![]() |
|
சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும் (/showthread.php?tid=955) |
சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும் - putthan - 02-09-2006 அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும். அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........?????? சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றால் பகவத் கீதை என்பார்கள்,புத்தனிற்கோ ஒன்றுமே புரியலே)அப்படியானால் ஏன் இரண்டு மாநாடு வைத்தார்கள். சைவம்,இந்து என்று பிரிக்கிறவர்கள் தங்களுக்கு பதவிகள்,பொன்னாடைகள் தேவை என்பதற்காகவா??? பல ஆயிரம் செலவழித்து வைத்த மாநாட்டில் பங்கு பற்றியோர் சிலரே.அப்படியானால் சில புத்திஜீவிகள் அவுஸ்ரேலியாற்விற்கு விசா எடுக்கவும்,அவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காகவுமா???? அவ்வாறு விசா எடுத்து வந்த ஒரு புத்திஜீவி சைவம் சம்பந்தமான ஏதாவது கழகத்தை வைத்திருந்தால் காரியமில்லை அவர் வைத்திருப்பதோ இந்து கழங்கள்,போதாக்குறைக்கு அவர் சிட்னியில் ஒன்றும் தொடங்கியுள்ளார்?!!!!!!! ஏற்கனவே சிறிலங்கா ஆரிய,தேரவாத பெளத்த சிங்களவருடையது என்று மகாவம்ச கதையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்,அது போதாது என்று இவர்கள் புதிதாக இராவணண் ஆரியன் என்றும் திருமலை அவனுடையது என்றும் புரளியை கிளப்பினம் . இது சிங்கள அரசுக்கு அரசியல் நடத்த வசதியாக இருக்கும். "மழித்தலும்(மொட்டை அடித்தல்)னீட்டலும்(சடை வளர்த்தல்)வேண்டா உலகம் பழித்தது(தீ யொழுக்கம்)ஒழித்து விடின்." - kuruvikal - 02-09-2006 இராவணன்..அரக்கன் என்றாங்கள்..அப்புறம் தமிழன் என்றாங்கள்..அப்புறம் திராவிடன் என்றாங்கள்..அப்புறம் ஆரியன் என்றாங்கள்..இன்னொரு புறம் இராமாயணமே புனை கதை என்றாங்கள்..எதைத்தான் உறுதியாச் சொல்லுறாங்கள்..! பொழுதுபோகவும் புரட்சி பண்ணவும் இதுகள் தானே கிடைச்சிருக்கு நம்ம புத்திசீவிகளுக்கு...! எவனாவது ஈழம் தொடர்பான நிஜ ஆய்வுகள் செய்திருக்கான..உதாரணத்துக்கு ஈழத்தின் கடல்வளம் பற்றி என்றாலும்...ஆய்வு செய்திருக்கானா...இப்ப 25 - 30 வருசமா..இல்லை...! அதுகள் செய்யாயினம் செய்தா..சனம் உருப்பட்டிடும்..! :wink:
- கந்தப்பு - 02-10-2006 சுனாமி வந்ததற்கு காரணம் பஞ்சபூதங்களின் சீற்றத்தினால்தான் என்றும் அதற்கு பரிகாரம் செய்ய யாகம் செய்யவேண்டும் என்று கொழும்பில் உந்தப்பிரபலம்தான் சொன்னது. சிட்னியிலை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களுக்கு போறதினைவிட உந்தப்பிரபலத்தினைப்பார்க்கத்தான் சனம் கூடப்போகுது. தனது கழகத்தினை சிட்னியிலை ஆரம்பிக்க, கூட்டமோ அலை மோதினது. உவன் தனக்கேற்றமாதிரிக்கதை விடுகிறன். போகிற சனத்துக்குத்தான் முளை எங்கே போனது. புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி கேவலமாக முன்பு கூறிய உந்தப்பிரபலம் அதனைப்பற்றி வானொலியில் சிலர் கேட்க தான் சொன்னது தான் சரி என்று அடம்பிடிக்கிறார். சைவசமயக்கூட்டங்களில் ஆஞ்சனேயரினைப்பற்றி பேச்சு வேற. எட சைவத்திலை எப்ப ஆஞ்சனேயர் வந்தது? ஆஞ்சனேயர் என்றதும் முன்பு கனடா நக்கீரன் எழுதிய கட்டுரைதான் ஞாபகத்திற்கு வருகிறது. http://www.tamilnatham.com/articles/nakhee...ran20041211.htm - தூயா - 02-11-2006 கந்தபு எப்படியாம் $5 சைவ மாநாடு?? - கந்தப்பு - 02-22-2006 என்ன தூயா, யாரவது 5 வெள்ளிக்கு மகானாடு வைப்பார்களா?. 