![]() |
|
அரோகரா...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அரோகரா...! (/showthread.php?tid=8117) Pages:
1
2
|
அரோகரா...! - sharish - 09-20-2003 [size=18]<b>அரோகரா...!</b> லாச்சப்பல் வீதியில் நகர்ந்து கொண்டு வருகிறது தேர்...! முன்னாலே.. அண்ணன் கணேசன் செல்ல பின்னாலே... அவன் தம்பி கந்தவடிவேலன் தேரிலே பவனி...! வீதியெங்கும்... ஒரே ஆரவாரமும் அரோகராச் சத்தமும் அம்மன் கோவில் தாண்டி நகர்கிறது... வேலனுக்கு அரோகரா கணேசனுக்கு அரோகரா எப்போர்... அருகில் உள்ள அம்பாளுக்கு ஒன்றுமே சொல்லவில்லை...! அவள்தான் பாவம்...! அவளுக்கும் திருவிழா வருகிறது போகிறது ஒரு வருடம் கூட வீதிவழி தேரில் ஏற்றி கூட்டிச் சென்றதில்லை..! இந்த எண்ணம் இதுவரைக்கும் எவருக்கும் தோன்றவில்லைப் போலும்...! அம்பாள் வீதிவழி... ஆனைமுகனுக்கும் தம்பி ஆறுமுகனுக்கும் அரோகரா என்று சொல்லிக்கொண்டே ஆயிரக்கணக்கில்... தேங்காய்களை சிதறுதேங்காயாக உடைத்துக்கொண்டு பக்த்தி பரவசத்துடன் செல்கிறார்கள் பக்தர்கூட்டம்..! அப்போ.... இளைஞர்கள் கூட்டம்...? அவர்களுக்கு... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த வாலிபருக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான பெண்களுக்கு மட்டும்தான்...! அலையலையாய்த் திரண்டுவந்த கதிர்வீசும் கண்களைக்கொண்ட பெண்களுக்கும் பட்டுப்பாவாடைகட்டி மெல்ல நடந்துவரும் சின்ன இடை வண்ணச்சிட்டுக்களுக்கும் தான் இவர்களின் பாமாலைகளும் அரோகராச் சத்தமும் இப்போது... லாச்சப்பல் வீதி எல்லாம் அடைக்கப்பட்டு விட்டது..! அந்த வழியால் வாகனம் எதுவுமே... உள்ளே செல்லவோ அல்லது... வெளியே செல்லவோ அனுமதியில்லை....! ஏதோ... அவசரத்தில் அடைக்கப்பட்ட வீதியால் போக நினைத்த ஒரு பிரஞ்சுக்காரன் போகமுடியாததால்... அங்கு கடமையில் நின்ற காவலரை திட்டிக்கொண்டே செல்கிறான் அந்தப் பிரஞ்சுக்காரன் ஒரு துணிச்சல்க்காரன் அவன் காவலருக்குச் சொன்னான்.... வேலையில்லாமல் அவங்கள் வீதியில் நின்று ஆட நீங்கள் ஏன் பாதுகாப்பு கொடுத்து.... உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று...! அவன் பேசிய வார்த்தைகள் காதுவழிவந்து என் நெஞ்சில் குத்தி மனதிலே காயத்தோடு தேரடி வீதிக்கு ஓடிவர.... பட்டுவேட்டிகட்டி பக்த்திப்பரவசத்துடன் பாதணி கூட இல்லாமல் திருவிழா காணவந்த ஒரு வாலிபன் தன் நண்பனுக்குச் சொல்லுகின்றான்... மச்சான் அங்கபார்.... அந்தச் சரக்கு மணிச்சரக்கு விடாத ஓடிப்போய்ப் பிடி...!!! இப்போது நான் யாருக்கு அரோகரா சொல்லுவேன்...? அந்தப் பிரஞ்சுக்காரனுக்கா...? இந்த வாலிபனுக்கா...? அந்த வினாயகனுக்கா...? மனசு குழம்பிய நிலையில் நெஞ்சம் வெந்துபோயிலுக்க அதோ.... அந்த வீதியில்.... வெந்த மனசுக்காரரை குழிர்விக்க குழிர்ந்த மோர் கொடுக்கிறார்கள்...! ஆகா.... அமிர்தம் அருமையான தொண்டு தலைவணங்கலாம் அவன் செய்யும் செயலுக்கு...!! வெந்த மனதை மோர் விட்டு ஆத்திக்கொண்டு நிற்க வினாயகரும் அவன் சகோதரனும் சுற்றுலா முடிந்து ஆலயத்தினுள்ளே நுழைகிறார்கள் நுழைவாயிலில்... வைக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான தேங்காய்களை சிதறுதேங்காய்களாக அடித்து நொருக்கிவிட்டு நூல் வேட்டிக் கரையை சரிசெய்தபடி ஒரு பக்த்தன் இன்னும் ஒருவனுக்குச் சொல்லுகிறான் இந்தமுறை.... தேர்த்திருவிழா அந்தமாதிரி...! அவன் சொல்லுவதைக் கேட்ட எனது மனசு சொல்லியது... அடைத்தகுரலில்....