![]() |
|
கவிதை வரையும் நேரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதை வரையும் நேரம் (/showthread.php?tid=6876) |
கவிதை வரையும் நேரம் - kirubans - 07-25-2004 சில வருடங்களுக்கு முன்னர் எழுதியவை. <span style='color:red'>நாட்கள் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்கின்வழி விழுகின்ற பழுப்பு, வெள்ளை நிறக் கடிதங்களிடையே இடைக்கிடை சில வான் கடிதங்கள் எட்டிப் பார்க்கும். வாசிக்கும் அவசரத்தில் அலங்கோலமாகக் கிழியும் வான் கடிதம். கடித வரிகளில் கண் மேயும் மண் ஒழுங்கைகளில் மனம் பாயும். வாசித்த சில நிமிடங்களில் வழுக்கும் தார் வீதியில் கால்கள் பரபரக்கும் வேலையிடம் நோக்கி. </span> - kuruvikal - 07-25-2004 நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை... தொடர்ந்து படையுங்கள்... நீங்கள் தரிசித்த நிஜங்களை...கவிதைகளாக...! - kavithan - 07-25-2004 எல்லாருடைய அனுபவத்தையும் அழகாக கவிதையில் சொல்லி இருக்கிறீர்கள்.. கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத.. - tamilini - 07-25-2004 கிருபன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..........! - kirubans - 07-25-2004 [size=14]பாராட்டுக்களுக்கு நன்றி. தற்போதுவது எழுதுவது இல்லை, என்றாலும் நல்ல கவிதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை. இன்னுமொரு கவிதை. கால்கள் கால்கள் கால்கள் எங்கும் கால்கள் எங்கள் மண்ணில் அந்நியர் கால்கள் எங்கள் கால்களோ அந்நிய மண்ணில். - tamilini - 07-25-2004 Quote:எங்கள் மண்ணில் உண்மையான வரிகள்....! காலம் அதனை மாற்றும் வெகுவிரையில் என்று நம்புவோம்...! - kuruvikal - 07-25-2004 tamilini Wrote:Quote:எங்கள் மண்ணில் காலம் மாறாது மனங்கள் மாற வேண்டும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 07-25-2004 <b>வாசிக்கும் அவசரத்தில் அலங்கோலமாகக் கிழியும் வான் கடிதம். கடித வரிகளில் கண் மேயும் மண் ஒழுங்கைகளில் மனம் பாயும். </b> ¾¡÷ò¾õ ¸Å¢Åâ¢ø.... «Õ¨Á.. §ÁÖõ ¦¾¡¼Õí¸û. Å¡úòÐì¸û... |