3 நாளுக்கும் 100 வெள்ளி என அறிவித்ததினாலும், சிட்னியில் அதிகமக்களுக்கு தகவல் செல்லக்கூடிய ஊடகமொன்றுக்கு விளம்பரம் செய்யாததினால் மிகக்குறைவான பார்வையாளர்களே கலந்து கொண்டார்கள். சிட்னி இளைஞ்சர்கள் நடத்திய கலந்துரையாடலில் அழகிய தமிழிலும்,ஆங்கிலத்திலும் சிலர் நிகழ்ச்சிகளினை நடாத்தினார்கள். ஈழத்தில் இருந்து வந்த ஒருவர் முருகப்பெருமானின் கோவில்கள் இலங்கையில் 1000,2000ம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தவரலாறுகளினை விளங்கப்படுத்தினார். அனுராதபுரம்,புத்தளம், மலையகம்,காலி போன்ற இடங்களிலும் தமிழர்கள் முருகனை வழிபட்டுவந்த வரலாற்றினை விளங்கப்படுத்தினார். ஆனால் பார்வையாளர்கள் அதிகம்பேர் கம்பரசமான பிரபலத்தின் பேச்சுகளினையே கேட்டார்கள். அந்தப்பிரபலம் சைவமாகனாட்டில் ராமரினையும்,அனுமாரினையும் பற்றியும் பேசினார். அதுசரி ராமர்,அனுமார் எப்ப சைவசமயத்தில் வந்தார்கள்? - Aravinthan - 02-22-2006 கந்தப்பு Wrote:சுனாமி வந்ததற்கு காரணம் பஞ்சபூதங்களின் சீற்றத்தினால்தான் என்றும் அதற்கு பரிகாரம் செய்ய யாகம் செய்யவேண்டும் என்று கொழும்பில் உந்தப்பிரபலம்தான் சொன்னது. சிட்னியிலை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களுக்கு போறதினைவிட உந்தப்பிரபலத்தினைப்பார்க்கத்தான் சனம் கூடப்போகுது. தனது கழகத்தினை சிட்னியிலை ஆரம்பிக்க, கூட்டமோ அலை மோதினது. உவன் தனக்கேற்றமாதிரிக்கதை விடுகிறன். போகிற சனத்துக்குத்தான் முளை எங்கே போனது. புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி கேவலமாக முன்பு கூறிய உந்தப்பிரபலம் அதனைப்பற்றி வானொலியில் சிலர் கேட்க தான் சொன்னது தான் சரி என்று அடம்பிடிக்கிறார். சைவசமயக்கூட்டங்களில் ஆஞ்சனேயரினைப்பற்றி பேச்சு வேற. எட சைவத்திலை எப்ப ஆஞ்சனேயர் வந்தது? ஆஞ்சனேயர் என்றதும் முன்பு கனடா நக்கீரன் எழுதிய கட்டுரைதான் ஞாபகத்திற்கு வருகிறது.http://www.tamilnatham.com/articles/nakheeran20041211.htm அப்பு அவர் புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி என்ன பேசினார்? - கந்தப்பு - 02-24-2006 Aravinthan Wrote:மல்லிகைப்பத்திரிகையில் எழுதியதினை இங்கே பார்க்கவும்கந்தப்பு Wrote:சுனாமி வந்ததற்கு காரணம் பஞ்சபூதங்களின் சீற்றத்தினால்தான் என்றும் அதற்கு பரிகாரம் செய்ய யாகம் செய்யவேண்டும் என்று கொழும்பில் உந்தப்பிரபலம்தான் சொன்னது. சிட்னியிலை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களுக்கு போறதினைவிட உந்தப்பிரபலத்தினைப்பார்க்கத்தான் சனம் கூடப்போகுது. தனது கழகத்தினை சிட்னியிலை ஆரம்பிக்க, கூட்டமோ அலை மோதினது. உவன் தனக்கேற்றமாதிரிக்கதை விடுகிறன். போகிற சனத்துக்குத்தான் முளை எங்கே போனது. புலம்பெயர்ந்தமக்களினைப் பற்றி கேவலமாக முன்பு கூறிய உந்தப்பிரபலம் அதனைப்பற்றி வானொலியில் சிலர் கேட்க தான் சொன்னது தான் சரி என்று அடம்பிடிக்கிறார். சைவசமயக்கூட்டங்களில் ஆஞ்சனேயரினைப்பற்றி பேச்சு வேற. எட சைவத்திலை எப்ப ஆஞ்சனேயர் வந்தது? ஆஞ்சனேயர் என்றதும் முன்பு