![]() |
|
ஜே.என்.தீட்சித் மரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜே.என்.தீட்சித் மரணம் (/showthread.php?tid=5964) |
ஜே.என்.தீட்சித் மரணம் - yarl - 01-03-2005 திலீபன் மரணத்திற்கும் இந்திய இலங்கை யுத்தத்திற்கும் இராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் இன்னமும் பல தவறான வழிநடாத்தல்களுகஇகும் காரணமான தீட்சித் காலமானார் இனி தற்ஸ்ரமில் கொம் செய்தி ஜே.என்.தீட்சித் மரணம் டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான ஜே.என். தீட்சித் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. இன்று காலை 6 மணியளவில் வீட்டில் அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது. ஜோதிந்திர நாத் தீட்சித் என்ற முழுப் பெயர் கொண்ட ஜே.என். தீட்சித்துக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இந்திய வெளியுறவுத்துறையின் பல கொள்கை முடிவுகளை இறுதி செய்தவர் தீட்சித். 1936ம் ஆண்டு சென்னையில் பிறந்த தீட்சித் 36 வருடம் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற தீட்சித், முன்னதாக இலங்கையில் தூதராகப் பணியாற்றியுள்ளார். அப்போது தான் ஜெயவர்த்தனேராஜிவ் காந்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய அமைதிப் படை அங்கு அனுப்பப்பட்டது. இலங்கை விஷயத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு தவறான ஆலோசனைகள் தந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர் தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது. 1971ம் ஆண்டில் வங்கதேசம் உருவானபோது அந் நாட்டில் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர் தீட்சித். மாலத்தீவுகள் தவிர்த்து அனைத்து தெற்காசிய நாடுகளிலும் இந்தியத் தூதராக இருந்தவர். ஆப்கானில்தானின் முதல் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சிலி, மெக்சிக்கோ, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். ஐஎப்எஸ் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுத்துறை பிரிவில் இணைந்து பணியாற்றினார். இதனால் பா.ஜ.க. ஆட்சியில் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்த தீட்சித், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றவுடன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சீனாவுடனான எல்லைப் பிரச்சனை, பாகிஸ்தானுடன் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து தொடர் ஆலோசனைகளில் தீட்சித் ஈடுபட்டு வந்தார். பல்வேறு புத்தகங்களையும் தீட்சித் எழுதியுள்ளார். சீன, பாகிஸ்தான் விவகாரங்களில் இவர் நிபுணராக விளங்கினார். ஆனால், இலங்கை விஷயத்தில் இவர் எடுத்த முடிவுகள் பெரும் தவறாகவே போய் முடிந்தன. மன்மோகன் இரங்கல்: தீட்சித் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நெருங்கிய நண்பரை நான் இழந்து விட்டேன். மதிப்பு மிக்க சக ஊழியராகவும், சிறந்த ஆலோசகராகவும் அவர் விளங்கினார். நாடு ஒரு உண்மையான தொண்டரையும், சிறந்த மனிதரையும் இழந்துவிட்டது என்று கூறியுள்ளார். - KULAKADDAN - 01-03-2005 மிக்க நல்லது - shiyam - 01-03-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 