![]() |
|
கமன்றது தமிழ் மணம் வன்கூவர் மாநகரில்; - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கமன்றது தமிழ் மணம் வன்கூவர் மாநகரில்; (/showthread.php?tid=8227) Pages:
1
2
|
கமன்றது தமிழ் மணம் வன் - Alai - 08-15-2003 [size=18]கமன்றது தமிழ் மணம் வன்கூவர் மாநகரில் நாட்டியம் என்பது மனிதனின் பல வகைப்பட்ட உணர்வுகளை, அல்லது அவர்களது கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுகின்றது. கிறிஸ்துவிற்கு முன்பு இந்தியாவிலே தோற்றம் பெற்ற பரதக் கலையானது அழகியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து பார்ப்போரைப் பரவசப்;; படுத்தக் கூடிய தன்மை கொண்டது மட்டுமல்ல பார்ப்போருக்கு தெய்வீக உணர்வையும் ஊட்டவல்லது. பரத நாட்டியத்தில் நாம் ராகம், பாவம், தாளம் என்ற மூன்று அம்சங்களை அவதானிக்கலாம். இதில் ராகமானது எம் செவிக்கும் மனதிற்கும் விருந்தாவது மட்டுமல்ல அந்த நடனத்துடன் எம்மை ஒன்றிப்போகவும் வைக்கின்றது. நடனமாடுபவர் தனது உள்ளத்தில் ஏற்படும் பல்வேறு கருத்துகளை தன்னுடைய கண், முகம் என்பவற்றின் பாவனைகள் மூலம் வெளிப்படுத்தலே பாவம் ஆகும். ராகம், பாவம் என்பவைக்கு மெருகு ஊட்டுவதுபோல அமைகின்றது தாளமாகும். இந்த தாளமானது பார்ப்போருக்கு மட்டுமல்ல நடனமாடுபவருக்கும் உற்சாகத்தை ஊட்டவல்லதாகும். இந்த மூன்று அம்சங்களையும் சரிவரப் பொருந்தி ஒருவர் நடனமாடுவாராகில் சிறியோர் முதல் பெரியோர்வரை மிக இலகுவாக நடனத்துடன் லயமாகிவிடுவர். எனவேதான் நாட்டியத்தைப் பார்;த்து ரசிப்பதற்கு எந்தவொரு மொழியும் தேவையில்லை. இது ஒரு ஆன்ம மொழி என்றே கூறலாம். <img src='http://www.tamilworldnews.com/nedu/111.jpg' border='0' alt='user posted image'> நடனக்கலைக்கு சான்று கூறும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடன மாலை, வன்கூவர் மாநகரில் ஓகஸ்ட் மாதம் 02ம் திகதி வன்கூவர் பிளேகவுஸில் நடைபெற்றது. இந்த நாடன மாலை நிகழ்ச்சியை பிரிட்டிஷ் கொலம்;பியா மாகாணத்திலுள்ள ஈழத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத்;; தமிழ் சங்கமானது வளர்ந்து வரும் இளம் தமிழ் சமுகத்திற்கு தமிழறிவையும், கலையார்வத்தையும், கலையுணர்iவுயும், தமிழ் கலாச்சாரத்தையும் ஊட்டி வளர்ப்பதற்காக தமிழ் வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் என்பவற்றை நடாத்தி வருகின்றது. நாம் எமது கலாச்சாரத்;தை பேணிக் கடைப்பிடித்து சிறந்து குடிமகனாக வாழவேண்டும் என்பதற்காகவும், எமது இளம் சமுகத்தினருக்;கு கலையார்வத்தை ஏற்படுத்தவும், பல்;லின மக்கள் மத்தியில் எமது கலாச்சாரத்;தை அறிமுகம் செய்யவுமென ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நடன மாலை நிகழ்ச்சியை இன மத மொழி வேறுபாடின்றி பல்வேறு சமுகத்;தை சேர்ந்த மக்கள் கண்டு மகிழ்வுற்றனர். ஏறக்குறைய 600ற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கண்டு களித்;தனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் 300 பேர் அளவில் வேற்றின மக்கள் இந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர் என்பதாகும். இந்த இனிய நடன மாலை நிகழ்ச்சியில் மூன்று பிரபல்யம் வாய்ந்த நடன விற்பன்னர்களின் வௌ;வேறுபட்ட பாணியிலான நடனங்களை காணக்கூடியதாக இருந்தது. இதில் திரு. ஜய கோவிந்த