![]() |
|
இனிய து}றலிது....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இனிய து}றலிது....! (/showthread.php?tid=7730) |
இனிய து}றலிது....! - shanthy - 11-27-2003 இனிய து}றலிது....! தடைகள் உடைந்து வீழ தலை நிமிர்ந்து செருக்கொடு நடந்தவரே ! முகவரி தந்தெங்கள் முகம் நிமிர்த்திய மூத்தவரே ! இரவுகள் இடி முழங்க இருளதிர்ந்து ஒளிகீற உறவுகள் நினைவெங்கும் உங்களின் அதிர்வுகள். ஒவ்வொரு துளியிலும் உங்களின் ஒளி நிழல் உயிரி;லே விழுந்திட இமைகளில் கார்த்திகை இதழ் விரித்து உயிர் காணும். இருள் முகம் உங்களின் ஒளியினில் ஒளியாகும். வான்வெளி மின்னித் திரியும் நட்சத்திர விளக்கெங்கும் உங்கள் முகம் முளைத்திருக்கும். ஊரில் இன்று உங்களை நினைவு கொண்டு துயிலிடங்கள் எல்லாமே து}றல் மழை நனைக்க ஒளிப்பந்து அருகில் நாட்டி உறவுகள் எல்லாரும் அருகருகாய் நின்று அவருணர்வு பகர்கின்றார்.... ஒளியலையில் எல்லாமே உங்கள் நினைவுகள் அள்ளி வந்து பொழிகிறது. அழுகிறோம்.... உம் நினைவு தெளித்து - எம் உயிரெங்கும் ஊர் வந்து உங்கள் அருகிருந்து அழுவதாய் ஓர் உணர்வு.... அது தாண்டி மனசெங்கும் ஏதோ பெரும் நினைவு... எல்லாம் உமதாக.... இங்கும் து}றல் மழை விளக்கேற்றி உம் முகம் காணும் நிழற்படத்தில் விழிபதிய துளித்துளியாய் சிறுது}றல்..... சன்னல் கண்ணாடி சத்தமிட்டு அழைக்கிறது. முன்னொரு வருடமும் முகர்ந்திராத வாசமிது.... தலைவர் உரை செவிபாய இரைச்சலோடு பெரும் து}றல்..... இதுவும் இன்று மட்டும் உணர்ந்து கொண்ட இனிய து}றல்..... 27.11.03. - இளைஞன் - 11-29-2003 2003 இன் கார்த்திகை 27 நிகழ்வுகளை பதிவுபடுத்துகிற கவிதை. அதிலும் எனக்குப் பிடித்த அருமையான வரிகள் இவை. Quote:இரவுகள் இடி முழங்க "ஒவ்வொரு துளியிலும் உங்களின் ஒளி நிழல்" மனதுக்குள் மறுபடி மறுபடி ஒலித்துக்கொள்ள ஆசைப்படுகின்றன. கருத்தோடு கவர்ந்தீர்க்கும் வரியமைப்பு. தொடர்க... |