Yarl Forum
தேடுகிறேன் என் செந்தமிழை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தேடுகிறேன் என் செந்தமிழை (/showthread.php?tid=879)



தேடுகிறேன் என் செந்தமிழை - Eelam Angel - 02-13-2006

<span style='font-size:25pt;line-height:100%'>[/size]

<b>[color=indigo][size=18]தேடுகிறேன் என் செந்தமிழை</b>


[size=9]தேசம் விட்டு தேசம் வந்து

தேடுகிறேன் என் செந்தமிழை

செல்லுகின்ற தெருவெல்லாம்

கேட்பதெல்லாம் செந்தமிழா...?



என்னுடன் படிப்பவர்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?

தமிழ் வகுப்பு மாணவர்கள்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



குழந்தை இன்று தாய்தன்னை

அழைப்பதுதான் செந்தமிழா...?

நம்மவர் கடை என்று நாம் சென்றால்

அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



நம்மை விட மூத்தவர்

கதைக்கிறார் செந்தமிழா...?

அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம்

<b>அடிமை</b> வந்த எம் இரத்தம் இன்று என்ன

சும்மாவா விட்டு வைக்கும் ...?

உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!!



அம்மாவும் கதைக்கிறாள்

வீட்டில் செந்தமிழா...?

அப்பாவும் அனுமதித்தார்

கதைப்பத்ற்கு செந்தமிழா...? :?

சிந்தியுங்கள் எம்மவரே - நான்

கதைப்பதற்கு தேடுகிறேன்

செந்தமிழில் எம்மவருடன்!!</span>

http://தவறுகள் எதும் இருப்பின் மனித்து விடுங்கள்!!


- MUGATHTHAR - 02-13-2006

Quote:என்னுடன் படிப்பவர்
கதைப்பதெல்லாம் செந்தமிழா...?
தமிழ் வகுப்பு மாணவர்கள்
கதைப்பதெல்லாம் செந்தமிழா...?

இப்பிடி யெல்லாம் கதைச்சா நாங்கள் தமிழன் எண்டு தெரிஞ்சு போகுமே......... எப்ப எங்களை தமிழர் இல்லை எண்டு காட்டினால்தானே பெருமை .......(இப்பிடியான நிறையப் பேர் இருப்பது உண்மைதான்)


- RaMa - 02-13-2006

குழந்தை இன்று தாய்தன்னை

அழைப்பதுதான் செந்தமிழா...?

நம்மவர் கடை என்று நாம் சென்றால்

அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?

கடையின் பெயரையே தமிழில் போடுகிறார்கள் இல்லை பிறகு எப்படி தமிழ் கதைப்பார்களாம்?
உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.


- Eelam Angel - 02-13-2006

நீங்கள் சொல்வது உண்மைதான்
நன்றி ரமா அக்கா மற்றும் முகத்தார் அங்கிள்


- Selvamuthu - 02-13-2006

ஈழ தேவதை தேசம்விட்டு தேசம்வந்து
செந்தமிழைத் தேடுகிறார் கனடாவில்!

பள்ளியில் பாதையில் பலசரக்குக் கடைகளில்
தன் இல்லத்தில்கூட இல்லை என்கிறாரா?
நாமும் சேர்ந்தே தேடுவோம்.

குட்டிப்பெண்ணின் குட்டிக்கவிதைக்கு
நன்றி.


- Rasikai - 02-14-2006

ம்ம் உங்கள் கவி நன்று வாழ்த்துக்கள் மேலும் தொடர்க


- Eelam Angel - 02-14-2006

[b] நன்றி ரசிகை அக்கா மற்றும் செல்வமுத்து அங்கிள்
<img src='http://mi6.bpcdn.us/BP-Grafix23/24.gif' border='0' alt='user posted image'>


- சுடர் - 02-14-2006

ஆதங்கத்துடன் வெளிப்பட்ட கவி நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.


- சுடர் - 02-14-2006

மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது போல் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கலாம் அல்லவா, நம்மில் எத்தனைபேர் செந்தமிழினைக் கதைக்கிறோம். :roll: அவர்களிற்கு எடுத்துக்காட்டாக ஏன் நாம் இருக்கக்கூடாது. :roll:
எப்பவும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட நாம் அவர்களிற்கு முன்னுதாரணமாக இருக்கலாமே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சரி அதவிட்டு இக்களத்திலாவது சிறிது செந்தமிழில் எழுதிப்பார்ப்போமா 8)


- Nitharsan - 02-14-2006

செந் தமிழை வெந்து மனம் வாட
வெதும்பியே தேடிநின்று..
தேன் தமிழில் கவி படைத்து
வீழாதமிழின்..வீழும் நிலை சொல்லி
விம்மிய கவியருமை தோழியே..|
விடை தெரிந்த பலர் இங்கிருந்தும்
விட மாட்டடர் மூச்சிங்கே..


- ப்ரியசகி - 02-15-2006

வித்யாசமான கரு கொண்ட கவிதை..வாழ்த்துக்கள்..தொடருங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->