதன் மூலம் நாங்கள் அடிமைத் தொழிலுக்கும் அதைவிடக் கேவலமான காரியங்களுக்கும் பயன் படக்கூடியவர்கள் என்று யார் யாருக்கோ தெரியப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!<br />
<br />
தண்ணீர் எங்களுக்குத் (கேரளத்துக்கு) தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்துக்குப் பயன்படக் கூடாது என்கிற தோரணையிலேயே கேரளம் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது.<br />
<br />
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று 30 ஆண்டுகளாகக் கேரளம் பிடிவாதம் செய்து கொண்டிருக்கிறது. அணை பலவீனமாக இருக்கிறது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து கேரளமே மூழ்கி விடும் என்பதுபோன்ற அதீதக் கற்பனைகளை முன் வைத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. அணை உறுதியாக இருப்பதாக வல்லுநர்கள் சோதித்து உறுதியளித்த பிறகும் கேரளம் ஒப்புக் கொள்ள வில்லை.<br />
<br />
இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ள லாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கர், பி.கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.<br />
<br />
அந்தத் தீர்ப்பில் -<br />
``நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்வதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.’’<br />
- என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.<br />
<br />
(அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண் டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை முதல் கட்டமாக 142 அடியை எட்டியிருக் கிறது.)<br />
<br />
ஆனால், உச்சநீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பை முறியடிக்கக் கேரளம் துணிந்து நிற்கிறது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதன் அடிப்படையில் கேரள சட்டமன்றத்தில் கேரள மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி எந்தச் சூழலிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது என்று போர் முரசு கொட்டத் தயாராகிவிட்டது.<br />
<br />
இந்தியக் கட்டமைப்பில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஏழை எளிய கேட்பாரற்ற மக்களைத்தான் கட்டுப்படுத்தும், தண்டிக்க முடியும் என்பதைப் பல வழக்குகளில் கண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புகள் ஒரு திரைப்பட விமர்சனம் என்பதற்கு மேலாக அது ஒன்றும் விளைவையோ தீர்ப்பின் நோக்கத்தையோ எட்டியதில்லை.<br />
<br />
காவிரி பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வாங்கிய செருப்படிகள் கொஞ்சமல்ல. நரேந்திரமோடி போன்ற பல குற்றப் பின்னணியுடைய முதல்வர்களை எந்தத் தீர்ப்பும் அசைத்துவிட முடிய வில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அல்லது நீதித் துறையுடன் மோதிப் பார்ப்போரை எச்சரிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் தெம்பில்லை.காவல் துறையும், நீதித் துறையும் லஞ்சப் பேர்வழிகளாலும், ஊழல் மன்னர்களாலும் மரியாதை கெட்டுக் கிடக்கிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே மனங் கசந்து சொல்லி அழுதிருக்கிறார்கள்.<br />
<br />
பல தீர்ப்புகளுக்குப் பின்னால் நீதிபதிகளே லஞ்சம் பெற்றிருந்தார்கள் என்பது இங்கே மறைக்க முடியாத விகாரமாகும்.<br />
<br />
நீதித்துறையிலுள்ள இந்தப் பலவீனத்தால் அது பல வழக்குகளில் நீதி போதனைக் கதைகளைச் சொல்ல முடிகிறதே தவிர தீர்க்கமான தீர்ப்பெழுத முடிவதில்லை. எழுதிய தீர்ப்பும் தனக்குப் பிடித்த கவிதை என்பதற்கு மேலாக அதைப் பெரிதாக எண்ணுவ தில்லை.<br />
<br />
மத்திய அரசோ நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம்போல் ராஜநடை போடும் `உதார்’ நிலையிலேயே இருக்கிறது.சான்றாக, மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலுவையும், முரசொலி மாறனையும் மாநிலப் போலீசார் பந்தாடினார்கள். குற்றவாளிகளாகக் கைது செய்து வழக்குப் போட்டார்கள். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் உண்டா? என்று கேட்கக் கூட மத்திய அரசுக்கு வக்கில்லை. அந்த அமைச்சர்களும் தமக்கு நேர்ந்த அவமானத்துக்காக ஆத்திரப் படவும் இல்லை.<br />
<br />
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவில் ஒரு கஞ்சா கடத்தல் ஆசாமிபோல் சோதனையிடப்பட்டார். வாய்திறக்க வில்லை மத்திய அரசு. இப் போது மன்மோகன் தலைமையில் மத்திய அரசை எந்த வெளிநாட்டுக்காரனும் மிரட்டலாம். அம்பாசி டர்கூட இந்திய அமைச்சர்களை எச்சரிக்கலாம். மத்திய அரசு அதுகுறித்து விளக்கம்கூடக் கேட்க முடியாது.<br />
<br />
இந்தச் சூழலில், தைரியமுள்ள எந்த முதல்வரும் மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலை.<br />
<br />
கேரளமும், கர்னாடகமும், ஆந்திரமும் தமிழகத்துடன் `போர் தொடுப்பதற்கு’க்காரணம் இந்திய அரசால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கைதான்.<br />
<br />
தமிழகம் பாலைவன மாகிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வஞ்சித்து பகைமை பாராட்டும் மாநிலங்களுடன் பரிவுடன் நடந்து கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.<br />
<br />
&lt;b&gt;இந்திய நாடுகளிலேயே தமிழ் நாடுதான் இந்தி ஆதிக்கத்தையும் சமஸ்கிருத அவலத்தையும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சாம்ராஜ்யக் கனவுகளுக்கு இங்கேதான் எதிர்ப்பும் அடிகளும் வலுக்கின்றன. இதனால் இந்திய ஆதிக்க சக்திகளுக்குத் தமிழ் நாட்டின்மீது தனிப்பட்ட முறையில் பழி தீர்க்கும் ஆசையும் உண்டு.&lt;/b&gt;<br />
<br />
பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஓர் அராஜக அரசின் மிரட்டலுக்குப் பயந்து முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்தார் ஜாகிரா என்ற பெண்மணி. இதனால் பொய் சாட்சி அளித்த குற்றத்துக்காக ஜாகிராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.<br />
<br />
இந்தத் தீர்ப்புடன் நீதி மன்றம் என்றால், என்ன தெரியுமா? அதற்கு எத்தனை ஆற்றல் உண்டு தெரியுமா? என்றும் உரத்த குரல் எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.<br />
<br />
``நீதிமன்றம் என்பது இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் ஒரு எந்திரமல்ல. வழக்கின் நடவடிக்கைகளில் செயலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. நீதிமன்றங்களின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக் கைக்குக் கேடு ஏற்படாமல் காக்கவும், நீதியை நிமிர்த்தும் வகையிலும் நீதிமன்றம் செயல்படும்’’ என்று ஜாகிராவுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகள் சினமேறி நின்றிருக்கிறார்கள்.<br />
<br />
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தன்னிலை விளக்கம் நியாயமானதும், அவசிய மானதும் ஆகும். அந்த உரிமை அதற்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதெல்லாம் அளவுக்கு அதிகமான ஆசை என்று சொல்லும் அளவுக்கே நீதிமன்றங்களின் கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.<br />
<br />
இப்போதாவது, தனது அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.<br />
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்குரியதாக்கும் விதத்தில் கேரள சட்ட மன்றம் அணைகள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரும் என்று அறிவித்திருப்பதை உச்சநீதி மன்றம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது?<br />
<br />
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் புதிய சட்டம் கொண்டு வருவோம்; மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கேரள அரசு பேச முடியும் என்றால், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் உரிமையில் எந்த நீதி மன்றமும் தலையிட முடி யாது. தமிழக கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும் எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவோம் என்று தமிழக அரசு சொன்னால் அது தவறாகுமா?<br />
