![]() |
|
நல்லு}ர் தேர்த்திருவிழா 2003 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நல்லு}ர் தேர்த்திருவிழா 2003 (/showthread.php?tid=8193) |
நல்லு}ர் தேர்த்திருவி - Mathivathanan - 08-26-2003 <img src='http://www.virakesari.lk/20030827/PICS/vd27p1.jpg' border='0' alt='user posted image'> நல்லு}ர்க் கந்தன் வடம்பிடிக்க கூடியிருக்கும் இறை நம்பிக்கையுள்ள மக்கள் வெள்ளம்.. - Paranee - 08-27-2003 நல்லதொரு படத்தை இணைத்த மதி தாத்தாவிற்கு நன்றி; நேரில் கண்டதுபோல் ஒரு தோற்றம் - Paranee - 08-27-2003 எனினும் இந்து மத கலாசார அமைச்சர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நேற்று முன்தினம் வாகனத்தடைபோடப்பட்ட நல்லுர்ர் வீதிகளில் அத்துமீறி நுழைந்ததாக நேற்றை உதயன் செய்தி குறிப்பிட்டிருந்தது - kuruvikal - 08-27-2003 நல்லூரில் வடம் பிடிப்பதில் இறைபக்தி மேலிடுகிறதாம்.....முருகனுக்கு அரோகரா....இழுபட்டு இடிபட்டு சண்டை பிடித்து....நிதானமிழந்து.....சங்கிலி அறுத்து.....பறிகொடுத்து.....கச்சான் கடலை வாங்கி மென்று கொண்டு...விசிலூதி.... காலுக்கால பம்பரம் விட்டு......ஒரு கையில் கமராவும் மறுகையில் வீடியோவும் வைத்து சாமி கும்பிட்டு...அதை முருகன் கேட்டு நின்று.....பொடி பெட்டை இடிபட்டு தள்ளுப்பட்டு உள்ள சேட்டைகள் எல்லாம் அரங்கேற...பக்திப்பரவசம் பெருகுதாம்.....! உண்மையைச் சொன்னா.... சின்னனில இருந்து நல்லூர் மண்மிதித்த புண்ணியத்தில சொன்னா... தேர் திருவிழாவுக்கு நாங்கள் ஒரு நாளும் சாமி கும்பிடப் போனதில்லை...சாதாரண நாளில வெள்ளி,புதன் அல்லது செவ்வாயில அதிகாலையில போய் நிதானமா மனதை அடக்கி தியானித்து தெரிந்த தேவாரங்கள் பாடி அமைதி நிறை சூழலில் ஆக்கள் முட்டுப்படாமல் கும்புடுறதால எவ்வளவோ மன நிம்மதி கிடைத்திருக்கு.... சின்னனில செய்ததுகள் அப்படியே இப்பவும் முருகனை கண்ணுக்க நிக்க வைக்குது....! இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மையான பக்தியை அமைதியை விரும்பிறவன் எண்டு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: ஆர் உண்மையான நாத்திகன் கடவுளை கும்புடுறதா வெளிவேசம் போடுறது நாத்திகமா அல்லது உண்மையா மனதுக்க எப்பவும் இறை சிந்தனையோட இருக்கிறவன் நாத்திகனா.....?! :roll: :wink: - Mathivathanan - 08-27-2003 நன்றி குருவிகாள்.. உங்கள் கருத்துத்தான் என்ன..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-27-2003 Karavai Paranee Wrote:நல்லதொரு படத்தை இணைத்த மதி தாத்தாவிற்கு நன்றி;நடந்தோ சைக்கிளிலோ போய் எடுத்த வீரகேசரி நிருபருக்கு நன்றி சொல்லுவம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: நல்லு}ர் தேர்த்திருவ - kuruvikal - 08-27-2003 [quote=Mathivathanan]<img src='http://www.virakesari.lk/20030827/PICS/vd27p1.jpg' border='0' alt='user posted image'> நல்லூர்க் கந்தன் வடம்பிடிக்க கூடியிருக்கும் இறை நம்பிக்கையுள்ள மக்கள் வெள்ளம் இதன் உண்மைத்தன்மை....???? இதுவாகத்தான் உள்ளது...! - kuruvikal - 08-27-2003 பக்திப்பரவசத்தின் வெளிப்பாடு ....