Yarl Forum
குந்தியாய் வந்தவளே கேள்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குந்தியாய் வந்தவளே கேள்..! (/showthread.php?tid=5429)

Pages: 1 2 3 4


குந்தியாய் வந்தவளே கேள்..! - kuruvikal - 02-05-2005

<img src='http://img216.exs.cx/img216/4677/kagayaambiente1qp.jpg' border='0' alt='user posted image'>

<b>காரிகை நீ தேவதையோ
வானத்துத் தாரகையோ
வதனத்தில் வனப்போடு
வழிமாறி வந்தோயோ
வனம் காண வந்தோயோ
மனம் வந்து இருந்தாயோ
வந்த இடம் என் மனம் அறிவாயோ...?!

என் மனப் பசுமைக்குள்
இளைப்பாறக் கூட அனுமதியில்லை
ஆனால் நீ
குடியிருக்கத் திட்டம் தீட்டுறாய்...??!
மலையதுவைக் கதவாக்கி
தென்றலைக் காவல் வைத்து
உதயத்து ஆதவனை விளக்காக்கி
அலையதுவை ஒற்றனாக்கி
கடுங்காவல் போட்டு வைத்தும்
எப்படி நுழைந்தாய் என் மனவாசல்...!

குந்தி விட்டாய்
குந்தியாய் இருந்து
குதர்க்கம் பண்ணாமல் புறப்படு....!
நான் ஒன்றும் கர்ணன் அல்ல
தர்மம் காக்க சத்தியம் தர
தர்ம பத்தினியாய் மலரவள்
குடியிருக்கிறாள் இங்கே...!
தலை தப்ப காலம் விதிக்கிறேன்
காளைதன் பசுமை கலைக்காது
வெளியேறு....
இன்றேல் என்னவள் படை
உன் கதை முடிக்கும்...!</b>

நன்றி - http://kuruvikal.yarl.net/


Re: குந்தியாய் வந்தவளே கேள்..! - shiyam - 02-05-2005

Quote:குந்தி விட்டாய்
குந்தியாய் இருந்து
குதர்க்கம் பண்ணாமல் புறப்படு....!
நான் ஒன்றும் கர்ணன் அல்ல
தர்மம் காக்க சத்தியம் தர
குந்தியாய் வந்து
குந்திவிட்டாள் குதர்க்கம்
வேண்டாம்
கருணைகாட்டி
கர்ணணாய்
வேண்டாம்
கதிரவனாய்
கடைசிவரை
காலம்போக்கலாமே???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 02-05-2005

Quote:தர்ம பத்தினியாய் மலரவள்
குடியிருக்கிறாள் இங்கே...!
அண்ணி மீது பட்சம்தான்!. அருமையான கவிக்கு எனது வாழ்த்துக்கள்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 02-05-2005

குந்தி வந்து புகுந்தாலும்.
அந்த குந்திக்குள் மனம் இருக்கின்றது.
அவளின் கூன் தீயாக நிமிரும் முன்.
நாடி வந்தவளுக்கு நல் முற்றம் அமைத்திடுவீர்.


- kuruvikal - 02-05-2005

மனதோடு மலரிருக்க
குந்திக்கு வாழ்வா...??!
புத்தி சொல்ல வழி கேட்டா
கொண்ட காதலுக்கு குழி தோண்டலா...!
வேண்டாம்... காதல் என்றாலும்
கன்னி என்றாலும்
வாழ்வில் ஒன்றே ஒன்றுதான்
உள்ளத்து உண்மைக் காதலி
உள்ளிருந்தே யுத்தம் பண்ணுவாள்
மனச்சாட்சி கொண்டு நீதிமன்றம் நடத்துவாள்
தேவையெனில் பெரும் படையாயும் எழுவாள்
எனையாளும் அரசி அவளல்லோ
காளை நான் காலமெல்லாம்
அவள் சேவகன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

படித்துப் பதிலுரைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-05-2005

நீண்ட பயணத்தில களைச்சுப்போய் அந்த பொண்ணு ஆறியிருக்கு போல இடக்கு.. அது உங்கள் மனசில சஞ்சலத்தை ஏற்படுத்திருக்கோ.. அதைவிட குந்தி சமாதானத்தோட தானே வந்தவா தாயாய்...??? :wink:


- Mathuran - 02-05-2005

kuruvikal Wrote:மனதோடு மலரிருக்க
குந்திக்கு வாழ்வா...??!
புத்தி சொல்ல வழி கேட்டா
கொண்ட காதலுக்கு குழி தோண்டலா...!
வேண்டாம்... காதல் என்றாலும்
கன்னி என்றாலும்
வாழ்வில் ஒன்றே ஒன்றுதான்
உள்ளத்து உண்மைக் காதலி
உள்ளிருந்தே யுத்தம் பண்ணுவாள்
மனச்சாட்சி கொண்டு நீதிமன்றம் நடத்துவாள்
தேவையெனில் பெரும் படையாயும் எழுவாள்
எனையாளும் அரசி அவளல்லோ
காளை நான் காலமெல்லாம்
அவள் சேவகன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