<br />
தமிழ்வழிக் கல்விக்குத் தடை விதிக்கும் எந்தத் தீர்ப்பையும் எதிர்ப்போம் என்று தமிழகம் பொங்கி எழுந்தால் அந்த அறச்சீற்றம் குற்றமாகி விடுமா? மாநில அரசுகள் துணிந்து நின்றால் நீதி தேவதையும் முடங்கிப் போவாள். பாரத தேவியும் பதுங்கிக் கொள்வாள் என்பதுதான் நடை முறை. தமிழகம் என்ன செய்யப் போகிறது?<br />
<br />
உலகில் பல நாடுகளின் வழியே ஓடுகிற நதிகள் பல உண்டு. இந்த நாடுகளுக்கிடையே போர் நடந்தால்கூட அந்த நதிகளை எந்த நாடும் தடை செய்ய முடியாது. இதுதான் நதிநீர் தொடர்பான சர்வதேச விதி.<br />
<br />
சவுதி அரேபியா, ஈராக், குவைத் நாடுகளுக்கிடையே போர் நடந்தபோது, அமெரிக்கக் கூட்டணி ராணுவமே போரில் ஈடுபட்டபோதும் கூட மூன்று நாடுகளுக்கிடையே ஓடும் நதிநீரை யாரும் தடுத்ததில்லை. எந்த விதிமுறைகளையும் மீறும் அதிகாரம் தனக் குண்டு என்று `உலக போலீஸ்காரன்’ அல்ல `சர்வதேச ரௌடி’யின் தோரணையில் மிரட்டும் அமெரிக்காவுக்குக்கூட அந்த அத்துமீறும் உரிமையை உலக நாடுகள் அனுமதிக்காது.<br />
<br />
சிந்துநதியை பாகிஸ் தானுக்குள் விட முடியாது என்று இந்தியா மறுத்துவிட முடியாது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை கர்நாடகத்தால் மறுக்க முடிகிறது. முல்லைப் பெரியாற்றில் தமிழகத்துக்குள்ள உரிமையைக் கேரளம் மறுக்கிறது.<br />
<br />
இந்த விதிமீறல்களும், நேர்மை மறுப்பும், எப்படி நடக்க முடிகிறது?கன்னடமும் கேரளமும், தமிழகமும் வேறுவேறு நாடுகள் அல்ல என்கிற காரணத்தால், தமிழகத்துள் பாயும் நதிகளை மறிக்கவும் திருப்பவும் முடிகிறது.<br />
<br />
இந்திய ஒருமைப்பாட்டுக்காகத் தமிழகம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தான் சுமந்து தீர்க்க வேண்டும்? உரிமைகளை இழந்தேனும் ஒற்றுமை காப்போம் என்பது பெருமைக் குரியதல்ல.<br />
<br />
தனது விலங்கை மெச்சிக் கொள்ளும் அடிமையை வரலாறு வாழ்த்தியதில்லை.<br />
<br />
<br />
¿ýÈ¢ - ¾Á¢úîº¡ý§È¡÷§ÀÃ¨Å¦ºö¾¢ÁÄ÷- Á¡÷î06                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=541</link>
			<pubDate>Tue, 14 Mar 2006 09:39:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=541</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!&lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
<br />
<br />
'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக.<br />
<br />
இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்<br />
<br />
''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.<br />
<br />
காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.<br />
<br />
பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.<br />
<br />
அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.<br />
<br />
காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. 'காதலுக்கு தினம் ஏது தினமும்' என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.<br />
<br />
'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''<br />
<br />
ஒரு வரி நீ<br />
ஒரு வரி நான்<br />
திருக்குறள் நாம் அன்பே!அன்பே!<br />
<br />
தாஜ்மஹாலில்<br />
வசிப்பது<br />
மும்தாஜா?<br />
காதலா?<br />
<br />
அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!<br />
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!<br />
<br />
ராசாத்தி<br />
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து<br />
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!<br />
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து<br />
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!<br />
<br />
ஊனே.. ஊனே... உருக்குறானே...<br />
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...<br />
கண்ணால் என்னைக் குடிக்கிறானே...<br />
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...<br />
<br />
மறப்பதென்றால் அது முடியவில்லை.<br />
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.<br />
<br />
பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!<br />
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!<br />
<br />
காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!<br />
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!<br />
<br />
மாலை என்வேதனை கூட்டுதடி!<br />
காதல் தன்வேலையைக் காட்டுதடி!<br />
<br />
அறிவுமதி<br />
<br />
நன்றி: ஆனந்தவிகடன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!&lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
<br />
<br />
'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக.<br />
<br />
இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்<br />
<br />
''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.<br />
<br />
காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.<br />
<br />
பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.<br />
<br />
அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.<br />
<br />
காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. 'காதலுக்கு தினம் ஏது தினமும்' என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.<br />
<br />
'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''<br />
<br />
ஒரு வரி நீ<br />
ஒரு வரி நான்<br />
திருக்குறள் நாம் அன்பே!அன்பே!<br />
<br />
தாஜ்மஹாலில்<br />
வசிப்பது<br />
மும்தாஜா?<br />
காதலா?<br />
<br />
அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!<br />
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!<br />
<br />
ராசாத்தி<br />
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து<br />
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!<br />
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து<br />
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!<br />
<br />
ஊனே.. ஊனே... உருக்குறானே...<br />
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...<br />
கண்ணால் என்னைக் குடிக்கிறானே...<br />
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...<br />
<br />
மறப்பதென்றால் அது முடியவில்லை.<br />
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.<br />
<br />
பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!<br />
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!<br />
<br />
காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!<br />
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!<br />
<br />
மாலை என்வேதனை கூட்டுதடி!<br />
காதல் தன்வேலையைக் காட்டுதடி!<br />
<br />
அறிவுமதி<br />
<br />
நன்றி: ஆனந்தவிகடன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=572</link>
			<pubDate>Sat, 11 Mar 2006 08:48:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=572</guid>
			<description><![CDATA[                    சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்<br />
<br />
இளவேனில் <br />
<br />
<br />
சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்?<br />
<br />
 ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.<br />
