![]() |
|
********* தணிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ********* தணிக்கை (/showthread.php?tid=8243) |
********* தணிக்கை - sethu - 08-08-2003 http://www.sooriyan.com/latestnews/56.asp இலங்கைக்குள் இந்திய மீனவர்கள்போண்று வரும் இந்திய இறானுவத்தினர் பிரச்சனைகள் குறித்து சுமூகமான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள இரு நாட்டு அரசாங்கங்களும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரியப்படுத்தியுள்ளார். பருத்தித்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்து இந்திய இறானுவத்தினர்கள் பத்துப் பேர் பலவந்தமாக பருத்தித்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கரைக்கு கொண்டு வந்தவர்கள் கொழும்பிலுள்ள இந்திய து}துவரக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் கோரினர். பருத்தித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் ; தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்த படை அதிகாரிகள் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினர் அவ்விடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து அனைவரும் இப்பிரதேச கிராம சேவை அதிகாரி மூலம் பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உத்தியோகபுூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விஞ்ஞான பொருளாதார மறுசீரமைப்புதுறை அமைச்சர் மிலிந்தமொறகொட புதுடில்லி பயணமாகியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஸ் மிஸ்ரா உட்படப் பலரைச் சந்தித்து அமைச்சர் மிலிந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். - sethu - 08-14-2003 மட்டக்களப்பு நகரப் பகுதியில் தேசவிரோத கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த ரதீஸ் இன்று நண்பகலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அரசரட்ணம் ரதீஸ்வரன் (வயது 32) என்னும், அதிகார் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இவர் தமிழ் மக்களை காட்டிகொடுத்தவர்.. |