Yarl Forum
என் முறை வரும்போது... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் முறை வரும்போது... (/showthread.php?tid=51)



என் முறை வரும்போது... - shanmuhi - 04-26-2006

<b><span style='font-size:25pt;line-height:100%'>என் முறை வரும்போது...</b></span>

<img src='http://photos1.blogger.com/blogger/3623/589/320/crying%20baby1.jpg' border='0' alt='user posted image'>


கருவுக்குள் என்னைச் சுமந்து
கருச்சிதையாமல் என்னைக் காத்து
பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து
ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா

காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று
வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க
பால் போத்தலுடன் நான் இங்கே...
பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே

அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக
நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே
நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண
அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது

என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்


- tamilini - 04-26-2006

Quote:என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
அழகிய வரிகள்.. எல்லாருக்கும் ஒரு காலத்தில் காப்பகம் தான் தஞ்சம் என்றியள்..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sathiri - 04-26-2006

அட கன காலத்துக்கு பிறகு நம்மடை சண் அக்கா நான் நினைச்சன் உங்களை காப்பகத்திலை சேத்திட்டாங்களாக்கும் என்று மிண்டும் கண்டது மகிழ்ச்சி அடிக்கடி இந்த பக்கம் வந்து எங்களையும் பாத்து இப்படி ஏதாவது எழதி போட்டிட்டு போங்கோ அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- gowrybalan - 04-26-2006

அருமையான கவிதை வாழ்த்துக்கள்


- sOliyAn - 04-26-2006

நீங்க ஒண்டு சண்முகி.. என்ரை ரண்டாவது அப்பாவோடதான் படுப்பன் எண்டு எந்தநாளும் மழை பெய்யுறான்.. நான் இப்பவே காப்பகத்துக்கு ஓடலாமாண்டு யோசிக்குறன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வர்ணன் - 04-27-2006

அந்த குழந்தை -படத்துக்காக எழுதிய கவிதையா- இல்லை கவிதைக்காக போட்ட படமா என்று குழப்பம் !

இரண்டுமே - யாதார்த்த கேள்விக்குறியை - எல்லா பெற்றோர் முன்னாலும் - வீசிவிட்டு செல்லுமோ - என்னமோ!:roll:

உயிருள்ள கவிதை - வாழ்த்துக்கள்-! 8)


- RaMa - 04-29-2006

என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்

புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வாறிங்களா?
அருமையான கரு கொண்ட கவிதை.. வாழ்த்துக்கள்.