![]() |
|
சிந்தனைகள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: சிந்தனைகள்! (/showthread.php?tid=7949) |
சிந்தனைகள்! - சாமி - 10-21-2003 * தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ். * கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன். * சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி. * மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர். * உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ். * ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி. * நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட். * நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால். * உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ. * அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ. * மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. —இங்கர்சால். * கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர். * உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர். * மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம். * கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர். * வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி. * தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே. * உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன். * உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட். * உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி. * எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ். * முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன். நன்றி: தினமலர் - Kanakkayanaar - 10-23-2003 Quote:* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி. ஆனால் அந்த கொள்கை பிழையென உண்ர்ந்தால்? Quote:நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட் ஆனால் அது பொய்மையான நிம்மதியல்லவோ? Quote:மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம் இது இயலாதோர் கூற்றா, இல்லை பிறர் முன்னெறுவதை விழையாதார் கூற்றா? Quote: கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர் இது பிச்சைக்காரர்கள் கூறும் தந்திரக் கூற்று, பிழைப்பு நடக்கவேண்டுமல்லவா! Quote:உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட். ம்ஃகீம் என்னை நம்பாவிட்டால், உடையணியாமல் முகமலர்ந்த வண்ணம் வெளியில் செல்லுங்கள் பார்போம் (உலகே எள்ளி நகையாடும்)! ஏனைய கூற்றுககள் நன்றாகவே உள, எடுத்தளித்தமைக்கு மிக்க நன்றி! - kuruvikal - 10-23-2003 சிந்தனைகளில் நமக்குப் பிடித்தவை...<b>7</b>...நன்றி சாமி * <b>ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது.----ராஜாஜி. * தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.---- கன்பூஷியஸ் * அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.----போவீ. * தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன்.....கதே. * முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே.----ஸபர்ஜியன். (மிகவும் பிடித்தது....!) * உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.----பியாட்டி. * உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.----ரூஸ்வெல்ட்</b>. கொள்கை துணி.. பின் உறுதி எடு... நிதானி... பின்வாங்காது முன்னேறு... இலக்கு அடையும் வரை தொடரு..வறுமை பிணி மரணம்...எங்கும் வரும் எந்தளவிலும் வரும்...பயத்தை அறு... வெற்றி அறுவடையாகும்...பெருமை கொள் பெருமிதத்திற்கல்ல உன் முயற்சிக்காய்...! இது நாம் வகுத்தது...விதியல்ல வாழ்வுக்காய்...! :twisted: :twisted:
- சாமி - 10-25-2003 * நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன். * வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ். * தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட். * சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி. * முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர். * குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ். * துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி. * ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே. * அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன். * அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ. * எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் அகங்காரம். —ரஸ்கின். * தேகத்தை உழைப்பு தீயில் புடமாக்கு; எதிர்காலம் தங்கமாய் மின்னும். —இங்கர்சால். * பிறர், உங்களை புகழ வேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர். —இயேசு கிறிஸ்து. * தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை. —டென்னிசன். * விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று, எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெரிது. —இப்தார்ச். * ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் உழைப்பவர்களுக்கு உடல் நலமும், மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும். —சிம்மன்ஸ் * நமது நாட்டின் தொன்மை, முன்னோர் வரலாறு, நாகரிகம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது இளைஞர்களின் முதல் கடமை. —திரு.வி.க., * உண்மையான சுதந்திரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும். பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று. —பிங்கார்ட். * பெரிய வல்லரசுகள் சிறு நாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்தும் வரை உலகத்தில் அமைதி ஏற்படாது. —லிங்கன். * எவரைப் பார்க்கும் போது இறைவன் நினைவு வருகிறதோ, அவர்தான் ஆண்டவனின் அடியார்களில் சிறந்தவன். —ரூமி. நன்றி: தினமலர் - சாமி - 10-29-2003 சிந்தனைகள்! * நீ சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால், பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். —இயேசு. * தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள தானே கயிறு திரிப்பது போன்றது. —பரோஸ். * நேர்வழியே, ஒழுக்கத்திற்கு சுருக்கு வழி. —ரஹேஸ். * உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையான எண்ணங்களையும் விரட்டுகிறது. —வால்டேர். * எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. —வால்டேர். * சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை. —மகான். * அச்சம் அற்றவன், தனக்குத் தானே காவலன். —பிரிட் கெஸ். * வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. —வால்டேர். * நல்ல செயலில் துணிவு உடையோர், நாள்தோறும் வெற்றியே காண்பர். —புரூஸ். * உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும். —வால்டேர். * துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். —புடோர். * காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான், வாழ்க்கையின் மதிப்பு