![]() |
|
பாக்தாத் நகரில் இலங்கையர் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாக்தாத் நகரில் இலங்கையர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=8275) |
பாக்தாத் நகரில் இலங்க - sethu - 07-23-2003 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்காக ஈராக்கில் பணிபுரிந்து வந்த இலங்கையரொருவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பாக்தாத் நகரில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நதீர்h ரண்முத்து என்பவர் பாக்தாத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்க பணிமனையில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். ரண்முத்து அவரது காரில் பயணஞ் செய்து கொண்டிýருக்கும் போது இனந்தெரியாதோரால் சுடப் பட்டுள்ளார். உள்@ýர் நேரம் காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கார் சாரதி படுகாயமடைந்துள்ளார். 37 வயதான ரண்முத்து 1992 ஆம் ஆண்டு முதல் செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ஈராக்கில் 1980 ஆம் ஆண்டு முதல் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அங்கு சுமார் 850 பேர் பணியாற்றுகின்றனர். |