படித்துப் பதிலுரைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகளின் கூட்டுக்குள் வந்தவளை
குந்தி என அழைப்பதுவேன்?
அவளும் அறியாமல் வந்திருப்பாள்.
அவள் தெரிந்திருக்க வாய்பில்லை,
குருவிகளின் கூட்டுக்குள் இன்னொருத்தி
இருக்கின்றாள் என்பதனை.
ஆகயால் அவளுக்கு அன்போடு விடயத்தை
விளக்கிவிட்டால் போய்விடுவாள்.
அதற்கேன் அவள்மேல் குந்தி எனும் கூன்விளுந்த பார்வை?


- kuruvikal - 02-05-2005

tamilini Wrote:நீண்ட பயணத்தில களைச்சுப்போய் அந்த பொண்ணு ஆறியிருக்கு போல இடக்கு.. அது உங்கள் மனசில சஞ்சலத்தை ஏற்படுத்திருக்கோ.. அதைவிட குந்தி சமாதானத்தோட தானே வந்தவா தாயாய்...??? :wink:

களைத்தவள் வந்திருந்தால்
வசதியாய் அனுமதிகேட்டு
வாசலில் தங்கியிருக்க வேண்டும்
ஊடுருவல் சட்ட விரோதம்...!
சஞ்சலமா...
வஞ்சி இவள் வஞ்சகம் பண்ண
வசதி அளித்தால்
பசுமைதான் பாலை வனமாகுமே
அந்த நிலை தவிர்க்க
முன்னெச்சரிக்கை...!

குந்தியவள் தாயாய் வந்தாலும்
பாசத்தைக் காட்டி பாவத்தைச்
செய்த வேடதாரி
கண்ணனின் வேவுக்காரி
கர்ணனின் பலம் தின்று
அவன் பசுமை அளித்த பாதகி...!
பாண்டவர் பலம் கூட்ட
பதறமால் தன் மகவை
பாதாளத்தில் தள்ளியவள்...!
கர்ணனின் புகழ் அவன் தர்மத்துக்கு
குந்தி மகன் என்பதற்காய் அல்ல...!
காளை என் புகழ்
என்னவள் மலரதே
கண்டவளும் தந்ததல்ல...
தரவல்லதல்ல...!


- kuruvikal - 02-05-2005

Mathuran Wrote:
kuruvikal Wrote:மனதோடு மலரிருக்க
குந்திக்கு வாழ்வா...??!
புத்தி சொல்ல வழி கேட்டா
கொண்ட காதலுக்கு குழி தோண்டலா...!
வேண்டாம்... காதல் என்றாலும்
கன்னி என்றாலும்
வாழ்வில் ஒன்றே ஒன்றுதான்
உள்ளத்து உண்மைக் காதலி
உள்ளிருந்தே யுத்தம் பண்ணுவாள்
மனச்சாட்சி கொண்டு நீதிமன்றம் நடத்துவாள்
தேவையெனில் பெரும் படையாயும் எழுவாள்
எனையாளும் அரசி அவளல்லோ
காளை நான் காலமெல்லாம்
அவள் சேவகன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea

படித்துப் பதிலுரைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகளின் கூட்டுக்குள் வந்தவளை
குந்தி என அழைப்பதுவேன்?
அவளும் அறியாமல் வந்திருப்பாள்.
அவள் தெரிந்திருக்க வாய்பில்லை,
குருவிகளின் கூட்டுக்குள் இன்னொருத்தி
இருக்கின்றாள் என்பதனை.
ஆகயால் அவளுக்கு அன்போடு விடயத்தை
விளக்கிவிட்டால் போய்விடுவாள்.
அதற்கேன் அவள்மேல் குந்தி எனும் கூன்விளுந்த பார்வை?

அதுதான் சொல்லி இருக்கிறோமே...வரிகள் கொண்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-05-2005

:roll: :roll: :roll: :roll: கவிதை கற்பனையா..?? இல்லை நிஜமா..?? :wink:


- kuruvikal - 02-05-2005

tamilini Wrote::roll: :roll: :roll: :roll: கவிதை கற்பனையா..?? இல்லை நிஜமா..?? :wink:

சந்தேகமே வேண்டாம்...முழுக்க முழுக்கக் கற்பனை...! பாவம் மலரை விட்டு இன்னொரு காதலா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 02-05-2005

புலம்புங்க பிள்ளைகளா புலம்புங்க.. வயசு போன நேரத்தில நகைச்சுவையை ரசிச்சிட்டுப்போறம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 02-05-2005