<br />
அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு மன்னன் ஷின்ஷி குவாங்தி மயங்கிப் போய்விடவில்லை. ஏனென்றால், வாழ்த்திய புலவர்கள் ஷின்ஷி குவாங்தியை வாழ்த்தும்போது அவனுக்கு முந்திய பல அரசர்களின் பெருமைகளைச் சொல்லி, அந்த வரலாற்றின் வாரிசே வாழ்க என்றார்கள்.<br />
<br />
மன்னனுக்கு அது பொறுக்க வில்லை. வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் இந்த மண்ணில் தகுதி பெற்றவன் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு முன்னேயும் புகழுக்குரிய மன்னர்கள் இருந்தார்கள் என்று சொல்வது எனக்கு எதிரான சதியேதான். மனிதர்கள் நினைவிலும், வரலாற்றுக் குறிப்பிலும் ஒரே மன்னனாகத் தன் பெயர் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், காவியங்கள், சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் என அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.<br />
<br />
நாடெங்கும் உள்ள நூல்களெல்லாம் சிப்பாய்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒரு பெரும் சதுக்கத்தில் போட்டு தீவைத்தார்கள். அந்த நெருப்பு அணையாமல் ஆறு மாதங்களுக்குமேல் எரிந்தது.<br />
<br />
ஆனாலும் வரலாற்றை அழிக்கவிடோம்; அறிவின் கொடைகளை நெருப்பிலிடச் சம்மதியோம் என்று நூல்களைத் தரமறுத்தவர்களும் இருந்தார்கள். அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட அறிவின் ஆதரவாளர்கள் இருபது லட்சத்துக்கும் அதிகமாயிருந்தார்கள்.<br />
<br />
அறிவை நேசித்ததற்காக, வரலாற்றைப் பாதுகாப்பதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற அந்த லட்சக்கணக்கான அடிமைகள் கட்டியதுதான் அழியாத வரலாற்றுச் சின்னமாய் உலக அதிசயமாய் விளங்கும் சீனத்து நெடுஞ்சுவர். சீன நெடுஞ்சுவர் நினைவுக்கு வரும்போதெல்லாம், வரலாற்றையும் அறிவியலையும் பாதுகாப்பதற்காக ஆக்கினைக்கும் அடக்கு முறைக்கும் அஞ்சாத அந்த அறிவார்ந்த போராளிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய தியாகம் சீனத்தின் வரலாற்றையும் அறிவுக் களஞ்சியத்தையும் மாத்திரமல்ல பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் பாதுகாப்பரணையும் வழங்கியிருக்கிறது.<br />
<br />
எத்தனை கொடுமைகள் எதிர்வந்தாலும், கொடுங்கோலன் ஆட்சி நடத்தினாலும், அந்தச் சீனத்துக்குச் சென்றேனும் அறிவைத்தேடு என்பதுதான் உயிர்த் துடிப்புள்ள மனித இனத்தின் அறிவுரை; அறை கூவல்!<br />
<br />
சீனத்தில் நடந்ததை விடக் கொடுமையான முறையில் அறிவுக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரான கொடுமைகள் நடந்த வேறொரு நாடும் உண்டு.<br />
<br />
சீனத்திலே ஒரே ஒரு ஷின்ஷி குவாங்தி தான் இருந்தான். இந்த நாட்டிலோ ஆயிரக்கணக்கான அறிவின் எதிரிகள் இருந்தார்கள். அது இந்தியாதான். சீனக் கொடுங்கோலன் வரலாறே என்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும். நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது என்றான்.<br />
<br />
அதே கருத்தை இங்குள்ள ஆரியர்கள் வேறு சொற்களில் சொன்னார்கள்.<br />
<br />
பிரபஞ்சம் இயற்கைக்குக்<br />
கட்டுப்பட்டது.<br />
இயற்கை கடவுளுக்குக்<br />
கட்டுப்பட்டது,<br />
கடவுள் மந்திரத்துக்குக்<br />
கட்டுப்பட்டவர்<br />
மந்திரம் பிராமணனுக்குக்<br />
கட்டுப்பட்டது<br />
<br />
என்பது இவர்களின் நம்பிக்கை. பார்ப்பனனே மந்திரங்களுக்கும், கடவுளுக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் அதிபதி. பார்ப்பனரே உயர்ந்தோர். அவர்களே உலகையும் வாழ்வையும் நிச்சயிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். மற்ற இன மக்கள் அனைவரும் இழிந்தவர்கள்; சூத்திரர்கள். பார்ப்பனர்க்குப் பணிவிடை செய்வதே பார்ப்பனர் அல்லாதாரின் கடமை; தர்மம்; விதி; கதி என்றார்கள்.<br />
<br />
ஆரியரே அனைத்து மக்களிலும் மேலானோர்; ஆரிய இனமே ஆளப் பிறந்த இனம் எனும் ஆணவச் சிந்தனை இட்லரை வெகுவாய்க் கவர்ந்தது. அந்த ஆரிய வெறியில்தான் அவன் உலகப் போரைத் தொடங்கினான். இட்லரின் நாஜிகள் முதலில் போலந்தைக் கைப்பற்றினார்கள். அப்போது கோயரிங் எழுதினான்; “போலந்திலே பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுங்கள். போலந்துப் பெண்களை நமது படைவீரர்கள் கற்பழிக்கட்டும். நாஜி படைவீரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உயர்ந்த இரத்தத்துக்குப் பிறந்தவர்கள் என்பதால் அந்தக் குழந்தைகளே வாழும் தகுதி பெற்றவர்கள், அவர்கள் மூலம் போலந்தின் ‘தீட்டு’ கழியட்டும்’’ என்பதுதான் கோயரிங்கின் உபதேசம்.<br />
<br />
இந்த ஆரிய வெறிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியானார்கள். பூமியே இரத்தச் சேறாகியது. இந்த இனவெறிக் கொள்கைக்கு ஜெனேட்சை குற்றத்துக்கு பாசிசத்துக்கு இந்தியப் பார்ப்பனியே வித்தாகும். இங்கே ஒரு ஷின் ஷி குவாங்தி இல்லை; ஒரு இட்லர் இல்லை; ஒவ்வொரு அக்கிரகாரத்திலும் வீட்டுக்கொரு இட்லர் இருக்கிறான்.<br />
<br />
இவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இந்திய வரலாற்றையே அழித்தார்கள். இந்திய மொழிகள்; இந்தியத் தத்துவங்கள், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் மறைத்தார்கள்; திரித்தார்கள்; அனல் வாதம் புனல் வாதம் என்கிற பெயரில் சூழ்ச்சியினால் அழித்தார்கள்.<br />
<br />
இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த பகுத்தறிவு இயக்கமாம் புத்தம், தேடித் தேடி அழிக்கப்பட்டது. புத்த விகார்கள் நாசமாக்கப்பட்டன. அவை ஆரியச் சின்னங்களாக மாற்றப் பட்டன. மங்கை உருவில், மகான் உருவில் பாண்டிய மன்னனை ஏமாற்றி எண்ணாயிரம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் கழுவிலேற்றப்பட்டார்கள்.<br />
<br />
முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது என்பார்கள். தமிழர்களோ முத்துக்களை விடவும் மேலான தங்கள் இதயத்தையே அவர்களுக்குத் திறந்து வைத்தார்கள். ஆனால் பன்றிகள் எவ்வளவோ உயர்ந்தவை என்று ஆரியர்கள் நிரூபித்தார்கள்.<br />
<br />
பஞ்சையாய்ப் பாராரியாய் நாடோடிகளாய் வந்த ஆரியர்களுக்காகத் திராவிடர்களின் இதயம் உருகிற்று.<br />
<br />
நண்பர்களே வீடுதருகிறோம்; நிலம் தருகிறோம்; எம் சகோதரராய் உங்களை அணைத்துக் கொள்கிறோம் நிம்மதியாய் வாழுங்கள் என்று வளமான பகுதிகளையெல்லாம் ‘மங்கலங் களாய்’த் தானம் தந்தார்கள்.<br />
<br />
 தமிழரின் பண்பாடே அவர்களுக்கு விலங்காயிற்று. நாகரிக இனத்தைப் பண்பாடற்ற போக்கிரிகள் எளிதில் வெல்வதுதான் வரலாறு எங்கிலும் காணக் கிடைக்கும் செய்தி. இங்கேயும் அதுதான் நடந்தது.<br />
<br />
தமிழினம் ஏமாற்றப்பட்டது. அவர்களின் சரித்திரம் மாற்றப்பட்டது. அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் போக எஞ்சியவற்றுள் ஆரியச் சிந்தனைகள் புகுத்தப்பட்டன. புகழ் பெற்ற புலவர்கள் கலைஞர்களை ஆரிய மயமாக்கினார்கள். குறைந்த பட்சம் ஆரியருக்குப் பிறந்த சூத்திரரே அறிவாளிகள் ஆக முடியும்; திருவள்ளுவர், அகத்தியர் போன்றோர் அப்படித்தான் அறிஞராய்ப் பிறந்தவர்கள் என்று கதை கட்டினார்கள். ஆரியக் கறைபடாத தமிழ் இலக்கியமே இல்லை என்கிற அளவுக்கு இலக்கிய - வரலாற்று மோசடிகள் நடந்தன. இதை எதிர்த்தவர்கள், தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க நினைத்தவர்கள், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.<br />
<br />
பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், ஆசைத் தம்பி, சிற்றரசு, குத்தூசி குருசாமி என்று நூற்றுக்கணக்கான திராவிட இனச் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய நூல்கள் தடைசெய்யப்பட்டன. இந்த அறிவின் ஆதரவாளர்கள், சிறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான போதிலும் சீன நெடுஞ்சுவரை விடவும் உறுதியான நெடுஞ்சுவர் ஒன்றைத் தம் இனத்துக்காகக் கட்டி எழுப்பிவிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுத்தறிவுக் கோட்டை தான். திராவிட இயக்கம்.<br />
