![]() |
|
வெட்கம் வருமா?- வேதனை வருமா-? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: வெட்கம் வருமா?- வேதனை வருமா-? (/showthread.php?tid=907) |
வெட்கம் வருமா?- வேதனை வருமா-? - வர்ணன் - 02-11-2006 மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்- வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-! 20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்- இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -! - பேசுகின்றன-! "யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!- அது ஒரு அழகிய நிலாகாலம்-!" "சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் - இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேதனை படவா?" - ஒரு மனசு! "நண்பா- புரியாமல் நான் வாதிடுகிறேன் என்றதை நீ எத்தனை முறை சுட்டிக்காட்டியும்- அதனை புரிந்துகொண்டும்- புரியாத மாதிரி -இணையதளத்துக்குள்ளேயே- ஒரு எல்லை சண்டை தொடர்ந்தோமே- இப்போ அதுக்காய்- வெட்கப்படவா-? இல்லை...................??" இன்னொரு மனசு! "பாதி வழியில் நின்று கொண்டு எந்த வழி- என் வழி என்று எனக்கு தெரியாது - என்ற பொழுதிலும்- ஜாதிக- கெல -உறுமய -செய்வதுதான் சரி என்று "மாற்றுக்கருத்து வைத்தேனே" வெட்கப்படவா? வேதனை------??"மற்றும் ஒரு மனசு! "நியாயமாய் நடப்பவன் நானென்று- பிறர் அறிந்து-பொறுப்பொன்று கொண்டேன் - என் - சக்தியெலாம் காட்ட போய்- களங்கமில்லாமல் கதைத்தவர் கருத்தையெல்லாம்- "நிற்பதுவே- நடப்பதுவே-பறப்பதுவே" என்று ஹரிஸ் ராகவேந்திரா குரலில் பாடுறேன் என்ற நினைப்பில் களத்திலிருந்து அப்புறப்படுத்தினேனே- வெட்க....? ----------- வேதனை...........?"-மனச்சாட்சியை தானே கேக்கும் மனசு! "மாவீரர் நாளதிலும்- காதல் பத்தி கவிதை பகுதியில் எழுதி தொலைச்சேனே-! அழுகிறது - இன்னொரு மனசு-!" டொக்கென்று தலையில் யாரோ குட்டியது போல உணர்வு- கனவு கலைந்தது- அட எல்லாமே சும்மா-சும்மா- என்றபடி மனசு மறுபடியும் முருங்கை மரத்தில்-! 8) :roll: - RaMa - 02-11-2006 வர்ணன் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கின்றது ஆனால் இதை வேறு பக்கத்தில் போட்டு இருக்கலாமே. - வர்ணன் - 02-11-2006 எந்த பக்கத்தில் ரமா? உங்கள் கருத்து என்ற பகுதியில தானே - என் கருத்தை வைக்க முடியும் :roll: 8) - MUGATHTHAR - 02-11-2006 RaMa Wrote:வர்ணன் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கின்றது ஆனால் இதை வேறு பக்கத்தில் போட்டு இருக்கலாமே.என்ன நகைச்சுவை பகுதிலை போடச் சொல்லுறீங்களா..............?? இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி....... - RaMa - 02-11-2006 MUGATHTHAR Wrote:RaMa Wrote:வர்ணன் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கின்றது ஆனால் இதை வேறு பக்கத்தில் போட்டு இருக்கலாமே.என்ன நகைச்சுவை பகுதிலை போடச் சொல்லுறீங்களா..............?? இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி....... அங்கிள் என்னை மாட்டிவிடுகிறீர்களா? :twisted: எல்லோரும் அதிகம் விரும்பி பார்க்கும் பகுதியில் போட்டால் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். அது தான் சொன்னேன். - Mathan - 02-11-2006 வர்ணன், உங்கள் கருத்துக்கள் சில சிரிக்கவும் அதேநேரம் சிந்திக்கவும் வைத்தது. ஏறத்தாள இது போல் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி என்ற பதிவொன்றை படித்தேன். அதனை யாழில் இணைத்திருக்கின்றேன் படித்து பாருங்கள் .... http://www.yarl.com/forum/viewtopic.php?t=9517 |