Yarl Forum
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார் (/showthread.php?tid=7867)

Pages: 1 2 3


பாதுகாப்பு அமைச்சின் - aathipan - 11-04-2003

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டாராமே. மேலதிக செய்திகள் யாருக்ககுத்தெரியும் எழுதுங்கள்


Re: பாதுகாப்பு அமைச்சின - AJeevan - 11-04-2003

aathipan Wrote:பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டாராமே. மேலதிக செய்திகள் யாருக்ககுத்தெரியும் எழுதுங்கள்

செய்திகள் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.


- Mathivathanan - 11-04-2003

எனக்கு ஒண்டுமா விளங்குதில்லை.. சந்திரிகாவைவிட ரணில்தான் எதிரியெண்டு நேற்றும் ஆய்வுசெய்தாங்கள்.. இண்டைக்கு இல்லையில்லை ரணிலைவிட சந்திரிக்கா எதிரியெண்டுறாங்கள். நேற்றைய கண்துடைப்புக்குழு இண்டைக்கு பராமரிப்புக்குழுவாக ஆதரவுக்குழுவாக மாறீட்டுது. நாளுக்கு நாள் மாறி மாறி வருகுது.. எதை நம்பிறதெண்ட பிரச்சனை கூடுது.
எதற்கும் உந்த ஏஜென்சிக்காரரிட்டை ஒரு எட்டுப் போய் தகவலோடை வாறன். அவங்களுக்குத்தான் வீரர்கள் சொந்தம்.. அவங்களுக்குத்தான் உள்ளுக்கு நடக்கிறது தெரியும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 11-04-2003

<b>
<span style='font-size:25pt;line-height:100%'>அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்</span>

[Image: 17080521.jpg]
பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக் மாரப்பனவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

<span style='font-size:21pt;line-height:100%'>Nov 04, Colombo: President Chandrika Kumaratunga has sacked three key ministers and prorogued Parliament until November 19. The President today sacked [b]Defence Minister Tilak Marapona, Interior Minister John Amaratunga, and Mass Communications Minister Imitiaz Bakeer Makar.</b> Though the Presidential Secretariat has said these three ministers \"will continue to hold the several other posts they hold at present\", the President has used powers granted to her by the Constitution to remove the men from their key offices. </span>
[Image: Ranil.jpg] [Image: PM%]

இருப்பினும் பிரதமர் ரணில் தமது பயணத்திலும், அமெரிக்க பேச்சுகளிலும் தொடர்ந்தும் பங்கு பற்றுகிறார். எந்த மாற்றமும் செய்ய பிரதமர் விரும்பவில்லை.

இச்செயல் காரணமாக சந்திரிகா தனது மதிப்பை தானாகவே இழக்கக் கூடிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளார்.

ரணில் அரசு எந்த சமயத்திலும் தேர்தல் ஒன்றை சந்திக்க விரும்புகிறது.இச் செயல்கள் பிரதமர் ரணிலுக்குத்தான் சாதகமாகலாம்.
மேலும் நவம்பர் 19 திகதி வரை பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாத படி இடநிறுத்தமொன்றையும் சந்திரிகா அறிவித்துள்ளார்.

தற்போது தொலைக்காட்சியில் உரையாற்றிய சந்திரிகா நாட்டின் அச்சுறுத்தல் காரணமாகவும், பாதுகாப்பற்ற நிலை காரணமாகவும் தாம் இப்பதவிகளை பொறுப்பேற்றுள்ளதாகவும்,இதனால் சமாதனப் பேச்சுகள் நிலை குலையப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு நகரின் முக்கிய பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதுவித அசம்பாவிதங்களும் இதுவரை இடம் பெறவில்லை...................
<img src='http://i.cnn.net/cnn/2003/WORLD/asiapcf/south/11/04/sri.lanka.firing/story.colombo.troops.afp.jpg' border='0' alt='user posted image'>

<b>மேலதிக தகவல்கள்:-</b>

[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>மங்கள சமரவீர</b></span>
மங்கள சமரவீர (SLFPயின் பேச்சாளர்)
நாட்டின் ஸ்தீரத் தன்மையை நிலை நாட்ட வேண்டிய ஒரு தருணத்தில் இந் நிலை அதிபர் சந்திரிகாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இச் செயல் ரணில் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகக் கருதலாகாது எனவும் குறிப்பிட்டார்.