தெரியும். —நெல்சன். * கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. —ரஹேல்ப்ஸ். * நம்பிக்கை என்பது பகுத்தறிவின் தொடர்ச்சி. —ஆடம்ஸ். * அதர்மம் ஆதிக்கம் செய்வதைப் போல் தோன்றினாலும் தர்மமே வெல்லும். —ஜோசப் ரூக்ஸ். * நீங்களும் நன்கு வாழுங்கள்; மற்றவர்களையும் நன்கு வாழ விடுங்கள். —ஸ்கில்லர். * அதிர்ஷ்டமும், நேரமும் வரும் என்று காத்திருப்பவனுக்கு மரணம் விரைவில் கதவைத் தட்டும். —இங்கர்சால். * அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். —டெய்லர். * தன்னை எதிரி வென்று விடுவானே என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வியடைவான். —நெப்போலியன். * உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. —இங்கர்சால். * இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக்குபவை. —மாத்யூஸ். நன்றி: தினமலர் - சாமி - 11-16-2003 * கண்களை இழந்தவன் குருடனல்ல; எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன். —வால்டேர். * உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை. மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது. —ஹில்லர் * சோகம் எனும் பறவைகள், உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது; ஆனால், அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம். —ஸ்டிலி. * அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை மனித குலத்துக்கு பெருமையைக் கொடுக்கும். —அங்கர் பில்டி. * பெருமையோ, இகழ்ச்சியோ தானே உருவாவதில்லை; உங்கள் கடமையை நன்றாக செய்யுங்கள்; எல்லாமே அதில்தான் அடங்குகின்றன. —இதோபதேசம். * மனவலிமை இருந்தால் மட்டும் போதாது; அவற்றை நல்லவிதமாக பயன்படுத்தவும் வேண்டும். —டெஸ்கார்டெஸ். * நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும். —ரஸ்கின். * ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும். —ரூஸோ. * அறிவு இல்லாமல் தலை இயங்க முடியாது; அது போலவே அன்பு இல்லாமல் இதயம் இயங்க முடியாது. —போனஸ் அயர்ஸ். * அன்பு அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத் தரும்; அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறார். —காந்திஜி. * எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம். * துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான். —தாமஸ். * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. —லெனின். * பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல். —டொனால்டு. * வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின். * தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. — போவீ. * வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். * உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும். —சாக்ரடீஸ். * உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள். —செஸ்டர்பீல்டு. * பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான். —ஈசாப். * கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம். —ஹென்றி. நன்றி: தினமலர் - சாமி - 11-22-2003 சிந்தனைகள்! * அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது. —நபிகள் நாயகம். * எளிமையும், மரியாதையும் உயர்ந்த பண்புகள். —நபிகள் நாயகம். * எல்லாவிதமான அடக்கமுடைய செயல்களும் சிறந்தவைகளே! —நபிகள் நாயகம். * எவன் சாந்த குணத்தைப் பெற்றிருக்கிறானோ அவன், நன்மையான பகுதியை உடையவன். —நபிகள் நாயகம். * உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடம். —நபிகள் நாயகம். * பேராசை வறுமையைக் குறிக்கிறது; அவாவின்மை செல்வத்தைக் குறிக்கிறது. —நபிகள் நாயகம். * கைத்தொழிலும், மோசடியில்லாத வியாபாரமும் துõய்மையான சம்பாத்தியம். —நபிகள் நாயகம். * எவருடைய சொல்லும், செயலும் பிறரை துன்புறுத்த மாட்டாதோ அவனே மனிதன். —நபிகள் நாயகம். * மறதி என்பது அறிவின் துரதிருஷ்டம். —நபிகள் நாயகம். * முதியோருக்கு மரியாதை செலுத்துதல், இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும். —நபிகள் நாயகம். * மக்கள் விரும்பாத இரண்டு, மரணமும், வறுமையும். —நபிகள் நாயகம். * எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம். * குற்றம் புரிவதை காட்டிலும் மரணம் மேலானது. —நபிகள் நாயகம். * மதம் என்பது துõய்மையான வாக்கும், கொடையும் ஆகும். —நபிகள் நாயகம். * தன்னிடமுள்ள குறைகளை அறிந்தும், பிறரது குறைகளை கூறி திரியக் கூடாது. —நபிகள் நாயகம். * நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள்; தீய செயல்களை விட்டு விலகியிருங்கள். —நபிகள் நாயகம். * நல்ல முறையில் பழக தெரிந்தவனும், நற்குணமுள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன். —நபிகள் நாயகம். * உலக ஆசையே எல்லா தீமைகளுக்கும் பிறப்பிடம். —நபிகள் நாயகம். * பிறரை சபித்தல் உண்மை பேசுவோருக்கு அழகல்ல. —நபிகள் நாயகம். * அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான். —நபிகள் நாயகம். * தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன், குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பாவான். —நபிகள் நாயகம். * வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணிக்கும் இளைஞன், எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது. —நபிகள் நாயகம். நன்றி: தினமலர் - சாமி - 01-02-2004 * மகிழ்ச்சியும், உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை. —பிராங்க்ளின். * ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின். * கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர். * தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப். * விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட். * உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி. * தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ. * பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா. * காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன். * வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ். * நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங். * எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி. * கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர். * மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது. —பெர்னாட்ஷா. * கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர். * பாதையை சரியாய் போட்டால், பயணம் சுபமாக இருக்கும். —இங்கர்சால். * நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன. —ஷேக்ஸ்பியர். * உங்கள் உள்ளம் உறுதியாக இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வியடைய மாட்டீர்கள். —பாஸ்டிசர். * இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வு எடுக்கலாம். —பிராங்க்ளின். * பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும். —விவேகானந்தர். நன்றி: தினமலர் |