Yarl Forum
மணப்பெண் பிடிக்கவில்லை மணமகன் ஓட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மணப்பெண் பிடிக்கவில்லை மணமகன் ஓட்டம் (/showthread.php?tid=5162)



மணப்பெண் பிடிக்கவில்லை மணமகன் ஓட்டம் - Vaanampaadi - 02-18-2005

மணப்பெண் பிடிக்கவில்லை என தாலிகட்ட மறுத்து மணமகன் ஓட்டம்- தூத்துக்குடியில் இன்று காலை நடந்த பரபரப்பு சம்பவம்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/18/flash/C1113_wed.jpg' border='0' alt='user posted image'>

மணமகன்- மணமகளை படத்தில் காணலாம்.

தூத்துக்குடி, பிப். 18- தூத்துக்குடி அருகே மணமகள் பிடிக்காததால் இன்று காலை திருமணம் நடைபெற இருந்த மணமகன் தாலிகட்ட மறுத்து ஓட்டம் பிடித்தார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதி ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் காளிராஜ; (வயது23), தச்சு வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் விளாத்திகுளம் பக்கம் உள்ள ராமச்சந்திராபுரத் தைச் சேர்ந்த முத்துஇளங்கோ என்பவாpன் மகள் புஷ்பவல்லி (வயது25) என்பவருக்கும் இன்று (வெள்ளி) காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப் பட்டிருந்தது. இதற்காக பெண் வீட்டுக்குச் சென்று காளிராஜ; ஏற்கனவே பெண்ணை பார்த்து வந்ததாகவும் கூறப்படு கிறது. மேலும் 7 ஆயிரம் ரொக்கம் 7 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு - பவுன் மோதிரம் எனவும் பேசி முடிக்கப்பட்ட தாம். இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை ஜோராக செய்த னர். பத்திரிகைகள் அடித்து, உற வினர்களும் அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று காலை தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு காலையிலேயே மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரும் வந்த னர். அனைத்து ஏற்பாடுகளும் செய்து மணவறையில் மாப் பிள்ளை இருக்க, தாலி கட்டுவதற் காக பெண்ணை அழைத்து வந்தார்களாம். அப்போதுதான் அந்த சங்கதி அங்கு நடந்தது.

பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை காளிராஜ; அதிர்ச்சி அடைந்தார். மணவறையை விட்டு எழுந்த அவர், ……இந்த பெண் எனக்கு வேண்டாம். என்னைவிட இவருக்கு வயது அதிகம் இருக்கும். எனக்கும் அவருக்கும் ஜோடிப்பொருத்தம் இல்லை. அவர் ரொம்ப பெரிய ஆளாக (பொம்பளைபோல்) தெரிகிறார். எனவே நான் தாலி கட்டமாட் டேன் என அங்கிருந்து ஓட முயன்றாராம். இருவீட்டாரும் மாப்பிள்ளையைப் பிடித்து எவ்வளவோ சமரசம் பேசியும் அவர் தாலிகட்ட மசியவில்லையாம்.

இந்த சம்பவம் தூத்துக்குடி வடபாகம் போலீசின் காதில் எட்டவே அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்படியும் முடிவு கிடைக்கவில்லை. இதை யடுத்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் ஒப்படைத்தனர். காதலை 9.30 மணி வரை மகளிர் போலீசில் பெரிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கு மணமகன் காளிராஜ், மணமகள் புஷ்பவல்லி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல்நிலையத்தில் உள்ளனர்.

அங்குள்ள போலீசார் விசாரிக்கும் போது மணமகன் காளிராஜ; தனக்கு 17 வயது என்றும், அந்த பெண்ணுக்கு 25 வயது என்றும் கூறுகிறாராம். ஆனால் அவரது தந்தையோ என் மகன் வயது 23 என்று கூறுகிறாராம். எப்படி பார்க்க போனாலும் பெண்ணை விட மாப்பிள்ளை வயது குறைவு என்பதே உண்மை.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பெரிய அதிகாரிகள் வந்த பின்னர்தான் இதன் முடிவு என்ன என்பது தெரியவரும்.

மணமேடை வரை வந்த பின்னர் மணப்பெண் பிடிக்க வில்லை என்று மணமகன் போரில் குதித்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்படு கிறது.

Dinakaran


- sinnappu - 02-18-2005

தம்ரீ பாடி எல்லாம் இருக்கட்டும் உவற்றை முகத்துக்கு 7 ஆயிரம் ரொக்கம் 7 பவுன் நகை கொஞ்சம் அதிகமா தெரியுது எனக்கு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- KULAKADDAN - 02-18-2005

இவர் பெரிய அழுகு ராசா...இவருக்கு சோடிப்பொருத்தம் காணாது........... :evil: :evil: :evil:


- வியாசன் - 02-18-2005

உந்த மம்முதராசா அந்த பெண்ணுக்கு சீதனம் கொடுத்திருக்கவேணும்.
:roll: :roll: :roll:


- tamilini - 02-18-2005

அவர் திரிஷாவின் ரசிகராய் இருந்திருக்கலாம்.. சரி பிடிச்ச துணையை தேடுற உரிமை அவருக்கு இருக்கு தானே.. கலியாணம் செய்திட்டு விட்டுவிட்டு போகமல் இருந்த அளவில அவரைப்பாராட்டலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-18-2005

ஏன் மணவறைக்கு பொகும் வரை பொம்பிளையை பாக்கேல்லயோ............ :evil:


- tamilini - 02-18-2005

அது தான் புரியல..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 02-18-2005

±Ð ???
:wink: :wink: :wink:


- sinnappu - 02-18-2005

Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 5239
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: வெள்ளி மாசி 18, 2005 9:39 pm Post subject:



அவர் திரிஷாவின் ரசிகராய் இருந்திருக்கலாம்.. சரி பிடிச்ச துணையை தேடுற உரிமை அவருக்கு இருக்கு தானே.. கலியாணம் செய்திட்டு விட்டுவிட்டு போகமல் இருந்த அளவில அவரைப்பாராட்டலாம்.
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

µõ µõ ¿£í¸û ¦º¡øÖÈÐ ºÃ¢ ¬½¡ø Á½Å¨È ÁðÎõ Åó¾Ð «ó¾ô¦Àñ½øÄ§Å¡
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- tamilini - 02-18-2005

மேலயிருந்து வாசிச்சால் புரியும். :twisted:


- thaiman.ch - 02-18-2005

அடே இ**** டோக்குவளே கல்யாணம் என்டது ரெண்டு மனசு சம்மந்தப்பட்ட விடயம். அதை ஏண்டா கட்டாயப்படுத்தி பண்ணி வைக்கிறீங்கள்??
ஒரு பெரியார் இல்லைடா ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியதடாhhhhhh


- Kurumpan - 02-19-2005

இங்க நான் எழுதின கருத்தை காணவில்லை.
தப்பா ஒண்டும் எழுதவும் இல்லை
ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு 10 :twisted: ! என்ட தலையிலயும் கை வைச்சுட்டாரோ!

எனக்கு பின்னால சரியான சதி நடக்குது டங்குட ஆக்களுக்கு காசு குடுத்து வேவு பாக்க வைக்கணும்.
:? :?