Yarl Forum
பாலியல் சம்பந்தமான கெளரவ பெண் கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பாலியல் சம்பந்தமான கெளரவ பெண் கொலை (/showthread.php?tid=8051)



பாலியல் சம்பந்தமான கெ - AJeevan - 10-02-2003

<span style='font-size:25pt;line-height:100%'>பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை</span>
<img src='http://www.frauenheilkunde-praxis.de/templates/Care/img/669999/bild3.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கின் குர்திஸ் இனத்தின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த அப்துல்லா யொன்னெஸ்
10 வருடங்களுக்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனும் பயத்தினால் நாட்டை
விட்டு வெளியேறி லண்டணுக்கு வந்தார்.அவரது அரசியல் தங்சக் கோரிக்கை லண்டனில் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புதியதொரு வாழ்கையைத் தொடங்கினார்.


காலப் போக்கில் தனது குழந்தைகள் குர்திய நாட்டு இஸ்லாமிய கலாசாரத்தை விட்டு ஐரோப்பி கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கிதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தமது குழந்தைகளை கண்டித்தது மட்டுமல்லாமல், அவர்களை ஈவிரக்கமின்றி தண்டித்தும் இருக்கிறார்.

திடீரென ஒரு நாள் எவரும் எதிர்பாராத விதத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டுக் காணப்பட்ட அப்துல்லாவின் மகளான 16 வயது கெசு யொன்னசை அல்கொய்தா தீவிரவாதிகள் வீட்டினுள் நுழைந்து தாக்கி தன் மகளை கொலை செய்து விட்டு
சென்று விட்டதாக அப்துல்லா போலீசிடம் புகார் கொடுத்தார்.


ஆனால் நீதிமன்றத்தில் புதியதொரு தகவல் ெவளிப்பட்டப்பட்டது.

அது
16 வயது கேசு இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதமொன்று போலீசாரிடம் சிக்கி அது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதுதான்.
<b>
அக் கடிதம்:-</b>


<span style='color:green'>
இனி வணக்கம் அப்பா, இதுவரை உங்களை கஸ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன் அப்பா.
அப்பா நீங்கள் விரும்பி விதத்திலான மகளாக வளர என்னால் முடியாமல் போனதையிட்டு மிகு வருத்தமாக இருக்கிறது.
இருந்தாலும் அப்பாவுக்கு விருப்பமில்லாதவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறதே.
ஆனாலும் அப்பாவுக்கு வயசானாலும் உங்கள் கை-கால்களின் வலு இன்னும் இளமையாகவே இருக்கிறது. நான் உங்கள் கை- கால்களின் பலத்தை காட்டக் கிடைத்த ஒரு பொருளாகத்தான் என்னை நான் நினைக்க வேண்டியிருக்கிறது.
மிக அருமை. நான் எங்கே போகப் போகிறேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னைத் தேடாதீர்கள் அப்பா.</span>

என்று
அக்கடித்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற கெசு முயற்ச்சி செய்தாலும் அது நிறைவேறவேயில்லை.

அவள் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவ இளைஞனுடன் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பு காரணமாக அவளது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டும் கழுத்து வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டது குடும்ப கௌரவமும் கலாச்சாரமும் காப்பாற்ற பட வேண்டுமென்ற காரணத்தால்.

இக் கொலையை விசாரித்த நீதிமன்றம் கெசுவின் தந்தையான அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.
<span style='color:red'>

தமது கௌரத்தை காப்பாற்ற நடத்தப்படும் கொலைகள் தொடர்பாக : குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது.

ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள்.

ஓரு பெண் தன் குடும்ப கௌரவம் -மதம் - கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை மீறினால் அவர்களது குடும்ப கௌரவத்தை இழிவு படுத்துவதாக எண்ணுகிறர்கள். இப்படியாக தினம் தோறும் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 13 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது பெண் உரிமைக்கான லண்டன் மனித நேய அமைப்பு.

ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது.

உலகத்தில் வாழும் இப்படியான அல்லலுக்கு தினந்தோறும் சிக்கிக் கொள்ளும் 5000 பேருக்கு இளைக்கப் படும் கொடுமைகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வாங்கிக் கொடுக்கவோ முடியாமலிருப்பது வருத்தத்துக்குரியது என்று கூறுகிறது இவ் அமைப்பு.

