Yarl Forum
paaddu - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: paaddu (/showthread.php?tid=7630)



paaddu - vasisutha - 01-02-2004

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
----
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலிதாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ
நீ மோதி விடு

-----

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு

மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உறவாகும்

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என்தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு


- shanmuhi - 01-02-2004

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்

அருமையான வரிகள்.....


Re: paaddu - shanthy - 01-02-2004

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு

மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி  
எல்லாமே உறவாகும்

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என்தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நெஞ்சைத் தொட்ட வரிகள்.


- vasisutha - 01-03-2004

பாடலைக் கேட்க http://www.tamilsongs.net/page/build/movie...raph/index.html 8)


- shanmuhi - 01-03-2004

அந்தப்பாடல் எந்தப்படத்தில் என்று எழுதினால்..... கேட்க உதவியாக இருக்கும் தானே


- shanmuhi - 01-03-2004

ஓ... பார்த்து விட்டேன் வசிசுதா.


- vasisutha - 02-16-2004

[size=14] கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத் தோழி
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்புத் தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்புத் தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் அன்புத் தோழி

தாகம் என்று சொல்கிறேன் மரக்கன்று ஒன்று தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மணி ஒன்றை தருகிறாய்
உந்தன் கைவிரல் பிடிக்கையில் புதிதாய் நம்பிக்கை பிறக்குது.
உந்தன் கூட நடக்கையில் ஒன்பதாம் திசையும் திறக்குது

என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க நீ உன்னையே உளியாய் தந்தாய்
என் பலம் எதுவென்று எனக்கு நீ இன்றுதான் உணரவைத்தாய்
_______________
மழையோ உந்தன் புன்னகை மனசெல்லாம் மெல்ல நனையுதே
பனியோ உந்தன் பார்வைகள் என் கண்ணிமை மயிர்களில் து}ங்குதே
வேருக்குள் விழுந்த நீர்த்துளி புூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்படும் உற்சவம் எனையும் குது}கலப்படுத்துதே

தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட உனை கொடுத்திட மாட்டேன் தோழி