அரோகரா......!!! த.சரீஷ் 17.09.2003 (பாரீஸ்) - Alai - 09-20-2003 சரீஸ் லாச்சப்பல் தேர்த்திருவிழாவை எம் கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி. Re: அரோகரா...! - Alai - 09-20-2003 [quote]sharish [b]அப்போ.... இளைஞர்கள் கூட்டம்...? அவர்களுக்கு... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த வாலிபருக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான பெண்களுக்கு மட்டும்தான்...! [b]சரீஸ் இது ஒன்றும் புதிய விடயமல்ல. ஊர்த் தோர்த்திருவிழாவும் இப்படித்தான் அனேகமான அரோகாராக்கள் அழகிய பெண்களுக்காகத்தான். - nalayiny - 09-20-2003 அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும். kuruvikal Wrote:பாதிக்கப்பட்ட அப்பாவி அமெரிக்கச் சகோதரர்கள் விரைந்து மீட்சி பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக...! [quote="Alai"][quote]sharish [b]அப்போ.... இளைஞர்கள் கூட்டம்...? அவர்களுக்கு... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த வாலிபருக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான பெண்களுக்கு மட்டும்தான்...! - nalayiny - 09-20-2003 அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை. nalayiny Wrote:அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும். [quote=Alai][quote]sharish [b]அப்போ.... இளைஞர்கள் கூட்டம்...? அவர்களுக்கு... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த வாலிபருக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான பெண்களுக்கு மட்டும்தான்...! - nalayiny - 09-20-2003 nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை. Alai Wrote:[quote=[b]sharish - Mathivathanan - 09-20-2003 [quote=Mathivathanan][quote=nalayiny]அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும்.[/quote][quote=Alai][quote]sharishModified By Mathy <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அரோகரா...! [/b][/color] [b] யுவதிகள் கூட்டம்...? அவர்களுக்கும்... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த யுவதிகளுக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான ஆண்களுக்குத்தான்...! - nalayiny - 09-20-2003 இவையும் இவையின் வழி நடத்தலும் . என்ன அரைகுறை விழுமியங்கள் காக்கவாக்கும் அகா அற்புதம் வருக்கால பயிரி;கள் . இன்னும் எங்காவது இணையம் தேடி பொறுக்கி..! வருக...!? மத வழிநடத்தல்இது தான். இதே உங்களுக்கு சொல்லி தந்தவை அம்மா அப்பா..!!? :twisted: :twisted: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> kuruvikal Wrote:ஏனக்கா....கராத்தேயும் யோகாவும் எண்டு றிஸ்க் எடுக்கிறியள்...ஒரு சாமிப்படத்தை வைத்து பஞ்சதோத்திரங்களையும் ஒரு ஐந்து நிமிடம் மனதை அடக்கி படிக்கக் கற்றுக்கொடுங்கோ அது போதும்...எங்கட ஆசிரியர்மார் பெற்றோர் அப்படித்தானே சொல்லித்தந்தவை....! அதுக்குப் பிறகுதான் நாங்கள் யோகாப்பயிற்சிக்குப் போனனாங்கள்.....! முதலில செய்ததுதான் பின்னையதற்கு பெரிதும் உதவினது...! இது அறியாப் பருவத்தில கராத்தே கற்று பிறகு அறிந்த பருவம் வர கள்ளக்காட்டுப்பறிக்க வழி சொல்லுறியள் போலவும் கிடக்கு....!