![]() |
|
பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்!! (/showthread.php?tid=8359) |
பூவிற்கும் பெண்ணிற்க - sOliyAn - 06-20-2003 பூவிற்கும் பெண்ணிற்கும் காதல் ஓரு பெண்ணைப்பார்த்து பூ ஒன்று கேட்கிறதாம் பெண்ணே பூவிற்கும் ஒரு பெண்ணின் மீது காதல் என்றால் நீ நம்புவாயா -யார் மீது காதல் உனக்கு பெண்ணே பூவே உன் மீது தான்...பெண்ணே நீயும் ஒரு பூத்தானே அதனால் உன்னை நான் காதலிக்கவா - உடனே பெண் சிரிக்கிறாள் - அதைப்பார்த்ததும் பூமகன் நானுகிறான்........! ஏன் நானுகிறாய் ?- உன் பூ இதழ்களால் நீ சிரிக்க வெள்ளி மகரந்த மணிகள் என்னையே கூச வைக்கிறது - அதனால் என் வம்சத்தின் மீதே ஏனக்கு வெறுப்பு - அதனால்த்தான் உன்னை நான் காதலிக்கிறேன் பூவே......நானோ பெண் நீயோ பூ அதெப்படி உனக்கு என் மீது காதல்........? பாவையே பூங்குவளையே இன்னுமா உனக்கு புரியவில்லை....? நான் முடியாது என்றால் என்ன செய்வாய்.......? - பெண்ணே நீ தான் தினமும் என்னைக்கதலிக்கிறாயே .. பின்பு எப்படி முடியாது என்பாய் - புூமகன் தன்னுள் சிரித்தபடி மடைப்பெண்ணே நான் என்ன செய்வது ஓர் நாளில் நான் இறக்கத்தானே வேண்டும் இதுவுமா உனக்குப்புரியவில்லை.......? - பூ தன்னுள் சிரிக்க அவளோ இன்னொரு ஆடவனுடன் செல்ல - போ போ மீண்டும் நாளை என்னைத்தானே நீ உன் கேசத்தில் அணிந்து கொள்ள வேண்டும்......! இது தானடி என் மீது நீ கொண்ட காதல் - உன் மீது நான் கொண்ட காதல்......! இன்னுமா உனக்குப்புரியவில்லை மடைப்பெண்ணே......................! ஜெ.பிறேம்குமார் 18.06.2003 (பழைய தளத்தில் புதிதாக முளைத்ததை.. பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.) - kuruvikal - 06-20-2003 நல்ல கற்பனை தந்ததொரு புது வடிவம் பூவுமங்கு ஆணாகி பூவிலும் ஆண்மை உண்டு- என்ற உண்மை கண்டு பூக்கள் என்று தம்மைப் புகழ மகிழ்ந்திருந்தோர் தம் போலி முகம் வெளிக்காட்டி வந்ததந்தக் கவிதை! வரைந்தவருக்கும் வரைந்ததை சபையறிந்து தந்த அண்ணனுக்கும் நன்றிகள்! - vaiyapuri - 06-20-2003 திறமைகளை தேடியறிந்து அவற்றை வளர்ப்பதற்கு துணை நிற்போம். வாழத்துக்கள் பிறேம் குமார். நன்றிகள் சோழியான். you've proven that we learnt of books and men - sethu - 06-20-2003 சோழியனின் கவிதை வரி அருமை - sOliyAn - 06-20-2003 செய்தியாளரே! என்ன குசும்பா? நுனிப்புல் மேயாமல் முடிவுவரை வாசியுங்கள்.. :mrgreen: - sethu - 06-20-2003 உண்மையை சுட்டிகாட்டுவத தவறா? - vaiyapuri - 06-20-2003 உண்மையை எழுதுவதில் தப்பில்லையப்பு.முழுசா வாசிச்சியளோ ? |