![]() |
|
வளைகுடா அனர்த்தங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வளைகுடா அனர்த்தங்கள் (/showthread.php?tid=7533) |
வளைகுடா அனர்த்தங்கள் - kuruvikal - 02-01-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39809000/jpg/_39809107_hajj_203body_ap.jpg' border='0' alt='user posted image'> சவுதிஅரேபியாவில் உள்ள முஸ்லீம்களின் புனித நகராம் மக்கா-மினா(Mina) வில் நிகழ்ந்த கச் யாத்திரையின் இறுதி நிகழ்வான சாத்தானுக்குக் கல்லெறிந்து கொல்லும் நிகழ்வின் போது நெரிசலில் சிக்கி சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர்....! <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39808000/jpg/_39808809_women203i.jpg' border='0' alt='user posted image'> அமெரிக்க ஆதிக்க ஈராக்கில் அமெரிக்க ஆதரவு குருதிஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் வரை உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர்....! ------------------------ bbc.com and yahoo.com இரண்டு மனித அழிவுகளினதும் நோக்கம் தான் என்ன...?????????! :roll: - Mathan - 02-04-2004 முதல் பிரச்சனை மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆண்டவனை தேடி போய் இப்பிடி ஒரு முடிவு அவங்களுக்கு. சவுதி கவுன்மென்டும் பாவம். அவகளும் ஒன்னும் பண்ண முடியாது. இரண்டாவது நம்ம நாட்லயும் நடக்குறது தானே? - Mathivathanan - 02-04-2004 BBC Wrote:முதல் பிரச்சனை மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆண்டவனை தேடி போய் இப்பிடி ஒரு முடிவு அவங்களுக்கு. சவுதி கவுன்மென்டும் பாவம். அவகளும் ஒன்னும் பண்ண முடியாது.அவங்க மதப்பற்று அதிகமுள்ளவங்க.. அவங்க மதப்படி அவங்க அல்லாவோட போய் சேர்ந்திட்டாங்க.. நம்ம மதமும் அப்படித்தானே.. அப்படி மதச்சடங்கு விபத்தானால் அப்படியானதொரு காரணம்தானே சொல்லுவாங்க.. அதை விடுவம்.. இரண்டாவதுக்கு வருவோம்.. நீங்க நடக்கிறதை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறீங்க.. இவங்க தங்களைத் தாங்க அழிக்கிறாங்களே தவிர வேறொன்னும் இதுவரை செய்யயில்லை.. சொல்லுற காரணங்களும் பச்சோந்தியா அடிக்கடி மாறுது.. இப்படியே போனா போதும்.. நம்ம சமுதாயம் இல்லாமலே போயிடும்.. பழைய அரசியல்வாதியளை திட்டினாங்க.. அவங்களாலை எந்த அழிவுமில்லை.. அப்பப்பா.. இவங்களாலை கடந்த 20 வருஷத்திலை.. எவ்வளவு இழப்பு.. நினைக்க தலை சுற்றலை..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2004 இரண்டாவது உங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல...இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பானியர்களால் பாவிக்கப்பட்டதும் தான்...!அனைத்து நாடுகளினதும் இராணுவ பயிற்சிகளின் போதும் சொல்லிக் கொடுக்கப்படுவதும் தான்....! இரண்டாவது சம்பவத்திற்கான தேவையை ஏற்படுத்தியது பற்றிச் சிந்திக்கவே அச்செய்தி இங்கு போடப்பட்டது....நேற்றுவரை உற்ற நண்பாக இருந்து விட்டு உள்ளதெல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டு பிறகு கொடுத்ததையே பத்து வருடம் செல்ல மீண்டும் பறிக்கப்போன ஏமாற்றுக்காரர்களால் அங்குள்ள மக்கள் தினமும் அழுவதன் நெஞ்சக் குமுறல்களின் எதிரொல்கள்தான் தற்கொலைக் குண்டுகளாய் வெடிக்கிறது....சாதாரண மக்களின் மனம் அறியாது சட்டத்தையும் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தவறாக பாவிப்பத்தன் ஏகாதபத்திய ஆதிக்க வெறியின் விளைவே இவ் அநியாய மனித அழிவுகளின் மூலம்......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll:
- Mathivathanan - 02-04-2004 kuruvikal Wrote:இரண்டாவது உங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல...இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பானியர்களால் பாவிக்கப்பட்டதும் தான்...!அனைத்து நாடுகளினதும் இராணுவ பயிற்சிகளின் போதும் சொல்லிக் கொடுக்கப்படுவதும் தான்....!யப்பான் உபயோகித்தது சரி.. அதற்கான தண்டனை பெற்றதும் சரி.. அதனால்த்தானோ என்னவோ தற்போது இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து நிற்கிறது.. நிற்க.. உற்ற நண்பனாக இருந்தவன் ரஸ்யனே தவிர அமெரிக்கனில்லை.. தற்போது இவர்கள் கொல்லுவதில் 90 சதவிகிதம் ஈராக்கியர்கள்.. இப்படியிருக்க யப்பானியர்களை உதாரணம்காட்டி தப்பித்துக்கொள்ள நினைப்பது அறிவீனம்.. ஈராக்கிய சாதாரண மக்கள் தற்பொது தம் ஜனநாயக நாட்டுக்கான அடிக்கல்நாட்ட இணையத்தெடங்கிவிட்டார்கள்.. அதனால்த்தான் அவர்களை இக் கோழைகள் தாக்குகிறார்கள்.. கோழைகளுக்கு தமது அதிகாரம் பறிபோனதன் கவலை.. அல்லாவிடில் இப்படியான தரம்கெட்ட செயலால் தம் மக்களை கொல்லமாட்டார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2004 ஈராக்குல அப்பாவி மக்களை கொல்லது கண்டிக்க தான் வேணும். அது யாரா இருந்தாலும் சரி - kuruvikal - 03-02-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/jpg/_39908937_injured203ap.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39908000/gif/_39908935_iraq_karbala_map416.gif' border='0' alt='user posted image'> தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள்....பாக்டாட் மற்றும் கர்பாலா...! ஈராக்கில் இரண்டு இடங்களில் நடந்த அனுமானித்துக் கூற முடியாத குண்டு வெடிப்புக்களினால் (மோட்டார் தாக்குதல்கள் அல்லது தற்கொலைத் தாக்குதல்கள்) சுமார் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்....அமெரிக்க ஆதரவு சியா முஸ்லீம்கள் மீது அவர்கள் தமது புனித வழிபாட்டுத்தலத்தில் கூடி இருந்த வேளைகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன....! ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தின் பின்னர் ஈராக்கில் ஏற்பட்ட மிகப்பெரிய மனித உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல்களாக இவை விபரிக்கப்படுகின்றன...அதுவும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொய் இலக்கு சதாம் பிடிபட்ட பின்....! :evil: :roll: Thanks bbc.com |