[Image: ranil.jpg][Image: milinda.jpg]
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'> பிரதமர் ரணில்</b></span>
மேற்படி அதிபரின், முடிவுகள் பிரதமர் ரணில்,மிலிந்த மொறகொட,டிரொன் பாணாந்து ஆகியோர் வொசிங்டன் ரிட்ஸ் கல்டனில் தங்கியிருந்த சமயம் அதிகாலை 4.00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதமர் ரணில்,
[Image: jayasuriya.jpg]
கரு ஜெயசூரியவுடன் தொடர்பு கொண்டு ,இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும்,தமது கட்சியினரை அழைத்து , தமது கட்சியின் பலத்தைக் நிரூபிக்க வேண்டிய சமயம் இதுவென்றும் , சாமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் சிறிது, கால தாமதமானாலும், நிச்சயம் தொடரும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வு காரணமாக <span style='color:green'>விடுதலைப்புலிகளின் தாக்கங்கங்கள் என்ன வகையில் மாறும் என்பது குறித்து தாம் வேதனையோடு இருப்பதாக மிலிந்த மொறகொட கவலை தெரிவித்தார்.

[u]<b>[size=16]அரசியல் நோக்கர்கள்</b></span>
அதிபர் சந்திரிகாவின், இச் செயல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.இது பற்றிய உண்மை நிலை நாளை காலை பத்திரிகை - வானோலிகளில் செய்திகள் வரும் வரை எதுவும் தெரிய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>அதிபர் சந்திரிகா</b></span>
அதிபர் சந்திரிகாவின் இன்றைய தொலைக்காட்சி உரையாடலில்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத் தன்மை ஆகிவை காரணமாக மேற்படி அமைச்சுகளை தாம் பொறுப்பேற்றதாகவும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தாம் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

[u][b]<span style='color:brown'>சந்திரநேரு அரியநாயகம்
இவை இவ்வாறிருக்க தமிழ் கட்சிகள் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக சந்திரநேரு அரியநாயகம் அவர்கள் BBCக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

[u][b][size=16]ரவுூப் ஹகீம்</span>
அமைச்சர் ரவுூப் ஹகீம் கருத்து வெளியிடும் போது: சந்திரிகாவின் இச் செயல் மக்களை வெறுப்படையச் செய்துள்ளதாகவும்,சமாதானமொன்றை நோக்கிச் செல்லும் ஒரு நேரத்தில் சுயநல நோக்கங்களை மேன்மைப்படுத்துவது முறையல்ல என்றார்.

[u][size=16][b]விடுதலைப்புலிகள்
சமாதானத்துக்கான முன்னெடுப்பில் மீண்டுமொரு யுத்தத்தை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை என்றும் நடைபெறும் நிகழ்வுகளை மிகவும் அவதானத்துடன் கவனித்து வருவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

[u][b][size=16]
கலாநிதி லக்சிரி பெர்ணாந்து

இது பற்றி கொழும்பு பல்கலைக் கழக அரசியல் பகுதியின் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து அவர்களிடம் வினவிய போது:
[size=15]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 2வது சரத்தின்படிதான் இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

[size=15][u]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 1வது சரத்தின்படி இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படிருந்தால் இவ் அமைச்சர்கள் தொடர்ந்து பதவிவகிக்கவே முடியாது என்றார்.


மேற்படி 2வது சரத்து நாட்டுக்கு அச்சுறத்துல் ஒன்று ஏற்படும் வேளைகளில் அதிபரால் பயன்படும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் விளக்கமளித்தார்.

தற்போதும் கூட மேற்கண்ட அமைச்சர்கள் கபினட் அமைச்சர் பதவிகளிலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பதவிகள் தவிர்ந்த, ஏனைய அமைச்சு பதவிகளிலும் பதவியில் இருக்கிறரர்கள்.

உதாரணமாக: பாக்கீர் மாக்கர் அவர்களிடமிருந்த செய்தித் தொடர்புத்துறை மாத்திரமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது தபால்-தந்தி தொடர்புக்கான அமைச்சு தொடர்ந்தும் அவர் வசமேயுள்ளது என்றும் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து மேலும் விளக்கமளித்தார்.

செய்தித் தொகுப்பு:அஜீவன்
04.11.03


- yarl - 11-04-2003

bbc video

http://news.bbc.co.uk/media/video/39529000...harrison_vi.ram


- சாமி - 11-04-2003

அமைச்சர்கள் மூவர் பதவி நீக்கம் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை அரசியலில் புதிய நெருக்கடி

பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக் மாரப்பனவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்தது.