அவர்கள் இந்த நிகழ்ச்சியில் முதற்பகுதியில் பல நடனங்களை ஆடினார். இவர் ஒரு மேலைத்தேய இனத்தவர். இவர் பரதக் கலையின்பால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிற்குச் சென்று பல பரத வித்தகர்களிடம் நடனம் பயின்றுள்ளார். இவர் 1995இல் ஒரு நடன பாடசாலையை வன்கூவரில் அமைத்து அதன்மூலம் பலருக்கு நடனம் பயிற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல, 1991இல் இந்தியாவில் நடைபெற்ற சர்;வதேச வெளிநாட்டுக் கலைஞ்ஞர்கள் விழாவில் கலந்துகொண்ட முதலாவது கனடியப் பிரஜை என்ற பெருமையும் இவரைச் சாரும்;. மேலும் திரு ஜய கோவிந்த அவர்கள் பல நடன நிகழ்ச்சிகளை கனடாவில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் நடாத்தி நடனக் கலையுலகில் தனக்கென ஒரு தனியான இடத்தை வகிக்கின்றார். <img src='http://www.tamilworldnews.com/nedu/222.jpg' border='0' alt='user posted image'> அடுத்ததாக, நடன வித்தகை செல்வி அனித்தா சிவராமன் அவர்கள்; தனித்தும் தனது குருவான திரு சிறிகாந்துடன் இணைந்தும் பல நடனங்கள் ஆடி மக்கள் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்;. கலைக் குடும்பத்தில் தோற்றம் பெற்ற இவர் தனது நாலாவது வயதிலேயே நடனத்தை அமெரிக்காவில், பல்ரிமோர்; என்ற இடத்தில் அமைந்துள்ள நிர்த்தியசாலா அக்கடமியில் பயில ஆரம்பித்தார். செல்வி அனித்தா அவர்கள் தனது தாயாரையே ஆரம்பக் குருவாக ஏற்றுக்கொண்டு நடனம் பயின்றுள்ளதுடன், தனது ஏழாவது வயதில் அரங்கேற்றத் தகுதித் தேர்வை நிகழ்த்தியுள்ளார். இவர் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், சென்னையிலும் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதுடன் 2000ம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவின்போது விருதும் பெற்றுள்;ளார். இவர் மறைந்த தமிழக முதல்வர் டாக்;டர் எம். ஐp. இராமச்சந்திரன் அவர்களின் பேத்தியும், இசை மேதை திரு. பாபநாப சிவம்; அவர்களின் கொள்ளுப் பேத்தியுமாவார். இவர்களுடன், இந்தியாவில் இருந்து வருகை தந்த பரதமுனி, திரு. சிறிகாந் அவர்கள் செல்வி அனித்தா சிவராமனுடன் இணைந்தும், தனித்தும் பல நடனங்களை வழங்கி வன்கூவர் மக்களை மகிழ்ச்சியில்;; ஆழ்த்தியிருக்கின்றார். இவர்; தனது ஆறாவது வயது தொடக்கம் மேடைநிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் பல புகழ் பெற்ற நடன மேதைகளிடம் நடனம் பயின்றுள்ளதுடன் சென்னையிலும் உலகின் வௌ;வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு 1997இல் யுவகால பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் திரு. சிறிகாந் அவர்கள் இந்திய தொலைக்காட்சி சேவையான து}ரதர்ஷனிற்கும் நிகழ்ச்சிக்ள் வழங்கியுள்ளதுடன் சிறினிவாசா றாமான்ஜ என்றழைக்கப்;படும் விவரணச் சித்திரத்திலும் தனது நடனத்திறமையைக் காட்டியுள்ளார். இவர் ஆண்களுக்கான பாத்திரங்களை மட்டுமல்ல பெண் பாத்திரங்களுக்கும் திறம்பட நடனமாட வல்லவர். சிறந்த நடனக் கல்வியறிவும் சிறந்த குரல் வளமும் ஒருங்கே அமையப்பெற்ற பரதமுனி சிறிகாந் அவர்கள் ஒரு சிறந்த நடன ஆசிரியராகவும் காணப்படுகின்றார். <img src='http://www.tamilworldnews.com/nedu/333.jpg' border='0' alt='user posted image'> அன்றை நிகழ்ச்சியின் நடன மூர்திகளான திரு. ஜய கோவிந்த, செல்வி அனித்தா