<br />
திராவிட இயக்கம்தான் தமிழினத்தின் வரலாற்றையும் சிந்தனைக் கருவூலத்தையும் பாதுகாத்து, ஆரிய ஆணவத்தையும் எதிர்த்து நிற்கிறது. இந்த அறிவியக்கக் கோட்டையைக் கட்டிய அடித்தள - அஸ்திவாரக் கற்களில் ஒன்றுதான் புலவர் குழந்தையின் இராவண காவியம்...<br />
<br />
(-சென்னைச் சிந்தனையாளர் மன்றம் நடத்தும் தமிழ் அறிஞர் சிலம்பொலியாரின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவின் நான்காம் பொழிவில் இளவேனில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி.)<br />
<br />
<br />
﻿¿ýÈ¢- ¾Á¢úîº¡ý§È¡÷ §ÀÃ¨Å ¦ºö¾¢Á¼ø                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும்<br />
<br />
இளவேனில் <br />
<br />
<br />
சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்?<br />
<br />
 ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.<br />
<br />
அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டு மன்னன் ஷின்ஷி குவாங்தி மயங்கிப் போய்விடவில்லை. ஏனென்றால், வாழ்த்திய புலவர்கள் ஷின்ஷி குவாங்தியை வாழ்த்தும்போது அவனுக்கு முந்திய பல அரசர்களின் பெருமைகளைச் சொல்லி, அந்த வரலாற்றின் வாரிசே வாழ்க என்றார்கள்.<br />
<br />
மன்னனுக்கு அது பொறுக்க வில்லை. வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் இந்த மண்ணில் தகுதி பெற்றவன் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு முன்னேயும் புகழுக்குரிய மன்னர்கள் இருந்தார்கள் என்று சொல்வது எனக்கு எதிரான சதியேதான். மனிதர்கள் நினைவிலும், வரலாற்றுக் குறிப்பிலும் ஒரே மன்னனாகத் தன் பெயர் மட்டுமே இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள், காவியங்கள், சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் என அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.<br />
<br />
நாடெங்கும் உள்ள நூல்களெல்லாம் சிப்பாய்களால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒரு பெரும் சதுக்கத்தில் போட்டு தீவைத்தார்கள். அந்த நெருப்பு அணையாமல் ஆறு மாதங்களுக்குமேல் எரிந்தது.<br />
<br />
ஆனாலும் வரலாற்றை அழிக்கவிடோம்; அறிவின் கொடைகளை நெருப்பிலிடச் சம்மதியோம் என்று நூல்களைத் தரமறுத்தவர்களும் இருந்தார்கள். அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட அறிவின் ஆதரவாளர்கள் இருபது லட்சத்துக்கும் அதிகமாயிருந்தார்கள்.<br />
<br />
அறிவை நேசித்ததற்காக, வரலாற்றைப் பாதுகாப்பதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்ற அந்த லட்சக்கணக்கான அடிமைகள் கட்டியதுதான் அழியாத வரலாற்றுச் சின்னமாய் உலக அதிசயமாய் விளங்கும் சீனத்து நெடுஞ்சுவர். சீன நெடுஞ்சுவர் நினைவுக்கு வரும்போதெல்லாம், வரலாற்றையும் அறிவியலையும் பாதுகாப்பதற்காக ஆக்கினைக்கும் அடக்கு முறைக்கும் அஞ்சாத அந்த அறிவார்ந்த போராளிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய தியாகம் சீனத்தின் வரலாற்றையும் அறிவுக் களஞ்சியத்தையும் மாத்திரமல்ல பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கும் பாதுகாப்பரணையும் வழங்கியிருக்கிறது.<br />
<br />
எத்தனை கொடுமைகள் எதிர்வந்தாலும், கொடுங்கோலன் ஆட்சி நடத்தினாலும், அந்தச் சீனத்துக்குச் சென்றேனும் அறிவைத்தேடு என்பதுதான் உயிர்த் துடிப்புள்ள மனித இனத்தின் அறிவுரை; அறை கூவல்!<br />
<br />
சீனத்தில் நடந்ததை விடக் கொடுமையான முறையில் அறிவுக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரான கொடுமைகள் நடந்த வேறொரு நாடும் உண்டு.<br />
<br />
சீனத்திலே ஒரே ஒரு ஷின்ஷி குவாங்தி தான் இருந்தான். இந்த நாட்டிலோ ஆயிரக்கணக்கான அறிவின் எதிரிகள் இருந்தார்கள். அது இந்தியாதான். சீனக் கொடுங்கோலன் வரலாறே என்னிடமிருந்துதான் தொடங்கவேண்டும். நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது என்றான்.<br />
<br />
அதே கருத்தை இங்குள்ள ஆரியர்கள் வேறு சொற்களில் சொன்னார்கள்.<br />
<br />
பிரபஞ்சம் இயற்கைக்குக்<br />
கட்டுப்பட்டது.<br />
இயற்கை கடவுளுக்குக்<br />
கட்டுப்பட்டது,<br />
கடவுள் மந்திரத்துக்குக்<br />
கட்டுப்பட்டவர்<br />
மந்திரம் பிராமணனுக்குக்<br />
கட்டுப்பட்டது<br />
<br />
என்பது இவர்களின் நம்பிக்கை. பார்ப்பனனே மந்திரங்களுக்கும், கடவுளுக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்துக்கும் அதிபதி. பார்ப்பனரே உயர்ந்தோர். அவர்களே உலகையும் வாழ்வையும் நிச்சயிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். மற்ற இன மக்கள் அனைவரும் இழிந்தவர்கள்; சூத்திரர்கள். பார்ப்பனர்க்குப் பணிவிடை செய்வதே பார்ப்பனர் அல்லாதாரின் கடமை; தர்மம்; விதி; கதி என்றார்கள்.<br />
<br />
ஆரியரே அனைத்து மக்களிலும் மேலானோர்; ஆரிய இனமே ஆளப் பிறந்த இனம் எனும் ஆணவச் சிந்தனை இட்லரை வெகுவாய்க் கவர்ந்தது. அந்த ஆரிய வெறியில்தான் அவன் உலகப் போரைத் தொடங்கினான். இட்லரின் நாஜிகள் முதலில் போலந்தைக் கைப்பற்றினார்கள். அப்போது கோயரிங் எழுதினான்; “போலந்திலே பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுங்கள். போலந்துப் பெண்களை நமது படைவீரர்கள் கற்பழிக்கட்டும். நாஜி படைவீரர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உயர்ந்த இரத்தத்துக்குப் பிறந்தவர்கள் என்பதால் அந்தக் குழந்தைகளே வாழும் தகுதி பெற்றவர்கள், அவர்கள் மூலம் போலந்தின் ‘தீட்டு’ கழியட்டும்’’ என்பதுதான் கோயரிங்கின் உபதேசம்.<br />
<br />
இந்த ஆரிய வெறிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியானார்கள். பூமியே இரத்தச் சேறாகியது. இந்த இனவெறிக் கொள்கைக்கு ஜெனேட்சை குற்றத்துக்கு பாசிசத்துக்கு இந்தியப் பார்ப்பனியே வித்தாகும். இங்கே ஒரு ஷின் ஷி குவாங்தி இல்லை; ஒரு இட்லர் இல்லை; ஒவ்வொரு அக்கிரகாரத்திலும் வீட்டுக்கொரு இட்லர் இருக்கிறான்.<br />
<br />
இவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இந்திய வரலாற்றையே அழித்தார்கள். இந்திய மொழிகள்; இந்தியத் தத்துவங்கள், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் மறைத்தார்கள்; திரித்தார்கள்; அனல் வாதம் புனல் வாதம் என்கிற பெயரில் சூழ்ச்சியினால் அழித்தார்கள்.<br />
<br />
இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த பகுத்தறிவு இயக்கமாம் புத்தம், தேடித் தேடி அழிக்கப்பட்டது. புத்த விகார்கள் நாசமாக்கப்பட்டன. அவை ஆரியச் சின்னங்களாக மாற்றப் பட்டன. மங்கை உருவில், மகான் உருவில் பாண்டிய மன்னனை ஏமாற்றி எண்ணாயிரம் தமிழ்ச் சிந்தனையாளர்கள் கழுவிலேற்றப்பட்டார்கள்.<br />
<br />
முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது என்பார்கள். தமிழர்களோ முத்துக்களை விடவும் மேலான தங்கள் இதயத்தையே அவர்களுக்குத் திறந்து வைத்தார்கள். ஆனால் பன்றிகள் எவ்வளவோ உயர்ந்தவை என்று ஆரியர்கள் நிரூபித்தார்கள்.<br />
<br />
பஞ்சையாய்ப் பாராரியாய் நாடோடிகளாய் வந்த ஆரியர்களுக்காகத் திராவிடர்களின் இதயம் உருகிற்று.<br />
<br />
நண்பர்களே வீடுதருகிறோம்; நிலம் தருகிறோம்; எம் சகோதரராய் உங்களை அணைத்துக் கொள்கிறோம் நிம்மதியாய் வாழுங்கள் என்று வளமான பகுதிகளையெல்லாம் ‘மங்கலங் களாய்’த் தானம் தந்தார்கள்.<br />
<br />
 தமிழரின் பண்பாடே அவர்களுக்கு விலங்காயிற்று. நாகரிக இனத்தைப் பண்பாடற்ற போக்கிரிகள் எளிதில் வெல்வதுதான் வரலாறு எங்கிலும் காணக் கிடைக்கும் செய்தி. இங்கேயும் அதுதான் நடந்தது.<br />
<br />
