![]() |
|
காதல் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் கவிதைகள் (/showthread.php?tid=5580) |
காதல் கவிதைகள் - தமிழரசன் - 01-28-2005 காதல் கவிதைகள் *அழகான பொருட்களெல்லாம் உன்னை நினைவுபடுத்துகின்றன. உன்னை நினைவுபடுத்துகிற எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன. *உன்னிடம் பேச எவ்வளவு ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும் பேசவேண்டும் என்பதில். *ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக் கொண்டு உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல் காட்டியதெனக்கு. *சோம்பல் முறிக்கையில் எவ்வளவு அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில் இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ. *அந்தக் காலையில் திரும்பிக்கூடப் பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து போனாய் நீ. அதனாலென்ன ... வாசலுக்குள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே உன் நிழல். *நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள். நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன் உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக் கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக் கொண்டு போகிறாயே. *எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும் என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய். *நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் தோள்களில் யார்யாரோ து¡ங்கிச் சாய்கிறார்கள் பயணத்தில். *என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல் போனால் கூட ஒன்றுமில்லை. *சூரியனை ஒரு முறைகூட முழுசாகப் பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன் என்பதில் எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ என்கிற சந்தேகம் மட்டும் வந்து கொண்டேதான் இருக்கிறது. *'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள் சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து கொள்கிற நேரம்கூட உன்னை நான் பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே உன் கண்கள். நன்றி தமிழ் - Eswar - 01-28-2005 ஆகா.....ஓகோ...... |