இப்படியான கொலைகள் எந்த சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று லண்டனின் தலைமை இஸ்லாமிய அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனாலும் இவை கிழக்காசியாவிலும் அரபு நாடுகளிலும் மிகக் கடுமையாக இருக்கிறது.
பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இவை இன்றும் நடை முறையில் இருக்கிறது. இருப்பினும் இவை இங்கே சட்டத்துக்கு புறம்பானதேயாகும். யோர்தானின் சில பகுதிகளிலும், சிரியாவிலும் இந்நிலையை நேரடியாகவே காண முடியும். இந் நாடுகளில் நீதிக்கு புறம்பானதாகவும் இல்லை ,ஏற்புடையதாகவும் இல்லை. இங்கே இவற்றை மாற்றவோ எதிர்க்கவோ ஆட்சியாளர்கள் யோசிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.

கொலை செய்யப் பட்ட கெசுவை கொலை செய்த அவளது தந்தைக்கு வேறு சில குர்திஸ் இனத்தவர்களது உதவி கிடைத்திருப்பதான தகவல்கள் கிடைத்ததையடுத்து லண்டன் போலீசார் தொடர் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுவதாகக் கூறும் லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள் என்று தனது விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்.</span>

அடுத்த வாரம் லண்டன்-சுவிஸ் பெண்கள் அமைப்பு தரும் இலங்கை பெண்கள் தொடர்பான கொலைகள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட இருககிறது.


- kuruvikal - 10-02-2003

ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது......


தமது கலாசாரத்தை பாதுகாப்பதென்பது ஒரு சமூகத்தின் கடமையே தவிர ஆணினது மட்டும் அல்ல...இஸ்லாமிய சமூகம் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம்...அங்கு நடத்தப்படும் குற்றங்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த ஆண்கள் பொறுப்பேற்க முடியாது....! அது மட்டுமன்றி இது ஒரு கிறிமினல் குற்றம்....அதற்கான காரணங்களில் கலாசாரத்தை விலகி நடந்தது என்பது ஒன்று...கலாசாரத்தை விலகி நடந்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்காதது தனிநபரின் குறையே அன்றி முழு சமூகத்து ஆணினதும் அல்ல...தனிமனித இயலாமைகளினதும் பலவீனங்களினதும் கொடூரங்களினதும் வெளிப்பாடுகள் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தை குறை கூறப்பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது....! அது ஆண்களின் அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் செயலும் கூட....! சொந்தப் பிள்ளையையே கொல்லும் தாய்மாரும் ஐரோப்பிய சமூகத்துள்ளும் உள்ளனர்... தினந்தோறும் அபோசன் மூலம் பெண்களால் கொன்றொழிக்கப்படும் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காப்பது யார்...அவர்களுக்காக குரல் தருபவர்கள் யார்....?! அபோசன் இன்று அளவுக்கு மீறி நடக்க வாய்ப்பளித்து என்ன?!....அங்கெல்லாம் ஏன் பெண் அமைப்புக்கள் பெண்களை... சமூகத்தை விழிப்புணர்வு செய்யாமல் மெளனம் காக்கின்றன...! மனித உருவில் ஒருவர் வெளிவந்த பின் கொல்லப்பட்டால் கொலை...கருவாக வளரும் குழந்தை அழிக்கப்படால் அது கொலையல்லவோ....!.... அதற்காக ஒட்டு மொத்த பெண்களையும் நாம் குறை கூறி தீர்வு தேடினால் நடப்பது என்ன...?!

தனிமனித பலவீனங்களைக் களையும் நடவடிக்கையை விட்டுவிட்டு ஆண்கள் மீது பழி போட்டுக் காலம் கடத்துதல் குற்றங்கள் பல்கிப்பெருகவே வழி சமைக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:


- AJeevan - 10-02-2003

தமது குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது என்பதையும், 16 வயதேயுடைய அக்குழந்தை எவ்வளவு அடி-உதைகளைத் தாங்கியிருக்கிறது. கொடுரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறது என்ற வேதனைதான் பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை பற்றிக் கேள்விப்பட்ட போது என்னுள் ஏற்பட்டது.

ஆனால் இதயமே இல்லாத மனிதர்கள் தமது வெறித்தனத்தை, மிருகத்தனமாக எழுத்துகளில் வடித்திருக்கிறரர்கள்.

?????????????????????????????