சிவராமன், திரு. பரதமுனி சிறிகாந்த் ஆகியோரின் சகல நடனங்களையும் பார்வையாளர்; எந்தளவிற்கு ரசித்தார்கள் என்பதற்குச் சான்;றாக ஒவ்வொரு நிகழ்ச்சின் முடிவிலும் எழும்பிய கரகோசம் புலப்படுத்தியது. சகல நடனங்களும் மனோலயமாகிவரும் தெய்வானுபவத்தை ஏற்படுத்தின. பாடல்; இல்லாமல்; இசையுடன் நடனம் ஆடும் பாணியில் அமைந்த தீப்பொறி என்ற நடனத்தில் அற்புதம் என்ற ரசனையை; திரு. சிறிகாந்தும்;, செல்வி அனித்தா சிவராமனும் இணைந்து பரிமாறினர்;. இந்த நடனம் புது விதமாக அமைந்ததுடன் பலரது பாராட்டையும் பெற்;று அற்புதம அற்புதமாகவே அமைந்துவிட்டது. நிகழ்ச்சி முடிவில் வெளியே வந்த பார்வையாளர்கள் தங்கள் பரவச வார்;த்தைகள் மூலம்; நடனங்கள் எவ்வளவு மனோரம்யமானவையாகவும், அழகாகவும் இருந்தன என்பதை வெளிப்படுத்தினார்கள். <img src='http://www.tamilworldnews.com/nedu/444.jpg' border='0' alt='user posted image'> இத்தகைய ஆற்றலும் சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற மூன்று நடன வித்தகர்களின் நடன நர்த்தனங்களை ஒருங்கே கண்டு மனம் களிப்பதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மக்களிற்;கு ஒரு அரிய சந்தர்ப்பம் அமைந்தது என்றால் அது மிகையாகாது. இத்தகைய சந்தர்ப்பம்; தமிழ்க் கலாச்சார அருமை பெருமைகளை இளைய தலைமுறைக்கு பரிமாற்றுவது மட்டுமல்லாமல், வேற்றின மக்களுக்கும் எடுத்துக்காட்டிய பெருமை பிரிட்டிஷ் கொலம்பியா ஈழத் தமிழ் சங்கத்திற்கே உரியதாகும்; என்றால் அது மிகையாகாது. நன்றி - தமிழ்நாதம்.கொம் - Mathivathanan - 08-15-2003 லோஞ்சுபோட்டு.. கைலேஞ்சியை.. விசிறியடிச்சு.. துள்ளுற.. மெறிஸ்..டாண்ஸ்.. ஆடுறவை.. இடையிலை.. வரயில்லையே.. அதுதான்.. நம்மவர்.. நடனமெண்டு.. காட்டினாங்கள்.. பார்த்தன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-15-2003 பரதம் பரத்தையர் (தேவ தாசிகள்) கலை எனபடுகிறதே...உண்மையோ....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Kanani - 08-15-2003 அது சந்தர்ப்பத்தையும் ஆடுபவரையும் பொறுத்தது பரதம் சிவனுக்கே உரியது அதில் கடவுளையும் காணலாம்.... - kuruvikal - 08-15-2003 பரதம் சிவனுக்கன்று நர்த்தனம் கூத்து தாண்டவம் தான் சிவனுக்கு...பரதம் தேவ தாசிகளின் கலை என ஒரு கலை வல்லுனர் சொல்லக் கேட்டோம்...அதுதான் கேட்டோம்...உண்மையா...????????????! - Kanani - 08-15-2003 அது உண்மைதான் குருவியண்ணை அந்தக்காலத்தில் விருந்தினரை மகிழ்விக்கவும் சிற்றின்பத்திற்காகவும் ஆடல் மங்கையரை வைத்திருந்தனர். - kuruvikal - 08-15-2003 அப்ப பரத்தையர் ஒழுக்கம் தான் தமிழர் கலையாகியதோ.....?????!!!!!!! அப்படிப் பார்த்தால் பரதம் ஆடுபவர்கள் ஒரு வகையில் பரத்தையரோ.....???????! அப்ப ஆடும் ஆண்கள்.............?????!!!!! - Kanani - 08-15-2003 பரதம் தமிழர் கலையா? இல்லையே ஆரிய பிராமணர் புகுத்தியது அது எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி வளர்க்கப்பட்டது? காமசூத்திரத்தில் பரதத்தின் பங்கு என்ன? எழுதலாமா? தணிக்கையா? - kuruvikal - 08-15-2003 பரதம் தமிழர் கலையில்லைத்தானே.....மேலே தந்த கட்டுரை என்ன சொன்னது எண்டதைக் கவனிச்சனியளோ.....நாங்கள் இதைப்பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்த நாங்கள்...நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறியள்....ஆனால் அந்தக் கட்டுரையாளர்......????! எது உண்மை நாங்கள் கேள்விப்பட்டதா...அல்லது அந்தக் கட்டுரை இயம்புவதா......???! - Mathivathanan - 08-15-2003 kuruvikal Wrote:பரதம் தமிழர் கலையில்லைத்தானே.....மேலே தந்த கட்டுரை என்ன சொன்னது எண்டதைக் கவனிச்சனியளோ.....நாங்கள் இதைப்பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்த நாங்கள்...நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறியள்....ஆனால் அந்தக் கட்டுரையாளர்......????! எது உண்மை நாங்கள் கேள்விப்பட்டதா...அல்லது அந்தக் கட்டுரை இயம்புவதா......???!ஏடுகளிலையிருந்து.. எடுத்து.. எழுதினதுக்கும்.. இப்ப எழுதினதுக்கும்.. வித்தியாசம்.. தெரியாமல்.. கேள்வி..சுப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-15-2003 தாத்தா ஏடு என்ன சொல்லுது இது என்ன சொல்லு தெரிந்ததைச் சொல்லுங்கோவன்...அதுக்குப் பிறகு சொல்லுறம் கேள்வி சுப்பரோ சுப்பர்...எண்டு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-15-2003 kuruvikal Wrote:தாத்தா ஏடு என்ன சொல்லுது இது என்ன சொல்லு தெரிந்ததைச் சொல்லுங்கோவன்...அதுக்குப் பிறகு சொல்லுறம் கேள்வி சுப்பரோ சுப்பர்...எண்டு....!பிரித்தானிய.. நு}லகத்திலை.. ஏடுகளிலையிருந்த.. மொழிபெயர்க்கப்பட்ட.. ஆரம்பத்தப்.. புத்தகங்களிருக்கு.. கண்டி.. நு}லகத்திலையும்.. சிலது.. இருக்கு.. போய்ப்..படிச்சுப்பாருங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-15-2003 தாத்தா உந்தச் சுத்தல் தானே வேண்டாம் எண்டுறது...தெரிந்தா தெளிவா எழுதுங்கோ இல்லாட்டி பேசாமல் கம் எண்டு இருங்கோ...எங்களுக்கும் தெரியும் எங்கெங்க என்னென்ன கிடக்கெண்டது.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-15-2003 kuruvikal Wrote:தாத்தா உந்தச் சுத்தல் தானே வேண்டாம் எண்டுறது...தெரிந்தா தெளிவா எழுதுங்கோ இல்லாட்டி பேசாமல் கம் எண்டு இருங்கோ...எங்களுக்கும் தெரியும் எங்கெங்க என்னென்ன கிடக்கெண்டது.....!படிச்சுத்தான்.. பலதும்.. எழுதியிருக்கு.. தளத்து.. லிங்கும்.. குடுத்து.. படிச்சு.. விவாதிச்சு.. முடிஞ்சுது.. திரும்ப.. என்னத்துக்கு.. விருப்பமெண்டால்.. பரதநாட்டியம்.. சேச்.. செய்யுங்கோ.. கொட்டுண்ணும்.. ஒறிஜினல்.. சைற்றுகள்.. அதைப்..படிச்சாவது.. கொஞ்சமெண்டாலும்.. அறியுங்கோ.. புலம்பலிலக்கியத்தையும்.. பொராட்டத்தையும்.. மறந்து.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-15-2003 நாங்கள் கேட்டது சந்தேகம் அதுக்கு படிச்சதை வைத்து விளக்கம் எழுதத்தெரியாது புலம்புறதுதான் யார் ...புலம்பிலக்கியம் படைவர் அவரே....நம்ம தாத்ஸ்ஸே....! எங்களுக்குத் தெரிந்தது கூடத்தெரியாதது கேவலம்....! அதுக்க....! - Mathivathanan - 08-15-2003 kuruvikal Wrote:நாங்கள் கேட்டது சந்தேகம் அதுக்கு படிச்சதை வைத்து விளக்கம் எழுதத்தெரியாது புலம்புறதுதான் யார் ...புலம்பிலக்கியம் படைவர் அவரே....நம்ம தாத்ஸ்ஸே....! எங்களுக்குத் தெரிந்தது கூடத்தெரியாதது கேவலம்....! அதுக்க....!அடே.. அடே.. சும்மா.. புலம்பாதை.. பழைய.. களத்திலை.. உதெல்லாம்.. எழுதி.. முடிஞ்சுது.. ஒருக்கா.. பரத்தையர்.. எண்டுசொல்லுவியள்.. அதுகளைத்தான்.. தேடித்தேடி.. படிக்கிறியள்.. கொண்டுவந்து.. அடுக்குறியள்.. பிறகென்ன.. கதை.. அதியுயர்.. நுண்..