01-03-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-03-2005 ஒருவரின் சாவில் மற்றவருக்கு மகிழ்வா..?? என்ன தான் செய்தாலும் அவர் ஒரு மனிதர்.. இப்படி நீங்கள் சிரிக்கிறதை பாத்தால்.. வடக்குகிழக்கில் தமிழ்மக்கள் அலைகளால் அடித்து அழிவை சந்தித்த போது JVP மகிழ்வு கொண்டாடிய மாதிரி இருக்கு.. அப்படியென்றால் உங்களுக்கும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்.. எல்லாரையும் ஒரு உயிராய் மதிக்க தெரியவேண்டும்.. வருத்தம் தெரிவிக்க வேண்டாம் இப்படி மகிழ்வு தெரிவிப்பதை எனினும் தவிர்க்கலாம் இல்லையா...?? எதிரியின் முகாமை புனரமைப்பு செய்கிறார்களாம் தமிழர்கள. இங்கே...??? hock: :x
- kuruvikal - 01-03-2005 tamilini Wrote:ஒருவரின் சாவில் மற்றவருக்கு மகிழ்வா..?? என்ன தான் செய்தாலும் அவர் ஒரு மனிதர்.. இப்படி நீங்கள் சிரிக்கிறதை பாத்தால்.. வடக்குகிழக்கில் தமிழ்மக்கள் அலைகளால் அடித்து அழிவை சந்தித்த போது JVP மகிழ்வு கொண்டாடிய மாதிரி இருக்கு.. அப்படியென்றால் உங்களுக்கும் அவர்களிற்கும் என்ன வித்தியாசம்.. எல்லாரையும் ஒரு உயிராய் மதிக்க தெரியவேண்டும்.. வருத்தம் தெரிவிக்க வேண்டாம் இப்படி மகிழ்வு தெரிவிப்பதை எனினும் தவிர்க்கலாம் இல்லையா...?? எதிரியின் முகாமை புனரமைப்பு செய்கிறார்களாம் தமிழர்கள. இங்கே...??? அப்படிக் கேளுங்க புத்தியில உறைக்கிறாப் போல...! :!:
- tamilini - 01-03-2005 திரு வைகுண்ட வாசன் இறந்ததாக சொல்கிறார்களே உண்மையா..?? - kuruvikal - 01-03-2005 tamilini Wrote:திரு வைகுண்ட வாசன் இறந்ததாக சொல்கிறார்களே உண்மையா..?? அது யாருங்க...திரு வைகுண்ட வாசன்..கேள்விப் படாத பெயரா இருக்கு...! : :?: - tamilini - 01-03-2005 அவர் ஒரு தமிழ் தேச பற்றாளனாம்.. பல இடங்களில் தமிழ் பற்றி கதைத்திருக்கார் (ஐநாவிலையோ எங்கையோ சரியா தெரியல மற்றது இந்திய அரசியல் வாதிகளுடன் கூட கதைச்சிருக்கார் சரியாத தெரியாதுங்க நாங்களும் இன்று தான் முதன் முதலில் கேட்டம் ) தகவலை உறுதிப்படுத்த கேட்டம் அவர் ஒரு வழக்கறிஞரும் கூடவாம்..! :!: - sinnappu - 01-03-2005 Quote:tamiliniஓ அப்படியா நீங்கள் என்ன என்டாலும் சொல்லுங்கோ முடிஞ்சா அவற்றை செத்தவீட்டுக்கு எண்டாலும் போங்கோ ்ஆணால் எனக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏனன்டால் திலீபன் இறக்கும் போது நேரே பாத்தவன் நான் நன்றி வணக்கம்..... - sinnappu - 01-03-2005 பிள்ளை அந்தநாயின்டை இறப்புக்கும் எம் நாட்டுக்கும் முடிச்சு போட வேண்டாம் - kuruvikal - 01-03-2005 நீங்க ஆத்திரப்படுறத்திற்கு காரணம் இருக்கலாம் சின்னப்பு...அது நியாயமும் கூட...ஆனா ஒரு மனிதன் பட்டம் பதவியில் இருக்கேக்க தலைக்கிறுக்கில செய்ததுகள மரணத்தின் போது நினைந்து பழிவாங்கிறாப்போல சாதிக்கிறது மனிதாபிமானத்துக்கு அப்பாலான செயல் என்றுதான் தமிழினி போல நமக்கும் தோன்றுது...மிச்சம் மீதி உங்க விருப்பம்...! இன்று கூட புலிகள் சொல்லி இருக்காங்க தாங்கள் சுனாமியிட்ட அடிவாங்கின பத்துப் படையினரை மட்டக்களப்பில காப்பாற்றி சிகிச்சை அளித்து மீண்டும் படையினரிடம் கொடுத்ததா....பாருங்க....இதையும் உங்க பிள்ளைகள்தான் செய்யுதுகள்....!