- kuruvikal - 10-02-2003

அஜீவன் அண்ணா உங்கள் கருத்தும் கூட இது விடயத்தில் பக்கச்சார்ப்பானதாகவே படுகிறது....BBC சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பிய ஆசிய நாடகம் ஒன்றில் ஒரு பாகிஸ்தானிய இளைஞன் வேலைத்தளம் ஒன்றில் ஆங்கிலேயப் பெண்மணியால் காதலிக்கப்படுவதும் அதனால் அவன் வீட்டிலிருந்தே துன்புறுத்தப்பட்டு வெளியேறுவதும்...பின் காதல் முறிவதும் என ஒளிபரப்பினர்....!அந்த நாடகத்தில் அவ்விளைஞனின் காதலை ஏற்க மறுத்து அவனது தந்தையை அவனுக்கு எதிராகத் தூண்டிவிடுவது அவனது பாட்டியும் பாட்டாவும்... அது நிஜத்தால் கலந்து பிறந்ததாகவே எமக்குப்படுகிறது....! நீங்கள் குறிப்பிட்டதும் அவ்வகையான ஒன்றே ஆனால் அதற்குள் ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....! பெண் என்று பார்ப்பதைவிட மனிதன் என்ற வகையில் ஏன் பார்வையை மாற்ற மறுக்கிறீர்கள்...பெண் பெண்ணாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பதே அவளுக்கும் மனித சமூகத்திற்கும் சிறந்தது...அப்போதுதான் அவளும் மனிதனுக்கே உரித்தான உரிமைகளை ஆணுடன் சம அளவில் பங்கிட முடியும் பெண்ணை மனிதனில் விசேடித்தோ அல்லது தாழ்மையானதாகவோ காட்டுவதுதான் சமூகத்தில் பெண்கள் தொடர்பான பார்வைகள் வேறுபடக் காரணமாகிறது...அது மட்டுமன்றி பொதுவான மனித சமூகப் பிரச்சனைகளும் பெண் என்பதற்காய் விசேடித்துப் பார்க்கப்படுவது அதே பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள ஆணைப் பாதிப்படையவும் செய்கிறது என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்....??????????!
:evil: :twisted: :evil: Idea :evil:


- Mathivathanan - 10-02-2003

குருவிகாள்.. அந்தக் குறிப்பிட்ட கேடிஸ் இனத்தவர் அவரது நாட்டு சட்டதிட்டங்களை பிரித்தானியாவில் பயன்படுத்திதால்தான் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதேகுற்றம் அங்கு நடந்திருந்தால் பொரும்பாலும் விடுதலைசெய்யப்பட்டிருப்பார் என்பது எனது ஊகம். சரி பிழை அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களைப்பொறுத்தது. அங்கு மாத்திரமல்ல இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் அவர் விடுவிக்கப்பட்டிருப்பார். அவர்களது ஜனநாயக முறையை ஆதரிக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய தீர்ப்பும்கூட..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanani - 10-02-2003

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.....
கொலை செய்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது
ஒரு குழந்தையின் நடத்தையை அது வளர்ந்த சுற்றுப்புறச் சூழலும் பெற்றோரின் வளர்ப்பு முறையுமே தீர்மானிக்கிறது.

வெளிநாட்டுச் சூழலில் வளரும் ஒரு குழந்தையை பெற்றோர் தகுந்தமுறையில் வளர்த்தாலன்றி அது பெற்றோரின் கலாசாரத்தைப் பின்பற்றும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறானது...
பிள்ளையை பெற்றுவிட்டு அதற்கு தமது கலாசாரத்தின் பெறுமதிகளையும் சமயத்தின் வலிமையையும் நன்கே ஊட்டமறந்து வேலை காசு எனப் பெற்றோர் திரிந்ததால்தான் இத்தகைய நிகழ்வுகளை நாம் காணக்கூடியதாகவுள்ளது

இங்கு பேசப்படும் 16 வயதுப்பெண் தினமும் அந்நிய கலாசாரத்தை பார்த்துப் பார்த்து அதனையே தன்னுலகாக நினைத்திருப்பாள்...இதற்கு அவளை கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

எம்மவரிலும் பல பெண்கள் ரீன் ஏஜ் பருவத்தில் கருக்கலைப்பு செய்த கதைகள் லண்டனில் பலவுண்டு...
இலங்கையில் மட்டும் என்னவாம்...பாடசாலைப் பருவத்தில் திருமணத்திற்கு முன் மனவடக்கமின்றி வரம்புமீறி பெற்றோர் ஆனோரும் உண்டு....
பெற்றோரே பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதுமா? அன்பாக பண்பாக நல்ல முறையில் வளர்த்தெடுங்கள்....பிழை உங்களிலிருக்க பிள்ளையை அடித்து துன்புறுத்தலில் என்ன பயன்????


