Yarl Forum
சந்தியின் கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சந்தியின் கவிதைகள் (/showthread.php?tid=894)



சந்தியின் கவிதைகள் - சந்தியா - 02-11-2006

<span style='font-size:25pt;line-height:100%'> மாவீரர்கள்</span>

காவியங்கள் பல படைத்திட
வங்கக் கடல்தனிலே
வேங்கைகளாகப் புறப்பட்ட
மாசற்ற மறவர்கள்
அண்ணன் வழி சென்றே
அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள்


தாய் தந்தை மறந்தார்கள்
தாய் நாட்டை நேசித்தார்கள்
தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள்
தமிழ் மக்களையும்
தாய் மண்ணையும் காத்திடவே
கரும் புலியாய்!
கடற் புலியாய்!
பல்வேறு வடிவங்களில்
புயலாகப் புறப்பட்டு - இன்று
எல்லோர் மனதிலும் வாழுகின்ற
உன்னதப் புருசர்கள்

மாவீரர்கள்


- தாரணி - 02-11-2006

வணக்கம் சந்தியா
உங்கள் மாவீரர்கள் கவிதை நன்றாக உள்ளது
இதுபோல் நல்ல கவிதைகள் தருவீர்கள் என்று நம்புகின்றோம்.

நன்றி சந்தியா


- Rasikai - 02-11-2006

மாவீரர் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை எழுதுங்கோ


- RaMa - 02-12-2006

மாவீரர் கவிதை அருமையாக இருக்கின்றது சந்தியா. வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்


- சந்தியா - 02-13-2006

நன்றி வாழ்த்தியதற்கு தாரணி, இரசி அக்கா மற்றும் றமா அக்கா


- சந்தியா - 04-01-2006

[size=24]காதலின் ஏக்கங்கள்

[size=18]அழகாக ஆரம்பித்து என்
ஆசைகளை என்னவனிடம் சொல்லி
இன்பத்தில் மிதந்திட வேண்டுமென்று
ஈர்த்தது என் இதயம் எனை அதற்கிணங்க - என்
உள்ளத்தில் உள்ள உலறல்களைக் கூட
ஊக்கத்துடன் கிறுக்கினேன் கவிதையாக
ஏலனம் செய்யாமல் என்னவன் வாசிப்பான் என்பதானால்
ஏக்கங்கள் கலந்தே என் எண்ணங்களை வடித்தேன்- ஆனாலும்
ஐயம் என் அகம்தனிலே ஏனென்று புரியாத படியால்
ஓராண்டின் முற்பகுதியை விட்டுவிட்டு
பிற்பகுதியை உற்று நோக்கினேன்
அப்போது புரிந்தது என்
அகம்தனில் ஏற்பட்ட சஞ்சலத்தின் காரணம்
அன்பு மொழிகள்
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக
ஏங்கி நிற்கும் குழந்தையானது

Cry Cry Cry Cry


- jcdinesh - 04-01-2006

சந்தியா உங்க கவி வரிகள் அருமையானவை தொடர்ந்து எழுதுங்க......வாழ்த்துக்கள் ஆனால் சோகமாக எழுதாமல் சுகமான கவிதையாக எழதுங்கள்........

அன்பு மொழிகள்
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக
ஏங்கி நிற்கும் குழந்தையானது[/size][/color]


உங்கள் ஏக்கங்கள் எல்லாம் வெகு சீக்கிரம் நிறைவேற என் வாழ்த்துக்ள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- சந்தியா - 04-01-2006

<!--QuoteBegin-jcdinesh+-->QUOTE(jcdinesh)<!--QuoteEBegin-->சந்தியா உங்க கவி வரிகள் அருமையானவை தொடர்ந்து எழுதுங்க......வாழ்த்துக்கள் ஆனால் சோகமாக எழுதாமல் சுகமான கவிதையாக எழதுங்கள்........

அன்பு மொழிகள்  
ஆசைகள் பல - ஏன்
இதயத்தில் உள்ள பற்பல
எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக  
ஏங்கி நிற்கும் குழந்தையானது[/size][/color]


உங்கள் ஏக்கங்கள் எல்லாம் வெகு சீக்கிரம் நிறைவேற என் வாழ்த்துக்ள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



நன்றி நண்பரே உங்கள் பாரட்டுக்கு ஆனால் அவை யாவும் கற்பனை மட்டும் தான் லொள்ளு பண்ணதைங்கப்பாடியோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Selvamuthu - 04-01-2006

சந்தியா கவிதைக்கு நன்றி.
டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!
அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.

எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.
கோபிக்கவேண்டாம்.
[size=18]அதற்கினங்க
ஏலனம்
புரியாதனால்


- சந்தியா - 04-08-2006

[quote=Selvamuthu]சந்தியா கவிதைக்கு நன்றி.
டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!
அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.

எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.
கோபிக்கவேண்டாம்.
[size=18]அதற்கினங்க
ஏலனம்
புரியாதனால்


நன்றி ஜயா தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நான் குறை நினைக்கவில்லை தப்புக்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே இன்னோர் தடவை அதே தப்பு நடக்காது


என் கனவே கலைந்திடாதே நனவாகிவிடு - சந்தியா - 04-10-2006

<span style='font-size:30pt;line-height:100%'>என் கனவே நீ கலைந்திடாதே
நனவாகிவிடு</span>

கண்டேன் என் கனவுதனில் - ஓர்
அழகான தமிழீழம் மலர - அங்கு
அழுகையொலி இன்றி
அன்பு மொழி கேட்டது
சண்டை சச்சரவும் இன்றி
சமதானமான மக்கள் - அவர்களிடம்
வேற்றுமைகள் இல்லை
ஒற்றுமையே நிலவியது
துள்ளித் திரியும் சிறுவர்கள்
துணிந்து உலாவும் பெரியோர்கள்
சுதந்திரமாய்த் திரிகின்ற பெண்கள்
வெடி குண்டுச் சத்ததிற்கு பதிலாய்
சிறார்களின் வாண வேடிக்கை
பயந்து நடுங்கும் நிலையும் இல்லை
பொருளாதாரத் தடையும் இல்லை
பட்டினியாய் இருக்கும் நிலையும் இல்லை
ஏங்கித் தவித்திருந்த மனசுகள் கூட
ஏக்கமின்றி நிம்மதியாய் தூங்கின
மகிழ்ச்சியான வாழ்க்கைதனை
மகிழ்வுடனே வாழ்கின்ற மக்கள்தனை
நான் அங்கு கண்டேன்

என் கனவே நீகலைந்திடாதே
நனவாகிவிடு


- Selvamuthu - 04-10-2006

சந்தியா உணர்வுபுூர்வமாண உங்கள் கவிதைகள் நன்றாகவே உள்ளன.
மீண்டும் எனது அறிவுரை எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதவும். இல்லையேல் நீங்கள் சொல்லவந்த கருத்துக்கள் படிப்பவர்களிடம் செல்லாமலே சென்றுவிடும்.

Quote:என் கனவே கலைந்திடாதே
நனவாகிவிடு

கண்டேன் என் கனவுதனில் - ஓர்
அழகான தமிழீழம் மலர - அங்கு
அழுகையொலி இன்றி
அன்பு மொழி கேட்டது
சண்டை சச்சரவும் இன்றி
சமதானமான மக்கள் - அவர்களிடம்
வேற்றுமைகள் இல்லை
ஒற்றுமையே நிலவியது
துள்ளித் திரியும் சிறுவர்கள்
துணிந்து உலாவும் பெரியோர்கள்
சுதந்திரமாய்த் திரிகின்ற பெண்கள்
வெடி குண்டுச் சத்தத்திற்கு பதிலாய்
சிறார்களின் வாண வேடிக்கை
பயந்து நடுங்கும் நிலையும் இல்லை
பொருளாதாரத் தடையும் இல்லை
பட்டினியாய் இருக்கும் நிலையும் இல்லை
ஏங்கித் தவித்திருந்த மனசுகள் கூட
ஏக்கமின்றி நிம்மதியாய் தூங்கின
மகிழ்ச்சியான வாழ்க்கைதனை
மகிழ்வுடனே வாழ்கின்ற மக்கள்தனை
நான் அங்கு கண்டேன்

என் கனவே கலைந்திடாதே
நனவாகிவிடு
_________________
>>>>***சந்தியா***<<<<



- eezhanation - 04-11-2006

ஆகா அழகான கனவு அது நனவாகும் நாள் வெகு தொலைவிலில்லை. தொடர்ந்தும் இதுபோன்ற கனவுகளைக்காண வாழ்த்துகிறேன்.


- jcdinesh - 04-12-2006

சந்தியா உங்கள் கனவு வெகு சீக்கிரம் நனவாகும்.......உங்கள் அருமையான கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்


- சந்தியா - 04-13-2006

நன்றி செல்வமுத்து ஐயா உங்கள் கருத்துக்கும் மற்றும் பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கும்.


நன்றி ஈழநேசன் மற்றும் டினேஸ்