Yarl Forum
அமெரிக்கா உலக வல்லரசாவதற்கு கல்வி வளர்ச்சியே முக்கிய காரணம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அமெரிக்கா உலக வல்லரசாவதற்கு கல்வி வளர்ச்சியே முக்கிய காரணம். (/showthread.php?tid=7934)



அமெரிக்கா உலக வல்லரசா - சாமி - 10-24-2003

அமெரிக்கா உலக வல்லரசாவதற்கு கல்வி வளர்ச்சியே முக்கிய காரணம். -அரச அதிபர் இ.மோனகுருசாமி-

ஒரு பாடசாலையின் பௌதீக ஆளணி வளங்களை மட்டும் அபிவிருத்தி செய்யாமல் அச்சு10ழலில் வாழுகின்ற மக்களின், குறிப்பாக மாணவர்களின் பெற் றோரின் வளங்களும் விருத்தியடைந்ததாக இருக்க வேண்டும். இதில் முக்கியமாக கல்வி வளம் பெற்றவர்களாய் இருக்க வேண் டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசா ங்க அதிபர் இ.மோனகுருசாமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று பாடசாலை மண்டபத்தில் வித்தி யாலய அதிபர் மு.இராசரெத்தினம் தலை மையில் கலந்து கொண்ட அரச அதிபர் மேலும் கூறியதாவது:- இந்தியாவை விட சனத்தொகையில் பல மடங்கு குறைந்த அமெரிக்கா வல்லரசாகியுள்ளது. இதற்கு காரணம் அவர்களின் கல்வி வளம் முன்னேறியதே காரணமாகும். முதன் முதலாக ரஷ்யா வானில் ரொக்கட்டை பறக்க வைத்தபோது அமெரிக்கா வெட்கித் தலைகுனிந்தது. பின்பு கணித பாடத்தில் கூடிய அக்கறை கொண்டதனால் முதன் முதலாக சந்திர மண்டலத்தில் அமெரிக்கா மனிதனை இறக்கியது.

ஆசிரியர்களுக்கு சம்பளத்தைக் குறைத்து பாரத்தைக் கூட்டியுள்ளோம். இது நகர்ப்புற பாடசாலை ஆசிரியர்களுக்கு, பாரம்குறைவு கிராமப் புறப் பாடசாலைகளில் பெற்றோரையும் வழிநடத்தும் பொறுப்பா சிரியர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது என்றார். இந்நிகழ்வில் 95 வீதமான பெற்றோ ர்கள் கலந்திருப்பதனால் இந்த சமுதாயமும், ஆசிரியர்களும் இந்தப் பாடசாலையும் சுபீட்சம் பெறும். பெரிய பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாப் பாடசாலைகளுக்கும் ஒரே பாடவிதானந்தான். நான் கூட கிராமப்புற பாடசாலையிலேயே கல்வி கற்றேன் என்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.துரைரா ஜசிங்கம், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் மு.பவளகாந்தன் ஆகியோர் உரையாற்றினர். மாணவர்களின் கலை நிகழ்வு, பரிசளிப்பு என்பன நடை பெற்றன. ஆசிரியர் சண்.தவராசா நிகழ்ச்சி யினைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி: ஒஸ்லோ வொயிஸ்.கொம்