Yarl Forum
நேர்மைக்கு ஒரு பரிசோதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நேர்மைக்கு ஒரு பரிசோதனை (/showthread.php?tid=5082)



நேர்மைக்கு ஒரு பரிசோதனை - Jude - 02-23-2005

நமது தமிழ் இளைஞர்கள் ஏன் வெளிநாடு வந்தனர்? நேர்மையாக பதில் சொல்வோமா? முதலில் நான்.
வசதியான வாழ்வும் உயர்வாழ்க்கைத்தரமும் தேவை என்று தான் நான் இலங்கைக்கு பிரியாவிடை சொல்லிவிட்டேன். நீங்கள் எப்படி?


- tamilini - 02-23-2005

நாங்க வந்த காரணம் இதில இல்லை அண்ணா என்ன பண்ணா.. :wink:


- Jude - 02-23-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நாங்க வந்த காரணம் இதில இல்லை அண்ணா என்ன பண்ணா..  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதற்கென்ன தமிழினி, அதை பதிலாக எழுதி விடுங்களேன். உங்களைப் போல வந்தவர்கள் தாமும் எழுதுவார்கள்.


- tamilini - 02-23-2005

நாங்க உறவுகளை நாடி வந்தோம் Idea


- Jude - 02-23-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நாங்க உறவுகளை நாடி வந்தோம்  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழினி

முதலாவது காரணம் நன்கு பொருந்துகிறதே. தமிழீழத்துக்கும் உறவுகளுக்கும் உதவவே வந்தீர்கள், இல்லையா?


- kavithan - 02-23-2005

<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நாங்க உறவுகளை நாடி வந்தோம்  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழினி

முதலாவது காரணம் நன்கு பொருந்துகிறதே. தமிழீழத்துக்கும் உறவுகளுக்கும் உதவவே வந்தீர்கள், இல்லையா?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உறவுகளை நாடி.. அதாவது உறவுகள் உதவியதால் வந்தவர் .. உறவுகளுக்கு உதவுவதற்காக அல்ல <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்படி தானே/..


- tamilini - 02-23-2005

கண்டிப்பா முதலாவது நமக்கு பொருத்தம் கிடையாது. அப்படித்தான இரண்டாவதும் பொருந்தாது. சரி மற்றவங்களின் கருத்தைப்பாப்பம். :mrgreen:


- Nitharsan - 02-23-2005

வணக்கம்
ஆரம்பத்தில் பெரும்பால தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வந்தற்க்கு காரணம் நாட்டில் ஏற்ப்பட்ட குழுப்பமான பிரச்சினையே! 1983 ம் ஆண்டுக்கு முதல் சிறு பிரிவினரே வெளியாடு வரவிரம்பினர் அல்லது வந்தனர் எனலாம் ஆனால் அதற்க்கு பிற்ப்பட்ட காலத்தில் சிங்கள இனவெறிக்கு பயந்துதான் இளைஞர்கள அவர்களது பெற்றோர்கள் தங்கள் சொத்துக்களை விற்று அனுப்பி வைத்தனர் அவர்கள் வந்தத காரணம் மேலே இல்லை ஆனால் அவர்கள் வந்து தமது குடும்பத்தை மட்டம் பார்க்காமல் நாட்டையும் இதர தாயகத் தேவைகளையும் நிறைவேற்றினார்கள் அவர்களின் கஸ்டப்பட்டு இங்கு உழைத்து அனுப்பியதை கண்ட எம்மவர்கள் பலரும் வசதிவாய்ப்பை நாடி தமது பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்ப முனைந்தனர் அதன் உச்சக்கட்டமே இப்போது தாயகத்தில் ஏற்ப்பட்டிருக்கும் வெளிநாட்டுமேகம். அனால் இங்கு வரும் அவர்கள் வசதியான வாழ்வு வாழுகின்றார் என்பதை முற்றாக மறுக்கிறேன். (ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இங்கு வரும் பெரும்பாலனவர்கள் தங்கள் உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஏதோ ஒரு வழியில் உதவிக் கொண்டிருக்கின்றனர்....

நேசமுடன் நிதர்சன்


- வியாசன் - 02-23-2005

வசதியான வாழ்வுதேடிவந்தோம். ஆனால் இரண்டாவது தரவு பொருந்தவில்லை. வந்தபின் தாயகத்தில் உள்ளவர்க்கு உதவுகிறோம். அப்படியானால் நாங்கள் சுயநலவாதிகளா?
சுயநலம் என்றால் நான் என்னடையது என்று இருப்பது. இங்கு வந்தபின் தாயகத்தை மறந்தால்தான் சுயநலம். சுயநலத்தால் வந்தாலும் பொதுநலமாக சிந்திக்கிறோம்.(சுனாமிபோன்ற அனர்த்தங்களுக்கு உதவுகிறார்கள்)

தமிழினி கூறுவதுபோல ஒரு பகுதியினரும் உண்டு கணவனுடன் சேர்வதற்காகவும் தாய் தந்தையருடன் சேர்வதற்காகவும் பலர் வந்திருக்கின்றனர்.
நிச்சயமாக முதலாவது தரவை ஒருவரும் சொல்லமாட்டார்கள்