கலை.. தான்.. பரதம்.. இராக.. தாள.. பாவம்.. இதன்.. சங்கமம்தான்.. பரதம்.. அதாவது.. வாய்ப்பாட்டு.. தாளவாத்தியம்.. இயல்.. இசை.. நாடகம்.. முதலானவற்றின்.. சங்கமம்.தான்.. பரதம்.. போய்ப்.. படியுங்கடா.. உந்த.. புலம்பல்.. ஒப்பாரி.. புராணங்களை.. விட்டிட்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 08-15-2003 <img src='http://www.thatstamil.com/image/ruku11.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images/rukminiarundale1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/specials/art-culture/image/rukku.jpg' border='0' alt='user posted image'> பரதநாட்டியம். இந்தியாவின் கலைப் பொக்கிஷம். தமிழர்களின் பெருமை. சமூகத்தின் கண்களில் ஒரு காலத்தில் வேறு மாதிரியாகப் பார்க்கப்பட்ட பரதம், பாரம்பரியச் சின்னமாக மாறியதை எப்படிக் கூறுவது என்று தெரியவில்லை. மக்களால் மாறுபட்ட பார்வையில் பார்க்கப்பட்ட பரதத்தை, மரபின் சின்னமாக மாற்றிய பெருமை சிலருக்கு உண்டு. அவர்களில் முதலில் வருபவர் ருக்மிணி தேவி அருண்டேல். அனைவருக்கும் அன்புள்ள அத்தையாக இருந்தவர். அப்படித்தான் அவரை அனைவரும் கூப்பிடுவர். 1904ல் பிறந்து 1986ல் மறைந்தவர் ருக்மிணி அருண்டேல்........... தொடர்ந்து வாசிக்க-- http://www.thatstamil.com/specials/art-cul...01/rukmini.html - Mathivathanan - 08-15-2003 நன்றி.. முல்லை.. ஆங்கில அறிவுள்ளவர்களுக்கு.. ஒரு.. தளம்.. http://www.geocities.com/Tokyo/Shrine/3155...55/bnatyam.html - kuruvikal - 08-15-2003 தாத்தா...யார் புலம்பியது என்பதை தாங்கள் தந்த இணைப்பில் போய் ஆங்கிலத்தை வரிக்குவரி உச்சரித்து வாசித்துப்பாருங்கள்....பழைய கதை வேண்டாம்....தற்போது போடப்பட்டதற்குத்தான் கதை இப்பொழுது நடக்கிறது....பழையதை இன்று பேசுவதென்றால்.... என்ன உங்கள் தந்தை காலத்தைப்பற்றி உங்கள் தந்தையிடமா பேசுவது..... உங்களிடம் தானே...அதே போல் இன்று போடப்பட்டதற்கு இங்கு இன்று தான் பேசவேண்டும்...அதுவும்...புதிய களத்தில்....! என்றாலும் இணைப்புக்கள் தந்ததற்கு நன்றிகள்...! The art form has definitely gone through lot of changes over the years. எங்களுக்கும் கற்றுத்தந்தவர்கள் சரியாகத்தான் கற்றுத்தந்துள்ளனர்.....! வாழ்க குருவே....! - Mathivathanan - 08-15-2003 kuruvikal Wrote:தாத்தா...யார் புலம்பியது என்பதை தாங்கள் தந்த இணைப்பில் போய் ஆங்கிலத்தை வரிக்குவரி உச்சரித்து வாசித்துப்பாருங்கள்....பழைய கதை வேண்டாம்....தற்போது போடப்பட்டதற்குத்தான் கதை இப்பொழுது நடக்கிறது....பழையதை இன்று பேசுவதென்றால்.... என்ன உங்கள் தந்தை காலத்தைப்பற்றி உங்கள் தந்தையிடமா பேசுவது..... உங்களிடம் தானே...அதே போல் இன்று போடப்பட்டதற்கு இங்கு இன்று தான் பேசவேண்டும்...அதுவும்...புதிய களத்தில்....!ஆண்டவனுக்கு..சேவைசெய்து.. அருள்பெற்று.. கற்ற..கலை.. ஆண்டவனுக்கு.. அர்ப்பணிக்கும்.. கலை.. அதுதான்.. தேவதாசி.. பெயர்.. உங்களுக்கு.. எப்படிப்.. படுகின்றதோ.. ஆண்டவனுக்குத்தான்.. வெளிச்சம்.. முக்கியமாக.. ரேப்றைக்போடர்.. பரதநாட்டியக்காரர்.. அதற்குள்.. அடங்கார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|