Yarl Forum
தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள் (/showthread.php?tid=6495)



தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள் - Suji - 11-05-2004

தமிழ்நாதத்தின் நீண்டகால அபிமானி என்ற வகையில் இந்தமடலை வரைகின்றேன்.
உங்கள் இணையம் ஈழத்திற்கு ஆதரவான இணையம் என்ற கருத்தில் எனக்கு துளி கூடசந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு மிகவும் வேலைப்பழுவின் மத்தியில் நீங்கள் இந்த இணையத்தை நடத்தி வருவதையும் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் அறிவர். அந்தவகையில் உங்கள் இணையத்தில் இராசரத்தினத்தின் விடுதலைக்கு வந்த செய்தியைப் பார்த்து எங்கள் மின்னஞ்கல் முகவரிகளை அனுப்பிவைத்தோம். ஆனால் பின்பு அது டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரதுரை என்ற துரோகியின் வேலை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தமிழனின் விடுதலைக்காக மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த தமிழ்மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் கண்ட இணையங்களில் வந்திருந்தால் அவற்றை
பொதுபடுத்தியிருக்கமாட்டோம். தமிழ்நாதத்தின்மேல் உள்ள நம்பிக்கையில் இதனைச் செய்துள்ளோம். ஆதலால் உங்கள் இணையத்தின்மேல் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு
இருக்கின்றது. (திடீரென அந்த இணைப்பு வேறு உங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.)

துரோகிகளுக்கு துணைபோனதாக கவலைப்படும் எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியதும் இதற்கு
எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்கள் முன்னால் உள்ளது. தமிழ்நாதமே நீ மௌனமாக இருக்கப்போகின்றாயா?
அல்லது ஏதாவது செய்யப்போகின்றாயா?
ஃ இது சம்மந்தமாக டென்மார்க் தூதுவரலாயங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவர்கள் தங்கள் முகவரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று முறைப்பாடு கொடுக்க முடியுமா? அப்படியாயின் அதற்கான புகாரை ஆங்கிலத்தில் அல்லது டென்மார்க் மொழியில் இணையத்தில் தருவீர்களர்? உங்கள் மௌனம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தயவுசெய்து தமிழ்நாதத்தில் பதில் தாருங்கள்
ன இந்த மடலின் பிரதியை யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் இணைக்கினறேன்.

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்


- hari - 11-05-2004

தமிழ் நாதம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன்


Re: தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள் - paadai - 11-05-2004

Suji Wrote:தமிழ்நாதத்தின் நீண்டகால அபிமானி என்ற வகையில் இந்தமடலை வரைகின்றேன்.
உங்கள் இணையம் ஈழத்திற்கு ஆதரவான இணையம் என்ற கருத்தில் எனக்கு துளி கூடசந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு மிகவும் வேலைப்பழுவின் மத்தியில் நீங்கள் இந்த இணையத்தை நடத்தி வருவதையும் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் அறிவர். அந்தவகையில் உங்கள் இணையத்தில் இராசரத்தினத்தின் விடுதலைக்கு வந்த செய்தியைப் பார்த்து எங்கள் மின்னஞ்கல் முகவரிகளை அனுப்பிவைத்தோம். ஆனால் பின்பு அது டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரதுரை என்ற துரோகியின் வேலை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தமிழனின் விடுதலைக்காக மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த தமிழ்மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் கண்ட இணையங்களில் வந்திருந்தால் அவற்றை
பொதுபடுத்தியிருக்கமாட்டோம். தமிழ்நாதத்தின்மேல் உள்ள நம்பிக்கையில் இதனைச் செய்துள்ளோம். ஆதலால் உங்கள் இணையத்தின்மேல் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு
இருக்கின்றது. (திடீரென அந்த இணைப்பு வேறு உங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.)

துரோகிகளுக்கு துணைபோனதாக கவலைப்படும் எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியதும் இதற்கு
எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்கள் முன்னால் உள்ளது. தமிழ்நாதமே நீ மௌனமாக இருக்கப்போகின்றாயா?
அல்லது ஏதாவது செய்யப்போகின்றாயா?
ஃ இது சம்மந்தமாக டென்மார்க் தூதுவரலாயங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவர்கள் தங்கள் முகவரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று முறைப்பாடு கொடுக்க முடியுமா? அப்படியாயின் அதற்கான புகாரை ஆங்கிலத்தில் அல்லது டென்மார்க் மொழியில் இணையத்தில் தருவீர்களர்? உங்கள் மௌனம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தயவுசெய்து தமிழ்நாதத்தில் பதில் தாருங்கள்
ன இந்த மடலின் பிரதியை யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் இணைக்கினறேன்.

