Yarl Forum
அரவிந்த்சாமி விவாகரத்து? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: அரவிந்த்சாமி விவாகரத்து? (/showthread.php?tid=842)



அரவிந்த்சாமி விவாகரத்து? - Mathan - 02-15-2006

விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/arvindhswamy-450.jpg' border='0' alt='user posted image'>

நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார்.

பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி.

<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/arvind-250.jpg' border='0' alt='user posted image'>

இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரவிந்த்சாமிகாயத்ரி பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வருகின்றன.

இந் நிலையில் விவாகரத்து கோரி காயத்ரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது 2 குழந்தைகளைப் பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜெயபால், வருகிற 21ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரவிந்த்சாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மெட்லி ஒலி சீரியல் புகழ் பெரியவர் டெல்லி குமாரின் மகன் தான் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரை தனது தம்பிக்கு குமார் சிறு வயதிலேயே தத்து கொடுத்துவிட்டார். இதனால் தந்தையுடன் அரவிந்த்சாமி பேச்சுவார்த்தையே வைத்துக் கொண்டதில்லை.

தட்ஸ் தமிழ்


- KULAKADDAN - 02-15-2006

என்னப்ப மொட்டை அடித்து, அஜித் விட்ட இடத்தை அரவிந்த சாமி பிடிச்சிட்டார் போல,


- ப்ரியசகி - 02-15-2006

ஆமா இல்லை..முந்தி நல்ல வடிவாக இருந்தார்..

<img src='http://img530.imageshack.us/img530/9631/anytamil0minsarakanavu29cw.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img420.imageshack.us/img420/7814/arvindswamy1kq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img530.imageshack.us/img530/4011/inwarvind7xv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img420.imageshack.us/img420/2249/rkrsphg1xw.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 02-21-2006

ஆ.. அரவிந்த்சாமி

நடிகர் அரவிந்த்சாமி, அவரது மனைவி காயத்ரி ஆகியோரின் விவகாரத்து வழக்கில், இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ரோஜா படம் மூலம் நடிக்க வந்தவர் அரவிந்த்சாமி. பம்பாய், மறுபடியும், தளபதி என பல நல்ல படங்களில் நடித்த அரவிந்த்சாமி பின்னர் நடிப்பிலிருந்து கலர் கைலி எல்லாம் கட்டி கிராமத்து சப்ஜெக்ட் செய்து கெட்ட பெயர் வாங்கியதோடு, இது நமக்கு சரி வராது என்று ஒதுங்கி விட்டார். தற்போது தனது சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இந் நிலையில் அரவிந்த்சாமிக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே ஒரு பெண் நுழைந்துள்ளார். அரவிந்த்சாமிக்கு உதவியாளராக வந்து அப்படியே முக்கியமான இடத்தை அபகரித்துவிட்ட அந்தப் பெண்ணால் அரவிந்த்சாமியின் மனைவி காயத்ரி அவரை விட்டுப் பிரிந்தார் என்கிறார்கள்.

ஆனாலும் மகள்கள் இருவரும் அரவிந்த்சாமியுடனே வசித்தனர்.

சில காலமாக பிரிந்து வாழும் காயத்ரி, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தார். மேலும் கூடுதல் மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த கூடுதல் மனு மீது இன்று நீதிபதி ஜெயபால் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது நடிகர் அரவிந்த்சாமியும், காயத்ரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதி ஜெயபால், இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.அதன்படி, வாரத்தில் நான்கு நாட்கள் தனது மகள்களை பார்த்துப் பேச காயத்ரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2 நாட்கள் அரவிந்த்சாமியின் உறவினர் வீட்டில் 3 மணி நேரமும், அடுத்த 2 நாட்கள் காயத்ரியின் உறவினர் வீட்டில் 3 மணி நேரமும் தனது மகள்களை காயத்ரி சந்திக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

மார்ச் 1ம் தேதி வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்று அறிவித்த நீதிபதி விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார். விசாரணைக்கு வந்திருந்த அரவிந்த்சாமி, அடையாளமே தெரியாத வகையில் மாறிப் போயிருந்தார்.

தலையில் பெரிய வழுக்கையும், தொப்பையுமாக காணப்பட்ட அரவிந்த்சாமியின் முகத்தில் சோக வரிகளைக் காண முடிந்தது.

thats tamil


- வடிவேலு - 02-21-2006

எங்களை போன்ற பெரிய ஸ்டார்களுக்கு இது எல்லாம் சகஜம்ப்பா,


- matharasi - 02-21-2006

...நம்ம பெண்ணுங்க எல்லாம் அரவந்த சாமி மாதிரி புருசன் கிடைக்க கனவுகொண்டிருக்க...கிடைக்காமால் எடுக்கு மெடுக்கா இருக்க...பாவம் தானுங்க..அரவந்த சாமி.. அவங்க பொழைப்பு அப்படி போட்டுதுங்க.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->