Yarl Forum
மலரும் நினைவில்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மலரும் நினைவில்... (/showthread.php?tid=6569)



மலரும் நினைவில்... - kuruvikal - 10-22-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>

தென்றல் தரும் தாலாட்டு
தெம்மாங்கு தரும் சங்கீதம்
தோழமை கொண்டு தொடர்ந்திருக்க
தோழமையின் இனிமை சுவைத்திட
சோடிக் குயிலிரண்டு சோலையில்....
சோலை வழி சாலையில்
சேலை ஒன்று காட்டுது ஜாடை
சலனமில்லா சின்ன மனம்
சந்திக்கத் துடிக்குது
காதல் தரிசனம்...!

மனதோடு ஏழ்மையாய்
ஏழ்மைக்கு ஏற்றதாய்
சோலைக்குள் குடிசை கட்டி
சோடி கட்டுது ஒரு மனசு....
வேஷம் போட்டே வாழ்ந்திட்டது
கோஷம் போட்டு கொடுமை பண்ணுது...
மாளிகை கட்டிக் காவல் வைத்துக்
காத்திருக்குது மற்றது...!

கனவுகள் கலையாது
கானகத்தில் கருங்குயில்கள்
கானம் இசைக்குது....
சோடிகள் இரண்டும்
சேர்ந்தும் இசைக்குது
பிரிந்தும் இசைக்குது ராகம்
சங்கீத சபை இருந்து ரசிக்குது
சோடி மனம்...!
காலத்தோடு போட்டியாய்
கனவுகள் தொடருது
நினைவுகள் பெருகுது...!

உதயத்து ஆதவன்
இருளரக்கன் உதைந்து தள்ள
உடையுது நினைவு
உடனிருந்த கணணி இசைக்குது
சோலை கொள்
சேலை பறக்கும் இனிய கீதம்....!
நிசி கடந்தும்....
மலரும் நினைவில்
நடந்தது ஒரு காதல்
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு சீராட்ட
நினைவோடு நிம்மதியாய்....!

நன்றி... http://kuruvikal.yarl.net/


- tamilini - 10-22-2004

Quote:மனதோடு ஏழ்மையாய்
ஏழ்மைக்கு ஏற்றதாய்
சோலைக்குள் குடிசை கட்டி
சோடி கட்டுது ஒரு மனசு....
வேஷம் போட்டே வாழ்ந்திட்டது
கோஷம் போட்டு கொடுமை பண்ணுது...
மாளிகை கட்டிக் காவல் வைத்துக்
காத்திருக்குது மற்றது...!

மலரும் நினைவுகள் இனிதாய் மலர்ந்திட வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 10-22-2004

மலரும் நினைவும்...
மலருக்கு சேலை கட்டி
சோலையில் வைத்து சோதித்தது
மலரும் நினைவாக மலருது...!
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- hari - 10-22-2004

கவிதை அருமை. வாழ்த்துக்கள்!


- kavithan - 10-23-2004

கவிதை அருமை வாழ்த்துக்கள் குருவிகளே.. மலரை கொஞ்சம் மாத்துங்கள்.அழகாக ஒரு மலர் தரவா..?


- kuruvikal - 10-23-2004

உங்கள் அனைவரினதும் விமர்சனத்துக்கு நன்றிகள்...!

அது எங்கள் மலர்... அதை கைவிட மனசு வராதே... பிறகெப்படி இன்னொன்றை...அதுவும் நீங்கள் தாறதை வாங்க முடியும் கவிதன்....அது என்னதான் பேரழகென்றாலும்....தேடி எடுத்தாலும் எங்கள் சொத்துத்தானே எங்களுக்கு உரியது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 10-23-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 10-23-2004

<b>மலரும் நினைவில்
நடந்தது ஒரு காதல்
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு சீராட்ட
நினைவோடு நிம்மதியாய்....!</b>
«¨Á¾¢Â¡ö Åடிò¾ ¸Å¢¨¾ «ரு¨Á. Å¡úòதுì¸û......