நாட்டின் தேசிய நலன்கருதியே ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலமைப்பு மூலம் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை ஏற்படுத்தியதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது. தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஏற்படுத்தியிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை, நாட்டில் புதிய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த மூன்றும் முக்கிய அமைச்சுகளாகும். ஆயினும் மூவரையும் பதவி நீக்கம் செய்திருக்கும் ஜனாதிபதி இந்த மூன்று அமைச்சர் பதவிக்கு யார் யாரை புதிதாக நியமித்திருக்கிறார் என்ற விபரங்கள் இச்செய்தி எழுதும்வரை வெளியாகவில்லை.

இந்த மூன்று அமைச்சர் பதவிகளையும் ஜனாதிபதியே பொறுப்பேற்றிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.

மூன்று அமைச்சர்களின் பொறுப்புக்களையும் ஜனாதிபதி பொறுப்பேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மீண்டும் தனது பொறுப்பில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை கையேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சின் கீழேயே அரசாங்க அச்சகம், ஆட்பதிவு திணைக்களம், குடி வரவு, குடியகல்வு திணைக்களங்களும் பொலிஸ் திணைக்களமும் இருந்து வருகிறது. ஊடகத்துறை அமைச்சின் கீழேயே தகவல் திணைக்களம், லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் என்பன இருந்து வருகின்றன.

கடித மூலம் அறிவிப்பு

இந்த மூன்று அமைச்சர்களுக்கும் அனுப்பிவைத்துள்ள பதவி நீக்கக் கடிதத்தில் பதவி நீக்கம் செய்ய வேண்டியதற்கான காரணங்கள் ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டிருப்பதாயும் ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைச்சர்களும் குறிப்பிட்ட இந்த மூன்று அமைச்சின் பொறுப்புக்களிலிருந்து மட்டும் நீக்கப்பட்டிருப்பதாயும் ஏனைய அமைச்சுப் பொறுப்புகள் தொடர்ந்தும் அவர்களிடம் இருந்து வரும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிலைமை நாட்டின் பாதுகாப்பு பந்தோபத்து நிலைமைமோசமடைந்து வருவதை தடுக்கும் முகமாகவே மிகவும் ஆழ்ந்த பரிசீலனையின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் மிக விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூவரை முக்கிய அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி பதவி நீக்கம் செய்த செய்திகள் நண்பகலுக்கு பின்னர் வெளியானது. இந்த செய்தி அரசியல் வாதிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரச எம்.பி.க்கள், அமைச்சர்கள் அடுத்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கூடி பேசினர். அமெரிக்காவிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தகவல் கூறப்பட்டது.

பிரதமர் நாடு திரும்புகிறார்

பிரதமர் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் ஜனாதிபதி புஷ்ஷை சந்தித்துப் பேச விருந்தார். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு அவர் அவசர அவசரமாக நாடு திரும்பவிருக்கிறார். பிரதமர் அமெரிக்காவில் இருந்த நேரம் பார்த்து ஜனாதிபதி இந்த நடவடிக்கை எடுத்திருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.

சகவாழ்வு அரசியலின் இன்றியமையாமை பற்றி சமாதானத்தை விரும்பும் பலரும் ஓங்கிக் குரல் கொடுத்து வரும் வேளையில் மூன்று அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டமை சகவாழ்வு அரசியலையும் சமாதான முன்னெடுப்புகளையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக்மாரப்பன நீக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்தும் சிவில் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்து வருவார்.

இதேபோலவே இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரிடமிருந்த ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பு நீக்கப்பட்டாலும் அவர் தபால் தொலைதொடர்பு அமைச்சராக இருந்து வருவார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து உள்துறை அமைச்சு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ விவகார அமைச்சராக அவர் இருந்து வருவார்.

புதிய செயலாளர்கள்

அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சிறில் ஹேரத் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக திலக்ரணவீர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்படவில்லை. ஜே.என்.யுனைத்தே தொடர்ந்தும் இருந்து வருகிறார்.

