<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - துயர்பகிர்வு / நினைவுகூரல்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:46 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=25</link>
			<pubDate>Sat, 29 Apr 2006 05:10:32 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=25</guid>
			<description><![CDATA[                    தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்...<br />
<br />
இதுவரை ஈடு செய்யப்பட முடியாமல் இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பு...<br />
<br />
<br />
அறிவின் இழப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி         <br />
  <br />
 <br />
Friday, 28 April 2006<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுகியது- வேறு ஒருவரும் இல்லை. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகிறது. <br />
<br />
<br />
தர்மரட்ணம் சிவராம் மறைந்த பொழுது அவறைப் பற்றி ஆங்கில, சிங்கள தினசரிகளிலும் வாரப் பதிப்புகளிலும் வெளிவந்த அஞ்சலிகள் ஈழத்துத் தமிழ் உலகை பெருத்த ஆச்சரியத்துக்குள் தள்ளின. தன்னுடைய ஆங்கில எழுத்துகள் மூலம் எந்த அரசியல் நிலைபாடுகளுக்கெதிராக எழுதினானோ அந்த நிலைப்பாடு சார்ந்தவர்கள் அத்தனை பத்திரிகையாளர்களும் அவனது மானிடச் சிறப்பினையையும் கருத்து நேர்மையையும் எழுத்து வன்மையையும் வாய்விட்டு, மனம்விட்டு பாராட்டினர். அந்த புகழ்ச்சிகளைக் கண்ட, கேள்வியுற்ற அவனை தமது இரகசிய குரலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த பலர் வாய்மூடி மௌனிகளாகியதும் எனக்குத் தெரியும். <br />
<br />
சிவராம் பருந்து போன்றவன், அவன் உயர உயர மேலே மேலே பறப்பவன். அதற்கான ஆற்றல் கொண்டவன். காகங்களுக்கு பருந்து மீது பொறாமை. பல தடைகளில் முதுகுக்கு பின்னால் "கரைதல்"களும் இருந்தன. ஆனால், தன் மறைவோடு ஜோதியாக மேற்கிளம்பிய அவன் தன் சிறப்புகளையும் ஆற்றல்களையும் யாவரும் உணரச் செய்தான். <br />
<br />
ஒரு வகையிற் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை நாம் மீள் கண்டு பிடிப்புச் செய்தோம். <br />
<br />
சிவராம் வாழ்ந்த பொழுது நாம் உணராதிருந்த ஒன்று அவனது ஒரு வருட காலத்து மறைவு பளிச்சென புகட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் புதிய அதிகார மையங்கள் ஏற்பட்டதன் பின்னரும் இலங்கைத் தமிழர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல உண்மையில் இந்த பிரச்சினைகள் பல. உண்மையில் இலங்கை நிலைப்பட்ட, தென்னாசிய நிலைப்பாட்டில் ஆசிய நிலைபட்ட, ஐரோப்பிய நிலைபட்ட, அமெரிக்கா நிலைபட்ட அரசியற் சிக்கற்பாடுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முடியவுமில்லை. அவற்றை புரிந்து கொள்ளும் முறையில் எழுதக் கூடியவருமில்லை. மிஞ்சிப் போனால் தமிழர் பலங்களை ஒளிபாய்ச்சி காட்டும் விமர்சனங்கள் முன்னர் வருவதுண்டு. இப்பொழுது அதுவுமில்லை. <br />
<br />
இதற்கும் மேலாக கடந்த சில மாதங்களுள் போரியல் நிலையே மாறியுள்ளது. படையினரின் நிலைப்பாடு மாத்திரமல்லாமல், கையாளப்படும் உத்திகளும், முறை வழிகளும் கூட மாறிவிட்டன. இவற்றினுடைய போரியல் விளக்கங்களை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம். <br />
<br />
இப்படியானவற்றை விளக்கும் திறன் சிவராமிடத்திலிருந்தது. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகின்றது. <br />
<br />
இந்த பின்புலத்தில் சிந்திக்கும் பொழுதுதான் சிவராமென்ற சிந்தனையாளனின் முக்கியத்துவம் புலனாகின்றது. சிவராம், `தராக்கி' என்ற புனைப்பெயருடன் ஆங்கிலத்தில் 1970 களின் பிற்கூற்றில் எழுதத் தொடங்கினான். ஆங்கிலத்தில் இந்த இதழியல் எழுத்து முயற்சியினை தொடங்குவதற்கு முன்னர் அவன் புளொட் இயக்கத்தின் உயர் நிலை அங்கத்தவர்களின் ஒருவனாக இருந்தான். அந் நாட்களில் தாரகை என தனக்கு வைத்துக் கொண்ட பெயரையே ஆங்கிலத்திற்கு பயன்படுத்தத் தொடங்க அது தராக்கி என உச்சரிக்கப்படலாயிற்று. <br />
<br />
1970களின் பிற்கூற்றின் 78 - 79 என நம்புகிறேன். இலங்கை முதன் முதலாக தீவிரவாத தமிழ் இளைஞர்களின் இயக்க ஆற்றல்களையும் அவற்றின் வழியாக வருகின்ற அரசியற் சாத்தியப்பாடுகளையும் முழு நிலையாக உணரத் தொடங்கிய காலமாகும். பாடசாலை பையன்களின் சிறு பிள்ளை விளையாட்டுத் தனம் என்ற வகையிலேயே அந்த எழுச்சியை ஜெ.ஆர். ஜயவர்த்தன முதல் ஜே.என். திக்ஷிட் வரை பலர் பார்த்த காலமது. அந்த காலகட்டத்திலேதான் "த ஜலன்ட்" பத்திரிகையில் ஞாயிறு வாரப் பதிப்புகளில் தமிழ் உரிமைப் போர் பற்றி, பிரதானமாக போரியல் பின்புலம் பற்றி தராக்கி எழுதத் தொடங்கியிருந்தான். அந் நாட்களில் மேர்வின் டி சில்வா அரசியற் செல்வாக்குமிக்க Lanka Guardian என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். சிவராம் Lanka Guardian இல் இளைஞர் இயக்கங்களில் போரியல் அம்சங்களைப் பற்றி மாத்திரமல்லாது, தமிழரின் போரியற் பண்புகள் பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடரை எழுதினான். புறநானூறு முதல் எட்கார் தேர்ஸ்ட்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற காலனித்துவ காலப் பகுதி வரையுள்ள சகல முக்கிய சான்றுகளையும் பயன்படுத்தி, தமிழரின் போராடும் பண்பு பற்றி விரிவாக எழுதியிருந்தான். தமிழர் வரலாறு அவ்வாறு புதிதான ஒரு வாசிப்பைப் பெற்றதும், அரசியல்வாதிகள் அரசியற் விமர்சகர்கள், அரசியல் மாணவர்கள் எனப் பல்வேறு நிலைபட்டவர்கள் அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். <br />
<br />
இன்னொரு நிலையில் கூறுவதானால் தமிழர் போராட்ட உணர்வுகள் பற்றிய கொள்கை நிலைப்பட்ட, பிரயோக நிலைப்பட்ட ஆய்வினை ஏறத்தாழ சர்வதேச போரியல் பின்புலத்தில் எடுத்துக் கூறும் தனது திறனை அக் கட்டுரைகள் மூலம் சிவராம் காட்டினான். <br />
<br />
சமூக விஞ்ஞானிகள் சங்க ஒருங்குகூடல் என்று நினைக்கிறேன். குமாரி ஜயவர்த்தன, சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க போன்றவர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது வடக்கில் தொடங்கியிருந்த போர்பற்றி மேர்வின் டி சில்வா கூறிய ஒரு குறிப்புரை என் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. "சிவராமின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுதுதான் இந்த போராட்டத்தின் ஆழ, அகலம் குறிப்பாக, அதன் அரசியல் ஆழம் புரிகிறது என்ற கருத்துப்பட மேர்வின் டி சில்வா கூறினார். <br />
<br />
2005 இல் சிவராம் காலமான பொழுது அவறைப் பற்றி தமிழர்கள் அல்லாத அரசியல் விமர்சகர்கள் எழுதியபொழுது இந்த அம்சத்தையே வற்புறுத்தினர் என்று கூறலாம். அதாவது, ஈழத் தமிழர் உரிமைப் போராடத்தின் நியாயப்பாடுகளை அந்த போராட்டத்திலே சம்பந்தப்பட்டுள்ள போரியல் முறைமைகளை சிவராம் எழுதியதுபோன்று, வேறெவருமே தமிழர்கள் அல்லாதவர்கள் விளங்கும்படி எழுதவில்லை என்பதைக் கூறினர். சிவராமின் எழுத்து வெறுமனே தமிழர் நிலைப்பாட்டின் ஆங்கில மொழி எடுத்துக் கூறலாக அமையாது, உலகளாவிய உரிமை போராட்டங்களை, உரிமை போராட்டங்களுக்குரிய போரியற் பின்புலத்தில் எடுத்துக் கூறினான். மேலும், சற்று குறிப்பாகக் கூறினால் ஈழத் தமிழர் போராட்டத்தையும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் போரியல் முறைமைகளையும் குறிப்பாக, அதன் தலைமையையும் இந்த வட்டத்தினுள் வைத்து ஆராய்ந்தானெனவும் அந்த நோக்குக்கு ஒரு சர்வதேச வலுவிருந்தது. <br />
<br />
இவ்வாறு எழுதுவதனால் தமிழர் நிலைபட்ட கள நிலைவரங்களை காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதெனினும், அந்த எழுத்துகள் இந்த போராட்டத்தை சர்வதேசமயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது இப்பொழுது தெரியவருகின்றது. <br />
<br />
இக்கட்டத்தில் ஒரு முக்கியமான வினாவினை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்த பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினவாகும். இதற்கான பதில் மிகக் குறுகியது. வேறொருவரும் இல்லை. <br />
<br />
இந்த எழுத்தினுள்ளே ஒரு செல்நெறியிருந்தது. அது அந்த போராட்டத்தின் சில குறைபாடுகளை அதிகம் அழுத்திக் கூறாமையேயாகும். சிவராம் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என்னுடைய ஒரு இளம் நண்பர், சிவராமிடத்து அந்த வினாவைக் கேட்டார். சிவராம் சொன்னார், இந்த குறைபாடு எனக்குத் தெரியும். ஆனால், அதை எழுதுவதன் மூலம் இந்த உரிமைப் போராட்டம் தோற்கடிக்கப்படத் தக்கது என்பதை எடுத்துக் கூற விரும்பவில்லை எனச் சொன்னான். உனது நிலைப்பாட்டில் இது ஒரு முரண்பாடாக இல்லையா என நான் கேட்டேன். ஓரளவு முரண்பாடு உள்ளதுதான். ஆனால், நான் அதனுள்ளிருந்து வெளிவர விரும்பவில்லை என்று சொன்னான். <br />
<br />
சிவராமை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றாலும், அந்த கணத்திலேதான் மகாபாரதத்துக் கர்ணனிலும் பார்க்க பெரியவனாக உண்மையான ஒரு வீமனாக என் கண் முன்னே நின்றான். இந்தப் புலமை நேர்மை, பச்சோந்திகளிடம் கிடைக்காத ஒன்று. <br />
<br />
சிவராமினுடைய இந்த எழுத்தாற்றல்கள் சிவராமை இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்களின் விருப்புமிக்க விருந்தினனாக்கிற்று. வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில் தொடங்கிய விருந்துபசாரங்கள் பின்னர் வெளியே அவ்வத் தலைநகரங்களிலேயே நடைபெற்றன. இலங்கை பற்றி ஆர்வங் கொண்டிருந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள், அவ்வமைச்சுகளின் ஆலோசகர்கள், சிவராமை சந்திப்பதை தமது முக்கிய நிகழ்ச்சி நிரல்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். சென்ற வருடம் மே மாதத்தில் ஜப்பான் செல்லவிருந்தான் என்ற தகவல் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. <br />