எதுக்கும் தீர யோசித்து கராத்தேயை அறிந்த பருவத்தில் கற்கிறது நல்லம் போலக் கிடக்கு....! nalayiny Wrote:nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை. - Mathivathanan - 09-20-2003 nalayiny Wrote:அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன்.படு ரென்ஷனிலை இருக்கிறியள்.. என்ன நடந்தது.. :?: :?: :?: பெடியன் வேலைக்குப்போட்டான். வந்து எழுதட்டும்.. சந்தர்ப்பம் கொடுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-20-2003 [quote=Mathivathanan][quote=nalayiny]அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும்.[/quote][quote=Alai][quote]sharishModified By Mathy <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->அரோகரா...! [/b][/color] [b] யுவதிகள் கூட்டம்...? அவர்களுக்கும்... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! இதைவிட வேறு என்ன சந்தோஷம் இந்த யுவதிகளுக்கு...? இவர்களின் அரோகரா எல்லாம் ஆண்டவனுக்கு இல்லை அழகான ஆண்களுக்குத்தான்...!அரோகரா இரண்டுபக்கமும்தான்.. ஒருபக்கம் அமசடக்கு மறுபக்கம்..? ..? ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/quote] - kuruvikal - 09-20-2003 <img src='http://www.thatstamil.com/images13/cinema/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'> இதில எங்க அரைகுறை நிர்வாணம் தெரியுது....நாங்கள் அம்புலிமாமாக் காலத்தில இருந்து அரசிகளின் படங்கள் கடவுள் படங்கள்...கோயிலில சிற்பங்கள் இப்படிப்பலதையும் இப்படி உடுப்பிலதானே கண்டனாங்கள்.....அப்ப அதையெல்லாம் எங்கட அப்பா அம்மா ...டேய் இது நிர்வாணப்படம் பாக்காதே எண்டு சொல்லித்தரேல்ல.....! இப்ப நீங்கள் புதுசாச் சொல்லுறியள்...ஆனா இப்ப விஞ்ஞானம் படிக்க வெளிக்கிட்டு எல்லாம் அங்கு வேறு ஆணி வேறாப்படிச்சாப் பிறகு...எங்களுக்கு எது நிர்வாணம் எண்டதே தெரியல்ல.....! ஆனா அப்படித்தான் சமூகம் இருக்கும் என்று நாம் கருதவில்லை...அப்படி இருக்கவும் முடியாது...!....ஆனால் நாங்கள் போட்ட படத்தில் எந்த நிர்வாணக் கோலமும் கிடையாது....பெண்ணை ...சகோதரிகளை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது....! - Alai - 09-20-2003 Quote:kuruvikal :twisted: <!--emo& [quote]kuruvikal சேலைக்கு இல்லை ஒரு இணை மங்கையவள் வதனம் வென்று சேலை தன் அழகு காட்டுது ஆம் தமிழர் நாகரிக அழகு காட்டுது [quote]kuruvikal இதில எங்க அரைகுறை நிர்வாணம் தெரியுது....நாங்கள் அம்புலிமாமாக் காலத்தில இருந்து அரசிகளின் படங்கள் கடவுள் படங்கள்...கோயிலில சிற்பங்கள் இப்படிப்பலதையும் இப்படி உடுப்பிலதானே கண்டனாங்கள்.....அப்ப அதையெல்லாம் எங்கட அப்பா அம்மா ...டேய் இது நிர்வாணப்படம் பாக்காதே எண்டு சொல்லித்தரேல்ல.....! இப்ப நீங்கள் புதுசாச் சொல்லுறியள்...ஆனா இப்ப விஞ்ஞானம் படிக்க வெளிக்கிட்டு எல்லாம் அங்கு வேறு ஆணி வேறாப்படிச்சாப் பிறகு...எங்களுக்கு எது நிர்வாணம் எண்டதே தெரியல்ல.....! ஆனா அப்படித்தான் சமூகம் இருக்கும் என்று நாம் கருதவில்லை...அப்படி இருக்கவும் முடியாது...!....ஆனால் நாங்கள் போட்ட படத்தில் எந்த நிர்வாணக் கோலமும் கிடையாது....பெண்ணை ...