தமிழினம் ஏமாற்றப்பட்டது. அவர்களின் சரித்திரம் மாற்றப்பட்டது. அழிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் போக எஞ்சியவற்றுள் ஆரியச் சிந்தனைகள் புகுத்தப்பட்டன. புகழ் பெற்ற புலவர்கள் கலைஞர்களை ஆரிய மயமாக்கினார்கள். குறைந்த பட்சம் ஆரியருக்குப் பிறந்த சூத்திரரே அறிவாளிகள் ஆக முடியும்; திருவள்ளுவர், அகத்தியர் போன்றோர் அப்படித்தான் அறிஞராய்ப் பிறந்தவர்கள் என்று கதை கட்டினார்கள். ஆரியக் கறைபடாத தமிழ் இலக்கியமே இல்லை என்கிற அளவுக்கு இலக்கிய - வரலாற்று மோசடிகள் நடந்தன. இதை எதிர்த்தவர்கள், தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க நினைத்தவர்கள், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.<br />
<br />
பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், ஆசைத் தம்பி, சிற்றரசு, குத்தூசி குருசாமி என்று நூற்றுக்கணக்கான திராவிட இனச் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய நூல்கள் தடைசெய்யப்பட்டன. இந்த அறிவின் ஆதரவாளர்கள், சிறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளான போதிலும் சீன நெடுஞ்சுவரை விடவும் உறுதியான நெடுஞ்சுவர் ஒன்றைத் தம் இனத்துக்காகக் கட்டி எழுப்பிவிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுத்தறிவுக் கோட்டை தான். திராவிட இயக்கம்.<br />
<br />
திராவிட இயக்கம்தான் தமிழினத்தின் வரலாற்றையும் சிந்தனைக் கருவூலத்தையும் பாதுகாத்து, ஆரிய ஆணவத்தையும் எதிர்த்து நிற்கிறது. இந்த அறிவியக்கக் கோட்டையைக் கட்டிய அடித்தள - அஸ்திவாரக் கற்களில் ஒன்றுதான் புலவர் குழந்தையின் இராவண காவியம்...<br />
<br />
(-சென்னைச் சிந்தனையாளர் மன்றம் நடத்தும் தமிழ் அறிஞர் சிலம்பொலியாரின் இராவண காவியம் தொடர் சொற்பொழிவின் நான்காம் பொழிவில் இளவேனில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து ஒரு பகுதி.)<br />
<br />
<br />
﻿¿ýÈ¢- ¾Á¢úîº¡ý§È¡÷ §ÀÃ¨Å ¦ºö¾¢Á¼ø                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Íð¼ ¸ðÎ¨Ã- ¾Çõ ¸£üÚ]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=643</link>
			<pubDate>Fri, 03 Mar 2006 15:29:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1777">¾õÀ¢Ô¨¼Â¡ý</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=643</guid>
			<description><![CDATA[                    அக்டோபர் 2005 - மார்ச் 2006 <br />
 <br />
<br />
<br />
&lt;b&gt;நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்<br />
சூரியதீபன் &lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது.<br />
காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது.<br />
<br />
இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்டுத் தாக்குதல்களை உணர முடியும். ழயயீயீல ஞடிபேயட என்பதிலே உலகமயமாதலின் வெளிப்பாடு; மீண்டுமொரு பொங்கலிட கோயிலுக்கு வாருங்கள் என்ற அழைப்பிலே இந்துத்வாவின் வெளிப்பாடு. நம் முன்னால் நிற்கிற மிகப்பெரிய இரண்டு பேரழிவுகள் இவை.<br />
<br />
எந்த வகையான பண்பாட்டுத் தாக்குதல்கள் நம்மீது தொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு பண்பாட்டின் வேர்கள் எவை என்பதை நாம் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலேதான் வரலாற்றில் வாழ்தல் என்பது உருவாகும். எனவே நாம் நமது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாறு எது?<br />
<br />
முதலில் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ``பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தின் உறுப்பாக இருந்து கற்கும் திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதி'' என்று எட்வர்ட் பார்மன் டையர் பண்பாட்டை வரையறுக்கிறார். 1877-ல் அவர் ‘பண்பாடு என்றால் என்ன’ என்று எழுதிய நூலின் வாசகம் இது. பிறகு பண்பாடு பற்றி நிறைய விளக்கங்கள் வந்திருக்கின்றன.<br />
<br />
அந்த வகையில் பார்க்கிறபோது இந்தப் பண்பாடு என்பதற்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் ஆய்வு தேவைப்படுகிறது. இது இரு வகையாக வெளிப்படும். 1. ஏற்கெனவே நிலவுகிற சமுதாய அமைப்பைக் கொண்டு செலுத்துகிற அரசு அமைப்பு, அதனுடைய அதிகார உறுப்புகள் அதாவது ஆட்சி அமைப்பு, ராணுவம், காவல் என ஆயுதங்களாலே இயக்கப்படுகிற ஒரு வடிவம். 2. பண்பாட்டு வடிவம். ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதும் வன்முறை எந்திரங்களால்தான் இயக்கப்படுகிறது என்பதை மார்க்ஸ் வரை யறுத்தார். ஆனால் ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என மார்க்சியத்தை இன்னும் வளப் படுத்தினார். ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து மேட்டிமையாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. மேலாண்மை அல்லது ஆதிக்க சக்திகளுடைய ஆட்சி அதிகாரம் என்பது மக்களுடைய அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. பண்பாட்டு தளத் திலே இதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.<br />
<br />
எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களிலே ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை ஞாபகப்படுத்துகின்றன. முற்றத்திலே புதுமணல் பரப்பி பந்தல் காலிட்டு அந்த ஊரிலே இருக்கிற பெரியவர்கள் அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒரு நபர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது அந்த சமுதாயத்திலே இருக்கிற பெரியவர் இவர்களுடைய தலைமையிலே அந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரி திருமணங்களை நானே நேரடியாக-சாட்சியாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள்கூட பக்கத்திலே இருக்கிற சிறுநகரங்களிலே பெரு நகரங்களிலே திருமண மண்டபங்களில் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொது கலாச்சாரம் என்பதற்குள்ளே வாழ்க்கையைக் கொண்டு வந்துவிடுகிறது.<br />
<br />
மேலாண்மை செலுத்துகிற ஆதிக்க சக்திகளின் கலாச் சாரம்தான் இன்றைக்கு பொது கலாச்சாரமாக இருக்கிறது. மக்களுடைய கலாச்சாரம் என்பது பொது கலாச்சாரமாக இல்லை. ஆகவே திருமண மண்டபம் என்ற வடிவம் வந்தவுடனே திருமணம் என்பது பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாறுகிறது. ஆகவே இன்றைக்குப் பண்பாட்டு வடிவம் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. வாழ்வின் பல்வேறு வடிவங்களிலே அது வெளிப்படுகிறது.<br />
<br />
சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். விதவை மறுமணம் என்பது ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து பால்ய விவாகம் தடுப்பு என்பதிலிருந்து தொடங்கி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே மிகவேகமான சீர்திருத்தமாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அது பேசப்படுகிறது. ஆனால் கைம்மை நோன்பு, விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடியிலே இயல்பாக இருக்கிற எதார்த்தம்.<br />
<br />
இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. எனவே அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.<br />
<br />
வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய இந்த மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் பிறகு நாவலிலே இது வரும்.<br />
<br />
இது நமது அடித்தள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டிலிருந்து எல்லாமே தீர்மானிக்கப்பட வேண்டும்.<br />
<br />
இன்னொரு பேராபத்து. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல உலகமயமாதல். இந்த உலகமயமாதல் என்பது தனியார்மயம் தாராளமயம்-இவற்றினால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதுதான் உலகமயமாதலின் சாரம். கல்வி வியாபாரமயமாதலின் விளைவுதான் கும்பகோணத்திலே 88 குழந்தைகளின் சாவு. இதன் தொடக்கத்தினை முன்பே பலர் தொடங்கி வைத்து விட்டார்கள். குறிப்பாக கல்வி வியாபாரமாக்குதலைத் தொடங்கி வைத்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சாரும்.<br />