<br />
இப்பொழுதுதான் புலனாகின்றது, சிவராம் தன் போக்கில் ஈழத்து உரிமைப் போராட்டத்தில் ஒரு அரசியல் தூதுவனாக விளங்கினான் என்பது. <br />
<br />
சிவராமை அறிந்திருத்தல் என்பது சிக்கல்கள் பல நிறைந்த ஒரு விடயமாகும். உண்மையில் சென்ற வாரந்தான் ஒரு இளம் நண்பர் சிவராம் என்னைப் பற்றி தன்னிடத்தில் கூறியிருந்ததை என்னிடத்துக் கூறினார். இப்படியெல்லாம் நினைத்திருந்தானா என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் தாரையாக ஓடாவிட்டால், நான் மனிதனல்லன் என்பது கருத்து. எனக்கும் சிவராமுக்கும் 1978 முதல் தொடர்பிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது (1978) இல் சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில சிறப்பு நிலை மாணவன் என்ற வகையில் தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமான பல வினாக்களை, ஏறத்தாழ 7,8 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். சர்வதேச இலக்கிய, வரலாற்றியல் ஆய்வு மொழிகளைப் பயன்படுத்தி அந்த வினாக்களை அமைத்திருந்தான். கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் எனது அறைக்கு வெளியே வந்தேன். <br />
<br />
அப்போது கைலாசபதி மாடிப்படி நோக்கி ஏறிவந்தார். இந்தப் பையனை உனக்குத் தெரியுமா எப்படி எழுதுகிறான் பார் என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை கைலாசபதியிடம் நீட்டினேன். எனக்கும் ஒரு கடிதம் வந்தது என்று கைலாசபதி சொன்னார். இருவருமே வியப்புடன் பேசிக் கொண்டோம். <br />
<br />
அப்பொழுது எனக்கு நேரடியாக சிவராமைத் தெரியாது. பின்னர் ஒரு தடவை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக ஞாபகம். பின்னர் உண்மையில் தராக்கி என்ற நிலையில்தான் என்னுடன் பழக்கமேற்பட்டது. தமிழர் வரலாறு பற்றிய தன்னுடைய வினாக்களுக்கு வேண்டிய பதில்களுக்கான தரவுகள் பற்றி அறிவதற்கு என்னோடு உரையாடுவான். 1984- 88 காலத்தில் பிரஜைகள் குழு வேலை காரணமாக கிளாலி கஷ்டங்களுக்கிடையேயும் நான் மாதாமாதம் கொழும்புக்கு வருவேன். சிவராமிடமிருந்து அரசியற் புதினங்களையும் அவன் வியாக்கியானங்களையும் அறிந்து கொள்வதே எனது பசியாகவிருந்தது. சிவராம் என்னை பல தடவைகளிலே மிக மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறான். நீங்கள் இந்த அரசியலில் இறங்க வேண்டாம். உங்கள் தமிழ் வட்டத்தினுள் நின்று கொள்ளுங்கள். நீங்கள் அதன் மூலம் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன என்று சற்று கோபமாகவே கூறுவான். வேறு சிலரும் அப்படிக் கூறுவது வழக்கம். ஆனால் அந்த குரலிலிருந்த உண்மையும், நேர்மையும் அந்த குரலுக்குரியவன் மறைந்ததன் பின்னர்தான் தெரியவருகின்றது. <br />
<br />
சிவராம் அதிகம் பேச மாட்டார். மற்றவர்களை பேச வைக்கும் ஆற்றல் அவனிடமிருந்தது. அவனுடைய நட்புகளும் தொடர்புகளும் பல. அவற்றையெல்லாம் வலக்கை, இடக்கைக்கு தெரியாத முறையிலேதான் வைத்திருந்தான். மரணத்தின் பொழுதுதான் அந்த உண்மைகள் தெரியவந்தன. அவன் மறைந்து ஒரு மாதத்தின் பின்னர் எனக்கு தெரிந்த இளம் சிங்கள மாக்ஸிய சிந்தனையாளரொருவர் என்னிடம் சொன்னார் `அன்று என்னைச் சந்திக்கத்தான் பம்பலப்பிட்டியின் அந்த மதுச்சாலைக்கு சிவராம் வந்திருந்தார்' என்று. <br />
<br />
அவனுடைய அறிவாழம் மிகப்பெரியது. பின்நவீனத்துவம் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது, அந்த விவாத இறுதியில் ஒரு நாள் சொன்னேன். இதில் இந்தனை நாட்களை செலவழித்ததன் நியாயப்பாடு இப்பொழுது சரியோ என்று எனக்கு விளங்கவில்லையென்றேன். அப்பொழுதுதான் பின்நவீனத்துவம் பற்றி தனது மெய்யியல் நிலைப்பாடுகளை என்னிடம் எடுத்துக் கூறினான். இதை, முன்னரேயே ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டேன். <br />
<br />
அவன் சிரித்துக் கொண்டான். அவனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் கிச்டெக்கர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சொன்னார், சிவராம் ஏறத்தாழ நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே நிறைய விவாதித்திருந்தார். அடப்பாவி அந்த புத்தகங்களை வாங்குவதற்கு நான் சிரமப்பட்டபோது கூட என்னிடம் பேசவில்லையே என்று கூறினேன். அவன் மேலும் சிரித்தான்.<br />
<br />
TK<br />
 <br />
<a href="http://www.sooriyan.com/index.php?option=content&amp;task=view&amp;id=3075&amp;Itemid=" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.sooriyan.com/index.php?option=c...id=3075&amp;Itemid=</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்...<br />
<br />
இதுவரை ஈடு செய்யப்பட முடியாமல் இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பு...<br />
<br />
<br />
அறிவின் இழப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி         <br />
  <br />
 <br />
Friday, 28 April 2006<br />
<br />
--------------------------------------------------------------------------------<br />
சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுகியது- வேறு ஒருவரும் இல்லை. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகிறது. <br />
<br />
<br />
தர்மரட்ணம் சிவராம் மறைந்த பொழுது அவறைப் பற்றி ஆங்கில, சிங்கள தினசரிகளிலும் வாரப் பதிப்புகளிலும் வெளிவந்த அஞ்சலிகள் ஈழத்துத் தமிழ் உலகை பெருத்த ஆச்சரியத்துக்குள் தள்ளின. தன்னுடைய ஆங்கில எழுத்துகள் மூலம் எந்த அரசியல் நிலைபாடுகளுக்கெதிராக எழுதினானோ அந்த நிலைப்பாடு சார்ந்தவர்கள் அத்தனை பத்திரிகையாளர்களும் அவனது மானிடச் சிறப்பினையையும் கருத்து நேர்மையையும் எழுத்து வன்மையையும் வாய்விட்டு, மனம்விட்டு பாராட்டினர். அந்த புகழ்ச்சிகளைக் கண்ட, கேள்வியுற்ற அவனை தமது இரகசிய குரலில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த பலர் வாய்மூடி மௌனிகளாகியதும் எனக்குத் தெரியும். <br />
<br />
சிவராம் பருந்து போன்றவன், அவன் உயர உயர மேலே மேலே பறப்பவன். அதற்கான ஆற்றல் கொண்டவன். காகங்களுக்கு பருந்து மீது பொறாமை. பல தடைகளில் முதுகுக்கு பின்னால் "கரைதல்"களும் இருந்தன. ஆனால், தன் மறைவோடு ஜோதியாக மேற்கிளம்பிய அவன் தன் சிறப்புகளையும் ஆற்றல்களையும் யாவரும் உணரச் செய்தான். <br />
<br />
ஒரு வகையிற் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை நாம் மீள் கண்டு பிடிப்புச் செய்தோம். <br />
<br />
சிவராம் வாழ்ந்த பொழுது நாம் உணராதிருந்த ஒன்று அவனது ஒரு வருட காலத்து மறைவு பளிச்சென புகட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் புதிய அதிகார மையங்கள் ஏற்பட்டதன் பின்னரும் இலங்கைத் தமிழர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல உண்மையில் இந்த பிரச்சினைகள் பல. உண்மையில் இலங்கை நிலைப்பட்ட, தென்னாசிய நிலைப்பாட்டில் ஆசிய நிலைபட்ட, ஐரோப்பிய நிலைபட்ட, அமெரிக்கா நிலைபட்ட அரசியற் சிக்கற்பாடுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முடியவுமில்லை. அவற்றை புரிந்து கொள்ளும் முறையில் எழுதக் கூடியவருமில்லை. மிஞ்சிப் போனால் தமிழர் பலங்களை ஒளிபாய்ச்சி காட்டும் விமர்சனங்கள் முன்னர் வருவதுண்டு. இப்பொழுது அதுவுமில்லை. <br />
<br />
இதற்கும் மேலாக கடந்த சில மாதங்களுள் போரியல் நிலையே மாறியுள்ளது. படையினரின் நிலைப்பாடு மாத்திரமல்லாமல், கையாளப்படும் உத்திகளும், முறை வழிகளும் கூட மாறிவிட்டன. இவற்றினுடைய போரியல் விளக்கங்களை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம். <br />
<br />
இப்படியானவற்றை விளக்கும் திறன் சிவராமிடத்திலிருந்தது. இன்று அவனில்லை. அந்த இல்லாமை நன்கு புரிகின்றது. <br />
<br />
இந்த பின்புலத்தில் சிந்திக்கும் பொழுதுதான் சிவராமென்ற சிந்தனையாளனின் முக்கியத்துவம் புலனாகின்றது. சிவராம், `தராக்கி' என்ற புனைப்பெயருடன் ஆங்கிலத்தில் 1970 களின் பிற்கூற்றில் எழுதத் தொடங்கினான். ஆங்கிலத்தில் இந்த இதழியல் எழுத்து முயற்சியினை தொடங்குவதற்கு முன்னர் அவன் புளொட் இயக்கத்தின் உயர் நிலை அங்கத்தவர்களின் ஒருவனாக இருந்தான். அந் நாட்களில் தாரகை என தனக்கு வைத்துக் கொண்ட பெயரையே ஆங்கிலத்திற்கு பயன்படுத்தத் தொடங்க அது தராக்கி என உச்சரிக்கப்படலாயிற்று. <br />
<br />
1970களின் பிற்கூற்றின் 78 - 79 என நம்புகிறேன். இலங்கை முதன் முதலாக தீவிரவாத தமிழ் இளைஞர்களின் இயக்க ஆற்றல்களையும் அவற்றின் வழியாக வருகின்ற அரசியற் சாத்தியப்பாடுகளையும் முழு நிலையாக உணரத் தொடங்கிய காலமாகும். பாடசாலை பையன்களின் சிறு பிள்ளை விளையாட்டுத் தனம் என்ற வகையிலேயே அந்த எழுச்சியை ஜெ.ஆர். ஜயவர்த்தன முதல் ஜே.என். திக்ஷிட் வரை பலர் பார்த்த காலமது. அந்த காலகட்டத்திலேதான் "த ஜலன்ட்" பத்திரிகையில் ஞாயிறு வாரப் பதிப்புகளில் தமிழ் உரிமைப் போர் பற்றி, பிரதானமாக போரியல் பின்புலம் பற்றி தராக்கி எழுதத் தொடங்கியிருந்தான். அந் நாட்களில் மேர்வின் டி சில்வா அரசியற் செல்வாக்குமிக்க Lanka Guardian என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். சிவராம் Lanka Guardian இல் இளைஞர் இயக்கங்களில் போரியல் அம்சங்களைப் பற்றி மாத்திரமல்லாது, தமிழரின் போரியற் பண்புகள் பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடரை எழுதினான். புறநானூறு முதல் எட்கார் தேர்ஸ்ட்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற காலனித்துவ காலப் பகுதி வரையுள்ள சகல முக்கிய சான்றுகளையும் பயன்படுத்தி, தமிழரின் போராடும் பண்பு பற்றி விரிவாக எழுதியிருந்தான். தமிழர் வரலாறு அவ்வாறு புதிதான ஒரு வாசிப்பைப் பெற்றதும், அரசியல்வாதிகள் அரசியற் விமர்சகர்கள், அரசியல் மாணவர்கள் எனப் பல்வேறு நிலைபட்டவர்கள் அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். <br />