இதையும் தான் கொஞ்சம் வாசித்துப்பாருங்களேன்....! இந்துக்கள் ஆலயம் தொழுவதில் இருந்து விளங்கா மொழியில் பூசை என்று ஏதோ உச்சரிப்பதுவரை தம்மையும் ஏமாற்றி இறை நம்பிக்கையையும் ஏமாற்று வித்தையாக்கி, உண்மையான இந்து மதக் கோட்பாடுகளை மலினப்படுத்தி வருகின்றனரோ என்றுதான் சிந்திக்கத்தோன்றுகிறது....! http://thatstamil.com/news/2003/08/27/kumbh.html :evil: :roll:
- Mathivathanan - 08-27-2003 இறைநம்பிக்கையுள்ளவன் வடம்பிடிக்க வரமாட்டான்.. அதுதான் உங்கள் உண்மைத்தன்மையோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-27-2003 குருவியண்ணை உதெல்லதம் கேட்டகக்கூடாது அவர்கள் ஏதோ பாசையில் சொல்லி வித்தை காட்டிப் பிழைக்கினம் உண்மை நேர்மை தர்மத்திற்கு பயப்படாதவன் இவர்களின் விளங்காப் பாசைக்கும் மக்களுக்கு விளக்கம்தரா விசித்திரச் செய்கைகளுக்கும் பயப்படுகிறான். கடவுளை எப்படி அடைய வேண்டும் என்று இவர்கள் சொல்லித்தர மாட்டார்கள்...சொல்லித்தந்தால் பிழைப்பு என்னாகிறது? - Mathivathanan - 08-27-2003 விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம்.. போகும் மக்கள்தான் அதை தீர்மானிப்பதே தவிர போகாமல் கத்தும் உம்மைப்போன்றவர்களல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 08-27-2003 Quote:உண்மை நேர்மை தர்மத்திற்கு பயப்படாதவன் இவர்களின் விளங்காப் பாசைக்கும் மக்களுக்கு விளக்கம்தரா விசித்திரச் செய்கைகளுக்கும் பயப்படுகிறான்போகிறான் :wink: - Mathivathanan - 08-27-2003 Kanani Wrote:குருவியண்ணை உதெல்லதம் கேட்டகக்கூடாதுசொல்லப்படவேண்டிய மொழியில் சொல்லுகின்றார்கள்.. அதை உங்களுக்குப் படித்தறிய விருப்பமில்லையென்று உண்மையைக்கூறுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 08-27-2003 ஏன் தாத்தா கடவுளைக் கும்பிடும் போதாவது உங்கடையாக்கள் எளிமையாக அமைதியாக ஒழுக்கத்துடன் நிதானமாக நின்று மனதை ஒர் நிலைப்படுத்தி கும்பிடட்டன் ஏன் அதை விட்டிட்டு இப்படி ஏறி விழுந்து காஞ்சிபுரம் முதல் உள்ள பட்டுக்கள் காட்டி நகைகள் அடுக்கி....கனடா முதல் சுவிஸ் வரை கதை பறைஞ்சு கலியாணம் முதல் பிள்ளப் பெத்தது வரை வம்பளந்து... வீடியோ கமராவும் கையுமா...இப்படி கும்பிடுங்கோ என்று எந்த இந்துமத வேதங்கள் அல்லது ஆகமங்கள் சொல்லி இருக்கு .....????!....... அதைவிட பூசைக்குப் போனால் ஐயர் ஆள் பாத்துத்தான் பூசை செய்வார் கொஞ்சம்.....நகை நட்டோட சென்றும்-நாத்த மருந்து அடிச்சுக் கொண்டு காரில போனால்...