![]() |
|
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் (/showthread.php?tid=740) |
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் - Shankarlaal - 02-23-2006 <b>இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல்</b> கடலூர்: கடலலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றவரைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவானான்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இமானுவேல் (55), மீனவர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (15). குள்ளஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே முகாமை சேர்ந்தவர் சிவனாடி மகன் ராஜா (19). தமிழ்ச்செல்வி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அவரை ராஜா பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி பள்ளிக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி குள்ளஞ்சாவடி போலீசில் இமானுவேல் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் லட்சுமியை, ராஜா கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைத் தேடி வருகின்றனர். http://www.dinamalar.com/ - aathipan - 02-23-2006 அடடா நம்ம போலீசார் உடனேயே தனிப்படை அமைத்து ராஜாவை வலைவீசி தேடுவார்களே.. - jsrbavaan - 02-23-2006 தனிப்படை சரி... பிடிப்பார்களா...?! - Saniyan - 02-23-2006 தமிழ்செல்வியை காணவில்லை . . தமிழக பொலிசார் லட்சுமியை தேடி வருகிறார்கள். எண்ட கடவுளே . . ஒழுங்கா செய்தியை போடுங்கப்பா. |