Yarl Forum
ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் "பொன்மனச் செம்மல்" - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் "பொன்மனச் செம்மல்" (/showthread.php?tid=6113)



ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் "பொன்மனச் செம்மல்" - cannon - 12-24-2004

இன்று எம் ஜி இராமச்சந்திரனின் பதினேழம் ஆண்டு நினைவு தினமாகும் பிறப்பு-17.01.1917 மறைவு-24.12.1987

நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
ஒரு துன்பமில் ஒரு துயரமில்லை-அவர்
கண்னீர் கடலிலே விழ மாட்டார்.
அவர் கண்னீர் கடலிலே விழ மாட்டார்.

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்;
உடல் உழகை;கச்சொல்வேன்
அதில் பிழைக்கச்சொல்வேன்-பிறர்
உரிமைப் பொருட்களை தொடமாடடேன்.


ஒரு மாபெரும் தலைவன் எம் ஜி ஆர்
மாற்றுக் குறையத தங்கம் எம் ஜி ஆர்
ஈழத்தமிழனை நேசித்த எம் ஜி ஆர்
எங்கள் தலைவனின் அண்ணன் எம் ஜி ஆர்

இன்றய நாள் எம் ஜி ஆர் என அழைக்கப்பட்ட எம் ஜி இராமச்சந்திரனின் அவர்களின் பதினேழம் ஆண்டு நினைவு தினமாகும் தமிழ் நாட்டின் முதலாச்சராக இருந்த எம் ஜி ஆர் பிரபல நடிகருமாவார் இலங்கை கண்டியில் பிறந்த இவர் ஈழத்தமிழர்களின் அடிமை வாழ்வுக்கு முடிவுகட்டவேண்டுமென்பதில் தீர்க்க தரிசனத்தோடு செயற்பட்டவராவார்

இந்தியத்தமிழர்களாலும் ஈழத்தமிழர்களாலம் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமனிதர் எம் ஜி ஆர் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தவராவார் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக அன்னாளில் பல போராட்ட இயக்கங்கள் களத்திலிருந்தபோது அவர்களிடையே சிறந்த தலைவராக எதிர்காலத்தில் தமிழருக்காக தலைமையேற்க பிரபாகரனொருவரே தகுதியானவரென அனுபவத்தாலும் தீர்க்கதரிசனத்தாலும் கண்டு கொண்ட எம் ஜி ஆர் அவர்கள் புலிகளியக்கத்தின் வளர்ச்சிக்காக பெருமந்தெகை நிதியுதவியையும் அரசியல் ஆதரவையும் வளங்கியவராவார்.

இக்கட்டான சந்தர்ப்பமொன்றில் தேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்கள் தம்பி நீ உன் மக்களின் நலனுக்காக எடுக்கும் உறுதியான முடிவையே நான் ஆதரிப்பேன் என்று கூறி மிகப்பெரும் ஆண்ம
பலத்தையும் நம்பிக்கையையும் தேசியத்தலைவருக்கு வளங்கிய மகானாவர் பதவியிலும் தன் இனத்தின் மீது அழமான கரிசனையுடன் வாழ்ந்த இவர் எழைகளின் நண்பனாகவும் உங்கள் வீட்டு பிள்ளையாகவும் வாழ்தவராவார் இவரின் இழப்பு இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்..
நிதர்சனம்
· மாமனிதர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கு நிதர்சனம்
தனது படைப்பாழிகள்ää வாசகர்கள்ääமற்றும் தமிழீழ மக்கள் சார்பாக தலைசாய்ந்த ஆக வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

· எடுத்தவன் எடுத்ததை அடுத்தவன் எடுத்தான் இவைதான் தெரிகின்றன
ஆடுத்தவன் எடுத்ததை ஏழைக்கு கொடுத்தான் தர்மங்கள் சரிக்கின்றன.
தர்மங்கள் சரிக்கின்றன.

· மிகமிக நல்லவன் என்பவனே மிக மிக கொடியவன் பூமியிலே
ரகசிய நாடக நடிகர்களே நல்லவராவார் வாழ்கையிலே
அனுபவமிதைத்தான் கூறுதடா ஆண்டவன் கீதையும் மாறுதடா

· அங்கே சிரிப்பன் சிரிக்கட்டு;ம் அது ஆணவச்சிரிப்பு
இங்N நான் சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச்சிரிப்பு
நல்ல தீர்ப்பை நாளை உலகம் தரவரும்போது
அங்கே சிரிப்பவன் யார் அழுபவன்யார் தெரியும் அப்போது

யாருக்கு எதிலே நிம்மதி அதுதான் இறைவனின் சன்னிதி
நன்றிமறவாது எம் ஜி ஆர் அவர்களின் நினைவுகளுடன்.

நிதர்சனம்.


- Vaanampaadi - 12-24-2004

<img src='http://img148.exs.cx/img148/5631/mgramachandran2sl.jpg' border='0' alt='user posted image'>


- cannon - 12-24-2004

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
அவன் ஊருக்கெல்லாவா
உலகத்திற்கே கொடுத்தான்"

ஆம் 1983ம் ஆண்டுக்குப் பின்னர் எம்மவர்கள் இழக்க ஏதும் இல்லாமல் அகதிகளாக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிய பின்னர் அரவணைத்து ஆதரவளித்த புகலிடமளித்த பொன்மனச் செம்மலை ஈழ்த் தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூருவோம்.

எண்பதுகளில் தமிழ்நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் உட்பட எந்த கல்வி சார் நிறுவனங்களிலும் எம்மவர்க்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும், அம்மாணவர்களுக்கு நிதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு, அக்காலங்களில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் மறுக்கப்பட்டதை நிவர்த்தி செய்தவர் இந்த பெருந் தலவன்.

அக்காலத்தில் எமது தேசியத் தலைவன் மிகப் பெரிய நிதி நெருக்கடியை சந்தித்தபோது தானே முன்வந்து யாரும் எதிர்பாராத அளவிற்கு பாரிய நிதியுதவியை செய்து தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பாதையில் நிலையான அத்தியாயத்தில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர் எனும் அந்த ஒப்பற்ற மாமனிதன்.

பின்னால் வந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் என கூறிய ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் எமது மனங்களில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தினாலும், ஈழத் தமிழினம் எண்றொரு இனம் உலகில் இருக்குமட்டும் அத்த ஒப்பற்ற தலைவன் எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருப்பான்.


- sinnappu - 12-25-2004

நன்றிமறவாது எம் ஜி ஆர் அவர்களின் நினைவுகளுடன்

Cry Cry Cry Cry
º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ


- hari - 12-25-2004

<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/PRABA.jpg' border='0' alt='user posted image'>


- Nitharsan - 12-25-2004

தமிழக அரசியலில் ஈழத்தமிழருக்காக உண்மை உணர்வோடு கடமை செய்த ஒரே தலைவர் இவர்தான். ஒரு நடிகனாய் இருந்து இன எழுச்சியை உருவாக்கப் பாடு பட்டவர் என்றால் அது இவரே.....
அனனாரின் நினைவு நாளில்....
காற்றோடு காற்றாகி போன உங்கள் உயிரோடு போய்விட்டது எங்கள் தமிழகத்துடனான உறவும்...
இருப்பினும் உங்கள் நினைவு எம் தேசத்திலும் எம் தேச மக்களின் உள்ளங்களிலும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை
நேசமுடன் நிதர்சன்