- kuruvikal - 10-02-2003

Mathivathanan Wrote:குருவிகாள்.. அந்தக் குறிப்பிட்ட கேடிஸ் இனத்தவர் அவரது நாட்டு சட்டதிட்டங்களை பிரித்தானியாவில் பயன்படுத்திதால்தான் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதேகுற்றம் அங்கு நடந்திருந்தால் பொரும்பாலும் விடுதலைசெய்யப்பட்டிருப்பார் என்பது எனது ஊகம். சரி பிழை அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களைப்பொறுத்தது. அங்கு மாத்திரமல்ல இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் அவர் விடுவிக்கப்பட்டிருப்பார். அவர்களது ஜனநாயக முறையை ஆதரிக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய தீர்ப்பும்கூட..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மனித உரிமைகள் என்பது அமெரிக்கச் சார்போ அல்லது பிரித்தானியச் சார்போ அல்லது இஸ்லாமிய உலகம் சார்ந்ததோ அல்ல....அது மனிதனின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் வருவது அதற்குள் ஆண் பெண் பாகுபாடும் கிடையாது.....மனிதன் என்றால் ஆணும் பெண்ணும் தான் அடக்கம் ....மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு மனிதனாக இருப்பதே ஒரு தகமை...அங்கு மதமோ கலாசாரமோ பால் வேறுபாடோ அல்லது பெண்ணியமோ தலையிட முடியாது.....அவற்றிற்கு அங்கு வேலையும் இல்லை....! இதை உலகம் என்று உணர்கிறதோ அன்று மனித உரிமைகளை மனிதன் தாராளமாக அனுபவிப்பான்...அதற்குள் ஆணும் அடங்குவான் பெண்ணும் அடங்குவாள்....!
அதற்காக குற்றவாளிகள் எங்கிருந்துவரினும் மன்னிக்கப்பட முடியாதவர்களே...அதுவும் குற்றம் என்பது நடுநிலயான மனிதாபிமானத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டுமே தவிர குற்றங்களும் சார்பு நிலை எடுத்து தீர்மானிக்கப்பட முடியாதவையே...அப்படி செய்வதால் தான் குற்றவாளிகளைக் குறைக்கு முடியாது காலம் காலமாய் பெருக்கி வருகிறார்கள்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea


- Mathivathanan - 10-02-2003

kuruvikal Wrote:[quote=Mathivathanan]குருவிகாள்.. அந்தக் குறிப்பிட்ட கேடிஸ் இனத்தவர் <span style='font-size:25pt;line-height:100%'>அவரது நாட்டு சட்டதிட்டங்களை </span>

மனித உரிமைகள் என்பது அமெரிக்கச் சார்போ அல்லது பிரித்தானியச் சார்போ அல்லது இஸ்லாமிய உலகம் சார்ந்ததோ அல்ல....அது மனிதனின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் வருவது அதற்குள் ஆண் பெண் பாகுபாடும் கிடையாது.....மனிதன் என்றால் ஆணும் பெண்ணும் தான் அடக்கம் ....மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு மனிதனாக இருப்பதே ஒரு தகமை...அங்கு மதமோ கலாசாரமோ பால் வேறுபாடோ அல்லது பெண்ணியமோ தலையிட முடியாது.....அவற்றிற்கு அங்கு வேலையும் இல்லை....! இதை உலகம் என்று உணர்கிறதோ அன்று மனித உரிமைகளை மனிதன் தாராளமாக அனுபவிப்பான்...அதற்குள் ஆணும் அடங்குவான் பெண்ணும் அடங்குவாள்....!
அதற்காக குற்றவாளிகள் எங்கிருந்துவரினும் மன்னிக்கப்பட முடியாதவர்களே...அதுவும் குற்றம் என்பது நடுநிலயான மனிதாபிமானத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டுமே தவிர குற்றங்களும் சார்பு நிலை எடுத்து தீர்மானிக்கப்பட முடியாதவையே...அப்படி செய்வதால் தான் குற்றவாளிகளைக் குறைக்கு முடியாது காலம் காலமாய் பெருக்கி வருகிறார்கள்...!
நான் இங்கு முக்கியமாக குறிப்பிட்டது <span style='font-size:25pt;line-height:100%'>அவர்களது ஜனநாயகம்.</span>