சகோதரிகளை கேவலப்படுத்தும் எண்ணமும் கிடையாது.... - AJeevan - 09-20-2003 <img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/sinegithi/sep03/3.jpg' border='0' alt='user posted image'> என்று, பெண்களாக உலகத்தை உருவாக்குகின்ற திறமை வருகின்றதோ, அந்த நாளில்தான் இந்த உலகத்தை வளமை உள்ளதாக மாற்ற முடியும் என்பது என்னுடைய எண்ணம். <img src='http://www.kumudam.com/mutram/01062003/mut2.jpg' border='0' alt='user posted image'> உலகத்தில் உள்ள பாதி மக்கள், அதாவது, பெண்கள் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டால், மீதியுள்ள மக்களால் உலகத்தை வளமாக ஆக்கமுடியாது. பெண்களும் உலகை சிருஷ்டி செய்தலில் ஓரளவு ஈடுபட வேண்டும். ஆனால், அப்படி மட்டும் பெண்கள் தீர்மானித்துவிட்டால், ஆண்களின் அகம்பாவத்தில் பலமான அடிபடுகிறது. ஆண்கள் எப்பொழுதும் தன் மனைவி தன்னையே நம்பி இருக்கவேண்டுமென்று எண்ணுகின்றார்கள். இந்த எண்ணத்தில் மிகப்பெரிய இரகசியம் அடங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப்போனால், ‘யாரை அடிமையாக்க வேண்டுமோ, அவர்களுக்கு பண விஷயத்தில் சுதந்திரம் கொடுக்கக்கூடாது’ என்பது அடிப்படை விஷயம். பெண்ணை அடிமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எல்லா விஷயத்திலும் கணவனை நம்பியே இருக்கவேண்டும். சேலை வேண்டுமென்றால் அவள் கணவனிடம் கேட்கவேண்டும். உணவு வேண்டுமென்றாலும், கணவனிடம் கேட்கவேண்டும். வாழ்க்கை வாழ வேண்டுமானால் அவள் கணவனைத் தான் நாடவேண்டும். அதனால்தான் ஆண் தன் மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. அதுவுமின்றி, மற்ற ஆண்களும் அவனிடம் ‘நீ உன் மனைவியை வேலை செய்ய சொல்கின்றாய்’ என்று ஏதோ பெரிய அவமானப்பட வேண்டிய விஷயம் போலவும், பெண்கள் வேலைக்குப் போவது தவறான செயல் போலவும் பேசுவார்கள். தன் மனைவி வேலைக்குப் போகின்றாள் என்றதும், அவனின் அகம்பாவத்தின் மீது பலமான அடிபட்டு விடுகிறது. இதன் அர்த்தம் என்ன? அவன் தனது மனைவியை, தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் பெண்ணோ, தன்னம்பிக்கையோடு இருக்கக் கற்றுக் கொள்கின்றான். பெண்களை ஆண்கள், ஒரு கொடியைப் போலவே எதிர்பார்க்கின்றார்கள். நீங்களும் உங்கள் பாடங்களில் ஆண் மரம் மாதிரியும், பெண்கள் அந்த மரத்தின் மேல் ஆண்களின் உதவியுடன் படர்ந்திருக்கின்ற கொடியைப் போலவும் உள்ள கவிதைகளைப் படித்திருப்பீர்கள். அவர்களால் நேராக நிற்க முடிவதில்லை. காரணம், அவர்கள் மரம் கிடையாது. இவை மிகவும் பொய்யான விஷயம். மிகமிகத் தவறான விஷயம். பெண்களால் கண்டிப்பாக மரமாக முடியும். மேலும், எந்தப் பெண்கள் கொடியைப் போல் ஆண்களின் ஆதரவால் நிற்கின்றார்களோ, அவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கமாட்டார்கள். காரணம், கொடிகள் எப்படி சுதந்திரமடைய முடியும்? பெண்களும் தன் முயற்சியால் மரமாக வேண்டும். இரண்டு மரங்களுக்கிடையே நட்பு ஏற்படாது என்று இதற்கு அர்த்தமில்லை. நட்பு ஏற்படுவதற்காக வேண்டி யாரும் கொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்தப் பெண், ஆணை மிகவும் சார்ந்து இருக்கின்றாளோ, அவள் தன் கணவன்மீது அதிகமாகக் கோபம் கொள்வாள். கண்டிப்பாகக் கொள்ளத்தான் செய்வாள் என்பதனை உணர்ந்திருக்கின்றேன். நாம் யாரை சார்ந்து இருக்கின்றோமோ, அவர்களால் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியடைய மாட்டோம். யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோமோ, அவர்கள் மீது கோபமாகத்தான் இருப்போம். உண்மையில் நாம் யாருக்கு அடிமையாக இருக்கின்றோமோ, அவர்களுக்கு நாம் நண்பர்களாக முடியாது. நட்பாக