<br />
இன்னொரு நிலையில் கூறுவதானால் தமிழர் போராட்ட உணர்வுகள் பற்றிய கொள்கை நிலைப்பட்ட, பிரயோக நிலைப்பட்ட ஆய்வினை ஏறத்தாழ சர்வதேச போரியல் பின்புலத்தில் எடுத்துக் கூறும் தனது திறனை அக் கட்டுரைகள் மூலம் சிவராம் காட்டினான். <br />
<br />
சமூக விஞ்ஞானிகள் சங்க ஒருங்குகூடல் என்று நினைக்கிறேன். குமாரி ஜயவர்த்தன, சாள்ஸ் அபயசேகர, நியூட்டன் குணசிங்க போன்றவர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது வடக்கில் தொடங்கியிருந்த போர்பற்றி மேர்வின் டி சில்வா கூறிய ஒரு குறிப்புரை என் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. "சிவராமின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுதுதான் இந்த போராட்டத்தின் ஆழ, அகலம் குறிப்பாக, அதன் அரசியல் ஆழம் புரிகிறது என்ற கருத்துப்பட மேர்வின் டி சில்வா கூறினார். <br />
<br />
2005 இல் சிவராம் காலமான பொழுது அவறைப் பற்றி தமிழர்கள் அல்லாத அரசியல் விமர்சகர்கள் எழுதியபொழுது இந்த அம்சத்தையே வற்புறுத்தினர் என்று கூறலாம். அதாவது, ஈழத் தமிழர் உரிமைப் போராடத்தின் நியாயப்பாடுகளை அந்த போராட்டத்திலே சம்பந்தப்பட்டுள்ள போரியல் முறைமைகளை சிவராம் எழுதியதுபோன்று, வேறெவருமே தமிழர்கள் அல்லாதவர்கள் விளங்கும்படி எழுதவில்லை என்பதைக் கூறினர். சிவராமின் எழுத்து வெறுமனே தமிழர் நிலைப்பாட்டின் ஆங்கில மொழி எடுத்துக் கூறலாக அமையாது, உலகளாவிய உரிமை போராட்டங்களை, உரிமை போராட்டங்களுக்குரிய போரியற் பின்புலத்தில் எடுத்துக் கூறினான். மேலும், சற்று குறிப்பாகக் கூறினால் ஈழத் தமிழர் போராட்டத்தையும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் போரியல் முறைமைகளையும் குறிப்பாக, அதன் தலைமையையும் இந்த வட்டத்தினுள் வைத்து ஆராய்ந்தானெனவும் அந்த நோக்குக்கு ஒரு சர்வதேச வலுவிருந்தது. <br />
<br />
இவ்வாறு எழுதுவதனால் தமிழர் நிலைபட்ட கள நிலைவரங்களை காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதெனினும், அந்த எழுத்துகள் இந்த போராட்டத்தை சர்வதேசமயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது இப்பொழுது தெரியவருகின்றது. <br />
<br />
இக்கட்டத்தில் ஒரு முக்கியமான வினாவினை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்த பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினவாகும். இதற்கான பதில் மிகக் குறுகியது. வேறொருவரும் இல்லை. <br />
<br />
இந்த எழுத்தினுள்ளே ஒரு செல்நெறியிருந்தது. அது அந்த போராட்டத்தின் சில குறைபாடுகளை அதிகம் அழுத்திக் கூறாமையேயாகும். சிவராம் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் என்னுடைய ஒரு இளம் நண்பர், சிவராமிடத்து அந்த வினாவைக் கேட்டார். சிவராம் சொன்னார், இந்த குறைபாடு எனக்குத் தெரியும். ஆனால், அதை எழுதுவதன் மூலம் இந்த உரிமைப் போராட்டம் தோற்கடிக்கப்படத் தக்கது என்பதை எடுத்துக் கூற விரும்பவில்லை எனச் சொன்னான். உனது நிலைப்பாட்டில் இது ஒரு முரண்பாடாக இல்லையா என நான் கேட்டேன். ஓரளவு முரண்பாடு உள்ளதுதான். ஆனால், நான் அதனுள்ளிருந்து வெளிவர விரும்பவில்லை என்று சொன்னான். <br />
<br />
சிவராமை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றாலும், அந்த கணத்திலேதான் மகாபாரதத்துக் கர்ணனிலும் பார்க்க பெரியவனாக உண்மையான ஒரு வீமனாக என் கண் முன்னே நின்றான். இந்தப் புலமை நேர்மை, பச்சோந்திகளிடம் கிடைக்காத ஒன்று. <br />
<br />
சிவராமினுடைய இந்த எழுத்தாற்றல்கள் சிவராமை இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவராலயங்களின் விருப்புமிக்க விருந்தினனாக்கிற்று. வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில் தொடங்கிய விருந்துபசாரங்கள் பின்னர் வெளியே அவ்வத் தலைநகரங்களிலேயே நடைபெற்றன. இலங்கை பற்றி ஆர்வங் கொண்டிருந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள், அவ்வமைச்சுகளின் ஆலோசகர்கள், சிவராமை சந்திப்பதை தமது முக்கிய நிகழ்ச்சி நிரல்களுள் ஒன்றாக வைத்திருந்தனர். சென்ற வருடம் மே மாதத்தில் ஜப்பான் செல்லவிருந்தான் என்ற தகவல் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. <br />
<br />
இப்பொழுதுதான் புலனாகின்றது, சிவராம் தன் போக்கில் ஈழத்து உரிமைப் போராட்டத்தில் ஒரு அரசியல் தூதுவனாக விளங்கினான் என்பது. <br />
<br />
சிவராமை அறிந்திருத்தல் என்பது சிக்கல்கள் பல நிறைந்த ஒரு விடயமாகும். உண்மையில் சென்ற வாரந்தான் ஒரு இளம் நண்பர் சிவராம் என்னைப் பற்றி தன்னிடத்தில் கூறியிருந்ததை என்னிடத்துக் கூறினார். இப்படியெல்லாம் நினைத்திருந்தானா என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் தாரையாக ஓடாவிட்டால், நான் மனிதனல்லன் என்பது கருத்து. எனக்கும் சிவராமுக்கும் 1978 முதல் தொடர்பிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது (1978) இல் சேர்ந்த முதல் இரண்டு மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில சிறப்பு நிலை மாணவன் என்ற வகையில் தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமான பல வினாக்களை, ஏறத்தாழ 7,8 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். சர்வதேச இலக்கிய, வரலாற்றியல் ஆய்வு மொழிகளைப் பயன்படுத்தி அந்த வினாக்களை அமைத்திருந்தான். கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் எனது அறைக்கு வெளியே வந்தேன். <br />
<br />
அப்போது கைலாசபதி மாடிப்படி நோக்கி ஏறிவந்தார். இந்தப் பையனை உனக்குத் தெரியுமா எப்படி எழுதுகிறான் பார் என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை கைலாசபதியிடம் நீட்டினேன். எனக்கும் ஒரு கடிதம் வந்தது என்று கைலாசபதி சொன்னார். இருவருமே வியப்புடன் பேசிக் கொண்டோம். <br />
<br />
அப்பொழுது எனக்கு நேரடியாக சிவராமைத் தெரியாது. பின்னர் ஒரு தடவை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக ஞாபகம். பின்னர் உண்மையில் தராக்கி என்ற நிலையில்தான் என்னுடன் பழக்கமேற்பட்டது. தமிழர் வரலாறு பற்றிய தன்னுடைய வினாக்களுக்கு வேண்டிய பதில்களுக்கான தரவுகள் பற்றி அறிவதற்கு என்னோடு உரையாடுவான். 1984- 88 காலத்தில் பிரஜைகள் குழு வேலை காரணமாக கிளாலி கஷ்டங்களுக்கிடையேயும் நான் மாதாமாதம் கொழும்புக்கு வருவேன். சிவராமிடமிருந்து அரசியற் புதினங்களையும் அவன் வியாக்கியானங்களையும் அறிந்து கொள்வதே எனது பசியாகவிருந்தது. சிவராம் என்னை பல தடவைகளிலே மிக மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறான். நீங்கள் இந்த அரசியலில் இறங்க வேண்டாம். உங்கள் தமிழ் வட்டத்தினுள் நின்று கொள்ளுங்கள். நீங்கள் அதன் மூலம் ஆற்றவேண்டிய பணிகள் பல உள்ளன என்று சற்று கோபமாகவே கூறுவான். வேறு சிலரும் அப்படிக் கூறுவது வழக்கம். ஆனால் அந்த குரலிலிருந்த உண்மையும், நேர்மையும் அந்த குரலுக்குரியவன் மறைந்ததன் பின்னர்தான் தெரியவருகின்றது. <br />
<br />
சிவராம் அதிகம் பேச மாட்டார். மற்றவர்களை பேச வைக்கும் ஆற்றல் அவனிடமிருந்தது. அவனுடைய நட்புகளும் தொடர்புகளும் பல. அவற்றையெல்லாம் வலக்கை, இடக்கைக்கு தெரியாத முறையிலேதான் வைத்திருந்தான். மரணத்தின் பொழுதுதான் அந்த உண்மைகள் தெரியவந்தன. அவன் மறைந்து ஒரு மாதத்தின் பின்னர் எனக்கு தெரிந்த இளம் சிங்கள மாக்ஸிய சிந்தனையாளரொருவர் என்னிடம் சொன்னார் `அன்று என்னைச் சந்திக்கத்தான் பம்பலப்பிட்டியின் அந்த மதுச்சாலைக்கு சிவராம் வந்திருந்தார்' என்று. <br />
<br />
அவனுடைய அறிவாழம் மிகப்பெரியது. பின்நவீனத்துவம் பற்றி நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது, அந்த விவாத இறுதியில் ஒரு நாள் சொன்னேன். இதில் இந்தனை நாட்களை செலவழித்ததன் நியாயப்பாடு இப்பொழுது சரியோ என்று எனக்கு விளங்கவில்லையென்றேன். அப்பொழுதுதான் பின்நவீனத்துவம் பற்றி தனது மெய்யியல் நிலைப்பாடுகளை என்னிடம் எடுத்துக் கூறினான். இதை, முன்னரேயே ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டேன். <br />
<br />
அவன் சிரித்துக் கொண்டான். அவனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் கிச்டெக்கர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சொன்னார், சிவராம் ஏறத்தாழ நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே நிறைய விவாதித்திருந்தார். அடப்பாவி அந்த புத்தகங்களை வாங்குவதற்கு நான் சிரமப்பட்டபோது கூட என்னிடம் பேசவில்லையே என்று கூறினேன். அவன் மேலும் சிரித்தான்.<br />
<br />
TK<br />
 <br />
<a href="http://www.sooriyan.com/index.php?option=content&amp;task=view&amp;id=3075&amp;Itemid=" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.sooriyan.com/index.php?option=c...id=3075&amp;Itemid=</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கவிஞர் நாவண்ணனுக்கு கண்ணீர் வணக்கம்....!!!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=196</link>