- kuruvikal - 10-02-2003

[size=16]மனித உரிமைகள் என்பது எந்த வகை ஜனநாயக,சோசலிச ஆதிக்கம் கடந்தவையும் கூட....! அதைத்தான் உண்மையான மனித உரிமைகள் சொல்கின்றன...
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathivathanan - 10-02-2003

kuruvikal Wrote:<span style='color:brown'>மனித உரிமைகள் என்பது எந்த வகை ஜனநாயக,சோசலிச ஆதிக்கம் கடந்தவையும் கூட....! அதைத்தான் உண்மையான மனித உரிமைகள் சொல்கின்றன...
குருவிகாள்.. அமெரிக்கன் அன்னியன் போயிருக்கிறான்.. அங்கு மக்கள் இருக்கிறார்கள்.. [size=18]தண்ணீர்.. மின்சாரம் சுகாதாரம் இயங்கினால்த்தான் மக்கள் வாழமுடியும்.. அதை இயக்க சிலர் முன்வருகிறார்கள்.. அவர்களை கொலைசெய்வதும்.. மின்சாரம்.. நீர்விநியோகம்.. துண்டிக்கப்படுவதும்.. சார்பானவர்கள் மக்களுக்கு உதவிசெய்பவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் அபிவிருத்திகள் முடக்கப்படுவதும் ஜனநாயகமாக்கப்படும்போது.. </span>அவர்களது அந்த மதம்சார்ந்த கொலைமாத்திரம் குற்றமாக்கப்படுவது ஏன்..?


- AJeevan - 10-03-2003

kuruvikal Wrote:BBC சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பிய ஆசிய நாடகம் ஒன்றில் ஒரு பாகிஸ்தானிய இளைஞன் வேலைத்தளம் ஒன்றில் ஆங்கிலேயப் பெண்மணியால் காதலிக்கப்படுவதும் அதனால் அவன் வீட்டிலிருந்தே துன்புறுத்தப்பட்டு வெளியேறுவதும்...பின் காதல் முறிவதும் என ஒளிபரப்பினர்....!அந்த நாடகத்தில் அவ்விளைஞனின் காதலை ஏற்க மறுத்து அவனது தந்தையை அவனுக்கு எதிராகத் தூண்டிவிடுவது அவனது பாட்டியும் பாட்டாவும்... அது நிஜத்தால் கலந்து பிறந்ததாகவே எமக்குப்படுகிறது....! நீங்கள் குறிப்பிட்டதும் அவ்வகையான ஒன்றே ஆனால் அதற்குள் ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....!

<span style='color:brown'>நாடகங்களோ,சினிமாவோ 100க்கு 100 உண்மை சொல்லும் யதார்த்த படைப்புகளல்ல.அப்படியானால் தெனாலி , கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படைப்புகளை உண்மை என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அவை மக்களைக் கவர்ந்த நல்ல திரைப்படங்களாகலாம். ஆனால் சில பகுதிகளில் எம்மைப் பற்றி வருவதாக மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். அது அந்த இயக்குனரின் பார்வையில் உருவான ஒரு கலைப் படைப்பு மாத்திரமே. வார்த்தைகளுக்கு உட்பட்டதல்ல வாழ்கை.
அதை முழு நிஜத்தால் கலந்து பிறந்ததாக நினைப்பது எப்படி?

kuruvikal Wrote:ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....! பெண் என்று பார்ப்பதைவிட மனிதன் என்ற வகையில் ஏன் பார்வையை மாற்ற மறுக்கிறீர்கள்...பெண் பெண்ணாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பது அவசியமா...?!

[size=14]ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள் எனும் வாக்கியத்தை வைத்து ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் சாடுவதாக நினைக்கிறீர்கள்.

ஒரு நாட்டில் யுத்தம் நடக்கிறது என்றால் அந்த நாடு முழுவதுமே யுத்தக் காடாக இருக்கிறது என்றோ, உலகமே கெட்டு விட்டது என்று சொன்னால் முழு உலகமே கெட்டு விட்டது என்றோ எடுத்துக் கொள்வதா? அது ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தான் குறிக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

<b>[size=14]முடிவாக,
லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் (இவரும் ஒரு ஆண்தான்) கூறுவதுதென்ன:</span></b>
<span style='color:darkblue'>ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்

[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள்</span> என்றுதான் விசனப்பட்டிருக்கிறார்.

<span style='color:brown'>இங்கே ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் ஒரு போதும் தாக்கப்படவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறரர்கள்.

இச் செய்தியினுாடாக ஐரோப்பிய நாட்டுக்குள் வசிக்கும் ஏனைய சமூகங்களின் [size=18][u]ஒரு சிலரிடம் காணப்படும்
</span>கொலை வெறிப் போக்கு பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவை நாகரீகமான ஒரு சமூகத்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

அஜீவன்