இருக்க வேண்டுமென்றால், சமமாக நிற்க வேண்டியது மிகவும் அவசியம். அனைத்துப் பெண்களும் ஆண்களின் மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கோபம் பல விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். பெண்கள் சுதந்திரமாகாததால், அவர்களுக்கும், ஆண்களுக்குமிடையே அன்பு வளர்வது மிகவும் சிரமமாகிவிடுகிறது. யாரையும் நாம் நண்பனாக்க வேண்டுமானால், அவனைச் சுதந்திரமடையச் செய்தல் மிகவும் அவசியமாகும். பெண்களை முழுமையாகச் சுதந்திரமடையச் செய்தல், பொருளாதார நிலையிலும், சுதந்திரமடையச் செய்தல் ஆண்களுக்கும் நல்லது. மேலும், பெண்களும் முழுமையாகச் சுதந்திரம் அடைவது அவர்களுக்கும் நன்மைதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக எந்த நாளில் சந்திக்கின்றார்களோ, அன்றுதான் அவர்களின் நடுவே தோழமையான புதிய அத்தியாயம் ஆரம்பமாகும். ஆனால், இதற்காக ஆண்கள் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதால், இந்த விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. பெண்கள்தான் இந்த விஷயங்களுக்காகக் கேள்விகள் கேட்க வேண்டும். நன்றி: <b>சிநேகிதி</b> செப்டம்பர் 2003 Re: அரோகரா...! - Mathivathanan - 09-20-2003 [quote=Alai][b]சரீஸ் இது ஒன்றும் புதிய விடயமல்ல. ஊர்த் தோர்த்திருவிழாவும் இப்படித்தான் அனேகமான அரோகாராக்கள் அழகிய பெண்களுக்காகத்தான். [b]உண்மைதான் அலை... இது ஒன்றும் புதிய விடயமல்ல.. 18 மாதங்களுக்குமுன்னம் ஊரில் ரியூட்டறிக்குச் சென்ற 16 வயதுப்பெண்கள் பலர்(45) ஒரேநேரத்தில் மழலைசொற்கேட்கவே ஆசைப்பட்டார்கள். அதோடு இதை ஒப்பிடும்போது.. லாச்சப்பல் எவ்வளவோ முன்னேற்றம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: அரோகரா...! - Mathivathanan - 09-20-2003 Mathivathanan Wrote:[quote=Alai][b]சரீஸ் Re: அரோகரா...! - Mullai - 09-20-2003 [quote]sharish[/color] லாச்சப்பல் வீதியில் நகர்ந்து கொண்டு வருகிறது தேர்...! முன்னாலே.. அண்ணன் கணேசன் செல்ல பின்னாலே... அவன் தம்பி கந்தவடிவேலன் தேரிலே பவனி...! அந்தக் காலத்தில் கார் இல்லை. கடவுள் தேரில்தான் பவனி வந்தார். இப்பவும் அப்படித்தானா? எப்பதான் அவரை காரிலே வைத்து பவனி வரப் போகிறார்களோ? - Mathivathanan - 09-20-2003 Quote:Mathivathanan[/color]சரீஸ் அங்கு பெண்ணியம் வளர்ந்திருக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-20-2003 நாங்கள் நேரத்துக்கு நேரம் கதை மாத்துவம். என சொல்லாமல் சொல்லுமுந்த குருவி. அலை மாமி நீங்கள் என்ன இதெல்லாம் புரியாமல். நல்லொரு மத்தா தேடுறன். எல்லாத்தையும் பகுத்து தொகுத்து ஆராய்வம் எண்டா நல்ல மத்தா கிடைக்குதில்லையாம். quote="Alai"] Quote:kuruvikal :twisted: <!--emo& [quote]kuruvikal சேலைக்கு இல்லை ஒரு இணை மங்கையவள் வதனம் வென்று சேலை தன் அழகு காட்டுது ஆம் தமிழர் நாகரிக அழகு காட்டுது [quote="[b]kuruvikal - Mathivathanan - 09-20-2003 nalayiny Wrote:நாங்கள் நேரத்துக்கு நேரம் கதை மாத்துவம். என சொல்லாமல் சொல்லுமுந்த குருவி.மத்துதேடத்தெடங்கீட்டியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-20-2003 எனக்கு மாமி பிள்ளையளுக்கு மருமக்களை எப்படி தரமுடியும்.வயது முதிர்ந்தவராக இருந்து கொண்டும்; முறை பாக்க தெரியாமல் இருக்கிறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|