			<pubDate>Sun, 16 Apr 2006 01:37:32 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=649">Nitharsan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=196</guid>
			<description><![CDATA[                    தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.<br />
[b]புரட்சி கீதம் பாடிய <br />
புரட்சி கவிஞனுக்கு<br />
புரட்சிகர வணக்கங்கள்........<br />
<br />
தகவல்:புலிகளின் குரல்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.<br />
[b]புரட்சி கீதம் பாடிய <br />
புரட்சி கவிஞனுக்கு<br />
புரட்சிகர வணக்கங்கள்........<br />
<br />
தகவல்:புலிகளின் குரல்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[லெப்.கேணல் நீலன் அவர்களின் நினைவுநாள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=268</link>
			<pubDate>Tue, 11 Apr 2006 09:58:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=293">I.V.Sasi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=268</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img66.imageshack.us/img66/1335/ahilcopy1hk9cr.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;span style='font-size:14pt;line-height:100%'&gt;படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img66.imageshack.us/img66/1335/ahilcopy1hk9cr.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;span style='font-size:14pt;line-height:100%'&gt;படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=326</link>
			<pubDate>Fri, 07 Apr 2006 06:00:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=326</guid>
			<description><![CDATA[                    இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்!<br />
கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது! &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்!<br />
கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது! &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கண்ணீர் அஞ்சலிகள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=330</link>
			<pubDate>Wed, 05 Apr 2006 21:22:47 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=649">Nitharsan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=330</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img295.imageshack.us/img295/211/kethese4bh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img295.imageshack.us/img295/211/kethese4bh.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[துயர் பகிர்வு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=336</link>
			<pubDate>Tue, 04 Apr 2006 21:15:40 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=832">KULAKADDAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=336</guid>
			<description><![CDATA[                    கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=435</link>
			<pubDate>Sun, 26 Mar 2006 02:46:44 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1201">iruvizhi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=435</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம்&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img92.imageshack.us/img92/453/maaveerar6vz.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
<br />
&lt;b&gt;பாசத்தாயவள் அன்றுனை<br />
அனுப்பினாள் இலட்சிய<br />
தீ அதை மூட்டி.<br />
ஈழத் தாயவள்<br />
மானத்தை நீயும் காத்திடவே.<br />
<br />
ஈழக் கனியது கனிந்திடும்<br />
வேளையில், துணிசெயல்<br />
வீரன் நீ விரைந்தது எங்கே?<br />
குயிலனே உன் கூரிய இலட்சிய<br />
பார்வையால், நீ கூறிய வார்த்தைகள்<br />
பல் ஆயிரம்.<br />
<br />
தமிழ் ஈழத்தாயவள் <br />
உன் பிரிவால் துடிக்கிறால்<br />
கனன்று கொதிக்கிறாள்.<br />
காட்டி கொடுப்போரின்<br />
முகத்திலே காறி உமிழ்கின்றாள்.<br />
உணர்வை அடக்க முடியவில்லை.<br />
<br />
மீண்டும் கிழர்ந்து எழுகின்றோம்<br />
முடிவு கண்டே ஈழம் திரும்புவோம்.&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம்&lt;/b&gt;<br />
<br />
&lt;img src='http://img92.imageshack.us/img92/453/maaveerar6vz.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
<br />
&lt;b&gt;பாசத்தாயவள் அன்றுனை<br />
அனுப்பினாள் இலட்சிய<br />
தீ அதை மூட்டி.<br />
ஈழத் தாயவள்<br />
மானத்தை நீயும் காத்திடவே.<br />
<br />
ஈழக் கனியது கனிந்திடும்<br />
வேளையில், துணிசெயல்<br />
வீரன் நீ விரைந்தது எங்கே?<br />
குயிலனே உன் கூரிய இலட்சிய<br />
பார்வையால், நீ கூறிய வார்த்தைகள்<br />
பல் ஆயிரம்.<br />
<br />
தமிழ் ஈழத்தாயவள் <br />
உன் பிரிவால் துடிக்கிறால்<br />
கனன்று கொதிக்கிறாள்.<br />
காட்டி கொடுப்போரின்<br />
முகத்திலே காறி உமிழ்கின்றாள்.<br />
உணர்வை அடக்க முடியவில்லை.<br />
<br />
மீண்டும் கிழர்ந்து எழுகின்றோம்<br />
முடிவு கண்டே ஈழம் திரும்புவோம்.&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நின]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=664</link>
			<pubDate>Wed, 01 Mar 2006 16:43:30 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1003">VERNON</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=664</guid>
			<description><![CDATA[                    பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி <br />
விபரங்களுக்கு <br />
<br />
<a href="http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108" target="_blank" rel="noopener" class="mycode_url">http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108</a><br />
<br />
<br />
&lt;img src='http://img349.imageshack.us/img349/2718/srlninaivi23ya.gif' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி <br />
விபரங்களுக்கு <br />
<br />
<a href="http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108" target="_blank" rel="noopener" class="mycode_url">http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108</a><br />
<br />
<br />
&lt;img src='http://img349.imageshack.us/img349/2718/srlninaivi23ya.gif' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=890</link>
			<pubDate>Sun, 12 Feb 2006 06:04:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=890</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் &lt;/b&gt;<br />
<br />
திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.<br />
<br />
<br />
சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.<br />
<br />
குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.<br />
<br />
சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது.<br />
<br />
கிராம மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.<br />
<br />
குமாரபுரம் கிருஸ்ணன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.<br />
<br />
14 குழந்தைகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. 5 வயதுக்குக் குறைவான 3 குழந்தைகள்; 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 பேர், 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 8 பேர், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் என்று இராணுவத்தினர் வெறியாடிக் கொன்றனர்.<br />
<br />
இந்தப் படுகொலை தொடர்பாக 9 படையினர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாகியும் திருகோணமலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு காத்திருக்கிறது.<br />
<br />
இந்தப் படுகொலை தொடர்பான சாட்சியங்களும் படுகொலைக்கான ஆயுதங்களும் கடந்த ஆண்டு கொழும்பு இரசாயன பகுப்பாய்வுக் கூடத்தில் நடந்த தீ விபத்தில் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- புதினம்.கொம்&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் &lt;/b&gt;<br />
<br />
திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.<br />
<br />
<br />
சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.<br />
<br />
குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.<br />
<br />
சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது.<br />
<br />
கிராம மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.<br />
<br />
குமாரபுரம் கிருஸ்ணன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.<br />
<br />
14 குழந்தைகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. 5 வயதுக்குக் குறைவான 3 குழந்தைகள்; 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 பேர், 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 8 பேர், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் என்று இராணுவத்தினர் வெறியாடிக் கொன்றனர்.<br />
