![]() |
|
கருத்துக்களம் வன்செயலை வளர்க்கிறதா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கருத்துக்களம் வன்செயலை வளர்க்கிறதா? (/showthread.php?tid=7588) |
கருத்துக்களம் வன்செய - ganesh - 01-16-2004 கருத்துக்களத்தின் மூலம் வஞ்செயல் வளர்வதாக இதனைப்படிததுவரும் பெரும்பாலேர் சொல்வதைக்கேட்கமுடிகிறது இது உண்மையா? பல தரமான தலைப்புக்கள் உதாரணமான கணனி வீடியோ மருத்துவம் போன்ற எத்தனையோ பயன்தரக்கூடியதகவல்கள் இருந்தபோதும் ஒரு சில பகுதிகள் மூலம் இந்தக்கருத்துக்களத்தின் தரம் குறைந்துள்ளது என்பது ஒரு சிலரின் கருத்து சிலர் தமது பிள்ளைகளை கருத்துக்களத்திற்கு செல்ல தடைவிதித்துள்ளதை அறியமுடிகிறது ஆகவே தயவுசெய்து உண்மையாக மனச்சாட்சியின்படி உங்கள் கருத்தை எழுதுங்கள் இக்கருத்தினைக்கொண்டு பொறுப்பாளர்கள் மேல் நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும் இவர்கள் தற்போது மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அப்படிசெய்யாவிட்டால் எமதுசகோதரசமூகங்களுக்கும் எமக்கும் இடையில் ஒற்றுமையின்மையை உண்டாக்கும் [size=18] அழுகியபழங்களுடன் நல்ல பழங்களை வைக்காதீர்கள் இதனால் நல்ல பழங்களும் அழுகிவிடும் சிறுவர்களும் இணைந்து கருத்துஎழுதுவதற்கு உதவிசெய்யுங்கள் - kuruvikal - 01-16-2004 இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll: ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- vasisutha - 01-16-2004 <img src='http://www.yarl.com/forum/images/avatars/18871924323fda3c95de2c3.jpg' border='0' alt='user posted image'>கணேஷ் முதலில் இந்தப் படத்தை மாற்றிக் கொண்டு வாருங்கள்! இதைப்பார்த்த சில சிறுவர்கள் பயந்து போய் களத்துக்கு வர மறுக்கிறார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஏன் எனக்கே பயமாய் இருக்கு! ஒரு வகையில் உந்தப் படமும் வன்முறையை து}ண்டுகிறது. எப்படியென்றால் படத்தைப் பார்த்ததும் தடியால் உங்களை (அதாவது படத்தை) அடிக்கவேண்டும் போல உள்ளது! :x - ganesh - 01-16-2004 கார் அடிக்கும் என்றால் அப்பாதைக்கு பெற்றோர்கள் விடமாட்டார்கள் வேறுபாதையால் போகச்சொல்வார்கள் இது தான் உண்மை [quote="kuruvikal"]இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll: ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....! - ganesh - 01-16-2004 இப்படத்திற்கு சிறுவர்கள் பயப்படமாட்டார்கள் அவர்கள் இப்படத்தில் உள்ளவர் எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் இருப்பார்கள் இவர் ஒவ்வொருவருடமும் வந்து அன்பளிப்புகளை வழங்கிச்செல்வார் இப்படத்தை ஒருவரின் ஞாபகமாக வைத்தள்ளேன் ஆகவே பயப்படத்தேவையில்லை - ganesh - 01-16-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->இப்படத்திற்கு சிறுவர்கள் பயப்படமாட்டார்கள் அவர்கள் இப்படத்தில் உள்ளவர் எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் இருப்பார்கள் இவர் ஒவ்வொருவருடமும் வந்து அன்பளிப்புகளை வழங்கிச்செல்வார் இப்படத்தை ஒருவரின் ஞாபகமாக வைத்துள்ளேன் ஆகவே பயப்படத்தேவையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - shanthy - 01-16-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->இப்படத்திற்கு சிறுவர்கள் பயப்படமாட்டார்கள் அவர்கள் இப்படத்தில் உள்ளவர் எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் இருப்பார்கள் இவர் ஒவ்வொருவருடமும் வந்து அன்பளிப்புகளை வழங்கிச்செல்வார் இப்படத்தை ஒருவரின் ஞாபகமாக வைத்தள்ளேன் ஆகவே பயப்படத்தேவையில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll:
