Yarl Forum
ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ?? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ?? (/showthread.php?tid=5754)



ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ?? - selvanNL - 01-17-2005

<b>புலிகளின் நிர்வாகப் பகுதியில் உளவு வேலையை அந்நியப் படைகள் ஆரம்பித்து விட்டனவா?</b>

கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கென வந்துள்ள அந்நிய படைகள், தற்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிளிநொச்சியில் இரணைமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையிருப்பதையும் அதில் இரு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் விமானப் படையின் உளவு விமானம் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை, தற்போது இங்கு மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதையடுத்தே, அந்நியப் படைகள் இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்துள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கப் படையினரின் இலங்கை வருகை குறித்து பல்வேறு தரப்பும் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டு வருகையில், புலிகள் வசம் விமானங்களிருப்பதாக அந்நிய இராணுவமொன்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தமையானது இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்க் கப்பல்கள், விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்களென பெருமளவு இராணுவ தளபாடங்களுடன் அந்நியத் துருப்புகள் ஏன் வந்துள்ளன என்ற கேள்வியும் ஆரம்பம் முதல் எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புலிகளின் பகுதிகளுக்கு அந்நியப் படைகள் எவையுமே செல்லாத நிலையில் புலிகளின் பகுதியில் இருப்பவை பற்றி அந்நியப் படைகளும் உறுதிப்படுத்துவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனரென்றால், இந்த அந்நியப் படைகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் செய்மதிகளைப் பயன்படுத்தி இங்கு உளவு வேலைகளையும் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

¿ýÈ¢ ¾¢ÉìÌÃø...
______________________________________________________________________

À羺¢ Üð¼í¸û ¾í¸Ç¢ý (¿¡ö)§Å¨Ä ¸¡ð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ¡?? :oops: :oops: :evil: :evil:


- selvanNL - 01-17-2005

þ§¾ §Å¨Ç...
<b>ஈரானிடம் 1455 கோடி ரூபா செலவில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை அதிகாரிகள் பயணம்</b>

கடற்கோள் அனர்த்தத்தால் நாடு பேரழிவைச் சந்தித்துள்ள இவ் வேளையில் ஆயுதக் கொள்வனவை மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்தின் உயர்மட்டக் குழுவினர் ஈரானுக்குப் பயணமாகியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டபோது இறுதியாக்கப்பட்ட பாதுகாப்பு பரிவர்த்தனத்தின் அடிப்படையில் தற்போது அந்நாட்டுக்குச் சென்றுள்ள படைத்துறையினர் கொள்வனவு செய்யவேண்டிய ஆயுதத் தளபாடங்களைப் பார்வையிடுவர் என்று இராணுவ வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இந்த ஆயுத பரிவர்த்தனம் 1,455 கோடி ரூபா (சுமார் 15 கோடி அமெரிக்க டொலர்) பெறுமதியானது.

இராணுவத் தளபதி சாந்த கொட்டேகொட தலைமையில் கடற்படை அதிகாரிகளின் பிரதானி மொஹான் ஜயவிக்ரம, விமானப் பொறியியல் பிரிவின் இயக்குநர் லால் பெரேரா, தென்மராட்சிப் பிரிவுக்குப் பொறுப்பான 52 ஆவது கட்டளைப் பிரிவு அதிகாரி நிமால் ஜெயசூரிய, கடற்படைப் பொறியியல் பிரிவின் இயக்குநர் டி.என்.தர்மவீர, கடற்படையின் மின் மற்றும் இலத்திரனியல் பிரிவு இயக்குநர் ஜே.சி.ஹெட்டியாராச்சி காங்கேசன்துறையில் நிலைகொண்டுள்ள எஸ்.எல்.என்.எஸ் `உத்தர' என்ற கடற்படைக் கப்பலின் கப்டன் கே.டி.நாணயக்கார ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சின் கணக்காளர் ஆகியோரும் ஈரானுக்கு இந்த ஆயுத வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

விமானப்படைக் குழுவினர் முன்னர் ஈரானுக்குச் சென்று ஆயுத விபரம் குறித்த பட்டியலைத் தயார் செய்திருந்தனர். தற்போது சென்றுள்ள குழுவினர் இனங்காணும் ஆயுதத் தளபாட விபரங்கள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் அவற்றைக் கொள்வனவு செய்வது தொடர்பான வேலைகள் இரு அரசுகளின் மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

இதேபோன்றதொரு பாதுகாப்பு பரிவர்த்தனம் கடந்த மாதம் சீனாவுடனும் இலங்கை அரசு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------
º¢Ä§Å¨Ç Å¡í¸¢È ¬Ô¾í¸¨Ç ¦¸¡ñÎ ÍÉ¡Á¢Â¡Ä ¯Â¢÷¾ôÀ¢ÂÅ÷¸¨Ç ¯Â¢÷ þÆó¾Å÷¸û ÀðÊÂÄ¢ø §º÷ìÌõ ±ýɧÁ¡??:evil: :evil:


- Kishaan - 01-17-2005

தகவலுக்கு நன்றி.. :!:


- Kishaan - 01-17-2005

எல்லாம் தலைவர் இருக்கிறார்.. பார்த்துக்கொள்ளுவார் என்று நம்புவோம்...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- thamizh.nila - 01-18-2005

அடப்பாவிங்களா, ஆயுதம் வாங்க போற பணம், சுனாமியால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய பணமாக தான் இருக்கும்...


- shiyam - 01-18-2005

பின்னை என்ன அம்மாச்சி உழைச்சு சம்பாதிச்ச பணமே.தெருப்பணத்தை எடுத்து வழியிலை வாற தமிழனை அழிக்க முற்படுறா


- thamizh.nila - 01-18-2005

அணைய போற விளக்கு இப்படி தான்...சரிதானே?


- shiyam - 01-18-2005

எரியட்டும் எரியட்டும்.இன்னும் எத்தனைகாலத்திற்குதானோ..................எங்கள் வயிறுகள்மட்டும் எரிவது


- hari - 01-18-2005

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/18/moorthy.gif' border='0' alt='user posted image'>


- sinnappu - 01-19-2005

அப்புமார் பயப்படாதேங்கோடாப்பா போட வெளிக்கிட்டாங்கள் எண்டா அது யாரா இருந்தால் என்ன விழுந்தே தீரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tsunami - 01-19-2005

எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
யார் அறிவார்
சுத்தி சுத்தி சுப்பர கொல்லைக்குள்

இது நான் சொல்ல இல்லை
யாழ்ப்பாணத்தில் இருந்த யோகர் சுவாமியார் சொன்னது
இந்த முறை கல்லடியில் நான் கோன போது வாசித்தனான்....