- Mathuran - 02-23-2005

[quote=Nitharsan]வணக்கம்
ஆரம்பத்தில் பெரும்பால தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வந்தற்க்கு காரணம் நாட்டில் ஏற்ப்பட்ட குழுப்பமான பிரச்சினையே! 1983 ம் ஆண்டுக்கு முதல் சிறு பிரிவினரே வெளியாடு வரவிரம்பினர் அல்லது வந்தனர் எனலாம் ஆனால் அதற்க்கு பிற்ப்பட்ட காலத்தில் சிங்கள இனவெறிக்கு பயந்துதான் இளைஞர்கள அவர்களது பெற்றோர்கள் தங்கள் சொத்துக்களை விற்று அனுப்பி வைத்தனர் அவர்கள் வந்தத காரணம் மேலே இல்லை ஆனால் அவர்கள் வந்து தமது குடும்பத்தை மட்டம் பார்க்காமல் நாட்டையும் இதர தாயகத் தேவைகளையும் நிறைவேற்றினார்கள் அவர்களின் கஸ்டப்பட்டு இங்கு உழைத்து அனுப்பியதை கண்ட எம்மவர்கள் பலரும் வசதிவாய்ப்பை நாடி தமது பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்ப முனைந்தனர் அதன் உச்சக்கட்டமே இப்போது தாயகத்தில் ஏற்ப்பட்டிருக்கும் வெளிநாட்டுமேகம். அனால் இங்கு வரும் அவர்கள் வசதியான வாழ்வு வாழுகின்றார் என்பதை முற்றாக மறுக்கிறேன். (ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இங்கு வரும் பெரும்பாலனவர்கள் தங்கள் உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைக்கும் ஏதோ ஒரு வழியில் உதவிக் கொண்டிருக்கின்றனர்....

நேசமுடன் நிதர்சன்


- shiyam - 02-23-2005

யுட் கேட்டகாரணங்கள் என்வரவுக்கு பொருத்தமில்லை எனவே வேறு காரணங்கள் என வாக்களித்துள்ளேன் நான் வந்தது இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்இந்தியா தவிர்ந்த எந்தநாடாக இருந்தாலும் சரியென்று வெளியேறினேன்.(முக்கியமாக இந்தியபடை வரவின் பின்னரே அதிகமாக எம்மவர் புலம் பெயர்ந்தனர்)


- Mathan - 02-23-2005

<span style='font-size:21pt;line-height:100%'>நான் கல்வி, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை வேண்டியே புலம் பெயர்ந்தேன். புலம்பெயர்ந்த பின்பு ஓரளவு தாயகத்தில் உள்ளோர்க்கு உதவியுள்ளேன் ஆனால் அதனை தாயகத்தில் இருந்து நடைமுறை சிக்கல்களை சமாளித்து உதவுபவர்களுடன் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. அரசியல் மற்றும் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக புலம் பெயர்ந்தவர்கள் குறைந்த சதவீதத்தினரே பெரும்பாலானோர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே புலம் பெயர்ந்திருக்கின்றார்கள், அதற்கு இனப்பிரச்சனை உதவியிருக்கின்றது, அதே நேரம் புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் தாயகத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்வதில் பின்னிற்கவில்லல.</span>


- Mathan - 02-23-2005

மற்றய கள உறுப்பினர்களின் கருத்துக்கள் என்ன?


- tamilini - 02-24-2005

இப்படித்தான் பலரும் பல காரணங்களுடன் வந்தவை.. பட் இங்க உல்லாசமாய் சொகுசாய் இருக்கினம் என்று சொல்ல முடியாது பாவங்கள்.. இரவுபகலாய் சிலது வேலை பண்ணுது.. நித்திரை கூட இல்லாமல். இதை சொகுசு என்று எப்படி சொல்ல.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-24-2005

முதலிரண்டிற்கும் வாக்களிக்க முடியாத நிலை.
இங்கு அக்கரை பச்சை என்று வந்தவர்கள் கூட சுகபோக வாழ்கை வாழுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வந்தவர்களில் சிலர் தமது குடும்பத்துக்கு உதவாவிட்டாலும் போரட்டத்துக்கு உதவுகிறார்கள்.


- Niththila - 02-24-2005

நான் இங்க வந்ததிற்கு காரணம் அக்கா சொன்னதுதான்.

எனக்குத் தெரிஞ்சு புலம்பெயர்ந்தவர்கள் பலர் ஊரில இருக்கிற தமது சொந்தங்களுக்கு உத்வுகிறார்கள்


- Mathan - 02-24-2005

வசதியான வாழ்வு தேடி வந்தவர்கள் சுயநலவாதிகளா?


- shiyam - 02-24-2005

வசதியான வாழ்வு தேடுவதென்பது எல்லோருக்குமுள்ள சாதாரண எதிர்பார்ப்புதான் ஆனால் அவர்களில் எத்தனைபோர் அகதி புகலிட வாழ்வுரிமை கேட்கும்போது வசதியான வாழ்வு தேடி வந்தோம் என உண்மை கூறியிருப்பார்கள்?????


- Mathan - 02-24-2005

யாருமே கூறி இருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் பெரும்பாலான சமயங்களின் உண்மை,