<br />
1964 ல் நான் மதுரை தியாகாரய கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மதியம் வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண் டிருந்தபோது எல்லாப் பேருந்துகளும் ஒரு திசை நோக்கித் திருப்பப்படுகின்றன. மதுரையில் அப்போது டிவிஎஸ் என்ற பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏறிச் சென்று மதுரை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சரஸ்வதி உயர்நிலைப் பள்ளி இடிந்து 44 மாணவிகள் சவமானதைக் கண்டேன். அதைப்பற்றி தோழர் பச்சையப்பன் என்கிற நாட்டுப் புறக் கவிஞர் “படபடவென வருகுது ரயிலு கிடுகிடுவென நடுங்குது ஸ்கூலு” என்று நாட்டுப்புறப் பாடல் வடிவிலே ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்த மாணவிகளை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுகிற வேலையை டிவிஎஸ் நிறுவனத்தினுடைய தொழிலாளர்கள்தான் செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 ல் திராவிட இயக்கத்தின் ஆட்சி வந்தபோது 44 மாணவிகளின் கொலைக்குக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் அதே பள்ளிக் கூடத்தை அதே பெயரில் வேறொரு இடத்திலே புதிதாகக் கட்டி நடத்தி வருகிறார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தவுடன் சாதி பண<br />
அடிப்படையில் அய்க்கியமாகி விடு கிறார். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்கு இருக்கிறது. ஆகவே அன்றைக்கு கல்வி வணிக மயமாகி வந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.<br />
<br />
உலகமயமாதல் என்பது எல்லாவற்றிலும் ஊடுருவி வருகிறது. பொருளாதார வேட்டையின் காரணமாக உள்ளுக்குள் நுழைகிற பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் பொருளாதார வேட்டையை மட்டும் நடத்துவதில்லை. அவை பண்பாட்டுத் தளத்தையும் குறிவைக்கின்றன. மலேசிய முன்னாள் பிரதமர் சொன்னார் : ``கொக்கோ கோலா நிறுவனத்தை மலேசியாவுக்குள்ளே நுழைய விட்டதுதான் எங்களுடைய பெரிய தவறாக ஆகிவிட்டது. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சுரண்டிக் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல எங்கள் பண்பாட்டையே அவர்கள் தகர்த்து விட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். அது போலவே ஒரு கொகோ கோலா அல்லது பெப்சி நிறுவனம் நம்மூர் காளி மார்க் வின்சென்ட் சோடா மாப்பிள்ளை விநாயகர் போன்ற வற்றை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.<br />
<br />
12,000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி விரிவுரையாளர்களை-பேராசிரியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். நிரந்தரமான, அமைதியான குடும்பம் என்ற அமைப்புக்குள்ளான இந்த வாழ்க்கையிலே இருந்து அவர்களைப் பிரித்து, அலைந்து திரியும் வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்குகிறார்கள். அலைந்து திரியும் வாழ்க்கை என்பது அலைந்து திரியும் மனநிலையை உருவாக்குவதாகவே இருக் கிறது. இதுதான் நுகர்வு கலாச்சாரத்துக்கான அடிப்படை. நடுநிலையற்ற மனம் எதன்மீதும் நம்பிக்கை இல்லாத மனம் வேறொரு பண்பாட்டுக்கு அவர்களை இழுத்துப் போகிறது. இவ்வகையான கூறுகளும் இந்த சமுதாயத்திலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
எனவே உலக அளவிலான அபாயம் உலகமயமாதல்; உள்நாட்டு அபாயம் இந்துத்வா. இந்த இரு அபாயங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இதற்கான மாற்றுத் தளங்களை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம்? இதற்காக அரசியல் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இக்கால தமிழ் இலக்கியத்தில் தகுதி திறன் மேம்பாடு உன்னதம் பற்றியெல்லாம் பேசுபவர்கள் உலக மயமாதல் இந்துத்வா ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. இலக்கியப் படைப்புகளிலே இவைபற்றிப் பேச முடியவில்லை என்றால் வேறு அரங்கிலே ஊடகங்களிலே பேச வேண்டும். அரசியல் நீக்கமற்ற இலக்கியங்களை உருவாக்குவது என்ற போராட்டத்தையும் நாம் தொடங்க வேண்டும்.<br />
<br />
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம் : சூரியசந்திரன்)<br />
<br />
<br />
&lt;b&gt;¿ýÈ¢-Üð¼¡ï§º¡Ú&lt;/b&gt;<br />
<br />
<br />
 <br />
[/b]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அக்டோபர் 2005 - மார்ச் 2006 <br />
 <br />
<br />
<br />
&lt;b&gt;நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்<br />
சூரியதீபன் &lt;/b&gt;<br />
<br />
<br />
<br />
தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது.<br />
காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது.<br />
<br />
இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்டுத் தாக்குதல்களை உணர முடியும். ழயயீயீல ஞடிபேயட என்பதிலே உலகமயமாதலின் வெளிப்பாடு; மீண்டுமொரு பொங்கலிட கோயிலுக்கு வாருங்கள் என்ற அழைப்பிலே இந்துத்வாவின் வெளிப்பாடு. நம் முன்னால் நிற்கிற மிகப்பெரிய இரண்டு பேரழிவுகள் இவை.<br />
<br />
எந்த வகையான பண்பாட்டுத் தாக்குதல்கள் நம்மீது தொடுக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு பண்பாட்டின் வேர்கள் எவை என்பதை நாம் அறிய வேண்டும். வரலாற்றை அறிதல் என்பதிலேதான் வரலாற்றில் வாழ்தல் என்பது உருவாகும். எனவே நாம் நமது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டின் வரலாறு எது?<br />
<br />
முதலில் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும். ``பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தின் உறுப்பாக இருந்து கற்கும் திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதி'' என்று எட்வர்ட் பார்மன் டையர் பண்பாட்டை வரையறுக்கிறார். 1877-ல் அவர் ‘பண்பாடு என்றால் என்ன’ என்று எழுதிய நூலின் வாசகம் இது. பிறகு பண்பாடு பற்றி நிறைய விளக்கங்கள் வந்திருக்கின்றன.<br />
<br />
அந்த வகையில் பார்க்கிறபோது இந்தப் பண்பாடு என்பதற்கும் விஞ்ஞானபூர்வமான ஓர் ஆய்வு தேவைப்படுகிறது. இது இரு வகையாக வெளிப்படும். 1. ஏற்கெனவே நிலவுகிற சமுதாய அமைப்பைக் கொண்டு செலுத்துகிற அரசு அமைப்பு, அதனுடைய அதிகார உறுப்புகள் அதாவது ஆட்சி அமைப்பு, ராணுவம், காவல் என ஆயுதங்களாலே இயக்கப்படுகிற ஒரு வடிவம். 2. பண்பாட்டு வடிவம். ஓர் அரசு இந்த சமுதாயம் முழுவதும் வன்முறை எந்திரங்களால்தான் இயக்கப்படுகிறது என்பதை மார்க்ஸ் வரை யறுத்தார். ஆனால் ஆலிவர் கிராம்சி கூடுதலாகக் கூறுகிறார். பண்பாட்டு மேலாதிக்கம் என்பது இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என மார்க்சியத்தை இன்னும் வளப் படுத்தினார். ஆனால் இவற்றினால் மட்டுமே ஒரு மேலாண்மை மற்றும் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படுவதாக நான் கருதவில்லை. மாறாக மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் சமூக ஒப்புதலை மக்களிடமிருந்து மேட்டிமையாளர்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது என்று கிராம்சி குறிப்பிடுகிறார். எனவே பண்பாடு என்பது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. மேலாண்மை அல்லது ஆதிக்க சக்திகளுடைய ஆட்சி அதிகாரம் என்பது மக்களுடைய அங்கீகாரத்தோடு நிறுவப்படுகிறது. பண்பாட்டு தளத் திலே இதற்கான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்.<br />
<br />
எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழர் திருமணங்கள் கடந்த காலத்திலே எப்படி நடந்தன என்பதை நாம் அறிவோம். இப்போதும்கூட கிராமப்புறங்களிலே ஓரிரு இடங்களில் நடக்கிற திருமணங்கள் சங்க காலத் திருமணங்களை ஞாபகப்படுத்துகின்றன. முற்றத்திலே புதுமணல் பரப்பி பந்தல் காலிட்டு அந்த ஊரிலே இருக்கிற பெரியவர்கள் அந்த சமுதாயத்தின் பழக்க வழக்கம் பற்றி அறிந்த அறிவார்ந்த ஒரு நபர் அல்லது அந்தக் குழுவிலே, குடும்பத்திலே மூத்தவர் அல்லது அந்த சமுதாயத்திலே இருக்கிற பெரியவர் இவர்களுடைய தலைமையிலே அந்தத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அந்த மாதிரி திருமணங்களை நானே நேரடியாக-சாட்சியாகக் கண்டிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கிராமப்புறங்களிலே நடத்தப்படுகிற திருமணங்கள்கூட பக்கத்திலே இருக்கிற சிறுநகரங்களிலே பெரு நகரங்களிலே திருமண மண்டபங்களில் நடத்தப்படுகின்றன. இது ஒரு பொது கலாச்சாரம் என்பதற்குள்ளே வாழ்க்கையைக் கொண்டு வந்துவிடுகிறது.<br />
<br />
மேலாண்மை செலுத்துகிற ஆதிக்க சக்திகளின் கலாச் சாரம்தான் இன்றைக்கு பொது கலாச்சாரமாக இருக்கிறது. மக்களுடைய கலாச்சாரம் என்பது பொது கலாச்சாரமாக இல்லை. ஆகவே திருமண மண்டபம் என்ற வடிவம் வந்தவுடனே திருமணம் என்பது பார்ப்பனர்களால் ஓதப்படுகிற மந்திரங்களில் நடத்தப்படுவதாக மாறுகிறது. ஆகவே இன்றைக்குப் பண்பாட்டு வடிவம் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. வாழ்வின் பல்வேறு வடிவங்களிலே அது வெளிப்படுகிறது.<br />
<br />
சீர்திருத்த திருமணங்கள் பற்றி இப்போது நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். விதவை மறுமணம் என்பது ராஜாராம் மோகன்ராய் காலத்திலிருந்து பால்ய விவாகம் தடுப்பு என்பதிலிருந்து தொடங்கி, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே மிகவேகமான சீர்திருத்தமாக வைக்கப்பட்டது. இன்றைக்கும் அது பேசப்படுகிறது. ஆனால் கைம்மை நோன்பு, விதவையாக இருப்பது அல்லது வேறொரு திருமணம் செய்து கொள்வது, சாதாரண தமிழ்க் குடியிலே இயல்பாக இருக்கிற எதார்த்தம்.<br />
<br />
இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கைம்மை நோற்பதில்லை. அவர்களுக்கு ஒரு கணவனைப் பிடிக்காதபோது வேறு கணவனைத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. எனவே அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதற்கு அறுத்துக் கட்டுதல் என்று பெயர். நவ நாகரிகமாக விவாகரத்து என்று சொல்கிறோம்.<br />
<br />
வேறொரு ஆணை மணந்து கொள்கிறபோது ஏற்கெனவே இருந்த கணவன் மூலம் பெற்ற குழந்தைகள் ஆணுடையதா? பெண்ணுடையதா? இந்து திருமணச் சட்டங்கள் ஆணுக்குச் சாதகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன. அறுத்துக் கட்டுகிற பழக்கமுடைய இந்த மக்கள் பெண்ணுக்கு முதல் கணவனாலே பிறந்த குழந்தைகளையும் அவள் இரண்டாவது ஆணுடன் வாழச் செல்கிறபோது அழைத்துச் செல்கிறாள். இதுகாலம் வரை இந்த வழக்கம் இருந்துகொண்டு வருகிறது. பூமணியின் பிறகு நாவலிலே இது வரும்.<br />
<br />
இது நமது அடித்தள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாட்டிலிருந்து எல்லாமே தீர்மானிக்கப்பட வேண்டும்.<br />
<br />
இன்னொரு பேராபத்து. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல உலகமயமாதல். இந்த உலகமயமாதல் என்பது தனியார்மயம் தாராளமயம்-இவற்றினால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதுதான் உலகமயமாதலின் சாரம். கல்வி வியாபாரமயமாதலின் விளைவுதான் கும்பகோணத்திலே 88 குழந்தைகளின் சாவு. இதன் தொடக்கத்தினை முன்பே பலர் தொடங்கி வைத்து விட்டார்கள். குறிப்பாக கல்வி வியாபாரமாக்குதலைத் தொடங்கி வைத்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சாரும்.<br />
<br />
1964 ல் நான் மதுரை தியாகாரய கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மதியம் வகுப்பு முடிந்து வெளியே வந்து கொண் டிருந்தபோது எல்லாப் பேருந்துகளும் ஒரு திசை நோக்கித் திருப்பப்படுகின்றன. மதுரையில் அப்போது டிவிஎஸ் என்ற பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏறிச் சென்று மதுரை ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சரஸ்வதி உயர்நிலைப் பள்ளி இடிந்து 44 மாணவிகள் சவமானதைக் கண்டேன். அதைப்பற்றி தோழர் பச்சையப்பன் என்கிற நாட்டுப் புறக் கவிஞர் “படபடவென வருகுது ரயிலு கிடுகிடுவென நடுங்குது ஸ்கூலு” என்று நாட்டுப்புறப் பாடல் வடிவிலே ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்த மாணவிகளை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுகிற வேலையை டிவிஎஸ் நிறுவனத்தினுடைய தொழிலாளர்கள்தான் செய்தார்கள். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1967 ல் திராவிட இயக்கத்தின் ஆட்சி வந்தபோது 44 மாணவிகளின் கொலைக்குக் காரணமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் உரிமையாளர் அதே பள்ளிக் கூடத்தை அதே பெயரில் வேறொரு இடத்திலே புதிதாகக் கட்டி நடத்தி வருகிறார். 1967ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வந்தவுடன் சாதி பண<br />
அடிப்படையில் அய்க்கியமாகி விடு கிறார். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்கு இருக்கிறது. ஆகவே அன்றைக்கு கல்வி வணிக மயமாகி வந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.<br />
<br />
உலகமயமாதல் என்பது எல்லாவற்றிலும் ஊடுருவி வருகிறது. பொருளாதார வேட்டையின் காரணமாக உள்ளுக்குள் நுழைகிற பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் பொருளாதார வேட்டையை மட்டும் நடத்துவதில்லை. அவை பண்பாட்டுத் தளத்தையும் குறிவைக்கின்றன. மலேசிய முன்னாள் பிரதமர் சொன்னார் : ``கொக்கோ கோலா நிறுவனத்தை மலேசியாவுக்குள்ளே நுழைய விட்டதுதான் எங்களுடைய பெரிய தவறாக ஆகிவிட்டது. மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே சுரண்டிக் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல எங்கள் பண்பாட்டையே அவர்கள் தகர்த்து விட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். அது போலவே ஒரு கொகோ கோலா அல்லது பெப்சி நிறுவனம் நம்மூர் காளி மார்க் வின்சென்ட் சோடா மாப்பிள்ளை விநாயகர் போன்ற வற்றை தூக்கிச் சாப்பிட்டு விட்டது.<br />
<br />
12,000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி விரிவுரையாளர்களை-பேராசிரியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். நிரந்தரமான, அமைதியான குடும்பம் என்ற அமைப்புக்குள்ளான இந்த வாழ்க்கையிலே இருந்து அவர்களைப் பிரித்து, அலைந்து திரியும் வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்குகிறார்கள். அலைந்து திரியும் வாழ்க்கை என்பது அலைந்து திரியும் மனநிலையை உருவாக்குவதாகவே இருக் கிறது. இதுதான் நுகர்வு கலாச்சாரத்துக்கான அடிப்படை. நடுநிலையற்ற மனம் எதன்மீதும் நம்பிக்கை இல்லாத மனம் வேறொரு பண்பாட்டுக்கு அவர்களை இழுத்துப் போகிறது. இவ்வகையான கூறுகளும் இந்த சமுதாயத்திலே இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
எனவே உலக அளவிலான அபாயம் உலகமயமாதல்; உள்நாட்டு அபாயம் இந்துத்வா. இந்த இரு அபாயங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இதற்கான மாற்றுத் தளங்களை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம்? இதற்காக அரசியல் துறையிலும் பண்பாட்டுத் தளத்திலும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இக்கால தமிழ் இலக்கியத்தில் தகுதி திறன் மேம்பாடு உன்னதம் பற்றியெல்லாம் பேசுபவர்கள் உலக மயமாதல் இந்துத்வா ஆகியவை பற்றிப் பேசுவதில்லை. இலக்கியப் படைப்புகளிலே இவைபற்றிப் பேச முடியவில்லை என்றால் வேறு அரங்கிலே ஊடகங்களிலே பேச வேண்டும். அரசியல் நீக்கமற்ற இலக்கியங்களை உருவாக்குவது என்ற போராட்டத்தையும் நாம் தொடங்க வேண்டும்.<br />
<br />
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம் : சூரியசந்திரன்)<br />
<br />
<br />
&lt;b&gt;¿ýÈ¢-Üð¼¡ï§º¡Ú&lt;/b&gt;<br />
<br />
<br />
 <br />
