![]() |
|
தேவை உடற்பயிற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: தேவை உடற்பயிற்சி (/showthread.php?tid=7944) |
தேவை உடற்பயிற்சி - Saniyan - 10-23-2003 உடற்பயிற்சி . .வல்லுனர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா ?? உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க காலையில் மற்றும் மாலையில் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை யாராவது தந்து உதவினால் பெரிய உபகாரமாக இருக்கும். புலம்பெயர் வாழ்வின் நேரப்பிரச்சனைக்குள் செய்வது எப்படி என்பது பற்றி தனி விளக்கம் தேவை. - AJeevan - 10-23-2003 Saniyan Wrote:உடற்பயிற்சி . .வல்லுனர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா ?? நல்லதொரு சிந்தனை. யோகாசனம் செய்வது இலகுவானதும்,சிறப்பானதுமாகும். இதற்கு பெரிய இடவசதியோ , அதிக நேரமோ தேவையில்லை. கொஞ்ச நேரம்-கூடிய பலன். - shanmuhi - 10-23-2003 எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கின்றது. நேரம் இல்லை இந்த வார்த்தையைச் சொல்லாதவர்கள் குறைவு. நாம் நேரத்தை சரியானபடி நிர்வகித்தால், இருக்கும் நேரத்தை இன்னும் பயனுள்ளதாக செலவழிக்கலாம். பணம், உழைப்பு இவற்றைப் போலவே நேரமும் ஒரு செல்வம்தான். செலவழித்தால் திரும்ப கிடைக்காது. ஆகவே நேர நிர்வாகம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக, மிக முக்கியமானது. முதலில் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் எல்லா வேலைகளையும் அதன் நேர அளவையும் ஒரு வார காலத்திற்குக் குறித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆராய்ந்து பார்த்தால் நமக்கே நாம் எப்படி நேரத்தைச் செலவழிக்கின்றோம் என்பது தெரியும். அதிலும் எத்தனை நேரம் பயனில்லாத வேலைகள் செய்திருக்கிறேம் என்பதும் தெரியும். நாம் பிறருடன் பேசும்பொழுது, நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு பேச வேண்டும். இதனால் பல தடங்கல்ளையும் தவிர்க்கலாம். அத்தோடு நாம் எந்த வேலையையும் கவனத்துடன் செய்ய வேண்டும். கவனம் இல்லாத எந்த வேலையும் நமது நேரத்தை அனாவசியமாகச் செலவழிக்கலாம். தினமும் அன்றைய வேலைகளைக் குறித்தவுடன், அதற்கான நேர ஒதுக்கீட்டையும் செய்ய வேண்டும். அத்தோடு மனித மனம் கட்டுப்பாடு இல்லாது அலைபாயும். ஆகவே அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே நாம் ஒரு வேலை செய்யம் பொழுது, மனம் வேறொன்றை நினைக்க ஆரம்பித்தால், நாம் உடனே மனதிற்குள்ளாகவே அதற்குக் கட்டளை இட்டு, அதை மீண்டும் அதே வேலைக்குத் திருப்ப வேண்டும். எந்தக் கடின வேலையைச் செய்து முடித்தாலும், உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு உற்சாகப்படுத்துங்கள். எந்தப் பிடிக்காத வேலையையும் சமாளிப்பதற், அதைக்காலம் கடத்தாது உடனடியாக செய்து முடிப்பதே சிறந்த வழியாகும். இவற்றுக்கெல்லாம் பொதுவாக நாம் நேரம் தவறாமையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பொன்னான நேரத்தை மண்ணாக்காமல் நேரத்தை நிர்வகிக்க பழக்கப்படுத்திக் கொண்டால், 24 மணிநேரத்தையும் நாம் திறமையாக . . . பிரயோசனம் உள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். - Kanakkayanaar - 10-23-2003 திருவாளர் சனியன், திரு அயீவன் சொல்வதைப்போல் சித்தர் இருக்கைகள் (யோகா) ஒரு மிகச் சிறந்த உடற் பயிற்சிதான், ஆனால் சிறு வயதிலே இருந்து செய்யாவிடில், என்புகளை வளைத்து சித்தர் இருக்கைகள் செய்வது கடினம். அதோடு முதல் முதலில் பழகும் போழ்து ஒரு தகமை மிக்க ஆசிரியரை நாடுவது நன்று. அல்லது காலையிலும் மாலையிலும் () உம் () உம் செய்யலாம். அதோடு ஓடுதல் அல்லது () தொடர்புடைய பயிற்சியும் செய்யவேண்டும். அத்துடன்... காககைக்கு ஓய்வீந்து நடந்து திரிந்து யாக்கைக்கு நலம் பெற்று நறு வாழ்வு பெறுக! :mrgreen: நான் ஓர் உடற்பயிற்சி வல்லுநர் அன்று! - Kanakkayanaar - 10-23-2003 திருத்தம்... Quote:அல்லது காலையிலும் மாலையிலும் () உம் () உம் செய்யலாம். அதோடு ஓடுதல் அல்லது () தொடர்புடைய பயிற்சியும் செய்யவேண்டும்Push ups and sit ups also include aerobics or related ex. - AJeevan - 10-23-2003 <span style='font-size:25pt;line-height:100%'>யோகாசனம்</span> ![]() யோகா என்றால் என்ன? "யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள். யோகாவின் தந்தை எனக் கூறப்படும் பதஞ்சலி "யோக சூத்திரங்கள் என்ற நுாலில் யோகாவிற்கு 195 வழிகாட்டி நெறிகளை வழங்கியுள்ளார். அவை ஒழுக்கம் நிறைந்த உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். அத்துடன் யோகாவுக்குள் அறிவியலும் இணைந்துள்ளது. [size=14]பதஞ்சலி தன்னுடைய யோகா சூத்திரங்களில் 8 பாகங்ளைக் குறிப்பிட்டுள்ளார். அவை:- 1.யமம். 2.நியமம். 3.ஆசனம். 4.பிரணாயாமம். 5.பிரத்தியாஹாரா. 6.தாரணா. 7.தியானம். 8.சமாதி. யோகாவின் அடிப்படை இதுதான். இது தவிர ஹத யோகா ஐயங்கார் யோகா அஸ்தங்கா யோகா சிவானந்தா யோகா குண்டலினி யோகா பவர் யோகா கலையம்ச யோகா என வெவ்வேறு கால கட்டங்களில் விஞ்ஞான ரீதியான மாறுதல்கயோடு மாற்றம் கண்டு வளர்ந்து வருகிறது. இங்கே தியான முறையிலான யோகா பயிற்சிகளை விட இலகுவாக செய்யக் கூடிய <img src='http://www.bangalorenet.com/health/fitness/images/yoga.jpg' border='0' alt='user posted image'> சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சி முறையிலான யோகாசனங்களை முறையான புத்தகங்கள் அல்லது தெளிவான விளக்கத்துடனான கட்டுரைகளை வாசித்து செய்யலாம். <img src='http://www.yarl.com/forum/files/sur.ajee.jpeg' border='0' alt='user posted image'> இவை பத்மாசனம் போன்ற கடின ஆசனங்களை செய்ய முயன்று , அந்தக் கலையையே வெறுக்க வைக்கக் கூடிய ஆசனங்களல்ல. மிக மிக இலகுவானவை. எதையும் நாம் பயமுறுத்தி வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டதால்,எதையும் செய்ய அஞ்சுகிறோம். எதையாவது தொடங்கு முன்பே எதிர்மறை விளைவுகளையே சொல்கிறோம். மனித வாழ்வுக்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியம். அதை யோகாசன பயிற்ச்சி தருகிறது. எனவே கடினமில்லாத, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செய்யக் கூடிய இலகுவான , எதுவித பாதிப்புகளையும் உருவாக்காத சில யோகாசன உடற் பயிற்சிகளை யோகாசன குரு: பெங்களுர் சுந்தரம் அவர்களது அனுமதி பெற்று எழுகிறேன். இதற்காக பெரிய இடவசதி தேவையில்லை. காலையிலோ - மாலையிலோ 10 - 15 நிமிடங்கள் செலவழிக்க முடிந்தால் அதுவே போதுமானது. வாழ்க வளமுடன். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Before we get to the exercises, let us form an opinion about what it really is we are doing, or trying to do, when we are bending and stretching yoga style -AJeevan - kuruvikal - 10-23-2003 பயனுள்ள தகவல்...நன்றி அஜீவன் அண்ணா. - AJeevan - 10-23-2003 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பயனுள்ள தகவல்...நன்றி அஜீவன் அண்ணா.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <span style='font-size:25pt;line-height:100%'>நன்றி தம்பி.