Yarl Forum
கமரா கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கமரா கவிதைகள் (/showthread.php?tid=7826)

Pages: 1 2 3


கமரா கவிதைகள் - AJeevan - 11-11-2003

<img src='http://www.yarl.com/forum/files/france.jpg' border='0' alt='user posted image'>
france foto by: ajeevan
<span style='font-size:25pt;line-height:100%'>தேசங்கள் வேறானாலும்
தேவைகள் ஒன்றே...........</span>



<span style='font-size:17pt;line-height:100%'>சண்முகியின் கருவை வைத்து வரிகள் (சேர்த்து) பின்னர் எழுதப்பட்டுள்ளது.
AJeevan</span>


- shanmuhi - 11-11-2003

இனபேத மற்ற நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.


- AJeevan - 11-11-2003

<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.jpg' border='0' alt='user posted image'>

[size=18]வேண்டாத
மானுடத்திலும்
பேதமற்ற
உறவுகள்


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/1_200.jpg' border='0' alt='user posted image'>
Basel Carnival-Switzerland

<span style='font-size:25pt;line-height:100%'>வேஷதாரி மனிதர்களுடன்
வேஷமறியா குஞ்சுகள்............</span>

<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/2_963.jpg' border='0' alt='user posted image'>
Negombo - Sri Lanka

<span style='font-size:25pt;line-height:100%'>படமெடுக்கும் பாம்புகள்............</span>

<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/5.jpg' border='0' alt='user posted image'>
Switzerland
[b]<span style='font-size:25pt;line-height:100%'>காத்திருக்கும் கண்கள்............</span>

<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
Switzerland
[b]<span style='font-size:25pt;line-height:100%'>கலைந்து போன கோலங்கள்............</span>

<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/7.jpg' border='0' alt='user posted image'>
Switzerland
[b]<span style='font-size:25pt;line-height:100%'>வான் தோட்டத்தில் துாரத்து உறவு............</span>

<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/6.jpg' border='0' alt='user posted image'>
Switzerland- விஞ்ஞானிகளுக்கு சமர்ப்பணம் -
[b]<span style='font-size:25pt;line-height:100%'>எம் நோய் தீர்க்க,அன்று நீ மரித்த இரசாயன பூங்கா............</span>


<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/9.jpg' border='0' alt='user posted image'>
Switzerland

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஆண்டவா,எம்மோடு நீயுமா புலம் பெயர்ந்து விட்டாய்............</span>


<span style='font-size:17pt;line-height:100%'>foto by:ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/8.jpg' border='0' alt='user posted image'>
Switzerland

[b]<span style='font-size:25pt;line-height:100%'>கலைஞனே உன் கற்பனையின் வண்ணப் புதுக் கவிதையா இது...........</span>


<span style='font-size:17pt;line-height:100%'>foto by: ajeevan</span>


- AJeevan - 11-12-2003

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஹே ராம்..</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/war.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
ஹே அல்ஹா
உன்
ராஜ்யத்தில்
மயான அமைதி
உன்
தொழுகையில்
கல்லறைப் பூக்கள்

ஹே அல்ஹா
எரிகின்ற புகைவண்டிகளில்
இனி
உன்னுடைய
குறான் ஒலிக்கட்டும்
உன்
புண்ய புமிகள்
எரியும் போது
யாருக்காக
ஹஜ் யாத்திரை

ஹே அல்ஹா
உன் விருந்துக்காக
சிந்தப்பட்டது
ஆடுகளின் இரத்தமல்ல

விலைபேசப்படும்
வியாபாரச் சந்தையில் கூட
நியாய - அநியாயங்களை
பட்டியல் போட்டு
பாடம் படித்தவனே
மனித உயிர்களின் விலை
உன்
பட்டியலில் இருந்து
எப்போது விடுபட்டது
எப்படி விடுபட்டது

மராட்டிய தமிழ் கவி: புதிய மாதவி

நன்றி: http://worldtamilnews.com/


- Paranee - 11-12-2003

அருமையான படங்கள்
அவற்றிற்கு வார்த்தைகளில் நாம் ஏன் கவிதைகள் வடிக்கவேண்டும். அவையே அழகான கவிதைகளாக இருக்கின்றன

நன்றி அஜீவன் அண்ணா 1
இன்னமும் தாருங்கள் என் கண்கள் தவிக்கின்றன. . . .


- AJeevan - 11-12-2003

Karavai Paranee Wrote:அருமையான படங்கள்
அவற்றிற்கு வார்த்தைகளில் நாம் ஏன் கவிதைகள் வடிக்கவேண்டும். அவையே அழகான கவிதைகளாக இருக்கின்றன

நன்றி அஜீவன் அண்ணா 1
இன்னமும் தாருங்கள் என் கண்கள் தவிக்கின்றன. . . .