பாதுகாப்பு இரட்டிப்பு

ரூபவாகினி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் விரும்பத்தகாத வன்செயல்கள் தலைதூக்குவதை தடுக்கும் முகமாக நேற்று பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. கடற்படையினர் இங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

நன்றி: வீரகேசரி


- சாமி - 11-04-2003

2. இலங்கை பார்லி., முடக்கம்! * "எதிர்பாராத' அதிர்ச்சி திருப்பம் * அதிபர் சந்திரிகா விஸ்வரூபம் * 3 மந்திரிகள் திடீர் டிஸ்மிஸ் * நாடு முழுவதும் கொந்தளிப்பு

கொழும்பு: இலங்கையில் நேற்று பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதிபராக உள்ள சந்திரிகா அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்து ராணுவம் உட்பட 3 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தார். அத்துடன் நிற்காமல், பார்லிமென்டை இரண்டு வாரம் முடக்கி வைத்து விட்டார். இதனால், அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு உட்பட பல இடங்கள், ரணகளம் ஆகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் ரணில் நடத்தி வரும் பேச்சுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சந்திரிகா எடுத்துள்ள திடீர் முடிவால் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. "டிவி', "ரேடியோ' மின் நிலையங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளாக நிலவி வரும் இனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், அதிகார பகிர்வு தொடர்பான திட்டத்தை விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 31ம் தேதி நார்வே சமரச குழுவிடம் சமர்ப்பித்தனர். வரைவு திட்டத்தில், வடக்கு இலங்கையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது மற்றும் அதிகார பகிர்வு குறித்து குறிப்பிட்டு இருந்தனர். இடைக்கால அரசை 5 ஆண்டுகள் நிர்வகிக்க வேண்டும். இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பே ஆட்சி நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொள்வது உள்ளிட்டவை புலிகள் வரைவு திட்டத்தில் இடம் பெற்று இருந்தது.

புலிகளின் வரைவு திட்டத்தை அதிபர் சந்திரிகா ஏற்கவில்லை. இதற்கு முன்பு இலங்கையில் ஆட்சி புரிந்த அரசுகள் அளித்த திட்டங்களை புலிகள் நிராகரித்துவிட்டனர். இப்போது அவர்களாக அறிவித்த அதிகார பகிர்வை ஏற்றுக் கொண்டால் நாட்டில் பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என அதிபர் சந்திரிகா அஞ்சியதால் நேற்று அதிரடி முடிவுகளை எடுத்தார்.

அதிரடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அமெரிக்க அதிபர் புஷ்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிலையில் நேற்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

பார்லி முடக்கம்: இலங்கை பார்லிமென்ட்டை வரும் 19ம் தேதி வரை முடக்கி வைக்க சபாநாயகருக்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூன்று முக்கிய அமைச்சர்களான திலக் மரபானா (ராணுவம்), ஜான் அமரதுங்கா (உள்துறை), இம்தியாஸ் பக்கீர் மார்கர் (தகவல் தொடர்பு) ஆகியோரை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் வரைவு திட்டத்தை நிராகரித்த அதிபர் சந்திரிகா, இது நாட்டை பிரிவினைக்கு அழைத்து சென்று விடும் எனவும் கூறியுள்ளார்.

செயலர்கள் நியமனம்: மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் போலீஸ் ஐ.ஜி.,யும் தனது கட்சியின் ஆதரவாளருமான சிரில் ஹீரத்தை பாதுகாப்பு துறைக்கான புதிய செயலராகவும் அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார். இதே போல், தகவல் தொடர்புத் துறை செயலராக திலக் ரனாராஜய்யாவையும், உள்துறை அமைச்சக செயலராக தற்போதுள்ளவரையே நீடிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவம் குவிப்பு: முப்படைகளின் தளபதியாக அதிபர் சந்திரிகா உள்ளார். இதன் காரணமாக நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, "டிவி', ரேடியோ நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் உத்தரவுகள் அரசு கெஜட்டில் வெளியிடப்படும் என்பதால் அரசு அச்சகத்திற்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் ரணகளம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

முட்டுக்கட்டை: அதிபர் சந்திரிகாவின் இந்த அதிரடியால், புலிகளுடனான அமைதி முயற்சி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

சிக்கல்: ரணில் விக்ரமசிங்கே அரசு வரும் 12ம் தேதி இந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்தது. இந்நிலையில், சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரைராவுக்கு அதிபர் சந்திரிகா அனுப்பிய கடிதத்தில், பார்லிமென்ட்டை வரும் 19ம் தேதி வரை முடக்கி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படும் சூழ்நிலையும் அதிகரித்துள்ளது.