சரிங்க...ஆச்சி...என்ன இந்த ஆச்சிமாரத்தான் நம்ப முடியாது..அங்க ஒரு குந்தி...இங்க ஒரு சகுனி அப்படின்னு இருப்பாங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-05-2005

ஒன்று சொல்லுறன்.. அது அப்புவாய் இருந்தா என்ன ஆச்சியாய் இருந்தா என்ன..?? நம்ப நட நம்பி நடவாதே .. நம்பிவிட்டு நடுத்தெருவில நிக்காதே.. இது தான் பிள்ளைகளா.. நாங்க சொல்லுறது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அனுபவம் கற்றுத்தந்த பாடங்கள் தான்.. :wink:


- kuruvikal - 02-05-2005

tamilini Wrote:ஒன்று சொல்லுறன்.. அது அப்புவாய் இருந்தா என்ன ஆச்சியாய் இருந்தா என்ன..?? நம்ப நட நம்பி நடவாதே .. நம்பிவிட்டு நடுத்தெருவில நிக்காதே.. இது தான் பிள்ளைகளா.. நாங்க சொல்லுறது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அனுபவம் கற்றுத்தந்த பாடங்கள் தான்.. :wink:

சரிங்க ஆச்சி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-05-2005

kuruvikal Wrote:[quote=tamilini]
குந்தியவள் தாயாய் வந்தாலும்
பாசத்தைக் காட்டி பாவத்தைச்
செய்த வேடதாரி
கண்ணனின் வேவுக்காரி
கர்ணனின் பலம் தின்று
அவன் பசுமை அளித்த பாதகி...!
பாண்டவர் பலம் கூட்ட
பதறமால் தன் மகவை
பாதாளத்தில் தள்ளியவள்...!
கர்ணனின் புகழ் அவன் தர்மத்துக்கு
குந்தி மகன் என்பதற்காய் அல்ல...!
காளை என் புகழ்
என்னவள் மலரதே
கண்டவளும் தந்ததல்ல...
தரவல்லதல்ல...!

சரி குந்தி பாசத்தை காட்டி பாவத்தை
செய்திட்ட வேடதாரியாக இருக்கட்டும்.
அதற்கேன் வந்தவளை குந்திஎன சுட்டுகுன்றீர்?
வளி தவறி வந்தவளை அன்பாக
போ என்று சொன்னால் போய்விடுவாள்.
வளிதவறி வந்தவளை குந்தி என அழத்ததுதான்
தவறு என சுட்டுகின்றேன். அன்புதான் அனைத்தையும்
துடைத்திடும் மருந்தென்பார். அவளிற்கு
அன்பாக சொல்லிவிட்டால், அவளாக போய்விடுவாள்.
குரிவிகளும் மலரோடு கூடி இருக்க வளிபிறக்கும்.
குருவிகளே குற்றம் என்று கண்டதனால் சுட்டி நின்றேன்
குறையேதும் நினைக்காதீர். குறைவில்லா நிறை மனதோடு
விடை பெறுகின்றேன் மதுன் நான்


- kuruvikal - 02-05-2005

வந்து குந்தி இருக்காங்களா...அதுதான் குந்தி என்றோம்...கவலை வேண்டாம்...எதுக்கும் பெண்களை கொஞ்சம் அவதானமாகவே நோக்குவது சிறந்தது என்று நினைக்கிறம்...எந்தப் பொந்துக்க என்ன பாம்பிருக்கோ...அதைத்தான் வரிகளூடு சொல்ல வந்தம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathuran - 02-05-2005

அப்படியா விசயம் சரி சரி. குந்தியதால் குந்தி என்றீர்களா? அப்ப சரி. மகாபரதத்தில் வரும் குந்தி ஒரு கெட்டவரை சுட்டும் அடயாளம். இராமயணத்தில் வரும் இராவணன் நல்லவரைச்சுட்டும் அடயாளம். இரமன் கெட்டவனை சுட்டும் அடயாளம்.


- shiyam - 02-05-2005

kuruvikal Wrote:வந்து குந்தி இருக்காங்களா...அதுதான் குந்தி என்றோம்...கவலை வேண்டாம்...எதுக்கும் பெண்களை கொஞ்சம் அவதானமாகவே நோக்குவது சிறந்தது என்று நினைக்கிறம்...எந்தப் பொந்துக்க என்ன பாம்பிருக்கோ...அதைத்தான் வரிகளூடு சொல்ல வந்தம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea[/quote
]ஓஓ அப்படியா.அப்ப படுத்திருந்தால் பந்தி நின்றிருந்தால் நந்தி அப்படித்தானே?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-05-2005

Quote:ஓஓ அப்படியா.அப்ப படுத்திருந்தால் பந்தி நின்றிருந்தால் நந்தி அப்படித்தானே??
அப்படிப்போடுங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->