கனடா நக்கீரன் எழுதிய கட்டுரைதான் ஞாபகத்திற்கு வருகிறது.http://www.tamilnatham.com/articles/nakheeran20041211.htm http://www.orupaper.com/issue26/pages_K__11.pdf http://www.orupaper.com/issue26/pages_K__12.pdf http://www.orupaper.com/issue26/pages_K__18.pdf - தூயா - 02-24-2006 இணைப்புக்கு நன்றி கந்தப்பு - putthan - 02-24-2006 என்னத்த எழுதினாலும் சிட்னி டமிழ்ஸ் கம்பனுக்கும் அவரின் தூதுவருக்கும்(கம்பரசம்)கோயில் கட்டி கும்பாபிஷேகம் வைத்தபின் தான் மறு வேலை.இவர்கள் தான் சைவ கடவுள் என்றும் கூறுவார்கள்.அதையும் சிட்னி டமிழ்ஸ் பயபக்தியுடன் ஏற்று கொள்வார்கள். கந்தப்பு கல்லடி விழும் கவனம்............................ - கந்தப்பு - 03-16-2006 தென்னிந்தியாவில் இருந்து மகானாட்டுக்குவந்த பேச்சாளர் ஒருவர், தனது மனைவியும் கூட்டிக்கொண்டுவந்தார். கனடா,லண்டன்,சுவிஸ்,மலேசியாவில் நடைபெற்ற மகானாட்டுக்கும் தனது சொந்தச்செலவில் மனைவியினைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். மனைவி நன்றாகக் குறிப்புப்பார்ப்பா. போற இடங்கள் எல்லாம் கணவர் மனைவி நன்றாகப்பார்ப்பார் என்று சொல்ல, 25,30 பவுண் ஒரு சாதகத்திற்கு என்று மனைவி வாங்குவா. சிட்னி மகானாடு நடந்து முடித்த பின்பு மேலும் ஒருமாதம் சிட்னி,மெல்பேர்ண்,பிரிஸ்பண், கன்பரா அகிய இடங்களுக்குச் சென்று குறிப்புப்பார்த்தா. எங்கட சனமோ விடிய 6 மணிக்கே அவாவைச்சந்திக்கவருவினம். பிறகு இரவு 11 மணி வரை சனம். ஒருனாலைக்கு குறைந்தது 50 குறிப்புகளாவது பார்ப்பார்.ஒருகுடும்பத்தில் 5,6 குறிப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு குறிப்புகளுக்கும் குறைந்தது 25 டொலர் வாங்குவார். நீங்கள் நினைக்கலாம். இதில் என்னபிழை என்று?. மனிசி உளைச்சுட்டுப்போகட்டுமே என்று நினைப்பீர்கள். சென்னைக்குப்போகிற நாளும் நெருங்க குறிப்புகள் ஒவ்வொன்றுக்கும் 25 டொலருடன், மேலதிகமாக அன்பளிப்பாக பணம்கேட்க, சனம் விழுந்து விழுந்து குடுத்தது. ஆனால் உந்தச்சனங்களிட்ட தாயகத்துக்குப்பங்களிப்புச் செய்யக்கேட்டால் தங்களுக்குக் கடன், காசு இல்லை என்று சொல்கினம். அப்ப இனி யாராவது சோதிடம் படித்துக்கொண்டு போய்த்தான் பங்களிப்பு கேட்கவேண்டும் - putthan - 03-16-2006 கந்தப்பு நானும் இந்த கதையை கேள்வி பட்ட நான் நீர் எழுதின பிறகு தான் நான் நம்புகிறேன்.நீர் சிட்னி டமிழ்ஸின்ட கதையை விடும் அவர்களுக்கு தெரிந்தது பஜனை,அரங்கேற்றம்,யாகம்,அன்னதானம்,சாத்திரிமார்வீடு,சாமிமார்(போலி நிஜம் உங்கள் சொயிஸ்),கம்பரச கழங்கள்,இதற்கு பிறகுதான் இவர்கள் தாயகத்தை பற்றி நேரம் இருந்தால் போலி கண்ணீர் விடுவார்கள்.அதுவும் அவர்களுக்கு புகழ் தர கூடிய நிகழ்ச்சியாக இருந்தால். - கந்தப்பு - 03-16-2006 புத்தன் தம்பி, நீங்கள் இன்னொன்றையும் விட்டுவிட்டிர்கள். நடிகர் நடிகைமார் சிட்னிக்கு வந்தபோது ஈஈஈ என்று பல்லை இளித்துக்கொண்டு உந்தச்சனங்கள் போனதினை விட்டுவிட்டிர்கள் - putthan - 03-19-2006 உம்மன்ட வயதும் என்ற வயதும் ஒன்று தானே ஏனப்பு என்னை தம்பி என்று பெரிய வார்த்தை எல்லாம் பாவிக்கிறீர்கள்.நான் எழுதினது அவ்வளவு இளமையாகவா இருக்கிறதா.எனக்கும் வயதை குறைத்ததில சந்தோஷம் தான். |