அல்லது உங்க ரவுனுக்க நல்ல கடை வச்சிருக்கிறவெரென்றால்...பூசையில முன்னுருமை....ஏன் அவைக்கு முருகன் முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கட்டளை போட்டவரே...அவரே குறத்திய அதுகும் தோட்டத்தில வச்சு லவ் பண்ணினவர் ஆண்டிக் கோலத்தில பழனியில அமர்ந்தவர் கடவுளே எளிமையை காட்டும் போது ...நாங்கள் கோயிலிலையாவது எளிமையாக அமைதியாக நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தும் வழி முறைகளைப் பின்பற்றி அமமைதியாக இறை நம்பிக்கைய முழுமையாக வளர்த்து ஆலயம் தொழுகிறோமா......?! எத்தனை பேர் செய்யினம்...செல்லாப்பாச் சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் நாவலர் பெருமானும் தந்த பூமியது...இப்போ எங்கே போனார்கள் அந்தச் சித்தர்கள்.....??????!!!!!!! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Kanani - 08-27-2003 தாத்தா நல்லுர்க்கந்தன் என்ன பிரெஞ்சில் பூசை செய் என்று கேட்டவரோ? யார் சொன்னது அதுதான் மந்திரம் சொல்லப்படவேண்டிய மொழி என்று? முருகனுக்கு என்ன சமஸ்கிருதம் மட்டுமா தெரியும்? அப்படி என்றால் இன்னொருவரின் கடவுளை நாம் எவ்வாறு வழிபட்டோம்? வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள்....ஆரியப் பிராமணர் வருகையும் சமஸ்கிருதம் இந்துத்துவ புகுத்தலும்?. எங்கள் தேவாலயத்தில் தமிழில்தான் பூசை நடக்குது..அதாவது தெரியுமா? - Mathivathanan - 08-27-2003 kuruvikal Wrote:ஏன் தாத்தா கடவுளைக் கும்பிடும் போதாவது உங்கடையாக்கள் எளிமையாக அமைதியாக ஒழுக்கத்துடன் நிதானமாக நின்று மனதை ஒர் நிலைப்படுத்தி கும்பிடட்டன் ஏன் அதை விட்டிட்டு இப்படி ஏறி விழுந்து காஞ்சிபுரம் முதல் உள்ள பட்டுக்கள் காட்டி நகைகள் அடுக்கி....கனடா முதல் சுவிஸ் வரை கதை பறைஞ்சு கலியாணம் முதல் பிள்ளப் பெத்தது வரை வம்பளந்து... வீடியோ கமராவும் கையுமா...இப்படி கும்பிடுங்கோ என்று எந்த இந்துமத வேதங்கள் அல்லது ஆகமங்கள் சொல்லி இருக்கு .....????!....... அதைவிட பூசைக்குப் போனால் ஐயர் ஆள் பாத்துத்தான் பூசை செய்வார் கொஞ்சம்.....நகை நட்டோட சென்றும்-நாத்த மருந்து அடிச்சுக் கொண்டு காரில போனால்...அல்லது உங்க ரவுனுக்க நல்ல கடை வச்சிருக்கிறவெரென்றால்...பூசையில முன்னுருமை....ஏன் அவைக்கு முருகன் முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கட்டளை போட்டவரே...அவரே குறத்திய அதுகும் தோட்டத்தில வச்சு லவ் பண்ணினவர் ஆண்டிக் கோலத்தில பழனியில அமர்ந்தவர் கடவுளே எளிமையை காட்டும் போது ...நாங்கள் கோயிலிலையாவது எளிமையாக அமைதியாக நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தும் வழி முறைகளைப் பின்பற்றி அமமைதியாக இறை நம்பிக்கைய முழுமையாக வளர்த்து ஆலயம் தொழுகிறோமா......?! எத்தனை பேர் செய்யினம்...