- tamilini - 01-03-2005 இப்ப பாருங்க இந்த சுனாமி ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் சிங்களம் ஓ மற்ற நாடுகாரர் என்று பாத்தா அடிச்சிச்சு. அப்படி தான் வாழ்க்கையும் மனிசர் தான் இப்படி இன்னும் இருக்கான். அவர்கள் செய்கிற பிழைகளை நீங்களே செய்தால் எப்படி. சின்னப்பு நீங்கள் நேரடியா பாத்திருக்கலாம் இல்லை என்றில்ல.. நம்ம தமிழ் ஆக்களின் பண்பே கலியாணவீடு சாமத்தியவீடுகளிற்கு போகாட்டாலும் செத்த வீடு என்றால் என்ன பகை என்றாலும் தேடிப்போவாங்க. நாங்கள் போக வேண்டாம்.. அஞ்சலி செலுத்த வேண்டாம் கவலைப்பட வேண்டாம். இப்படி சந்தோசத்தை காட்டினால் அன்று திலீபன் அண்ணா சாகும் போது அவர்கள் நிலைக்கும் உங்கள் நிலைக்கம் என்ன வித்தியாசம். ஆடி ஓய்ந்து போன நேரம் சந்தோசமாய் போய் சேரட்டுமேன். - tamilini - 01-03-2005 sinnappu Wrote:பிள்ளை அந்தநாயின்டை இறப்புக்கும் எம் நாட்டுக்கும் முடிச்சு போட வேண்டாம்எந்த நாய்..?? வைகுண்ட வாசனா..?? அவரைப்பற்றி சொல்லுங்களேன். இன்று தீபம் செய்தில சொன்னாங்க.. இங்க இருக்கிற இளசுகள் யாருக்கும் அவரைத்தெரியல.. தாத்தா நீங்கள் தெரிந்தால் சொல்லுங்க.. - sinnappu - 01-03-2005 Quote:tamiliniபிள்ளை சுனாமி ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் சிங்களம் ஓ மற்ற நாடுகாரர் என்று பாக்கேல்லை ஆணால் உதவி வழங்கிறவை பாக்கினமே?? இல்லை காசை வாங்கிறவன் பாக்கிறாங்களே நீ என்னத்தை சொல்லு நான் நினைப்பது என் தமிழீழத்தமிழனைப்பற்றி மட்டுமே??? - tamilini - 01-03-2005 Quote:பிள்ளை சுனாமி ஈழத்தமிழர், இந்தியத்தமிழர் சிங்களம் ஓ மற்ற நாடுகாரர் என்று பாக்கேல்லை ஆணால் உதவி வழங்கிறவை பாக்கினமே?? அது தான் சின்னத்தாத்தா.. மனிசன் தான் பாக்கிறான்..இயற்கைக்கு எல்லாம் சமன். சரி நீங்கள் தமிழீழ தமிழனைப்பற்றி கவலைப்படுங்க.. அப்புறம் சிங்களவர் தமிழரைப்பாக்கல பிரிச்சு பாக்கிறாங்க என்று அழுங்கோ..?? என்னங்க வித்தியாசம். அவங்களும் சிங்களவர்களை தான் மட்டும் பாக்கிறார்கள்.. மனிசராய் பாருங்க.. ஒருவன் சாவில நீங்கள் மகிழ்கிறீங்க.. சரி அது அது உங்கள் மனசு