<br />
இந்தப் படுகொலை தொடர்பாக 9 படையினர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாகியும் திருகோணமலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு காத்திருக்கிறது.<br />
<br />
இந்தப் படுகொலை தொடர்பான சாட்சியங்களும் படுகொலைக்கான ஆயுதங்களும் கடந்த ஆண்டு கொழும்பு இரசாயன பகுப்பாய்வுக் கூடத்தில் நடந்த தீ விபத்தில் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- புதினம்.கொம்&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=954</link>
			<pubDate>Thu, 09 Feb 2006 12:21:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=954</guid>
			<description><![CDATA[                    இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் <br />
<br />
க.மு. தருமராஜா <br />
<br />
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர்.<br />
<br />
தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.<br />
<br />
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் "The Fall &amp; Rise of the Tamil Nation" என்ற நூலில் எழுதியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.<br />
<br />
"அடையாள அட்டை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடந்த சமயம் என்னை ஒரு அரசியல் எதிரியாகக் கருதி என் மீது கடும் வெறுப்புக்காட்டுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் எதிர்ச் செயலோடு வேறுபடுத்திக் காட்டாமலிருக்க என்னால் இயலவில்லை. சட்ட மூலத்தின் மூலம் உரையாற்று முன்னர் பாராளுமன்றக் புறக்கூடத்தில் என்னை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் கேட்டார் நீங்கள் இரட்டைக்குழல் என்ற பதத்தை பயன்படுத்தினீர்கள். ஒரு குழாய் சட்டத்திலுள்ள ஏற்பாடு என ஒத்துக்கொள்கிறேன். மற்றையது என்ன என்று தமிழர்களுக்கு தீங்கிழைக்கப்பயன்படுத்தக் கூடியதென நான் உணர்ந்த சட்ட ஏற்பாடுகளை அவருக்கு சுட்டிக்காட்டி விளக்கினேன். அவர் (ஜீ.ஜீ.) சபையில் பேசுகையில் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். எப்படியெனில் ஒழுங்கு விதிகளை இயற்றுவதில் அமைச்சருக்குள்ள அதிகாரங்களை குறித்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் சாடியதுடன், அடையாள அட்டைகள் வைத்திருப்போர் எவ்வகை பிரசா உரிமை கொண்டவர் என்பதை அவ் அட்டைகள் காட்ட மாட்டா என்று உறுதி மொழியை பிரதமரிடமிருந்து அவர் வரவழைத்துக் கொண்டார்.<br />
<br />
அமரர் ஜீ.ஜீ. தனது நாவன்மையால் சமபலக் கோட்பாட்டுக் கொள்கையை சோல்பரிக் கமிஷன் முன் தமிழ்த் தேசிய இனத்திற்கு வரும் இன்னல்களை முன் உணர்ந்து சமர்ப்பித்து வாதாடினார். சோல்பரிக் கமிஷன் குழுவினர் சமபிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்காவிடிலும் ஜீ.ஜீ. யின் நாவன்மை வாதத்திறமையால் 29 ஆம் பிரிவு ஒன்றில் சில பாதுகாப்புகளை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபார்சு செய்தனர்.<br />
<br />
அச்சட்டம் அமரர் ஜீ.ஜீ. பாராளுமன்றத்தில் இல்லாத சமயமே நீக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் புகுத்தப்பட்டது.<br />
<br />
இச்சந்தர்ப்பத்தில் சமபலக்கோட்பாட்டுக் கொள்கையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் அவர் இறுதியாகக் கோரியதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.<br />
<br />
"சபாநாயகர் அவர்களே, இறுதி வார்த்தையானது அரசியலமைப்புச் சீராக்கம் பற்றியல்ல, ஆனால், இலங்கையின் எதிர்கால அரசியல் அமைப்பு பற்றியதாகும். பாராளுமன்ற முறைமைகள் ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களில் நிலவும் சூழ்நிலைகளின் ஆளுகைக்குட்பட்டதாக விளங்க வேண்டும். சூழ் நிலைக்கொவ்வாத ஒரு விடயத்தை அறிமுகம் செய்வதில் பயனில்லை. பிரதிநிதித்துவ முறையில் மாற்றம் செய்து ஜனநாயகத்தை முறையாக இயங்கச் செய்வதில் உள்ளார்ந்த விதத்தில் தவறேதுமில்லை.<br />
<br />
ஐக்கிய தேசமொன்றை விரும்புபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனநாயகம் பற்றி வாய் ஓயாமல் பேசுவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் பெருமைப்படத்தக்க விதத்திலே வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு முதுசொத்தை, ஒரு கலாசாரத்தை விட்டுச் செல்ல விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறுபான்மையினரின் நியாயபூர்வமான கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு ஐக்கியம் தேவை என்று விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈடிணையற்ற பாராளுமன்ற அதிகாரத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உலக வரலாறு முழுவதிலும் சுதந்திரத்தின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய இங்கிலாந்து தேசத்திடம், சிறிய தேசங்கள் மற்றும் சிறிய சமூகங்களின் நலன்களுக்காகப் போராடிய இங்கிலாந்து தேசத்திடம், வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய கவனத்துடன் கூடிய நியாயத்தை வழங்குங்கள்" <br />
<br />
அமரர் ஜீ.ஜீ. சட்டமாமேதை என்று எவரும் மறுக்கமாட்டார்கள். சட்டத்துறையில் அவருடைய ஆற்றலைப்பற்றி, சில வழக்குகளைப்பற்றி முந்திய நினைவுக்கட்டுரைகளில் வெளிவந்தன. அவர் சட்டத்துறையிலே ஏழைகளுக்கும் நண்பர்களுக்கும் பல உதவிகள் செய்தவர் என்பதை அவருடன் நெருங்கி தொடர்புடையவர்கள் பலருக்குத் தெரியும். இன்றைய தினத்திலே ஓர் ஏழைக்கு உதவி செய்த வழக்கைப்பற்றி ஞாபகப்படுத்துவது சாலப்பொருத்தம் என்ற எண்ணுகிறேன்.<br />
<br />
எழுபது வயது ஏழைக்கு உதவி <br />
<br />
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கோட்டில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக ஜீ.ஜீ. ஆஜராகி கோட்டுக்குச் சென்றார். அச்சமயம் கோட் தொடங்கவில்லை. அவர் சக வழக்கறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் கம்பிச் சிறைக்கூட்டில் இருந்து "ஜீ.ஜீ. ஐயா என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அபயக்குரல் கேட்டது. உடனே ஜீ.ஜீ. திரும்பிக் கூட்டைக் கவனித்தார். தலை நரைத்த தள்ளாடும் வயோதிபரைக் கண்டதும் உடனே எழுந்து அவரிடம் சென்றார். வயோதிபருக்கு வயது 70 இருக்கும். இரு கையும் கூப்பியபடி கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு "நான் சாகப் போறன் ஐயா என்னைக்காப்பாற்றுங்கள்" என்று இரந்து வேண்டினார்.<br />
<br />
இக்கோலத்தைக் கண்ட ஜீ.ஜீ. மனம் இழகிவிட்டார். "அப்பு இன்று உங்களைப் பிணை எடுக்கின்றேன். மறு தவணை உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கின்றேன்" என்று சொல்லி அவரை அமைதியாக இருக்கும்படி கேட்டார். வயோதிபர் அமைதியோடு உட்கார்ந்து விட்டார். கோட் தொடங்கியது. அவருடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுபட்டது. வெகு நேர வாதாட்டத்தின்பின் வழக்கு தவணை போடப்பட்டது. பின்னர் பெரியவருடைய வழக்கை பொலிஸ் அதிகாரியிடம் சுருக்கமாகக் கேட்டறிந்தார். வயோதிபரை பிணையில் செல்ல நடவடிக்கை எடுத்து தன்னுடைய வழக்கின் மறு தவணை தினத்தில் வயோதிபருடைய வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்து சென்று விட்டார். மறு தவணை கோட்டுக்கு வந்தவர் வயோதிபரிடம் வழக்கு விபரத்தைக் கேட்டறிந்தார்.<br />
<br />
ஐயா எனக்கு வயது 70. எனக்கு எதுவித வருவாயும் இல்லை. எனது இயலாத்தன்மையினால் சாராயம் குடிப்பேன். அத்துடன் தினம் இரண்டு அல்லது மூன்று போத்தல் சாராயம் விற்பேன். இதனால் வரும் வருவாயைக் கொண்டு நானும் குடிப்பேன். அதனால் அதிகாரிகளுக்கும் கை லஞ்சம் கொடுப்பேன். கொடுக்க முடியாத சமயங்களில் இந்த அதிகாரிகளால் எனக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் என்னை கைது செய்து கொண்டு வந்து கிழமை ஒன்றாகி விட்டது. இன்னும் கூட்டில் இருக்கின்றேன். உங்களை என் பிள்ளையாக நினைத்து கெஞ்சுகின்றேன். என்னை இதில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று விபரத்தைச் சொல்லி இரந்து வேண்டினார்.<br />
<br />
பெரியவர் பயப்படவேண்டாம். நான் சொல்லுகிறபடி நீர் சொல்லும் நான் உம்மைக் காப்பாற்றுவேன் சரிதானே. ஆம் ஐயா, கோட் தொடங்கியது. பெரியவரின் வழக்கு கூப்பிடப்பட்டது. பெரியவர் கூனிக் குறுகிய தோற்றத்தில் வந்து கூண்டில் ஏறி நின்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் வழக்கின் விபரம் கேட்டார். ஜீ.ஜீ. அவரின் பெயர், சேவைக்காலம், பிறந்த ஊர், கடமையாற்றிய இடங்கள், ஆங்கிலத்திலா? சிங்களத்திலா? விசாரணையை விரும்புகிறீர் என்று கேட்டார். சிங்களத்தில் சேர் என்றார் இன்ஸ்பெக்டர். <br />
<br />
சரி எத்தனை போத்தலோடு கைது செய்தீர். இரண்டரை போத்தலோடு சேர். பெரியவர் உங்களை எத்தனை போத்தலோடு கைது செய்தார். பத்தரை போத்தல் சேர். பத்தரை போத்தலா? ஆம் சேர்.இன்ஸ்பெக்டர் மீதி எட்டுப்போத்தலும் எங்கே என்று கேட்டதும், இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல முடியாத நிலையில் பதறிக் கொண்டே இல்லை சேர் இரண்டரை போத்தல் தான் என்றார். இது பொய். ஏழைகளை நீங்கள் இவ்விதம் தான் கைது செய்து கைலஞ்சம் வாங்குவதற்காக வருத்தி வதைத்து கஷ்டப்படுத்தி இப்படியான பொய் வழக்குகளை தொகுத்து நீதி ஸ்தலங்களையும் ஏமாற்றுகின்றீர். ஜீ.ஜீ.யின் சிங்கள பேச்சை கேட்டதுமே திகைப்பு உண்டாகி உண்மையைக் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேர்! இன்ஸ்பெக்டர் பிடித்தது பத்தரைப் போத்தல் சாராயம். வழக்குப் போட்டு கோட்டுக்கு காட்டியது இரண்டரை போத்தல் சாராயம். அந்த வயோதிபர் ஒரு கிழமைக்கு மேலாக சிறைக் கூடத்திலும், கம்பிக் கூட்டிலும் காலத்தை போக்கி கஷ்டப்பட்டுள்ளார். எட்டு போத்தல் சாராயம் காட்டப்படவில்லை. வயோதிபரையும் ஏமாற்றி கஷ்டப்படுத்தி நீதி ஸ்தலத்தையும் ஏமாற்றி விட்டார்கள். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இது போன்ற பொய் சோடனை வழக்குகள் ஏற்படாதவாறு நீதிபதி அவர்களின் முடிவான தீர்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கின்றேன் என்றார்.<br />
