![]() |
|
கொலுசொலி கேட்டபோது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கொலுசொலி கேட்டபோது (/showthread.php?tid=6872) |
கொலுசொலி கேட்டபோது - Paranee - 07-26-2004 <img src='http://www.yarl.com/forum/files/p112.psd.jpg' border='0' alt='user posted image'> ஆவலாய் உள் மனது ஆதங்கத்துடன் படபடப்பும் அடித்தோய்ந்துவிடும் போல் இதயம் ஏன் இந்த உணர்ச்சி கொந்தளிப்பு உன்னை நான் சந்திக்கநினைக்கும்போது புகைப்படத்தில் கண்டு புதைந்த என் மனசு புலர்ச்சியில் காண துடிப்பதேன் ஆனந்தத்துடிப்பா ஆவல்த்துடிப்பா இல்லை பயமா ? தாய் மண் கண்ட தவிப்பும் உனை தழுவ நினைக்கையில் தலைகீழாக மாறி நிற்கின்றதே சொல்லமுடியா இன்பம் சொல்லமுடியா துன்பம் உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை காணும்போது ஓடிவந்து கட்டியணைப்பேனா ? - இல்லை பதுங்கி நின்று பைய பைய அருகில் வந்து இன்முகவிதழ் விரித்து இச்சையுடன் ஓர்; முத்தம் வைப்பேனா ? என்னவோ செய்ய தோன்றுகின்றது தொலைபேசியில் தொட்டில்வரை பேசிவிட்டோம் நேரில் என்ன பேசிக்கொள்வேன் ? ஜ லவ் யூடா செல்லம் எனசொல்லி ஆர்ப்பாட்டம் செய்வேனா ? இல்லை அடங்கியொடுங்கி புன்னகைமட்டும் பூத்து வைப்பேனா ? புரியவில்லை என் செய்வேனென்று ? இன்பமோ பயமோ ஏதோவோர் சுகத்தில் இரவெல்லாம் கழிந்துவிட்டது ஆதவன் கரங்கள் அடித்து எழுப்பியும் அசையவில்லை எனக்கும் தலையணைக்கும் இடையிலான உறவு செவிக்குள் ஓர் இசைவெள்ளம் உள்ளே புகுந்து உடலெங்கும் ஓர் உற்சாக மழைவெள்ளமாய் விழி திறந்தேன் தேவதையாய் நீ புன்னகைத்தாயா ? இல்லை என்னை அழைத்தாயா ? என்ன இசைவெள்ளம் எங்கேயிருந்து வந்தது சுற்று முற்றும் பார்த்து சோர்ந்து விழி மூட எண்ணுகையில் மீண்டும் அவ்விசை அருகில் ஓ ஓ என் சின்ன தேவதையின் கால் சிறகுளில் அரவணைத்து உறங்கும் கொலுசுகளா பேசுகின்றன கொலுசணிந்த மலர்ப்பாதம் குனிந்து முத்தமிட எண்ணுகையில் தடம்புரண்டு தரையில் வீழ்ந்தேன் சீ என்ன இது காலை நேரக்கனவா ? தினமும் இவ்விடியல் எனக்கு வேண்டும் கனவாகினும் ஓர் சுகமாய் உன்னையே காணும் சுகமாய் இன்று முதல் வார்த்தையாய் உன்னுடன் பேசவேண்டும் சொலுசணிந்துகொள் என் கொஞ்சும் செல்லமே ! உன் பாதம் பட்டபோது கொலுசே ஜொலிக்கின்றது சினுங்கும் கொலுசு உன் சிரிப்பிற்கு ஈடாகாவிடினும் எனக்கு இஸ்டமாகிவிட்டதே ந.பரணீதரன் 26.07.2004 - sWEEtmICHe - 07-26-2004 என்ன இது அண்ணா ......?????? ஏன் இந்த சோகம்
Re: கொலுசொலி கேட்டபோது - வெண்ணிலா - 07-26-2004 Paranee Wrote:கொலுசணிந்த மலர்ப்பாதம் <b>ரொம்ப அருமையான கவிதை பரணி அண்ணா. கனவுகள் மெய்ப்பட சுட்டி வெண்ணிலாவின் வாழ்த்துக்கள்.</b> - Paranee - 07-26-2004 சோகம் இ;ல்லையே எண்ணத்தின் வடிவம் வார்த்தைகளாகி நன்றி சுவிற்மிச்சி நன்றி வெண்ணிலா - tamilini - 07-26-2004 கவpதை அருமையாக உள்ளது பரணீ அண்ணா.....! - kavithan - 07-26-2004 கொலுசு மாதிரி கவிதையும் ஒலிக்குது அண்ணா....... கொலுசுக்கு வந்திட்டியள் வாழ்த்துக்கள்....தொடர்ந்து ......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- phozhil - 07-29-2004 நாவல் கவிக்கு எத்துனை நாவல்களை நான் ஒலிப்பது! கொள்ளை கொண்டுவிட்டீரையா கொள்ளை! நாளங்களின், நரம்புகளின் மொழியை அழகுத்தமிழில் அளந்தது கனகச்சிதம்.ஆனந்தம்,ஆனந்தம்... - sWEEtmICHe - 07-30-2004 Paranee Wrote:சோகம் இ;ல்லையே
|