![]() |
|
ஈரநிலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஈரநிலம் (/showthread.php?tid=8109) |
ஈரநிலம் - Paranee - 09-22-2003 வணக்கம் நேற்று பாரதிராஐhவின் தயாரிப்பில் உருவான ஈரநிலம் திரைப்படம் பார்க்கமுடிந்தது. திரைக்கதை காட்சியமைப்பு எல்லாம் மண்வாசனையை அப்படியே நுகரவைக்கின்றன. அருமையானதொரு திரைப்படம். சில இடங்களில் முரண் இருந்தாலும். ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு இருந்தது. வாழ்த்துக்கள் பாரதிராஐh பாடல்கள் அப்படியே கண்களை கண்ணீரால் நிறைக்கின்றது. மண்நேசத்தால்......... - yarl - 09-22-2003 விகடன் விமர்சனம் வாசித்தீர்களா? அண்ணன் தங்கையின் ஆடையை இழுத்து அலங்கோலப்படுத்தும் புதிய காட்சி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறாராமே... - kuruvikal - 09-22-2003 எங்கே போகுது தமிழ் சினிமாக்கதை.....?! காசிலா....கருத்திலா....பயணிக்குது....! - Paranee - 09-22-2003 அப்படியா ? நல்லதாகிவிட்டது. எனக்கு கிடைத்த சிடியில் தணிக்கை பாய்ந்திருக்கவேண்டும். குறிப்பிடும்படியான கவர்ச்சிகளோ முக்கியமான சில பாடல்களோ காணப்படவில்லை. அப்படியாயின் முழுவதும் உள்ளதாக ஒன்ற எடுத்துப்பார்க்கவேண்டும். பாரதிராஐhவின் படத்தில் அப்படியான காட்சிமைப்பு வருவதாயின் அது கதையுடன் தொடர்புடையாகதாகத்தான் இருக்கும். அது அங்கு அவசியமாகவும் இருந்திருக்கலாம். கிராமத்து கதையல்லவா ? முரடர்கள் மூர்க்கர்கள் கட்டாயம் இருப்பார்கள். தந்தை மகள் உறவே கேவலமாக மாறிவரும் இந்திய கிராமங்களின் பிண்ணனியில் எடுக்கப்பட்ட கதை என்பதால் அதாவத கிராமத்து மணம் கமழ்வதால் அதுவும் ஏற்புடையதுதான் தகவலிற்கு நன்றி யாழ் அண்ணா யாழ்/yarl Wrote:விகடன் விமர்சனம் வாசித்தீர்களா? - Paranee - 09-23-2003 யாழ் அண்ணா குறிப்பிட்டதின் பின் அந்த படத்தை மீண்டும் தணிக்கை இல்லாததாக எடுத்துப்பார்த்தேன். பாடல்கள் சில நான் முதல் பார்த்தில் தணிக்கையாகி இருந்தன. காட்சிகள் உட்பட. நீங்கள் குறிப்பிட்ட காட்சி அதில் பொருத்தமாகத்தான் இருக்கின்றது. அண்ணன் தங்கையின் ஆடையை பிடித்து இழுக்கின்றான் என்பதை விட ஒரு பணவெறி பிடித்த மிருகம் சகோரா பாசம் அன்பு அறியாத மிருகம். தாயைகூட காலாலும் கையாலும் எட்டி உதை;க்கும் மிருகம் இழுத்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்த காட்சி மிக மிக பொருத்தமாக இருந்தது. அந்த நடிகனின் நடிப்பிற்கு அது கட்டாயம் அவசியமானதாகவும் இருக்கின்றுது. அவனை எவ்வளவு கொடூரன் என்று காட்டியிருக்கின்றார் என்பதற்கு அந்த காட்சி பொருத்தம். அது தவறு என்று சொல்லமுடியாது. இதைவிட மோசமான காட்சிகள் சினிமாவில் வந்துவிட்டன. இதையா தவறு என்கின்றார்கள். - AJeevan - 09-23-2003 தமிழில் வயது வந்தவர்களுக்கு மட்டும் பார்க்க அனுமதி என்ற திரைப்பட தணிக்கைச் சான்றிதழுடன் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் <b>மர்மயோகி</b>. <img src='http://education.vsnl.com/mgr/mgr201.jpg' border='0' alt='user posted image'> <b>மக்கள் திலகம் MGR</b> நடித்து டி.யோகானந்த் இயக்கிய இந்தப் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. இது செக்சுக்காக அல்ல பயங்கர திகிலுாட்டும் காட்சிகளுக்காக. தகவல்: முத்தாரம் (18.07.2003) - kuruvikal - 09-23-2003 Karavai Paranee Wrote:யாழ் அண்ணா குறிப்பிட்டதின் பின் அந்த படத்தை மீண்டும் தணிக்கை இல்லாததாக எடுத்துப்பார்த்தேன். பாடல்கள் சில நான் முதல் பார்த்தில் தணிக்கையாகி இருந்தன. காட்சிகள் உட்பட. இடியமீன் இருந்தார் என்பதற்காக இன்னும் இடியமீன்களை உருவாக்கவா வேண்டும்....?! குற்றவாளி இருக்கின்றான் என்பதற்காக இன்னும் குற்றவாளிகளை உருவாக்கவா வேண்டும்...சீர்த்திருத்தத்திற்காக காட்சிகளைப் புகுத்துதல் வேறு...வழமைக்கு மாறான சமூகத்தில் மிக அரிதான சம்பவங்களிற்கான புதிய காட்சிகளை புகுத்தல் நல்லதுதானா...! அது வன்முறைக்கான புதிய வடிவத்தைக் கற்றுக் கொடுக்காதா.....?! இது போய்ஸ் போன்றதல்ல...அது உண்மையாக சமூகத்தில் பெரும்பாலும் இளவட்டங்கள் மத்தியில் பருவவயதில் வரும் சந்தேகங்களுக்கான.... மாற்றங்களுக்கான தேடலால் வரும் விளைவுகளைச் சொல்கிறது என்று எடுத்துக் கொண்டாலும்...இவை ஏன்....?! :evil: :!:
- yarl - 09-23-2003 AJeevan Wrote:தமிழில் வயது வந்தவர்களுக்கு மட்டும் பார்க்க அனுமதி என்ற திரைப்பட தணிக்கைச் சான்றிதழுடன் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் <b>மர்மயோகி</b>. இந்தப்படத்தில் இனனொரு விசேடம் பின்னர் பல படங்களில் வில்லனாகவந்து தனிமுத்திரை பதித்த எம்.என்.நம்பியார் இதில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். |