<br />
இதைக்கேட்டதும் நீதிபதி பொய் வழக்கு சோடித்தமையை இட்டு உமது தகுதியற்ற தன்மையை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கின்றேன். பெரியவர் அவர்களே சொற்ப நாளாவது நீங்கள் விளக்க மறியலில் இருந்து விட்டீர்கள். உங்களுடைய வயதை பொறுத்து மன்னிப்பு தருகின்றேன். இதன்பிறகு இப்படியான வழக்கினால் கோட்டிற்கு வராதபடி எச்சரிக்கை செய்து விடுதலை செய்கின்றேன். நீதிபதியின் வேண்டுகோளின் படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வருட பதவி உயர்வு நிறுத்தப்படவேண்டும் என்று மேலிடத்திற்கு அறிவிப்பதாக கூறப்பட்டது. கூட்டால் இறங்கிய வயோதிபர் ஜீ.ஜீ.யின் கன்னங்களை இரு கையாலும் வருடி கை கூப்பி நன்றி கூறி விடை பெற்றார். என்ர ராசன் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.<br />
<br />
இந்த நினைவுக் கட்டுரையில் அவர் இறக்கும் பொழுது எந்தச் சொத்தை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுச் சென்றார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.<br />
<br />
அமரர் ஜீ.ஜீ. கல்விச்செல்வம், பொருட்செல்வம், இடம், பொருள், ஏவல் யாவற்றையும் தமது மைந்தன் மா மனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு விட்டுச் சென்றமையால் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய இனத்திற்கு சேவையாற்றி தன்னுயிரையே தியாகம் செய்தார். அது மட்டுமல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஆயுதம் ஏந்திய படைகளுக்கும் குழுக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக எவ்வித ஆயுதமுமின்றி ஜனநாயக ரீதியில் இரு ஆயுதங்களைப் பாவித்து போராடினார். ஒன்று அமரர் ஜீ.ஜீ. யின் மைந்தன், இரண்டாவது அமரர் ஜீ.ஜீ. முதன் முதலாக ஸ்தாபித்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்து. <br />
<br />
மேலே சுருக்கமாகக் கூறியவற்றிலிருந்து அமரர் ஜீ.ஜீ.யின் நாமம் என்றும் அழியாது.<br />
<br />
தினகுரலிலிருந்து பெறப்பட்டது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் <br />
<br />
க.மு. தருமராஜா <br />
<br />
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர்.<br />
<br />
தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.<br />
<br />
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் "The Fall &amp; Rise of the Tamil Nation" என்ற நூலில் எழுதியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.<br />
<br />
"அடையாள அட்டை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடந்த சமயம் என்னை ஒரு அரசியல் எதிரியாகக் கருதி என் மீது கடும் வெறுப்புக்காட்டுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் எதிர்ச் செயலோடு வேறுபடுத்திக் காட்டாமலிருக்க என்னால் இயலவில்லை. சட்ட மூலத்தின் மூலம் உரையாற்று முன்னர் பாராளுமன்றக் புறக்கூடத்தில் என்னை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் கேட்டார் நீங்கள் இரட்டைக்குழல் என்ற பதத்தை பயன்படுத்தினீர்கள். ஒரு குழாய் சட்டத்திலுள்ள ஏற்பாடு என ஒத்துக்கொள்கிறேன். மற்றையது என்ன என்று தமிழர்களுக்கு தீங்கிழைக்கப்பயன்படுத்தக் கூடியதென நான் உணர்ந்த சட்ட ஏற்பாடுகளை அவருக்கு சுட்டிக்காட்டி விளக்கினேன். அவர் (ஜீ.ஜீ.) சபையில் பேசுகையில் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். எப்படியெனில் ஒழுங்கு விதிகளை இயற்றுவதில் அமைச்சருக்குள்ள அதிகாரங்களை குறித்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் சாடியதுடன், அடையாள அட்டைகள் வைத்திருப்போர் எவ்வகை பிரசா உரிமை கொண்டவர் என்பதை அவ் அட்டைகள் காட்ட மாட்டா என்று உறுதி மொழியை பிரதமரிடமிருந்து அவர் வரவழைத்துக் கொண்டார்.<br />
<br />
அமரர் ஜீ.ஜீ. தனது நாவன்மையால் சமபலக் கோட்பாட்டுக் கொள்கையை சோல்பரிக் கமிஷன் முன் தமிழ்த் தேசிய இனத்திற்கு வரும் இன்னல்களை முன் உணர்ந்து சமர்ப்பித்து வாதாடினார். சோல்பரிக் கமிஷன் குழுவினர் சமபிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்காவிடிலும் ஜீ.ஜீ. யின் நாவன்மை வாதத்திறமையால் 29 ஆம் பிரிவு ஒன்றில் சில பாதுகாப்புகளை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபார்சு செய்தனர்.<br />
<br />
அச்சட்டம் அமரர் ஜீ.ஜீ. பாராளுமன்றத்தில் இல்லாத சமயமே நீக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் புகுத்தப்பட்டது.<br />
<br />
இச்சந்தர்ப்பத்தில் சமபலக்கோட்பாட்டுக் கொள்கையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் அவர் இறுதியாகக் கோரியதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.<br />
<br />
"சபாநாயகர் அவர்களே, இறுதி வார்த்தையானது அரசியலமைப்புச் சீராக்கம் பற்றியல்ல, ஆனால், இலங்கையின் எதிர்கால அரசியல் அமைப்பு பற்றியதாகும். பாராளுமன்ற முறைமைகள் ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களில் நிலவும் சூழ்நிலைகளின் ஆளுகைக்குட்பட்டதாக விளங்க வேண்டும். சூழ் நிலைக்கொவ்வாத ஒரு விடயத்தை அறிமுகம் செய்வதில் பயனில்லை. பிரதிநிதித்துவ முறையில் மாற்றம் செய்து ஜனநாயகத்தை முறையாக இயங்கச் செய்வதில் உள்ளார்ந்த விதத்தில் தவறேதுமில்லை.<br />
<br />
ஐக்கிய தேசமொன்றை விரும்புபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனநாயகம் பற்றி வாய் ஓயாமல் பேசுவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் பெருமைப்படத்தக்க விதத்திலே வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு முதுசொத்தை, ஒரு கலாசாரத்தை விட்டுச் செல்ல விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறுபான்மையினரின் நியாயபூர்வமான கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு ஐக்கியம் தேவை என்று விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈடிணையற்ற பாராளுமன்ற அதிகாரத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உலக வரலாறு முழுவதிலும் சுதந்திரத்தின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய இங்கிலாந்து தேசத்திடம், சிறிய தேசங்கள் மற்றும் சிறிய சமூகங்களின் நலன்களுக்காகப் போராடிய இங்கிலாந்து தேசத்திடம், வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய கவனத்துடன் கூடிய நியாயத்தை வழங்குங்கள்" <br />
<br />
அமரர் ஜீ.ஜீ. சட்டமாமேதை என்று எவரும் மறுக்கமாட்டார்கள். சட்டத்துறையில் அவருடைய ஆற்றலைப்பற்றி, சில வழக்குகளைப்பற்றி முந்திய நினைவுக்கட்டுரைகளில் வெளிவந்தன. அவர் சட்டத்துறையிலே ஏழைகளுக்கும் நண்பர்களுக்கும் பல உதவிகள் செய்தவர் என்பதை அவருடன் நெருங்கி தொடர்புடையவர்கள் பலருக்குத் தெரியும். இன்றைய தினத்திலே ஓர் ஏழைக்கு உதவி செய்த வழக்கைப்பற்றி ஞாபகப்படுத்துவது சாலப்பொருத்தம் என்ற எண்ணுகிறேன்.<br />
<br />
எழுபது வயது ஏழைக்கு உதவி <br />
<br />
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கோட்டில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக ஜீ.ஜீ. ஆஜராகி கோட்டுக்குச் சென்றார். அச்சமயம் கோட் தொடங்கவில்லை. அவர் சக வழக்கறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் கம்பிச் சிறைக்கூட்டில் இருந்து "ஜீ.ஜீ. ஐயா என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அபயக்குரல் கேட்டது. உடனே ஜீ.ஜீ. திரும்பிக் கூட்டைக் கவனித்தார். தலை நரைத்த தள்ளாடும் வயோதிபரைக் கண்டதும் உடனே எழுந்து அவரிடம் சென்றார். வயோதிபருக்கு வயது 70 இருக்கும். இரு கையும் கூப்பியபடி கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு "நான் சாகப் போறன் ஐயா என்னைக்காப்பாற்றுங்கள்" என்று இரந்து வேண்டினார்.<br />
<br />
இக்கோலத்தைக் கண்ட ஜீ.ஜீ. மனம் இழகிவிட்டார். "அப்பு இன்று உங்களைப் பிணை எடுக்கின்றேன். மறு தவணை உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கின்றேன்" என்று சொல்லி அவரை அமைதியாக இருக்கும்படி கேட்டார். வயோதிபர் அமைதியோடு உட்கார்ந்து விட்டார். கோட் தொடங்கியது. அவருடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுபட்டது. வெகு நேர வாதாட்டத்தின்பின் வழக்கு தவணை போடப்பட்டது. பின்னர் பெரியவருடைய வழக்கை பொலிஸ் அதிகாரியிடம் சுருக்கமாகக் கேட்டறிந்தார். வயோதிபரை பிணையில் செல்ல நடவடிக்கை எடுத்து தன்னுடைய வழக்கின் மறு தவணை தினத்தில் வயோதிபருடைய வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்து சென்று விட்டார். மறு தவணை கோட்டுக்கு வந்தவர் வயோதிபரிடம் வழக்கு விபரத்தைக் கேட்டறிந்தார்.<br />
<br />