அன்பு பரணி,
உங்கள் கவிதைகள் பற்றி பல நண்பர்கள் என்னிடம்
வியந்ததுண்டு, நானும்தான்.
உங்கள் கவிதைகளில் ஒரு பெரும் கவிஞரின் வாசனை என் மூக்கைத் துழைக்கும்..................எனக்கு பிடித்த கவிஞர்களில் அவரும் ஒருவர்.கவிதையில் அழகையே பொய்யுரைத்து மயக்கும் கரு மனிதர்.

உங்கள் கவிதைகள் என் புகைப்படங்களுக்கு மாலையானால் அதுவே தனி அழகுதான்............
இது பொய்யுரையல்ல.

உங்களைப் போல்,திறமை கொண்டோர், உண்மையுள்ளத்துடன் பல புது முகங்களை உருவாக்கி மனித நேயத்தை சொல்ல வைக்க வேண்டுகிறேன்.
(யாழுக்குள்ளும் நல்ல பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.)
உங்களுக்காகவே ஒன்று
எழுதுங்கள், என் கல் அறையிலல்ல.............
கீழ் வரும் படத்துக்கு உங்கள் கவியை...............
<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.1.jpg' border='0' alt='user posted image'>
[size=12]foto by: ajeevan


- Paranee - 11-12-2003

ஏக்கம் விழிகளில் !
ஏங்கவைத்தவன் யாரோ ?
அவிழ்ந்துவிடத்துடிக்கும் மொட்டுக்களாய் இதழ்கள்
அவிழத்துவிடேன் என் செவிகளில் மொட்டவிழும் ஓசை
ஓங்கியே ஓலிக்கட்டும்

கோபமா ?
என் தாமதம் உன்னை எரிமலையாக்குமா ? இல்லை
இடிமின்னலலோடு முரணாய் வீழும் மழைத்துளியாக்குமா ?
கொவ்வைப்பழம் சிவக்கமறுத்ததேன்உன் செவ்விதழ் மேல்காயும் இச்செம்மை தான் கண்டதோ ?
தொட்டுப்பார்க்கின்றாயா ?
உன் இதயத்துடிப்பு எப்படி ஓலிக்கின்றதென
பைத்தியக்காரி !
நானொருவன் காக்கவைத்தபின்
லப்டப் எங்கே ஓலிக்கும்
அது ஒழிந்துபோய்நிற்கும்
உன் காத்திருந்து களைத்தோய்ந்த விழிகள் என்னை காமம்கொள்ளவைக்குதடி !

அழகிய சுடர்விழியே !
கொஞ்சம் அணைந்துகொள்ளேன்
நான் ஆசவாசம்கொள்ள. .


- Paranee - 11-12-2003

வணக்கம்

அண்ணா என்ன இது!
இப்படி சொல்கின்றீர்கள். துளியாய் இருந்த என்னை சாரலென்று சொல்கின்றீர்களே !
களத்தில் உள்ள கவிமழை பொழியும் நண்பர்கள் முன்னே நான் வெறும் துளிகள்தான்.

நன்றி அண்ணா நன்றி

உங்கள் படத்திற்கு கவிதை அழகுற அமைக்க ரேமின்மை பெரும்குறை. எனினும் இது கிடைத் இந்த சொற்ப நேரத்தில் சிந்தியது.

நட்புடன் பரணீதரன்

Quote:அன்பு பரணி,
உங்கள் கவிதைகள் பற்றி பல நண்பர்கள் என்னிடம்
வியந்ததுண்டு, நானும்தான்.
உங்கள் கவிதைகளில் ஒரு பெரும் கவிஞரின் வாசனை என் மூக்கைத் துழைக்கும்..................எனக்கு பிடித்த கவிஞர்களில் அவரும் ஒருவர்.கவிதையில் அழகையே பொய்யுரைத்து மயக்கும் கரு மனிதர்.

உங்கள் கவிதைகள் என் புகைப்படங்களுக்கு மாலையானால் அதுவே தனி அழகுதான்............
இது பொய்யுரையல்ல.

உங்களைப் போல்,திறமை கொண்டோர், உண்மையுள்ளத்துடன் பல புது முகங்களை உருவாக்கி மனித நேயத்தை சொல்ல வைக்க வேண்டுகிறேன்.
(யாழுக்குள்ளும் நல்ல பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.)
உங்களுக்காகவே ஒன்று
எழுதுங்கள், என் கல் அறையிலல்ல.............
கீழ் வரும் படத்துக்கு உங்கள் கவியை...............