- Kanakkayanaar - 01-17-2004 கணேசவர்களே, வன்செயல் வன்செயல் என்று கூச்சல் போடாத குறையாக கூறுகிறீர்கள். சிறுவர்கள் வேறு பங்கு கொள்ள வேண்டும் என விழைகிறீர்கள்?!(உண்மையிலேயா?) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால், நீங்களே, கடிப்பகுதி என்று வைத்துக் குதறித் தளுகிறீர்களே. தந்தையின் தாயை ... சீ தட்டெழுதவே என் விரல்கள் மறுக்கின்றன. அது மட்டுமா, நகைச்சுவை என்ற பெயரில் தமிழரை எள்ளுவது. உங்கள் தமிழரைக் கீழ்த்தனமாகச் சித்தரிக்கும் இடுகைகள், புலம்பெயர்ந்து வாழும் சிறார்களை தமிழ்ப்பாரம்பரியத்தில் இருந்து விலத்தும் என எண்ணவில்லையா? ஆகவே இன்செயலை உங்கள் இடுகைகளிலிருந்து தொடங்குங்களேன். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இப்படத்திற்கு சிறுவர்கள் பயப்படமாட்டார்கள் அவர்கள் இப்படத்தில் உள்ளவர் எப்பொழுது வருவார் என்று ஆவலுடன் இருப்பார்கள் இவர் ஒவ்வொருவருடமும் வந்து அன்பளிப்புகளை வழங்கிச்செல்வார் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படியா, இது ஒரு ஒல்லந்தர் வழக்கமா, இப்படத்துக்குரியவரைப் பற்றி சற்று விரித்துரையுங்களேன். - kuruvikal - 01-17-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கார் அடிக்கும் என்றால் அப்பாதைக்கு பெற்றோர்கள் விடமாட்டார்கள் வேறுபாதையால் போகச்சொல்வார்கள் இது தான் உண்மை <!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll: ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....!<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> இப்படியே கார் போகாத பாதையையே தேடிக்கொண்டிருந்தால்...போகும் இடம் முடிவிலியாகத்தான் இருக்கும்....அதாவது இலக்கை அடைய இப்பிறப்பல்ல பல பிறப்பு அவசியம்....! ஏதாவது உருப்படியா சொல்லுங்கோவன் சின்னப்பிள்ளையள் உருப்படுற மாதிரி.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- ganesh - 01-17-2004 சிறுவர்கள் தவறுசெய்துதான் திருந்தவேண்டுமா? உங்கள் பிள்ளைகளுக்கு தவறான பழக்கங்களை பழக்குவீர்களாக? பின்பு அவர்கள் அப்பழக்கவழக்கங்களில் இருந்துவிடுபடுவார்களா? வெள்ளம்வர முன்பு அணைகட்டவேண்டும் வந்தபின் கட்டும் அணை நிலையாக நிற்காது வருத்தம் வந்து சுகமாவதைவிட வருத்தம் வராமல் பாதுகாத்துகொள்வது மிகவும் நல்லது - ganesh - 01-17-2004 கடிப்பகுதி எவரையும் புண்படுத்த வேண்டுமென்ற காரணத்தினால் ஆரம்பிக்கவில்லை நெதர்லாந்துக்காரர் என்ற தை நான் தமிழன் என்று மாற்றியுள்ளேன் (கடிப்பகுதிகள் நெதர்லாந்து நகைச்சுவை பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது ஆனந்தவிகடனில் இருந்து எடுக்கப்பட்டது என்றால் அது தவறாகும் இந்தியசஞ்சிகைகளில் வரும் நகைச்சுவைகள் பெரும்பாலானவை பல வருடங்களுக்குமுன் இங்குள்ள சஞ்சிகைகளில் வந்துள்ளதை அறியமுடிகிறது) - shanthy - 01-18-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->சிறுவர்கள் தவறுசெய்துதான் திருந்தவேண்டுமா? உங்கள் பிள்ளைகளுக்கு தவறான பழக்கங்களை பழக்குவீர்களாக? பின்பு அவர்கள் அப்பழக்கவழக்கங்களில் இருந்துவிடுபடுவார்களா? வெள்ளம்வர முன்பு அணைகட்டவேண்டும் வந்தபின் கட்டும் அணை நிலையாக நிற்காது வருத்தம் வந்து சுகமாவதைவிட வருத்தம் வராமல் பாதுகாத்துகொள்வது மிகவும் நல்லது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :?: :?: :?: :?: :?: :?: :roll: - sOliyAn - 01-18-2004 குளத்தில குதிக்காதே என்று பொத்திப் பொத்தி வைச்சா.. அந்தப் பிள்ளை நீச்சல் தெரியாமலே இருக்க வேண்டியதுதான். ஓடாதே.. தடக்கி விழுந்துடுவாய் என்று தடுத்தா.. அந்தப் பிள்ளை ஓட்டம் தெரியாமலே இருக்கவேண்டியதுதான். சீட்டு.. வட்டி.. சீதணம்.. முதுகில குத்துதல்.. புறஞ் சொல்லுதல்.. காட்டிக் கொடுத்தல்.. பொறாமை எரிச்சலால் அடிப்படை எதுவுமேயறஇறு துாற்றுதல்.. போலிக் கெளரவத்துக்காக தெரியாத விசயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளுதல்.. இவ்வாறு எத்தனையோ குப்பைகளுள் சிறுவர்களை வாழ.. பழகவிடுபவர்களா கருத்துக்களத்துக்குப் பயப்படுவது?! ஆக மொத்தத்தில்.. கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது என்பது உண்மைதான்.. கணேஸ்..! கழுதைகள் காகிதங்களை உண்பதோடு நிற்கட்டும்! வாசிக்க முற்பட்டு கஸ்டப்படவேண்டாம். - ganesh - 01-19-2004 சிறுவர்களை மட்டும்வைத்து கருத்து எழுதாமல் பொதுவாக எழுதுங்கள் - Paranee - 01-19-2004 :oops: :oops: - kuruvikal - 01-19-2004 எதுக்குக் கோபம் பரணி.....சில தாய் தக்கபன் தங்கட வீட்டில நடக்கிறது தெரியாமல் இருக்க பிள்ளையளை வெளியில விடமாட்டினம்.... கேட்டா சொல்லுவினம்... அது வெளியில போனா கெட்டுப் போடும் என்று....ஆனா வீட்டுக்கேயே அது கெட்டு குட்டிச் சுவராக எல்லாம் நடக்கும்...அது அந்தப் பெற்றோருக்கு விளங்காது... ஏனென்றால் அதுகளும் கிணத்துத் தவளைகள் தான்....கிணத்தில இருக்க விரும்பிற தவளை கிணத்துக்க இருக்கட்டும்...தரையிலும் வந்து வாழ விரும்பிறது கரடுமுரடுகள் கண்டு வாழட்டும்.....அது தவளையின் ஆளுமையைப் பொறுத்தது.....! யாழ் களம் கிணறில்ல.... பரந்து விரிந்த தேசம்...பாலைவனமும் இருக்கும்... சோலையும் இருக்கும்... பூங்காவும் இருக்கும்... மலையும் இருக்கும்... வயலும் இருக்கும்...ஏன் கடலும் இருக்கும்....தேவையானவை தேவையான இடத்தில தரித்து சுகித்துச் செல்லலாம்.....ஒரு போதும் கிணறா இருக்கக் கூடாது.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- ganesh - 01-19-2004 நன்றி உங்கள் கருத்துக்கு - sOliyAn - 01-20-2004 சில வருடங்களுக்க முன்னர் உண்மையாகவே நிகழ்ந்த ஒரு விசயத்தை இங்கே குறிப்பிடலாமென நினைக்கிறேன். சிலவேளை இதை ஏற்கெனவே யாழ் பழைய கருத்துக்களத்தில் குறிப்பிட்டிருக்கலாம். சரியாக நினைவில் இல்லை. பதினாறு வயதான மகன்.. ஜிம்னாசியம் என்று கூறப்படும் பிரிவில் கல்வி கற்பவர். ஒருநாள் தாயும் தகப்பனும் ஒரு வைபவம் ஒன்றுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மகன் மலசலகூடத்தினுள் இருந்தார். 'ஒரு இடமும் போகாமை உங்கையே இருக்கணும்' என்று தாயோ தந்தையோ உரத்த குரலில் மகனுக்கு கேட்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்கள். வைபவத்தால் திரும்பி வந்தபோதும்.. அந்த மகன் மலசலகூடத்தினுள்ளேயே இருந்தாராம். 'மகனைப் படிப்பில் கெட்டிக்காரனாக வளர்த்த அளவுக்கு, உலக அனுபவத்தில் கெட்டிக்காரனாக வளர்க்கத் தவறிவிட்டேன்' என அந்தத் தந்தை நண்பரொருவருக்குக் கூறிக் கவலைப்பட்டாராம். பிள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்த்து.. காசு காசென்று எக்கச்சக்கமாய் அதுகளுக்கென சேர்த்துவைச்சு மண்டையைப்போட.. அதுகள் என்ன செய்வதென்று தெரியாது திண்டாடாமல் அல்லது ஏமாறாமல் இருந்தால் சரி.. இதுக்குத்தானே கவிஞரே சொன்னார்.. 'சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று...' |