ஐயா எனக்கு வயது 70. எனக்கு எதுவித வருவாயும் இல்லை. எனது இயலாத்தன்மையினால் சாராயம் குடிப்பேன். அத்துடன் தினம் இரண்டு அல்லது மூன்று போத்தல் சாராயம் விற்பேன். இதனால் வரும் வருவாயைக் கொண்டு நானும் குடிப்பேன். அதனால் அதிகாரிகளுக்கும் கை லஞ்சம் கொடுப்பேன். கொடுக்க முடியாத சமயங்களில் இந்த அதிகாரிகளால் எனக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் என்னை கைது செய்து கொண்டு வந்து கிழமை ஒன்றாகி விட்டது. இன்னும் கூட்டில் இருக்கின்றேன். உங்களை என் பிள்ளையாக நினைத்து கெஞ்சுகின்றேன். என்னை இதில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று விபரத்தைச் சொல்லி இரந்து வேண்டினார்.<br />
<br />
பெரியவர் பயப்படவேண்டாம். நான் சொல்லுகிறபடி நீர் சொல்லும் நான் உம்மைக் காப்பாற்றுவேன் சரிதானே. ஆம் ஐயா, கோட் தொடங்கியது. பெரியவரின் வழக்கு கூப்பிடப்பட்டது. பெரியவர் கூனிக் குறுகிய தோற்றத்தில் வந்து கூண்டில் ஏறி நின்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் வழக்கின் விபரம் கேட்டார். ஜீ.ஜீ. அவரின் பெயர், சேவைக்காலம், பிறந்த ஊர், கடமையாற்றிய இடங்கள், ஆங்கிலத்திலா? சிங்களத்திலா? விசாரணையை விரும்புகிறீர் என்று கேட்டார். சிங்களத்தில் சேர் என்றார் இன்ஸ்பெக்டர். <br />
<br />
சரி எத்தனை போத்தலோடு கைது செய்தீர். இரண்டரை போத்தலோடு சேர். பெரியவர் உங்களை எத்தனை போத்தலோடு கைது செய்தார். பத்தரை போத்தல் சேர். பத்தரை போத்தலா? ஆம் சேர்.இன்ஸ்பெக்டர் மீதி எட்டுப்போத்தலும் எங்கே என்று கேட்டதும், இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல முடியாத நிலையில் பதறிக் கொண்டே இல்லை சேர் இரண்டரை போத்தல் தான் என்றார். இது பொய். ஏழைகளை நீங்கள் இவ்விதம் தான் கைது செய்து கைலஞ்சம் வாங்குவதற்காக வருத்தி வதைத்து கஷ்டப்படுத்தி இப்படியான பொய் வழக்குகளை தொகுத்து நீதி ஸ்தலங்களையும் ஏமாற்றுகின்றீர். ஜீ.ஜீ.யின் சிங்கள பேச்சை கேட்டதுமே திகைப்பு உண்டாகி உண்மையைக் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேர்! இன்ஸ்பெக்டர் பிடித்தது பத்தரைப் போத்தல் சாராயம். வழக்குப் போட்டு கோட்டுக்கு காட்டியது இரண்டரை போத்தல் சாராயம். அந்த வயோதிபர் ஒரு கிழமைக்கு மேலாக சிறைக் கூடத்திலும், கம்பிக் கூட்டிலும் காலத்தை போக்கி கஷ்டப்பட்டுள்ளார். எட்டு போத்தல் சாராயம் காட்டப்படவில்லை. வயோதிபரையும் ஏமாற்றி கஷ்டப்படுத்தி நீதி ஸ்தலத்தையும் ஏமாற்றி விட்டார்கள். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இது போன்ற பொய் சோடனை வழக்குகள் ஏற்படாதவாறு நீதிபதி அவர்களின் முடிவான தீர்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கின்றேன் என்றார்.<br />
<br />
இதைக்கேட்டதும் நீதிபதி பொய் வழக்கு சோடித்தமையை இட்டு உமது தகுதியற்ற தன்மையை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கின்றேன். பெரியவர் அவர்களே சொற்ப நாளாவது நீங்கள் விளக்க மறியலில் இருந்து விட்டீர்கள். உங்களுடைய வயதை பொறுத்து மன்னிப்பு தருகின்றேன். இதன்பிறகு இப்படியான வழக்கினால் கோட்டிற்கு வராதபடி எச்சரிக்கை செய்து விடுதலை செய்கின்றேன். நீதிபதியின் வேண்டுகோளின் படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வருட பதவி உயர்வு நிறுத்தப்படவேண்டும் என்று மேலிடத்திற்கு அறிவிப்பதாக கூறப்பட்டது. கூட்டால் இறங்கிய வயோதிபர் ஜீ.ஜீ.யின் கன்னங்களை இரு கையாலும் வருடி கை கூப்பி நன்றி கூறி விடை பெற்றார். என்ர ராசன் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.<br />
<br />
இந்த நினைவுக் கட்டுரையில் அவர் இறக்கும் பொழுது எந்தச் சொத்தை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுச் சென்றார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.<br />
<br />
அமரர் ஜீ.ஜீ. கல்விச்செல்வம், பொருட்செல்வம், இடம், பொருள், ஏவல் யாவற்றையும் தமது மைந்தன் மா மனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு விட்டுச் சென்றமையால் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய இனத்திற்கு சேவையாற்றி தன்னுயிரையே தியாகம் செய்தார். அது மட்டுமல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஆயுதம் ஏந்திய படைகளுக்கும் குழுக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக எவ்வித ஆயுதமுமின்றி ஜனநாயக ரீதியில் இரு ஆயுதங்களைப் பாவித்து போராடினார். ஒன்று அமரர் ஜீ.ஜீ. யின் மைந்தன், இரண்டாவது அமரர் ஜீ.ஜீ. முதன் முதலாக ஸ்தாபித்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்து. <br />
<br />
மேலே சுருக்கமாகக் கூறியவற்றிலிருந்து அமரர் ஜீ.ஜீ.யின் நாமம் என்றும் அழியாது.<br />
<br />
தினகுரலிலிருந்து பெறப்பட்டது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ்  மறைவு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=999</link>
			<pubDate>Mon, 06 Feb 2006 08:29:05 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=999</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி&lt;/b&gt;<br />
 <br />
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். <br />
<br />
மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். <br />
<br />
தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார். <br />
<br />
அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார். <br />
<br />
மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார். <br />
<br />
இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. <br />
<br />
1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார். <br />
<br />
மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும். <br />
<br />
இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார். <br />
<br />
தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார். <br />
<br />
ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார். <br />
<br />
இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். <br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி&lt;/b&gt;<br />
 <br />
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். <br />
<br />
மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். <br />
<br />
தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார். <br />
<br />
அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார். <br />
<br />
மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார். <br />
<br />
இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. <br />
<br />
1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார். <br />
<br />
மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும். <br />
<br />
இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார். <br />
<br />
தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார். <br />
<br />
ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார். <br />
<br />
இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். <br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சரித்திரமாகிவிட்ட கௌசல்யன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1067</link>
			<pubDate>Fri, 03 Feb 2006 07:27:33 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1067</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='font-size:30pt;line-height:100%'&gt;சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் &lt;/b&gt;&lt;/span&gt;<br />
        &lt;b&gt; எஸ்.கே&lt;/b&gt;<br />
   <br />
பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.<br />
<br />
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.<br />
<br />
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும்இ துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும்இ விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.<br />
<br />
காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.<br />
<br />
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.<br />
<br />
ஒட்டுமொத்தத்தில் அன்புஇ பண்புஇ பாசம்இ அடக்கம்இ அறிவுஇ வீரம்இ விவேகம்இ விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்லஇ தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.<br />
<br />
தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.<br />
<br />
கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.<br />
<br />
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்புஇ பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.<br />
<br />
மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை)இ மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமிஇ சின்னவத்தை)இ 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்இ செட்டிபாளையம்)இ மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.<br />
<br />
சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்லஇ சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.<br />
<br />