- AJeevan - 11-12-2003

[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஏங்கவைத்தவன் யாரோ?</span>
<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
[size=12]foto by: ajeevan

ஏக்கம் விழிகளில் !
ஏங்கவைத்தவன் யாரோ ?
அவிழ்ந்துவிடத்துடிக்கும் மொட்டுக்களாய் இதழ்கள்
அவிழ்த்துவிடேன் என் செவிகளில் மொட்டவிழும் ஓசை
ஓங்கியே ஓலிக்கட்டும்

கோபமா ?
என் தாமதம் உன்னை எரிமலையாக்குமா ? இல்லை
இடிமின்னலலோடு முரணாய் வீழும் மழைத்துளியாக்குமா ?
கொவ்வைப்பழம் சிவக்கமறுத்ததேன்உன் செவ்விதழ் மேல்காயும் இச்செம்மை தான் கண்டதோ ?
தொட்டுப்பார்க்கின்றாயா ?
உன் இதயத்துடிப்பு எப்படி ஓலிக்கின்றதென
பைத்தியக்காரி !
நானொருவன் காக்கவைத்தபின்
லப்டப் எங்கே ஓலிக்கும்
அது ஒழிந்துபோய்நிற்கும்
உன் காத்திருந்து களைத்தோய்ந்த விழிகள் என்னை காமம்கொள்ளவைக்குதடி !

அழகிய சுடர்விழியே !
கொஞ்சம் அணைந்துகொள்ளேன்
நான் ஆசுவாசம்கொள்ள.
-கரவை பரணீதரன்
_________________
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?
______ PARANEETHARAN_______
<img src='http://www.angelfire.com/alt2/paranee/Banner.jpg' border='0' alt='user posted image'>


- kuruvikal - 11-12-2003

<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
படம்..அஜீவனின் கமராவண்ணம்...!

கருமை கொள்
விற்புருவம்
இன்று
கரும் பென்சில் தீட்டிய
கருமுக்கோணமாகியது...!
உடல் கொள் செங்குருதி
தன்னிலை செப்பி நின்ற செவ்விதழ்
இன்று
சாயத்தால் பிரதியீடாகி
உடற் பலவீனம் காட்டுது...!
கார் மேகமாய்
பூச்சூடிப் புகழ் பெற்ற கூந்தல்
இன்று
இராசாயனத்தின் தேக்கிடமாகி
கத்தரியின் வித்தையிலே
பேய்க் கோலம் காட்டுது....!

ம்ம்ம்...
பெண்ணென்றால் தனியழகு - என்று
கவிகள் பல படித்ததுண்டு
இன்று
பெண் தன் தனியழகிழந்து
துணையழகு பெற்றதேன்...!

உண்மையில்
பெண் அழகுதானா.....?!
அன்றில் கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
இன்று
எங்குதான் நேர்மையும்
இயற்கையும் தம் அழகு காட்டுது
அது அந்தக்காலம்
நம்ம பாட்டி காலம்
பாட்டி...பாட்டி...பாட்டி!

ஆனால்
கமரா மட்டும்
உண்மை சொல்லுது....!


- nalayiny - 11-12-2003

அஐPவன் நானும் இணைத்துக்கொள்ளவா உங்கள் தலைப்பின் கீழ் .என் கமறாக் கண்களுக்குள் சிக்குண்ட இயற்கையை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 11-12-2003

அபாரம் கவிஞர்களே,
உங்களுக்குள்
எத்தனை
எத்தனை
திறமைகள்........


கமராவுக்குள்
மட்டுமே - என்
கண்கள்
குத்தி நிற்கும்
இன்று
உங்கள் கவிக்குள்
சொக்கி
நிற்குதே.........

குருவிகள்
வந்து
பரணி(ண்) மீது
சொக்கியதோ
இல்லை
பரணீதரன்
தேனீயாய்
குருவிக்கு
சொக்கு பொடி
போட்டதோ...........

கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
அவிழ்ந்துவிடத்துடிக்கும் மொட்டுக்களாய் இதழ்கள்
அவிழ்த்துவிடேன் என் செவிகளில் மொட்டவிழும் ஓசை
ஓங்கியே ஓலிக்கட்டும்..........

நன்றிகள்: பரணீதரன் மற்றும் குருவிகளுக்கு..........

அன்புடன்
AJeevan
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
<img src='http://www.capricorn007.com/1289/mouse.gif' border='0' alt='user posted image'><img src='http://www.angelfire.com/retro/az/rooster.gif' border='0' alt='user posted image'>