![]() |
|
கௌசல்யன் எனுமோர் அக்கினி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கௌசல்யன் எனுமோர் அக்கினி (/showthread.php?tid=5310) |
கௌசல்யன் எனுமோர் அக்கினி - Thaya Jibbrahn - 02-11-2005 (1) மீண்டும் மீண்டும் எங்கள் பொறுமை சீண்டப்படுகின்றது. மீண்டும் மீண்டும் கண்மணிகள் பறிக்கப்படுகின்றது. சமாதானத்தின் பெயரால் எங்கள் தலையில் சோகம் திணிக்கப்படுகின்றது. எங்கள் பொறுமை எல்லை கடந்து எதிரிகளை இல்லாமற் செய்யும் வெறியாகிறது. ஆனாலும் ஆனாலும் தலையை மிஞ்சும் வாலல்லவே நாங்கள்- பொறுத்திருக்கின்றோம் பெருந்திருவே ஆனாலும் எங்கள் சின்ன சின்ன மூளைகளுக்கு சமாதானம் சமாதானம் என்று ஒன்றொன்றாய் இழப்பதிலும் சண்டையென்று சொல்லி மொத்தமாய் அழிவதெனிலும் மானமுள்ளதாய் படுகின்றது. என்ன செய்வதாய் உத்தேசம்.?? எதுவெனினும் நாங்கள் தயார் உன் பின்னால் அணி திரள- எங்கள் அடலேறுகளை வீதிகளில் இழக்கின்ற வேதனைகள் இனியும் வேண்டாம். ------------------------------------ (2) பார்க்குமிடமெங்கும் நீக்கமற நயவஞ்சகர் வாழும் பூமியிது. குள்ளநரிகளெல்லாம் கூடியிங்கே கூத்தடிக்கின்றதே. யாரொடு நோவோம்? சத்தியப்பிரமாணம் செய்யும் போதே தேசத்திற்காய் செத்துவிடவும் உறுதிபூண்டவர்கள் தான். என்றாலும் என்றாலும் ஏதிலிகள் போல தெருவினிலே சாய பார்த்திருக்க மாட்டோம். கௌசல்யன். தேசவிடுதலைக் குரலை தேசமெங்கும் முழங்கிய விடுதலைப் பறவை. துரோக வேர்களின் ஆழம் கண்டறிந்து தேசம் காத்த தனயன். வீதியிலே வீழ்ந்தானோ? விதிமுடிந்து போனானோ?? நம்ப முடியவில்லை. இயற்கையும் விதியும் எதிரிகளுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டனவோ?? தமிழ்த் தேசம் அழிப்பதுவாய் சாபங்கள் இட்டனவோ? வெல்லும் வரைதான் உலகம் விரட்டும். வென்ற பின்னர் வாழ்த்தும். இனியோர் புலி விழுவதெனில் நூறுபகை அழிந்த பின் என்பதாய் சபதமொன்று செய்திடுவோம். கொக்கரிக்கும் பகைவருக்கும் புல்லுருவிகளுக்கும் ஓர் செய்தி... எரிமலையில் நெருப்பெடுத்து அடுப்பெரிக்க நினையாதீர்; இது பொங்கியெரியும் விடுதலைத் தீ- ---------------------------------- -தயா ஜிப்ரான் - - hari - 02-11-2005 நன்றி தயா! உங்கள் உணர்வுகள்தான் எங்கள் உணர்வும், அதை கவிதையாக வடித்ததுக்கு நன்றி - வியாசன் - 02-11-2005 தயா ஏன் இதை மீண்டும் இணைத்திருக்கினறீர் புதிதாக ஒரு கவிதை தந்திருக்கலாம் உங்கள் கவிதை இயல்பாக இருக்கின்றது. |