[/b]                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா????]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=713</link>
			<pubDate>Sat, 25 Feb 2006 13:02:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2194">putthan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=713</guid>
			<description><![CDATA[ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா????<br />
<br />
என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக  கருத்தெழுதுகிறீர்கள்?<br />
<br />
எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா????<br />
<br />
என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா???<br />
<br />
1.சிறிலங்கா கொடி தூக்கல்?<br />
<br />
2.கருணாவை ஓப்படைத்தல்?<br />
<br />
3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்?<br />
<br />
4.58 வது அகவையில் முதல்வர்?<br />
<br />
இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா?<br />
<br />
இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா????<br />
<br />
இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?]]></description>
			<content:encoded><![CDATA[ஈழ இந்திய புரிந்துணர்வா????அல்லது பகை உணர்வா????<br />
<br />
என்ன தம்பிமார்களே சின்னபுள்ளத்த்னமாக  கருத்தெழுதுகிறீர்கள்?<br />
<br />
எட்டாம் வகுப்பு அறிவு என்றாலும் ஒரளவிற்காவது விவஸ்தை இல்லையா????<br />
<br />
என்ன தலையங்கத்திற்கு கீழ் என்ன எழுதுவது என்றும் தெரியாதா???<br />
<br />
1.சிறிலங்கா கொடி தூக்கல்?<br />
<br />
2.கருணாவை ஓப்படைத்தல்?<br />
<br />
3.ராஜீவ் கொலையும் சுப்புவின் அலட்டலும்?<br />
<br />
4.58 வது அகவையில் முதல்வர்?<br />
<br />
இவ் தலைப்புக்கும் விவாதத்திற்கும் பொருத்தம் அற்ற வகையில் கருத்துகளை ஒரு சிலர் திட்டம் இட்டு செய்கிறார்களா?<br />
<br />
இவர்கள் உண்மையாக இந்தியர்களா???அல்லது முன்னாள் ஆயுத குழுவினரா????<br />
<br />
இப்படியான விடயங்களை நிர்வாக குழுவினர் சீறிலங்கா அரசை போல் கணக்கெடுப்பதில்லை ஏன்? ஏன்?ஏன்?]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புலம் என்பது என்ன.?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=752</link>
			<pubDate>Wed, 22 Feb 2006 13:35:23 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1553">அகிலன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=752</guid>
			<description><![CDATA[                    புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு ,  எண்று பொறுள்படுக்கிறது. ஆனால் இங்கு புலம் என்கிண்ற பகுதியில் அவுஸ்றேலியா, இங்கிலாந்து, கனடா,  ஜேர்மனி , சுவிசிலாந்து என்கின்ற பொருள்படும் வகையில் பதிவுகள் உள்ளனவே ஏன்.?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புலம் எண்றால் வயல், இடம், திக்கு, அறிவு, துப்பு, நூல் , வேதம், உணர்வு ,  எண்று பொறுள்படுக்கிறது. ஆனால் இங்கு புலம் என்கிண்ற பகுதியில் அவுஸ்றேலியா, இங்கிலாந்து, கனடா,  ஜேர்மனி , சுவிசிலாந்து என்கின்ற பொருள்படும் வகையில் பதிவுகள் உள்ளனவே ஏன்.?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அடிப்படையில் நிறைய-!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=775</link>
			<pubDate>Tue, 21 Feb 2006 04:26:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=775</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம்<br />
ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க<br />
அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத-  எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க- <br />
ராஜதந்திரம் எங்கிறாங்க~!<br />
<br />
அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க-<br />
<br />
கலவரம் வந்தால நீங்க கனடா  வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க-<br />
<br />
ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா? <br />
ஏன் - ஓடினான்?-<br />
<br />
காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-!<br />
<br />
உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-!<br />
<br />
முதுகினில் ரவைகள் பாய்ந்தால் தான் - எங்க உணர்வு புரியும்!<br />
<br />
கர்நாடகா காரன் அடிச்சு துரத்தி ஓடிவருற தமிழனை விட- பிரபுதேவாவும்-பிரகாஷ்ராஜ்-ம்  சூப்பரா பின்னுறாங்க என்னு- ஒரு கனவு உலகம்- அதுவே- உங்க வாழ்க்கையா போச்சு-!<br />
இரத்தம் முகமெங்கும்  வழிய ஓடும் எங்கள பார்த்து - ஒரு நக்கல் உங்களூக்கு இருக்கலாம்- அகதி என்று-!<br />
<br />
<br />
அப்பிடியான அல்ப சிந்தனை சுட்டு போட்டாலும் எமக்கு வராது-!<br />
<br />
நேற்றுத்தான் இந்திய ராணுவத்தால் எம் மண்ணில் - எம் மண்ணில் சிதைப்பட்ட எங்கட உறவுகள் நினைவு தினம் என்றானாலும்-<br />
<br />
நாளைக்கே ஒரு சண்டை - பாகிஸ்தானுக்கும்- உங்களுக்கும் வந்தால்- நீங்க வெல்லணும் என்னு மட்டுமே - நினைப்போம்! 8) <br />
<br />
அது கார்கில் போர் ஆனாலும் சரி- <br />
அவுஸ்ஸோட- இந்தியா-ஆடும்  கிரிக்கட் போட்டி ஆனாலும் சரி-!<br />
<br />
நிறையவேறுபாடு-! 8)&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம்<br />
ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க<br />
அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத-  எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க- <br />
ராஜதந்திரம் எங்கிறாங்க~!<br />
<br />
அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க-<br />
<br />
கலவரம் வந்தால நீங்க கனடா  வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க-<br />
<br />
ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா? <br />
ஏன் - ஓடினான்?-<br />
<br />
காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-!<br />
<br />
உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-!<br />
<br />
முதுகினில் ரவைகள் பாய்ந்தால் தான் - எங்க உணர்வு புரியும்!<br />
<br />
கர்நாடகா காரன் அடிச்சு துரத்தி ஓடிவருற தமிழனை விட- பிரபுதேவாவும்-பிரகாஷ்ராஜ்-ம்  சூப்பரா பின்னுறாங்க என்னு- ஒரு கனவு உலகம்- அதுவே- உங்க வாழ்க்கையா போச்சு-!<br />
இரத்தம் முகமெங்கும்  வழிய ஓடும் எங்கள பார்த்து - ஒரு நக்கல் உங்களூக்கு இருக்கலாம்- அகதி என்று-!<br />
<br />
<br />
அப்பிடியான அல்ப சிந்தனை சுட்டு போட்டாலும் எமக்கு வராது-!<br />
<br />
நேற்றுத்தான் இந்திய ராணுவத்தால் எம் மண்ணில் - எம் மண்ணில் சிதைப்பட்ட எங்கட உறவுகள் நினைவு தினம் என்றானாலும்-<br />
<br />
நாளைக்கே ஒரு சண்டை - பாகிஸ்தானுக்கும்- உங்களுக்கும் வந்தால்- நீங்க வெல்லணும் என்னு மட்டுமே - நினைப்போம்! 8) <br />
<br />
அது கார்கில் போர் ஆனாலும் சரி- <br />
அவுஸ்ஸோட- இந்தியா-ஆடும்  கிரிக்கட் போட்டி ஆனாலும் சரி-!<br />
<br />
நிறையவேறுபாடு-! 8)&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=782</link>
			<pubDate>Mon, 20 Feb 2006 14:41:32 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=782</guid>
			<description><![CDATA[                    நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நீங்கள் பாட்டுக்கு எங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் அளவுக்கு கேவலமாகப் பேசுவீர்கள்.... எங்கள் தலைவர்களை குள்ளநரி என்றெல்லாம் விமர்சிப்பீர்கள்.... அதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டால் தான் நாங்கள் தமிழினம்.... இல்லையென்றால் துரோகி அப்படித்தானே?                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>