போர் நிறுத்தம்இ சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன்இ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள்இ தளபதிகள்இ போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.<br />
<br />
ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.<br />
<br />
இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.<br />
<br />
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். <br />
<br />
இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.<br />
<br />
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.<br />
<br />
எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.<br />
<br />
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.<br />
<br />
இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.<br />
<br />
ஆண்டு ஒன்றாகிறது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.<br />
 <br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='font-size:30pt;line-height:100%'&gt;சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் &lt;/b&gt;&lt;/span&gt;<br />
        &lt;b&gt; எஸ்.கே&lt;/b&gt;<br />
   <br />
பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.<br />
<br />
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.<br />
<br />
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும்இ துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும்இ விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.<br />
<br />
காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.<br />
<br />
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.<br />
<br />
ஒட்டுமொத்தத்தில் அன்புஇ பண்புஇ பாசம்இ அடக்கம்இ அறிவுஇ வீரம்இ விவேகம்இ விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்லஇ தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.<br />
<br />
தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.<br />
<br />
கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.<br />
<br />
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்புஇ பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.<br />
<br />
மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை)இ மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமிஇ சின்னவத்தை)இ 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்இ செட்டிபாளையம்)இ மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.<br />
<br />
சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்லஇ சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.<br />
<br />
போர் நிறுத்தம்இ சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன்இ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள்இ தளபதிகள்இ போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.<br />
<br />
ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.<br />
<br />
இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.<br />
<br />
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். <br />
<br />
இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.<br />
<br />
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.<br />
<br />
எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.<br />
<br />
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.<br />
<br />
இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.<br />
<br />
ஆண்டு ஒன்றாகிறது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.<br />
 <br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1151</link>
			<pubDate>Sat, 28 Jan 2006 05:15:20 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1151</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று &lt;/b&gt;<br />
 <br />
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு<br />
<br />
&lt;b&gt;&lt;i&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/i&gt;&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;கொக்கட்டிச்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று &lt;/b&gt;<br />
 <br />
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்திருந்த இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் மேற்;கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் நீத்த 86 பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு<br />
<br />
&lt;b&gt;&lt;i&gt;தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு&lt;/i&gt;&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கபிலனுக்கு எமது வீர வணக்கங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1152</link>
			<pubDate>Sat, 28 Jan 2006 02:35:54 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1201">iruvizhi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1152</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img55.imageshack.us/img55/3932/ba270105021gt.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
படம்: தமிழ்நெற்<br />
<br />
அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்<br />
<br />
&lt;b&gt;தாகம் ஒன்றே ஈழமென்று<br />
பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே!<br />
எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே!<br />
<br />
ஈழமெங்கணும் உந்தனின்<br />
இறுதி ஊர்வலம்.<br />
தமிழன் மனங்களெங்கணும்<br />
உன் பிரிவினால் ரணம்.<br />
<br />
நாயின் வாலை நிமித்த முடியுமோ?<br />
சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ?<br />
பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ.<br />
பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே.<br />
சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே<br />
சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே.<br />
<br />
தேசியத்தலைவரின் கருணையினால்<br />
சிங்களச்சிப்பாய் விடுதல்லை.<br />
காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் <br />
ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை.<br />
<br />
ஊமையாய் இருக்கவோ நாங்கள்?<br />
உண்மையை உலகிற்கு முழங்குவோம் வாருங்கள்.<br />
<br />
எங்கள் கபிலனின் இலட்சியங்கள் எய்துமட்டும்<br />
விழித்திரு ஞாலம். விடிந்திட ஈழம்<br />
எனமுழங்குவோம் வாரீர் விடியலை <br />
நோக்கும் வீர மறவர்களே!!&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img55.imageshack.us/img55/3932/ba270105021gt.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
படம்: தமிழ்நெற்<br />
<br />
அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்<br />
<br />
&lt;b&gt;தாகம் ஒன்றே ஈழமென்று<br />
பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே!<br />
எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே!<br />
<br />
ஈழமெங்கணும் உந்தனின்<br />
இறுதி ஊர்வலம்.<br />
தமிழன் மனங்களெங்கணும்<br />
உன் பிரிவினால் ரணம்.<br />
<br />
நாயின் வாலை நிமித்த முடியுமோ?<br />
சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ?<br />
பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ.<br />
பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே.<br />
சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே<br />
சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே.<br />
<br />
தேசியத்தலைவரின் கருணையினால்<br />
சிங்களச்சிப்பாய் விடுதல்லை.<br />
காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் <br />
ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை.<br />
<br />
ஊமையாய் இருக்கவோ நாங்கள்?<br />
உண்மையை உலகிற்கு முழங்குவோம் வாருங்கள்.<br />
<br />
எங்கள் கபிலனின் இலட்சியங்கள் எய்துமட்டும்<br />
விழித்திரு ஞாலம். விடிந்திட ஈழம்<br />
எனமுழங்குவோம் வாரீர் விடியலை <br />
நோக்கும் வீர மறவர்களே!!&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1279</link>
			<pubDate>Fri, 20 Jan 2006 08:26:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1279</guid>
			<description><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்      <br />
<br />
 <br />
நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். <br />
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- சங்கதி&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='color:brown'&gt;தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்      <br />
<br />
 <br />
நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். <br />
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;<br />
<br />
&lt;i&gt;&lt;b&gt;தகவல் மூலம்- சங்கதி&lt;/b&gt;&lt;/i&gt;                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>