</span> அன்புடன் -அஜீவன் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Before we get to the exercises, let us form an opinion about what it really is we are doing, or trying to do, when we are bending and stretching yoga style -AJeevan - sOliyAn - 10-23-2003 AJeevan Wrote:kuruvikal wrote:அட்ரா.. அட்ரா.. அட்ரா... உங்கா பார்ரா.. அண்ணன் தம்பி பாசம் வழியோ வழின்னு வழியுதுங்கோ.. யோகா செய்யும்போது வழுக்கிடாதேங்கோ..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 10-24-2003 sOliyAn Wrote:AJeevan Wrote:kuruvikal wrote:அட்ரா.. அட்ரா.. அட்ரா... உங்கா பார்ரா.. அண்ணன் தம்பி பாசம் வழியோ வழின்னு வழியுதுங்கோ.. யோகா செய்யும்போது வழுக்கிடாதேங்கோ..!! <!--emo& வழுக்காது , ஏன் தெரிமே? கீழ படுத்தும், இருந்தும், நிண்டுகொண்டும்தான் யோகா செய்யிறது. <img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'> இப்பிடி ஓடுறவங்களுக்குத்தான் வழுக்கும். ஓடும் போது கூ--குடுமி கவனம்..........சோழியா.............. சிலர் பாசிகள் துாவ இருக்கிறதா தகவல் - Saniyan - 10-24-2003 மிக்க நன்றிகள் அஜீவன் அண்ணா, சண்முகி அக்கா . . மற்றும் இணைய நண்பர்களே. . . . நீங்கள் இவ்வளவு து}ரம் அக்கறையா விளங்கப்படுத்துவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் நன்றிகள் . . . - சாமி - 10-29-2003 நலமாக வாழ நல்ல வழிகள் மனமும், உடலும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். தினமும் அதிகப்படியான வேலை களால் மனமும், உடலும் களைப்பாகி சோர்ந்து விடுகிறது. எனவே, அவற்றிற்கு புத்துணர்ச்சி யூட்ட உடற்பயிற்சிகள் குறிப்பாக "பிரணாயாமா' எனப்படும் மூச்சு பயிற்சிகளும், யோகா சனங்களும் அவசியம். இதன்மூலம் மன அழுத்தத்திலிருந்து எளிதாக வெளிவரலாம். முப்பது வருடங்களாக அழகு பராமரிப்பு துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள வர்களும் இதையே கூறுகின்றார்கள். ""ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபடுவதால் உடலில் உள்ள கழிவுகளும், விஷத்தன்மை வாய்ந்த பொருள்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் இது நன்மை அளிக்கிறது'', என்கிறார்கள் அவர்கள். யோகாசனங்கள் உடலுக்கு வளையும் தன்மையை ஏற்படுத்தி, முதுகெலும்பை வலுவடைய செய்கிறது. இதனால் முதுகு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம். வயது ஏறினாலும், இதே உடற்பயிற்சிகளை தொடரலாம். உடற்பயிற்சிகளை போலவே மனதை நிதானப்படுத்தி, சாந்தப்படுத்தும் பயிற்சிகளும் மிக அவசியம். அதிக அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதும், அழுத்தம் தரும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தசைகளையும், மனதையும் அழுத்தத்திலிந்து தளர்த்த சிறிய இடைவெளி எடுத்து கொண்டு தகுந்த பயிற்சிகளை செய்ய வேண்டும். அதோடு, உணவு கட்டுப்பாடும் அவசியம். ""அழகும், சுகாதாரமும் வேண்டுமென்றால் பட்டினி கிடக்க வேணடும், என்பதில்லை. இதற்கு ஒரு சுகாதாரமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேணடும். பழங்கள், பழச்சாறுகள், பச்சை காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வறுத்த, பொறித்த உணவுகள் நாவிற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்து கொண்டு, கார்போஹைட்ரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்'', என்கிறார்கள் நிபுணர்கள். உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகள் நம் அன்றாட உணவு பட்டியலில் இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதோடு, யோகா போன்ற உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் பயிற்சிகளையும் செய்து வந்தால் நலமுடன் பல்லாண்டுகள் வாழலாம். நன்றி: தினமலர் |