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

ஓசியில பொலிடோல தந்தாலும் குடிப்பியள் போல-
இதே தமிழ்நாதம் தன்னை பார்வயிட மாதம் 5$ எண்டு சொல்லியிருந்தால் ஆ..தூ உதயார் பாப்பாங்கள் எண்டு சொல்லுவியள்

ஊடகங்களில் தெரியாமல் தவறுநடப்பதும் அது தெரிந்ததும் தெரியாதமாதிரியே விடுவதும் அரசியலில் சகஜமப்பா!

உதரணங்கள் இருக்கிறது ஆனால் அவை இந்த தலைப்புக்கு பொருந்தாது.


Re: தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள் - வெண்ணிலா - 11-05-2004

paadai Wrote:ஓசியில பொலிடோல தந்தாலும் குடிப்பியள் போல-
இதே தமிழ்நாதம் தன்னை பார்வயிட மாதம் 5$ எண்டு சொல்லியிருந்தால் ஆ..தூ உதயார் பாப்பாங்கள் எண்டு சொல்லுவியள்

ஊடகங்களில் தெரியாமல் தவறுநடப்பதும் அது தெரிந்ததும் தெரியாதமாதிரியே விடுவதும் அரசியலில் சகஜமப்பா!

உதரணங்கள் இருக்கிறது ஆனால் அவை இந்த தலைப்புக்கு பொருந்தாது.


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Suji - 11-05-2004

பாடையாரே நாங்கள் இனஉண÷வில் (ஒரு தமிழனின் விடுதலை)
என்பதை நீங்கள் மறந்துவிட்டீ÷கள்) நீங்களும் குளம்பி மற்றவ÷களையும் குளப்புகின்றீ÷கள். வதிவிடம் தாயகம் என்று கூறுகிறீ÷
சிறிதளவும் நெஞ்சில் ஈரமில்லை. அந்த இரக்கமில்லாத தீவிரவாதிகளிடம்
நீங்கள் சிக்கியிருக்கவேண்டும்

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்


- cannon - 11-05-2004

பா(வா)டையானது குழப்புவதற்கேயென்று இங்கு உலாவுது. இதுக்கெங்கேயாயினும் எச்சிலிலை கிடைத்தால் போய்விடும்.


- cannon - 11-05-2004

நிச்சயம் நாலாயிரம் கையெழுத்துக்களில் நாலாவது துரோகிகளின் கையெழுத்தாக இருக்குமென்பது சந்தேகமே! ஏறக்குறைய எல்லாக் கையெழுத்துக்களும் தமிழ்நாதத்தையோ, தமிழ்நெற்றையோ அல்லது யாழ் கருத்துக் களத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பேயாகும். ஆகவே நிச்சயமாக இத் தளங்களே தவறான வழி நடாத்தலுக்கு பொறுப்பானவர்கள். இதில் எந்த ஒரு இரண்டாவது கருத்துக்கும் இடமேயில்லை.

1) இதற்கு மன்னிப்பு என்ற வசனம் தேவைப்படாவிட்டாலும், நடைபெற்ற தவறை விளக்கி ஒரு சிறு அறிக்கையையேனும் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் வெளியிட வேண்டாமா?
2) கையெழுத்து இட்டு விட்டும், இன்னும் அதன் உண்மைத் தன்மை தெரியாமலும், தாங்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டது தெறிவிக்காமலும் விடுவது சரியா?
3) உண்மை புரியாமல் கையெழுத்து இட்டவர்கள் மூலம் இன்னும் எத்தனை ஆயிரக் கணக்காணவர்களுக்கு அத்துரோகத் தளம் பற்றிய செய்தி பரவப் போகின்றது? இதைத் தடுக்க வேண்டாமா?
4) அச் செய்திகலை இணையங்களிலிருந்து அகற்றுவதாலோ மறைப்பதாலோ நடந்த தவறுகள் திருத்தப் பட்டுவிடுமா?

தயவு செய்து எங்கள் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிக்காமல், ஓர் சிறு அறிக்கை மூலமாவது உண்மையை தெரியப்படுத்துங்கள். இது இன உணர்வின்பால் விடப்பட்ட தவறே!

பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.


- tamilini - 11-05-2004

:roll: :roll: :roll:


- Suji - 11-05-2004

நன்றி cannon கண்காணிப்பாளர் மோகனும் இதை புரிந்துகொள்வார் என நம்புகின்றேன் தவறுகள் விடுவது மனித இயல்பு அது திருத்ததப்படாமல் விட்டால் நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். மௌனம் சாதிக்கப்படும்போது இந்த இணையங்களினால் தவறாக வழி நடத்தப்படுகின்றோமோ என்ற ஐயம் எழுவது இயற்கை .இவர்கள் மௌனம் சாதிப்பதால் வேண்டுமென்றே செய்யப்பட்டதுபோல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. தங்கள் மேலுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பு