அதிகாரம்: அரசுக்கும், அதிபருக்கும் தற்போதுள்ள ஏற்பட்ட மோதல், இலங்கையில் புதிய அரசமைப்பு மாற்றம் செய்த பிறகு உருவாகிய உள்ள முதல் குழப்பம் ஆகும். புதிய அரசியல் சட்டப்படி, பிரதமர் உட்பட எந்த அமைச்சரையும் எவ்வித விளக்கமும் கூறாமல் நீக்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை தற்போது தான் சந்திரிகா முதன் முறையாக பயன்படுத்தியுள்ளார்.

சந்திரிகா கட்சி எதிர்ப்பு: இதற்கிடையில் அதிபர் சந்திரிகாவின் கட்சியும், பார்லிமெனட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள இலங்கை சுதந்திரா கட்சி விடுத்துள்ள 14 பக்க அறிக்கையில், "விடுதலைப்புலிகளின் வரைவு திட்டத்தை ஏற்க முடியாது' என குறிப்பிட்டு உள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: புலிகள் அறிவித்துள்ள இடைக்கால தன்னாட்சி ஆணைய நிர்வாகம் நாட்டை பிரிவினைக்கு துõண்டுவதாக அமையும். இது இலங்கையின் இறையாண்மையை பாதிப்பதோடு, அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது.

புலிகள் அறிவித்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று அமைதி தீர்வு காண வேண்டும் என்று இலங்கையை சர்வதேச நாடுகள் வற்புறுத்த கூடாது. இந்த விஷயத்தில் எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் எங்கள் கட்சி அனுமதிக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சந்திரிகா கட்சி சார்பில் இது வெளியிடப்பட்டாலும் இது தான் அதிபர் சந்திரிகாவின் கருத்தாகும் என கட்சியினர் அடித்து கூறுகின்றனர்.

மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து, அதிபர் சார்பாகவோ, அவரது அலுவலகத்தில் இருந்தே எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.

காரணம் இது தான்: புலிகளுடனான அமைதி முயற்சியை கவனித்து வந்தது பாதுகாப்பு அமைச்சர் திலக் மரபானா தான். புலிகளுக்கு சலுகை வழங்க இவர் தான் காரணமாக இருந்துள்ளார் என சந்திரிகா குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்துவதற்கு காரணமாக இருந்தார் என்பதற்காக உள்துறை அமைச்சர் ஜான் அமரதுங்காவை நீக்கம் செய்ததாகவும், தனது அதிரடி உத்தரவை எங்கே அரசு அச்சகத்தில் அச்சடிக்க விடாமல் தடுத்து விடுவாரோ எனக் கருதி தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இம்தியாசை நீக்கி விட்டார் எனவும் இலங்கை சுதந்திரா கட்சியினர் கூறுகின்றனர். இந்த மூன்று அமைச்சர்களும் வேறு இலாகாக்களை கூடுதலாக கவனித்து வந்தனர். எனவே அந்த இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர்களாக தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பர்.

நாட்டில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் ராணுவம் முழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் சுமேதா பெரேரா கூறினார்.

கொந்தளிப்பை விளைவிக்கும் ரணில் குற்றச்சாட்டு

கொழும்பு: "அதிபர் சந்திரிகாவின் பொறுப்பற்ற நடவடிக்கை குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். நாட்டில் ரத்தக்களரி ஏற்பட வழிவகுக்கும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

அதிபர் புஷ்சை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு, அதிபரின் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திரிகாவின் நடவடிக்கையை குறை கூறி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் ரணில் கூறியிருப்பதாவது:

அதிபர் சந்திரிகாவின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை நாட்டை குழப்பத்தில் தள்ளியுள்ளது. நாட்டில் கலவரம் வெடித்து ரத்தக்களரி ஏற்படுவதற்கு துõண்டி விட்டுள்ளார். புலிகளுடனான அமைதி முயற்சிக்கு இடையூறு அளிப்பதற்கு அதிபர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எமது அரசு புலிகளுடனான அமைதி முயற்சிகளை கைவிடாது.