செல்லாப்பாச் சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் நாவலர் பெருமானும் தந்த பூமியது...இப்போ எங்கே போனார்கள் அந்தச் சித்தர்கள்.....??????!!!!!!!ஏன்ராப்பா எழிமையாத்தானே வடம்பிடிக்க நிக்குதுகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-27-2003 திருத்தம் எழிமை = எளிமை - kuruvikal - 08-27-2003 பூஜை என்பது கடவுளுக்கல்ல...பக்தனுக்கே...நீங்கள் சொல்லும் ஆசீரிவாதங்கள் ஒரு பக்தனை கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வைக்கவும் கடவுளின் பெயரால் அவன் மன நிம்மதி அமைதி பெறவுமே பூஜைகள் அதைவிடுத்து விளங்கா மொழியில் பூஜை செய்வதால் என்ன பயன்......வேதங்கள் ஆகமங்கள் வட மொழியில் உள்ளதால் அவற்றை மொழி பெயர்த்து இந்து சமயத்தில் படிக்கின்றோம் தானே......அப்படி இருக்கும் போது ஏன் பூஜைகளை மட்டும் இன்னும் வட மொழியில் நடத்துகிறீர்கள்.....?!! அதனால்தான் என்னவோ சித்தர்களும் பெருமான்களும் தந்த கோவில்கள் இன்று களியாட்ட இடங்களாக உல்லாச பிரயாணத்தலங்களாக மாறிவருகின்றன.....????! இதை எந்த வேதமாவது ஆகமமாவது சொல்லி நிற்கிறதா.......????! வடமொழியில் பூசை செய்தால்தான் கடவுள் கருணை தருவார் என்றால் உலகில் இந்துக்கல்லாத இதனை கோடி மக்களும் எதனால் வாழ்கின்றனர்....???????!!!!!!!...உலகில் வேறு எந்த மதத்திலும் இப்படி செய்வதில்லை.....பூஜைகள் பக்தனை நெறிப்படுத்தவே அன்றி கோவில்களில் உச்சரித்து பணம் பெறவல்ல.....! அது இந்து மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் கூட.....! - Mathivathanan - 08-27-2003 சிவன் ஓதினதும் வேதம் சிவனுக்கு ஓதியதும் வேதம்.. சீரும் சிறப்புடன் வாழ்ந்த நம் முன்னோர்.. கூறியதும் வேதம்.. குலைத்தவருக்கு மாற்றம் தேவைப்படுகிறதோ.. முற்றாக அழிப்பதற்கு..? - kuruvikal - 08-27-2003 உங்களின் எளிமை என்பது சேட்டைக் கழற்றுவதில் என்றால் அது வெறும் வேசம்.....எளிமையென்பது கோவிலுக்கு வீட்டில் இருந்து வெளிக்கிடுவது முதல் மீண்டும் வீடு வந்து சேரும் வரை இருக்க வேண்டும்.....படத்தை வைத்து புலிப்பல் மற்றும் இதர நவ நாகரீக டயமன்,சிங்கப்பூர் செயின்களை காட்டுவது கொஞ்சம் கஸ்டமாக உள்ளது...யோகர் சுவாமிகளும் செல்லாப்பாச் சுவாமிகளும் நாவலரும் வாழ்ந்து காட்டிய எளிமை வேறு நீங்கள் வடம் பிடிக்கும் போது காட்டும் எளிமை வேறு தாத்தா......கம கம நாற்ற மருந்தும் சங்கிலியும் பட்டு வேட்டியும் சால்வையும் எளிமையோ.......?! வடம் பிடித்தலில் ஏன் ஒரு ஒழுங்கைப் பேண முடியாதோ.....நான்கு திக்குகளுக்கு ஆட்களை வகுத்து விட்டு ஒரு ஒழுங்கின் கீழ் போட்டி இன்றி சண்டை இன்றி அமைதியாக வடம் பிடிக்க வழி சமைக்க முடியாதோ.......?! அதற்கான மனப்பக்குவம் இல்லாதவர்களால் எப்படி இறைவனை பக்குவமாக வழிபட முடியும்....??????????!!!!!!!! :evil: :?: :!: :evil: |