Yarl Forum
காதலித்துப்பார் நீயா..... நானா........ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலித்துப்பார் நீயா..... நானா........ (/showthread.php?tid=8255)



காதலித்துப்பார் நீயா. - J.Premkumar - 08-01-2003

காதலித்துப்பார் நீயா..... நானா........


காதலிக்காதே ...!
காதலித்த பின்
கண்ணீர் விடாதே........!
காதலால்
வாழ்ந்தவர் உண்டு......!
காதலால்
செத்தவர் உண்டு..........!
வாழ்க்கையை
தொலைத்தவரும் உண்டு......!
காதலிப்பதாயின்
முதலில்
உன்னை நீ காதலி.....!
உன்னைப்
பெற்ற தெய்வங்களைக்காதலி.....!
உன்
சுற்றத்தைக்காதலி........!
உன்னைச்சார்ந்தோரைக்காதலி......!
உன்
வாழ்க்கையை காதலி........!
உன்னை
நம்பி வரும்
உன் மனைவியை நீ காதலி.......!
இறுதியில்
உன் குடும்பத்தை
நீ காதலி.......!
காதலித்துப்பார்
நீயா...... நானா......
என்பது புரியும்..........!

ஜெ.பிறேம் குமார்
என்ன என்னை யர்ர் என்றா என்னும் புரியவில்லை
பெயர் தான் புதிது.
(பழயவை என்றும் புதியவை தானே ? )


- J.Premkumar - 08-01-2003

கவிக்குள் ஓர் கவி.......

கவிக்குள் ஓர் கவி.....
இசையா...?
நாதமா..?
அல்லது
இசையின் நாதமா..?..!
இடியா...?
மழையா....?
அல்லது
இடியின் மழையா....?...!
காதலா..?
நட்பா..?
அல்லது
நட்பின் காதலா...?.....!
வானமா..?
பூமியா..?
அல்லது
வானுக்குள் பூமியா...?...!
இரவா...?
பகலா....?
அல்லது
பகலில் ஓர் இரவா.....!
எனக்குள் நானோ.....?
எனக்குள் நீயோ...?
உனக்குள் நானோ...?
யாருக்குள் யாரோ..?
எதற்குள் எதுவோ..?
அதற்குள் அதுவே - கவிக்குள்
ஓர் கவி - அது
ஓர் புதுக்கவி.........!

ஜெ.பிறேம் குமார்..