இந்த சூழ்நிலையில் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். ராணுவத்தினர், போலீசார், அரசு ஊழியர்கள் அமைதி காக்க வேண்டும். அமைதி முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அனைவரும் ஒற்றுமை காக்க வேண்டும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 11-05-2003

புதிய வெளியீடு
<img src='http://www.smithsonianlegacies.si.edu/photos/100.jpg' border='0' alt='user posted image'>
திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்கவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியயோர் நடித்த
<b><span style='font-size:30pt;line-height:100%'>மாமா போட்ட விதை
மருமகன் அறுவடை</span>
[Image: old-man.jpg][Image: Sri-Lanka%2520d.gif]

கதை-வசனம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>J.R.ஜெவர்தனா</span>
[Image: images]
இயக்கம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>சந்திரிகா குமாரணதுங்க</span>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/su_hiru_attack_05_18731_435.jpg' border='0' alt='user posted image'>
சண்டைப்பயிற்சி:<span style='color:red'>[b]சிங்கள உருமய </b>

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/kadirgamar_lakshman_2-p.jpg' border='0' alt='user posted image'>[size=15]
பின்னணி இசை</span>
<span style='color:red'><b>கதிர்காமர்</b>

[Image: Ranil.gif]
[size=18]ரசிகன்</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணில் விக்ரமசிங்க</span>

:twisted: மாமா J.R.ஜெவர்தனா உருவாக்கிய சட்டங்கள், மருமகன் ரணிலுக்கு வினையாகி உள்ளது.

:oops: விதை விதைத்தவன் விதை அறுப்பான்
வினை விதைத்தவன்................?
பார்த்து மகிழுங்கள்.............
இலங்கை தேசம் முழுவதும் வெற்றி நடை போடுகிறது.
[b]<span style='font-size:30pt;line-height:100%'>மாமா போட்ட விதை
மருமகன் அறுவடை</span>

(திருட்டு VCD,DVD கள் விற்பனையானால் உடன் அதிபருக்கு அறிவியுங்கள்.இதைத் தடுப்பதற்கு அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது?)


- yarl - 11-05-2003

சண்டைப்பயிற்சி யார்?


- Paranee - 11-05-2003

நான் என்னுடைய பெயரை போடலாம் என்றிருக்கின்றேன். !


- Paranee - 11-05-2003

இறுதியாக கிடைத்த தகவலின்படி அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதைப்பற்றிய தகவல்கள் தெரிந்தால் தரவும்


- தணிக்கை - 11-05-2003

அதுமட்டுமோ நிதி அமைச்சும் பறிபோட்டுதாம்.


- kuruvikal - 11-05-2003

மேலும் செய்திகளுக்கு...

http://www.yarl.com/forum/viewtopic.php?p=12423#12423


- AJeevan - 11-05-2003

யாழ்/yarl Wrote:சண்டைப்பயிற்சி யார்?

<span style='font-size:22pt;line-height:100%'><b>சிங்கள உருமய </b>

பின்னணி இசை
<b>கதிர்காமர்</b></span>

Karavai Paranee Wrote:நான் என்னுடைய பெயரை போடலாம் என்றிருக்கின்றேன். !

சிங்கள உருமயவுடன் முடிந்தால் முயலுங்கள் பரணி


- விதுரன் - 11-05-2003

comedy பாத்திரத்திற்கு மதியைப் போடுவமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Paranee - 11-05-2003

சிங்கள உருமய உறும மட்டும்தானே !

நான் ரெடி அவர்கள் ரெடியா ?


- Mathivathanan - 11-05-2003

விதுரன் Wrote:comedy பாத்திரத்திற்கு மதியைப் போடுவமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஒரு கதாபாத்திரத்தைத் தந்தாவது அமத்திப்போடுவம் எண்டு நினைக்கிறியளாக்கும். உங்களை மாதிரி நடிக்க எனக்கு வராதப்பா.. ஒரே பாத்திரம்தான் எப்போதும். அதுக்குள்ளை அவியிறதை விருப்பமெண்டால் தின்னுங்கோ.. விருப்பமில்லாட்டால் கொட்டுங்கோ.. ஆகலும் மோசமெண்டால் திரும்ப என்ரைதலையிலையே கொட்டுங்கோ.. பிரச்சனையில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- yarl - 11-05-2003

பாத்திரத்தை கறள் பிடிக்க விடாதேங்கோ


- Paranee - 11-05-2003

அப்ப அன்றிலிருந்து இன்றுவரை கொட்டுவதைத்தான் எடுத்துவைத்திருக்கிறியள் என்ன தாத்தா ?
Quote:ஆகலும் மோசமெண்டால் திரும்ப என்ரைதலையிலையே கொட்டுங்கோ.. பிரச்சனையில்லை



- Paranee - 11-05-2003

கறளை பாத்திரத்தோடே வைத்திருங்கள்.

யாழ்/yarl Wrote:பாத்திரத்தை கறள் பிடிக்க விடாதேங்கோ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->