- Mathuran - 01-03-2005 எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா எததனை பெரிய மனம் உனக்கு. எல்லோரும் மனிதரே என்பது உன் கணக்கு. ஏறி மிதித்தாலும் அவன் மனிதன் உன்னை எட்டி உதைந்த்தாலும் அவன் மனிதன். காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன் உன் கதையை முடித்தாலும் அவன் மனிதன். அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன் உன்னை அடிமை கொண்டாலும் அவன் மனிதன் ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் உன் உரிமை பறித்தாலும் அவன் மனிதன் தாக்க வந்தாலும் அவன் மனிதன் உன் தமிழை கெடுத்தாலும் அவன் மனிதன் ஏக்க வந்தாலும் அவன் மனிதன் தமிழ் இனத்தை அழித்தாலும் அவ்ன் மனிதன் எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா எத்தனை பெரிய மனம் உனக்கு. - tamilini - 01-03-2005 மிதிப்பவர்களை மதித்துப்பார் உன் மகிமை அவனுக்கு தெரியும் நீயும் மிதித்தால் ஏது வித்தியாசம் இருவருக்கம் - ஆனால் மீண்டும் மிதிபட நினையாதே அடக்கியவனை ஆள நினை அதில் என்ன தவறு -- வீரம் செறிந்தவன் தான் தமிழன் - ஆனால் செத்தவன் வீட்டில் சிரிப்பா..?? சிரித்திடும் அளவிற்கு மனிதாபிமானம் அற்றவனா தமிழன்..?? அவன் மனிசனே இல்லை.. மனிசனுக்கு மனிதாபிமானம் காட்டு மண்டியிடாதே என்பது எம் கருத்து மண்டியிட்டு பிழைப்பதில் மாண்டு விடுவதே மேல் குட்டக்குட்ட குனியதே குனிபவனையும் குட்டாதே இதைச்சொன்னதும் நம் பண்டைய தமிழன் வீரம் செறிந்த தமிழன் இங்கு இறந்தவனை எண்ணி மகிழ்ந்திட்டால் நாம் என்ன மனிதர்கள்..?? அடிமை வாழ்வு அழகல்ல -- அப்படியே அடுத்தவன் அழுகையில் ஆனந்தம் கொள்வதும் பண்பல்ல தாக்க வந்தால் தடுத்துக்கொள் - அது தற்காப்பு தன்மானத்தை விலை பேசும் தரக்குறைவாய் நடக்காது மற்றவன் தன்மானத்தை நீயும் விலை பேசாது இரு உன் தரம் ஒரு படி உயரும். எம் துயரில் மகிழ்ந்தவர் துயர் கண்டு நாம் மகிழ்ந்தால் வித்தியாசம் எது இருவர்க்கும் புதுமையாய் இரு எல்லாவற்றிற்கும் மேல் மனிசனாய் இரு நல்ல தமிழனாய் இரு தமிழனுக்கும் அது தான் அழகு......!
- Mathuran - 01-04-2005 எமக்காக ஒரு தடவை குரல்கொடுத்த அந்த நன்றி உள்ள நாய் இறந்திருந்தால். அதற்காக கண்ணீர் விட்டு கதறி அழுதிட தயங்காது எங்களின் இந்த மனிதம். ஆனால் பல மனிதபிணங்களை கொத்தி தின்ற களுகுகளிற்காக கண்ணீர் வடிக்கும் கூட்டத்தை சேர்த தமிழன் அல்ல நான். சாவு நம்மை நெருங்கும் வேளையிலும் மனிதத்தை விற்று பிளைக்க மாட்டோம். அமைதி படை என்று வந்து எத்தனை உயிர்களை மனிதம் என்னும் போர்வையில் அழித்தார்கள். - KULAKADDAN - 01-04-2005 ´Õ ¯Â¢÷ , «ó¾ÇÅ¢ø ¸Å¨Ä...., ¬Éø ¿îÍ ¬¦Ä¡¸÷ ´ÕÅ÷ ¦À¡ÉÐ ºó¦¾¡º¦Á..... ±ÁÐ Áì¸Ç¢ý þÆôÒ¸Ù¼ý ..... þÐ àÍ........ |