Yarl Forum
திலீபன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: திலீபன் (/showthread.php?tid=6686)



திலீபன் - Thusi - 09-24-2004

திலீபன்

நீண்ட பன்னிரு நாட்கள்......
எப்படித்தான் தாங்கினாய் கொழுந்து விட்டெழும் பசித் தீயை....
ஒரு நேரம் உணவில்லையென்றால் உடல் தொய்ந்து உயிர்வற்றிப் போகிறது எமக்கு.
உணவின் தேவை சகல உயிர்களும் உணரும்.
நீ, திலீபா, உணர்வின் வேட்கைக்காய் உணவு மறுத்து உயிர் துறந்தாய்.

நல்லூரின் வீதியில்
நல்லுள்ளங்கள் சூழ
நாசம் செய் படைகளுக்கெதிராய்
நம்மவரின் தேவைகள் முன்வைத்து
திலீபா நீ யாகம் இயற்றினாய் - உயிர் நெய்யுூற்றி.

அகிம்சை போதித்த மகாத்மாவின் தேசத்துப் படைகள்
எமது அகிம்சா வீரனை பசித்தீயில் எரித்தழித்தார்கள்.

மறவோம் திலீபா.
நீ சொன்ன விடுதலைத் தேசம் மரணத்திலும் மறவோம்.
நாம் செத்து விழுந்தாலும்
இற்றுப்போகாதெம் வரலாறு.
வரலாற்றின் பக்கங்களில் நீ என்றும் வாழுவாய் - வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.


- tamilini - 09-24-2004

உண்ணா நோன்பிருந்து
உயிரி நீத்த
உன்னத வீரனுக்காய்..
உள்ளத்தில் இருந்து
உதித்த கவி நன்று...
தொடருங்கள்...


- kuruvikal - 09-24-2004

அண்ணனவன் பாதங்கள்
பதிந்த பாதைகள்
எங்கள் கால்தடம் மிதித்ததால்
தியாக தீபம் திலீபன்
எமக்குள் என்றும் சுடர்விடுவான்
தியாகத் தீ தந்து
விடுதலை வேள்வி
வளர்த்து நிற்பான்....!


- kavithan - 09-24-2004

அண்ணன் தீலிபனுக்காய்
அருங்கவி வடித்த
நீங்கள் இன்னும் இன்னும்
கவிபாடி
களம் வர வேண்டுகிறேன்


- shanmuhi - 09-25-2004

நினைத்தாலும் சிலிர்க்குது என் உடம்பு
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த
உன்னத தியாக தீபமாய்
என்றும் எமக்குள் சடர்விட்டபடியே
நினைவுதனை மறக்க
முடியவில்லை என்னால்